Monday, February 28, 2011

ஈரோடு தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்கள்

http://www.baiwan.org/images/new%20school%20building.jpg 
ஈரோடு ஜி ஹெச் அருகில் சவீதா பஸ் ஸ்டாப் அருகே உள்ள கலைமகள் கல்வி நிலையம் நீண்ட வருடங்களாக நல்ல பெயர் வாங்கி வந்த ஸ்கூல்.பத்தாவது ரிசல்ட் வந்தாலே 100% கன்ஃபர்ம் தான்.இப்படி எல்லா இடங்களிலும்,எல்லா மாணவிகளிடமும் நல்ல பெயர் வாங்கி வந்த அந்த ஸ்கூலுக்கு 2 வருடங்களுக்கு முன் சோதனைக்காலம் ஆரம்பித்தது.

அதாவது இன்ஸ்பெக்‌ஷன் வந்த ஆஃபீசர்ஸ் கலைமகள் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் விதிகளின் படி கட்டப்படவில்லை,விதிமுறைகளை மீறி உள்ளது எனவே லைசென்ஸ் ரத்து செய்யப்பட போகின்றது  என ஒரு குண்டைத்தூக்கிப்போட்டனர்.

6வது வகுப்பு முதல் 12 வது வகுப்பு வரை உள்ள கலைமகள் ஹையர் செகண்டரி ஸ்கூல் எந்த பிரச்சனையும் இல்லை.  எல் கே ஜி ,1 வது முதல் 5 வது வரை செயல்படும் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மாடியில வகுப்பு உள்ளது என காரணம் சொன்னார்கள். பாத்ரூம் வசதியும் கிடையாது என்றார்கள்.

நிர்வாகம் என்னென்னவோ செய்து பார்த்தது ,நடக்கவில்லை. விபரம் அறிந்த பெற்றோர்கள் சிலர் டி சி வாங்கி வேறு ஸ்கூலில் மாணவிகளை சேர்த்து விட்டார்கள்.

ஆனால் இப்போதும் அந்த ஸ்கூல் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே தான் நடந்து வருகிறது.மாடியில் இயங்குகிறது.பாத்ரூம் வசதிகள் முறையாக இல்லை.இடையில் என்ன நடந்தது? எப்படி கவனிக்கப்பட்டார்கள் ?எவ்வளவு பணம் கை மாறியது என்று தெரிய வில்லை.

ஒரு வகுப்பில் 55 முதல் 65 மாணவிகள் இந்த மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படிக்கிறார்கள். சராசரியாக 40 மாணவிகளை மட்டுமே ஒரு டீச்சரால் நிர்வகிக்க முடியும் என டீச்சரே சொல்கிறார். ( எனது பெரியம்மா பெண் அங்கே டீச்சர்)

அதே போல் மாமரத்துப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியைகளுக்கு 3 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை.காரணம் சமீபத்தில் தனியார் பள்ளிகள் ஃபீஸ் வசூலிப்பதில் வந்த தடை. அவர்கள் சவுகரியத்துக்கு வசூல் பண்ண முடியாது என்றும் அரசு நிர்ணயித்த அளவே வசூல் பண்ண வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் நிர்வாகம் பழையபடியே வசூல் செய்தது. பெற்றோர்கள் எதிர்த்தனர், சிலர் தர மறுத்தனர். அப்படித்தராத ,ஃபீஸ் கட்டாத குழந்தைகள் தனியே அமர வைத்து சரியாக பாடம் சொல்லித்தராமல் தனிமைப்படுத்துகிறார்கள்.இது மனவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நிர்வாகம் உணர வேண்டும்.

மேலும் டீச்சர்களுக்கு சம்பளம் தராததால் அவர்கள் ஏனோ தானோ என பாடம் நடத்துகிறார்கள்.வேண்டா வெறுப்பாக செய்ய இது ஆஃபீஸ் உத்தியோகம் அல்ல.

ஸ்கூ;ல் ஃபீஸ் வாங்கி அதில்தான் சம்பளம் என அடம் பிடிக்கும் பள்ளி நிர்வாகி ஒரு கோடீஸ்வரர். பல பிஸ்னெஸ் செய்பவர்.அவர் ஸ்கூலில் பல லாபம் பார்த்த போது  இப்போது செம லாபம் எனவே உங்கள் சம்பளம் முன் கூட்டியே வழங்கப்படுகிறது என்றாரா? இல்லை. அப்படி இருக்க ஃபீஸ் சரியாக வசூல் ஆகலை என்பதை காரணம் காட்டி டீச்சர்களுக்கு சம்பளத்தை நிறுத்துவதால் அவர்கள் மனம் பாடம் நடத்துவதில் ஈடுபடுவதில்லை. அது மாணவிகளைத்தான் பாதிக்கிறது.

அதே போல் ஸ்கூல் மாணவிகளும் சரி, டீச்சர்களும் சரி யூனிஃபார்ம் பள்ளி நிர்வாகம் கொடுப்பதைத்தான் வாங்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள்.இதன் மூலம் பள்ளி நிர்வாகம் அடிக்கும் பணம் ஏராளம்.

நான் முன்னாள் கார்மெண்ட்ஸ் ஓனர் என்ற முறையில் இது பற்றி நன்கு அறிவேன்.உதாரணமாக ஒரு சட்டை தையற்கூலி ரூ 60 என வைத்துக்கொண்டால் பல்க் ஆர்டர் அதாவது ஒரு ஸ்கூல் 2000 பேர் 4000 சர்ட் என்றால் வாங்கப்படும் கூலி ஒரு சர்ட்டுக்கு ரூ 35 மட்டுமே...ஆனால் டீச்சர்களிடமும், மாணவிகளிடமும் ரூ 60 கணக்கு போட்டே வங்கப்படுகிரது. இதே போல் தான் துணிகளும்.

ஸ்கூல் ஃபீஸ் வாங்கியே செம லாபம் பார்க்கும் பள்ளிகள் இது போல் யூனிஃபார்மில் பகல் கொள்ளை அடிப்பது முறையா?இதை யார் தட்டிக்கேட்பது?இதற்கு  என்னதான் தீர்வு?

குடிகாரருடன் கூட்டணி ஏன்?


http://sirippu.files.wordpress.com/2007/02/image004.jpg 
1. மோஹனா,  மெரீனா  பீச்ல  வெயிட்  பண்ணு.  6 p.m.-க்கு  நானும் , சதீஷும்  வர்றோம்எங்க  2  பேர்ல  யாரை  லவ்  பண்றேனு  தெளிவா  ஒரு  முடிவு  சொல்லிடு.

ஓக்கேஸ்பெக்ட்ரம் மாதிரி முதலில்  வருபவர்க்கே  முன்னுரிமைமறந்துடாதீங்க?

--------------------------------------------


2. தலைவருக்கு  அரசியல்  செல்வாக்கு  இருந்தும்  ஏன்  பெயில்-  வெளில  வர்லை?

பேப்பர்  நியூஸ்-  தலைவர்  ‘பெயில்’-னு  போடுவாங்கஏற்கனவே  ஸ்கூல்  லைஃப்ல  பல  பல  FAILS  பார்த்தாச்சு.

-----------------------------------------


3. தலைவர்  தி.மு.அவர்  சம்சாரம்  .தி.மு.பையன்  காங்கிரஸ். வீட்ல  சண்டை  வராதா?

அட  நீங்க  வேறமூணு  பேரும்  கட்சில  சீட்  வாங்கிட்டாங்கஇப்ப பாருங்க...  ஒரே  குடும்பத்துல  3  M.L.A.  இதுதான்  ரியல்  அரசியல்  குடும்பம்.

-------------------------------------


4. ரவுடி  அரசியலில்  எனக்கு  நம்பிக்கை  இல்லைனு  தலைவர்  சொல்றாரே?

அவரோட  கட்சில  இருக்கற  ரவுடிகளை  நம்ப  முடியறதில்லையாம். திடீர்  திடீர்னு  கட்சி மாறிடறாங்களாம்.

-----------------------------------------------


5. தலைவர்  ஒரு  கறார்  பேர்வழியாமே.

ஆமா...  20  சீட்டாவது  வேணும்னு சொன்னவர் இப்போ 2 சீட்னாலும் ஓக்கேங்கறார், கூட்டணிக்கு  தயார்ங்கறார்அரசியலில்  நிரந்தர  எதிரி  இல்லைங்கறார்.

----------------------------------------------
 http://thatstamil.oneindia.in/images21/cinema/radhika-300a1.jpg

6. ஆட்சியில்  பங்கு  வேணும்னு  தலைவர்  கேட்கறாரே...  எப்படி  சமாளிக்கப்  போறாங்க...?

நேஷனலிஸ்டு  BANK  (பாங்க்)நாலை  அவர்  பேர்ல  எழுதி  வெச்சு  உடன்படிக்கை ஏற்படற  மாதிரி  பண்றாங்களாம்.

------------------------------------


7. தலைவர்  ஒரு  சந்தர்ப்பவாதியாமே?

ஆமா...   மகளிர்  அணித்தலைவி  கூட  எப்படி  இல்லீகல்  காண்டாக்ட் வெச்சுக்கலாம்னு  சந்தர்ப்பத்தை  எதிர்பார்த்துட்டு  இருக்காரு.

------------------------------------


8. வெற்றி  அல்லது  வீர  மரணம்-னு  தலைவர்  அறிக்கை  விட்டிருக்காரே?

