Showing posts with label dth. Show all posts
Showing posts with label dth. Show all posts

Thursday, January 17, 2013

கமலின் டி டி ஹெச் - நான் ஆதரவு - பிரகாஷ் ராஜ் பேட்டி

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Cine-Family-Gallery/Prakash-Raj-Family/Prakash-Raj-Family-0000.jpg 
நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா !

எஸ்.கலீல்ராஜா, ஆ.அலெக்ஸ் பாண்டியன்


படங்கள்: கே.ராஜசேகரன்

எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டால், ''அடுத்த நொடி நிச்சயமில்லை நண்பா. இந்த நொடி தீவிரமா, ஆழமா, சந்தோஷமா இருக்கேன்!'' - பெரிய கண்கள் இன்னும் அழகாய் விரிய, வரவேற்கிறார் பிரகாஷ்ராஜ். நீண்ட நாட்களாக இந்தி, தெலுங்கு என்று பிஸியாக இருப்பவரிடம் பேசியதில் இருந்து...


''என்ன... தமிழ்நாடு பக்கம் பார்க்க முடியறதே இல்லை?'' 


''இதோ திரும்ப வந்துட்டேன். என் மகள், என் நண்பர்களின் மகன், மகள்னு நிறையப் பேரைப் பார்த்து, அவங்க படிக்க சிரமப்படுறதைப் பார்த்து 'என்ன கல்வித் திட்டம் இது?’ங்கிற கவலையும் கோபமும் வந்துச்சு. அதைத்தான் 'தோனி’யா எடுத்தேன். அதை இயக்கும்போது உள்ளுக்குள்ளே ஒரு விதமான வலியோட இருந்தேன்.


 சரி, கொஞ்சம் ரிலாக்ஸ்டா கொண்டாடுற மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு தோணுச்சு. 'சால்ட் அண்ட் பெப்பர்’னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அழகான ஒரு காதல் கதை. காதலைவிடக் கொண்டாட வேண்டிய விஷயம் வேற என்ன இருக்கு? நடுத்தர வயதுக் காதல், காதலோட வேற ஒரு பரிமாணம் காட்டுற படம் அது. சமையல், உணவு, உணர்வு, ருசி, காதல், தனிமைனு எல்லாருக்குமான கதை அது. அதை 'உன் சமையலறையில்’னு தமிழில் படமாப் பண்றேன். இளையராஜா இசை. தமிழ், தெலுங்கு ரெண்டுலேயும் படம் ரிலீஸ் ஆகும்!''


''2012-ல் பெரிய படங்கள் நிறைய அடி வாங்கி, சின்னப் படங்கள் ஹிட் ஆகின. இதை எப்படிப் பார்க்கிறீங்க?'' 


''பொதுவா, சினிமாவில் ஹிட் ஆனவங்க ஒரே ஃபார்மெட்டில் டிராவல் பண்ணுவாங்க. மாற்றுச் சிந்தனையை அமுக்கிடுவாங்க. ஆனா, அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாவது புதிய சிந்தனைகள் அடிச்சுக்கிட்டு மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றினு நான் பார்க்கலை. 


இது புதிய சிந்தனைகளோட வெற்றி. மக்களோட ரசனையைப் புரிஞ்சு, காலத்துக்கு ஏத்த மாதிரி சினிமா மாறணும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதை எதிர்க்கும் விஷயமும், தடுக்கும் விஷயமும் கண்டிப்பா நடக்கும். அதையும் தாண்டி இளைஞர்கள் வரணும். ஏன்னா, இன்னைக்கு டாப் டைரக்டர்கள், டாப் நடிகர்கள் அத்தனை பேரும் இந்த மாதிரி எதிர்ப்பைத் தாண்டி வந்தவங்கதான்!''


'' 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்ல ரிலீஸ் பண்றதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?'' 


''கமல் எடுத்திருக்கிறது ரொம்ப முக்கியமான முடிவு. நான் வரவேற்கிறேன். காலம்காலமா... 'நான் இப்படி ஒரு படம் எடுத்திருக்கேன். தயவுசெஞ்சு தியேட்டருக்கு வந்து படம் பாருங்க’னு சினிமாக்காரங்க பிச்சை எடுக்கிற மாதிரிதான் கேட்டுட்டு இருக்கோம். சினிமாவில் இருக்கிறவங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும்... நாம இரண்டு மணி நேரமும் ஒரு ஆடியன்ஸ்கிட்ட காசு பணத்தோட அவங்க நேரத்தையும் வாங்குறோம். என்னைக் கேட்டா, பணத்தைவிட நேரம் ரொம்ப முக்கியமானது. அதனால வாடிக்கையாளர் எங்கே இருக்காங்களோ, அங்கேயே தேடிப் போய் பீட்ஸா, கல்தோசைனு டோர் டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதைத்தான் கமலும் பண்ண நினைக்கிறார்.



