Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Tuesday, January 08, 2013

பள்ளி கல்லூரி காலை 7.30 க்கு திறப்பது சாத்தியமா? மக்கள் கருத்து

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம், சென்னை, பெருங்குடியில், பஸ் படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்கள் நான்கு பேர், லாரி மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை, சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை, ஐகோர்ட்டில் ஒரு பதில் அறிக்கையை சமர்ப்பித்தது. 



அதில் கூறியுள்ளதாவது: சென்னையில், பள்ளி வேலை நேரத்தை, காலை, 7:30 மணியில் இருந்தும், கல்லூரி வேலை நேரத்தை, 8:00 மணியில் இருந்தும் துவங்கும் வகையில், மாற்றம் செய்யலாம். இந்தக் கருத்தை, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம் தெரிவித்துள்ளோம். மேலும், கல்வி நிறுவனங்கள் துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மத்தியில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், காலை, 8:45 மற்றும் 9:00 மணிக்கு துவங்குகின்றன. தனியார் பள்ளிகள், 8:00 மணியில் இருந்து, 8:30க்குள் துவங்கப்படுகின்றன. தற்போதைய நேரத்தை மாற்றினால், பள்ளியின் தூரத்தை பொறுத்து, முன்கூட்டியே மாணவர்கள் கிளம்ப வேண்டியிருக்கும். குறைந்தபட்சம், 6:45 மணி முதல் கிளம்ப வேண்டியிருக்கும். இதற்கு, அதிகாலை, 5:00 அல்லது 5:30க்கே எழுந்து, குளித்து முடித்து, தயாராக வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், 





மாணவர்கள், ஆரம்பத்திலேயே எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.


மாணவர்கள் பாதிப்பர்:
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறியதாவது: காலை, மாலை நேரங்களில், பஸ்களின் ண்ணிக்கையை இப்போதே,அதிகரிக்கலாம். மாணவர்களுக்கென, தனியாக சிறப்பு பஸ்களை இயக்கலாம். அனைத்து பஸ்களிலும், கதவுகள் அமைப்பதை கட்டாயமாக்கலாம். இதில் எதையுமே செய்யாமல்,பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றினால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் கண்டிப்பாக வரும்.காலையில் சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து, மயக்கம் அடைந்து விழுகின்றனர்.

இதுபோன்றசம்பவம், அரசுப் பள்ளிகளிலும் நடக்கிறது; தனியார் பள்ளிகளிலும் நடக்கின்றன. இதனால், மாணவர் மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படும். ஆசிரியர்கள், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளில் வேலை பார்க்கின்றனர். அதிகாலையில் எழுந்து தயாரானால் தான், ஆசிரியர்களாலும், 7:30க்கு, பள்ளிக்குச் செல்ல முடியும். எனவே, நேர மாற்றம் செய்யும் முயற்சியை, அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


கல்வித்துறை தயார் : இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள நேரத்திற்கு, பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும், பிரச்னை தீராது; போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக ஏற்படும். நேரத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு. அரசு உத்தரவிட்டால், நேரத்தை மாற்ற நாங்கள் தயார்' என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டம், 10ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

 மக்கள் கருத்து  



1. அனைத்து பள்ளிகளும் அரசு மயமாக வேண்டும் பள்ளிகள் 2 கி மீ சுற்றளவில் உள்ள மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் பெற்றோர் பிள்ளைகளை நடந்தே சென்று விட்டு விடலாம் 


2. வட மாநிலங்களில் குளிர் ஒரு டிகிரி இருக்கும்போதே கூட குழந்தைகள் ஏழு மணிக்கெல்லாம் ஆட்டோவில் ஏறி பள்ளி செல்வதை காணலாம். தமிழ்நாடு குளிரால் அவ்வளவு பாதிக்காத பகுதி மாலை இரண்டு மணிக்கு பள்ளி முடிந்து விடும். இதில் என்ன இவர்களுக்கு கஷ்டம் என்று தெரியவில்லை 


3. இதையெல்லாம்,ஜென்மத்திற்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.....மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் ஒப்புக்கொண்டாலும் ஆசிரியர் வர்க்கம் இதை ஏதனும் ஒரு காரணம் கொண்டு எதிர்க்கும் ....இவையெல்லாம் நடைமுறை படுத்துவது அவ்வளவு எளிதல்ல ...


