Showing posts with label கடல். Show all posts
Showing posts with label கடல். Show all posts

Saturday, February 16, 2013

கடல் - துளசி,கவுதம் கார்த்திக் காம்பினேஷன் பேட்டி @ கல்கி


நடிப்பு ஜீன்லயே இருக்கு!

எஸ். சந்திரமௌலி

கடல் படத்தின் கதாநாயகன் கௌதம், கதாநாயகி துளசி இருவரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் சந்தித்தோம். இரண்டு பேரையும் ஒன்றாக உட்கார வைத்து, பேட்டி கண்டோம். ஜாலியான மூடில் இருந்த இருவரும் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியே பதில் சொன்னார்கள். தொகுப்பு இதோ:
கேள்வி: ‘அலைகள் ஓய்வதில்லைபடம் பார்த்திருக்கீங்களா?
கௌதம்: முன்னாடியே பார்த்திருந்தாலும், ரெண்டு மாசத்துக்கு முன்னால பார்த்தப்போ ரொம்ப என்ஜாய் பண்ணினேன். யூத்ஃபுல் பட் இன்னொசென்ட் அப்பாவைப் பார்த்தேன். திரையில என்னைப் பார்க்கிற மாதிரியே இருந்தது.
துளசி: முன்னாடி ஒரு தடவை பார்த்திருக்கேன். ஆனா, மணி ரத்னம் படத்துல நடிக்கப்போறது முடிவானதும் எத்தனை தடவை அந்தப் படத்தைப் போட்டுப் பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. நான் நடிக்கறதுக்கு அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது. படத்துல கார்த்திக் அங்கிள், அம்மாவுக்கு இடையிலான லவ் கெமிஸ்டிரி நல்லா இருந்தது.
கேள்வி: தமிழ் நல்லா தெரியுமா?
கௌதம்: ஸ்கூல்ல படிச்சிருக்கேன். ஆனாலும் கடல்ல நடிக்க வந்த பிறகு, மெட்ராஸ் டாக்கீஸ்லதான் நல்லா தமிழ் கத்துக்கிட்டேன்.
துளசி: எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது. பேசினா புரிஞ்சுக்க சிரமமில்லை. அடுத்த படத்துல நானே எனக்கு டப்பிங் பேசுவேன்னு நம்பறேன்.
கேள்வி: சினிமாவுல நடிப்போம்னு நெனைச்சதுண்டா?
கௌதம்: ஸ்கூல்ல படிக்கறப்போ ஆஸ்டிரனாட் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம், டாக்டராக ணும்னு நினைச்சேன்; மியூசிக்ல இன்ட்ரஸ்ட் வந்தது. ஒரு மியூசிக் பாண்டுல இருந்தேன். ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இருந்தது. அதலெட் ஆகணும்னு பிராக்டீஸ் பண்ணினேன். வளர்ந்த பிறகு சினிமா ஆசையும் வந்தது. மணிரத்னம் கேமரா முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாரு.
துளசி: சினிமாவுல நடிப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை. ஸ்கூல் முடிச்சிட்டு நான் டாக்டராகணும்கிறது என் அப்பாவோட ஆசை. எனக்கு எம்.பி.. முடிச்சிட்டு, சொந்த பிசினஸ் பண்ணணும்னு ஐடியா. ஆனா நடிக்க வந்துட்டேன்.

கேள்வி: மணிரத்னம் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சபோது உங்க ரியாக்ஷன்?
கௌதம்: ரொம்ப சந்தோஷமா இருந்தது.
துளசி: பிளசன்ட் சர்பிரைஸ்! ஆனா அவர் நான் கொஞ்சம் குண்டா இருக்கிறதால, வெயிட் குறைக்கணும்னு சொல்லிட்டாரு. ரொம்பக் கஷ்டப்பட்டு, வெயிட் குறைச்சேன்.
கேள்வி: உங்க ரோல் பத்தி?
கௌதம்: தூத்துக்குடி மீனவ கிராமத்து இளைஞன் ரோல். பேர் தாமஸ். மெரினாவுக்குப் போய், ஒரு சில மீனவர்களோட பேசி, பழகி, அவங்களை நல்லா கவனிச்சுப் பார்த்தேன். மீனவங்க லைஃப் பத்தி வீடியோ எடுத்துக்கிட்டு வந்து குடுத்தாங்க. அதைப் பார்த்தேன். கலைராணிதான் என்னை நல்லா டிரெயினிங் கொடுத்து, தாமஸ் ரோலுக்கு தயார் பண்ணினாங்க.
துளசி: எனக்கு அவ்வளவு கஷ்டமா இல்லை. கலைராணிதான் எனக்கும் டிரெயினிங். ரொம்ப உபயோகமாய் இருந்துச்சு.
கேள்வி: முதல் நாள் ஷூட்டிங் அனுபவம்?
கௌதம்: ஷூட்டிங்குக்கு முதல் நாள் ராத்திரிதான் ரொம்பப் படபடப்பாய் இருந்தது. படுத்தால் தூக்கம் வரலை. தூங்கினபோது ராத்திரி ரெண்டு மணி இருக்கும். நாலு மணிக்கெல்லாம் ஷூட்டிங்குக்கு ரெடியாகணும்னு சொல்லி எழுப்பிட்டாங்க. முதல் தடவை டயலாக் பேசவேண்டிய ஷாட்லயும் டென்ஷனாக இருந்தது. ஆனா மணிரத்னம், ‘ரொம்ப கூலா இரு. நேச்சுரலா நடின்னு சொல்லி, தைரியம் சொன்னாரு.
துளசி: முதல் ஷெட்யூல்ல எனக்கு சீன் இல்லை. ரெண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங்குக்குத்தான் நான் போனேன். எனக்கு சைக்கிள் ஓட்டுறா மாதிரி முதல் ஷாட். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. ஒரு மாதிரி சமாளிச்சேன்.
கேள்வி: நடிப்புங்கறது ஜீன்ல இருக்குன்னு நம்பறீங்களா?

