Showing posts with label MANIRATHNAM. Show all posts
Showing posts with label MANIRATHNAM. Show all posts

Friday, February 01, 2013

கடல் - சினிமா விமர்சனம்

ஒரு நல்ல பாதிரியார் , ஒரு மோசமான தாதா ( தாதான்னாலே மோசம் தானே?ஆனா தளபதி, நாயகன் தாதா நல்லவங்க ஆச்சே?) இவங்க 2 பேரும்  சந்தர்ப்ப வசத்தால சவால் விட்டுக்கறாங்க. 2 பேர்ல யார் ஜெயிச்சாங்க என்பதே கதை. இந்தக்கதைல கிளைக்கதையா  பாதிரியாரின் வளர்ப்பு மகனும், தாதாவின்  நிஜ மகளும் லவ்வறாங்க .அவங்க தான் ஹீரோவும் , ஹீரொயினும் . ஹீரோயின் கொஞ்சம் மெண்ட்டல் . அவங்க ஏன் மென்ட்டல்  ஆனாங்க என்பதற்கு கதைல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அதாவது அதை ட்விஸ்ட்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல . முடியல ..... 


அதாகப்பட்டது மணி ரத்னம் சும்மா இருக்காம மாலை மலர் பேப்பர் நிறைய படிச்சிருக்காரு . அதுல ஒரு நியூஸ் . பாதிரியார் சர்ச்ல ஒரு பெண்ணை மேட்டர் முடிச்சுட்டார். அது அவர் மேல போடப்பட்ட  வீண் பழி . இந்த KNOT டை வெச்சு  ஒரு திரைக்கதை தேத்தலாம்னு பார்த்திருக்கார். இந்தப்படம் வாங்கப்போகும் அடி அவர் தேறவே 2 வருஷம் ஆகும் .



 படத்தோட முதல் ஹீரோ ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தான் . கலக்கிட்டாரு மனுஷன் . கடல் அலைகளை , வானம் , சூரியன் , நிலா , பீச் , துளசி க்ளியவேஜ் -னு அவர் ராஜாங்கம் தான் ஓரளவாவது தியேட்டர்ல உக்கார வைக்குது 


 அடுத்து இசைப்புயல் ஏ ஆர் ஆர் . நெஞ்சுக்குள்ளே, என்னை நீ எங்கே கூட்டிப்போறே? , ஏ லே கீச்சான்  , மகுடி  என 4 பாட்டு ஹிட்.  படமாக்கிய விதம் அழகு 


படத்தை டாமினேட் பண்ணுவது ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன், அவர் தான் தாதா . ஆயுத  பூஜை பட கெட்டப்ல அசத்திட்டார். அவரோட கேரக்டரைசேஷன் இயக்குநர் ஹரி பட காப்பி . 
 அர்விந்த்சாமி  நல்ல பாதிரியாரா வர்றார். சின்ன சின்ன டயலாக் குடுத்து அவரையும், நம்மையும் காப்பாத்திட்டார்  இயக்குநர் . 
 ஹீரோவா கார்த்திக்கின் வாரிசு கவுதம் கார்த்திக்  சைடுல இருந்து பார்த்தா அவர் முகச்சாயல் தெரியுது, நடிக்க முயற்சி பண்ணி இருக்கார். ஒரு முதல் படம் ஹீரோ எந்த அளவு   பண்ணுனா போதுமோ அந்த அளவு பண்ணி இருக்கார் . 



 ஹீரோயின் துளசி. அவர் நல்ல கட்டையோ இல்லையோ அவர் குரல் செம கட்டை. முடியல . தமிழர்கள் குரல் வளத்தைப்பார்க்க மாட்டாங்க சாரி கண்டுக்க மாட்டாங்க என்பது உண்மைதான் , அதுக்காக இப்படியா? ராதா முகச்சாயல் கார்த்திகாவை விட துளசிக்கு ஜாஸ்தி .புருவம் அக்காவை விட தங்கச்சிக்கு சின்னது . ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ). அவர் சிரிக்கும்போது ஒரு மாதிரி உதட்டை சுளிக்கிறார். உதட்டை மட்டும் கவனிச்சவங்க கடுப்பாகிடுவாங்க .என்னதான் 15 வயசுல அபார வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் பாப்பா சினி ஃபீல்டுல வளர்றது கஷ்டம் தான் . 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கதைக்கு சம்பந்தமே இல்லாம மீனவன் , கடல் , ஏ லே கீச்சான் பாட்டு எல்லாம்  ரெடி பண்ணி பில்டப் கொடுத்து நீர்ப்பறவையில் சொல்லாத , விடு பட்ட ஏதோ ஒரு மீனவர் பிரச்சனையை , ஈழத்தமிழர் பிரச்சனையை இவர் சொல்லப்போறார்னு எதிர்பார்ப்பை ஏற்படுத்துனது . 



2.  போஸ்டர் டிசைனை நல்ல படம் மாதிரியே உருவாக்குனது




3. விஸ்வரூபம்  வராத சைக்கிள் கேப்ல படம் ரிலீஸ் பண்ணி 7 நாள் ஓட்ட வெச்சது ( அதாவது 7 நாள் ஓடிடும் ) 



4. தான் உண்டு தன் பிஸ்னெஸ் உண்டுனு தேமேன்னு கிடந்த அர்விந்த் சாமியை நல்ல கேரக்டர்னு ஏமாத்தி ரீ எண்ட்ரி கொடுத்து நடிக்க வெச்சது 



5. படத்தை பிரமோட் பண்றதுக்காக தேவையே இல்லாம லிப் லாக் கிஸ் சீனை   வலுக்கட்டாயமா புகுத்துனது .



6 கிறிஸ்டியன்ஸ் ஏதாவது பிரச்சனை பண்ணட்டும் , உலக ஃபேமஸ் ஆகிடலாம்னு வேணும்னே அவங்களை வம்புக்கு இழுத்தது . ( ஆனா அவங்க செம டேலண்ட், யாரும் கண்டுக்கலை , ஏன்னா பிரச்சனை பண்ணுனா பர பரப்பா ஓடும் , இப்போ வந்த சுவடே தெரியாமல் போகும் ) 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சார், அலைபாயுதே , மவுன ராகம், கீதாஞ்சலி ( இதயத்தை திருடாதே)  நிஜமாவே உங்க கதை தானா?  ஏன்னா நீண்ட இடைவெளிக்குப்பின் நீங்க எடுக்கப்போகும் காதல் கதை பட்டாசைக்கிளப்பப்போகுதுன்னு நினைச்சா தியேட்டருக்கு வந்த ஆடியன்சை பாதிலயே கிளப்பி விடுதே? 



2. அர்விந்த் சாமி பாதிரியார் , படிச்சவர் . பண்பானவர் , ஆனா அவர் செருப்பு போட்டுட்டு 2 சீன்ல ஷூ போட்டுட்டு 4 சீன்ல தேவாலயத்துக்குள் போய்ட்டு வந்துட்டு இருக்கார், படிப்பறிவே இல்லாத பொடியன்க வெறும் கால்ல போறாங்க



3.  நீங்க 30 வருஷம் சினி ஃபீல்டுல இருந்தீங்க என்பதற்காக 30 வருடங்களுக்கு முன் வைக்க வேண்டிய ட்விஸ்ட்டை எல்லாம் இப்போ வெச்சா எப்டி? சார். 

ஒரு பொண்ணு நல்லவனை கை காட்டி இவன் என்னை ரேப்பிட்டான் ஐ மீன் கெடுத்துட்டான்  அப்டினு பொய்ப்புகார் குடுத்தா அந்தக்காலத்துல அய்யோ பாவம்னு ஜனங்க பார்ப்பாங்க . இப்போ பெஞ்ச் ரசிகன் கூட ஏம்பா அதான் ஏதோ டி என் ஏ டெஸ்ட் இருக்காமில்ல அதை பார்த்தா தெரிஞ்சுடுது அப்டினு சொல்றான் .
 திரைக்கதை அமைச்ச ஜாம்பவான்கள் 2  பேரு , அதுக்கு அசிஸ்டெண்ட்டா 18 பேரு ஆல் டிகிரி ஹோல்டர்ஸ் யாரும் கவனிக்கலை? இந்த லாஜிக் ஓட்டையை உங்க பேசும் படம் சுஹாசினி மேடம் கூட சொல்லலையோ?  ( ஒரு வேளை அவரோட  வசன வாய்ப்பை நீங்க  ரைட்டருக்கு குடுத்துட்டதால நல்லா வேணும் , எப்டியோ போகட்டும்னு விட்டுடாரோ?



