Thursday, May 26, 2011

ஜெ வின் முன்னாள் வளர்ப்பு மகன் சினிமாவில் ஆதிக்கம் VS விகடன் - காமெடி கும்மி

http://www.findnearyou.com/wallpaper/Anjali/Anjali_4648.jpg 

''பாஸ் ரெடி!'' - பரபரப்பாகிறது  யூனிட். ஆயிரம் வாட்ஸ்களில் பளீர் ஒளி உமிழும் விளக்குகள் முன், துப்பாக்கி, கிடார், பைக், கூலிங் கிளாஸ் என விதவிதமான 'காம்போ’க்களோடு போஸ் கொடுக்கிறார் பாஸ் என்கிற பாஸ்கரன்!

சி.பி -  அடடா .. ஜோடி இல்லையா?ஜாடிக்கேத்த மூடியா ஒரு அட்டு ஃபிகரை வளைச்சு போட்டிருக்கலாம்.

கடந்த ஆட்சியில் திரைத் துறையில் சுழன்றடித்த 'நிதி’ப் புயல்களுக்கு, புதிய அ.தி.மு.க. ஆட்சியின் கவுன்ட்டர் அட்டாக்... பாஸ்கரன்!
 
 சி.பி - கவுண்டர்களை மட்டும் தான் அட்டாக் பண்ணுவாரா?முதலியார்,செட்டியார்களை விட்டுடுவாரா?
 
சார் யார்னு தெரியுதா... சசிகலாவின் அக்கா வனிதாவின் வாரிசு. டி.டி.வி. தினகரனின் தம்பி. ஜெயலலிதாவின் முன்னாள் 'வளர்ப்பு மகன்’, இந்நாள் 'சின்ன எம்.ஜி.ஆர்’ சுதாகரனின் அண்ணன். 'பழைய ஜெ.ஜெ. டி.வி. பாஸ்கரனேதான்!
படத்தின் பெயர்... 'தலைவன்!’

சி.பி - பேசாம படத்துக்கு தலைவன் அறுக்கின்றான் என டைட்டில் வெச்சிருக்கலாம்
1. ''என்ன திடீர்னு சினிமா ஆசை?''

''அண்ணாமலை யுனிவர்சிட்டியில் படிக்கிற காலத்தில் இருந்தே சினிமான்னா எனக்கு உயிர். நல்ல படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பேன். முதலில் நான் ஒரு ரசனையுள்ள ரசிகன். இப்போ... நடிகன்!''

சி.பி-  தொடர்ந்து நல்ல படங்களை தேடிட்டே இருக்க வேண்டியது தானே? எதுக்கு இந்த விபரீத ஆசை?டாக்டர் சீனிவாசனுக்கு போட்டியா?

2. ''கூட்டம் கூட்டமாக் கிளம்பிட்டீங்க... என்ன பிளான்... ஆக்ஷன் ஹீரோவா இல்லை... பெர்ஃபாமன்ஸ் ஆக்டரா?''

''நான் தலைவர் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகன். அவரோட அலட்டல் இல்லாத நடிப்பு எனக்குப் பிடிக்கும். 'அன்பே வா’ படத்தில் ஒரு காட்சியில ஆஜானுபாகுவான மல்யுத்த வீரனைத் தலைக்கு மேல தூக்கி நாலு சுத்துச் சுத்தி வீசுவார். தலைவர் நினைச்சிருந்தா, அந்த ஸீன்ல தாராளமா டூப்பைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனா, தலைவர் அப்படிச் செய்யலை. ஒரு வாரம் கடுமையா உடற்பயிற்சி செஞ்சு, நிஜமாவே அந்தப் பயில்வானைத் தூக்கி வீசினார். அது மாதிரி கம்பீரமான ஆக்ஷன் ஹீரோவா ஆகணும். அதுதான் என் ஆசை!''

சி.பி-  கம்பீரமா? அதுக்குத்தான் ராதிகாவின் நிகழ்காலக்கணவ்ர் சரத் இருக்காரே? அப்புறம் நீங்க எதுக்கு?

3. ''பூரிப்பா... செம கனமா இருந்தீங்க. இப்போ ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டீங்க... 'அம்மா’ ஆட்சிக்கு வந்த வேகத்துல எப்படி இப்படி?''

சி.பி- அடங்கோ .. இதுவே ஸ்லிம்ம்னா அப்போ தனுஷ்,சித்தார்த் எல்லாம் என்ன பண்ணுவாங்க?

''ஹைய்யோ.... ஸ்லிம்மா இருக்கேனா! தேங்க்ஸ் தலைவா! ஆனா, ஆட்சி மாற்றத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. சினிமாவுல நடிகன் ஆகணும்னா, ரிஸ்க் எடுக்கணும்னு எனக்குத் தெரியும்.

 சி.பி- இனி உங்க படம் பார்க்கவும் ரிஸ்க் எடுக்கனும் போல..

ரெண்டு வருஷம் போராடி உடம்பைக் குறைச்சிருக்கேன்.

 சி.பி - குறைச்ச உடம்பே 98 கிலோன்னா.... 


தினமும் நாலு மணி நேரம் எக்சர்சைஸ் பண்ணினேன். 

 சி .பி. ஜிம்லயா? வீட்டுலயேவா? ஹி ஹி ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்.. 


கடுமையான டயட். நம்புவீங்களா... 20 கிலோ எடை குறைச்சிருக்கேன். முன்னாடி பார்த்தவங்க, 

 சி.பி- நல்ல வேளை அவங்க பின்னாடி பார்க்கல..

'என்னப்பா ஆளே இளைச்சுத் துரும்பாப் போயிட்டே’னு கேட்டாலும், புதுசா பார்க்கிறவங்களுக்கு ஜம்முனு தெரிவேன்ல!''

சி.பி- என்னது துரும்பா? இது உங்களுக்கே அக்குறும்பா தெரியல?
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPve67NrAYj_dw0nydtK2fnxKXMRJn0IzpuAYFke_uTVPeGMaCJSHk4yinE3ISr6P9PfMyVZ6xCy8UPih7BcFmCf8xPtEqLx4ltYP3lo59wsVpHM8tuFsbMfJMKSzy5_XurMcESS0uWPq8/s1600/Tamil_Actress_Anjali_wallpapers_stills_01.jpg


4. '' 'தலைவன்’கிற பேர்ல ஏற்கெனவே எம்.ஜி.ஆர். படம் வந்திருக்கே?''

''அதனால என்ன? என் மானசீக குரு, ஒரே தலைவன் எம்.ஜி.ஆர்தான். நான் நடிக்கிற முதல் படத்தோட டைட்டில் அவர் படப் பேர்ல அமைஞ்சு இருக்கு. இது அவரே எனக்கு ஆசீர்வாதம் வழங்குற மாதிரி!''

சி.பி- எம் ஜி ஆருக்கு கெட்ட பேர் வாங்கித்தந்தவங்க அவர் அமரர் ஆன பிறகு 1000 பேர்.. அண்ணன் அந்த ஆயிரத்தில் ஒருவர் போல.. 

5. ''டைரக்டர் யாரு?''


''ஏகப்பட்ட டைரக்டர்கள் நிறையக் கதைகள் சொன்னாங்க.

 சி.பி - நீங்க ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே போதும்னு கதை விட்டுருப்பாங்களே?


அதிலே எனக்குப் பிடிச்சது 'தலைவன்’தான். படம் முழுக்கத் திகீர் திருப்பங்களும் அதிரடி ஆக்ஷனும் நிறைஞ்சு இருக்கும். படத்தை எல்லோருக்கும் தெரிந்த பிரபல டைரக்டர் ஒருத்தர்தான் இயக்குவார். யார்னு இப்போ சொல்ல மாட்டேன்... சஸ்பென்ஸ்!''

சி.பி- ஆமா.. இப்போ சொல்லாம அப்புறமா சொன்னா மட்டும் அந்த டைரக்டருக்கு அடி கிடைக்காம போயிடுமா?

6. '' 'தி.மு.க. தலைமைக் குடும்ப உறுப்பினர்கள் கூட்டம் கூட்டமா சினிமாவுக்கு வந்து ஆக்ரமிப்பு பண்ணிட்டாங்க’ன்னு கடும் விமர்சனம் வந்தது. அதை இப்போ நீங்க அ.தி.மு.க. சார்பில் ஆரம்பிச்சுவைக்கிறீங்களே?''  

சி.பி- ஆனா அண்ணனுக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள் வரப்போகுது.. 

''இல்லவே இல்லைங்க! ஒண்ணு உறுதியாச் சொல்றேன். என் திறமை மூலம் மட்டுமே நான் ஜெயிப்பேன். எங்கேயும் எப்பவும் தலையீடு இருக்காது. சிங்கம் மட்டுமே வாழ்வது காடாகாது. மான், முயல், எருது, யானைன்னு எல்லாமும் நல்லபடியா வாழணும். சினிமாவும் அது மாதிரிதான். தயாரிப்பாளரில் இருந்து லைட்பாய் வரை எல்லாரும் வாழணும். நான் வாழறதுக்காக மத்தவங்க வாழ்க்கையை அழிக்க மாட்டேன். அது தி.மு.க. ஆட்களுக்குத்தான் வரும். எனக்கு வராது!''  

சி.பி - உங்களுக்கு நடிப்பு வராதுன்னு நீங்களே ஒத்துக்கறீங்களே.. தேவலை.. 

7. ''உங்க சினிமா பிரவேசத்துக்கு ஜெயலலிதா, சசிகலாவிடம் ஆசீர்வாதம் வாங்குனீங்களா?''

''அவங்க ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு!''

சி.பி - விளங்கிடும்.. 

Wednesday, May 25, 2011

PIRATES OF THE CARIBBEAN-அட்வென்ச்சர் ஆக்‌ஷன்+கடல் கன்னியின் காதல் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்


http://www.ihabo.in/wp-content/uploads/2011/05/Pirates-of-the-Caribbean-4.1-575x431.jpg

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசை அமைப்பாளர் + ஹீரோ இணைந்த படம்.வழக்கமான பாணியில் வந்த கடல் ,கப்பல் அட்வெண்ச்சர்  ஆக்‌ஷன் ஃபிலிம் தான் என்றாலும் கண் கலங்க வைக்கும் கடல் கன்னியின் காதல் கதையும் இருப்பது கூடுதல் பிளஸ்..

கதை  வழக்கம் போன்ற கடற்பிரயாண கப்பல் கதை தான். இளமை நீரூற்று என்று சொல்லப்படும் இடத்துக்குப்போக 2 குரூப் முயற்சி செய்யுது.. அதுல போய் அந்த நீரூற்றை  பிடித்து குடித்து விட்டால் சாகாவரம் நிச்சயம்.செல்லும் வழியில் கடல் கன்னி ஒருத்தியை  சிறை பிடிக்கிறார்கள்.நர பலி இட.. அந்த கடல் கன்னிக்கும், அந்த குரூப்பில் உள்ள ஒருவனுக்கும் காதல்.. ..

மெயின் கதையை விட பலரின் மனம் கவர்ந்தது கடல் கன்னியின் காதல் கதை தான். கிளைக்கதையாக வந்தாலும் செம திரில்லிங்க்.பூமியில் வாழும் மனிதனுக்கும்,கடலில் வாழும் கடல் கனிக்கும் காதல் சாத்தியமா? என்றெல்லாம் லாஜிக்கே பார்க்காமல் எல்லோரும் அந்த கதையை ரசித்த விதத்திலே  காதல் கதைகள் ஏன் சாகா வரம் பெற்றிருக்கின்றன என்ற உண்மை புரிகிறது.