சப்போஸ்  அவரால  தொகுதில  ஜெயிக்க  முடியலைன்னா  எதிர்த்து  நிற்கற  ஆளுக்கு  வீரமரணம்  பரிசா  வழங்கப்  போறாராம்.

--------------------------------------


9. அரசியல்வாதிகள்  ஓட்டுப்பொறுக்கிகள்னு  சொன்னதும்  தலைவர்  கோபப்படறாரே?

ஆமா...  அவர்  சாதாரண  பொறுக்கிதானாம்.

------------------------------------


10. தலைவர்  ஒரு  லேடி  சபலிஸ்ட்-னு  எப்படி  சொல்றே?

என்னைக்  கவர்ந்த  பெண்கள்ங்கற  தலைப்புல  ஒரு  கட்டுரை  கேட்டதுக்கு  12,000  பெண்கள்  லிஸ்ட்  குடுத்தாராம்.

--------------------------------------

11. எப்பவும் போதைலயே இருக்கறவர்னு கேவலமா திட்டிட்டு இப்போ அவர் கூடவே கூட்டணி வெச்சிருக்கீங்களே.. ஏன்?

தண்ணி அடிச்சுட்டு 24 மணி நேரமும் போதைலயே இருப்பாரு.. நம்மை எந்த கேள்வியும் கேட்க மாட்டாரு...இந்த மாதிரி கேள்வியே கேட்காத ஆள்தான்யா கூட்டணிக்கு சவுகர்யம்...
----------------------------------------------

டிஸ்கி 1-  சில நாட்களுக்கு முன் நான் எழுதிய  பதிவான

சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?

 புதிய தலைமுறை இதழ் நிருபரான திரு யுவகிருஷ்ணா அவர்கள் நான் படித்ததிலேயே சிறந்த மொக்கைப்பதிவு இதுதான் என கமெண்ட் போட்டு கூகுள் பஸ்சில் பிரபலப்படுத்தினார். அதுவரை 2300 பேர் மட்டுமே படித்த அந்த இடுகை 3876 பேர் படிக்க உதவினார், அவருக்கு மிக்க நன்றி. தொடர்ந்து என் எல்லா பதிவுகளையும் இதேபோல் திட்டி கமெண்ட் போட்டு என் பதிவுகளை ஹிட் ஆக்கும்படி அவரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 2 - ஹிட்ஸின் வெற்றி ரகசியம் தெரியாமல் இத்தனை  நாட்களாக மண்டையை  உடைத்துக்கொண்டிருந்த எனக்கு இப்போதான் பதிவுலக சூட்சுமம் புரிந்திருக்கிறது. எனவே இனி ரெகுலராக எனக்கு கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் தளத்திலோ,அல்லது கூகுள் பஸ்ஸிலோ என் பதிவின் லிங்க் கொடுத்து நான் படிச்ச மொக்கை பதிவு, மோசமான பதிவு , ரொம்ப கேவலமான பதிவு என கமெண்ட் போட்டு என் பதிவை பிரபலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.ஹி ஹி 

டிஸ்கி - 3 : சனி ,ஞாயிறு நெட் பக்கம் வராதவர்களுக்காக 



3. ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்

 

4. DRIVE ANGRY - ஹாலிவுட் சினிமா விமர்சனம் - 18 +

 

Sunday, February 27, 2011

DRIVE ANGRY - ஹாலிவுட் சினிமா விமர்சனம் - 18 +

http://www.traileraddict.com/content/summit-entertainment/drive_angry.jpg
தமிழனின் காதில் பூ சுற்றும் உரிமையும், திறமையும் நமது தன்மானத்தமிழர் டாக்டர் கலைஞருக்கும், புரட்டுத்தலைவி ஜெவுக்கும் மட்டும் தான் உண்டு என நாம் நம்பி வந்த இந்த கால கட்டத்தில் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் காதில் பூவை மட்டும் அல்ல ,பூக்கூடையையே வைக்கும் கதை ,திரைக்கதையுடன் களம் இறங்கி இருக்கிறார்கள்  அதுவும் ரசிக்கும் விதத்தில்.

பொதுவாக தமிழனுக்கு ஒரு பழக்கம் உண்டு... தமிழில் இந்த மாதிரி நம்ப முடியாத கதை வந்தால் கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வாங்களே என எள்ளி நகையாடுவான்.அதுவே ஹாலிவுட்ல வந்தா மம்மியைக்கண்ட ஓ பன்னீர் செல்வம் மாதிரி பம்மிக்கிட்டே படத்தை ரசிப்பாங்க...

சரி .. படத்தோட கதை என்ன? தன்னோட பெண்ணை கொலை செய்த வில்லன் குரூப்பை பழி வாங்குற அப்பாவோட கதை தான்.. இதுல காதுல பூ மேட்டர் என்ன>ன்னு கேக்கறீங்களா? பொண்ணோட அப்பாவும் இறந்துடறாரு. நரகத்துல எம கிங்கரர்கள் அஜாக்கரதையா இருந்தப்ப தப்பி பூலோகத்துக்கு வந்துடறாரு.(ராம்தாஸ் திடீர்னு கலைஞர் கூட்டணிக்கே வந்த மாதிரி).பழி வாங்கும் படலத்தினை முடிச்சுட்டு பேத்தியை (மழலை) ஹீரோயின் கைல ஒப்படைச்சுட்டு  மறுபடி கார்ல (புஷ்பக விமானம்!!!) பேக் ட்டூ பெவிலியன் கணக்கா போயிடறாரு.


http://www.onlinemovieshut.com/wp-content/uploads/2010/08/Untitled-1.jpg
ஆனா இந்த சாதாரண கதைக்கு திரைக்கதை அமைத்த விதம், காட்சிகளில்,ஒளிப்பதிவில் காட்டி இருக்கும் பிரம்மாண்டம் இதை ஒரு வெற்றிப்படமாக்கி இருக்கு.ஓப்பனிங்க் சீன்ல பார்ல வேலை செய்யற  2 ஃபிகர்கள்ட்ட பேசி தகவல் கறக்கற இடம் செம ஜாலி. அப்போ ஒரு லிப் டூ லிப் சீனும் உண்டு.

அஜால் குஜால் ரசிகர்களை திருப்திப்படுத்தற மாதிரி ஒரு கலக்கலான டாப்லெஸ் சீனும் உண்டு.. எஞ்ஜாய்.

அர்னால்டு ஸ்வார்ஜெனேகர் நடிச்ச த டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்தோட பாதிப்புகள் பல இடத்துல வர்றதை டைரக்டர் தவிர்த்திருக்கலாம்.ஹீரோ நிக்கோலஜ் கேஜ் நல்லா பண்ணி இருக்காரு.. ஜீன் கிளாடு வாண்டம் பண்ண வேண்டிய கேரக்டர்.

http://static.igossip.com/photos_2/january_2011/Drive_Angry_3D_amber_heard.jpg
ஹீரோயின் நல்ல ஃபிகர் தான். அவர் ஓனரிடம் சண்டை போட்டுட்டு உடனே ரிசைன் பண்ணுவது, காதலன், காதலி வரமாட்டாங்கற நம்பிக்கைல வேற ஒரு ஃபிகர் கூட அவ வீட்லயே ஜல்சா பண்ணிட்டு இருக்கறது, அவளைப்பார்த்ததும் சண்டை  போடறது எல்லாமே டிராமா மாதிரி இருந்தாலும் ரசிக்கற மாதிரி இருக்கு. ( ஆமா.. சீன் இருக்குல்ல.. ரசிக்காம..?)

அதுக்குப்பிறகு ஹீரோயின் காதலனை கழட்டி விட்டுட்டு ஹீரோ கூட சேர்ந்து பயணப்படறது முதல் ஆக்‌ஷன் அதகளம்.படம் செம ஸ்பீடு... படம் லாஜிக் ஓட்டைகளையும் , திரைக்கதை சொதப்பல்களையும் மீறி விறுவிறுப்பா போகுதுன்னா டைரக்டரின் சாமார்த்தியமான டைரக்‌ஷன் தான்.

ஹீரோவின் பேத்தி ( 2 மாச அட்டுக்குழந்தை)யை நர பலி கொடுக்க வில்லன் குரூப் முயல்வது.. அதை ஹீரோ தடுப்பது எல்லாம் ராமநாராயனன் படம் மாதிரி இருக்கு.

கடைசில ஹீரோ வில்லனை கொன்னு பழி வாங்குன பிறகு வில்லனோட மண்டை ஓட்டுல ரத்தம் குடிக்கற சீன் ரொம்ப கொடூரம். எப்படி சென்சார்ல விட்டாங்களோ?

நரகத்துல இருந்து கடவுளோட தூதுவனா வர்றவரு (!!!???) ஒவ்வொரு முறை போலீஸ் சூழும்போதும் பதட்டப்படாம ஒரு காய்னை தூக்கி மேலே வீசுவதும், அது கீழே வரும்போது FBI  ID CARD டாக வருவதும் கொள்ளை அழகு. செம ஸ்டைலிஸ்ஸான சீன் அது.( கோலிவுட் உல்டா டைரக்டர்ஸ் நோட் டவுன் ப்ளீஸ்)


http://collider.com/wp-content/uploads/Amber-Heard.jpg

வேகமாக போகும் படத்தில்  வந்த விவேகமான வசனங்கள்

1. ஹீரோ - இது என் பர்ஸ்.. உன் கைக்கு எப்படி வந்தது?


