Showing posts with label SNEHA. Show all posts
Showing posts with label SNEHA. Show all posts

Monday, February 25, 2013

ஹரிதாஸ் - சினிமா விமர்சனம்



பாலுமகேந்திரா வின் வீடு , சந்தியாராகம் மாதிரி  கலை அம்சம் பொருந்திய படங்கள் வருவது அபூர்வம் , அதே போல்  மகேந்திரன் -ன் உதிரிப்பூக்கள் மாதிரி பிரமாதமான ஆர்ட் ஃபிலிம்  கம் கமர்ஷியல் படங்கள் வருவதும் குறைவே. தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப்பின் மனதை கனக்க வைக்கும்  கதைக்கருவுடன் களம் இறங்கி இருக்கும் இயக்குநருக்கு வாழ்த்துகள் .

 அமீர்கான் -ன் தாரே ஜமீன் பர் ( ஆகாய நட்சத்திரம் பூமியின் மேல் )  ஹிந்திப்பட கதைக்கருவான ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை  வளர்ப்பு பற்றிய கதை ஒரு டிராக். அப்படி எடுத்தால் படம் டாக்குமெண்ட்ரி ஆகி விடக்கூடிய அபாயம் இருப்பதால் கமர்ஷியலுக்காக சூர்யாவின் காக்க காக்க , அப்புறம் தெலுங்கு ப்படமான ஹிட் லிஸ்ட் இரண்டின் கதைக்கருவான என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கதை  இன்னொரு டிராக்கில் . இரண்டையும் பிரமாதமாக இரட்டைத்தண்டவாளமாக ( தண்ட வாளம்னாலே இரட்டை தானே? ) கொண்டு போவதில் இயக்குநருக்கு வெற்றி .


ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். என்கவுன்ட்டர் ஸ்பெஷ;லிஸ்ட். மனைவியை இழந்தவர் . அவருக்கு ஒரு பையன் . தான் என்ன செய்யறோம், என்ன செய்யனும் என்பதை அறியாத  ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அவன்.  அவனை எப்படி அவர் வளர்க்கறார்  என்பதே திரைக்கதை .
 




 ஹீரோ கிஷோர் . ரகுவரன், பிரகாஷ் ராஜ்க்குப்பின் தமிழ் சினிமாவின் பிரமாதமான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.  இயல்பாகவே இவர் ஜிம் பாடி என்பதால் பெரும்பாலும் இவருக்கு கோச் , போலீஸ் ஆஃபீசர் ரோல் தான் கிடைக்குது . இந்தப்படத்தில் குணச்சித்திர நடிப்பில் மனிதர் பிய்ச்சு உதறிட்டார் . போலீஸ் ஆஃபீசராக வரும்போது அவர் பாடி லேங்குவேஜ் , குழந்தை அருகில் இருக்கையில் ஒரு அப்பாவாக குழையும் நடை என  பின்னிப்பெடல் எடுக்கிறார் . 


ஹீரோயினாக சினேகா . மேரேஜ் ஆகி விட்டதால் தமிழனின் அடிப்படை நாகரீக குணப்படி ( அதாவது மேரேஜ் ஆன பொண்ணை வர்ணிப்பதோ , சைட் அடிப்பதோ கூடாது , வீ வாண்ட் ஒன்லி ஃபிரெஸ் )  சினேகாவை வர்ணிக்கலை . டீச்சர் ரோலில் ஆல்ரெடி தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் படத்தில் பிரமாதமாய்  நடிச்சிருந்தாலும் இதிலும் அழகாக நடிச்சிருக்கார் . ரீ எண்ட்ரி பிரசன்னாவாக சாரி பிரசன்னமாக வாழ்த்துகள் 


அந்தக்குட்டிப்பையன் பிரிதிவிராஜ் தாஸ் செம ஆக்டிங்க் . ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் முக பாவத்தை உள் வாங்கி ஹோம் ஒர்க் பண்ணி நடிச்சிருக்கான் . அவனுக்கும் , அவனை இயக்கிய இயக்குநருக்கும் ஒரு ஷொட்டு ( பையனின் பெற்றோர் திருஷ்டி சுற்றிப்போடவும் , 2013ன் சிறந்த குழந்தை நட்சத்திர விருது உறுதி ) 


 இந்த 3 கேரக்டர்கள் போக யாருமே எதிர்பார்க்காத வகையில் ஸ்கூல் ஹெச் எம்மாக வரும் புது முகம் பிரமாதப்படுத்தி விட்டார் , சிடு சிடு வென்ற பேச்சு , ஓங்கி உயரும் குரல் என எல்லோருக்கும் அவரவர் மனைவியை  நினைவுபடுத்தி பயப்படுத்தும் கேரக்டர் . வெல்டன்

 சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் கவனிக்க வைக்கிறார், சினிமாத்தனம் இல்லாத மேக்கப் அதீதம் இல்லாம இயல்பான  முகம்

 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. இந்த மாதிரி படங்களுக்கு ஒளிப்பதிவும் , இசையும் இரு கண்கள் . இரண்டும் பிரமாதம் .  குறிப்பா படத்தின் பின் பாதியில் வரும் 30 நிமிடங்கள் பின்னணி இசை பட்டாசு , ஒளிப்பதிவு மத்தாப்பு . அந்தப்பையன் ரேஸ் கிரவுண்டில் குதிரைகளைப்பார்த்து குதூகலிப்பது செல்லுலாயிடு கவிதை


2. அன்னையின் கருவில்  கரையாமல் பிறந்தாயோ  பாடலில் படப்பிடிப்பு , எடிட்டிங்க் , கேமரா கோணம் எல்லாம் அருமை . பீச் மணல் ஓரம் வெள்ளை உடையில் வருவது கண்களுக்கு குளிர்ச்சி . வெள்ளக்குதிரை பாடல் காட்சியும் அதே போல் 



3,. யுவன் யுவதி, புத்தகம் பட தயாரிப்பாளரின் 3 வது படம் இது , நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி ஆகிய படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேல் இன் இயக்கத்தில் வரும் 3 வது படம் . மற்ற 2 படங்களில் மற்றவர் கதையை இவர் இயக்கினார், இதுதான் அவர் கதை திரைக்கதை வசனத்தில் இயக்கும் முதல் படம் . இந்த ஒரு படத்தால் அவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் அந்தஸ்து பெற்று விடுவார். திரைக்கதை அறிவு இவரிடம் பிரமாதம்


4. கனமான கதைக்களத்தில் ரிலாக்ஸ்க்காக புரோட்டா சூரியின் காமெடி , டீச்சர் காதல் பிரமாதமாக கை கொடுக்கலைன்னாலும் நாட் பேட்.. 