கௌதம்: ஜீன்லயும் இருக்கு; அதே சமயம் ஒரு நடிகனை டைரக்டர்தான் உருவாக்கறாருன்னும் நினைக்கிறேன்.
துளசி: எனக்கு ஜீன்லயே இருக்குன்னு நினைக்கிறேன். அதே சமயம், ஜீன், சொல்லித் தருவது இதையெல்லாம்விட, நடிப்புங்கறது சீனுக்குத் தேவை என்னன்னு புரிஞ்சுக்கிட்டு, அதை முழுசா உள்வாங்கி, நடிப்பா வெளிப்படுத்தவேண்டிய அறிவுபூர்வமான விஷயம்னு நினைக்கிறேன்.
கேள்வி: ரொம்ப சவாலாக இருந்த சீன்?
கௌதம்: எலே கிச்சா பாட்டுக்காக கடல்ல படு வேகமா கட்டுமரத்துல போன சீன். முதல்ல ரொம்பவே தடுமாறினேன். அப்புறமா பேலன்ஸ் பண்ணி நிற்கக் கத்துக்கிட்டு, நடிச்சு முடிச்சது ரொம்ப பெரிய சவால்.
துளசி: அந்தமான்ல எடுத்த மூங்கில்தோட்டம் பாட்டு சீன். எனக்கு தண்ணியைக் கண்டால் பயம். போதாக்குறைக்கு தண்ணியில நிற்கும்போது மீன் வந்து காலை குத்தும்னு சொல்லிப் பயமுறுத்திட்டாங்க. கடலுக்குள்ள இறங்கப் போற சமயத்துல, மணிரத்னம், என்னோட கண் கான்டாக்ட் லென்ஸ கழற்றிடுன்னு சொன்னபோது, ரொம்ப பயந்திட்டேன். கௌதம் கையைப் பிடிச்சுக்கிட்டு, கடலுக்குள்ளே போய், ஒருவழியா சமாளிச்சேன்.
கேள்வி: அடுத்தது என்ன?
கௌதம்: நோ ஐடியா. கடல் ரிலீசுக்குக் காத்திருக்கிறேன்.
துளசி: ரவி கே. சந்திரன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். ரொம்ப நல்ல கேரக்டர்.



thanx - kalki 

Sunday, February 10, 2013

கடல் -ஆனந்த விகடன் - ன் விமர்சனம்

தேவனுக்கும் சாத்தானுக்கும் நடுவே போராட்டம் நடைபெறும் களம்... இந்தக் 'கடல்’!


பாதிரியாருக்கான பயிற்சிக் கல்லூரியில் இருந்து முறைகேடான நடத்தை காரணமாக அர்ஜுன் வெளியேற்றப்படுவதற்கு, அரவிந்த்சாமி காரணமாகிறார். பல வருடங்கள் கழிந்தும் வன்மம் குறையாத அர்ஜுன், பொய்ப் புகாரில் அரவிந்த்சாமியைச் சிறைக்கு அனுப்புகிறார். அரவிந்த்சாமியுடன் இருக்கும் கௌதமைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, அவரை மாஃபியா கிரிமினல் ஆக்குகிறார். இடையே கௌதமுக்கு அர்ஜுன் மகள் துளசியோடு காதல். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் கௌதமின் வாழ்க்கை என்ன ஆனது என்பது கதை.



அட... ஆச்சர்யம்! துண்டு துண்டான வசனங்கள், இருட்டுப் பின்னணி என்கிற மணிரத்னத்தின் ஃபார்முலாவில் இருந்து மாறுபட்டுச் சலசலக்கிறது கடல். ஆனால், நான்கு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான உறவு, அதில் ஏற்படும் சிக்கல் எனக் கடலுக்கான களத்தை அழுத்தமாக அமைத்தவர், அதில் பேரலைகளை ஏற்படுத்தத் தவறிவிட்டார்.    