ஹென்ஸ் ஜிம்மன்ஸ் தான் மியூசிக்.. பிரமாதப்படுத்டுகிறார் மனுஷன்.. பல காட்சிகளில் டெம்ப்போ கூட்ட இசை முக்கிய இடம் பிடிக்கிறது.



http://www.killurtime.com/wp-content/uploads/2011/05/Pirates-Of-Caribbean-4.jpg
ஹீரோ ஓப்பனிங்க் சீன்ல இருந்தே காமெடியை அள்ளி தெளிக்கிறார். ஜிம் கேரியின் பாடி லாங்குவேஜ் இவருக்கு.. சாரட் வண்டியில் எஸ்கேப் ஆகும் சீனில் ஒரு லேடியை கட்டி அணைக்க அவர் மயக்கத்தில் இருக்கும்போதே அவர் காதில் உள்ள கம்மலை அபேஸ் பண்ணும் சீன் அபாரம்.. செம சுறு சுறுப்பான நடிப்பு ஹீரோவுடையது.. அவர்  வாள் பிடித்து சண்டை இடும் காட்சியில் அவரது பாடி லாங்குவேஜ் அபாரம்.

ஹீரோயின் செம கிளாமர்.. ஹி ஹி அதானே நமக்கு வேணும்.. அதுவும் ஓப்பன் செஸ்ட் டிரஸ்ஸில் பாப்பா இன்னும் அழகு.. 

கடல் கன்னியாக வரும் ஃபிகர் பிரமாதமான அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் அப்பாவித்தனம்,சோகம் போன்ற உணர்வுகள் நல்லாவே காட்டுகிறார். அது போக அப்பப்ப அழகு தரிசனமும் காட்றார் ( அதானே... பார்த்தேன் )

கப்பலில் ஹீரோ & கோ போகையில் கடல் கன்னிகள் சுற்றி வளைக்கும் காட்சி செம விறு விறுப்பு.. அப்போது வரும் பின்னணி இசை அபாரம்.
http://moviecarpet.com/wp-content/uploads/celebrities/pirates-of/the-caribbean-4-7-new-images/pirates-of-the-caribbean-4-7-new-images-04.jpg
 படத்தில் கலக்கலான வசனங்கள்

1.  உன்னால் எவ்வளவு சீக்கிரம் போக முடியும்?

காற்றை விட வேகமாக..  ( தன்னம்பிக்கை தெறிக்கும் வரிகள்)

2.  டேய்.. நாயே .. டிரஸ்ஸை துவைக்கவே மாட்டியா? அவ்வ்வ்வ்வ்

3. சாதிக்கனும்னு நினைக்கறவனுக்குத்தான் சோதனைகள் அதிகம் வருது..

சரி.. சரி.. நீ இதுவரை எதுவும் சாதிக்கலைன்னு சொல்லு...

4.  ஏன் அவங்க எல்லாம் பரபரப்பா இருக்காங்க? உன் வேலையா அது? 

யாரோ மகா ராஜாவாம்.. நான் சீண்டிட்டேனாம்.. 

5.  டியர்.. நீ என்னை ஏமாத்திட்டே.. 

என்னமோ பல ஆண்களோட பழகுன மாதிரி பேசறே,.?

6.  நான் உன்னை பயன்படுத்திக்கிட்டேன்னு எப்படி சொல்றே?

என் வாயால தான் சொன்னேன்.

7. நாம கடல் பிரயணம் பண்ணி 5 நாள் ஆச்சு.. 

எப்படி சொல்றே? கடல் தண்ணியோட வாசத்தை வெச்சு சொல்றியா?

ம்ஹூம்.. உன் உடம்புல இருந்து வர்ற ஸ்மெல்லை வெச்சு சொல்றேன், நீ தான் 5 நாளா குளிக்கவே இல்லையே..

8.  இது கனவுன்னா என்னை கட்டிப்பிடிக்க அனுமதிக்கனும் நீ.. 

எஸ் .. இது கனவு தான்

அடப்பாவி.. எந்திரி முதல்ல.. 

9.  உன் மூஞ்சிக்கு இப்படி ஒரு அழகான பொண்ணா?

அப்போ நீ ஆச்சரியப்பட்டுக்கிட்டே செத்துப்போ.. 

10. என் பின்னாடி நீ சுத்துனியா? உன் பின்னாடி நான் சுத்துனேனா? எப்படியோ நாம 2 பேரும் வேலை வெட்டி இல்லாம ஒருத்தர் பின்னால ஒருத்தர் சுத்திட்டே இருந்தோம்.. 

11.  டியர் எனக்கு ஒரு டவுட்.. நான் தான் உன்னோட முத லவ்வரா? ( தக்காளி எல்லோருக்கும் இந்த டவுட்  இருக்கு போல )

12.  டியர்.. கடலும் , கப்பலும் போல நம்ம 2 பேரையும் யாராலும் பிரிக்கவே முடியாது.. 



http://www.cinemanewsonline.com/wp-content/uploads/2010/09/Megan-Fox-Pirates-of-the-Caribbean-4.jpg
13.  சடங்குல முக்கியமான 1 இருக்கு அது நரபலி.. 

அய்யய்யோ யாரும் சொல்லவே இல்ல? எனக்கு வர வர நீரூற்று மேல ஆசை குறைஞ்சிட்டே வருது..

14.  ஆள் சைஸ் குறைஞ்சாலும் சேட்டை குறையவே இல்லையே. 

15.  டேய் நாயே.. இந்த கேவலமான டோப்பாவை போட்டுட்டூ நீ மன்னரை ஏமாத்தலாம். ஆனா என்னை ஏமாத்த முடியாது.. 

16. நான் அவரை என்னைக்குமே மதிச்சதே இல்லை.. 

17. என்னைத்தவிர யாரும் உன்னை சேர்த்துக்கவே மாட்டாங்க..

18.  எனக்கு ஒரு ஐடியா தோணுது.. இவனுக்கும், அவனுக்கும் சண்டை.. இதுல ஏன் 2 குரூப்பும் மோதிக்கனும்?  அவனுங்க 2 பேரும் மோதட்டும்.. நாம வேணா வேடிக்கை பார்ப்போம்.. வேணூம்னா பந்தயம் கட்டலாம்.. ஹா ஹா

19.  வேற யாராவது வீர மரணம் அடைய விரும்பறீங்களா?

20.  ஏய்.. உண்மையை ஒத்துக்க..  இன்னும் என்னை நீ லவ் பண்றே.. 

உன்னை என் வீட்டு நாய்க்குட்டி கூட லவ் பண்ணாது.. 

21.  கடல் கன்னிகளுக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி.. ( ஹா ஹா பொதுவாவே கன்னிப்பொண்ணுங்களுக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி தான் பாஸ்)

22. நீ அவளை லவ் பண்றியா?

ம் ம் தெரில.. அதை காதல்னு சொல்ல முடியாது.. சரி... காதலாவே இருக்கட்டும் .. இப்போ என்ன .. அதுக்கு?

23.  டியர்.. உன் கூட இருந்தா உருப்படியா எதையும் செய்ய முடியாது.

24. ஹாய்.. சாரி.. என் வேலை முடிஞ்சதும் உன்னை காப்பாற்றலாம்னு இருந்தேன்.. 

25.  ப்ளீஸ்.. ஒரே ஒரு சொட்டு கண்ணீர் கொடு.. ஓ.. உன் கிட்டே சோகம் இருக்கு ஆனா துக்கம் இல்லை.. ம் வர வைக்கிறேன்.. 

26.  அவளுக்கு என் மேல ஒரு இது.. அதை எப்படி சொல்றது? 

ம்./. வாயாலதான்

27. ஒரு பொண்ணைக்கூட இதுவரை நான்...... 

நீ அவ்வளவு நல்லவனா?

28. நீ மதம் மாறனும்,.. 

சாகறதுக்கு முன்னால மாறிடறேன்.

http://cdn.screenrant.com/wp-content/uploads/gemma-ward-pirates-of-the-caribbean-4.jpg

இயக்குநர் சபாஷ் வாங்கும் இடங்கள்

1. கடல் கன்னி தண்ணீர் தொட்டியில் கொண்டு வரப்படும்போது எதிர்பாராத விதமாக தொட்டி உடைந்து அவர் முழு பெண்னாக மாறுவது.. (செம கிளு கிளு.. இந்த சீனில் கடல் கன்னி .. ஹி ஹி )

2.  ஹீரோ மலை உச்சியில் இருந்து நீர்வீழ்ச்சியில் குதிக்கும் சீன் .. செம படப்பிடிப்பு.. படபடப்பு

3.  வெள்ளிக்கிண்ணத்தை ஹீரோ அபேஸ் செய்யும் சீன் செம லாவகம்.. 

4, ஹீரோ ஹீரோயின் காதல் ஊடல் காட்சிகள் மற்றும் கடல் கன்னி காதல் காட்சிகள் செம செண்ட்டிமெண்ட்

5. ஒளிப்பதிவும் ஆர்ட் டைரக்‌ஷனும் போட்டி போட்டுக்கொண்டு  கலக்குவது.. 



http://moviecarpet.com/wp-content/uploads/celebrities/pirates-of/the-caribbean-4-7-new-images/pirates-of-the-caribbean-4-7-new-images-05.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோயினும் ,அவர் தந்தையும் மரணத்தின் வாசலில்.. யாரோ ஒருவர் தான் நீரூற்றை அருந்தி உயிர் பிழைக்க முடியும்.. அப்போது தந்தை  தான் பிழைத்தால் போதும் என நினைப்பது.. எந்த அப்பாவாவது சொந்த மகள் மரணம் அடைந்தால் பரவாயில்லை தான் மட்டும் பிழைத்தால் போதும் என நினைப்பரா?

2. க்ளைமாக்ஸில் ஹீரோ ஹீரோயினை அம்போ என தனி தீவில் விட்டு வருவது. எந்த காதலனாவது ஊடலுக்காக கூட காதலியை தவிக்க விடுவானா? அப்படி தவிக்க விட்டால் அவன் உண்மையில் காதலன் தானா?

3.  இறந்ததாக தான் கருதிய  காதலன் உயிருடன் வந்ததால் ஆனந்த கண்ணீர் விடும் கடல் கன்னி காதலன் கண் முன் பலி ஆவதைப்பார்த்தும் கல் மனதுடன் இருப்பது எப்படி? கதறி இருக்க மாட்டாளா?

4. ஹீரோ - ஹீரோயின் இருவரும் பல சமயங்களில் ஒருவரை ஒருவர் ஆபத்தில் தவிக்க விட்டு தான் மட்டும் தப்பித்தால் போதும் என நினைப்பது..  காதல் என்றாலே விட்டுக்கொடுப்பது தானே?

படத்தில் ஒரு சீன் கூட போர் அடிக்கவில்லை.. செம ஸ்பீடு..  எல்லோரும் பார்க்கலாம். ஈரோடு அபிராமி தியேட்டரில் பார்த்தேன்.. 

