Showing posts with label CRIME. Show all posts
Showing posts with label CRIME. Show all posts

Saturday, January 12, 2013

கமலை மிரட்டிய 13 பேர்! - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

Vishwaroopam-On-Location-Stills-06072012921592e.jpg (940×627)
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 



'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் ​போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷன​ரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னை​களுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல்



. அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செய​லாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம்  முதலில் தியேட்டரில் ரிலீஸ். அதன்பிறகுதான் டி.டி.ஹெச். ஒளி​​பரப்பு'' என்று தீர்மானமாக அறி வித்தார்.


மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள். குறைந்த விலைக்குக் கொடுங்கள் என்று பேரம் பேசாதீர்கள். என் ரசிகர்களைக் கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறேன். இனி அவர்கள் அமைதியாக

இருப்பது என் கையில் இல்லை. என் எதி ராளி​களின் நடவடிக்கையில் இருக்கிறது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக மிரட்டல் விடுத்த 13 பேரின் பட்டியல் என்னிடம் இருக் கிறது. அவர்களின் பெயர்களைச் சொல்ல மாட்டேன்'' என்று பதிலடி கொடுத்தார்.



என்ன நடந்தது? கோடம்பாக்கம் வட் டாரத்தில் விசாரித்தோம்.


''வெளியூர் தியேட்டர்காரர்கள் பலருக்கும் பொங்கல் தினத்தில் 'விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்ய ஆசை. அவர்களைத் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் படத்தை வாங்கக் கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். சென்னை சாந்தி தியேட்டரில் படத்தைத் திரையிடக் கூடாது என்றும் மிரட்டல் வந்​திருக்கிறது. சிவாஜியின் மாப்பிள்ளையான வேணுகோபால்,


 'கமல் சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல வளர்ந்தவர். எங்க மாமாவுக்கும் கமல்னா உயிர். அவரோட படத்தை வெளியிடக் கூடாதுனு சொல்ற அதிகாரம் யாருக்கும் இல்லை. என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுக்கட்டும். நாங்க படத்தை ரிலீஸ் செய்வோம்’னு கோபமாகச் சொல்லிட்டார். மிரட்டப்பட்ட தியேட்டர் அதிபர்கள் பலரும் கமலிடம் புலம்பி இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த கமல், மிரட்டிய 13 பேருக்கும் நோட்டீஸ் 



அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார். 'தனிப்பட்ட தியேட்டர் அதிபர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அத்துமீறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் திரையரங்க உரிமத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உண்டு’ என்று சட்ட ஆலோசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகே, ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் கமல்.




இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள். ஆனால் கமல் அவர்களிடம் எந்த பதிலும் சொல்ல​வில்லையாம். அதன்பிறகே, 'விஸ்​வரூபம் 25-ம் தேதி 500 தியேட்டரில் ரிலீஸ்’ என்று கமல் அறிவித்தார்'' என்கிறார்கள்.


கமலுடன் பேச்சுவார்த்தையில் கலந்து​கொண்ட தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் பேசினோம். ''தியேட்டர் உரிமையாளர்கள் அமைப்பாலும், சில விநியோகஸ்தர்களாலும் ஆரம்பத்தில் குழப்பங்கள் உண்டாகின. இப்போது எல்லாப் பிரச்னைகளும் சுமுகமாக முடிந்து இருக்கிறது. 25-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அன்று இரவு டி.டி.ஹெச்-சிலும் ஒளிபரப்பும் திட்டத்தில் கமல் இருக்கிறார். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 'தசாவதாரம்’ வசூலை 'விஸ்வரூபம்’ முறியடிக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை'' என்று உறுதியாகச் சொன்னார்.


பார்க்கலாம்!

எம்.குணா

படங்கள்: ஆ.முத்துகுமார்  


newviswa-14.jpg (630×420)

readerls views


1.மறுநாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ''என் அங்காடியில் எனது பொருளை விற்கிறேன். விருப்பப்​பட்டவர்கள் வாங்கிச் செல்​லுங்கள்.. சரியா சொன்னிங்க. அதே மாதிரி தியேட்டர்காரங்களுக்கும் தங்களோட அங்காடில என்ன பொருள விற்பனை செய்ய வேண்டும் கூடாது என்று முடிவு பண்ண உரிமை இருக்கு. தியேட்டர்காரங்க ஒரு சங்கமா செயல்பட்டு முடிவு எடுக்கராங்க அவங்கள்ள சிலர பிரிச்சு தன் வழிக்கு கொண்டு வரும் போது எதிர்ப்பு வரது சகஜம்தான்.



 டிடிஎச்ல படத்த போட்டா பல தியேட்டர்களுக்கு பெரும் பாதிப்பு வரும் என்பது உண்மைதான். அதுவும் இல்லாமல் கமலுக்கு தியேட்டர் ரிலீஸுக்கு 80 கோடி பணம் வேணுமாம் (தமிழுக்கு மட்டும்) அவருக்கு 80 கோடி தரணும்னா டிக்கட் கலக்ஷன் 250 கோடி வரணும். 250 கோடில 35% சதம் வரிக்கு போயிடும் மிச்சம் இருக்கும் 160 கோடில 50% சதம் தியேட்டர்காரங்க ஷேர் மிச்சம் இருப்பதுதான் படத்த வாங்கினவங்க (வினியோகிஸ்தர்) ஷேர்.



 ஆனானபட்ட ஷாருக்கான் படங்களே அகில இந்தியா கலக்ஷன் 120 கோடிய தாண்டரதில்லை. 250 கோடி டிக்கட் கலக்ஷன்னா ஒரு டிக்கட் விலை 100 ருபான்னு போட்டாகூட 2.50 கோடி பேரு இந்த படத்த பார்க்கணும் அதவது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் இப்படி உள்ல 5 சிட்டி மக்கள் எல்லாரும் ஒருத்தர் விடாம 100 ருபா குடுத்து இந்த படத்த பார்க்கணும். நடக்கர காரியமா?




2. ஒரு தொழிலில் லாப நட்டம் சகஜம். லாபம் வரும் என்று நம்புபவர் அதில் இறங்கட்டும்.மற்றவர்கள் விலகி கொள்ளட்டும் எதற்க்காக ஒரு ரசிகனுக்கு டிடிஎச்ல படம் பார்க்கும் வாயப்பை தடுக்க வேண்டும்?




3. ஆக கமலுக்கு நல்ல விளம்பரம். ரஜினி வேற மாதிரி விளம்பரம் - இவர தடாலடியாக அரசியல்வாதிகளை நாடாமல் விளம்பரம். ஆனால் இவரது அப்ரோச் பிடித்திருக்கிறது. (இவர் படங்களும், அவற்றில் இவர் எல்லா பிரேமிலும் வர முயற்சிக்கும் சுயநலமும் வெறுப்பேற்றினாலும்).






4. 'நடிகர்களும் பிஸினஸ்மேன்கள் தான்'...என்று கமல் ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியிருந்தார். எப்போது கலைஞன் வியாபாரியாக முடிவு செய்து விட்டானோ அப்போது வியாபார உலகின் தந்திரங்களை வென்றால் தான் நிலைக்க முடியும்.அந்த நோக்கில் பார்க்கும் போது நல்ல கலைஞனாய்

மட்டுமல்ல திறமையான வியாபாரியாகவும் கமல் தோன்றுகின்றார்.
மிக தரமான, நல்ல பொருளை விற்கும் வியாபாரியிடம் தான் இத்தகைய
உறுதியையும்,போராடும் குணத்தையும் பார்க்க முடியும்.'விஸ்வரூபம்' அந்த விதத்தில் நிறைய எதிர்பார்ப்பினை கொடுத்திருக்கிறது....
வாழ்த்துக்கள் கமல்...!!!





5. ஆக மொத்தம் தமிழகம் இப்போ மஃபியாகைகளில் உள்ளது. எது செய்தாளும் அவர்களுக்கு மாமூல் வர வேண்டும். என்ன நாம் மக்களாட்சி நடகிர நாட்டில் உள்ளோமா?. சந்தேகம் தான்.




6. சீக்கிரம்... படம் நீங்க ரீலிஸ் பண்றதுக்கு முன்னாடி திருட்டு விசிடியில் ரிலிசாகப்போகு




7. இவருக்கு எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்....இது ஒன்றே போதும் இவருக்கு ஆப்பு வைக்க... ( உதாரணம்... கழ்டப்பட்டு இளையராஜா போட்ட டுயன இவரு பாடி கெடுக்கிற மாதிரி...)




8. தொழில் நுட்பத்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் கமல் ஹாசன் முன்னோடி. புதுமைகள் புகுத்தும் போது எதிர்ப்புகள் இருக்கவே செய்யும். அனால், கமலுக்கு, தமிழ் ரசிகர்களின் பேராதரவு எப்போது உண்டு!


9. இந்த விஷயம், சம்பந்தப்​பட்ட​வர்களின் காதுக்குப் போனதும், பதறியடித்தபடி கமலின் அலுவ​லகத்துக்குப் போனார்களாம். 'நீங்கள் எது செய்​தாலும் அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் உங்​கள் பின்னால் நிற்போம்’ என்று சரண்​டராகி இருக்கிறார்கள்.


கோழைகள், வேறு யாரோ (அரசியல்?) பின்னனியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


கமலின் முடிவும், எதிர்த்து நின்ற சவாலுக்கும் பாராட்டுக்கள். 


படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்



thanx - ju vi 



Vishwaroopam-Reservation-Starts-Tomorrow-Poster.jpg (538×667)a




அன்புக்குக் கட்டுப்பட்டு விஸ்வரூபம் 25 ல் திரையரங்கில் வெளியீடு: கமல்ஹாசன்



விஸ்வரூபம் படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


திரையரங்க உரிமையாளர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 



டி.டி.எச். நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் எந்தத் தேதியில் வெளியிடுவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.



a





Monday, December 17, 2012

ஊமை விழிகள் (1986) - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiew_AFBWzfRHkC41B7iF6xjeACIA3xTSV_XlfomevaabigV3KV1xA2UvZ2wen7sxRD3xBvD6M5IAfiROTiRhmzKfOVfIQh-kGrl4lkGxfRCzukK01UDHaRK_MJW15rruuDu611lNRF2Jo/s1600/a3.jpgதிரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றாலே ஆர்ட் ஃபிலிம் தான் எடுப்பாங்க, கமர்ஷியல் சினிமா அவங்களுக்கு செட் ஆகாது என்றிருந்த காலகட்டத்தில் 1986 இல் ரிலீஸ் ஆகி அந்த எண்ணத்தை , தமிழ் சினிமாவை ஒரு புரட்டு புரட்டிய படம் தான் இந்த ஊமை விழிகள் .பல பிரம்மாண்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் .

