Showing posts with label சினேகா. Show all posts
Showing posts with label சினேகா. Show all posts

Saturday, June 07, 2014

உன் சமையல் அறையில் -சினிமா விமர்சனம்


எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய தெலுங்கு நாவலை சுட்டு மலையாளத்தில் சால்ட் அண்ட் பெப்பர்னு லாலை வெச்சு  சூப்பர் ஹிட் கொடுத்தாங்க .அதை நம்ம தமிழில்  ரீமேக் செய்து இயக்கி இருப்பது  ஆரோக்யமான தமிழ் சினிமா விரும்பி  பிரகாஷ்ராஜ். இது  எந்த அளவுக்கு  ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம் . 



ஹீரோ ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் ல அதாவது  தொல்பொருள் துறை ல அதிகாரி . 45 வயசாகியும்  மேரேஜ் ஆகலை. பொண்ணு எதுவும் செட் ஆகலை . 25 வயசுப்பையனுக்கே பொண்ணுங்க செட் ஆவது கடினம். 45 க்கு எப்படி ஆகும் ? 

ஒரு  ராங்க் கால் ல  ஹீரோயின் அறிமுகம்  கிடைக்குது . ஃபோன் ல யே கடலை போடறாங்க. தமிழன் எந்தத்துறைல வேலை செஞ்சாலும் விவசாயத்துறை கடலை டிபர்ட்மெண்ட் ல மன்னனா இருப்பான்.அந்த விதிப்படி 2 பேரும்  க்டலை சாகுபடி பண்ணி  நேர் ல மீட் பண்ண பிளான் . ஆனா தயக்கம். நேர் ல பார்க்கும்போது  பிடிக்காம போய்ட்டா? அதனால 2 பேருமே அவங்களே சந்திச்சுக்காம அவங்க சார்பா  ஒரு ஆளை அனுப்பறாங்க .மோடி பதவி ஏற்பு விழாவில்  ரஜினி போகாம அவர் ஃபேமிலியை அனுப்பிய மாதிரி . ஆள் எப்படினு பார்த்துட்டு வரச்சொல்றாங்க 

அவங்க 2 பேருக்கும் பத்திக்குது . 2 பேரும் அவங்கவங்க எஜமான் கிட்டே வந்து உங்க ஆள் சரியில்லை கட் பண்ணிடுங்கனு சொல்லிட்டு இவங்க காதலை  டெவலப் பண்ணிட்டு   இருக்காங்க . 

 ஒரிஜினல்  லவ் ஜோடி எப்படி சேர்றாங்க என்பது தான்  கதை 



இந்தப்படத்தின்  ஹீரோ  இசை ஞாநி  இளையராஜா தான் நு கண்ணை  மூடிக்கிட்டு காதைத்திறந்து  வெச்சுக்கிட்டு  சொல்லிடலாம் . என்ன ஒரு  இசை . நல்ல இசை  சாதாரண படத்தை அசாதாரண படமாகவும் , நல்ல ப்டத்தை  பிரமாதமான படமாகவும் மாற்ற வல்லவை . அந்த  வகையில்  திரைக்கதையில் பல  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்   தன் இசையால் அதை எல்லாம்  மறைத்து மறக்கடிக்கிறார்  ராஜா . 


ஹீரோவா  பிரகாஷ் ராஜ் . தமிழ்  சினிமாவில் 2 வில்லன்கள் மறக்க முடியாதவர்கள்   1  ரகுவரன்  2 பிரகாஷ் ராஜ் . இவர் புத்திசாலித்தனமாக   கேரக்டர்  ரோலும் பண்ணி  ஹீரோவாகவும்  தன்னை தக்க வைக்கிறார் . விடுகதை படத்தில்  இவர் ஆல்ரெடி செஞ்ச ரோல்  தான்  இதுவும் என்றாலும்  மனிதர்  குறை சொல்ல முடியாத நடிப்பை தந்திருக்கிறார் . 



ஹீரோயினாக  சினேகா . மேரேஜ் க்குப்பின் இவர் அழகு நேரில் 25 %  கூடியும்  , திரையில்  50 %  குறைந்திருப்பதும் ஏனோ?  அவர்  உடலில்   மாபெரும் சோர்வு . பிரசன்னா கவனம் . முகத்தில்  கூட   புன்னகை  ஒரு மாற்று  உற்சாகம்  குறைவாகவே  தெரிகிறது . க்ளைமாக்ஸ் காட்சியில் சபாஷ்  போட வைக்கிறார் . 


இன்னொரு  ஹீரோவாக  புதுமுகம் தேஜஸ்.  முகத்தில் நல்ல தேஜஸ் . எதிர் காலம் உண்டு . நடிப்பில் பாஸ் மார்க் 


 இன்னொரு ஹீரோயின் சம்யுக்தா ஹர்னாட் .  மிக மெல்லிய  புருவங்கள் . மிக ஒல்லிய உதடுகள்  என  தமிழனின் மனசை அள்ளியவர் பட்டத்தை எட்டிப்பிடிக்க  முயலாதவராக வே  இருக்கிறார்.  காதல் காட்சிகளில்  முக பாவம் கன கச்சிதம் . 

தம்பி ராமைய்யா சமையல் கலைஞனாக கலக்குகிறார் ,  செண்ட்டிமெண்ட் காட்சி இவருக்கு நல்லா வருது . ஆனா பல படங்களில்  மொக்கை காமெடி தனக்கு நல்லா வருது என நினைத்து  இவர் பர்ஃபார்மென்ஸ் செய்வது ஏனோ ? 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 டைட்டில் சாங்க் அபாரம்  .  கேபிள் சங்கரின் சாப்பட்டுக்கடை தொகுப்பு போல எந்த எந்த  ஊரில் என்ன உணவு வகை பிரபலம் என்பதை விளக்கும் பாடல் அட்டகாசம் ., அதை க்காட்சிப்படுத்திய விதமும் அருமை . 87  லொக்கேஷன்கள்  4 நிமிட பாடலில் . இந்தப்பொறப்புதான் பாட்டு இசைஞானியின்  மகுடத்தில் மற்றும்  ஒரு வைரக்கல் 


2 பெண் பார்க்க வந்த இடத்தில்  அந்த  வீட்டு சமையல் காரனை தன் கூடவே அழைத்துச்செல்லும் காட்சி ஆரவாரம் .  தியேட்டரில் அப்ளாஸ் மழை 


3 போஸ்டர்  டிசைன்  , டைட்டில் அட்ராக்சன்  , படத்துக்கான  ப்ரமோ எல்,லாம் கனகச்சிதம் 



4   நான் தான்  உனக்கு  வில்லன்  எனும்போது  பிரகாஷ்  ராஜ்  “ எனக்கேவா?”:  என கேட்கும்போது  டைமிங்க் நல்லா இருக்கு . ( ஆனா அவர் இதே போல்  3 தெலுங்குப்படத்தில்  பேசிட்டார் ) 

5 ஒளிப்பதிவு  , எடிட்டிங்க்   ஓக்கே  ரகம் 




இயக்குநரிடம் சில கேள்விகள் 




1   படத்தின்  மாபெரும்  மைனஸ் என்ன  தெரியுமா? மூலக்கதை எழுதப்பட்ட காலகட்டம்  கேமரா ஃபோன்  புழக்கத்தில்  இல்லாத  காலம். அதை பீரியட் ஃபிலிமாக எடுத்திருக்கனும் . அல்லது  திரைக்கதையில் மாற்றம் செஞ்சிருக்கனும் 


2 ஹீரோ  ஹீரோயினை பார்க்க போக கூச்சப்பட்டு  தன் சார்பாக சொந்தக்காரப்பையனை  அனுப்பறார் . ஹீரோயின் தன் தங்கையை அனுப்பறார் . இருவரும்   கேமரா செல் ஃபோனில் அவங்களை படம்  பிடிச்சுட்டு வா அப்டினு சொல்ல மாட்டாங்களா?> சிம்ப்பிள் லாஜிக். இது  மொத்தப்படத்தையுமே பாதிக்குதே ? 