நம்ம சித்தோடு ஜேம்ஸ்பாண்ட் சதீஷூம் நானும் பார்த்தோம். நல்ல நேரம் சதீஷ் சித்தோடு ஷர்மிளா கூட அப்பாயிண்ட்மெண்ட் என்பதால் வரவில்லை என இந்த சதீஷ் சொன்னார்.

 டிஸ்கி - தமிழ்மணம் கடந்த 6 நாட்களாக என் பிளாக்கில் மட்டும்  வேலை செய்யததால் அதில் ஓட்டு விழவில்லை. அந்த 18 இடுகைகளில் முக்கியமான சில இடுகைகளை மட்டும் லிங்க் கொடுத்துள்ளேன்.. முடிந்தால் அதில் வாக்கிடவும்.

2. நாளைய இயக்குநர் - சைக்கோ த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

3. டாப் டென் ( 10) பெண் பதிவர்கள் யார்? ஒரு அலசல் 

4.மைதானம் - அடிச்சாங்கய்யா ஒரு சிக்சரை - சினிமா விமர்சனம்

கோர்ட்டில் கனி, ஜெயிலில் கனி...சதியில் கனி - ஒரு ரிப்போர்ட்

'மகள் கனிமொழி பிறந்த அதிர்ஷ்டமே கருணாநிதியை முதல் அமைச்சராக உயர்த்தியது!’ என்று 'நாத்திகம் பேசும்’ தி.மு.க-வினரே சொல்வார்கள். இன்று அதே கனிமொழியின் துரதிர்ஷ்டம், கருணாநிதியின் 70 வருடப் பொது வாழ்க்கைக்கு ஒரு களங்கம்! 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கலைஞர் டி.வி-யின் முதன்மை நிர்வாகி சரத்குமாரும் கனிமொழியும்,
முறையே 16-வது மற்றும் 17-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டனர்.

'கலைஞர் டி.வி-க்கு யாரிடமும் சட்டபூர்வமாக கடன் வாங்க உரிமை உண்டு. அதன்படி நேர்வழியில் கடன் வாங்கி உள்ளனர். அதற்காக அவரை குற்றம் புரிந்தவராகக் கருதக் கூடாது!’ என்று வாதாடினர். 

சி.பி.ஐ. தரப்பிலும் ஏராளமான எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. இப்படி இரு தரப்பிலும் வைக்கப்​பட்ட வாதங்களைக் கேட்ட பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, நீளமான ஒரு தீர்ப்பைக் கூறினார். 2ஜி வழக்கின் இரண்டாவது குற்றப் பத்திரிகையே 100 பக்கங்களுக்கு குறைவானதுதான். ஆனால், கனிமொழி ஜாமீன் மனு மீது, நீதிபதி அளித்த தீர்ப்பு 144 பக்கங்கள்.

''நான் இப்போது வழக்கின் தன்மையைக் குறித்தோ, அல்லது அதுகுறித்து மதிப்பிடவோ செய்யவில்லை. வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. நீதிமன்ற விசாரணையில்தான் உண்மைகள் வெளிவரும். ஆனால், குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டவை மற்றும் சாட்சியங்களின் படி, 2ஜி உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து
200 கோடி பெற்றது சரத்குமார்தான். அவர்தான் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். 

நிறுவனம் சார்பில் மட்டும் அல்ல, மற்ற இயக்குநர்கள் சார்பிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். கலைஞர் டி.வி. தொடர்பாக ஆ.ராசாவோடு அடிக்கடி தொடர்பு கொண்டு உள்ளார் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன...'' என்றார் நீதிபதி சைனி.

அடுத்ததாக, கனிமொழியைப்பற்றி குறிப்பிட்டார் நீதிபதி.

''கனிமொழி குற்றமற்றவர், அப்பாவி, ஓர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலே தவறுதலாக சம்பந்தப்படுத்தி உள்ளனர் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலத்தோடு, கலைஞர் டி.வி-யின் நிதி மேலாளர் ஜி.ராஜேந்திரன் கூறிய சாட்சியமும் கனிமொழிக்கு எதிராக இருக்கிறது!'' என்று கூறி ஜாமீனை மறுத்தார். 'கலைஞர் டி.வி.

200 கோடியை லஞ்சமாக வாங்கவில்லை. கடனாகவும் பங்குகளாக மாற்றிக்கொள்ளவும்தான் வாங்கியது’ என்று உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே கனிமொழிக்கு எதிராக மாறி உள்ளது.

6.6.07 முதல் 20.6.07 வரை கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநராக இருந்துள்ளார். சில காரணங்​களுக்காக இந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருந்​தாலும், 19.12.08-ல்,

200 கோடியை சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர். 

13.2.2009 அன்று நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில் சரத்குமாரோடு கனிமொழியும் பங்கெடுத்துக்கொண்டு, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பணம் பெற சரத்குமாருக்கு அனுமதி கொடுத்துள்ளார் என்கிற தகவல்களை கலைஞர் டி.வி. நிதிப் பிரிவு பொது மேலாளர் ராஜேந்திரன் சாட்சியமாகக் கூறி இருப்பதைத்தான் நீதிபதி குறிப்பிடுகிறார்.

ராம்ஜெத்மலானி வைத்த வாதங்களில் மிக முக்கியமானது, கனிமொழி ஒரு பெண் என்பதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்பதாகும். ''பெண் என்கிற முறையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது! ஏனென்றால் மிகப் பெரிய குற்றத்தின் தன்மை (Magnitude of crime)  மற்றும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மை வலுவாக இருக்கிறது'' என்றார்.

இந்த ஜாமீன் மனு விவகாரத்தில் கனிமொழியின் வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், ராம் ஜெத்மலானி மற்றும் சரத்குமாரின் வழக்கறிஞர்கள் வி.ஜி.பிரகாசம் மற்றும் அல்டாஃப் ஆகியோர், ''புலனாய்வின்போது கைது செய்யப்படாத ஒருவர், சம்மன் (சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின் படி) மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும்போது, அவரை குற்றவியல் நடைமுறைப் பிரிவு 309-வது பிரிவின் படி நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது!'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

ஆனால் நீதிபதி, ''ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தின் தன்மையின் அடிப்படையில், நீதிமன்றக் காவலில் வைக்கவோ அல்லது ஜாமீனில் அனுப்பவோ அதிகாரம் உண்டு'' என்று குறிப்பிட்டார். மேலும் தீர்ப்புக் குறிப்பில், ''கனிமொழியின் கண்ணியத்தையும் நன் மதிப்பையும் என்னால் பார்க்க முடிகிறது என்றாலும், என்னால் வழக்கின் தன்மையைக் கருதி எந்தச் சலுகையும் காட்ட முடியவில்லை!'' என்று  கருத்துச் சொல்லி இருக்கிறார்.


கடந்த 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒரே வரியில் தீர்ப்பைப் படித்தார். ''வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்!'' என்று கூறினார் சைனி.

தீர்ப்பு கூறிய அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியையும், சரத்குமாரையும் குற்றவாளிக் கூண்டுக்கு அருகே அழைக்கவே இருவர் முகத்திலும் பதற்றம் பரவியது. அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு வந்திருந்த தி.மு.க. ஆதரவுப் பெண்கள் பலரும் கதறி அழுதனர். மயிலாப்பூர் கவுன்சிலர் துரை கதறி அழுதார். கனிமொழியின் கணவர் அரவிந்தனும் முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதையும் சற்குண ​பாண்டியனும் வேதனையில் துடித்தனர்.

2ஜி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாகித் பால்வா உட்பட மற்ற குற்றவாளிகளும், அவர்களின் உறவினர்களும் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் பெண் போலீஸார் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் வர, நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.  

லாக்-அப்புக்குச் சென்ற கனிமொழி, தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவே, ஆதித்யன் நீதிமன்ற வளாகத்துக்கு வரவழைத்துப் பேசவைக்கப் பட்டார். கனிமொழி கைப்பையோடு லாக்-அப் செல்ல முயன்றார். அனுமதி இல்லை என்றதும் அதில் இருந்து புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டார். கனிமொழி, 'மை நேம் இஸ் ரெட்’ என்ற ஆங்கில நாவலோடு சிறைக்குச் சென்றார்.

ஆ.ராசாவுக்கு அடுத்து இப்போது, கனிமொழியும் சரத்குமாரும் திகார் ஜெயிலுக்குப் போய்விட்டார்கள். 'இத்துடன் முடியாது. இன்னும் சில தி.மு.க. அரசியல் புள்ளிகளும் உள்ளே செல்ல இருக்கிறார்கள்’ என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்!


 
ராசா வீட்டுச் சாப்பாடு...

அமைச்சர் என்கிற முறையில் பல டெல்லிப் பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு நேரடியாக வர முடியாத நிலையில், டி.ஆர்.பாலுதான் அனைத்து விவகாரங்​களையும் கவனித்துக்கொள்கிறார். நெப்போலியன் வர முடியாத சூழ்நிலையில், அவரது தனிப்பட்ட உதவியாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கண்ணன் ஜெகதீசனை அனுப்பி வருகிறார். டி.கே.எஸ்.இளங்​கோவன், கே.பி.ராமலிங்கம்போன்றவர்கள் தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். திகார் சிறை எண் 6-ல் உள்ள 8-வது வார்டில் கனிமொழி அடைக்கப்பட்டு உள்ளார். இது புதிதாகக் கட்டப்பட்டது.

'ஏ’ கிளாஸ் கைதிகளுக்கு ஆறு செல்கள் உள்ளன. சிமென்ட் மேடைதான் கட்டில். படுக்கை விரிப்புகளைத் தலையணையாக்கிக்கொண்டாராம். ஒரு சிறிய இந்தியன் டைப் டாய்லெட். முதல் நாள் கடுமையான உஷ்ணத்தை சந்தித்தார், கனி. ஆனால், திடீரென வருண பகவான் கனிவு காட்டவே, கோடை மழை வந்து உஷ்ணத்தைத் தணித்தது.  

பொதுவாக, சிறைகளில் மின் விசிறிகளுக்கு அனுமதி இல்லை. கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சீலிங் ஃபேன் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்​பட்ட இலவச டி.வி. மாதிரி சிறிய தொலைக்காட்சி பெட்டியில் 20-க்கும் மேற்பட்ட சேனல்கள் வரும். தினசரிகள் வழங்கப்படுகின்றன.

இரு தினங்களுக்குப் பின்னர், கனிமொழிக்கும், சரத்​குமாருக்கும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ராசாவுக்கும் அனுமதி உண்டு என்பதால், ராசா வீட்டில் இருந்தே மூவருக்கும் உணவு வருகிறது.

