Showing posts with label பெண் பதிவர். Show all posts
Showing posts with label பெண் பதிவர். Show all posts

Tuesday, November 01, 2011

பிரபல பெண் பதிவர் மணல் கயிறு ரீமேக்கில் நடித்தால்..ஒரு ஜாலி கற்பனை


விசுவுக்கும் சரி, எஸ் வி சேகருக்கும் சரி மணல் கயிறு ஒரு மறக்க முடியாத காமெடி எண்ட்டர்டெயினர் படம் தான்..  அந்தப்படத்துல ஹீரோ பென் பார்க்கப்போறப்ப சில கண்டிஷன்ஸ் போட்டு அலப்பறை செய்வாரு.. .. கடைசில எந்த கண்டிஷனுக்குமே ஒத்து வரத ஃபிகரை மேரேஜ் பண்ணி  அவஸ்தைப்படுவாரு...அந்தப்படத்தை இப்போ நாம ரீ மேக் பண்ணப்போறோம்.. 



பொதுவா ஒரு படத்தை உல்டா பண்றப்ப அறிவில்லாதவன் அப்படியே ஜெராக்ஸ் எடுப்பான்,கொஞ்சம் மூளைக்காரன்  சில சீன்கள் எக்ஸ்ட்ரா சேர்த்துவான்.. அதாவது 5 டூயட், 6 ஃபைட், கொஞ்சம் மொக்கை காமெடி இப்டி.. இன்னும் கொஞ்சம் டெவலப் ஆனவன் ஹீரோவை ஹீரோயின் ஆக்குவான்.. வில்லனை வில்லி ஆக்குவான்.. கேட்டா மூலக்கதை ஜஸ்ட் ஒரு இன்ஸ்பிரேஷன்தான் அப்டினு ஒரு சாக்கு சொல்வான்.. நாம இந்த மணல் கயிறு ரீமேக்ல ஒரு பெண் மாப்ளை தேடும் படலமா மாத்தப்போறோம்..


ஹீரோயின் பற்றி சில குறிப்புகள்

1. இவர் ஒரு பிரபல பெண் ட்வீட்டர்.. (எதிர்காலப்பதிவரும் கூட) சொந்த (நொந்த!!?) ஊர் கோவை (கோவக்காரரா? கோவைக்காரரா? ) இரண்டு எழுத்துக்காரர்.. .(அதாவது ட்விட்டர்ல)

2. யார் வம்புக்கும் போகாதவர், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்.. 

3.  ஆண்களுக்கு சாதகமாக பேசுவார்.. பி காம் படிச்சிருக்காருன்னு நினைக்கறேன் அதனால ரொம்ப காம் (CALM TYPE) டைப்

ஹீரோயின் இண்ட்ரொடக்‌ஷன் போதும்,,, கதை..



” அப்பா, எதுக்கு என்னை வரச்சொன்னீங்க?”


” இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கம்மா”


” அப்பா, நீங்க எந்தக்காலத்துல இருக்கீங்க? அது எல்லாம் 1998 உடன் முடிஞ்ச விஷயம், இப்போ நடக்கறது 2011.. மாப்ளை பார்க்க பொண்ணு வீட்டுக்காரங்க போறதுதானே வழக்கம்.. “



” அய்யய்யோ.. இதென்னம்மா? புது வெடி குண்டா இருக்கு?”

“ இல்லப்பா.. நாமதான் மாப்ளை வீட்டுக்குப்போறோம்..அதுக்கு முன்னால எனக்கு எப்படிப்பட்ட மாப்ளை வேணும்னு  சொல்லிடறேன்.

கண்டிஷன் நெம்பர் 1 - மாப்ளை படிச்சிருக்கக்கூடாது, ஆனா கை நிறைய சம்பளம் வாங்கனும் ( ஏன்னா, படிச்ச மாப்ளை திமிரா பேசுவான்)

கண்டிஷன் நெம்பர் 2 -  மாப்பிள்ளை சைவமா இருக்கனும், ஆனா அசைவமும் சமைக்கத்தெரிஞ்சிருக்கனும் ( ஏன்னா நான் அசைவம், அவரும் அசைவமா இருந்தா குடும்ப செலவு ஓவர் ஆகிடும்)

கண்டிஷன் நெம்பர் 3 - மாப்பிள்ளைக்கு டான்ஸ்ஸை ரசிக்கற ரசனை வேணும் ( ஏன்னா நான் அப்பப்ப கோபத்துல ஆட்டமா ஆடுவேன்)

கண்டிஷன் நெம்பர் 4 - மாப்பிள்ளைக்கு தமிழ் தவிர வேற எந்த மொழியும் தெரிஞ்சிருக்கக்கூடாது  ( ஏன்னா எனக்கும் எதுவும் தெரியாது)

கண்டிஷன் நெம்பர் 5 -  மாப்ளை யார் கண்ணுக்கும் தெரியக்கூடாது ( ஏன்னா நான் ரொம்ப பொஸஸிவ் டைப், என்னைத்தவிர வேற யாரும் அவரை பார்க்கவே கூடாது )

கண்டிஷன் நெம்பர் 6 - நான் செத்துட்டா உடனே அவரும் என் கூட உடன் கட்டை ஏறிடனும். ( இல்லைன்னா அவர் வேற ஒரு கட்டையை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பார்.. அதுக்கு விடலாமா?)

