Showing posts with label SHORT FILM REVIEW. Show all posts
Showing posts with label SHORT FILM REVIEW. Show all posts

Tuesday, July 10, 2012

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள்- விமர்சனம் (8.7..2012)


நாளைய இயக்குநர் நிகழ்ச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் படைப்பளிகளை ஊக்குவிக்கும் ஒரு தரமான நிகழ்ச்சி.. காதலில் சொதப்புவது எப்படி? குறும்படம் பெரும்படம் ஆகி வசூல் தரும் படம் ஆன பிறகு இந்த நிகழ்ச்சிக்கான மதிப்பு உயர்கிறது . வாரா வாரம் ஞாயிறு காலை 10.30  டூ 11.30 கலைஞர் டி வியில் காணலாம்.. 


இன்னைக்கு ஆர்த்தி பெருசா பூப்போட்ட நைட்டி அணிஞ்சு வந்தாங்க.. ஜட்ஜஸ் 2 பேர் கிட்டேயும் கேள்வி கேட்டாங்க.. அதுக்கு அவங்க பதில்// 


ஆர்த்தி - சார், சமீபமா நீங்க என்ன படம் பண்ணிட்டு இருக்கிங்க? அது பற்றி சொல்லுங்க


 பிரபு சாலமன் -  நான் எடுத்து வரும் கும்கி படம் யானைகளை மையமா எடுத்து சொல்லப்படும்  டாக்குமெண்ட்ரி என நிறைய பேரு நினைக்கறாங்க, ஆனா அது உண்மை அல்ல,கதைக்கான பின்னணி யானை.. மற்றபடி ஒரு காதல் கதை,.. யானைப்பாகனின் கதைன்னும் சொல்லலாம்.. சிவாஜியின் பேரன்க்காக இந்த கதை எடுக்கறேன். 


விக்ரமன் - இளமை நாட்கள்னு ஒரு  படம்  பாதி எடுத்தாச்சு, இப்போ ஸ்டாப் பண்ணிட்டோம்.. புதுமுகங்களை வெச்சு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன்


1. குறும்பட இயக்குநர் பெயர் - குகன் , குறும்படத்தின் பெயர் - H2O ( தண்ணீர் )


இது அக்மார்க் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை.. 2050ல கதை நடக்குது..  ஒரு பாலைவனம்.. அதுல ஒரு ஆள் பயணம் பண்றாரு. நடராஜா சர்வீஸ் தான்.. இடுப்புல வாட்டர் கேன், முதுகுல ட்ராவலிங்க் பேக்.. போற வழில 3 பேர் செத்தோ, மயக்கமாவோ கிடக்கறாங்க.. அவங்களை குனிஞ்சு செக் பண்றப்போ 3 பேர்ல ஒருத்தன் அவன் கிட்டே இருக்கும் வாட்டர் கேனை பிடுங்க பார்க்கறான். சண்டைல ஹீரோ அவனை கொன்னே போட்டுடறான்.. தண்ணீருக்காக கேரளா,கர்நாடகா, தமிழ் நாடு அடிச்சுக்குதே அதுதான் குறியீடு போல.. எதிர்காலத்துல உலகப்போர் வந்தா அது தண்ணீருக்ககவோ, பெட்ரோலுக்காகவோதான் இருக்கும்னு யாரோ சொன்னாங்க. .


ஹீரோ கழுத்துல காயத்தோட தனது பயணத்தை தொடர்றான்..  சாகற நிலைமை.. தனது கடைசி மூச்சு விடறப்போ  ஒரு செடிக்கு அந்த தண்ணீரை ஊற்றிட்டு சாகறான்.. 


விக்ரமன் - என்வயரோமெண்ட்ல அக்கறை வேணும், பொல்யூஷன் வராம பார்த்துக்கனும்னு சொல்ல வந்திருக்கீங்க.. குட்.. ஓப்பனிங்க் ஷாட்ல 1000 ரூபாய் நோட்டால வியர்வையை துடைக்கற சீன் கிளாசிக்.. அவனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல.. ஆனா தண்ணீர் தான் அத்தியாவசியத்தேவைன்னு சொல்ல வந்தது நல்லா வந்திருக்கு.. பதியுது..  அந்த  இடத்துல இசை சூப்பர்.. ஒரே ஒரு கேரக்டரை வெச்சு தண்ணீர் பிரச்சனையை பேஸ் பண்ணி படம் பண்ணி இருக்கீங்க.. குட்..


பிரபு சாலமன் - ஹீரோவோட சிந்தனை பூரா  தண்ணீர்ல ஊறி கிடக்கு என்பதை அவன் சாகற சீரியஸ் நிலைல கூட ஸ்விம்மிங்க் பூல்ல விழுந்த நினைவை காட்டுவதுல இருந்து உணர்த்திடறீங்க.. . எதிர் காலத்துல இப்படித்தான் நடக்கப்போகுதுன்னு சொல்ல வந்திருக்கீங்க.  நல்லாருக்கு


சி.பி - முன்னுக்குப்பின் முரணான பாத்திரப்படைப்பா  ஹீரோவை காட்டறீங்க.. ஒரு 100 மிலி தண்ணீருக்காக கொலை செய்யும் அளவுக்கு வக்கிரமான , குணம் கொண்ட ஹீரோ தன் உயிர் போறப்பக்கூட தன் தாகத்துக்கு தண்ணீரை குடிக்காம செடிக்கு தண்ணீர் ஊற்றுவது சூட் ஆகலையே.. சக உயிரை ஆறறிவு மனிதனை காப்பாற்றாமல் செடிக்கு ஊற்றுவது ஏன்?இயற்கையை பாதுகாக்க என்றால் மனிதனும் இயற்கையின் படைப்பு தானே?

இந்தப்படம் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு..

மன்மோகன் ஆட்சியில் எவ்வளவு ஊழல் சாதனைகள் நடந்துருக்கு.. அதெல்லாம் சாதனை இல்லையா..


2. குறும்பட இயக்குநர் பெயர் - சந்ரு , குறும்படத்தின் பெயர் -ஆருயிரே

இந்தப்படத்தோட கதை , திரைக்கதை எல்லாம் நம்ம ஆளு அதிஷாவுடையது,, புதிய தலைமுறை உதவி ஆசிரியர்.. பிரபல ட்விட்டர்.. பிரபல பதிவர் என பன்முகம் கொண்டவர்..

சமீபத்தில் நடந்த  போலீசின் எண்கவுண்ட்டர் பற்றிய படம்..அதாவ்து  பேங்க் கொள்ளை நடந்தப்ப  இவங்க தான் பேங்க் கொள்ளையர்ஸ்னு வட மாநில ஆட்களை போட்டுத்தள்ளுச்சே போலீஸ் அதை கிண்டல் செய்யும் ப்டம்.. ஆனா காமெடி  கதை அல்ல. சீரியஸ்..

ஓப்பனிங்க் ஷாட்ல  லவ்வர்ஸ் ஜோடியை காட்ட்டறாங்க.. வழக்கம் போல ஊரை விட்டு ஓடி வந்தவங்க.. காதலன் தன் நண்பனை நம்பி வந்துடறான்.  ஆனா அவன் இவனை கண்டுக்கலை. செல் ஃபோன்ல நோ ரெஸ் பான்ஸ்.. கடைசில எப்படியோ கண்டு பிடிச்சு அந்த நண்பனோட ரூமுக்கு போறான்.. தனியாத்தான்.. காதலியை அவன் சாப்பிட்ட மெஸ்ல வெயிட் பண்ண வெச்சு இவன் மட்டும் போறான்.  ஆனா அந்த ரூம்ல அவனோட நண்பன் இல்லை.. சரின்னு அந்த ரூமை விட்டு வெளீல வர்றப்போ போலீஸ் கும்பல் அவனை , அந்த ரூம்ல இருக்கறவங்களை எந்த விசாரணையும் இல்லாம  போட்டுத்தள்ளிடுது..

 ஹீரோயின் அங்கே ஹீரோவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா.. அவ்லவ் தான் படம்



மனம் கவர்ந்த வசனங்கள்


1. போலீஸ் நம்மளை ட்ரேஸ் அவுட் பண்ணிட்டா என்ன பண்றதுனு செல் ஃபோனைக்கூட எடுத்துட்டு வராம வந்துட்டோம்..


2. எனக்கு பயமா இருக்கு.. நம்மை நிம்மதியா வாழ விட மாட்டாங்க..


3. ஃபிரண்ட் செல் நாட் ரீச்சபிள்.. அவனை நம்பி இங்கே வந்திருக்கக்கூடாதோ? எதுக்காக செல்லை ஆஃப் பண்ணிட்டான்னு தெரியலையே?


விக்ரமன் - காதல் பட இன்ஸ்பிரேஷன் அங்கங்கே தெரியுது,.,. ஹீரோ ஃபிரண்ட் கிட்டே பேசறப்போ காதல் சுகுமாறன் மாதிரியே என்னடா மச்சான் என்ரெல்லாம் கூப்பிடாம இருந்திருக்கலாம்.. காதலை நினைவு படுத்துது..



பிரபு சாலமன் -போலீஸ் ஸ்டோரிக்கான மூடு படத்துல மிச்சிங்க்.. அவங்க திடீர்னு வர்றாங்க, சுடறாங்க போயிடறாங்க.. படத்துல அவங்க வரப்போறாங்க என்பதற்கு ஒரு லீடு குடுத்திருக்கலாம்.. அது ஆடியன்ஸிடம் ஒரு டெம்ப்போ ஏத்தி இருக்கும்.. யூ ஸி.. சோகம் வேற , பாதிப்பு வேற.. வர்ற ஆடியன்சை சோகத்தோட அனுப்பக்கூடாது.. ஆனா நம்ம படம் அவங்க மனசை பாதிக்கனும்.. இதுதான் ஃபார்முலா..


சி.பி - போலீஸ் ஸ்டோரி கேட்டகிரில படம் எடுத்ததால கதையோட ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஸ்டார்ட் ஆகி இருந்தா நல்லார்ந்திருக்கும்.. ஹிட்சாக்கின் தியரிப்படி சஸ்பென்ஸ் என்பது திடீர்னு ஒரு எதிர்பாராத சம்பவத்தை காட்டி பார்வையாளனை திகைக்க வைப்பது அல்ல.. ஒரு வெடி குண்டு வெடிக்கப்போகுதுன்னு  ஆடியன்ஸ்க்கு சொல்லி அதை எப்போ எப்படி வெடிக்காம காப்பாத்தறாங்க என டெம்ப்போ ஏத்துவதே சஸ்பென்ஸ்க்கான இலக்கணம்.. போலீஸை ஓப்பனிங்க்லயே காட்டி இருந்தா இன்னும் கிராண்டா வந்திருக்கும்..

 படத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேர் நடிப்பும் எதார்த்தம்.. பெஸ்ட் ஆக்டிங்க் அவார்டு 2 பேருக்கும் சமமா பகிந்து கொடுத்தாங்க.. ( அதை எப்படி 2 பேரும் ஷேர் பண்ணிக்குவாங்க? ஆளுக்கு ஒரு வாரமா? )

இந்தப்படம் பற்றி ட்விட்டர்ல நடந்த கலந்துரையாடல்


கி.கோ - ஆருயிரே' குறும்படம் யாராச்சும் பார்த்தீங்களா? இந்த அளவுக்கா நம்மூர்ல படைப்பு சுதந்திரம் இருக்குது ~ நம்பவே முடியல!


சி பி - டி வி க்கு சென்சார் இல்லை, அதுவும் இல்லாம போலி என்கவுண்ட்டர் பற்றி படம் எடுத்து இப்படி போடுவாங்கன்னு ஜெ அரசு எதிர்பார்த்து இருக்காது


கி கோ -ஆமாங்க.. ஆனாலும்.. சந்துருவின் கற்பனை கொஞ்சம் அதிகமா படுது.. சாத்தியக் கூறுகளையும் மறுப்பதற்கில்லை தான்..






3. குறும்பட இயக்குநர் பெயர் - மித்ரன் , குறும்படத்தின் பெயர் -பொல்லா வினையோன்




ஊஞ்சல்ல ஒரு பொண்ணு உக்காந்து ஆடிட்டு இருக்கு.. பேப்பர்ல ஒரு பறக்கும் தட்டை வரைஞ்சு அதை பார்த்துட்டு இருக்கு.. திடீர்னு ஒரு பறக்கும் தட்டு வந்து இறங்கி அந்த பாப்பாவை கூட்டிட்டு போயிட பாக்குது..


பாப்பாவோட மம்மி ஷாப்பிங்க் போறப்போ அந்த வேற்றுக்கிரக வாசிகள் அவளை அப்ரோச் பண்றாங்க.. இந்த உலகத்தை அழிச்சுட்டு புதுசா ஒரு உலகத்தை உருவாக்கப்போறோம்கறாங்க. கடைசில அந்த லேடி தன் குழந்தையை அவங்களோட அனுப்பி வைக்குது..

 எந்த ஊர்ல அப்படி ஒரு அம்மா குழந்தையை அனுப்பி வைக்குமோ தெரியலை.. சாமார்த்தியமா கதைக்களன் நியூ ஜெர்சிலன்னு காட்டிடறாங்க.. ஆனா எந்த ஒரு தேசத்திலும் பெற்ற அம்மாவே தன் குழந்தையை அப்படி அனுப்பி வைக்க மாட்டாங்கன்னுதான் தோணுது..

 வழக்கமா உள்ளத்தை தொடும் சமூக கருத்தை சொல்லும் மித்ரன் இந்த டைம் சரியான திரைக்கதை அமைக்காம சொதப்பிட்டார்னு தோணுது.. .



பிரபு சாலமன்  - புது உலகத்தை உருவாக்க நினைப்பது ஓக்கே.. ஆனா அதுக்காக ஏன் பழசை அழிக்கனும்?கான்செப்ட் ஈஸ் நாட் ஓக்கே.



 விக்ரமன்  - SOME TIMES CREATIONS WILL FAIL ,BUT THE CREATORS NEVER FAIL - சில சமயம் சில படைப்புகள் தோல்வி அடையலாம், ஆனால் படைப்பளிகள் தோற்பதில்லை


சி.பி - இவரோட படைப்புகள் எல்லாமே ஹை கிளாஸ் ஆடியன்ஸுக்கானவை.. மணிரத்னம், கவுதம் மாதிரி,. இன்னும் எளிமையா சொல்லலாம்


 பெஸ்ட் சி ஜி ஒர்க்குக்கான விருது கிடைச்சுது..





Wednesday, June 20, 2012

ட்விட்டர் கேங்கின் அலப்பறை - உடன்பிறப்புகளே! - குறும்பட விமர்சனம்

டைட்டிலே இது தி மு க வுக்கு எதிரானதுன்னு சொல்லிடுது.. இந்த கதைக்கு போறதுக்கு முன்னே நீங்க மனதளவில் ஸ்டாலினை அண்ணனாவும், அழகிரியை தம்பியாவும் கற்பனை பண்ணிக்குங்க. ஏன்னா நிஜ வாழ்வில் அண்ணன் அழகிரி, தம்பி ஸ்டாலின் .. ஆனா இந்தக்கதைல கொஞ்சம் மாத்தி இருக்காங்க.. 


ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு அரசியல் தலைவரை ஒரு கும்பல் ஃபோன்ல மிரட்டுது . உங்களை கொலை பண்ணப்போறோம். உங்க கூட இருக்கறவங்க தான் அதை செய்யப்போறாங்க..  அப்டினு..


அதே மாதிரி அவரை ஒரு ரூம்ல அடைச்சு வெச்சுட்டு பாஸ்க்கு ஃபோனை போடறாங்க.. அந்த பாஸ் வேற யாருமில்லை. அந்த அரசியல் தலைவரோட  தம்பி தான். அண்ணனோட  அரசியல் செல்வாக்கு பிடிக்காம அவருக்கு பிறகு தான் தான் வாரிசு ஆகனும்கற வெறில  இந்த பிளான். 