3   ஆள் மாறாட்ட சந்திப்புக்குப்பின்  செல் ஃபோனில்  மெசேஜ்  கூட அனுப்பிக்க மாட்டாங்களா?  அட்லீஸ்ட்  ஒரு கால்  கூட பண்ணிக்க மாட்டாங்களா ? 


4   ஃபோனில்   பல  முறை பேசியவர்கள்  க்ளைமாக்ஸ் ல் காரில்   ஒருவருடன்  ஒருவர்  பேசும்போது  குரல் அடையாளம்  தெரியாதா? 


5    ஆதிவாசிக்கு அடைக்கலம்  கொடுத்தல்  , லோக்கல் எக்ஸ் எம் எல் ஏ அராஜகம்  அந்த  போர்சன்  எதுக்கு ? கதைக்கு சம்பந்தமே  இல்லாமல் ? 


6 அதே  போல்  சினேகா வீட்டில்  ஒரு திருநங்கை கேரக்டர்  தேவை இல்லாமல்  உலா வருது . 


7  ஊர்வசி  கேரக்டரும் , ஐஸ்வர்யா  கேரக்டரும்  வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் .  ஐஸ்வர்யாவின்  ஆண் கட்டைக்க்குரல் சகிக்கலை 





மனம் கவர்ந்த வசனங்கள்




  1. காதலி சொன்னா பொய் கூட அழகாத்தெரியும் #,உ ச அ2
  2. நீ அவளுக்குத்தேவையா?இல்லையா?ங்கறதை அவதான் முடிவு பண்ணனும்.நீ எப்படி முடிவு பண்ண முடியும்? # உ ச அ3
  3. வாழ்க்கைல எல்லாருக்கும் துணை தேவைப்படும் ஏதோ ஒரு கட்டத்துல # உ ச அ 4
  4. அட்லீஸ்ட் அவ வயசாவது தெரியுமா? வாய்ஸ் தெரியும் # உ ச அ5
  5. நம்மூர் ஹீரோயின் கள் எல்லாம் வேஸ்ட்டுடா.வடக்கத்திப்பொண்ணுங்க தான் கும்முனு இருப்பாங்க # உ ச அ

   6 .சமைக்கும்போதெல்லாம் எனக்கு எங்க அம்மா நினைவு வரும். எல்லோர்   வாழ்க்கையிலும் அம்மா நினைவு தவிர்க்கமுடியாதது #,உ ச அ



7 .பொண்ணுங்க கிட்டே பேசும்போது சுருக்கமாப்பேசக்கூடாது.எக்ஸ்டென்ட் பண்ணிப்பேசனும் # உ ச அ

8  டென்ஷனா இருக்கா? டென்சனா தெரியுதா? # உ ச அ ( டயலாக் = விஜி)


9 .பஸ்ல போனா கண்டவனுங்க இடிப்பானுங்க.தெரிஞ்ச பாய் பிரன்ட் கூட சேப்டியா பைக் ல போனா என்ன தப்பு? # உ ச அ


10  காதலி சொன்னா பொய் கூட அழகாத்தெரியும் #,உ ச அ






படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S



  1. தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது .இளையராஜாவின் கொண்டாட்டப்பாடல் .துள் இசை #,உ ச அ2
  2. ஈரமாய் ஈரமாய் பூ மழை தூவுதே மெலோடியில் இளையராஜா தான் ஒரு மென் இசை சிறப்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கார் # உ ச.அ




3.திரைக்கதையின் தேவை கருதி மவுன மொழியை உலவ விடும் இளையராஜா மவுனத்தை உடைக்கும் முதல் நொடியில் வட்டியும் முதலுமாய் சிக்சர் அடிப்பார் # உ ச அ



4     .3 குடும்பப்பெண்கள் 1 சேர்ந்து வீட்டில் சாதாரணமா சரக்கு அடிக்கறாங்க. # அய்யோ ராமா @,உ ச அ





5 .இளையராஜா இசை அமைக்கும் படத்தில் மட்டும் அவரும் ஒரு கதை சொல்லி # வாட் எ பிஜிஎம்?



6 .இந்தப்பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக்கிடைச்சது # இளையராஜா ராக்கிங்க் இசை


  


7 .இளையராஜா இன்னிசை என்றாலே டைட்டில் சாங் ஸ்பெஷலிஸ்ட் தானே? # உன் சமையல் அறையில்








சி பி கமெண்ட் -உன் சமையல் அறையில் - ஆள் மாறாட்டக்காதல் கதை -கண்ணியம் -இளையராஜாவின் இசை + .லாஜிக் மிஸ்டேக்ஸ் ஏராளம் - விகடன் மார்க் =41 .ரேட்டிங் 2.5 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =2.5 / 5





டிஸ்கி -மஞ்சப்பை -சினிமா விமர்சனம்

-http://www.adrasaka.com/2014/06/blog-post_2063.html


Un Samayal Arayil
Directed by Prakash Raj
Produced by Prakash Raj
Written by Viji (dialogues)
Screenplay by Prakash Raj
Story by Shyam Pushkaran
Dileesh Nair
Based on Salt N' Pepper
by Aashiq Abu
Starring Prakash Raj
Sneha
Urvashi
Music by Ilaiyaraaja
Cinematography Preetha
Editing by Kishore Te.
Studio Duet Movies
Distributed by Toogudeepa Distributors (Kannada)[1]
Duet Movies (Tamil)
Sri Venkateswara Creations (Telugu)
Release dates 6 June 2014
Country India
Language

Wednesday, March 07, 2012

அமராவதி - பூமிகா,சினேகா-வின் தெலுங்கு திகில் பட விமர்சனம்

http://searchandhra.com/english/wp-content/uploads/2009/12/Amaravathi-Review-searchand.jpg 

பொதுவா திகில் படம்னா, சஸ்பென்ஸ் படம்னா  முழுக்கதையையும் சொன்னா நல்லாருக்காது.. ஆனா இந்தப்படத்துக்கு ஒன் லைன்ல சுருக்கமா எல்லாம் கதை சொல்ல முடியாது.. ஏன்னா டைரக்டர் மல்டி லேயர் ஸ்க்ரீன் பிளேல  புகுந்து விளையாடி இருக்கார்.. அதனால விரிவாவே கதை விடறேன்.. சாரி.. கதை சொல்றேன்.