சாட்டிங்ல என்னிடம் வந்தார் லண்டன் தமிழ் இளைஞர். 'தோனி பார்த்தேன் சார். ரொம்ப நல்லா இருந்தது!’னு சொன்னார். நான் 'தோனியை அங்கே ரிலீஸ் பண்ணலையே?’னு கேட்டேன். அதுக்கு 'திருட்டு விசிடி-யில் பார்த்தேன் சார். நான் பிரகாஷ்ராஜ் படத்தை உடனே பார்க்க ஆசைப்பட்டேன். இங்க உங்க படம் வந்து சேர மூணு மாசம் ஆகுது. அதுக்காக 200 கி.மீ. நான் டிராவல் பண்ணணும். ரிலீஸ் அன்னைக்கே நானும் பார்க்கிற மாதிரி இன்டர்நெட்ல ரிலீஸ் பண்ணுங்க. நான் நேர்மையா பணம் கட்டிப் பார்க்கிறேன்’னு சொன்னார்.


 இவரை மாதிரி ஒரு குரூப் தியேட்டருக்கு வர்றதையே நிறுத்திட்டாங்க. சிலருக்கு நேரம் இல்லை. கமல் யோசிக்கிற டோர் டெலிவரி சிஸ்டம் இந்த குரூப் ஆடியன்ஸை திரும்ப சினிமா பக்கம் இழுத்து வரும். சரி, எதுவும் வேண்டாம். புது முயற்சிக்கு என்னதான் ரிசல்ட் கிடைக்குதுனு பார்க்கலாமே? ஒரு படம் இண்டஸ்ட்ரியோட வாழ்க்கையைத் தீர்மானிக்காதே!''



''சூர்யா பண்ணின 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ டி.வி. ஷோவை திடீர்னு நீங்க நடத்துறீங்களே?'' 



''அது நிச்சயம் நல்ல அனுபவமா இருக்கும். விகடன்ல 'சொல்லாததும் உண்மை’ எழுதினப்ப, எப்படி முகம் தெரியாத மனிதர்கள்கிட்டே அறிமுகம் ஆனேனோ, அதே மாதிரி விதவிதமான மக்கள்கிட்டே திரும்பக் கை குலுக்கப்போறேன். கட்டி அணைக்கப்போறேன். இன்னைக்கு டெலிவிஷன் ஸ்ட்ராங் மீடியா. அதில் நானும் இருப்பது சந்தோஷம்!''


''ரகுவரன், பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாக் கேரக்டரும் பண்ற மல்டி பெர்சனாலிட்டி ஆர்ட்டிஸ்ட் அடுத்து வரவே இல்லையே?'' 



''நிச்சயம் வருவாங்க. ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா மாதிரியான நடிகர்கள் அந்த இடத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்க. நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதுசா உள்ளே வர்றாங்க. உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமா இருக்கும்.



 அதுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகள் ரெடியா இருக்கணும். பிரகாஷ்ராஜ் பெரிய நடிகன் ஆகிட்டான்னு சொல்றாங்க. அதுல எனக்கு எந்தச் சந்தோஷமும் இல்லை. ஏன்னா, என்னைப் பார்த்து இளம் தலைமுறை ஆட்கள் பயப்படுறாங்க. சிலர் பார்த்த முகமா இருக்கேனு யோசிக்கிறாங்க. இதனால நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால 'நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா!’னு நான் கத்திச் சொல்ல வேண்டிஇருக்கு!''  



''டூயட் மூவீஸ்ல எடுத்த படங்கள் தரமா இருந்தாலும் வசூல்ல சரியாப் போகலைனு வருத்தம் உண்டா?'' 



''ஒரு தயாரிப்பாளரா நான் கணக்கு வழக்கு பார்க்கிறதே இல்லை. ஆனா, நடிகனா நான் பக்கா பிசினஸ்மேன். நடிகன் என்கிற வியாபாரிதான் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜின் இழப்புகளைச் சரிபண்ணிட்டே இருக்கிறான். நான் விரும்புற, நான் நினைக்கும் சில நல்ல படங்களை இந்த சொசைட்டிக்குத் தரணும்கிற ஆசையில்தான் படங்கள் தயாரிக்கிறேன். 




நான் தயாரிக்கிற படங்கள் ஒரு கோடியோ, ஒன்றரைக் கோடியோ நஷ்டமாவது உண்மைதான். நடிகனா நான் வாங்கும் சம்பளத்துல இந்த இழப்புகளை என்னால் சரிசெய்ய முடியுது. சில பேர் சீட்டாடுவாங்க. சில பேர் ஊர் சுத்துவாங்க. எல்லாருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். எனக்குக் கெட்ட பழக்கம் படம் தயாரிக்கிறது. படம் ஓடுதோ இல்லையோ, நாம சொல்ற கருத்து மக்களைப் போய்ச் சேருதான்னு தெரியலையேனு வருத்தமா இருக்கும். 'தோனி’ சரியாப் போகலை. ஆனா, இன்டர்நெட்ல 16 லட்சம் பேர் பார்த்திருக்காங்க. இப்படியாவது பார்க்கிறாங்களேனு சந்தோஷமா இருக்கு!''



''பிரபுதேவா-நயன்தாரா சேர்றதுக்கு நீங்களும் ஒரு காரணம். இப்போ பிரிஞ்சிட்டாங்க?'' 



''காதல் வருவதற்கும் அது உடையறதுக்கும் அற்பமான காரணங்கள் போதும். அவங்க வாழ்க்கையில அவங்க ரொம்ப விரும்பினாங்க. அப்போ ஒரு நண்பனா நானும் கூட நின்னேன். ஏதோ ஒரு பெர்சனல் காரணம்... ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. அது அவங்களோட நன்மைக்காகப் பிரிஞ்சுட்டாங்க. இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது!''