இப்போ அரசியல்வாதி தன் சாணக்கியத்தனத்தை காட்ட தன்னை கொலை வந்த ஆட்கள்ட்டயே பேரம் பேசறார்.. ஒரு கோடி வாங்குன ஆட்கள் 10 கோடிக்கு ஆசைப்பட்டு பிளேட்டை திருப்பி போட்டுடறாங்க. 

 அரசியல் தலைவர்  தன் தம்பியை போலீஸ்ல மாட்டி விட்டுடறார்.. அவ்ளவ் தான் கதை,.,. 


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்


 படத்தில் பாராட்டுக்குரிய முதல் அம்சம் பின்னணி இசை. மிகச்சிறப்பா வந்திருக்கு..  படத்தோட விறு விறுப்புக்கு அது ரொம்ப உதவியா இருக்கு. 

 2 வது அம்சம் அண்ணன் , தம்பி கேரக்டர்ல நடிச்சிருக்கற 2 பேரும். 

 அண்ணனா  வர்றவர் ட்விட்டர் நண்பர் டி பி கேடி பெங்களூர்.. ஆள் நல்ல பாடியா இருக்கறதால அரசியல் தலைவர் கெட்டப் நல்லா சூட் ஆகுது.. அவரோட பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்புகள் எல்லாம் கன கச்சிதம் 

தம்பியா வர்றவர் படத்தோட இயக்குநர். சிங்கம் சூர்யா மாதிரி கெட்டப்.. ஆள் நல்ல கலர்..  ஹீரோவா நடிக்க முயற்சி செஞ்சா கோடம்பாக்கத்தில் சான்ஸ் உண்டு..  ஆனா வசனம் பேசும்போது ,மட்டும் பல்லை கடிச்ச மாதிரி பேசறார்.. பல இடங்கள்ல செயற்கை தட்டுது.. 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இவனுங்க பேச்சே இன்னைக்கு சரி இல்லையே? ஒருத்தன் முடிச்சுட்டுத்தான் போவேன்கறான்.. இன்னொருத்தன் இனி பார்ப்போமா? மாட்டோமா? அப்டினு சொல்றான்.. ம் .. 


2. ஒரு கல்லுல 3 மாங்கா அடிச்சே எனக்கு பழக்கம்


3. நாளைக்கு தலைப்புச்செய்தி,.. நாளான்னைக்கு தலைவர் பதவி.. 


4. என்னது? 10 கோடியா? ஒரு கோடிதானே பேசுனது?

 மாத்தி மாத்தி பேசறது அரசியல்வாதி நீங்க மட்டும் தானா? நாங்க பண்ணக்கூடாதா?

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்துல வசன உச்சரிப்புல ஒரு நாடகத்தனம் தெரியுது.. எல்லாருமே தயங்கித்தயங்கித்தான் பேசறாங்க..


2. மஞ்சள் பனியன் போட்டு வர்றவர் ஆள் வில்லன் மாதிரி ஜைஜாண்டிக்கா இருந்தாலும் வில்லனுக்குரிய சீரியஸ்னெஸ் மிஸ்சிங்க்,.. போதாததுக்கு ஜோக் எல்லாம் அடிக்கறார். வில்லன்க்கு டார்க் கலர்ல தான் டிரஸ் போட வைக்கனும். காமெடி ஆள் தான் மஞ்சள் டிரஸ் போடனும்


3. கூலிங்க் கிளாஸ் கழட்டறது, அப்புறம் போடறது பஞ்ச் டயலாக் பேசறது எல்லாம் உயிர் பயத்துல இருக்கற ஆள் செய்ய மாட்டார்.. அவருக்கு உயிரை காப்பாத்தனும்கற டென்ஷன் தான் இருக்கும்.. ஸ்டைல் பண்றதுக்கோ, பந்தா காட்டவோ அப்போ தோணாது..


4.  சி பி ஐ ஆ ஃபீசர் தம்பி கேரக்டர் கிட்டே பேசிட்டு அப்புறம் இப்போ இன்னொரு ஆஃபீசர் வருவார் பாருங்க , அப்டினு வர வைக்கறதும் நாடகத்தனமே.. ஏன் 2 பேரும் ஒண்ணா வர மாட்டாங்களா?


5. தன் தம்பி தான் தன்னை கொலை பண்ண ஆள் ரெடி பண்ணான் என்பது தெரிந்ததும் அண்ணன் ஷாக் ஆகறார், ஓக்கே அதை ஏன் 3 கட் ஷாட்ல  காட்டனும்?முதல் டைம் காட்டறப்போ ஓக்கே, 3 டைமும் காட்டுவது போர்


6. கொலை முயற்சிக்கே கைதா? அப்டினு நக்கலா ஒரு வசனம் வருது. ஏன்? அட்டெம்ப்ட் மர்டர், அட்டெம்ப்ட் ரேப் எல்லா க்ரைம்க்கும் தனி தனி செக்‌ஷன் இருக்கே..


7. போதை மருந்து கடத்தல் ஐ விட்னசா வர்றவர் கிராமத்து தமிழ்ல பேசறது ரொம்பவே செயற்கை.. அதே போல் அவர் தன் முதலாளியை பார்த்ததுமே பணியாமல் அவரிடம் பேசும்போது தான் மடிச்சுக்கட்டிய லுங்கியை கீழே இறக்கி வசனம் பேசறார்.. 

8. க்ளைமாக்ஸ் ல பணத்துக்காக கொலை செய்யும் கும்பல்ட்ட அண்ணனா வர்ற டி பி கே டி பேசற செண்ட்டிமெண்ட் டயலாக்கும் தேவை இல்லாதது.. 


9. ஒரு சீன்ல இன்ஸ்பெக்டர் இளமாறன் அப்டினு கூப்பிடற மாதிரி ஒரு ஷாட் வருது.. அந்த சீன்ல 4 இன்ஸ்பெக்டர் இருந்தா அது ஓக்கே. இருக்கறதே ஒரு இன்ஸ்பெக்டர் தான்.. இன்ஸ்பெக்டர்னு தான் கூப்பிடுவாங்க..


10. பொண்டாட்டி சீரியஸ்னு ஒரே ஒரு பொய் தான் சொன்னேன், உடனே கபிலன் ஊருக்கு ஓடிட்டான்னு ஒரு டயலாக் வருது.. கபிலனோட பொண்டாட்டி சீரியசா இருக்கறது  கபிலனுக்கே தெரியாம இவருக்கு எப்படி தெரியும்? அப்படியே இவர் சொன்னாலும் கபிலன் ஊருக்கு ஃபோன் பண்ணி விசாரிக்க மாட்டாரா?


11. கூலிங்க் கிளாஸ்ங்கறது பைக்ல வேகமா போறப்போ, வெய்யில்ல நடக்கறப்போ போடறது.. வீட்ல ஹால்ல தனிமைல இருக்கறப்போக்கூட கூலிங்க் கிளாஸா?


12. கதைல வர்ற அண்ணன்க்கு வயசு மீறி மீறிப்போனா அல்லது மீறாம போனா 40 தான் இருக்கும், ஆனா அவர் அரசியல் வாரிசை அறிவிக்கறாரு.. 89 வயசான கலைஞரே அதை இன்னும் செய்யலை... அவர் உடம்புக்கு எதுவும் ஆகலை.. அப்புறம் என்ன அவசரம்?



இப்போ கீழே உள்ள விபரங்கள் இயக்குநரின் வலைப்பூவில் இருந்து எடுக்கபட்டவை 


நடிகர்கள்:
அரவிந்த்
பலராமன்
சந்தோஷ்
ராஜேஷ்
லலிதா ராம்
மொகம்மெத் கஃபில்
தனசேகர்
சுப்பிரமணியன்
சரவணகுமார்
ஜெய் சங்கர்
கார்த்திக் அருள்

தொழில்நுட்ப வல்லுனர்கள்:



இசை, விளம்பரப்படம் வடிவமைப்பு – சாய் சுதர்ஷன்


ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – சரவண ராம் குமார்


ஒளிப்படங்கள் – கார்த்திகேயன்


ஒப்பனை – ஹரிஷ்


ஆங்கில அடிவரிகள் – அரவிந்த்


நட்புக்காக: கார்க்கியின் குரல்

Wednesday, May 02, 2012

நாளைய இயக்குநர் 29.4.2012 - விமர்சனம்

வாரா வாரம் சண்டே அன்னைக்கு காலைல 10.30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சில தான் கலைஞர் டி வி ல பெஸ்ட் புரோகிராம்னு சொல்லலாம்.. பார்க்காதவங்க ரெகுலரா பாருங்க.. 7 நிமிட குறும்படங்கள் 3 ஒளீபரப்பாகுது.. 

பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா கீர்த்தி இன்னைக்கு பச்சைக்கலர் பாவாடை ( மிடி பாட்டம்?) போட்டுட்டு வந்திருந்தாங்க.. அவங்க கழுத்துல காசு மணீ பாசி மாலையும் பச்சைக்கலர்ல.. நல்ல வேளை பச்சை பச்சையா பேசலை.. மேட்சுக்கு மேட்ச் மிஸ்.. 


அவங்க தலை வலது புறமா லேசா வீங்கி இருந்தது,.. என்னான்னு கேட்டா அது ஒரு வகை ஹேர் ஸ்டைலாம்.. சகிக்கலை.. அவர் போட்டுட்டு வந்த ஹை ஹீல்ஸ் ரொம்ப குறுகலா இருக்கு.. இதே மாதிரி அவர் ரெகுலரா சைஸ் பத்தாத செப்பலை போட்டுட்டு வந்தா கால் பணால் ஆகிடும்.. ( இப்போ விமர்சனம் ஷார்ட் ஃபிலிமுக்கா? கீர்த்திக்கா?)


1. குறும்பட இயக்குநர் பெயர் - கார்த்திக்  - குறும்படத்தின் பெயர் - தோஸ்த்


ஓப்பனிங்க்லயே இது ஒரு காமெடி படம்னு தெரிஞ்சுடுது,, ஒரு வீட்டுக்குள்ள திருடன் திருடப்போறான்.. அங்கே ஃபோட்டோல இருக்கற பெருசு ஆவியா இருந்து அவனை வழி நடத்துது.. அதாவது அந்த பெருசு உயிரோட இருந்தப்போ அந்த வீட்ல இருந்தவங்க யாரும் சரியா அவரை கவனிக்கலை போல.. அதனால எந்தெந்த பொருளை அவன் திருடனும்னு அந்த ஆவியே சொல்லித்தருது.. 

 எல்லாம் முடிஞ்சு கிளம்பறப்ப அந்த ஆவி அந்த திருடன் கிட்டே அவன் ஃபோன் நெம்பர் கேக்குது.. அப்பப்ப போர் அடிச்சா உன் கிட்டே பேசறேன்குது.. திருடனும் குடுக்கறான்.. 

 அடுத்த நாளே போலீஸ்ல மாட்டிக்கறான்.. அந்த வீட்டின் ஓனர் ஒரு ஆட்டோமேடிக் கேமரா வீடியோ செட் பண்ணி வெச்சிருக்கான்.. அந்த வீடியோவுல்  திருடன் பேசுன ஃபோன் நெம்பர் ரெக்கார்டு ஆகிடுது.. அதனால மாட்டிக்கறான்...

மனம் கவர்ந்த வசனங்கள்


1. உன் பேரென்ன?

 கண்ணன்

 அதான் திருட வந்திருக்கே.. 


2.  முதல்ல இந்த டி வியை எடுத்துட்டுப்போ.. இதுல வர்ற 15 சீரியலையும் என் மருமக பார்க்கறா.. கரண்ட் போனா மட்டும் தான் என் பையனுக்கு சமைச்சுப்போடறா..


3. டேய்.. வீட்ல ஒரு ஆவிடா.. 

 குடிச்சிருக்கியா? எப்போ சரக்கை அடிச்சாலும் ஏண்டா எனக்கு ஃபோன் பண்ணி என் உயிரை வாங்கறே?


இந்தப்படத்துல ஹீரோவா வந்தவர் முகச்சாயல்லயும் சரி பாடி லேங்குவேஜ்லயும் சரி பருத்தி வீரன் கார்த்தி போலவே இருந்தாரு.. செம நடிப்பு.. பெஸ்ட் ஆக்டர் விருது வாங்குனாரு.. ஆவியா வந்த பெரியவர் நடிப்பும் பாந்தம்.. 

 பொதுவா பேய்னாலே பேக்கிரவுண்ட்ல  அதிரடி திகில் இசையைத்தான் போடுவாங்க.. இதுல கர்னாடிக் மியூசிக் வித்தியாசமா இருந்தது.. 


2.  குறும்பட இயக்குநர் பெயர் -ராஜேஷ்குமார் - குறும்படத்தின் பெயர் -சாரதி

 ஒரு கால் டாக்ஸி டிரைவர்.. ஒரு லண்டன் வாழ் தம்பதிக்கு ஒரு நாள் கார் டிரைவரா வர்றாரு.. அவங்க போற பக்கம் எல்லாம் டிரைவரும் போறாரு.. டிரைவருக்கு குழந்தைன்னா ஆசை.. ஆனா அவருக்கு குழந்தை இல்லை.. அந்த தம்பதியோட பெண் குழந்தை அந்த டிரைவர்ட்ட ஒட்டுதலா இல்லை.. அந்த பாப்பாவுக்கு இந்தியாவையே பிடிக்கலை.. நரசிம்மராவ் மாதிரியே மூஞ்சியை வெச்சிருக்கு.. 
பெண் குழந்தைகளை கடத்தி வியாபாரம் பண்ற ஒரு கும்பல் அந்த பெண் குழந்தையை கடத்திடுது.. டிரைவர் கஷ்டப்பட்டு  அந்த கும்பலில் மாட்டின குழந்தைகளை மீட்டு அவங்க பெற்றோரிடம் ஒப்படைப்பதுதான் கதை.. 


கால் டாக்சி டிரைவரா நடிச்சவர் ரொம்ப யதார்த்த நாயகனா சேரன் மாதிரி ( ஆனா குண்டு) நடிச்சிருந்தார்.. எதுக்கும் கோபத்தை காட்டாத பொறுமையான நடிப்பு.. லண்டன் தம்பதியின் குழந்தையா வந்த பாப்பாவை விட கும்பல்ல மாட்டிக்கிட்ட இன்னொரு பெண் குழந்தை ஃபேஸ் கட், துறு துறுப்பு எல்லாம் செம கலக்கல்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பொதுவா கிட் நாப் கும்பல் கடத்துனதும் மயக்க மருந்து குடுத்துடுவாங்க.. ரிஸ்க் எதுக்குன்னு.. அதுவும் இல்லாம விழிச்சிருந்தா சத்தம் போடுவாங்க அல்லது தப்பிக்க வழி தேடுவாங்க ..

2. குழந்தைகளை கடத்தி வெச்சிருக்கற அதே ரூம்ல எந்த லூஸாவது ஹீரோவை அடைச்சி வைப்பானா?

3. டிரைவர் தன் மனைவியிடம்  செல் ஃபோனில் உரையாடும் காட்சி  தேவை இல்லாதது ( பிள்ளை இல்லாதவர் என்பதால் அவர் தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்ற சஸ்பென்சுக்காக என்றாலும் அது தேவை இல்லாத சீனே..)

 நடுவரா வந்த சுந்தர் சி,  வெற்றி மாறன் 2 பேருமே ஒரு குறை சொன்னாங்க.. அதாவது அந்தக்குழந்தை ஏன் டிரைவர் மேல வெறுப்பா இருக்கு.. கதைக்கு அது தேவையே இல்லைன்னு.. நான் என்ன சொல்றேன்னா நோ பிராப்ளம்.. அந்த குழந்தை வெறுப்பா இருந்தாக்கூட டிரைவர் அந்த குழந்தையை காப்பாத்தறார் என்பதுதான் கதைக்கரு.. 