டிராக் 1 - 1996 ல முத்தாறுன்னு ஒரு ஊர்.. அங்கே ஒரு ஜமீன் தார் லெவல் பணக்காரர் இருக்கார்.. அவருக்கு 15 வயசுல ஒரு பொண்ணு ( யாரப்பா அது விசில் அடிக்கறது?ஜமீன் தார் வீட்ல ஒரு வேலைக்காரி அவங்களுக்கு ஒரு பையன்.. அந்தப்பையனும், ஜமீன்  பொண்ணும் சினேகமா இருக்காங்க.. அதாவது சினேகா பிரசன்னாவுக்கு முன்னால நாக் ரவி கூட வெறும் நட்பு மட்டும்தான்னு சொன்னாங்களே அது மாதிரி.. 

ஒரு நாள் அவங்க 2 பேரும் விளையாடிட்டு இருக்கறப்ப  பாப்பா மேல பையன் விழுந்துடறான்.. அந்த நேரம் அங்கே வந்தவர் வேலைக்காரி பையனை ஜீப்ல கூட்டிட்டு போய் கழுத்தை கட் பண்ணி ஆத்துல வீசிடறார்.. அதை நேரில் பார்த்த சாட்சி ஆன வேலைக்காரியை கொலை பண்ணிடறார்


கழுத்துல கட் ஆன பையன் சாகலை.. அவன் தான் ஆண்ட்டி ஹீரோ.. 

http://rajtamil.rajtamil.netdna-cdn.com/wp-content/uploads/2012/03/Yaar-Tamil-Movie-online.jpg


டிராக் 2 -இப்போ கதை நிகழ்காலத்துக்கு வருது.. நகரத்துல அங்கங்கே கர்ப்பிணிப்பெண்கள் கடத்தப்படறாங்க.. 10 நாட்கள்ல 6 கேஸ் இது போல யாரோ கடத்தி குழந்தையை மட்டும் எடுத்துக்கறாங்க.. ஒரு மர்மமான பொண்ணு (பொண்ணுன்னாலே மர்மம் தான்) ஒரு சூட்கேஸ்ல அந்த குழந்தையை கடத்தறாங்க ( அடங்கப்பா.. குழந்தை என்ன கோல்டு பிஸ்கெட்டா?)

டிராக் 3 - இந்த கடத்தல் கேசை டீல் பண்ற போலீஸ் ஆஃபீசர் அவரோட ஆளு சினேகாவோட லவ் டீல் பண்றார்.. சினேகா தன் காதலை காதலனின் பெற்றோர் ஏத்துக்கலைன்னு தற்கொலை முயற்சி எல்லாம் பண்றார்... இந்தக்கதைக்கு இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் தேவையே இல்லை.. 


http://image.imagesexplore.info/images/1.bp.blogspot.com/_SrOyoFx3fvg/SrbiigqaiKI/AAAAAAAAAGE/iwtnizfaoVA/s400/bhoomika_chawla_hot_exposure.jpg

டிராக் 4 -  டிராக் 1ல வந்ததே ஒரு 15 வயசு ஃபிகரு அது இப்போ பெருசாகி ஐ மீன் பெரிய பொண்ணா ஆகி பூமிகா ஆகிடுச்சு.. அவங்களுக்கு ஒரு புருஷன்.. அந்த புருஷனை நம்ம ஆண்ட்டி ஹீரோ போட்டுத்தள்ளிட்டு பூமிகாவை தன் இடத்துக்கு கூட்டிட்டு வந்துடறார்.. அதெப்பிடி? ஒரு பொண்ணு அப்படி வரும்னு ஒத்துக்கும்? போராடாதா?அப்டின்னு எவனாவது லாஜிக்கலா கேள்வி கேட்டுட்ட்டா என்ன பண்றது? அதனால பூமிகாவுக்கு தலைல அடி பட்டு பழசை எல்லாம் மறந்து லூஸ் ஆகிடற மாதிரி காட்டிட்டாங்க.. 


டிராக் 5  - ஆண்ட்டி ஹீரோ பூமிகா வை கல்யாணம் பண்ணிக்கறார். பூமிகா லூஸ் ஆகறப்ப 3 மாசம் கர்ப்பம்.. ஆனா கரு கலைஞ்சிடுது.. அதனால ஆண்ட்டி ஹீரோ ஒரு லேடி டாக்டரை பார்த்து 10 குழந்தை வேணும், அரேஞ்ச் பண்ணுங்க.. அதாவது இவரோட செமன், பூமிகாவோட கரு முட்டை 2டும் எடுத்து வாடகைத்தாய் வயிற்றில் வளர வைப்பது.. ஏன் இப்படி சுற்றி வளைக்கனும்? டைரக்டா பூமிகாவையே மேட்டர் முடிச்சு கர்ப்பம் ஆக்க வேண்டியதுதானேன்னு டைரக்டர்க்கு ஃபோன் போட்டு கேட்டேன்.. கற்பு முக்கியம்ப்பா.. அப்டிங்கறார்.. அடங்கோ.. சரி அது என்ன கணக்கு? 10 குழந்தை?ன்னு கேட்டா கார்த்திக், செந்தில் நடிச்ச நட்பு படத்துல 10 பைசா பைத்தியமா வர்ற மாதிரி ஹீரோயினுக்கு சின்ன வயசுல இருந்தே 10 பைத்தியம்.. 

அதாவது கோயில் திருவிழாவில எதை எடுத்தாலும் 10 ரூபான்னு விற்பாங்களே அந்த மாதிரி அந்த ஃபிகருக்கு சின்ன வயசுல இருந்தே எதுவா இருந்தாலும் 10 வேணும்.. பொம்மையா இருந்தாலும் சரி பூவா இருந்தாலும் சரி.. அதனால தான் 10 குழந்தைங்க.. அதுக்குதான் 10 கர்ப்பிணிகள் கடத்தல்.. 
உஷ் அப்பா கதை சொல்லி முடிச்சாச்சு.. ( அப்போ  பூமிகா ஏன் தன் ராசி என் 10ஐ புருஷன் மேட்டர்ல அப்ளை பண்ணலை?னு கேட்காதீங்க.. எனக்கு தெரியாது.. ஹி ஹி )


http://www.southdreamz.com/wp-content/uploads/2009/11/Amaravathi-Bhumika-Chawla-Latest-Stills-Pics-Photo-Gallery-Wallpapers-Images-02.jpg

டிராக் 6 - ஏழாவது அறிவுல வில்லன் ஹிப்னாடிசத்துல எல்லாரையும் வீழ்த்துவாரே அந்த மாதிரி இந்தப்படத்துல வர்ற ஆண்ட்டி ஹீரோ வசியக்கலை மூலம் எல்லாரையும் அடிமைப்படுத்தி தான் விரும்பற எல்லாத்தையும் அடையறார்.. ஹீரோ போலீஸ் ஆஃபீசரையும் தன் வசப்படுத்திக்கறார்..  அவர் யார் கிட்டே அதை எல்லாம் கத்துக்கறார்? எப்படி?ன்னு ஒரு தனி டிராக் கதை


ஹீரோ யார்னே தெரியலை.. போலீஸ் ஆஃபீசரா வர்றதால ஜிம் பாடி எல்லாம் ஓக்கே.. ஆனா பாவம் நடிப்புதான் வர்லை..ஆண்ட்டி ஹீரோவா வர்றவர் ஹீரோவுக்கு பெட்டர்.. தேறுவார்.

