Showing posts with label குமுதம். Show all posts
Showing posts with label குமுதம். Show all posts

Saturday, December 29, 2012

டெல்லி சம்பவத்துக்கு நாம் அனைவரும் பொறுப்பு - ஓ பக்கங்கள் ஞானி கடிதம் @ குமுதம்

மன்னிக்க வேண்டுகிறேன்…..!!!!


அன்புள்ள…..

... உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.

டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு, எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள். உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். 


இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர் பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.

உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய். 


நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும் உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும், பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.

உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர் மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.

மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.

படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

நாங்கள்தான் – we the people of Indiaதான். காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.

படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.

அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது. மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண் பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.

உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.

உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம் காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம் உனக்கு - உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.

நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.

பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள். இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.

குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை, சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது. பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….

படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல் வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.

இந்த சூழலில் படித்தவனாக இருந்தால் அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ? வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க, பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.

மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம். ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.

அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.

இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.

அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன் வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.

அன்புடன்

ஞாநி

சக இந்தியர்கள் சார்பாக.

குமுதம்
டிசம்பர் .2012

Wednesday, December 19, 2012

ரீ ரெக்கார்டிங்கில் பட வெற்றியை கணிக்க முடியுமா? - இசை ஞானி பேட்டி @ குமுதம்

இளையராஜாவின் பதில்:ஒரு படத்துக்குக் Re-recording செய்யும்போதே, அந்தப் படத்தின் வெற்றி/தோல்வியை உங்களால் கணிக்க முடியுமா?

♫ ஒரு கதை தேறும்-தேறாது என்பது ஒருவர் வந்து கதை சொல்லும்போதே தெரிந்துவிடும். Just imagine.. நான் தொள்ளாயிரத்து சொச்சம் படம் பண்ணியிருக்கிறேன் என்பது பெரிய விஷயமில்லை. அதற்குப்பின் எவ்வளவு சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

நீங்கள் ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு, “ச்ச.. படமா எடுத்திருக்கிறான்?” என்று எண்ணி, அதைப் பார்க்கமுடியாமல் பாதியில் எழுந்து போன படங்கள் எத்தனை இருக்கும்? அதுபோன்ற படங்களையும் நான் நான்குமுறை பார்த்தாகவேண்டும். முதல்முறை எனக்கு முழுவதும் போட்டுக்காட்டுவார்கள். அதன்பின்னர் Music Compose பண்ணுவதற்காக Theater’ல் வந்து ஒவ்வொரு ரீலாக பார்க்கவேண்டும். அதன்பின்னர் Music எழுதிமுடித்து, அத்துடன் Conduct செய்து காட்டும்போது ஒருமுறை பார்க்கவேண்டும். Take’ன் போது எத்தனை Takes ஆகும் என்று தெரியாது. அத்தனை முறை மறுபடி மறுபடி பார்க்கவேண்டும். 



ஆக, நீங்கள் ஒருமுறை பார்த்து ”பிடிக்கவில்லை” என்று கூறும் படத்...தை நான் இத்தனை முறை பார்த்தாகவேண்டும். அப்போதும்கூட, ‘இந்தப் படம் இப்படி இருக்கிறதே.. இதற்கு எப்படி Music போடுவது?’ என்று எனக்குத் தோன்றாது. மாறாக, ‘இந்தப் படத்தை எப்படிப் பிழைக்கவைப்பது?’ நம் இசை இதற்கு எப்படி உதவியாக இருக்கும்?” என்றே தோன்றும். இல்லையென்றால், நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களை நீங்கள் பார்த்தேயிருக்கமாட்டீர்கள்.

பாடல்கள் நன்றாக இருந்தும் படம் ஓடவில்லை என்பது ரொம்ப Normal’ஆன விஷயம்தானே? பாடல்களுக்காக படம் என்று சொன்னால், ‘தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற பாடலுக்காகவே அந்தப் படத்தை நீங்கள் ஓட்டியிருக்கவேண்டும். அது உங்கள் தவறுதானே தவிர என் தவறு அல்ல. பாடலுக்காக அந்தப் படத்தில் இருந்த தவறை எல்லாம் நீங்கள் மன்னித்திருக்கலாம் அல்லவா? ‘காதல் ஓவியம்’ படத்தின் ஒவ்வொரு பாடலுக்காகவும் அந்தப் படம் Silver Jubilee’ஐ தாண்டியிருக்கலாம்.

ஆக, படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தவறு என்னிடத்திலில்லை. பாடல்கள் நன்றாயிருக்கிறது என்று இன்றைக்கும் சொல்கிறீர்களா இல்லையா?”







#ilayaraja இளையராஜா - பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் கூட்டணியில் உருவான பாடல்களை விட இளையராஜா - பாலுமகேந்திரா கூட்டணி உருவாக்கிய பாடல்கள் மனத்திற்கு இதமாக இருக்கிறதே.. என்ன காரணம்?

- கருப்பையா பாலகிருஷ்ணன், மதுரை.

நான் என்ன கட்சி வைத்துக் கொண்டா இருக்கிறேன்? கூட்டணி சேர! யாருடனும் நான் இல்லை! இவர்கள் வருகிறார்கள்! போகிறார்கள்! - எல்லாப் பாடல்களும் அவர்களின் கதைக்காக நானாகிய நானே உருவாக்கியதுதான்!


இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (26.12.2012)  ,


நன்றி -

பகிர்வு நன்றி: திரு. ஜெகதீஷ் ஜெயராமன்., புது மாப்ளை பறவை,இளையராஜா ஃபேன்ஸ்

Thursday, December 06, 2012

குமுதம் இதழில் நிகழ்ந்த இலக்கியத்திருட்டு - அம்பலப்படுத்தினார் டாக்டர்

தமிழில் மட்டும் அல்ல அனைத்து மொழிகளிலும் சுடுதல் பிராசஸ் அப்பப்ப ஆங்காங்கே நடந்துட்டுதான் இருக்கு.குங்குமம் இதழில் அய்யம்பேட்டை வி விஜயலட்சுமி என்பவர் ( பெண் பெயரில் ஒரு ஃபேக் ஐ டி ) ஆனந்த விகடன்  இதழில் வந்த கவிதையை அப்படியே மகேஷ்-விஜய்  செய்து ஐ மீன் ஜெராக்ஸ் செய்து  மாட்டினார்.புகழ் பெற்ற இதழில் வந்த பிரபலமான படைப்பை திருடும்போது அவங்க என்ன தான் நினைப்பாங்கன்னு தெரியல . யாரும் கவனிக்க மாட்டாங்கன்னா? அல்லது மறந்துருவாங்கன்னா? 

ஏதாவது பிற மொழிப்படைப்பை மொழி பெயர்த்து பட்டி டிங்கரிங்க் பண்ணி அண்ணன் மிஷ்கின் மாதிரியோ, ஜெயம் ராஜா மாதிரியோ ஹோம் ஒர்க் பண்ணி இருந்திருக்கலாம். 


 அடுத்து தமிழ் நாடெங்கும் பிரபலமான திருச்சி அரவக்குறிச்சிப்பட்டி எம் அசோக் ராஜா  1980 களில் வந்த ஜோக்ஸ்களை 1995 டூ 2000 வரை ஜெராக்ஸ் எடுத்து பல பத்திரிக்கைகளில் மாட்டினார் . ஆனந்த விகடன் இதழில் இருந்து அவருக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாகத்தகவல்.



இப்போது மாட்டி இருப்பவர் போளூர் சி ரகுபதி . இவர் குமுதம் , குங்குமம் இதழ்களில் பல ஒரு பக்க  சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பல வருடங்களாகவே இவர் பெயரை அடிக்கடி புக்ஸில் பார்த்திருக்கிறேன்.


பாண்டிச்சேரியில் கல்லூரி லெக்சரராகப்பணி ஆற்றும் புதுவை சந்திரகிரி என்பவரின் சிறுகதை தினமணிக்கதிர் இதழில்  வெளீயானதை ஒரு வருடம் கழித்து குமுதம் இதழில் ரகுபதி பிரசுரமாக்கி இருக்கிறார். 



ட்விட்டர் நண்பர் டாக்டர்



சிறுகதை கதிர் 16-31 ஜனவரி  94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய 
இந்த கதை
Views 102
419 days ago
சிறுகதை கதிர் 16-31 ஜனவரி 94-ல் புதுவை சந்திரஹரி எழுதிய இந்த கதை






 இன்று வெளியான தீபாவளி மலர் குமுதத்தில்
 போளூர் சி.ரகுபதி நூறு சதம்
 காப்பியடித்து அதே கதை இங்கே:
Views 116
419 days ago
 வெளியான தீபாவளி மலர் குமுதத்தில் போளூர் சி.ரகுபதி நூறு சதம் காப்பியடித்து அதே கதை இங்கே:

Tuesday, November 06, 2012

ஏ ஆர் ரஹ்மானுடன் இளையாராஜா பணி ஆற்றுவாரா? குமுதம் VS இளையராஜா

http://www.outlookindia.com/images/rehman_illayaraja_20090309.jpg 

இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (14.11.2012)#Ilayaraja


பண்ணைபுரத்து இராசையா இப்போது எப்படி இருக்கிறார் ?


- பெ.கணேஷ் பாபு, திருநெல்வேலி.



அவனா? அவன் எப்போதோ செத்துப்போய் விட்டான்! அவனைச் சுமந்து கொண்டல்லவா நான் அலைகிறேன்!





பிறந்த ஊருக்கு, ஏதேனும் உதவி செய்திருக்கிறீர்களா?


- க.பா.மூர்த்தி, மதுரை.






பிறந்த உலகிற்கு இசையால் சேவை செய்கிறேன்!



“கல்லுக்குள் ஈரம்” திரைப்படத்தில் தங்களின் பின்னணி இசை “தூறல் நின்னு போச்சு” திரைப்படத்தின் பின்னணி இசை, “16 வயதினேலே” திரைப்படப் பாடல் “செந்தூரப்பூவே” பாட்டுக்கு முன்னர் வரும் புல்லாங்குழல் இசை இவையெல்லாம் காடு, மலை, கடல் கடந்து செல்கிறது. எந்த மனநிலையில் தங்களுடைய இந்த இசை வடிவங்கள் உயிர் பெருகின்றன?


-ஆர்.பூவராகசுவாமி, கடலூர்.




இதற்கு மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மனம் தானாகவே ஒருநிலைப்பட்டு விடும். அது காட்சிகளுக்கு தகுந்தவாறும் உயிரின் உணர்வுகளுக்கு ஏற்றவாறும் பலவிதமான ஸ்வரங்களை இசை எடுத்துக்கொண்டு தகுந்த, அதற்கேற்ற இசைக்கருவிகளில் ஒளிக்கும்போது கேட்பவர்களைக் கண்டிப்பாக மெய்மறக்கச் செய்துவிடும்.


இதற்கு இதை உருவாக்கும் ஆள் அங்கே இருக்கக் கூடாது. அவன் மறைந்து போனால்தான் இது சாத்தியமாகும். இல்லை என்றால் அவனது ஈகோதான் இசையாக வெளிவரும்.



நீங்களும் ஏன் ஆஸ்கார் அவார்டுக்கு முயற்சி செய்யக் கூடாது?


- எஸ்.வி.பார்த்தசாரதி, திருச்சி.



“ஆஸ்கார்” விருது என்பது ஒரு ஐந்தாறு பேர் கொண்ட குழு. இந்தக் குழு தீர்மானிப்பதுதான் உயர்ந்தது என்று அர்த்தமில்லை! அதைவிடச் சிறந்த இசை அவர்களின் கவனத்திற்கு வராமலே போயிருக்கலாம். விருதிற்காக விண்ணப்பம் செய்த படங்களுக்குள்ளும் கலைஞர்களுக்குள்ளும் மட்டுமே அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.


இதற்குப் போய் நான் விண்ணப்பம் போட்டு...


‘ஐயா ஐயா இதைக் கேளுங்கள் நான் நன்றாக இசையமைத்திருக்கிறேன்’ என்று கேட்கவேண்டுமாக்கும்? அடப் போங்கய்யா!?