.பெற்றோர் ,ஆசிரியர், ..காவல் துறை, கல்வித்துறை .மற்றும் ..அதற்கான பொறுப்புள்ள அமைச்சர்கள் உள்துறை செயலர் ...கல்வி துறை செயலர் இவர்களை கொண்ட கூட்டு கூட்டம் நடத்தி அவர்களது கருத்து கேட்டு ... அதன் படி ஒரு முடிவினை எடுக்கவேண்டும் ....அரசு தனது கொள்கையை ஏதேனும் ஒரு வகையில் திணிக்க முயலக்கூடாது 


4. Changes are never change. சார் நானும் தமிழ் நாட்டில் இருந்து இருந்தால் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தான் தெரிவித்து இருப்பேன். தமிழகம் தொடர்ந்து பின் நோக்கி செல்ல ஒரு காரணம் மக்களாகிய நாம் மட்டங்களை ஏற்காததே. திர்ப்பு தெரிவிப்போர் தமிழ் நாடு அல்லாத மற்ற மாநில நகர்களை சென்று பார்த்தல் சென்னை எவ்வளவு பின் தங்கியுள்ளது என்று தெரியும். 



பாம்பே மற்றும் பெங்களூர் நகர்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் காலை 7.30 ஆரம்பித்து மாலை 3.00 அல்லது 3.30 க்கெல்லாம் முடிந்துவிடும். இதனால் மாணவர்கள் பேருந்துகளை சிரமம் இல்லாமல் பயன் படுத்தமுடியும், படி கட்டு பயணம் தவிர்க்க படும் மற்றும் போக்கு வரத்தும் பீக் ஹவர் நேரங்களில் குறையும். நேரம் இல்லை, சிக்கிரம் எழ வேண்டும் என்று புலம்புவதை விட்டு நம் வாழ்க்கை முறையை மட்டற்ற வேண்டும் 


அதாவது பிள்ளைகளை ஒன்பது மணிக்கு முன் படுக்க செய்து அதிகாலை எழ பழக்க வேண்டும். இன்று சென்னை போன்ற நரக வாழ்க்கையில் தனி மனித மாற்றம் களை ஏற்காத வரை சமுதாய மாற்றம் ஏற்படாது. 



5. போக்குவரத்து துறை தங்களிடம் உள்ள குறைகளை தீர்க்காமல், பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தை மாற்றுவதற்கு ஆலோசனை கொடுப்பது வியப்பாக இருக்கிறது. ஏற்கனவே பள்ளிகள் 8.30 மணிமுதல் 9.00 மணிக்குள் தான் துவங்குகின்றன. இதற்கே நேரத்திற்கு போகமுடியாமல் அனைத்து பள்ளிகளிலும் சில மாணவ, மாணவிகள் வெளியில் நிற்பதும், கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் அவர்களை உள்ளே விடுவதும் நடக்கிறது. முதலில் போக்குவரத்து துறை அனைத்து பேருந்துகளிலும் மகாராஷ்டிரா,கர்நாடகா, மற்றும் ஆந்திரா போல இரும்பு கதவுகள் போருத்தட்டும். தானாகவே விபத்துகள் குறையும். 


6. எந்த ஒரு துறையிலும் எந்த ஒரு மாற்றத்தையும் எந்த ஒரு மக்களும் உடனடியாக ஏற்று கொள்வதில்லை.. அது போல்தான் இதுவும்.. எல்லாமும் சாத்தியம்தான்... நடைமுறைபடுத்தபட்டால் எல்லாம் ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும்.... இங்கு கருத்து சொல்லும் எத்தனை பேர் தங்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு காலை வேளைகளில் உதவுகின்றனர்... 


