Tuesday, May 15, 2012

பியூட்டி பார்லர் ரெகுலராய் போகும் பெண்ணை எப்படி கண்டு பிடிப்பது?


Photography by mebilia

1. என்னை எங்கேயும் தொட வேணாம்,கோபம் வரும் என்றாள் காதலி,என்னை எங்கே வேண்டுமானலும் தொடலாம்,நோ கண்டிஷன்ஸ் என்றேன்#கில்மாலஜி

----------------------------

2. என்னை ஏன் உனக்கு பிடிச்சிருக்கு என்ற காதலியின் கேள்விக்கு வேற யாரும் எனக்கு சிக்கலை என்ற உண்மையை கூற பயமாய் இருக்கிறது#உண்மை விளம்பி

----------------------------

3. ஆஃபீஸ் டைம்ல SMS  பண்ணாதே ,எனக்கு வேலையே ஓடலை என SMS செய்தாள் காதலி எதிர் சீட்டில் அமர்ந்தபடி#ஒரே ஆஃபீஸ், ஒரே காதலி

------------------------

4. பார்க்கில் அமர்ந்திருக்கும் லவ் ஜோடிகள் ஏழு மணி ஆகட்டும்,அப்புறம் ஏழரையை ஸ்டார்ட் செய்யலாம் என வெயிட்டிங்க்#நானும் வெயிட்டிங்க்

---------------------------

5. வயதுக்கு வந்து குடிசையில் அமர்ந்திருக்கும் முறைப்பெண்ணை உறவினர்களை டபாய்த்துவிட்டு  சந்திப்பது போன்ற த்ரில் வேறெதிலும் இல்லை#ஜிகிடி

-----------------------------
6. உன் மேல நான் கோபமா இருக்கேன்,பேசாதே என்றாள் காதலி. ஓக்கே நோ டாக்கிங்க், ஒன்லி ஆக்‌ஷன் என்றேன் #லவ்வாலஜி

------------------------


7. பியூட்டி பார்லர் ரெகுலராய்  போகும் பெண்ணை அவள் புருவம் பார்த்தே ஈஸியாக  கண்டு பிடித்து விடலாம்#கார்த்திகா D/O ராதா

-----------------------


8. கிரவுண்டில் ஜாக்கிங்க் போகும் பெண்களின் அழகை ரசிக்கும் ஆண்கள் கூலிங்க் கிளாஸ் போடவில்லையே என அவஸ்தைப்படுகிறார்கள்#ஜிகிடி

----------------------


9. இது லேடீஸ் மேகஜின்,எந்த மேட்டரா இருந்தாலும் கிளுகிளுப்பு இல்லாம டீசண்ட்டா அனுப்புங்க.

ஏன் மேடம் ? லேடீஸ்க்கு கிளுகிளுப்பு பிடிக்காதா?

-----------------------


10. மெயிலில் பூக்களின் ஃபோட்டோ அனுப்பும்போது டைட்டிலாக பூவைக்கு பூவை அனுப்பினால் தப்பா?என்றேன்.குரூப் மெயிலாக இல்லாதவரை தப்பில்லை - ரிப்ளை


---------------------------------

http://2.bp.blogspot.com/_6HEHhUXLr78/TTk9NSE-GQI/AAAAAAAAAiQ/6tpZr_uI0EQ/s1600/fjuy.jpg


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipnrCOQK5NqJW-A-ooHLHE6byiX8q4B3fAiFD45Uzc2nivIu1ZG8Llop26TnWXjyvOPrRT4_3kf0YA6HZgTAfFojPphIlhlKgUMlT4dEC0R9BmG_XLJrLil_Sevsv7MjdoN_8-5ktQbLPV/s400/rima_kallingal_1.jpg 

11.மெடிக்கல் ஷாப்பில் லேடி இருந்தால் காண்டம் வாங்கும் தைரியம் எந்த ஒரு கண்ணியமான ஆணுக்கும் வந்ததில்லை

------------------------

12. ஐ லவ் யூ என எழுதப்பட்ட பேப்பரை அவளிடம் கொடுத்து இதுல என்ன எழுதி இருக்கு படி என்றேன்.படித்தாள். காதலை நீ தான் முதல்ல சொன்னே ஹைய்யா என்றேன்

---------------------


13.இன்று முழுவதும் என்னிடம் கண்ணியமாக நடந்து கொண்டால் ஒரு கிஸ் பரிசு என்றாள் காதலி, ஒரு கிஸ்ஸூக்கு ஆசைப்பட்டு பல கில்மாக்களை இழப்பதா#நோ வே


--------------------------------------------

14. என்னை முழுசா புரிஞ்சுக்கிட்டது நீ மட்டும் தான் என்றாள் காதலி.ஏற்கனவே இதே போல் 2 பேரை புரிந்து கொண்டது பற்றி மூச்சு விட வில்லை#சீக்ரெட் லவ்ஸ்

--------------------------------

15. மற்ற எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை தரும் சமூகம் காதலை சொல்வதில் மட்டும் ஆண்களுக்கே முன்னுரிமை தருகிறது#தர்மசங்கடம்

---------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVoAYzMjqYcO0K6UZv2k0_n2hJffPGqGitR74rN5J-7NPdBDbwkOLohycAq7jxgNUpomupczprGgP6T3-elf5YDiV1US4pcvy_F-6M40YjBK5fbezn99eH5Qy9CQnYsppW7mzN3OQofGE/s1600/mahalakshmi.jpgf.jpgg.jpgy.jpg

16. பஸ்சில் ஒரு ஃபிகர் இன்னொரு ஃபிகரிடம் நான் 7 வருஷமா HMT வாட்ச் தான் கட்றேன் என்றது.அட நீங்களும் HMT தானா? என்றேன்,முகம் சிவந்தாள்#ஜிகிடி

---------------------

17.பக்கத்து வீட்டுக்குழந்தைகளை ரசிக்காதவர்கள் ஓவியங்களில்,போஸ்டர்களில்,ஸ்டில்களில் குழந்தை படங்களை ரசிப்பது கேலிக்குரியது

---------------------------------
18. மனைவி திட்டும்போது பக்கத்து வீடுகளுக்கு கேட்டு விடுமோ என கணவன் பயப்படுகிறான், அதைக்கண்டதும் மனைவியின் குரல் மேலும் உயர்கிறது


-------------------------

19. காதலிக்கும்போது இருந்த ஆர்வம் காதலியை திருமணம் செய்தபின் அதே அளவு இருக்கிறதா என கேட்டால் பெரும்பாலானோர் பதில் ஏமாற்றத்தை அளிக்கிறது.

--------------------------

20. மனைவியின் தோழிகளோடு சகஜமாக பேசும் ஆண்கள்,தன் நண்பர்கள் தன் மனைவியோடு பேசும்போது சகஜமாக இருப்பது இல்லை

Digital collages by Florian Kuhlmann
Digital collages by Florian Kuhlmann

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன் கலகலப்பு @ மசாலா கஃபே -

1. அண்ணன் இல்லை, வெளீல போய் இருக்கார்.. 


 எனக்குத்தெரியும்.. அதான் கிளம்பிட்டு இருக்கேன்.. 

 நீங்களா போனா எப்படி? நான் சொல்லி அதுக்குப்பின் நீங்க போனாத்தான் எனக்கு  அண்ணன் கிட்டே இருந்து காசு கிடைக்கும்... 


-------------------------------------------


2.  மிஸ்.. என் வண்டில வந்து விழறப்ப எப்படியோ தெரியலை... ஆனா வண்டில இருந்து இறங்கறப்ப  வலது காலை வெச்சு இறங்குங்க ஹி ஹி 


--------------------------


3. மிஸ். நீங்க தான் என் வண்டில வந்து விழுந்த முதல் ஃபிகர்.. ஐ லவ் யூ.. 


நீங்க எப்பவும் இப்படித்தானா? இப்படித்தான் எப்பவுமா?



---------------------


4. ஹி ஹி .. எப்படியாவது கரெக்ட் பண்ணலாம்னு வந்தேன்.. 


கரெக்ட் பண்ணலாம்னா என்ன? 



---------------------------


5. மேடம்.. எனக்கு நோட்டீஸ் அனுப்பலாம்னு மட்டும் நினைச்சுடாதீங்க.. மீறி அனுப்பிச்சா... 


அனுப்பிச்சா.?