சுத்த கேனக்கிறுக்கண்டா நீ என்று காதலி சொன்னால் என்ன அர்த்தம்?

http://tamilcnn.com/images/stories/tamilcnn/march-2011/tech/crew_496720f.jpg

1. ரெகுலராக மாடர்ன் டிரஸ்ஸில் வரும் ஃபிகர்கள் என்றாவது புடவையில் வரும்போது நாம் ஏதாவது சொல்ல மாட்டோமா? என எதிர்பார்க்கிறார்கள்#ஆஃபீசாலஜி

-----------------------

2. மேனேஜர் லேடி ஸ்டாஃபுடன் பேசும்போது நக்கலாக ஒரு புன்னகையை உதட்டில் தேக்கி வைக்கவும். ஹையர் ஆஃபீசரை எரிச்சலூட்ட சிறந்த வழி#ஆஃபீஸாலஜி

---------------------------

3. நேர்முகத்தேர்வுக்காக ரிசப்ஷனில் வெயிட்டிங்கில் இருக்கும் பெண்கள் பல டென்ஷனுடன் இருப்பார்கள் என்பதால் தைரியமாக சைட் அடிக்கலாம்#ஆஃபீஸாலஜி

-------------------

4. காதலியுடன் மலைக்கு செல்கையில் 50 படி வேகமாக முன்னால் போய் திரும்பி நின்று அவள் வருவதை வேடிக்கை பார்ப்பேன்#லவ்வாலஜி

------------------

5. பிரிவினை எனக்குப்பிடிக்காது என்ற போது ஏன் ?என்றாள் காதலி.நம் உதடுகள் பின் எப்போது ஒன்று சேர்வது? என்றேன்#லவ்வாலஜி

--------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3pjMmcZ2NDsh7yFv3k8fNPoFY_U7BF6megIugFweJi8tFp6WcwSBvXlFSMaqK09_B9e5lqFgI_wNFgwJ-Gg9NF3hnoXYj6jAtECW1E8OEgIlqpfgKldhWuXP-YB-v2UHuy6qLUtbObjA/s1600/plot.jpg

6. மனைவியைப்பற்றி மச்சினியிடம் புகழ்ந்து பேசவும். மச்சினியின் பொறாமை கூட பிற்காலத்தில் நமக்கு(!!) யூஸ் ஆகும்#லேடீஸாலஜி

-----------------------

7. பஸ் ஸ்டேண்டில் போய் முன் கூட்டியே இடம் பிடிக்கும் பழக்கம் உள்ளவன் யூத்தாக இருக்க மாட்டான்#பஸ்ஸாலஜி

----------------------

8.இதுதான் கடைசி முத்தம் என்றாள். ஆதியும் அந்தமும் இல்லாதது கடவுள் மட்டும் அல்ல காதலும் தான் என்றேன்.விலக்கானாலும் விதி விலக்காவாய் என்றேன்#கிஸ்ஸாலஜி

----------------------------

9. லிப் டூ லிப் கிஸ்ஸூக்கு தடை போட்டாள் காதலி. கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார் என மிரட்டினேன்.வழிக்கு வந்தாள் #லவ்வாலஜி

-------------------------------

10.  சுத்த கேனக்கிறுக்கண்டா நீ என்றாள் காதலி,அடி கள்ளி கரெக்டா கண்டு பிடிச்சிட்டியே.. உனக்கு மூளையும் செம ஷார்ப் என்றேன்.முகம்சிவந்தாள் #லவ்வாலஜி

------------------------------- 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8a0KTjzn-IFGYg08DupoS8D0XHSnSQh_hVa956BaPDNbBtWhuwVslvbe8whpqHTkJGYxtzAgNueZI_ilD0ciTbNnsWvpYp-ZfwU8yqgJtVaBz8CFVZKIgEsrOahNv1cdjQ5yv5zrgwLs/s400/image009.jpg

Tuesday, May 24, 2011

அந்தக்கால ஃபிகருங்க, இந்தக்கால ஃபிகருங்க என்ன வித்தியாசம்?

http://farm4.static.flickr.com/3436/3833787216_00d73a68f3.jpg 

1.பெண் பார்க்கும் படலத்தில் பெண் கூட 5 நிமிஷம் தனியா பேசிப்பார்க்க நினைச்சா அவன் பழமைவாதி.உரசிப்பார்க்க நினைச்சா பழந்தின்னு..........#ஜெண்ட்ஸாலஜி

-----------------------
2, பெண் பார்க்கப்போறப்ப பொண்ணு அழகா இருந்தா அவன் அதிர்ஷ்டக்காரன், பொண்ணோட தங்கைகள் 3 பேரும் அழகா இருந்தா அவன் தான் மச்சக்காரன்#சைட்டாலஜி

------------------------
3. ஒரு ஜி கே கேள்வி.பகலில் இந்தியாவுக்காகவும்,இரவில் பாகிஸ்தானுக்காகவும் விளையாடும் விளையாட்டு வீரர் யார்? ஹி ஹி சானியா மிர்சா

-------------------

http://www.thedipaar.com/pictures/sania4.jpg
4. சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் -அம்மா பார்த்து.. கைதிகளையும் இடம் மாத்தறேன்னுட்டு தெரியாத்தனமா ரிலீஸ் பண்ணிடப்போறீங்க

----------------------------
5. பதவி ஏற்பு விழாவுக்கு கேப்டன் ஏன் போகலை? பந்திலயே உட்கார வேணாம்னுட்டாங்க.. இலைல ஓட்டைன்னு சொன்னா எப்படி?#ஹானரபிள் அம்மா வாழ்க

------------------------

http://www.flixya.com/files-photo/s/h/i/shinu240798.jpg
6. டேய்..செல்லம் பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு கிஸ் குடுத்தியே என்ன சொன்னாங்க?அப்படியே அப்பன் புத்தின்னாங்க மம்மி#ஜொள்ளாலஜி

----------------------
7. காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்.இது லவ்.சரக்கு கிடைச்சா சொல்லி அனுப்பு சைடு டிஷ் உடனே வருகிறேன் - இது நட்பு

---------------------
8. அந்தக்கால ஃபிகருங்க அவங்கம்மா மாதிரியே சமைச்சாங்க.. இந்தக்கால ஃபிகருங்க அவங்கப்பா மாதிரியே சரக்கு அடிக்கறாங்க#கலிகால ஃபிகர்ஸ் வாழ்க.

-----------------------
9. அம்மா தாயே.. ஏதாவது ஃபிகர் ஃபோன் நெம்பர் இருந்தா தாங்கம்மா.. லவ்வி 3 மாசம் ஆச்சும்மா .. பழைய ஃபிகரா இருந்தாலும் பரவால்ல.அட்ஜஸ் பண்றேன்

------------------------
10 . தேசியக்கொடி ஏத்தறப்ப என்ன பிரச்சனை?மூவண்ணமும் பச்சைக்கலர்ல இருக்கனும்னு அம்மா சொல்லீட்டாங்களாம்.கவர்னர் ஆடிப்போய்ட்டாரு#அம்மா நாமம் வாழ்க

---------------------
 http://s1.hubimg.com/u/490900_f520.jpg

டிஸ்கி - அன்பு நண்பர்களுக்கு ஒரு தகவல். நான் விடும் பஸ் கமெண்ட், ட்விட்டர் கமெண்ட் அனைத்தும் என் அனுபவம் அல்ல.. அதில் வரும் டீசண்ட்டான ,ரசிக்கக்கூடியவை மட்டும் என் சொந்தக்கற்பனை.மற்றபடி சில கிளுகிளுப்பான ,கிளாமரான கமெண்ட்ஸ் நண்பர்கள் விக்கி தக்காளி, நாஞ்சில் மனோ, நிரூபன்,உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்,பன்னிக்குட்டி ராம்சமி போன்ற நண்பர்களின் அனுபவங்களே.. எனவே க்ரியேட்டிவ் ஹெட் என்ற முறையில் பாராட்டுக்களை எனக்கும், கண்டனங்களை நண்பர்களுக்கும் சொல்லவும்.இப்படிக்கு யார் எக்கேடு கெட்டுப்போனாலும் தான் மட்டும் நல்லாருந்தா போதும் என நினைக்கும் ஒரு மான மிகு பதிவர் ஹி ஹி

சாந்தனு கே பாக்யராஜ் -ன் கண்டேன் - சந்தானம் காமெடிக்காக... - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj45BcpNxS8CNwv8NyTH0fYkYGgUCF33bE5tu6mHeFsLRuc_Wbf0A32Sw41frmf8xGAZUvjDvxPnahLNAbfgLWOeh2DQvZ7-3ouEyWAJTwvrAS5L2foXSN1x-VFo5dQZ7YmVD9kpOxkW0yJ/s1600/kaa.PNG

சக்கரக்கட்டி,சித்து பிளஸ் 2 என தொடர் தோல்விக்குப்பின் கண்டேன் படம் தந்ததன் மூலம் திறமையும்,நடன லாவகமும் கொண்ட இளம் ஹீரோ தொடர்ந்து 3 தோல்விப்படங்கள் கொடுத்த முதல் ஹாட்ரிக் தோல்வி ஹீரோ என்ற  பெயர் பெறும் சாந்தனு பாக்யராஜ் சந்தானத்துடன் கை கோர்த்த ஆஃப்பாயில் காமெடி படம்.( கே பி சார் என்னை மன்னிச்சு..)

காதலுக்காக தனக்கு கண் தெரிலைன்னு பொய் சொல்லி காதலிக்கும் ஹீரோ உண்மை வெளில வந்ததும் வெறுக்கும் ஹீரோயினை தாஜா பண்ணி லவ்வும்போது நிஜமாவே  ஒரு விபத்தில் தற்காலிகமா கண் பார்வை பறிபோகிறது. அதை காதலிக்கு தெரியாம எப்படி சமாளிக்கிறார் என்பதே காமெடி கலந்த திரைக்கதை.. ( தாஜா என்பது தமிழா? #டவுட்டு)

என்னதான் செகண்ட் ஆஃப் செம காமெடி கடியா இருந்தாலும் படத்தோட பேசிக் நாட் ( BASIC KNOT  )ஏத்துக்கற மாதிரி இல்லாததால இந்த படம் தேறாதுன்னு 2  வது ரீல்லயே முடிவு பண்ணிட்டாங்க ஜனங்க.. 

அதாவது காதல் என்பது தானா வரனும், பரிதாபத்தின் மூலமா வரக்கூடாது.. ஹீரோயின் கண் பார்வை தெரியாதவங்களுக்கு ரோட்டை கிராஸ் பண்ண உதவி பண்றா.. உடனே ஹீரோவும் கண் தெரியாத மாதிரி ஆக்ட் குடுத்து அனுதாப ஓட்டு வாங்கறான். என்ன கேனத்தனமான கான்செப்ட் இது?(இதே கரு ஆங்கிலத்துல ஹாலிவுட்ல  வந்தா கை தட்டுவே..)





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXnS6ukKrsmbshxfQ_3ApojVye9iG3auFPsXJIDWcJbtMgvcUxWw0bOrsVys0UelZFX1VWHQ1q57qFm02rAm0rbJOI3n_eUM7k6wUBbHGIIBYM03akbdM807HjGCXCQL3VNZWkbsGN5yHh/s1600/Kandaen_hitting+screens_review.jpg
ஹீரோயின் எப்பவாவது நான் கண் பார்வை இல்லாதவனைத்தான் கட்டிக்குவேன்னு சபதம் போட்ட மாதிரியும், அதை ஹீரோ ஒளிஞ்சிருந்து பார்த்த மாதிரியும் கதை எழுதுனா கோபம் வராதா?( சரி சரி .. விட்றா.. )

சாந்தனுவோட நடிப்பு ஓக்கே.. நடனமும் டபுள் ஓக்கே.. ஆனா ஃபைட் சீன்ல வர் பண்றது ரொம்ப ஓவர்.. ஹா ஹா ( அப்பா டான்ஸ்ல வீக்.. மகன் ஃபைட்ல வீக் )

ஹீரோயின் ரொம்ப சுமார்.. 35 மார்க் தான்.. ( பார்டர்ல பாஸ்.. அப்போ பார்டர்ல ஃபெயில் ஆகனும்னா 34 மார்க்கா? )

சந்தானம் காமெடியில் களை கட்டிய காமெடி வசனங்கள்

1.  சந்தானம் - மேடம்.. டெயிலி இங்கிலீஷ் நாவல் படிக்கிறீங்களே? ஏன்?