எதிர் கட்சியினர் போல் எல்லா திட்டங்களையும் எதிர்த்து கொண்டே இருந்தால் என்னதான் செய்ய..? தவிர மதியம் மற்றும் மாளை வேளைகளில் பல விசயங்களை செய்யலாம், கற்று கொள்ள நேரமும் மிஞ்சும்... காலை பொழுதில் வெறும் தூக்கம் மட்டுமே மிஞ்சும்... தவிர நடைமுறைபடுத்தபட்டு சாத்தியம் இல்லையெனில் மீண்டும் பழைய நடை முறைகே வரலாமே.... சமச்சீர் கல்வியில் என்ன நடந்தது...? காலையில் ஒரு மணி நேரம் முன்பே எழுந்தால் உடலுக்கும் நல்லதுதான். எல்லாமே பழக்கத்தில் மாறுபவனவே.... முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்... 


7. அரசு என்றால் மக்களுக்கு எதிராக செயல்படுவது என்பதுதான் ஜனநாயகம் . பிள்ளைகள் நிம்மதியாகத் தூங்குவது இந்த காலகட்டத்தில்தான், அதிகாலை எழுந்து தூக்கம் கலையுமுன், அவர்களுக்கு உணவை வாயில் திணித்து, திட்டி, பெற்றோகள் அவதிக்குள்ளாகி, டென்ஷனாகி, இவர்களும் நிம்மதியை இழந்து, குழந்தைகளையும் நிம்மதி இழக்கச் செய்து, பள்ளி சென்றவுடன் எமன் பாசக்கயிறு போல் ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் செய்கிறோம் என்ற பெயரில் பிள்ளைகளை தாங்கள் வீட்டில் பட்ட கஷ்ட்டங்களுக்கு இந்த பிள்ளைகளின் மீது காட்டி, மொத்தத்தில் எல்லோரும் பயித்தியம் பிடித்து ஆளாகவேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம் என்றால் நடக்கட்டும், தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் கல்விமுறைக்கு மாற்றாக பல நல்ல கருத்துக்களை சான்றோர்கள் அள்ளி தர ஆர்வமாக இருக்கும்போது, அவர்களை எல்லாம் மனிதனாகவே மதிக்காமல், இவர்கள்தான் எல்லாம் என்று ஈடுபட்டால் யார்தான் என்ன செய்ய முடியும்? 



ஒவ்வொன்ற்க்கும் மக்கள் நீதிமன்றம் சென்றுதான் தங்கள் வாழ்க்ககை நடத்தவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்றால் மிகையாகாது. பள்ளி மாணவர்களிடமே கருத்துக் கேட்கலாமே? இவர்களுக்கு இல்லாத மூளையா இன்று ஆள்பவர்களிடம் இருக்கப்போகிறது? இன்றைய மாணவர்களிடம் இருக்கும் அறிவு வளர்ச்சி மிக மிக ஆற்றல் கொண்டது, ஆகவே அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்கள், நாட்டுப்பற்றுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும் மாணவர்கள், இப்படி பல கிளைகளாக உள்ள பல தரப்பு மாணவர்களிடம் கலந்து ஆலோசித்து , கடைசியில் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுத்தால் நல்லது. வந்தே மாதரம் 



8. நல்ல திட்டம். 2 - 2:30 க்கு வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடங்ககளை முடித்துவிட்டு மாலையில் 2 மணி நேரம் தொலைக்காட்சியின் முன்னால் உட்காராமல் விளையாட நேரம் கிடைக்கும். இதனால் உடம்பு குண்டாவதைத் தடுப்பதுடன் பல்வேறு வியாதிகளுக்கும் விடை கொடுத்திடலாம். 



