Showing posts with label விஸ்வரூபம். Show all posts
Showing posts with label விஸ்வரூபம். Show all posts

Wednesday, March 06, 2013

விஸ்வரூபம் - பிரச்னையை கிளப்பும் அமீர் , மிரண்டு போன ஷங்கர்

1,விஸ்வரூபம் விவகாரம்; மீண்டும் பிரச்னையை கிளப்பும் அமீர்!!

விடுதலைப் புலிகளை போலத்தான், தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர், அவர்களை விஸ்வரூபம் படத்தில் தப்பாக சித்தரித்துள்ளனர் என்று கூறியுள்ளார் டைரக்டர் அமீர். பிரச்னைகள் பல கடந்து, தடைகள் பல கடந்து, விஸ்வரூபம் படம் ரிலீஸாகி வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ஒரு பரபரப்பை கிளப்பி வருகிறார் டைரக்டர் அமீர். அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் மக்களுக்காவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் ‌போராடும் போராளியை தவறாக சித்தரித்து உள்ளனர்.

இலங்கையில் ஈழத்திற்காக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் எப்படி போராடினார்களோ, அவர்களை தவறாக சித்தரித்தால் என்ன நிகழுமோ அப்படித்தான் விஸ்வரூபம் படமும். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும், தீவிரவாதிகள் என்று சொல்ல படத்தில் காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். எனவே விஸ்வரூபம் படத்தில் தன் மண்ணுக்காக போராடும் தலிபான்களை, விஸ்வரூபம் படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.  அமீரின் இந்த பேச்சு, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்ப தூண்டுவது போல அமைந்துள்ளது

 

 

2. .நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!!

 விஸ்வரூபம் படத்திற்கு தானே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், இந்த வெற்றியை தேடித்தந்த ரசிர்களுக்கு தான் என்றும் கடமைபட்டு இருப்பதாக கமல் கூறியுள்ளார். கமலின் விஸ்வரூபம் படம் தடைகள் பல கடந்து தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது. 
 
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் கசோலையாகவும், பணமாகவும், தங்களது வீட்டு சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

விஸ்வரூபம் படத்திற்கு நானே எதிர்பாராத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் தனக்கு உள்ள கடமையை ரசிகர்கள் தமது அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு தம்மை புதிய உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வருக்கும், ஊடக பங்காளிகளுக்கும், சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், இப்படத்தை அவர் பார்க்கவும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளேன்.

இந்த படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்களை பற்றி எனக்கு கவலையில்லை. பலர் இப்படத்தை பார்த்து என்னை பாராட்டியுள்ளனர். அந்த பாராட்டு ஒன்றே எனக்கு போதும். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று மீண்டும் எனது படங்களுக்கு இதுபோன்று பிரச்னை ஏற்பட்டால் நிச்சயமாக நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன். டி.டி.எச். ரிலீஸ் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.

விஸ்வரூபம் படம் தொடர்பாக விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் தம்பி விஷாலுக்கு குரல் கொடுக்க நான் தயார். ஏற்கனவே சொன்னது தான். நான் எப்பவும் போல் அனைவருக்கும் அன்பை கொடுக்கிறேன். ஆனால் அவர்கள் திருப்பி அதே அன்பை நம் மீது காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்-2 வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரிஆஸ்பன் தயாரிக்கும் ஒருபடத்திலும், பிறகு எனது நிறுவனத்திலேயே மூ என்று ஒரு படத்தையும் இயக்க உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார். 
 
 
 
 
 