கண்டிஷன் நெம்பர் 7 -  மாப்ளை வாய் பேச முடியாதவரா இருக்கனும் அல்லது காது கேட்காதவரா இருக்கனும் ( ஏன்னா நான் ஓவரா பேசுவேன்.. ஒரு வீட்டுக்குள்ள ஒரு வாயாடி தான் இருக்கனும்)

கண்டிஷன் நெம்பர்  8  -  ரொம்ப முக்கியமான கண்டிஷன் , மாப்ளை இண்ட்டர்நெட் நாலெட்ஜ் இல்லாதவரா இருக்கனும்.. (ஏன்னா நான் நாள் பூரா நெட்ல இருப்பேன், அவரும் அப்டியே இருந்தா வீட்டு வேலை எல்லாம் யார் பார்ப்பாங்க? அதான்.. )



மாப்ளை வீட்டுக்கு போறாங்க..

அறிமுகப்படலங்கள், வரவேற்பு ஃபார்மாலிட்டி பேச்சுக்கள் முடிந்த பின்...

”மாப்ளையை வரச்சொல்லுங்க, என் பொண்ணு அவர் கிட்டே பேசனுமாம்.. ”

“இதோ, இப்போ வரச்சொல்றேன்.. அவன் கூட பொண்ணு கிட்டே ஏதோ பேச ஆசைப்பட்டான்.. “
”சாரி.. சம்பந்தி.. யார் பேசுனாலும் என் பொண்ணுக்கு பிடிக்காது.. அவ கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்.. “


மாப்பிள்ளையும், பொண்ணும் தனியே தன்னந்தனியே.....

” தம்பி.. நீ எது வரை படிச்சிருக்கே?”

”என்னது? தம்பியா?”

”உன் பேரு தம்பிதுரை தானே? அதை சுருக்கிட்டேன்..”

”சரி.. என்ன மரியாதை இல்லாம நீ , வா, போ அப்டி கூப்பிடறீங்க?”

”மரியாதைங்கறது மனசில இருந்தா போதும்.. உதட்டளவில் தேவை இல்லைன்னு நினைக்கறவ நான்”

“பார்க்கறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?”

” மத்தவங்களுக்காக வாழ்ற வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா?”

“சரிங்க.. வம்பு எதுக்கு... எப்படியோ கூப்பிடுங்க.. “

”அப்போ நான் வம்புக்காரியா?”

”அய்யோ, நான் அப்டி சொல்லவே இல்லீங்களே.. சரி, நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்.. நான் எட்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கேன். “

”வெரிகுட்.. உன்னை மாதிரி கூமட்டையனைத்தான் தேடிட்டு இருந்தேன்.. உனக்கு ஃபைட் போடத்தெரியுமா?”

”ச்சே.. ச்சே.. நான் எதுக்குங்க உங்க கூட ஃபைட் போடறேன்..? சந்தோஷமா வெச்சு காப்பாத்துவேன்..

என்னது? வெச்சு காப்பாத்துவியா? நான் என்ன சின்ன வீடா? என் கூட ஃபைட் போடறதுக்கு இல்லை.. ரோட்ல நாம ஜோடியா போறப்ப 4 ரவுடிங்க வர்றாங்க, அவங்களை அடிச்சு விரட்டுவியா?”

”என்னங்க இது அநியாயமா இருக்கு.. நான் என்ன தளபதி தினேஷா? ஃபைட் எல்லாம் போட.. நீங்க எதிர்பார்க்கறது எல்லாம் ஓவர்ங்க..”

” டான்ஸ் ஆடத்தெரியுமா? பாடத்தெரியுமா?ன்னு எல்லாம் நீங்க கேட்கறீங்களே.. டிட் ஃபார் டாட் அதாவது பழிக்குப்பழி..”

“ யார் மேலயோ இருக்கற கோபத்தை ஏன் என் மேல காட்றீங்க?”

” உனக்கு லேடீஸ் சைக்காலஜியே தெரியாதா? எவன் இளிச்சவாயனோ அவன் கிட்டே த்தானே துள்ள முடியும்..?

” அவ்வ்வ்வ்வ்வ்”

” சரி.. உனக்கு சமைக்கத்தெரியுமா?”

”ஓ... எல்லா அயிட்டங்களையும் பிரமாதமா சமைப்பேங்க.”

” என்னது? அயிட்டமா?”

”அதாவது வகைகள்”

”ம்.. அது.. எனக்கு டபுள் மீனிங்க்ல பேசறது கொஞ்சம் கூட பிடிக்காது.. என்ன பேசப்போறியோ அதை முதல்லியே ரிகர்சல் பார்த்துட்டு அதுல டீசண்ட்டான அர்த்தம் வருதான்னு பார்த்துட்டு அப்புறமா பேசு..”