 இந்த ஜட்ஜுங்க எல்லாம் ஸ்டேஜ்ல இயக்குநர்களை மடக்கிடறதா நினைச்சு சில கேள்விகளை கேட்க்றாங்க /. மேடை பயம் டென்ஷன் இதனால அந்த இயக்குநர்கள் அதுக்கு சரியா பதில் சொல்ல முடியறதில்லை.. இதனால ஜட்ஜூங்க ரொம்ப மிதப்பா நினைச்சுக்கறாங்க ..  

3.குறும்பட இயக்குநர் பெயர் -அருண் - குறும்படத்தின் பெயர் -கறுப்பு, மஞ்சள், சிவப்பு


வித்தியாசமான திகில் படம்.. பேசிக் இன்ஸ்டிங்க் - பாகம் 2 படத்தோட சாயல்ல..   காலேஜ் ஃபிரண்ட்ஸ் 3 பேரு அவங்க ரூமுக்குள்ள வர்றாங்க.. அதுல ஒரு பையன் இன்னொருத்தனை ( ரூம்ல இருக்கற 3 பேர் தவிர வேற ஒரு ஆள்) திட்டிட்டே இருக்கான்.. அவங்க பேச்சுல இருந்து நமக்கு தெரிய வர்ற விஷயம் என்னான்னா  வனை இவங்க 3 பேரும் நல்ல சக்கையா அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டாங்க.. வந்தவங்க அவன் பேக் ஒண்ணையும் எடுத்துட்டு வந்துட்டாங்க..
 

 அந்த பேக்ல ஒரு டைரி.. அது ரத்தத்தால எழுதப்பட்டிருக்கு.. அதை ஒருத்தன் படிக்கறான்.. என்ன ஆச்சரியம்னா  அதுல இவங்க அவனை அடிச்சதை, அடிச்சுப்போட்டுட்டு ரூமுக்கு வந்ததை எல்லாம் விவரமா அதுல எழுதி இருக்கு..  பயத்தோட, ஆர்வத்தோட படிக்கறப்ப ஒரு இடத்துல “ இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. 

 அதை படிச்சதும் டக்னு படிச்சவன் டைரியை அனிச்சையா தூக்கிப்போட்டுடறான்.. படிப்பு கட்,... அவன்  மண்டை பட்.. 

 மீதியை மீதி இருக்கற 2 பேரும் படிக்கறாங்க.. இப்போ நீங்க 2 பேரும் ஒருவரை ஒருவர் அடிச்சுக்கிட்டு சாவீங்கன்னு அதுல வருது.. உடனே 2 பேருக்கும் பயம்.. யார் யாரை போடப்போறாங்கன்னு.. ஆளுக்கொரு ஆயுதம் எடுக்கறாங்க.. ஆனா அதுல ஒருத்தன் சூசயிடு பண்ணிக்கறான்.. மீதி இருக்கறவன் ஒருத்தன்.. 

 இப்போ அவனும் சாகப்போறான்.. ஆனா மறுபடி எல்லாரும் பிழைச்சுக்குவீங்கன்னு வருது.. அதே போல் பிழைச்சுக்கறாங்க,..,ஆனா மறுபடி அதே போல் படிக்க ஆரம்பிக்கறாங்க..  ( செத்து செத்து விளையாடறாங்க)

 அதாவது பாதிக்கப்பட்ட அந்த ஆள் அவங்களை கொலை கொலை செஞ்சு தன் வெறியை தீர்த்துக்கறான் என்பதே கதை.. 

 ரொம்ப புதுமையா இருந்த  இந்தக்கதையை இரு இயக்குநர்களூம் பாராட்டாட்டிக்கூட பரவாயில்லை.. ஏகப்பட்ட வன்முறைன்னாங்க.. பேய்ப்படம்னா பின்னே கொஞ்சிட்டா இருக்க முடியும்?நகரம் படத்துல இல்லாத வன்முறையா? வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த பொல்லாதவன்ல கூட ஓவர் வன்முறை தான்.. 

 இதே கதை நாட் ல அமரர் சுஜாதா கூட ஒரு சிறுகதை எழுதி இருக்கார்.. டைட்டில் நினைவில்லை.. அதுல ஹீரோ ஹீரோயின் ஸ்விம்மிங்க் பூல்-ல நீச்சல் பழக்குவது போலவும் ஒருவர் சாவது போலவும்... மறுபடியும் முதல்ல இருந்து மாதிரியும் வரும்.. 

மாதவன் -ன்  யாவரும் நலம் படத்துல கூட டி வி ல வர்ற சீன் எல்லாம் நிஜத்துல நடக்கற மாதிரி காட்டி இருப்பாங்க.. 

 என்னைப்பொறுத்த வரை இது ஒரு நல்ல முயற்சி,.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. முதல் ஆள் அதே போல் சாகறான், ஓக்கே, ஆனா அதுக்குப்பிறகு 2 வதா படிக்கறவன் கூட அதே போல் பாதிலயே படிக்கறதை நிறுத்தறான்..,ஆனா அவன் மண்டை வெடிக்கலை.. அது ஏன்?

2. ரூமில் இருக்கும் 3 பசங்க ஸ்டேட்மெண்ட் படி அந்தப்பையனை நல்லா அடிச்சுப்போட்டதாத்தான் வருது , கொலை செய்யலை.. ஏன்னா அவனை இன்னொரு டைம் போய் நல்லா அடிக்கனும்னு ஒருத்தன் சொல்றான்.. அப்புறம் எப்படி அவன் செத்தான்?

3. அந்த பையனை அடிச்சுப்போட்டுட்டு அப்போதான் ரூமுக்கு வர்றாங்க.. அப்படியே அவன் செத்திருந்தாலும் 10 நிமிஷ கேப்ல பேயாகி உடனே டைரி எழுதி பழி வாங்கனுமா? 2 நாள் கழிச்சு அந்த சம்பவம் நடப்பது போல் காட்டி இருக்கலாம்.. 

 இந்தப்படத்துக்கு பெஸ்ட் கேமரா, எடிட்டிங்க்னு 2 அவார்டு கிடைச்சது.. வெல்டன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Wednesday, April 25, 2012

நாளைய இயக்குநர் 22.4.2012 - விமர்சனம்

கே பாக்யராஜ் நடுவரா  அல்லது ஜட்ஜா இருந்த டைம்ல அவர் டி எம் கே ல இருந்தாரு.. அவர் அம்மா கட்சிக்கு வரப்போறார்னு பேச்சு அடிப்பட்ட அடுத்த நாளே விக்ரமன் , வெற்றி மாறன் கூட்டணி.. இப்போ மறுபடி சுந்தர் சி உள்ளே வந்துட்டாரு.. சுந்தர் சி எப்பவும் சிரிச்ச முகம், வெற்றி மாறன் கடு கடு முகம்.. ஹூம்.. 


1. குறும்பட இயக்குநர் பெயர் - அஸ்வத்  - குறும்படத்தின் பெயர் - குழந்தையின் வயது 75

டைட்டிலை பார்த்ததுமே செண்ட்டிமெண்ட்ல பிழியப்போறாங்கனு நினைச்சேன்.. 100% சரி.. ஒரு அப்பா, பையன் நடுவில் உள்ள தவமாய் தவமிருந்த உறவு பற்றிய கதை.. படம் ஃபுல்லா 2 பேர் உரையாடல்லயே முடிஞ்சுடுது.. 

அப்பாவும், பையனும் லொட லொடனு பேசிட்டே இருக்காங்க.. அப்பா பேச்சு வாக்குல அது என்ன?னு கேட்கறார்.. பையன் சொல்றான் - அது அணில்ப்பா.. 
மறுபடி அதே கேள்வி.. மகன் அதே பதில். இந்த மாதிரி 4 டைம் ரிப்பீட் ஆனதும் பையன் கடுப்பாகி ஏன்பா திருப்பு திருப்பி கேட்கறீங்க?ங்கறார்.. அப்பா உடனே ஃபிளாஸ் பேக் சொல்றார்.. பழைய டைரி எடுத்து அதுல ஒரு பேஜ் படிக்க சொல்றார்.. அதுல பையன் 20 டைம் மாடு இருக்கறதை காட்டி அது என்னப்பா? என கேட்பதும், அப்பா அதற்கு சலிக்காமல் பதில் சொல்வதும் அதுல பதிவு பண்ணப்பட்டிருக்கு.. 

 மகன் அதை கேட்டு கண் கலங்கறான்.. அதாவது நம் பெற்றோர்கள் நாம குழந்தைகளா இருந்தப்போ காட்டுன அக்கறையை, பொறுமையை நாம் நம் பெற்றோர்களிடம் காட்டுவதில்லை என்ற கரு.. க்ளைமாக்ஸ்ல அந்த பையனின் மகள் அதே போல் லவ் பேர்ட்ஸ் கூண்டை காட்டி அது என்ன ? என 2 முறை கேட்க அவன் பொறுமையா  பறவை என்கிறான்..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அப்பா அந்த டைரியை எடுத்து டிசம்பர் 31 ஆம் பக்கம் எடுத்து படி என்கிறார்.. ஆனால் பையன் டைரியின் கடைசி பக்கம் பார்க்காமல் முதல் 25 வது பக்கம் பார்க்கிறான்

2. அப்பா 1985 ஆம் வருஷ டைரியை எடுன்னு சொன்னதும் பையன் உள்ளே போய் தேடி எடுக்காமல் ரெடியாக டக் என்று அவர் தலை மாட்டில் இருந்து எடுக்கிறான்

3.  அப்பாவின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் மகன் கேரக்டர் செயற்கையான நடிப்பு + சிரிப்பு. நாடகம் பார்ப்பது போல்.. இருக்கு

 இப்படி சில குறைகள் இருந்தாலும் இது ஒரு நல்ல படமே.. ஆனா ஜட்ஜ்ங்க  2 பேரும் இந்த படத்தை குறை தான் சொன்னாங்க..


2.குறும்பட இயக்குநர் பெயர் - ஸ்ரீ கணேஷ் - குறும்படத்தின் பெயர் - டைம் அவுட்.


அசோகமித்திரன் எழுதுன சிறுகதையான காலமும் 5 குழந்தைகளும் தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன்.. எதைத்தொட்டாலும் துலங்காத ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவனைப்பற்றிய ஜாலியான நகைச்சுவைக்கதை.. 

கதையை சொல்றதுக்குப்பதிலா மனம் கவர்ந்த வசனங்கள் சொன்னாலே ஓரளவு கதை புரிஞ்சுடும்



1. ஆட்டோ.. அடையாறு போகனும்.. வர்றீயா?



 நான் மவுண்ட்ரோடு தான் போறேன்.. அங்கே வேணா வர்றியா?


2.  தலைவரே.. எப்படியாவது எனக்கு இந்த வேலையை வாங்கிக்கொடுத்துடுங்க.. 

 போலி எம் எல் ஏ - கவலையே படாதே. பணம் கொடுத்தாச்சு இல்ல? நீ தான் அடுத்த வி ஏ ஓ.. ஆமா ஏய்யா பி ஏ.. வி ஏ ஓ அப்படின்னா என்ன?


3. ஒரு 5 நிமிஷம் இந்த உலகம் சுத்தறதை நிறுத்திட்டு ரெஸ்ட் எடுத்தா என்ன?எப்போ பாரு பரப்பாவே இருக்கே..?ரெஸ்ட் எடுக்கவே மாட்டாங்களா?

4.  எங்கே ஓடறோம்? ஏன் ஓடறோம்? எவ்ளவ் தூரம் ஓடறோம்..? எதுவும் தெரியலை. திரும்பிப்பார்த்தா டோட்டல் வோர்ல்டும் ஓடிட்டே இருக்கு.. 


5. யோவ்.. ஆட்டோ சீக்கிரம் போய்யா. 

 இருங்க.. ஒரு சவ ஊர்வலம்..

 அடடா.. யோவ்.. ஒரு 5 நிமிஷம் லேட்டா செத்திருக்கக்கூடாதா?


6.  ஜோசியரே. என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

 10 வருஷம் நாய் படாத பாடு படுவீங்க.. 

 அதுக்குப்பிறகு என் நேரம் நல்லாருக்குமா?

 ம்ஹூம், அதுக்குப்பிறகு அது பழகிப்போயிடும்


படத்தோட ஹீரோ கடவுளையே ஒரு டைம் நேர்ல சந்திச்சும் அவனுக்கு அது யூஸ் இல்லாம போயிடுது அப்டிங்கற மாதிரி கொண்டு போனாங்க..

 இந்தப்படத்துக்கு இயக்குநர் எடுத்துக்கிட்ட முயற்சிகள், உழைப்பு பிரம்மிக்க வைத்தது.. 89 கட் ஷாட்ஸ்..  120 கேமிரா ஆங்கிள்ஸ்

உழைப்பு வீண்போகலை.. இந்த வாரத்துக்கான பெஸ்ட் ஃபிலிம், பெஸ்ட் ஆக்டிங்க், பெஸ்ட் கேமரா மேன் என 3 விருதும் ஒரே படமே வாங்குனது 10 மாதங்களூக்குப்பின் இதுவே முதல் முறை


3. குறும்பட இயக்குநர் பெயர் - ஷபி   குறும்படத்தின் பெயர் - இருட்டு


எனக்கு பேய், பிசாசுல நம்பிக்கை இல்லைன்னாலும் அந்த மாதிரி ஹாரர் ஃபிலிம்ஸை ரொம்ப ரசிப்பேன்.. த்ரில்லர் ஃபிலிம், ஹாரர் ஃபிலிம், காமெடி ஃபிலிம் இந்த 3 ம் தான் என் சாய்ஸ்.. ( கில்மா ஃபிலிம்? பப்ளிக் பப்ளிக்)

ஒரு கிராமம்.. அதுல ஆவி இருக்கறதா சொல்லப்படும்  வலையல் காரி வீட்டில் தங்குனா பரிசுன்னு ஒரு பந்தயம்.. 4 ஃபிரண்ட்ஸ் போய் தங்கறாங்க.. நைட் ஃபுல்லா எதுவும் ஆகலை.. விடிஞ்சதும்  அந்த 4 பேர்ல ஒருத்தன் ஒரு இடத்துல விழுந்து கிடக்கறான்.. அவனை விசாரிச்சா அவன் நைட்ல இருந்து அங்கே தான் மயங்கி இருக்கான்னு சொல்றான்.. அப்போ நைட் பூரா அவங்க கூட இருந்தது, பேசுனது எல்லாம் அந்த பெண் பேய் தான் அதுவும் அந்த நண்பன் ரூபத்துல.. உடனே பயந்து போய் அவனை அம்போன்னு அங்கேயே விட்டுட்டு ஓடிடறாங்க..


இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  பேய் தான் வெளில போயிடுச்சு././ இப்போ இவங்க பார்த்தது அவங்க நண்பனைத்தானே..? ஏன் பயந்து ஓடறாங்க?

2. நைட் பூரா நண்பர்களுடன் ஆண் வேடத்தில் இருந்த பெண் பேய் சாதிச்சது என்ன? ஒரு கொலை இல்லை, ஒரு ரேப் இல்லை.. சும்மா கடலை ஒன்லி??


3. இந்தக்கதையின் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? பேய்கள் யாரையும் கொல்லாதுன்னா?

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இந்தக்காலத்துலயும் பேய், பிசாசு எல்லாம் இருக்கா?

 ஏன்? சாவு நடந்துட்டுத்தானே இருக்கு?


2. செயினைக்காணோம்டா..

 இங்கே எங்கேயும் இருக்காதுடா.. நாம முதல்ல இங்கே இருந்து கிளம்பலாம்.. அங்கே போய் தேடிக்கலாம்..