பளீரெனப் படத்தில் ஈர்ப்பவர் 'ரீஎன்ட்ரி’ அரவிந்த்சாமிதான். கெட்ட வார்த்தை பேசும் சிறுவனிடம், ''ம்ம்... என்னென்ன தோணுதோ... பேசுடே'' என்று பொறுமை காப்பதாகட்டும், சிறைக்குச் சென்று மீண்டும் கிராமத்துக்கு வரும்போது, கம்பீரம் குறையாமல் வருவதாகட்டும்... கிரேட்!



இளமையும் துடிப்புமாக வசீகரிக்கிறார் கௌதம் கார்த்திக். முரட்டுத்தனம், காதல் மயக்கம், கடத்தல் திகில், நடனத் துள்ளல் என அறிமுக வாய்ப்பிலேயே அட்டகாசம். ''சாத்தான், இயேசுவுக்கு அண்ணன்டே'' என்று 'சாத்தான்’ வில்லனாக அர்ஜுன்... அமர்க்களம். துளசி... வழக்கமாக ஈர்க்கும் மணிரத்னம் பட நாயகிகளிடம் இருக்கும் மேஜிக் ஏனோ மிஸ்ஸிங்.  



ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 'ஏல கீச்சான்...’, 'நெஞ்சுக்குள்ளே..’, 'என்னை எங்கே நீ கூட்டிப் போற’ என்று கடல் மேல் மழைத் துளிகளாக வசீகரித்த பாடல்களுக்கு, திரையில் எந்த ஸ்பேஸும் கொடுக்கவில்லையே... ஏன் சார்? அலைகளின் மேலாகவும் உள்ளாகவும் பயணிக்கும் ராஜீவ்மேனனின் ஒளிப்பதிவு கிளாஸிக் துல்லியம்!



அர்ஜுனுக்கும் அரவிந்த்சாமிக்கும் வருகிற முட்டல், கௌதமின் அவலமான சிறுபிராயம் என அபாரமாக ஆரம்பிக்கிற கதை, போகப் போகத் துடுப்பு இல்லாத படகு மாதிரி தடுமாறுகிறது. தான் செய்த பாவங்களை  துளசியிடம் கௌதம்  அடுக்கடுக்காகச் சொல்லும்போது, ''அதனால என்ன, இனிமே செய்யாதே!'' என்று துளசி சொல்லும் இடம் ஒரு கவிதை... அதைப் போல இயல்பும் ஈர்ப்பும் வேறெங்கும் இல்லையே?! அர்ஜுன்-அரவிந்த்சாமி இடையிலான மோதலில் இருக்கும் உயிர்ப்பு, கௌதம்-துளசி இடையிலான காதலில் இல்லவே இல்லையே?




'எனக்கு நிம்மதியா இருக்கிறதவிட... உஷாரா இருக்கிறதுதாம்டே பிடிக்கும்’, 



'இப்ப பொய் பேசுறீயா? இல்லை... நான் உன்னைக் காப்பாத்துனப்ப பொய் சொன்னீயா?’


 எனப் பல இடங்களில் சுளீரிடும் ஜெயமோகனின் வசனம் படத்துக்கு சுறா பலம்.


மேக்கிங்கில் மிரட்டும் இந்தக் 'கடல்’ பயணம், திரைக்கதைத் திக்குத் தெரியாததால் தள்ளாடுகிறது!


நன்றி - விகடன் விமர்சனக் குழு

Friday, February 01, 2013

கடல் - சினிமா விமர்சனம்

ஒரு நல்ல பாதிரியார் , ஒரு மோசமான தாதா ( தாதான்னாலே மோசம் தானே?ஆனா தளபதி, நாயகன் தாதா நல்லவங்க ஆச்சே?) இவங்க 2 பேரும்  சந்தர்ப்ப வசத்தால சவால் விட்டுக்கறாங்க. 2 பேர்ல யார் ஜெயிச்சாங்க என்பதே கதை. இந்தக்கதைல கிளைக்கதையா  பாதிரியாரின் வளர்ப்பு மகனும், தாதாவின்  நிஜ மகளும் லவ்வறாங்க .அவங்க தான் ஹீரோவும் , ஹீரொயினும் . ஹீரோயின் கொஞ்சம் மெண்ட்டல் . அவங்க ஏன் மென்ட்டல்  ஆனாங்க என்பதற்கு கதைல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அதாவது அதை ட்விஸ்ட்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல . முடியல ..... 


அதாகப்பட்டது மணி ரத்னம் சும்மா இருக்காம மாலை மலர் பேப்பர் நிறைய படிச்சிருக்காரு . அதுல ஒரு நியூஸ் . பாதிரியார் சர்ச்ல ஒரு பெண்ணை மேட்டர் முடிச்சுட்டார். அது அவர் மேல போடப்பட்ட  வீண் பழி . இந்த KNOT டை வெச்சு  ஒரு திரைக்கதை தேத்தலாம்னு பார்த்திருக்கார். இந்தப்படம் வாங்கப்போகும் அடி அவர் தேறவே 2 வருஷம் ஆகும் .