வில்லன்ஒரு 60 மார்க் ஃபிகரை லவ் பண்றார்.அது சஹானா மாதிரி வேற ஒருத்தன் கூட ஓடிடுது. உடனே அவருக்குப்பொண்ணுங்கன்னாலே வெறுப்பு. தன் காதலி கண்கள் பேசிப்பேசி தன்னை மயக்குச்சு. அந்த பாதிப்பில் கண்ணில் பட்ட பெண்களை  கொலை பண்ணி அவ கண்களை எடுத்து வெச்சுக்கும் சைக்கோ பார்ட்டி. சட்ட சிக்கல்களை தவிர்க்க ஒரு பாதுகாப்புக்கு ஒரு அமைச்சரை பார்ட்னர் ஆக்கிக்கறார். ஃபிகர் மினிஸ்டர்க்கு , மேட்டர் முடிச்சதும் கண் இவருக்கு. 

 இந்த விஷயம் ஒரு  பத்திரிக்கை அம்பலப்படுத்துது. எந்த விதப்பின்புலமும் இல்லாத சாதா பத்திரிக்கை. அதை ஒடுக்க நினைக்கறார் வில்லன். அந்த பிரஸ்க்கு ஒரு டி எஸ் பி உதவி பண்றார். வில்லனுக்கு எதிரா அவர் நிகழ்த்தும்போராட்டம் தான் மிச்ச மீதி திரைக்கதை .


படத்தோட ஓப்பனிங்க்கே ஒரு வித அமானுஷ்யமான இரவில் கொண்டாட்டமான பாட்டோட ஆரம்பிக்குது. ராத்திரி நேரத்துப்பூஜையில்  ரகசிய தரிசன ஆசையில் ஆ ஆ அது சுக வேதனை ( இதுல எதுக்கு 2 ஆ? ) . மனோஜ் கியான் + ஆபாவாணன் இணை இசையில் கலக்கலான பாட்டு. 


 பாட்டு முடிஞ்சதும் கொலை  அப்போ டாப் கீர்ல போற படம் க்ளைமாக்ஸ் வரை செம ஸ்பீடு .


நேர்மையான , வறுமை நிலையில் உள்ள பத்த்ரிக்கை ஆசிரியரா ஜெய்சங்கர். ஆல்ரெடி இவர் சொல்வதெல்லாம் உண்மைல இதே ரோல்ல நடிச்சிருப்பாரு , நல்லா சூட் ஆகி இருக்கு. 

 சந்திர சேகர்  ஜெய் ஆஃபீஸ்ல ஒர்க் பண்றவரா வர்றாரு. நல்ல நடிப்பு . கத்திக்குத்து வாங்கி துடிக்கும் இடத்தில் நிஜமாவே குத்திட்டாங்களோன்னு நினைக்க வைக்கும் அநாயசமான உயிரோட்டமான நடிப்பு 


வில்லனாக ரவிச்சந்திரன் . செம்பட்டை விக் , தாடில இவர் குதிரை வண்டில ஏறும்போதே செம திகில். 

மலேசியா வாசுதேவன்  மினிஸ்டர் வில்லன். மினிஸ்டர்னாலே வில்லன்க தானே?  கலகலப்பான நடிப்பு 

 டி எஸ் பி தீனதயாளன். பேருக்கேத்த கம்பீரமான நடிப்பு கேப்டனோடது. படம் போட்டு  50 நிமிஷம் கழிச்சு ஹீரோ எண்ட்ரி . ஈரோடு பாரதி தியேட்டர்ல ரிலீஸ் டைம்ல என்னா ஒரு கைதட்டல். இந்தப்படத்திற்குப்பின் கேப்டன் அட்டகாசமான அப்ளாஸ் வாங்கியது கேப்டன் பிரபாகரன் ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட்டில் தான்  .மனைவி சரிதா இறந்ததும் கதறும்போதும் சரி , புலன் விசாரணையில் கம்பீரம் காட்டும்போதும் சரி அனுபவம் மிக்க நடிப்பு .


இது போக அருண் பாண்டியன், கோகிலா, சசிகலா, கார்த்திக் இன்ன பிற நடிக நடிகைகளும் உண்டு .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ5NGu-eoWt8o100ity5M8bIIuw8ry3AZpTAz_U2-z0JwmP0PUJtL86HyXWHetu8mksGrRX5QPavmjEDFrUCHbe1LMdcjyOwdJ-vmmaBb5S_VbTWPecroygxwrLpDrd4yov1fZyszjpR8/s1600/o5.jpg


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. க்ரைம் படங்கள், த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் ஒரு ஸ்பீடு பிரேக்கர்கள் என்ற விதியை உடைத்து  3 மணி நேரப்படத்தில் தைரியமாக 6 பாடல்கள்  சூப்பர் ஹிட்  ஆக்கியது. ராத்திரி நேரத்துப்பூஜையில் செம குத்து சாங்க் , கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் சோக மெலோடி , தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?  இன்றளவும் நிலைத்து நிற்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாட்டு ,மாமரத்துப்ப்பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடப்வா கிளு கிளு முதல் இரவுப்பாட்டு ,நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதர் ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி  தத்துவ பாட்டு , குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப்பேச்சு  ரகளையான பாட்டு என எதுவுமே  குறை சொல்ல முடியாத பாட்டு. 



2. ரவிச்சந்திரனின் வில்லன் கெட்டப் , பாடி லேங்குவேஜ் திகில் ஊட்டும் விதமாய் அமைத்தது . அவர் கேரக்டரை கடைசி வரை சஸ்பென்சாக காட்டியது 


3.. ஆர்ட் டைரக்‌ஷன் அட்டகாசம் . அந்த வில்லன் பங்களாவே திகிலைத்தரும். அந்த மணி அடிக்கும் கிழவி , பாதிரியார் என   மர்மம் கிளப்பும் முகங்கள் அருமை

4.  ஜெய் சங்கரின் பத்திரிக்கை ஆஃபீஸ் ஸை ரொம்ப டீட்டெயிலாக காட்டியது , படத்தோட ஒன்ற வைத்து இருந்த முக்கியக்காரணி 


5. க்ளைமாக்சில் 67 ஜீப்கள் லைனாக வருவது , ஆரம்பத்தில் ஒரே ஒரு லைட்டை மட்டும் காட்டி அது அப்படியே  பிரிந்து  பிரம்மாண்டமான அணி வகுப்பாய் வரும் காட்சி பர பரப்பாக அப்போது பேசப்பட்டது இதுவரை தமிழ் சினிமாவில் அந்த காட்சியை ஓவர் டேக்க இன்னும் எந்தபப்டமும் வரவில்லை



http://padamhosting.com/out.php/i94153_7.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்( ஆர் அர்விந்த்ராஜ் பிஎஸ் சி டி எஃப் டெக் )



1. படத்துல லேடீசை துரத்தும் குதிரை  க்ளோசப்ல 70 கிமீ வேகத்துல பாயுது , துரத்தப்படும் பெண்கள் 7 கி மீ வேகத்துல ஓடுறாங்க. ஆனா 10 நிமிஷம் அந்த சேசிங்க் சீன் வருது . லாங்க் ஷாட்ல காட்டும்போது வேகம் கம்மியா ஆகிடுது . பார்க்கும்போது திகிலா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சா.... 



2. பத்திரிக்கைக்காரர் அந்த மர்ம பங்களாவுக்கு வந்து அந்த கிழவையை ஃபோட்டோ எடுக்கறதைக்கூட ஒத்துக்கலாம். பாட்டிக்கு விபரம் தெரியாது, படிப்பறிவு இல்லை, அதனால கண்டுக்கலைன்னு . ஆனா அந்த பாதிரியார் படிச்சவர் ஆச்சே .( பாதிரியாரைக்கொன்று பாதிரியார் ஆன வில்லனின் எடுபுடி ) அவர் எப்படி ஃபோட்டோ எடுத்தப்ப எதுவும் சொல்லலை? பிடிங்கி இருக்க வேணாமா? அல்லது அப்போவே போட்டுத்தள்ளி இருக்க வேணாமா? 


3. நேர்மயான , தன் தொழிலை தெய்வமாக மதிக்கும் எடிட்டர் ஜெய்சங்கர் டியூட்டி டைம்ல தம் அடிக்கறார்/ அதுவும் சக பணியாளர்கள் முன். எனக்குத்த்தெரிந்து  விகடன் , குமுதம் உட்பட எந்த ஒரு பத்திரிக்கை எடிட்டரும் ஆஃபீஸ் டைமில் ஆஃபீஸ்க்குள்  அப்படி தம் அடிக்கறதில்லை.



4. அருண் பாண்டியன் கோகிலா கிட்டே இது இது  பத்திரிக்கை நிருபர் வீடுதானே> என கேட்கும் இடம் ரொம்ப அமெச்சூர் நடிப்பு . இயக்குநர் கவனிச்சு அதை ரீ சூட் பண்ணி இருக்கலாம் .



5.  ஹவுஸ் ஓனர் பொண்னு வீட்டில் நைட் சாப்பிடுது . அப்போ அருண் பாண்டியன் பட்டினியா இருப்பதா வசனம் பேசுவது கேட்டு சாப்பிடும் தட்டில் கை கழுவறார்.அத்தனை சாப்பாடும் வேஸ்ட். அதை சாப்பிட்டுட்டு அவருக்கும் சாப்படு எடுத்துட்டுப்போய் கொடுத்தா மேட்டர் ஓவர். அதே சீனில்  ஒரு சின்னக்குண்டாவில் சாப்பாடு இருக்கும். ஒரு டம்ளர் அளவு அரிசியில் சமைச்ச சாப்பாடுதான் இருக்கும். அவங்க அம்மா , அப்பா சாப்பிட அது போதுமா?ன்னு யோசிக்கும்போதே சந்திர சேகர் , அருண் 2 பேரையும் கூப்பிட்டு சாப்பாடு பரிமாறுவாங்க , அதே குண்டா , ஆனா சாப்பாடு மட்டும் நிறைய இருக்கும் 



6. பேங்க் மேனேஜர் ஜெய்சங்கர்க்கு ஃபோன் பண்ணி “ பர்சனல் மேட்டர் 1 பேசனும் , மாலை விட்டுக்கு வா’ன்னு கூப்பிடறார். அங்கே போனதும் “ பேங்க் லோன் டியூ கட்டவே இல்லை , ஒரு வாரம் டைம் , கட்டலைன்னா சீஸ் பண்ணிடுவேன்னு சொல்றார். இதுதான் பர்சனலா? இது பேங்க்  மேட்டர். பேங்க்லயே சொல்லி இருக்கலாமே? 