Wednesday, January 18, 2012

நாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -விமர்சனம்

http://www.bestactress.info/wp-content/uploads/2011/06/Keerthi-Chawla-hot-saree-navel.jpg 

நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு இந்த வருஷம் ஒப்பனிங்க்கே சரி இல்லை, நியூ இயர் அன்னைக்கு சண்டே, அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் பொங்கல் என 2 சண்டே அநியாயமா அந்த நிகழ்ச்சி கட்.. அதுக்குப்பதிலா ஒரு மொக்கை புரோக்ராம் போட்டு கடுப்பேத்துனாங்க.. போன வாரம் பார்த்த அந்த நிகழ்ச்சி.. 


1. குறும்படத்தின் பெயர் -  விடுதி - குறும்பட இயக்குநர் பெயர் -  அருண் சக்தி முருகன் ( நாஞ்சில் விஜயன்)

ஓப்பனிங்க் ஷாட் ல பர பர நியூஸ் ஓடுது அதாவது ஒரு பிரபல காலேஜ் விடுதில ஒரு மாணவன் தற்கொலை செஞ்சுக்கிட்டான்.. அதை பற்றி சொல்றாங்க..

காலேஜை காட்றாங்க.. அங்கே 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ்..  அவங்க பண்ற கலாட்டாக்கள், காமெடியா கொஞ்சம் காட்றாங்க.. அவங்க கிட்டே ஒரு பொண்ணு  ( ஏன் ஃபிகரு, ஜிகிடின்னு சொல்லலைன்னா அந்த அளவு பாப்பா ஒர்த் இல்ல ஹி ஹி )

வாலண்ட்ரியா  செல்வா ராகவன் ஆண்ட்ரியா போல் பழகுது.. பாப்பா  திடீர்னு பார்த்தா பாப்பா அந்த 3 பேரையும் கொலை செய்யுது.. 


 இப்போ பாப்பா ஃபிளாஸ்பேக் சொல்லுது.. பாப்பாவோட தம்பி.. கொஞ்சம் பெண்மை சாயல் கொண்டவர்.. அவன் இவன் விஷால் மாதிரி.. அவரை இந்த 3 பேரும் காலேஜ் ல ரேகிங்க் பண்ணி இருக்காங்க.. அவமானம் தாங்காம அவன் தற்கொலை செஞ்சுக்கறான்.. அவன் மரணத்துக்கு காரணமான இவங்க 3 பேரையும் அக்கா பழி வாங்கறதுதான் கதை.. 


இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் எடுக்கற எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கறேன், வில்லன்களை காட்றப்ப ஆடியன்ஸுக்கு அவங்க மேல வெறுப்போ, கோபமோ வரனும், அப்போதான் அவங்க சாகடிக்கப்படறப்ப  ஒரு திருப்தி வரும்.. அவங்க பண்ற காமெடி சீன்லாம் காட்டிட்டு கொலை செய்யப்படறதை காட்னா எஃபக்ட் இருக்காது.. 

3 பேரும் கொலை செய்யப்படும் காட்சி ஓவர் வல்கர்.. 

மனதில் நின்ற ஒரே வசனம் - சீனியர்னா உங்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு?

http://chennai365.com/wp-content/uploads/actress/Keerthi_Chawla/Keerthi_Chawla_006.jpg


2. குறும்படத்தின் பெயர் -  ஒரு ஃபீலிங்க்  - குறும்பட இயக்குநர் பெயர் -  கார்த்திக்

ஓப்பனிங்க் செம காமெடியா இருந்துச்சு.. 2 ஃபிரண்ட்ஸ்.. ஒருத்தன் தம் அடிக்கறான், இன்னொருத்தன் புகை விடறான்,.. அந்த .. ஒருத்தன்   பபிள்கம் சாப்பிடறான், இன்னொருத்தன் குமிழி ( மொட்டுழி) விடறான்.. அவ்ளவ் க்ளோசாம் அடங்கோ...2 பேரும் ஜீரோ மார்க் தான் வாங்கறாங்க.. காலேஜ்ல..


அவ்ளவ் க்ளோசா இருக்கற 2 பேர்ல ஒருத்தன் ஒரு ஃபிகரை ரூட் போடறான்.. மேட்டரை அவ கிட்டே சொல்ல தயக்கம்.. அதனால அவன் ஃபிரண்ட் கிட்டே சொல்லி சொல்ல சொல்றான்.. அவன் போய் அந்த ஃபிகர்ட்ட இந்த மாதிரி இந்த மாதிரி இந்த மாதிரிங்க.. என் ஃபிரண்ட் உங்களை லவ் பண்றான்னு சொன்னதும் ஒழுக்கமான ஃபிகர் என்ன சொல்லனும்? எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு கட் பண்னனும், ஆனா ஃபிகர் சொல்லுது >நான் உங்களை லவ் பண்றேன், அவனுக்காக நீங்க தூது வந்தா எப்படி?ன்னு கேக்குது , அவன் ஷாக் ஆகிடறான்


ஃபிகரோட ஃபிரண்ட் ஜிகிடி கேக்குது ஏண்டி அப்படி சொன்னே? அதுக்கு  ஃபிகர் சொல்லுது, அப்போதாண்டி அவங்க 2 பேரும் அடிச்சுக்குவாங்க.. நம்ம கிட்டே வர மாட்டாங்க.. என்ன லாஜிக்கோ?

அப்புறம் பார்த்தா அந்த 2 பேருக்கும் கிடைக்காத அந்த ஃபிகர் ஒரு டப்பா மூஞ்சி பையனுக்கு கிடைக்குது.. 

வழக்கமான கதைதான், உருப்படியா செஞ்ச விஷயம் படத்துல நடிச்ச அந்த 2 உருப்படிகள் தான் ஹி ஹி 

ரசித்த வசனங்கள்

1. அவனுக்கு லவ்வா? அவனுக்கு ஒழுங்கா வடை சுடக்கூடத்தெரியாது..

2. அவனவன் லவ்வை அவனவனே போய் சொல்லுங்கப்பா... 

3. காதல்ங்கறது ஆயா சுட்ட வடை மாதிரி..  ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைன்னா எவனாவது கவ்விட்டு போயிடுவான், நட்புங்கறது ஆயா மாதிரி , எவனும் கண்டுக்க மாட்டான்..  ( எஸ் எம் எஸ் ஜோக்)


அப்புறம் குறும்படம் இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை படத்துல டயலாக்ஸ் ஓடறப்ப தேவைப்படாம பின்னணி இசை போடாதீங்க. எப்படி வசனம் புரியும்?

http://farm3.staticflickr.com/2088/2343213010_d5a36c9a38_z.jpg?zz=1


 3. குறும்படத்தின் பெயர் -  குவியம்   - குறும்பட இயக்குநர் பெயர் -  கிஷோர்

ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர், அவர் ஒரு ஃபோட்டோ மட்டும் இல்ல, பல ஃபோட்டோஸ் எடுப்பவர்.. ஒரு தடவை அவர் கண்ல, கேமரால எதேச்சையா ஒரு ஜிகிடி மாட்டுது.. அதை க்ளிக் பண்றாரு.. அந்த ஜிகிடி கிட்டே பிட்டை போடறாரு.. நீங்க மாடலிங்க்கா போஸ் தரனும்.. உங்க ஃபோட்டோ பார்த்துட்டு ஒரு பெரிய ஆங்கில பத்திரிக்கை ஓக்கே சொல்லி இருக்குன்னு பிட் போடறார்.. ஜிகிடி அதை நம்பிடுது ( பொதுவா இந்த பொண்ணுங்க உண்மையான பசங்களை நம்ப மாட்டாங்க, பொய் சொல்றவனுக்குத்தான் காலம், அவன் வண்டி வண்டியா பொய் சொல்லுவான், அதை நம்பிடும்ங்க அய்யா ஹய்யோ)


ஃபோட்டோ ஷூட் நடக்குது, பல கோணங்கள்ல படம் எடுக்கறார் ( அரக்கோணம், கும்ப கோணம் இப்படி இல்ல..:)2 பேருக்கும் லவ் க்ளிக் ஆகிடுது..
அப்புரம் ஒரு கட்டத்துல ஒரு விட்டத்துல, ஒரு சதுரத்துல ஹீரோயினுக்கு மேட்டர் தெரிஞ்சுடுதுன்னு , அப்புறம் ஏன் இப்படி கலைஞர் மாதிரி வாய்ல வர்றது எல்லாம் டகால்டியா இருக்கே?னு கேட்க அவர்  அதான் ஹீரோ டக்னு வடிவேல் மாதிரி பல்டி அடிச்சிடறார், உன்னை லவ் பண்ணேன், உன்னை டெவலப் பண்றதுக்காகத்தான் அப்படி பொய் சொன்னேன்கறார்.. உடனே ஜிகிடி சிரிச்சுக்கிட்டே ஓக்கே டன் அப்டினு சொல்லிடுது சுபம்.. ரொம்ப சிம்ப்பிள் லவ் ஸ்டோரி நீட்டா இருந்துச்சு ஹீரோயின் அழகும் , ஹீரோ நடிப்பும் ஓக்கே ரகம்.. 


ரசித்த வசனங்கள்


1. மேரேஜுக்காக 1000 பொய் சொல்லலாம்னு சொல்றாங்க, அப்போ லவ்வுக்காக மட்டும் பொய் சொல்லக்கூடாதா?


2. லவ் ஈஸ் ஸ்வீட் நத்திங்க் -LOVE IS  SWEET NOTHING( அப்டின்னா லவ்வுல ஸ்வீட் தவிர வேற எதுவும் இல்லைன்னு அர்த்தமா? காரம் சாப்பிட மாட்டாங்களா?) 


3. ஒரு நிமிஷம் இருங்க, கூலிங்க் கிளாஸ் போட மறந்துட்டேன் , அது லவ் க்கு ரொம்ப முக்கியம் ஹி ஹி 

மவுன ராகம் படம் மாதிரி ரொம்ப நீட்டா அழகா வந்ததா நடுவர்கள் சிலாகித்தார்கள்


டிஸ்கி - கீர்த்தி ஃபோட்டோஸ் போடலை, அதுக்கு சப்ஸ்டிடியூட்டா கீர்த்தி சாவ்லா ஃபோட்டோ  ... விமர்சனத்தை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும் என்பதை சொல்லும் வகையில் சானியா மிர்சா ஃபோட்டோ


டிஸ்கி  1 -

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3-

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 4 -

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

 

டிஸ்கி  5 -

பட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்


Thursday, December 15, 2011

நாளைய இயக்குநர் -காமெடி , காதல் கதைகள் - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbhj_dm6l6nCmX-G2LI9vKce7p0xM1hYD4f8hXJTd3D9AExTWDnczWLCVGYWKRxIQ1-4WFuo8sBy1c8vNsJknkhhyphenhyphencq97I7NiPs2JKctvGaXGWaEvwy4pKovVKIc9WeG9pHwZxAMoMEjm4/s320/keerthy+jewellery+model.jpg

கலைஞர் டி வி ல வாரா வாரம் ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு  வர்ற நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு நான் ஒரே ஒரு கரெக்‌ஷன் மட்டும் சொல்லிக்கறேன்.. ஜட்ஜா வர்ற கே பாக்கியராஜ், சுந்தர் சி 2 பேரும் கோட் சூட்லதான் ரெகுலரா வர்றாங்க, அது போர்.. இயல்பா பேண்ட் சர்ட்ல வரலாமே?அப்புறம் கீர்த்தி எப்பவும் நைட்டி அல்லது பெட்டிகோட் மாதிரி ஒரு டிரஸ் போட்டுட்டுதான் வர்றாங்க.. அது ஏன்? சேலை, சுடினு டீசண்ட்டா வரலாமே? இன்னைக்கு கீர்த்தி ஏதோ சி டி மாதிரி ஒரு டாலர் செயின் போட்டு வந்தாங்க, அய்யோ ஹய்யோ

கீர்த்தி - உங்களை பொருத்தவரை ஆக்‌ஷன் , காதல் , காமெடி எந்த மாதிரி படம் எடுக்கறது டஃப்?

கே பாக்யராஜ் - என்னை பொறுத்தவரை எல்லாத்துக்குமே மூளையை கசக்க வேண்டி இருக்கு. இன்று போய் நாளை வா மாதிரி காமெடி சப்ஜெக்ட்டுக்கும் சரி, ஒரு கைதியின் டைரி மாதிரி ஆக்‌ஷன் படங்களுக்கும் சரி சீன் ரெடி பண்ண ரொம்பவே மெனக்கெடறோம்..

1. இயக்குநர் பெயர் - பிரசாந்த் - குறும்படத்தின் பெயர் - வடுகப்பட்டி ராம்சாமி

ஒரு காலேஜ் ஹாஸ்டல் ரூம். அதுல 3 ஃபிரண்ட்ஸ் தங்கி இருக்காங்க.. அவங்க ரூம்க்கு புதுசா ஒரு ஃபிரண்ட் வர்றான்.. அவன் தான் வடுகப்பட்டி ராம்சாமி.. அண்ணன் செம ராசியான ஆளு.. அவர் முகத்துல விழிச்சுட்டு போனதால்  ஒருத்தன் சேற்றில் விழுந்துடறான்.. இன்னொருத்தன் தன் காதலியின் அண்ணனிடம் அடி வாங்கறான். 3 வது ஆளு தன் ஆள் கிட்டே லவ் பிரப்போஸ் பண்ணி அது ரிஜக்ட் ஆகுது.. 3 பேரும் சேர்ந்து அந்த ராம்சாமியை துரத்தி விட்டுடறாங்க.. 

நல்லா காமெடியாத்தான் இருக்கு.. ஆனா இது ஒரு சம்பவம் மாதிரிதான் இருக்கே ஒழிய  ஒரு கதையாவோ, குறும்படமாவோ பிரமோட் பண்ணாம இருக்கு.. ஃபினிஷிங்க் டச் இல்ல. முழு நிறைவு வர்ல. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

2.  இயக்குநர் பெயர் - ஷஃபி  - குறும்படத்தின் பெயர் -தூவானம்

ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி.. ஒரு அம்மா அப்பா.. 18 வயசு பையன்.. ஓப்பனிங்க்ல அம்மா தைரியமா சொல்லிடும்மா என்கிறான் பையன்.. ஏதோ அவனோட லவ் மேட்டரை அவனோட அப்பா கிட்டே சொல்ல சொல்றதா ஒரு பில்டப். அப்புறம் பார்த்தா அம்மாவோட ஃபிளாஸ்பேக் காதல் ...அவங்க லவ் பண்ற பையனை அடிச்சு மிரட்டி துரத்திடறாங்க. அவங்களால தைரியமா நின்னு காதலை கவுரவிக்க முடியலை.. காதலனுக்கு வேற பக்கமும், இவங்களூக்கு வேறொருவர் கூடவும் மேரேஜ் ஆகிடுது.. இப்போ தன் பையனின் க்ளாஸ்மேட்டின் அப்பா தான் தன் முன்னாள் காதலன்கரதை தெரிஞ்சுக்கிட்டு  அவனை சந்திக்க மன்னிப்பு கேட்க ஆசைப்படறா.. ஆனா முன்னாள் காதலன் இறந்துட்டதா தகவல் தெரிய வருது..

இந்த கதைல மேக்கிங்க் ஸ்டைல். வசனம், எல்லாத்தையும் விட பிரமாதமான விஷயம் என்னான்னா அம்மாவா நடிச்ச மேடம் , அவங்க ஃபிளாஸ்பேக்ல வர்ற பொண்ணோட முகச்சாயலுடன் 100% ஒஹ்த்டுப்போற மாதிரி ஆர்ட்டிஸ்ட்டை தேடி கண்டு பிடிச்சதுதான்.. ( ஒரு வேளை அம்மா, பொண்ணாகவும் இருக்கலாம்.. ) ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷனுக்காகவே இந்த பட டைரக்டரை பாராட்டலாம் வெல்டன்..