 படத்தோட முதல் ஹீரோ ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தான் . கலக்கிட்டாரு மனுஷன் . கடல் அலைகளை , வானம் , சூரியன் , நிலா , பீச் , துளசி க்ளியவேஜ் -னு அவர் ராஜாங்கம் தான் ஓரளவாவது தியேட்டர்ல உக்கார வைக்குது 


 அடுத்து இசைப்புயல் ஏ ஆர் ஆர் . நெஞ்சுக்குள்ளே, என்னை நீ எங்கே கூட்டிப்போறே? , ஏ லே கீச்சான்  , மகுடி  என 4 பாட்டு ஹிட்.  படமாக்கிய விதம் அழகு 


படத்தை டாமினேட் பண்ணுவது ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன், அவர் தான் தாதா . ஆயுத  பூஜை பட கெட்டப்ல அசத்திட்டார். அவரோட கேரக்டரைசேஷன் இயக்குநர் ஹரி பட காப்பி . 
 அர்விந்த்சாமி  நல்ல பாதிரியாரா வர்றார். சின்ன சின்ன டயலாக் குடுத்து அவரையும், நம்மையும் காப்பாத்திட்டார்  இயக்குநர் . 
 ஹீரோவா கார்த்திக்கின் வாரிசு கவுதம் கார்த்திக்  சைடுல இருந்து பார்த்தா அவர் முகச்சாயல் தெரியுது, நடிக்க முயற்சி பண்ணி இருக்கார். ஒரு முதல் படம் ஹீரோ எந்த அளவு   பண்ணுனா போதுமோ அந்த அளவு பண்ணி இருக்கார் . 



 ஹீரோயின் துளசி. அவர் நல்ல கட்டையோ இல்லையோ அவர் குரல் செம கட்டை. முடியல . தமிழர்கள் குரல் வளத்தைப்பார்க்க மாட்டாங்க சாரி கண்டுக்க மாட்டாங்க என்பது உண்மைதான் , அதுக்காக இப்படியா? ராதா முகச்சாயல் கார்த்திகாவை விட துளசிக்கு ஜாஸ்தி .புருவம் அக்காவை விட தங்கச்சிக்கு சின்னது . ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ). அவர் சிரிக்கும்போது ஒரு மாதிரி உதட்டை சுளிக்கிறார். உதட்டை மட்டும் கவனிச்சவங்க கடுப்பாகிடுவாங்க .என்னதான் 15 வயசுல அபார வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் பாப்பா சினி ஃபீல்டுல வளர்றது கஷ்டம் தான் . 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கதைக்கு சம்பந்தமே இல்லாம மீனவன் , கடல் , ஏ லே கீச்சான் பாட்டு எல்லாம்  ரெடி பண்ணி பில்டப் கொடுத்து நீர்ப்பறவையில் சொல்லாத , விடு பட்ட ஏதோ ஒரு மீனவர் பிரச்சனையை , ஈழத்தமிழர் பிரச்சனையை இவர் சொல்லப்போறார்னு எதிர்பார்ப்பை ஏற்படுத்துனது . 



2.  போஸ்டர் டிசைனை நல்ல படம் மாதிரியே உருவாக்குனது




3. விஸ்வரூபம்  வராத சைக்கிள் கேப்ல படம் ரிலீஸ் பண்ணி 7 நாள் ஓட்ட வெச்சது ( அதாவது 7 நாள் ஓடிடும் ) 



4. தான் உண்டு தன் பிஸ்னெஸ் உண்டுனு தேமேன்னு கிடந்த அர்விந்த் சாமியை நல்ல கேரக்டர்னு ஏமாத்தி ரீ எண்ட்ரி கொடுத்து நடிக்க வெச்சது 



5. படத்தை பிரமோட் பண்றதுக்காக தேவையே இல்லாம லிப் லாக் கிஸ் சீனை   வலுக்கட்டாயமா புகுத்துனது .



6 கிறிஸ்டியன்ஸ் ஏதாவது பிரச்சனை பண்ணட்டும் , உலக ஃபேமஸ் ஆகிடலாம்னு வேணும்னே அவங்களை வம்புக்கு இழுத்தது . ( ஆனா அவங்க செம டேலண்ட், யாரும் கண்டுக்கலை , ஏன்னா பிரச்சனை பண்ணுனா பர பரப்பா ஓடும் , இப்போ வந்த சுவடே தெரியாமல் போகும் ) 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சார், அலைபாயுதே , மவுன ராகம், கீதாஞ்சலி ( இதயத்தை திருடாதே)  நிஜமாவே உங்க கதை தானா?  ஏன்னா நீண்ட இடைவெளிக்குப்பின் நீங்க எடுக்கப்போகும் காதல் கதை பட்டாசைக்கிளப்பப்போகுதுன்னு நினைச்சா தியேட்டருக்கு வந்த ஆடியன்சை பாதிலயே கிளப்பி விடுதே? 