 செத்துடுவேன்


--------------------------------

6. எந்த ஹோட்டல்ல நாயை கிச்சன் ரூம்ல உக்கார வெச்சிருக்காங்க?

 அது என்னோட க்ளோஸ் ஃபிரண்டுங்க.. யார் எது கொடுத்தாலும் கவ்விட்டு நம்ம கிடே வந்து கொடுத்துடும்.. 


-------------------


7. யோவ்.. நீ எனக்கு பெரிய தலைவலிய்யா.. 


டோண்ட் ஒர்ரி. ஹெல்மெட்டாதான் இருப்பேன். ஹெட் ஆக்கா இருக்க மாட்டேன்.. 


----------------------------


8.   டிரைவர். வண்டியை மசாலா கஃபேக்கு விடு.. 

 வேற நல்ல ஹோட்டல்க்கு போலாம் மேடம்

 யோவ்! நாம போறது ரெயிடுக்கு.. 


------------------------

9. இன்னும் கொஞ்ச நாளுக்கு அஞ்சு வட்டி அழகேசன் தொந்தரவு இல்லை.. நைஸா துரத்தி விட்டாச்சு.. 


அதான் இப்போ நீ வந்துட்டியே.. 


------------------------------

10. நீ இவ்ளவ் அழகா இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா .... 


தெரிஞ்சிருந்தா?


 துபாய்ல ஒரு மொக்கை ஃபிகர் கிட்டே லவ் யூ சொல்லி இருக்கவே மாட்டேன்


 அதுக்காக அவ தானே வருத்தப்படனும்?


--------------------------------
11. பாஸ்.. எதுக்கு முட்டாள்களை எல்லாம் வேலைக்கு வெச்சுக்கறீங்க?


 முட்டாள்கள் தான் நாம எது சொன்னாலும் யோசிக்காம சொன்னதை மட்டும் செய்வாங்க. 


---------------------------------


12. அடுத்தவன் ஃபிகருக்கு ஆசைப்பட்டா சொந்த ஃபிகர் சப்பையாத்தான் அமையும்


----------------------------


13. சம்பந்தம் இல்லாம கேள்வி நீ கேட்கறே.. இப்போ புரியுதா?

 ஏதோ சம்பந்தம் இல்லாம பேசறேன்னு புரியுது... 


--------------------------------

14. மிஸ்.. எனக்கு அந்த ஃபிகரை டாவ் அடிக்கறதுல எந்த அப்ஜெக்‌ஷனும் இல்லை.. 

 யோவ்.. அப்ஜெக்ட் பண்ணவேண்டியது அவ தான். 


-----------------------------------

15.  மாப்பி, எனக்கு அந்த ஃபிகர் செட் ஆகுமா? 


டெஃபெனட்டா.. ஏன்னா அட்டு ஃபிகருக்கு லட்டு ஃபிகர் செட் ஆகறதுதான் உலக நடப்பு


--------------------------------

16. சூர்யா மாதிரி ஃபிகர் முன்னால சிரிச்சு மயக்குடான்னா சுருளிராஜன் மாதிரி சிரிக்கிறியே.. 


---------------------------

17. அநியாயத்துக்கு எதிரா குரல் குடுக்கறவங்களை எனக்கு பிடிக்கும். 

 அவன் பேசவே மாட்டான். என்ன பண்ணுவீங்க?


------------------


18.  ஹலோ.. மிஸ். நீங்க என்ன செல் ஃபோன் கம்பெனியா? அடிக்கடி பிளானை மாத்திட்டே இருக்கீங்க?


--------------------------------

19. என்ன டல்லா இருக்கே? வியாபாரம் படுத்துக்கிச்சா?


நானே படுத்துட்டேன்... உடம்பு சரி இல்லை.. 


-----------------------------

20.  போலீஸ் ஸ்டேஷன்ல கூட அவ்ளவ் போலீஸ் இருக்காது, எப்போ பாரு என்னை சுத்தி போலீஸ்ங்க சுத்திட்டே இருக்கு


-

------------------------------


21.  நான் யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்குவேன்.. 

 மிஸ்.. நல்லவேளை பயந்துட்டேன்.. 


-----------------


22. ஊமைக்கு நீங்க ஹெல்ப் பண்ணுனீங்களா? வாவ்.. சூப்பர்னு கத்துனான் பார்க்கலை?


--------------------------


23. என்னை பார்ட்னர்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் மிஸ்.. ஹி ஹி 


--------------------


24.  மிஸ்.. எனக்கு பேக் ( BACK)  போச்சு.. உங்களூக்கு பேக் ( BAG) போச்சு



-----------------------


25. உன் ஆள் போகுதுடா... 

 அவ பாட்டுக்குப்போய்ட்டு போறா.. என்னை ஏண்டா உசுப்பேத்துறே.. 


-----------------


26. பொண்ணுங்க கிட்டே வயசைத்தான் கேட்கக்கூடாது..  சைசை கேட்கலாம். 


வாட்?


 எதுக்கு ஜெர்க் ஆகறீங்க? முன்னே பின்னே தெரியாத கடைக்காரன் கிட்டே எல்லாம் உங்க சைஸை சொல்வீங்க.. என் கிட்டே சொல்ல மாட்டீங்களா?


சரி காதை குடுங்க, சொல்றேன் --------


 அய்யோ.. நான் செப்பல் சைஸ் கேட்டேன்.. நீங்க இந்த சைஸ் சொல்லீட்டீங்களே.. 


--------------------------


27. பொண்ணுங்க ஜாலியா , சந்தோஷமா இருக்கனும்னா அவங்களுக்கு  ஆயிரக்கணக்குல செலவு பண்னனும்.. அதே பசங்க சந்தோஷமா இருக்கனும்னா ஒரு குவாட்டர் ஒரு சோடா ஊறுகா போதும்



------------------------


28. அய்யய்யோ போலீஸ் போலீஸ்.. 


சும்மா கத்தாதே.. அது ஆம்புலன்ஸ்.. 

 இப்போ எல்லாம் எது போலீஸ்.. எது ஆம்புலன்ஸ்ஸே சொல்ல முடியாது. 


----------------------------------


29. மிஸ்.. டோண்ட் ஒர்ரி.. இந்த ஹேண்ட்பேக்கை க்டைக்காரங்க டோர் டெலிவரி பண்ணிடுவாங்க. 


 யோவ். எந்த கடையிலாவது ஒரே ஒரு ஹேண்ட் பேக்குக்கு டோர் டெலிவரி பண்ணீ பார்த்திருக்கியா?


----------------------------


30. ஃபாஸ்ட் ஃபுட் மேல ஏன் மக்கள் இவ்வளவ் ஆர்வம் காட்டராங்க.. நோயும் ஃபாஸ்ட்டா வந்துடும் 



--------------------


31. பெரிசா ஜெயிக்கனும்.. 


 பெருசு கண்டிப்பா ஜெயிக்கும் ஹி ஹி 


---------------------


32. இது பழைய ஐடியா . எடுபடுமா?

 பழைய பில்லா படம் ரீமேக் பண்ணி ஓடலையா? அப்போ பழைய உணவு பழக்கம் ஏன் ஹிட் ஆகாது?


--------------------------


33.  ஒருத்தன் தப்பானவனா? இல்லையா? என்பதை போலீசை விட பெண்ணால் தான் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்


------------------------------

34. எனக்கு மசாலா வடைன்னா பிடிக்கும் மிஸ்.. ஹி ஹி 


-----------------------

35.  எனக்கு எப்பவும் வடைன்னா பிடிக்கும் ஹி ஹி 


-------------------------

36.  மாப்பி.. உன்னால 5 கிலோ அரிசி மூட்டையைக்கூட ஒழுங்கா தூக்க முடியலை. நீயா அவளை தூக்கப்போறே?


------------------------

37.   மாப்பி.. நிறுத்து.. 

 கூப்பிட்டதும் சடன் பிரேக் போட்டு நிறுத்த நான் சைக்கிளா ஓட்டிட்டு இருக்கேன்..? சண்டை போட்டுட்டு இருக்கேன் ராஸ்கல்ல். 


--------------------------------


38. சண்டை போட வர்றவன் மாதிரியா இருக்கே? சாத்துக்குடி ஜூஸ் தர வர்றவன் மாதிரி இருக்கே.




--------------------------

39.  மாமா ஒரு வார்த்தை  சொன்னா போதும் இந்த ஏரியா லேடீஸ் எல்லாரும் கேட்பாங்க... 