தங்களின் பதில்கள் எல்லாம் உங்களின் நிலையில் இருந்தே சொல்லப்படாலும் – கேட்டவர் மனதையோ அல்லது வாசகர் மனதையோ – புண்படுத்தி விடக்கூடும் என்று எப்போதாவது தோன்றியதுண்டா?


- கே.மோகன் தமிழ்ச்செல்வன், சென்னை.



அடடா! இதை மறந்து விட்டு எத்தனையோ பதில்களைச் சொல்லி விட்டேனே!


நல்லவேளை இப்போது ஞாபகப்படுத்தினீர்கள் நன்றி! மிகவும் நன்றி!


நான் யதார்த்தமான பதிலைத்தான் சொல்லி வருகிறேன். பல உண்மைகளை பட்டவர்த்தனமாகச் சொல்ல முடியாது என்றாலும் கூடுமான வரை கொஞ்சம் உள்ளடக்கியே எழுத முயற்சித்தேன். இதிலும் என்னையும் மீறி என் பதில் யாரையவது புண்படுத்தியிருந்தாலோ அல்லது வேறு சொல்ல முடியாத வேதனை உணர்வாக ஏற்படுத்தியிருந்தாலோ இதன் மூலமாக சத்தியமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.



மனமது செம்மையாக, முதலில் நாம் என்ன பயிற்சிகள் செய்ய வேண்டும்?


-ஆ. தனபால், சென்னை.91


மனம் செம்மையாக – எந்தப் பயிற்சியுமே தேவையில்லை! எந்த ஒரு எண்ணமும் எழாமல் பார்த்துக் கொண்டால் போதும்! பதில் சுலபம்! செய்து பார்த்தால் நடக்கின்ற காரியமா? எனப் பின்னால் புரிந்து கொள்வீர்கள்.



ஞானிகள், யோகிகள், மகான்கள், சித்த புருஷர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், அடியார்கள் இவர்களெல்லாம் கண்டுணர்ந்து பரவசப்பட்ட அனுபவங்களைப் போல நீங்கள் அடைந்த அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?


- ஆ.செல்வம், சென்னை.



அதை யாரும் யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. யாராலும் யாருக்கும் கொடுக்க முடியாது. கொடுக்க வாங்கிக்கொள்ளும் பொருளுமில்லை; கொடுக்காமல் மறைத்து வைக்கும் பொருளுமில்லை. எல்லோரிடத்திலும் – ஏன் எங்கும் எங்கெங்கும் இருக்கும் ஒரே உண்மை அது மட்டும்தான்!


அதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன் என்றாலும் – பகவான் ஸ்ரீ ரமணர்தான் – அதைக் கொடுத்தார் என்பது முற்றிலும் உண்மை. நீங்கள் கேட்கலாம் – யாராலும் கொடுக்க முடியாது என்றீர்களே? என்று. ஆம் – அப்படிப்பட்ட ஒன்றைத் தரக்கூடிய ஒரே ஒருவர்தான் பகவான் ரமண மகரிஷி!



பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கும் சதவீதம் இசைஞானிக்கு எத்தனை?

- பி.கே.பாபு, திருநெல்வேலி.



பெரிய தவறுகளைக் கூட விட்டு விடலாம் – ஆனால் கவனக் குறைவால் ஏற்படும் சிறிய தவறுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது!


அதாவது, என்னுடைய தவறுகளை! அதைத் திருத்திக் கொள்ளவே இந்தப் பிறவி ஏற்பட்டது என்று முழுக்க முழுக்க நம்புகிறவன் நான்.




இசைஞானி அவர்களே, ஒரு இயக்குநர் உங்களிடம் வந்து நீங்களும் ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து இசையமைக்க வேண்டுமென்று கூறினால் நீங்கள் அதை ஏற்று ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து இசையமைப்பீர்களா? (கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)


- டி.மோகன்ராஜ், வாலாஜாபாத்.




அப்படி இனிமேல் ஒன்றும் பணியாற்றவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஏனெனில் அவர் என்னுடன் 500 – படங்களுக்கும் மேல் பணியாற்றி இருக்கிறார் – இதையும் அவர்தான் சொல்ல வேண்டும்.



உங்களிடம் அவ்வப்போது தோன்றும் ஆணவம், அகம்பாவம் பற்றி?


- எ.சி.பி.தாஸ், திருத்துறைப்பூண்டி.



அவ்வப்போது எங்கே தோன்றுகிறது! அது ஒன்றுதானே எப்போதும் கூட இருக்கிறது. அது இல்லை என்றால் இசை எப்படி வரும்?



(ராஜபவனி தொடரும்)


இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (14.11.2012)


நன்றி - குமுதம் ,

இசை ஞானி இளையராஜா ரசிகர்கள் இவரை ட்விட்டரில் தொடர்ந்தால் அவர் பற்றிய  செய்திகள் , அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அப்பப்ப அப்டேட் செய்யப்படுகிறது

IlaiyaraajaFans (@)

 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPp1TNk8w1pjQaInv72SlT8ilW6UFSyPRtA2sCQ3nd0Yz-QIvGKqU4SHrOGgw4uzZD5rkXrMJ2WZbmBy7VKmLcAL8alKkmsxb82UoF5l73imbrBmkyVTqJrM-Uss3FQcQr21NFvdzKEJqj/s400/rahman+function.jpg

இளையராஜாவின் இசைக்குழுவில்,  11 வயதில் கீ -போர்டு வாசிப்பவராகச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்,  இன்று உலகப் புகழ் பெற்ற இசை அமைப்பாளராக விளங்குகிறார்.

 

 

தன் இசைக் குழுவில் ஏ.ஆர். ரஹ்மான் எப்படிச் சேர்ந்தார் என்பது பற்றி இளையராஜா கூறுகிறார்……
மூடு பனி
படத்துக்கு நான் இசை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,  கீ -போர்டு வாசிப்பவர், குடி போதையில் வந்திருப்பது தெரிந்தது.   உடனே அவரை வெளியே அனுப்பி விட்டேன்.   ‘கீ -போர்டு’  வாசிக்கத் தெரிந்த வேறொருவர் தேவைப்பட்டபோது உடனடியாக யாரும் கிடைக்கவில்லை.   அப்போது என் குழுவில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து,  “எனக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான்.  அவன் ஓரளவு  கீ -போர்டு  வாசிப்பான்.  அழைத்து வரட்டுமா ? ” என்று கேட்டார்.  “இதென்ன கேள்வி ?  உடனே அழைத்து வாருங்கள் ” என்றேன்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள்.  நான் அந்தச் சிறுவனிடத்தில் கீ-போர்டில் வாசிக்க வேண்டிய குறிப்பை கொடுத்தேன்.அதை வாசிப்பதில் அவனுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டபோது நானே அவன் கையைப் பிடித்து வாசிக்கச் சொல்லிக் கொடுத்தேன்.  அந்தச் சிறுவனும் புரிந்து கொண்டு நான் எதிர்பார்த்த மாதிரி வாசித்து விட்டான்.  பாடலும் நன்றாக அமைந்தது.

 

அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல.  இசையமைப்பாளர் சேகரின் மகன் திலீப் தான் அவர்.  இந்த திலீப் தான் பின்னாளில் ஏ.ஆர். ரஹ்மானாக இசை உலகுக்கு வந்தார்.


நன்றி - Balhanuman's Blog

 

http://www.tamiluk.net/wp-content/uploads/2012/04/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.jpg

Sunday, October 21, 2012

இளையராஜா பேட்டி @ குமுதம்

Why Ilayaraaja Not Working With K Balachander

ரஜினி கேட்டும் கூட, பாலச்சந்தரின் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.


பிரபல  குமுதம் வார இதழில் இளையராஜா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு அவர் இசையமைக்காமல் போனது, அதுவும் ரஜினி கேட்டும் கூட இசையமைக்க மறுத்தது பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.



அந்த கேள்வி பதில்:



கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்?



பதில்: புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரீரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் சிவா என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவிதாலயாவிலிருந்து அனந்தும் நடராஜனும் வந்து என்னைச் சந்திச்சாங்க.


'சார் படம் ரிலீஸ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. ஆனால் ஸ்டிரைக் நடந்துகிட்டிருக்கு. நீங்களும் பாம்பேயிலிருந்து வர முடியாது. நாங்க உங்களுக்காக காத்திருந்து ரெக்கார்ட் பண்ணுறதுக்கும் டைம் இல்லாமல் இருக்கு. அதனால் நாங்க ட்ராக் எடுத்து போட்டுக்குறோம்,' என்றார்கள்.


'அப்போ உங்களுக்கு டைட்டிலில் இளையராஜா என்று பெயர் மட்டும்தான் போட வேண்டும். என் மியூசிக் உங்களுக்கு தேவையில்லைன்னு தெரியுது. என்னோட பெயரை வியாபாரத்திற்காக பயன்படுத்திக்கப் போறீங்க. இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல. நீங்க பண்றதை பண்ணிக்கோங்க,' என்று சொல்லி விட்டுவிட்டேன்.



அப்புறம் ரொம்ப நாள் கழித்து கவிதாலயாவிலிருந்து வந்து மியூசிக் பண்ண சொன்னபோது 'இவங்களுக்கு நம் பெயர் மட்டும்தான் முக்கியமா இருக்கு. நம்மோட இசை இல்ல. அதனால் நாம் ஏன் மியூசிக் பண்ணணும்'னு நினைச்சேன்.


அப்புறம் ரஜினியை வெச்சு படம் எடுத்தபோது ரஜினியையே பாலசந்தர் என்கிட்ட அனுப்பினார். ஆனால் 'ஏன் நீங்க அவர் படத்துக்கு இசையமைக்க மறுத்தீங்கன்னு' அவரும் என்கிட்ட கேட்கல. நானும் சொல்லல.


அவர் என் படத்துக்கு மியூசிக் பண்ணணும்னுதான் கேட்டார். பாலசந்தரே ரஜினிகிட்ட நடந்த விஷயங்களை சொல்லி என்கிட்ட அனுப்பியிருக்கலாம். இல்ல ரஜினியாவது கே.பி சாரை நான் பேச சொல்றேனு சொல்லியிருக்கலாம். எதுவும் நடக்கல. அதனாலதான் ரஜினி கேட்டும்கூட நான் அந்த படத்துக்கு மியூசிக் பண்ணல. இதுதான் காரணம்."

Wednesday, September 12, 2012

குமுதம் விழாவில் சென்னிமலை சி .பி.செந்தில்குமார் பேச்சு

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு  பாகம் 2

குமுதம் பத்திரிக்கை எங்களை எல்லாம் மதிச்சு அழைச்சு விழா நடத்துவதில் ரொம்ப சந்தோஷம்.. 12 வருடங்களுக்குப்பின் சந்திக்கிறோம். இங்கே பேசுனவங்க எல்லாம் குமுதம் பத்திரிக்கை பற்றி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க.. நான் என் மனசுல உள்ளதை எந்த ஒப்பனையோ,அலங்காரங்களோ செய்யாம சொல்றேன்.. 


2000 ஆம் வருஷ தீபாவளி மலர்ல இதே மாதிரி நிகழ்ந்த ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பை 2 பக்க கட்டுரையா போட்டீங்க.. அப்போ இதே மாதிரி குமுதம் புக்ஸின்  ஜோக்ஸ் தரத்தை கூட்டுவது எப்படி?ன்னு பேசுனோம்.. அப்போ குமுதத்தின் விலை ரூ 6. குமுதத்தோட சேல்ஸ்  ஏழரை லட்சம். அப்போ என்ன டாக் இருந்துச்சுன்னா குமுதம் புக்கை ஏழரை லட்சம் பேருக்கும் இலவசமா குடுத்தாலே அதுல வர்ற விளம்பரங்கள் மூலமா குமுதத்துக்கு வர்ற லாபம் ஒரு புக்குக்கு ரூ 1.80  அப்டினு சொல்வாங்க. 


