Wednesday, May 30, 2012

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காதல் சிந்தனைகள்

1.இஷ்டம் படத்தில் டைரக்டர் என் எதிர்ப்பை மீறி என்னை கவர்ச்சியா காண்பித்துவிட்டார்-நிஷா அகர்வால்# அப்டி ஏதும் தெரியலையே?




-------------------------

2. திரும்ப கிடைக்காதவை 1.கடந்து விட்ட நாட்கள்,2.தொலைந்த நட்புகள் 3 மறந்த உறவுகள் 4. கலைந்த கனவுகள் # SMS


-----------------------------


3. ஜனாதிபதி ஆக ஆசைப்படுகிறாரா கலைஞர்?  # உலகம் சுற்றும் வாலிபனை எதிர்த்தவர் அரசு செலவில் உலகம் சுற்ற ஆசைப்படுகிறார்!


--------------------------------

4. எக்ஸாம் = கேர்ள்ஸ் 


1.ஏகப்பட்ட கேள்விகள்


 2.புரிஞ்சுக்கறது கஷ்டம்


 3.ரொம்ப விளக்கனும்


 4. ரிசல்ட்  எப்பவும் ஃபெயில் தான்


-------------------------------


5.நமக்குள் நிகழ்ந்த ஊடல் பொழுதுகளை நீ சொல்லிக்காட்டும்போதெல்லாம் நமக்குள் அன்பு கூடு கட்டுகிறது


-------------------------------------






 6. ஆணாதிக்கமும், பெண்ணாதிக்கமும் தலை தூக்கினால் ஊடல்,தலை சாய்த்துப்படுத்தால் கூடல் # ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சிந்தனைகள்


--------------------------------

7. மிஸ்,உங்களை நான் ஃபாலோ பண்றேன், ஏன் என்னை நீங்க ஃபாலோ பண்ணலை?


2 பேரும் மாறி மாறி ஃபாலோ பண்ணுனா வட்டம் போட்டுட்டே இருக்கனும்



----------------------------------


8. புலம்பித்தள்ளுவது பெண்களின் பழக்கம், மனசுக்குள் புழுங்கிக்கிடப்பது ஆண்களின் வழக்கம் # உள்ளே , வெளியே



-------------

9. தன்னைக்கண்டு வெட்கப்படும் பெண்ணை ஆண் ரசிக்கிறான், தனக்காக மற்றவரிடம் கோபப்படும் ஆணை பெண் ரசிக்கிறாள்



-------------------------------------


10. உன் குறைந்த பட்ச மென்மைச்சொல் “ ம்”. உன் அதிக பட்ச வன்மைச்சொல் “ ஏய்”


 ------------------------
காந்த கண்ணழகி.ஐ லவ் யூ,ஹேய் ,,ஐ லைக் இட் "யா..இவ்வளவு சொல்லுறேன்.ஒரு ரீஆக்சென் காணோம்,.அவ்வ்வ்வ்;))#கவுண்டர் வாய்ஸ்;)

11. ஒரு பெண்ணை கண் கலங்க வைத்த ஆண் விளங்க மாட்டான்,ஒரு ஆணை கோபப்பட வைக்கும் பெண் மீண்டும் தன் நிலையில் இருந்து இறங்க மாட்டாள்



 ------------------------------


12. உதட்டில் இருக்கும் உமிழ்நீர் வெளியே வந்ததும் எச்சில் ஆகும், ஆனால் உன் இதழ்களுக்குள் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் கவிதை ஆகும்


-------------------------------


13. உன் விழிகளால் என்னை காயப்படுத்தினால் அதை ரசிப்பேன்,உன் உதடுகளால் என்  உதடு காயப்பட்டால் நான் ருசிப்பேன்


---------------------------


14. உனக்கு ஆறிதல் கூறும் சந்தர்ப்பங்களை நான் எதிர் நோக்கி இருப்பேன், அப்போதுதான் நீ வெட்கம் இன்றி என் அணைப்பில் இருப்பாய்!


--------------------


15.தனது பெற்றோரின் காதல் திருமணத்தின் எதிர் மறை விளைவுகளைப்பார்த்து பல குழந்தைகள் பாடம் கற்றுக்கொள்கின்றன


------------------------------------





16. பவர் ஸ்டார் பண்ற அலப்பறையில் அப்பாவித்தனமும், கோபிநாத்தின் அலப்பறையில் திமிர்த்தனமும் கொப்பளிக்கிறது



------------------------------

17.  நீ என்னை ”டே(ய்)” என்றாய்! நான் அடடே என்றேன்.அன்றே நம் லவ் டே # டே டே சிந்தனைகள்


--------------------------------


18. பொண்ணுங்க டைட் டிரஸ் போட்டா பசங்க லூஸ் ஆகிடறோம்,லூஸ் டிரஸ் போட்டா டைட் ஆகிடறோம் # ஹி ஹி


------------------------------

19. நான் இல்லாம உனக்கு போர் அடிக்குமா? ஆமா.. ( இவளே ஒரு போர் தான் - மைண்ட் வாய்ஸ்)



-------------------------------


20. உன் எல்லாக்கோபங்களையும் நீ என்னிடமே இறக்கி வைக்கிறாய்! என் எல்லா அன்பையும் உன்னிடமே நான் ஏற்றி வைக்கிறேன்


----------------------------------







Tuesday, May 29, 2012

விஜய் டி வி - கோபிநாத் VS பவர் ஸ்டார் - எப்பொழுதும் உன் அலப்பறைகள்



விஜய் டி வி தமிழ் சேனல்களில்  பெரிய புரட்சியை விளைவித்ததை யாரும் மறுக்க முடியாது.. எல்லா வீடுகளிலும் சன் டி வி யின் ஆதிக்கம் நிறைந்த போது தனது கிரியேட்டிவிட்டியை கூர் தீட்டி பல வித்தியாசமான படைப்புகளை முன் வைத்தது. இன்று முன்னணி சேனல்கள்  விஜய் டி வி பார்த்து காப்பி அடிக்கின்றன என்றால் மிகை ஆகாது..


விஜய் டி வியில் முதன் முதலாய் வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் உல்டா தான் சன் டி வி யின் அசத்தப்போவது யாரு?அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ் மோகன் அவர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி சன் டி வி அந்த குரூப்பை இழுத்துக்கொண்டது.. கலைஞர் டி வியில் எல்லாமே சிரிப்புத்தான்.. என பட்டியல் நீளும்..


நடன நிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, டாக் ஷோ என சொல்லிக்கிட்டே போலாம்.. அப்படிப்பட்ட விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட  குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDrzj-0OzN8CE-D5vum_sHzI9fdl9A4dM7r5k_F5CcWL9vu2lksn0O2HxtOUeuvKUq4vLMx2-wTbyyR3BETR21GmfIFHpTihLUZ_O1ljMtGcpZZm-iCYYS_WT-pnsc0EKSiFd4AgXdNMe-/s400/7-neeya-naana-gopinath-pics-images-photos-stills.jpg

கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை  ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

 கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும்  நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..


எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல்  அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

 வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?


இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

 அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி  தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

 இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

 உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?

http://tamil.oneindia.in/img/2012/05/14-neeya-naana-gopinath--300.jpg


அலப்பறை மன்னன் அண்ணன்  கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்


1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும்  நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க


 பிரபல ட்வீட்டர் வேணு, perundurai சொன்னது கீழே உள்ள கருத்து (GD_Venu@GD_Venu)

பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?

டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து 
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என் ?..

பிரபாகரன் இறந்த பின்னும் , அவர் இறந்ததை சொல்லாமல் ஏமாத்தும் தலைவர்களை , அழைத்து 'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை"என கேட்க முடியுமா ?

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால் 
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?



250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?.. ..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/04/Neeya-Naana-.jpg
வி சதீஷ் குமார் அவர்கள் கருத்து
ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா?



மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை...

சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

"நான் அவர் படமும் பார்த்தது இல்லை.."
ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..
உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcfBxTIGbgH0xOgVQPZFvMrtOsfypS7cjBqLLoE3g0gfq_vONBq_a3ZEexTb-1KvCuOLXGXusQLM-PJZ1q-p8Xaj3yMY4y328Z1xkIQj81hFIfK4O6k9wk5IUGNtJS0Ru-nAUOwryGAa3O/s1600/gopinath+neeya+naana.jpg

Sankarkumar  -சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அன்றையத் தலைப்புக்குப்
பொருத்தமான ஒரு நபரையே விஜய் டிவி அழைத்திருந்தது. கோபிநாத் கேட்ட
கேள்விகளும் பவர் ஸ்டாரின் அவர் தற்போது அணிந்திருக்கும் போலிமுகத்தின்
பின்னால் இருக்கும் உண்மையான முகம் என்ன என்பதை அறியவே தொடுக்கப்பட்டன.
ஒருவேளை, அவர் உள்ளே வருவதற்கு முன், அவரது 11 நபர் குழு போட்ட
கெடுபிடிகள் நிகழ்ச்சியாளரை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம். ஆனாலும்
கேள்விகள் கண்ணியமாகவே அமைந்திருந்தன. அதற்கு பவர் ஸ்டார் அளித்த
பொறுமையான பதில்கள் அவரது இமேஜை உயர்த்தியே காட்டியது.

ஒபாமாவைக் கூட அழைத்து கேள்வி கேட்கக்கூடிய சுதந்திர நாட்டில் இருப்பதாலோ
என்னவோ, இந்த நிகழ்ச்சியில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை. பவர்
ஸ்டார் அவமதிக்கப்பட்டதாகவும் நான் கருதவில்லை. அவரேகூட அப்படிச்
சொல்லவில்லை. 'ஒருவேளை நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கலாம்' என மட்டுமே
அவர் சொன்னார்!


ஆயினும், சதிஷ் சார்பில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதே கோபிநாத்
எம்ஜியாரை அழைத்து, 'நீங்க ஏன் தொப்பி கண்ணாடி அணிஞ்சிருக்கீங்க? கொஞ்சம்
கழட்டி உண்மையான முகத்தைக் காட்டுங்க' எனக் கேட்டிருக்க முடியது;
கேட்டுவிட்டு, உயிர் பிழைத்திருக்கவும் முடியாது!:)) பவர் ஸ்டார்
என்பதால் கேட்டுவிட்டார். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு, கைகளை
அசைத்து விடை பெற்று சென்றும் விட்டார்!