ஏன்னா தமிழ் பேப்பரை விட இங்கிலீஷ் பேப்பர் தான் செம டேஸ்ட் சாப்பிட.. ( அடங்கோ.. லூசா நீ? )

2.  என்னை நீங்க லூஸூன்னா நினைக்கறீங்க..? 

சந்தானம் -சிம்ப்டம்ப்ஸ் பார்த்தா அப்படி தெரில.. ஆனாலும் நீங்க லூஸ்தான் ஹி ஹி

3. சந்தானம் -அடிபட்டு வந்தவனுக்கு ஆல்ஹஹால்வரலைன்னு ஒரு ஃபுல் ரெடி பண்ண ட்ரை பண்ணுணியே நீ தாண்டா என்  சாதா ஃபிரண்ட் இல்லடா.. ஃபுல் ஃபிரண்டு...


4. மச்சான்.. நீ தான் என் கூடவே இருந்து...... 

சந்தானம் -உனக்கு மாமா வேலை பார்க்கனும்கறியா?

ம்ஹூம்.. என் காதலுக்கு உதவனும்.. 

சந்தானம் -ரெண்டும் ஒண்ணுதான்... 

5. எனக்கு வந்த ஃபோன் அப்பா கிட்டே இருந்துன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

சந்தானம் -பொதுவா பொண்ணுங்க வீட்ல இருக்கறப்ப ஃபோன் வந்தா அது பாய் ஃபிரண்ட் கால். வெளில இருக்கறப்ப ஃபோன் வந்தா அது அப்பா வோட கால்.. 

6.  சந்தானம் -டேய் நாயே.. நீ ஸ்டார்ட் பண்ணி விட்டுட்டு போயிடு.. நான் இங்கே  செத்து சுண்ணாம்பு ஆகறேன்..

7. (விண்ணைத்தாண்டி வருகிறாயா படத்தின் ரயில் கிஸ் சீன் ஓடுது தியேட்டர்ல - படத்துக்குள்ள படம் )

ஹீரோ - முடிச்சுட்டானா?

ஹீரோயின் - என்னது?

ஹீரோ - தியேட்டர்ல எல்லாரும் சைலண்ட்டா இருக்காங்களே.. படத்தை முடிச்சுட்டாங்களா?ன்னு கேட்டேன்..

8.  உன்னை இண்ட்டெலிஜெண்ட் கேர்ள்னு நினைச்சேன்.. இப்படி இடியட்டா இருக்கியே.. ப்ளைண்ட் பாய்னா  ( BLIND BOY) அவனுக்கு ஹெல்ப் பண்ணுனா ஓக்கே.. லவ் பண்ணுனா?

9.மனசுக்குப்பிடிச்சவங்களை சந்தோஷப்படுத்துறதுதான் காதலோட வேலை.. சங்கடப்படுத்தறது இல்லை..
10.  சந்தானம் -விடுடா.. அரேஞ்ஜ்டு மேரேஜ்க்கே  1000 பொய் சொல்றப்ப லவ் மேரேஜ்க்கு லட்சம் பொய் சொல்லலாம்..

11. ஏமாத்தறவங்களை விட ஏமாந்து போறவங்க மேல தான் தப்பு ஜாஸ்தி..
12.. இந்த மோதிரத்தை அவ கைல போடு.. 

சாரி.. கைல போட முடியாது.. விரல்ல தான் போட முடியும்..

13. சந்தானம் -அவனவன் காசுல சாப்பிட்டா தக்காளி ஊறுகாய் தான் ஆர்டர் பண்ணூவானுங்க.. அடுத்தவன் காசுல  சாப்பிட்டா ஆமைக்குஞ்சு ஆர்டர் பண்ணூவானுங்க.. 

14. வில்லனுக்கு பயந்து  கார்க்கு பக்கத்துல ஒளிந்து இருக்கும் சந்தானத்திடம்..

தம்பி.. கொஞ்சம் எந்திரி வாமிட் எடுக்கனும்..

சந்தானம் -டேய் நாயே.. இங்கே இவ்வளவு இடம் இருக்கே? அங்கே எல்லாம் போகாம...

15. அந்த லேடி டாக்டர் ரொம்ப நல்லவங்கடா..

சந்தானம் -ஆமாமா.. செமயா இருக்காங்க.. 

16.  சந்தானம் -ஆஹா.. சக்கரக்கட்டி இன்னைக்கு கரைஞ்சிடுவான்..  

17. என்ன சாப்பிடறீங்க?

ஒண்ணும் சாப்பிடலையே.. ஆ.. வாயை நல்லா பார்த்துக்குங்க..

அய்யோ கடிக்காதீங்க இப்போ என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டேன்.

18.சந்தானம் - அடேய்.. ஃபிரண்ட்ஷிப்னா தமிழ்ல பலி ஆடுன்னு அர்த்தமாடா? இப்படி வெட்றீங்களே?

19.  ஏண்டா.. போலீஸ் கிட்டேயே பொய் சொல்றியா?

சந்தானம் -வக்கீல் கிட்டேயும், டாக்டர் கிட்டேயும் தான் பொய் சொல்ல வேணாம்பாங்க.. ( செம க்ளாப்ஸ் வாங்குன சீன் )

20. சந்தானம் -டேய்.. ரூ 200 குடு.. 2 ஜட்டி வாங்கனும்..

ஆல்ரெடி நாம 2 பேரும் அதை போட்டிருக்கோமேடா..

சந்தானம் -அதைத்தான் இப்போ உன் மாமனார் வந்து கழட்டி விடப்போறாரே?

21. பொண்ணுங்க ரொம்ப சாஃப்ட்..

சந்தானம் -அட நீ வேற.. விட்டா நம்மளை சாப்பிட்ருவாளுங்க.. லவ் பண்றதுக்கு ஓக்கே.. ஆனா மேரேஜ்னா உஷார் ஆகிடுவாளுங்க..

22. பொய் சொன்னா சாமி கண்ணை குத்தும். ஆனா கண் விஷயத்துலயே பொய் சொன்னா?

23. சந்தானம் -அடேய்.. நீ கண் தெரியாதவனா நடி வேணாம்கலே.. அதுக்காக செல் ஃபோன் ரிங்க் டோன் கூட கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால் வைக்கனுமா? கண் டாக்டர் கூட அப்படி வைச்சு நான் பார்க்கலை..

24. கண் தெரியறப்ப கண் தெரியாத மாதிரி நடிக்கறது ஈசி.. ஆனா கண் தெரியாதப்ப கண் தெரியற மாதிரி நடிக்கிறது ரொம்ப கஷ்டம்

25. சந்தானம் - எனக்கு ஜூரம்..

சரி.. அதுக்கு ஏன் கை நடுங்குது?

சந்தானம் -ஹி ஹி குளிர் ஜூரம்

26. சந்தானம் -அடேய்.. உனக்குன்னு ஒரு ஹீரோயின் .. உனக்குன்னு டூயட் எல்லாம் இருக்குல்ல? ஏன் என் லைன்ல  கிராஸ் பண்றே?



https://sites.google.com/site/blogposterimages/KandaenTamilMovieSongsFreeDownload.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.இந்தியன் படத்தில் ஸ்லோ மோஷனில் கமல் ஒரு ஷாட்டில் டான்ஸ் மூவ்மெண்ட்ட்டில் அந்தரத்தில் தனது வலது காலை இடது காலால் தொடுவார்.மிக ரிஸ்கியான அந்த ஷாட் போல் சாந்தனுவும் ட்ரை பண்ணி இருந்தது செம...

2.  ஒரு பிச்சை காரருக்கு ஹீரோயின் 10 ரூபாய் தானம் செய்ய முயலும்போது ஹீரோ 100 ரூபாய் தானம் செய்வதை பார்த்து ஹீரோயின் வெட்கமும்,குற்ற உணர்வும்,கலந்து ஹீரோ மேல் மரியாதை வைக்கும் சீன் செம டச்சிங்க்

3. உன்னைக்கண்டேனே பாடல் காட்சியில் டான்ஸ் மூவ்மெண்ட்ஸில் பல இடங்களில் நளினம்...

4. படத்தின் பின் பாதியில் நான் ஸ்டாப் காமெடியாக சர வெடி வெடித்தது..


http://www.kerals.com/kerala/wp-content/uploads/2011/01/Kandaen.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோயின் கண்ணை கட்டிகொண்டு சூடான சாப்பாட்டை சாப்பிடும் சீனில் தெரியாமல் சுடுசோறை சாப்பிட்டு ஆ என பதறும் காட்சி செம செயற்கை.. கை விரலால் சாப்பாட்டை தொடும்போதே தெரிந்திருக்காதா? சூடா இருக்குன்னு ? ஏன் வாய்ல வைக்கனும்?

2. விஜயகுமார் சமந்தப்பட்ட காட்சிகள் பலவற்றில் நாடகத்தன்மை

3.யாவருக்கும் தலைவன் பாடல் செம மெலோடியாக இருந்தாலும்  டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் ரொம்பவே செயற்கை..

4. வெளி நாடு பயணம் செய்ய திடீர் முடிவு எடுக்கும் ஹீரோ ரிசர்வேஷன் பண்ணாமலேயே  ரிசர்வ்டு சீட்டில்பயணம் செய்வது எப்படி?

5. விஜயகுமார் சொல்லும் கணக்குப்படி அவருக்கு 1600 ஏக்கர் நிலம் இருப்பதாக சம்பந்தியிடம் சொல்றார். ஆனா அவர் இருக்கற ஊரே 50ஏக்கரா அளவு தான் இருக்கு.. ஹா ஹா

படம் ரொம்ப மொக்கை எல்லாம் கிடையாது. குடும்பத்தோட பார்க்கற மாதிரி ஜாலியாத்தான் இருக்கு. என் யோசனை படத்தின் பின் பாதியை முன் பாதியா மாத்தி முன் பாதியை ஃபிளாஸ்பேக் சீனா பின் பாதியா மாத்துனா இன்னும் பத்து நாட்கள் சேர்த்தி ஓடலாம். அப்போ இப்போ இருக்கும் திரைக்கதைக்கு எத்தனை நாட்கள் ஓடும்? ஆல் செண்ட்டர் 15 நாட்கள் . ஹி ஹி

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா வில் படம் ஓடுது..

Monday, May 23, 2011

நாளைய இயக்குநர் - சைக்கோ த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihWKj9-NVkXiBzK0qlVTypn8jpsN2OtjvAUSPSQtji5z_hLzFH4g6u0EmJp8wgOFhahwhaCn7XluJDwSbA_3YK0mNdrUdTahWQQi7fRmRfOMDCDF-1htB8GV4pNwXQxXzjE0zv5G3dNguY/s1600/cowboy2.jpg 

நாளைய இயக்குநர் நிகழச்சில இன்னைக்கு (22.5.2011)ஹாய் மதன் கோட் சூட்லயும் ,பிரதாப் போத்தன் ஃபார்மல் டிரஸ்லயும் வந்தாங்க.. ஹாய் மதன் ரெகுலரா ஒரு ஓப்பனிங்க் இண்ட்ரோ தொகுப்பாளினி கிட்டே கொடுக்கறாரு.. நல்ல விஷயம் தான். ஆனா அதை அவர் பிரதாப் கிட்டேயே சொல்லலாம். ஏன்னா 1. தொகுப்பாளினி கிட்டே பேசறப்ப அவரோட பாடி லேங்குவேஜ்ல ஒரு செயற்கைத்தன்மையும்,லைட்டான அலட்டலும் வெளிப்படுது 2. அந்தப்பொண்ணு அவர் அளவு நாலெட்ஜ் இல்ல.. ஒர்த் இல்ல.. சும்மா கிளாமருக்காக ஒப்புக்கு சப்பாணி மாதிரி மப்புக்கு ஊறுகாய் மாதிரி.. 