3. இயக்குநர் பெயர் - பால மனோகர்  - குறும்படத்தின் பெயர் -காலேஜ் திருட்டு


ஒரு காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண் மாடியிலிருந்து குதிச்சு
தற்கொலை பண்ணிக்குது. ஆனா,யாருக்கும் காரணம் தெரியலை. அது போலீசு கேசாகி எல்லா பசங்க கிட்டயும் விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வரார்.
எல்லா பசங்ககிட்டயும் விசாரிக்குறார். எல்லார்மே அந்த பொண்ணு ரொம்ப நல்லபொண்ணுன்னு சொல்லி குட் சர்டிஃபிகேட் குடுக்குறாங்க. மண்டைய பிச்சுக்குற போலீஸ்காரர், அந்த பொண்ணோட க்ளோஸ் ஃப்ரெண்டை கூட்டிக்கிட்டு போய் விசாரிக்குறார்.

அட, ஏம்பா எல்லாரும் ஆர்வமாகுறீங்க, அவர் அந்த மாதிரி போலீஸ்கார்ர் இல்லை. இவர் காக்க காக்க சூர்யா, வேட்டையாடு விளையாடு கமல், தங்க பதக்கம் சிவாஜி, மூன்றுமுகம் ரஜினி போல ரொம்ப நல்ல போலீஸ்காரர். பாப்பாவும் எல்லாரையும் போல நல்ல பொண்ணு, சொக்க தங்கம்னு சர்டிஃபிகேட் குடுக்குது. அவ ரூமுல தனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்குறதாகவும், அதன்படி பார்த்தால், நீதான் அவ சாவுக்கு காரணம்னு பிட்டை போடுறார்(இது அந்த பிட்டோ,  பரிட்சை பிட்டோ இல்லை).

உடனே பாப்பா அழுதுக்கிட்டே தான் காரணம் இல்லைன்னும் ----ன்ற பையந்தான் காரணம்னு கொசுவர்த்தி ஏத்துது. அட அதான்பா பிளாஸ்பேக் ஓட்டுது. ஃப்ரெண்டாகி கடலை வறுக்க ஆரம்பிச்சு இருக்கு. வறுத்த கடலை ரொம்ப தீய்ஞ்சு போய் அந்த பையனை மத்த பொண்ணுங்க கூட பேசாத, கடலை போடாதே, சைட்டிக்காதேன்னு சொல்லியிருக்கு. பெத்தவங்க சொல்லியே கேக்காத நாம ஃபிகர் சொல்லியா கேட்க போறோம். அதுல கோவமாகி அந்த பையன் பாப்பாக்கிட்ட என்னை ஏன் இப்படிலாம் இம்சை
பண்ணுறே. உன்கூட மட்டும்தான் ஃப்ரெண்டா இருக்கனும்னு ஏன் என்னை
நச்சரிக்குறே, நீ செத்தாதான் நான் நிம்மதியா இருப்பேன்னு சொல்லி கோவமா
போய்டுறான். அதனால மனம் வெறுத்து போய் அந்த பொண்ணு மாடியிலிருந்து தற்கொலை பண்ணிக்கிட்டான்னு அவ ஃப்ரெண்ட் சொல்ல கேஸ் ஃபைலை மூடிடுறாங்க.

 லாஜிக் மிஸ்ஸிங்க்.. இதுக்கெல்லாமா தற்கொலை செஞ்சுக்குவாங்க? ஆனா ஒரு இன்வெஸ்டிகேஷன் படத்தை டைரக்ட் பண்ற சாமார்த்தியம் அந்த இயக்குர்ட்ட இருக்கு.. நல்ல ப்ளாட் தான் அமையலை.. 


 4.  - குறும்படத்தின் பெயர் -அகலாது - இயக்குநர் பெயர்- சீனிவாசன்


ஓப்பனிங் சீனில் இன்னிக்கு நமக்கு கல்யாண நாள். கல்யாண நாளைக்கு இங்க வரனும்னு தோணுச்சுன்னு வயசான பெருசு ரெண்டுங்க பேசிக்கிட்டு இருக்காங்க. பேசிக்கிட்டு இருக்கும்போதே தங்கள் இளமைக்கால நாட்களுக்கு போகுது அவங்க நினைவு....,

சுதந்தர போராட்ட காலத்தில் அவங்களுக்கு டீனேஜ். அப்போ அந்த ஹீரோ காந்தியோடு சேர்ந்து ரொம்ப தீவிரமா போராடுறார். அவர் வீரத்தில் மயங்கி ஹீரோயின் காதலிக்குறாங்க.  ஆனால், ஹீரோவுக்கும் மனசுல காதல் இருந்தாலும், சுதந்திரத்திற்கு அப்புறம்தான் கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குறதை ஹீரோயினோட அப்பா பார்த்துடுறார். வீட்டுக்கு வந்து  இனி நீ சுதந்தர போராட்டம் அது இதுன்னு சொல்லி வெளிய போக்க்கூடாது. உடனே மாப்பிள்ளை பார்த்து உனக்கு கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

ஹீரோயின் ஹீரோக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி, எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லைன்னும், ஆனால், அதுக்காக, நீங்க, உங்க கொள்கையை விட்டு குடுக்க வேணாம், நான் கஸ்தூரிபாய் தலைமையில நடக்குற போராட்டத்துல கலந்துக்க நம்ம ஊரு பொண்ணுங்க போறாங்க. அவங்களோடு நான் போய்க்குறேன். அப்படி போகனும்னா எனக்கு பணம் வேணும். அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணி குடுங்கன்னு கேட்குறாங்க.


 ஹீரோவும் எங்கெங்கெல்லாமோ கேட்டு பார்க்குறார். ஆனால், பணம்தான் கிடைக்கலை. கடைசியா ஒருத்தர் சொல்றார், தன்கிட்டயும் பணமில்லை ஆனால், இந்த ஊர் பண்ணையார் பொண்ணு கல்யாணம் ஆகி கைக்குழந்தையோடு விதவையாயிருக்கு. அதை கட்டிக்கிட்டால், உனக்கு பணம் கிடைக்கும்னு வழிக்காட்டுறார். 

சரின்னு சொல்லி பணம் வாங்கி ஹீரோயின்கிட்ட குடுத்துட்டு, விதவை பொண்ணை கட்டிக்கிட்டு வண்டியில வரும்போது எதிர்க்க வண்டியில ஹீரோயினும் வேற ஒருத்தரை கல்யாணம் கட்டிக்கிட்டு வராங்க.
என்ன ஏதுன்னு விசாரிச்சால், போராட்டத்துக்கு கிளம்புகையில் அப்பாக்கிட்ட மாட்டிக்கிட்டதால்  கல்யாணம் கட்டிக்கிட வேண்டியதாகிடுச்சுன்னு சொல்லி பிளாஸ்பேக்கை முடிச்சு நிகழ்காலத்துக்கு வராங்க.


சரி அவர் காத்துக்கிட்டு இருப்பார்ன்னு பாட்டியும், அவளுக்கு மருந்து வாங்கனும்னு தாத்தாவும் எதிரெதிர் திசையில் பிரியுறதா காட்டுறாங்க.
கதையும் நல்ல கதை, டெக்னிக்கல் விஷயம்,  நடிகர்கள் தேர்வு, இசைன்னு பக்காவா இருந்ததால், இந்த படத்துக்கு பெஸ்ட் ஃபிலிம் அவார்டும், பெஸ்ட் டெக்னிஷியன்சுக்கான அவார்டும் கிடைச்சுது. 

டிஸ்கி - கீர்த்தி ஜ்வல்லரி விளம்பரத்துக்கு  எடுத்த மாடல் ஃபோட்டோவை கீர்த்திக்கு சம்பர்ப்பிக்கிறேன்

Tuesday, November 29, 2011

நாளைய இயக்குநர் - லைட் காமெடி , சைட் ஃபிகர்ஸ் - விமர்சனம்

Art Wallpapers
தனது 28 வருட வாழ்க்கையில் முதல் முறையாக தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி, படிய தலை சீவி  ஓரளவு டீசண்ட்டான டிரஸ்ஸுடன் ( மெரூன் கலர் நைட்டி கம் மிடி பட் லோ யூ நெக் ஹி ஹி ) வந்த தொகுப்பாளினி கீர்த்தி  சிரிச்ச முகத்தோட இருந்தார்.. இதை ஏன் பர்ட்டிகுலரா, பைனாகுலரா, டிராகுலரா சொல்றேன்னா டி வி ல வர்ற ஃபிகருங்க எல்லாம் பிசி (busy) போல யாருமே தலையே சீவறதில்லை.. அது ஒரு ஃபேஷன் மாதிரி ஆகிப்போச்சு.. நான் ஒரு ஃபிகர்ட்ட காரணம் கேட்டேன் (ஃபோன்ல தான் நோ ட்ரீம்)அது ஆண்களுக்கு இணையா நாங்களும் வளர்றோம் இல்லையா? அதான் அவங்க மாதிரியே பரட்டையா.. ஹி ஹி ன்னாங்க அவ்வ்வ்வ்


1. குறும்படத்தின் பெயர் - கணக்குப்பண்ணுவது எப்படி? -இயக்குநர் -ஸ்ரீகணேஷ்

 காலேஜ் கலாட்டா கதை தான், ரொம்ப லைட்டா சொல்லி இருக்கார்.. அதாவது ஹீரோவுக்கு கணக்கு சப்ஜெட்னா ஆவாது.. கணக்கு , பிணக்கு , ஆமணுக்கு  , புண்னாக்கு  டைப்... லெக்சரர் செம காண்ட் ஆகறார்.. ஒரு சம்  (SUM)மை குடுத்து நாளை இதை போர்டுல எல்லார் முன்னாலயும் சால்வ் பண்ணிக்காட்டுனா நீ தப்பிச்சே, இல்லைனா அவ்ளவ் தான்னு மிரட்றார்.. ஏன்னா அவர் க்ளாஸ்ல சீரியஸா பாடம் நடத்தறப்ப ஹீரோ தூங்கிட்டு இருந்திருக்கான்.. 


இனி என்ன பண்றதுன்னு பையன் யோசிச்சுட்டே போறப்ப ஒரு ஃபிகர் அவன் ரூட்ல என்ட்ரி குடுக்குது.. தாமினி டீச்சரா மாறி ( ஐஸ்வர்யா ராய் நடிச்ச கில்மா படம் ஹி ஹி ) இலவச டியூஷன் சொல்லி தர்றாப்ல.. ஆம்பள வாத்தியார் சொல்லிதர்றப்ப தூங்கிட்டு இருந்த பையன் ஃபிகர் சொல்லித்தர்றப்ப நல்லா கவனமா கவனிக்கறான் பாடத்தை..

க்ளாஸ் ரூம்ல கரெக்டா அந்த கணக்கை போட்டுடறான், என்னா சோகமான ட்விஸ்ட்னா வாத்தியார் இப்போ தூங்கிடறார்.. அவ்வ்வ்வ்வ்

படத்தில் வந்த ரசனையான  வசனங்கள்

1. வெளில என்ன வெய்யில் அடிச்சாலும், ராமானுஜம் சார் க்ளாஸ்னா காத்து வாங்கும். ...

2. கணக்கு பாடமே எனக்கு கொடுமை தான், இந்த வாத்தியார் அதை விடக்கொடுமை..

3. இவன் ஏன் இங்கே வந்தான்?

அவனுக்கு தூக்கத்துல நடக்கற வியாதி,அதான் தெரியாம காலேஜ் வந்துட்டான்..

4.  பொண்ணுங்க அட்வைஸ் பண்ணுவாங்களே தவிர ஹெல்ப் பண்ண மாட்டாங்க..

5. அட்வைஸ் பண்றது ஈஸி, ஆனா அதை அப்டேட் பண்றது கஷ்டம்..


பாக்யராஜ் கமெண்ட் - வாத்தியார் சொல்லித்தர்றதை விட ஒரு பொண்ணூ சொல்லிக்குடுத்தா நல்லா மண்டைல ஏறும்..

சுந்தர் சி கமெண்ட் -  இளமைக்குறும்பு + திமிர் , நல்ல வந்தது படம்.. ஓவர் ஆல் எண்ட்டர்டெயிண்மெண்ட் காமெடி





2. குறும்படத்தின் பெயர் - தோற்ற மயக்கம் ஏனோ?  இயக்குநர் - முருகப்பிரகாஷ்

ஒரு வித்தியாசமான ட்விஸ்ட் உள்ள லவ் ஸ்டோரி.. பார்க்ல ஒரு லவ் ஜோடி உக்காந்திருக்கு.. 2 பேரும் ஒரே டைம்ல லவ்வை வெளிப்படுத்திக்கறாங்க அப்போத்தான்.. அடடே.. என்ன ஒரு ஒற்றுமைன்னு அவங்க சிலாகிக்கும்போது... ஒரு ஃபிளாஸ் பேக்...

அந்த ஃபிகர் தனியா வாக் வித் எ சாங்க்.. அந்த பையன் வாக் வித் எ சாங்க்.. 2 பேரும் பார்க் வர்றப்பதான் தெரியுது... அவன் லவ் பண்ற ஃபிகர் வேற ஒரு பையன் கூட, அந்த ஃபிகர் லவ் பண்ற பையன் வேற ஒரு பொண்ணோட .. நல்ல ட்விஸ்ட்.. இப்போ நிராகரிக்கப்பட்ட அதாவது காதலை வெளிப்படுத்த தயங்குன 2 பேரும் அவங்களுக்குள்ள காதலிச்சுக்கறாங்க , 2 பேருக்கும் புக்ஸ் ரீடிங்க் ஒரு ஒற்றுமை..

படிக்கும்போது கொஞ்சம் குழப்பமா இருந்தாலும் காட்சிப்படுத்துனது அழகு..  பார்க்ல லவ் ஜோடிங்க உக்காந்திருக்கும்போது அவங்க என்ன டிரஸ் போட்டிருந்தாங்களோ அதே கலர் டிரஸ்ல இந்த ஜோடியையும் பொட வெச்சது நல்ல உத்தி..

கவுதம் வாசுதேவ் மேனன் பட பாடல் மாதிரி நல்லா விசுவல் டேஸ்ட்டோட பாட்டு இருந்துச்சு அது ஒரு எக்ஸ்ட்ரா பிளஸ்..பெஸ்ட் மியூசிக் அவார்ட் வாங்கிச்சு




3. குறும்படத்தின் பெயர் - ஒரு தலை ராகம்  இயக்குநர் -ராகேஷ்

ஏதோ வித்தியசமான கருன்னு இயக்குநர் நினைச்சு பணி இருக்கார் சரியா எடுபடல..  ஒரு காலேஜ்ல கடைசி நாள்  ..ஸ்வாதி மாதிரி ஒரு ஃபிகர் நடக்குது, ஓடி வருது .. பேக் டிராப்ல ஒரு ஆணின் குரலில் காதல் பாடல் ஒலிக்குது.. வசனமே இல்லை.. 7 நிமிஷம் பூரா அந்த ஃபிகர் புகழ் பாடல் லைன்ஸ் மட்டும் தான்.. அப்புறம் பார்த்தா அந்த காலேஜ் சுவர் தான் அந்த பாட்டை பாடுனது மாதிரி.. காதல் என்பது உயிருள்ள மனிதருக்கு மட்டும் இல்ல..  உயிர் அற்ற கான்கிரிட் சுவருக்கும் உண்டுன்னு சொல்லி முடிக்கறாங்க.. எடுபடலை.. சாரி மிஸ்டர் டைரக்டர்..

இது காலேஜ் கதையா? காலேஜே கதையா?ன்னு  பாக்யராஜ் கிண்டல் அடிச்சார்.. சாங்க் நல்லாருந்தது..