ஹீரோயின் - இது என்ன கேள்வி? திருடுனேன்.

2.   ஹீரோயின் - அவனை உங்களுக்கு முதல்லயே தெரியுமா?

 ஹீரோ - ம் , அவனோட அக்கா எனக்கு ஃபிரண்டு....

ஹீரோயின் - ஓஹோ, அதான் உங்களை முறைச்சு முறைச்சு பார்த்தானா?

3.  வண்டியை நிறுத்து.......

ஸாரி.. எனக்கு வேலை இருக்கு... 

டேய்.. இது போலீஸ் உத்தரவு...... துப்பாக்கிக்காவது மரியாதை குடுங்கடா...

4. அடக்கடவுளே......

ஆமா.. நிஜமாவே நான் கடவுள் தான். இன்றைய ட்ரெண்டுக்குத்தக்கபடி கெட்டப் மாத்திக்கிட்டேன்.

5.  அய்யய்யோ.. நான் பயத்துலயே செத்துடுவேன் போல இருக்கே...

கவலைப்படாதே.. உனக்கு 72 வயசு வரை ஆயுள் கெட்டி... உனக்குப்பக்கத்துல கவலை இல்லாம தெனாவெட்டா நிக்கறானே.. அவனுக்கு இன்னும் 4 நாள் தான் ஆயுள்....

6. மனைவிக்கு நல்ல கணவனா நடந்துக்காதவன் கூட தன்னோட மகளுக்கு ஒரு நல்ல அப்பாவா நடந்துக்கற அதிசயத்தை நாம தினம் பார்த்துட்டுதான் இருக்கோம்.

7. நமக்குப்பிரியமானவங்களுக்கு நடக்கர கொடுமையை நாம நேர்ல பார்த்துடா அந்த காட்சி காலாகாலத்துக்கும் நம்ம மனக்கண்ல வந்துட்டு வந்துட்டு போறதை தடுக்க முடியாது...

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல 3டி எஃப்ஃபக்ட் இல்லாம பார்த்தேன். ஆனா போஸ்டர்ல 3 டி அப்படின்னு போட்டிருக்கு. ஒரு வேளை சென்னைல அப்படி இருக்கலாம்.ஆக்‌ஷன் பட பிரியர்கள், ஒரு சீன் இருந்தாலும் அந்தப்படத்தை மிஸ் பண்ணிடக்கூடாது என்ற லட்சியம் (!!!??) உள்ளவர்கள் பார்க்கலாம்.







ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்



    Saturday, February 26, 2011

    ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்


    http://mp3.tubeindia.net/wp-content/plugins/wp-o-matic/cache/ff066_Aaraan-Tamil-Movie-2011-ACD.jpg

    கோடம்பாக்கத்துல அடிக்கடி ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கனும்னு ஒரு குரல் அடிக்கடி கேட்டுட்டே இருக்கும், அல்லது ஒலிச்சுட்டே இருக்கும் (2ம் ஒண்ணுதானோ?)அது இந்தப்படத்தோட டைரக்டருக்கு அப்படியே உள் மனசுல பதிஞ்சுடுச்சு போல.. அப்படியே ஆங்கிலப்படமாட்டமே எடுத்திருக்காரு.....

    அதாவது படமாக்கம், கதை ,திரைக்கதை போன்றவற்றில் அப்படி என அர்த்தம் இல்ல. மொத்தப்படமே 90 நிமிஷம்தான்.( அதுக்கே முடியல)

    அறிமுக நாயகன் அஜய் நம்ம தன்மானச்சிங்கம் டி ராஜேந்தருக்கு தம்பி மாதிரி இருக்காரு. பாக்கவே சகிக்கலை.இதுல கலரிங்க் ஹேர் வேற. கலரிங்க் ஹேரோட அவர் நடந்து வர்றப்ப புதுமைப்பித்தன்  ஆர்.பார்த்திபன் மாதிரியே இருக்காரு.(உவ்வே..)

    தமிழ் சினிமாவில் காமெடிக்காட்சிகள் குறைந்து வருகின்றன  என சமீபகாலமாக குற்றம் சொல்லுபவர்கள் இந்தப்படத்தில் ஹீரோ போடும் ஃபைட் சீன்களையும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களையும் பார்த்தால் போதும். வயிறு குலுங்க சிரிக்கலாம். செம காமெடி நைனா...
    http://www.cinemaexpress.com/Images/article/2010/10/24/ban.jpg
    ஹீரோயின் புது முகமாம்....இதை நாங்க நம்பனுமாம். சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கு போல.... பார்ட்டி பேரு சோனியா பட்.ஃபிகர் பார்க்கற ஆசையே விட்டுப்போயிடும் போல.

    எனக்கு ஹீரோ - ஹீரோயின் ரெண்டு பேரும் சொதப்பலா அமைஞ்சது கூட வருத்தம் இல்ல, படம் டப்பாவா போனது கூட ஓக்கே.. இந்த புரொடியூசரை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.எந்த நம்பிக்கைல பணம் போட்டாரு.?இதையும் நம்பி எப்படி படம் எடுத்தாரு? எப்படி தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு?

    சரி படத்தோட கதை என்ன?ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர்.. ( இவ்வளவு கேவலமான போலீஸ் ஆஃபீசரை நான் என் லைஃப்லயே பார்த்ததில்லை.). அவரை ஒரு பொண்ணு விரட்டி விரட்டி லவ் பண்ணுது.(அந்த பொண்ணே வறட்டி மாதிரிதான் இருக்கு ) ஹீரோ வற டீ மாதிரி இருக்கார். நல்ல ஜோடி பொருத்தம்.

    அந்த ஊர் தாதா அண்ணாச்சி.ஹீரோயின் கிட்டே சொல்றாரு. உன் ஆளை நாங்க போட்டுத்தள்ளாம இருக்கனும்னா நீ அவனை லவ் பண்ற மாதிரி நடிச்சு உன் வலைல விழுந்த பிறகு விலகி வந்துடனும்.அவன் ஆற்றாமையில வெந்துடுவான். அதான் எனக்கு வேணும்.

    http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_47328913212.jpg
    லவ் பண்ணுற மாதிரி நடிக்கற ஹீரோயின் நிஜமாவே லவ் பண்ண ஆரம்பிச்சுடறா..ஒரு கட்டத்துல ( ஏன் சதுரத்துல இல்லையா?) எதிர்பாராத விதமா ஹீரோயினை வில்லன் கொன்னுடறாரு.அப்புறம் ஹீரோ பைத்தியம் மாதிரி வேஷம் போட்டு ( வேஷம் போடாமையே அவரு அப்படித்தான் இருக்காரு.) வில்லனை கொன்னுடறாரு. மொத்தத்துல படம் பார்க்கற ஆடியன்சை கொன்னெடுத்துடறாங்க...

    மழையே மழையே மார்கழி மழையே பாட்டு வரிகள் நல்லாருக்கு. பாடல் படமாக்கப்பட்ட விதம் படு திராபை.அப்ப்புறம் மின்னல் சூரியனா?ன்னு ஒரு பாட்டு படு கேவலம்.அதற்கான சிச்சுவேஷன் காக்கிச்சட்டை பட்டுக்கன்னம் பாட்டுக்கான அதே இடம்.

    படத்துல வர்ற எல்லா நடிகர்களுமே ஏதோ நாடக நடிகர்கள் மாதிரி வந்து வசனத்தை ஒப்பிக்கறாங்க... 

    படு கேவலமான இந்த படத்துலயும் வந்த சில நல்ல வசனங்கள்

    1.  உனக்கு எது நல்லதுன்னு நினைச்சு அதை மட்டும் செய்டா..

    சரி சரி.. நாயர் கடைல டீ சொல்லு 4 பேருக்கும்.நாயருக்கு நல்லது.


    2.கைதி - ஏட்டய்யா.. உங்க முகத்தையும்,லாக்கப் சுவரையும் பார்த்து பார்த்து போர் அடிச்சிடுச்சு.ஏதாவது டி வி இருந்தா போடுங்க...

    யோவ்.. அதெல்லாம் பெரிய தப்பு பண்ற அரசியல் வாதிகளுக்கு... நீ சின்னத்தப்பு தானே பண்ணி இருக்கே..?

    அப்போ ரிலீஸ் பண்ணி விடுங்க.. போய் பெரிய தப்பு பண்ணிட்டு வர்றோம்.

    3. டேய்.. என்னை என்ன பைத்தியம்னு நினைச்சீங்களா?

    ம்ஹூம், எந்தப்பைத்தியம் தன்னை ஒரு பைத்தியம்னு ஒத்துண்டிருக்கு.?

    http://farm6.static.flickr.com/5007/5370031823_10e7d7cac7_o.jpg
    4. ஹீரோ - ஐ லவ் யூ

    ஹீரோயின் - வாட்?

    ஹீரோ - ம் நான் உன்னை காதலிக்கிறேன்..

    ஹீரோயின் - ஓ. தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்றீங்களோ// ( இது காமெடி சீன்.. கை தட்டனும் )

    5. வில்லன் - நான் உயிரோட இருக்கறப்பவே எல்லாவித மரியாதையும் எனக்கு கிடைக்கனும்.

    6. முதன் முதலாக காதலை வெளீப்படுத்திய பிறகு ஹீரோ - ம் எங்கே போலாம்?