இன்னைக்கு தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் போன வாரம் போட்டிருந்த அளவு கேவலமா இல்லை.. ஓரளவுக்கு கேவலமா இருந்தது.. கிராமங்கள்ல பொண்ணுங்க நைட்டி போட்டுக்கிட்டே காலைல மளிகைக்கடைக்கு வந்துடுவாங்க.. அந்த மாதிரி .. பார்க்கற மத்த ஆண்களுக்கு சந்தோஷம்.. அந்த பொண்ணோட புருஷனுக்கு சங்கடம்.. ஹி ஹி

அப்புறம் அந்த பொண்ணு ஜட்ஜ்ங்களை நீங்க போய் உங்க சீட்ல உக்காருங்கன்னு சாதாரணமாத்தான் சொல்றாங்க.. ஆனா எனக்கு பார்க்க அவங்க ஆர்டர் பண்ணுன மாதிரி இருக்கு.. மேல்சாவனிஷம் என்பது இது தானோ?


1. காஃபி - தீபன்

பொதுவா சைக்கோ திரில்லர் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கறதில்லை.. ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும்( ஒரு வேளை நானும் ஒரு சைக்கோவோ?#டவுட்டு)ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ க்ளோஷப்ல நம்ம கிட்ட கதை சொல்றார். அவர் காஃபிக்கு அடிமை.. காஃபில மட்டும் 43 ஃபிளாவர் இருக்கு.. என்னால காஃபி சாப்பிடாம இருக்கவே முடியாது.. ப்ளா ப்ளா.. இத்யாதி,,

அவரோட மனைவி லேட் நைட்ல வீட்டுக்கு வர்றப்ப ஏன் லேட்?னு கேட்கறார். அதுக்கு மனைவி உன்னை மாதிரி சைக்கோவுக்கு அதை கேட்க உரிமை இல்லை.. அப்டின்னு சொல்றப்பவே பாப்பா எங்கேயோ போய்ட்டு வந்திருக்கு தப்பான்னு தெரிஞ்சிடுது.. தொடரும் உரையாடல்ல அவ தொடர்ந்து அவனை கேவலப்படுத்திட்டே இருக்கா.. 

மனைவி கேவலப்படுத்துனா  கணவன் கண்டுக்கக்கூடாதுங்கற பேசிக் நாலெட்ஜ் இல்லாம ஒரு கட்டத்துல அவளை போட்டுத்தள்ளிட்டு காஃபி குடிக்கற வேலையை தொடர்றான். 

இந்த ஷாக்கை விட க்ளைமாக்ஸ் ஷாக் ஒண்ணு இருக்கு.. 

இது வரை நம்மை பார்த்து கதை சொல்லிட்டு இருந்த  ஹீரோவோட முகம் பார்க்கும் கேமரா அப்படியே திரும்புது.. எதிரே ஒரு டாக்டர்.. 

ஏன் டாக்டர்..? எனக்கு காஃபி பிடிக்கும்னு தெரிஞ்சும் எனக்கு குடுக்காம நீங்க மட்டும் குடிக்கலாமா?

பார்த்தா டாக்டர் வாய்ல சிசர் ஏறி செத்துக்கிடக்கார்.. அந்த லூஸ் அவரையும் போட்டு தள்ளிட்டான் போல..

 கதை ஓக்கே.. நீட் டைரக்‌ஷன்.

ஆனா ஹாய் மதனும், பிரதாப்பும் இந்த கதை எந்தளவு சாத்தியம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க.. கமல் ஒரு படத்துல பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுன்னு சொல்வாரு.. அந்த மாதிரி சைக்கோ கதைகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு கற்பனை.. அதை ஜாலியா எடுத்துக்கனும்..

இந்தப்படத்துக்கான கே பாலச்சந்தர் கமெண்ட்.. - சிம்ப்பிள் & இண்ட்ரஸ்ட் நேரேஷன் ஆனா நம்பகத்தன்மை குறைவு..


2.  மனு தர்மம் - அருண் வர்மா

ஹீரோவுக்கு ஏதோ பணத்தேவை.. யாருக்கோ ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டிய கட்டாயம்.. அந்த டைம்ல பாத்ரூம்ல அப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட்.. யாரோ அவரை காயப்படுத்திட்டாங்க..  அங்கே போனா அவன் கண் முன்னால அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்கார். அவன் நினைச்சா காப்பாத்தலாம். ஆனா அவர் இறந்துட்டா இன்சூரன்ஸ் பணம் வரும்னு ஹீரோ நினைச்சு காப்பாத்த முயற்சியே பண்ணலை.. 

அப்புறம் ஹீரோவை குற்ற உணர்ச்சி வாட்டுது.. தன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லி  அம்மாவை நல்லா பாத்துக்கன்னு சொல்லிட்டு குற்ற உணர்ச்சில தற்கொலை பண்ணிக்கறார்.. 

இது கொஞ்சம் விபரீதமான கதை தான். இது பார்க்கறவங்க மனசை பாதிக்கும்.. இதை எல்லாம் சென்சார் பண்ணனும்னு தோணுது.. ஏன்னா பார்க்கறவங்க மனசுல 1000 பேர்ல ஒருத்தருக்காவது அப்டி பண்னலாமோன்னு ஒரு எண்ணம் வந்தாலே டேஞ்சர் தான்.. 

திரைக்கதைல கொஞ்சம் குழப்பம்.. கேமரா சுமார்.. பேசற வசனம் புரில.. ( ஒரு வேளை மணி ரத்னம் மாதிரி ட்ரை பண்றாரோ என்னன்வோ?)


3.  அருண் - 00.00 ( 12 மணி மிட்நைட்)

இந்தக்கதை செம த்ரில்லிங்கா இருந்தது.. 

ஒரு பொண்ணு மிட்நைட்ல ஒரு தனிமையான இடத்துல வெயிட்டிங்க்.. அப்போ 2 ரவுடிங்க அவளை பலவந்தமா கடத்திட்டு போய் பக்கத்துல இருக்கற ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல  அட்டெம்ப்ட் ரேப்பிங்க்.. 
அப்போ ஒருத்தன் அங்கே எண்ட்ரி ஆகறான். அப்பாடா.. ஹீரோன்னு பார்த்தா அவனும் வில்லன்.. அவன் அந்த 2 பேர்ட்ட சனடை போட்டு அவளை அடைய நினைக்கறான்..

சேசிங்க்ல ஒரு கட்டத்துல எல்லாரும் செத்துடறாங்க.. அப்போ அந்த பொண்ணோட ஆன்மா மட்டும் சொல்லுது

” எனக்காக அவன் காத்துட்டு இருப்பானே ? நான் எப்படி போவேன்?”

அந்த கதறல் இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு..

 இந்தப்படத்தை கே பாலச்சந்தர் ரொம்பவே பாராட்னார்.... 

கே பாலச்சந்தர் பாராட்றப்ப அதுல உள்ளார்ந்த சந்தோஷம் தெரியுது.. சக படைப்பாளியை  பாராட்டனும், கவுரவிக்கனும் என்ற பக்குவமும், அனுபவ ஆற்றலும் அவர் கிட்டே வெளிப்படுது.. 
ஹாய் மதன் பாராட்றப்ப அவரோட மேதா விலசத்தை லைட்டா வெளிப்படுத்திடறாரு.. அதாவது அவர் பார்த்த மற்ற ஃபாரீன் படங்களை உதாரணமா காட்டி தனக்கு பல படங்கள் பார்த்த அனுபவம் இருக்குன்னு சொல்லாம சொல்றார்..

பிரதாப் போத்தன் பாராட்றதே இல்லை .. பெரும்பாலும்.. அப்படியே பாராட்னாலும் வேண்டா வெறுப்பா முகத்தை வெச்சுக்கறார்.. பாவம் வீட்ல எப்பவும் சண்டை போல..

டாப் டென் ( 10) பெண் பதிவர்கள் யார்? ஒரு அலசல்

http://www.hinduonnet.com/thehindu/mp/2006/11/11/images/2006111101600101.jpg

பெண் எழுத்து- ஒரு பாசிட்டிவ் பார்வை பாகம் 2

பெண் எழுத்து பற்றி நான் எழுதிய முதல் பாகம் அட்டர் ஃபிளாப் ஆனது எனக்கு வருத்தமே.. சாதாரண டப்பா பட விமர்சனமே 1800 டூ 3000 பேர் படிக்கும்போது மிக சிரமப்பட்டு தயாரிக்கப்பட்ட என் உழைப்புப்பதிவு வெறும் 189 பேர் மட்டுமே படித்தார்கள் என்னும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கு,



அந்த பாகத்துல நான் பெண் எழுத்தாளர்களின் சிறந்த நாவல் பற்றி ஒரு பட்டியல் கொடுத்தேன்.. அதுல சில கருத்து வேற்றுமை.. எப்டின்னா ஒரு ஆணால் பெண் நாவல் ஹிட்டை எப்படி வரையறுக்க முடியும் என.. சரி என ஒரு ஐடியா பண்ணுனேன். எங்க ஊர்ல இருக்கற லைப்ரரில  கருத்துப்பெட்டி வைத்தேன். அதன் படி வரும் பெண் வாசகிகள் தங்கள்க்கு பிடித்த எழுத்தாளர்கள் நாவல்கள் பற்றி ஒரு கருத்து கணீப்பு நடந்தது.


1. லக்‌ஷ்மி - சூரிய காந்தம், அகிலா, மீண்டும் பிறந்தாள்

2. அனுராதரமணன் - விதைகள் , சிறை

3. வித்யா சுப்ரமணியம் - விட்டில் பூச்சிகள்,தூரத்து நிலவு,தென்னங்காற்று

4. சிவசங்கரி - மலையின் அடுத்த பக்கம்,நான் நானாக,ஏன்?

5. இந்துமதி - தரையில் இறங்கும் விமாங்கள்,மணல் வீடுகள்,கீதமடி நீ எனக்கு

6. ரமணி சந்திரன் - ஜோடிப்புறாக்கள்,வந்து போகும் மேகம்,தேவி,தவம் பண்ணி விடவில்லையடி

7. திலகவதி - கல்மரம்,கைக்குள் வானம்,கனவை சூடிய நட்சத்திரம்

8. வாசந்தி - ஆகாச வீடுகள்,புரியாத அர்த்தங்கள்

9. அநுத்தமா - ஆல மண்டபம்,ஒன்று பட்டால்,பூமா,சுருதி பேதம்

10. ஜோதிர்லதா கிரிஜா - மத்தளங்கள்

11. ராஜம் கிருஷ்ணன் - சத்திய வேள்வி,கோடுகளும் கோலங்களும்
http://www.tamilenn.info//images/stories/tamilcnn/january2011/india/leena.jpg
ஓக்கே..  லெட் கம் டூ சப்ஜெக்ட்..