''பொண்ணுங்க நல்லா வளர்ந்திருப்பாங்க... எப்படி இருக்காங்க?'' 



''மூத்தவ பூஜா அழகா வளர்ந்திருக்கா... ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்கா. போட்டோகிராஃபி, பெயின்டிங், மியூஸிக்னு கலைகள் மேல் ஆர்வம். போன சம்மர்ல பாரீஸ், இந்த வின்டர்ல ஜெர்மன்னு சந்தோஷமா ஊர் சுத்திட்டு இருக்கா. தனக்கு என்ன வேணும்கிறதில் ரொம்ப தெளிவா இருக்கா. அவ தொடர்ந்து 12 வருஷம் படிச்சிட்டா. அதனால, ஒரு வருஷம் கேப் எடுத்து நல்லா என்ஜாய் பண்றதுனு நானும் என் பொண்ணும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். சின்னவ மேனகா... எட்டு வயசு. ஜாலியா வளர்க்கிறேன். ஜாலியா வளர் றாங்க!''


நன்றி - விகடன் 



http://chennaionline.com/images/articles/September2012/60700240-64e2-42ed-9bc3-d4d20a055fb3OtherImage.jpg

Saturday, January 12, 2013

கமலை மிரட்டிய 13 பேர்! - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

Vishwaroopam-On-Location-Stills-06072012921592e.jpg (940×627)
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 



'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல்



. அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம்  முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளி​​பரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார்.


மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக

இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளி​களின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக் கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார்.



என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட் டாரத்தில் விசாரித்தோம்.


''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்​திருக்கிறது. சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால்,


 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் 



அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார். 'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.




இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல​வில்லையாம். அதன்பிறகே, 'விஸ்​வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.


கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்து​கொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார்.


பார்க்கலாம்!

எம்.குணா

படங்கள்: ஆ.முத்துகுமார்  


newviswa-14.jpg (630×420)

readerls views


1.மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள்.. சரியா சொன்னிங்க. அதே மாதிரி தியேட்டர்காரங்களுக்கும் தங்களோட அங்காடில என்ன பொருள விற்பனை செய்ய வேண்டும் கூடாது என்று முடிவு பண்ண உரிமை இருக்கு. தியேட்டர்காரங்க ஒரு சங்கமா செயல்பட்டு முடிவு எடுக்கராங்க அவங்கள்ள சிலர பிரிச்சு தன் வழிக்கு கொண்டு வரும் போது எதிர்ப்பு வரது சகஜம்தான்.



 டிடிஎச்ல படத்த போட்டா பல தியேட்டர்களுக்கு பெரும் பாதிப்பு வரும் என்பது உண்மைதான். அதுவும் இல்லாமல் கமலுக்கு தியேட்டர் ரிலீஸுக்கு 80 கோடி பணம் வேணுமாம் (தமிழுக்கு மட்டும்) அவருக்கு 80 கோடி தரணும்னா டிக்கட் கலக்ஷன் 250 கோடி வரணும். 250 கோடில 35% சதம் வரிக்கு போயிடும் மிச்சம் இருக்கும் 160 கோடில 50% சதம் தியேட்டர்காரங்க ஷேர் மிச்சம் இருப்பதுதான் படத்த வாங்கினவங்க (வினியோகிஸ்தர்) ஷேர்.



 ஆனானபட்ட ஷாருக்கான் படங்களே அகில இந்தியா கலக்ஷன் 120 கோடிய தாண்டரதில்லை. 250 கோடி டிக்கட் கலக்ஷன்னா ஒரு டிக்கட் விலை 100 ருபான்னு போட்டாகூட 2.50 கோடி பேரு இந்த படத்த பார்க்கணும் அதவது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் இப்படி உள்ல 5 சிட்டி மக்கள் எல்லாரும் ஒருத்தர் விடாம 100 ருபா குடுத்து இந்த படத்த பார்க்கணும். நடக்கர காரியமா?




2. ஒரு தொழிலில் லாப நட்டம் சகஜம். லாபம் வரும் என்று நம்புபவர் அதில் இறங்கட்டும்.மற்றவர்கள் விலகி கொள்ளட்டும் எதற்க்காக ஒரு ரசிகனுக்கு டிடிஎச்ல படம் பார்க்கும் வாயப்பை தடுக்க வேண்டும்?




3. ஆக கமலுக்கு நல்ல விளம்பரம். ரஜினி வேற மாதிரி விளம்பரம் - இவர தடாலடியாக அரசியல்வாதிகளை நாடாமல் விளம்பரம். ஆனால் இவரது அப்ரோச் பிடித்திருக்கிறது. (இவர் படங்களும், அவற்றில் இவர் எல்லா பிரேமிலும் வர முயற்சிக்கும் சுயநலமும் வெறுப்பேற்றினாலும்).