சினேகா சிரிப்புக்கு பேர் போனவர் படம் பூரா உம்மணாம் மூஞ்சியாவே இருக்கார்.. ( திகில் படத்துல யாரும் சிரிக்கக்கூடாதோ?)

அதுக்கு நேர் மாரா சாரி நேர்  மாறா  பூமிகா கேனம் மாதிரி .. அடடா.. மாதிரி என்ன மாதிரி அவர் கேரக்டரே கேனம் தானே சிரிச்சுக்கிட்டே இருக்கார் .. முடியலை.. 

http://mimg.sulekha.com/telugu/amaravathi/stills/amaravathi-38.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. தெலுங்கு டப்பிங்க் படம்னு தெரியாத மாதிரி போஸ்டர்ல யார்?அப்டினு டைட்டில் தமிழ்ல வெச்சு  பூமிகா , சினேகா முகங்கள் மட்டும் தெரியற மாதிரி ரெடி பண்ணது

2.  ஒரு கர்ப்பிணி லேடி லிஃப்ட்டை விட்டு வெளீல வர்றப்ப சடக்னு ஒரு உருவம் வர்ற மாதிரி எடுத்த அட்டாகாசமான திகில் ஷாட்

3. திகில் படங்களூக்கு பாடல்கள், டூயட்ஸ் எல்லாம் மைனஸ்னு தெரிஞ்சு அதை கட் பண்ணது


4. போர் அடிக்காமல் சம்பவங்களை பர பரன்னு நகர்த்துனது..


http://s3.hubimg.com/u/2145902_f496.jpg

இயக்குநரின்  லாஜிக் சொதப்பல்கள்

1. சினேகா 9வது மாசம் நிறை மாச கர்ப்பமா இருக்கறப்ப ஸ்கேன் பண்ணி அது பெண் சிசுன்னு கண்டு பிடிக்கறாங்க.. 4 வது மாசமே அதை கண்டு பிடிக்கலாமே? எதுக்கு 9 வது மாசம் வரை வெயிட் பண்ணனும்? அப்போ கண்டு பிடிச்சாலாவது கலைக்க யூஸ் ஆகும்.. 9வது மாசம் கண்டு பிடிச்சு என்ன யூஸ்?

2. சப் இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் போலீஸ் ஸ்டேஷன் லேண்ட் லைன் ஃபோன்க்கு ஏன் கூப்பிடறார்..? அவர் செல் ஃபோன் நெம்பர்க்கு கூப்பிடலாமே?

3.  சினேகா நிறைமாச கர்ப்பிணியா இருக்கறப்ப வீட்ல காலிங்க் பெல் அடிக்குது.. அப்பா இருங்க வந்துடறேன்னு வேகமா சினேகா ஓடி வர்றாங்க.. எதுக்கு அவ்லவ் அவசரம்? அவ்ங்க என்ன மாமியாரா? லேட்டா வந்தா கோவிச்சுக்குவாங்கங்கறதுக்கு? அம்மா அப்பா தானே மெதுவா போலாமே?

4. ஆண்ட்டி ஹீரோ ஹிப்னாடிசத்துல மன்னன்.. அவன் ஏன் டாக்டர்ட்ட ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கான்? இன்ஸ்பெக்டர்ட்ட ஏன் சண்டை போடறான்? எல்லாரையும் வசியப்படுத்திட்டே ஜெயிக்கலாமே?

http://4.bp.blogspot.com/_eom9kT338Pk/TOfG0rcsbJI/AAAAAAAAAIs/c1NFdlueZgw/s1600/South-Indian-Smile-Queen-Sneha-Hot-Saree-Pictures-02.jpg

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38 ( டப்பிங்க் படம் என்பதால் விமர்சனம் விகடனில் வராது)


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - திகில் பட ரசிகர்கள் டி வியில் போடும்போது பார்க்கலாம்


 ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivll1qi2_d_5QA1E5B8OnUmD-L1GCLcJvW5Y-SLElKj5_RSAYA7lXBU5WnUn9v_-1EJcuWzOI5S6OgmhyW56qeWK6AWUeXGOim5O7O-TZjY8GE3EfR410edOa7Q0yp9YPq0BY3QJbAFdM/s400/bhoomika2.jpg

டிஸ்கி - இங்கே இருக்கும் ஸ்டில்கள் எல்லாம் அந்தந்த நடிகைகளின் ஃபேஸ் புக்கில் இருந்து சுட்டவை.. எனவே படம் பார்த்தவர்கள் இந்த சீன் படத்துல இல்லையே என லாஜிக் மிஸ்டேக் கேட்க வேண்டாம் ஹி ஹி ..

Saturday, April 09, 2011

கலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்..ஆனா.... - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/ponnar-shankar/stills/ponnar-shankar-02.jpg

சரித்திரப்படத்துக்கு இந்தக்கால ரசிகர்களிடையே வரவேற்பு இருக்குமா? என்பது ஊர்ஜிதம் செய்யப்படாமல் இருந்தாலும் அது போல ஒரு கதையை படமாக்கத்துணிந்த இயக்குநர் கம் புரொடியூசர் தியாகராஜனுக்கு ஒரு பூச்செண்டு...

படத்தோட கதை என்ன? என்பதை நான் திரையில் கண்ட அளவு சொல்றேன்... குங்குமம் வார இதழ்ல தொடர் கதையை படிச்சவங்க,பொன்னர் சங்கர்-ன் உண்மைக்கதையை ஏற்கனவே அறிஞ்சவங்க என்னை திட்டக்கூடாது... ஏன்னா படத்துல எடிட் பண்ணுனது போக என்ன சொல்லி இருக்கோ அதைத்தான் நான் சொல்ல முடியும்..