4. கடல் ஓரம் வாழும் ஒரு பெண் ணின் முகம் மினுமினுப்பாக ஆயில் போட்ட மாதிரி  இருக்கே, அது எபப்டி?



5. அப்பாவை ஊரே அடிச்சுப்போட்டுட்டு இருக்குன்னு ஒருத்தன் வந்து சொன்னா அப்படியே  பதறி ஹீரோ ஓட வேண்டாமா? அவர் என்னமோ ரஞ்சிதா கிட்டே விசாரனை பண்ற மாதிரி யார் அடிச்சா? எதுக்கு? ஏன்? அப்டினு 10 நிமிஷம் டயலாக் பேசிட்டு இருக்காரு?  ( டயலாக் எழுத டோட்டலா படத்துக்கு இத்தனைன்னு இனி பேசிடுங்க , ஐ திங்க்  ஒரு பக்கத்துக்கு ரூ 10,000 அப்டினு காண்ட்ராக்ட் போட்டுட்டீங்க போல , அண்ணன்  புகுந்து விளையாடிட்டார் ) உங்க படத்துலயே அதிக வசனம் கொண்ட படம் இதுதான் 


6. ஒரு யூத் பையன் சைக்கிளைத்தூக்குவது ரொம்ப சாதாரண விஷயம் . இதுல ஹீரோ சைக்கிளைத்தூக்குவதை ஓவர் பில்டப் கொடுத்து க்ளோசப்ல பை செப்ஸ் எல்லாம் நரம்பு முறுக்கேறுவதைக்காட்டுவது ரொம்ப ஓவர். அவர் என்ன நமீதாவையா தூக்கறார்?




7.  நண்பன் படத்துல ஷங்கர் சார்  பிரசவக்காட்சி ஒண்ணை க்ளைமாக்ஸ்ல வெச்சார்னா கதைக்கு அது தேவையா இருந்தது , அப்டி வெச்சா படம் ஹிட் ஆகிடும்னு யாரோ சொன்னாங்கன்னு கேட்டு கதைக்கு சம்பந்தமே இல்லாம பிரசவ காட்சி . அதுக்கு கேமரா ஆங்கிள் உஷ் அப்பா முடியல . மலையாளப்படம் மாதிரி .. 




8. தேவாலயத்தில்  சின்னப்பையன் உச்சா போகும் காட்சி ,  வசனத்தில் மிக மலிவான  கெட்ட வார்த்தைகள் இதெல்லாம் உங்க தரத்தை குறைக்குது. ப்ளீஸ் டோண்ட் ஃபர்க்ட் யூ ஆர் ஏ செண்ட்டர் டைரக்டர் , இப்படி சி செண்ட்டர் மாதிரி இறங்கி  அடிக்கக்கூடாது . ( கேட்டா அந்த கேரக்டர் அப்படித்தான் பேசும்னு ஒரு நொணை நாட்டியம் ( சால்ஜாப்பு) பேசுவீங்க )

9. உங்களுக்கு காமெடி அவ்வளவா வராதுன்னு எல்லாருக்கும் தெரியும் , அதுக்காக இப்படியா? ரொம்ப ட்ரை ( DRY)


10. மன வளர்ச்சி குறைந்த துளசியை  மருத்துவப்பணி பார்க்க விடுவது எப்படி? சும்மா காயத்துக்கு மருந்து போடுவது என்றால் கூட பரவாயில்லை,பிரசவம் பார்க்கறார், விட்டா  பை பாஸ் ஆபரேஷன் பண்ணிட்வார் போல


11. அர்விந்தசாமி பாதிரியார் கேரக்டர்,  அவர் எப்படி டபால்னு அர்ஜூன் உடம்புல பாய்ஞ்ச புல்லட்டை ஆபரேஷன் பண்ணி எடுக்கறார்? உங்க படத்துல வர்ற கேரக்டர்கள் எல்லாருமே டாக்டர்களா?


12. ட்ரெய்லர்ல , போஸ்டர்ல , ஸ்டில்ஸ்ல துளசிக்கு  லிப் லாக் கிஸ் சீன் வெச்சீங்க , ஆனா படத்துல அது இல்லையே? சென்சார்லயே விட்ட சீனை எதுக்கு தூக்குனீங்க? இது சீட்டிங்க் இல்லையா? ஒரு வேளை  10 நாட்கள் கழிச்சு இணைக்கப்பட்ட லிப் கிஸ் காட்சியுடன்னு ஓட்ட வைக்க தந்திரமா?







மனம் கவர்ந்த வசனங்கள்


1. நம்மூருக்கு புது சாமியார் வந்துருகார்ல.. எம்ஜிஆரு போலவே இருக்கீரே .
2. சந்தோசமா இருக்க கூடாதுன்னு எந்த பைபிள்லயும் சொல்லல, ஏன் உம்முன்னு இருக்கீங்க?
3.  எனக்கு பைபிளும் தெரியும், பசியும் தெரியும்
 எனக்கு  பைபிள் மட்டும் தான் தெரியும் 
4.பாவத்துல நீ தலை குப்புற விழனும், அதை நான் பார்க்கனும் 
5. பாவ மன்னிப்புக்கு 10 ரூபா, ஜெபத்துக்கு 15 ரூபா , ஆனா லேடீஸ் க்கு எல்லாம் ஃபிரீ ஹி ஹி 
6. திஸ் ஈஸ் சாமியார், சாமியார் ஈஸ் குட் 
 யோவ் அது பாதிரியார்யா 
7. எல்லாருக்கும் அம்மா சொல்லித்தான் அப்பாவைத்தெரியும்.
8.  அஞ்சு ரூபா குடுத்து வாரியா? ( வர்றியா? )னு கூப்பிட்டவங்க மத்தில என் கூட வாழ்றியா? வா! கட்டிக்கறேன்ன்னு சொல்ற ஆளை இப்போத்த்தான் பார்க்கறேன்  


9. மனசுக்குள்ளே சூரியன் உதிப்பது போல இருக்கு  ( நீ என்ன டி எம் கேவா?/ )



10. பாதிரியார் யாரோ ஒரு பொண்ணுகூட ஓடுவது மாதிரி தெரியுதே?


 இன்னும் 2 கிளாஸ் சரக்கு அடிச்சுப்பாரும் . 2 பேரோட ஓடிப்போற மாதிரி தெரியும் 



11. சுடறதா இருந்தா எப்பவோ  சுட்டிருப்பே , இப்படி பேசிட்டு இருக்க மாட்டே 



12. நிம்மதியா இருக்கறதை விட உஷாரா  இருக்கறதை நான் விரும்பறேன்


13.  அவ ஏன் அப்படி மன வளர்ச்சி கம்மியா இருக்கான்னா ஆழ்மனசு செய்யும் தந்திரம் , அவ  வளர்றதை விரும்பலை , எதையோ பார்த்து பயந்திருக்கலாம் 


14,.  இப்போதான் உன்னைப்பத்தி நினைச்சேன் 


 என்ன?னு ?



 தெரில , மறந்துட்டேன்



15.  நீ என்னை கை விட்டுட்டியா? 


 நோ , கை நழுவிடுச்சு 


16. நன்மைக்கு இந்த உலகத்துல இடம் இல்லை , எனக்கே தெரியாம என் வாழ்க்கைல ஒரு நன்மை நடந்தா அதை அழிச்சுடுவேன் . அது என் மகளா இருந்தாலும் சரி



17. மனுஷனுக்கு பாவம் செய்யச்சொல்லித்தரத்தேவை இல்லை , நடக்கற மாதிரி அது தானா வந்துடும் 


18.  நான் நிறைய பாவம் பண்ணி இருக்கேன். பாவம்னா என்னன்னு தெரியுமா உனக்கு? 