அன்பே வா - எம் ஜி ஆர் - ஷூட்டிங்க் - விகடன் பொக்கிஷ பக்கங்கள்

சென்னை விமான நிலையத்தில் அன்பர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எண்ணற்ற பூமாலைகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ன் கழுத்தைத் தழுவுகின்றன. 'காரவல்’ டெல்லிக்குப் புறப்படப்போவதை அசரீரிக் குரல் அறிவிக்கிறது.


 மக்கள் திலகத்துடன் சிம்லாவுக்குச் செல்லும் குழுவினர் சுமார் 20 பேரும் 'காரவல்’ நோக்கி நடக்கிறார்கள். எல்லோரும் ஏவி.எம். ஸ்டுடியோவின் வண்ணத் தயாரிப்பான 'அன்பே வா’ படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்கள். 'காரவல்’ டெல்லியை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது.


''கால்கா வரை ரயிலில் செல்கிறோம். அங்கிருந்து சிம்லாவுக்கு காரில் போகிறோம். 'இம்பாலா’ கார்கள் மூன்று இங்கிருந்தே நம்மைத் தொடர்ந்து வரும். இரவு 10-30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. 'ஜல்தி... ஜல்தி’ என்று துரிதப்படுத்தினார் டெல்லி ஏவி.எம். அலுவலகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன்.
யில் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் சரோஜா தேவி, நடுங்கும் குரலில் எம்.ஜி.ஆரைப் பார்த்து, ''என்னங்க! கால்காவுல 'க்ளவுஸ்’ கிடைக்குமா?'' என்று கேட்டார்.



''இங்கேயே கிடைக்குமே'' என்றார் எம்.ஜி.ஆர்.
'இங்கே எப்படிக் கிடைக்கும்?’ என்பதைப் போல் எம்.ஜி.ஆரைப் பார்த்தார் சரோஜா தேவி. உடனே எம்.ஜி.ஆர். வெள்ளை நிற 'க்ளவுஸ்’ இரண்டை எடுத்து வந்து சரோஜா தேவியிடம் கொடுத்தபோது, ''அடடே... நீங்களே வெச்சிருக்கீங்களா! தேங்க்ஸ்'' என்று வாங்கிக்கொண்டார்.



''எம்.ஜி.ஆரிடம் நிறைய 'க்ளவுஸ்’ இருக்கும்போல் இருக்கிறதே'' என்று எம்.ஜி.ஆருடன் வந்திருந்த அவருடைய டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களிடம் சொன்னேன். ''அதை ஏன் கேக்கறீங்க? ஊட்டியில 'அன்பே வா’ ஷூட்டிங் நடக்கிறப்போ, அதில் சம்பந்தப்பட்ட அத்தனை தொழிலாளர்களுக்கும் ஸ்வெட்டரும் பனிக் குல்லாவும் வாங்கிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அவர்களுக்கெல்லாம் ஒரே குஷி'' என்றார் டாக்டர்.


'சென்னையில் உள்ள ரிக்ஷாக்காரர்கள் அத்தனை பேருக்கும் மழை கோட்டு வாங்கிக் கொடுத்தவருக்கு, இது ஒரு பிரமாதமா?’ என்று எண்ணிக்கொண்டேன்.
'பிளெஸ்ஸிங்டன் கோர்ட்’ என்பது அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் சறுக்கி விளையாடு வதற்காக ஏற்படுத்தப்பட்ட பனிக்கட்டிச் சறுக்கு முற்றம். தென் கிழக்கு ஆசியாவிலேயே இத்தகைய சறுக்கு மேடை சிம்லாவில் மட்டுமே உள்ளது. மலைச் சரிவுகளைப் பின்னணியாகக்கொண்டு, இயற்கைச் சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த அழகிய இடத்துக்கு அருகில் போய் நிற்கும்போது, நம் உள்ளம் குளிர்கிறது. 


 உடல் 'வெடவெட’வென்று நடுங்குகிறது. இந்த அருமையான இடத்தை இப்போது சர்க்கார் பஸ் ஸ்டாண்டாக மாற்றப்போகிறார்களாம். இந்த சேதியைக் கேட்ட  போது எம்.ஜி.ஆர். பதறிப்போய் ''இதென்ன பைத்தியக்காரத்தனம்? பஸ் ஸ்டாண்டுக்கு வேறு இடம் இல்லாமலா போய்விட்டது? இது ரொம்ப அக்கிரமம். விகடனில் இதைப் பற்றி எழுதுங்கள் சார்'' என்றார்.



பஞ்சாப் அழகு ஜோடிகள் சறுக்கி விளையாடும் அபூர்வ காட்சியை எம்.ஜி.ஆரும் சரோஜா தேவி யும் கண்கொட்டாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர். ''என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நீங்கள்கூடச் சறுக்கலாம். ரொம்ப சுலபம். நாலு தடவை கீழே விழுந்தால் தன்னால் வந்துவிடும்'' என்று எம்.ஜி.ஆருக்குத் தைரியம் கூறினார் சிம்லா தமிழர் ஒருவர். ''அது சரி, நான் கீழே விழுவதைப் படமெடுத்துக் காட்டினால், சிரிப்பார்களே'' என்றார் எம்.ஜி.ஆர்.


எப்படியோ எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் சறுக்கி விளையாடும் காட்சியை இரண்டே நாட்களில் படமாக்கி முடித்துவிட்டார்கள்.


சிம்லாவுக்கு 13 மைல் தூரத்தில் 'குஃப்ரி’ (ரிuயீக்ஷீவீ) என்றோர் இடம் இருக்கிறது. 8,600 அடி உயரத்தில் உள்ள அந்த மலை உச்சியில் போய்  நின்று பார்த்தால், தூரத்தில் இமய மலைச் சிகரங்கள் மீது வெள்ளைப் பனி உறைந்துகிடப்பது தெரிகிறது. அந்த இயற்கை எழிலில் மயங்கிப் பரவசத்தில் நின்ற எம்.ஜி.ஆரிடம் ''என்ன பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.


''இமயத்தைக் காணும்போது நாம் எவ்வளவு சிறியவர்களாகிவிடுகிறோம் பார்த்தீர்களா?'' என்றார்.


அந்தச் சமயம் திடீரென்று நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி இரண்டு மூன்று ஜீப்புகள் வேகமாக வந்தன. அவற்றில் இருந்து இறங்கிய ராணுவ வீரர்கள் பரபரப்புடன் ஓடி வந்து ''வணக்கம் அண்ணே'' என்று புரட்சி நடிகரைப் பார்த்து வணங்கினர்.


''அடடே! நம் ஊர்க்காரர்களா? வாங்க... வாங்க... வணக்கம், வாழ்க. நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டு வந்து எத்தனை வருஷமாச்சு? சௌக்கியமா இருக்கீங்களா? இடையில எப்பவாவது ஊருக்குப் போய் வந்தீங்களா?'' என்று அன்புடன் விசாரித்தார். 


எம்.ஜி.ஆரைக் கண்டதும் தமிழ்நாட்டையே நேரில் பார்த்தது போன்ற உற்சாகம் அந்த வீரர்களுக்கு. மக்கள் திலகத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள். சிலர் மார்போடு அவரைத் தழுவிக்கொண்டார்கள். கடைசியில், எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டதும் வாழ்வின் பயன் பெற்ற திருப்தியுடன் ''போய் வருகிறோம்'' என்று கூறிப் புறப்பட்டனர்.


மக்கள் திலகம் அவர்களைக் கையைத் தட்டி அழைத்து, ''ஆமாம், விலாசத்தைக் கொடுக்காமல் புறப்பட்டுவிட்டீர்களே... என்ன அர்த்தம்? இப்போது எடுத்துக்கொண்ட போட்டோவை உங்களுக்கு அனுப்ப வேண்டாமா?'' என்று கேட்டபோது, அந்த வீரர்கள் நன்றிப் பெருக்குடன் எம்.ஜி.ஆரைப் பார்த்த காட்சியைப் படம் எடுக்கவில்லையே என்று தோன்றியது.



'புதிய வானம்-புதிய பூமி’ என்ற பாட்டைப் பாடியவண்ணம் எம்.ஜி.ஆர். உல்லாசமாக நடந்துவரும் காட்சியை, குஃப்ரி மலைச் சிகரத்தில் படமாக்கினார்கள். வாலி எழுதிய இந்தப் பாட்டுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது அந்த இடம். எம்.ஜி.ஆர். தமது கைகளை வீசி வானத்தையும் பூமியையும் காட்டிப் பாடிக்கொண்டு இருந்த சமயம், வானத்தில் பட்சிகள் கூட்டம் ஒன்று சிவ்வெனச் சிறகடித்துப் பறந்து சென்றது. பட்சிகள் பறக்கும் அந்த அழகிய காட்சியை 'அன்பே வா’ படத்தில் சேர்த்துவிட வேண்டும் எனத் துடித்தார் தயாரிப்பாளர் சரவணன்.


''அடடா! என்ன அழகான காட்சி? டைரக்டர் சார், இந்தப் பறவைகளை ஏதாவது செய்ய வேண்டுமே...'' என்றார் அவர்.


''சுட்டுச் சாப்பிடலாம் சார்?'' என்றார் ஒரு சாப்பாட்டு ரசிகர்.


''அவற்றை ஏற்கெனவே ஷூட் செய்தாயிற்று, கவலைப்படாதீர்கள்'' என்றார் டைரக்டர்.


போகும் வழியில் மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே 'பளிச் பளிச்’ என்று வெயில் அடித் துக்கொண்டு இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர்., ''வெயிலெல்லாம் வீணாகப்போகிறதே, இன்னும் கூட இரண்டு ஷாட் எடுக்கலாமே? கொஞ்சம் காரை நிறுத்தப்பா. மாணிக்கம்... பின்னாலே டைரக்டர் சார் வண்டி வருது. நிறுத்தி இன்னும் ஏதாவது எடுக்கப்போறாங்களானு கேளு'' என்றார்.


''ஒன்றும் இல்லை; நேராக சிம்லா போக வேண்டியதுதான்'' என்று டைரக்டர் பதில் கூறிவிடவே எம்.ஜி.ஆருக்குச் சப்பென்று ஆகிவிட்டது.


''காலை முதல் கொஞ்சம்கூட ஓய்வு இன்றி மலைச் சரிவில் ஓடி ஆடி வேலை செய்தீர்களே... களைப்பாக இல்லையா? இன்னமும் ஷூட்டிங் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?'' என்றேன்.


''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது'' என்றார் எம்.ஜி.ஆர்.


'மால்’ என்பது சிம்லா நகரின் மலைச் சிகரத்தில் அமைந்துள்ள ஓர் அழகு வாய்ந்த இடம். இங்கேயும் இரண்டு மூன்று நாள் ஷூட்டிங் நடைபெற்றது. கொழுகொழுவென்ற திபெத் நாட்டு அநாதைக் குழந்தைகள் இந்தச் சாலை வழியாக நடந்துபோகிறார்கள்.


''பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே...
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே...''


என்று பாடிக்கொண்டு வரும் எம்.ஜி.ஆர். அந்தப் பிள்ளைகளில் இருவரைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார்.


அடுத்தாற்போல்,
''நல்லவரெல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது...''


என்ற அடியைப் பாடும்போது, அங்குள்ள காந்தி மகாத்மாவின் சிலையைப் பார்த்துக் கும்பிடுகிறார்.


அன்று மாலை நான் எம்.ஜி.ஆரிடம் ''தாங்கள் மகாத்மாவை வணங்கும் காட்சி என்னைப் புல்லரிக்கச் செய்துவிட்டது. இந்தக் காட்சியைப் படத்தில் பார்க்கும் பொதுமக்கள் பெரிதும் ரசிப்பார்கள்'' என்றேன்.



''காந்தியிடம் எனக்கு எப்போதுமே பக்தி உண்டு. என் வீட்டில் நான் கும்பிடும் என் தாயாரின் படத்துடன் காந்தியின் படத்தையும் வைத்திருக்கிறேன். உலகத்தில் அந்த மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும் புத்தரும்கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்'' என்றார்.



சிம்லாவில் உள்ள திபெத் அநாதைக் குழந்தைகள் இல்லத்தை பிரிட்டிஷ்காரர் ஒருவர் நடத்திவருகிறார். உயரமான மலை உச்சி மீது அமைந்துள்ள அந்த இல்லத்தைப் பார்க்க வரும்படி எங்களை அந்த வெள்ளைக்காரர் கேட்டுக்கொண்டார். அந்த அநாதை இல்லத்துக்குச் செல்லும் பாதையில் கார் போக முடியாதாகையால், எங்களை அழைத்துச் செல்வதற்கு என அந்த வெள்ளைக்காரர் ஜீப் அனுப்பி இருந்தார்.


 செங்குத்தான அந்தப் பாதையில் எங்கள் ஜீப் முக்கி முனகிக்கொண்டு மேலே ஏறியபோது, நாங்கள் பிராணத் தியாகம் செய்வதற்குத் தயாராகிவிட்டோம். ஓர் இடத்தில் அந்த ஜீப் பின்னுக்குப் போய் 'டர்ன்’ எடுத்தபோது பின் பக்கம் திரும்பிப் பார்த்தோம். அதல பாதாளத்துக்கும் எங்களுக்கும் இடையே அரை அங்குலம் இடைவெளிதான். மயிர்இழையில் ஊசலாடிக்கொண்டு இருந்த ஜீப்பை அந்த டிரைவர் ஒரு பிரேக் போட்டு நிறுத்தி, மீண்டும் முன்னால் கொண்டுபோனபோது, எம்.ஜி.ஆர். 'முருகா’ என்று கத்திவிட்டார்.


அந்த அநாதைக் குழந்தைகள் இல்லத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, எம்.ஜி.ஆர். அந்த வெள்ளைக்காரரின் கையைப் பிடித்துக் குலுக்கினார். அப்போது அவருடைய கையில் இருந்த 100 ரூபாய் நோட்டுக் கற்றை ஒன்று வெள்ளைக்காரரின் கைக்கு மாறியது.



''இந்தக் குழந்தைகள் இல்லத்துக்கு இதைப் பயன்படுத்துங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர். 'எவ்வளவு கொடுக்கிறோம் என்று கணக்குத் தெரியாமலே இப்படி அள்ளிக் கொடுக்கிறாரே’ என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் 'எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்கவில்லை. ஏனெனில், கேட்டாலும் அவர் சொல்ல மாட்டார் என்பது எனக்குத் தெரியும்.



ளமும் வனப்பும் மிக்க சிம்லாவிலும் குஃப்ரியிலும் உள்ள வண்ண வண்ணமான இயற்கைக் காட்சிகளுக்கு இடையே எம்.ஜி. ஆரை ஓடவிட்டு, ஆடவிட்டு, பாடவிட்டுக் கண்ணுக்கு இனிய கலர் படமாக ஆக்கிய பிறகு தான், தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் பூரண திருப்தி. 'அன்பே வா’ படத்தில் வரப்போகும் அந்த எழில்மிகு இயற்கைக் காட்சிகளைப் பற்றியோ, எம்.ஜி.ஆரின் புதுமை மிக்க உல்லாச நடிப்பைப் பற்றியோ நான் இங்கே ஒன்றும் கூறப்போவது இல்லை. ஏனெனில், நீங்களே அவற்றை எல்லாம் படத்தில் பார்க்கப்போகிறீர்களே!



திரும்பி வரும்போது கால்கா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் ஜன நடமாட்டமே இல்லை. எம்.ஜி.ஆருக்கு ஒரே குஷி. பிளாட்ஃபாரத்தில் அப்படியும் இப்படியும் உற்சாகத்தோடு அலைந்தார். ''அடடா! இவ்வளவு சுதந்திரமாகத் தென்னாட்டில் நடந்து போக முடியுமா? இதற்குள் ஆயிரம் பேர் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டு இருப்பார்களே. எனக்கு இந்த இடம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா?'' என்று சிறு குழந்தைபோல் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.



''டெல்லியில் நான் காந்தி சமாதி, நேரு சமாதி, காந்தியின் உயிர் பிரிந்த இடம் இந்த மூன்றையும் பார்த்துவிட்டு மறுநாள்தான் சென்னைக்குப் போகப் போகிறேன்'' என்றார் எம்.ஜி.ஆர்.


றுநாள் பகல் 11 மணி சுமாருக்கு ராஜ்காட்டுக்குப் புறப்படுவதற்காக நாங்கள் அசோகா ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கியபோது, எம்.ஜி.ஆரை நோக்கி ஒரு பெரும் கூட்டம் 'திமுதிமு’வென்று ஓடி வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தத் தொழிலா ளர்கள், எம்.ஜி.ஆர். வந்திருக்கும் செய்தியை எப்படியோ தெரிந்துகொண்டு, காலையில் இருந்தே அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தனர்.



ராஜ்காட்டுக்குச் செல்லும்போது, ''இவர்களுக்கு எல்லாம் உங்களிடம் இத்தனை அன்பு எப்படி உண்டாயிற்று?'' என்று கேட்டேன்.


''அரண்மனை போன்ற இந்த அசோகா ஹோட்டல் மாடியில் இருந்து நான் 'லிஃப்டில்’ இறங்கி வருகிறேன். ஆனாலும், இவர்களுக்கு என்னைக் கண்டு துளியும் பொறாமை ஏற்படவில்லை. அதற்குப் பதில் என்னிடம் அன்பும் நம்பிக்கையும்கொண்டு இருக்கிறார்கள். நான் இத்தனை அந்தஸ்தில் வாழ்வதே அவர்களுக்காகத்தான் என்று எண்ணுகிறார்கள்'' என்றார்.



கார் ராஜ்காட்டில் போய் நிற்கிறது. முதலில் காந்தி சமாதிக்குச் சென்று அந்தச் சமாதி மீது மலர் வளையத்தைப் பக்தியோடு வைத்து வணங்குகிறார் எம்.ஜி.ஆர். பிறகு, சமாதியை ஒருமுறை வலம் வந்து, மௌனமாக உட்கார்ந்துகொள்கிறார். சிறிது நேரம் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் ஈடுபடுகிறார். 


உணர்ச்சிப் பெருக்கினால் அவர் கண்களில் நீர் பெருகி வழிகிறது. பின்னர், மெதுவாக எழுந்து நேருஜியின் சமாதிக்குச் செல்கிறார். நாமும் அவரைப் பின்பற்றிச் செல்கிறோம். சமாதியை வலம் வருகிறோம். மலர் வளையங்கள் வைத்து வணங்குகிறோம். இந்த நாட்டின் உய்வுக்காகப் பெரும் தலைவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். அன்று மாலை காந்திஜி கொல்லப்பட்ட நேரத்திலேயே, அந்த இடத்துக்குப் போய்க் கண்ணீர் சிந்திவிட்டுத் திரும்பினோம்.


றுநாள் காலை 6 மணிக்கு டெல்லியைவிட்டுப் புறப்பட்ட 'காரவல்’ 9 மணிக்குள் சென்னையை அடைந்துவிட்டது. வானத்தில் இருந்து பூமியில் இறங்கி நடந்தபோது, குளிரெல்லாம் போய்க் கதகதவென்று இருந்தது. ''எப்படி இருக்கிறது?'' - புன்சிரிப்போடு கேட்டார் எம்.ஜி.ஆர்.


''பழைய வானம்... பழைய பூமி என்று பாடலாம் போல் இருக்கிறது'' என்றேன் நான்.


கேப்டனுக்கு குரு கிராமராஜனா? அய்யய்யோ.. பிரேமலதா கதறல் ( ஜோக்ஸ்)


1. அத்தான்,ஃபர்ஸ்ட் நைட்ல முதல்ல லைட்டைத்தானே அணைப்பாங்க, ஏன் என்னை அணைச்சீங்க?

ஹி ஹி நீ தான் டியூப்லைட்டாச்சே?


-------------------------------

2. நகை விரும்பா நங்கை உண்டா?


--------------------------

3. ஜக்காடு பெட்ஷீட்க்கு டிசைன் போடறவன் கூட இவ்ளவ் யோசிச்சிருக்க மாட்டான், இந்த பொண்ணுங்க மேஹந்தி டிசைன் போடறதை பார்த்தா...


---------------------------------
4. நீ ஒரு செல் உயிர் இனம் என்றால் மனைவிக்குக்கட்டுப்பட்டவன். இரு செல் உயிர் இனம் என்றால் ( டூயல் சிம் செல் ஆல்சோ) பிரம்மச்சாரி


-----------------------


5. நான் எந்த அளவுக்கு நல்லவன்னா சென்செக்ஸ் என்று வருவதாலேயே ஷேர் மார்க்கெட் பக்கமே போகாத அளவுக்கு ஹி ஹி 


----------------------
டேய்ய்ய்ய்ய்ய்...என்னாங்கடா பண்ணுறீங்க?


-------------------------
6. மிஸ்டர், மாசமா இருக்கற உங்க  மனைவியை  உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றீங்களே? அவ்ளவ் பாசமா? 


நோ டாக்டர், எனக்கு அடுத்த டார்கெட் வெயிட்டிங்க்ல


---------------------------

7. வெய்யில் ஓவரா இருப்பதால் ஆல் அட்டு ஃபிகர்ஸ் பவுடரை குறைச்சுக்குமாறு கடுப்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


--------------------


8. ஜட்ஜ் - எதுக்காக உங்க 2 வது கணவர் கூட சண்டை போட்டீங்க?  