அப்போ ஒரு ஜோக்குக்கு ரூ 50 சன்மானம் குடுத்தீங்க.. ஒரு பக்க கதைக்கு ரூ 100 குடுத்தீங்க.. அப்போ ஒரு பவுனோட விலை ரூ 3900. பெட்ரோல் விலை ரூ 34 .குமுதம் விலை ரூ 6 . இப்போ 12 வருஷங்கள் கழிச்சு பார்த்தா ஒரு பவுனோட விலை ரூ 24,000 + . பெட்ரோல் விலை ரூ 72  .குமுதம் விலை ரூ 10 . எல்லாமே டபுள் மடங்கை தாண்டிடுச்சு. ஆனா சன்மானம்  12 வருடங்களுக்கு முன்னால  என்ன சன்மானம் தந்தீங்களோ அதே 50 ரூபா தான் தர்றீங்க..


 போட்டி பத்திரிக்கைகளான தின மலர் வார மலர்ல ஒரு ஜோக் குக்கு ரூ 500 தர்றாங்க.. அது போக ஸ்பெஷல் ஜோக் 1 க்கு 1000 தர்றாங்க. ஆனந்த விகடன்ல  ஒரு ஜோக் = ரூ 100. ஆனா குமுதம் இதழ்ல  ஏன் சன்மானத்தை உயர்த்தலை?


 உங்களை விட பல மடங்கு சேல்ஸ்ல குறைவா இருக்கும் கல்கி வார இதழ்ல 2000 ஆம் வருஷத்துல ஒரு ஜோக்குக்கு ரூ 15 குடுத்தாங்க. இப்போ 3 மடங்கா  45  தாண்டி ரூ 50 தர்றாங்க.. அட்லீஸ்ட் நீங்க ரூ 100 ஆவது தர வேண்டாமா?


அடுத்து செலக்‌ஷன் டீம். பொதுவா இப்போ இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளிலும் ஜோக் செலக்‌ஷனுக்கு அனுபவம்  மிக்க ஆட்களை போடுவது கிடையாது. செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க பல வருசங்கள் எல்லா பத்திரிக்கைகளும் படிச்சவரா இருக்கனும். அப்போதான் உல்டா ஜோக்ஸ் வந்தா கண்டு பிடிக்க முடியும்..


ஆல்ரெடி வந்த ஜோக்குகள் தான் இப்போ மீண்டும் மீண்டும் ரீ மேக் ஜோக்குகளா உலா வந்துட்டு இருக்கு. ஒரு நல்ல படைப்பாளி ஒரு நாளுக்கு 10 ஜோக் அனுப்பினா  ஒரு உல்டா படைப்பாளி பல புக்ஸ்ல இருந்து சுட்டு 100 ஜோக்ஸ் அனுப்பறார். செலக்‌ஷன் டீம்ல இருக்கறவங்க அடடே, இத்தனை அனுப்பி இருக்காரே என அவருக்கே அதிக வாய்ப்பு தர்றீங்க.



இதுக்கு நல்ல உதாரணமா எம் அசோக் ராஜா அரவக்குறிச்சிப்பட்டி அவர்களை சொல்லலாம்.. அவர் புக் ஷாப்ல தான்  இருக்கார். எல்லா பழைய புக்ஸும் அத்துபடி.. அது போக நடை பாதைக்கடைகள்ல விற்கும் பழைய குமுதம், விகடன், பாக்யா வாங்கி அதுல வரும் ஜோக்ஸ் காப்பி அடிச்சு எழுதறார்.. ஏன் அப்படிப்பட்டவங்களுக்கு வாய்ப்பு தர்றீங்க? புது ஆட்களுக்கு புது ஜோக்ஸ்க்கு வாய்ப்பு தாங்க..



 புது ஜோக்ஸ் போட ஒரு குறுக்கு வழி இருக்கு. அது டாபிக்கல் ஜோக்ஸ் போடறதுதான்.. உதாரணமா இந்த மன்னர் ஜோக்ஸ், வேலைக்காரி ஜோக்ஸ், நர்ஸ் ஜோக்ஸ் எல்லாம் கட் பண்ணுங்க.. அந்தந்த வாரத்துல எது ஹாட் டாபிக்ஸோ அது சம்பந்தமான ஜோக்ஸ்.. உதாரணமா ஆண்ட்ரியா-அனிரூத் கிஸ் மேட்டர்,அழகிரி மகன் கைது ஆகும் சூழல்,கார்ட்டூனிஸ்ட் கைது இந்த மாதிரி மேட்டர்ஸ் கைல எடுங்க.. அப்போ காப்பி ஜோக்ஸ் உல்டா ஜோக்ஸ் குறைஞ்சுடும். நீங்க மீண்டும் மீண்டும் தலைவர் ஜோக், டாக்டர் ஜோக், வேலைக்காரி ஜோக் போட்டா எல்லாம் ரிப்பீட் ஆகிட்டே தான் இருக்கும் 


 இன்னைக்கு ஆனந்த விகடனும், குங்குமமும் நெட்ல அப்டேட்டா இருக்காங்க.. ட்வீட்ஸ்  வலை பாயுதே , வலைப்பேச்சு என்ற டைட்டில்ல வருது,.,.  ஆனா குமுதத்துல வர்றது இல்லை.  குமுதம் ரிப்போர்ட்டர்ல ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் வருது.. ஆனா ஏன் குமுதத்துல. ட்வீட்ஸ்க்குன்னு 2 பக்கங்கள் ஒதுக்கக்கூடாது?


 ஒரு ட்வீட்க்கு ரூ 50 என சன்மானம் குடுத்து படைப்பாளிகளை ஊக்குவியுங்கள்.. ஏராளமான திறமைசாலிகள் சமூக வலைத்தளங்களில் இருக்காங்க.. அவங்களை உபயோகப்படுத்துனா அவங்களும் வளர்வாங்க, குமுதமும் வளரும்.


 குமுதம் இதழில் முதல்ல எல்லாம் ஆறு வித்தியாசங்கள் டாபிக்ல ஒரு ஜோக் செமயா வரும், ஆனா இப்போ அதுல குவாலிட்டி குறைஞ்சுடுச்சு.. அதில் நல்ல கவனம் செலுத்தனும்.


 குமுதம் பத்திரிக்கைல வாரம் மினிமம் 25 ஜோக்ஸாவது போடனும். ரெகுலரா ஜோக்ஸ் எழுதறவங்க 50 பேர் இருக்காங்கன்னா அவங்க தலா 50  ஜோக்ஸ் வாரம் அனுப்பினாலே வாரா வாரம் 2500 ஜோக்ஸ் வந்துடும். ஆனா நீங்க என்ன பண்றீங்க? குமுதம் இதழில் பணி புரியும் குட்டி மு வெங்கடேஷன், மாதவரம் பால்பண்ணை, ஜெயாப்ரியன், சென்னை இவங்க 2 பேருக்கும் தலா 2 பக்கம் ஒதுக்கிடறீங்க. அவங்க ஜோக்ஸ் போட்டது  பொக ஏதோ போனா போகுதுன்னு  தர்மம் போடற மாதிரி வாசகர்கள் ஜோக்ஸ் அஞ்சோ பத்தோ போடறீங்க? அது எப்படி பத்தும்?



 உங்க ஆஃபீஸ் ஆட்கள் ஜோக்ஸை போட வேண்டாம்னு சொல்லலை.. அதை கணக்குல வெச்சுக்காதீங்கன்னு சொல்றேன்.. வாசகர்கள் ஜோக்ஸ் மினிமம் 25 வாரா வாரம் போடுங்க.. அப்போதான் உற்சாகமா ஜோக்ஸ் எழுத முடியும்,..


 வாரா வாரம் ஒரு ஸ்பெஷல் ஜோக் கை ஒரு முழுப்பக்கத்துக்கு போட்டு முத்திரை ஜோக்னு போடுங்க.. ஆல்ரெடி இது ஆனந்த விகடன் ஒரு டைம் செஞ்ச மேட்டர் தான்... நல்ல விஷயங்களை நம ஃபாலோ பண்ணறது தப்பில்லை.



சினிமா விமர்சனங்கள் உங்க யூனிட் ஆட்கள் எழுதறாங்க.. அவங்க பெரும்பாலும் தமிழ்ப்படங்க மட்டும் தான் விமர்சனம் எழுதறாங்க. மற்ற மொழிப்படங்களான ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஹாலிவுட் பட விமர்சனங்களை வாசகர்கள் எழுத வாய்ப்பு குடுங்க.. படிக்கறவங்களுக்கும் ஒரு வெரைட்டி கிடைக்கும்.


 குமுதம் புக்ல கண்ட்டெண்ட் ரொம்ப கம்மியா இருக்கு.. ஒரு குமுதம் புக்கை  கேப் விடாம படிச்சா 45 நிமிஷங்கள்ல  ரெகுலர் வாசகனும், 1 மணி நேரத்துல புது வாசகனும் படிச்சுடலாம்.. ஆனந்த விகடன், இந்தியா டுடே எல்லாம் படிச்சு முடிக்க  2 மணி நேரத்துக்கும் மேல ஆகுது.. 



- தொடரும்



 என் பேச்சு முடிஞ்ச பின்  ஆசிரியர்கள், எடிட்டர்கள் பேசுனாங்க.. பின் கார்டூனிஸ்ட் கண்ணா 3 நகைச்சுவை கார்ட்டூன் வரைஞ்சு ஜோக்ஸ் போட்டி வைச்சாங்க.. அது பற்றி பிறகு....

இதன் முதல் பாகம் படிக்காதவங்க


சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1 

 http://www.adrasaka.com/2012/09/1_10.html

 

 


Monday, September 10, 2012

சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 1

குமுதம் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் இரா மணிகண்டன்  20 நாட்களுக்கு முன் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசில் முன்னணி ஜோக் எழுத்தாளர்கள் சந்திப்பு ஒண்ணு வைக்கப்போவதாகவும் , குமுதம் ஜோக்ஸ் தரத்தை முன்னேற்றும் ஆலோசனைக்கூட்டமாகவும், ஜோக் எழுத்தாளர்களை கவுரப்படுத்தும் விழாவாக அது இருக்கும் எனவும் அறிவித்தார்.மிக்க மகிழ்ச்சியுடன் வருவதற்கு ஒப்புதல் தெரிவித்தேன். நிகழ்ச்சி நடைபெறும் நாள் 8.9.2012 சனிக்கிழமை


 ஏன்னா இந்தக்காலத்துல தமிழ் நாட்டில்  படைப்பாளிகளுக்கு மரியாதை கிடைப்பதே அரிது. ஏற்கனவே 12 வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு சந்திப்பு  நிகழந்தது. 2000 ஆம் ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் அது ஃபோட்டோக்களுடன் இடம் பெற்றது. அப்போ  தேர்வு ஆன டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் 



1. வி சாரதி டேச்சு, திருவல்லிக்கேணி, சென்னை , 

 2. அம்பை தேவா , தூத்துக்குடி , 

3, சி பி செந்தில்குமார் , சென்னிமலை

 4. பா ஜெயக்குமார் , வந்தவாசி 

5. எஸ்  எஸ் பூங்கதிர் , திருவெண்ணெய் நல்லூர்


 6. சீர்காழி வி ரேவதி, தஞ்சாவூர்


7. உ ராஜாஜி , இடைக்காட்டூர்,சிவகங்கை


8. பாஸ்கி  ,சென்னை


9.தஞ்சை தாமு


10. இரா கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டை






இந்த முறை  பழைய லிஸ்ட்டில் இருந்தவங்கள்ல முதல் 3 பேர் , 6வது நபர் மட்டும் இடம் பிடிச்சோம். மீதி ஆட்கள் புது வரவு . அதில் முக்கியமானவர் பர்வீன் யூனுஸ், இவர் இப்போ பெருந்துறையில் வங்கி மேலாளராக பணி புரிகிறார். அவர் தான் விடு பட்ட பல ஜோக் ரைட்டர்ஸை  விழாவுக்கு ஒருங்கிணைப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர்.