3.பிரமாண்ட இயக்குனரை மிரட்டிய கமலின் விஸ்வரூபம்! முதல்முறையாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளது. கமலின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதனால் படத்தை தடை செய்ய தமிழக அரசு முன்வர, கமல் இந்த நாட்டை விட்டே வெளியே போவேன் என்று கூறும் அளவுக்கு பிரச்னை பெரிதாக, கடைசியில் பிரச்னையெல்லாம் ஓய்ந்து, பல தடைகளை கடந்து படமும் ரிலீஸ் ஆனது. தமிழகம், புதுவை தவிர்த்து பிறமாநிலங்களில் ஜன-25-ம் தேதியும், தமிழகத்தில் பிப்-7ம் தேதியும் படம் ரிலீஸ் ஆனது. படமும் அனைத்து தரப்பினரால் பாராட்டு பெற்றது. அதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக அப்படத்தில் பூஜா குமார் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், நியூஜெர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூஜா குமார் இதனை தெரிவித்தார். ரூ.95 கோடியில் உருவான விஸ்வரூபம் படம் இப்போது ரூ.200 கோடி வசூல் செய்து இருப்பது கமல் உள்ளிட்ட படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. அதே மகிழ்ச்சியோடு விஸ்வரூபம் பார்ட்-2 பணிகளை ரொம்ப துரிதமாக செய்து வருகிறார் கமல். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் விஸ்வரூபம்-2-வும் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.  


தமிழில் சினிமாவைப்பொறுத்தவரை ஹாலிவுட்டுக்கு இணையான படங்களை தருபவர் என்ற பெருமை இதுவரை டைரக்டர் ஷங்கருக்கு மட்டும்தான் இருந்தது. ஆனால் கமலின் விஸ்வரூபம் படம் வந்த பிறகு அந்த பெயரை போய் விட்டது. ஷங்கர் படம் ஹாலிவுட் படம் மாதிரி என்றால், கமலின் படம் ஹாலிவுட் படமே என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதோடு, விஸ்வரூபம் படத்தைப்பார்த்த ஷங்கரும் அதிர்ச்சியடைந்து போய் இருக்கிறார். கமல் என்ற நடிகருக்குள் இத்தனை பெரிய இயக்குனரா? என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் அவர், ஒரு டைரக்டராய் நாம் இன்னும் நிறைய யோசிக்க வேண்டும் போலிருக்கிறதே என்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்.

அதன்காரணமாக, ரஜினியை வைத்து தான் இயக்கிய எந்திரன் படத்தை விடவும் இப்போது விக்ரமைக்கொண்டு இயக்கி வரும் ஐ படத்தை இன்னும் பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்க வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார். அதனால் இதுவரை 80 கோடி பட்ஜெட்டில் ஐ படத்தை பண்ண பட்ஜெட் போட்டு வைத்திருந்தவர், இப்போது 145 கோடி வரை பட்ஜெட் உயர்த்தியிருக்கிறாராம். அதோடு, படத்தை உலக அளவில் பப்ளிசிட்டி செய்து வெளியிட்டு பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.
 
 
 
 
4.விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி...?!! -  விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் 15 நாட்களில் படத்திற்கான எல்லாம் வேலைகளும் முடிந்து தயாராகிவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தடைகள் பல கடந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் கடந்த பிப்-7ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் ஜன-25ம் தேதியும், வடமாநிலங்களில் பிப்-1ம் தேதியும் ரிலீஸ் ஆனது. படமும் ஹாலிவுட் தரத்தில் வந்திருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் விஸ்வரூபம் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர். அதன்படி விஸ்வரூபம் முதல் பாகம் தயாரான போதே பார்ட்-2வுக்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், விஸ்வரூபம் பார்ட்-2விலும், கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், ஆகியோரே முக்கிய ரோலில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி விரைவில் கமல், ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் படத்தில் பணியாற்ற இருப்பதால் விஸ்வரூபம்-2 வேகமாக முடித்துவிட எண்ணியிருந்தார். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல் படி,  இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் விஸ்வரூபம் பார்ட்-2-வுக்கான முழு ஷூட்டிங்கும் முடிந்தும் விடும் என்றும், அதனைத்தொடர்ந்து விரைவில் படமும் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
 
 
 
5.விஸ்வரூபம் 2க்கு பிறகு ஹாலிவுட்! கமல் முடிவு!! விஸ்வரூபம் படத்தின் 2ம் பாகத்தை முடித்த பிறகு ஹாலிவுட் படத்தில் நடிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். பெங்களூருவில் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விஸ்வரூபம் பிரச்னையில் திரையுலகம் மற்றும் பத்திரிகைகள் எனக்கு ஆதரவாக இருந்ததாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. விஸ்வரூப பிரச்னை திடீரென்று பொது பிரச்னையாக மாறி விட்டது. கமல்ஹாசனுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட வேண்டுமா? என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.

பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த வாரம் விஸ்வரூபம் படம் வெளியாக உள்ளது. விஸ்வரூபம் இந்தி படம் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் வெளியாகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே விஸ்வரூபம் தமிழ் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் படத்தை முதலில் தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பாக டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அது பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டு விட்டது. டி.டி.எச். மூலம் படம் வெளியிடும் புதிய முறை இன்று இல்லாவிட்டாலும் நாளை அமலுக்கு வரும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அடுத்தபடியாக ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்னேவுடன் பணியாற்ற உள்ளேன். ஆனால், எனது விஸ்வரூபம் படத்தின் 2வது பாகத்தை முடித்த பிறகே அவருடன் பணியாற்றுவேன். இந்த ஆண்டுக்குள் விஸ்வரூபம் 2வது பாகம் வெளியாகும் என்று நம்புகிறேன். அந்த படம் இந்தியாவை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கும். ஆனால், விஸ்வரூபம் முதல் பாகத்தை போன்று விமர்சனங்கள் எதுவும் வராத வகையில் பார்த்து கொள்வேன், என்றார்.
 
 
டிஸ்கி - டைட்டிலில் வந்த   பிரச்னையை கிளப்பும் அமீர் , மிரண்டு போன ஷங்கர் 2ம் தனித்தனி மேட்டர்


Friday, February 15, 2013

விஸ்வரூபம் -ஓ பக்கங்கள் ஞாநியின் கேள்விகள் @ கல்கி


இன்னும் 15 நாட்கள்!

ஞாநி

மத்திய அமைச்சர் நாராயணசாமியின் கணக்கில் காலம் என்பது, வருடக் கணக்கில் யுகக் கணக்கில் இருப்பதே அல்ல. அதன் லிமிட் 15 நாட்கள்தான். ஒவ்வொரு முறை கூடங்குளம் அணுஉலை பற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டாலும், இன்னும் 15 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்று அலுக்காமல் பல 15 நாட்களாகச் சொல்லி வருபவர் அவர்.
அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினால்தான் கூடங்குளம் அணுஉலை இயங்கமுடியாமல் தாமதமாகிறது என்று யாரும் சொல்லமுடியாது. மத்திய அரசும் மாநில அரசும் அடுத்தடுத்து அமைத்த குழுக்கள் அறிக்கை கொடுத்த பின்னர் போராட்டக்காரர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அணுஉலை பணிகள் நடப்பதைப் போராட்டக்காரர்கள் தடுக்கவும் இல்லை.
ஆனால் இதுவரை உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜ் ஆகியோர் மீது 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெயர் பதிவு செய்யப்பட்ட 5296 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றில் இதுவரை நடந்தே இராத சிறப்பாக, பெயர்களே பதிவு செய்யப்படாமல், 2,21,483 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தப் போராட்டத்திலும் இத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மார்ச் 18ம் தேதியன்று காவல் படைகளைக் குவித்து இடிந்தகரை கிராமத்தை அரசு முற்றுகையிட்டபோது அணுஉலை வளாகத்தில் ஆயத்தப் பணிகள் எந்தத் தடையும் இன்றி விரைவாக நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டது. மே மாதத்தில் மின் உற்பத்தி ஆரம்பித்துவிடும் என்று சொன்னார் நாராயணசாமி. அதன்பின் ஒவ்வொரு 15 நாட்களிலும் அவர் சொன்ன அறிவிப்புகளின்படி, ஜூலையில், ஆகஸ்டில், செப்டெம்பரில், அக்டோபரில், நவம்பரில், டிசம்பரில், ஜனவரியில் மின்உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். இப்போது போராடும் மக்கள் மீது அரசு முற்றுகையிட்டே ஒரு வருடமாகப் போகிறது. ஆனால் அணு உலை இயங்க ஆரம்பிக்கவில்லை.
ஏன்?