9. காலை 7 1/2 மணிக்கு பள்ளி ஆரம்பித்தால் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு செல்லலாம். மேலும் பள்ளிகளும் 3-5 KM க்குள் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து சேர்க்கவேண்டும். அப்போது தான் ஊரில் உள்ள அனைத்து பெற்றோர்களும் தம் குழந்தைகளை ஒரே பள்ளியில் சேர்க்க முற்பட மாட்டார்கள். இது தேவையில்லாத டிராபிக்கை கட்டுப்படுத்தும். மேலும் பள்ளிக்காக குழந்தைகள் வெகு தொலைவு செல்வதும் தவிர்க்கப்படும். செய்வார்களா? 



10. நேரம் மாற்றம் நல்லது தான் பள்ளிக் குழந்தைகளுக்கு, ஆனால் இன்று இருக்கும் போக்குவரத்து நெரிசல்கள் , வாகனங்கள் அதிகமின்மை மற்றும் பலதரப்பட்ட மக்கள் வேலைக்கு அவரசமாக பணிக்கு செல்லும் அதிகாலையில் இந்த நேரம் மாற்றம் மீண்டும் பெற்றோர்களுக்கு, குழந்தைகளுக்கும் பல சிரமத்தை கொடுக்கும் அதற்கு பதிலாக அரசு சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனிப் பேருந்துகளை என்று காலையும் , மாலையும் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்கலாம் மற்ற அரசு பேருந்துகள் காலையிலும் , மாலையிலும் தனியார் பேருந்துகளுக்கு இனியாக வருவாயை ஈட்டலாம் .


 பள்ளிக்குழந்தைகளும் இனிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்யலாம் மற்றும் படியில் பயணம் செய்யாமலும் தவிர்க்கலாம் இலவசங்கள கொடுப்பதை தவிர்த்து விட்டு, நல்ல பயனுள்ள திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்


 நன்றி - தினமலர்

Thursday, July 26, 2012

சென்னை -மைசூர் - ஓடும் ரயிலில் அட்டெம்ப்ட் ரேப் , தொடரும் சம்பவங்கள்

மைசூரு : ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற, நான்கு பேர் கொண்ட கும்பல், அதற்கு அந்தப் பெண் மறுத்ததால், ரயிலில் இருந்து கீழே தள்ளியது. அதிர்ஷ்டவசமாக, வறண்ட ஆற்றில் விழுந்ததால், அப்பெண் உயிர் தப்பினார். இருப்பினும், தலை, கால், முதுகில் காயம் ஏற்பட்டது.




 ரயிலில் பயணிக்கும் இளம் பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுவது, சமீப நாட்களாக அதிக அளவில் நடந்து வருகிறது.





சி.பி - டெயிலி நைட் ஊர்ல போலீஸ் ரோந்து வர்ற மாதிரி ரயில்லயும் ரோந்து வர விடலாம், இதுல என்ன டேஞ்சர்னா ரோந்து வர்ற போலீஸ் ஒழுங்கா இருக்கனும்..அவரே பயிரை மேஞ்சுடக்கூடாது


கடந்த ஞாயிறன்று இரவு, திருவனந்தபுரம் - சென்னை மெயிலில் குடும்பத்துடன் பயணித்த இளம் பெண் ஒருவரை, அதே பெட்டியில் பயணித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சத்யன் என்பவர், பலாத்காரம் செய்ய முயன்றார். 



சி.பி - மிலிட்ரி, போலீஸ் ஆட்கள்னாலே ஒரு மிதப்பு வந்துடுது.. நம்மை யாரும் ஏதும் கேள்வி கேட்கமாட்ட்டாங்கன்னு தெனாவெட்டு



அவரை, சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலும், ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


சி.பி - நல்லா விசாரிங்க, அதே கும்பல்தான் இதே வேலையை செஞ்சிருக்கும், 2 பக்கமும் 4 பேர்..  2 சம்பவமும் ரயிலில்.. 