4. 'நடிகர்களும் பிஸினஸ்மேன்கள் தான்'...என்று கமல் ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியிருந்தார். எப்போது கலைஞன் வியாபாரியாக முடிவு செய்து விட்டானோ அப்போது வியாபார உலகின் தந்திரங்களை வென்றால் தான் நிலைக்க முடியும்.அந்த நோக்கில் பார்க்கும் போது நல்ல கலைஞனாய்

மட்டுமல்ல திறமையான வியாபாரியாகவும் கமல் தோன்றுகின்றார்.
மிக தரமான, நல்ல பொருளை விற்கும் வியாபாரியிடம் தான் இத்தகைய
உறுதியையும்,போராடும் குணத்தையும் பார்க்க முடியும்.'விஸ்வரூபம்' அந்த விதத்தில் நிறைய எதிர்பார்ப்பினை கொடுத்திருக்கிறது....
வாழ்த்துக்கள் கமல்...!!!





5. ஆக மொத்தம் தமிழகம் இப்போ மஃபியாகைகளில் உள்ளது. எது செய்தாளும் அவர்களுக்கு மாமூல் வர வேண்டும். என்ன நாம் மக்களாட்சி நடகிர நாட்டில் உள்ளோமா?. சந்தேகம் தான்.




6. சீக்கிரம்... படம் நீங்க ரீலிஸ் பண்றதுக்கு முன்னாடி திருட்டு விசிடியில் ரிலிசாகப்போகு




7. இவருக்கு எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்....இது ஒன்றே போதும் இவருக்கு ஆப்பு வைக்க... ( உதாரணம்... கழ்டப்பட்டு இளையராஜா போட்ட டுயன இவரு பாடி கெடுக்கிற மாதிரி...)




8. தொழில் நுட்பத்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் ஹாசன் முன்னோடி. புதுமைகள் புகுத்தும் போது எதிர்ப்புகள் இருக்கவே செய்யும். அனால், கமலுக்கு, தமிழ் ரசிகர்களின் பேராதரவு எப்போது உண்டு!


9. இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள்.


கோழைகள், வேறு யாரோ (அரசியல்?) பின்னனியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


கமலின் முடிவும், எதிர்த்து நின்ற சவாலுக்கும் பாராட்டுக்கள். 


படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்



thanx - ju vi 



Vishwaroopam-Reservation-Starts-Tomorrow-Poster.jpg (538×667)a




அன்புக்குக் கட்டுப்பட்டு விஸ்வரூபம் 25 ல் திரையரங்கில் வெளியீடு: கமல்ஹாசன்



விஸ்வரூபம் படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


திரையரங்க உரிமையாளர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 



டி.டி.எச். நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் எந்தத் தேதியில் வெளியிடுவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.



a





Thursday, January 10, 2013

உலக நாயகன் கமல்ஹாசனிடம் சில கேள்விகள்

http://www.indicine.com/images/gallery/bollywood/movies/vishwaroop/68871-vishwaroop4-large.jpg 

 கலைஞானி கமலின் திரை வாழ்க்கையை 2 பகுதிகளா பிரிக்கலாம். மணிரத்னத்துடன் இணைந்து  பணி ஆற்றிய நாயகன் ப்டத்துக்கு முன்பும் பின்பும் என . ஏன்னா நாயகன் படத்துக்குப்பிறகு கம்லின் லைஃப் ஸ்டைலே மாறிடுச்சு . ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தனும், கெட்டப் சேஞ்ச் பண்ணனும்  , ஹேர் ஸ்டைல் , மேனரிசம் , டிரஸ்ஸிங்க் சென்ஸ் உட்பட வெரைட்டி காண்பிக்கனும் என்ற  தணியாத தாகம் கொண்டவர்  ஆனார். 

சத்யா படத்துல  ஆக்‌ஷன் காட்சிகளில் புது ஆக்ரோஷம் . ஃபைட் சீனில் டிஷ்யூம் டிஷ்யூம் சவுண்ட் இல்லாம புதுசா ட்ரை பண்ணாங்க , பேசும் படம் இந்திய சினிமாவில் யாரும் செய்யாத பரிசோதனை முயற்சி . வசனமே இல்லாம ஆனா பிரமாதமான நகைச்சுவை படம். ஆளவந்தான் ல  ஜிம் பாடி கொண்டுவந்தது , மகாநதில  முழுக்க முழுக்க ஜெயில்வாழ்க்கையின் அவலத்தை சொன்னது ( எந்த ஒரு தமிழ்ப்படத்திலும் ஜெயில் காட்சிகள் இவ்வளவு விஸ்தீரத்தோடு இல்லை )


மைக்கேல் மதனகாமராஜன்ல 4 வேடங்கள்ல அவர் செஞ்ச மாதிரி இதுவரை தமிழ்ல யாரும் செய்ய்லை. செம காமெடி படம். .அபூர்வ சகோதரர்கள்ல அவர்  குட்டி அப்புவா நடிச்ச ரகசியத்துக்கான விடை இதுவரை யாருக்கும் தெரியலை .

குருதிப்புனல் , மகாநதி ல அவரோட திரைக்கதை அறிவு பிரமாதமா பேசப்பட்டது . மிஸஸ் டவுட் ஃப்யரோட உல்டாவா இருந்தாலும் அவ்வை சண்முகி தமிழுக்கு புதிய முயற்சி ( பிரசாந்த் ஆணழகன் ல ஒரு முயற்சி பண்ணி இருக்கார் ) .