ஒரு மன்னரோட பெண் வாரிசு விடிஞ்சா கல்யாணம்கற சூழல்ல தன்னோட முறைப்பையனைத்தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிக்கறா... வேற வழி இல்லாம சம்மதிக்கறப்ப பொண்ணோட அண்ணன் இனி இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக்கூடாது அப்படின்னு கேவலமா  பேசறான்.. உடனே தங்கை அண்ணன் கிட்டே சவால் விடறா.. உன் 2 பொண்ணுங்களையும் எனக்குப்பொறக்கப்போற 2 சிங்கக்குட்டிகள்(!!!!!!!!!!!!???????????) கல்யாணம் பண்ணிக்குவாங்க... இது சபதம் அப்படின்னு வீராவேசமா சொல்றா... அந்த சபதம் நிறைவேற்றப்படுது...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzDdfDqzPX7UqAH7gD_Y3NzN5fdrifZZt1fKXDCY1hyphenhyphenxwrHfR_swXSnpTjAXkNkH18QC12Wp44hexe_kcNfDDhlRfMH-PPsZmdnFJ734188D4wHqvuefQtq_IoT1N4a8aUrARGTwqmqqE/s1600/ponnar_shankar_movie_stills_photo_gallery_02.jpg

ஹி ஹி .. யாரப்பா அது கல்லோட வர்றது......அது வேற ஒண்ணுமில்லை... கதையை சுருக்கறப்ப அப்படி ஆகிடுச்சு போல..படத்தை மறுபடி போட்டுப்பார்த்த டைரக்டருக்கே மனசாட்சி உறுத்தி இருக்கும் போல.. கடைசி 2 ரீல்.. போர்க்களம், சுதந்திர நாடு.. என என்னமோ ஒப்பேத்தி இருக்காங்க...

படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு முதல்ல ஒரு ராயல் சல்யூட்... செமயான உழைப்பு.. காட்சிகளில் பிரம்மாண்டம்.. அதே போல் ஒளிப்பதிவாளர்... கேமரா கோணங்கள் பிரமாதம்.. பாடல் காட்சிகளில் டி ராஜேந்தரும் ஷங்கரும் இணைந்து பணியாற்றியது போல் ஒரு அவுட் புட்...
http://searchandhra.com/english/wp-content/uploads/2011/03/Ponnar-Shankar-Movie-Working-Stills-3.jpg
கலைஞரின் பேனா முனை விளையாடிய இடங்கள்.

1.  ஒருத்தனோட அழிவுலதான் இன்னொருத்தனோட  செல்வாக்கு வளருதுங்கறதுக்கு என்னோட வாழ்க்கையே ஒரு பாடமா இருக்கட்டும்...


2. வாழ்க்கைப்பாடம் படிக்க பள்ளிப்பாடம் எதற்கு? பள்ளியறைப்பாடம் போதாதா?

3.  நியாயத்தை மிதிச்சிட்டு நரகத்துக்கு போகச்சொல்றீங்களா?ஹூம்.. ராஜ தந்திரத்துல நியாய தர்மம் பார்க்கக்கூடாது... என் தலை விதி...

4. குழந்தை வரம் வேண்டும்னு ஆண்டவன் சந்நிதானத்தை தேடி போகும் மக்களே.. ஆண் பெண் உறவுலதான் அந்த பாக்கியம் கூடி வரும் என்பதை ஏன் மறந்தீர்கள்?

5. நீங்க வெற்றி பெற வேண்டும் என நான் தவம் இருப்பேன்.....

ஏன்? உன் தவத்தால தான் நான் வெற்றி பெறனுமா? என் வீரத்தால் அல்லவா?

6.  நீங்க சொல்ற யோசனைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அதர்மத்தின் சிகரத்துக்கே போகச்சொல்றீங்களே..... அதான் யோசனையா இருக்கு..?

7. ஆண்டவனுக்கு கொண்டு வந்த அமுதத்தை அர்ச்சகரை  சுவைக்க சொன்னது யார்?

8. பிறப்பாலயும், வளர்ப்பாலயும் உயர்ந்த வம்சத்துல பிறந்த நீங்க எப்படி இந்த மாதிரி சதிக்கு துணை போனீங்க?


9.. உண்டுகாட்டி என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கீங்களா? தலைவன் சாப்பிடும் முன் நல்ல உணவா என சோதனை செய்ய சாப்பிட்டுப்பார்க்கும் ஆள்.. அது நான் தான்.. பெண்ணே.. உன்னை அடைய என் தலைவன் தூக்கீட்டு வரச்சொன்னான்.. நான் முதல்ல உன்னை........ 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfpKMz_AxxOMo0Ph2tR3h6ziAQQ6DTNIRAXLLMpm9HbfgihNTJD17lRxEPXLUmJiOSJenbENlOfHde8QFGVevj5cdaaSHeL5bxWv2aNYBusUr8B1wWmaGCcIY1GcWFtw8_TcrW3jMHZRGL/s400/ponnar-shankar-tamil-movie-wallpapers-002.jpg
அடுத்து நடிப்பில் யார் யார் கலக்குனாங்கன்னு பார்க்கலாம்..

படத்தில் முதல் பாராட்டு பிரகாஷ்ராஜ்க்கு... வில்லனா வந்தாலும் அவரது கம்பீரம் அருமை... ராஜ நடை நடந்து வர்றாரே.. ஆஹா..

அடுத்து ராஜ்கிரண்.. அவருக்கான கெட்டப் சுமார் என்றாலும் நடிப்பு கனகச்சிதம்.. மூன்றாவதாக நெப்போலியன்.. அவரது ஆகிருதியான தோற்றமும் , கம்பீரமான குரலும் மறக்க முடியாது... குற்ற உணர்ச்சியில் குமுறும்போதும், கோபத்தில் பொங்கும்போதும் வெல்டன் சொல்ல வைக்கிறார்..

குஷ்பூ.. படத்தில் பல இடங்களில் இவருக்குத்தான் நடிக்க ஸ்கோப்... முகத்தால் 70%  முதுகால் 30% ( ஹி ஹி )

நாயகன் அதுவும் இரட்டை வேடங்கள் என்றாலும் பிரசாந்த்  இவர்கள் 4 பேரைத்தாண்டித்தான் ஸ்கோர் பண்றார்..

பொதுவாகவே பிரசாந்த்க்கு ஒரு ராசி உண்டு.. ஜீன்ஸ் படத்தில் இரு வேடங்களில் நடித்தாலும்  ஐஸ்வர்யாராயின் அழகும், பாடல் காட்சிகளின் ஆர்ப்பாட்டமும் அவரது நடிப்பை அமுக்கி விட்டது போல்.. இந்தப்படத்தில் காட்சி அமைப்பின் பிரம்மாண்டமும், மற்ற சில பாத்திரங்களின் வார்ப்பும் இவரது டாமினேஷனை குறைத்து விட்டது.




http://tkada.com/wp-content/uploads/2011/03/Sneha-Play-Role-of-Prashanth-sister-In-Ponnar-Sankar.jpg
இசை இளையராஜா.. சொல்லவே வேணாம்.. சரித்திரப்பின்னணி என்றதுமே அவரது திறமை எப்படி இருக்கும் என.. பாடல் காட்சிகளில், பின்னணி இசையில், போர்க்காட்சிகளில் என மனிதர் கலக்கி விட்டார்... 

 சண்டைக்காட்சி வடிவமைப்பும் ஓக்கே தான்.. ஓப்பனிங்க் ஃபைட் சீனில் ஜாக்கி சானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் படத்தில் பைக்கில் வரும் ஆளை ஓடி வந்து ஃபிளையிங்க் கிக் ஷாட் அடிப்பாரே.. அதே போல் ஒரு சீன் கலக்கலான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.. வெல்டன் ஸ்டண்ட் மாஸ்டர் & பிரசாந்த்..