கர்நாடக தலைநகர் பெங்களூரில் அனாதை விடுதியில் தங்கி, அங்குள்ள தனியார் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தையல் கலைஞராக பணியாற்றி வருபவர்சுஷ்மிதா, 19. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பாட்டி மைசூரில் வசிக்கிறார். 


அவரை பார்ப்பதற்காக, நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு, சுஷ்மிதா நேற்றுமுன்தினம் பெங்களூரில் இருந்து மைசூருக்கு, யஷ்வந்த்பூர் - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.  ரயில் மத்தூர் அருகே செல்லும்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் சுஷ்மிதாவை பலாத்காரம் செய்ய முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பிக்க, சுஷ்மிதா முயற்சித்தார். அதற்குள் அக்கும்பல் அவளை ஓடும் ரயிலில் இருந்து, கீழே தள்ளியது.


 அப்போது ரயில் ஷிம்சா ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்ததால், சுஷ்மிதா ஆற்றில் விழுந்தார். ஆற்றில் தண்ணீர் எதுவும் ஓடவில்லை, வறண்டிருந்தது. ரயில் சென்ற பாலத்திற்கும், அவர் விழுந்த இடத்திற்கும் இடையே, 25 அடி உயரம் உள்ளது. இதனால், கீழே விழுந்த சுஷ்மிதாவுக்கு தலை, முதுகு மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.



தீவிர சிகிச்சை சம்பவத்தை கவனித்த பயணி ஒருவர், மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார், அப்பெண்ணை மீட்டு மாண்டியா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயமடைந்திருந்த அவர், நடந்த விவரங்களை கூறினார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 



இச்சம்பவம் தொடர்பாக அக்பர், 24, இம்ரான், 21, ஆகியோரை உடனடியாக ரயில்வே போலீசார் கைது செய்தனர். சுபான், ரபீக் ஆகிய இருவரையும் பாண்டவபுரா ரயில் நிலையத்தில் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே மைசூருவிலுள்ள கல்யாண கிரியை சேர்ந்தவர்கள். 




போலீசாருக்கு தகவல் சம்பவம் நடந்த போது, பார்த்து கொண்டிருந்த மற்ற பயணிகள், அபாய சங்கிலியை இழுத்தால், குற்றவாளிகள் தப்பி விடுவர் என்ற காரணத்தால், மாண்டியா ரயில்வே நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து, ரயில் பெட்டி எண்ணையும் குறிப்பிட்டதால், குற்றவாளிகளை மாண்டியா போலீசார் கைது செய்ய முடிந்தது என்று கூறப்படுகிறது.





 சம்பவம் 2

தாம்பரம்: தனியார் பள்ளி பஸ் சீட்டில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி இரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை எரித்ததோடு, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல் செய்தனர்.

சென்னை, சேலையூர், இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு சொந்தமாக, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் தினமும் மாணவர்களை அழைத்து வருவதும், விடுவதும் நடக்கிறது. இதற்காக, தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று மாலை வழக்கம் போல், முடிச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு, ஒரு பஸ் சென்றது.

விழுந்தது: இந்த பஸ்சில், டிரைவர் இருக்கைக்கு பின்னால் ஐந்தாவது இருக்கை அருகே பெரிய ஓட்டை இருந்தது. ஆனால், அதை சரி செய்யாமல் குழந்தைகளை ஏற்றிச் சென்றனர். நேற்று மாலை முடிச்சூர் பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பிய டிரைவர் சீமான் பஸ்சை நிறுத்தினார். அங்கு சில மாணவர்கள் இறங்கினர். பின், அங்கிருந்து பஸ் புறப்பட்ட சற்று நேரத்தில், ஐந்தாவது இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்பு மாணவி முடிச்சூர், பி.டி.சி., குடியிருப்பை சேர்ந்த சேதுமாதவன் மகள் ஸ்ருதி, 4, என்ற சிறுமி, ஓட்டை வழியாக விழுந்து, பஸ் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி இறந்தார்.