5. ஓப்பனிங்க்கில் வரும் என்கவுண்ட்டர் சீன் செம . என்ன நடக்குமோ என்ற திகிலை  கூட்டி விடுது . என்கவுண்ட்டர் செய்யப்படும் ஆள் தன் குடும்பத்துடன் இருப்பது சுவராஸ்யத்தை கூட்டி விடுது 


6. க்ளாஸ் ரூமில் ஹீரோ தன் பையனுடன் அமர்ந்த பின் சினேகாவால் முன் போல் இயல்பாக பாடம் நடத்த முடியாமல் போவதும் அடுத்த நாள் சுடிதார் அணிந்து வருவதும் , பசங்க கிண்டல் செய்வதும் கவிதை



 



இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள் 


1. வெளீல கூட்டிட்டு வந்த இடத்துல குழந்தையைக்காணோம். இன்சார்ஜ் ஆக இருக்கும் டீச்சருக்கு பதட்டம் இருக்கும், பயம் இருக்கும், பெற்றோர்கள் வந்து கேட்டா என்ன பதில் சொல்வது என்ற பயமும் , மேலிடம் நடவடிக்கை எடுப்பாங்க்ளே என்ற எண்ணமும் வரும் . இவ்வளவுதான் அந்த டீச்சர் கேரக்டர் காட்ட வேண்டிய உணர்ச்சி . ஆனால் அந்தப்பையன் காணாம போனதும் சினேகா காட்டும் முக பாவனைகள் , 13 நிமிட அழுகை ஓவர் டோஸ் . பிரமாதமா  நடிச்சிருந்தாலும் மிகை நடிப்பே .. ஏன்னா ஹீரோ மேல அப்போ அவருக்கு காதல் இல்லை , அந்தப்பையன் மேல அட்டாச்மெண்ட்டும் இல்லை . அதுக்குப்பின் தான் அட்டாச்மெண்ட் வருது . ஆனா அவர் அழுகைல  ஓவர் செண்ட்டிமெண்ட் இருக்கு . கொஞ்சம் லிமிட் பண்ணி இருக்கனும்



2.   என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டா வரும் போலீஸ் ஆஃபீசர்கள் எல்லாருமே தாடியுடன் , பரட்டைத்தலையுடன் இருப்பது ஏன்? அவங்களே ரவுடி மாதிரி இருக்காங்க . ஹீரோ மட்டும் தான் போலீஸ் கட்டிங்க் ( இயற்கையாவே அவருக்கு  அப்டி )


3.  போலீஸ் துதி பாடும் உச்சி வெய்யில் பாட்டு எடுபடலை . போலீஸ் மேல மக்கள் செம காண்ட்ல இருக்காங்க . பாடல் வரிகள் ஜெ வை புகழும் ஓ பி எஸ் வார்த்தைகளா ஓவர் உயர்வு நவிற்சியா இருக்கு 


4.  ஹீரோ நீண்ட விடுப்பில் இருக்கும்போது  தினமும் போலீஸ் ஜீப் , போலீஸ் டிரைவர் வந்து பிக்கப் பண்ணிக்கறாரே? எப்படி? சட்டத்துல அதுக்கு இடம் இருக்கா? 


5. ஹீரோ முதன் முதலாக ஹீரோயின் வீட்டுக்கு வரும்போது சினேகாவின் கண்களில் ஓவர் உற்சாகம், பரவசம் ஏன்? அப்போ அவர் மனசுல காதல் இல்லையே?


 


6. சினேகாவுக்கு ஹீரோ பர்சனலா கால் பண்ணும்போது சினேகா தன் அம்மா, தங்கை முன் ஸ்பீக்கர் ஃபோனில் போட்டு விடுவது ஏத்துக்கற மாதிரி இல்லை . 


7. ஹீரோவோட நண்பர் காணாமப்போன விசாரனையில் ஒரு வசனத்தில் பஸ்ல ஒரு சீட்ல ஆள் இல்லாததால் டிரைவர், கண்டக்டர் 2 பேரும் இறங்கித்தேடியதாகவும், பயணிகள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க எனவும் ஒரு வசனம் வருது . எந்த பஸ் டிரைவர் அப்டித்தேடி இருக்கார்? நிஜத்தில் கண்டக்டர் மட்டும் சும்மா குரல் கொடுப்பார் , அப்புறம் விசில் ஊதிடுவார்./. 



8. போலீஸ் ஆஃபீசர் கிஷோர்க்கு சல்யூட் அடிக்கும்போது எப்பவும் அந்த 4 பேர்ல 2 பேர் போலீஸ் சல்யூட்டும் 2 பேர் ஆஃபீஸ்ல நாம டேமெஜருக்கு ஒப்புக்கு சப்பாணி விஷ் பண்ணுவமே அப்படி விஷ் பண்றாங்க



9. கிஷோர்  வீட்டில் ரிலாக்சா இருக்கும்போதும், நடு ராத்திரிலயும் , எப்பவும் பேண்ட் சர்ட்டோடயே இருக்காரே? காசுவலா  ( CASUAL) இருக்கவே மாட்டாரா?


10. சின்சியர் ஆஃபீசரான கிஷோர் 6 மாசம் லீவ் கேட்கும்போது ஹையர் ஆஃபீசர் மறுப்பதும் , அதுக்காக  வேலையை ரிசைன் பண்ணிடுவேன்னு மிரட்டுவதும்  ஏத்துக்க முடியல . ஹையர் ஆஃபீசர் லீவ் தர்லைன்னா  கோர்ட் உதவியை நாடலாம்.