7. பத்திரிக்கை ஆஃபீஸ்ல கரண்ட் போயிடுது 12 மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கறாங்க. மீட்டிங்க் நடக்குது. ஆனா அந்த சீனில் லைட்டிங்க் அப்பட்டமா காட்டிக்குடுக்குது. அதே ஷாட்டில் கரண்ட் வந்த பின் வெளிச்சம் அப்படியே தான் இருக்கும் . செம காமெடி 


 8. இளவரசியை ரேப்போ , மர்டரோ அவர் வீட்டிலேயே பண்ணி இருக்கலாம். ஒரு கார் நிறைய ஆள் அனுப்பி பில்டப் கொடுத்து மலேசியா வாசுதேவன் வீட்டுக்கு வர வெச்சு  ரிசைன் லெட்டர் டைப் பண்ணச்சொல்லி அதுக்குப்பின் ரேப் அண்ட் மர்டர் பண்ணுவது ரொம்ப நீலமான சாரி நீளமான காட்சி 


9. கொலை நடந்ததுக்கான சாட்சியா வர்ற விசு படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி செஞ்சாரா?  அவர் சாதாரண சாட்சி தான் . அவர் எப்படி ஒரு டி எஸ் பி தோள்ல கை போட்டு பாராட்ட முடியும்? பேச முடியும். அது கூடப்பாரவாயில்லை,. டி எஸ் பி  தான் போடும் ரகசிய பிளானை  சந்திரசேகர், ஜெய் சங்கர்க்கு விளக்குவது ஓக்கே ,. ஏன்னா அவங்க ஃபீல்டு ஒர்க் பண்றாங்க . ஆனா சமப்ந்தமே இல்லாம விசு எதுக்கு அங்கே? அதே போல் பிரஸ் மீட்டில் விசு என்னமோ போலீஸ் டிபார்ட்மெண்ட் ஐ ஜி மாதிர் பில்டப் கொடுப்பது ஓவர் . அவர் ஒரு சாட்சி . அவ்ளவ் தான்


10. கார்த்திக்கை தலையில் தாக்கும் வில்லன் அப்படியே அவரை விட்டுட்டு சசிகலாவைதூக்கிட்டுப்போறாரே? அவரை கண்ணால் கண்ட சாட்சியை கொலை பண்ணிட்டு , உயிர் அடங்கியாச்சா?ன்னு செக் பண்ணிட்டுத்தானே போகனும்?


http://i.ytimg.com/vi/gRfRUIAPGW8/0.jpg


11. ஓப்பனிங்க்ல அருண் பாண்டியன் 7 ரவுடிகளை ஒரே ஆளா அடி பின்றார்.சந்தோஷம் . ஆனா க்ளைமாக்ஸ்ல நடக்கும் ஃபைட்ல 4 பேர் அவரை சூழந்த்தும் ஒரு ஆளைக்கூட ஒரு அடி கூட அடிக்கலை .



12.  வில்லன் பொண்ணுங்களை ரேப் பண்றார். இன்னொரு வில்லன் கொலை பண்றார். இதுல என்ன ஆதார டாக்குமெண்ட்ஸ் இருக்கும்? ஜெய்சங்கர் க்ளைமாக்ஸ்ல ஆதார டாக்குமெண்ட்ஸ் பேப்பர்ஸ்னு ஒரு கத்தைப்பேப்பர் எடுத்துட்டு வர்றார். ஆராசா வழக்குல கூட அவ்வளவு டாக்குமெண்ட்ஸ் இருக்காது . டெண்டர் விட்டது ,ரகசிய ஒப்பந்தம்னு இருந்தாலாவது அத்தனை பேப்பர்ஸ் காட்ட அர்த்தம் இருக்கு


13. பத்திரிக்கையாளர் மீட்டிங்க்கில் டி எஸ் பி தீனதயாளன் வழக்கமா உங்க பத்திரிக்கை எப்போ வரும்னு கேட்கும்போது எல்லாருமே அதிகாலை 4.30க்கு லாஸ்ட் நியூஸ் ,  காலை 6 மணிக்கு பேப்பர் வரும்கறார், ஆனா உண்மையில் தினத்த்ந்தி உட்பட எல்லாப்பத்திரிக்கைகளுக்கும் லாஸ்ட் நியூஸ் அப்டேஷன் நடு நிசி 12 மணி , பேப்பர் ரிலீஸ் @ அதிகாலை 3.30 தான்


14. வில்லன் ரவிச்சந்திரன் பொம்பளைப்பித்தன் அல்ல, பெண்ணின் கண்ணை எடுப்பவன். அவனை வலை வீசிப்பிடிக்க சும்மா ஒரு பெண் அந்த ஏரியாவில் போனால் போதும் . எதுக்கு கோகிலாவை ஸ்விம்மிங்க் டிரஸ்ல அனுப்பனும்>



15. எந்தக்காதலனும் தன் காதலியை பகடைக்காயா அதுவும் ஸ்விம் டிரஸ்ல அனுப்ப ஒத்துக்க மாட்டான், அதுவும் படம் பூட்ரா பாவாடை தாவணி அல்லது சேலையில் வரும் மிடில் கிளாஸ் ஃபேமிலி கேர்ள் சிட்டி பொண்ணு மாதிரி எந்த தயக்கமும் இல்லாம ஸ்விம் டிரஸ்ல போக ஓக்கே சொன்னது எப்படி?


16. கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சசிகலாவை டி எஸ் பி தன் வீட்டில் வெச்சு பாதுகாக்கிறார். கேசில் சமப்ந்தப்பட்ட சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட பின்பு கூட அவர் உஷார் ஆகி தன் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டாமா? அட்லீஸ்ட் 2 போலீஸ் கான்ஸ்டபிள் கூட பாதுகாப்பு இல்லை அவர் பங்களாவில் . சர்வ சாதாரணமாக வில்லன் குரூப் அவர் மனைவியை கார்னர் பண்ணறாங்க


17. தவறான நடத்தை உள்ள காதலியால் மன நலன் பாதிக்கப்படும் வில்லன் பழி வாங்க அதே போல நடத்தை தவறும் பெண்களை மட்டும் தானே கொல்லனும்? கண்ணுக்கு சிக்குன ஃபிக்ரை எல்லாம் கொலை செய்வது என்ன லாஜிக்?


18 சந்திரசேகர் வயிற்றில் ஆழமான கத்திக்குத்து வாங்குனதும் ஒரே ஒரு பெட்ஷீட்டை செந்தூரப்பூவே கேப்டன் மாதிரி போர்த்திக்கறார். அப்படிப்பண்ணுனா ரத்தம் நிக்குமா? டைட்டா ஒரு துணி போட்டு கட்டவே இல்லை




19. ஆனானப்பட்ட  ஆ ராசாவை அரெஸ்ட் பண்ணவே 10 போலீஸ் தான் போனாங்க. ஆனா வில்லன் சிங்கிளா இருக்கார். அவர் கிட்டே அடியாளுங்க யாருமே இல்லை, அவரை அரெஸ்ட் பண்ண எதுக்கு அத்தனை அமளி துமளி? எதுக்கு 67 ஜீப் ?



20. லாங்க் ஷாட்ல காட்டும்போது 67 ஜீப்பிலும் ஒரே ஒரு டிரைவர் தான் இருக்கார் . ஆனா வில்லன் மாளீகையை எண்ட்டர் ஆனதும் ஒவ்வொரு ஜீப்பில் இருந்தும் 4 போலீஸ் ஆஃபீசர்ஸ் இறங்கறாங்க, எப்படி?



21. ஒரு பேச்சுக்கு 80 போலீஸ் தேவை என்றே வைத்துக்கொண்டாலும் 20 ஜீப் போதாதா?  20 * 4 = 80 .

22. கோகிலா கிட்டே கேப்டன் “ இந்த கேசோட திருப்பு முனையே நீங்க அந்த குதிரைக்காரரை பேச வைப்பதில்தான் இருக்கு” அப்டினு ஒரு பில்டப் டயலாக் விடறார். ஆனா கோகிலா அந்த  குதிரைக்காரரை பார்த்து  எந்த ரிஸ்க்கும் எடுக்காமயே அவர் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுடறார்


23. குதிரைக்காரரை வில்லன் ஏன் ஓப்பனிங்க்லயே கொலை பண்ணலை? அவர் பேத்தியை கொலை பண்ணினது அவருக்குத்தெரிஞ்சிடுச்சுன்னு வில்லனுக்குஹ்ட்தெரிஞ்சுடுச்சு . சாட்சியாவோ , பழி வாங்கும் ஆபத்தாகவோ அவர் மாறுவார்னு வில்லனால் யூகிக்க முடியாதா?


24. வீட்ல வயசுப்பொண்ணை வெச்சிருகறவர் பிரம்மச்சாரி சந்திரசேகர்க்கு எப்படி வீடு கொடுத்தார்? சென்னைல பிரம்மச்சாரிக்கு வீடே கிடைக்காது. ஹவுஸ் ஓனருக்கு அழகான சம்சாரமும், வயசுப்பொண்ணும் இருந்தா கேட்கவே வேணாம். ஆனா இவர் சந்திரசேகரையும் அலோ பண்ணி அவரோட ஃபிரண்ட் அருண் பாண்டியனையும் அலோ பண்ணி தன் பொண்ணு கையால சோறெல்லாம் போடறாரு ஹி ஹி


25. படத்துக்கு முக்கியத்திருப்புமுனையே வில்லனோட  காதலி சஹானாவா மாறுவதுதான் , வில்லன் சஹானா வா பார்ப்பதை காட்சியா காட்டி இருகனும் , முதல் 2 கொலையா வில்லனின் காத்லி , அவ கள்லக்காதலன் இருவரையும் கொலை பண்ரதை காட்டி இருக்கனும்

http://img822.imageshack.us/img822/9797/vlcsnap2011111808h24m54.png



சி.பி கமெண்ட் - பார்த்தே ஆக வேண்டிய க்ரைம் த்ரில்லர் படம், பெரும்பாலானோர் பார்த்திருப்பீங்க, பார்க்காதவர்கள் பார்த்துடுங்க .

http://www.shotpix.com/images/58364948498597659820.png
 சில சுவாராஸ்யமான செவி வழித்தகவல்கள்


1. இந்தபடத்தில் ஹீரோவாக நடிக்க உச்ச நட்சத்திரங்கள் இருவரைக்கேட்க ஃபிலிம் ஸ்டூடன்ட்ஸ் என அவர்கள் தயங்க  3 வது  ஆளாக  கேப்டன் ஒத்துக்கொண்டார்.



2. ரவிச்சந்திரன் நடித்த வில்லன் கேரக்டரில் முதலில் புக் ஆனவர் நாகேஷ். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது . அப்படி நடிச்சிருந்தா அபூர்வ சகோதரர்கள் க்கு முன்பே அவர் வில்லன் ஆகி இருப்பார் .