ஸ்ருதி ஓட்டை வழியாக விழுந்ததை பார்த்து, சக மாணவர்கள் சத்தம் போட்டனர். இதற்கிடையில் பஸ் அரை கி.மீ., தூரம் சென்று விட்டது. மாணவி பலியானதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை பின் தொடர்ந்து சென்று, மடக்கி, டிரைவரை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து அங்கு வந்த ஒரு போலீசும், பொதுமக்களிடம் இருந்து, டிரைவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், பொதுமக்கள் விடவில்லை. ஆத்திரம் குறையாத மக்கள், கம்பி, கல்லால் பஸ்சை அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முடிச்சூர் சாலையில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சமாதானம்: இதற்கிடையில், சிறுமி உடல் கிடந்த இடத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 40 நிமிடம் கழித்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள், பேருந்துக்கு தீ வைத்தனர். அது கொழுந்து விட்டு எரிந்ததால், பதட்டம் அதிகரித்தது. தாம்பரம், சேலையூர் உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பஸ்சின் டீசல் டேங்க் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால், அருகே இருந்த வீடுகளையும், கடைகளையும் பூட்டி விட்டு பொதுமக்கள் ஓடினர். முடிச்சூர் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் வேகமாக திரும்பிச் சென்றன. நீண்ட நேரம் கழித்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர், போராடி தீயை அணைந்தனர். இதில், பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. அதன் பின்னும் ஆத்திரம் குறையாக பொதுமக்கள், சீயோன் பள்ளி உரிமையாளரையும், பஸ்சிற்கு தகுதிச் சான்று வழங்கிய தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியல் செய்தனர்.

போலீஸ் தாமதம்: பொதுமக்கள் பஸ்சை மடக்கி, டிரைவரை தாக்கியவுடனேயே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் போலீசார் அங்கு வரவில்லை. அதன்பின் வந்த, ஒரு போலீசும் நிலைமை மோசமானதை அடுத்து, பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாததால், சென்று விட்டார்.

பஸ் பராமரிப்பில் அலட்சியம்: புறநகரில் உள்ள தனியார் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்தையும் தினசரி சோதனை செய்ய வேண்டும். ஆனால், ஒரு பள்ளியில் கூட, வாகனத்தை முறையாக பராமரிப்பதில்லை. தனியார் பஸ்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறவேண்டும். அதுபோன்ற நேரங்களில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகனங்களை முறையாக சோதனை செய்யாமல் சான்றிதழ் கொடுத்து விடுவதாக பொது மக்கள் புகார் கூறினர்.

அது எங்க பஸ் இல்லை: பள்ளி முதல்வர் மறுப்பு: பள்ளி பஸ்சில் ஓட்டை இருந்தது குறித்து சீயோன் பள்ளி முதல்வர் விஜயன் கூறியதாவது: சம்பவத்திற்கு உள்ளான பஸ், சீயோன் பள்ளிக்கு சொந்தமான பஸ் இல்லை. தனியார் டிராவல்ஸ் பஸ். தனியார் டிராவல்ஸ் பஸ்கள், பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, கொண்டு போய் விடுகின்றன. இதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த பஸ்களை பராமரிக்க வேண்டியது அவர்களுடைய பணி. பத்து நாட்களுக்கு முன்பு தான், தனியார் டிராவல்ஸ் பஸ் டிரைவர்களை அழைத்து, போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தினோம். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் டிராவல்ஸ் பஸ்களை ரத்து செய்வது குறித்த முடிவு செய்யப்படும். இவ்வாறு விஜயன் கூறினார்.