வனிதா - பின்னே, உங்க கூடவா போட முடியும்?


------------------------------------


9. எனக்கு கருணாநிதியுடன் தந்தை - பிள்ளை உறவு: மதுரை ஆதீனம் பேட்டி # அண்ணன் சி எம் ஆக சீட்டு பிடிக்கறார்டோய்


------------------------
10. உங்கள் சிரிப்புணர்வை தூண்டுபவன் உங்களுக்கு நெருக்கமாவான், உங்கள் அழுகை உணர்வை ஆறுதல்படுத்துபவன் உங்கள் மனதுக்கு நெருக்கம் 


-----------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh32JC5AhRqX2GBkJOABFM3FJmpF-ouvX4tJpaw78ziTGF0GU4UYo8cAdMDUH9uzKlhFR7Zy3wyGEa1LTxGmzEjcp0uJDta3utBr1Pt7kh2zsoKKWnMIy-9coAynnP11M7lJ_hHJQDs48g/s1600/kajal_agarwal+(2).jpg

11. நண்பன் ஏன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டனும்? ஸ்மைலி அஞ்சலி தானே பார்க்க அழகு? # ஓக்கே ஓக்கே - அஞ்சலி ராக்ஸ்


---------------------------

12. பொண்டாட்டி இழுக்கற இழுப்புக்கெல்லாம் வளைஞ்சு கொடுக்காம  சொந்தமா யோசிச்சு முடிவு எடுக்கற புருஷங்க யாராவது இருந்தா அவங்க தான் வளையா”பதி”


--------------------------------

13. சினேகா திருமண வைபவத்தில் கட்டி இருந்த வெங்காய சருகு கலர் பட்டுப்புடவை குறித்து  பெண்கள் விவாதிக்காதது ஏன்? # திருந்திட்டாங்களா?


-------------------------

14.  விஜயகாந்துக்கு வசனம் சொல்லிக் கொடுத்தவன் நான்: ராமராஜன் # அப்போ வசனம் பேசறப்போ நாக்கை  மடிக்கனும்னு சொல்லிக்குடுத்தது நளினியா?


----------------------------

15. உலகிலேயே  நம்ப முடியாத பொய், "இப்பலாம் யாரு கில்மா படம் பாக்குறா?" என்பதுதான்!


-----------------------




16. திகில் ( டெரர்) கிளப்பும் டிசைனில் ரிஸ்ட் வாட்ச் கட்டி இருந்தா அவங்க தான் டெரரிஸ்ட்டா? # மக்கு பாண்டி


-------------------------

17. மிஸ், என்னை தப்பா எடுத்துக்காதீங்க.....


ஏய் மிஸ்டர், உன்னை எடுத்துக்கிட்டா அதுதான் தப்பு :)


-------------------------------

18. டியர், உன் EYES  பார்த்ததும் எனக்கு ஒரு கவிதை தோணுது..


.. நீங்க ஆணியே புடுங்கவேணாம், ஒரு அருண் ஐஸ் வாங்கி குடுங்க



----------------



19. நித்யானந்தா எனக்கு கடவுள் -ரஞ்சிதா# சாமி கிட்டே ஜொள்ளி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே, இந்த ஆஸ்ரம் உள்ள காலம் மட்டும் வாழும் இந்த ..



------------------------------

20.நான் சட்டசபைக்கு போனா மட்டும் விலைவாசி குறைஞ்சிடுமா-கேப்டன் #சரி, சரி டாஸ்மாக்கை விட்டு வெளில வாங்க.. அண்ணி வெயிட்டிங்க்



------------------------------

thishkumar Jothidar was tagged in Varutha padatha valibar sangam's photo.



Monday, May 28, 2012

பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 6

ஒவ்வொரு மனுஷனுக்கும் மறுபக்கம்னு ஒண்ணு உண்டு.. இதை படிச்சுட்டு இருக்கற நீங்களும் சரி, இதை டைப் அடிச்சுட்டு இருக்கற நானும் சரி, இதுக்கு விதி விலக்கல்ல.. விமர்சனம் எப்போ வரும்னா ஒரு மனிதனின் இருண்ட பக்கம், அல்லது அவனது கறுப்பு முகம் மத்தவங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறப்ப.. 

விவாஜி என்ற நண்பர் கம் ட்வீட்டர் 4 நாட்களுக்கு முன்னால டைம் லைன்ல ஒரு ட்வீட் போட்டார்.. “ கவர்ச்சிகரமான , கிளாமர் நடிகைகளின் ஸ்டில்களை வெளியிடும் அட்ரா சக்க வில் இந்த ------------ பெண் ட்வீட்டரின் ஃபோட்டோவும் வந்திருக்கு, நடிகைகளின் தர வரிசையில் வந்த அவருக்கு என் வாழ்த்துகள்” அப்டின்னார்.. 

அந்த பெண் ட்வீட்டரின் பெயரையும் அதில் மென்ஷன் பண்ணி இருந்தார்.. நான் உடனே கேட்டேன்.. சார், நீங்க அந்த பெண் ட்வீட்டரின் குடும்ப நண்பர் கம் வெல்விஷர். நீங்க டைம் லைன்ல இப்படி சொல்லலாமா?

 அதுக்கு அண்ணன் ரிப்ளை பண்ணுனாரு “ அதை ஆல்ரெடி நாங்க பேசிட்டோம்.. இப்போ பொது வெளில கேட்கறேன் பதில் சொல்லுங்கன்னாரு. ‘

வாக்குவாதத்தை தவிர்க்கவும், தேவை இல்லாமல் அந்த பெண் ட்வீட்டருக்கு மன உளைச்சல் வரக்கூடாது என்பதற்காகவும் நான் பதில் ஏதும் தர்லை, விட்டுட்டேன்.. அன்று இரவு 9 மணியில் இருந்து 12 மணி வரை அந்த பெண் ட்வீட்டரும் , அண்ணன் விவாஜி அவர்களும் வாக்குவாதம் செஞ்சாங்க .. இப்போ நான் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்.. 


அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான முதல் கேள்வி - அட்ராசக்க பிளாக் டபுள் எக்ஸ் படம் எல்லாம் போடும் கேவலமான பிளாக்.. அதுல கவுரமான ஸ்டில் உள்ள ஒரு போஸ்ட்டை காட்டு பார்க்கலாம். நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்.அந்த பிளாக்கில் போடப்படும் ஃபோட்டோக்கள் எல்லாமே மோசமானவை. கவர்ச்சிகரமானவை.. ஒரு நல்ல போஸ்ட் நான் பார்த்ததில்லை..  (
additionally, with XX pics for marketing.)



 எனது பதில்  - அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு, தருமரின் கண்களுக்கு பார்க்கறவங்க எல்லாருமே நல்லவங்களா தெரிஞ்சாங்களாம், துரியோதனன் கண்களுக்கு பார்க்கறவங்க எல்லாரும் கெட்டவங்களா தெரிஞ்சாங்களாம்.. அந்த மாதிரி நீங்க கில்மா ஸ்டில் உள்ள படங்களா தேடித்தேடி போய் பார்த்திருக்கீங்க. அதான் அப்படி நினைக்க வெச்சிருக்கு. நான் இதுவரை 1357 போஸ்ட் போட்டிருக்கேன்.. அதுல சினிமா விமர்சனங்கள் போஸ்ட் 287... சினிமா நடிக நடிகைகளின் பேட்டி 146 , ஆக மொத்தம் 433 போஸ்ட்டில் மட்டும் தான் கிளாமர்  ஸ்டில்ஸ் வந்திருக்கு,,



 நான் போஸ்ட் போடற பேட்டர்னல டெயிலி காலைல ட்வீட்ஸ்களின் தொகுப்பா ஒரு போஸ்ட் போட்டுட்டு வர்றேன்.. அதுல நல்ல விதமான இயற்கை காட்சிகள், பறவை இனங்கள் ஃபோட்டோ எல்லாம் இருக்கு.. தயவு செஞ்சு அதை பார்க்கவும். 


எனது 1000 வது பதிவில் எங்கம்மா ஃபோட்டோ போட்டிருக்கேன். எனது 789 வது பதிவில் எனது குடும்ப பெண்களின் ஃபோட்டோ போட்டிருக்கேன். அதை எல்லாம் நீங்க பார்க்கலையா? கிளாமர் ஸ்டில் ஆல்ரெடி ஏதாவது போஸ்ட்டில் போட்டிருந்தால் மற்ற லேடீஸ் ஃபோட்டோ போட்டா கேவலமா?


அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான 2வது கேள்வி - கிளாமரான நடிகை ஃபோட்டொக்கள் போடும் ஒரு பிளாக்கில் கவுரமான, குடும்ப பெண் ஃபோட்டோ போட்டாலும் பார்ப்பவர்கள் தவறா தான் நினைப்பாங்க . 




எனது பதில் - ஆனந்த விகடன் இதழில் கிளாமரான நடிகை ஃபோட்டோகள் வரவில்லையா? கலகலப்பு பட ஸ்டில்லான அஞ்சலி , ஓவியா ஃபோட்டோகள் வந்த போது நீங்க அதை பார்த்து ரசிக்கலையா?ஆனந்த விகடனில் இதுவரை 887 கிளாமர் ஸ்டில்ஸ் 1998 இலிருந்து 2012 வரை வந்திருக்கு.. அப்படி கிளாமர் ஸ்டில் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில் நல்ல குடும்ப பெண்ணின் ஃபோட்டோ வந்தால் அவரும் தவறாகத்தான் பார்க்கப்படுவாரா?


இதே ஆனந்த விகடனில் வலையோசை பகுதியில் அண்ணன் விவாஜியின் வலைப்பக்கம் பற்றி அறிமுகம் வந்தது.. மகிழ்ச்சி.. அப்போ அண்ணனும் அதை கொண்டாடுனார்.. தன் சந்தோஷத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.. எனக்கும் மகிழ்ச்சியே. ஆனா கிளாமர் ஸ்டில்ஸ் வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில் தன் பிளாக்  அறிமுகம் வந்துடுச்சேன்னு அவர் ஏன் வருத்தப்படலை?மாறாக பெருமை தான் பட்டார்.. 



 காரணம் ரொம்ப சிம்ப்பிள்..  அந்த கிளாம்ர் ஸ்டில் வந்தது அந்த கட்டுரை அல்லது செய்திக்கு மேட்சாக.. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.. 