 மாமா சொன்னா அத்தையே கேட்க மாட்டாங்க. எப்படி மத்த பொண்ணுங்க கேப்பாங்க?


-------------------------------


40.  சும்மா சீனை போடாதடி. 


 சீனோ, பேனோ நாங்க போட்டாதான் ரசிக்கற மாதிரி இருக்கு?


-------------------------


41  மாப்பி, நீ ஏன் நடுத்தெருvவுக்கு வந்துட்டே.?


டேய்.. நாயே ஜீப வந்துட்டு இருக்கேன்.. நடுத்தெருவுல வராம 4 வீடு புகுந்தாடா வர முடியும்?


--------------------------



42.அவ சொல்றதை எல்லாம் நீ நம்பறியா?

ஆரம்பத்துல நானும் நம்பலை, ஆனா நம்புனாத்தான் சாப்பாடுன்னு சொல்லிட்ட பிறகு நம்பித்தானே ஆகனும்?


---------------------------

43.  ஏண்டா. மணி மிட் நைட் `12 ஆகுது.. பேய் பிசாசே டியூட்டியை முடிச்சுட்டு போய் இருக்கும்.. இங்கே இந்நேரத்துல என்னடா பண்றீங்க?


------------------


44. ஆமா. நாங்க நைட் 12 மணிக்கு பொண்ணை கடத்தப்போற மேட்டர் உனக்கு எப்படித்தெரியும்?

 அடப்பாவி.. நான் சும்மா எதேச்சையாத்தான் கேட்டேன். நீயே உளறிட்டே


-------------------------------

45.  என்னை யாரும் தடுக்க முடியாது.. கடலுக்கே கேட்டா? புயலுக்கே பூட்டா?


----------------------

46.  பாஸ்.. நான் வீடு வரை போய்ச்சு வந்துடவா? சுகர் டேப்லெட்டை மறந்துட்டு வந்துட்டேன்..


 ஹூம்.. சுகர், பைல்ஸ்,முடக்குவாதம் வந்தவனை எல்லாம் அடியாளா வெச்சுக்கீட்டா இப்படித்தான்..


--------------------------------------------


47. ஊர்ல இருக்கற எல்லா ரவுடிகளும் இப்படி என்னப்பார்த்து பயந்து பயந்து ஓடினா அப்புறம் நான் யாரைப்பார்த்துதான் சவால் விடறது? யார் கிட்டேதான் ஃபைட் போடறது?


---------------------------

48. நாய் முனகற சத்தம் கேட்குதே?

 இது குளிர் காலம்.. கண்ட கண்ட காரணத்துக்காக எல்லாம் நாய் முனகும்.. கண்டுக்காத.


-----------------------------------


49. எவ்ளவ் தைரியம் இருந்தா நம்ம வீட்டுப்பெண்ணை தூக்க நம்ம வீட்டுக்கே வருவாங்க. ?

 டேய். ஏதோ பேசனும்கறதுக்காக பேசாதே.. நம்ம வீட்டுப்பெண்ணைத்தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கா போவாங்க?




-------------------------------------

50. டேய் நாயே.. நான் பொம்பளை வேஷம் போட்டு வந்திருக்கேன்.. அவனு நினச்சு என்னைத்தூக்கறியே. அப்போ அவளை இந்த இடத்துல பிடிச்சுத்தான் தூக்குவியா?


-----------------------------------

51. வெட்டியா இருந்தாலே 4 கொலை பண்றவன் நான், இப்போ வெறுப்புல இருக்கேன்.. எத்தனை கொலை பண்ணப்போறேனு எனக்கே தெரியாது.


-----------------------


52. பாஸ்.. எனக்கு ஒரு ஐடியா.


சொல்லு சொல்லு..


சாயங்காலம் தேடிப்பார்க்கலாம். இப்போ போய் சாப்பிடலாமா?


-----------------------------

53. என்னைப்பற்றி உங்களுக்குத்தெரியாது.. இந்த ஊர்ல சமாதில இருக்கறவங்க பாதிப்பேரு என்னால கொலை செய்யப்பட்டவங்க தான்.


--------------------------------

54.  எல்லா வேலையையும் பறந்து பறந்து  செய்யனும்னு சொல்றேன். நீ என்னடான்னா பறந்து போய் சாவேங்கறியே..


--------------------

55.  இவளுக இம்சை தாங்க முடியலைடா.. ஓவரா சீன் போடறாளுக.



-------------------------------


56.  தப்பை தப்பா செய்யறவன் தான் மாட்டறான்



------------------

57. எல்லாரும் ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்பா போட்டு  என்னை மாட்ட வெச்சுட்டீங்களே. டேய். ஆனா நீ என்னை அடையாளம் தெரியாத மாதிரி நடிக்கறே பாரு அதுதான் தாங்கிக்கவே முடியலை. ..



-------------------------

58.  இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்  ( ரமணா டயலாக்)

 டேய். நாயே , இங்கே அடிச்சா இங்கே தாண்டா வலிக்கும். அங்கே எப்படி வலிக்கும்?


-----------------

59. டேய்.. அடியாளுங்களா? இப்படி எதுக்கு என்னை சுத்தி சுத்தி வர்றீங்க?  இது என்ன சுடுகாடா? நான் பொணமா?


--------------------------


60. முறைப்பெண்ணும், மொட்டை மாடில காய வெச்சிருக்கும் வத்தலும் ஒண்ணுதான், எப்போ யார் தூக்கிட்டு போவாங்கன்னு சொல்லவே முடியாது..



----------------------

61.  விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படும் நு சொன்னியே. அந்த பின் விளைவுகள் இதானாடா?



----------------------------------


62.  அடி வாங்கறதைக்கூட கேட்டு வாங்கிக்கறானே. அடி என்ன கேபிள் கனெக்‌ஷனா?



---------------------------------


63. கட்டைக்குத்தானே சண்டை.. இந்த இந்த கட்டையை நீயே வெச்சுக்க. எதுக்கு கத்தியை எடுக்கறே?



-------------------------------


டிஸ்கி - படத்தில  மொத்தம் 68 ஜோக்ஸ். 5 மறந்துட்டேன்.. நினைவில் உள்ளவர்கள் கமெண்ட்டில் சொன்னால் பதிவில் சேர்த்துக்கறேன்

சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 1



ஈரோடு தங்கதுரை பேருக்கு முன்னால தான் ஈரோடு வெச்சிருக்காரே தவிர  ஆளை ஈரோட்ல பார்க்கவே முடியாது.. ஒசாமா பின் லேடன் மாதிரி ஆள்மறைஞ்சுட்டே இருப்பாரு.. எப்பவாவது ஈரோடு வந்தாக்கூட நைஸா மீட் பண்ணாம எஸ் ஆகிடுவாரு..  அப்பேர்ப்பட்ட நல்ல மனுஷனே எனக்கு ஃபோன் பண்ணி சென்னைக்கு 2 பேரும் ஒண்ணா போலாம்னு சொன்னதும் நித்திக்கு ஆதீனம் பதவி கிடைச்சதும் ஜிஞ்சிதா எப்படி சந்தோசப்பட்டாஙகளோ அந்த அளவு சந்தோசப்பட்டேன்.;. போதாததுக்கு மதுரை டாக்டர் ரியாஸ் கூட சென்னைல காலைல மீட் பண்ணி 3 பேரும் ஒரே ஹோட்டல்ல தங்கறதா பேச்சு..


விழா தொகுப்பாளர் பரிசல்காரன்




ஏற்காடு எக்ஸ்பிரஸ் நைட்  9 மணிக்கு.. அண்ணன் தங்கதுரை சாயங்காலம் 6 மணிக்கு ஃபோன் பண்ணி ஹோட்டல் சிவரஞ்சனில  இருக்கோம்.. சாரி இருக்கேன்னாரு.. அப்பவே அண்ணன் தடுமாறுகிறாரே?ன்னு நான் உஷார் ஆகி இருக்கனும்.. யதார்த்தமா நினைச்சுட்டேன்.. அப்புறம் ஒரு பிட்டுப்போட்டாரு.. நீங்க ரயில்ல முன்னால போங்க.. நான் பஸ்ல பின்னாலயே வர்றேன்னு சொல்லிட்டாரு.. சரி.. ஹோட்டல்ல எங்கே தங்கி இருக்கீங்க? ரூம் நெம்பர் என்ன? னு கேட்டேன் , அண்ணன் சொல்லலை.. பாவம் என்ன தர்மசங்கடமோ.. யார் கூட வந்தாரோ? சரி.. அது  அவர் பர்சனல் மேட்டர்.. நமக்கு என்ன போச்சுன்னு  நான் கிளம்பிட்டேன்..