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாப்பப்பசாமியிடம் கேட்டபோது, "தனியார் பள்ளி பஸ் ஒன்று, தகுதிச் சான்றிதழ் பெற வந்தால் பிளாட்பார்ம், புட்போர்ட், மர்காட் சரியாக இருக்க வேண்டும். இரண்டு கதவுகள் போடப்பட்டிருக்க வேண்டும். இடது, வலது ஜன்னல்களில் கம்பிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவசர கால வழி, டயர் மற்றும் மெக்கானிக்கல் நிலைமை சரியாக இருக்க வேண்டும். இதில், ஒன்று கூட சரியில்லை எனில் சான்றிதழ் தரப்படாது. குறிப்பிட்ட பஸ் எப்.சி.,க்கு வந்தபோது, ஓட்டை இருந்திருந்தால், கண்டிப்பாக சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோம்,' என்றார்.



சி.பி - பள்ளிக்குழந்தைகள், மாணவ, மாணவிகள் அப்பப்ப் தங்கள் ஸ்கூல், காலேஜ், பஸ் இவற்றில் ஏதேனும் குறை இருந்தா பெற்றோரிடம் தெரிவிக்கனும்.. பஸ்ஸை எரிக்கும் மக்கள் பொறுப்பா தங்கள் குழந்தைகள் தினமும் பயணம் செய்யும் பஸ் பாதுகாப்பானதுதானா? என் செக் பண்ணி இருந்திருந்தா இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.. நம்ம குழந்தைகளை நாம தான் பார்த்துக்கனும்.. சம்பாதிக்கற நாய்ங்களுக்கு பொறுப்பு இருக்கனும், அவனுங்க ஃபீஸ் எப்படி கறக்கலாம்னு சிந்திக்கவே நேரத்தை செலவு பண்றானுங்க


நன்றி -தினமலர்

Monday, February 28, 2011

ஈரோடு தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்கள்

http://www.baiwan.org/images/new%20school%20building.jpg 
ஈரோடு ஜி ஹெச் அருகில் சவீதா பஸ் ஸ்டாப் அருகே உள்ள கலைமகள் கல்வி நிலையம் நீண்ட வருடங்களாக நல்ல பெயர் வாங்கி வந்த ஸ்கூல்.பத்தாவது ரிசல்ட் வந்தாலே 100% கன்ஃபர்ம் தான்.இப்படி எல்லா இடங்களிலும்,எல்லா மாணவிகளிடமும் நல்ல பெயர் வாங்கி வந்த அந்த ஸ்கூலுக்கு 2 வருடங்களுக்கு முன் சோதனைக்காலம் ஆரம்பித்தது.

அதாவது இன்ஸ்பெக்‌ஷன் வந்த ஆஃபீசர்ஸ் கலைமகள் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் விதிகளின் படி கட்டப்படவில்லை,விதிமுறைகளை மீறி உள்ளது எனவே லைசென்ஸ் ரத்து செய்யப்பட போகின்றது  என ஒரு குண்டைத்தூக்கிப்போட்டனர்.

6வது வகுப்பு முதல் 12 வது வகுப்பு வரை உள்ள கலைமகள் ஹையர் செகண்டரி ஸ்கூல் எந்த பிரச்சனையும் இல்லை.  எல் கே ஜி ,1 வது முதல் 5 வது வரை செயல்படும் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மாடியில வகுப்பு உள்ளது என காரணம் சொன்னார்கள். பாத்ரூம் வசதியும் கிடையாது என்றார்கள்.

நிர்வாகம் என்னென்னவோ செய்து பார்த்தது ,நடக்கவில்லை. விபரம் அறிந்த பெற்றோர்கள் சிலர் டி சி வாங்கி வேறு ஸ்கூலில் மாணவிகளை சேர்த்து விட்டார்கள்.

ஆனால் இப்போதும் அந்த ஸ்கூல் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே தான் நடந்து வருகிறது.மாடியில் இயங்குகிறது.பாத்ரூம் வசதிகள் முறையாக இல்லை.இடையில் என்ன நடந்தது? எப்படி கவனிக்கப்பட்டார்கள் ?எவ்வளவு பணம் கை மாறியது என்று தெரிய வில்லை.

