Showing posts with label PRASANTH. Show all posts
Showing posts with label PRASANTH. Show all posts

Saturday, April 09, 2011

கலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்..ஆனா.... - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/ponnar-shankar/stills/ponnar-shankar-02.jpg

சரித்திரப்படத்துக்கு இந்தக்கால ரசிகர்களிடையே வரவேற்பு இருக்குமா? என்பது ஊர்ஜிதம் செய்யப்படாமல் இருந்தாலும் அது போல ஒரு கதையை படமாக்கத்துணிந்த இயக்குநர் கம் புரொடியூசர் தியாகராஜனுக்கு ஒரு பூச்செண்டு...

படத்தோட கதை என்ன? என்பதை நான் திரையில் கண்ட அளவு சொல்றேன்... குங்குமம் வார இதழ்ல தொடர் கதையை படிச்சவங்க,பொன்னர் சங்கர்-ன் உண்மைக்கதையை ஏற்கனவே அறிஞ்சவங்க என்னை திட்டக்கூடாது... ஏன்னா படத்துல எடிட் பண்ணுனது போக என்ன சொல்லி இருக்கோ அதைத்தான் நான் சொல்ல முடியும்..

ஒரு மன்னரோட பெண் வாரிசு விடிஞ்சா கல்யாணம்கற சூழல்ல தன்னோட முறைப்பையனைத்தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிக்கறா... வேற வழி இல்லாம சம்மதிக்கறப்ப பொண்ணோட அண்ணன் இனி இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக்கூடாது அப்படின்னு கேவலமா  பேசறான்.. உடனே தங்கை அண்ணன் கிட்டே சவால் விடறா.. உன் 2 பொண்ணுங்களையும் எனக்குப்பொறக்கப்போற 2 சிங்கக்குட்டிகள்(!!!!!!!!!!!!???????????) கல்யாணம் பண்ணிக்குவாங்க... இது சபதம் அப்படின்னு வீராவேசமா சொல்றா... அந்த சபதம் நிறைவேற்றப்படுது...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzDdfDqzPX7UqAH7gD_Y3NzN5fdrifZZt1fKXDCY1hyphenhyphenxwrHfR_swXSnpTjAXkNkH18QC12Wp44hexe_kcNfDDhlRfMH-PPsZmdnFJ734188D4wHqvuefQtq_IoT1N4a8aUrARGTwqmqqE/s1600/ponnar_shankar_movie_stills_photo_gallery_02.jpg

ஹி ஹி .. யாரப்பா அது கல்லோட வர்றது......அது வேற ஒண்ணுமில்லை... கதையை சுருக்கறப்ப அப்படி ஆகிடுச்சு போல..படத்தை மறுபடி போட்டுப்பார்த்த டைரக்டருக்கே மனசாட்சி உறுத்தி இருக்கும் போல.. கடைசி 2 ரீல்.. போர்க்களம், சுதந்திர நாடு.. என என்னமோ ஒப்பேத்தி இருக்காங்க...

படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு முதல்ல ஒரு ராயல் சல்யூட்... செமயான உழைப்பு.. காட்சிகளில் பிரம்மாண்டம்.. அதே போல் ஒளிப்பதிவாளர்... கேமரா கோணங்கள் பிரமாதம்.. பாடல் காட்சிகளில் டி ராஜேந்தரும் ஷங்கரும் இணைந்து பணியாற்றியது போல் ஒரு அவுட் புட்...
http://searchandhra.com/english/wp-content/uploads/2011/03/Ponnar-Shankar-Movie-Working-Stills-3.jpg
கலைஞரின் பேனா முனை விளையாடிய இடங்கள்.

1.  ஒருத்தனோட அழிவுலதான் இன்னொருத்தனோட  செல்வாக்கு வளருதுங்கறதுக்கு என்னோட வாழ்க்கையே ஒரு பாடமா இருக்கட்டும்...


2. வாழ்க்கைப்பாடம் படிக்க பள்ளிப்பாடம் எதற்கு? பள்ளியறைப்பாடம் போதாதா?

3.  நியாயத்தை மிதிச்சிட்டு நரகத்துக்கு போகச்சொல்றீங்களா?ஹூம்.. ராஜ தந்திரத்துல நியாய தர்மம் பார்க்கக்கூடாது... என் தலை விதி...