 



மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஏற்கனவே ஹீரோவா இருக்கறவங்களைத்தான் எல்லாரும் ஹீரோவா பார்ப்பாங்க, ஆனா நான் எங்கப்பாவை ஹீரோவா பார்க்கறேன்



2.  டீ போடப்பா

 எத்தனை?

 ஒரு ஆள் எத்தனை டீ குடிப்பான்?


 சொல்ல முடியாது , சிலர் 3 டீ எல்லாம் குடிச்சிருக்காங்க


3.  என்கவுண்ட்டர் ஆஃபீசர் டூ ரவுடி - உனக்கு பால் தானே? சொல்லியாச்சு


4. திருந்தனும்னு நினைக்கிறவன் மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்க மாட்டான்”


5. டேய் . நீ திருந்தவே மாட்டியா?

 நாங்க எல்லாம் ஆம்பளைங்க, அப்படித்தான்



6.  பகல் கனவு பலிக்காது எப்பவும்


 ம்க்கும், எப்பவும் என் கனவையே என்கவுண்ட்டர் பண்ணுங்க



7.  ஒவ்வொரு அரிசிலயும் பேர் இருக்கும்பாங்க , அவன் பேருக்கான தோட்டா என் கிட்டே இருக்கு


8. ஆளைச்சுடறது மட்டும் அவங்க , ஆம்லெட்டைச்சுடுவது மட்டும் நான் 


9. 'நாங்கெல்லாம் ஒரே டீம்...


 கிரிக்கெட் டீமா?


 என்கவுன்ட்டர் டீம்.


இது என் கவுன்ட்டர்',


10.  ஆட்டிசம்கறது டிசீஸ் இல்லை , டிஸ் ஏபிலிட்டி



 



11.  நீங்க அதை பொம்மையா பார்க்கறீங்க , அவன் அதை குதிரையாவே பார்க்கறான்



12.  என்னடா? டீச்சர் துப்பட்டா எல்லாம் போட்டுட்டு வந்திருக்காங்க?


 தெரியலடா


13.  பள்ளிக்கூடத்துலயே மாங்கா அடிக்கறியே , டீச்சர் திட்ட மாட்டாங்க ?

 அடிக்கறதே டீச்சருக்காகத்தான்



14,.  எல்லா மூஞ்சியும் காஞ்சு போன பெயிண்ட் டப்பா மாதிரி இருக்கு , ஒரு ஃபிகர் கூட தேறாது



15.  சட்டமும் சாமியும் எல்லாருக்கும் ஒண்ணுதான்



16.  நம்ம பொழப்பு எட்டிப்பார்த்த நாய் ஏரில விழுந்த கதை ஆகிடுச்சு



 17.  டீச்சர் ,  ஹரியோட அப்பா வோட ஃபோன் நெம்பர் நான் வாங்கி வெச்சிருக்கேன் , பேசறீங்க்ளா?

 நீ எதுக்கு அதை வாங்கி வெச்சிருக்கே?


 எல்லாம் ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்திக்கத்தான்



18. பார்த்தும் பார்க்காதது மாதிரி இருக்கீங்க்ளே?


 இல்லையே பார்த்துட்டுத்தானே இருக்கேன்


 இதை எப்படி எடுத்துக்க?

 எப்படி வேணாலும்  எடுத்துக்கோ , ஆனா என் உயிரை எடுக்காதே



19. வலியும் , வேதனையும்  வெளில இருந்து பார்க்கறவங்களை விட  அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்



20. ”விழுந்தாத்தான் எழுந்துக்கிறது எப்படின்னு தெரியும்”


 



21. அவர் தான் கோச் இப்படி பேசறவன் வெறும் காக்ரோச்'


22. கோச், டாக்டர் மாதிரி பேசுறாரு.. டாக்டர், கோச் மாதிரி பேசுறாரு..


23.
'நல்லத மட்டுமே நெனைக்கணும்னு சொல்லிட்டு நீங்க ஏன் சார்..?இப்படி...


24. வாழ்க்கைல ஜெயிக்கறதுக்கு தகுதியை விட தன்னம்பிக்கைதான் அதிகம் வேணும்






25.  அந்தாளு கோச்சா? கார் மெக்கானிக்கா?






26.  எல்லாக்குழந்தைகளுக்கும் அவங்கப்பா தான் முத ஹீரோ , முடியாதுன்னு நினைச்ச  என்னை விட முடியும்னு நினைச்ச நீங்க தான் அவனுக்கு பெஸ்ட் கோச்



 




 எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க்  - 50




 குமுதம் ரேங்கிங்க் - நன்று




 ரேட்டிங்க் - 8 /10



 சி பி கமெண்ட் - 1000 குற்ற வாளிகள்  தப்பிக்கலாம், ஆனா ஒரு நிரபராதி  தண்டனை பெற்று விடக்கூடாது என்பது மாதிரி , படம் ரிலீஸ் அன்னைக்கே ரிசல்ட் கேட்காம போய் 1000 குப்பை படங்களை நாம பார்த்து ஏமாந்திருக்கலாம், ஆனா ஒரே ஒரு நல்ல படத்தைக்கூட பார்க்காம மிஸ் பண்ணிடக்கூடாது , அப்படி ஒரு படம் தான் ஹரிதாஸ் . டோண்ட் மிஸ் இட் . குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் செல்லலாம்., தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கையைத்தரும் படம் . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி - இந்தப்படத்துக்கு 1. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது 2. சிறந்த  இயக்கம் 3 , சிறந்த திரைக்கதை   4. சிறந்த மாநிலப்படத்துக்கான ஸ்பெஷல் விருது   என 4 விருதுகள் நிச்சயம்





வீடியோ விமர்சனம்




 

Saturday, April 09, 2011

கலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்..ஆனா.... - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/ponnar-shankar/stills/ponnar-shankar-02.jpg

சரித்திரப்படத்துக்கு இந்தக்கால ரசிகர்களிடையே வரவேற்பு இருக்குமா? என்பது ஊர்ஜிதம் செய்யப்படாமல் இருந்தாலும் அது போல ஒரு கதையை படமாக்கத்துணிந்த இயக்குநர் கம் புரொடியூசர் தியாகராஜனுக்கு ஒரு பூச்செண்டு...