6 லட்சம் பேர் படிக்கும் ஒரு பத்திரிக்கைக்கு ஒரு நியாயம். 2000 பேர் தினசரி படிக்கும் வெப்சைட்டுக்கு ஒரு நியாயமா?


3. அண்ணன் விவாஜியின் அறிவுபூர்வமான  3 வது கேள்வி -பிளாகில் சி பி மார்க்கெட்டிங்க்காக கவர்ச்சிகரமான டைட்டில்களை வைக்கிறார். என்பது..


 அவர் கேள்வியிலேயே பதில் இருக்கு.. ஒருசினிமாப்படம் ரிலீஸ் ஆகுதுன்னா அதுக்கு ஒட்டப்படும் போஸ்டர் ரொம்ப முக்கியம்.. அந்த மாதிரி ஒரு பதிவு போட்டா அதுக்கு மக்களை கவரக்கூடிய தலைப்பு முக்கியம்.. அதனால தான் அப்படி போடறேன், அதுல என்ன தப்பு இருக்கு?



அண்ணன் மற்றும் குடும்ப நண்பர் விவாஜி அவர்களின் அறிவுபூர்வமான ட்வீட்ஸ்

1.  I say it is wrong. தொடையும் தொப்புளும் இருக்கிற பதிவுல இந்தப் பெண்ணோட படத்துக்கு என்ன வேலை


2.  Didnt I try to explain this yesterday? I am saying you are not wrong, you pictures are place in wrong place


3. Respect are all not to mention in Public, thats different. I say you should whom you are dealing with



4.  Oh coming to Character Assassination, let it be.நான் இப்படித்தான்

5,சொல்லனுமா? மகா மட்டமான/ cheap title பதிவுகளா போட்டா எவன் மதிப்பான்? 


6. உங்க மத்த பதிவுகள்ல நல்ல படங்கள் போட்டிருக்கீங்களா? #பனைமரம் #கள். 


அண்ணன் விவாஜியிடம் எனது கேள்விகள்



1. மேலே சொன்ன 2 பாயிண்ட்சை விடுங்க.. உங்க குடும்ப நண்பர் ஃபோட்டோ என் பிளாக்ல வந்தது உங்களுக்கு பிடிக்கலை.. ஓக்கே ஒத்துக்கறேன்.. நேர்மையான, அவர் மேல் அக்கறை உள்ளவரா இருந்தா நீங்க என்ன செஞ்சுருக்கனும்? எனக்கு ஒரு ஃபோனை போட்டு அந்த ஃபோட்டோவை எடுத்துடுப்பா என்றால் மேட்டர் ஓவர். ஏன் எனக்கு ஃபோன் பண்ணலை?அல்லது உங்க குடும்ப நண்பரிடம் ஃபோனிலோ, டி எம்மிலோ அதை சொல்லி இருந்தாலும் மேட்டர் ஓவர். அதை ஏன் நீங்க செய்யலை?


2. ஒரு முறை குறும்படம் பற்றி டைம்லைன்ல ஒரு ட்வீட் போட்டீங்க. அதுக்கு நான் பதில் போட்டேன். நீங்க கதையோட  ஒன்லைன் சொல்லி அதுக்கு திரைக்கதை அமைக்க முடியுமா?ன்னீங்க..  செய்யறேன்னேன்.. அது சம்பந்தமான உரையாடலில் நீங்க ஐ எஸ் டி  கால் போட்டு எனக்கு 19 நிமிசம் பேசுனீங்க.. உங்க வேலை ஆகனும்கறதுக்காக செலவு பண்ணி ஃபோன் பண்ற நீங்க உங்க குடும்ப நண்பருக்காக 2 நிமிஷம் செலவு பண்ண முடியலையா? ஏன்?


3. உங்களுக்கு ஒரு தங்கை அல்லது அக்கா இருந்து இப்படி ஒரு ஃபோட்டோ நான் போட்டிருந்தா  அவங்க பேர் வெளீல வராம ஃபோன் பண்ணி சொல்லி இருப்பீங்களா? அல்லது இப்படி டைம் லைன்ல பேசி அவங்க பேர் வெளில வரட்டும்னு செஞ்சு இருப்பீங்களா?



நம்மால பிரச்சனை எதுக்கு? என நான் அந்த ஃபோட்டோக்களை எடுத்துட்டேன். உடனே ஒரு பிரபல புத்திசாலி ட்வீட்டர் “ என்ன அந்த போஸ்ட்ல இருந்த ஃபோட்டோக்களை காணோம்? காக்கா தூக்கிட்டு போயிடுச்சா? என கேட்டார் .. காமெடியாம்.. ஹா ஹா சிரிச்சாச்சு. 



பெண் குயின் என்ற போஸ்ட் போட்டப்ப அந்த போஸ்ட்டில் பெண் ட்வீட்டர்களை  ஜாலியா கலாய்ச்சு அவர்கள் மனம் நோகா வண்ணம், அவர்களும் ரசிக்கும்படியாகத்தான் பட்டப்பெயர் வெச்சு எழுதி இருந்தேன். அப்போது ஏதும் சொல்லாத ஒரு பிரபல ஆண் ட்வீட்டர் 3 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டருக்கு ஃபோன் போட்டு டார்ச்சர் செய்து இருக்கிறார்.. “ உன்னை பற்றி வர்ற லைன்ஸை எடுக்க சொல்லு.. எதுக்காக உன் பேரு வருது? “ என 


அவர் டி எம்மில் கேட்டார், நான் உடனே எடுத்துட்டேன். அப்படி மிரட்டிய பிரபல ட்வீட்டரிடம் நான் கேட்பது “ உங்க தோழியிடம் உண்மையிலேயே அக்கறை உள்ள நல்லவர் எனில் ஏன் போஸ்ட் போட்ட அன்னைக்கே அதை சொல்லலை? அதை நீங்க படிக்கலைன்னு சொல்லி எஸ் ஆக முடியாது.. அந்த போஸ்ட் போட்ட அன்னைக்கே மாலை 6 மணிக்கு நீங்க அந்த போஸ்ட் பற்றி உங்க நண்பர்களிடம் டிஸ்கஸ் பண்ணி இருக்கீங்க. உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தது என்றதும் உங்க ஈகோ தலை தூக்கி.. “ ஓஹோ. நீ என்னை இப்படி மடக்கிறியா?நான் எப்படி உன்னை மடக்கறேன் பாரு? என்ற ஈகோ தான் அதுல தெரியுதே தவிர தோழி மீது நீங்க வெச்ச நட்புக்காக செஞ்ச மாதிரி எனக்கு தெரியல .. 


ட்வீட் உலகின் நாட்டாமை என்று அழைக்கப்படும் ஒரு பெரியவர் கேட்கும் புத்திசாலித்தனமான கேள்வி

பிரச்சனை இவ்வளவு பெருசானப்பறமும் , அவர் இல்லை இவர் இல்லைன்னு வழவழகொழகொழன்னு இல்லாமா யாருன்னு சொல்லணும்

இல்லனா அவர் சொன்னது அனைத்தும் கட்டுக்கதை....விளம்பரத்துக்காக செய்தது..அவ்வளவே 


 அவருக்கு நான் கூறும் பதில் 


ட்வீட்டப்பில் நடந்த மேட்டர் பற்றிய போஸ்ட்டில் ஒரு பெண் ட்வீட்டரின் படம் போட்டதுக்கே இவ்வளவு எதிர்ப்பும், தாக்குதலையும் அந்த பெண்கள் சந்திக்க வேண்டி வரும் அவலமான இந்த சூழலில் நான் அந்த பெண் ட்வீட்டர் பெயரை சொன்னா என்ன ஆகும்னு உங்களுக்குத்தெரியாதா? சம்பந்தப்பட்ட பிரபல ட்வீட்டர் அந்த பெண்ணை போட்டு தாளிச்சிட மாட்டாரா?


தனி மனித  தாக்குதலில் எனக்கு விருப்பம் இல்லை.. எல்லோரிடமும் நட்புடன் பழகவே  ஆசை.. எனவே தான் பெயர் சொல்லவில்லை.. சொல்ல வந்த கருத்து என்ன என்பதை சொல்லியாச்சு.. 


நான் இதுவரை யாரையும் அன்ஃபாலோ செய்யவில்லை, யாரையும் பிளாக் செய்யவில்லை.. அதை எப்படி பண்றதுங்கறதே நிஜமா எனக்குத்தெரியாது.ஆனா சிலர் என்னை அன்ஃபாலோ பண்ணிட்டு வர்றாங்க. அது பற்றி எனக்கு கவலை இல்லை.சும்மா ஒரு தகவலுக்காகத்தான் இதை சொல்றேன்.. 

 இன்னும் சில பிரபலங்கள் காமெடி பண்ணுவதாக நினைத்துக்கொண்டு இவர் ட்வீட்டை தேடிப்பிடிச்சாவது ஆர் டி பண்ணிடனும், ஆர் டி க்காக பிச்சை எடுக்கக்கூடாது, டைப் அடிப்பதெல்லாம் படைப்பு அல்ல , என்ற தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.. அவர்களுக்கு என் நன்றிகள்


நான் தனி ஆள்.. எனக்குன்னு எந்த குரூப்பும் கிடையாது.. ஆனால் சிலர் செட் சேர்த்துக்கிட்டு வேணும்னே டைம் லைன்ல என்னை நக்கல் அடிச்சு ட்வீட் போடறாங்க. அவர்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. நல்ல தெளிவு பெற அவர்கள் என் சென்னை ட்வீட் பதிவுகளை பொறுமையாக முழுவதுமாக படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்



டாக்டர் ரியாஸ் உட்பட 187 பேரை பிளாக் செய்து புகழ்பெற்ற ஒரு ட்வீட்டரின் பேட்டி  பாகம் 7 லும், வாழை பற்றியும், மெகா ட்வீட்டப்பில் நடந்த பிரமாதமான சாப்பாடு, உபசரிப்பு,நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சத்யா, கரையான், பரிசல்காரன்,கேசவன் அவர்களுக்கு நன்றி சொல்லி பாகம் 8ம்  அடுத்தடுத்த நாட்களில் வரும்.