வழக்கம் போல் அதே ஏற்காடு எக்ஸ்பிரஸ் பயணம். சென்னையில் அதிகாலை 4.15 க்கு செண்ட்ரல் போயாச்சு. அங்கே இருந்து எதிர் புறம் உள்ள பார்க் ஸ்டேஷனுக்கு நடந்து போய்  எலக்ட்ரிக் ரயிலில் பல்லாவரம் ஸ்டேஷன் போனேன். அங்கே ட்விட்டர் நண்பரும் , அட்ராசக்க இணையத்தின் ஆரம்ப கால வாசகரும், ஆலோசனை சொல்பவருமான சிவ பக்தர் தீவிர ஆன்மீகவாதி சிவ கீர்த்தியுடன் சந்திப்பு. 


 சென்னை மழையுடன் என்னை வரவேற்றது, நண்பர் சிவா என்னை குடையுடன் வரவேற்றார். மழையிலும் தாமதிக்காமல்  வந்த அவர் என்னை அவர் வசிக்கும் அபார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார். காலை டிபன் அவர் கைங்கரியம். ஆனியன் தோசை 8 சாப்பிட்டேன். காலை, மாலை என இரு வேளைக்கும் அவர் வாங்கி வந்த மாவு பாக்கெட் ஒரே  வேளையில் காலி ஆனது.. 

9.30 மணிக்கு என்னை பல்லாவரம் ஸ்டேஷனில் டிராப் பண்ணினார். விழா நடக்கும் நேரம் காலை 11 மணி தானே போயிடலாம்னு நினைச்சது எவ்லவ் பெரிய தப்பு.. ஏகப்பட்ட கூட்டம். வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கவே 30 நிமிடம் ஆகிடுச்சு. அங்கே இருந்து எக்மோர் ஸ்டேஷன் போனேன். மணி 10.30 ஆகிடுச்சு. 


 அம்பை தேவாவும் , பர்வீன் யூனுசும் ஃபோன் பண்ணி குமுதம் ஆஃபீசுக்கு வந்துட்டதா சொன்னாங்க.. கே ஆனந்தன் ஃபோன் பண்ணி நாங்க எல்லாம் 9 மணிக்கே வந்துட்டோம்.. நீங்க தான் லேட் என்றார்.. இதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் வெளியூரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லனும்னா நம்ம ஊர் கணக்கு ஒத்து வராது.. பங்க்சுவாலிட்டியை கடை பிடிக்க  முன்னதாக தயாராக வேணும்.. 


அங்கே இருந்து 20 ஆம் நெம்பர் பஸ் பிடிச்சு அபிராமி தியேட்டர்  ஸ்டாப் போனேன் . ஆட்டோ வாடகை ரூ 70ன்னு சொன்னாங்க,. பஸ்சில் 5 ரூபாதான். சிக்கனம் தேவை எக்கணமும். 11. 15 க்கு ஆஃபீஸ் போய்ட்டேன். என்னமோ சி எம் ஆஃபீஸ் மாதிரி பயங்கர செக்யூரிட்டி..  ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல் உள்ளே செல்ல ஏகபப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணி வெச்சிருந்தாங்க. போன தடவை இவ்வளவு பாதுகாப்பு இல்லை.. 


அதாவது  உள்ளே செல்லும் ஒவ்வொரு கதவிலும் செக்யூரிட்டி ஏதோ ஒரு கார்டை சொருகறார். அப்போதான் கதவு திறக்குது.. 

 கூட்டம் ஜஸ்ட் அப்போதான் ஆரம்பிச்சிருந்தாங்க.. நான் வரப்போ அம்பை தேவா தான் முதல்ல பேசிட்டிருந்தார்.


1.அம்பை தேவா - நான் 30 வருஷங்களா ஜோக் எழுதிட்டு இருக்கேன். என் பூர்வீகம் அம்பை.. விக்ரமசிங்க புரம் ( மணிரத்னம் எடுத்த ராவணன் படத்துல உலக அழகி ஐஸ்வர்யா ராய்  14 ஷாட்ல குளிச்சுட்டே இருப்பாங்களே அந்த அம்பா சமுத்திரம் - சி .பி ) நடிகர் சிவகுமார் என் நீண்டகால நண்பர். அவர் மகன் கார்த்தியின் திருமணத்துக்காக  கோவை வந்து பின்  ஊர் திரும்பும்போது நடந்த பெரிய  பஸ் விபத்தில் என் மகள் , மனைவிக்கு பெரிய காயம் ஏற்பட்டதால் நீண்ட நாட்கள் சென்னை மருத்துவ மனையில் தங்க வேண்டிய சூழலால் சென்னையில் பணி மாற்றல் வாங்கிக்கொண்டேன்.அந்த விபத்து சிகிச்சைக்கு சிவகுமார் ரூ 1,50,000 உதவி செய்தார்.  வாரா வாரம் 100 ஜோக்குகள் எழுதறேன்.. எனக்கு ஜோக் எழுதுவதில் சலிப்பே ஏற்பட்டதில்லை .



2. பர்வீன் யூனுஸ்  - நான் ஒரு வங்கியில் மேலாளரா இருக்கேன். மாசம் ரூ 60,000 சம்பளம் வாங்கினாலும் ஜோக் சன்மானமா ரூ 50 வந்தது என மனைவி ஃபோன் பண்ணிச்சொல்லும்போது ஏற்படும் மன மகிழ்ச்சி அளவில்லாதது. அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. கடந்த 2 வருடங்களாக பல பத்திரிக்கைகளில் எழுதிட்டு வர்றேன்.  எல்லா படைப்பாளிகளுக்கும் எஸ் எம் எஸ் மூலமா யார் யார் படைப்புகள் எந்த எந்த பத்திரிக்கைகளில் வந்திருக்கு என தகவல் சொல்லிடுவேன்.. குமுதம் பத்திரிக்கையும், விகடனும் என் 2 கண்கள் போல.. தொடர்ந்து வாய்ப்பு தர்றீங்க.. 



3. பாலாஜி கணேஷ் , கோவிலாம்பூண்டி - சார் சொன்னா நம்ப மாட்டீங்க.. மிக வறுமையான சூழலில் நான் இருக்கேன்././ நான் வேலைக்குப்போய் சம்பாதிப்பதை விட ஜோக் எழுதி சம்பாதிக்கறதுல தான் வீட்ல அடுப்பு பொங்குது.. சில சமயம் நீங்க அனுப்பிய மணி ஆர்டர் பணத்துல தான் அரிசி வாங்கி சமைச்சிருக்கோம்.. என் வாழ்க்கைல பத்திரிக்கைகளும், படைப்புகளும் இரண்டறக்கலந்துடுச்சு . 



4. கே ஆனந்தன் பி பள்ளிப்பட்டி  - நான் ஜோக்ஸ், ஒரு பக்க கதை என எல்லாம் கலந்து கட்டி எழுதிட்டு வர்றேன்.. ஒரு பக்க சிறுகதைகள் எழுத என்னை ஊக்குவிச்சதே குமுதம் தான்.மற்ற பத்திரிக்கைகளை விட குமுதம் தான் என் படைப்புலக வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்குது.. ஏன்னா ஒரு முறை விகடன் ஆஃபீஸ்ல ஃபோன் பண்ணி 2 நாளுக்குள் அனுப்புங்க அவசரம்னு சொல்லி ஒரு டாபிக்ல ஜோக்ஸ் அனுப்ப கேட்டாங்க.. நானும் ஆஃபீஸ்க்கு லீவ்  போட்டுட்டு மாங்கு மாங்குன்னு 100 ஜோக்ஸ் எழுதி அனுப்பினேன். ஒண்ணு கூட வர்லை..  மனசு விட்டுப்போச்சு.. ஆனா குமுதத்துக்கு நான் அனுப்பற  ஜோக்ஸ்ல 20க்கு 1 என்ற விகிதத்துல வந்துடுது..



5. சொக்கம்பட்டி தேவதாசன்  - நான் ஆனந்த விகடன் உட்பட பல பத்திரிக்கைகளில் நிருபராக பணி ஆற்றியவன். கடந்த 5 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு வர்றேன். ஆனந்த விகடன் தீபாவளி  மலரில் பல ஜோக்ஸ் என்னுது வந்திருக்கு. என்னை லட்சக்கணக்கான மக்களுக்கு அறிமுகம் செஞ்சதில் குமுதத்திற்கு பெரிய பங்களிப்பு இருக்கு.




6. சீர்காழி வி ரேவதி - நான் தஞ்சையில் இருக்கேன்.. என் மனைவி பேர்ல தான் எழுதிட்டு இருக்கேன்.. 21 வருடங்களாக ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கேன்.. என்னோட முதல் ஜோக் வந்ததே குமுதத்துல தான்.. புக்ல என் பேரு ஐ மீன் என் மனைவி பேரு பார்க்கும்போது எழுதுவதற்கான உத்வேகம் பெருகும்..



7. அ . பேச்சியப்பன் , ராஜபாளையம் - குமுதம் ரிப்போர்ட்டர்  வைத்த பாபா பஞ்ச் டயலாக் போட்டியில் 200க்கும் மேற்பட்ட பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பினேன்.. அதில் தேர்வானதுதான் 

1. நான் சாய் பாபா அல்ல, யார் பக்கமும் சாயாத பாபா, 

2. நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்..



இப்போ குமுதம் நடத்திய கோச்சடையான் பஞ்ச் டயலாக் போட்டியிலும் கலந்திருக்கேன்.. வாசகர்களை நாடித்துடிப்பு அறிந்து குஷிப்படுத்துவதில் குமுதம் தான் என்றும் நெம்பர் ஒன்..



8. சுபஸ்ரீ சென்னை - நானும், எங்கப்பாவும் கடந்த 3 வருடங்களா குமுதத்துக்கு ஜோக்ஸ் எழுதிட்டு இருக்கோம்.. என் படைப்பு வந்தா என்னை விட எங்கப்பா தான் சந்தோஷப்படுவார்.  ஒரு பொண்ணா நான் சந்தோஷப்படறது என்னை எங்கப்பா ஊக்குவிக்கறதுதான். 



9.  நா கி பிரசாத் , கோவை - என் முத ஜோக், என் முதல் சிறுகதை வந்ததெல்லாம்  குமுதம் இதழில் தான். புதிய படைப்பாளிகளை குமுதம் ஊக்குவிப்பது போல் எந்த பத்திரிக்கையும் ஊக்குவிப்பது இல்லை.. ஒரு பக்க கதை போடும்போது அதில் படைப்பாளிகளின் பெயரை நல்லா போல்டு லெட்டர்ல போடுங்க.. ஏன்னா 2 லைன்ல ஜோக் எழுதறவங்க பேரும், ஒரு பக்கத்துல கதை எழுதறவங்க பேரும் ஒரே சைஸ்ல தான் வருது..  இன்னும் அட்ராக்சனா பேர் போட்டா நல்லாருக்கும்,,


 இதைத்தொடர்ந்து பேசுனவங்க எல்லாம்  ஒரே டைப்ல தான் பேசுனாங்க.. அவங்க பேச்சுல ஒண்ணை கவனிச்சேன்.. எல்லாரும் அவங்கவங்களைப்பற்றி ஒரு சுய அறிமுகம், அப்புறம் குமுதம் துதி பாடல் இதுதான் மேலோங்கி இருந்தது.. கூப்பிட்ட்டிருப்பது குமுதம் பத்திரிக்கையின் ஜோக்ஸ் தரத்தை மேம்படுத்துவது எப்படி? என்பதற்கான ஆலோசனைக்கூட்டம்.. ஆனா வந்தவங்கள்ல பெரும்பாலும் அந்த டாப்பிக்கை தொடவே இல்லை.. 


குமுதம் பத்திரிக்கையின் நிறை குறைகள் என்ன? அவங்க என்ன செய்யறாங்க? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? ட்விட்டர்ஸ்க்கு ஏன்  விகடன், குங்குமம் போல்  மரியாதை செலுத்தலை?என்பது பற்றி விளக்கமா நான் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு அடுத்த பதிவில்..... 

Tuesday, July 03, 2012

வாலி பால் பிளேயரை மேரேஜ் பண்ணிக்கிட்டா.........ஹி ஹி ஹி

How is It...
1.மேடம், ஏன் பால்கனிலயே எப்பவும் இருக்கீங்க?


பிரபல நடிகைன்னா எப்பவும் டாப்ல இருக்க வேணாமா?