3. இந்தபப்ட ரிலீசின் போது போஸ்டரில்  விஜய் காந்த் படமே ஸ்டில்ஸாக பேப்பர் விளம்பரங்களில் இருந்தது. படம் மெகா ஹிட் என்றதும் வகை வகையாக அருண் பாண்டியன் - கோகிலா ஸ்டில்ஸ் அதிகம் வந்தது . அது கேப்டனுக்கு பிடிக்கவில்லை



4. கண்மணி நில்லு காரணம்  சொல்லு பாடல் காட்சி  பட ரிலீசின் போது  இல்லை, எடிட்டிங்கில் கட். படத்தின் நீளம் கருதி ( 165 நிமிடங்கள் ) பாட்டை கட் பணிட்டாங்க , பின் 25 வது நாளில் பாடல் இனைக்கப்பட்டு போஸ்டர்களில்  இன்று முதல் இப்பாடல் இணைக்கப்பட்டு என விளம்பரம் வந்தது


5. இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கார்த்திக் குக்கு நோ சம்பளம் , அதுக்குப்பதிலாக சசிகலாவுடன் ஸ்டோரி டிஸ்கஷன் ஹி ஹி


6 படத்தின் டைரக்டர் ஆர் அர்விந்த்ராஜ் தான் நடிகை விஜியை லவ் பண்ணி மேட்ட்ரை முடிச்சுட்டு அல்வா குடுத்தவரு , காதல் தோல்வியில் விஜி தற்கொலை பண்ணிக்குச்சு , நல்ல வேளை லெட்டர் எதும் எழுதி வைக்கலை அண்ணன் எஸ் ஆகிட்டாரு


7 . இதன் 2ஆம் பாகமாக மூங்கில் கோட்டை வருவதாக  இருந்தது , சில காரணங்களால் வரவில்லை


http://cdn5.supergoodmovies.com/FilesFive/oomai-vizhigal-to-be-remade-db4bacf7.jpg



Directed by R. Aravindraj
Produced by Abhavanan
Written by Abhavanan
Starring Vijayakanth
Arun Pandian
Chandrasekhar
Jaishankar
Karthik
Music by Manoj Gyan
Cinematography A. Ramesh Kumar
Editing by G. Jayachandran
Release date(s) 15 August 1986
Running time 176 minutes
Country India
Language Tamil
http://www.thiraivideo.com/video/wp-content/uploads/2012/05/Oomai-Vizhigal.jpg

Wednesday, October 24, 2012

சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள்

http://www.tolly9.com/uploads/news/politics/thumb/professor-arrested-for-harassing-female-singer.jpg 

ட்விட்டர் ஆல்தோட்ட பூபதி ( கரூர் ஜெகன்)  எழுதிய கடிதம் -


சகோதரி சின்மயி அவர்களுக்கு வணக்கங்கள். உங்களுக்கு என்னை தெரியுமா என தெரியவில்லை. இதுவரை உங்களுடன் பேசியதில்லை, அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் குரலின் இனிமையை ரசிக்கும் ஒரு கடைக்கோடி ரசிகனால் வைக்கப்படும் ஒரு வேண்டுகோளாய் நினைத்து வாசியுங்கள்.


 இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடைய நீங்கள், வெறும் ஒரு தனி மனிதனின் குடும்பத்திற்காகவும் அந்த பச்சிளம் குழந்தையின் புன்சிரிப்புக்காகவும் தயவு கூர்ந்து பெரிய மனதுடனும், பெருந்தன்மையுடனும் அவர்களை மன்னித்தருள வேண்டுகிறேன். ஒரு அன்பான தாயாரால் வளர்க்கப்பட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரின் அன்பையும் அரவணைப்பையும் பற்றி புகழ்ந்து சந்தோஷப்படும் ஒரு மகளான உங்களுக்கு நிச்சயம் இந்த பச்சிளம் பெண் குழந்தையின் பரிதவிப்பு புரியும் என நம்புகிறேன். 



ஒரு விளையாட்டில் ஜெயித்த நான்கு லட்ச ரூபாயை குழந்தைகள் நல அமைப்பிற்கு நன்கொடையாக கொடுக்குமளவு நல்ல நெஞ்சம் இருக்கும் உங்களால் நிச்சயம் இன்னமும் ஒரு பிறந்தநாள் கூட கொண்டாடாத இந்த குழந்தைக்காக  மிக மிக பெருந்தன்மையும் நீங்கள் வளர்ந்த உயர்ந்த முறையையும் காட்டி மன்னிதருளலாம். இது போல ஒவ்வொருவர் வீட்டிலும் இன்னமும் உலகத்தை அறியா குழந்தைகள் இருக்கலாம், வயதானவர்களும் இருக்கலாம். ஒருவரின் செயலுக்காக எல்லோரும் பாதிக்கப்பட வேண்டுமா என கொஞ்சமே கொஞ்சம் யோசியுங்கள். 



உங்களின் வார்த்தைகளின் மூலம், உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மன உளைச்சலும், பெரும் மன வருத்தமும், இறுக்கமும், கால விரயமும் புரிந்துக்கொள்ள கூடியது. உண்மையில் ஒரு சக மனிதனாக அதற்கு வெட்கமும் வேதனையும் படுகிறேன். நிச்சயமாய் அது மறக்க கூடியது இல்லை, ஆனால் உங்களை போன்ற பெருந்தன்மையான ஆளுமைகளுக்கு அது மன்னிக்க கூடியது தான். புகாரின் பேரில் இருக்கும் அந்த ஐந்து / ஆறு நபர்கள் செய்ததை நியாயப்படுத்த நான் இதனை எழுதவில்லை. அதில் எந்நாளும் எனக்கு உடன்பாடும் கிடையாது. அதில் சிலருடன் (இருவர்) பழகி இருப்பதாலும் இதனை எழுதவில்லை. ஏன், உங்களின் மனதை புண்படுத்தியதற்கு பொதுவிடத்தில் மன்னிப்பு கேட்கவும் வைக்க கூட எனக்கு தோன்றுகிறது.ஏன், ஒரு ஆணாக நானே கூட கேட்கலாம்.


http://lh4.ggpht.com/_leK5390n0fE/TNlabtJQefI/AAAAAAAAEu8/gA4USvRjxd8/Single-Photo-.jpg

நான் இந்த வேண்டுகோளை வைப்பதற்கும் எழுதுவதற்கும் காரணம், நானும் ஒரு ஒன்னரை வயது பெண் குழந்தையின் தகப்பன் என்பதால், ஒரு குழந்தையின் தேடலும் ஆசையும் விளையாட்டும் புன்சிரிப்பும் தவிப்பும் எப்படி இருக்கும் எதை நோக்கி இருக்கும் என்று அறிந்த ஒரு சக சகோதரனாய் தான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு.



 ஆனால் உங்களின் பெருந்தன்மையால் அவர்களை மன்னித்தால், அது அவர்களை மட்டும் மன்னித்தது இன்றி, அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றிய அழியா புகழ் உங்களை வந்து சேரும். இரண்டு நிமிடம் மட்டும் என் வேண்டுகோளுக்கு ஒதுக்கி, நல்ல முடிவை எடுங்கள். உங்களை போன்ற படித்தவர்களுக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் ' இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண / நன்னயஞ் செய்து விடல்'



( இந்த வேண்டுகோளை பற்றி விவாதிக்கவோ, பெரிது படுத்தவோ நான் விரும்பவில்லை. ஏனினில் இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பத்தையும் உரிமையையும் சார்ந்தது.மீண்டும் சொல்கிறேன், இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு. இதனை உங்கள் இருவரை ( / ) தவிர யாருடனும் பேசவும் விவாதிக்கவும் நானும் விரும்பவில்லை )

PS : Please dont think that am negotiating with sentiment(s), am just writing this by considering and believing you as a real peace lover. And importantly, am requesting you and not forcing you ;) Blesses and wishes ;)


http://lh3.ggpht.com/_leK5390n0fE/TNladS4wikI/AAAAAAAAEvM/ht6YBoimxkw/Single-Photo-.jpg


சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை  -1




பிரஷாந்த் , we never wanted this to happen. அதுனால தான் ரெண்டு வருஷம் பொறுத்தோம். இன்னிக்கி மிருகம்னு அழைக்கிரவங்கள நான் approach செஞ்சு as a friend ராஜன் கிட்ட அந்த குழந்தைக்காகவும் அவர் இளம் மனைவிக்காகவும் அவரை சற்று கௌரவமாக இருக்கசொல்லுங்கன்னு கெஞ்சினேனே.. He said no body can talk to Rajan. முயற்சி கூட பண்ண ரெடியா இல்லியே. 


 தொட்டிலையும் ஆட்டி தொடையையும் கிள்ளுவாங்கன்னு சொல்லுவாங்க. அந்தமாதிரி எனக்கு நேற்றைய விஷயங்கள 'அம்மா அம்மா' ன்னு கூப்பிட்டு சொல்லிவிட்டு இன்னிக்கி நல்லவன் போல நடிக்கறதுல என்ன அர்த்தம்னு நான் கேட்டேன்னு கேளுங்க. நல்ல ஒரு ப்ரொஜெக்டை விவரிச்சு அதுல அவர (Rajan) ஈடுபடுத்தி மனசை மாத்தலாம்னு சொன்னேனே. அந்த விஷயத்த ராஜனுக்கு கொண்டு போயானும் சேர்த்தாரா?


 ஒங்க எல்லாரையும் விட நான் தான் தொல்வியடைஞ்சதா நெனைக்கிறேன்.. செந்தில்cp மற்றும் சிலரை நான் அன்பால வென்றது மாதிரி ராஜனையும் வென்றிருந்தா அது என்னோட நிஜமான சந்தோஷமா இருந்திருக்கும் . கூடவே இருந்து இந்தநிலமைக்கி தள்ளி விட்டது வேற யாரும் இல்ல மிருகம்னு அழைக்கிற இவரே தான் . எனக்கும் நிறைய விஷயங்களை அம்மா அம்மான்னு கூப்பிட்டு , தன்மனிதன் போல சொல்லிவிட்டு மனுஷாபிமான இல்லாம இந்த நெலமைக்கி ஆளாக்கினது வேற யாருமே இல்லே இவருக்குத்தான் பெரிய்ய பங்கு .


இனப்பிச்சனை , ஸ்ரீலங்கன் பிரச்சனைன்னு பிறர் வீட்டு இளம் பெண்ணை அவதூறில் மாட்டிவைக்கிறமாதிரி திசை திருப்ப முயற்சி பண்ணற நேரத்தில ஒருமுறை அவரை நல்லதை உணர வைத்திருக்கலாமில்லையா ? யாராவது முயன்றீர்கள ? நான்குநாட்களில் ஒருவருக்கும் தோன்றவில்லையா?


Answering you Prashanth because we feel obligated to you for your stance for Chinmayi in the recent past which made you take a lot of muck. You proved a real anger of a brother when provoked on an issue of his sister. Now that the issue has gone to the police, and judiciery we all have to wait and let us not mince words or be emotional. Let the future bring change in all our minds to be a good and better humanbeings.  


http://gallery.southdreamz.com/cache/music-dance-celebrities/chinmayi/singer-chinmayi-exclusive-photo-gallery-9_720_southdreamz.jpg


பரிசல்காரன் -ன் ( திருப்பூர் கே பி கிருஷ்ணகுமார்) ட்வீட் 

ராஜன் கஸ்டடிக்கு போனது குறித்து மகிழ்ச்சி அடையும் மிருகங்களுக்கு ஆதிரையின் இந்தப் புன்னகையைப் பரிசளிக்கிறேன்.