” ஓக்கேங்க.. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க.. “

” அது முக்கியம் இல்லை.. உன்னை எனக்கு பிடிக்கனும்.. அதுக்கு நீ எனக்குப்பிடிச்ச மாதிரி நடந்து காட்டனும்.. “

” அடடா.. எனக்கு ஒரே மாதிரி தாங்க நடக்கத்தெரியும்.. ரஜினி நடை.. சிவாஜி நடை இதெல்லாம் தெரியாதுங்க.. “

” ஜோக்? இதுக்கு நான் சிரிக்கனுமா? ஒண்ணு சொல்றேன்.. எனக்கு இந்த வழியறது.. கடிக்கறது.. மொக்கை போடறது இதெல்லாம் பிடிக்காது.. “

“சரி.. உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க”

” என்னை எதிர்த்து யார் பேசினாலும் எனக்குப்பிடிக்காது.. அதே சமயம் ஆமாம் சாமி போடற ஆளுங்களையும் பிடிக்காது.. “

” குழப்பறீங்களே.. “

” ஆர்கியூமெண்ட் பண்றதுன்னா எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி..”

“அதுக்கு நீங்க வக்கீலா போய் இருக்கலாமே?”

”இப்போதான் சொன்னேன்.. என்னை எதிர்த்து கேள்வி கேட்டா பிடிக்காதுன்னு.. வக்கீலா போனா கறுப்பு கோட், வெள்ளை சட்டை போடனும்.. என்னை யார் கண்ட்ரோல் பண்ணூனாலும் எனக்கு பிடிக்காது.. “

”அய்யய்யோ. அப்போ டிராஃபிக் ரூலை மதிக்க மாட்டீங்களா?”


” எனக்கு எந்த ரூல்ஸூம் பிடிக்காது.."
"அம்மா தாயே.. நான் ஒண்ணே ஒண்ணு சொல்லவா?”

“ ம், சொல்லு”

“ என்னை விட்ரு..!!!!!!!!”

அவர் ஓடுகிறார்.. பின்னணியில் கமல் -ன் விக்ரம் பட பாடல் ரீ மிக்ஸில்

தம்பி.. ஜும்ஜ்ஜுசுகும் , ஜும்ஜ்ஜுசுகும்  நீ என்னப்பார்த்தவன், நான் உன்னைப்பார்த்தவள்.. உன் கைகளால் மாலையை நீ சூடிடு.. தம்பி... ச்சும் ச்சுசுகும் ச்சும்ச்சுசுகும்.. தம்பி..

டிஸ்கி - 1 
இது ஆணாதிக்கப்பதிவோ, பெண்ணாதிக்கப்பதிவொ அல்ல, ஜஸ்ட் காமெடி & மொக்கை ஆதிக்கப்பதிவு..

டிஸ்கி - 2 குறிப்பிட்ட அந்தப்பெண் பதிவர், அவங்கம்மா, அப்பா, தாத்தா, பாட்டி , அம்மம்மா, அப்பப்பா.. உஷ் அப்பா.... அனைவரிடமும்  பதிவின் ப்ரீவ்யூ காட்டி அப்ரூவல்  வாங்கி பின் போடப்பட்டுள்ளது..



Wednesday, July 20, 2011

அபார்ஷனின் எல்லைக்கோட்டில் சென்னை பெண் பதிவர் -கண்ணீர் சம்பவம்




சென்னை பெண் பதிவர் பற்றிய உண்மை சம்பவத்தை முதல் பாகத்தில் படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கி படிக்கவும்

மேலும் வாசிக்கவாசலில் முபாரக்கை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாளவிகா


”என்ன வேணும்?எதுவா இருந்தாலும் அவர் இருக்கும்போது வா. “

ஏய்.. உன் கிட்டே கொஞ்சம் பேசனும். கதவை திற

“ஏன்..? என் கிட்டே பேசற மேட்டரை அவர் இருக்கறப்ப பேச முடியாதா?”

வாக்குவாதம் முற்றுகிறது.. பக்கத்து வீட்டில் எட்டிப்பார்க்கிறார்கள்..தேவையற்ற சிக்கல் எதற்கு? என்று நினைத்த மாளவிகா கதவின் சேஃப்டி சங்கிலியை விடுவித்து அவனை உள்ளே அனுமதிக்கிறார்.

” ஏண்டி.. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா உன் புருஷன் கிட்டே என்னை போட்டுக்குடுப்பே..உன் புருஷன் பெரிய இவன் மாதிரி உன் ஃபிரண்டுக்கு சப்போர்ட் பண்றான்..?அவ அப்படி இருக்க மாட்டா அப்டின்னு சர்ட்டிஃபிகேட் தர்றான்? அவ்வளவு டீட்டெயிலா அவளைப்பற்றி அவனுக்கு எப்படி தெரியும்? அவளை அவன் வெச்சிருக்கானா? 

”டேய். வார்த்தையை அளந்து பேசு. அவ என் கணவனுக்கு தங்கை மாதிரி ...”


“அப்டின்னு நீ நினைக்கறே.. உன் புருஷன் என்ன நினைக்கறானோ?”