நைட் 8.45 க்கு தங்கதுரை ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்க்கு வந்து வழியனுப்பினார்.. ( அவர் மட்டும்  தனியாதான் வந்தாரு)காலைல  4 மணிக்கு  சென்னை போயாச்சு.. ஆக்சுவலி டைம் 4.30க்குத்தான் போகனும்.. அட்வான்ஸா போயிடுச்சு..


அப்புறம் நான் பாண்டி பஜார் சரவணா ஹோட்டல்ல தங்குனது, மெட்ராஸ் பவன்  பிளாக் ஓனர் காரு சிவக்குமாரை மீட் பண்ணுனது, இயக்குநர் எஸ் எஸ் குமரன், அவர் அஸிஸ்டெண்ட் டைரக்டர் முருகன் மீட் பண்ணுனது எல்லாம் அப்புறம் பார்ப்போம்.. மதியம் 2.45 க்கு அடையாறு போய் சேர்ந்துட்டேன்.. அப்போ தான் ஒரு புண்ணியவான் ( ஐ திங்க் யோகா குணச்செல்வன்) ட்விட்டர்ல அப்டேட் பண்ணுனாரு, அடையாறு டிப்போ ஸ்டாப்னு./. நல்ல வேளை.. அடையாறுலயே இறங்கி இருப்பேன்.. இறங்கி யூத் ஹாஸ்டல் எங்கே?ன்னு விசாரிச்சா வழி சொன்னாங்க... ரைட் கட் பண்ணி பெட்ரோல் பங்க் தாண்டி அரை பர்லாங்க் தூரம் வாக்கபிள் டிஸ்டேன்ஸ் தான் ( இந்த வாக்கபிள் டிஸ்டேன்ஸ்க்கு ஏதாவது வரை முறை இருக்கா? ஆளாளுக்கு வாக்கபிள் டிஸ்டேன்ஸ்னு சொல்லிக்கறாங்களே?)


 கறுப்புத்தங்கம்  அண்ணே ஒரு விளம்பரம்,வேதாளம் அர்ஜீன், எம் ஜி ரவிக்குமார்


 யூத் ஹாஸ்டல் வந்தாச்சு.. முத ட்வீட்டர் செந்தில்நாதன்.. பைக்கை நிறுத்தி ஸ்டேண்ட் போட்டுட்டு இருந்தார்.. இவர் ரைட்டர் சி எஸ் கேவோட க்ளோஸ் ஃபிரண்ட்.. ரைட்டர் சி எஸ் கே எல்லாருக்கும் தெரியும்,, இருந்தாலும் தெரியாதவங்க ஈசியா அடையாளம் கண்டுக்கனும்னா டெயிலி காலைல 7.47 AM க்கு  ட்விட்டர்ல கவிதை லிங்க் ஷேர் பண்ணுவாரு.. யாருக்காக இந்த சேவைன்னு கேட்டா எல்லாம் உங்களுக்காகத்தான்னு சொல்வாரு.. பாவம் நல்ல மனுஷன்.. பொய்யே பேச மாட்டாரு.. இவர் ராஜன் லீக்ஸ்ன் பங்காளி.. எதுலன்னு கேட்கக்கூடாது.. 

உள்ளே எண்ட்டர் ஆனா ஆல்ரெடி ஒரு பெரிய கேங்க்கே அங்கே இருக்கு.... அவங்களை பார்த்ததும் எனக்கு செம உற்சாகம்.. ஸ்கூல் ஃபிரண்ட்சை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ற மாதிரி ஒரு ஃபிலிங்க்.. பறவைகள் பல விதம் படத்துல ராபர்ட் ராஜசேகரன் இந்த மாதிரி ஒரு சீன் வெச்சிருப்பாரு..

 பாலாஜி தான் முதல்ல என்னை அடையாளம் கண்டு பிடிச்சு  மாப்ஸ் நீங்க கூலிங்க் கிளாஸ் இல்லாம வரலாமா?ன்னு அவர் ஓசில வாங்கி வெச்சிருந்த கூலிங்க் கிளாசை எனக்கு ஓசில கொடுத்தாரு.. வழக்கமா எனக்கு ஓ சி வாங்கி பழக்கம் இல்லை.. ஆனா மேத்ஸ் ல மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ்ங்கற மாதிரி ஓசி இண்ட் ஓசி சொந்தம்ங்கறதால வாங்கிக்கிட்டேன்..

 ஈரோடு தங்க துரை, நவீன்


ட்விட்டர் டி பி ல 2 கைலயும் குழந்தையோட இருப்பாரே அப்பாவி பையன் செந்தில் சே அவர் ஒரு கைல ஹெல்மட்டும், இன்னொரு கைல பேக்கும் வெச்சுக்கிட்டு நின்னாரு.. யோவ் உன் 2 கைக்கும் ரெஸ்ட்டே கொடுக்க மாட்டியாய்யா?ன்னு கேட்டா முறைக்கறாரு..

அப்புறம் என்ன? ஒரே ரகளை தான்.. எல்லாரும் சேர்ந்து ஃபோட்டொ  எடுக்கறதும், கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொல்றதும், ஒருவரை ஒருவர் அறிமுகம் செஞ்சுக்கறதும் செம ஜாலிதான்.. ஏன்னா எல்லாருக்கும் இதுதாம் முதல் சந்திப்பு.. எல்லாரையும் படைப்பின் மூலமாவும், ட்விட்டர் டி பி வாயிலாகவும் தான் தெரியும்..


விழா ஏற்பாட்டாளர்கள் எக்ஸ்பர்ட் சத்யா,  மிக்சர் ஸ்பெஷலிஸ்ட் கேசவன், பரிசல்காரன், கரையான் மிகச்சிறப்பா எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி இருந்தாங்க.. விழா 3 மணிக்குன்னு அழைப்பிதழ்ல இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரியப்படி ஒரு மணி நேரம் கழிச்சு விழா துவங்குச்சு..

வாழை என்ற அமைப்பை சேர்ந்த  திவ்யா என்பவர் சமூக விழிப்புணர்வு ஊட்டும் அந்த அமைப்பு பற்றி 17 நிமிடங்கள் பேசினார்.. பின்னர் நம்மால் முடியும் என்ற அமைப்பை சேர்ந்தவர் குழந்தைகள் கல்வி பற்றி பேசினார்.. அவை விரிவாக பின்னர்..

 வலம் இருந்து இடமாக குட்டி சாகசன், மீ, கருப்பையா , --------------??


பிறகு ட்விட்டர் அறிமுகம்.. மைக்கை அவங்க கிட்டேயே கொடுத்து அவங்களை பற்றி ஒரு சுய அறிமுகம்.. இது நல்ல ஐடியா.. எப்படின்னா  மேடை ஏறி பேசச்சொன்னா 2 டிரா பேக்.. 1. பலருக்கு மேடை பயம் அல்லது மேடைக்கூச்சம் இருக்கும்..  2.  சராசரியா 160 பேர் கலந்த இந்த விழாவுல வ்வொருவரையும் மேடை ஏத்துனா  ஒரு ஆள் மேடை ஏறி இறங்கவே 1 நிமிஷம் நு கணக்கு போட்டாலும் 160 பேருக்கு  2 மணி நேரம் 40 நிமிஷம் வேஸ்ட் ஆகி இருக்கும்..

ராவணன் என்ற சீனியர் பதிவர் தான் முதல்ல வந்திருந்தார்.. நான் ராமன் என்ற ஹேண்டில் வந்திருந்தா செம ஜாலியா கலாய்ப்பா இருந்திருக்கும், அவர் வர்லை.. சின்னப்பையன் என்ற ஹேண்டில் என் அப்பா வயசுல இருந்தார்.. அவர் தான் அறிமுகத்தில் அதிக கைதட்டல் பெற்றவர்..