    ஹீரோயின் -   ம்.. எங்கே வேணும்னாலும். ( வாழ்க பத்தினி )
    (
    7. ஹீரோயின் - இந்த டிரஸ்நான் எப்படி இருக்கறேன்? ( எந்த டிரஸ் போட்டாலும் நீ தேற மாட்டே)

    ஹீரோ  - சகிக்கல  ( அப்படி இருந்தும் விட மாட்டேங்கறியே..)

    8. ஹீரோவின் அம்மா - பெரிய மனுஷங்களை பகைச்சுக்காதேப்பா.. நாம் போற வழில பள்ளம் இருந்தா ஒண்ணூ தாண்டிப்போகனும், அல்லது சுத்திப்போகனும்.. நீ அந்த பள்ளத்துலதான் இறங்கிப்போவேன்னு சொன்னா எப்படி?

    9/. ஒரு பொண்ணு லவ் பண்ணாமயே வேணா இருப்பா.. ஆனா லவ் பண்றதா நடிக்கறேன்னு எல்லாம் சொல்ல மாட்டா...

    10. வில்லன் - பொண்ணுங்க விஷயத்துல நான் வீக் கிடையாது. அப்படி நான் வீக்கா இருந்தா தலைவன் ஆகி இருக்க முடியாது. ( தமிழ்நாட்ல பெண்கள் விஷயத்துல வீக்கா இருக்கறவங்க தான் பெரிய பெரிய கட்சிப்பதவிகள்ல இருக்காங்க )

    இந்தப்படம் ஏ ,பி , சி ஆகிய 3 செண்ட்ட்ர்லயும் தலா 3 நாட்கள் ஓடுனாலே அதிசயம் தான்.

    ஆனந்த விகடன், குமுதம் மூச்...........ஸ்டில் கூட போட மாட்டாங்க.....



    டிஸ்கி - 2   மார்கழி 16 - அழகிய காதல் சொதப்பல் - சினிமா விமர்சனம்

    Friday, February 25, 2011

    மார்கழி 16 - அழகிய காதல் சொதப்பல் - சினிமா விமர்சனம்

    http://todaynews.yolasite.com/resources/Margazhi%2016.jpg 
    மொக்கைப்படங்களுக்கு விமர்சனம் போடறதால உங்களுக்கு என்ன லாபம்? அதைப்படிக்கிற எங்களுக்கென்ன லாபம்?அல்லது நாட்டுக்குத்தான் என்ன பிரயோஜனம்?னு நிறைய பேரு என்னைக்கேக்கறப்ப எல்லாம்  அவங்களுக்கு சரியான பதிலடி தர முடியாம தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. இன்னைக்கு எனக்கு ஒரு சான்ஸ்......

    இந்தப்படத்து மூலமா இதுவரை தெரிஞ்சுக்காத சில அரிய வரலாற்று உண்மைகளை தெரிஞ்சுக்கிட்டேன்...படத்தோட விமர்சனத்துக்குப்போறதுக்கு முன்னால அந்த மேட்டரை (சீ... சீ ,,,,அது இல்லை...) உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கறேன்.

    1. ஒரு ஃபிகரைப்பார்த்ததும் இது தேறுமா? தேறாதா?ன்னு எப்படி கண்டுபிடிக்கறது..? அதாவது நமக்கு இது செட் ஆகுமா? ஆகாதா?ன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?

    பொதுவா டீன் ஏஜ் பொண்ணுங்க ரெட்டை ஜடை போட்டிருப்பாங்க.1 ஜடை முன்னால எடுத்தும் ஒரு ஜடை பின்னால எடுத்தும்  போட்டிருப்பாங்க..நம்மைப்பார்த்ததும் அவங்களுக்கு  நம்மைப்பிடிச்சிருந்தா பின்னால இருக்கற ஜடையை எடுத்து முன்னால போட்டுக்குவாங்க..பிடிக்கலைன்னா முன்னால இருக்கற ஜடையை பின்னால தூக்கிப்போட்டுக்குவாங்க....

    இந்த உண்மை தெரியாம இத்தனை நாளா வேஸ்ட் பண்ணீட்டனேன்னு நினைக்கும்போது.... (ம்க்கும்.. தெரிஞ்சிருந்தா மட்டும் என்னத்தை கிழிச்சிருக்கபோறே..?)

    http://www.cinemaexpress.com/Images/article/2010/2/20/margzhli16.jpg
    2. உங்க காதலி உங்களுக்கு ஒரு மோதிரம் பரிசா தர்றா... அது சைஸ் பத்தலை.. என்ன பண்ணனும்? ( மார்வாடிக்கு போய் அடகு வைக்கனும் # அல்பன்).உடனே அந்த மோதிரத்தை ஒரு கயிற்றுல கோர்த்து ( செயின்லயும் கோர்க்கலாம்.. அதுக்கு நமக்கு வக்கு ஏது?) பழனி மலை முருகன் டாலர் மாதிரி கழுத்துல கட்டிக்கனும். (இந்த நாய்ங்களுக்கு டோக்கன் மாட்டிக்கற மாதிரி..)

    3. ஒரு ஃபிகரு ஜன்னல் வழியா உங்களுக்கு டாட்டா காட்டுது. கை மட்டும் தான் தெரியுது. ( வேற எதெல்லாம் தெரியனும்னு எதிர்பார்க்கறே..?)அந்த வீட்டுல 4 ஃபிகருங்க.. எல்லாரும் அக்கா தங்கைங்க.. எப்படி கை காட்டுன காரிகையை கண்டிபிடிப்பது? ( கா- கா - க கவிதை வரும் போல இருக்கே..?)

    பக்கத்து வீட்டு சின்ன பொண்ணு மூலமா மருதாணி வெச்சு விடுங்கன்னு நீங்க சந்தேகப்படற பொண்ணு கிட்டே ஹெல்ப் கேட்க வைக்கனும் .மருதாணி வெச்சு விடும்போது கை சிவந்துடும்.அடுத்த டைம் கை காண்பிக்கும்போது சிவந்த கை காட்டிக்குடுத்துடும்.. அடடா.. என்னே ஒரு கிரியேட்டிவ்..

    ரைட்டு.. படத்தோட கதை என்ன? ஹீரோ தலை சீவாத ,தாடி வெச்சிருக்கற அக்மார்க் கோடம்பாக்க ஹீரோ...ஹீரோயின் பிளஸ் ஒன் படிக்கற டீன் ஏஜ் ஃபிகரு...( யாரப்பா அது எந்திரிச்சுப்போய் பவுடர் அடிச்சுட்டு வந்து உக்கார்றது..?)
    2 பேரும் என்ன பண்றாங்க? சமூக சேவையா பண்ணப்போறாங்க ? காதல் தான். வழக்கம் போல் எதிர்ப்ப்பு.. நைஸா பேசி பொண்ணை கேரளா அனுப்பி வைக்கறாங்க. ஹீரோ  என்ன பண்ணுனாரு? அவங்க ஜோடி சேர்ந்தாங்களா?ன்னு டி வி ல இந்தப்படத்தை போடறப்ப தெரிஞ்சுக்குங்க...


    http://cinema.mywebulagam.co.in/uploads/uploads_4bf12a2da6cce.jpg
    புதுமுக ஹீரோ கற்றது தமிழ் ஜீவா மாதிரி சாயல்ல இருக்கார். பரவால்ல.. நடிப்பு ஓரளவு  வருது.. ( பாரய்யா... ஆம்பளைங்களைக்கூட பாராட்டறானே..?)

    ஹீரோயின் ஈரமான ரோஜாவே மோகினி மாதிரி சாயல்.. நல்ல ஃபிகர் தான்.. உதடு அமைப்புதான் சரி இல்லை... (கொங்கு மணடலத்துல சப்பை வாய்னு சொல்வாங்க)வெட்கப்படும் காட்சிகளில், டூயட் சீனில் நல்லா நடிச்சிருக்கு பாப்பா.. தேறிடும்.

    ஹீரோயினுக்கு 60 மார்க் போடலாம்னா ஹீரோயின் தங்கையாக வரும் ஃபிகருக்கு 65 மார்க் போடலாம்.( காசா? பணமா? அள்ளி இறைக்க வேண்டியதுதானே..?)

    படம் இடைவேளை வரை ஜாலியா போகுது.. இப்போ வர்ற படங்கள் எல்லாமே அப்படித்தான்.2 பேரும் லவ் பண்ணறது பார்க்க போரடிக்காம போகுது..லைவ் ஷோவும், லவ் ஷோவும் எந்தக்காலத்துல போர் அடிச்சிருக்கு?

    க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஆக்சிடெண்ட்ல மாட்டறது,மன நலம் கெடுவது,அதே இடத்துக்கு ஹீரோயின் வர்றது,ஹீரோயினுக்கு பைத்தியம் பிடிக்கறது
    எடுபடலை. பார்க்க ப்ளம் கேக்கு மாதிரி இருக்கற பொண்ணு  பேக்குன்னு சொன்னா எப்படி ஏத்துக்கறது? ( கேக்கு - பேக்கு #சோக சூழல்ல கூட உனக்கு ரைமிங்க் கேட்குது? @கவிஞண்டா..

    http://cinema.mywebulagam.co.in/uploads/uploads_4bf129ff7bb75.jpg
    படத்தில் மனதைக்கவர்ந்த வசனங்கள்

    1. இப்போ ஃபிகருங்க வர்றாங்க.. அறிமுகப்படுத்தி மார்க் போடறோம்.....

    இவ பேரு மோனிகா...10 வார்த்தை பேச வேண்டிய இடத்துல ஒரு வார்த்தை தான் பேசுவா.. ( ஏன்.. ? சோம்பேறியா?)

    இவ பேரு ஜெனி... இவ கிட்டே வாயைக்குடுத்தா சனி ( வாயைக்குடுக்கலைன்னா வெள்ளியா?)

    இவ அகிலா.. இவலை யாருமே கவனிக்கலைன்னாலும் பண்ற அலட்டல்லயே கவனிக்க வெச்சிடுவா...(பாதிப்பேரு அப்படித்தானே பண்றாங்க...)

    2.  ஏண்டி பேப்பர்ல சுக்கு பீர் அப்படின்னு எழுதி வெச்சிருக்கே..?

    என் பேரு சுலக்‌ஷணா..என் ஆள் பேரு பீர் முகமது    ரெண்டையும் சேர்த்து சுருக்கு சுக்கு பீர்... 

    3. ஒரு ஃபிகர் உன்னைப்பார்த்ததும் ஒரு பேப்பரை கீழே போட்டுட்டு போச்சு.. நீ எடுத்தே .. அதில என்ன எழுதி இருந்தது?

    அட போங்கப்பா/...ஓம் சக்தி பரா சக்தி அப்படின்னு 300 தடவை எழுதி இருந்தது.அதே மாதிரி நானும் எழுதி கோயில் உண்டியல்ல போடனுமாம். இல்லைன்னா எனக்கு கெடுதலாம்....

    4. என்ன? காபித்தூள் வாங்கப்போன பையனை இன்னும் காணோம்?

    சரி,... ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க..?மோராவது குடுங்க....

    5. நீ பீருவை (பீர் முகமதுவோட சுருக் பேராம்) லவ் பண்றதா சொன்னே.. இங்கே இவன் கூட என்ன பண்ணிட்டு இருக்கே..?

    இவன் பேரு ஷாரு.. (ஷாருக்கானாம்) இவன் என்னை லவ் பண்றானாம். இவன் மனசு புண்படக்கூடாதுங்கறதுக்காக இவனுக்கு கம்ப்பெனி குடுக்கறேன்.

    ( குத்து விளக்கு.. நீ தான் குத்து விளக்கு குடும்பத்துக்கு ஏத்த குத்து விளக்கு)

    6. கடைல ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃபிரீங்கற மாதிரி இந்த வீட்ல 3 ஃபிகருங்க டா.. ஒண்ணை கரெக்ட் பண்ண்ணுனா  2 ஃபிரீ..

    3 ஃபிரீடா..

    எப்படி?

    அத்தையை விட்டுட்டீங்களேடா..  (அடப்பாவி...மாமியார்...)

     7.   இன்ஸ்பெக்டர் சார்.. என்னை சாதாரன கைதின்னு நினைக்காதீங்க. நான் கஞ்சா கைதி.. ( நாய்  கடத்தறது கஞ்சா அதுல பெருமையை பாரு.)

    8. ஒரு நாள் பார்க்காம விட்டா அந்த காதல் சக்சஸ் ஆகாதுங்கறது முட்டாள்தனம்.5 வருஷம் பார்க்காம இருந்தும் ஒரு ஜோடியோட காதல் சக்சஸ் ஆகி இருக்கு... ( ஒரு வேளை பார்த்திருந்தா போரடிச்சிருக்கும்..)

    9. யோவ்,.. லிமிட்டா குடிக்க வேண்டியதுதானே...

    குடிச்சா அன் லிமிட்டெடாத்தான் குடிக்கனும்...

    விழுந்துட்டா..?


    அதுக்குத்தான் பிடிச்சுக்க நீ இருக்கியே.....குடிகாரனுக்கு என்ன மரியாதை.. கம்மியா குடிச்சு ஸ்டடியா இருந்தா...

    10. காதலைப்பிரிக்கனும்னு நினைச்சா அவங்க சேரனும்னு நினைப்பாங்க.. அதனால ஃபிரீயா விட்டு சரியான நேரத்துல கழுத்தை அறுக்கனும்.

    11. மருத்துவம் எவ்வளவோ முன்னேறுனாலும் நாம இன்னும் கடவுளை நம்பிட்டுத்தானே இருக்கோம்.

    http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-293.jpg
    பாடல்கள் ப்ரியன், ஃபிரான்சிஸ் கிருபா. 3 பாட்டு ஆல்ரெடி செம ஹிட்டு.

    கொஞ்சம் வெயிலாக ,கொஞ்சம் மழையாக சூப்பர் ஹிட் மெலோடி...அதற்கான பிக்சரைசேஷன் அழகு.

    சுட்ட முறுக்கா கம்மர்கட் வாங்கிதரட்டா  கொண்டாட்டமான பாடல் .

    கச்சத்தீவு போகலாம்,காதல் சொல்லி மீட்கலாம் அழகிய கவிதை வரிகளை உள்ளடக்கியது.

    காதலர்கள் ரெகுலராக சந்திக்கும் இடம் ஒரே மரம் உள்ள பின்னணி ஒளிப்பதிவாளரை உள்ளேன் ஐயா சொல்ல வைக்கிறது.

    நல்ல லவ் ஸ்டோரி இயக்குநர் அவசரப்பட்டுட்டார்.....இன்னும் நல்லா பண்ணீ இருக்கலாம்.

    ஏ செண்ட்டரில் 25 நாட்கள்,  பி செண்ட்டரில்  20 நாட்கள் , சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடலாம்.

    இந்தப்படத்துக்கு ஆனந்த விகடன்ல விமர்சனம் போடமாட்டாங்கன்னு நினைக்கறேன். மீறிப்போட்டா  39 மார்க்.

    குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

    தனுஷ் -ன் சீடன் - சினிமா விமர்சனம்


    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVfbRMqgWj9xD4MDhVY1Mpzroyqxfa-ixeM80n9B_RSWyhlenXMLbyhyXAyYu0GzerFfbL3v8sJn1bX51lPuyhpoBWRQ_UytDvnXsFl2T2l0gp7cr7YFNv4vrlUwSLeTV2RcISk0VyNAk/s400/seedan_movie_posters_wallpapers.jpg
    திருடா திருடி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் சுப்ரமண்யம் சிவா,தொடர்ந்து 5 படங்கள் ஹிட் கொடுத்த தனுஷ்,தனது 50 வது படம் என்ற லேபிளுடன் ஆர்வமாக இசை அமைத்த தினா என ஓரளவு எதிர்பார்ப்புடன் சென்றால்.......

    லண்டன் போகப்போகும் வசதியான வீட்டு ஹீரோவுக்கு வீட்டு வேலைக்காரி மேல் லவ்.அதை தனது அம்மாவிடம் சொல்லாமல் காலம் கடத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் நடக்கும்போது ,ஹீரோ - ஹீரோயின் இருவரையும் சேர்த்து வைக்கும் மாமா... சாரி மாமாங்கம் மாமாங்கமாய்  தமிழ் சினிமா ஹீரோக்கள் ஏற்று  நடித்த பூந்தோட்ட காவல்காரனாக தனுஷ் அந்த வேலையை கச்சிதமாக முடிக்க...ஸ் ஸ் அப்பாடா என ரசிகர்கள் எஸ்கேப்...


    நான் தெரியாமதான் கேட்கறேன் எந்த ஊர்ல இவ்வளவு அழகா ,சூப்பர் ஃபிகரா வேலைக்காரி இருக்கா? ( சும்மா ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கத்தான் கேட்கறேன்)கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கும் ஹீரோ லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என வேலைக்காரி பின்னால் அலைவது நம்பும்படி இல்லை.அதே போல் ஹீரோயின் கனவில் கண்ட ஆதர்ஷ கணவன் ஹீரோ போலவே இருப்பதால் அவரும் லவ்வுகிறார்.இவர்கள் இருவரும் லவ்வுவதைப்பார்த்து எனக்கு காதல் மீது இருக்கும் மரியாதையே போயிடுச்சு போங்க.

    புதுமுகம் ஜெய் கிருஷ்ணா சுத்த வேஸ்ட்.லவ் பண்ணுவாராம்,கையைப்பிடிப்பாராம். அம்மா கிட்டே மட்டும் சொல்ல மாட்டாராம்.அம்மா தாதாவோ,கொடுமைக்காரியோ இல்லை. லாஜிக் ஓட்டை இல்லை லாஜிக் பள்ளமே விழுதே...அவரது நடிப்பு கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு சரி இல்லாததால் எடுபடவில்லை.

    http://mimg.sulekha.com/tamil/seedan/events/seedan-trailer-launch/seedan-trailer-launch-movie-events-stills-pictures00240.jpg
    ஹீரோயின்  அனன்யா...குழந்தைத்தனமான முகம்.பாடல் காட்சிகளில் பாவனா +ஜோதிகா .காதல் காட்சிகளில் தேவயானி . பார்ட்டி கிட்டே சொந்த சரக்கு லேது. இயக்குநர்கள் செய்யும் தப்பு என்னன்னா ஒரு பாட்டு சீன் எடுக்கும்போது இப்படி நடிங்கன்னு சொல்லிக்காட்டறதில்லை. இந்தாம்மா குஷி பட டி வி டி, ஜெயம் கொண்டான் பட டி வி டி, இது மாதிரியே டான்ஸ் ஆடனும் என்கிறார்கள். ஹீரோயின்ஸ் என்ன பண்றாங்க ?அதை நெட்டுரு போட்டு வந்து அப்படியே நடிச்சுடறாஙக். அதான் எடுபடறதில்லை.


    படத்துல பாராட்டற மாதிரி ரெண்டே அம்சம். 1. டைட்டில் போடறப்ப மெலோடி மியூசிக்கும் அந்த ஓவியம் டிசைன் ஐடியாவும். 2. ஹீரோயின் வெள்ளைப்புடவைல இருக்கறப்ப தனுஷ் மயில் தோகை கொத்தை அவர் மீது வீச அது அப்படியே பரவி தோகை டிசைனாக புடவையில் தங்குவது.கிராஃபிக்ஸ் காட்சிகளில் கூட அழகியல் ரசனையை சிம்ப்பிளாக ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததற்காக ஒரு சபாஷ் போடலாம்.

    முன் பனிக்காலம் பாடல் காட்சியில் ஒளீப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார். படத்தில். திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதால் முற்பாதியில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் என கன கச்சிதமாக கணக்கு போட்டு 4 பாடல்கலை போட்டதற்கு ஒரு சபாஷ். ( அப்பாடான்னு ரசிகர்கள் எஸ்கேப்) 


    போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும்.


    http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/seedan-ananya-2.jpg--

    மயில்சாமியின் செல்ஃபோனை லபக்கும் விவேக்  அதை மறைக்க படாத பாடு படும் சீன் மட்டும்தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி.தனுஷ் பாவம் டம்மி கதையில் ஏற்று நடித்த டம்மி கேரக்டர். பாவம் அவர் தான் என்ன பண்ணு வார்?

    தனுஷ் வந்து பெரிதாக அந்த குடும்பத்தில் ஏதோ ட்சாதிக்கபோகிறார் என்று பார்த்தால் கோபாலா கோபாலா பட ஆர் பாண்டியராஜன் மாதிரி சமையல் சித்து வேலை செய்து புஷ் ஆகிறார்.

    படத்தில் சண்டைக்காட்சிகள், பில்டப் சீன்கள் இல்லை.. அவ்வளவு ஏன் நம்பும்படி கதையோ, சுவராஸ்யமான திரைக்கதையோ இல்லை.

    சுஹாசினி ஹீரோவுக்கு அம்மாவாக வருகிறார். ஓவர் மேக்கப்.செயற்கையான சிரிப்பு.( டி வி ரியாலிட்டி ஷோக்களில்  பங்கேற்று  பங்கேற்று அவரது நளினம் காணாமல் போய் செயற்கை வந்து ஒட்டிக்கொண்டது.)
    http://www.filmmy.com/images/seedan7.jpg
    வசனகர்த்தா மனதை   திருடிய இடங்கள்

    1. நாம என்னதான் பக்குவமா சமைச்சாலும் கோயில் பிரசாதம் டேஸ்ட் வர்றதில்லையே.. ஏன்?  ( ஓசி ல சாப்பிட்டதாலயோ?)

    2. அம்மாவுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தையும் எந்த இடத்துலயும் நான் செய்ய மாட்டேன் ( கேப்டன் ஜெ பற்றி பேசற மாதிரியே இருக்குப்பா)

    3. ஏய்.. ஏன் திடீர்னு தாவணி போட்டுக்கிட்டே..?

    ஆம்பளைங்க இருக்கற வீட்ல அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு தாத்தா சொன்னாரு.. ( அடடா.. இந்த தாத்தாக்களால நமக்கு எவ்வளவு இடஞ்சல்?)

    4.   ஏய்....1   4  3   அப்படின்னா என்ன அர்த்தம்னு தெரியுமா?

    ம் ம் .. வேலை வெட்டி இல்லாத ஆம்பளைங்க பொண்ணுங்களைப்பார்த்தா அப்படி சொல்வாங்களாம்.  ( ஹி ஹி எங்க பார்ட் டைம் ஜாப்பே அதானே...)

    5. வெந்த சோற்றைப்பதம் பார்க்கத்தெரியாத வயசுல எங்கம்மா., அப்பாவுக்கு கொள்ளி வெச்சேன்.. ( ந்நோ கமெண்ட்ஸ்.. செண்ட்டிமெண்ட் வசனம்)

    6. இனி  உன் சோகம் எல்லாம் என்னுடையது..  என் சந்தோஷம் எல்லாம் உன்னுடையது... ( ஹீரோ அழகா ஒப்பிச்சாருப்பா.. )

    7.  சாமி.. கும்பிடறேங்க....

    விவேக் - அப்பீட்டாயிக்க நமக....

    8.   குறை இல்லாத மனுஷன் ஏது? ஓட்டை இல்லாத ஜட்டி ஏது?
    9. விவேக்  - டேய்.. ஒரு போலிச்சாமியாரை எவ்வளவுதாண்டா டார்ச்சர் பண்ணூவீங்க..?

    10. இன்னும் கொஞ்ச நேரத்துல பாட்டி உங்களைக்கூப்பிடுவா...

    என்னது.. பாட்டியா..? ச்சீ

    அடச்சே.. ஜோசியம் கேட்க.....

    11. பெரிய வாழ்க்கையைக்கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு...

    12. நீ சமையல் காரனா? மருத்துவனா?

    சமையல்ல இருக்கற மகத்துவத்தைக்கண்டு பிடிச்சுட்டா உணவே மருந்துதான்.

    13. எந்த ஒரு பொருளுக்கும் அதனோட ஃஅழகை எடுத்துக்காட்ட ஒரு மாடல்தேவை.

    படம் முடியும்போது ஹீரோயின் பாடும் அந்த சோகப்பாட்டைக்கூட சகித்துக்கொள்ளலாம், படம் நெடுக நாடகத்தனமாக நகரும் காட்சிகளைக்கூட மன்னித்து விடலாம்...ஆனால் படம் முடியும்போது தனுஷ் மனிதர் இல்லை பழநி மலை முருகன் என அவரை அவதார புருஷன் ஆக்கும்போதுதான்....


    இந்தப்படம் ஏ,  பி,  சி.. ஆகிய 3 செண்ட்டர்களிலும் முறையே  15,  10  , 7  நாட்கள் ஓடலாம்.

    எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37

    சம்சாரம் கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனா......

    http://www.jeejix.com/UserData/2010/08/475/Content/Images/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg 
    1. தலைவருக்குத்தான்  கிரிக்கெட்ல  ஆர்வம்  இல்லையே, எதுக்கு  வோர்ல்டு  கப் மேட்ச்  பார்க்கறாரு?

    உலகக்கோப்பை  கிரிக்கெட்  டெலிகாஸ்ட்ல  ஏதாவது  ஊழல்  பண்ண முடியுமா?-னு  பார்க்கத்தான்.

    ---------------------------------------------------


    2. போலீஸ்  ஸ்டேஷன்  வாசலில்  பீர்-10  பாட்டில்,  விஸ்கி-4 ஃபுல்,
    ஒயின்-4 ஆஃப்-னு  ஸ்டாக் லிஸ்ட்  எழுதி  இருக்காங்களே?

    புரியலை?...  காவலர்  ‘குடி’ இருப்பு.

    --------------------------------------


    3. நடிகர்  பிரகாஷ்ராஜ்,  டாக்டர்  பிரகாஷ்,  என்ன  வித்தியாசம்?

    அவரு  குறும்படம்  எடுப்பதை  ஆதரிப்பவர்.  இவரு  குறும்புப்படம்  எடுப்பதை ஆதரிப்பவர்.

    ---------------------------------------


    4. திடீர்னு  செண்ட்  போடாம  வந்திருக்கே?

    மோஹனா...இன்னிக்கு  உன்கிட்டே  ‘மணம்’  விட்டு  பேசலாம்னு....

    ------------------------------------


    5. தலைவரே!  உளுந்து,  பருப்பு  விலையெல்லாம்  ஓவரா  போயிருச்சுனு  மக்கள்  புலம்பறாங்க...  உங்க  பதில்  என்ன?

    அடடா...  வடை  போச்சே! -னு  நினச்சுக்க  வேண்டியதுதான்.

    ---------------------------------------
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbb_Empw-2efWSCy2DD-ziMeoS5qLaVKu_BMWDxFdVCNF8vtgOvINSmMn3OomaGr6RU1OWO-om2ap2ehOEaoAgY3nomY36ilOT_t4LhrmUsIvtkcc6Q_lo4QQt_9lKmXI4zRUNbJq54DQ/s1600/2090885214789c00d46db.jpg

    6. சின்ன  வயசுல  பள்ளிக்கூடம்  பக்கமே  தலைகாட்டலை-னு  எதிர்கட்சிக்காரன்  என்னை  எகத்தாளமா  பேசுனான்...?

    அதுக்காக  உங்க  ஸ்கூல்  ரெக்கார்ட்ஸை  எல்லாம்  எடுத்துக்காட்டனுமா? சிறுவர்  சீர்திருத்தப் பள்ளிலதான்  படிச்சீங்கன்னு  எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு  பாருங்க...

    ----------------------------------------



    7. கல்யாணப்  பத்திரிக்கைல  இருவீட்டார்  அழைப்பு-னு  போட்டது  தப்பா  போயிடுச்சு.

    ஏன்?

    எல்லாரும்  அவங்கவங்க சின்ன  வீட்டையும்  கூட்டிட்டு  வந்துட்டாங்க!

    ---------------------------------------------


    8. என்  ஆளு  ஹாஸ்பிட்டல்ல  நர்ஸா  வேலை  பார்க்கறா...

    பரவால்லை...  எல்லாருமே  உன்  ஆளை  சிஸ்டர்-னு தான்  கூப்பிடுவாங்க...

    ------------------------------------------


    9. உன்  மனைவி  கோவிச்சுட்டு  அவங்க  அம்மா  வீட்டுக்குப்  போறாங்க, பதட்டப்படாம  இருக்கீங்களே?

    ஆளுங்கட்சி  ஆளுங்க  ஆர்ப்பாட்டம்  பண்ணி  ஜெயிலுக்குப்  போறமாதிரிதான்.  ஜாலியாதானே  இருக்கப்போறா...  என்ன  கஷ்டம் வந்துடப்போகுது?

    ---------------------------------------


    10. 234  தொகுதிகளிலும்  வெற்றி  உறுதி...-னு  தலைவர்  பேசறாரே?

    பொதுவா  வெற்றி  உறுதி-னு  தானே  சொன்னாரு?  யாருக்குன்னு  சொல்லலையே?

    -----------------------------------

    டிஸ்கி -1:  நடிகைகள் ஃபோட்டோ போடாம ஒரு போஸ்ட் போடு பாக்கலாம்னு சிலர் சவால் விட்டாங்க.. அதனால இந்த தடவை சும்மா கேரளா ஃபிகர்ஸ் ஃபோட்டோ மட்டும். அடுத்து யாராவது பொண்ணுங்க ஃபோட்டோவை போடாம போஸ்ட் போடுன்னு சொன்னா.... ஹி ஹி என்ன பண்றதுன்னு தெரியல.

    டிஸ்கி 2 : நான் ஜோக்ஸ் பதிவு போட்டா 2 ஜோக்ஸ் தான் நல்லாருக்கு, மீதி எல்லாம் மொக்கைன்னு தனி மெயில்ல சிலர் சொல்றாங்க..நான் கேக்கறேன்.. இப்போ காலேஜ் வாசல்ல நாம சைட் அடிக்க நிக்கறப்ப ஒரு க்ரூப் வருது.. எல்லா ஃபிகரும் சூப்பராவா இருக்கு. 4 நல்லாருக்கும், 3 சுமாரா இருக்கும்,2 மொக்கை ஃபிகரா இருக்கும், அட்ஜஸ் பண்ணிக்கறதில்லையா./? அது போல என் பதிவுலயும் மொக்கை ஜோக்ஸை அட்ஜஸ் பண்ணிக்கொள்ளவும் ஹி ஹி


    Thursday, February 24, 2011

    ராணிமுகர்ஜி VS நமீதாஜி - 2 ஜி ஊழல் @ காமெடி கும்மி

    http://kingrdx.com/data/Wallpaper/Bollywood%20Actress%20Wallpaper/Rani%20Mukharji/KingRDX.CoM-Rani%20Mukharji.jpg

    1. நடிகை: என்  ஃபேஸ்புக்  அட்ரஸ்  வேணும்னு  ரசிகர்கள்  ரொம்ப  வேண்டி  விரும்பி  கேட்கறாங்க...  சொல்றேன்...  நோட்  பண்ணிக்குங்க.

    நிருபர்: அப்படியே  உங்க  ஹிப் ( HIP) புக்  அட்ரஸ்,  செஸ்ட்  (CHEST) புக்  அட்ரஸையும்  சொல்லிடுங்க.

    ------------------------------------------------------


    2. ட்விட்டர்-குவாட்டர்  என்ன  வித்தியாசம்?


    ட்விட்டர்னா  140 (லெட்டர்ஸ்) ,      குவாட்டர்னா  180 (ml.)

    -----------------------------------------


    3. டைரக்டர்  சார்.  2Gயை  base  பண்ணி  படம்  எடுக்கப்  போறீங்களாமே?


    ஆமா...  ராணி  முகர்ஜிதான்  ஹீரோயின்...  நமீதாஜிதான்  வில்லி.

    -----------------------------------------------------

    4. டாக்டர்...  என்  துரதிர்ஷ்டம்  பாருங்க...  24  மணி  நேரமும்  விடாம ‘லொக்  லொக்’-னு  இருமல்  வருது...

    ஓஹோ...  அதிர்ஷடம்  இருந்தா  மட்டும் ‘லக்  லக்’- (LUCK) னு வந்திருக்குமாக்கும்?

    -----------------------------------


    5. டாக்டர்...  டெய்லி  மிட்நைட்ல  எனக்கும்,  என்  மனைவிக்கும்  தூக்கம்  வர்றதில்லை...

    ஹி...  ஹி...  இது  எல்லாருக்கும்  வர்ற  நடு நிசி  நோய்கள்தான்.

    ------------------------------------------------------
    http://www.extramirchi.com/gallery/albums/userpics/10003/namitha_0129.jpg

    6. என்  லவ்வர்  வீட்டு  ஃப்ரிஜ்-ல  எப்பவும்  4  பீர்  பாட்டிலாவது ஸ்டாக்  இருக்கும்.

    ஓஹோ...  காதலர்  ‘குடி’ இருப்பு  4-ன்னு  சொல்லு.

    ---------------------------------------


    7. சார்...  உங்க  கம்பெனி  வாட்ச்மேன்  வேலையை  ரிசைன்  பண்றேன்.

    ஏன்?

    மாசாமாசம்  சம்பளமா  ஒரே  ஒரு  வாட்ச்  மட்டும்  தர்றீங்க. அது எப்படி  பத்தும்?

    -------------------------------------



    8. இன்ஸ்பெக்டர்  இண்டர்நெட்  பைத்தியம்  போல...

    ஏன்?

    கொலைகாரனை  GOOGLE  Search-ல  போய்  தேடறாரே?

    ----------------------------------



    9. தலைவரே!  அரசியல்  நாகரீகம்-னா  என்ன?

    50  சீட்  எதிர்பார்த்து  கூட்டணிப்  பேச்சுவார்த்தைக்குப்  போறப்ப  வெறும்  8  சீட்  கிடைச்சாக்கூடக்  கோபப்படாம  O.K. சொல்றதுதான் அரசியல்  நாகரீகம்.

    ----------------------------------------


    10.( Dear...  I  Like  You..). டியர் ஐ லைக் யூ,   நீயும்  சொல்லு...

    Sorry...  இந்த  ஜென்மத்துல  அது  நடக்காது. Better  Luck  Next ஜென்மம்.

    -----------------------------
    டிஸ்கி -1 :முதல் படத்துல ராணி முகர்ஜி கட்டி இருக்கற சேலை தீப்பெட்டி சேலை. அதாவது ரொம்ப மெல்லிசா இருக்கும். அந்த புடவையை தீப்பெட்டி சைஸ் டப்பாவுல அடக்கிடலாம்.ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு ஈஸியா எடுத்துட்டு போலாமாம்.# இனிமே பொது அறிவு சம்பந்தமான தகவல்களை நான் எழுதறதே இல்லைன்னு யாராவது சொல்வீங்க?

    டிஸ்கி -2 : ஸ்டில் இரண்டில் இருக்கும் மச்சான் புகழ் நடிகை தனது வாழ்க்கையில் முதன் முதலாக சேலை கட்டிய நாள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நான் பதிவு டைப் பண்ண 27 நிமிஷம்தான் ஆச்சு. இந்த ஃபோட்டோ தேடி கண்டுபிடிக்க 45 நிமிஷம் ஆச்சு.படைப்புக்காக இப்படி மெனக்கெடற எனக்கு யாராவது பதிவுலக கமல்னு விருது குடுத்தா வேணாம்னு சொல்லவே மாட்டேன்.. ஹி ஹி

    Wednesday, February 23, 2011

    குமுதம் VS கலைஞர் பேட்டி - காமெடி கும்மி & உட்டாலக்கடி கலாட்டா

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd70JSBPxmFqRkMKk1UXeTisNvkoN9v8zCBsIVHYzjWgqkjtDfbqSAoLL6LpgwaI4tC5OrJUA4fUDA9UGScrT7LsdPSVXQb2N9zuuoiVy5AWeO03koY9bWMlbDzwAmiqFZgHpc2ut_I_vh/s1600/Karunanidhi+cartoon.jpg
     
    தமி்ழ்நாட்டின் நெம்பர் ஒன் தமிழ் வார இதழான குமுதம் (2.3.2011) இன்று கலைஞரைப்பேட்டி எடுத்து  போட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் பிரச்சனை வெற்றியைப்பாதிக்குமா? என சென்சேஷனல் டைட்டிலுடன் வந்துள்ள பேட்டி படிக்க செம காமெடியாக இருந்தது.அதன் ஒரிஜினல் பதிப்பை லைப்ரரியிலோ. நண்பர்களிடம் ஓ சி புக் வாங்கியோ படித்து ரசியுங்கள். ( நாம எந்தக்காலத்துல காசு குடுத்து புக் வாங்கி இருக்கோம்?).இப்போது இங்கே கேள்வி மட்டும் குமுதம் கேட்டது ,பதில் கலைஞர் சொன்னதை போடாமல் கலைஞரின் மனசாட்சி என்ன சொல்லி இருக்கும் என ஒரு கற்பனை.

    1.” வரப்போகும் தேர்தலில் தி மு க வின் வியூகம் எப்படி இருக்கும்??”

    இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு?எப்பவும் போலத்தான்.வர்றவங்க எல்லாம் வாங்கன்னு எல்லாரையும் கூட்டணில சேர்த்திக்க வேண்டியது. அப்புறம் தொகுதி பிரிக்கறப்ப பிரச்சனை வந்தா “உங்களுக்கு என் இதயத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என மழுப்புவது...