ஒரு வகுப்பில் 55 முதல் 65 மாணவிகள் இந்த மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படிக்கிறார்கள். சராசரியாக 40 மாணவிகளை மட்டுமே ஒரு டீச்சரால் நிர்வகிக்க முடியும் என டீச்சரே சொல்கிறார். ( எனது பெரியம்மா பெண் அங்கே டீச்சர்)

அதே போல் மாமரத்துப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியைகளுக்கு 3 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை.காரணம் சமீபத்தில் தனியார் பள்ளிகள் ஃபீஸ் வசூலிப்பதில் வந்த தடை. அவர்கள் சவுகரியத்துக்கு வசூல் பண்ண முடியாது என்றும் அரசு நிர்ணயித்த அளவே வசூல் பண்ண வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் நிர்வாகம் பழையபடியே வசூல் செய்தது. பெற்றோர்கள் எதிர்த்தனர், சிலர் தர மறுத்தனர். அப்படித்தராத ,ஃபீஸ் கட்டாத குழந்தைகள் தனியே அமர வைத்து சரியாக பாடம் சொல்லித்தராமல் தனிமைப்படுத்துகிறார்கள்.இது மனவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நிர்வாகம் உணர வேண்டும்.

மேலும் டீச்சர்களுக்கு சம்பளம் தராததால் அவர்கள் ஏனோ தானோ என பாடம் நடத்துகிறார்கள்.வேண்டா வெறுப்பாக செய்ய இது ஆஃபீஸ் உத்தியோகம் அல்ல.

ஸ்கூ;ல் ஃபீஸ் வாங்கி அதில்தான் சம்பளம் என அடம் பிடிக்கும் பள்ளி நிர்வாகி ஒரு கோடீஸ்வரர். பல பிஸ்னெஸ் செய்பவர்.அவர் ஸ்கூலில் பல லாபம் பார்த்த போது  இப்போது செம லாபம் எனவே உங்கள் சம்பளம் முன் கூட்டியே வழங்கப்படுகிறது என்றாரா? இல்லை. அப்படி இருக்க ஃபீஸ் சரியாக வசூல் ஆகலை என்பதை காரணம் காட்டி டீச்சர்களுக்கு சம்பளத்தை நிறுத்துவதால் அவர்கள் மனம் பாடம் நடத்துவதில் ஈடுபடுவதில்லை. அது மாணவிகளைத்தான் பாதிக்கிறது.

அதே போல் ஸ்கூல் மாணவிகளும் சரி, டீச்சர்களும் சரி யூனிஃபார்ம் பள்ளி நிர்வாகம் கொடுப்பதைத்தான் வாங்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள்.இதன் மூலம் பள்ளி நிர்வாகம் அடிக்கும் பணம் ஏராளம்.

நான் முன்னாள் கார்மெண்ட்ஸ் ஓனர் என்ற முறையில் இது பற்றி நன்கு அறிவேன்.உதாரணமாக ஒரு சட்டை தையற்கூலி ரூ 60 என வைத்துக்கொண்டால் பல்க் ஆர்டர் அதாவது ஒரு ஸ்கூல் 2000 பேர் 4000 சர்ட் என்றால் வாங்கப்படும் கூலி ஒரு சர்ட்டுக்கு ரூ 35 மட்டுமே...ஆனால் டீச்சர்களிடமும், மாணவிகளிடமும் ரூ 60 கணக்கு போட்டே வங்கப்படுகிரது. இதே போல் தான் துணிகளும்.

ஸ்கூல் ஃபீஸ் வாங்கியே செம லாபம் பார்க்கும் பள்ளிகள் இது போல் யூனிஃபார்மில் பகல் கொள்ளை அடிப்பது முறையா?இதை யார் தட்டிக்கேட்பது?இதற்கு  என்னதான் தீர்வு?