 ம்ஹூம் 


-------

 சரி சரி , இனி பண்ணாதே, எல்லாம் சரியாப்போச்சு 


( ஆடியன்ஸ் - பாவம் எது தெரியுமா? இந்தப்படத்துக்கு நாங்க வந்தது )










எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 40 (  ஆக்சுவலா 37 தான் தரனும் , ஆனா விகடன்ல எப்பவும் ஷங்கர், கமல், மணி 3 பேருக்கும் ஷாஃப்ட் கார்னர் உண்டு  

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார் 

 ரேட்டிங்க் -  2.5 / 5


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் 



 சி பி கமெண்ட் -  மணிரத்னம் சாரின் தீவுர ரசிகர்கள் இடைவேளை வரை பார்த்துட்டு ஓடிவிடவும் , ஏ ஆர் ஆர் ரசிகர்கள் எஃப் எம்மில் பாட்டுக்கேட்டுக்கொள்ளவும் ,பொது மக்கள்  டி வி ல எப்போ போடுவாங்கன்னு வெயிட் பண்ணவும். தமிழ்ப்புத்தாண்டுக்கு போட்டுடுவாங்க  .மணிரத்னத்தின் சாதனை அவரோட அட்டர் ஃபிளாப்பான ராவணனை கடல் தாண்டிடுச்சு

diSki -

டேவிட் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/02/blog-post_5252.html










Thursday, November 29, 2012

ரஜினி - மணிரத்னம் இணையும் படம் - காமெடி கலாட்டா



http://www.cinesouth.com/images/new/pwed-4.jpg



ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது. இந்த படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.



ரஜினி உடல் நலம் குணமான பிறகு 'கோச்சடையான்' படத்தில் நடிக்க துவங்கினார். இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கினார். படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' ரீ ரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீசாக உள்ளது.



இதையடுத்து புதுப்படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மணிரத்னத்தை அவர் தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



கதை விவாதமும் துவங்கி விட்டதாம். மணிரத்னம் ஏற்கனவே ரஜினியை வைத்து தளபதி படத்தை டைரக்டு செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைகின்றனர். கடல் படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் முயற்சியில் மணிரத்னம் தீவிரமாக உள்ளார்.



இப்பணிகளை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்க வருகிறார். தயாரிப்பாளர் மற்றும் இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. 


நன்றி - மாலை மலர் 

http://www.rajinilive.com/wp-content/uploads/2008/12/rajini-kamal.jpg

1. மணிரத்னம் - நாம 2 பேரும் ஒரு படம் பண்றோம். 


ரஜினி - புராணத்துல இருந்து கதை உருவாதீங்க.சுகாசினி வசனம் வேணாம் 



2. ரஜினி - தளபதி ,நாயகன் மாதிரி தாதா கதை வேணாம் . 



மணிரத்னம் - தாத்தா கதை ஓக்கே?.ஐஸ்வர்யாராய் குழந்தை கால்ஷீட் ரெடி 



3. ரஜினி - என் பொண்ணை அசிஸ்டெண்ட்டைரக்டரா சேர்த்துக்குங்க 



. மணிரத்னம் - அது எனக்கு ஓக்கே.என் சம்சாரம் ஒத்துக்கனுமே? 


4.  ரஜினி - கடல் ஹிட் ஆகட்டும்.நாம இணைவது பற்றி பேசுவோம். 



மணிரத்னம் - அதே மாதிரி கோச்சடையான் ஹிட் ஆகட்டும்னு சொன்னா ? 




5. மணி - மகாபாரதத்துல இருந்து ஒரு கதை.நீங்க தருமர்.நயன் தாரா தான் பாஞ்சாலி.



 ரஜினி - அப்போ சிம்பு தான் வில்லனா? என்ன கொடுமை மணி இது? 




6. மணிரத்னம் ஹி ஹி RT : ungala madhiri masala padam pakravangaluku maniratnamnu solla kuda thagudhi illa.. 





7. இங்கேயும் சைபர்? கி கி RT : karthik.. These guys are .. Just leave them





8. சுஹாசினி - ஆச்சரியம்! உங்களுக்கு ட்விட்டர்ல கூடரசிகர்கள் இருக்காங்களா? 



 மணி - பேக் ஐடிகள் தானா உருவாகாது.நாமதான் உருவாக்கனும் 







Rajini’s next with Mani Ratnam?
For most Kollywood directors, to have ‘Rajinikanth’ on the CV is to have arrived. No two ways about it. But of late, given his precarious health condition, the Superstar’s acting career has had to take a back seat. His choice of films has been a lot more constrained, with Kochadaiyaan being the only current project.
Now comes the news that there is the possibility of Mr. Robot himself offering his services to a select director. DC has learnt from sources in ace filmmaker Mani Ratnam’s office that the Superstar has initiated talks with Mani on a new project.



Mani Ratnam, who is currently in the process of releasing the audio for his upcoming magnum opus, Kadal, did one film, Thalapathi, with Rajinikanth two decades ago, which was set in a contemporary milieu at the time of its release and was a critical and commercial success.



This new development comes as the most pleasant surprise for fans that have had to accustom themselves to Rajini’s tendency to decline offers, considerably reducing his output over the years.
To add a twist in the tale, only a few days ago, Ulaganayagan Kamal Haasan, whose cult classic, Nayagan, with Mani Ratnam completed 25 years, expressed an inclination to collaborate with the latter once again. 




This could very well turn out to be quite a few interesting months ahead for Mani!



நன்றி - டெக்கான் கிரானிக்கல்


Saturday, November 17, 2012

சுஹாசினி என்னை நிராகரித்தது ஏன்? - மணிரத்னம் பேட்டி

http://www.cinesouth.com/images/new/pwed-4.jpg

குழந்தைகளும் வயதானவர்களும் இந்தியாவைப் பிரதிபலிக்கிறார்கள்!"


ஆர்.சரண்
ணிரத்னம் பேசுவதே ஆச்சர்யம். அதுவும் மீடியா ஆட்களுடன் பேசு வது அபூர்வம். அப்படிப்பட்டவர் ஒரு பேட்டிக்காக ஒரு செய்தியாள ரிடம் 100 மணி நேரம் பேசியிருக் கிறார் என்றால், நம்ப முடிகிறதா?



'தி இந்து’ நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன், தேசிய விருதுபெற்ற திரை விமர்சகர். சினிமா, இசை, ஓவியம், புத்தகம், பயணம், நகைச்சுவை எனப் பல தளங்களில் எழுதுபவர். பென்குவின் பதிப்பகத்துக்காக இவர் மணிரத்னத்தை எடுத்திருக்கும் நீண்ட பேட்டிதான் 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வந்திருக்கிறது.



''நான் 50 தடவை அவரைச் சந்தித்து இருப்பேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு சூழலில் பேசுவோம். எவ்வளவோ முறை அவரை வெறுப்பேற்றும்விதமான கேள்விகளைக் கேட்டு இருக்கிறேன். ஆனால், அவரிடம் சற்றும் முகச்சுளிப்போ, அசௌகர்யமான உடல்மொழியோ வெளிப்பட்டது இல்லை. விமர்சகரை மதிக்கத் தெரிந்த உன்னதமான கலைஞன் மணிரத்னம்!'' என்கிறார் பரத்வாஜ் ரங்கன். புத்தகத்துக்கு அணிந்துரை ஏ.ஆர்.ரஹ்மான். சொல்லவும் வேண்டுமா? விற்பனையில் பரபரப் பைக் கிளப்பி இருக்கிறது 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’. புத்தகத்தில் இருந்து...


http://www.our-kerala.com/newgallery/imageMaker.php?size=530x500&image=images/photos/images/suhasini%20with%20maniratnam2.jpg

''பார்த்த முதல் படம்...''