2. அர்விந்த் சாமி பாதிரியார் , படிச்சவர் . பண்பானவர் , ஆனா அவர் செருப்பு போட்டுட்டு 2 சீன்ல ஷூ போட்டுட்டு 4 சீன்ல தேவாலயத்துக்குள் போய்ட்டு வந்துட்டு இருக்கார், படிப்பறிவே இல்லாத பொடியன்க வெறும் கால்ல போறாங்க



3.  நீங்க 30 வருஷம் சினி ஃபீல்டுல இருந்தீங்க என்பதற்காக 30 வருடங்களுக்கு முன் வைக்க வேண்டிய ட்விஸ்ட்டை எல்லாம் இப்போ வெச்சா எப்டி? சார். 

ஒரு பொண்ணு நல்லவனை கை காட்டி இவன் என்னை ரேப்பிட்டான் ஐ மீன் கெடுத்துட்டான்  அப்டினு பொய்ப்புகார் குடுத்தா அந்தக்காலத்துல அய்யோ பாவம்னு ஜனங்க பார்ப்பாங்க . இப்போ பெஞ்ச் ரசிகன் கூட ஏம்பா அதான் ஏதோ டி என் ஏ டெஸ்ட் இருக்காமில்ல அதை பார்த்தா தெரிஞ்சுடுது அப்டினு சொல்றான் .
 திரைக்கதை அமைச்ச ஜாம்பவான்கள் 2  பேரு , அதுக்கு அசிஸ்டெண்ட்டா 18 பேரு ஆல் டிகிரி ஹோல்டர்ஸ் யாரும் கவனிக்கலை? இந்த லாஜிக் ஓட்டையை உங்க பேசும் படம் சுஹாசினி மேடம் கூட சொல்லலையோ?  ( ஒரு வேளை அவரோட  வசன வாய்ப்பை நீங்க  ரைட்டருக்கு குடுத்துட்டதால நல்லா வேணும் , எப்டியோ போகட்டும்னு விட்டுடாரோ?



4. கடல் ஓரம் வாழும் ஒரு பெண் ணின் முகம் மினுமினுப்பாக ஆயில் போட்ட மாதிரி  இருக்கே, அது எபப்டி?



5. அப்பாவை ஊரே அடிச்சுப்போட்டுட்டு இருக்குன்னு ஒருத்தன் வந்து சொன்னா அப்படியே  பதறி ஹீரோ ஓட வேண்டாமா? அவர் என்னமோ ரஞ்சிதா கிட்டே விசாரனை பண்ற மாதிரி யார் அடிச்சா? எதுக்கு? ஏன்? அப்டினு 10 நிமிஷம் டயலாக் பேசிட்டு இருக்காரு?  ( டயலாக் எழுத டோட்டலா படத்துக்கு இத்தனைன்னு இனி பேசிடுங்க , ஐ திங்க்  ஒரு பக்கத்துக்கு ரூ 10,000 அப்டினு காண்ட்ராக்ட் போட்டுட்டீங்க போல , அண்ணன்  புகுந்து விளையாடிட்டார் ) உங்க படத்துலயே அதிக வசனம் கொண்ட படம் இதுதான் 


6. ஒரு யூத் பையன் சைக்கிளைத்தூக்குவது ரொம்ப சாதாரண விஷயம் . இதுல ஹீரோ சைக்கிளைத்தூக்குவதை ஓவர் பில்டப் கொடுத்து க்ளோசப்ல பை செப்ஸ் எல்லாம் நரம்பு முறுக்கேறுவதைக்காட்டுவது ரொம்ப ஓவர். அவர் என்ன நமீதாவையா தூக்கறார்?




7.  நண்பன் படத்துல ஷங்கர் சார்  பிரசவக்காட்சி ஒண்ணை க்ளைமாக்ஸ்ல வெச்சார்னா கதைக்கு அது தேவையா இருந்தது , அப்டி வெச்சா படம் ஹிட் ஆகிடும்னு யாரோ சொன்னாங்கன்னு கேட்டு கதைக்கு சம்பந்தமே இல்லாம பிரசவ காட்சி . அதுக்கு கேமரா ஆங்கிள் உஷ் அப்பா முடியல . மலையாளப்படம் மாதிரி .. 




8. தேவாலயத்தில்  சின்னப்பையன் உச்சா போகும் காட்சி ,  வசனத்தில் மிக மலிவான  கெட்ட வார்த்தைகள் இதெல்லாம் உங்க தரத்தை குறைக்குது. ப்ளீஸ் டோண்ட் ஃபர்க்ட் யூ ஆர் ஏ செண்ட்டர் டைரக்டர் , இப்படி சி செண்ட்டர் மாதிரி இறங்கி  அடிக்கக்கூடாது . ( கேட்டா அந்த கேரக்டர் அப்படித்தான் பேசும்னு ஒரு நொணை நாட்டியம் ( சால்ஜாப்பு) பேசுவீங்க )