 அதே போல் சினேகா பாடும் ஓப்பனிங்க் பாடல் காட்சியில் நடன தாரகைகளுக்கான ஆடை வடிவமைப்பும்,அவர்களுக்கான நடன அசைவுகளும் அருமை...அந்தக்கால மூவ்மெண்ட்ஸ்...அசத்தல்..

ஆனால் பிரசாந்துக்கு அவர் தங்கை என்பதால் ரசிகர்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனால் வந்தவரை அவரது பாத்திரத்துக்கான பங்களிப்பு ஓக்கே தான்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHewE0w1pxrpmg6q0lrOmsdPS-tPye4KO7mlAahJaO5BCUhcShn3Sfm4RZXeSbdCO8fYKLIsit4BoR76t0WLc2_SxsB-__R9XhaJZzp66SMDE29iuhCdjdwHXX4WKe9SBvQNBsH4Qvz4Lm/s1600/Divya%252BParameshwar%252BWallpapers%252Bgallery%252B(3).jpg
ஹீரோயின்கள் 2 பேர்.. அவர்களுக்கு 2 பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வேலை..

அவர்கள் முக அழகு ஆவரேஜ் தான்.. ஆனால் இடை அழகு...... வாழை மரத்தை ஆசாரியிடம் கொடுத்து வகிர்ந்தெடுத்து செய்யப்பட்ட சறுக்கு மரம் போலே தொட்டணைத்தூறும் நீர் ஊற்று போலே ஜில் என்ற காற்று போலே.....

இயக்குநருக்கு சில கேள்விகள். 


1. சாண்டில்யன், கல்கி, விக்ரமன் போன்ற எழுத்தாளர்களின் சரித்திர நாவலில் கதை ஆரம்பத்திலிருந்தே நாயகனின் பார்வையிலேயே போகும்.. அப்போதுதான் படிக்கும் வாசகர்கள் கதையில் ஒன்றி ஆர்வமாக படிப்பார்கள்.. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் மறந்து கதையை அதன் போக்கில் சொல்லி விட்டது பெரிய குறை..

2. நாயகனாக இரட்டை சகோதரர்கள் இருந்தும் அவர்கள் கேரக்டர் என்ன? அவர்கள் விருப்ப வெறுப்பு என்ன? என்ற எந்த தகவலும் சொல்லப்படவில்லை.. எப்படி பாத்திரத்தோடு ஆடியன்ஸ் ஒன்ற முடியும்?

3. போர்க்காட்சிகளில் கேடயத்தில் அம்பு தைத்து நிற்பது போலேஇருக்கே.. அம்பு இரும்பு... கேடயமும் இரும்பு.. எப்படி? கேடயத்தில் பட்டு அம்பு கீழே விழும் அவ்வளவுதான்...

4. ஊழிக்காற்றில் ஊரே அலறி அடித்து ஓடும்போது இரு நாயகர்களும் மற்றவர்களைப்பற்றிக்கவலைப்படாமல் நாயகிகள் இருவரை காப்பாற்றுபது அவர்கள் பாத்திரப்படைப்பை கேவலப்படுத்துகிறதே...( ரியல் கதையில் அவர்கள் பலரை காப்பாற்றினார்கள்)

5.  குஷ்பூ தம்பதியினர் குழந்தை பாக்கியத்துக்காக தேர் இழுக்கறாங்க.. அப்போ வில்லனோட ஆள் வேணும்னே தேரை ஓட விடாம பண்றான்.. ஏதோ தோஷம்.. சுமங்கலிப்பொண்ணை பலி கொடுத்தாதான் தேரை இழுக்க முடியும்கறான்.. அப்போ குஷ்பூ பலி ஆக முன் வர்றாங்க.. இது லாஜிக்கே இல்லையே.. ஏன் பலி ஆக ஓக்கே சொல்லனும்..?

6. இரட்டைக்குழந்தைகளை முன் பின் அறிமுகம் இல்லாத இரண்டு தாதிப்பெண்கள் சர்வ சாதாரணமாக தூக்கி செல்வது நம்பும்படி இல்லை...

7. மன்னர் வம்ச குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்பதற்காக ராஜ்கிரண் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மாதிரி தன் குழ்ந்தைகளை கொல்லத்துணிவது எப்படி? ராஜ விசுவாசம் என்றால் அதற்கேற்ற காட்சிகள் இல்லை..?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvR-iG5lIXjsi-e_vGNicgaZ17_FKr3H3m5x5iC1hQn38-BtM7eJHQaFr2BJCuOBmELODiIEnSktbLk3EpGc-QMfUD9UKfrjEX8Iqne1NG1Hg0rZFPilbWVk8A707VRXS6HPjEU_8LaZA/s1600/divya_parameshwar_wet_bikini_wet_saree_pantie_bra_tamil_actress_hot_ass_plidd+%2525284%252529.jpg
8. போர்க்களத்தில் 20 அடி தூரத்தில் இருந்து கொண்டு நீண்ட வாளை எறிந்து கொல்வது போல் ஒரு சீன் உள்ளது.. சரித்திரக்குறிப்பில் வேலால் கொனறதாக வருது.. மேலும் குறுவாள் எனப்படும் கத்தியைக்கொண்டோ, வேல் அல்லது அம்பினால் மட்டுமே அவ்வளவு தொலைவில் இருந்து ஒருவரை கொல்ல முடியும்.. 

9.  நெப்போலியன் தற்கொலை செய்யும் சீனில் ஒரு லாஜிக் ஓட்டை.. வாளைமேலே வீசி எறிந்து அது கீழே வரும்போது தன் நெஞ்சைக்காட்டிக்கொண்டு நிற்கிறார்.. அது குத்தி உயிர் துறக்கிறார்.. அது சாத்தியமே இல்லை...அது அதிக பட்சம் 3 அங்குல அளவில் தான் காயத்தை ஏற்படுத்தும்.. உயிர் போகும்  அளவு ஃபோர்ஸ் வராது... 

10. பொன்னர் சங்கர் இரண்டு பேரும் ஒரு சீனில் கூட தன் தங்கை சினேகாவிடம் பேசுவது போல் காட்சியே வைக்கவில்லை.. அப்புறம் என்ன அண்ணன்மார் கதை..?

11.  நாயகர்கள் இருவரும் நாயகிகளை திருமணம் செய்து பிரம்மச்சரியம் விரதம் கடைப்பிடிப்பதை பெரிய தியாகம் போல் காட்டி இருப்பது தேவை இல்லாதது.. 

12.  ராஜ்கிரண் ஒரு சீனில் லேடியைப்போல மஞ்சள் பூசியது போல் அதீத மேக்கப்பில்  வர்றார்.. அது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGv18HSijdpkBbri15oWiWLxK5Y6wT1IpnPQY6vIP94CxDT8hd-Iit0Yqs7owTF9lv1JdK3GBZ5qkRl4_9V8ok7lD_-KzlgkhJzswcs_c7M0NfQuvAPIu7rPkaGIoFR1_aBwmnkOrXzFGe/s1600/divya%252Bparameshwar%252Bcleavage.JPG
13. குஷ்பூவை ஒரு காட்சியில் கொல்லும் வீரன் ஜெயராமை லேசா ஒரு கீறு கீறுகிறார்.. அதுக்கே அவர் சடன் டெத் ஆவது எப்படி?