'' 'உத்தமபுத்திரன்’ என்று நினைவு. நான் கலாஷேத்ரா கேம்பஸில் இருக்கும் பெசன்ட் தியாசெபிகல் ஸ்கூல் ஹாஸ்டலில் தங்கிப் படித்த காலத்தில்தான் நிறையப் படங்கள் பார்த்தேன். அங்கு பக்கத்தில் டூரிங் டாக்கீஸ் ஒன்று இருந்தது. யாருக்கும் தெரியாமல் நண்பர்களோடு லுங்கி, பனியனோடு போய் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன். அங்கு வார்டனும் யாருக்கும் தெரியாமல் வருவார். சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் பார்த்து பம்மிக்கொள்வோம்!''




''முதல் பட அனுபவம்...''



''மும்பை 'பஜாஜ் இன்ஸ்டிட்யூட்’ டில் எம்.பி.ஏ. முடித்த பின், அங்கு ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் பணியாற்றினேன். அப்போது எல்லாம் இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இருந்தது இல்லை. ஆனால், நண்பர்கள் பி.ஆர்.பந்துலுவின் மகன் ரவிஷங்கர், வீணை பாலசந்தரின் மகன் ராமன் ஆகியோருடனான சினிமா தொடர்பான விவாதங்களும் திரைக்கதை அமைக்கும் பணி களும்தான் என்னை சினிமா பக்கம் ஈர்த்தன.




ஆனால், அதுவரை நான் சினிமாபற்றித் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் வெறும் ஆங்கிலப் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே. இந்தச் சூழலில்தான் பாரதிராஜாவின் '16 வயதினிலே’, மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்’ இரண்டும் என்னுள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தின.



சந்தான பாரதி, பி.வாசு, பி.சி.ஸ்ரீராம் போன்ற நண்பர்களின் அறிமுகம் கிடைத்தபோது, 'உட்லண்ட்ஸ் டிரைவ் இன்’னில்தான் எப்போதும் கிடப்பேன். நாள் முழுக்கக் காபி குடித்துக்கொண்டு சினிமாபற்றிப் பேசுவோம். கிட்டி எம்.பி.ஏ. படிக்கும்போது எனக்கு சீனியர். அவர் அப்போது சோழா ஷெரட்டன் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.



 'பல்லவி அனுபல்லவி’ கன்னடப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை முடித்த பின், கமலிடம் காட்டி ஓ.கே. வாங்குவதற் காக எப்போதும் கிட்டியுடன் கமல் வரும் நேரத்தில் அங்கு இருப்பேன். 'பல்லவி அனுபல்லவி’ படத்தில் அனில் கபூர் நடித்த ரோலில், அப்போது கமலை நடிக்கவைக்க வேண்டும் என்பது என் கனவு. ஆனால், கமலுக்கு நான் ஒரு கதை சொன்னால், அவர் எனக்கு ஐந்து கதைகள் சொன்னார்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_-_Film_Maker_Mani_Ratnam_and_his_wife_Suhasini.jpg/220px-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_-_Film_Maker_Mani_Ratnam_and_his_wife_Suhasini.jpg

 இப்படியே போனது. சாருஹாசன் அறிமுகமானார். நான் யாரிடமாவது உதவி இயக்குநராக சினிமா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். என்னுடைய அப்போதைய ஒரே சாய்ஸ்... மகேந்திரன். சாருஹாசனே அப்போது மகேந்திரனிடம் என்னை அழைத்துச் சென்றார். ஆனால், மகேந்திரன் என்னைக் கவனிக்கவே இல்லை. அப்போது வருத்தமாக இருந்தது.



ஆனால், சில வருடங்களில் இயக்குநரான பிறகு இந்தச் சம்பவத்தை அவரிடம் சொன்னபோது சிரித்துக்கொண்டே, 'சந்தோஷப்படுங்க... யாருடைய துணையும் இல்லாமல் நீங்கள் பெரிய ஆளாக வர வேண்டும்னு இருந்திருக்கு. அன்னைக்கு நான் கவனிக்காததுகூட நல்லதுக் குத்தான் பார்த்தீங்களா!’ என்றார்.



என் அண்ணன் ஜீ.வி. மூலம் 'கலாகேந்திரா’வின் இயக்குநரான துரைக்கு ஸ்க்ரிப்ட்டை அனுப்பிவைத்தேன். அது பாலசந்தரின் கைகளுக்குக் கடைசி வரை போய்ச் சேரவில்லை என்பது எனக்கு அப்போது தெரியாது. பாரதிராஜா என் அடுத்த டார்கெட். அவரை நேரில் போய் சந்தித்தேன். பெர்ஃபெக்ட் ஸ்பைரல் பைண்டில் ஆங்கில ஸ்க்ரிப்ட்டோடு போய் நின்றேன். 'நிழல்கள்’ படத்தில் பிஸியாக இருப்பதாகவும் பிறகு சந்திக்கலாம் என்றும் பாஸிட்டிவாகப் பேசி அனுப்பிவைத்தார்.



 இயக்குநர் ஆன பிறகுதான் தெரிந்தது என்னு டைய குழப்பமான ஆங்கில நடை அவருக்கு அன்று புரியவில்லை என்பது. பி.சி.ஸ்ரீராமோடு லாம்ப் ரெட்டா ஸ்கூட்டரில் ஒவ்வொரு தயாரிப்பாளர் வீடாக ஏறி இறங்கி இருக்கிறேன். கடைசியில் கிருஷ்ணமூர்த்தி என்ற தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு, அப்போதைய ஹிட் பெர்சனாலிட்டிகளான ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவையும் இளையராஜாவையும் சந்தித்து கதையைச் சொன்னேன்.



 அதன் பிறகு, அந்தப் படத்தின் ஹீரோயின் கேரக்டருக்காக சுஹாசினியிடம் கேட்டேன். 'நோ’ சொல்லிவிட்டார். (சுஹாசினி என் இரண்டு படங்களை அப்போது நிராகரித்தார்). அப்புறம் அனில் கபூர், லட்சுமி, எடிட்டர் லெனின் வந்தது எல்லாம் பெரிய கதை. படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும், சிறந்த திரைக்கதைக்கான மாநில விருதும், கணவரைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையே ஆன உணர்வுகளைப் பேசியதால், தைரியமான முயற்சி என்று பாராட்டுக்களையும் குவித்தது!''



''முதல் தமிழ்ப் படம்...''



''என் முதல் தமிழ்ப் படம் 'பகல் நிலவு’. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வசனம் எழுதினேன். பேப்பரில் இருந்து காட்சிகளாக உருவம் கொடுக்கும்போது ஆங்கிலத்தில் இருப்பது வேறு மாதிரி இருந்தது. அது பெரிய தவறு என்பதைப் புரிந்துகொண்டேன். தமிழில் முழு ஸ்க்ரிப்ட்டையும் எழுதினேன். 'மெயின் ஸ்ட்ரீம் கமர்ஷியல் படம் இது’ என்று நிர்ணயித்துக்கொண்டு, நானும் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனும் இணைந்து வேலை பார்த்தோம். சத்யராஜ் - முரளி - இளையராஜா காம்பினேஷனில் அண்ணனே இந்தப் படத்தைத் தயாரித்ததால், நான் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையான சினிமா கற்றுக்கொண்டே இயக்கிய படம்!''




''முதல் தோல்வி...''



''தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன் படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப் படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.



நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின் கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’ படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு காப்பாற்றி யது. குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது 'பியாஷா’ குருதத் துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான் 'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது. மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!''



''முதல் சிறுகதை...''