4. குழந்தை வரம் வேண்டும்னு ஆண்டவன் சந்நிதானத்தை தேடி போகும் மக்களே.. ஆண் பெண் உறவுலதான் அந்த பாக்கியம் கூடி வரும் என்பதை ஏன் மறந்தீர்கள்?

5. நீங்க வெற்றி பெற வேண்டும் என நான் தவம் இருப்பேன்.....

ஏன்? உன் தவத்தால தான் நான் வெற்றி பெறனுமா? என் வீரத்தால் அல்லவா?

6.  நீங்க சொல்ற யோசனைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அதர்மத்தின் சிகரத்துக்கே போகச்சொல்றீங்களே..... அதான் யோசனையா இருக்கு..?

7. ஆண்டவனுக்கு கொண்டு வந்த அமுதத்தை அர்ச்சகரை  சுவைக்க சொன்னது யார்?

8. பிறப்பாலயும், வளர்ப்பாலயும் உயர்ந்த வம்சத்துல பிறந்த நீங்க எப்படி இந்த மாதிரி சதிக்கு துணை போனீங்க?


9.. உண்டுகாட்டி என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கீங்களா? தலைவன் சாப்பிடும் முன் நல்ல உணவா என சோதனை செய்ய சாப்பிட்டுப்பார்க்கும் ஆள்.. அது நான் தான்.. பெண்ணே.. உன்னை அடைய என் தலைவன் தூக்கீட்டு வரச்சொன்னான்.. நான் முதல்ல உன்னை........ 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfpKMz_AxxOMo0Ph2tR3h6ziAQQ6DTNIRAXLLMpm9HbfgihNTJD17lRxEPXLUmJiOSJenbENlOfHde8QFGVevj5cdaaSHeL5bxWv2aNYBusUr8B1wWmaGCcIY1GcWFtw8_TcrW3jMHZRGL/s400/ponnar-shankar-tamil-movie-wallpapers-002.jpg
அடுத்து நடிப்பில் யார் யார் கலக்குனாங்கன்னு பார்க்கலாம்..

படத்தில் முதல் பாராட்டு பிரகாஷ்ராஜ்க்கு... வில்லனா வந்தாலும் அவரது கம்பீரம் அருமை... ராஜ நடை நடந்து வர்றாரே.. ஆஹா..

அடுத்து ராஜ்கிரண்.. அவருக்கான கெட்டப் சுமார் என்றாலும் நடிப்பு கனகச்சிதம்.. மூன்றாவதாக நெப்போலியன்.. அவரது ஆகிருதியான தோற்றமும் , கம்பீரமான குரலும் மறக்க முடியாது... குற்ற உணர்ச்சியில் குமுறும்போதும், கோபத்தில் பொங்கும்போதும் வெல்டன் சொல்ல வைக்கிறார்..

குஷ்பூ.. படத்தில் பல இடங்களில் இவருக்குத்தான் நடிக்க ஸ்கோப்... முகத்தால் 70%  முதுகால் 30% ( ஹி ஹி )

நாயகன் அதுவும் இரட்டை வேடங்கள் என்றாலும் பிரசாந்த்  இவர்கள் 4 பேரைத்தாண்டித்தான் ஸ்கோர் பண்றார்..

பொதுவாகவே பிரசாந்த்க்கு ஒரு ராசி உண்டு.. ஜீன்ஸ் படத்தில் இரு வேடங்களில் நடித்தாலும்  ஐஸ்வர்யாராயின் அழகும், பாடல் காட்சிகளின் ஆர்ப்பாட்டமும் அவரது நடிப்பை அமுக்கி விட்டது போல்.. இந்தப்படத்தில் காட்சி அமைப்பின் பிரம்மாண்டமும், மற்ற சில பாத்திரங்களின் வார்ப்பும் இவரது டாமினேஷனை குறைத்து விட்டது.




http://tkada.com/wp-content/uploads/2011/03/Sneha-Play-Role-of-Prashanth-sister-In-Ponnar-Sankar.jpg
இசை இளையராஜா.. சொல்லவே வேணாம்.. சரித்திரப்பின்னணி என்றதுமே அவரது திறமை எப்படி இருக்கும் என.. பாடல் காட்சிகளில், பின்னணி இசையில், போர்க்காட்சிகளில் என மனிதர் கலக்கி விட்டார்... 