 தன் தோழியை அன்புக்கணவனோடு சம்பந்தப்படுத்திப்பேசியதைக்கண்டு கொதிப்படைந்த மாளவிகா முபாரக்கை ஆவேசமாக வெளியே தள்ள  முயற்சிக்கிறார்.கோபம் அடைந்த முபாரக் மாளவிகா கர்ப்பவதி என்பதையும்,5 வருட சிநேகிதி என்பதையும், நண்பனின் மனைவி என்பதையும் மறந்து அவரை ஆவேசமாக பிடனியைப்பிடித்து தள்ளுகிறார்.. எதிர்பாராத அந்த தாக்குதலில் நிலை குலைந்த மாளவிகா வேகமாக டைனிங்க் டேபிள் மேல் போய் விழுகிறார்..


 அவரது வயிற்றில் அடிபட்டதில் மயக்கம் அடைகிறார்.. உடனே பயந்து போன முபாரக் வேகமாக அறையை விட்டு வெளியேறுகிறான்.. உண்மையான மனித நேயம் உள்ளவனாக இருந்தால் அட்லீஸ்ட் யாருக்காவது தகவலாவது சொல்லி காப்பாற்றி இருக்கலாம்..



20 நிமிடம் மயக்க நிலையில் இருந்து தானாக எழுந்த மாளவிகா ரத்தப்போக்கு (BLEEDING)ஏற்பட்டிருப்பது கண்டு பதட்டம் அடைந்து தன் கணவருக்கு ஃபோன் செய்ய லைன் கிடைக்காததால் பின்  குடும்ப நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து நிலைமையை சொல்லி அழைத்தார்..

அவரால் நகரக்கூட முடியவைல்லை.. அரை மயக்கத்தில் அப்படியே கிடந்தார்.. மீண்டும் 25 நிமிடங்கள் கழித்தே வந்த குடும்ப நண்பர் அவரை ஆட்டோவில் ஹாஸ்பிடல் அழைத்து சென்றார்..

மாளவிகாவின் கணவருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு ,அவர் பதறி அடித்துக்கொண்டு ஹாஸ்பிடல் ஓடி வந்தார்..

கர்ப்பப்பையின் வாய் கிழிந்து விட்டது என்றும் 2 நாட்கள் தையல் போட்டு பின் அசையாமல் கால்களை மட்டும் மேலே தூக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது..

Socotra Dragon Tree,( Socotra, is a small archipelago of four islands in Yemen)
Socotra_dragon_tree.jpg


2 நாட்கள் நரக வேதனைக்குப்பிறகு கிட்டத்தட்ட அபார்ஷன் நிலை வரை சென்று  மீண்டு வந்தார். அதற்குப்பின் 27 நாட்கள் ஹாஸ்பிடல்ல் சிகிச்சை பெற்றார்..

முபாரக் மீது வழக்கு தொடரப்பட்டது.. அட்டெம்ப்ட்  ரேப் கேஸ் போடப்பட்டது..

தனிமையில் இருந்த பெண்ணிடம் தகராறு, கர்ப்பவதி ஆன பெண்ணிடம் கரு கலையும் விதம் தாக்கியது,கற்பழிப்பு முயற்சி என 3 பிரிவுகளில் கேஸ் போடப்பட்டது..

மாளவிகா மயக்க நிலையில் இருந்த போது கற்பழிப்பு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேக அடிப்படையில் அப்படி ஒரு கேஸ் போடப்பட்டது..

ஆனால் மெடிக்கல் ரிப்போர்ட் கற்பழிப்போ , அதற்கான முயற்சிகளோ எதுவும் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது..

முபாரக் ஹாஸ்பிடல் செலவு ரூ 3 லட்சம் கட்டி விட வேண்டும் எனவும் இனி மாளவிகா விஷயத்தில் தலையிடக்கூடாது எனவும் , ஏதாவது ஆபத்து வந்தால் அதற்கு முபாரக் தான் பொறுப்பு எனவும் போலீஸ் ஸ்டேஷனில் எழுதி வாங்கப்பட்டது..



இப்போது தாயும் ,வயிற்றில் வளரும் சேயும் நலம். 

இருந்தாலும் மோசமான சகவாசத்தால் அந்த குடும்பத்துக்கு நேர்ந்த மன உளைச்சல்கள்......

1. மெடிக்கல் ரிப்போர்ட் வரும் வரை தன் மனைவி மானபங்கப்படுத்தப்பட்டிருப்பாரா? என்ற சந்தேகம் + வருத்தம் இவற்றின் கலவையாக  மன உளைச்சலுக்கு ஆளான கணவன்.


2. சொந்த வீட்டிலேயே இந்த சம்பவம் நடந்ததால் இனி அங்கே குடி இருக்க முடியாது என்பதால் அவசர அவசரமாக காலி செய்து வேறு இடம் பார்த்து குடி போக வேண்டிய அலைச்சல்.


3. மாளவிகா  32 நாட்கள் ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக  கிடந்த நிலை..





இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. வேலைக்கு செல்லும் பெண்கள் என்னதான் பழக்கமான ,நம்பிக்கையான நபர் என்றாலும்  தானே தனியாக பஸ்ஸிலோ,ஆட்டோவிலோ ,வண்டியிலோ, நடந்தே செல்வதே நல்லது.. கணவனின் நண்பன் என்பதற்காக டபுள்ஸ் போனால் இக்கட்டான நேரங்களில் அதை மிஸ் யூஸ் பண்ண வாய்ப்பு அதிகம்..

2. சந்தர்ப்பங்கள் ,எப்படி வேண்டுமானாலும் மனிதனின் மனதை மாற்றும் வல்லமை படைத்தது என்பதால்  நட்பு  வட்டாரத்தை ஆண்கள் வீட்டுக்கு வெளியே  வைத்துக்கொள்வதே நல்லது.. ( எல்லா ஆண்களும்  கெட்டவர்கள் அல்லதான்.. எந்த புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ யார் கண்டது? ஏன் ரிஸ்க்? )

3. தனிக்குடித்தனத்துக்கு ஆசைப்படும் பெண்கள் பிரைவஸிக்கு ஆசைப்படுகிறார்கள்.. ஆனால் பெற்றோருடன் கூட்டுகுடும்பமாக இருந்தால் எப்போதும் ஆட்கள் வீட்டில் இருந்தால் இந்த மாதிரி சம்பவங்கள் தவிர்க்கப்படலாம்..

4. இவர் கூட ரொம்ப நாளாக பழகி இருக்கேன்.. இவர் அப்படி பண்ணமாட்டார்.. நல்லவர் என எப்போதும் யாரையும் நினைக்க வேண்டாம்.. உதாரணமாக 20 வயதில் ஒருவருக்கு 36 சைஸ் பேண்ட் எடுத்தால் 30 வயசில் அவர் பேண்ட் சைஸ் 38 அல்லது 40 என மாறலாம்.. அதே போல் தான் மனித மனமும் நல்லவராக இருப்பவர் எப்போதும் நல்லவராகவே இருக்க வாய்ப்பில்லை.. உடை அளவு மாறுவது போல மனித மனமும் மாறும் தன்மையது... இன்று நல்லவனாக இருப்பவன் நாளை கெட்டவனாக மாறலாம்.. எல்லோரிடமும் , எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது..

5. இந்தப்பதிவின் நோக்கம் ஆண்களை கெட்டவர்கள் என லேபிள் பொருத்த அல்ல.. ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு மற்றவர்களுக்கு ஒரு வார்னிங்க் தரவே...

6. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம்  மனைவியை சந்தேகப்படும் கணவன் களூக்கு மத்தியில் இப்படி ஒரு இக்கட்டான சூழலிலும் தன் மனைவியை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஆதரவாக  வாதாடி அவருடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழும் சாந்தனு அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

7. மேலும் இந்த சம்பவத்தை போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என ஆணித்தரமாக வாதாடி நீதி கிடைக்கப்போராடிய அறிவுமதிக்கு வாழ்த்துக்கள். அறிவுமதி - மாளவிகா இருவரின் 20 வருட நட்பின் ஆழத்துக்கு இந்த சம்பவம் மேலும் மெருகு சேர்த்திருக்கிறது .. அவர்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்


டிஸ்கி - 1. சிலர் தனி மெயிலில் முபாரக் பேரை மட்டும் ஏன் உண்மையாக வெளியிட்டீர்கள்? பெண்கள் பெயர் மட்டும் ஏன் புனைப்பெயர்? என்று கேட்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட பெண்கள் மனம் மீண்டும் மீண்டும் காயப்படக்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் உண்மையான பெயர் தெரிவிக்கப்படவில்லை.. முபாரக் மாதிரி ஒரு கறுப்பு ஆட்டின் முகமூடியை கிழிக்க அவனது உண்மையான பெயர் சொல்வதில் தப்பு இல்லை.. மேலும் முபாரக்கின் மனைவிக்கும் இந்த மேட்டர் மெயில் அனுப்பப்பட்டுள்ளது..


டிஸ்கி  - 2  -இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் மனம் கோணாதவாறும் ,மாளவிகாவின் கணவர் மனம் பாதிக்கப்படாதது போலும் நாகரீகமாக, நாசூக்காக கமெண்ட் போடவும்.. ஏன் எனில் மிக வற்புறுத்தலுக்குப்பிறகே இந்த சம்பவம் பதிவு போட அனுமதி கிடத்தது.. நீங்கள் போடும் சின்ன தவறான வார்த்தை கூட அவர்கள் மனதை புண்படுத்த வாய்ப்புள்ளது.. உலகிலேயே மென்மையானது மனித மனம் தான். நாம் அதை காயப்படுத்தலாமா?