''திவ்யா என்ற ஒரு சிறுகதையை, எனக்குத் தெரிந்த தமிழில் பள்ளி நாட்களில் எழுதி இருந்தேன். மோசமான பிராமணத் தமிழில் இருக்கும் அது. என் மனைவி அதைப் படிக்கும்போது எல்லாம் சிரிப்பாள். உடையில் கட்டுப்பாடு, ஆண்களோடு பேசக் கட்டுப்பாடு எனக் கட்டுப்பாடுகளால் உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண்ணை, திடீரென ஒரு நாளில் ஒரு மனிதனுடன் தனி அறைக்குள் தள்ளிவிட்டு வாழ்ந்துகொள் என்று சொல்வது அபத்தம் இல்லையா என அந்தக் கதை பேசும். முதலிரவை மட்டுமே மையமாக வைத்து அந்தக் கதையை எழுதி இருந்தேன். முதலிரவைத் தாண்டிய என் பார்வைதான் 'மௌன ராகம்’. 'கம்பளிப் பூச்சி மாதிரி இருக்கு’ என்ற டயலாக் அந்த முதல் சிறுகதையில் இருந்து வந்ததுதான்!''



''முதல் மெகா ஹிட்...''



''மும்பையில் எம்.பி.ஏ., படித்தபோது, மும்பை நிழல் உலகில் மிக உச்சத்தில் இருந்தார் வரதராஜ முதலியார். மாதுங்கா பகுதி மக்கள் அவரைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள்.



தமிழ்நாட்டில் இருந்து போன ஒருவ ரால் எப்படி வேற்று மொழி நகரமான மும்பையில் கொடி கட்டி ஆள முடிகிறது என ஆச்சர்யப்பட்டேன். கமலிடம் திருப்பங்கள் நிறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையைப் படம் எடுக்கலாம் என்று சொன்னதும், உடனே சம்மதித் தார். கமல் இந்தப் படத்தில் ஓர் இயக்கு நரின் ஆளுமையோடு என்னை வழி நடத்தினார். சக நடிகர்களுக்கு மேக்கப் போட்டுவிடுவதில் ஆரம்பித்து, ஹேர் ஸ்டைல் வரை அந்தப் படத்தில் கமல் எனக்கு அறிவிக்கப்படாத உதவி இயக்குநராகத்தான் இருந்தார்.



ஒரு காட்சியை விளக்கும்போதே ஏழு விதமான யோசனைகளோடு அந்தக் காட்சிக்குப் பன்முகத்தன்மை கொடுத்து வியக்கவைப்பார். ஒரு நடிகனால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற நடிப்புகுறித்த என் எல்லைகளை விரிவாக்கியதே கமல்தான். ஓர் இயக்குநர் அவரிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம், நிறையக் கவன மாகவும் இருக்க வேண்டும்!''  



''முதலும் கடைசியுமான சென்டிமென்ட்ஸ்...''



''என் படங்களில் எப்படியும் அதிக அளவில் குழந்தைகளையும் வயதானவர் களையும் பயன்படுத்துவேன். அது சினிமாவுக்குள் இந்தியாவைப் பிரதிபலிக்கும் அம்சம் என்பதால்.



அதுபோலவே ரயில் சம்பந்தப்பட்ட காட்சிகளை எப்படியும் வைத்துவிட மெனக்கெடுவேன். ஃபேர்வெல் உணர் வுக்கு ரயிலைவிடச் சிறந்த கருவி வேறு எதுவும் இருக்க முடியாது!''


நன்றி - விகடன்



http://www.deccanherald.com/images/editor_images/June%202010/June%2017%202010/mani-ratnam-rai-ap.jpg

Sunday, October 28, 2012

நாயகன் - கமல் செய்த டார்ச்சர்கள் - முக்தா வி சீனிவாசன் அதிர்ச்சி பேட்டி @ த ஹிந்து

http://www.8pmnews.com/wp-content/uploads/2010/06/kamal-sarika.jpg 

Living in past glory 


28 October 2012 , By Muktha V. Srinivasan 

 

Kamal Haasan and Mani Ratnam during the shooting.
Muktha V. Srinivasan, the producer of Nayakan, responds to Kamal Haasan’s article ‘Of course, Velu Nayakan doesn’t dance’ (Magazine, October 21).
Initially I wanted to make a movie inspired by the story of The Godfather. I had narrated the story to my friend Sivaji Ganesan, who agreed to act in the film. I also requested Kamal Haasan and Amala to act in this movie. 




I paid an advance and confirmed their dates. This was reported in the press. However Ananthu, then an associate of Kamal Haasan, felt that it would be a Sivaji- focused film and not a Kamal Haasan movie. The project was dropped. Kamal later told me about Mani Ratnam. Mani narrated a story based on the life of a don from Bombay.




 He also had written the screenplay, which was very good. The scenes and dialogues were realistic and I liked it. Mani told us that he would complete the shooting in 60 days and he would need 70 rolls of film. The salary for Kamal Haasan was Rs. 17, 50,000. And the budget for the film was estimated at Rs. 60 lakh. Yes, it was a big budget. However it became “over-budget”, with expenses crossing Rs. 1 crore – almost twice the original estimate. 




Shooting commenced in November 1986 and the first schedule lasted 10 days. All the scenes that were shot were scrapped since Kamal Haasan did not like them. The screenplay had to be rewritten. Shooting was postponed. The new screenplay had lot of violence and I was shocked as it was a copy of The Godfather and Once Upon a Time in America


 I told Mani that a good writer and director should get inspiration from life, and not copy from other films. I objected to the story as it would not attract a family audience. So I created a heroine character (the wife of Kamal Haasan) and introduced Saranya. Had Mani not listened to Kamal and gone with the original script, it would have been an outstanding movie.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0eiMsW_FS0o8XLyJOo1f6NOJefobw3nvkMGeFYPGlvgs3HevqffUEL_DKOdK8EzVdegpLMu252YQpLysNfFrdyCf5BRQvYOkNugtuNsVDuhWKnRodwNM9OWFE16w9UtFK5w9oe4PTtXs2/s1600/kamal-hassan-biography.jpg

Kamal Haasan wanted the film to be shot at Dharavi in Bombay, which was the largest and most congested slum in Asia. I did not want to shoot the entire movie in Bombay – but not because I was “tightfisted,” as Kamal claims. I was always interested in shooting in different locations. 



Though it was not very easy to shoot outside studios, those days, I had shot in Kashmir, Nepal, Shimla and the Andamans. But when I visited Dharavi, I found that it was not possible to shoot there, since it was thickly populated. Also, I was concerned about the security of the crew. 



Using photographs of the slum, art director Thota Tharani created the set at Venus studios, Chennai, which turned out three times more expensive than it would have been had we shot at Dharavi. We had to hire thousands of junior artists to create that atmosphere. The remaining portion was shot at Bombay.



The movie was completed and released in October 1987. After 25 years Kamal Haasan has suddenly chosen to talk about it, distorting the facts for reasons best known to him, and undermining the contributions made by everyone.


When Mani Ratnam narrated the story, he told me that he wanted to make a realistic film with real characters, which meant no makeup and the use of Tamil attire like the dhoti and lungi. He was not interested in bringing in either a Hollywood stuntman or a makeup man. I felt that Velu Naicker did not need a “Hollywood” makeup man and costumer. In fact it was Kamal Haasan’s idea to bring such people in. Our company had a makeup man and costumers who were all paid by me. To state that there was no budget for makeup and costumes is absurd. 



As far as using international artist Jim Allen, he was charging a huge amount (almost Rs. 2,00,000 per day), that too in dollars, which was not feasible in those days. I could not concede to this request, since it meant engaging in illegal and unethical hawala transactions. Moreover, the stunts that Mr. Allen suggested were already in vogue.



 Mani would have come up with a better scene had Kamal not insisted on copying from The Godfather. All the props which were used in the movie were paid for by me. As far as ittar is concerned, Kamal Haasan never asked me for it. Had I known, I would have bought it myself, since it is available even in Pondy bazaar.