---------------------------------

2. 12 கி மீ தூரத்துல பெண்கள் நடமாட்டம் இருந்தாலும் உன்னால உணர முடியுது , எப்படி?


எஸ் .. எஸ் .. தாங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்


---------------------------------------


3. தலைவருக்கு லொள்ஸ் ஜாஸ்தி


 ஏன்?

 கல்விக்கடனுக்கு (எஜுக்கேஷன் லோன்) ஆவன செய்த அர்சு ஏன் கலவிக்கடன் ( கில்மா லோன் ) தரவும் ஆவன் செய்யனும்கறாரே?


---------------------------------

4. என் காதலர் எனக்கு அல்வா கொடுத்துட்டார்டி..


 அய்யய்யோ, அப்புறம் என்ன செஞ்சே?


சாப்பிட்டேன்.. செம டேஸ்ட்


---------------------------


5. எவ்ளவ் கேவலமா திட்டினாலும் என் சம்சாரம் என்னை நாய்னு மட்டும் திட்டமாட்டா,,

  ஏன்?

 த்ரிஷா உட்பட எல்லா நடிகைங்களும் நாய்னா பிரியமா இருக்காங்களே.. அதான்


----------------------------------





6. தலைவருக்கு எதெதுல டவுட் வரனும்னு விவஸ்தை இல்லாம போச்சு..


 ஏன்?


 தொண்டை மான்னு பேர் வெச்சிருக்கறவங்களுக்கு தொண்டை மான் மாதிரி இருக்குமா?ன்னு கேட்கறாரு


------------------------------------------


7. தலைவர் ஊழல் வழக்குல இருந்து ரிலீஸ் ஆகிட்டார்..


 அவர் குற்றமற்றவர்னு தீர்ப்பு வந்துடுச்சா?


 ச்சே ச்சே அதெல்லாம் இல்லை.. அவர் வழக்கு சம்பந்தப்பட்ட ஃபைல்ஸை எல்லாம் எரிச்சுட்டார்..


---------------------------------


8. டியர், எனக்கு புளிப்பா ஏதாவது சாப்பிடனும் போல தோணுது..  ஏதாவது புரியுதா?


 ம்.. புளியங்காய் வேணுமா? மாங்காய் வேணுமா?  தீனிப்பெண்ணே!



------------------------------


9. வாலிபால் பிளேயரா இருந்த நீ மேரேஜ்க்குப்பிறகு ஏன் அந்த விளையாட்டை விட்டுட்டே?

 சர்வீஸ் போடறப்போ  லவ் ஆல்னு சொன்னா என் மனைவி சந்தேகப்படறா..


--------------------------------


10. தளபதி! என்ன விஷயம்?

 மன்னா! சேனாதிபதி ஆக இருக்கும் என்னை சனாதிபதி ஆக்கி விடுங்கள், ஜாலியாக  ஊர் சுற்றுகிறேன்




-------------------------


AppaTakkara's photo.



11. பொண்ணுங்களுக்கு நூல் விடறதுல அவன் மன்னன்..


 ஓஹோ..


 அதான் ஃபேஸ்புக்லயே குடி இருக்கனா? ( முக நூல்)



--------------------------


12. டெயிலி காலைல எந்திரிச்சதும் யார் முகத்துல முழிப்பீங்க?



 நான் தனியாத்தானே இருக்கேன்..? வீட்டுக்கூரைதான் தெரியும்?



--------------------------

13. உயிரினும் மேலான உடன் பிறப்பே! நன்றி ! வணக்கம் அப்டினு மட்டும் பேசிட்டு தலைவர் உக்காந்துட்டாரே?


 இது ட்விட்டர்கள் மாநாடு.. 140 லெட்டர்ஸ்க்குள்ளே தான் பேசனுமாம்


-----------------------------


14. மாப்ளை தாடிவாலாவா இருக்கார் , பரவால்லையா?




சூதாடிவாலாவாத்தான் இருக்கக்கூடாது? தாடி இருந்தா என்ன?






------------------------------------




15. தலைவருக்கு திமிரு ஜாஸ்தி




 ஏன்?




 லோக்பால்க்கு கவுரவ பேச்சாளரா அமலா பால் வருவாங்களா?ன்னு கேட்கறார்.




----------------------------

கடவுளே இவர்களை காப்பாற்று............


16. மேடம், எதுக்காக முந்தானையை அட்ஜஸ் பண்றீங்க?



சார், நீங்கதானே சொன்னீங்க.. “ 2 சீன் நடிச்சு “காட்டு”



-----------------------------



Thursday, April 05, 2012

குமுதம் - கிருஷ்ணா டாவின்ஸி மரணம் -பாலை இயக்குநர் பகிரும் சில நினைவுகள்

தமிழ் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்ஸிகாலமாகிவிட்டதாகச் சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


லேப்டோ பைரோஸிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா நேற்று மாலை 5 மணி அளவில் மரணமடைந்ததாகத் தெரிய வருகிறது.


அவரது உடல் போரூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.


கிருஷ்ணா டாவின்ஸிக்கு அஞ்ச  ஆளுமையான தனிப்பட்ட சித்திரத்தை பிரத்தியேகமான நினைவுக் கட்டுரையாக நமக்குத் தருகிறார், அவருடன் குமுதம் வார இதழில் பணிபுரிந்த பாலை படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.


கிருஷ்ணா டாவின்சியை அறிவீர்களா?


கிருஷ்ணா டாவின்சி என்ற பெயரை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். குமுதம் எனும் வணிக இதழின் மிகச் சில அறிவுசார் பக்கங்களையும், பல்வேறு வணிக நோக்குப் பக்கங்களையும் நிரப்பிய பெயர் அது. கின்ஸி என்ற புனைப் பெயரில் வெளியான அரசியல் கேலிச் சித்திர வசனங்களின் சொந்தக்காரரும் கிருஷ்ணா டாவின்சியே.


2001 ஆம் ஆண்டு, ஈழத்தில் தலைவர் பிரபாகரன் சர்வதேசச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, குமுதம் சார்பில் சென்றவர். புலிகளுக்கு எதிரான மனநிலையில் இருந்த கிருஷ்ணா, ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், புலிகள் ஆதரவாளராக மாறினார். நான் குமுதம் இதழில் செய்தியாளராக இணைந்தபோது எனக்கான ஆலமரம் கிருஷ்ணா. சிநேகாவின் அழகு பற்றியும் க்யூபாவின் பொருளாதாரம் பற்றியும் ஒரே கோல்ட் பில்டர் கிங்சை இழுத்தவாறு அவரால் பேச முடியும்.


நான் பணியாற்றிய காலத்தில், குமுதம் இதழ் எடிட்டோரியலில் அவ்வப்போது ஏற்பட்ட குழுக்களில் சில நல்லவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மீதமிருந்த நல்லவர்களில் கிருஷ்ணா ஒருவர். யாரும் எந்தக் குழுவினருடனும் அடையாளப்பட அஞ்சிய நாட்கள் அவை. தேநீர் குடிக்க யார் யாருடன் போகிறார்களோ, அவர்கள் ஒரு குழு என காங்கிரசுக்குச் சற்றும் சளைக்காமல் வம்பு பேசிய காலம்.


‘நான் கிருஷ்ணா சார் ஆள்’ என நான் மார்தட்டுவேன். இப்போதும் குமுதம் இதழில் பணியாற்றும் பலருக்கு இது தெரியும். அவருடைய ’ஆளாக’ இருப்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தத்துவம், கோட்பாடு, இதழியல், நடைமுறை அரசியல், பெண்கள், பாலியல், பெண்ணியம், குடும்பம் இன்னும் எவ்வளவோ பேசும் வல்லமை அவருக்கு உண்டு. எனக்கு இதுவே போதும்

.
குமுதம்.காம் இணையத்தைக் கட்டி எழுப்பிய சிலரில் கிருஷ்ணா குழுவினராகிய நாங்களும் உண்டு. அதிகாலை 4 மணி வரை நானும் ஆனந்தும் கிருஷ்ணாவுடன் இணையதளத்துடன் முண்டிக் கிடப்போம். விஜயன் எனும் எளிய தட்டச்சுப் பணியாளனை, ‘விஜயன் நீங்க நல்ல டிசைனரா வருவீங்க’ என வளர்த்தெடுத்தார் அவர். சென்னையின் தலைசிறந்த வடிவமைப்பாளர்களில் இன்று விஜயன் ஒருவர்.


குமுதம்.காமில் ‘நிகழ்காலம்’ எனும் பத்திரிகையைத் தொடங்கியபோது, என்னுடைய அரசியல் ஆர்வத்தைக் கண்டு, என்னை அந்த இதழுக்குப் பொறுப்பாளராக்கினார் அவர். அவுட்லுக் எனும் துணிச்சல் மிகு ஆங்கில இதழை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார். அந்த இதழில் வெளியான நல்ல கட்டுரைகளை நான் மொழி பெயர்த்து எழுதிக் குவித்தேன்.


விரல்கள் வலிக்குமளவு எழுதுவேன். கிருஷ்ணா மெல்லிய புன்னகையுடன், ‘தம் போடப் போலாமா?’ எனக் கேட்டால் அந்த வலி மரத்துப் போகும். தேநீர்க் கடையில் என்னுடன் நின்றபடி சாலையில் கடக்கும் இளம் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு எனக்கும் அவர்களில் அழகிகளை கண்ஜாடையால் காட்டுபவர் குமுதம் இதழின் துணை ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடிந்ததில்லை.


குமுதம் இதழின் தர்க்கங்களுக்கு உட்படாத செய்திகளையெல்லாம் நான் எழுதக் கேட்டபோது, பொறுப்பில் இருந்த பலர் கேலியாக என்னை ஓரங்கட்டுவதுண்டு. கிருஷ்ணா தலைமை நிர்வாகியிடமே என்னை அழைத்துச் செல்வார். ’சத்தியமங்கலம் காட்டுக்குள்ள மலைவாழ் மக்கள் காட்டை விட்டு வெளியேறிக்கிட்டு இருக்காங்களாம் சார்…சென்சேஷனல் ஸ்டோரி…செந்தமிழன் போறேங்கறார்’ என்பார். அனுமதி கிடைக்கும்.


’கல்பாக்கம் அணு உலையைப் பத்தி நம்ம பத்திரிகை உலகம் நெகடிவா எழுத மாட்டேங்குது செந்தமிழன்…நாம் எழுதணும்…’ என்றார்.


‘நான் எழுதறேன் சார்…


’ஓகே ஆனால்…உங்களுக்கு சில க்ரைசிஸ் வரும்…சமாளிக்கணும்’


‘பரவால்ல சார்…’


ஏறத்தாழ உயிரைப் பணயம் வைத்து அலைந்து நான் எழுதிய கட்டுரையை, ’எதுக்கும் அட்டாமிக் அதாரிடில வெர்சன் வாங்கிடுங்க’ என வழக்கம்போல் கூறி, சிலர் அந்தக் கட்டுரையைப் புதைக்க முற்பட்டபோது, மெல்லிய புன்னகை மாறாமல்,


’செந்தமிழன்…இன்னும் ரெண்டு வாரத்துக்கு இதைப் பத்திப் பேசாதீங்க…என்னோட இஷ்யூ வரட்டும்….நான் பார்த்துக்கறேன்’ என்றார்.


அவர் பொறுப்பில் வந்த அந்த இதழில் ’கொல்பாக்கம்’ என்ற தலைப்பில், என் கட்டுரை கவர் ஸ்டோரி. எட்டுப் பக்கங்கள், நான் எடுத்த புகைப்படங்களுடன் வந்தது.


‘சிக்கன் எமன்’ என்னும் கவர் ஸ்டோரி நான் எழுதியது. ப்ராய்லர் கோழிக் கறியை உண்ண வேண்டாம் என்பது கருத்து. கறி விலை கிலோ 18 ரூபாயாகச் சரிந்தது. எனக்குக் கொலை மிரட்டல். எனது வீட்டுத் தொலைபேசி எண்ணை குமுதம் அலுவலகத்திலேயே யாரோ கோழிப் பண்ணை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டனர். நள்ளிரவு மணி அடிக்கும். சகல கெட்ட வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தூக்கமின்றிக் கிடப்பேன்.