அறிமுகங்கள் முடிஞ்சதும் எம் ஜி ஆர் ஃபோட்டோவை டி பி ல வெச்சிருக்கும் ரவிக்குமார் எம் ஜி மிமிக்ரி பண்ண மேடை ஏற்றப்பட்டார்.. ஆள் செம கலர்.. விழாவுக்கு வந்த பசங்கள்லயே அவர் தான் செம கலர்.. பவுடர் போடாமயே தக தகன்னு மின்னறார். பெண் ஃபாலோயர்ஸ் இந்நேரம் எகிறி இருக்கும்... அவர் பலகுரல்களில் மிமிக்ரி செஞ்சார்.. ஜாலியா இருந்துச்சு.. கிரேசி கோபால் ஊடால புகுந்தாரு.. அவர் ஆல்ரெடி சன் டி வி ல நைட் 10.30 க்கு மிமிக்ரி செய்யறவர் தான்.. இது முன் பின் ரிகர்சல் ஏதும் இல்லாமல் ஆன் த ஸ்பாட் நடந்த விஷயம்.. ரவி என்ன பேசுனாரோ அதுக்கு டக் டக்னு இவர் கவுண்ட்டர் கமெண்ட் கொடுக்க விழா களை கட்டியது.. கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது..

 இந்தியாவின் நெம்பர் ஒன் தமிழ் ட்விட்டர் ஐ ஆம் கார்க்கியுடன்


 அப்புறம் கிரேசி கோபல்ட்ட டாக்டர் டி ஆர் எம் பல்பு வாங்குன நிகழ்ச்சி.. அதாவது கோபால்க்கு என்ன ஹாபின்னா பிரபல ட்வீட்டர்களுக்கு ஃபோன் பண்ணி பெண் குரல்ல அவங்களை கலாய்க்கறதுதான்.. ஆனானப்பட்ட ராஜன் லீக்ஸே அவர் கிட்டே ஏமாந்துட்டாராம்.. ( ஏமாந்து என்ன செஞ்சார்னு சரியான தகவல்கள் இன்னும் வர்லை.. )

அடுத்து கருப்பையா கவிதை வாசிக்க வந்தாரு... ஆள் பேரு தான் கருப்பய்யா.. ஆனா வெள்ளய்யா,, லுக் லைக் என்னத்தை கன்னைய்யா.. அவர்  வாசிச்ச கவிதை..


 கரையான் உடன்



என்னை தொலைத்த நான் :

ஒரிரு நாட்களாய் என்னை

கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

என் வீட்டின் கதவு திறந்ததும்
எதிர்வீட்டின் கதவு
தயக்கத்தோடு அடைக்கப்பட்டது

அலைபேசியில்... வராத அழைப்பிடம்
பேசுவதாக பாசாங்கு செய்தபடியே
என்னை பதட்டத்தோடு கடக்கிறார்
பக்கத்து ஃப்ளாட் "ரகு" அண்ணா

தொலைவில் இருந்தால்
முத்தத்தை பறக்கவிட்டும்
அருகிலிருப்பின்
காதோரம் "இச்" என்ற
சத்தத்தோடும்
முத்தம் தரும் "வித்யா குட்டி"
என் எதிர்வந்தும்
அவள் தாயின் இறுகப்பற்றிய
அரவணைப்போடே
ஏற்றப்படுகிறாள்
பள்ளி வண்டியில்

சமீப காலமாய்
புன்னகையும் வெட்கமும் கலந்து
காதல் பார்வை வீசிய
எதிர்வீட்டு குமரியை
காணவே முடிவதில்லை

என் முன்னே பேச்சை மறந்து
பின் சென்றதும் குசுகுசுப்போடு
பேசும் சிலரின் சத்தமும்
காதில் கேட்டது

கார்த்திக் என்ற என் பெயரை
"காத்திக் சாப்" என
மொழிமாற்றம் செய்து
விளிக்கும் கூர்க்காகூட
"நமஸ்தே"வை மறந்துவிட்டு
ஏளனப் பார்வை ஏந்தி
என்னை எளிதாய்
கடந்து சென்றான்

இப்படியாக கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

ரயில்நிலையம்போல்
எப்போதும் சலசலத்திருக்கும்
கையேந்திபவனும்
எனை கண்டதும்
சலசலப்பு அடங்கி
மயான நிசப்தத்தை
தற்காலிகமாய் கடன்
வாங்கியிருந்தது

குழப்பத்தினூடே அலுவலகம்
சென்று அலுவல் முடிந்து
மாலை மீண்டும் விரைந்தேன்
என் குடியிருப்பை நோக்கி

நான் சென்றுசேர்ந்ததும்
வந்து சேர்ந்தது
"குடியிருப்பு செயலாளரின்" அழைப்பு

என் வணக்கத்தோடும்
அவர் வரவழைத்திருந்த தேநீரோடும்
இனிதாய் ஆரம்பித்தது
எங்களின் சந்திப்பு

(பேச்சில் தேர்ந்த அவர்
சந்திப்பு ஆரம்பித்த கணம்தொட்டே
என் தலையின் மேல்
ஆணியை வைத்து அடிக்கத்
தொடங்கியிருந்தார்)

இனிதாய் ஆரம்பித்த எங்களின் சந்திப்பு
"உங்க ஃப்ளாட் ஓனர்கிட்ட பேசிட்டேன்.
எப்ப ஃப்ளாட்டை காலி செய்கிறீர்கள்?"
என்ற அவரின் கேள்வியோடு
முடிவுக்கு வந்தது

ஏன் இத்தனை மாற்றங்கள்
என்ற காரணம்
சற்று தாமதமாகவே
தெரிய வந்தது

தெரியவந்த கணம் அதிர்ந்தேவிட்டேன்

அண்மையில் பெய்த அடைமழையில்
கிராமத்து நினைவில் நான்
குதித்து நனைந்ததை
கண்ட சிலபேர்
என் மனநிலை குறித்து
எழுப்பிய சந்தேகங்களே
அனைத்தின் காரணமென்று
தெரியவந்தது

ஆம் எனக்கு "சைக்கோ"
என்று பெயரும்
வைத்திருந்திருக்கிறார்கள்

நான்கு சுவற்றுக்குள் "ஷவரின்" கீழ்
குளிப்பதென்பது மழைக்குளியல் அல்ல என்பதை
எப்படி புரியவைப்பதென தெரியவில்லை
நகரத்து மக்களுக்கு

மழைநீர் சேகரிப்பு தொட்டியில்
சேகரிப்பதென்றும்
மறுநாள் காலையில்
சாலைநிரம்பி போக்குவரத்து
நெரிசலாகும் என்ற அளவுக்கே
மழையை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்
நகரத்து மக்கள்

மழை குறித்த தவறான புரிதலை
எண்ணி கொட்டித்தீர்க்கிறது
மேகமும் மழையாய்...

யாரேனும் சொல்லுங்கள்
மழையில் நனைவதென்பது
அத்தனை பெரிய
குற்றமா நகரத்தில்???
 விழாவின் சில ஹைலைட்ஸ்



- தொடரும்


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html
 





வலி என்றால் அம்மா , வலி தீர்ந்ததும் அப்பா என நாம் கத்துவது ஏன்?

1. எங்கம்மா வீடும், மாமியாரும் பக்கம் பக்கம் தான். எங்களுக்குள்ள சண்டைன்னா அவங்கவங்க அம்மா வீட்டுக்கு போயிடுவோம் ஹி ஹி


----------------------------------

2. வீட்டோட மாப்ளையா இருக்கறதும் ,போயஸ் தோட்டத்துல வாட்ச் மேனா வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்


-----------------------------

3. சின்ன வயசுல வாத்தியார் திட்டறப்போ இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விடற ஆளா நீங்க? உங்க கல்யாண வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராது


---------------------------

4. . +2 பாஸ் பண்ணுனாத்தான் மேரேஜ்னு டாடி சொல்லிட்டார்.

. ஐ ஜாலி.. சத்தியமா நீ பாஸ் பண்ண மாட்டே, நம்ம மேரேஜும் நடக்காது


----------------------------

5. தூக்கம் வந்ததும் உடனே தூங்கிட்டா நீ சாதா தமிழன், நெட்டை ஓப்பன் பண்ணி ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் போட்டு ஒரு ரிவர்ஸ் ஸ்மைலியும் போட்டா ஸ்பெஷல் தமிழன்


------------------------------

இப்டியுமா????


6. ”நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!”  என பாரதியார் பாடியது ராமராஜன், தல அஜித், இளைய தலைவலி விஜய்?


---------------------

7. ஒரே டிக்கெட்டை 2 தடவை கலர் பிரிண்ட் எடுத்து ரெண்டையும் ஒரே பாக்கெட்ல மடிச்சி வெச்சுகிறதுக்கு பேரு என்ன மேனியா?

 கேப்பமாரியோமேனியா

---------------------------

8. மனைவியிடம் கணவன் தன் காதல் அனுபவங்களை பெருமையாக சொல்வான், மனைவி ஏதும் சொல்லாமல் மனசுக்குள் நக்கலாக சிரித்துக்கொள்வாள் # அமுக்கி


-------------------------------

9. அத்தான், என் கண்ணுக்கு மையே போடவேணாமா? இயற்கை அழகுன்னு சொல்ல வர்றீங்களா?

 இல்லை ஐ டெக்ஸ் ஒரு டப்பா ரூ 20, நீ வாரம் 2 டப்பா தீர்க்கறே!


------------------

10. டேமேஜர் சார், என் புருஷன் எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார்,

 பர்மிஷன் வேணும். 


ம்க்கும் சில்மிஷத்துக்கும் பர்மிஷனா?விளங்கிடும்


------------------------



11. ஈமு கோழியை வளர்ப்பதும், சின்ன வீடு வைப்பதும் ஒண்ணுதான். போண்டி ஆகிடுவீங்க அல்லது ஆண்டி ஆகிடுவீங்க # வார்னிங்க்


---------------

12. கலங்கின குட்டையில குளிக்க முடியாது; கலங்கின மனசோட இருக்கறப்ப சினிமா பார்க்க முடியாது.# எ கீ

------------------

13.கவர்ச்சி நடிகை தலை மறைவுன்னு ஒரு நியூஸ் படிச்சேன். அப்போகூட அவங்க தலையை மட்டும் தான் மறைப்பாங்களா?


-------------------------

14. பெண்ணுக்கு 10 மாசம் மட்டுமே சுமை, ஆணுக்கு  5 வருஷம் சுகமான சுமை # எங்கே போனாலும் குழந்தையை தூக்கிட்டு வர்றது நாங்க தாங்கோவ்!


---------------------------


15. சார், உங்க படம் ரொம்ப ஸ்லோவா இருக்கே?  


ஹி ஹி ஸ்பீடா ஓட்டுனா சீக்கிரம் முடிஞ்சுடும், எப்படி  2 1/2 மணீ நேரம் இழுக்க?


----------------------------------


அதோ அங்கன தான் ரஞ்சி நிக்குறாங்கப்பா!

16. இத்தனை நாளா மிக்சர்னா ஏதோ நொறுக்குத்தீனின்னு தான் நினைச்சேன்.. இப்போ தான் அதன் உண்மையான அர்த்தம் தெரிஞ்சுது # நன்றி - ட்விட்டர் 


-----------------------------

17.DRஅண்ணாகண்ணன் -8 வடிவத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் # எய்ட்ஸ் வாக்கிங்க்னு கிண்டல் பண்ணிடமாடாங்களா?


------------------

18.  காலம் மாறும், ஆனால் என் காதல் மட்டும் மாறாது, ஆனா காதலி மட்டும் மாறிட்டே இருக்கும் - பிரபுதேவா


----------------------

19. அத்தான், எக்சாம்க்கு போகனும்னாலே எனக்கு வயித்துல புளியை கரைச்ச மாதிரி இருக்கு....


. உன் வயிறு என்ன ரசம் கொதிக்கும் குண்டாவா?


---------------------------------

20.  வலியில் அம்மா என கதறும் நாம்.,வலி தீர்ந்ததும் அப்பா என பெருமூச்சு விடுவதன் உளவியல்  வலி ஏற்படுத்தும் காரணி பெண், வலி நிவாரணி ஆண்


--------------------------------


 
pic.twitter.com/pAUOYFrB

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.  

Monday, May 14, 2012

DAMMU - ஜூனியர் என் டி ஆர்,த்ரிஷா,கார்த்திகா - தெலுங்கு சினிமா விமர்சனம்


http://www.teluguwave.in/wp-content/uploads/2012/04/Dammu-Latest-New-Wallpapers-1.jpgஎத்தனை ஜென்மம் எடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் திருந்தவே மாட்டாங்க என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.. 1990 களில் நம்ம தமிழ் நாட்ல துவைச்சு காயப்போட்டு சலிச்சுப்போன மசாலா குப்பை தான்.. ஹீரோயிஸம் ஓவரோ ஓவர்.. ஆனா இந்தப்படம் தெலுங்குல ஹிட் ஆகிடும்னு தோணுது.. 

 ரஜினி நடிச்ச உழைப்பாளி, வேலைக்காரன், தர்மதுரை எல்லாத்தையும் ஒரு குடுவைல போட்டு அங்கங்கே சில சீன்கள் சுட்டு 2 ஹீரோயின்களையும் உள்ளே நுழைச்சுட்டா கதை ரெடி.. 

ஊர்ல எங்கே அக்கிரமம் நடந்தாலும் அங்கே சம்மனே இல்லாம ஆஜர் ஆகி நீதியையும், நேர்மையையும், நியாயத்தையும் நிலை நாட்டி வெட்டாஃபீசரா இருக்கறவர் தான் ஹீரோ.. ஹைதராபாத் தான் கதைக்களம்.. அங்கே வாழும் மக்கள் நிம்மதியா வாழனும்னு நினைக்கறார்.. 35 வயசான ஹீரோ 41 வயசான த்ரிஷாவை கார்ல இருந்து இறங்கறப்ப பார்க்கறார்.. பார்த்ததும் லவ்வு.. 

பார்ட் டைம் ஜாப்பா அந்த பாப்பா பின்னால சுத்திட்டு அப்பப்ப எவனாவது இளிச்சவாயன் வில்லன் சிக்குனா ஃபைட் போட்டுக்கிட்டு பொழுதை ஓட்டிக்கிட்டு இருக்காரு..




http://www.cineindya.com/wp-content/uploads/2012/04/Telugu-Movie-Dammu-online-picture-Moments.jpg

 ஒரு நாள் வீரதுர்க்கம் ஊர் ராஜா கோட்டா சீனிவாசராவ் அவரை சந்திச்சு அந்த ஊர்க்கு தத்துப்பிள்ளையா சின்ன ராஜாவா வாங்கன்னு கூட்டிட்டு போறார்.. அங்கே தான் மெயின் வில்லன் நாசர்.. 2 குடும்பத்துக்கும் பகை.. நாசர் செம காமெடி பார்ட்டி.. அவங்க ஃபேமிலியைத்தவிர வேற எந்த ஃபேமிலில ஆண் குழந்தை பிறந்தாலும்  அதை விட மாட்டார், கொன்னுடுவார்.. 

 அந்த வில்லன்களை எப்படி ஜெயிக்கறார்ங்கறதுதான் மிச்ச மீதி கேவலமான கதை. இதுல செம காமெடி மேட்டர் என்னான்னா ஹீரோதான் நிஜமான வாரிசுங்கற உண்மையை சஸ்பென்ஸ்னு நினச்சுக்கிட்டு டைரக்டர் க்ளைமாக்ஸ்ல சொல்றார்.. ஆனா ஆடியன்ஸ்க்கு 2 வது ரீல்லயே தெரிஞ்சுடுது.. ஹய்யோ அய்யோ.. 

ஹீரோ ஜூனியர் என் டி ஆர் ஆள் ஷோக்காத்தான் இருக்கார்..  ஃபைட் சீன்ஸ்ல நல்ல சுறுசுறுப்பு.. டூயட் சீன்ஸ்ல கிளுகிளுப்பு... டபுள் மீனிங்க் டயலாக்ஸ் எல்லாம் அள்ளி விடறார்.. அப்பப்ப ரஜினி மாதிரி கேமராவைப்பார்த்து அரசியல் பன்ச் எல்லாம் அள்ளி விடறார்.. ஆந்திராவுல இந்தப்படத்தை அந்த ஆடியன்ஸ் உடன் பார்க்கனும்.. மஜாவா இருக்கும்.. இங்கே ஒரு பய கண்டுக்கலை.. 