Monday, May 23, 2011

டாப் டென் ( 10) பெண் பதிவர்கள் யார்? ஒரு அலசல்

http://www.hinduonnet.com/thehindu/mp/2006/11/11/images/2006111101600101.jpg

பெண் எழுத்து- ஒரு பாசிட்டிவ் பார்வை பாகம் 2

பெண் எழுத்து பற்றி நான் எழுதிய முதல் பாகம் அட்டர் ஃபிளாப் ஆனது எனக்கு வருத்தமே.. சாதாரண டப்பா பட விமர்சனமே 1800 டூ 3000 பேர் படிக்கும்போது மிக சிரமப்பட்டு தயாரிக்கப்பட்ட என் உழைப்புப்பதிவு வெறும் 189 பேர் மட்டுமே படித்தார்கள் என்னும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கு,



அந்த பாகத்துல நான் பெண் எழுத்தாளர்களின் சிறந்த நாவல் பற்றி ஒரு பட்டியல் கொடுத்தேன்.. அதுல சில கருத்து வேற்றுமை.. எப்டின்னா ஒரு ஆணால் பெண் நாவல் ஹிட்டை எப்படி வரையறுக்க முடியும் என.. சரி என ஒரு ஐடியா பண்ணுனேன். எங்க ஊர்ல இருக்கற லைப்ரரில  கருத்துப்பெட்டி வைத்தேன். அதன் படி வரும் பெண் வாசகிகள் தங்கள்க்கு பிடித்த எழுத்தாளர்கள் நாவல்கள் பற்றி ஒரு கருத்து கணீப்பு நடந்தது.


1. லக்‌ஷ்மி - சூரிய காந்தம், அகிலா, மீண்டும் பிறந்தாள்

2. அனுராதரமணன் - விதைகள் , சிறை

3. வித்யா சுப்ரமணியம் - விட்டில் பூச்சிகள்,தூரத்து நிலவு,தென்னங்காற்று

4. சிவசங்கரி - மலையின் அடுத்த பக்கம்,நான் நானாக,ஏன்?

5. இந்துமதி - தரையில் இறங்கும் விமாங்கள்,மணல் வீடுகள்,கீதமடி நீ எனக்கு

6. ரமணி சந்திரன் - ஜோடிப்புறாக்கள்,வந்து போகும் மேகம்,தேவி,தவம் பண்ணி விடவில்லையடி

7. திலகவதி - கல்மரம்,கைக்குள் வானம்,கனவை சூடிய நட்சத்திரம்

8. வாசந்தி - ஆகாச வீடுகள்,புரியாத அர்த்தங்கள்

9. அநுத்தமா - ஆல மண்டபம்,ஒன்று பட்டால்,பூமா,சுருதி பேதம்

10. ஜோதிர்லதா கிரிஜா - மத்தளங்கள்

11. ராஜம் கிருஷ்ணன் - சத்திய வேள்வி,கோடுகளும் கோலங்களும்
http://www.tamilenn.info//images/stories/tamilcnn/january2011/india/leena.jpg
ஓக்கே..  லெட் கம் டூ சப்ஜெக்ட்..

இப்போ வலை உலகில் உள்ள பெண் பதிவர்கள் யார்? டாப்ல இருக்காங்கன்னு பார்ப்போம். நான் எடுக்கும் இந்த டாப் டென் தமிழ்மணம் போல் ஹிட் அடிப்படையில் அல்ல.. தர வரிசை.

பொதுவா பதிவுலகில் உள்ள பெண் பதிவர்கள் -ல் பெரும்பாலும் கவிதைகள், சமையல் குறிப்புகள் அதிகமா எழுதறாங்க.. வெகு சிலரே நகைச்சுவை உணர்வோடு எழுதறாங்க.. பெரும்பாலானோர் எழுத்துக்களில் சொந்தக்கதை சோகக்கதை அதிகம்.

அப்படி எல்லாம் இல்லாம தான் வாழும் நாட்டை பற்றிய ஒரு கலாச்சாரப்பார்வை சம்பந்தமான பதிவுகள் எழுதும் சித்ரா பதிவுலகில் நெம்பர் ஒன் பெண் பதிவர் என  என் கண்ணுக்கு தெரியறார்.

இவர் தன்னோட பதிவுகள்ல அவர் வசிக்கும் ஊர் பற்றிய பகிர்தலை,அந்த ஜனங்களோட கலாச்சாரத்தை ,நகைச்சுவையா சொல்ற விதம் அழகு..

வாரா வாரம் திங்கள் கிழமை வந்தாலே சித்ராவின் பதிவும் ஆஜர்.. வீக் ஓப்பனிங்க் டேல சிக்சர் அடிப்பார். இவர் பதிவு போட்ட 3 மணி நேரத்துல தமிழ்மணத்துல 30 ஓட்டுக்கள் வாங்கி தமிழ் மண மகுடம் சூட்டும் பதிவர் ஆகி 2 நாட்கள் அந்த சிம்மாசனத்துல அசைக்க முடியாத இடத்துல இருப்பார்.

மற்ற பதிவர்கள் அதே மகுடம் வாங்க 12 மணி நேரம் ஆகுது.. அதே போல் இண்ட்லில இவர் 45 ஓட்டுகள் வாங்க 4 மணீ நேரம் டூ 6 மணி நேரம் தான் ஆகுது.. அதை மற்ற பதிவர்கள் அடைய குறைஞ்ச பட்சம் 24 மணி நேரம் ஆகுது.. 

இவர் தனது பதிவில் இது வரை தனி நபர் தாக்குதல் செய்ததே இல்லை.. தேவை அற்ற விவாதங்களை வளர்ப்பதே இல்லை.. 