நிற்க . இவை எல்லாம் எதுக்கு? ஒரே கமல் புராணமா இருக்குன்னு யோசிக்கறீங்களா? நான் இப்போ கேட்கும் கேள்விகளை வெச்சு நீ ரஜினி ரசிகனா?  கமல்னா உனக்கு ஆகாதா? என நீங்க நினைச்சுடக்கூடாதே, அதுக்குதான் இந்த முன்னுரை , தமிழ் சினிமாவில்  கமல் ஒரு சகாப்தம் என்பதில் ஐயம் இல்லை .

 அன்பே சிவம் படத்தில்  சுனாமியை பற்றி சொன்னபோது நம்ம ஆட்களுக்கு சுனாமியின் தீவிரம் பற்றி தெரியலை . 10 வருடங்களுக்கு முன் கூட்டியே சிந்திப்பவர் தான் அவர். ஆனா இப்போ விஸ்வரூபம் பட பிரச்சனைல ஆழம் தெரியாம காலை விட்டுட்டார். அவரிடம் ஒரு சாதாரண பொது ஜனமா என்னோட கேள்விகள் .


சரித்திர நாயகன் கமலிடம் சாமான்யனின் கேள்விகள்



1. படத்தோட பட்ஜெட் எகிறிடுச்சு , 95 கோடி ஆகிடுச்சு என்கிறீங்க  அதனால தியேட்டர்காரங்க கம்மி ரேட்டுக்கு கேட்கறாங்க , கட்டுபடி ஆகலை , அதனலாதான் டி டி ஹெச் ரிலீஸ் திட்டம்னு சொல்றீங்க ஓக்கே . ஒரு வீடு கட்டனும்னா  ப்ளூ பிரிண்ட் போட்ட பின் முதல் வேலையா பட்ஜெட் போடுவோம் . இஞ்சினியர் சொல்லும் எஸ்டிமேட்டை விட நம்ம கிட்டே  டபுள் மடங்கு பணம் இருக்கனும்.  ஏன்னா அவர் 10 லட்சம் சொன்னார்னா 17 லட்சம் ஆகிடும். லோன்  சோர்ஸ் எல்லாம் நாம ரெடி பண்ணிக்கனும்
 உங்க மார்க்கெட் வேல்யூ எவ்ளவ்? என்ன ரேட்டுக்கு போகும்? என்ற கால்குலேஷன் இவ்வளவு வருட திரை உலக வாழ்வில் தெரியாம போயிடுமா? ஏன் அகலக்கால் வைச்சீங்க?சன் டி வி , சன் பிக்சர்ஸ் இப்படி காம்பினேஷன் போட்டிருக்கலாமே? 


2. உங்க டி டி ஹெச் திட்டம் விளம்பரங்கள் நம்பி பலர் பணம் கட்டி இருக்காங்க. எல்லாரும் உங்க முகத்துக்காகத்தான் பணம் கட்டி இருக்காங்க , இப்போ வந்து திடீர்னு அறிவிச்ச தேதில மாற்றம் , டி டி ஹெச் பணம் திரும்ப வருமா? என்பது டவுட் என்றால் எப்படி?

>>>>டி.டி.ஹெச். காசு திருப்பித் தரப்படுமா எனும் சட்ட விபரங்கள் எனக்குத் தெரியாது.


பணம் வசூல் பண்ணும்போது “ கடைசி நிமிடத்தில் வெளியிடுவதில் மாற்றம் நிகழ்ந்தால் பணம் வாபஸ் இல்லை , அல்லது அது பற்றி அந்தந்த நிறுவனங்கள்தான் முடிவெடுக்கும், எனக்கும் அதற்கும் எந்த சமப்ந்தமும் இல்லை “ என முன் கூட்டியே அறிவித்தீர்களா? 


3. இப்போ ஈரோட்டில் 6 தியேட்டர்கள் விஸ்வரூபம் புக் பண்ணி இருக்காங்க. உங்க டீலிங்க் என்ன? அட்வான்ஸ் வேண்டாம். DTH ரிலீஸ் என்பதால் ரிஸ்க் அதிகம் , அதனால் வர்ற லாபத்துல அதாவது வசூல் பணத்துல  60 %  எனக்கு 40 % உனக்கு அப்டினு அக்ரீமெண்ட் போட்டீங்க. உங்களை நம்பி கொங்கு மண்டலத்துல  உங்க படத்தை  புக் பண்ண தியேட்டர்ங்க கடைசி டைம் அறிவிப்பால் இப்போ எந்தப்படத்தை புக் பண்ணுவாங்க ? 

>>>> என்னுடைய செளகரியத்துக்காக மட்டுமே ரிலீஸை தள்ளி வைக்கிறேன் 


உங்க தனி நபர் சவுகர்யத்துக்காக எத்தனை பேர்க்கு அசவுகர்யம்னு பார்த்தீங்களா? வியாபார உலகில் இது சகஜம், ஆனா உங்க நம்பக்த்தன்மை குறைஞ்சுடுச்சே? இப்போ ஒரு கோர்ட் தடையோ , வேற எதிர்பாராத சிக்கலோ வந்து படம் ரிலீஸ் பண்ண முடியலைன்னா ஓக்கே , ஆனா உங்க தனிப்பட்ட முடிவால  ரிலீஸ் ஆகலைன்னா அதுக்கு நீங்க தானே தார்மீகப்பொறுப்பு ? 