படம் பிரம்மாண்டமாய் இருந்தால் மட்டும் போதாது.. திரைக்கதையில் அழுத்தம் இல்லை  என்றால் படம் தேறாது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்த வந்த படம்.. 

எல்லா செண்ட்டர்களிலும் சராசரியாக 25 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே

ஈரோடு ராயல், ஸ்ரீ லட்சுமி  2 தியேட்டர்ல ஓடுது

Saturday, March 12, 2011

சினேகா-வின் பவானி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV5KJFadRm6Y2jOb6dv9r7qhwn31SrDkwVqPu6zNzgfoLUg3f-TDxS5BqXnMokJLUS_8Mclxb712uVQfzkRqAibSO9C3NPd6tiqg78URBN4SWUeWlSEh8HRQXHcwmXZucmyYPnuZ4-SJJ5/s1600/Bhavani.jpg
சிரிப்பு அழகி சினேகாவுக்கு திடீர்னு ஒரு விபரீத ஆசை.. நாமளும் விஜய சாந்தி மாதிரி ஒரு வைஜயந்தி ஐ பி எஸ்  டைப் ஆக்‌ஷன் படம் கொடுக்கனும்னு..அதனால வலுக்கட்டாயமா தன்னோட ஸ்பெஷல் பிராண்ட் சிரிப்பை மூட்டை கட்டி பரண்ல வெச்சுட்டு போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி பல வித்தைகளை காட்டி இருக்காரு.........ஆனா.....

பொதுவா போலீஸ் யூனிஃபார்ம் போட்டா எல்லாருக்கும் கெத்தாதான் இருக்கும்..ஆனா திரைக்கதைல கெத்து இல்லையே....போலீஸ் ஆஃபீசரோட வீர தீர சாகசப்படம் பார்க்க வந்தவங்க போலீஸ் ஆஃபீசரோட தங்கையை ரேப் பண்ணி கொலை செஞ்சவனை பழி வாங்கற எஸ் ஏ சந்திர சேகர் கால படக்கதையை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க தான்.

என்னதான் சினேகா முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலும் அவரது முகம் ஒரு சாஃப்ட்டான முகம் என்பதால்  ( கண்டு புடிச்சுட்டாருய்யா துர)  போலீஸ்க்கே உரிய கண்டிப்பு முகத்தில் வெளிப்படுத்த முடியல... ஆனா அவரும் முடிஞ்சவரை சமாளிச்சிருக்காரு..அவர் ஜீன்ஸ் பேண்ட் . டீ சர்ட் போட்டுக்கிட்டு கோபமா நடந்து வர்றப்ப.... ஹி ஹி.....பார்க்க நல்லாருக்கு  .( சென்சார் சென்சார்....)

அவர் வர்றப்ப ஒரு பேக் கிரவுண்ட் ஹம்மிங்க் கொடுக்கிறாங்க.. பாருங்க .. யதா யதா தரிகிடத்தோம் யதா யதா தரிகிடத்தோம் தம் தோம்... ஸ்லோ மோஷன்ல போலீஸ் புடை சூழ சினேகா நடந்து வர்றப்ப பார்க்க நல்லாதான் இருக்கு.. ஆனா பில்லா ரேஞ்சுக்கு அதே சீன் 13 இடத்துல வர்றப்ப கடுப்பாகுது...

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/DataC/cinemakisukisu/images/127404_f520.jpg
இந்தப்படத்துக்கு டூயட் வேண்டாம்னு முடிவு பண்ணுன இயக்குநரை நான் பாராட்டறேன்.. ஆனா சினேகாவை ஒரு இடத்துல கூட சிரிக்கறதை காட்டாததை வன்மையா கண்டிக்கிறேன்.. ( ஒரு சீன்ல அப்பாவைப்பார்த்து சிரிக்கிறார்.. ஆனா சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதுன்னு சொல்ற மாதிரி அப்பாவைப்பார்த்து சிரிப்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.. ஹி ஹி )

ஃபைட் சீன்ல சினேகா ரொம்ப படுத்தறார்.. வில்லனின் அடியாளை ஓங்கி ஒரு அடி குடுத்துட்டு 5 விரல்லயும் நெட்டை (சொடக்கு - நன்றி - கி ராஜ நாராயணன்)எடுத்துட்டு இருக்கார்.. சுத்தி 36 வில்லனின் அடியாட்கள் அவர் சொடக்கு எடுத்து முடியற வரை காத்திருந்து அப்புறம் அடிக்க வர்றாங்க...

விவேக்- செல் முருகன் காமெடி காட்சிகள் தனி டிராக்கில் படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் போவதால் மனதை நிற்கவில்லை.. ஆனால் மோசமில்லை.. சிரிப்பு வருது....

http://www.viduppu.com/photos/full/actresses/sneha/004.jpg
வசனகர்த்தா பவானியில் பவனி வந்த இடங்கள்

1. இந்தத்தடவை உனக்கு எம் எல் ஏ சீட் இல்லை..

யோவ்,,நீ ஜெயிக்கனும்கறதுக்காக கள்ள ஓட்டு, கொலைன்னு எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன்..( நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு..)

2.  யோவ்.. எஸ் ஐ.. ராஜா ராமன் மேல ஒரு சூசயிடு கேஸ் போடு.. அவனை நான் கொல்லப்போறேன்...

கேஸா..அப்படின்னா..?

சுத்தம்.. அதே தெரியாதா?    ( ரொம்ப அப்பிராணியா இருக்காரே...இந்த சப் இன்ஸ்பெக்டர்..) 

3. எனக்கு  கிம்பளம் தர்றது முதல் வீடு கட்டித்தந்தது வரை எல்லாமே அவர்தான்... அவரை எப்படி நான் அரெஸ்ட்  பண்றது?

உன் பொண்டாட்டிக்குத்தாலி கட்னதும் அவர்தானா..?

4.  ஹலோ... வந்து சேர்ந்திட்டியா.?

விவேக்.. - ஹா ஹா ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. போயே சேர்ந்துட்டான்

5.  இனிமே ரன்னிங்க்ல செல் ஃபோன் பேசுவே நீ..?

ம்ஹூம்.. இனி வாக்கிங்க்ல கூட செல் ஃபோன்ல பேச மாட்டேன்...

6.  ஆஹா.. முருகன் மயில் மேல ஏறி வர்றது எனக்கு தெரியுது...

விவேக்.. - அடப்பாவி.. இங்கே பார்த்து வண்டி ஓட்டுடா.. எனக்கு எமன் எருமை மேல வந்து துரத்தறது நல்லா தெரியுது...

7. விவேக்.. -  அடப்பாவி.. வண்டில போறப்ப சாமி கும்பிடாம போனா சாமி கோவிச்சுக்கவா போகுது?ஏண்டா ஆக்சிடெண்ட் நடக்க ஒரு காரணி ஆகறீங்க..?