தொழில்நுட்பப் பிரச்னைதான் காரணம் என்று அரசும் அணுசக்தித் துறையுமே இப்போது அதிகார பூர்வமாக ஒப்புக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. இந்த அணுஉலை பாதுகாப்பானதல்ல என்று ஆரம்பத்திலிருந்து போராட்டக்காரர்கள் சொல்லி வரும் கருத்துக்கு வலு சேர்ப்பதாகவே இப்போது அரசு தரப்புச் செய்திகளே அமைந்திருப்பதை, சூழல் ஆர்வலர் நித்யானந்தன் ஜெயராமன் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
கூடங்குளம் முதல் அணு உலையில் முழு உலை தொடர்பான எல்லா பரிசோதனைகளையும் திரும்பச் செய்து பார்ப்பதற்கான அனுமதியை அணுசக்திக் கண்காணிப்பு வாரியம் வழங்கியுள்ளதாக ஜனவரி 25 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புத்தம் புது அணு உலையில், பரிசோதனை ஓட்டத்தை ஒருமுறை செய்தால் போதுமானதுதானே? ஏன் இரண்டாம் முறை செய்ய வேண்டும்? முதல் சோதனையில் சிக்கல்கள், தோல்விகள் வந்தால்தானே அடுத்தது தேவைப்படும்?
அந்தத் தோல்வி என்ன? சில வால்வுகள் சரியாக இயங்கவில்லை என்று அதிகாரபூர்வமாகவே சொல்லப்பட்டது. அணுசக்தித் துறை தலைவர் ஆர்.கே.சின்ஹாவின் அறிக்கைப்படி குறிப்பிட்ட வால்வுகளில் இருக்கும் ஓட்டம், அழுத்தம், வெப்பநிலை என்று பல அம்சங்களின் தரம் சோதிக்கப்பட வேண்டியிருக்கிறது. அதாவது முதல் சோதனையில் இவை எதுவும் தேறவில்லை என்று அர்த்தம்.
கடந்த டிசம்பரில் நடந்த சோதனையில் சில வால்வுகள் சரியாக இயங்காததால், அவை மாற்றப்பட்டன. பழுதுபார்க்கப்பட்டன. புத்தம்புது வால்வுகள் ஏன் பழுதாக இருக்கின்றன என்பதும் அவற்றை ஏன் பழுது பார்க்க வேண்டும் என்பதும் அணுசக்தித் துறை பதில் சொல்லாத கேள்விகள். இந்த மாடல் வால்வுகள் உலகிலேயே முதன்முறையாக இப்போது தான் அணு உலையில் பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் அவை பாதுகாப்பானவை என்று முன்கூட்டியே சர்டிஃபிகேட் கொடுக்க அப்துல்கலாம் முதல் நாராயணசாமி வரை தயாராக இருக்கிறார்கள்!
கூடங்குளம் அணு உலைக்கு இயந்திரங்களை, பாகங்களை சப்ளை செய்யும் ரஷ்ய கம்பெனி மீது நிறைய ஊழல் புகார்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் உள்ளன. ரோசாட்டம் என்ற இந்த ரஷ்ய அரசு கம்பெனியின் ஊழல் முறைகேடுகள் பற்றி ஏற்கெனவே பக்கங்களில் எழுதியிருக்கிறேன் (கல்கி 15.1.2012). 2010ல் மட்டும் ரோசாட்டம் நிறுவனத்தின் கீழுள்ள 35 அதிகாரிகள் ஊழலுக்காக நீக்கப்பட்டார்கள். 2011ல் ரோசாட்டமின் கீழ் இருக்கும் வெவ்வேறு துறைகளின் தலைவர்கள் பன்னிரண்டு பேர் ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.