 சண்டைக்காட்சி வடிவமைப்பும் ஓக்கே தான்.. ஓப்பனிங்க் ஃபைட் சீனில் ஜாக்கி சானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் படத்தில் பைக்கில் வரும் ஆளை ஓடி வந்து ஃபிளையிங்க் கிக் ஷாட் அடிப்பாரே.. அதே போல் ஒரு சீன் கலக்கலான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.. வெல்டன் ஸ்டண்ட் மாஸ்டர் & பிரசாந்த்..


 அதே போல் சினேகா பாடும் ஓப்பனிங்க் பாடல் காட்சியில் நடன தாரகைகளுக்கான ஆடை வடிவமைப்பும்,அவர்களுக்கான நடன அசைவுகளும் அருமை...அந்தக்கால மூவ்மெண்ட்ஸ்...அசத்தல்..

ஆனால் பிரசாந்துக்கு அவர் தங்கை என்பதால் ரசிகர்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனால் வந்தவரை அவரது பாத்திரத்துக்கான பங்களிப்பு ஓக்கே தான்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHewE0w1pxrpmg6q0lrOmsdPS-tPye4KO7mlAahJaO5BCUhcShn3Sfm4RZXeSbdCO8fYKLIsit4BoR76t0WLc2_SxsB-__R9XhaJZzp66SMDE29iuhCdjdwHXX4WKe9SBvQNBsH4Qvz4Lm/s1600/Divya%252BParameshwar%252BWallpapers%252Bgallery%252B(3).jpg
ஹீரோயின்கள் 2 பேர்.. அவர்களுக்கு 2 பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வேலை..

அவர்கள் முக அழகு ஆவரேஜ் தான்.. ஆனால் இடை அழகு...... வாழை மரத்தை ஆசாரியிடம் கொடுத்து வகிர்ந்தெடுத்து செய்யப்பட்ட சறுக்கு மரம் போலே தொட்டணைத்தூறும் நீர் ஊற்று போலே ஜில் என்ற காற்று போலே.....

இயக்குநருக்கு சில கேள்விகள். 


1. சாண்டில்யன், கல்கி, விக்ரமன் போன்ற எழுத்தாளர்களின் சரித்திர நாவலில் கதை ஆரம்பத்திலிருந்தே நாயகனின் பார்வையிலேயே போகும்.. அப்போதுதான் படிக்கும் வாசகர்கள் கதையில் ஒன்றி ஆர்வமாக படிப்பார்கள்.. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் மறந்து கதையை அதன் போக்கில் சொல்லி விட்டது பெரிய குறை..

2. நாயகனாக இரட்டை சகோதரர்கள் இருந்தும் அவர்கள் கேரக்டர் என்ன? அவர்கள் விருப்ப வெறுப்பு என்ன? என்ற எந்த தகவலும் சொல்லப்படவில்லை.. எப்படி பாத்திரத்தோடு ஆடியன்ஸ் ஒன்ற முடியும்?

3. போர்க்காட்சிகளில் கேடயத்தில் அம்பு தைத்து நிற்பது போலேஇருக்கே.. அம்பு இரும்பு... கேடயமும் இரும்பு.. எப்படி? கேடயத்தில் பட்டு அம்பு கீழே விழும் அவ்வளவுதான்...

4. ஊழிக்காற்றில் ஊரே அலறி அடித்து ஓடும்போது இரு நாயகர்களும் மற்றவர்களைப்பற்றிக்கவலைப்படாமல் நாயகிகள் இருவரை காப்பாற்றுபது அவர்கள் பாத்திரப்படைப்பை கேவலப்படுத்துகிறதே...( ரியல் கதையில் அவர்கள் பலரை காப்பாற்றினார்கள்)

5.  குஷ்பூ தம்பதியினர் குழந்தை பாக்கியத்துக்காக தேர் இழுக்கறாங்க.. அப்போ வில்லனோட ஆள் வேணும்னே தேரை ஓட விடாம பண்றான்.. ஏதோ தோஷம்.. சுமங்கலிப்பொண்ணை பலி கொடுத்தாதான் தேரை இழுக்க முடியும்கறான்.. அப்போ குஷ்பூ பலி ஆக முன் வர்றாங்க.. இது லாஜிக்கே இல்லையே.. ஏன் பலி ஆக ஓக்கே சொல்லனும்..?