புதிய பதிவர்களை ஊக்குவிப்பதில் இவர் அனைவருக்கும் ஒரு முன்னோடியாக இருக்கார். பதிவுலகில் அதிக நேரம் ஆன் லைனில் (ON LINE) இருக்கும் பெண் லயன் (பெண் LION) இவர். இவர் பதிவுகளுக்கு கமெண்ட் போடும் லவகமான வேகம் பிரம்மிக்க வைக்கிறது. 

பெரும்பாலான பதிவுகளில் உள்ள கடைசி பேராவில் உள்ள 3 லைனை காப்பி பேஸ்ட் செய்து அது பற்றி கமெண்ட் போடுவார். பல கமெண்ட்ஸ்களில் ஹா ஹா ஹா என்ற அடை மொழி இருக்கும். ஸ்மைலி  சில சமயம் போடுவார்.

 ரெகுலராக இவர் போகும் நண்பர் பதிவுகளில் 18+ இருந்தாலோ, சர்ச்சைக்குரிய விஷயங்கள் விவாதிக்கப்பாட்டாலோ  சத்தம் இல்லாமல் வந்துடுவார்.. 

2 பதிவுகளுக்கு போக இவர் எடுத்துக்கொள்ளும் நேரம் 7 நிமிடங்கள் மட்டுமே.. 

இவர் படிக்கும் பதிவுகளில் ஏதாவது கமெண்ட்டில் யாராவது உண்மைக்கு புறம்பாக எழுதினால் உடனே ஏதாவது ஆதார லிங்க்குடன் களம் இறங்கி கலக்குவார்.


வலைப்பூ ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. 23. 12 . 2009 அன்று வலை உலகிற்கு வந்தார். 704 ஃபாலோயர்ஸ்

மைனஸ் ஓட்டே இதுவரை வாங்காத பதிவர்.. ( நோட் பண்ணீக்குங்கப்பா.. இனி போட நினைக்கறவங்க ஹி ஹி )

இவர் வெட்டிப்பேச்சு என்ற வலைப்பூ போக கவுண்டமணி செந்தில் என்ற பிளாக்கிலும் கெஸ்ட் ரோல் பொறுப்பு ஏற்றுள்ளார்.

 இவர் பதிவின் லிங்க்....

http://konjamvettipechu.blogspot.com/


வெட்டிப்பேச்சு சித்ராவுடன் ஒரு மினி பேட்டி


1. பொதுவா பதிவுலகில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் வீட்டில் அங்கீகாரம் கிடைக்காத அல்லது அனுமதி கிடைக்காத நிலையில் தான் இயங்கி வர்றாங்க.. ஆனா உங்க எழுத்துகளில் இருந்து உங்க கணவர் பூரண சுதந்திரமும் ,ஊக்குவிப்பும் தர்றார்னு தோணுது..  வாட் யூ ஃபீல்..?
/////பொதுவா பதிவுலகில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் வீட்டில் அங்கீகாரம் கிடைக்காத அல்லது அனுமதி கிடைக்காத நிலையில் தான் இயங்கி வர்றாங்க.. ////

....   அப்படியா?  Thats news to me.
/////ஆனா உங்க எழுத்துகளில் இருந்து உங்க கணவர் பூரண சுதந்திரமும் ,ஊக்குவிப்பும் தர்றார்னு தோணுது.. /////

....... பூரண சுதந்திரம் என்னிடமே இருக்கிறது. அதை என் கணவர் தருகிறார் என்று  நான் நினைத்தால், நான் என் சுதந்தரத்தை இழந்த அடிமை ஆவேன். எப்பூடி! 


///வாட் யூ ஃபீல்..?////

........ You mean,  How I feel about it?  இதுக்கெல்லாம் பீலிங்க்ஸ் ஆகுமா?  

அவ்வ்வ்வ்........

2. இண்ட்லில் அதிகம் ஓட்டு போட்ட பதிவர் லிஸ்ட்ல நீங்க முதல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்..பொதுவா புதிய பதிவர்களை ஊக்குவிப்பதும் அங்கீகாரம் கொடுப்பதும் உங்க  பேசிக் கேரக்டரா இருக்கு.. இது சின்ன வயசுல இருந்தே ஊறியதா?
.//// இண்ட்லில் அதிகம் ஓட்டு போட்ட பதிவர் லிஸ்ட்ல நீங்க முதல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்////

..........  நான் எந்த அளவுக்கு வெட்டி வேலை பார்க்கிறேன் என்று  டமாரம் அடிச்சு அறிவிச்சிட்டாங்களே..... ரொம்ப நன்றிங்க.
//////பொதுவா புதிய பதிவர்களை ஊக்குவிப்பதும் அங்கீகாரம் கொடுப்பதும் உங்க  பேசிக் கேரக்டரா இருக்கு.. இது சின்ன வயசுல இருந்தே ஊறியதா?////

