Friday, June 21, 2013

இச் சை செயல் VS அனிச்சைச்செயல்

1. செல்லக்கோபத்தில் " உன்னை ஒரு கை பார்த்து விட்டுத்தான் மறுவேலை" என்றேன்.இன்னொரு கை பூ பறிக்கப்போய் இருக்கா? என்றாய் எகத் தாளமாய்




------------------------


2.  ஆபீசில் என்ன சமாச்சாரம் நடந்தாலும் என்ன? ஏது? என தோண்டித்துருவி துளைத்தெடுக்கும் சம்சாரம் நீ!



----------------------------


3. எடையில் என்னில் பாதி நீ ! சாப்பாட்டிலும் ! ஆனால் என்னை அடிக்கும்போது மட்டும் உனக்கு இரு மடங்கு பலம் வந்து விடுகிறதே?



-------------------------


4. சனிக்கிழமை (ஒரு வேளை நீ ) குளித்தால் " ஹனி சனி நீராடுது"



-------------------------


5. இன்று உலக காற்று தினம். உன் மூச்சுக்காற்றை உணர நினைக்குது மனம்




-----------------------------


6. நீ உம்மா குடுத்தால் உள்ளதடி சொர்க்கம்.கொடுக்கவில்லை எனில் இருக்கவே இருக்கு சினிமா தியேட்டர் பக்கம்



-----------------------------


7. நீ சுயநலமாய் இருந்தாலும் நலமாய் இருந்தால் அது போதும் எனக்கு



--------------------------


8. எப்போதும் மணக்கும் ரசம் நீ! குடிக்கும் வரை அதில் இருக்கும் கறிவேப்பிலை நான்.




--------------------------


9. அன்பே! இப்போதான் உன்னைபத்தி நினைச்சேன்.கனவில் வந்துட்டே.உனக்கு 100 ஆயுசு. 36 28 36 கூட்டிப்பார்த்தாலும் 100 வருதே.அடடே




----------------------------


10. அன்பே! உன்னால் எனக்கு தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.நீ அருகில் இருந்தால் கிறங்கிக்கிடக்கத்தான் முடியுது.உறங்கிக்கிடக்க முடியல



-------------------------


11.  அன்பே! இன்னைக்கு ரத்த தான நாள்.அதை முத்த தான நாளாக மாற்றுவோம்.வா




----------------------------


12. அன்பே!நீ மாசம் ஆனாய்.நான் மோசம் ஆனேன்.நல்ல நாள்லயே நீ ஒரு வேலையும் செய்ய மாட்டே ;-



-----------------------


13. 24 மணி நேரத்தில் எனக்காக நீ ஒதுக்கும் நிமிடங்களே என் தங்க தருணங்கள்.



------------------------


14. சொல்லித்தெரிய வேண்டியதில்லை உனக்கு என் பரிவை. அறிமுகப்படுத்தவே தேவை இல்லை எனக்கு உன் பிரிவை




---------------------------


15. உன் உடையாக மாற ஆசைப்படுகிறேன்.காரணம் நீ நினைக்கும் அதுவல்ல.சும்மா உடைக்குப்போடும் உடையே 10,000 ரூபாய்க்கு எடுத்துடறியே



-----------------------------


16. என் வாழ்வின் எல்லா சிறந்த பட்டியலிலும் நீ ! நான் பெற்ற சி றந்த அவமானம் கூட நீ தந்ததுதான்



---------------------------


17. அன்பே! உன் இதயக்கதவைக்கூட லேட்டா திறந்துக்க.ஆனா உன் ஜாக்கெட் ஜன்னலை மூடி விடு.போறவன் வர்றவன் எல்லாம் பார்த்துட்டுப்போறான்



-------------------------


18. அன்பே! உன் அறிமுகம் கிடைத்த பின் குப்புறப்படுத்து தூங்கும் பழக்கத்தை அப்புறப்படுத்தி விட்டேன்



-----------------------------


19. உன்னை அடிக்கடி பார்க்க நினைப்பது இச்சைசெயல்.பார்க்கும்போதெல்லாம் உதட்டில் சிரிப்புபொங்குவது அனிச்சைச்செயல்


---------------------------

20. உலகமே உயிர் இல்லாத காற்றை சுவாசிக்கும்போது காதலர்கள் மட்டுமே காதலியின் அன்பை சுவாசிக்கிறார்கள்


--------------------------------

0 comments: