24/4/2025 அன்று வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்று வருகிறது .நிச்சயமாக வடிவேலுவுக்கு இது ஒரு கம் பேக் படம் தான் . சுந்தர் சி க்கு இது வெற்றிப்படமா ? என்பதைப்பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு அரசுப்பள்ளி டீச்சர் . அந்தப்பள்ளி மாணவி ஒருத்தி மர்மமான முறையில் காணாமல்
போகிறாள் . உள்ளூர் போலீஸ் ஸ் டேஷனில் புகார் கொடுத்தும் பலன் இல்லை .அந்த ஊரில் செல்வாக்கு மிக்க அண்ணன் , தம்பி இருவரும் தான் வில்லன்கள் . எனவே நாயகி போலீஸ் கமிஷ்னருக்குக்கடிதம் எழுதுகிறாள் . இதனால் இது பற்றித்துப்பு துலக்க ஒரு போலீஸ் ஆபீசரை கமிஷனர் நியமிக்கிறார் . ஒரு ஆசிரியர் மாதிரி அங்கே போய் மர்மத்தை கண்டறிந்து வா என்கிறார்
அந்தப்பள்ளிக்கு இரண்டு பேர் புது ஆசிரியர்களாக வருகிறார்கள் . ஒருவர் நாயகன் , மற்றவர் காமெடியன் .இருவரில் யார் போலீஸ் என்பது தெரியாது . ஆனால் நாயகி நாயகன் தான் போலீஸ் என நினைக்கிறாள் . அந்தப்பள்ளியில் ஆல்ரெடி ஒரு காமெடியன் பி டி மாஸ் டர் ஆக இருக்கிறார் .நாயகன் இன்னொரு பி டி மாஸ் டர் ஆக வந்திருக்கிறான்
இன்னொரு புது வில்லனிடம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் ஒரு ரகசிய இடத்தில் இருக்கிறது . அதை ஆட் டையைப்போட நாயகன் திட்டம் தீட்டுகிறான் . தனது திட் டத்துக்கு உதவியாக நாயகி , இரு காமெடியன்களை துணைக்கு சேர்த்துக்கொள்கிறார் .நாயகனின் திட் டம் வெற்றி அடைந்ததா? காணாமல் போன மாணவி பற்றிய மர்மம் வெளியானதா? என்பது மீதி திரைக்கதை
அரதப்பழசான கதை தான் . பார்த்துப்பார்த்து சலித்துப்போன திரைக்கதை தான் . ஆனால் சுந்தர் சி யின் மேஜிக் தான் படத்தைக்காப்பாற்றுகிறது , அவருக்குப்பக்கபலமாக வடிவேலு
நாயகன் ஆக சுந்தர் சி வந்து போகிறார் . அவரது முகத்தில் உணர்ச்சிகளே இல்லை .எந்த சூழ்நிலைக்கும் ஒரே மாதிரியான முக பாவம் தான்
காமெடியன் ஆக வடிவேலு ஓவர் மேக்கப் . பல இடங்களில் சிரிக்க வைக்கிறார் .பழைய வடிவேலு படங்களில் இருந்தே காட் சிகளை உருவி பட்டி டிங்கரிங்க் செய்திருக்கிறார்கள் .தியேட் டரில் பெண்கள் , குழந்தைகள் சிரிப்பு அலை ஓயவில்லை .குறிப்பாக கடைசி 40 நிமிட காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
நாயகி ஆக கேத்ரீன் தெரசா கிளாமருடன் வந்து போகிறார் .அவரது வசன உச்சரிப்பு லிப் சிங்க் ஆகவில்லை . நாயகனின் மனைவி ஆக வாணி போஜன் கெஸ்ட் ரோலில் வருகிறார்
இன்னொரு காமெடியன் ஆக பகவதி பெருமாள் வருகிறார் .பெண்வேடத்தில் அவரது கெட்டப் கச்சிதம் .
வில்லன்கள் ஆக மைம் கோபி ,யம் அருள் தாஸும் மிரட்டுகிறார்கள் . மெயின் வில்லன் ஆக ஹரீஸ் பெரோடி வருகிறார் .ஓகே ரகம்
முனீஷ் காந்த் ,ரெடின் கிங்க்ஸ்லி , ஜான் விஜய் , சிங்கம்புலி என வீணடிக்கப்பட் ட நல்ல கலைஞர்கள் பட் டியல் நீளம்
சி சத்யனின் இசையில் இரு பாடல்கள் பரவாயில்லை ரகம் , பின்னணி இசை சுமார் ரகம். கிருஷ்ண சாமியின் ஒளிப்பதிவு கச்சிதம் .பிரவீன் ஆண்டனி இ எடிட்டி ங்கில் படம் 158 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதி கொஞ்ச்ம போர் தான் .பின்பாதியில் பின் பாதி அதாவது கடைசி 45 நிமிடங்கள் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
பத்ரி ,வெங்கட் ராகவன் ஆகிய இருவரும் வசனம் எழுதி இருக்கிறார்கள் ,வெங்கட் ராகவன்,சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார்கள். இயக்கி இருப்பவர் சுந்தர் சி
சபாஷ் டைரக்டர்
1 வழக்கமாக சுந்தர் சி படங்களில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் இருக்காது .ஆனால் விதிவிலக்காக இந்தப்படத்தில் இடைவேளை யில் ஒரு டிவிஸ்ட் , க்ளைமாக்சில் ஒரு டிவிஸ்ட் வருகின்றன . மெயின் வில்லன் , இரு வில்லன்களான அண்ணன் ,தம்பி ஆகிய யாருமே மாணவி காணாமல் போன மர்மத்துக்கு காரணகர்த்தா அல்ல . புது ஆள் .அந்த திருப்பம் அருமை
2 வழக்கமாக வடிவேலு உடல்மொழி , முகபாவனைகள் கொண்டு காமெடி ஒர்க் அ வட செய்வார் , இதில் சந்தானம் , விவேக் பாணியில் கவுண்ட் டர் அடிக்கும் காமெடியும் செய்கிறார்
3 பகவதி பெருமாள் , வடிவேலு இருவரும் பெண் வேடத்தில் வரும் காமெடி களை கட்டுகிறது
4 வசனம் எழுதிய இருவரும் நன்கு உழைத்திருக்கிறார்கள் , மொத்தம் 42 ஜோக்ஸ் . அவற்றில் 30 அருமை
ரசித்த வசனங்கள்
1 இனி நான் பி . டி மாஸ்டர் இல்லை , உனக்குப்போட்டி மாஸ்டர்
2 டேய் , மொட் டை மண்டையா
ஏய்
நீங்க எதுக்கு கதற னும் ?நீங்க அரை மண்டையன் தானே?
3 நான் சொல்லலை ? ( அப்பவே சொன்னேனே தொனியில் , )
நானும் சொல்லலை, நீங்களும் யார் கிட்டே யும் சொல்லிடாதீங்க
4 என்னைப்பார்த்தா உனக்கு எப்படித்தெரியுது ?
கொம்பு இல்லாத எருமை மாடு மாதிரி தெரியுது
5 நாம எல்லாரும் ஒரே விஷயத்தைப்பார்த்தாலும் ஒரே மாதிரி யாரும்பார்ப்பதில்லை
6 என்னம்மா? போன தடவை பார்த்ததை விட ஒரு சுத்து பெருத்திருக்கே?
நாங்க வெயிட் போட் டாலும் வெயிட் டா ஆடுவோமில்ல?
7 பாம்புக்குப்பயந்து பாம்புப்புத்துக்குள் நுழைந்த கதையா
8 அவனைப்பார், டேபிள் பேன் மாதிரியே திரும்பறானே?
9 குழந்தையைப்பெத்துக்கச்சொன்னா குள்ள சாத்தானைப்பெத்திருக்காங்க
10 டேய் , நீ தான் அடிச்சதா நீயா சொன்னாலும் நான் நம்ப மாட் டேன் , ஏன்னா நீ ஒரு டோமரு
11 எதிர்லயே அரை மணி நேரமா நிக்கறான் பிடிக்க முடியலை .இவனுங்க நண்டு பிடிக்கக்கூட லாயக்கில்லை
12 கோடிக்கணக்கில் பணம் கிடைக்குதுன்னா குறளி வித்தை வரை காட்ட தயாரா இருக்கோம்
13 தப்பான திசைல நாம் வேகமாப்போய்க்கிட்டு இருக்கோம்
14 குடிகாரன் குடியை விடுவதும் , புருஷன் ஆடி மாசத்தில் சம்சாரத்தைத்தொடாம விடுவதும்
ஒண்ணு தான் , ரெண்டும் ,நடக்காது
15 கொஞ்ச்ம பிசிறு தட்டினாலும் உசிரு போய்டும் . சார்லெசா இரு , கேர்லெசா இருக்காத
16 காட்டெருமைக்குப்பயந்து ரத்தக்காட்டே ரி கிட் டே மாட்டிக்கிட்டே ன்
17 என்ன? உன் கைகள் ஸ்ட்ராங்கா இருக்கு , ஆனா முகம் மட்டும் வயசான மாதிரி இருக்கு ?