 ராஜனின் குழந்தை படம் பகிர்ந்தார். அந்த படம் கே டி வி கிருஷ் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டது 
ஆ.ராதாமணாளன்

சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை  -2



உங்களை முழுக்க முழுக்க நம்புகிறேன். நீங்கள் திருமதி ரேவதியை பற்றி கவலைப்படாத நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். உங்களிடம் நான் முதலில் பேசிய போது உங்களின் தொடர்பு ராஜனுடன் அட்வைஸ் செய்யும் அளவில் இல்லை என்பதால் உங்கள் நண்பர் பரிசலிடம் எத்தனை முறை வாதாடினேன். அவர் நிஜமான நண்பராக இருந்திருந்தால் எங்களுக்காக வேண்டாம் அவர் நண்பருக்காக எடுத்துரைத்து இருக்கலாமில்லையா.


 இங்கு தோட்டா அவர்களின் முயற்சியை மதிக்கிறேன். பரிசலுக்கு எப்படி இப்படி ஒரு ....? அவர் எனக்கும் சரி ராஜனுக்கும் சரி நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார். திருமண வயதில் பெண்ணை வைத்திருக்கும் ஒரு தாயின் மன வேதனையை நீங்களும் மற்ற சிலரும் புரிந்து கொண்டீர்கள். இன்று தோட்டா அவர்களை retweet செய்த யாரவது பேசி இருப்பார்களா? நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். ?


ராஜனை உங்கள் மொழியில் உசிப்பெத்தி உசுப்பேத்தி விட்டு சற்று நேர கேளிக்கை அனுபாவித்தர்களே. அன்று சின்மயி மற்றும் அவளைப்பெற்ற நானும், நிஜமான அண்ணன் போல நீரும் மேலும் சிலரும் துடித்தோம். அதையும் கேளிக்கைப் பொருளாக்கியவர்களுக்கு இன்று ராஜனுக்காக வருத்தப்பட உரிமையில்லை. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த குறளை மேற்கோள் காட்டி எத்தனை முறை நான் சின்மயியை சமாதானப்படுத்தினேன் என்று உங்களுக்கு தெரியும்.


எங்கள் பொறுமையை இயலாமை என்றுதானே மிதித்தார்கள்? Please read my tweet reply to .


நானும் சின்மயியும் இந்த கைதுகளால் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இன்று நீங்கள் கதறும் இதே possible நிலைமையை சுட்டிக்காட்டி ராஜனை புரியவையுங்கள் என்று பரிசலிடம் கதறினேனே அன்று வீணாக இருந்துவிட்டு இன்று குழந்தையை போட்டோ பிடித்து போடலாமா? குழந்தையை வெளியில் காண்பிக்கலாமா. மீண்டும் மக்களை தூண்டிவிட்டு பிரச்னையை பெரிதாக்கும் பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன். திரு தோட்டாவின் செண்டிமெண்ட்சை மதிக்கிறேன். 



 தினமணி செய்தி 


பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துகள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக 6 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.


தன்னைப் பற்றியும் தன் தாயாரைப் பற்றியும் மோசமாக சித்திரித்து கருத்துகள் எழுதுவதாக அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் நேற்று நிப்ட் மையத்தின் துணை பேராசிரியர் சரவணக்குமார் பெருமாள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

http://haryanaabtak.com/wp-content/themes/NewsTime/thumb.php?src=http://haryanaabtak.com/wp-content/uploads/2012/10/7042_singerchinmayi.jpg&w=568&zc=1&q=80&bid=1

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையிலும், மேலும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடைப்படையிலும், ஏ.ராதாமணாளன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள தர்பார் ஹோட்டல் முன்பு செவ்வாய்க்கிழமை இன்று கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.




திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் இவர். இவர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மிகவும் துடிப்பான உறுப்பினர்.



 இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர், சின்மயிக்கு தான் எழுதிய கருத்துகள் குறித்து ஒப்புக்கொண்டார். மேலும், தனது @rajanleaks என்ற பெயரிலான தளம் குறித்தும், தான் அதன் மூலம் சின்மயிக்கு ஆபாசக் கருத்துகளை எழுதியதையும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் இவர் எழும்பூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.




மேலும் சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில், கிரைம் பிரிவு போலீஸார், @losongelesram, @vivajial, @rajanleaks, @senthilchn, @thyirvadai, Asharavkay ஆகிய ஆறு பேர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

@காலைக்கதிர்



@காலைக்கதிர்





டிஸ்கி - சமாதானப்பேச்சு இன்னும் தொடர்வதால் ட்விட்டர் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்போது பொறுமை காக்கவும், ஆவேசமான, ஆக்ரோஷமான எதிர் வாதங்கள் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.சின்மயி , மற்றும் அவர் அம்மா பற்றிய தனி மனித தாக்குதல்களை தவிர்க்கவும்.வழக்கை வாபஸ் பெற வைக்க கடைசி நிமிடம் வரை முயற்சிகள் தொடரும். அதற்குள் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி சமாதானத்திற்கு யாரும் பங்கம் விளைவிக்க வேண்டாம்


டிஸ்கி 2 - ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்-
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 3 - சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_7456.html

Friday, September 21, 2012

சாருலதா - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4tDUZ24wqeI1wZ90oslh7ixGXOMrO7w_CWm2EVKPsRxQ2z_RPlb1qc2ykmbAnZKv2oyH-TdrCOsz5MDNzEtlSUCOQzmpSiutTxnhAsPaJU-xIkfigLyxTYvzJ19qYUSxfXUScnqPS-_k/s1600/0.jpg 

சாருவும் , லதாவும் ட்வின்ஸ்.ஒட்டிப்பிறந்த ரெட்டை சகோதரிகள்.சின்ன வயசுல இருந்தே ஒண்ணாவே வளர்றாங்க.ஒத்த ரசனை. சில காரணங்களால அவங்களை பிரிக்கலை. அப்படியே ஒட்டியேதான் இருக்காங்க.19 வயசு வரைக்கும் சரியாதான் போய்ட்டு இருந்திருக்கு.  19 வயசு ஆனதும் திடீர்னு இசை ஆர்வம் வந்து வயலின் கத்துக்க போறாங்க.. அங்கே தான் ஹீரோவும் வயலின் கத்துக்க வர்றார். 


2 பேருக்கும்  அவரை பிடிச்சிடுது.ஆனா ஹீரோ கமலோ, எஸ் ஜே சூர்யாவோ, கே பாக்யராஜோ கிடையாது . பாவம். அவர் ஒரு பொண்ணைத்தான் அதாவது சாருவை லவ்வறாரு.இது லதாவுக்கு பிடிக்கலை.காதலனை சந்திக்க போகக்கூடாதுன்னு தடை போடறா. இந்த சங்காத்தமே வேணாம், 2 பேரும் ஆபரேஷன் பண்ணி பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிடறா சாரு. 


 ஆபரேஷன்ல ஒருத்தி உயிர் போயிடுது.லதா செத்துடறா. சள்ளை விட்டுதுன்னு  சாரு அம்மாவை அம்போனு ஊர்ல விட்டுட்டு காஷ்மீர் போய் லவ்வரோட லிவ்விங்க் டுகெதரா வாழறாங்க ( ஆனா நோ கில்மா )அம்மாவுக்கு சீரியஸ்னு தகவல் வருது.


சொந்த ஊர்க்கு போனா சந்திரமுகில வர்ற மாதிரி திகில் அனுபவங்கள்..செத்துப்போன லதா பேயா வந்து பயப்படுத்தறா.. அதுக்குப்பிறகு என்ன நடக்குது என்பதே கதை.. 


http://lh4.ggpht.com/-CCewH8xWxwg/T9dXEU_v8PI/AAAAAAAAQdM/Ry-geX6pbH0/Charulatha%252520Stills%252520%2525288%252529.jpg


கேட்க ரொம்ப சாதாரணமா இருந்தாலும் இதுல நான் சுவராஸ்யம் போய்டக்கூடாதுன்னு கலக்கலான 2 ட்விஸ்ட் மேட்டரை சொல்லாம விட்டிருக்கேன்.. ட்வின்ஸ் கதைல 2 ட்விஸ்ட்.. அடடே.. 


படத்துல முதல்ல பாராட்ட வேண்டியது பிரியாமணியைத்தான்.. ஆஹா! பருத்தி வீரன் முத்தழகு கேரக்டருக்குப்பிறகு  அவருக்கு அமைஞ்ச அல்வா கேரக்டர். வழக்கமா நாம பார்த்த அடக்க ஒடுக்கமான பிரியாமணியா குங்குமம் வெச்சு படிய தலை வாரிய ஹேர் ஸ்டைலில் பாந்தமா வர்றவர் அந்த  வில்லி கேரக்டர்ல மிரட்டிட்டார். சபாஷ்! 


 இதுக்கு முன்னால இப்படி அகம்பாவமான , ஆணவமான , மிரட்டலான, ஆண்மைத்தனமான கேரக்டரை ஜெயலலிதா கிட்டே , மன்னன் விஜயசாந்தி கிட்டே, படையப்பா ரம்யா கிருஷ்ணன் கிட்டே தான் பார்த்திருக்கோம். அவங்களை டச் பண்ணலைன்னாலும் கிட்டே வந்துட்டார்.. 


ஆர் பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா டாக்டரா, சரன்யா அம்மாவா பாந்தமா நடிச்சிருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqnMGlHpPsF5aIY_m-hEigQoGwXi1eWYsole_PGqvb7sDiVlOx8iilfidmTTQIVw61rtSzUb41Reo1gRDa_1l0RllFdCrlHfJv6oLJvGartoLW63X41Y9XVmwUsk6yDqxzHtl10IH1P4fw/s1600/guniguni.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. இயக்குநர் நினைச்சிருந்தா இது வாலி கதையின் உல்டா வெர்ஷன் தான் அப்டினு சமாளிச்சிருக்க முடியும், ஆனா அப்படி பண்ணாம முறையா தாய்லாந்துப்பட ஒரிஜினலான  அலோன் (ALONE)  தயாரிப்பு தரப்பு கிட்டே அனுமதி வாங்கி கதைக்கு கிரெடிட் அவங்கதான்னு ஒத்துக்கிட்டதுக்கு. ( மிஷ்கின், கே வி ஆனந்த் வகையறாக்கள் கவனிக்க ) 


2. பிரியாமணிக்கு இந்தப்படத்துல ஏகப்பட்ட காஸ்ட்யூம்ஸ்.ஆல் மாடர்ன் டிரஸ் தான். செம .. இதுக்கு முன்னால இந்த சாதனை செஞ்சவங்க பூக்களைப்பறிக்காதீர்கள் , உயிரே உனக்காக நதியா , வஸந்த் இயக்கத்தில் வந்த நீ பாதி நான் பாதி  படத்துல கவுதமி ( நிவேதா பாடல் காட்சில மட்டும்  65 டிரஸ்சாம் )


3. இடைவேளை ட்விஸ்ட்டில்  படத்தின் ட்விஸ்ட்டை சூசகமாக சொல்லும் அந்த  கண்ணாடி ஷேப்பில்  சிதறிய முத்து மணிகள் கூடுவது 



4. த்ரில்லர் பட விமர்சன மேனர்ஸ் கருதி சொல்லாமல் விட்ட அந்த 2 திருப்பு முனை காட்சிகள் 



5. பேய்ப்படம் என்பதற்காக கோரமான உருவம், ரத்தம், கசமுசா காட்சிகள் எல்லாம் வைக்காமல் மிக கண்ணியமாக படத்தை எடுத்தது


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_83856928349.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. த்ரில் , திகில் படங்களுக்கு காமெடி, பாடல் காட்சிகள் ஒரு பெரிய டிரா பேக். ஏன் ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோயினுக்கு தேவை இல்லாம ஒரு பாட்டு?  சந்திர முகி படத்துல வடிவேல் காமெடி மேட்ச் ஆச்சு ஆனா இதுல  அந்த சின்னப்பையன் காமெடி எடுபடலை



2. அன்பே வா படத்துல எம் ஜி ஆர் தன் சொந்த பங்களாவுக்கு வந்தும் வாடகை கொடுத்து தங்கற மாதிரி சூழல், அப்போ நாகேஷ் காமெடி பண்ணுவாரு, மனோரமாவுக்கு எம் ஜி ஆர் தான் ஓனர்னு தெரியும். இந்த காமெடி டிராக் கதையோட ஒன்றி இருந்தது, ஆனா இதுல செட் ஆகலை.. பிரியாமணி எதுக்காக அப்படி நடிக்கனும்? அந்த டிராமா எதுக்கு? 