4.  >>>> என்னுடைய படத்தின் தேதியை அறிவிக்க என்னைத் தவிர வேறு யாருக்கும் தகுதியோ அருகதையோ இல்லை


இந்த ஸ்டேட்மெண்ட் ஓவரா  தோணலை? அப்புறம்  ஏன் ஜனவரி 11ன்னு அறிவிச்சீங்க ?  சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போகிறது  அப்டினு சொல்லி இருக்கலாமே? 


5.  டி டிஹெச்சில் படம் வந்தால் அதை காப்பி பண்ண முடியாது , அப்படி ஒரு தொழில் நுட்பத்துல வெளியிடுவோம் அப்டினு ஆணித்தரமா முதல்ல சொன்ன நீங்க கேபிள் ஆபரேட்டர்கள் “இல்லை , நாங்க காப்பி பண்ணுவோம் அப்டினு சவால் விட்டதும் பல்டி அடிச்சீங்க 


>>>>பாலில் தண்ணி கலப்பதே தப்பு தான். அதே போல தான் டி.டி.ஹெச்.சில் ரிகார்ட் செய்யக்கூடாது என்று சொல்லி செய்தால் அது தப்பு தான் 



6. யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை , நீங்க பதிலே சொல்ல முடியாத , சமாளிச்சு மழுப்ப முடியாத ஒரு கேள்வி

மக்கள் ரூ 1000 பணம் கட்டியதுக்கு முக்கியக்காரணம் என்ன?  தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகும்  முன்பே நாம படம் பார்க்கலாம் என்ற ஆர்வம் தானே? அப்படித்தானே முதல்ல மார்க்கெடிங்க் பண்ணுனீங்க>?  இப்போ வசூல் பண்ணிட்டு  படம் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் டி டி ஹெச்சில் ரிலீஸ் அப்டின்னா எப்படி?  இது மோசடி ஆகாதா?

 நீங்க நேர்மையானவர் எனில் என்ன பண்ணனும் ?  வாங்குன பணத்தை எல்லாம் எல்லாருக்கும் ரிட்டர்ன் பண்ணிட்டு புதுசா அறிவிக்கனும் .  அப்போ யார் புக் பண்றாங்களோ  அவங்களுக்கு படம் காட்டுனா ஓக்கே 




 7. ஒரு விஷயத்தை ஓப்பனா சொல்லப்போனா நீங்க எதிர்பார்த்த அளவு டி டி ஹெச் புக்கிங்க் இல்லை. உங்க டார்கெட் மினிமம் 50 கோடி இதுல பார்த்துடலாம்னு இருந்தீங்க.. தமிழன் சிக்கனவாதி . மேக்சிமம் ரூ 200க்குள் முடிக்க வேண்டிய செலவில் ஏன் வீணாக ரூ 1000 கொடுக்கனும் அப்டினு நினைச்சு அதிகம் பேர் புக் பண்ணலை . அப்படி புக் பண்ணி இருந்தா நீங்க தியேட்டர்காரங்களை சட்டையே பண்ணி இருந்திருக்க மாட்டீங்க , இதான் உண்மை. உண்மை என்னைக்கும் கசக்கும். ஆனா மீட்டிங்க் முடிஞ்சு வந்து





>>>>அவங்க கெஞ்சினாங்க. நான் முடிவு செஞ்சிருக்கேன். வித்தியாசத்தைப் புரிஞ்சுக்குங்க’ 

 அப்டினு சொன்னீங்க... இது சரியா? அவங்க ஏன் உங்க கிட்டே கெஞ்சனும்? உங்களுக்குதான் தேவை இருக்கு.

 உண்மையிலேயே நீங்க இந்த விஷயத்துல ஜெயிச்சிருந்தா  இந்த 2 ல ஏதாவது ஒண்ணை நடத்தி காட்டி இருக்கனும்

1. சொன்ன தேதில சொன்ன தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்றது 

2. வாக்குத்தந்த படி , சவால் விட்ட படி டி டி ஹெச் ஒளிபரப்பை தியேட்டர் ரிலீஸ்க்கு முந்தின நாள் ஒளிபரப்புவது 


 இந்த 2 லயும் உங்களால நிகழ்த்திக்காட்ட முடியலைன்னா அப்போ அது தோல்விதானே?  


8. >>> டி.டி.ஹெச். ரிலீஸூக்கு எக்கச்சக்க enquiry வந்தது. நேரக் குறைவு! 

 இது அப்பட்டமான பொய். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் எங்க ஊர் சென்னிமலைல  மொத்தமே 12 பேர் தான் புக் பண்ணி இருக்காங்க . ஈரோட்டில்  எனக்குத்தெரிஞ்சு  40 பேர் புக் பண்ணி இருக்காங்க.. எப்போ போனாலும் ஆஃபீஸ் காத்து வாங்கிட்டு இருக்கு.. 




9. >>>>திரைத்துறையிலிருந்து இல்லீகல் பிரஷர்கள் வந்தன.அதுக்குத்தான் போலீஸ்ல புகார் குடுத்தாச்சே?

>>>>>>13 பேருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். யார் என்று இப்போது சொல்ல மாட்டேன். 

உங்களுக்கு 3000 பேர் லீகல் நோட்டீஸ் அனுப்பப்போறாங்க , ஏன்னா நீங்க டி டி ஹெச் மேட்டர்ல சீட்டிங்க் பண்ணிட்டீங்க 







10. >>>>>>>புதியது என்றால் அது லேட்டாக வரக்கூடாது..