இப்போ வலை உலகில் உள்ள பெண் பதிவர்கள் யார்? டாப்ல இருக்காங்கன்னு பார்ப்போம். நான் எடுக்கும் இந்த டாப் டென் தமிழ்மணம் போல் ஹிட் அடிப்படையில் அல்ல.. தர வரிசை.

பொதுவா பதிவுலகில் உள்ள பெண் பதிவர்கள் -ல் பெரும்பாலும் கவிதைகள், சமையல் குறிப்புகள் அதிகமா எழுதறாங்க.. வெகு சிலரே நகைச்சுவை உணர்வோடு எழுதறாங்க.. பெரும்பாலானோர் எழுத்துக்களில் சொந்தக்கதை சோகக்கதை அதிகம்.

அப்படி எல்லாம் இல்லாம தான் வாழும் நாட்டை பற்றிய ஒரு கலாச்சாரப்பார்வை சம்பந்தமான பதிவுகள் எழுதும் சித்ரா பதிவுலகில் நெம்பர் ஒன் பெண் பதிவர் என  என் கண்ணுக்கு தெரியறார்.

இவர் தன்னோட பதிவுகள்ல அவர் வசிக்கும் ஊர் பற்றிய பகிர்தலை,அந்த ஜனங்களோட கலாச்சாரத்தை ,நகைச்சுவையா சொல்ற விதம் அழகு..

வாரா வாரம் திங்கள் கிழமை வந்தாலே சித்ராவின் பதிவும் ஆஜர்.. வீக் ஓப்பனிங்க் டேல சிக்சர் அடிப்பார். இவர் பதிவு போட்ட 3 மணி நேரத்துல தமிழ்மணத்துல 30 ஓட்டுக்கள் வாங்கி தமிழ் மண மகுடம் சூட்டும் பதிவர் ஆகி 2 நாட்கள் அந்த சிம்மாசனத்துல அசைக்க முடியாத இடத்துல இருப்பார்.

மற்ற பதிவர்கள் அதே மகுடம் வாங்க 12 மணி நேரம் ஆகுது.. அதே போல் இண்ட்லில இவர் 45 ஓட்டுகள் வாங்க 4 மணீ நேரம் டூ 6 மணி நேரம் தான் ஆகுது.. அதை மற்ற பதிவர்கள் அடைய குறைஞ்ச பட்சம் 24 மணி நேரம் ஆகுது.. 

இவர் தனது பதிவில் இது வரை தனி நபர் தாக்குதல் செய்ததே இல்லை.. தேவை அற்ற விவாதங்களை வளர்ப்பதே இல்லை.. 

புதிய பதிவர்களை ஊக்குவிப்பதில் இவர் அனைவருக்கும் ஒரு முன்னோடியாக இருக்கார். பதிவுலகில் அதிக நேரம் ஆன் லைனில் (ON LINE) இருக்கும் பெண் லயன் (பெண் LION) இவர். இவர் பதிவுகளுக்கு கமெண்ட் போடும் லவகமான வேகம் பிரம்மிக்க வைக்கிறது. 

பெரும்பாலான பதிவுகளில் உள்ள கடைசி பேராவில் உள்ள 3 லைனை காப்பி பேஸ்ட் செய்து அது பற்றி கமெண்ட் போடுவார். பல கமெண்ட்ஸ்களில் ஹா ஹா ஹா என்ற அடை மொழி இருக்கும். ஸ்மைலி  சில சமயம் போடுவார்.

 ரெகுலராக இவர் போகும் நண்பர் பதிவுகளில் 18+ இருந்தாலோ, சர்ச்சைக்குரிய விஷயங்கள் விவாதிக்கப்பாட்டாலோ  சத்தம் இல்லாமல் வந்துடுவார்.. 

2 பதிவுகளுக்கு போக இவர் எடுத்துக்கொள்ளும் நேரம் 7 நிமிடங்கள் மட்டுமே.. 

இவர் படிக்கும் பதிவுகளில் ஏதாவது கமெண்ட்டில் யாராவது உண்மைக்கு புறம்பாக எழுதினால் உடனே ஏதாவது ஆதார லிங்க்குடன் களம் இறங்கி கலக்குவார்.


வலைப்பூ ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. 23. 12 . 2009 அன்று வலை உலகிற்கு வந்தார். 704 ஃபாலோயர்ஸ்

மைனஸ் ஓட்டே இதுவரை வாங்காத பதிவர்.. ( நோட் பண்ணீக்குங்கப்பா.. இனி போட நினைக்கறவங்க ஹி ஹி )

இவர் வெட்டிப்பேச்சு என்ற வலைப்பூ போக கவுண்டமணி செந்தில் என்ற பிளாக்கிலும் கெஸ்ட் ரோல் பொறுப்பு ஏற்றுள்ளார்.

 இவர் பதிவின் லிங்க்....

http://konjamvettipechu.blogspot.com/


வெட்டிப்பேச்சு சித்ராவுடன் ஒரு மினி பேட்டி


1. பொதுவா பதிவுலகில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் வீட்டில் அங்கீகாரம் கிடைக்காத அல்லது அனுமதி கிடைக்காத நிலையில் தான் இயங்கி வர்றாங்க.. ஆனா உங்க எழுத்துகளில் இருந்து உங்க கணவர் பூரண சுதந்திரமும் ,ஊக்குவிப்பும் தர்றார்னு தோணுது..  வாட் யூ ஃபீல்..?
/////பொதுவா பதிவுலகில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் வீட்டில் அங்கீகாரம் கிடைக்காத அல்லது அனுமதி கிடைக்காத நிலையில் தான் இயங்கி வர்றாங்க.. ////

....   அப்படியா?  Thats news to me.
/////ஆனா உங்க எழுத்துகளில் இருந்து உங்க கணவர் பூரண சுதந்திரமும் ,ஊக்குவிப்பும் தர்றார்னு தோணுது.. /////

....... பூரண சுதந்திரம் என்னிடமே இருக்கிறது. அதை என் கணவர் தருகிறார் என்று  நான் நினைத்தால், நான் என் சுதந்தரத்தை இழந்த அடிமை ஆவேன். எப்பூடி! 


///வாட் யூ ஃபீல்..?////

........ You mean,  How I feel about it?  இதுக்கெல்லாம் பீலிங்க்ஸ் ஆகுமா?  

அவ்வ்வ்வ்........

2. இண்ட்லில் அதிகம் ஓட்டு போட்ட பதிவர் லிஸ்ட்ல நீங்க முதல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்..பொதுவா புதிய பதிவர்களை ஊக்குவிப்பதும் அங்கீகாரம் கொடுப்பதும் உங்க  பேசிக் கேரக்டரா இருக்கு.. இது சின்ன வயசுல இருந்தே ஊறியதா?
.//// இண்ட்லில் அதிகம் ஓட்டு போட்ட பதிவர் லிஸ்ட்ல நீங்க முதல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்////

..........  நான் எந்த அளவுக்கு வெட்டி வேலை பார்க்கிறேன் என்று  டமாரம் அடிச்சு அறிவிச்சிட்டாங்களே..... ரொம்ப நன்றிங்க.
//////பொதுவா புதிய பதிவர்களை ஊக்குவிப்பதும் அங்கீகாரம் கொடுப்பதும் உங்க  பேசிக் கேரக்டரா இருக்கு.. இது சின்ன வயசுல இருந்தே ஊறியதா?////

....... ஆமாங்க.  பள்ளிக்கூட நாட்களில் - ஒரு நாள் - லஞ்ச் பிரேக்ல, அப்பா ஷர்ட் பாக்கெட்ல இருந்து சுட்ட காசுல ஒரு ஆரஞ்சு குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு கிட்டு இருந்தேன்.  அப்போ, புதுசா என் வகுப்பில் சேர்ந்த தோழி, என் குச்சி ஐஸையே பார்த்துக்கிட்டு பக்கத்துல வந்து நின்னுட்டாள்.  உடனே, என் ஐஸ் குச்சியை அவள் கிட்ட கொடுத்து அவளுடைய தோழியாக மாறிட்டேன். :-)))))


3. இங்கே எல்லாம் மொய்க்கு மொய் சிஸ்டம் தான் பெரும்பாலும் ஃபாலோ பண்றாங்க.. நீ என் பிளாக் வா கமெண்ட் போடு.. நான் உன பிளாக் வர்றேன்.. இப்படி.. ஆனா வாரம் ஒரு முறை பதிவு போடும் நீங்க  வாரம் 5 நாட்கள் பல பிளாக்ல கமெண்ட் போடறீங்க.. ஓட்டும் போட்றீங்க.. இந்த மனோ பக்குவம் எப்படி வந்தது?

/////இங்கே எல்லாம் மொய்க்கு மொய் சிஸ்டம் தான் பெரும்பாலும் ஃபாலோ பண்றாங்க..////// 

....................   நாம் ப்லாக்ல கருத்துக்களைத்தான் பகிர்ந்து கொள்கிறோம்னு நினைச்சேன்.  கல்யாண விருந்து பரிமாறிக் கொள்கிறோம்னு தெரியாம போச்சே!


////இப்படி.. ஆனா வாரம் ஒரு முறை பதிவு போடும் நீங்க  வாரம் 5 நாட்கள் பல பிளாக்ல கமெண்ட் போடறீங்க.. ஓட்டும் போட்றீங்க.. இந்த மனோ பக்குவம் எப்படி வந்தது?////

.......... ஓ அதுவா?  அது கம்பெனி சீக்ரட்.  இருந்தாலும், நீங்க இவ்வளவு தூரம் கேட்பதால் சொல்கிறேன்.  ஆயிரம் டாலர்க்கு செக் அனுப்பி வைங்க.  டெபாசிட் ஆனதும், பதில் உடனே மெயில்ல வரும்.  ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

4. திங்கள் கிழமை நீங்க பதிவு போட்டா பதிவு போட்ட 3 மணீ நேரத்துல தமிழ் மண மகுடம் கிடைச்சுடுது.. திங்கள் செவ்வாய் 2 நாளும் நீங்க தான். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படலை.. வாட் யூ ஃபீல்?
........  நம்பினால் நம்புங்கள்.    உண்மையில் நீங்க சொல்லித்தான் தெரியது.   திங்கள், செவ்வாய் - தமிழ்மண மகுடத்தை எனக்காக விட்டு கொடுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 
 

5. ஆண்கள் வலைப்பூ , பெண்கள் வலைப்பூ என பிரிச்சுப்பார்ப்பீங்களா/ அப்படி எல்லாம் கிடையதா/
.............  அப்படி பிரிச்சு பார்க்க வேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை.

6. தமிழ்மண நட்சத்திரப்பதிவாளர் அனுபவம் எப்படி இருந்தது? வாரம் ஒரு போஸ்ட் போடும் நீங்க அந்த வாரம் எப்படி சமாளிச்சீங்க?

..............  ரொம்ப சந்தோஷமாக இருந்தது.  Temporary ஆக இரண்டு assistants வேலைக்கு சேர்த்துக்கிட்டேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....  

7. எந்த சர்ச்சைலயும் சிக்காம இது வரை தாக்கு பிடிச்சுட்டீங்களே.. அது எப்படின்னு புது பதிவர்களுக்கு சொல்லுங்க..