படத்தோட கதை என்ன? என்பதை நான் திரையில் கண்ட அளவு சொல்றேன்... குங்குமம் வார இதழ்ல தொடர் கதையை படிச்சவங்க,பொன்னர் சங்கர்-ன் உண்மைக்கதையை ஏற்கனவே அறிஞ்சவங்க என்னை திட்டக்கூடாது... ஏன்னா படத்துல எடிட் பண்ணுனது போக என்ன சொல்லி இருக்கோ அதைத்தான் நான் சொல்ல முடியும்..

ஒரு மன்னரோட பெண் வாரிசு விடிஞ்சா கல்யாணம்கற சூழல்ல தன்னோட முறைப்பையனைத்தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிக்கறா... வேற வழி இல்லாம சம்மதிக்கறப்ப பொண்ணோட அண்ணன் இனி இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக்கூடாது அப்படின்னு கேவலமா  பேசறான்.. உடனே தங்கை அண்ணன் கிட்டே சவால் விடறா.. உன் 2 பொண்ணுங்களையும் எனக்குப்பொறக்கப்போற 2 சிங்கக்குட்டிகள்(!!!!!!!!!!!!???????????) கல்யாணம் பண்ணிக்குவாங்க... இது சபதம் அப்படின்னு வீராவேசமா சொல்றா... அந்த சபதம் நிறைவேற்றப்படுது...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzDdfDqzPX7UqAH7gD_Y3NzN5fdrifZZt1fKXDCY1hyphenhyphenxwrHfR_swXSnpTjAXkNkH18QC12Wp44hexe_kcNfDDhlRfMH-PPsZmdnFJ734188D4wHqvuefQtq_IoT1N4a8aUrARGTwqmqqE/s1600/ponnar_shankar_movie_stills_photo_gallery_02.jpg

ஹி ஹி .. யாரப்பா அது கல்லோட வர்றது......அது வேற ஒண்ணுமில்லை... கதையை சுருக்கறப்ப அப்படி ஆகிடுச்சு போல..படத்தை மறுபடி போட்டுப்பார்த்த டைரக்டருக்கே மனசாட்சி உறுத்தி இருக்கும் போல.. கடைசி 2 ரீல்.. போர்க்களம், சுதந்திர நாடு.. என என்னமோ ஒப்பேத்தி இருக்காங்க...

படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு முதல்ல ஒரு ராயல் சல்யூட்... செமயான உழைப்பு.. காட்சிகளில் பிரம்மாண்டம்.. அதே போல் ஒளிப்பதிவாளர்... கேமரா கோணங்கள் பிரமாதம்.. பாடல் காட்சிகளில் டி ராஜேந்தரும் ஷங்கரும் இணைந்து பணியாற்றியது போல் ஒரு அவுட் புட்...
http://searchandhra.com/english/wp-content/uploads/2011/03/Ponnar-Shankar-Movie-Working-Stills-3.jpg
கலைஞரின் பேனா முனை விளையாடிய இடங்கள்.

1.  ஒருத்தனோட அழிவுலதான் இன்னொருத்தனோட  செல்வாக்கு வளருதுங்கறதுக்கு என்னோட வாழ்க்கையே ஒரு பாடமா இருக்கட்டும்...


2. வாழ்க்கைப்பாடம் படிக்க பள்ளிப்பாடம் எதற்கு? பள்ளியறைப்பாடம் போதாதா?

3.  நியாயத்தை மிதிச்சிட்டு நரகத்துக்கு போகச்சொல்றீங்களா?ஹூம்.. ராஜ தந்திரத்துல நியாய தர்மம் பார்க்கக்கூடாது... என் தலை விதி...

4. குழந்தை வரம் வேண்டும்னு ஆண்டவன் சந்நிதானத்தை தேடி போகும் மக்களே.. ஆண் பெண் உறவுலதான் அந்த பாக்கியம் கூடி வரும் என்பதை ஏன் மறந்தீர்கள்?

5. நீங்க வெற்றி பெற வேண்டும் என நான் தவம் இருப்பேன்.....

ஏன்? உன் தவத்தால தான் நான் வெற்றி பெறனுமா? என் வீரத்தால் அல்லவா?

6.  நீங்க சொல்ற யோசனைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அதர்மத்தின் சிகரத்துக்கே போகச்சொல்றீங்களே..... அதான் யோசனையா இருக்கு..?

7. ஆண்டவனுக்கு கொண்டு வந்த அமுதத்தை அர்ச்சகரை  சுவைக்க சொன்னது யார்?

8. பிறப்பாலயும், வளர்ப்பாலயும் உயர்ந்த வம்சத்துல பிறந்த நீங்க எப்படி இந்த மாதிரி சதிக்கு துணை போனீங்க?


9.. உண்டுகாட்டி என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கீங்களா? தலைவன் சாப்பிடும் முன் நல்ல உணவா என சோதனை செய்ய சாப்பிட்டுப்பார்க்கும் ஆள்.. அது நான் தான்.. பெண்ணே.. உன்னை அடைய என் தலைவன் தூக்கீட்டு வரச்சொன்னான்.. நான் முதல்ல உன்னை........ 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfpKMz_AxxOMo0Ph2tR3h6ziAQQ6DTNIRAXLLMpm9HbfgihNTJD17lRxEPXLUmJiOSJenbENlOfHde8QFGVevj5cdaaSHeL5bxWv2aNYBusUr8B1wWmaGCcIY1GcWFtw8_TcrW3jMHZRGL/s400/ponnar-shankar-tamil-movie-wallpapers-002.jpg
அடுத்து நடிப்பில் யார் யார் கலக்குனாங்கன்னு பார்க்கலாம்..