9. உங்களுக்கு காமெடி அவ்வளவா வராதுன்னு எல்லாருக்கும் தெரியும் , அதுக்காக இப்படியா? ரொம்ப ட்ரை ( DRY)


10. மன வளர்ச்சி குறைந்த துளசியை  மருத்துவப்பணி பார்க்க விடுவது எப்படி? சும்மா காயத்துக்கு மருந்து போடுவது என்றால் கூட பரவாயில்லை,பிரசவம் பார்க்கறார், விட்டா  பை பாஸ் ஆபரேஷன் பண்ணிட்வார் போல


11. அர்விந்தசாமி பாதிரியார் கேரக்டர்,  அவர் எப்படி டபால்னு அர்ஜூன் உடம்புல பாய்ஞ்ச புல்லட்டை ஆபரேஷன் பண்ணி எடுக்கறார்? உங்க படத்துல வர்ற கேரக்டர்கள் எல்லாருமே டாக்டர்களா?


12. ட்ரெய்லர்ல , போஸ்டர்ல , ஸ்டில்ஸ்ல துளசிக்கு  லிப் லாக் கிஸ் சீன் வெச்சீங்க , ஆனா படத்துல அது இல்லையே? சென்சார்லயே விட்ட சீனை எதுக்கு தூக்குனீங்க? இது சீட்டிங்க் இல்லையா? ஒரு வேளை  10 நாட்கள் கழிச்சு இணைக்கப்பட்ட லிப் கிஸ் காட்சியுடன்னு ஓட்ட வைக்க தந்திரமா?







மனம் கவர்ந்த வசனங்கள்


1. நம்மூருக்கு புது சாமியார் வந்துருகார்ல.. எம்ஜிஆரு போலவே இருக்கீரே .
2. சந்தோசமா இருக்க கூடாதுன்னு எந்த பைபிள்லயும் சொல்லல, ஏன் உம்முன்னு இருக்கீங்க?
3.  எனக்கு பைபிளும் தெரியும், பசியும் தெரியும்
 எனக்கு  பைபிள் மட்டும் தான் தெரியும் 
4.பாவத்துல நீ தலை குப்புற விழனும், அதை நான் பார்க்கனும் 
5. பாவ மன்னிப்புக்கு 10 ரூபா, ஜெபத்துக்கு 15 ரூபா , ஆனா லேடீஸ் க்கு எல்லாம் ஃபிரீ ஹி ஹி 
6. திஸ் ஈஸ் சாமியார், சாமியார் ஈஸ் குட் 
 யோவ் அது பாதிரியார்யா 
7. எல்லாருக்கும் அம்மா சொல்லித்தான் அப்பாவைத்தெரியும்.
8.  அஞ்சு ரூபா குடுத்து வாரியா? ( வர்றியா? )னு கூப்பிட்டவங்க மத்தில என் கூட வாழ்றியா? வா! கட்டிக்கறேன்ன்னு சொல்ற ஆளை இப்போத்த்தான் பார்க்கறேன்  


9. மனசுக்குள்ளே சூரியன் உதிப்பது போல இருக்கு  ( நீ என்ன டி எம் கேவா?/ )



10. பாதிரியார் யாரோ ஒரு பொண்ணுகூட ஓடுவது மாதிரி தெரியுதே?


 இன்னும் 2 கிளாஸ் சரக்கு அடிச்சுப்பாரும் . 2 பேரோட ஓடிப்போற மாதிரி தெரியும் 



11. சுடறதா இருந்தா எப்பவோ  சுட்டிருப்பே , இப்படி பேசிட்டு இருக்க மாட்டே 



12. நிம்மதியா இருக்கறதை விட உஷாரா  இருக்கறதை நான் விரும்பறேன்


13.  அவ ஏன் அப்படி மன வளர்ச்சி கம்மியா இருக்கான்னா ஆழ்மனசு செய்யும் தந்திரம் , அவ  வளர்றதை விரும்பலை , எதையோ பார்த்து பயந்திருக்கலாம் 


14,.  இப்போதான் உன்னைப்பத்தி நினைச்சேன் 


 என்ன?னு ?



 தெரில , மறந்துட்டேன்



15.  நீ என்னை கை விட்டுட்டியா? 


 நோ , கை நழுவிடுச்சு 


16. நன்மைக்கு இந்த உலகத்துல இடம் இல்லை , எனக்கே தெரியாம என் வாழ்க்கைல ஒரு நன்மை நடந்தா அதை அழிச்சுடுவேன் . அது என் மகளா இருந்தாலும் சரி



17. மனுஷனுக்கு பாவம் செய்யச்சொல்லித்தரத்தேவை இல்லை , நடக்கற மாதிரி அது தானா வந்துடும் 


18.  நான் நிறைய பாவம் பண்ணி இருக்கேன். பாவம்னா என்னன்னு தெரியுமா உனக்கு? 