 ஆமா, உங்க படம் லேட்டாத்தானே வருது?


11. >>>>>>>>பிற்காலத்தில் மொபைல் ஃபோனில் கூட தமிழ் திரைப்படங்கள் காண ஆசைப்படலாம்

>>> நடிகர் சங்கத்திலிருந்து இது வரை ஆதரவு இல்லை. விரைவில் வரும் என்று நம்புகிறேன்

>>>>>படத்தின் வியாபார சங்கதிகளை பத்திரிகைகளுடன் விவாதிக்க முடியாது


>>>ஒரு பத்திரிகைக்காரர் நான் முடிவு செய்வதற்கு முன்பே அவர் முடிவு செய்திருக்கிறார். உங்கள் தலையங்கத்தை நான் முடிவு செய்ய முடியாது



>>>>என்னுடைய வழி தனி வழி இல்லை.. அது புது வழி.. நாளையே அது பொது வழியாகவும் ஆகலாம்



மேலே நீங்க சொன்னவைகளுடன் ஒத்துப்போகிறேன்



Wednesday, December 12, 2012

150 கோடி வசூலை எதிர்பார்க்கிறேன் - கமல் பர பரப்பு பேட்டி @ பிஸ்னெஸ் லைன்

We have to embrace technology and sail with that’ 
 
11 December 2012 , By R. Ravikumar 

Kamal Haasan
Kamal Haasan
 
 
Business Line caught up the man in the centre of the controversy over screening of his movie on the direct-to-home platform before it is released in theatres. Visiting the Prasad Studios for another appointment, this writer was pleasantly surprised to find the actor there, who acquiesced to an interview on the brouhaha. In an hour-long free-wheeling interview actor and film-maker Kamal Haasan spoke at length on the issue and why his move will be win-win for all in the industry. 



Your decision to release Viswaroopam on the DTH platform has drawn flak from different quarters of the film fraternity …… 



DTH is another ethical avenue that offers a platform to monetise. If anybody says no, he will be the loser. It’s a technological growth, and we can’t resist it beyond a point. Now, we are fighting a war against technology, only to realise that the latter wins. Always. We can’t win this war. If I don’t do it today, some day, someone will do it. Why should I wait till that someone comes and does it. Twenty years ago, I said the same thing about satellite TV. Now, it’s a reality. 



So, are you going to go ahead? 



Yes. I am not going to be nailed on this cross. The protest has only made me stand firmer on my ground. We are going ahead, booking theatres. And, they have seen me doing that before. I am releasing it on DTH on January 10, and it will hit theatre screens from the next day. It is also going to premiere in Los Angeles on January 10, for which I am going there. 



I don’t understand the dichotomy among the film fraternity. DTH is only a parallel medium, and a transparent system. It is in no way going to impact theatrical revenues. 



But then why are distributors protesting? 


They do not understand that. Now, theatre owners in North too have joined them, saying if I release my movie on the DTH platform, they will not support me. It’s a nexus, and unfair. I am not going to release the Hindi and Telugu versions on DTH. It’s my film, and I am going to release it myself. I have not demanded minimum guarantee from anybody, though I am sure the film would make much more than that. 



Do you think you can coax them? 



Of course, yes. As it is, they have softened their stand. All producers are by my side. Distributors support me. Even theatre owners in all other cities are with me. The theatre owners association in Coimbatore has already passed a resolution to back me. Other centres such as Tiruchi are also by my side. 


In fact, over 15 cinema halls are getting new sound systems installed specially to screen this film. The protest is only from the Chennai city and neighbouring districts. I think all it calls for is persuasion. I have to talk to them, and make them understand that it will only help bringing in more people to the theatre. Moreover, my intention is not to violently force it upon them. I only want to convince them. 


They fear two things. One, they say it may give a fillip to piracy and secondly, if all other producers follow your footsteps, the traditional exhibition medium will become redundant. 



As I already told you, DTH is a transparent system. The DTH connections at clubs, bars and hotels will not be in the loop. Besides, piracy is impossible. If any one shoots with the hand-held camera and prints and sells, we can identify them with ease. It’s technically possible. I do not want to go into much detail, as somebody can come out with a smarter technology to do it. I told you, technology will be the winner... (he laughs). 



For your second point, I am sitting on Rs 95 crore (cost of the film) and doing business. You tell me, how many people can do it. Every one would want to make quick money and go. Besides, how many can command Rs 1,000 just to watch once. I do not think many can take this route. Even if some do, going to a theatre is in our tradition. It will not die down. It has not happened in the US yet.


Have you signed up with all the six DTH players? 


No. So far, we have signed up with Airtel, Dish, Videocon and Reliance. They came as a consortium. 



How many DTH homes do you expect to watch the movie at this price point? 


The DTH players we have tied up with so far, collectively reach around 15 lakh homes. I expect at least 40-50 per cent would watch. 



Have you already sold the satellite rights of the film? 



Yes, to Jaya TV. 


How much do you think Viswaroopam would gross? 


I do not want to predict. But I can safely say the movie would gross at least Rs 150 crore. 



How many screens are you planning? 


Globally 2,000 screens. Of this, 400 in Tamil Nadu, 1,200 in other parts of the country. 