படத்தில் முதல் பாராட்டு பிரகாஷ்ராஜ்க்கு... வில்லனா வந்தாலும் அவரது கம்பீரம் அருமை... ராஜ நடை நடந்து வர்றாரே.. ஆஹா..

அடுத்து ராஜ்கிரண்.. அவருக்கான கெட்டப் சுமார் என்றாலும் நடிப்பு கனகச்சிதம்.. மூன்றாவதாக நெப்போலியன்.. அவரது ஆகிருதியான தோற்றமும் , கம்பீரமான குரலும் மறக்க முடியாது... குற்ற உணர்ச்சியில் குமுறும்போதும், கோபத்தில் பொங்கும்போதும் வெல்டன் சொல்ல வைக்கிறார்..

குஷ்பூ.. படத்தில் பல இடங்களில் இவருக்குத்தான் நடிக்க ஸ்கோப்... முகத்தால் 70%  முதுகால் 30% ( ஹி ஹி )

நாயகன் அதுவும் இரட்டை வேடங்கள் என்றாலும் பிரசாந்த்  இவர்கள் 4 பேரைத்தாண்டித்தான் ஸ்கோர் பண்றார்..

பொதுவாகவே பிரசாந்த்க்கு ஒரு ராசி உண்டு.. ஜீன்ஸ் படத்தில் இரு வேடங்களில் நடித்தாலும்  ஐஸ்வர்யாராயின் அழகும், பாடல் காட்சிகளின் ஆர்ப்பாட்டமும் அவரது நடிப்பை அமுக்கி விட்டது போல்.. இந்தப்படத்தில் காட்சி அமைப்பின் பிரம்மாண்டமும், மற்ற சில பாத்திரங்களின் வார்ப்பும் இவரது டாமினேஷனை குறைத்து விட்டது.




http://tkada.com/wp-content/uploads/2011/03/Sneha-Play-Role-of-Prashanth-sister-In-Ponnar-Sankar.jpg
இசை இளையராஜா.. சொல்லவே வேணாம்.. சரித்திரப்பின்னணி என்றதுமே அவரது திறமை எப்படி இருக்கும் என.. பாடல் காட்சிகளில், பின்னணி இசையில், போர்க்காட்சிகளில் என மனிதர் கலக்கி விட்டார்... 

 சண்டைக்காட்சி வடிவமைப்பும் ஓக்கே தான்.. ஓப்பனிங்க் ஃபைட் சீனில் ஜாக்கி சானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் படத்தில் பைக்கில் வரும் ஆளை ஓடி வந்து ஃபிளையிங்க் கிக் ஷாட் அடிப்பாரே.. அதே போல் ஒரு சீன் கலக்கலான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.. வெல்டன் ஸ்டண்ட் மாஸ்டர் & பிரசாந்த்..


 அதே போல் சினேகா பாடும் ஓப்பனிங்க் பாடல் காட்சியில் நடன தாரகைகளுக்கான ஆடை வடிவமைப்பும்,அவர்களுக்கான நடன அசைவுகளும் அருமை...அந்தக்கால மூவ்மெண்ட்ஸ்...அசத்தல்..

ஆனால் பிரசாந்துக்கு அவர் தங்கை என்பதால் ரசிகர்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனால் வந்தவரை அவரது பாத்திரத்துக்கான பங்களிப்பு ஓக்கே தான்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHewE0w1pxrpmg6q0lrOmsdPS-tPye4KO7mlAahJaO5BCUhcShn3Sfm4RZXeSbdCO8fYKLIsit4BoR76t0WLc2_SxsB-__R9XhaJZzp66SMDE29iuhCdjdwHXX4WKe9SBvQNBsH4Qvz4Lm/s1600/Divya%252BParameshwar%252BWallpapers%252Bgallery%252B(3).jpg
ஹீரோயின்கள் 2 பேர்.. அவர்களுக்கு 2 பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வேலை..

அவர்கள் முக அழகு ஆவரேஜ் தான்.. ஆனால் இடை அழகு...... வாழை மரத்தை ஆசாரியிடம் கொடுத்து வகிர்ந்தெடுத்து செய்யப்பட்ட சறுக்கு மரம் போலே தொட்டணைத்தூறும் நீர் ஊற்று போலே ஜில் என்ற காற்று போலே.....

இயக்குநருக்கு சில கேள்விகள். 


1. சாண்டில்யன், கல்கி, விக்ரமன் போன்ற எழுத்தாளர்களின் சரித்திர நாவலில் கதை ஆரம்பத்திலிருந்தே நாயகனின் பார்வையிலேயே போகும்.. அப்போதுதான் படிக்கும் வாசகர்கள் கதையில் ஒன்றி ஆர்வமாக படிப்பார்கள்.. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் மறந்து கதையை அதன் போக்கில் சொல்லி விட்டது பெரிய குறை..

2. நாயகனாக இரட்டை சகோதரர்கள் இருந்தும் அவர்கள் கேரக்டர் என்ன? அவர்கள் விருப்ப வெறுப்பு என்ன? என்ற எந்த தகவலும் சொல்லப்படவில்லை.. எப்படி பாத்திரத்தோடு ஆடியன்ஸ் ஒன்ற முடியும்?

3. போர்க்காட்சிகளில் கேடயத்தில் அம்பு தைத்து நிற்பது போலேஇருக்கே.. அம்பு இரும்பு... கேடயமும் இரும்பு.. எப்படி? கேடயத்தில் பட்டு அம்பு கீழே விழும் அவ்வளவுதான்...