 ம்ஹூம் 


-------

 சரி சரி , இனி பண்ணாதே, எல்லாம் சரியாப்போச்சு 


( ஆடியன்ஸ் - பாவம் எது தெரியுமா? இந்தப்படத்துக்கு நாங்க வந்தது )










எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 40 (  ஆக்சுவலா 37 தான் தரனும் , ஆனா விகடன்ல எப்பவும் ஷங்கர், கமல், மணி 3 பேருக்கும் ஷாஃப்ட் கார்னர் உண்டு  

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார் 

 ரேட்டிங்க் -  2.5 / 5


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் 



 சி பி கமெண்ட் -  மணிரத்னம் சாரின் தீவுர ரசிகர்கள் இடைவேளை வரை பார்த்துட்டு ஓடிவிடவும் , ஏ ஆர் ஆர் ரசிகர்கள் எஃப் எம்மில் பாட்டுக்கேட்டுக்கொள்ளவும் ,பொது மக்கள்  டி வி ல எப்போ போடுவாங்கன்னு வெயிட் பண்ணவும். தமிழ்ப்புத்தாண்டுக்கு போட்டுடுவாங்க  .மணிரத்னத்தின் சாதனை அவரோட அட்டர் ஃபிளாப்பான ராவணனை கடல் தாண்டிடுச்சு

diSki -

டேவிட் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/02/blog-post_5252.html










Wednesday, January 16, 2013

கடல் பற்றி பட வசனகர்த்தா ரைட்டர் ஜெயமோகன் கட்டுரை

Kadal+Latest+Poster+With+Thulasi+Cinema65+(1).jpg (634×980)
கடல் பற்றி நூறுக்குமேல் மின்னஞ்சல்கள். எவற்றுக்கும் தனித்தனியாக பதில்போட விரும்பவில்லை. முடியவும் முடியாது. பயணத்தில் இருக்கிறேன். ஆகவே இந்தப்பதிவு



1. கடலின் கதை பழைய கதை அல்ல. அது சினிமாவுக்காக எழுதப்பட்டது. சிறிய நாவல் வடிவில்.அதன்பின் அதில் சிறிய பகுதி எடுத்துத் திரைக்கதையாக ஆக்கப்பட்டது. எல்லாக் கதைமாந்தர்களுக்கும் நீண்ட கதை நாவலில் உண்டு.படம் வெளிவந்தபின் நாவல் வெளிவரும்.

2. கடல் இப்போதைய வடிவில் ஒரு பரபரப்பான, பிரம்மாண்டமான, உணர்ச்சிகரமான வணிகப்படம்தான். அதற்குள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான பல தருணங்கள் உள்ளன. ஆன்மீகமானவை, கவித்துவமானவை– அதுதான் வேறுபாடு


3. கடல் காதல்கதை அல்ல. காதல் அதில் முக்கியமான இடம் வகிக்கிறது. காதல் என்பதை விட ஆணின் ஆன்மா பெண்ணைக் கண்டுகொள்ளும் தருணம் என்று சொல்லலாம், அவ்வளவுதான்


4. கீச்சான் என்பது பாடலில் வருகிறது. நான் எழுதியது அல்ல.மதன் கார்க்கியின் சொல்லாட்சி அது. ஆனால் கீச்சான் என்ற சொல்லாட்சி மிக அற்புதமானது.கீச்சான் என்றால் புலி போலக் கோடுகள் கொண்ட சிறிய மீன். டைகர்ஃபிஷ் என்று சொல்வார்கள் கடலில் உள்ள சிறு மீன், ஆனால் அது புலிதான்.


இனிமேல் கடல் பற்றிய விவாதங்கள் ஏதும் இந்த தளத்தில் இருக்காது. நான் எழுதும் படங்கள் சம்பந்தமான விவாதங்களுக்காக இந்த தளத்தைக் கையாள விரும்பவில்லை. ஏனென்றால் அதற்கு மட்டுமே இங்கே வரும் வாசகர்கள் வந்துவிடுகிறார்கள்.


மேலும் தமிழகமே பேசப்போகும் ஒரு பெரிய படத்தைப்பற்றி இங்கும் பேச ஆரம்பித்தால் வேறு எதற்குமே இங்கே இடமிருக்காது. இந்த இணையதளம் இலக்கியம் தத்துவம் ஆன்மீகம் ஆகியவற்றையே பேசுபொருளாகக் கொண்டது.


நன்றி

ஜெ

gautham-karthik-manirathnam-kadal-movie-stills.jpg (960×512)


அன்புள்ள ஜெ,

கடல் நீங்கள் எழுதிய படம் என்று இப்போதுதான் அறிந்தேன். கடல்பற்றி எந்தச்செய்தியுமே இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டு மட்டும்தான் இதுவரை வெளிவந்துள்ளது. நான் சமீபத்தில் கேட்ட அற்புதமான பாடல் அது


மணிரத்னம் என் ஆதர்ச இயக்குநர். அவருடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அது இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி. படம் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்


சியாமளா பாலகிருஷ்ணன்



kadal-movie-stills1-550x280.jpg (550×280)

அன்புள்ள சியாமளா,

மணிரத்னத்துக்கும் எனக்குமான உறவு ஆரம்பிப்பது 2006 ல். ’நான் கடவுள்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. நான் திரையுலகுக்கு வந்ததே 2005 இல்தான். கஸ்தூரிமான் வெளியாகியிருந்தது. எங்களூர்க்காரரும் நண்பருமான இயக்குநர், நடிகர் அழகம்பெருமாள் மணிரத்னத்தின் இணை இயக்குநர். மணிரத்னம் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையை விரிவாக்கம் செய்ய முடியுமா என்று என்னைக் கேட்டார். அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அப்போது ஒரு கதையை எப்படி சினிமாவாக ஆக்குவதென எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.