Would you be able to rope in so many with this kind of protest? 


In politics and business, there is no permanent enemy. The same people who are on my side now were on the other side of the fence when I said we cannot fight satellite channels 20 years ago. This is the way going forward, and we have to embrace technology and sail with that. 

நன்றி - கமல் 

http://hiox.org/resource/5706-Viswaroobam_1.jpg


As actor and film-maker Kamal Haasan stands his ground that his new film Viswaroopam will be premiered on the direct-to-home platform despite protest from various stakeholders, the Tamil Nadu Film Distributors Federation is all set to meet on Tuesday to take a call on this issue. 




Already, the Tamil Nadu Theatre Owners Federation has protested saying that this initiative will certainly affect theatre revenues at a time when “the film exhibition business has already been going through a rough patch owing to a range of other issues”. 



Earlier, the actor had defended his move to screen the movie on DTH networks on fixed-time show basis on the day before the film’s theatrical release, which is tentatively scheduled for January 11. The price per connection has also been fixed at Rs 1,000. He has said this move would be a new, legitimate revenue stream for the industry. His argument is that this would not affect the theatrical revenues as it is “targeted at a niche segment that wants to be entertained in the comfort of their homes”. 



According to a industry veteran who does not want to be identified, “This move could even prove to be a trigger for the success of the movie, as it would only kindle interest among his fans to get the giant-screen experience.” 



However, Abirami Ramanathan, President of the Tamil Nadu Theatre Owners Federation, asks why he should even try something which has not been experimented by Hollywood. “As theatre owners, we may not suffer any major losses because of this one film. But, if others too choose to follow this model, the entire exhibition business may have to suffer a huge setback,” he told Business Line. 


Though Kamal Haasan says the move would be a blow to the piracy market, which is wrecking the industry, Ramanathan says this would only pave the way for more piracy. “If someone films the entire movie with an hand-held HD camera when the film is being played on an HD TV, the result will be pretty good; then how can that prevent piracy?” he asks. 



According to industry sources, Kamal Haasan has signed up with five DTH players, who can collectively address at least 15 lakh homes in the State. And, there are instances, when some hit movies were exhibited on big screens (with the help of projectors) for a large audience of over 100, in public places such as clubs and playgrounds. 


Harit Nagpal, Managing Director and CEO, Tata Sky, one of the DTH players signed on to premiere Viswaroopam (which cost over Rs 120 crore to make), says the technology offers only another opportunity to earn revenues from a new market. He told Business Line that it will, in fact, bring in a newer market to Tamil films as TV homes who are willing to pay up Rs 1,000 are not the kind who will queue up in cinema halls for tickets. 



 நன்றி - பிஸ்னெஸ்லைன்
[email protected]

 http://lh3.ggpht.com/-VZiXp0hFA4Q/T59oL0wU5RI/AAAAAAAAMSc/FatoxAHKGn8/viswaroobam%252520%2525284%252529.jpg

Monday, December 10, 2012

விஸ்வரூபம் -DTH -ல் வெளியீடு -கமல் -ன் தன்னிலை விளக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHdLqt_ncOMTJrEP_6yqWNEAG0y-jWn6Xwi-UkDwIOge5p756gnZs5-vsyYFs1Qvu_YWvSdZ-DydMrI875RMHSBIobcamBk5CrLQYspsaIR9xfAhEfUmZ9RJ7_A0XNxiJp5EbDsW_IUpg/s400/Viswaroopam+Latest+Wallpapers+Cinema65.com+(3).jpg 

 

கிடைத்ததைச் சுருட்டுபவன் நானல்ல... டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
kamal blasting statement on viswaroopam 
dth release
கமல்ஹாசனின் காட்டமான 3 பக்க அறிக்கை


புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.



ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.



ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.


இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.


 http://www.cinepicks.com/telugu/gallery/viswaroopam/viswaroopam-stills-1759.jpg
இந்த DTH என்பதுஎன்ன?


எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.



சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH.


இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.
கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று.



என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.




முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.



ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம்.



இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?



DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.



விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல.



DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.



7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.



திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.



இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.



பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.


கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/viswaroopam_movie_stills_0806120245/viswaroopam_movie_stills_0806120245_026.jpg


முஸ்லீம்களுக்கு எதிரானதா?


முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.



அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.



-இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

 

Kamal S Plan With Mani Ratnam Son


சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குனர் மணிரத்னத்தின் மகனை வைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளாராம்.


கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பாரி ஆஸ்பர்னுடன் சேர்ந்து கமல் பணியாற்றவிருக்கிறார். உலக தரத்தில் படம் எடுக்கும் உலக நாயகனை ஹாலிவுட் படத்தில் பார்க்க ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.


இந்நிலையில் கமல் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தனை தன்னுடன் ஹாலிவுட் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது வரை சினிமா உலகை விட்டு விலகியே இருக்கும் நந்தன் கமல் மூலம் அதுவும் ஹாலிவுட் போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


நந்தன் கமலின் ஹாலிவுட் படத்தில் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரக பணியாற்றுவார் என்று தெரிகிறது.

நன்றி - தட்ஸ் தமிழ்


http://www.tamilqueens.com/wp-content/uploads/2012/05/viswaroopam-on-location-stills-bf943a96.jpg