டிஸ்கி-





இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html

இஷ்டம் -சந்தானம் காமெடிக்காக - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDL1n4Wvzw8xB7a_Sz3AWyA484B7n2ZDv4pnMqfxN3KG8OaLsAD2ZhbqI4PDZ5jpeYZMCpjWkfS8AkdMiBSumpyTWtN00LcsU3NyQVMua0OXfFc_k4mEKDI0eqvDDd2HzVCHHcptvh-9lD/s1600/IshtamTamilMovie.jpg

ஹீரோ ஏதோ ஒரு பேப்பரை ஜெராக்ஸ் எடுக்கறாரு.. அண்ணன் கிட்டே சில்லறை இல்லை, 1000 ரூபா நோட்டா இருக்கு, ஹீரோயின் அதே காம்ப்ளெக்ஸ்ல பொழப்பில்லாம நிக்குது, அது கிட்டே  ஒரு ரூபா வாங்கி அதாவ்து பிச்சை எடுத்து கடைல கொடுக்கறாரு.. அந்த ஜெராக்ஸ் காப்பி ஒரு இண்டர்வியூவுக்கு.. வேலை கிடைக்கலை.. உடனே அந்த லூசு ஹீரோ ஹீரோயின்க்கு ஃபோன் பண்ணி உன்னால தான் ராசியே இல்லாம எனக்கு வேலை போச்சுன்னு திட்டறார்.. உலகத்துல எவனும் அப்படி கேவலமா ஒரு ஃபிகரை திட்ட மாட்டான்..

ஆனா இப்போ ஒரு ட்விஸ்ட்.. வேலை கிடைச்சிடுது.. ஏதோ ராங்க் இன்ஃபர்மேஷன் அதான் முதல்ல ரிஜக்ட்னு நியூஸ்.. உடனே ஹீரோ ஹீரோயின் கிட்டே நீங்க ராசியான ஆள்னு வழியறான்.. அந்த பேக்கு ஹீரோயினும் கெக்கேக்கெ பிக்கெக்கேன்னு சிரிக்குது.. 2 பேரும் லவ்வறாங்க .. ஹீரோ ஒரு டைம் ஹீரோயின் கிட்டே நாம 2 பேரும் தப்பு பண்ணலாமா? அப்டிங்கறதை என்னமோ கோயிலுக்குப்போலாமா? அப்டிங்கற மாதிரி  சர்வ சாதாரணமா கேட்கறான். 

 2 பேரும் கோயிலுக்குபோறாங்க ஹி ஹி பேரண்ட்ஸை எதிர்த்து அப்புறம் மேரேஜ் பண்ணிக்கறாங்க.. மேரேஜ் பண்ணிட்டு ஜாலியா கில்மா படம் பார்க்காம சம்பூர்ண ராமாயணம் படம் பார்க்கறாங்க.. அதுல சீதை தீக்குளிக்கறதை பார்த்துட்டு ஹீரோ ஹீரோயின் கிட்டே இந்தக்காலத்துல இந்த மாதிரி பொண்ணூ எங்கே இருக்கா?ன்னு கேட்க வார்த்தைகள் தடிக்க”அது முற்றி “நான் கில்மாவுக்கு கூப்பிட்டப்ப உடனே வந்தவ தானே நீ , இதுக்கு முன்னால எவன் கூட இதே மாதிரி போனியோனு ஹீரோ லூஸ்டாக் விட  பாப்பா கோவிச்சுக்கிட்டு கிளம்பிடுது.. 

ஹீரோ வேற ஒரு ஃபிகரை மேரேஜ் பண்ண ட்ரை பண்றாரு, ஹீரோயின் வேற ஒரு ஆளை மேரேஜ் பண்ண ட்ரை பண்றாரு.. க்ளைமாக்ஸ்ல என்ன ஆச்சுங்கறதுதான் கதை..eemayinthi ee vela என்ற தெலுங்கு ரீ மேக் தான் இது

 விமல் தான் ஹீரோ. அவருக்கு கிராமத்தான் கேரக்டர் செட் ஆன அளவு நவ நாகரீக இளைஞன் வேடம் செட் ஆகலை.. அவரோட பெரிய மைனஸ் அவரோட குரல் தான்... நாளைக்கு உலகம் அழியப்போகுதுன்னாலும், ஷகீலா இன்னும் வயசுக்கே வர்லையாம்னாலும் அண்ணன் கிட்டே ஒரே ரீ ஆக்‌ஷன் தான் .. லந்து விடும் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள்ல பாஸ் மார்க் வாங்கறார்.. 


ஹீரோயின் ஜில் ஜில் ராணி ஜிகிர் தண்டா மேனி  காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால்.. நிஜ வாழ்க்கைல பொதுவா ஃபிகருங்க அக்காவை விட தங்கச்சி ஃபிரஸ்சா இளமையா அழகா இருக்கும், சினி ஃபீல்டுல மட்டும் இதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட்// பானுப்ரியா- நிஷாந்தி, அம்பிகா- ராதா, சிம்ரன் -மோனல்,ஸ்ருதி-அக்‌ஷரா அப்டினு சொல்லிட்டே போகலாம்.. நிஷா அகர்வால்க்கு ஒரு வார்த்தை நீறில்லா நெற்றி பாழ் என்பது மாதிரி குங்குமம் இல்லா பெண் நெற்றி தண்ணீர் கலந்த பால் தான்,... அதாவது டேஸ்ட் கம்மி.. 


 பாப்பா ஒரு சீன்ல க்ளோசப்ல 3 டி எஃபக்ட்ல லோ ஹிப் காட்டுது.. அக்னி நட்சத்திரம் படத்துல அமலா லோ ஹிப் சீனை தூக்கி சாப்பிடற சீன்..ஒளி மயமான எதிர்காலம் பாப்பவுக்கு இருக்கு ஆனா கோபம், வருத்தம், ஏமாற்றம் எல்லா உணர்வுக்கும் ஒரே எக்ஸ்பிரஷன்.. நல்ல வேளை பொதுவா தமிழர்கள் ஹீரொயின்ஸ் முகத்தை பற்றி அதிகம் அக்கறை எடுப்பதில்லை என்பதால் தப்பித்தார்.. 


 சந்தானம் வழக்கம் போல் ஹீரோ ஃபிரண்டா வந்து படத்தை பிரமோட் பண்ண ரொம்ப ஹெல்ப்பா இருக்கார்.. படத்துல அவர் சொல்ற டைமிங்க் விட், ஜோக்ஸ் மொத்தம் 71.


ஹீரோயின் ஹாஸ்டல் ஃபிரண்ட்ஸா வந்த  6 ஃபிகர்ல 2 தான் சுமார் ஃபிகர்ஸ் . மற்றதெல்லாம் அட்டு ஃபிகர்ஸ்.. இயக்குநர் இன்னும் நல்லா செலக்‌ஷன்ல கவனம் செலுத்தி இருக்கலாம்.. 

 ஹீரோவின் அம்மாவா வர்றவர் நடிப்பு, பாத்திரப்படைப்பு கலக்கல்.. தமிழ் சினிமா காட்டும் மாமியார்களில் இவர் ரொம்ப வித்தியாசம்.. அவர் பேசும் வசனங்கள், முக பாவனைகள்  எல்லாமே அருமை..


http://www.cinemaexpress.com/Images/article/2011/9/21/newrelease1.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. டூயட் சீன்ல  ஹீரோ ஹீரோயின் வாய்ல பிளாஸ்திரி வெச்சு ஒருவரை ஒருவர் நக்கலா பார்க்கும் சீன்


2. ஹீரோ ஹீரோயின் இருவரும் டைவர்ஸ் வாங்கினாலும் அவர்கள் மனசு ஒருவரை ஒருவர் சுத்திட்டே இருப்பது பாந்தம்.. 


3. ஓப்பனிங்க்ல 2 லவ் ஜோடிகள் மாற்றி மாற்றி பேசும் வசனங்களை ஒருவருக்கொருவர் மேட்ச் பண்ணிக்காட்டும் சீன்.. அதில் இயக்குநரின் திறமை அபாரம். 


4. ஹீரோ ஹீரோயின் காதல் மலர ஜஸ்ட் அந்த ஒரு ரூபாய் மேட்டர் வெச்சே கொண்டு போனது ஷார்ப்.. 


5. படத்தோட சந்தானம் காமெடி வசனங்கள், ஹீரோவின்  அம்மா இந்தக்கால திருமணங்கள், சகிப்புத்தன்மை பற்றி அங்கலாய்க்கும் காட்சிகளில் வசனகர்த்தா கலக்கி இருக்கிறார்..


http://suriyantv.com/wp-content/uploads/2012/01/vimal.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. ஹீரோயினுக்கு அந்த மினிஸ்டர் பையன் அடிக்கடி டார்ச்சர் கொடுக்க ஒரு சீன்ல ஹீரோயின் ஓடற வண்டில இருந்து ரூ 12000 மதிப்புள்ள செல் ஃபோனை தூக்கி வீசிடறா.. சிம்கார்டை கழட்டி போட்டா மேட்டர் ஓவர்.. அல்லது செல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணா போதுமே?


2. கல்யாணமாலைல மேரேஜ்க்கு ஆள் பார்க்கறவங்க ஆல்ரெடி மேரேஜ் ஆன செகண்ட்ஸ் ஆளை ஃபிரஸ் ஆள்ங்க எப்படி ஓக்கே சொல்வாங்க? ஆளா சிக்கலை? அதாவது மனைவியை இழந்தவர் இன்னொரு விதவையை மேரேஜ் பண்றது ஓக்கே .. ஆனா அழகும், அறிவும், வசதியும், நிரந்தரப்பணியும் உள்ள 25 வயசு இளைஞன்  ஆல்ரெடி மேரேஜ் ஆகி டைவர்ஸ் ஆன பொண்ணு ஓக்கே  என சொல்வது ஏன்?


3. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் க்ளைமாக்ஸ்ல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல  வெவ்வெற ஜோடி கூட மேரேஜ் பண்ண உறவும், சுற்றமும் சூழ வந்து கடைசி டைம்ல மனம் மாறுவது சினிமாத்தனம்..  இன்னும் இயல்பா காட்டி இருக்கலாம்.. 


4. ஹீரோ ஒரு சீனில் புது ஹீரோயின் கிட்டே  தன்னோட மனைவி மேல வெச்சது உண்மையான காதலே இல்லை, ஜஸ்ட் அட்ராக்‌ஷன் தான் அப்டினு ஒரு லைன் பேசறார்.. அது தேவையே இல்லை, ஏன்னா அவர் க்ளைமாக்ஸ்ல அதே பழைய மனிவியோட தான் சேர்றார்.. அப்போ அவர் பேசுன அந்த பழைய வசனம் ஆடியன்ஸ்க்கு நெருடலாமே?


5. ஹீரோயின்க்கு ரொம்ப நாளா ஒரு மினிஸ்டர் பையன் ரூட் விட்டுட்டே இருக்கான்.. அவன் கூட அடிக்கடி ஃபோன்ல பேசறா.. 2 வது மேரேஜ் பண்ற சூழலில் ஹீரோயின் அவனை ஏன் செலக்ட் பண்ணாம முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆளை செலக்ட் பண்ணனும்?