    2. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தி மு க சாதித்தது என்ன?

    என்ன இப்படி கேட்டுட்டீங்க?.கடந்த 64 வருட காலங்களிலேயே யாராலும் பண்ண முடியாத டார்கெட் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் அச்சீவ் பண்ணி இருக்கோமில்ல..ஸ்டாலின் -அழகிரி சண்டை வராம பேலன்ஸ் பண்றதே பெரிய சாதனையா இருக்கு.. எனக்கு.


    3.நீங்க இது வரைக்கும் பல தேர்தலை சந்தித்து இருக்கீங்க. அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?

    அப்போவெல்லாம் குங்குமச்சிமிழ் அல்லது பனை ஓலை விசிறி குடுப்போம்,ஏமாளி ஜனங்க அதுக்கே ஆளுக்கு 2 ஓட்டு போடுவாங்க. இப்போ எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க. ஒரு ஓட்டுக்கு ரூ 2000, என் கிட்டே 4 ஓட்டு இருக்குன்னு கணக்கு போட்டு கேக்கறாங்க.. ஹூம் குடுத்துத்தொலைப்போம், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்க வேண்டியதுதான்.
    http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
    4. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சிக்கல்கள் வந்தாலும் தேர்தலை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள்.அதற்கான பலம் எங்கே இருந்து கிடைக்குது?

    உள்ளுக்குள்ள பயம் இருக்கு, அதை வெளில காட்ட முடியுமா? 60 சீட் தான் ஜெயிப்போம்னு தெரிஞ்சாக்கூட “உடன் பிறப்பே ,நாம் 234 தொகுதிகள்லயும் வெற்றி பெறுவது உறுதி”அப்படின்னு உதார் விட்டுத்தானே பழக்கம்?

    5. தி மு க தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்கிறீர்கள்?அவர்களை நினைக்கும்போது  உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
    1000 ஊழல்களை  கட்சி  பண்ணுனாலும்,தி மு க ஊழலில் ஊறிய கட்சிங்கறதை  நம்ப மாட்டாங்க  பாசக்காரப்பய புள்ளைக... ஏதாவது சந்தேகம் வந்தாக்கூட முரசொலில உடன்பிறப்பே...அப்படின்னு ஆரம்பிச்சு எதை எழுதுனாலும் நம்பிடறாங்க.. அவங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு....

    6. இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை தி மு க வின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?

    ம். அதனாலதான் பல்லைக்கடிச்சுக்கிட்டு ராம்தாஸ் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேண்டியதா இருக்கு. 10 சீட்டுக்கு பம்புன ஆள் கூட இப்போ 30 சீட்டுக்கு மேல வாங்கிட்டாரு.காங்கிரஸ் வேற ஆட்சில பங்குனு குண்டைத்தூக்கிப்போடறாங்க... பார்ப்போம்.முடிஞ்சவரை அடுத்த ஊழல் பண்ண சான்ஸ் கிடைக்குமா?ன்னு பார்க்கறேன். முடியலைன்னா இதுவரைக்கும் பண்ணுன ஊழல் பணத்தினை வெச்சு 5 வருஷம் தாட்ட வேண்டியதுதான்.
    http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
    7. ஆ ராசாவை கைது பண்றப்ப உங்களுக்கு தகவலை சொல்லிட்டுத்தான் கைது பண்ணுனாங்களாமே...

    ஆமா.. கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கில்ல?

    8. வரப்போகும் தேர்தலில் எந்தப்பிரச்சனை மையமா இருக்கும்?உங்க பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

    எல்லாத்தேர்தல்லயும் சி எம் சீட்டு யாருக்கு? இதுதான் மையமா இருக்கும். நாடு எக்கேடு கெட்டு நாசமாப்போனா நமக்கென்ன?பதவிதானே நமக்கு முக்கியம்.மேடைல பேசறப்ப ஊழல் அற்ற ஆட்சின்னு உதார் விடுவோம். தனியா வீடு வீடா போய் ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தர்றோம்னு வாக்கு குடுப்போம்.

    9. உங்க குடும்பமே சினி ஃபீல்டை ஆக்ரமிச்சு இருக்கறதா குற்றச்சாட்டு இருக்கே?

    அட.. அறிவு கெட்ட ஜனங்களே...சினிமாத்துறைக்கு சலுகைகளை வாரி வாரி தர்றேனே எதுக்கு? மக்கள் வரிப்பணத்துல கிடைச்ச பணத்தை தமிழ் டைட்டிலுக்கு வரி விலக்குனு அள்ளி விடறது எதுக்கு..? எல்லாம் சுய நலம் தான்.அதுவுமில்லாம சினி ஃபீல்டை மட்டுமா நாங்க ஆக்ரமிச்சு இருக்கோம்?டி வி மீடியா கூட எங்க கட்டுப்பாட்டுல தான்.அவ்வளவு ஏன் ?இப்போ பேட்டி எடுக்கற குமுதமே கூட இப்போ என் பினாமி தானே....
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZKRbOQ3Uw088X_BzU9b9EirMJWTygPuTs0znS3IgAjYJn0em9aNcJx9HOiwZVINv0oh5u-Lxw_gScJYsJXr-ST0IBQ_l3CD3-iqw1PJXEJkqiciwjUFaK4vUI3GqzQolO6N0Ijph-p5-A/s1600/tamilmakkalkural_kalavanigal_anbucartoons.jpg
    10. இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனை பற்றி என்ன நினைக்கறீங்க..?

    அந்தப்பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கனும்.அப்போத்தான் தேர்தல் வாக்குறுதி தர்றப்ப 6-வது முறையாக நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனைஅனைத்தையும் தீர்ப்போம்னு சொல்ல முடியும்.இப்பவே தீர்த்துட்டா எதை வெச்சு பிழைப்பை ஓட்டறது?

    11. மு க ஸ்டாலின் அண்மைக்காலமாக அபாரமாக உழைத்து வருகிறாரே...
    அவரு கவலை அவருக்கு.. ஆட்சி அழகிரி கைக்குப்போயிடக்கூடாதுன்னு பார்க்கறார்.

    12. கனி மொழியும் இப்போது அரசியல் பணி ஆற்றி வருகிறார்,அதைப்பற்றி?

    எப்படியோ.. தமிழ்நாட்டை எங்க பரம்பரை இன்னும் 100 வருஷம் ஆனாலும் விடாம சுரண்டுவாங்க..

    13. நீங்க ஓய்வின்றி உழைக்கிறீர்களே... அது ஏன்?

    இதென்ன கேள்வி,, கொஞ்சம் ஏமாந்தா வேற யாராவது ஊழல் பண்ணிடுவாங்க.. முழுக்க முழுக்க எல்லா ஊழலையும் நாங்க தான் பண்ணனும்.

    14. நீங்க 75 வருஷமா சினி ஃபீல்டுல இருக்கீங்க.. அப்போ.. இப்போ என்ன வித்தியாசம்?

    அப்போவெல்லாம் என் வசனத்திற்காகவே படம் ஓடுச்சு. இப்போ என் வசனம்னு சொன்னாலே கட்சிக்காரன் கூட காத தூரம் ஓடறான். இளைஞன் படம் ரிலீஸ் ஆன 2 வது நாளே ஊத்திக்கிச்சு.. ஆனா ஒரு கவுரத்துக்காக பிரம்மாண்ட வெற்றின்னு கலைஞர் டி வி ல போட்டு ஒப்பேத்திட்டிருக்கோம்.

    15. கலைஞர் சிறு குறிப்பு வரைகன்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க?

    உலக பணக்காரர் வரிசையில் முதல் இடம் லட்சியம்,ஆசியப்பணக்காரர் வரிசையில் முதல் இடம் நிச்சயம்.
    16. பத்திரிக்கையாளர் சோ உங்க மேல கடுமையா தாக்குறாரே ஏன்?

    நான் ஒரு தலித் என்பதால் இருக்கலாம்.என்னால சரியா பதிலடி கொடுக்க முடியாம போச்சுன்னா இந்த ஜாதி மேட்டரை கைல எடுத்துக்குவேன். ஒரு பய கேள்வி கேட்க முடியாது.


    டிஸ்கி 1 - குமுதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை கொஞ்சம் நறுக் சுருக் ஆக்கி எடிட் செய்திருக்கிறேன்.கலைஞரின் பதில்களில் அவரது தமிழ் நடை வராது. ஏன் எனில் மனசாட்சியின் குரலாகத்தான் பதிவு செய்திருக்கிறேன். மனசாட்சிக்கு நடிக்கத்தெரியாது.

    டிஸ்கி 2- தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் எனது செல் ஃபோனில் புது நெம்பர் வந்தால் நான் எடுப்பதில்லை. எனவே பதிவுலக நண்பர்கள் என்னுடன் பேச விரும்பினால் முதலில் உங்கள் செல் ஃபோனில் இருந்து மெசேஜ் அனுப்பி இன்னார் தான் அன்னார் (அதாவது நீங்க)என சொல்லி அப்புறம் பேசவும்.

    டிஸ்கி 3 - மேலே சொன்ன டெக்னிக், பதிவர்களுக்கு மட்டுமே.. என்னை மிரட்ட நினைப்பவர்கள் அதே ஐடியாவை ஃபாலோ பண்ணக்கூடாது... ஹி ஹி