கடந்த பிப்ரவரியில் ரோசாட்ட மின்துணை கம்பெனியான சியோ பொடால்ஸ்க்கின் பொருள் கொள்முதல் இயக்குனர் செர்ஜி ஷுடோவ் என்பவரை ரஷ்ய அரசு கைது செய்துள்ளது. உலகம் முழுக்க இருக்கும் ரஷ்ய அணு உலைகளுக்குப் பாகங்களை சப்ளை செய்யும் கம்பெனி இது. பல்கேரியா, இரான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் ரஷ்ய அணு உலைகளுக்கான பாகங்களைத் தயாரிக்கும்போது தரம் குறைந்த உக்ரேனிய எஃகைப் பயன்படுத்தியதாக ஷுடோவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலைக்கு என்னென்ன பாகங்களை ஷுடோவின் கம்பெனி வழங்கியிருக்கிறது என்ற விவரங்களை வெளியிட இந்திய - ரஷ்ய அரசுகள் முன்வரவேண்டும். இதற்காகத்தான் வால்வு சிக்கல் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடும்படி உதயகுமார் கோருகிறார். அதற்கு நாராயணசாமி யார்யாரோ கேட்பதற்காக அறிக்கை வெளியிடமுடியாது என்கிறார். உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் கேட்பார் போலிருக்கிறது.
கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு, தரம் பற்றி இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் நித்யானந்தன் ஜெயராமன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜூலை 2011லேயே அணுசக்தித் துறை வட்டாரங்களை ஆதாரம் காட்டி பி.டி.. வெளியிட்ட ஒரு கட்டுரையில், கூடங்குளம் உலையின் கபாலத்திலேயே சிக்கல் இருப்பது தெரியவந்திருக்கிறது.
உலையின் கபாலம் என்பது வட்ட வடிவில் உச்சியில் தெரியும் அமைப்பாகும். கதிரியக்கம் கசியாமல் இருக்க டபிள் கன்ட்டெனர் என்ற முறையில் இரட்டை அடுக்காக கான்க்ரீட்டில் இது கட்டப்படுகிறது. இதைக் கட்டும்போதே உள்ளே செல்ல வேண்டிய கேபிள் கம்பிகள் எல்லாம் பொருத்தப்பட்டு விட வேண்டும். நம் வீட்டில் சுவர் கட்டும்போதே மின் கம்பிகள் உட்புறம் செல்ல வழி அமைத்துக் கட்டுகிறோம் அல்லவா, அதைப் போல..! கட்டிய சுவரை இடித்து மின்கம்பி பதித்து திரும்பப் பூசுவது சுவரை பலவீனப்படுத்தும்.
ஆனால் கூடங்குளம் அணு உலையின் கபாலத்தில் உட்செல்ல வேண்டிய பல கிலோமீட்டர் நீளம் உள்ள கேபிள்கள் கட்டும்போது வந்து சேரவே இல்லை. கட்டுமான வேலைக்கு வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக எந்தெந்தப் பொருட்கள் வரவேண்டுமென்ற வரிசைக்கிரமம் உள்ளது. அதில் இந்த கேபிள்கள் மிஸ் ஆகிவிட்டன!
எனவே கட்டிய கபாலத்தில் திரும்ப ஓட்டை போட்டு கேபிள்களைச் செலுத்தித் திரும்பப் பூசியிருக்கிறார்கள். இந்தக் கபாலத்தை பைக் ஓட்டுபவரின் ஹெல்மெட்டுக்கு ஒப்பிடலாம். ஹெல்மெட் ஒற்றை வார்ப்பாக இருக்க வேண்டும். அதில் நடுவே வெட்டி பீஸ் போட்டு ஒட்டினால், ஹெல்மெட் பாதுகாப்பாக இருக்க முடியாது. உலகில் அணுஉலை வரலாற்றிலேயே இப்படி உலையின் கபாலத்தை ஓட்டை போட்டுப் பூசிய நிகழ்வு எங்கேயும் நடந்த செய்தியே இல்லை.
எனவே கூடங்குளம் அணு உலை கட்டுமானம் தொடர்பான எல்லா தகவல்களையும் அரசு வெளியிட வேண்டும். அணு உலையே வேண்டாம் என்று சொல்பவர்களை விட, அணு உலை வேண்டும் என்று வாதாடுபவர்கள்தான் இப்போது இந்தப் பிரச்னைகளில் குரல் எழுப்பவேண்டும்.
உலை பாதுகாப்பானது என்று அடித்துப் பேசிய அப்துல்கலாம், இப்போது வால்வ் பிரச்னை பற்றியும் கபாலமோட்சம் பற்றியும் தயவுசெய்து வாய் திறக்க வேண்டும்.