6. மினிஸ்டர் பையன் ஹீரோயினுக்கு ஜோடி இல்லை, அவரால எந்த திருப்பமும் இல்லை அப்புறம் ஏன் அந்த கேரக்டர்? திரைக்கதையை இழுக்கவா? கட் பண்ணி இருக்கலாம்.. 


7. ஹீரோ, ஹீரோயின் கில்மா மேரேஜ்க்கு முன்னாலயே  முடிஞ்சுடுது.. அதுக்கப்புறம் ஹீரோ ஹீரோயின் முன்னால மண்டி போட்டு என்னை மேரேஜ் பண்ணிக்கோன்னு பிரபோஸ் பண்றது  ரொம்ப செயற்கையா இருக்கு. மேட்டர் முடிச்சுட்டா எந்த ஆணும் அப்படி பம்ம மாட்டான்..


 http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2011/10/Nisha-Agarwal-Hot-Stills-from-Solo-Movie-1.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  டேய்.. இந்தப்பொண்ணு யாரு? எதுக்கு ரூம்க்கு வந்திருக்கா?


அது வந்து நான் யூஸ் பண்ற டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?ன்னு பார்க்க வந்தா,, ஹிஹி பார்த்துட்டா இப்போ போயிடுவா 


2.  யோவ். ரேட் ரூ 5000 தானே பேசுனோம்.. ஆனா ரூ 4500 தான் இருக்கு?

 ஹி ஹி  டி டி எஸ் பிடிச்சுட்டு கொடுத்திருக்கேன்,., இன்கம்டாக்ஸ் பிராப்ளம் வந்துடக்கூடாது பாருங்க 


3. உலகத்துலயே இந்த கில்மா பார்ட்டிக்கு கேஸ் தராம செக் கொடுக்கற ஆளை இப்போ தான் பார்க்கறேன்

 இதென்ன பிரமாதம்? சில சமயம் நான் டி டி யே எடுத்துக்குடுத்திருக்கேன்



4. இங்கே பாருங்கடி.. பசங்க பொண்ணுங்களை முதல்ல அங்கே தான் பார்ப்பாங்க.. என்ன பெட்?



5. ஹலோ மிஸ்டர். உங்க ஸ்கேனிங்க் முடிஞ்சிடுச்சா? நாம பேச வந்த மேட்டரை பேசலாமா? 

 ஹி ஹி ஹி 


6. என் பேரு நிமிஷா.. 

 ஓக்கே நான் மட்டும் உங்களை மினிட்ஸ்னு கூப்புட்டுக்கறேன்


7. ஆம்பளைங்களுக்கு மேரேஜ்னா  நோ பிராப்ளம்.. அது யாரா இருந்தாலும். ஆனா பொம்பளைங்களுக்கு செகண்ட் மேரேஜ்ங்கறது ரொம்ப சிரமம்.. சமூகம் கிண்டல் பண்ணும்



8. உங்க  கடந்த கால வாழ்க்கை பற்றி எனக்கு அக்கறை இல்லை, ஏன்னா என்னோட கடந்த கால வாழ்க்கைலயும் சில கறுப்[பு பக்கங்கள் இருக்கு 


9. டேய்.. அதென்னடா லார்டு முருகனை விட உனக்கு ரொம்ப சீக்கிரமா ரெண்டாவது மேரேஜ்  ரொம்ப சீகிரமா செட் ஆகிடுது?


10. பொண்ணுங்க தலைல பேனு இல்லாம கூட இருப்பாங்க, ஆனா கைல ஃபோனு இல்லாம இருக்க மாட்டாங்க


11. உன் ஆள் பேர் உனக்கு தெரியும் தானே.. அதை அக்குள்ல வெச்சுத்தேடு.. 

என்னது?

 அதாண்டா கூகுள் ல தேடு.. காமெடி பண்ணேன்.. 


12.  கடவுளோட கால்குலேஷனை யாராலும் யூகிக்கவும் முடியாது, மாத்தவும் முடியாது


13. மிஸ்.. உங்க ராசி ஸ்கார்ப்பியோவா? 

 ஆமா, எப்படி தெரியும்?

 அவங்க தான்  என்ன பொய் சொன்னாலும் அதிகமா நம்பற ஆள்ங்க 


14. டெயிலி காலைல நானும் ஜாகிங்க் போவேன், என் ஃபிரண்ட்சையும் போகச்சொல்வேன்

 இப்போ புரிஞ்சுதுங்க.. டெயிலி உங்க கணவரை ஓடச்சொல்லி இருப்பீங்க.. அவர் அப்படியே உங்களை விட்டுட்டு ஓடி இருப்பார் .. 


15. உங்க கையால தண்ணி வாங்கிக்குடிச்சாலே  ஒயின் குடிச்ச மாதிரி தான்.




http://www.sattigadu.com/wp-content/uploads/2012/05/Nisha-Agarwal-Hot-Stills-At-Sukumarudu-Movie-Launch.jpg


16. சார். 1000 ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?


எது? இந்த 1க்குப்பக்கத்துல 3 ஓட்டை இருக்குமே அதான் ஆயிரமா?

 சுத்தம்


17. சில்லறை இல்லைன்னா சில்லறைப்பொழப்புங்க.. 

 அதை ஒரு சில்லறை சொல்லக்கூடாது.. 

18.  இங்கே பார்டி.. எப்போ சென்னை வந்துட்டியோ அப்போவே நீ ஒரு பாய் ஃபிரண்டை செட் பண்ணிக்கோ அப்போ தான்  லைஃப் நல்லாருக்கும் 


19.  என்னடா பம்பறே.. வழக்கம் போலவே இந்த இண்ட்டர்வியூவும் நக்கிட்டு போயிடுச்சா?


20. அப்படிப்போட்றா ஆம்லெட்டை


21. வாங்கி வந்தது ஓ சி.. அதுல ஏண்டா பார்க்கறே ராசி ?


22. சார்.. பக்கெட் சேல்ஸுக்கா?

 ஏண்டா நாயே கைல பக்கெட் வெச்சிருந்தா அது சேல்ஸ்க்குன்னு எப்படிடா நினைக்கலாம்? நீ கூட கைல  குழந்தையை வெச்சிருக்கே.. நான் ஏதாவது கேட்டேனா?


23. ஆய் போறதுல கூட நம்மாளுங்க ஹை டெக்னிக் கண்டு பிடீச்சிருக்கானுங்க 


24. ஆப்பிள் கம்ப்யூட்டர் மாதிரி ஒரு அழகு ஃபிகர்டா.. 


25. இந்த ஃபிகருங்க 2 பேருக்கும் பாய் ஃபிரண்ட்ஸே இல்லை.. 

 எப்படிடா சொல்றே?

 அது இருந்தா இவளுங்க ஏண்டா ரீ சார்ஜ் பண்ண  கடைக்கு  வர்றாங்க?அந்த இளிச்சவாய் பசங்களை வெச்சே ரீசார்ஜ் பண்ண சொல்லி இருக்க மாட்டாங்களா?



26. அவ நெம்பரை ஏத்தறதுக்கு ஏண்டா என் பர்ஸ்ல இருந்து 100 ரூபா இறக்குனே?


27. சார்.. இந்த நெட் ஒர்க் செலக்ட் பண்ணுனா சிவா மனசுல சக்தி ஃபிரீயா? 

 அப்டின்னா?

 அதான் சார் எஸ் எம் எஸ்.. 



28. என்னதான் துணிக்கடை ஓனரா இருந்தாலும் பாத்ரூம்ல குளிக்கறப்ப எல்லா துணியையும் கழட்டிட்டுத்தான் குளிக்கனும்


29. அம்மா// நான் கோயில்ல தான்மா இருக்கேன்.. 

 மறக்காம தீர்த்தம் வாங்கிக்குடிடா.. 

 இப்போ தீர்த்தம் தான்மா குடிச்சுட்டு இருக்கேன் ( சரக்கு )


30.ஆண்ட்டி, நீங்க உங்க பையன் கிட்டே 5000 ரூபா குடுத்து விட்டீங்களே சென்னை அனுப்பறப்போ அந்த பணத்தை அப்படியே செலவு பண்ணாம பத்திரமா வெச்சிருக்கான்.. எல்லா செலவும் நான் தான் பண்ணிட்டு இருக்கேன்




http://www.cinejosh.com/gallereys/actress/normal/nisha_agarwal_hot_stills_2412110315/nisha_agarwal_hot_stills_2412110315_005.jpg


31. டியர்.. ஒரு கிஸ்சை செல் ஃபோன் மூலம் பார்சல் பண்ணு

 போடா.. குடுத்து குடுத்து வாய் தான் வலிக்குது


32.. மினிஸ்டர் பையனே சிக்கி இருக்கான்.. வேற ஒரு நல்ல ஆள் சிக்கற வரை இவனை ஸ்டேண்ட் பை- யா வெச்சுக்கோ , பின்னால யூஸ் ஆகும். உனக்கு ஆகாதுன்னு நினைச்சா என் கிட்டே தள்ளி விட்டுடு நான் பார்த்துக்கறேன்.. 


33. யார்றா அது விடிகாலைல 11 மணிக்கே எழுப்பி விடறது?


34. அவனைப்பாரு.. செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு என்னமோ செய்வினை வெச்சதால கை கால் விளங்காதவன் படுத்திருக்கற மாதிரி  இருக்கறதை.... 


35. கடவுள் கண்ணைத்திறந்துட்டார்.. 

 இத்தனை நாளா அவர் கோமா ஸ்டேஜ்ல இருந்தாரா?


36. அங்கே அவ அசிங்க அசிங்கமா ஃபோன்ல திட்டிட்டு இருக்கா .. இவன் என்னமோ ஹாரீஸ் ஜெயராஜ் மியூசிக் கேட்கற மாதிரி சீன் போட்டுட்டு இருக்கான் பாரு.. 


37. விக்கிரமாதித்தன் தோள்ல ஏறுன வேதாளம் மாதிரி எதுக்குடா சிரிக்கறே?

 ஒரு ஃபிகர் செட் ஆனா போதுமே அவ காரித்துப்புனாக்கூட கவிதை சொல்ற  மாதிரி நினைச்சுக்குவானுங்களே?


38. மேடம். உங்களுக்கு திமிரு  ஜாஸ்தி..


 எப்படி சொல்றீங்க?
\
கொழுப்பு ஜாஸ்தியா இருக்கறப்ப திமிரு ஜாஸ்தியாத்தான் இருக்கும்


39. ஒரு தெருவுக்கு 10 சுத்து சுத்துனாலும் ஃபிகர்க்காக எது வேணாலும்  செய்றவன் இவன்

அதாவது நாய் மாதிரி..?