8.  விவேக்.. - என்னது? ரேப் பண்ணுனவனுக்கு ரூ 500 அபராதமா? இனி பாக்கெட்ல ரூ 500 வெச்சிருக்கறவன் எல்லாம் அடங்க மாட்டேனே... ( உயிர் புகழ் சங்கீதா நடித்த தனம் பட டயலாக் உல்டா.. # வாழ்க வல்லாரை லேகியம்)

9. விவேக்.. - என்னது? ஆயிலுக்கு பஞ்சமா? தமிழ் நாட்ல இருக்கற டீகடைகள்ல விற்கற பஜ்ஜிகளை பிழிஞ்சா ஆயில் கஷ்டமே வராதேடா.....

10. விவேக்.. -  நான் நினைக்கறேன்  இந்த பஜ்ஜில இருக்கற ஆயில் தான் பின் மருவி பஜாஜ் ஆயில்னு வந்ததோ..?

11.வில்லன் - இங்கே பாரு.. ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர்  ஒரு சப் இன்ஸ்பெக்டரை அடிச்சான்னு பேர் வெளில வந்தா பெரிய பிரச்சனை ஆகும்...

ஓக்கே.. கான்ஸ்டபிளை விட்டு அடிக்க சொல்றேன்..

12. .வில்லன் - இவனுங்க பார்க்கற பார்வையே சரி இல்லையே.. ஓட்டு போடுவானுங்களா?

அல்லக்கை - நீங்க இதுவரை ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்கீங்களா?

இல்லை..

அப்புறம் என்ன கவலையை விடுங்க.. இந்த ஜனங்க எபவும் நல்லவங்களுக்கு ஓட்டு போடவே மாட்டாங்க.. எல்லா ஓட்டும் நமக்குத்தான்..

13.  தலைவரே.. குழந்தைக்கு பெயர் வைங்க....

நம்ம சின்னம் கோடாலி சின்னம் தானே .. அதையே வை.. தேர்தலுக்கு யூஸ் ஆகும்..

14.  வில்லன் - அவ நம்மளை திட்றாளா? புகழ்றாளா? தெரியலையே..?

ஜனங்க கை தட்றாங்க.. அப்போ புகழ்றாங்கன்னு தான் அர்த்தம்..

அடப்போடா.. அவங்க எதுக்கு கை தட்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது..



http://ulavan.net/wp-content/uploads/2010/12/sinega-e1292341879707.jpg
பரவை முனியம்மாவை வைத்து எடுக்கபாட்ட பாடல் அப்பட்டமாக தூள் பட ஏய் சிங்கம் போல நடந்து வரும்.. பாட்டின் உல்டா...

இயக்குநருக்கு பாராட்டு பெற வைக்கும் இடங்கள்

1. ஹீரோயின் தங்கையை வில்லனின் ஆட்கள்  கடத்தி செல்லும்போது அவளைக்காப்பாற்ற போகாமல் வில்லனின் மகனை ரிவால்வர் முனையில் மிரட்டி வில்லனை பணிய வைக்கும் இடம் விறு விறு....

2. ஆக்சிடெண்ட் ஆன செல் முருகன் பால் வண்டியிக்கு கீழே விழுவதும்.. எதேச்சையாக அவர் வாய் பால் பைப்புக்கு கீழே இருப்பதும்...செம காமெடி.. இந்த சீனில் விவேக்கின் டயலாக் டெலிவரி செம...

3. சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் புதுசா ,இளசா இருப்பது.. ஹி ஹி 
http://thangameen.com/Images/ContentImages/admin/sneha_23.gif
இயக்குநருக்கு சில கேள்விகள்

1.போலீஸ் கான்ஸ்டபிள் தனது குழந்தை இறந்ததற்கு லீவ் கேட்டும், அதை அடக்கம் பண்ணக்கூட லீவ் தராமல் எஸ் ஐ டபாய்ப்பதும்...எந்த ஊர்ல அப்படி நடக்குது..?

2.ஏ சி பவானியின் கதையில் தேவை இல்லாமல் கான்ஸ்டபிள் சம்பத்குமாரின் கிளைக்கதை எதற்கு?

3. ஹீரோயின் தங்கயின் பெண் அழைப்பு விழாவில் பன்னீர் தெளிப்பதற்குப்பதில் பெட்ரோலை தெளித்து அரை மணி நேரம் கழித்து பட்டாசு பற்ற வைத்து எரிப்பது ஓவர்...சுற்றி இருப்பவர்கள் கேட்க மாட்டாங்களா?

4. ஹீரோயின் ஆக்சிடெண்ட்டில் காலில் அடிபட்டு ஹாஸ்பிடலில்  அட்மிட் ஆன அடுத்த வாரமே எப்படி டெர்மினேஷன் லெட்டர் வரும்? மெடிக்கல் லீவ் இருக்கே..? 2 வருஷம் கழிச்சுத்தானே அந்த நடவடிக்கை எடுக்க முடியும்?

5. எந்த காலேஜ்ல எண்ட்ரன்ஸ்ல நீச்சல் குளம் இருக்கு?அதுல ரவுடிங்க நீச்சல் அடிப்பாங்களா? காலேஜ் டைம்ல...

6. ஹீரோயின் தங்கை டிரஸ் சேஞ்ச் பண்ண அறிமுகம் இல்லாதவர் வீட்டில் ஒரு அறையில் நுழையும்போது கதவைத்தாழ் போடாமல் டிரஸ் சேஞ்ச் பண்ணுவாளா? ( அப்பத்தானே வில்லன் ரேப் பண்ண உள்ளே வர முடியும்?னு சால்ஜாப்பு சொல்லக்கூடாது?)

7 கத்திக்குத்து பட்ட பொண்ணை காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்க்காம ஏம்மா எந்திரி.. பாரு  அப்படின்னு ஹீரோயின் கத்தறாங்க.. லாஜிக்  ஓட்டை  ஓவர்...


http://www.thedipaar.com/pictures/resize_20101227131420.jpg
எட்டடுக்கு சோலை என்னுடைய சேலை எனும் டப்பாங்குத்துப்பாட்டு வரிகள் செம கில்மா .. ஆனால் அந்த பாட்டை படமாக்குவதில் ரசனைக்குறைவு..அந்த பாட்டுக்கு நடன தாரகைகளை தலைக்கு குளிக்க வைத்து  ( என்னமோ இவனே தலையை துவட்டி விட்ட மாதிரியே சொல்றானே.. )சேலை கட்ட வைத்து டீசண்ட்டாக ஆட வைத்தும் நோ யூஸ்...

கரும்புச்சாறு சொல்லழகி,கற்பூரக்கண்ணழகி  செல்ஃபோன் சிணுங்கல் சிங்காரி பாட்டு வரிகள் அழகு கற்பனை...

கோட்டா சீனிவாசராவ் வில்லன் நடிப்பில் ஓக்கே... ( ஆம்பளைங்களை இவன் பாராட்றதே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க..)

சராசரியாக 20 நாட்கள் ஓடும்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க்  - ஓக்கே