4. ஊழிக்காற்றில் ஊரே அலறி அடித்து ஓடும்போது இரு நாயகர்களும் மற்றவர்களைப்பற்றிக்கவலைப்படாமல் நாயகிகள் இருவரை காப்பாற்றுபது அவர்கள் பாத்திரப்படைப்பை கேவலப்படுத்துகிறதே...( ரியல் கதையில் அவர்கள் பலரை காப்பாற்றினார்கள்)

5.  குஷ்பூ தம்பதியினர் குழந்தை பாக்கியத்துக்காக தேர் இழுக்கறாங்க.. அப்போ வில்லனோட ஆள் வேணும்னே தேரை ஓட விடாம பண்றான்.. ஏதோ தோஷம்.. சுமங்கலிப்பொண்ணை பலி கொடுத்தாதான் தேரை இழுக்க முடியும்கறான்.. அப்போ குஷ்பூ பலி ஆக முன் வர்றாங்க.. இது லாஜிக்கே இல்லையே.. ஏன் பலி ஆக ஓக்கே சொல்லனும்..?

6. இரட்டைக்குழந்தைகளை முன் பின் அறிமுகம் இல்லாத இரண்டு தாதிப்பெண்கள் சர்வ சாதாரணமாக தூக்கி செல்வது நம்பும்படி இல்லை...

7. மன்னர் வம்ச குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்பதற்காக ராஜ்கிரண் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மாதிரி தன் குழ்ந்தைகளை கொல்லத்துணிவது எப்படி? ராஜ விசுவாசம் என்றால் அதற்கேற்ற காட்சிகள் இல்லை..?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvR-iG5lIXjsi-e_vGNicgaZ17_FKr3H3m5x5iC1hQn38-BtM7eJHQaFr2BJCuOBmELODiIEnSktbLk3EpGc-QMfUD9UKfrjEX8Iqne1NG1Hg0rZFPilbWVk8A707VRXS6HPjEU_8LaZA/s1600/divya_parameshwar_wet_bikini_wet_saree_pantie_bra_tamil_actress_hot_ass_plidd+%2525284%252529.jpg
8. போர்க்களத்தில் 20 அடி தூரத்தில் இருந்து கொண்டு நீண்ட வாளை எறிந்து கொல்வது போல் ஒரு சீன் உள்ளது.. சரித்திரக்குறிப்பில் வேலால் கொனறதாக வருது.. மேலும் குறுவாள் எனப்படும் கத்தியைக்கொண்டோ, வேல் அல்லது அம்பினால் மட்டுமே அவ்வளவு தொலைவில் இருந்து ஒருவரை கொல்ல முடியும்.. 

9.  நெப்போலியன் தற்கொலை செய்யும் சீனில் ஒரு லாஜிக் ஓட்டை.. வாளைமேலே வீசி எறிந்து அது கீழே வரும்போது தன் நெஞ்சைக்காட்டிக்கொண்டு நிற்கிறார்.. அது குத்தி உயிர் துறக்கிறார்.. அது சாத்தியமே இல்லை...அது அதிக பட்சம் 3 அங்குல அளவில் தான் காயத்தை ஏற்படுத்தும்.. உயிர் போகும்  அளவு ஃபோர்ஸ் வராது... 

10. பொன்னர் சங்கர் இரண்டு பேரும் ஒரு சீனில் கூட தன் தங்கை சினேகாவிடம் பேசுவது போல் காட்சியே வைக்கவில்லை.. அப்புறம் என்ன அண்ணன்மார் கதை..?

11.  நாயகர்கள் இருவரும் நாயகிகளை திருமணம் செய்து பிரம்மச்சரியம் விரதம் கடைப்பிடிப்பதை பெரிய தியாகம் போல் காட்டி இருப்பது தேவை இல்லாதது.. 

12.  ராஜ்கிரண் ஒரு சீனில் லேடியைப்போல மஞ்சள் பூசியது போல் அதீத மேக்கப்பில்  வர்றார்.. அது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGv18HSijdpkBbri15oWiWLxK5Y6wT1IpnPQY6vIP94CxDT8hd-Iit0Yqs7owTF9lv1JdK3GBZ5qkRl4_9V8ok7lD_-KzlgkhJzswcs_c7M0NfQuvAPIu7rPkaGIoFR1_aBwmnkOrXzFGe/s1600/divya%252Bparameshwar%252Bcleavage.JPG
13. குஷ்பூவை ஒரு காட்சியில் கொல்லும் வீரன் ஜெயராமை லேசா ஒரு கீறு கீறுகிறார்.. அதுக்கே அவர் சடன் டெத் ஆவது எப்படி?


படம் பிரம்மாண்டமாய் இருந்தால் மட்டும் போதாது.. திரைக்கதையில் அழுத்தம் இல்லை  என்றால் படம் தேறாது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்த வந்த படம்.. 

எல்லா செண்ட்டர்களிலும் சராசரியாக 25 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே

ஈரோடு ராயல், ஸ்ரீ லட்சுமி  2 தியேட்டர்ல ஓடுது

Saturday, March 12, 2011

சினேகா-வின் பவானி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV5KJFadRm6Y2jOb6dv9r7qhwn31SrDkwVqPu6zNzgfoLUg3f-TDxS5BqXnMokJLUS_8Mclxb712uVQfzkRqAibSO9C3NPd6tiqg78URBN4SWUeWlSEh8HRQXHcwmXZucmyYPnuZ4-SJJ5/s1600/Bhavani.jpg
சிரிப்பு அழகி சினேகாவுக்கு திடீர்னு ஒரு விபரீத ஆசை.. நாமளும் விஜய சாந்தி மாதிரி ஒரு வைஜயந்தி ஐ பி எஸ்  டைப் ஆக்‌ஷன் படம் கொடுக்கனும்னு..அதனால வலுக்கட்டாயமா தன்னோட ஸ்பெஷல் பிராண்ட் சிரிப்பை மூட்டை கட்டி பரண்ல வெச்சுட்டு போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி பல வித்தைகளை காட்டி இருக்காரு.........ஆனா.....

பொதுவா போலீஸ் யூனிஃபார்ம் போட்டா எல்லாருக்கும் கெத்தாதான் இருக்கும்..ஆனா திரைக்கதைல கெத்து இல்லையே....போலீஸ் ஆஃபீசரோட வீர தீர சாகசப்படம் பார்க்க வந்தவங்க போலீஸ் ஆஃபீசரோட தங்கையை ரேப் பண்ணி கொலை செஞ்சவனை பழி வாங்கற எஸ் ஏ சந்திர சேகர் கால படக்கதையை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க தான்.