3. ஹீரோயின் ஒரு சீன்ல வாக்குவம் க்ளீனர் மூலம் வீட்டை சுத்தப்படுத்திட்டு இருக்காங்க. ஹீரோ உள்ளே வந்ததும் தன் காலால வாக்கும் க்ளீனர் ஸ்விட்சை ஆஃப் பண்றாங்க.. ஆயுத பூஜை கும்பிடறாங்க, இப்படித்தான்   பண்ணுவாங்களா? ஹீரோயின் கையால அதை ஆஃப் பண்ண மாட்டாங்களோ?


4. ஹீரோயின் அம்மா சரண்யா சீரியஸ்னு  ஐ சி யூ ல அட்மிட் ஆகி இருக்காங்க. டாக்டர் வெளீலயே பிரியாமணியை நிறுத்தி அவங்களை தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லாம உள்ளே கூட்டிட்டுப்போய் அதே டயலாக்கை சொல்றாரு// ஆர்க்யூ பண்ணற இடமா அது? 



5. பேபி ஷாலினி சில படங்கள்ல வயசுக்கு மீறி பேசும்போது, சேட்டை பண்ணறப்போ ஒரு கோபம் வருமே ஆடியன்ஸுக்கு அந்த கோபம் இந்தப்படத்துலயும் அந்த பையன் மேல வருது.. பிஞ்சுலயே பழுத்துட்டான் போல.. 


6. ஹீரோயின் ஒரு சீன்ல காரை ரிவர்ஸ் எடுக்கறா. பின்னால நாய் உக்காந்து இருக்கு. பகல் டைம் தான்.  நாய் தூங்கலை, மயக்கம் இல்லை, ஆனா விலகலை.. கார்ல அடிபட்டு சாகுது.. அது எப்படி நாய்க்கு மனுஷனை விட கேட்கும் திறன் அதிகம் ஆச்சே? கார் சவுண்டை கேட்காம எப்படி விட்டுது? ( ரோட்ல விபத்து நடப்பது வேறு, வீட்டு கார் ஷெட்டில் அப்படி ஆகுமா? ) 


7. சரண்யா ஊர்ல தனியா இருக்காங்க.அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கற மேட்டரை யார் பிரியாமணிக்கு தகவல் சொல்றாங்க? ஏன்னா அந்த வீட்ல இருக்கற மத்த 2 பேரான ஆர்த்தி, அந்தப்பையன் 2 பேருக்கும் பிரியாமணி வர்ற மேட்டரே தெரியலை. 

http://www.vidikural.com/wp-content/uploads/2012/06/priyamani_002.jpg


8. ஹீரோயின் ஒரு சீன்ல ஒரு  டப்பாவை எடுத்து அதுல இருந்து கிட்டத்தட்ட 70 டேப்லட்ஸ் சாப்பிடறா.. தண்ணீர் குடிக்காமலேயே.. நம்மால 2 மாத்திரையே அப்படி சாப்பிட முடியறதில்லை.. அதுவும் ஒவ்வொண்ணா பொறுமையா சாப்பிடாம அப்படியே கொட்டிக்கறா.. 



9. சிஸ்டர்ங்க 2 பேருக்கும் பிராப்ளம் ஓக்கே. சக்களத்தி சண்டைக்காக ஆவி பயமுறுத்துது. ஏன் அம்மாவை பயப்படுத்தனும்?


10. படத்துக்கு முக்கியமான கேரக்டரே அந்த வில்லி கேரக்டர் தான். அதுக்கான ஸ்கோப்பை திரைக்கதைல எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்த்தாம எதுக்கு தேவை இல்லாம அந்த காமெடி போர்ஷன்.செம மொக்கை.. அதுவும் நட்பு படத்துல செந்தில் நடிச்ச 10 பைசா பைத்தியம் காமெடி டிராக் மாதிரி 1000 ரூபா எதுக்கெடுத்தாலும் லஞ்சமா கேட்பது மகா எரிச்சல் 



11. மந்திரவாதி, சஞ்சீவி வேர் , சூன்யம் எடுக்கறது இந்தக்கதைக்கு தேவையே இல்லை.. ஏன்னா இது பேய்ப்படம் கிடையாது, அந்த மாதிரி போக்கு காட்டும் ஒரு த்ரில்லர் சஸ்பென்ஸ் படம்.. அந்த மந்திரவாதி கேரக்டர் படத்தின் போக்கை கொஞ்சம் திசை திருப்புது ( அநேகமா ஒரிஜினல்ல இது இருந்திருக்காது, நீங்க சேர்த்து இருப்பீங்க?)


12. இந்த பங்களாவில் பேய் பிரச்சனைன்னு தெரிஞ்சதும் இடத்தை காலி பண்ணாம ஏன் அங்கேயே இருக்கனும்? அம்மா ஹாஸ்பிடல்ல . இவங்க வேற ஹோட்டல்ல தங்க வேண்டியதுதானே?


13. ட்வின்சை பிரிக்கும் சீன்ல ஆபரேஷன் நடக்காததுக்கு முன்பே ஒருத்தி செத்துடறா. டாக்டர் எந்த கேள்வியும் கேட்கலையே. இந்த த்ரில்லர்ல ஒரு சீன்ல கூட போலீஸே எண்ட்ரி ஆகலையே ஏன்? போலீஸ் பந்த்தா? 


14. க்ளைமாக்ஸ்ல  ஹீரோவை கட்டி வெச்சு ஹீரோயின் மிரட்றா. என்னை கட்டிக்கிறியா, உன்னை கொன்னுடவா?ன்னு. ஹீரோ பெரிய பருப்பு மாதிரி செத்தாலும் பரவாயில்லை உன்னை கட்ட மாட்டேன்கறான். அப்போதைக்கு ஓக்கே சொல்லிட்டு எஸ் ஆக பார்க்க மாட்டானா? 


15. ஹீரோவுக்கு சுய புத்தி இல்லையா? க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை வேண்டாமுனு சொல்லி எஸ் ஆகி வந்த பின் சரண்யா என் மகளை ஏத்துக்கோன்னு சொன்னதும் ஏத்துக்கறாரே? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3zL5VIj_pLsQUKi3pbIB5ntsflA-UwI9quzgIBlhSudKSaxw4XouDzMRaadMAwznwW0DpKrxX6jkev8iOgXOT5cQUjmJFvYC5M8R2dciyIh7-7HdQvT_iVDnEMTGUnikP0joy2canzw8/s1600/priyamani.jpg




மனம் கவர்ந்த வசனங்கள் 


1. நம்மை மீறி நடக்கும் சில விஷயங்களுக்கு  விதி மேல பழியைபோட்டுட்டு  நாம சைலண்ட்டா இருக்கனும்


2.  என்னது? 2 வருஷமா ஒரே வீட்ல ஒண்ணா இருந்துட்டு ஒண்ணுமே பண்ணலையா? 


3. மேடம், பத்தாயிரம் ரூபா கொடுத்துட்டு ஏன் படிக்கட்டுல படுத்திருக்கீங்க, போய் உள்ளே பெட்ரூம்ல படுங்க.. 

 அடேய், நான் ஸ்லிப் ஆகி விழுந்திருக்கேன் 



4.  ரோசியா? யார் அந்த ஃபிகரு?


 அது அவ வளர்க்கும் நாய் 


5. இந்த உலகத்துல ஒவ்வொருவருக்கும்  ஒரு கவலை கண்டிப்பா இருக்கும். 


6. ட்வின்ஸ்ல ஒருத்தர் இறந்துட்டா இன்னொருத்தர் சீக்கிரம் செத்துடுவாங்கன்னு சொல்றது உண்மையா? அதே போல் செத்துப்போன ஒருத்தர் தன் ட்வின்ஸை வாழ விடமாட்டாங்களா? 



7. பொதுவா இந்த மாதிரி பேஷண்ட்ஸ் ரெக்கவர் ஆவது பேஷண்ட்ஸ் வில் பவரை பொறுத்தது



8.  கார் ஏத்தி  ரோசியை ரோஸ்ட் பண்ணிட்டாங்க 




9. நான் வேணா பாடி காட்டட்டா? 

 அய்யோ , பாடியை காட்ட வேணாம்.. பாடி காட்டுனா போதும்




10. எங்கக்காவைக்கட்டிக்கிட்டா ஒரே கல்லுல 2 பங்களா


11. உங்க எதிர்காலம் ரொம்ப பிரம்மாண்டமா அமையும்னு சொன்னியே அந்த பிரம்மாண்டம் இவ தானா? அவ்வ்வ் 



12. இந்த டிரஸ்ல நான் எப்படி இருக்கேன்?


 புலவன் மாதிரி வர்ணிக்கவா? பொறுக்கி மாதிரி சொல்லவா? 


 பொறுக்கி மாதிரி சொல்லு 


 ஒரு மரத்துப்பனை கள்ளு போல இருக்கே


 சரி, புலவன் மாதிரி சொல்லு 


தேனில் ஊறிய தேனடை மாதிரி இருக்கே. 
\


13. பொண்ணுங்களை பிக்கப் பண்ண பசங்க நாய் மாதிரி அலைவானுங்க,.ஆனா நீங்க அந்த நாயையே கிஃப்டா கொடுத்து பிக்கப் பண்ணிட்டீங்களே? 


14. நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்க முடியாது 


15. ஜஸ்ட் 20 நாள் லவ்வுக்காக 20 வருஷ பாசத்தை கொன்னுட்டியே


16. சஞ்சீவி வேருக்கு அபூர்வ சக்தி இருக்கு. கம்பி மேல பட்டாக்கூட  கம்பி உடையும், வேர் உடையாது, நெருப்பால கூட அதை ஒண்ணும் பண்ண முடியாது 


17 . மேலே மேகத்தை பாரு என்ன தெரியுது?