4. குறும்படத்தின் பெயர் -அட்ரா அவளை ஒதைடா அவளை , இயக்குநர் -கே பாக்யராஜ் ( இவர் வேற ஆள்)


 டைட்டில்ல டைமிங்கா ஹிட் பாட்டு லைன் இருந்தப்பவே நினச்சேன் படம் செமயா இருக்கும்னு.. எதிர்பார்ப்பு சரிதான்.. ஒருத்தன் ஒரு ஃபிகரை காதலிக்கறான்..துரத்தறான் ஐ லவ் யூ சொல்றான்.. அது பளார்னு அறையுது.. இவன் சலிக்காம லவ்வறான்.. அப்புறம் போனாத்தொலையுதுன்னு  அதுவும்  லவ் பண்ணுதுதான்.. அப்புறம் ஒரு சின்ன ஊடல்.. காதலியோட பிறந்த நாளை அவன் மறந்துட்டு வாழ்த்து சொல்லாம விட்டுடறான்.. உடனே ஃபிகர் கழட்டி விட்டுடுது.. அதாவது அவன் லவ்வை கழட்டி விட்டுடுது..அவ அவனை திட்டறா.. லவ் டமால்.. இவன் செம காண்ட் ஆகறான்.. லவ் எல்லாம் சரி வராது, யாரும் லவ் பண்ணாதிங்கங்கறான்./. அப்புறம் அந்த ஃபிகரே வந்து சாரி சொல்லுது.. உடனே இவன் பல்டி அடிச்சுடறான்.. ஃபிகர் கூட சேர்ந்துடறான்..

ஜாலியான கதை .. மேக்கிங்க் ஸ்டைல் செம..

ரசித்த வசனங்கள்

1.  பசங்களுக்கு 13 வயசானாலே  பொண்ணுங்களை ரொம்ப பிடிச்சுடுது..

2.  அவ்வ்வ்வ்வ், செம ஃபிகர்டா... அப்டினு சொல்ல முடியாட்டாலும் சுமாரான ஃபிகர் தான்.

3. அஞ்சாவது தடவையா அறை வாங்குன பிறகுதான் அவ பேரு அஞ்சலைன்னு தெரிய வருது.. அவ்வ்வ்

4.  ஃபேஸ்புக்ல சர்ச் பண்ணுனா அஞ்சலைங்கர பேர்ல ஏகப்பட்ட ஆண்ட்டிங்க ஆன்சர் பண்றாங்க, இவளை காணோம்..

5. சூப்பர் ஃபிகரை கரெக்ட் பண்ண பிறந்தவன்னு உன்னை பார்த்ததுமே உங்கம்மா முடிவு பண்ணி இருப்பாங்களே?

6. லவ்வர் பர்த்டேவை எவனாவது மிஸ் பண்ணுவானா?

இதுல ஹீரோ ஹீரோயின் நடிப்பு ரெண்டும் செம..

இதுதான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு, அப்புறம் பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட்டா ஹீரோவுக்கு ஒரு அவார்டு..

Wednesday, November 16, 2011

நாளைய இயக்குநர் - காலேஜ் ,காதல், பேய் கதைகள் - விமர்சனம்

Best Ever Quotes
viewer


என்னைக்கும் பொட்டு வைக்கற பழக்கம் இல்லாத கீர்த்தி  இன்னைக்கு ஒயிட் &ஒயிட்  கலர் நைட்டியா? கவுனா?னு கணிக்க முடியாத ஒரு டிரஸ் போட்டுட்டு வந்தாங்க.. மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வர்றப்ப மட்டும்  டீசண்ட்டா வர்றாங்க.. இந்த நிகழ்ச்சில மட்டும் பேட்டா மிஸ்ஸிங்க் போல..


1.இயக்குநர் பெயர் -அருண் பிரசாத் - குறும்படத்தின் பெயர் - ஃபிளாஷ்பேக்


ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு மரத்தடில ஒரு பெண் நிருபர் ஒரு வெற்றி பெற்ற சினிமா இயக்குநருடன் காணும் நேர் காணல் மாதிரி காட்சி.. அதுல உங்க காலேஜ் லைஃப்ல நடந்த மறக்க முடியாத அனுபவம் சொல்லுங்க சார்.. அப்டினு கேட்க கட் பண்ணி காலேஜ் கேம்பஸ்க்கு கதை நகருது..

ஒரு ஃபிரண்ட்ஸ் குரூப்...ஒரு குறும்படம் எடுக்கறதுக்கு ஸ்டோரி டிஸ்கஷன் பண்றாங்க.. யார் ஹீரோ ,யார் ஹீரோயின் அப்டினு முடிவாகுது,.. ஷூட் பண்றப்ப ஹீரோவா நடிக்கறவர் ஹீரோயினா நடிக்கறவர்ட்ட ஐ லவ் யூ சொல்லற சீன்ல அவர் சரியா  பர்ஃபார்ம் பண்ணாததால டைரக்டர் நடிச்சுக்காட்றேன்கற பேர்ல அந்த ஃபிகர்க்கு ரூட் போடறார்..

அந்த ஷாட் கட் பண்ணுனா அதுவும் , இப்போ பேட்டி எடுக்கற ஷாட்டும் எல்லாமே இன்னொரு ஷூட்டிங்க்னு தெரியுது.. க்ளைமாக்ஸ்ல “ என்ன தாண்டா சொல்ல வர்றீங்க?” அப்டினு அவங்களே அவங்களை எள்ளல் பண்ணிக்கற மாதிரி முடியுது..

ஏதோ காமெடியா ட்ரை பண்ணி இருக்காங்கனு தெரியுது.. ஆனா கம்ப்ளீட் ஆகலை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

கே பாக்யராஜ் அவரோட மலரும் நினைவுகள்ல ஒரு சம்பவம் எடுத்து விட்டாரு.. சுவர் இல்லாத சித்திரங்கள்ல இதே மாதிரி ஒரு சீன் வரும்.. அதாவது ஷூட்டிங்க் ஸ்பாட்ல ஹீரோவுக்கு நடிப்பு சொல்லித்தர்றேன் பேர்வழின்னு டைரக்டர் ஹீரோயினுக்கு ரூட் விடுவாரு.. அப்போ கவுண்டமணி பஞ்ச் குடுப்பாராம்.. ஹீரோயினை அடிக்கடி கட்டிப்பிடிக்கறதுக்காகவே ஷாட் ஓக்கே இல்லைனு ஹீரோவை குறை சொல்லி டெமோ காட்ற சாக்குல அண்ணன் உள்ளே புகுந்து விளையாடறாரு,..னு..

சுந்தர் சி கமெண்ட் செஞ்சப்போ ஃபேமஸ் டயலாக்ஸை குறும்படத்துல அடிக்கடி வைக்காதீங்க.. போர் அடிச்சிடும்.. உதாரணமா இந்த “ கண்ணா, லட்டு திங்க ஆசையா?” டயலாக்கை அடிக்கடி டோண்ட் யூஸ்...அப்டின்னாரு. அதே மாதிரி ஃபேமஸான பழைய ஹிட் சாங்கை லவ் சீனுக்கு யூஸ் பண்றப்ப ஒரே மியூசிக்கை டோண்ட் ரிப்பீட்னாரு.. எல்லாரும் நோட் பண்ணிக்குங்கப்பா.. .

viewer6

2. இயக்குநர் பெயர் - அஸ்வின் -- குறும்படத்தின் பெயர் - உனக்காகவே வாழ்கிறேன்

ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் தான் பாஸ் ஆவமா? ஃபெயில் ஆவமா?ன்னு தெரிஞ்சுக்க ஆவி அமுதா மாதிரி ஒரு ஆவிகளிடம் பேசுற மீடியா கிட்டே வர்றான்.. அவனுக்கு பதில் சொல்றதும் ஒரு ஆவிதான்..அப்போ ஒரு ஃபிகர் பேய் கிராஸ் பண்ணுது அந்த இடத்தை.. உடனே பதில் சொல்ற வேலையை பாதிலயே விட்டுட்டு அந்த ஃபிகர் பேய் பின்னால இந்த ஆண் பேய் போகுது.. ஆவிகளின் லீடருக்கு செம கடுப்பு.. உன் வேலையை ஒழுங்கா செய்யாம பேய் பின்னால சுத்தறியேன்னு.. திட்றார்..

உடனே மனசொடிஞ்சு போன அந்த ஆண் பேய் தன் நண்பன் பேய் கிட்டே புலம்பறான்.. அப்படியே அந்த ஃபிகர் பேய் பற்றி விசாரிக்கறான்.. அது ஒரு கொலை செய்யப்பட்ட ஆவிங்கறான்.. அடடான்னு இரக்கப்பட்ட ஆண் பேய் அந்த ஃபிகர் பேய் பின்னாலயே சுத்தறான்.. அந்த ஃபிகர் பேய் ஒரு ஸ்விம்மிங் பூல்ல  ஒரு லவ் ஜோடியை முறைச்சு பார்க்குது..

யாரும் நிமிர்ந்து உக்காராதீங்க.. இந்த சீன்ல நோ சீன்.. ( நான் டைரக்டரா இருந்தா அந்த லவ் ஜோடி ஸ்விம்மிங்க் டிரஸ்ல இருக்கற மாதிரி ஒரு கிளாமர் சீன் வெச்சிருப்பேன். ( டேய் நாயே, அதான் ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சிருக்காங்க.. )

அந்த லவ் ஜோடில ஆண் தான் இப்போ இருக்கற பெண் பேயோட முன்னாள் லவ்வர்.. அவன் அமைதிப்படை சத்யராஜ் மாதிரி அவளுக்கு அல்வா குடுத்து கொன்னுடறான்.. அதே நிலைமை தானே இப்போ அவன் லவ்வற பொண்ணுக்கும் வரப்போகுதுன்னு இந்த பெண் பேய்க்கு மனசு சரி இல்லை..

உடனே அந்த ஆண் பேய் ஆவிகளின் தலைவன் கிட்டே போய் இந்த மாதிரி இந்த மாதிரி . ஒரு பொண்ணோட லைஃப் கெடப்போகுது.. அதை காப்பாத்தனும்னு ஐடியா கேட்கறான்.. உடனே ஆவிகளின் தலைவர்க்கு கோபம் வந்துடுது.. இதெல்லாம் நம்ம சக்திக்கு மீறுன விஷயம்,.. பிரதமர் மன் மோகன் சிங்க் மாதிரி வேடிக்கை மட்டும் தான் பார்க்கனும், சுப்ரமண்யம் சாமி மாதிரி ஆடாதேன்னு அட்வைஸ்,, 



ஆனா அந்த ஆண் பேய்  கேட்கலை..அது போய் அந்த சீட்டிங்க் லவ்வர் ஆணின் உடம்புல புகுந்து கில்மாவா அந்த ஃபிகர்ட்ட பேசறான் - வா ரூமுக்கு போலாம்னு.. உடனே அந்த ஃபிகருக்கு கோபம் வந்துடுது,.. கோவிச்சுக்கிட்டு போயிடுது..  இந்தக்காலத்துல இப்படி ஒரு ஃபிகர் இதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு போகுமா?ன்னு லாஜிக் மிஸ்டேக் சொன்னா அப்புறம்  பெண் சங்கங்கள், மாதர் சங்கங்கள் ( 2ம் 1 தானே?) என்னை கும்மு கும்முனு கும்மி விடும் அபாயம் இருப்பதால் நோ கமெண்ட்ஸ்..

இதை பார்த்த அந்த பெண் பேய்க்கு சந்தோஷம் .. எனக்காகத்தானே இப்படி செஞ்சே.. தாங்கஸ்னு சொல்லி அவனை லவ்வுது.. இந்த மேட்டர் ஆவிகளின் தலைவனுக்கு தெரிஞ்சு செம காண்டாகறார்.. நம்ம ஆஃபீஸ் மேனேஜர் எதுக்கெடுத்தாலும் காச் மூச்னு கத்துவாரே அப்படி கத்தி இப்படி செஞ்சதுக்கு தண்டனையா நீ பூமில போய் இன்னொரு பிறப்பெடுக்கனும்கறார்..

பொதுவா ஒரு காலேஜ் கிளாஸ்ல நம்ம லவ்வர் வெளில போனா அல்லது லெக்சரர் வெளீல அனுப்பிட்டா நாம என்ன செய்வோம்? ஏதாவது சாக்கு வெச்சு கலாட்டா பணி அதே மாதிரி நாமும் வெளீல வந்துடுவோம் தானே.. அதே போல் அந்த பெண் பேய் என்ன பண்ணுது.. தன்னோட முன்னாள் லவ்வர் உடம்புல புகுந்து அவன் தற்கொலை பண்ணிக்கற மாதிரி பண்ணுது.

ஒரே கல்லுல 2 மாங்காய்..பழிக்கு ப்பழி வாங்குன மாதிரியும் ஆச்சு.. இதான் சாக்குனு பூமில பிறப்பெடுன்னு ஆவிகள் தலைவன் தண்டனை குடுத்ததும் அந்த பெண் பேய் பேபியா மாறி அந்த ஆண் பேய் பக்கத்துல (இப்போ அந்த ஆண் பேயும் ஒரு குழந்தையா) இருந்து சிரிக்குது.. குஷி படத்துல வர்ற ஓப்பனிங்க் சீன் மாதிரி இந்தப்பட க்ளை மாக்ஸ்,.

நல்ல வித்தியாசமான ஃபேண்டஸி கதைதான்.. ஃபர்ஸ்ட் பிரைஸ் இதுக்குத்தான்.

ரசித்த வசனங்கள்

1. நான் செத்தாக்கூட உருப்படமாட்டேனு எங்கம்மா அப்பவே சொன்னாங்க..

2. தூக்கில் தொங்கும் ஆள் கடைசி கட்ட சாங்க் - நான் போகிறேன் மேலே மேலே ..

3. நான் உயிரோட இருந்தாக்கூட இவ்ளவ் சந்தொஷம் கிடைச்சிருக்காது..

4. ஹாய்.. செல்லம் , ரூமுக்குப்போலாமா?

ஸ்டுப்பிட்....


அப்போ இங்கேயேவா?

டாமிட்

போடி. நீ போனா இன்னொருத்தி..



viewer8
3 -இயக்குநர் பெயர் - ராமானுஜம் - குறும்படத்தின் பெயர் - கால் ஏஜ் ( காலேஜ்)

காலேஜ்னாலே ராகிங்க் பண்றது சகஜம் தானே.. ஒரு காலேஜ்ல 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ் ஒரு ஜூனியர் பையனை ராகிங்க் பண்றாங்க.. அவன் பார்க்க போங்கானாட்டம்  இருக்கான்.. இந்த 3 பசங்களும் என்ன தான் பார்க்க ரவுடிக மாதிரி இருந்தாலும் ஒரு ஃபிகர் கிட்டே எப்படி புரோப்பஸ் பண்றதுன்னு தெரியாம இருக்காங்க.. ( அது தெரிஞ்சா நாமளும் யாரையாவது லவ்வி இருப்போமே?)

3 பேரும் ஒரே ஃபிகரை ரூட் விடறாங்க, ஆனா யாருக்கும் அது செட் ஆகலை.. அது கூடப்பரவால்ல. அவங்களை மனுஷனாக்கூட மதிக்கலை.. ( இதெல்லாம் நமக்கு சாதாரணம்ப்பா.. )

அப்புறம் பார்த்தா அந்த 3 பேரும் ராக் பண்ணுனாங்களே ஒரு தகர டப்பா தலையன் ( நன்றி - கவுண்டமணி) அவன் தான் லவ்வறான், பாப்பாவும் அவனை லவ்வுது.. இதைத்தான் சஸ்பென்ஸ்னு நினைச்சுட்டார் போல.. ஹா ஹா நாங்க தான் பல கதைல இதை பார்த்துட்டமே..