அந்தப் படம் தொடர்பாகவே நான் மணிரத்னத்தைச் சந்தித்தேன். கொஞ்சம் தயக்கத்துடன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே அந்தத் தயக்கம் இல்லாமலானது. அவரிடம் மிக உற்சாகமாக இலக்கியம் பற்றி பேசமுடிந்தது. அவரை நவீனத்தமிழிலக்கியத்திற்குள் ஆழமாகக் கொண்டுவரவும் என்னால் முடிந்தது. பொதுவாகத் தனிமைவிரும்பியும் அதிகமாக வாசிக்கக்கூடியவருமான அவரால் சரசரவென தமிழிலக்கியத்தின் முன்னோடிகள் பலரை வாசித்து முடிக்கமுடிந்தது. அவரிடம் அசோகமித்திரன் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கினார்.


ஒரு நண்பராக நான் அவரிடம் இலக்கியம் பற்றிப் பேசியதே அதிகம். ஒரு கட்டத்தில் இதனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியவற்றை இழக்கிறேன் என உணர்ந்து அதன்பின்னரே சினிமா பற்றி பேச ஆரம்பித்தேன். அவை எல்லாமே என்னைப்பொறுத்தவரை முக்கியமான தருணங்கள். என்னுடைய வட்டத்தின் பெரும்பாலான நண்பர்களை மணிரத்னத்துக்கு அறிமுகம் செய்தேன். அவர்களெல்லாம் இன்று மணிரத்னத்தின் நண்பர்களே.


நாங்கள் பேசிய முதல்படம் நடக்கவில்லை. சினிமாவில் கதைக்கருக்கள் எளிதாகக் காலாவதியாகிக்கொண்டே இருக்கும் என்பதே காரணம். அதன்பின் அவர் குரு படம் எடுக்கப்போனார். அதன்பின் இன்னொரு படம் பேசினோம், அதுவும் நடக்கவில்லை. அதன்பின் அவர் ராவணன் எடுத்தார். அதன்பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு பொன்னியின் செல்வன் செய்யலாம் என்றார். திரைக்கதை முழுமையாக எழுதப்பட்டபின் படம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகுதான் கடல்.


நான் தமிழின் முக்கியமான இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். நான் முழுக்க முழுக்க கவனித்த படமாக்கல்முறை என்றால் பாலாவுடையதுதான். அதன்பின் வசந்தபாலன். அதன்பின் படப்பிடிப்புகளில் நான் தெரிந்துகொள்ள ஏதுமில்லை என்று பட்டது. வெயில்வேறு தாங்கமுடியவில்லை. ஆகவே நான் படப்பிடிப்புத்தளங்களுக்குச் செல்வதேயில்லை. இருந்தாலும் ஒழிமுறி படத்தில் ஆரம்பம் முதல் இருந்தேன். அந்தப்படம் பாலா படமாக்கும் முறைக்கு நேர் தலைகீழ். மிகமிகமிகச் சிக்கனமான படமாக்கல்முறை கொண்டது.


Maniratnam’s-Kadal.jpg (300×300)

கடல் படத்தைப் பொறுத்தவரை நான் அதன் படப்பிடிப்பைக் கவனிக்கவில்லை. திரைக்கதை வடிவம் படமாக்கலில் எப்படி மாறுகிறது எனக் காண ஆர்வமாக இருந்தேன். நல்ல திரைக்கதையில் இருந்து நல்ல சினிமா ஒரு தாவு தாவி தன்னை அடைகிறது. இலைநுனியில் இருந்து ஆடி ஒரு கணத்தில் தாவிப் பறக்கும் பூச்சியைப்பிடிக்கும் தவளைபோல இயக்குநர் திரைக்கதையில் இருந்து பறந்தெழுந்து சினிமாவைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று படுகிறது.


சினிமா அப்படிக் காற்றில்தாவிச் செல்வதைப் பார்ப்பது ஒரு பெரிய அனுபவம். எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறதென இதுவரை என்னால் அறிய முடியவில்லை. இப்போது அதுவே என்னைக் கவர்ந்திழுக்கும் வசீகரம். அவ்வகையில் கடல் ஒரு பெரிய அனுபவம்


ஜெ


kadal_13558049261.jpg (480×428)

 நன்றி - ரைட்டர்  ஜெயமோகன் , லிங்க் கொடுத்த