 மேகம் தான் தெரியுது



 சிங்கம் மாதிரி தெரியலை? நிலாவுல பாட்டி வடை சுடற பிம்பம் தெரியறதும்
 இப்படித்தான். நம்ம மனசும் , கற்பனையும் தான் காரணம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUFZuD3J-X9pajVKPjR1WHwXeo9K6uZ7Oz41RI2NU3Cfu4mFgmW28DBpdghUqFIoij_zP9-aLxpQ_0mFlQMVoRHcnKyAOul7pwoyUOyl96BsSrW8kNZmZl2sJLkC914pwatk-h-WsZzii6/s1600/alone-horror-2007.jpg

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று



சி.பி. கமெண்ட் - த்ரில்லர் , திகில் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம். பெண்களும் பார்க்கலாம்.. கண்ணியமான நெறியாள்கை.ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

டிஸ்கி -சாட்டை -http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html

Saturday, July 28, 2012

பொல்லாங்கு - நடுநிசி நாய்கள் 2 - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22141_1.jpg

தமிழ் சினிமாவில் 4 வகையான படங்கள் வருவதுண்டு. 

1. அனைவராலும்  சிலாகித்து பாராட்டு பெறும் படங்கள் 

2. மாமூல் மசாலா குப்பைகள்

 3. விருதை குறி வைத்து எடுக்கப்படும் படங்கள் 

4. வக்ர சிந்தனையை தூண்டும் வல்கரான படங்கள்..

 நடு நிசி நாய்கள் படத்துக்குப்பின் நான் பார்த்த மிக மோசமான , வன்முறை,வல்கரின் உச்சமான படமாக இதை சொல்லலாம்.. மேக்கிங்க் வைஸ் பல இடங்களில் சபாஷ் வாங்கினாலும் அஸ்திவாரம் மகா மட்டம்.. இந்த மாதிரி மக்கள் மனதை பாதிக்கும், சமுதாயத்துக்கு எந்த வித நேர் மறை விளைவுகளை தராமல் வக்கிர எண்ணங்களை சமூக விரோதிகளிடம் வளர்க்கும் படங்களை தடை செய்ய வேண்டும் என்ற கண்டனத்துடன் விமர்சனத்துக்குள்ளே போலாம்.. 


கார் ஆகட்டும், பைக் ஆகட்டும் முதல்ல ஃபர்ஸ்ட் கீர், அப்புறம் செகண்ட் கீர் லாஸ்ட்டா டாப் கீர். இப்படித்தான் ஸ்பீடு எடுக்கனும்.. ஆனா  படத்தோட ஓப்பனிங்கே டாப் கீர்ல ஸ்டார்ட் ஆகுது.. ஒரு ஹனிமூன் கப்பிள் நடுக்காட்ல கார்ல போறாங்க.. அதை 4 பேர் கொண்ட கும்பல் துரத்துது..  இதை சுவராஸ்யமா 7 ரீல் கொண்டு போனதே பெரிய விஷயம்.. அவங்க எதுக்காக அவங்களை துரத்தறாங்க அப்டிங்கறதை சாவகசமா இடைவேளைக்குப்பிறகு  ஃபிளாஷ்பேக்ல சொல்றாங்க. 


 முறைப்படி இந்த கதையை ஃபிளாஷ்பேக் உத்தியை பயன் படுத்தாம நேரடியா ஏன் சொல்லலைங்கறதுக்கும், ஆரம்பத்துல ஹீரோயின் கார் ஓட்ட ஹீரோ ஏன் பின் சீட்ல உக்காந்திருக்கார் என்பதற்கும் அட்டகாசமான சஸ்பென்ஸ் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ்ல இருக்கு.. சொன்னா சுவராஸ்யம் போயிடும்./.

வில்லன் குரூப் ல மெயின் வில்லன் சாடிஸ்ட்.. உலகத்துல சாடிஸ ரேப்க்கு தனி மார்க்கெட் இருக்கறதால  பெண்ணை சித்ரவதை பண்ணி ரேப் பண்ணி அதை வீடியோ எடுத்து நெட்ல விட பிளான் பண்றாங்க.. 3 டிக்கெட்ங்களை கூட்டிட்டு வந்து ஃபாரஸ்ட்ல பாழடைஞ்ச பங்களாவுல கில்மா பண்றப்போ ஹீரோயின்  அதை பார்த்துடறா.. அதை வீடியோ எடுத்துடறா.. அதை கைப்பற்றத்தான் சேசிங்.. படம் பூரா ஓட்டம் ஓட்டம் ஓட்டம்தான்.. படம் முடிஞ்சதும் ஆடியன்சும் ( மொத்தமே 19 பேர்தான்)  விட்டா போதும்னு வீட்டுக்கு ஓட்டம் பிடிக்கறாங்க


http://i.ytimg.com/vi/LwNRQ2Lwfzw/0.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஷூட்டிங்க் ஸ்பாட், லொக்கேஷன்ஸ், ஒளிப்பதிவு அட்டகாசம்..

2. ஹீரோயின்  நடிப்பு செம.. பல படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர் போல் நடிச்சிருக்கார்..அங்கங்கே ஓவர் ஆக்டிங்கும் உண்டு

3. ஹீரோயின் பட ஓப்பனிங்க்ல இருந்து இடைவேளை வரை  காரை டிரைவ் பண்றார்.. ஆனா ஹீரோ தேமேன்னு பின்னால இருக்கார்./  ஆனா பின் பாதி ஃபிளாஷ்பேக் சீன்ல ஹீரோ தான் கார் ஓட்டறார்.. இதுக்கான காரணத்தை க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் சீனா வெச்சது கலக்கல் .. இயக்குநர் படத்தில் பாராட்டத்தக்க ஒரே  விஷயம் இந்த ட்விஸ்ட் தான்.. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..  


http://i869.photobucket.com/albums/ab253/tamiltheatre/pollangu-5.jpg


மனம் கவர்ந்த ரொமான்ஸ் வசனங்கள் ( ஹனிமூன் ட்ரிப்)

1. ஏய்.. ரொம்ப வளைக்காதே..

எதை?

 காரை

2.ஹனிமூனை யார் கண்டு பிடிச்சாங்க ? தெரியுமா? கேன் யூ கெஸ்?

ம்ஹும், நீங்களே சொல்லிடுங்க..

கூட்டுக்குடும்பத்துல பிறந்த ஒருத்தன் தன் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்க முடியாதவன் தனியா எங்காவது அவளை தள்ளிட்டு போக ஐடியா கண்டு பிடிச்சு இருக்கனும்

 அப்போ மாயாண்டி குடும்பத்துல  பிறந்த முனியாண்டி?!!

3.  ஏய்! வலிக்குதா?


வலி இல்லாம வழி கிடைக்காது



4. டியர்.. தாங்க்ஸ்..

எதுக்கு?

என்னை சந்தோஷப்படுத்துனதுக்கு

ஐ நோ (I KNOW)

எப்படி?

ம் ம்  என்னால உணர முடிஞ்சது..  உயிர்த்துடிப்பு சொல்லுச்சு..



ம், ஆனா வலிக்குது



5.  குளிருது... உனக்கு குளிரலை?

 போர்வைக்கு எப்படி குளிரும்?



 புரியலையே..

மக்கு புருஷா.. நைட் டைம்ல நான் தானே உன் போர்வை.. எனக்கு எப்படி குளிரும்?



6. கடல்ல ஒரு வகை மீன்கள் இருக்கு.. லாங்க் ஷாட்ல அவை நீர்  மட்டத்தை விட்டு வெளில வர்றப்போ நெருப்புக்குழம்பு பாய்ச்சல் போல் தெரியும்.. கொள்ளி வாய் பிசாசுன்னு  சிலர் நினைப்பாங்க.. அதே மாதிரி அடர்ந்த கானகத்தில் இப்படி அருவி சத்தம் போலியா கேட்கும்.. அதுக்கு கோஸ்ட் மாடஸ்டி ஆஃப் வாட்டர்னு பேரு.,.

வில்லனின் வசனங்கள்

1. எல்லா பெரிய ஆளுங்களும் ( பெரிய மனுஷங்க) தொடர்ந்து பணக்காரங்களா இருக்க அவங்க ஏதாவது தப்பு பண்ணிட்டே இருக்கறது தான் காரணம்

2. அது போக 18 இடங்களில் கெட்ட வார்த்தைகள் 



http://4onlinetv.com/wp-content/uploads/mvbthumbs/img_359_pollangu-tamil-theo-trailer-pro-mounam-ravi_xvid.jpg


இயக்குநரிடம்  பல கோபாவேச கேள்விகள்


1. இந்தப்படத்தின் மூலம் நீங்க சமுதாயத்துக்கு சொல்ல வருவது என்ன? சமூக விரோதிகளுக்கு ஐடியா குடுக்கறீங்களா? ஆட்டோ சங்கர் மாதிரி இதை பார்த்து அது போல் செய்யலாம்னு முயற்சி செஞ்சு யாராவது பாதிக்கப்பட்டா நீங்க அதுக்கு பொறுப்பு ஏத்துக்குவீங்களா?

2. ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்கறது தப்பில்லை.. நல்ல விஷயங்களை காப்பி அடிக்காம இப்படிப்பட்ட வல்கர் படம் தான் உங்க கண்ணுக்கு சிக்குச்சா?

3. படத்தோட டைட்டில்ல எழுத்து , இயக்கம்னு உங்க பேரை ஜம்பமா போட்டுக்கறீங்க.. இதன் ஒரிஜினல் மூவிக்கான க்ரெடிட்டை ஏன் கொடுக்கலை?

4. ஏதோ த்ரில்லர் படம்னு தெரியாம ஒருத்தன் தன் ஃபேமிலியோட வந்து தியேட்டர்ல மாட்டிக்கிட்டா அவன் அடையும் மன உளைச்சல்களுக்கு உங்க நஷ்ட ஈடு என்ன?

5. ஹீரோ செலக்‌ஷன் மகா மட்டம்.. சரியான தத்தியா இருக்கார்.. அவர் தான் ஃபைனான்ஸ் பண்ணாரா?

6. ஹீரோயின் நியூலி மேரீடு கேர்ள்க்கு பொருத்தமே இல்லை.. 38 வயசு ஆண்ட்டி மாதிரி இருக்கு..