Before going into a shooting schedule, I had always ensured that the all the film rolls needed for the schedule were made available so that the shooting could go on without interruption. Mani asked for 15 rolls of film for 10 days of shooting. On the evening of the seventh day, Mani’s assistant director Govindarajan asked for an extra roll, since they had exposed all the 15 rolls. Since the Kodak company opened only in the morning, Kamal Haasan gave the film rolls that he had purchased for his earlier movie. I paid him for these rolls. However, P.C. Sreeram did not use it, as it was old stock.




http://images.news.pluzmedia.in/slide/big_Cinema_is_everything_for_me__Kamal_Haasans_exwife-be01085a0f3471c99423d1ef2ea933b0.jpg

After the completion of shooting Kamal Haasan and Mani Ratnam had a press meet, where they made a statement that the movie was based on Varadaraja Mudaliar’s life. After this, the censor board at Chennai refused to permit the release of the movie, since it was based on a living person.




 I appealed to the revising committee at Bombay. They said that they would permit us to release the film if I got a letter stating that it was not based on Varadaraja Mudaliar’s life. I asked Kamal Haasan to help me. He simply refused, stating that he was busy shooting another movie. Hence, with great difficulty, I contacted Mathiolli Shanmugam, a writer and good friend of mine, and through him met Varadaraja Mudaliar, who gave us a letter. Only then did the Censor appellate board at Bombay permit us to release the film. To call the movie his “baby” and not be bothered about its release is a reflection on Kamal Haasan’s ‘sincerity’.




A good artist is one who gets inspired from a movie. The scene where Kamal Haasan cries on seeing the dead body of his son is copied from The Godfather, and he imitates Marlon Brando. This scene was booed by the audience, because it never fit the character and lacked nativity.



 When the film was completed and the first print was shown to me, the film ran for 3 hours. Both Kamal and Mani wanted me to release the film as it was, whereas I knew that the audience would never sit through the movie. I told the editor Lenin to edit several unnecessary scenes. This gave life to the movie, along with the theme music Thenpandi seemayilae. Had it not been for Ilayaraja and Lenin, the movie would have flopped.

http://subbudu.com/images/velu_naiker.jpg
Hi-speed negative film was introduced in India in 1985-86, and all cinematographers began to shoot in low light. Even our movie Kodai Mazhai, which came out before Nayakan, was shot in low light. When we screened the movie in theatres, the projector operators expressed reservations since they had to use extra carbon, which was very expensive. 




That was the reason I expressed my apprehension. I consulted colourist Narayanan of Gemini Lab who assured me that he would increase the brightness while printing and we had no problem while screening the film in theatres. They are the unsung heroes who were part of the success story.


To generate and invest Rs. 1 crore in a Tamil movie in 1986 and market and release it without any problem was a huge task. As a senior producer, I was always interested in seeing that the distributors who bought the movie made profits. Making a movie is a team effort. The producer takes the entire risk and his contribution cannot be undermined. 




G. Venkateswaran bought negative rights only after I sold all the areas. But he insisted that he would put his name as producer and receive the awards the movie got. I had to agree since I had suffered a loss even after selling all the areas. But the greatest loss was when my brother died and after that I chose not to talk about the movie. I do not know why Kamal Haasan has chosen to talk about the film now. Calling a filmmaker as “old school” is, I think, outdated.


I have always considered film as an art. I have been a producer and director for more than 60 years. Without passion for cinema, I could not have made more than 40 films with great stars like Sivaji Ganesan, Gemini Ganesan, Rajinikanth and Jayalalithaa. I have a reputation for producing good movies and believe that audience deserves quality films. But it is difficult to conceive, produce and release big budget movies. 




Shooting small budget films with Digital Cameras is easy. Filmmaking is also a business and everybody works to make money. Kamal Haasan did not act in my movie for free. He was paid a huge sum, amounting to almost 20 per cent of the original budget. Expecting Rs. 5 lakh as profit is not avaricious. Nayakan was purely a commercial film, and even Kamal Haasan knew this. The tragedy is that I did not make any profit.




Had Kamal Haasan allowed Mani to make the movie originally conceived by him, it would have been his best movie. As for the reference to Mani Ratnam’s deteriorating health, he was very healthy when he completed Nayakan. It was only when he became a producer that his health started deteriorating, which is not unusual.


I have nothing against Kamal Haasan taking credit for the success of Nayakan. But not at my cost, please.



நன்றி - த ஹிந்து 

http://madaboutmoviez.com/wp-content/uploads/2012/03/nayagan.jpeg

Tuesday, September 11, 2012

மவுன ராகம் - சினிமா விமர்சனம்

http://img.filmlinks4u.net/2010/06/Mouna-Ragam-1986-Telugu-Movie-Watch-Online.jpg

சர்வதேச கமர்ஷியல் சினிமா, சென்சேஷனல் மேட்டர், இதிகாச உல்டா  எனும் நிர்ப்பந்தங்களுக்கு சிக்குவதற்குமுன்  மணிரத்னம் எடுத்த மணியான படம். பிரிந்து வாழும் தம்பதியர் பார்க்க வேண்டிய மென்மையான, மேன்மையான இசை பயணிக்கும் படம் என பல பிளஸ்கள் உண்டு. 


படத்தோட  முக்கியமான பிளஸ் -1.தனக்கு வரப்போகும் கணவர் மவுனராகம் மோகன் மாதிரி  ஜெண்டில்மேனா, அண்டர்ஸ்டேண்டிங்க் பர்சனா,மற்றவர் உணர்வுக்கு மதிப்புத்தருபவரா இருக்கனும்னு எல்லா பொண்ணுங்களையும் நினைக்க வைக்கும். 2. தனக்கு வந்து சேர்ந்த மனைவி நல்ல வேளை ரேவதி மாதிரி இல்லை என  கணவர்களை மகிழ வைக்கும் ( ஏன்னா தான் எத்தனை பேரை லவ் பண்ணி இருந்தாலும் தனக்கு வரப்போகும் மனைவி இதுக்கு முன் யாரையும் லவ் பண்ணி இருக்கக்கூடாது என்ற உயர்ந்த கொள்கையுடன் வாழ்பவர்கள் தான் ஆண்கள் ( பெரும்பாலும்)


படத்தோட கதை ஹீரோயின் பார்வையில் செல்லுது. ஹீரோயின் துடுக்கான, குறும்புத்தனம் மிக்க பெண். தன்னை பெண் பார்க்க மாப்ளை வீட்ல இருந்து வந்திருக்காங்கன்னு தெரிஞ்சும்  வேணும்னே வீட்டுக்கு லேட்டா வர்ற அளவு லொள் கேரக்டர். 

 மிக மென்மையான குணம் உள்ள ஹீரோ மேரேஜ்க்கு ஓக்கே சொல்றார்.ஹீரோயினுக்கு மேரேஜ்ல இஷ்டம் இல்லை. ஆனா நல்ல வரன் தட்டிப்போகக்கூடாதுங்கற கவலைல ஹீரோயின் அப்பா வாக்குவாதத்தில் ஹார்ட் அட்டாக்.. அவருக்காக ஹீரோயின் மேரேஜ்க்கு ஓக்கே சொல்ல மேரேஜ் நடக்குது.. 


 மேரேஜ் மட்டும் தான் நடக்குது. மத்த மேட்டர் எதுவும் நடக்கலை. ஹீரோயினுக்கு ஆல்ரெடி ஒரு லவ் மேட்டர் இருந்ததும், காதல் கை கூடாம போனதும் ஹீரோவுக்கு தெரிய வருது.ஹீரோயின் டைவர்ஸ் கேட்கறா. ஆனா சட்டம் மினிமம் 1 வருஷம் கழிச்சுத்தான் டைவர்ஸ்னு சொல்லுது.



http://i.ytimg.com/vi/ibiiglNYR44/0.jpg


 அந்த 1 வருஷத்துல என்ன நடக்குது? ஒரே வீட்டில் குடி இருந்தாலும் அவங்க லவ்விங்க் டுகெதரா அப்பப்ப இருந்தாலும் லிவ்விங்க் டுகெதரா இல்லை.. என்ன ஆகுது என்பதே க்ளைமாக்ஸ்.. 


படத்தோட முதல் ஹீரோ சந்தேகமே இல்லாம இளையராஜா தான்.. 5 சூப்பர்ஹிட் பாடல்கள்.. ஆல் மெலோடீஸ்.. அது போக பின்னணி இசைல புகுந்து விளையாடி இருக்கார்.. படத்தோட திரைக்கதையில் கேரக்டர்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இசை பாதி வேலையை செஞ்சுடுது. 