 41 வயசு த்ரிஷா தான் முத ஜோடி.. இன்னும் பாப்பா செமயாத்தான் இருக்கு.. போரே அடிக்கலை.. ஆல்ரெடி  சி டி ல அவர் கிளாமரை முழுசா பார்த்தவங்க கூட  படத்துல  காட்ட்ற கிளாமருக்கு ஆன்னு வாயை ஓப்பன் பண்ணிட்டு ரசிக்கத்தான் செய்யறாங்க ..2 டூயட்.. 12 லைன்ஸ் வசனம்  சம்பளம் 40 லட்சம் அடேங்கப்பா

 23 வயசு  கார்த்திகா 2 வது ஹீரோயின்.. ஆள் வாட்டசாட்டமா ஜை ஜாண்டிக்கா இருக்கு ஆனா பெண்மையின் மென்மை இல்லை.. அவரது புருவம் எல்லாரும்  பெரிய பிளஸ்னு சொல்றாங்க.. ஆனா எனக்கென்ன தோணுதுன்னா  அந்த புருவம் தான் அவரோட மைனஸ்னு தோணுது.. கோபக்கார பெண்ணா காட்டுது..

காமெடி ஆக்டர் பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் எல்லாருக்கும் வாய்ப்பு ரொம்ப கம்மி தான்




http://www.tupaki.com//twdata/2012/0312/news/Dammu-Movie-Working-Stills---Photos-191.jpg

  இயக்குநர் அவரே எழுதி அவர் மட்டுமே ரசித்த வசனங்கள் + சில கேவலமான பன்ச் டயலாக்ஸ்


1. ஆண்டவன் எனக்கு ஒரு உயிரை கொடுத்திருக்கான்.. 10 உயிரை காப்பாற்ற தம்மு குடுத்திருக்கான் ( ஆண்டவன் என்ன பொட்டிக்கடைக்காரரா? தம் எல்லாம் தர? )


2. அரசியலுக்கு நானா வர மாட்டேன்.. ஆனா மக்கள் நான் தான் வரனும்னு நினச்சா அடங்க மாட்டேன் ( நீ என்ன அடங்கா மாரியா? )


3.  ஏய்.. சிரிக்காதடி... அப்புறம் ஓக்கேனு அர்த்தம் ஆகிடும்.. மனசுக்குள்ளேயே வெச்சுக்கோ.. அப்போதான் அவன் உன்னையே சுத்தி சுத்தி வருவான்.. ( சனீஸ்வர பகவானைக்கூடத்தான் சுத்தி சுத்தி வர்றோம்)


4. நீ கூடத்தான் பொறம்போக்கு.. நான் ஏதாவது சொன்னேனா?

ஐ லைக் யுவர் நேர்மை.. ஆனா இந்த மேட்டர் உன்னோட இருக்கட்டும் , யார் கிட்டேயும் சொல்லிடாத.


5. குடுகுடுப்பைக்காரர் பிரமாதமா வாசிக்கறார் இல்ல?

 ஃபினிஷிங்க் டச் கொடுப்பார்.. பாரு அப்போ தெரியும்.. உனக்குஏழரை எப்போ ஸ்டார்ட்னு..


6.  நாளான்னைக்கு ( நாளை மறு நாள் ) உன் பிறந்த நாள்..

 என்னது?


 ஏன் இப்படி ஜெர்க் ஆகறே..? உனக்கே தெரியாம நீ பொறந்துட்டியா?


7. காமெடி சீன்ல காஸ்ட்லி செலவு வைக்கறவன்  நீ , ஜாக்கிரதையா இருக்கனும்..


8. பணம் இருந்தா எது வேணாலும் வாங்கிடலாம்னு நினைக்காத.. கவுரவத்தை வாங்க முடியாது # கவுரம் சி டி 20 ரூபா தான் மாமு


9.  என்னை வெட்கப்படக்கத்துக்கோன்னு எங்கம்மா சொன்னாங்க.. நான் நல்லா வெட்கப்படறேனா?


10. இந்த ரிங்க் எதுக்கு என் விரல்ல போடறே?

 ரிசர்வேஷன்.. ஹி ஹி

 ஓஹோ அப்போ பாதி மேரேஜ் முடிஞ்ச மாதிரி.. பாதி சொந்தம் ஆகுது..?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFDEKYpiC96o5CnT9_a1kzi37uFak08wlYj2A1HHtqVd4MlL65hC5bsRWvDJtn3N805kwaBumX-bbF1Lh-ji2eQzq2olxOKR03SixQGui-g8oY5bn6_J-j1-N1pl11Fn781_ZFruKxYx0/s640/Trisha-Actress-hot-Stills-1.jpg


11. நீங்க போங்க.. நாங்க 2 பேரும் சேர்ந்தே பண்ணிக்கறோம் பூஜையை..

12.  புக்கிங்க் முடிஞ்சுது.. பாதி கோ ஆபரேஷனை உங்க கிட்டே எதிர் பார்க்கிறேன் மாமோய். ஹி ஹி


13. மாமா. என்னை யூஸ் பண்ணிக்குங்க.. ஹி ஹி

14. சரித்திரத்தை உருவாக்கறவன் சொல்லிட்டு வர மாட்டான்.. ( ஏன் அவன் மேனர்ஸே இல்லதவனா?)


15. அரிசியை ஒரு ரூபாய்க்கு தர்றீங்க.. ஆனா பருப்பு விலை ரூ 60 ஆகுது. மக்களை ஏமாத்தற வேலை தானே?



16. சின்ன வயசுல இருந்தே நான் எதை கத்துக்கிட்டாலும் ஸ்பீடா கத்துக்குவேன்.

17. சாவை என் கண்ல காட்டாதே.. அதன் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்/..


18. என்னது? உனக்கு பலம் ஜாஸ்தியா? பன்னி பெருத்தா யானை ஆகுமா?


19. சவு்ண்டை குறை.   நான் 2 வது அடி அடிச்சா உன் தொண்டைல இருந்து சத்தம் வர 5 வருஷம் ஆகும்..


20. அத்தான்.. என் கிட்டே அழகு எப்பவும் எடுப்பா இருக்கும், பார்க்கறீங்களா? ( என்னமோ  வாசல்ல போட்ட கோலம் பார்க்கறீங்களா?ன்னு கூப்பிடற மாதிரி, என்னாதிது? ராஸ்கல்ஸ்..


21. மாமா.. உங்களைத்தான் பண்ணனும் மேரேஜ்.. ஹி ஹி

22. அல்ங்கா நல்லூர் காளை மாதிரி மாமன்.. கொம்பு சீவி வெச்சிருக்காங்க  பண்ணுனா உன்னைத்தான் பண்ணனும் மாமா மேரேஜ்

23.. டேய் டேய்.. உனக்கு அட்டர் டைம்ல 4 ஃபிகரா? ஜெனரேட்டர் சூடு தாங்காதுடா..

24.  என்னை கொலை செய்யனும்னு நீ 25 வருஷம் முன்னால முடிவு செஞ்சே.. உன்னால முடியலை.. ஆனா நான் உன்னைக்கொல்லனும்னு ஜஸ்ட் ஒரு மணி நேரம் முன்னால தான் நினைச்சேன்.. இப்போ பார்த்தியா?

25. மனுஷன் கிட்டே இருக்கற உண்மையான  உணர்ச்சி பயம் தான்.. கத்தி எடுக்கறவன் பயப்படக்கூடாது, பயப்படறவன்  கத்தி எடுக்கக்கூடாது..

26. யுத்தம்கறது  ஜெயிப்பா? தோப்பா?ன்னு இருக்கனும்.. சாகறமா? சாகடிக்கறமா?ன்னு இருக்கக்கூடாது


http://www.teluguone.com/tmdbuserfiles/karthika-nair-hot-stills.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. கதைக்கு சம்பந்தமே இல்லாம 2 ஹீரோயின்ஸ் எதுக்குன்னு யாரும் கேள்வி  கேட்க முடியாதபடி 2 ஜிகிடிகளையும் கதையில் இணைச்சது..