7 சென்சார் ஆஃபீசர்ஸ்க்கு எவ்ளவ் லஞ்சம் கொடுத்தீங்க?


http://www.tamilnow.com/movies/gallery/pollangu/pollangu-9231.jpg


லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்

1. படத்தோட ஓப்பனிங்க் சேஸ் சீன்ல ஹீரோயின் கார்ல வேகமா போறா.. வில்லன் குரூப் ஜீப்ல துரத்தறாங்க.. அப்போ ஹீரோயின்  டக்னு மெயின் ரோட்டை விட்டு விலகி லெஃப்ட்ல கட் பண்ணி மண் ரோட்டில் கொஞ்ச தூரம் போய் வண்டியை நிறுத்தி வந்த பாதையின் மண் தாரையை அழிச்சுட்டு கிளம்பறா.. அதுக்கு எல்லாம் நேரம் இருக்குமா? என் ஐடியா என்னன்னா ஆளில்லா அநாமத்து காட்டில்  அப்படி சப்வே மண் ரோட்டில் போய் மாட்டிக்கறதுக்கு ஒரு பெண் என்ன யோசிப்பான்னா வில்லன்க அந்த இடத்தை கிராஸ் பண்ணதும் வந்த வழியிலேயே காரை திருப்பி போனா எஸ் ஆக வாய்ப்பு அதிகம்.. ஏன்னா 10 கிமீ வில்லன்க போய் ஆள் எஸ்னு உணரும்போது ஹீரோயின் ஆப்போசிட் டைரக்‌ஷன்ல 10 கிமீ போய் இருப்பா.. டோட்டலா 20 கிமீ தள்ளி இருப்பா.. சேஃப்.. இந்த ஐடியா தான் செலக்ட் பண்ணுவாங்க.. மேலும் மேலும் சிக்கலை வரவழைக்கும் அந்த சப் வே ஐடியா வை யாரும் அதும் ஒரு பொண்ணு செலக்ட் பண்ண மாட்டா..

2. ஒரு  சீன்ல வில்லனை மலைப்பாம்பு வளைக்குது.. அப்போ அவன் கைல கன் இருக்கு.. சுட்டிருக்கலாம்.. பயத்துல அல்லது உயிர்ப்பாதுகாப்புக்காகவாவது சுட்டிருக்கனும்./. ஆனா அவன் சுடலை ஏன்? வேற ஒரு வில்லன் வந்து அவன் கைல இருக்கற கன்னால சுடறான்.. அது டேஞ்சர் இல்லையா? பாம்பு மேல குண்டு பாய்வதை விட ஆள் மேல பாய்வதற்குத்தான் சான்ஸ் அதிகம்

3.  இன்னொரு காட்சில மலைப்பாம்பு ஒருத்தனை வளைக்குது.. அப்போ 3 பேரு வந்து என்னமோ ராட்டைல இருந்து நூல் உருவற மாதிரி அவனை ஈசியா விடுவிக்கறாங்க.. அப்புறம் என்னமோ செல்லப்பிராணியை வழி அனுப்பற மாதிரி காட்டுக்குள்ளே அதை விட்டுடறாங்க.. காட்டிலாகா அதிகாரியிடம் இது பற்றி பேசினேன்.. மலைப்பாம்பின் பிடி இறுகி இருக்குமாம்.. அல்ப சொல்பமா  அப்படி எல்லாம் விடுவிக்க முடியாதாம்.. உடும்புப்பிடிக்கு அடுத்து மலைப்பாம்பின் பிடிதான் ஃபேமஸாம்

4.   புரட்சித்தலைவியின் தஞ்சாவூர் பொம்மைஓ பி எஸ், சோனியாவின்  கை பொம்மை மன்மோகன் சிங்கை  எல்லாம் தோற்கடிக்கும் வகையில் அந்த கணவன் கேரக்டர்,, மகா மகா சோப்ளாங்கி..  கேரக்ட்ரைசேஷன் ஒர்ஸ்ட்

5. கதைப்படி அவங்க ஹனிமூன் கப்பிள் தான்.. ஆனா வில்லன் அவங்க கிட்டே “ உங்க கழுத்துல தாலி இல்லை.. தள்ளிட்டு வந்துட்டீங்களா?” அப்டினு கேவலமா கேட்கறப்போ எந்த ரெஸ்பாண்சும் இல்லையே, ஏன்? தன்னிலை விளக்கம் கொடுக்க வேணாமா?

6. டவர் இல்லாத காட்டுப்பகுதி.. யாருக்கும் செல் ஃபோன் டவரே கிடைக்கலை.. ஆனா வில்லன்க தேடல் வேட்டையை நடத்தும்போது 4 வெவ்வேறு திசைகளில் போய் மறுபடி கரெக்டா வேற ஒரு இடத்துல ஒண்ணு கூடுவது எப்படி?இந்த இடத்துல மீட் பண்ணலாம்னு அவங்க பேசிக்கவும் இல்லை..

7. ஹீரோயின் அடிபட்டு மயக்க நிலைல இருக்கு.. இந்த லூஸு வில்லன்க பாட்டுக்கு கேனத்தனமா விசாரனை பண்றதும், தேளை அவங்க மேல விடறதும் ஓவர்.. தேளை ஒருத்தன் அப்பப்ப தூண்டி விடறான்.. அவன் என்ன ஜூவாலஜி ஸ்பெஷலிஸ்ட்டா? பொட்டுன்னு அவனைத்தான் மொதல்ல போடும்..

8. ஹீரோயின் போலீஸ் டிபார்ட்மெண்ட்டோ, தீவிரவாதியோ கிடையாது.. சராசரி பொண்ணுக்கான வலி தாங்கு திறன் தான் அவருக்கும் இருக்கும்.. ஆளில்லா காட்டில் கை விரல் நகங்கள் 10, பற்கள் எல்லாம் கட்டிங்க் ப்ளையர் எல்லாம் வெசு பிடுங்கியும் அவர் பிடிவாதமா அந்த கேமராவை எங்கே ஒளிச்சு வெச்சேன்னு சொல்ல மாடேன்னு அடம் பிடிப்பது செயற்கை.. அவ்ளவ் அடம் பிடிச்சு என்ன யூஸ்?

9. ஏதோ ஒரு காட்டுக்குள்ள இருட்டுல இவர் பாட்டுக்கு  மண்ணுக்குள்ளே கேமராவை ஒளிச்சு வைக்கறார்.. செல் ஃபோன் டவர் இல்லை.. யாருக்கும் மெசேஜ் அனுப்பும் வசதியும் இல்லை.. அதனால என்ன யூஸ்? இவர் செத்துட்டா அந்த ரகசியத்தை யார் எடுக்கப்போறாங்க?

10. நடுக்காட்டில் நள்ளிரவில் எழும் மணப்பெண் ஒரு மினிமினி பட்டர்ஃபிளை பார்த்து வீடியோ எடுப்பது ஓக்கே.. அது பின்னாலயே 2 கிமீ தூரம் போய்க்கிட்டே இருப்பது ரொம்ப ஓவர்.. அது என்ன பிட்டுப்படமா? பட்டர் ஃபிளை தானே.. 2 நிமிஷம் எடுத்தாலும் 2 மணி நேரம் எடுத்தாலும் 1 தானே..?  




http://haihoi.com/Channels/cine_gallery/Pollangu-Movie-Wallpapers-11_S_152.jpg


சென்சார் ஆஃபீசரிடம் சில கேள்விகள்

1.  லஞ்சம் வாங்கிட்டா எவ்ளவ் குப்பை படத்தையும் ரிலீஸ் பண்ணிடலாமா? இந்தப்படத்துக்கு எப்படி சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைச்சதுன்னு நீதி விசாரனை எல்லாம் வரவா போகுதுன்னு  அலட்சியமா?

2.  ஒரு பெண்ணை ரேப் பண்ற மாதிரி சீன் காட்ட சிம்பாலிக் ஷாட் போதாதா? அவ்ளவ் டீட்டெயிலா காட்டி இருக்காங்க.. அதை எப்படி அலோ பண்ணீங்க?

3. ஹீரோயின் நகங்கள் பிடுங்கப்படும் காட்சி, பல்லை கட்டிங்க் ப்ளையர் ( கொரடு) வெச்சு எடுக்கும் காட்சி எல்லாம் ஓவரோ ஓவர்.. இதுவரை எந்த தமிழ் சினிமாவுலயும் வர்லை.. என்ன தைரியத்துல இதை எல்லாம் அலோ பண்ணீங்க?

4. ஹீரோயின் மயக்கம் ஆகிடறா.. அவளை எழுப்ப தண்ணி தெளிக்கறதுக்குப்பதிலா வில்லன் ஹீரோயின் முகத்துல.. .. மகா மட்டமான வல்கரான சீன் அது.. உவ்வே,, இதை எப்படி ஓக்கே சொன்னீங்க?

5. பிணத்துடன் உறவு கொள்ளும் வில்லன் மூவ்மெண்ட் காட்டுனது ஓவர்னா ஒருத்தன் அந்த பிணத்தின் முகத்து தோலை அப்படியே  உரிச்சு எடுக்கறது எல்லாம் வல்கரின் உச்சம்.. உங்க ஃபேமிலி லேடீஸ் இந்தப்படத்தை பார்க்க அலோ பண்ணுவிங்களா?

6. இந்தப்படத்துக்கு பணத்தை வாங்கிட்டு சர்ட்டிஃபிகேட் குடுத்த குற்றத்துக்காக தண்டனையா உங்க மனைவி மகள் அம்மாவுடன் இந்தப்படத்தை பார்க்கனும்னு சொல்லிடனும்.. அப்போதான்யா உங்களுக்கெல்லாம் புத்தி வரும்..


தயாரிப்பாளரிடம் ஒரே ஒரு கேள்வி

1. நாய் வித்த காசு குரைக்காதுதான்.. இந்த மாதிரி மட்டமான படம் எடுத்து அதுல வர்ற வருமானத்துல சாப்பாடு சாப்பிடனுமா?கீழே இருப்பவர் தான் தயாரிப்பாளர் . படத்துல போலீஸ் ஆஃபிசரா வர்றார்..


http://www.thehindu.com/multimedia/dynamic/00928/19cp_Pollangu_Praka_928179g.jpg



சி.பி கமெண்ட் - இந்த கேவலமான படத்தை பெண்கள், கர்ப்பிணிகள், மாணவ மாணவிகள் , 36 வயதுக்கு உட்பட்டோர், மனோரீதியாக பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் மென்மையான மனம் கொண்ட அனைத்து வயது ஆண்கள் பார்க்க வேண்டாம். ஹனிமூன் போகும் புது மணத்தம்பதிகள் பார்த்தால் ஜென்மத்துக்கும் அந்த ஆசையே போயிடும் அபாயம் இருப்பதால். அவர்களும் பார்க்க வேண்டாம்..வன்முறையின் உச்சமான படத்தை எடுத்த இயக்குநர் பேரு காந்தி மார்க்ஸ்ஸாம் அவ்வ்வ்வ். என்னே ஒரு முரண்!


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் ரேங்க் - ஓக்கே


டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5

 டெக்கான் கிரானிக்கல்   6 /10

டிஸ்கி 1 - நடுநிசி நாய்கள் விமர்சனம் - http://www.adrasaka.com/2011/02/18_18.html


டிஸ்கி 2 -

இயக்குநர் கவுதம் மேணனுக்கு ஒரு கண்டனக்கடிதம்( இது பொல்லாங்கு இயக்குநருக்கும் பொருந்தும்)http://www.adrasaka.com/2011/02/blog-post_7783.html

 

 

டிஸ்கி 3 - சுழல் விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/blog-post_6087.html

 

 

டிஸ்கி 4 -  டிஸ்கி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே விமர்சனம் -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html