கிருஷ்ணா அதே மெல்லிய புன்னகையுடன், ‘செந்தமிழன் பேசாம ஒரு வாரத்துக்கு என் வீட்ல தங்கிக்கங்க’ என்றார். அதன் பிறகு, என் அறைக்குப் போவதே அரிது என்றாகிவிட்டது.


மேற்கு தாம்பரம் அருகே, ஒரு தி.மு.க பிரமுகர் தன் ஊருக்குள் தாழ்த்தபட்ட மக்கள் வாழும் பகுதிக்கு ரேசன் கடை வர விடாமல் தடுத்தார். நான் புகைப்படத்துடன் எழுதிவிட்டேன். வாக்குமூலங்களை திருட்டுத்தனமாக பதிவும் செய்துவிட்டேன். கட்டுரை வந்ததும், அந்தத் தேர்தலில் மேற்படிப் பிரமுகருக்கு சட்டமன்ற உறுப்பினர் போட்டி வாய்ப்பு பறி போனது.


அடியாட்களுடன் அலுவலகம் வந்துவிட்டார். கீழே உட்கார்ந்து கொண்டு, ’எழுதினவனை வரச் சொல்லு’’ என்று கத்துகிறார். அப்போது பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், ‘நீதானய்யா எழுதின…? நீயே போய் பேசி அனுப்பு’ என்றார். என் நிலையை நீங்கள் உணரலாம். முகத்தைப் பார்த்துவிட்டால், தனியே செல்லும்போது வண்டியை மோதினால் போதும்.


கிருஷ்ணாவிடம் ’சார் என்னைப் போகச் சொல்றார் சார்…கொஞ்சம் பேசிப் பாருங்க’ எனக் கெஞ்சினேன்.


கிருஷ்ணா என் தோளில் கைபோட்டபடி, ‘செந்தமிழன்…இவன் கிட்ட சொன்னா கேக்க மாட்டான்…நீங்க கீழே போங்க…செந்தமிழன் வேலையா இருக்காரு… என்ன விஷயம்னு கேளுங்க…’நீங்க யாருன்னு கேட்டா நான் தான் கிருஷ்ணா டாவின்சின்னு சொல்லுங்க’ என்றார் அதே புன்னகையுடன்.


நான் அவ்வாறு செய்துதான் தப்பினேன்.


அவர் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றியவர். சினிமா இயக்குனர் ஆவதுதான் அவர் லட்சியம். அதற்காகத்தான் குமுதம் இதழில் சேர்ந்ததாகச் சொல்வார். ‘செந்தமிழன் சினிமாவுல சேர, பத்திரிகை ஒரு நல்ல எண்ட்ரி’ என்பார்.


என்னிடம் அடிக்கடி, ‘உங்க ஆம்பிஷன் என்ன?’ எனக் கேட்பார்

. ‘அப்படி எதுவும் இல்ல சார்…இப்ப இந்த வேலை பிடிக்குது…செய்றேன்…’ என்பேன்.


’தப்பு…நீங்க சினிமாவுக்குப் போனா நல்லா வருவீங்க..’என்பார். அவர்தான் முதன் முதலாக என்னைச் சினிமாவுக்குத் தகுதியானவனாகப் பார்த்தார். அவருடைய கதை ஒன்றை நானும் அவரும் சீன் சீனாகப் பேசி எழுதினோம்.


’செந்தமிழன் முதல்ல நான் படம் பண்றேன்…அடுத்து நீங்க’ என்பார்.


அவர் குடியிருந்த வீட்டுக்கு நள்ளிரவில் நான் போய் கதவைத் தட்டி, என்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட பெண் உரிமையாளரைக் கண்டபடித் திட்டிவிட்டேன். மறுநாள் காலை, அந்த வீட்டைக் காலி செய்யும்படி உத்தரவு வந்தது.


‘சாரி சார்…’ என்றேன். ‘அட நீங்க வேற செந்தமிழன்…இந்த ஹவுஸ் ஓனர் பெரிய இவளா…? நீங்க என்ன அவ கையப் பிடிச்சா இழுத்தீங்க…? வீ ஆர் ஜர்னலிஸ்ட்ஸ்… லேட் நைட் வருவோம்.. தே ஹவ் டூ அண்டர்ஸ்டேண்ட்’ என்றார் அதே புன்னகையுடன்.


இதுபோல் அவர் மூன்று வீடுகளை மாற்ற வேண்டி இருந்தது.


என்னை அவரே, சுபா வெங்கட்டிடம் அறிமுகம் செய்து வைத்தார். மின் பிம்பங்கள் நிறுவனத்தில் நான் நுழைவதற்கு முழுக் காரணமாகவும் கிருஷ்ணா இருந்தார்.


என் திருமணத்தை நடத்தியதில் கிருஷ்ணா – ரேவதி தம்பதியினரின் பங்குதான் மிக அதிகம்.


2001 ஜூன் மாத்தில் ஒரு நாள் தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்தோம். என்னை கிருஷ்ணாவின் பொறுப்பில் இருந்து வேறு ஒரு நபரின் பொறுப்புக்கு மாற்றும்படி உத்தரவு வந்திருந்தது. மழை தூவிக் கொண்டிருந்தது. ’சார் அந்தாள்கிட்ட என்னால வேலை பாக்க முடியாது சார்…அவன் ஒரு இடியட்…’ என்றேன்.


’கொஞ்சம் பொறுத்துக்கங்க’ என்றார்.


‘வேணாம் சார்…நான் ரிசைன் பண்றேன்’ என்றேன்.


அதே புன்னகையுடன், ’இங்கேருந்து யாராவது ரிசைன் பண்ணினா எனக்கு சந்தோஷம்தான் செந்தமிழன்…’ என்றார். நான் அடுத்த பத்தாவது நிமிடம் விலகல் கடிதம் கொடுத்துவிட்டேன்.


’கிருஷ்ணா சார் இருக்கார்ல…பாத்துக்குவார்’ என்று, அடுத்த மாசம் வாடகைக்கு என்னப்பா பண்றது என ஊரிலிருந்து கேட்ட என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன்.


’கிருஷ்ணா சார்’ அதேபோல் பார்த்துக் கொண்டார். மின்பிம்பங்களில் சுபாவெங்கட் வழியே குமுதம் இதழில் வாங்கியது போல் மூன்று மடங்கு சம்பளம் பெற்றேன்.


சென்னையின் மத்தியதர வர்க்கத்து உறுப்பினராக நான் மாறியது அந்த தேநீர்க் கடையில் எடுத்த முடிவினால்தான். கிருஷ்ணா எனும் மனிதனின் நம்பிக்கையே செந்தமிழன் எனும் எளியவனின் வளர்ச்சி.


அந்த கிருஷ்ணா டாவின்சி இன்று இல்லை.


பத்திரிகையாளர், என் நண்பர் நா.கதிர்வேலன் ‘krishna davinci expired’ எனக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கதிர்வேலனும் குமுதம் இதழில் எங்களுடன் பணியாற்றியவர்.


எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என எதையும் விசாரிக்கவில்லை இன்னும்.

எனக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் இருந்த ஒருவரால், எங்கள் உறவில் விரிசல் விழுந்தது. அவர் என்னோடு பேசுவதைக் குறைத்துக் கொண்டார். எனக்குக் குழந்தை பிறந்தது, நான் கார் வாங்கியது, நான் ஊரோடு போய் விவசாயம் பார்க்கத் தொடங்கியது, திரைப்படம் தொடங்கியது, படம் முடித்தது என என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அவருக்குத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன்.


ஆனாலும், எனக்கும் அவருக்குமான விரிசலில் நியாயமே இல்லை என்பதைத்தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை.


ஒரு வேண்டுகோள் நண்பர்களே, ஆழமான உறவுகளை ஒதுக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒதுக்கக் கூடாது என்பதற்கு ஒரே ஒரு காரணம் இருந்தாலும், ஆயிரத்தை விட ஒன்று பெரிது எனக் கருதுங்கள்.


நான் இப்போது அனுபவிக்கும் வலி உங்களுக்கு ஒருபோதும் ஏற்பட வேண்டாம்!


கிருஷ்ணாவுக்கு அஞ்சலி! அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினரினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! THANX TO THAMIZMEDIA


Tuesday, December 13, 2011

குமுதம் - ரஜினி ராங்க் செண்ட்டிமெண்ட்???

http://www.lankafast.com/wp-content/uploads/2011/11/kochadaiyan-28.jpg

பாட்ஷா படம் ரிலீஸ் ஆன போதுதான் பஞ்ச் டயலாக்கின் மகத்துவம் தமிழ் சினிமாவில் கோலோச்சியது.. பால குமாரன் எழுதிய வசனம் என்பதையே அனைவரும் மறந்தனர். ரஜினி சொல்வது போலவே உணர்ந்தனர்..அதே வசனத்தை ரஜினியைத்தவிர வேற யாராவது பேசி இருந்தா இந்த அளவு எஃபக்ட்டா வந்திருக்குமா? 0.001 % கூட சான்ஸ் இல்லை.. பஞ்ச் டயலாக் பேசுவதற்கு எல்லாம் ஒரு முக ராசி வேண்டும்..


 ஆனா இப்போ பார்த்தா ஆளாளுக்கு பஞ்ச் டயலாக்ஸ் என்ற பெயரில் கொன்னெடுக்கறாங்க..பாட்ஷா பட பிரம்மாண்ட வெற்றிக்குபிறகு குமுதம் ரிப்போர்ட்டரில் பாபா படத்துக்கான பஞ்ச் டயலாக் போட்டியை நடத்தியது.. ஒரு டயலாக்- ரூ 250 பரிசு தந்தாங்க.. ஆனா எதிர் பாராத விதமாக ரஜினி அந்த படத்துக்கு வாசகர்கள் எழுதி அனுப்பிய பஞ்ச் டயலாக்ஸை படத்தில் வைத்து அதை எழுதிய வாசகர்களுக்கு ஒரு டயலாக்கிற்கு ரூ 10,000 அளித்தார்.

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka3.jpg


 ஆனால் என்ன சோகம்னா பாபா படம் ஓடலை.. பஞ்ச் டயலாக்ஸும் படத்துல வலிய திணிச்சது போல இருந்தது.. அந்த படத்துல 13 பஞ்ச் டயலாக்ஸ் வந்தது.. இப்போ கோச்சடையான் படத்துக்கும் அதே குமுதம் பஞ்ச் டயலாக்ஸ் போட்டி வெச்சிருக்கு.. அதுபோக கவுதம நீலாம்பரன் எழுதும் கோச்சடையான் எனும் வரலாற்றுத்தொடர் வருது..  பார்ப்போம் குமுதம் புக்கின் ராசியை.. நான் ஆல்ரெடி அனுப்பின பஞ்ச் டயலாக்ஸில் கொஞ்சம்.....

http://suriyantv.com/wp-content/uploads/2011/11/sultan.jpg.crop_display.jpg


1. என் உடம்பு தான் அரியாசனத்துல இருக்கு, மனசு யோகாசனத்துல இருக்க ஆசப்படுது

-------------------------------------

2. நாட்டு மக்களோட பார்வைல நான் சக்கரவர்த்திதான் , ஆனா அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா நான் மெழுகுவர்த்தி தான்

-------------------------------

3. ராஜ்யத்தை ஆள ஆசைப்படற ஆளுங்க எல்லோருக்கும் அறிவு பூஜ்யமாத்தான் இருக்கு..