....... ஆமாங்க.  பள்ளிக்கூட நாட்களில் - ஒரு நாள் - லஞ்ச் பிரேக்ல, அப்பா ஷர்ட் பாக்கெட்ல இருந்து சுட்ட காசுல ஒரு ஆரஞ்சு குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு கிட்டு இருந்தேன்.  அப்போ, புதுசா என் வகுப்பில் சேர்ந்த தோழி, என் குச்சி ஐஸையே பார்த்துக்கிட்டு பக்கத்துல வந்து நின்னுட்டாள்.  உடனே, என் ஐஸ் குச்சியை அவள் கிட்ட கொடுத்து அவளுடைய தோழியாக மாறிட்டேன். :-)))))


3. இங்கே எல்லாம் மொய்க்கு மொய் சிஸ்டம் தான் பெரும்பாலும் ஃபாலோ பண்றாங்க.. நீ என் பிளாக் வா கமெண்ட் போடு.. நான் உன பிளாக் வர்றேன்.. இப்படி.. ஆனா வாரம் ஒரு முறை பதிவு போடும் நீங்க  வாரம் 5 நாட்கள் பல பிளாக்ல கமெண்ட் போடறீங்க.. ஓட்டும் போட்றீங்க.. இந்த மனோ பக்குவம் எப்படி வந்தது?

/////இங்கே எல்லாம் மொய்க்கு மொய் சிஸ்டம் தான் பெரும்பாலும் ஃபாலோ பண்றாங்க..////// 

....................   நாம் ப்லாக்ல கருத்துக்களைத்தான் பகிர்ந்து கொள்கிறோம்னு நினைச்சேன்.  கல்யாண விருந்து பரிமாறிக் கொள்கிறோம்னு தெரியாம போச்சே!


////இப்படி.. ஆனா வாரம் ஒரு முறை பதிவு போடும் நீங்க  வாரம் 5 நாட்கள் பல பிளாக்ல கமெண்ட் போடறீங்க.. ஓட்டும் போட்றீங்க.. இந்த மனோ பக்குவம் எப்படி வந்தது?////

.......... ஓ அதுவா?  அது கம்பெனி சீக்ரட்.  இருந்தாலும், நீங்க இவ்வளவு தூரம் கேட்பதால் சொல்கிறேன்.  ஆயிரம் டாலர்க்கு செக் அனுப்பி வைங்க.  டெபாசிட் ஆனதும், பதில் உடனே மெயில்ல வரும்.  ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

4. திங்கள் கிழமை நீங்க பதிவு போட்டா பதிவு போட்ட 3 மணீ நேரத்துல தமிழ் மண மகுடம் கிடைச்சுடுது.. திங்கள் செவ்வாய் 2 நாளும் நீங்க தான். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படலை.. வாட் யூ ஃபீல்?
........  நம்பினால் நம்புங்கள்.    உண்மையில் நீங்க சொல்லித்தான் தெரியது.   திங்கள், செவ்வாய் - தமிழ்மண மகுடத்தை எனக்காக விட்டு கொடுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 
 

5. ஆண்கள் வலைப்பூ , பெண்கள் வலைப்பூ என பிரிச்சுப்பார்ப்பீங்களா/ அப்படி எல்லாம் கிடையதா/
.............  அப்படி பிரிச்சு பார்க்க வேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை.

6. தமிழ்மண நட்சத்திரப்பதிவாளர் அனுபவம் எப்படி இருந்தது? வாரம் ஒரு போஸ்ட் போடும் நீங்க அந்த வாரம் எப்படி சமாளிச்சீங்க?

..............  ரொம்ப சந்தோஷமாக இருந்தது.  Temporary ஆக இரண்டு assistants வேலைக்கு சேர்த்துக்கிட்டேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....  

7. எந்த சர்ச்சைலயும் சிக்காம இது வரை தாக்கு பிடிச்சுட்டீங்களே.. அது எப்படின்னு புது பதிவர்களுக்கு சொல்லுங்க..


........... தினமும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து, குளிச்சு முடிச்சு,  நெத்தியில சந்தனப் போட்டு வச்சுக்கிட்டு,
வெறும் வயித்துல, ஒரு கப் வனிலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு,
 "கொஞ்சம் வெட்டி பேச்சு சரணம்!
சச்சரவில் மாட்டாமல் இருக்க சரணம்!"  என்று நூறு முறை சொல்லி வர எந்த சர்ச்சையிலும் சிக்காம இருக்கலாம்.

8. கடைசியா ஒரு வம்பு கேள்வி  .. உங்களுக்கு பிடிச்ச ஒரு ஆண் பதிவர் வலைப்பூ , ஒரு பெண் பதிவர் வலைப்பூ சொல்லுங்க
நிறைய வலைப்பூக்கள் உள்ளன:  குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் - உதாரணத்துக்கு:  

 1. http://blogs.herald.com/dave_barrys_blog/  
 
2. http://www.thevine.com.au/blog/clembastow/on-funny-women-_-let%27s-end-this20110421.aspx
 
 எது ஆண் வலைப்பதிவரின் வலைப்பூ, எது பெண்பதிவரின் வலைப்பூ என்று அவற்றில் நீங்களே பிரித்து பார்த்துக்கோங்க. 


-தொடரும்