என்னதான் சினேகா முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலும் அவரது முகம் ஒரு சாஃப்ட்டான முகம் என்பதால்  ( கண்டு புடிச்சுட்டாருய்யா துர)  போலீஸ்க்கே உரிய கண்டிப்பு முகத்தில் வெளிப்படுத்த முடியல... ஆனா அவரும் முடிஞ்சவரை சமாளிச்சிருக்காரு..அவர் ஜீன்ஸ் பேண்ட் . டீ சர்ட் போட்டுக்கிட்டு கோபமா நடந்து வர்றப்ப.... ஹி ஹி.....பார்க்க நல்லாருக்கு  .( சென்சார் சென்சார்....)

அவர் வர்றப்ப ஒரு பேக் கிரவுண்ட் ஹம்மிங்க் கொடுக்கிறாங்க.. பாருங்க .. யதா யதா தரிகிடத்தோம் யதா யதா தரிகிடத்தோம் தம் தோம்... ஸ்லோ மோஷன்ல போலீஸ் புடை சூழ சினேகா நடந்து வர்றப்ப பார்க்க நல்லாதான் இருக்கு.. ஆனா பில்லா ரேஞ்சுக்கு அதே சீன் 13 இடத்துல வர்றப்ப கடுப்பாகுது...

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/DataC/cinemakisukisu/images/127404_f520.jpg
இந்தப்படத்துக்கு டூயட் வேண்டாம்னு முடிவு பண்ணுன இயக்குநரை நான் பாராட்டறேன்.. ஆனா சினேகாவை ஒரு இடத்துல கூட சிரிக்கறதை காட்டாததை வன்மையா கண்டிக்கிறேன்.. ( ஒரு சீன்ல அப்பாவைப்பார்த்து சிரிக்கிறார்.. ஆனா சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதுன்னு சொல்ற மாதிரி அப்பாவைப்பார்த்து சிரிப்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.. ஹி ஹி )

ஃபைட் சீன்ல சினேகா ரொம்ப படுத்தறார்.. வில்லனின் அடியாளை ஓங்கி ஒரு அடி குடுத்துட்டு 5 விரல்லயும் நெட்டை (சொடக்கு - நன்றி - கி ராஜ நாராயணன்)எடுத்துட்டு இருக்கார்.. சுத்தி 36 வில்லனின் அடியாட்கள் அவர் சொடக்கு எடுத்து முடியற வரை காத்திருந்து அப்புறம் அடிக்க வர்றாங்க...

விவேக்- செல் முருகன் காமெடி காட்சிகள் தனி டிராக்கில் படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் போவதால் மனதை நிற்கவில்லை.. ஆனால் மோசமில்லை.. சிரிப்பு வருது....

http://www.viduppu.com/photos/full/actresses/sneha/004.jpg
வசனகர்த்தா பவானியில் பவனி வந்த இடங்கள்

1. இந்தத்தடவை உனக்கு எம் எல் ஏ சீட் இல்லை..

யோவ்,,நீ ஜெயிக்கனும்கறதுக்காக கள்ள ஓட்டு, கொலைன்னு எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன்..( நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு..)

2.  யோவ்.. எஸ் ஐ.. ராஜா ராமன் மேல ஒரு சூசயிடு கேஸ் போடு.. அவனை நான் கொல்லப்போறேன்...

கேஸா..அப்படின்னா..?

சுத்தம்.. அதே தெரியாதா?    ( ரொம்ப அப்பிராணியா இருக்காரே...இந்த சப் இன்ஸ்பெக்டர்..) 

3. எனக்கு  கிம்பளம் தர்றது முதல் வீடு கட்டித்தந்தது வரை எல்லாமே அவர்தான்... அவரை எப்படி நான் அரெஸ்ட்  பண்றது?

உன் பொண்டாட்டிக்குத்தாலி கட்னதும் அவர்தானா..?

4.  ஹலோ... வந்து சேர்ந்திட்டியா.?

விவேக்.. - ஹா ஹா ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. போயே சேர்ந்துட்டான்

5.  இனிமே ரன்னிங்க்ல செல் ஃபோன் பேசுவே நீ..?

ம்ஹூம்.. இனி வாக்கிங்க்ல கூட செல் ஃபோன்ல பேச மாட்டேன்...

6.  ஆஹா.. முருகன் மயில் மேல ஏறி வர்றது எனக்கு தெரியுது...

விவேக்.. - அடப்பாவி.. இங்கே பார்த்து வண்டி ஓட்டுடா.. எனக்கு எமன் எருமை மேல வந்து துரத்தறது நல்லா தெரியுது...

7. விவேக்.. -  அடப்பாவி.. வண்டில போறப்ப சாமி கும்பிடாம போனா சாமி கோவிச்சுக்கவா போகுது?ஏண்டா ஆக்சிடெண்ட் நடக்க ஒரு காரணி ஆகறீங்க..?

8.  விவேக்.. - என்னது? ரேப் பண்ணுனவனுக்கு ரூ 500 அபராதமா? இனி பாக்கெட்ல ரூ 500 வெச்சிருக்கறவன் எல்லாம் அடங்க மாட்டேனே... ( உயிர் புகழ் சங்கீதா நடித்த தனம் பட டயலாக் உல்டா.. # வாழ்க வல்லாரை லேகியம்)

9. விவேக்.. - என்னது? ஆயிலுக்கு பஞ்சமா? தமிழ் நாட்ல இருக்கற டீகடைகள்ல விற்கற பஜ்ஜிகளை பிழிஞ்சா ஆயில் கஷ்டமே வராதேடா.....

10. விவேக்.. -  நான் நினைக்கறேன்  இந்த பஜ்ஜில இருக்கற ஆயில் தான் பின் மருவி பஜாஜ் ஆயில்னு வந்ததோ..?