---------------------------------------

4. படை பலத்தை நம்பறவன் சராசரி மன்னன், மனோ பலத்தை நம்பறவன் தான் சரித்திர மன்னன்

-------------------------------------

5. அந்தப்புரத்துலயே  குடி இருக்கறவன் சரசன் னு பேர் எடுப்பான், அரியணையில் அமர்ந்திருப்பவன்தான் அரசன்னு பேர் எடுப்பான்

---------------------------------

6. மன்னர் ஆட்சியை ஒழிச்சுட்டு மக்கள் ஆட்சி வந்துட்டா  நாட்ல பாலாறும், தேனாறும் ஓடும்னு நினைக்கறது மடத்தனம்

------------------------------------

7. போர்க்காலத்தில் போர் இடுபவன் எல்லாம் அரசன் இல்லை, வாழ்க்கைல சோர்ந்து போகாம போராடுற எல்லாரும் அரசன் தான்


----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqL50LHcCKiiN3nNOIEPiPNk5R7hf2unUX09Dtqm_ZmcCOk-iZ2490wqpkOZ-Vm_pYtb3uMrhgpmL08vSSSwxqsPZPdCshYZUxwJkZia9X94KQujIBqL2hmYCQSlvItq-ti8xnVJwoDPVG/s1600/anushka1036.jpg

8. காலாட் படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை இந்த நாலையும் நம்பி நான் இல்லை.. மக்கள் படை தான் என் பலம்


-------------------------------------------

9. கஜானா காலி ஆனா மகுடத்தை கழட்டிடனுமே தவிர மக்கள்ட்ட கையேந்தக்கூடாது

---------------------------------

10. சுய நல நோக்கத்துக்காக வேண்டுதல் பண்ணி முடி துறக்கறவன் திருப்பதி பக்தன் , பொது நலத்துக்காக முடி துறக்கறவன் தான் அரசனா இருந்தும் மக்கள் பக்தன்


-----------------------------------------

11. வால் நட்சத்திரங்கள் எல்லாம் துருவ நட்சத்திரம் ஆக ஆசைப்படுதுங்க.. ஆனா துருவ நட்சத்திரம் சூரியன் ஆக ஆசைப்பட்டதில்லை


------------------------------------------

12. கண்ணா! 20ம் நூற்றாண்டுல வரப்போற பைக் , கார், மாதிரி வாகனங்களுக்குதான் ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர்னு வரிசையா போடனும்.. இந்த கோச்சடையானுக்கு எடுத்ததுமே டாப் கீர் தான்

-------------------------------------

13. கண்னா! வீட்ல வாழற பொண்ணுக்கும் சரி.. நாட்டை ஆள்ற பொண்ணுக்கும் சரி அவசர புத்தி ஆகாது

----------------------------------------------------


14. நாயர் கடைல ஆத்தறதுதான் செம டீ! இந்த கோச்சடையான் சாத்துனாத்தான் அது செம அடி


--------------------------------------------

15.  சபரிமலை பிரச்சனை சரி ஆக இந்த அண்ணாமலையின் அடுத்த அவதாரம் தான் கோச்சடையான்


-----------------------------------------

http://www.filmics.com/tamil/images/stories/news/November/28-11-11/Kochadaiyaan.jpg

டிஸ்கி - அனுஷ்கா கிளிப்பச்சை கலர்ல டிரஸ் போட்டிருக்கறதுக்கும், ஆளுங்கட்சி  வி ஐ பி பசுமை விரும்பியா இருக்கறதுக்கும் சம்பந்தம் இல்லீங்கோவ்.. கோச்ச... பட ஹீரோயின்  பச்ச கலர் மேட்ச்னு எடுத்த ஸ்டில்லுங்கோவ்

Wednesday, March 02, 2011

லேட்டஸ்ட் குமுதம் VS கிரேட்டஸ்ட் கேப்டன் பேட்டி - காமெடி கும்மி

http://www.amazingonly.com/wp-content/uploads/2010/09/Vijayakanth_Family_Photos_00.jpg 
9.3.2010 தேதி இட்டு இன்று வெளியான (2.3.2011)குமுதம் வார இதழில் கறுப்பு எம் ஜி ஆரும்,ஆண்டவனுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்த நாளைய முதல்வரும் ஆன கேப்டன் விஜய்காந்த் பேட்டி வெளியானது. பேட்டியின் நீளம் கருதி நானே எடிட்டர் ஆகி அவரது பதிலை சுருக்கி போட்டு ,அவரது மனசாட்சி என்ன பதில் சொல்லி இருக்கும் என கற்பனை கலாட்டா காமெடிகளையும் சேர்த்துள்ளேன். பதிவுலகில் உள்ள அந்த 14 விஜயகாந்த் ரசிகர்களும் மன்னிக்க.

1.குமுதம் -  அ.தி.மு.க +தே.மு.தி.க  கூட்டணி உருவாக ரொம்ப லேட் போல..?

கேப்டன் - பேச்சுவார்த்தையில் இழுபறி...எலக்‌ஷனுக்கு இன்னும் டைம் இருக்கே..இந்த காரணங்கள்தான்..

மனசாட்சி - அந்தம்மா கிட்டே அப்பாயிண்ட்மெண்ட்  வாங்கவே ஆறு மாசம் ஆகிடுச்சு..போயஸ் தோட்டம் போனா 2 நாள் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க.  சொல்லி 2 நாள் கேட் அருகிலேயே அமர்ந்திருந்தும் ,2 நாள் கழிச்சு போயிட்டு நாலு நாள் கழிச்சு வாங்கன்னு விரட்டி விடறாங்க...ம் ம்.


2.குமுதம் -  ஆட்சியில் பங்கு வேணாம்னு சொல்லீட்டீங்களாமே.. ஏன்?

கேப்டன் - தி.மு.கவை ஆட்சியை விட்டு அகற்றனும்ங்கறதுதான் என் லட்சியம்.அதனால சீட் எண்ணிக்கை பிரச்சனை இல்லை.

மனசாட்சி - என்னமோ அந்தம்மா இந்தா இந்தா அப்படின்னு 80 சீட்டு தூக்கி குடுத்த மாதிரியும், நான் தான் வேணாம் ,வேணாம்னு சொன்ன மாதிரியும் பேசறீங்களே..கடைசிவரை என்னை அவமானப்படுத்தாம விட்டாலே போதும்.. ஹூம் பார்ப்போம்.. அவரோட சரித்திரத்துல அவர் அவமானப்படுத்தாத கூட்டணிக்கட்சித்தலைவரே கிடையாது.. ஆனானப்பட்ட கவர்னரையே அவமானப்படுத்தீட்டாரு...
http://www.manakkudiyan.com/wp-content/uploads/2009/09/vijayakanth-seril-brindo-1.jpg
3. குமுதம் - இப்போ உங்க கூட்டணில 14 கட்சிகள் இருக்கு..தொகுதிப்பங்கீடு,கொள்கை ரீதியா பிரச்சனை வராதா?

கேப்டன் -ஒரு குடும்பத்துல சகோதர சகோதரிகளுக்கிடையே பிரச்சனை வராதா?அதெல்லாம் பேசித்தீர்த்துக்கலாம்.

மனசாட்சி - எவன் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?எப்படியாவது 15 சீட்டாவது ஜெயிச்சா போதும். ஓட்டு 12% ல இருந்து டபுள் ஆகி 24 % வாங்குனா இப்போதைக்கு போதும்.அப்புறம் கொள்கை ரீதியான பிரச்சனையா? ஹா ஹா உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு.. இங்கே அரசியல்ல எல்லாருடைய கொள்கையும் ஒண்ணுதான். நாம நல்லாருக்கனும், நமக்கு பதவி கிடைக்கனும்,முடிஞ்ச வரை சுருட்டணும். மக்கள் எப்படி நாசமாப்போனா  என்ன?
4. குமுதம் - ஜெ- கேப்டன் சந்திப்பு எப்போது நடக்கும்?

கேப்டன் -விரைவில்...  அதற்கான பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு..

மனசாட்சி - யோவ்.. ஏய்யா பீதியை கிளப்பி விடறே..நானே பயந்துட்டு இருக்கேன். அவரை சந்திக்கறப்ப படையப்பா படத்துல வர்ற மாதிரி நிக்க வெச்சே பேசி அவமானப்படுத்தி அனுப்புமோன்னு.. 
http://www.newsreporter.in/wp-content/uploads/2011/02/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands.jpg
5.குமுதம் - காங்கிரஸ்ஸோடு கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்துனதா சொல்லப்படுகிறதே..

கேப்டன் -அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை... நாங்க ஏர்போர்ட் பக்கம் போயே 6 மாசம் ஆகுது.. அப்புறம் எங்கேடெல்லி போறது?

மனசாட்சி - எல்லாம் நடத்துனோம்.ஆனா அவங்க எங்களை விட விளைஞ்ச ஆளா இருக்காங்க. காங்கிரஸ் தான் சி எம் வேட்பாளரை நிறுத்தும், நீங்க டெபுடி சி எம் அப்படின்னாங்க..அவங்க ஆதரவுல டெபுடி சி எம் ஆகறதுக்கு அம்மா கிட்டே எடுபுடியா இருக்கறதே  பெட்டர்...


6.குமுதம் - எந்தப்பிரச்ச்னையை முன் வைத்து உங்கள் கூட்டணிப்பிரச்சாரம் அமையும்?

கேப்டன் -தமிழ்நாட்ல பிரச்சனைக்கா பஞ்சம்? திரும்புன பக்கம் எல்லாம் பிரச்சனைதான்.உலகமாகா ஊழல் அலைக்கற்றை இருக்க பயம் ஏன்?

மனசாட்சி - ஹூம்.. பிரச்சனையே எங்க கூட்டணிதான். மேடைல அம்மா மட்டும் உக்காந்திருக்கும். நான் நின்னுட்டே இருக்கனும்.பேசறதுக்குக்கூட அவர் கிட்டே அனுமதி கேட்கனும்.லியாகத் அலிகான் இருந்த வரை (கேப்டனின் ஆஸ்தான வசனகர்த்தா)என் சவுகர்யத்துக்குப்பேசி மக்களை கொலையா கொன்னெடுத்தேன்.ஹூம். 20 பக்கம் மனப்பாடம் பண்ணீட்டுப்போறேன்.. அட்லீஸ்ட் 4 வரியாவது பேச விட்டா பரவால்லை.

http://mmimages.mmnews.in/Articles/2009/Dec/834f07f4-0c1e-46aa-be95-4d56789d8f0a_S_secvpf.gif
7. குமுதம் - ஜெயலலிதா - விஜயகாந்த் இணைந்து பிரச்சாரம் செய்யும் எண்ணம் உண்டா?

கேப்டன் -இல்லை..இரு தலைவர்கள் தனித்தனியே பிரச்சாரம் பண்றது புதுசில்லை..ஏற்கனவே எம் ஜி ஆர் -கலைஞர் ஒண்ணா இருந்தப்ப 2 பேரும் தனித்தனியேதான் பிரச்சாரம் பண்ணுனாங்க...அதே போல்...நாங்களும்..

மனசாட்சி - எனக்கும் ஆசைதான். ஆனா அதுல ஒரு ஈகோ பிரச்சனை வரும். கூடுன கூட்டம் எனக்காகத்தான் கூடுச்சுன்னு நான் சொல்வேன்.ஆர்ப்பரிக்கும் அலைகடலென திரண்ட கூட்டம் எனக்காக வந்தவைன்னு அவங்க சொல்வாங்க... எதுக்கு வம்பு...?

8. குமுதம்  -கடைசி நேரத்தில் தி. மு.கவுடன்  கூட கூட்டணிக்கு முயற்சி செஞ்சீங்களாமே...?

கேப்டன் -சே.. சே கற்பனை.. அதெல்லாம் உண்மை இல்லை.

மனசாட்சி - அதென்ன தி மு க கூட... அவ்வளவு இளப்பமா போச்சா?தனியா நின்னு ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கைப்பிரிங்க ரூ 500 கோடி வாங்கிக்குங்கன்னு பேரம் பேசுனாங்க.. நான் அப்படியே கண்ணெல்லாம் சிவக்க பொங்கி எழுந்துட்டேன்.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை பேரம் தான். இவங்க மட்டும் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி அசால்ட்டா அடிப்பாங்களாம். நமக்கு மட்டும் பிச்சைக்காரத்தனமா ரூ 500 கோடி மட்டும் தருவாங்களாம்.யார் கிட்டே....? நான் ஃபைனலா ரூ 10,000 கோடி கேட்டேன்.. அரண்டுட்டாங்க... 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT3-H__ZGJgTy2QnRPzISYXnO4p3-VcDFZqIgMhubeu9Bq2uiKDBs9wC7UYaGMGq6uvdp-bBCmLO2Css5Q5pvYim5ToQ5iPpxOsLHEO7cJAERni5LkArVZQAWBuV-SR_OvHo8KvNK7jMc/s400/Ayiraththil_Oruvan.jpg
9. குமுதம் - நடிகர் விஜய் உங்கள் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வாரா?அதற்கான வாய்ப்பு உண்டா?