6. இரட்டைக்குழந்தைகளை முன் பின் அறிமுகம் இல்லாத இரண்டு தாதிப்பெண்கள் சர்வ சாதாரணமாக தூக்கி செல்வது நம்பும்படி இல்லை...

7. மன்னர் வம்ச குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்பதற்காக ராஜ்கிரண் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மாதிரி தன் குழ்ந்தைகளை கொல்லத்துணிவது எப்படி? ராஜ விசுவாசம் என்றால் அதற்கேற்ற காட்சிகள் இல்லை..?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvR-iG5lIXjsi-e_vGNicgaZ17_FKr3H3m5x5iC1hQn38-BtM7eJHQaFr2BJCuOBmELODiIEnSktbLk3EpGc-QMfUD9UKfrjEX8Iqne1NG1Hg0rZFPilbWVk8A707VRXS6HPjEU_8LaZA/s1600/divya_parameshwar_wet_bikini_wet_saree_pantie_bra_tamil_actress_hot_ass_plidd+%2525284%252529.jpg
8. போர்க்களத்தில் 20 அடி தூரத்தில் இருந்து கொண்டு நீண்ட வாளை எறிந்து கொல்வது போல் ஒரு சீன் உள்ளது.. சரித்திரக்குறிப்பில் வேலால் கொனறதாக வருது.. மேலும் குறுவாள் எனப்படும் கத்தியைக்கொண்டோ, வேல் அல்லது அம்பினால் மட்டுமே அவ்வளவு தொலைவில் இருந்து ஒருவரை கொல்ல முடியும்.. 

9.  நெப்போலியன் தற்கொலை செய்யும் சீனில் ஒரு லாஜிக் ஓட்டை.. வாளைமேலே வீசி எறிந்து அது கீழே வரும்போது தன் நெஞ்சைக்காட்டிக்கொண்டு நிற்கிறார்.. அது குத்தி உயிர் துறக்கிறார்.. அது சாத்தியமே இல்லை...அது அதிக பட்சம் 3 அங்குல அளவில் தான் காயத்தை ஏற்படுத்தும்.. உயிர் போகும்  அளவு ஃபோர்ஸ் வராது... 

10. பொன்னர் சங்கர் இரண்டு பேரும் ஒரு சீனில் கூட தன் தங்கை சினேகாவிடம் பேசுவது போல் காட்சியே வைக்கவில்லை.. அப்புறம் என்ன அண்ணன்மார் கதை..?

11.  நாயகர்கள் இருவரும் நாயகிகளை திருமணம் செய்து பிரம்மச்சரியம் விரதம் கடைப்பிடிப்பதை பெரிய தியாகம் போல் காட்டி இருப்பது தேவை இல்லாதது.. 

12.  ராஜ்கிரண் ஒரு சீனில் லேடியைப்போல மஞ்சள் பூசியது போல் அதீத மேக்கப்பில்  வர்றார்.. அது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGv18HSijdpkBbri15oWiWLxK5Y6wT1IpnPQY6vIP94CxDT8hd-Iit0Yqs7owTF9lv1JdK3GBZ5qkRl4_9V8ok7lD_-KzlgkhJzswcs_c7M0NfQuvAPIu7rPkaGIoFR1_aBwmnkOrXzFGe/s1600/divya%252Bparameshwar%252Bcleavage.JPG
13. குஷ்பூவை ஒரு காட்சியில் கொல்லும் வீரன் ஜெயராமை லேசா ஒரு கீறு கீறுகிறார்.. அதுக்கே அவர் சடன் டெத் ஆவது எப்படி?


படம் பிரம்மாண்டமாய் இருந்தால் மட்டும் போதாது.. திரைக்கதையில் அழுத்தம் இல்லை  என்றால் படம் தேறாது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்த வந்த படம்.. 

எல்லா செண்ட்டர்களிலும் சராசரியாக 25 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே

ஈரோடு ராயல், ஸ்ரீ லட்சுமி  2 தியேட்டர்ல ஓடுது