கழுத்துக்குக்கீழ் யோகா பண்றேன் சார்
18 லாரி ஹெட் லைட்ஸ் மாதிரி கண்ணை வெச்சுக்கிட்டு மாட்டி விட்டுடுவான் போலயே?
19 போலீஸ் னா கெத்தா இருப்பான்னு பார்த்தா செத்த பாம்பு மாதிரி இருக்கான் ?
20 நான் தலைமறையா இருந்தப்போ என் தலையை மட்டும் மறைத்தேன் ,என் குணத்தை மறக்கலை
21 ஆபரேஷன் சிங்காரம்னா சும்மாவா?
நான் எப்படாஆபரேஷன் செஞ்சென் ?
22 சரவணன் , ஜாக்கிரதை
கூடபோறது நான்
அதனாலதான் ஜாக்கிரதை னு சொன்னேன்
23 என்ன மரம் சாயுது செக் போஸ்ட் மாதிரி ?
24 இந்த வீட்டில் 50 , 60 பேரு வேலை பார்க்கறாங்க , ஒருத்தன் கூட நம்மைப்பார்க்கலை , நாமரெண்டு பேரும்தான் ஒருவரை ஒருவர் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருக்கோம்
25 கீ எங்கே ?
நீ எங்கே என் அன்பே
26 முடியாதுன்னு நீ சொல்ற விஷயத்தை எங்கோ இருந்து ஒருத்தன் முடிச்சுக்கிட்டு தான் இருக்கான்
27 லேடிஸ் டாய்லெட் ல நீ என்னடா பண்ணிட்டு இருக்கே?
இது சிசிடிவி ரூம்
28 இவளை நான் கெடுத்தேனா ?இவளே கெட்டுப்போன பலாப்பழம் மாதிரி இருக்கா
என்ன ?கரெக்ட்டா சொல்றான் ?
29 இவன் பேண்ட் டைக்கழட்டிப்பாருங்க .தொடைல ஒரு ஓட் டை இருக்கும்
ஓட் டையா? நான் என்ன உளுந்து வடையா?
30 நீ அந்த 100 கோடியை அப்புறமாக்கொ டு , இப்போதைக்கு ஒரு 12 ரூபா கொடு . ஒரு ஜூஸ் வாங்கிக்குடிக்கணும் , தெம்பில்லை
31 இவங்களோட சேர்ந்ததுக்கு எதுனா சர்க்கஸ்ல போய் வேலைக்கு சேர்ந்து இருந்திருக்கலாம் போல
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 என்னதான் காமெடியன் என்றாலும் பி டி மாஸ் டர் தொப்பையுடன் இருக்கலாமா?ட்ரிம் ஆக இருக்க வேண்டாமா?
2 இரு வேறு முக்கியமான கட்டங்களில் இரு நாயகிகளும் நாயகனுக்கு போன் செய்யும்போது இரைச்சல் ,பேசுவது கேட்கவில்லை .வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பி இருக்கலாமே?
3 சினிமா தியேட்ட்ர் மேனேஜரின் மனைவிக்கு 4 கள்ளக்காதலர்கள் , அவர்கள் பெயரை ஹஸ்பெண்ட் 1 , ஹஸ்பெண்ட் 2 , ஹஸ்பெண்ட்3 ஹஸ்பெண்ட் 4 என செல் போனில் அவர் சேவ் செய்து வைத்திருக்கிறார் . கணவர் பார்க்க மாடடாரா?
4 பெண்கள் , குழந்தைகள் பார்க்கும்படி என் படம் இருக்கும் என சுந்தர் சி பேட்டி கொடுத்திருந்தார் , 4 இடங்களில் டபுள் மீனிங்க் டயலாக்ஸ் வருது
5 டீச்சர் ஆக வரும் நாயகி கிளப் டான்சில் குத்தாட் டம் போடுவது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்
6 லுங்கி டான்ஸ் பாட்டின் பிஜிஎம்மை சுட்டிருக்கிறார்கள்
7 வடிவேலு அடிக்கடி நான் கருப்புத்தான் என டயலாக்காக படத்தில் சொல்கிறார் , ஆனால் ராமராஜன் மாதிரி ரோஸ் பவுடர் அடித்து கலராக வருகிறார் .ஓவர் மேக்கப்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -கேங்கர்ஸ் (2025) பலரும் சிலாகித்தபடி இந்தப்படம் பிரமாதமான காமெடி எல்லாம் இல்லை . முதல் பாதி சராசரி மசாலாக்கதை , பின் பாதியில் பின் பாதி 40 நிமிடங்கள் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது . குழந்தைகள் ரசிப்பார்கள் , விகடன் மார்க் ( யூகம் ) -41..ரேட்டிங் 2.75 / 5
thanx to anicham 1/5/2025
0 comments:
Post a Comment