படத்தின் 2 வது ஹீரோ திரைக்கதை மற்றும் இயக்கம். நேர்த்தியா திரைக்கதை எழுதி பள்ளிபாளையம் காவேரி ஆறு மாதிரி சலனம் இல்லாம அமைதியா பயணிக்கும் கதை.. மார்வலஸ் இயக்கம். 


3 வது ஹீரோ ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம். கேமரா ஆங்கிள் , லைட்டிங்க் எல்லாம் பர்ஃபெக்ட். மோகனை மிக அழகாக காட்டிய படம் மவுன ராகம் ( மிக கோரமாக காட்டியது உருவம் )


மதர்லேண்ட் பிக்சர்சின் ராசியான ஹீரோவாக அறியப்பட்ட மோகன் இதில் கண்ணியமான கணவராக  செமயா நடிச்சிருக்கார். இவர் பாடி லேங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் ( சுரேந்தர் ) எல்லாம் கன கச்சிதம்


ஹீரோயின் ரேவதி துடுக்குத்தனம், அமைதி , அழிச்சியாட்டியம் , பக்குவம் என நவரசங்களையும் காட்டி அசத்தும் கேரக்டர்..  சின்ன சின்ன முக பாவனைகளில் சிக்சர் அடிக்கிறார்.. 


 மொத்தம் 146 நிமிடங்கள் ( கிட்டத்தட்ட  2 1/2 மணி நேரம்) ஓடும் படத்தில் 24 நிமிடங்களே வந்தாலும் கார்த்திக் இளமைத்துள்ளலுடன் நடிச்சிருக்கார். பின்னாளில் வந்த பல காதல் படங்களின் ஹீரோக்களுக்கு இந்த கேரக்டர் ஒரு முன்மாதிரியா இருந்தது என்றால் அது மிகை அல்ல..




http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/9e/Mouna_Raagam2.jpg/220px-Mouna_Raagam2.jpg
இயக்குநர்  பாராட்டு பெறும்  இடங்கள்



1. கார்த்திக் - ரேவதி காதல் எபிசோடில் டூயட் காட்சியே வைக்காதது... ஏன்னா கதை ஒரு தம்பதியை பற்றியது என்பதால் ஆடியன்சின் கவனம் திசை திரும்பி விடக்கூடாது என்பதில் கவனமா டூயட் சீனை சேர்க்காம விட்டிருக்கார்.. வெல்டன்.. 


2. கார்த்திக்கிடம் கோபத்தில் ரேவதி “ ஊரைக்கூட்டி மைக் போட்டு சொல்லு, அப்போ வேணா உன் காதலை ஏத்துக்கறேன்” என்றதும்  உடனே காலேஜ் பிரின்ஸ் ரூமில் இருந்து மைக்கில் கார்த்திக் காதலை அறிவிப்பது செம கலாட்டா சீன். ( இந்த சீன் பின் கோபுர வாசலிலே, இதயதாமரை உட்பட பல படங்களில் சுடப்பட்டது )



3. மோகன் தன் மாமனார் முன் கோபமாக இருப்பது போல் காட்டிக்கொள்வதும் அதற்கான காரணமாய் “ நாளைக்கு நீ டைவர்ஸ் வாங்கி ஊருக்கு போறப்ப உன் மேல எந்த குறையும் இல்லை, மாப்ளை மேல தான் குறை” என அவங்க மனசுல தோணட்டும்னு தான் என சொல்லும் டச்சிங்கான காட்சி..


4. க்ளைமேக்சில் தண்டவாளங்கள் இணைவதை தம்பதிகள் மனம் இணைவதாய் சிம்பாலிக்காக காட்டியது.. படம் முழுக்க ஆங்காங்கே மழை பெய்வதை , சாரலை சில்லிப்பாய் உணர வைத்த லாவகம்..



5. மழையில் ஹீரோயின் நனையும் பாடல் காட்சி வைத்தும் அதை கிளாமர்க்கு யூஸ் பண்ணாம அவர் சுட்டி என்பதை உணர்த்த மட்டுமே யூஸ் பண்ணிக்கிட்ட கண்ணியம் ( இதே போல் புன்னகை மன்னனில் கே பி  - வான் மேகம் பூப்பூவாய் தூவும் தேகம் என்ன ஆகும் )


6. ஹீரோ தான் மனைவிக்கு வாங்கி வந்த கொலுசு, அவள் கேட்ட விவாகரத்து பத்திரம் 2 டையும் அவள் முன் வைக்கும்போது வரும் இளையராஜாவின் பின்னணி இசை..


7. மனம் மாறிய ஹீரோயின் ஹீரோ வாங்கித்தந்த கொலுசை அணிந்து ஆவலுடன் அவனிடம் காட்ட வரும்போது அவன் நரசிம்மராவ் போல் முகத்தை வைத்துக்கொண்டு  எரிந்து விழுந்ததும் அவள் முகம் சுருங்குவது 



8. கார்த்திக் - ரேவதி காதல் காட்சிகளில் இளமை கொப்புளிக்கும் குறும்புக்காட்சிகள், குறிப்பா போலீஸில் செம அடி வாங்கியும் கார்த்திக் ரேவதியை பார்த்து கண் அடிக்கும் காட்சி;;



http://satyambloggers.files.wordpress.com/2010/03/2wp770j.jpg



 மனம் கவர்ந்த ஷார்ட் & ஸ்வீட் வசனங்கள்




1. வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படியா பொய் சொல்வாங்க?


வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படியா கேள்வி  கேட்பாங்க?



2. நான் உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன்னு எனக்குத்தோணலை.. நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா? 

 எனக்கு உன்னை பிடிச்சிருக்கு 



3. சின்னக்குழந்தை மாதிரி அடம் பிடிக்காதே.. 

 அய்யோ , என்னை சின்னக்குழந்தை மாதிரி நடத்தாதீங்க 



4. முதல் இரவில்


 ஏய்! ஏன் அழறே?

 நான் தூங்கனும்


 சரி தூங்கு.. அதை முதல்லியே சொல்லி இருக்கலாமே? 

 அதான் இப்போ சொல்றேனே?


5. மேரேஜ்க்கு முன்னால  எனக்கு 2 லவ் இருந்துச்சு 1. புக் 2 இசை



6. இது செங்கல்லாலும், மணலாலும் கட்டப்பட்ட வீடு , இதை வீடா மாத்த வேண்டியது உன் கைல இருக்கு 



7. ஹலோ! என்ன ? உங்க பி ஏ அரைகுறையா டிரஸ் பண்ணி இருக்காளா?


 வி கே ராமசாமி  - அவ டிரஸ்சே பண்ணலையே? 



8. ஒரு புருஷன் தன் மனைவிக்கு வாங்கித்தரும் முதல் பரிசை அவ  வாழ்நாள் பூராவும் மறக்க மாட்டா.. 


9. மனைவி கிட்டே கணவன் எப்படிப்பேசனும் தெரியுமா? வாய் கூசாம நீ தான் உலக அழகின்னு பொய் சொல்லனும் 


10. உனக்கு என்ன வேணும்?

 நான் எது கேட்டாலும் வாங்கித்தருவீங்களா? 


 ம்

 எனக்கு விவாக ரத்து வேணும்..





11. நான் தொடுவது உனக்கு பிடிக்கலை?

 ம்ஹூம், கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு 


12.  வேறுபாடுன்னு எதுவும் இல்லை. ஆனா பெரிசா ஈடுபாடு இல்லை.. அதுனாலதான் இந்த விவாகரத்து”


13. உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட வருத்தமோ, கோபமோ இல்லையா?


 குட் நைட்




14. மேரேஜ்க்கு முன்னாலயே  அவனவன் சேர்ந்து வாழறான்.. மேரேஜ் ஆகியும் நீங்க ஒரே வீட்ல பிரிஞ்சு வாழறீங்க.. ஹூம்..