ஹீரோயினா நடிச்ச ஃபிகர் நல்ல கலர், முக வெட்டு ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை குறை சொல்லி இருக்கோம்?)

ரசித்த வசனங்கள்

1. என்ன பார்க்கறே? இவ்ளவ் அழகான பையன் லவ் பண்றானே?ன்னா?
ம்ஹூம்,நீயெல்லாம் லவ் பண்றியே.. அதான் பார்த்தேன்..

2. விட்றா விட்றா.. பொண்ணுங்க எல்லாம் மரத்துல இருந்து உதிர்ற இலை மாதிரி,, நாமெல்லாம் மரத்தோட ஆணி வேர் மாதிரி.. இந்தப்பொண்ணு போனா வேற பொண்ணு..  ( அதானே..  ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதையை தமிழன் என்னைக்கும் மறக்க மாட்டானே?)

viewer1

4. இயக்குநர் பெயர் - குகன்  - குறும்படத்தின் பெயர் - காற்றில் கலந்து வா

ஒரு ஊர்ல ஒரு ஆஃபீஸ்.. அந்த ஆஃபீஸ்ல ஒரு ஃபிகரு.. ஏன் ஒரே ஒரு ஃபிகர்தான் அங்கே இருக்குன்னு என்னை கேட்காதீங்க? ஏன்னா நானும் யார்ட்டயும் அந்த கேள்வியை கேட்க முடியாது..அந்த 70 மார்க் ஃபிகர்க்கு அநாமதேய ஃபோன் கால்ஸ் வருது.. சாதாரண டொக்கு ஃபிகருக்கே நம்மாளுங்க ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ணுவானுங்க.. நல்ல ஃபிகர் கிடைச்சா விடுவானுங்களா? அந்த ஃபிகருக்கு செம கோபம்.. யார்றா நீ? எதுக்கு சும்மா என்னை டார்ச்சர் பண்றே?ன்னு கேக்குது..

ஆனா அவன் டீட்டெயில்ஸ் எதுவும் சொல்லலை.. ( சொன்னா ஆள் வெச்சு அடிப்பாங்கன்னு தெரியுமே.. ) அவ காபி குடிக்கறதைக்கூட கரெக்ட்டா சொல்றான்.. உடனே ஃபிகர் கேக்குது.. நீ இந்த ஆஃபீஸ்லயா ஒர்க் பண்றே? உன்னை பார்க்கனுமே?அப்டிங்குது.. இல்ல.. என்னை உன்னால பார்க்க முடியாது அப்டினு சொல்றப்பதான் அந்த டார்ச்சர் பண்ற பார்ட்டி பேய்னு நமக்குத்தெரியுது.. அந்த ஃபிகரு டென்ஷன் ஆகி உன்னை இப்போ பார்க்க என்ன வழி?ன்னு கேட்கும்போது நீயும் என் உலகத்துக்கு வான்னு மேலே இருந்து தொப்னு அந்த ஃபிகர் மேல என்னமோ விழுது.. அவ்ளவ் தான் கதை..

இந்த கதைல ஹீரோயின் புல்லட் பைக் ஓட்டுது.. அவ்வ்வ்வ்வ்வ்
நல்ல டெரர் ஃபிலிமா வந்திருக்க வேண்டியது ஜஸ்ட் மிஸ் ஆகிடுத்து..

டிஸ்கி - நீ தான் டியூப்லைட் ஆச்சே, 2வது கதை உனக்கு புரிஞ்சிருக்காதே, காம்ப்ளீகேட்டடா இருக்கே. எப்படி கரெக்டா விமர்சனம் பண்ண முடிஞ்சுதுன்னு யாரும் கமெண்ட் போடாதீங்க.. ஏன்னா அந்தப்படத்தை 2 தடவை யூ டியூப்ல பார்த்து அப்பவும் சரியாப்புரியாம ஒரு கேர்ள் ஃபிரண்டுக்கு ஃபோன் போட்டு கேட்டு ஏதோ கொஞ்சம் புரிஞ்ச பிறகுதான் டைப்பிங்க்..



Tuesday, November 08, 2011

நாளைய இயக்குநர் - ஃபேண்டசி கதைகள் -விமர்சனம்

இன்னைக்கு (6.11.2011) கீர்த்தி  ரெட் கலரா?  ஆரஞ்சா?ன்னு சொல்ல முடியாத ரெட்டிஸ் ஆரஞ்ச் கலர் கவுனில் எண்ணெய் வைக்காத, தலை சீவாத  தலையுடன் , எப்போதும் போல் குங்குமம் வைக்காத நெற்றியுடன் மங்களகரமாக(!!!) வந்தார் .. 

”உங்க படங்கள்ல வர்றது எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையா? சொந்த அனுபவம் கலந்திருக்கா?”


சுந்தர் சி  - எல்லா படைப்பாளிகளும் முழுக்க முழுக்க கற்பனை பண்றதில்லை, சொந்தக்கதைல கற்பனையை சேர்த்துக்குவாங்க.. 



கே பாக்யராஜ் -  அந்த 7 நாட்கள் படம் சந்திரபாபு கதை.. இன்று போய் நாளை வா முழுக்க முழுக்க என் வாழ்வில் நான் செய்த கலாட்டாக்களின் தொகுப்பு..




1. இயக்குநர் பெயர் - யாகேஷ் - குறும்படத்தின் பெயர் - 20 (இருபது)  வகை - ஃபேண்டசி


ஒரு மாற்றுத்திறனாளி .. அவனால் பேச முடியாது.. தாழ்வு மனப்பான்மை வேற.. நண்பர்களால் கிண்டல் அடிக்கப்படுகிறான்.. அவன் விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணுக்கு ரத்த தானம் பண்றான்.. அந்தப்பொண்ணு அவன் கிட்டே நட்பா இருக்கு.. அவனுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லுது.. இதை பார்க்கும் அவன் நண்பர்களுக்குப்பொறாமை + ஆச்சரியம்.. எப்படி அந்த ஃபிகர் அவன் கிட்டே மாட்டுச்சுன்னு..

அப்புறம் பார்த்தா எல்லாம் அவன் கற்பனை.. அந்த பொண்ணு விபத்துல இறந்துடுச்சு..  குடைக்குள் மழை , மூடு பனி படத்துல வர்ற மாதிரி நடக்காத ஒண்ணை நடந்ததா நினைக்கற  மன நோய்.. க்ளை மாக்ஸ்ல அந்த பொண்ணோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்க்கறப்பத்தான் நமக்கு உண்மை தெரியுது.. 

இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1. ஹீரோயினா நடிச்ச பொண்ணு வசனத்தை ஒப்பிக்கறாங்க.. அதுவும் எப்டி? மறந்துட்டா என்ன பண்றதுன்னு வேக வேகமா.. அதை கவனிக்கலையா நீங்க? 

2. ஹீரோவா நடிச்சவருக்கு செம பதட்டம் போல.. ரொம்ப அன் ஈஸியா இருந்தாரு.. 

3. வாய் பேச முடியாத கேரக்டர் ஹீரோ என்பதால் மாண்டேஜ் சீன்களை அவாய்டு பண்ணி இருக்கலாம்.. சில காட்சிகளில் ஹீரோ ஏதோ பேசறது போலவே இருக்கு..

4. டைட்டில்ல எதுக்கு 20? அநேகமா 20 வயசு பையனின் அனுபவம்னு நினைச்சீங்களா? ம்ஹூம், எடுபடலை.. வேற டைட்டில் வெச்சிருக்கலாம்



2. இயக்குநர் பெயர் - மித்ரன் - குறும்படத்தின் பெயர் - தருணம், வகை -உண்மைக்கதை @ ரியலிஸம்


இந்தப்படத்தோட ஸ்பெஷல்  இதனோட இயக்குநர் நியூ ஜெர்சில இருந்து படம் அனுப்பினதுதான். இயக்குநரோட அம்மா, அப்பா நிகழ்ச்சிக்கு வந்தாங்க.. 

என் பையன் கிட்டே நாங்க எதிர் பார்க்காத திறமை இருப்பது மகிழ்ச்சின்னாங்க.. பார்க்க சந்தோஷம்.. 

மிகப்பெரிய மாற்றங்களுக்கு மிகச்சிறிய தருணங்கள் போதும்கற கேப்ஷனோட படம் ஆரம்பிச்சுது.. 

ஒரு சின்னப்பையன்.. அவன் இந்தியன்.. அவன் மற்ற அமெரிக்க இளைஞர்களால் ராக்கிங்க் செய்யப்படறான்.. அவன் கடுப்பாகி மூடு அவுட் ஆகிடறான்..  தாத்தா வந்து சமாதானப்படுத்தறார்.. அட்வைஸ் பண்றார்.. 

அடுத்த டைம் ராகிங்க் செய்யப்படும்போது அவன் சத்தியாக்கிரக வழியை பின்பற்றி அமைதியா இருக்கான்,, கலாட்டா செஞ்ச இளைஞர்கள்ல ஒருத்தன் நட்பாகறான்.. எதிர் காலத்துல மற்ற இளைஞர்களும் திருந்துவாங்க என்ற சுட்டிக்காட்டலுடன் படம் முடியுது.. 

இது நியூ ஜெர்சியில் உண்மையில் நடந்த சம்பவமாம்.. குட்.

ரசிக்க வைத்த வசனங்கள்

1. விழுவது தோல்வி அல்ல , விழுந்து கிடப்பதுதான் தோல்வி..

2. எத்தனை தடவை விழுந்தாலும் எந்திரிச்சு நிக்கற பார்த்தியா அதான் உண்மையான வெற்றி.. 

3.  காந்தி யார் தெரியுமா? அவர் ஒரு சூப்பர் மேன்.. நீயும் அஹிம்சை செய் ,சூப்பர் மேன் ஆகலாம்.. 

4. லைஃப்ல வெற்றி பெறனும்னு நினைக்கறவங்க ஒரு தடவையாவது விழனும்.. அப்புறம் எழனும்.. 

5.  பறக்கறவன், சுடறவன் மட்டுமே சூப்பர் மேன் கிடையாது, காந்தி வழியை பின்பற்ற ஆளும் சூப்பர் மேன் தான்

மேலே சொன்ன 5 பாயிண்ட்ஸ்ல 2 ஏற்கனவே நாம படிச்சதா இருந்தாலும் அதை கரெக்ட்டா பேக்கிங்க் செஞ்சதுல இயக்குநர் நிக்கறார்.. இது பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு

இயக்குநர்க்கு சில யோசனைகள்

1. ஹீரோவா  வந்த அந்தபையன் தமிழ் தெரியாதுன்னு சொல்றீங்க ஓகே, ஆனா அவன் எல்லாமே ஆங்கில வசனத்துல பேசறது எல்லாருக்கும் புரியாது. தமிழ் சப் டைட்டில் குடுத்திருக்கலாம்..

2. அந்த பையனுக்கு 10 வயசுதான் இருக்கும், ராகிங்க் பண்ற பசங்களுக்கு 21 வயசு ஆகுது.. அவன் வயசுப்பையன்களையே செலக்ட் செஞ்சிருக்கலாம்.. 

3. வசனத்துல அன்னா ஹசரே பேர் வர்றப்ப மியூட் பண்ணீட்டீங்களா? சென்சாரா? 




3. இயக்குநர் பெயர் -செந்தில் - குறும்படத்தின் பெயர் - சுவாமி வகை-காமெடி

உலகத்துல எத்தனையோ பிஸ்னெஸ் இருந்தாலும் சாமியார் பிஸ்னெஸ் தான் செம லாபம்.. அதை கிண்டல் செஞ்சு ஒரு கதை.. சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஒரு பர தேசிப்பையனை பிடிச்சு அவனை சாமியார் வேஷம் போட வெச்சு அவனை உபதேசங்கள் சொல்ல வெச்சு வீடியோ எடுத்து அவனை ஆன் லைன் சாமியார் ஆக்கி  காசு பார்க்க ஐடியா போடறாங்க 2 பேரு.. அவங்க வீட்ல வீடியோ செசன்ஸ் நடக்கறப்ப டீக்கடைக்காரன் அதை பார்த்துடறான் .. உடனே அவனை அமுக்கி அவன அமுக்கி சின்ன சாமியார் ஆக்கி ஜோதில ஐக்கியம் ஆக்கிடறாங்க.. 

காமெடியில் களை கட்டிய வசனங்கள்

1. இந்த உலகத்துல நடக்காத விஷயம்னு ஏதாவது இருக்கா? என்ன?

2. இந்த உலகத்துல எல்லா மனுஷங்களுக்கும் கவலை, கஷ்டம் எல்லாம் இருக்கும், ஆனா ஒவ்வொரு மனுஷனும் தனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கறதா நினைக்கறாங்க.. 

3. ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு கேப்ஷன் இருக்கும், இந்த மூஞ்சிக்கு மேட்ச் ஆகற மாதிரி ஒரு பஞ்ச் லைன் பிடிங்க.. 

கவலைப்படாதீங்க.. அதை நான் பார்த்துக்கறேன்...

ஆஹா, சூப்பர்..  கவலைகள் வேண்டாம்,  கடவுளாய் நான் இருக்கிறேன்.. எல்லாம் எனக்குள் அடக்கம்.. எப்டி பஞ்ச் லைன்..?

4. அதிகாலையில் கூட்டி விட்டுக்கிளம்பும் பறவைக்கே இரை கிடைக்கும்- இதுல இருந்து என்ன தெரியுது?

நேரத்துலயே கண் முழிச்சு வெளீல வர்ற புழுக்களுக்கு அற்பாயுசுன்னு தெரியுது   ( ஜோக் இன் தின மணிக்கதிர் @  12. 6 2008 ரிட்டர்ன் பை சீர்காழி வி ரேவதி )

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. சாமியாராக நடித்தவரின் நடிகர் தேர்வு.. அவரது நடிப்பு செம காமெடி.. 

2. ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆடியன்ஸ் சிரிக்க வேண்டும் என மெனக்கெட்டு அமைத்த திரைக்கதை.. வசனம் எல்லாம் டாப்.. 

3. மக்களுக்கு விழிப்புணர்வுக்கதை சொன்ன மாதிரியும் ஆச்சு..  சிரிக்க வெச்ச மாதிரியும் ஆச்சு.. 



4. இயக்குநர் பெயர் சந்திரகாந்த்- குறும்படத்தின் பெயர் - கத்திரி கரனம் வகை-ஆர்ட் ஃபிலிம்


வாழ்ந்து கெட்ட கோடீஸ்வரன் இப்போ ஏழையா தன் குழந்தையோட தனி வீட்ல இருக்கான்.. அவன் குழந்தைக்கு இதயத்துல ஓட்டை.. ஆபரேஷன் பண்ண பணம் இல்லை.. அவங்க வீட்டுக்கு திருட வர்ற ஒரு திருடன் இரக்கப்பட்டு வேற பக்கம் திருடிட்டு வந்து உதவி செய்யறான்.. அரதப்பழசான கதை.. 1970 களில் வந்த கு அழகிரிசாமியின் சிறுகதைத்தொகுப்புலயே இந்த கதை வந்துடுச்சு..

திருடன் திருந்த பர்ஃபக்ட்டான லாஜிக் காட்டலை.. சும்மா குழந்தையின் சிரிப்பை மட்டும் பார்த்து மயங்கிட்டதா  காட்டிட்டாங்க

ரசிக்க வைத்த வசனங்கள்

1. ஒரு தடவை தப்பு பண்ணுனா திரும்ப திரும்ப அதே தப்பு தான் பண்ணத்தோணும். ( ஏன் ஒவ்வொரு தடவையும் வெவ்வேற தப்பு பண்ணத்தோணாதா?)

.2. கெட்டவன் ஆகனும்னு வேலண்ட்ரியா  யாரும் ட்ரை பண்றதில்லை..