நாடக முன்தணிக்கை ஒழிந்தது!
விஸ்வரூப இரைச்சலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்பு ஊடக, பத்திரிகை கவனத்தை அதிகம் பெறாமல் போய்விட்டது. தமிழ்நாடு நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை எதிர்த்து நான் போட்ட வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. என் சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் யசோத் வரதன், சுனில் குமார் ஆகியோர் வாதிட்டனர். அரசியல் சட்டம் தொடர்பான வழக்கு என்பதால் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலையே ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.  


இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தம் தீர்ப்பில் இந்தச் சட்டத்தின் பல ஷரத்துகள் அரசியல் சட்டத்தில், சட்டம் முன்னர் அனைவரும் சமம் என்று கூறும் 14ம் பிரிவு, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் 19ம் பிரிவு ஆகியவற்றுக்கு விரோதமானவை என்று கூறி அந்த ஷரத்துகள் செல்லாதவை என்று அறிவித்திருக்கிறார்.
ஏன் இந்த 60 வருடச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தேன் என்பதை விரிவாக ஏற்கெனவே பக்கங்களில் (கல்கி 29.4.2012) எழுதியிருக்கிறேன். இப்போது வந்துள்ள தீர்ப்பின்படி இனி யாரும் முன்கூட்டியே அனுமதி கோரி சென்னையில் காவல் துறை ஆணையரிடமோ, மாவட்டங்களில் ஆட்சி யரிடமோ நாடகப் பிரதியை அளித்து விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அரங்கிலோ, வெளியிலோ நாடகம் நடத்த நாடகப் பிரதியை முன் அனுமதி கோரி தர வேண்டியதில்லை.
தீர்ப்புச் செய்தி சில இதழ்களில் வெளியானதும், எனக்கு வந்த நன்றி/பாராட்டு தொலைபேசி அழைப்புகளில் பெரும்பாலானவை பல்வேறு சிற்றூர்களிலிருந்தே ஆகும். அங்கே நாடகம் நடத்தும் குழுக்கள் சென்னையில் இருக்கும் நாடகக் குழுக்கள் சந்திப்பதை விட, அதிகமான அலைச்சலையும் தொல்லையையும், ஊழலையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். எதிர்ப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த நாடகக் காரர்களான மறைந்த எம்.ஆர்.ராதாவுக்கும் கோமல் சுவாமிநாதனுக்கும் இந்தத் தீர்ப்பை காணிக்கையாக்குகிறேன்.
பூச்செண்டும் திட்டும்!
தில்லி பஸ்சில் நடந்த பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் பெயரையும் படத்தையும் இதுவரை இந்தியாவில் செய்தித்தாள்களும் ஊடகங்களும் வெளியிடாமல் இருந்து வருவது நம் பூச்செண்டுக்குரியது. பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோர் பெயரை, விவரங்களை வெளியிடக் கூடாது என்ற நெறிமுறை இப்போதுதான் முதல்முறையாக முழுமையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால் தில்லி நிகழ்வுக்குப் பின்னர் நடந்த பல நிகழ்வுகளில் இந்த நெறி பின்பற்றப்படவில்லை. பாலியல் கொடுமைக்குள்ளான இரண்டு வயதுக் குழந்தையின் படத்தையே மாலைமலர் ஏடு வெளியிட்டிருக்கிறது. இன்னும் பல ஏடுகள் இந்தத் தவறைச் செய்கின்றன. அவர்களுக்கெல்லாம் இந்த வாரத் திட்டு.
விஸ்வரூப கேள்விகள்!
கேள்வி 1: தணிக்கை வாரியத்தின் மீது நீதிமன்றத்திலேயே ஊழல் புகார் சொன்ன தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆதாரம் காட்டவேண்டும் அல்லது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரியிருப்பதற்கு பதில் சொல்லாமல் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்?
கேள்வி 2: படத்தில் ஏழு வெட்டுகள் இருந்தால் படம் தங்களுக்கு எதிரானதல்ல என்று திருப்தி அடையும் தமிழக முஸ்லிம் தலைவர்களுக்கும், எந்த வெட்டும் இல்லாமலே படத்தைப் பார்க்கத் தயாராக இருக்கும் இதர மாநில முஸ்லிம்களுக்கும் இருக்கும் ஏழு வித்தியாசங்கள் என்ன?


நன்றி - கல்கி