11.வில்லன் - இங்கே பாரு.. ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர்  ஒரு சப் இன்ஸ்பெக்டரை அடிச்சான்னு பேர் வெளில வந்தா பெரிய பிரச்சனை ஆகும்...

ஓக்கே.. கான்ஸ்டபிளை விட்டு அடிக்க சொல்றேன்..

12. .வில்லன் - இவனுங்க பார்க்கற பார்வையே சரி இல்லையே.. ஓட்டு போடுவானுங்களா?

அல்லக்கை - நீங்க இதுவரை ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்கீங்களா?

இல்லை..

அப்புறம் என்ன கவலையை விடுங்க.. இந்த ஜனங்க எபவும் நல்லவங்களுக்கு ஓட்டு போடவே மாட்டாங்க.. எல்லா ஓட்டும் நமக்குத்தான்..

13.  தலைவரே.. குழந்தைக்கு பெயர் வைங்க....

நம்ம சின்னம் கோடாலி சின்னம் தானே .. அதையே வை.. தேர்தலுக்கு யூஸ் ஆகும்..

14.  வில்லன் - அவ நம்மளை திட்றாளா? புகழ்றாளா? தெரியலையே..?

ஜனங்க கை தட்றாங்க.. அப்போ புகழ்றாங்கன்னு தான் அர்த்தம்..

அடப்போடா.. அவங்க எதுக்கு கை தட்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது..



http://ulavan.net/wp-content/uploads/2010/12/sinega-e1292341879707.jpg
பரவை முனியம்மாவை வைத்து எடுக்கபாட்ட பாடல் அப்பட்டமாக தூள் பட ஏய் சிங்கம் போல நடந்து வரும்.. பாட்டின் உல்டா...

இயக்குநருக்கு பாராட்டு பெற வைக்கும் இடங்கள்

1. ஹீரோயின் தங்கையை வில்லனின் ஆட்கள்  கடத்தி செல்லும்போது அவளைக்காப்பாற்ற போகாமல் வில்லனின் மகனை ரிவால்வர் முனையில் மிரட்டி வில்லனை பணிய வைக்கும் இடம் விறு விறு....

2. ஆக்சிடெண்ட் ஆன செல் முருகன் பால் வண்டியிக்கு கீழே விழுவதும்.. எதேச்சையாக அவர் வாய் பால் பைப்புக்கு கீழே இருப்பதும்...செம காமெடி.. இந்த சீனில் விவேக்கின் டயலாக் டெலிவரி செம...

3. சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் புதுசா ,இளசா இருப்பது.. ஹி ஹி 
http://thangameen.com/Images/ContentImages/admin/sneha_23.gif
இயக்குநருக்கு சில கேள்விகள்

1.போலீஸ் கான்ஸ்டபிள் தனது குழந்தை இறந்ததற்கு லீவ் கேட்டும், அதை அடக்கம் பண்ணக்கூட லீவ் தராமல் எஸ் ஐ டபாய்ப்பதும்...எந்த ஊர்ல அப்படி நடக்குது..?

2.ஏ சி பவானியின் கதையில் தேவை இல்லாமல் கான்ஸ்டபிள் சம்பத்குமாரின் கிளைக்கதை எதற்கு?

3. ஹீரோயின் தங்கயின் பெண் அழைப்பு விழாவில் பன்னீர் தெளிப்பதற்குப்பதில் பெட்ரோலை தெளித்து அரை மணி நேரம் கழித்து பட்டாசு பற்ற வைத்து எரிப்பது ஓவர்...சுற்றி இருப்பவர்கள் கேட்க மாட்டாங்களா?

4. ஹீரோயின் ஆக்சிடெண்ட்டில் காலில் அடிபட்டு ஹாஸ்பிடலில்  அட்மிட் ஆன அடுத்த வாரமே எப்படி டெர்மினேஷன் லெட்டர் வரும்? மெடிக்கல் லீவ் இருக்கே..? 2 வருஷம் கழிச்சுத்தானே அந்த நடவடிக்கை எடுக்க முடியும்?

5. எந்த காலேஜ்ல எண்ட்ரன்ஸ்ல நீச்சல் குளம் இருக்கு?அதுல ரவுடிங்க நீச்சல் அடிப்பாங்களா? காலேஜ் டைம்ல...

6. ஹீரோயின் தங்கை டிரஸ் சேஞ்ச் பண்ண அறிமுகம் இல்லாதவர் வீட்டில் ஒரு அறையில் நுழையும்போது கதவைத்தாழ் போடாமல் டிரஸ் சேஞ்ச் பண்ணுவாளா? ( அப்பத்தானே வில்லன் ரேப் பண்ண உள்ளே வர முடியும்?னு சால்ஜாப்பு சொல்லக்கூடாது?)

7 கத்திக்குத்து பட்ட பொண்ணை காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்க்காம ஏம்மா எந்திரி.. பாரு  அப்படின்னு ஹீரோயின் கத்தறாங்க.. லாஜிக்  ஓட்டை  ஓவர்...


http://www.thedipaar.com/pictures/resize_20101227131420.jpg
எட்டடுக்கு சோலை என்னுடைய சேலை எனும் டப்பாங்குத்துப்பாட்டு வரிகள் செம கில்மா .. ஆனால் அந்த பாட்டை படமாக்குவதில் ரசனைக்குறைவு..அந்த பாட்டுக்கு நடன தாரகைகளை தலைக்கு குளிக்க வைத்து  ( என்னமோ இவனே தலையை துவட்டி விட்ட மாதிரியே சொல்றானே.. )சேலை கட்ட வைத்து டீசண்ட்டாக ஆட வைத்தும் நோ யூஸ்...

கரும்புச்சாறு சொல்லழகி,கற்பூரக்கண்ணழகி  செல்ஃபோன் சிணுங்கல் சிங்காரி பாட்டு வரிகள் அழகு கற்பனை...

கோட்டா சீனிவாசராவ் வில்லன் நடிப்பில் ஓக்கே... ( ஆம்பளைங்களை இவன் பாராட்றதே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க..)

சராசரியாக 20 நாட்கள் ஓடும்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க்  - ஓக்கே