கேப்டன் -தெரியாது.

மனசாட்சி - தே.மு.தி.க விற்காக முதல்ல அம்மா பிரச்சாரம் பண்ணுவாங்களா? அப்படிங்கறதே டவுட்.. இதுல இது வேறயா?

அம்மாவின் ராசி எண்ணான 9 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டது தற்செயலானதா? திட்டமிட்டே போடப்பட்டதா?ன்னு தெரியல.

.தமிழ்நாட்டின் மக்களை இனி அந்த ஆண்டவனே வந்தாலும், ஏற்கனவே ஆண்டவரே வந்தாலும், இப்போது ஆண்டவரே மீண்டும் வந்தாலும் காப்பாத்த முடியாது என்பது மட்டும் தெளிவாத்தெரியுது.

Wednesday, February 23, 2011

குமுதம் VS கலைஞர் பேட்டி - காமெடி கும்மி & உட்டாலக்கடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd70JSBPxmFqRkMKk1UXeTisNvkoN9v8zCBsIVHYzjWgqkjtDfbqSAoLL6LpgwaI4tC5OrJUA4fUDA9UGScrT7LsdPSVXQb2N9zuuoiVy5AWeO03koY9bWMlbDzwAmiqFZgHpc2ut_I_vh/s1600/Karunanidhi+cartoon.jpg
 
தமி்ழ்நாட்டின் நெம்பர் ஒன் தமிழ் வார இதழான குமுதம் (2.3.2011) இன்று கலைஞரைப்பேட்டி எடுத்து  போட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் பிரச்சனை வெற்றியைப்பாதிக்குமா? என சென்சேஷனல் டைட்டிலுடன் வந்துள்ள பேட்டி படிக்க செம காமெடியாக இருந்தது.அதன் ஒரிஜினல் பதிப்பை லைப்ரரியிலோ. நண்பர்களிடம் ஓ சி புக் வாங்கியோ படித்து ரசியுங்கள். ( நாம எந்தக்காலத்துல காசு குடுத்து புக் வாங்கி இருக்கோம்?).இப்போது இங்கே கேள்வி மட்டும் குமுதம் கேட்டது ,பதில் கலைஞர் சொன்னதை போடாமல் கலைஞரின் மனசாட்சி என்ன சொல்லி இருக்கும் என ஒரு கற்பனை.

1.” வரப்போகும் தேர்தலில் தி மு க வின் வியூகம் எப்படி இருக்கும்??”

இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு?எப்பவும் போலத்தான்.வர்றவங்க எல்லாம் வாங்கன்னு எல்லாரையும் கூட்டணில சேர்த்திக்க வேண்டியது. அப்புறம் தொகுதி பிரிக்கறப்ப பிரச்சனை வந்தா “உங்களுக்கு என் இதயத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என மழுப்புவது...

2. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தி மு க சாதித்தது என்ன?

என்ன இப்படி கேட்டுட்டீங்க?.கடந்த 64 வருட காலங்களிலேயே யாராலும் பண்ண முடியாத டார்கெட் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் அச்சீவ் பண்ணி இருக்கோமில்ல..ஸ்டாலின் -அழகிரி சண்டை வராம பேலன்ஸ் பண்றதே பெரிய சாதனையா இருக்கு.. எனக்கு.


3.நீங்க இது வரைக்கும் பல தேர்தலை சந்தித்து இருக்கீங்க. அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் குங்குமச்சிமிழ் அல்லது பனை ஓலை விசிறி குடுப்போம்,ஏமாளி ஜனங்க அதுக்கே ஆளுக்கு 2 ஓட்டு போடுவாங்க. இப்போ எல்லாரும் உஷார் ஆகிட்டாங்க. ஒரு ஓட்டுக்கு ரூ 2000, என் கிட்டே 4 ஓட்டு இருக்குன்னு கணக்கு போட்டு கேக்கறாங்க.. ஹூம் குடுத்துத்தொலைப்போம், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்க வேண்டியதுதான்.
http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg
4. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சிக்கல்கள் வந்தாலும் தேர்தலை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள்.அதற்கான பலம் எங்கே இருந்து கிடைக்குது?

உள்ளுக்குள்ள பயம் இருக்கு, அதை வெளில காட்ட முடியுமா? 60 சீட் தான் ஜெயிப்போம்னு தெரிஞ்சாக்கூட “உடன் பிறப்பே ,நாம் 234 தொகுதிகள்லயும் வெற்றி பெறுவது உறுதி”அப்படின்னு உதார் விட்டுத்தானே பழக்கம்?

5. தி மு க தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்கிறீர்கள்?அவர்களை நினைக்கும்போது  உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
1000 ஊழல்களை  கட்சி  பண்ணுனாலும்,தி மு க ஊழலில் ஊறிய கட்சிங்கறதை  நம்ப மாட்டாங்க  பாசக்காரப்பய புள்ளைக... ஏதாவது சந்தேகம் வந்தாக்கூட முரசொலில உடன்பிறப்பே...அப்படின்னு ஆரம்பிச்சு எதை எழுதுனாலும் நம்பிடறாங்க.. அவங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு....

6. இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை தி மு க வின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?

ம். அதனாலதான் பல்லைக்கடிச்சுக்கிட்டு ராம்தாஸ் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேண்டியதா இருக்கு. 10 சீட்டுக்கு பம்புன ஆள் கூட இப்போ 30 சீட்டுக்கு மேல வாங்கிட்டாரு.காங்கிரஸ் வேற ஆட்சில பங்குனு குண்டைத்தூக்கிப்போடறாங்க... பார்ப்போம்.முடிஞ்சவரை அடுத்த ஊழல் பண்ண சான்ஸ் கிடைக்குமா?ன்னு பார்க்கறேன். முடியலைன்னா இதுவரைக்கும் பண்ணுன ஊழல் பணத்தினை வெச்சு 5 வருஷம் தாட்ட வேண்டியதுதான்.
http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpg
7. ஆ ராசாவை கைது பண்றப்ப உங்களுக்கு தகவலை சொல்லிட்டுத்தான் கைது பண்ணுனாங்களாமே...

ஆமா.. கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கில்ல?

8. வரப்போகும் தேர்தலில் எந்தப்பிரச்சனை மையமா இருக்கும்?உங்க பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

எல்லாத்தேர்தல்லயும் சி எம் சீட்டு யாருக்கு? இதுதான் மையமா இருக்கும். நாடு எக்கேடு கெட்டு நாசமாப்போனா நமக்கென்ன?பதவிதானே நமக்கு முக்கியம்.மேடைல பேசறப்ப ஊழல் அற்ற ஆட்சின்னு உதார் விடுவோம். தனியா வீடு வீடா போய் ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தர்றோம்னு வாக்கு குடுப்போம்.

9. உங்க குடும்பமே சினி ஃபீல்டை ஆக்ரமிச்சு இருக்கறதா குற்றச்சாட்டு இருக்கே?

அட.. அறிவு கெட்ட ஜனங்களே...சினிமாத்துறைக்கு சலுகைகளை வாரி வாரி தர்றேனே எதுக்கு? மக்கள் வரிப்பணத்துல கிடைச்ச பணத்தை தமிழ் டைட்டிலுக்கு வரி விலக்குனு அள்ளி விடறது எதுக்கு..? எல்லாம் சுய நலம் தான்.அதுவுமில்லாம சினி ஃபீல்டை மட்டுமா நாங்க ஆக்ரமிச்சு இருக்கோம்?டி வி மீடியா கூட எங்க கட்டுப்பாட்டுல தான்.அவ்வளவு ஏன் ?இப்போ பேட்டி எடுக்கற குமுதமே கூட இப்போ என் பினாமி தானே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZKRbOQ3Uw088X_BzU9b9EirMJWTygPuTs0znS3IgAjYJn0em9aNcJx9HOiwZVINv0oh5u-Lxw_gScJYsJXr-ST0IBQ_l3CD3-iqw1PJXEJkqiciwjUFaK4vUI3GqzQolO6N0Ijph-p5-A/s1600/tamilmakkalkural_kalavanigal_anbucartoons.jpg
10. இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனை பற்றி என்ன நினைக்கறீங்க..?

அந்தப்பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கனும்.அப்போத்தான் தேர்தல் வாக்குறுதி தர்றப்ப 6-வது முறையாக நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத்தமிழர்கள். மீனவர்கள் பிரச்சனைஅனைத்தையும் தீர்ப்போம்னு சொல்ல முடியும்.இப்பவே தீர்த்துட்டா எதை வெச்சு பிழைப்பை ஓட்டறது?

11. மு க ஸ்டாலின் அண்மைக்காலமாக அபாரமாக உழைத்து வருகிறாரே...
அவரு கவலை அவருக்கு.. ஆட்சி அழகிரி கைக்குப்போயிடக்கூடாதுன்னு பார்க்கறார்.

12. கனி மொழியும் இப்போது அரசியல் பணி ஆற்றி வருகிறார்,அதைப்பற்றி?

எப்படியோ.. தமிழ்நாட்டை எங்க பரம்பரை இன்னும் 100 வருஷம் ஆனாலும் விடாம சுரண்டுவாங்க..

13. நீங்க ஓய்வின்றி உழைக்கிறீர்களே... அது ஏன்?

இதென்ன கேள்வி,, கொஞ்சம் ஏமாந்தா வேற யாராவது ஊழல் பண்ணிடுவாங்க.. முழுக்க முழுக்க எல்லா ஊழலையும் நாங்க தான் பண்ணனும்.

14. நீங்க 75 வருஷமா சினி ஃபீல்டுல இருக்கீங்க.. அப்போ.. இப்போ என்ன வித்தியாசம்?

அப்போவெல்லாம் என் வசனத்திற்காகவே படம் ஓடுச்சு. இப்போ என் வசனம்னு சொன்னாலே கட்சிக்காரன் கூட காத தூரம் ஓடறான். இளைஞன் படம் ரிலீஸ் ஆன 2 வது நாளே ஊத்திக்கிச்சு.. ஆனா ஒரு கவுரத்துக்காக பிரம்மாண்ட வெற்றின்னு கலைஞர் டி வி ல போட்டு ஒப்பேத்திட்டிருக்கோம்.

15. கலைஞர் சிறு குறிப்பு வரைகன்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க?

உலக பணக்காரர் வரிசையில் முதல் இடம் லட்சியம்,ஆசியப்பணக்காரர் வரிசையில் முதல் இடம் நிச்சயம்.
16. பத்திரிக்கையாளர் சோ உங்க மேல கடுமையா தாக்குறாரே ஏன்?

நான் ஒரு தலித் என்பதால் இருக்கலாம்.என்னால சரியா பதிலடி கொடுக்க முடியாம போச்சுன்னா இந்த ஜாதி மேட்டரை கைல எடுத்துக்குவேன். ஒரு பய கேள்வி கேட்க முடியாது.


டிஸ்கி 1 - குமுதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை கொஞ்சம் நறுக் சுருக் ஆக்கி எடிட் செய்திருக்கிறேன்.கலைஞரின் பதில்களில் அவரது தமிழ் நடை வராது. ஏன் எனில் மனசாட்சியின் குரலாகத்தான் பதிவு செய்திருக்கிறேன். மனசாட்சிக்கு நடிக்கத்தெரியாது.

டிஸ்கி 2- தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் எனது செல் ஃபோனில் புது நெம்பர் வந்தால் நான் எடுப்பதில்லை. எனவே பதிவுலக நண்பர்கள் என்னுடன் பேச விரும்பினால் முதலில் உங்கள் செல் ஃபோனில் இருந்து மெசேஜ் அனுப்பி இன்னார் தான் அன்னார் (அதாவது நீங்க)என சொல்லி அப்புறம் பேசவும்.

டிஸ்கி 3 - மேலே சொன்ன டெக்னிக், பதிவர்களுக்கு மட்டுமே.. என்னை மிரட்ட நினைப்பவர்கள் அதே ஐடியாவை ஃபாலோ பண்ணக்கூடாது... ஹி ஹி