40. உங்களுக்கு பட்டர் ஸ்காட்ச்னா பிடிக்குமா? ஏன்?

 அதுல தானே ஸ்காட்ச் இருக்கு?


41. உன் எக்ஸ்ரே பார்வையை கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.. என் கணிப்புல 50 % பசங்க பொண்ணுங்களை செக்ஸியாத்தானே பார்க்கறாங்க?

 என்னங்க இப்படி சொல்லீட்டீங்க?

 அய்யய்யோ ஏதாவது  தப்பா சொல்லீட்டேனா?

 100% பேரும் அப்படித்தான் பார்க்கறாங்க


42. ஹூம்  டிவில சில படங்கள் பார்த்தேன். கிஸ் சீன்ஸ் ம் ம் சிம்புவும் , விஷாலும் கொடுத்து வெச்சவங்க


43. என்னடி சொல்ரே? கிஸ்ல இத்தனை வெரைட்டி இருக்கா? என் பாய் ஃபிரண்ட் ஒரே மாதிரி தான் இதுவரை குடுத்துட்டு இருக்கான்./. அவன் கிட்டே முதல்ல இந்த புக்கை கொடுத்து படிச்சு கத்துக்க சொல்லனும்


44. டேய் மாப்ஸ்.. என் ஆளை நான் கிஸ் அடிக்கனும்.. அதுக்கு ஒரு கார் வேணும்.. 

 கிஸ் அடிக்க 2 வாய் இருந்தா போதுமே. எதுக்கு காரு?


45. அப்புறம் இன்னொரு மேட்டர்.. கார்ல கறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கனும்

 கார்க்கு கண் ஆபரேஷனா நடந்திருக்கு? எதுக்கு அப்படி? 

 அதாவது வெளீல இருந்து யார் பார்த்தாலும் உள்ளே நடப்பது தெரியக்கூடாது





http://www.andhrabulletin.com/admin/images/nisha%20agarwal%20hot%20stills%20in%20solo%20(9).jpg
46. வாழ்க்கையில் இந்த செகண்டை எப்பவும் மறக்ககூடாது


47. எங்கப்பா எத்தனையோ தடவை கட்சி மாறி இருக்காரு.. ஆனா நான் என்னைக்கும் மாறாம இருக்கேன்.. எப்பவும் உன் மனசுல எனக்கு ஒரு இடம் வேணும்.. நீ எப்போ மன்சு மாறுனாலும் என்னை கால் பண்ணு


48. யார்றா அந்த ஃபிகரு.. பேரென்ன?


 சீக்ரெட்.. 

 ஸ்வீட் நேம் 


49. எந்த புருஷனும் தனக்கு பொண்டாட்டியா வரப்போறவ கிட்டே இப்படி ஒரு ஃபிளாஸ்பேக் கேட்கவே கூடாது


50. வழக்கமா தப்பு நடந்த பிறகு பொண்ணுங்க அதை நினைச்சு அழுவாங்க.. ஆனா எனக்கு அழுகையே வர மாட்டேங்குது.. ஏன்?


51. உங்க பேரண்ட்ஸ் எப்படி அவ்ளவ் சீக்கிரமா உங்க மேரேஜ்க்கு சம்மதிச்சாங்க?


 அப்படி உடனே சம்மதிச்சா அவங்க எப்படி பேரண்ட்ஸ் ஆவாங்க? ஆரம்பத்துல சம்மதிக்கலை



52. உங்க வயசுப்பசங்க டக்னு பேரண்ட்ஸை விட்டுட்டு வந்துடறீங்க.. ஆனா எங்களால அப்படி உங்களை விட்டுட்டு வர முடிய்றதில்லைடா. 


53. இந்தக்காலத்துப்பசங்க  பேரண்ட்ஸ் கிட்டே பர்மிஷன் எல்லாம் கேட்கறதே
 இல்லை.. ஜஸ்ட் இன்ஃபர்மேஷன் தான் தர்றாங்க 


54. இப்போ நான் சரக்கு புராணம் சொல்லப்போறேன்.. லிக்கர் ஃபேமிலி அவங்களூக்கு விஸ்கி, பிராந்தி, ஜின், ரம்னு 4 பசங்க.. 

 பீர்?

 அது கூலிங்க்டா அது பொண்ணு.. 


55. சிட்டில வலை வீசித்தேடினாலும் வெர்ஜினிட்டி கேர்ள்ஸ் கிடைக்காது.. 


56. என்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டியா? நம்பிக்கைல கல்யாணம் பண்ணிக்கிட்டியா?


57. இன்னைக்கு ஃபுட்டும் கட், பெட்டும் கட்டா? (  FOOD & BED)


58. என்ன பார்க்கறே? உன்னை மாதிரி நடு ராத்திரில திருடித்திங்கற புத்தி எனக்கு இல்லை.. 


59. வீட்ல சண்டையா பாஸ்? எங்க வீட்லயும் சண்டை தான்.. இதே பார்க்ல உக்காந்திருங்க.. இதுக்குனு ஒரு சங்கமே இருக்கு.. மெதுவா ஒவ்வொருத்தரா வருவாங்க


60. டியர்.. நான் மூடுல இருக்கேன்


 நான் மூடு அவுட்ல இருக்கேன்



http://www.bestceleb.info/wp-content/uploads/2012/01/nisha-agarwal-hot-navel-ishtam-movie.jpg


62. மேரேஜ்க்கு முன்னால என் கூட பலான மேட்டருக்காக கூப்பிட்டதும் ஓடி வந்த நீ  அதுக்கு முன்னால வேற யார் கூடவாவது  போய் இருக்க மாட்டேனு என்ன நிச்சயம்?

63. இருடா.. உன்னை வெச்சுக்கறேன்..

 உன்னை கட்டிக்கிட்டதே பெருசு.. இதுல என்னை வெச்சுக்கறியா?

64. உங்களை மாதிரி ஆண்ட்டிங்கன்னா ரொமாண்ட்டிக்கா இருப்பிங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஹி ஹி


65,.கிச்சன் ரூம்ல ஃபைட் வந்தாலும், ஹால்ல ஃபைட் வந்தாலும் எல்லாத்தையும் சமாதானப்படுத்தத்தானே பெட்ரூம் இருக்கு.. ? அதை ஏன் யூஸ் பண்னலை?


66. ஹாஸ்டல் பொண்ணுங்கடா நாங்க.. பார்க்க எப்படி தெரியுது?

 பார்க்க என்னென்னெமோ தெரியுது.. அதெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியுமா?


67.,டேய்.. என்னடா டி சர்ட் இது/


 மிஸ் பிடிக்கலைன்னா சொல்லிடுங்க கழட்டிடறேன் ஹி ஹி 

68. இந்த பொண்ணுங்களை நம்பவே முடியலை.. தனியா இருந்தா அடக்கி வாசிக்கறாங்க , அணியா இருந்தா அநியாயத்துக்கு வாசிக்கறாங்க


69. எட்டாங்கிளாஸ்ல ஹெட்மாஸ்டர் நுழைஞ்ச மாதிரி நான் உள்ளே ரூம்ல நுழைஞ்சதும் ஏன் எல்லாரும் பம்பறீங்க?


70. இப்போ நீங்க அவனை அடிச்சீங்களே இந்த அடியை சின்ன வயசுலயே அடிச்சு வளர்த்தி இருந்தா நல்லாருந்திருக்கும்.. கண்ணு போன பிறகு கலர் டி வி வாங்கி என்ன பிரயோசனம்?

71. உனக்கு எந்த மாதிரி பொண்ணுடா பார்க்க?

 சேட்டிங்க் டேட்டிங்க் சீட்டிங்க் இல்லாத பொண்ணா வேணும்..


 ஓக்கே பார்க்கறோம்

 கிழிச்சீங்க.. 400 வருஷம் தேடுனாலும் கிடைக்காது..



72.  டியர்.. எனக்கு வேலை போயிடுச்சுங்கற மேட்டர் உனக்கு எப்படி தெரியும்?

 இண்ட்ரஸ்ட் ஒருத்தர் மேல வ்ந்துட்டா அவர் பற்றிய எல்லா மேட்டரும் தெரிஞ்சுடும்


73. அவளை மறந்தாச்சா?

 இன்னும் இல்லை. ஆனா சீக்கிரம் மறந்துடுவேன்..


74. செகண்ட் ஹேண்ட் வண்டி எனக்கு வேண்டாம் டாடி..  புதுசுதான் வேணும்.. யாரோ ஓட்டுன பைக்கை ஓட்ட கஷ்டமா இருக்கு. அவன் ஹாரன் அடிச்சதை நான் எப்படி யூஸ் பண்ண?



75.  பசங்க அவங்களோட கேர்ள் ஃபிரண்ட்சை எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டு போவாங்க, ஆனா அபார்ஷன் பண்ன மட்டும் பொண்ணுங்க தனியாத்தான் போகனும்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK-6kUNpDMZ-RJc_u_Kv-WNUKjtH9QU341-RNUQtTHJ0WqyLCyWRGcVlRVA0zNy-gej1kz8g8lqzMeZ7j06EyWZQ7mWoEcO7PxCNfEreITag-Cvv_Q0c0bQ3hNG5d9y6sgiVuJQ_2RTus/s1600/Nisha-Agarwal-Hot-Wallpapers-Photos1.jpg


76. உங்கம்மாவோ, நானோ ஏன் இன்னும் பிரியாம இருக்கோம்? எல்லாம் கல்யாணம் மேல வெச்சிருக்கற மரியாதைதான்..


77. பிரிஞ்சு வாழ 1000 காரணம்  இருக்கும் ஆனா சேர்ந்து வாழ ஒரே ஒரு காரணம் போதுமே?


78. ஆண்ட்டி.. நீங்க மாதர் சங்கத்துல இருக்கீங்க.. முதல்ல நீங்க ஒரு மேரேஜ் பண்ணிக்குங்க.. ஏன்னா அப்போதான் மத்த பொண்ணுங்க எல்லாம் உருப்படுவாங்க




 யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? மேரேஜ் ஆகி பிரிந்து வாழும் தம்பதியர் அவசியம் காண வேண்டிய படம்.. கொஞ்சமாவது மனமாற்றத்தை நிச்சயம் தரும்.. காதல்ர்கள், லேடீஸ் ஹாஸ்டல் பெண்கள் பார்க்கவேண்டிய படம்



 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41


  எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 சி.பி கமெண்ட் - யூத்ங்க எல்லாம் பார்க்கலாம். சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம்


 ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்