இயக்குநருக்கு சில ஆலோசனைகள்

1. கதை ஓக்கே. காட்சி வடிவமைப்பில் ஆழம் இல்லை..

2. ஹீரோவா நடிச்சவர் இயக்குநரான உங்க அப்பா என்பதாலும் அவர் , அனுபவம் உள்ள சினிமா நடிகர் என்பதாலும்தான் படம் ஓரளாவது தப்பிச்சிது



5. இயக்குநர் பெயர் -ஷபி  -  குறும்படத்தின் பெயர் - நிலா வகை- ஃபேண்டசிஃபிலிம்

இது கொஞ்சம் வித்தியசமான கதை.. ஒரு கல்யாணம் ஆன புது தம்பதி.. ( டேய்,, கல்யானம் ஆனாத்தாண்டா அவங்க தம்பதி.. ) ஒரு சின்ன ஊடல்.. யார் முதல்ல பேசறதுன்னு.. யார் முதல்ல இறங்கி வர்றதுன்னு.. நிலாவுல பாட்டி வடை சுட்டதா கதைல படிச்சமே.. அந்த பாட்டி நிலாவுல இருந்து வந்து ஹீரோயின் செல்ஃபோனை எடுத்து ஹீரோவுக்கு மெசேஜ் அனுப்புது... சாரின்னு.. உடனே ஹீரோ சமாதானம் ஆகிடறான்.. அவன் இறங்கி வந்துடறான்... லைஃப்ல பலருக்கு இந்த பிரச்சனை இருக்கும்.. 

புருஷன் , பொண்டாட்டிக்குள்ள சண்டைன்னா யார் முதல்ல இறங்கி வந்து மன்னிப்பு கேட்கறதுன்னு.. அதை அழகான திரைக்கதைல சொல்லி இருக்கார். அமரர் சுஜாதா உயிரோட இருந்திருந்தா இந்தக்கதையை விகடன்ல மென்ஷன் பண்ணி  இருப்பார்..

 ரசித்த வசனங்கள்

1. அவளுக்கு என்னை விட்டா யார் இருக்கா? கோபப்பட?

2. ஈகோ என்பது ஒவ்வொரு மனிதனின் வீக்னெஸ்

3. என் மேல கோபம் இருந்தும், என் கூட பேசக்கூடாதுன்னு வைராக்யம் இருந்தும் எனக்கு எஸ் எம் எஸ் மட்டும் நீ எப்படி அனுப்பினே?

நான் எதும் அனுப்பலையே..?


இந்தப்படத்தின் இயக்குநர் நல்ல சைக்காலஜிக்கல் பிரச்சனைகளூக்குத்தீர்வு சொல்லும் கதைக்கருக்களை பிற்காலத்தில் எடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது.. வாழ்த்துகள்

Monday, October 17, 2011

நாளைய இயக்குநர் - காமெடி ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு ( 16.10.2011) கீர்த்தி செம காமெடி பண்ணுனாங்க.. நானும் கே பாக்யராஜ் சாரும் ஒரே கலர் டிரஸ்..2 பேருமே ப்ளாக்னாங்க.. நல்லவேளை சேம் பிஞ்ச்னு சொல்லி கிள்ளிக்கலை.. ஜஸ்ட் மிஸ்டு..

1. ராஜ்குமார் - எதுவும் எனதில்லை ( காமெடி)

ஓப்பனிங்க் ஷாட்லயே இது பக்கா காமெடி ஸ்கிரிப்ட்னு புரிஞ்சிடுச்சு... ஒரு சாக்லெட் விளம்பரத்தை நக்கல் அடிச்சு முத சீன்.. பஸ் ஸ்டாப்ல ஒரு 70 மார்க் ஃபிகர் நிக்குது.. பாப்பா கிட்டே ஹீரோ சாக்லெட் தர்றார்..

ஏய்.. மிஸ்டர்.. என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா? (எங்கே கொஞ்சம் திரும்புங்க பார்த்துக்கறேன்- சி.பி  )

இல்லை...

அப்புறம் எதுக்கு எனக்கு சாக்லெட் தர்றே?

எங்காயா சொன்னாங்க.. நல்ல காரியம் பண்றப்போ ஸ்வீட் சாப்பிடனும்னு..

அப்படி என்ன நல்ல காரியம் பண்ணப்போறே?

உன்னை பிக்கப் பண்ணி உங்க வீட்ல டிராப் பண்ணலாம்னு இருக்கேன்..

தேவை இல்லை.. வேற ஆள் எனக்கு இருக்கான்.. நீ உன் வேலையை பாரு..

ஹீரோவுக்கு நோஸ்கட் குடுத்துட்டு அந்த ஃபிகர் லவ்வரோட கிளம்பிடுது..

ஹீரோ அடுத்து வேற ஒரு ஃபிகர் கரெக்ட் பண்றார்.. அதுக்கு தன் ரூம் மேட்ஸ்கிட்டே ஒருத்தன் கிட்டே இருந்து பைக் ஓசி வாங்கறார்..(2 மணி நேரத்துல திருப்பி தந்துடறேன்கற கண்டிஷன்ல.. )இன்னொருத்தன் கிட்டே டி சர்ட் ஓசி வாங்கறார்..ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறார்.. ஒரே இளநில 2 ஸ்ட்ரா போட்டு குடிக்கறார்.. திடீர்னு 3 பேர் அவரை வழி மறிக்கறாங்க.. ரூம் மேட்ஸ்தான்..

பைக் குடுத்தவன் பைக்கை பிடுங்கிக்கறான்,  டி சர்ட் குடுத்தவன் டி சர்ட்டை பிடுங்கிக்கறான் (அட பறக்கா வெட்டி).. 3 வது ஆள்..? அதுதான் சஸ்பென்ஸ் காமெடி..

“ஏண்டா.. என் ஃபிகரையே தள்ளிட்டு வந்துட்டியா.?ன்னு சொல்லி அவன் ஃபிகரை ஓட்டிட்டு சார்.. கூட்டிட்டு போயிடறான்.. விஷுவலா பார்க்க செம காமெடியாத்தான் இருந்தது..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. கதைல வர்ற 2 ஃபிகர்ங்களுமே அழகு ஃபிகர்தான்.. நடிப்பும் ஓக்கே..

2. ஆடியன்ஸை யோசிக்கவே விடாம திரைக்கதை செம ஸ்பீடு.. 

2. பின்னணி இசை கதையின் மூடை அப்படியே காமெடியாக்குது..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. என்னதான் காமெடின்னாலும் ஃபிகரையே தள்ளிட்டு போறது ஓவர்.. காதலையே கேலி பண்ற மாதிரி இருக்கு.. 

2. ஹீரோ ஃபிகரோட பைக்ல போற ரூட் அவங்க 3 பேருக்கும் எப்படி தெரியும்? கரெக்ட்டா எதிர்ல வர்றாங்களே எப்படி?

3. பைக்கை திருப்பி வாங்கறது ஓக்கே, யாராவது டி சர்ட்டைக்கூட அப்படி நடு ரோட்ல பிடுங்குவாங்களா?

4. ஓப்பனிங்க் ஷாட்ல பஸ் ஸ்டாப் ஃபிகர் ஹீரோவைப்பார்த்து கோபமா பேச வேண்டிய டயலாக்கை காமெடியால லைட்டா சிரிக்குது.. அதை அவாய்டு பண்ணி இருந்திருக்கலாம்


படம் முடிஞ்சதும் படத்தோட இயக்குநர் கே பாக்யராஜ் கிட்டே

என் முயற்சி எப்படி சார்?

என் வேலையையே மாத்திடுவீங்க போல.. நாங்க ஜட்ஜா? மாமாவா?

சுந்தர் சி - படம் ஓக்கே.. ஒரு குறும்படத்துக்குக்கூட சாங்க் கம்போஸ் பண்ணி நல்லா பண்ணி இருக்கீங்க ஹார்டு ஒர்க்.. 


2.  பாக்யராஜ் - ஆந்தை (த்ரில்லர் ஆக்‌ஷன்)

சட்டமும், சமூகமும் இல்லை என்றால் மனிதன் மிருகத்தை விட கேவலமாக நடந்து கொள்வான் அப்டினு ஒரு சப் டைட்டிலோட படம் ஓப்பன் ஆகுது..

போலீஸ் வேலைக்கு எல்லா டெஸ்ட்லயும் பாஸ் ஆகற ஒருத்தன் ரிட்டர்ன் டெஸ்ட்ல ஃபெயில் ஆகிடறான்.. தன் ஃபிரண்ட் கிட்டே புலம்பறான்.. போலீஸ் வேலைல செலக்ட் ஆகனும்னா தனக்கு 4 லட்சம் பணம் வேணும்கறான்.. அவனோட ஃபிரண்ட் இல்லீகல் வேலை செய்பவன்.. அவன் இவனுக்கு அட்வைஸ் பண்றான்.. நேர்மையான வழில போனா பணம் கிடைக்காது.. குறுக்கு வழிலதான் சம்பாதிக்கனும்.. 

ஒரு ஆட்டோவை வழி மறிச்சு ஒரு கொள்ளை அடிக்கறான்.. அந்த பணத்தை அவன் கிட்டே கொடுக்கறான்..

அப்போ 2 பேருக்கும் வாக்குவாதம் வருது.. 

இல்லீகலா சம்பாதிச்சது எனக்கு வேணாம்கறான், இல்ல பரவால்ல எடுத்துக்கோ..சான்ஸ் கிடைக்கறப்ப யூஸ் பண்ணிக்கனும், தான் முன்னேறனும்னா  ஒருத்தனை கவுக்கறதுல தப்பில்லைங்கறான்.

இப்போதான் ஒரு ட்விஸ்ட்.. இது வரை நேர்மைன்னு பேசிட்டு இருந்தவன் இல்லீகலா நடக்க அட்வைஸ் பண்ண ஃபிரண்டையே போட்டுத்தள்ளிடறான்..

இந்தப்படம் ராம்கோபால் வர்மா படம் பொல் எஃப்ஃபக்ட்டா இருக்குன்னு சுந்தர் சி பாராட்னாரு..

ஆனா எனக்கு படத்தோட கான்செப்ட்டும் சரி,, அதை கொண்டு போன விதமும் சரி.. க்ளைமாக்ஸூம் சரி பிடிக்கலை.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தானே வலியனா ஓசில 4 லட்சம் தர்ற ஃபிரண்டை எதுக்கு மெனக்கெட்டு கொலை செய்யனும்? அவன் ஒண்ணும் பணத்தை திருப்பி கேட்கலையே?

2. 4 லட்சத்துக்காக கொள்ளை அடிச்சது ஓக்கே.. தேவை இல்லாம கொலை எதுக்கு?

3. இந்தக்கதை மூலம் சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க/?
Pancake Floor Pillows


3. அஸ்வத் - கார்த்திக்  ஒரிஜினாலிட்டி ( காமெடி)

என்ன கான்செப்ட்னா சினிமால கார்த்திக் அப்டிங்கற பேர்ல வர்றவங்க எல்லாம் ஈசியா ஒரு ஃபிகரை பிக்கப் பண்ணிடறாங்க.. அதனால ஹீரோ நாராயனன் தன் பேரை கார்த்திக்னு மாத்திக்கலாமா?ன்னு ஃபிரண்ட்ஸ் கிட்டே ஐடியா கேக்கறான்.. அவங்க வேணாம், உன் ஒரிஜினாலிட்டி போயிடும்கறாங்க

காலேஜ்ல ஜூனியர் ஃபிகரை ஹீரோ ராகிங்க் பண்றார்.. பேரு ,ஊரு எல்லாம் விசாரிக்கறார். அதே சமயம் இன்னொரு பையனை கூப்பிட்டு அந்த ஃபிகர் பக்கத்துல நிக்க வெச்சு அவனுக்கு ஐ லவ் யூ சொல்லுன்னு ராக் பண்றார்..

அந்த ஃபிகர் அந்தப்பையனை பார்த்து ஐ லவ் அப்டின்னு சொல்லி ஹீரோ நாராயணைப்பார்த்து யூ அப்டின்னு முடிக்கறா..

உடனே ஹீரோ டூயட் பாடறாரு.. ஃபிகர் பிக்கப் ஆகிடுச்சுன்னு..

அடுத்த ஷாட்ல அவ ஃபோன் பண்ணி நாராயணனை வரச்சொல்றா..

சார்.. உங்க கிட்டே ஒரு மேட்டர் சொல்லனும் எப்படி சொல்றதுன்னுதான் தெரியலை..

ஆஹா.. சொல்லுங்க சொல்லுங்க

அன்னைக்கு ஒரு பையனை ராக் பண்ணி என்னை அவன் கிட்ட ஐ லவ் யூ சொல்ல வெச்சீங்களே அவனை நான் லவ் பண்றேன்.. முதல்ல உங்க கிட்டே தான் இந்த மேட்டரை சொல்லலாம்னு.. 

அடங்கோ..

அடேய்.. உன் பேரு கார்த்திக்கா?

எப்படி சார் கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க?

எத்தனை படம் பார்க்கறோம்?

நல்ல காமெடி பேக்கேஜ். காலேஜ்ல நடக்கறதை நேர்ல பார்க்கற மாதிரி இருந்துச்சு...இயக்குநரே ஹீரோவாநடிச்சிருந்தார்..

இதுக்கு ஜட்ஜூங்க கமெண்ட் பண்றப்ப ஹீரோயின் வெவ்வேற கால கட்டத்துல வர்ற 3 சீன்லயும் ஒரே காஸ்ட்யூம் தான் போட்டிருக்காரு.. அதை கவனிக்கலையா?ன்னாங்க.. 

பட் சின்ன சின்ன மைனஸ் தாண்டி இது நல்ல காமெடி.. இதுக்குத்தான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வரும்னு நான் நினைச்சேன்.. ஆனா .....


4. கிஷோர் - ஃபோன் கால் (PHONE CALL)

ஒரு வீட்ல 4 ஃபிரண்ட்ஸ்.. ஏதோ பார்ட்டி கொண்டாட்டம்.. மாடிப்படி ஏறி வரும் ஒரு நண்பனுக்கு ஒரு ஃபோன் வருது.. அவனோட பழைய ஃபிரண்ட் பிரவீன்..

மேலே வந்ததும் டேய் பிரவீன் ஃபோன் பண்ணுனான்ன்னு சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி ஆகறாங்க// டேய்.. உனக்கு விஷயமே தெரியாதா?அவன் இறந்துட்டான்.. எப்படி ஃபோன் வரும்?


இவன் உடனே ஷாக் ஆகிடறான்..

இப்போ மறுபடி பிரவீன்கிட்டே இருந்து கால்...

அவன் திகில் ஆகி பார்க்கறப்ப ரூம்ப இருந்து இன்னொரு ஃபிரண்ட்  பிரவீன் ஃபோனோட வர்றான்.. சும்மா கலாட்டா பண்ண..
இப்போதான் சஸ்பென்ஸ் உடையுது.. கேமரா அப்படியே  டேபிள்ல இருக்கற நியூஸ் பேப்பர்ட்ட போகுது.. இப்போ நாம பார்த்த எல்லாருமே ஆல்ரெடி இறந்துட்டாங்க என காட்டுது..

யூகிக்க முடியாத திருப்பம்...

ஓப்பனிங்க் ஷாட்ல கதைக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பேப்பர் போடற ஆளை காட்னது எதுக்குன்னு இப்போ புரியுது.. வெல் மேக்கிங்க்..
இதுக்கு கமெண்ட் பண்ணுன ஜட்ஜூங்க ஒரே ஒரு குறை சொன்னாங்க.. நைட் எஃபக்ட படம் பண்ணி இருந்தா இன்னும் டெரரா இருந்திருக்கும்னு..
சின்ன குறைகள் இருந்தாலும் இது ஒரு பாராட்டத்தக்க  படமே..

இந்த வாரம் வந்த 4 படங்கள்ல 3 படம் குட்..