15. ஒரு புருஷன் காலைல எந்திரிச்சதும் ஏதாவது சண்டை போட்டா அது சகஜம், ஆனா படுக்கையே 2 பேருக்கும் தனித்தனியா இருந்தா அது சகஜம் இல்லை.



16. எதைக்கேட்டாலும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்களே?உங்களுக்கும்
 எனக்குமாவது சம்பந்தம் இருக்கா?



தெரில.. தாலி கட்னா மட்டும்  போதுமா?னு நீ தானே சொன்னே?



17. நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன், நீங்க சொல்ல வேண்டியது ஏதாவது இருக்கா?


 4 மணிக்கு ட்ரெயின், நான் 2 மணிக்கு கூட்டிட்டு  போக வர்றேன்


18.உங்களுக்கு பிடிச்சிருக்கு! ஒத்துக்கத் தான் மனசில்ல! ஆனா நான் ஒத்துக்கறேன்! வெட்கத்தை விட்டு ஒத்துக்கறேன்!"



19. கட்டுப்படச்சொல்லலை, கன்சிடர் பண்ணச்சொல்றேன்






சில சுவராஸ்ய தகவல்கள்


1. பனி விழும் இரவு பாடலில் நடனமாடுவது சிறுவயது ஜான்பாபுவும் அந்த மானாட மயிலாட நீபா அம்மா வாமன் மாலினியும் 

2.சோக மியூசிக்குக்கு ராஜா சார் யூஸ் பண்ற இந்த இன்ஸ்ட்ரூமென்ட்க்கு பேர் 'தில்ரூபா'ன்னு கேள்வி. 


3.  கார்த்திக் மணிரத்னம் படத்துல மவுனராகம்,அக்னிநட்சத்திரம்,இப்ப ராவணன்னு எல்லாம் ரெண்டு ஹீரோ சப்ஜக்டாதான் நடிச்சிருக்கார்


4.மெளனராகம் பட்ஜெட்ல பெரிய செலவுன்னா, அது அந்த பத்மினி கார் வாடகை மட்டுந்தான் #மணி”ரத்னசுருக்க”பட்ஜெட் 




5. இந்தப்படத்துக்கு இன்ஸ்பிரேஷனே மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ தான்.


6. தேசிய விருது பெற்ற படம், ஃபிலிம்ஃபேர் அவார்டு ஃபார் பெஸ்ட் டைரக்‌ஷன் வாங்கின படம். ரிலீஸ் ஆன ஆண்டு 1986 ஆகஸ்ட் 15




 மென்மையான மயில் இறகு பாடல்கள் 


1. ஓஹோ! மேக பந்தலோ.. 2. நிலாவே வா  செல்லாதே வா" 3. பனிவிழும் இரவு நனைந்தது நிலவு 4. சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா" 5.  மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா? அன்பே! என் அன்பே!  இயக்குநரிடம் சில கேள்விகள் 1. பொதுவா ஆண் தன் காதலி இறந்துட்டா குறைந்த பட்சம் 2 வருஷமும், பெண் தன் காதலன் இறந்துட்டா குறைந்த பட்சம் 4  வருஷமும் மீளாத சோகத்தில் இருப்பாங்கன்னு மனவியல் நிபுணர்கள் சொல்றாங்க.. ( உண்மைக்காதலில்). ஆனா ரேவதி தன் லவ்வர் கார்த்திக் இறந்த சோகத்தை எல்லாம் காட்டிக்காம ஜாலியா  குறும்பு பண்ணிட்டு மழைல நனைஞ்சுட்டு இருக்காரே? முரணா இல்லை? 2. பெண் வீட்டில் முதல் இரவு நடக்குது, ஆனா மேட்டர் ஏதும் நடக்கலை. பெண் வீட்டில் சொந்தக்காரங்க அதாவது அம்மா, பெரியம்மா , அத்தை யாராவது பெண் கிட்டே கில்மா நடந்துச்சா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?ன்னு கேட்பாங்க.. ஆனா ஹீரோயின் தரப்புல யாரும் அப்டி கேட்ட மாதிரி தெரியலை.. கேட்டிருந்தா அப்போவே அம்மாவுக்கு உண்மை நிலவரம் தெரிஞ்சிருக்குமே? டெல்லி வந்த பின் அந்த கேள்வியை கேட்கும் அம்மா ஏன் தன் வீட்ல கேட்கலை? 3. கார்த்திக்  ரேவதி படிக்கும் காலேஜ்ல ரேவதி அமர்ந்திருக்கும் க்ளாஸ் ரூம்லயே வந்து அப்பாவுக்கு ஆக்சிடெண்ட்னு சொல்றார். எந்த லேடீஸ் காலேஜ்ல அப்படி உள்ளே விடுவாங்க? பிரின்ஸ் ரூம்ல தகவல் சொல்லி காத்திருக்கனும், வாட்ச்மேன்  அல்லது பியூன் போய்  கூட்டிட்டு வருவான்.. இதானே வழக்கம்? 4. கார்த்திக்கை போலீஸ் தவறுதலா சுடுவது டிராமா மாதிரி இருக்கு. பல கார்களிடையே தடுமாறி வரும் கார்த்திக் ஏதோ ஒரு விபத்தில் இறப்பது போல் காட்டி இருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும் 5. மிக மென்மையானவரா காட்டப்படும் மோகன் கடைசி காட்சிகளில் எரிந்து எரிந்து விழுவது போல் காட்சிகள் எதுக்கு? மாமனார் இருக்கும்போது அவர் சொல்ற காரணம் ஓக்கே, தனிமையில் இருக்கும்போது  ஏன் எரிஞ்சு விழறார்? 6. பெண் பார்க்கும் படலம் நடக்கும்போது ரேவதி ரொம்ப யோக்கியர் மாதிரி நான் குறும்பு, சுட்டி உங்களுக்கு ஒத்து வராதுன்னு சொல்லி மேரேஜை வேணாம்னு சொல்ல ட்ரை பண்றவர் ஏன் தனக்கு ஒரு காதல் இருந்தது என்ற உண்மையை சொல்லலை? நான் ஆல்ரெடி ஒருத்தனை லவ்வி இருக்கேன் சாரி அப்டின்னா மாப்ளை துணடை காணோம் துணியை காணோம்னு ஓடி இருப்பானே? 7. அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் ஏன் ஹிப்பித்தலையோட வர்றார்? உங்க பட போலீஸ் எல்லாம் ஷார்ட் ஹேர் கட்ல தானே வருவாங்க? 8. காமெடிக்கும் உங்களுக்கும் காத தூரம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் காமெடி டிராக்குக்கு தனி ஆள் போடக்கூடாது அந்த ஹிந்தி பேசும் ஆள் தமிழ் டியூஷனில் போடா டேய் என்பது மட்டுமே டோட்டல் படத்துல இருக்கும் ஒரே காமெடி. வி கே ராமசாமி கொஞ்சம் ட்ரை பண்ணி இருக்கார்.. இறுக்கமா போகும் திரைக்கதையில் காமெடி நல்லா டெவலப் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே? சி.பி கமெண்ட் - பிரமாதமான இந்தப்படத்தை நேத்து நைட் சன் டி வில பார்த்தேன். டோண்ட் மிஸ் இட்.. தமிழ் சினிமாவின் முக்கியமான படம். அனைவரும் பார்க்கலாம்..  டிஸ்கி - நேத்து படம் ஓடிட்டு இருக்கும்போது இந்தப்படம் பற்றிய தகவல்களை அள்ளி விட்ட மாமே, ஷேக் ,பிரதீஸ்,பறவை போன்ற ட்விட்டர்களுக்கு நன்றி.! மற்றும் கானா ப்ரபாவுக்கு ஸ்பெஷல் நன்றி!யூ டியூப் லிங்க் - புலவர் தருமி
அ இந்தப்படத்தின் அபாரமான பின்னணி இசை பற்றிய நுட்பங்கள்,  கலெக்‌ஷன் கேட்க - http://radiospathy.blogspot.in/2011/08/blog-post_09.html