........... தினமும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து, குளிச்சு முடிச்சு,  நெத்தியில சந்தனப் போட்டு வச்சுக்கிட்டு,
வெறும் வயித்துல, ஒரு கப் வனிலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு,
 "கொஞ்சம் வெட்டி பேச்சு சரணம்!
சச்சரவில் மாட்டாமல் இருக்க சரணம்!"  என்று நூறு முறை சொல்லி வர எந்த சர்ச்சையிலும் சிக்காம இருக்கலாம்.

8. கடைசியா ஒரு வம்பு கேள்வி  .. உங்களுக்கு பிடிச்ச ஒரு ஆண் பதிவர் வலைப்பூ , ஒரு பெண் பதிவர் வலைப்பூ சொல்லுங்க
நிறைய வலைப்பூக்கள் உள்ளன:  குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் - உதாரணத்துக்கு:  

 1. http://blogs.herald.com/dave_barrys_blog/  
 
2. http://www.thevine.com.au/blog/clembastow/on-funny-women-_-let%27s-end-this20110421.aspx
 
 எது ஆண் வலைப்பதிவரின் வலைப்பூ, எது பெண்பதிவரின் வலைப்பூ என்று அவற்றில் நீங்களே பிரித்து பார்த்துக்கோங்க. 


-தொடரும்

 

மைதானம் - அடிச்சாங்கய்யா ஒரு சிக்சரை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXWekPwipvo_0jm9W9nwKpZHWn61Vp-J2ypQScIIiua6_yPPTFBWCyJPqIqHm-PvaGWEmwPkQ8bx2Urdby_CYMPKnGIhx3a4cWrfMs1wlD21qt8ug4scK9y6u4skOZ-HZLy-ov29eLPdM/s1600/Maithaanam.tif.jpg

திரைக்கதை மட்டுமே பக்காவாக ரெடி பண்ணி விட்டால் லோ பட்ஜெட் படங்கள் கூட சூப்பர் ஹிட் ஆகும் என்ற உண்மையை மீண்டும் ஒரு முறை பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறது மைதானம். சமீப காலமாக வந்த படங்களில் பக்கா ஸ்கிரிப்ட் என தாராளமாக இந்தப்படத்தை சிலாகிக்கலாம்.

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே கதைக்கு வந்துடற வெகு சில இயக்குநர்களில் இவரும் ஒருவராகி இருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.. 

4  ஆண் நண்பர்கள்.. அதுல ஒரு ஃபிரண்டோட தங்கை இன்னொரு ஃபிரண்டை லவ் பண்றா.. ஆனா அவளோட லவ்வர்க்கு ஒரு குற்ற உணர்ச்சி.. நண்பன் தங்கையை லவ் பண்றதா? தப்பு தானே? அதனால லவ்வை வெளிப்படுத்தாம இருக்கான்.இந்த சூழல்ல  திடீர்னு அவ காணாம போயிடறா.. 

4 நண்பர்களும் சேர்ந்து தேடறாங்க.. படம் பார்க்கறவங்களுக்கும்,இன்னொரு நண்பனுக்கும் அந்த காதலன் மேல் தான் சந்தேகம்... அவனே அவளை எங்கேயோ ஒளிச்சு வெச்சுட்டானா? என டவுட்.. 

ஆனா நடந்ததே வேற.. காதலன் அல்லாத இன்னொரு நண்பன் காம வசப்பட்டு தன்னோட வீட்லயே அவளை அடைச்சு வெச்சிருக்கான்கறதோட இண்ட்டர்வல் பிளாக் வருது... 
http://tamil.galatta.com/entertainment/posters/tamil/movies/Maithanam/New-Maithaanam-Stills-54.jpg
புது முகங்களான அந்த 4 பேரும் உதவி இயக்குநர்களாம். அனைவரும் அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் அசத்தி இருக்கிறார்கள்.காதல் கோட்டை இயக்குநர் அகத்தியன் ஹீரோயினுக்கு அப்பாவாக நல்ல நடிப்பை தந்திருக்காரு..

புதுமுகம் ஸ்வாசிகா ஃபேஸ்கட் ஓக்கே.. ஆக்டிங்க்கும் ஓக்கே..டிரஸ்ஸிங்க் சென்ஸூம் ஒக்கே.. ஒரே ஒரு குறை என்னான்னா அவர் காதலனை காதலாக பார்ப்பது காமமாக பார்ப்பது போல் அப்பட்டமா தெரியுது.. காதலையே இன்னும் வெளிப்படுத்தாத ஒரு பெண்ணுக்கு எப்படி காமப்பார்வை வரும்?

ஆனால் அவர் ரூமில் வாய்  கட்டப்பட்ட சீனில் வெறும் கண்களாலும், புருவ அசைவுகளாலும் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோஷம் அருமை..

4 நண்பர்கள், ஒரு பெண் இதானா ஒன் லைன் என யாரும் சலிக்கத்தேவை இல்லை.. இது புது திரைக்கதை.. 

கனவா? நிசமா? என்னை கிள்ளி கிள்ளி பார்க்குறேன்  பாடல் காட்சியில் ஹீரோ ஹீரோயின் இருவரும் மொப்பட்டில் உலாபோவது செம...

தன் பொண்ணுக்கு திருமணப்பேச்சு வந்ததுமே அப்பா அகத்தியன் விசும்புவது அப்பா மகளுக்கிடையேயான பாசத்தின் புதிய பதிவு.. வெல்டன் டைரக்டர்..

கனவா? நிசமா?பாடல் சரணத்தில் மனம் கவர்ந்த வரி -  காதலில் வேதனை தவிர மிச்சம் என்ன நமக்கு?
http://tamil.galatta.com/entertainment/specialevents/Maithanam-Audio-Launch/images/Maithanam-Audio-Launch-10.jpg
மைதானத்தில் விளையாடிய வசனங்கள்

1. அவன் என் ஃபிரண்டு.. எப்படி அவன் தங்கயை லவ் பண்ண முடியும்?அது அவனுக்கு செய்யற துரோகம் இல்லையா?

மனசுக்குப்பிடிச்சவளை பக்கத்துல உக்கார வெச்சுட்டே பிடிக்காத மாதிரி காட்றது மட்டும் துரோகம் இல்லையா?

2. வாழ்க்கைல நாம நினைக்கறது எப்பவும் நடக்கறது இல்லை..நடப்பதை ஏத்துக்கனும்..

3. ஊரை அடிச்சு உலையில போட்டவனுக்கே எந்த பிரச்சனையும் வர்றதில்லை.. நமக்கு மட்டும் என்ன பிரச்சனை வந்துடப்போகுது?

4. அவன் ஏன் மூடு அப்செட் ஆனமாதிரியே இருக்கான்?

எப்பவாவதுன்னா பரவால்லை.. எப்பவுமே அப்படித்தான்.. விட்டுத்தள்ளு... 

5.  உனக்காக எதையும் விட்டுக்குடுப்பேன், ஆனா எதுக்காகவும் உன்னை விட்டுக்குடுக்க மாட்டேன். ( இது ஹீரோயின் கிட்டே வில்லன் சொல்றது)

6.  அடடா.. ஏன் புலம்பறீங்க.. எதா இருந்தாலும் பாஸிட்டிவ்வா சிந்திக்கனும்.. நம்ம வம்சத்துலயே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன முத ஆம்பள நான் தான்.. ஏ ஹே ஹே ஹே
http://www.thehindu.com/multimedia/dynamic/00569/24cp_itsy1_maithaan_569677f.jpg

இயக்குநர் விளையாடிய இடங்கள்

1. ஹீரோயினை எந்த இடத்திலும் விகல்பமாக காட்டாதது.. கதை , திரைக்கதை அதற்கு இடம் கொடுத்தும் இயக்குநர் இடம் கொடுக்காதது..

2.அமைதியாக வரும் ஹீரோயின் அப்பா கேரக்டர் மகளை காணோம் என்றதும் செய்யும் ஆர்ப்பாட்டம் கிராமத்து தந்தை கேரக்டரை அப்படியே கண் முன் கொண்டு வந்தது.. 

3. ஹீரோயினின் அண்ணன் கேரக்டர், காதலன் கேரக்டர் இருவருக்கும் சம வாய்ப்பு கொடுத்து மிகை நடிப்பே இல்லாமல் வேலை வாங்கியது.. 


4. ட்ரிம் செய்யப்பட்ட போலீஸின் ஹேர் கட் மாதிரி எக்ஸ்ட்ரா வசனம் எதுவும் இல்லாமல் கன கச்சிதமான யதார்த்த வசனங்கள்..


5. அனைத்துக்கேரக்டர்களும் புதுமுகமாக இருந்தாலும் யதார்த்த நடிப்பை வெளிக்கொணர்ந்த விதம்


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. நண்பனின் வில்லத்தனம் தெரிந்த ஹீரோயின் அவரது வீட்டுக்கு தனிமையில் உள்ளே போக சம்மதித்தது எப்படி?அவரோடு வண்டியில் டபுள்ஸ் போவது எப்படி?

2. வில்லன் விஷம் சாப்பிடுவது அவரை காப்பாற்றுவது உட்பட சில சீன்கள் நாடோடிகள் படத்தை நினைவு படுத்துவது..

3. க்ளைமாக்ஸில் வில்லனுக்கு ஆத்தாவே சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்வது நந்தா படத்தை நினைவு படுத்துவது..

4. ஹீரோயின் காணாமல் போனதும் ஊருக்குள் தேடும் படலம் இன்னும் எடிட் பண்ணி இருக்கலாம். அநியாயத்துக்கு நீளம்..

5. ஆசைப்பட்டு ஹீரோயினை கடத்தி வந்த வில்லன் அவளை எதுவும் “செய்யாமல்” தனது வீட்டிலேயே வைத்திருப்பது.. 

6. வில்லன் ஹீரோயின் மேல் கொண்டது காதலா? முறை அற்ற காமமா? என விளக்கி சொல்லாதது..

7. ஹீரோயின் குடும்பத்தில் அடிக்கடி தற்கொலை முயற்சி நடப்பதை காட்டுவது

8. அண்ணன் தங்கையை வில்லன் வீட்டில் இருந்து மீட்டு வரும்போது சொல்லி வைத்த மாதிரி ஊரே திரண்டு வேடிக்கை பார்ப்பது..


 ஆனால் இவை எல்லாம் பெரிய மைனஸாக தோன்றாததற்கு முக்கிய காரணம் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவத்தை நேரில் பார்ப்பது போல் படம் எடுத்ததுதான்..நல்ல விளம்பரம் இருந்தால் இந்தப்படம் ஓட வாய்ப்பு உண்டு.. 

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க் - நன்று
 ஈரோடு அண்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்.

பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.. ரெகுலரா ஃபிரண்ட் மாதிரி கூட பழகும் ஆண்களால் எந்த மாதிரி எல்லாம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது
என்ற  விழிப்புணர்வை படம் தருகிறது என்பதால் அனைத்து பெண்களும் தங்கள் பெண் குழந்தைகளுடன் காண வேண்டிய படம்..

ஹீரோயின் ஒரு சாயலில் காதல் சந்தியா மாதிரியும் ,இன்னொரு சாயலில் ஆல்பம் பட ஹீரோயின் (தேங்காய் சீனிவாசனின் பேத்தி) மாதிரியும் இருக்கார்