2.  ஆர்ப்பாட்டமான சண்டைக்காட்சிகள்.. ஒரு சாம்பிள் 46 மாடிக்கட்டிட மொட்டை மாடில இருந்து ஹீரோ டொம்முன்னு கீழே ஒரு கார் மேலே விழறார்.. கார் அப்பளம் போல் நொறுங்குது.. ஆனா அண்ணனுக்கு எதும் ஆகலை ஹி ஹி

3. த்ரிஷா பேஸ்கட் பால் விளையாடும்பொது காமிரா டாப் ஆங்கிள்ல வெச்சு ஹி ஹி ஹி

4. சொல்றேனேன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம்.. ஹீரோவுக்கு அக்காவா வர்ற 3 பேரும் செம கட்டைங்க

5. இருக்கற 2 ஜோடிங்க பத்தாதுன்னு க்ளைமாக்ஸ் குத்தாட்டப்பாட்டுல 4 ஜோடி குடுத்து ஹீரோவை ஆட விட்டது ஆஹா..




http://i.ytimg.com/vi/CdBz4atrHG0/0.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் சொதப்பல்கள்


1. ஓப்பனிங்க் ஷாட்ல அந்த கேவலமான ஃபைட் சீன் முடிஞ்சதும் அந்த கோடீஸ்வரர் தன் உயிரை காப்பாத்துனதுக்கு  பரிசா ரூ 25 லட்சம் மதிப்புள்ள செக் லீஃப் தர்றார்.. அதை வாங்காமயே பெரிய இவரு மாதிரி கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு ரிட்டர்ன் ஆகற ஹீரோ அப்புறம் அந்த பணத்தை பேங்க்ல இருந்து எடுத்துடறாரு.. எப்படி?


2. ஹீரோ ஷூ கால்லயே அரண்மனைக்குள் எல்லா ரூமுக்கும் போறாரு, ஓக்கே , ஆனா பூஜை ரூமுக்கு கூட அப்படியே போறாரே? சாமி கும்பிடும்போதும் ஷூ போட்ட படியே கும்பிடறாரே? ( குஷ்பூ ரசிகரோ)


3. ஹீரோவுக்கு முதல் 3 ரீல் வரை மீசை சாதாவா இருக்கு.. திடீர்னு ஒரு சீன்ல இந்தப்பக்கமா நின்னு பேசறப்ப சாதாவா இருந்த மீசை அப்படி அந்த பக்கமா திரும்பறதுக்குள்ள முறுக்கு மீசை ஆகுதே எப்படி?


4. ஜமீன் பரம்பரைன்னு கூட்டிட்டு வந்த ஹீரோ ஏன் ஒவ்வொரு டைமும் கைக்காசை செலவு பண்றார்? என் கிட்டே ஏது பனம்னு கேட்க வேண்டியதுதானே? அவரா போகலையே? ராஜா தானே கூட்டிட்டு வந்தது?

5.  ராஜா கிட்டே த்ரிஷாவோட அப்பா உங்க மருமகளை உங்க கிட்டே விட்டுட்டு போறேன்னு சொல்ரப்போ ஆக்சுவலா பாப்பா அடக்க ஒடுக்கமா சேலைல தானே இருக்கன்னும்? ஜமீன்ல இருக்கற 11 லேடீஸும் பட்டுப்புடவைல இருக்கறப்ப த்ரிஷா மாடும் லோ கட், லோ ஹிப்  சுடில வருதே? ( இந்தியாவுலயே சுடிதார்ல கூட லோ ஹிப்ல வந்தது இவருதான்)

6. பாடல் காட்சிகளில் 2 ஹீரோயின்சை அரைகுறையா  ஒரே டைம்ல ஆட விட்டா என்னய்யா அர்த்தம்? நாங்க எதை சாரி யாரை பார்க்க? ஹி ஹி

7.  ஒரு சீன்ல வில்லனோட எதிரி ஹாஸ்பிடல்ல அட்மிட்டட். அவர் முகத்துல ஆக்சிஜன் டியூப்.. அவனை கொலை பண்ண ஜஸ்ட் அதை இழுத்தா போதும்.. எதுக்கு அவ்ளவ் பெரிய கத்தி எல்லாம் எடுத்து அந்த டியூப்பை  வெட்டனும்?


8. கலெக்டரா வர்றவர் குமாஸ்தா மாதிரி இருக்கார்.. நோ கம்பீரம்..


9. ஆம்பளை குழந்தைதான் பிறந்திருக்குன்னு சும்மா டயலாக்ல அந்த லேடி சொன்னா போதாதா> குழந்தையை தூக்கி காட்டனுமா? ஹய்யோ அய்யோ .. நல்ல வேளை அந்த லேடி குழந்தையை தூக்கி காட்டுச்சு ஹி ஹி

10. க்ளை மாக்ஸ்ல 120 கிமீ ஸ்பீடுல  5 ஜீப் ஒரு ஆளை கயிற்றுல கட்டி இழுத்துட்டுப்போக நம்ம ஹீரோ கிட்டத்தட்ட 24 கிமீ ஓடியே சேஸ் பண்றார்.. அந்த கயிற்றில் கட்டி இழுக்கப்படும் நபர் சட்னி ஆகி இருக்கனும்.. ஆனா ஆள் அப்படியே இருக்கார்

11. தென்னை மரத்தை ஆனானப்பட்ட தொழில் முறை தொழிலாளி வெட்னாலே  50 வெட்டு வெட்டனும்.. ஆனா ஹீரோ ஒரே சீவுல தென்னை மரத்தையே சீவுவது ஓவர்..

12. ஃபைட் சீன்ல ஹீரோ 2 கையையும்  பின்னால கட்டிக்கிட்டே ஃபைட் போடறது செம காமெடி.. படு கேவலமா இருக்கு .. ஏன் டூயட்ல அப்படி செய்யறது?






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxqirxqXVI6mTjTxJ5LJuPgz0vNXSPG7MTRp8ua4xNH6NHDl4DNKSSVBCGINdcAWsF5vMA5CVU8vcQiUYh5MPeH26OaL46eKKlw0mL5-dW-HE0HuixabzbIJEpJRdmEtFe0apGA77pRFoq/s640/hot-trisha-cleavage-stills-1.jpg
 டப்ப்பிங்க் படத்துக்கு ஆனந்த விகடன் நோ விமர்சனம்..

 இருந்தாலும்  ஒரு ஒப்பீட்டுக்காக மார்க் - 36

 குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - சும்மா ஃபிரண்ட்சோட போய் ஹீரோவை கலாய்க்க நினைக்கறவங்க மட்டும் போலாம். மற்ற படி படம் படு டப்பா

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்





அழகிரி - ஸ்டாலின் சண்டை - நாம கத்துக்க வேண்டியது என்ன?

அழகு :) http://pic.twitter.com/YNJ6FrPX - அண்ணே ஒரு விளம்பரம்
1.இளைஞர்களால் தி.மு.க., மீண்டும் எழுச்சி பெறும்- ஸ்டாலின் # குஷ்பூ இருக்க பயம் ஏன்? - கலைஞர்


---------------------------------


2. சென்னைவாசிகள் ஒழுக்கமானவர்கள்! அமிதாப் பாராட்டு! # சிம்பு, கார்த்திக், எஸ் ஜே சூர்யா, அர்ஜூன் பெருமிதம்


-----------------------------

3. தீபிகாவுக்கு பாலிவுட்டின் மோசமான நடிகை விருது! # தீபிகாபடு(மோசமான)கோன்?




---------------------------

4. விஜய்- நீங்க என்னை டாமினேட் பண்ணாம நடிங்க..


 ஏ ஆர் முருகதாஸ் - நீங்க என்ன டாமியா? # துப்பாக்கி துர்ப்பாக்கியம்


---------------------------------------

5. காங்., தலைவர்களின் "வாய் நீளமே' தோல்விக்கு காரணம்: ராகுல் # கை நீளம்னு சொல்லுங்க ஜி


------------------------------



உனக்கு ஜில்லுனு இருக்கு துள்ளி குதிக்கிற ,,, எனக்கு கொதிக்குது தெரிச்சு ஓடுறேன் வெயில்ல ...# cute

6. பாவத்திற்கு சிவப்பு கொடி காட்டுங்கள்: இன்று புனித வெள்ளி# முதல் பாவம் அபிலாஷாவுக்கு முதல் சிவப்புக்கொடி, வேர் ஈஸ் த பார்ட்டி?


----------------------------------

7. இந்தியா மீது கோபமில்லை': சொல்கிறார் இலங்கை அமைச்சர்  # ஹலோ எக்ஸ் கிஸ் மீ, கோபப்பட வேண்டியது நாங்க, பயப்படவேண்டியதுதான் நீங்க 


------------------------

8. பன்றிக்காய்ச்சல் பரவுது, "PIG"ments கூட யூஸ் பண்ணிடாதீங்கப்பா..


---------------------

9.குடும்பத்தலைவியா ஒரு நாள் இருந்து பாருங்கன்னு சில பொண்ணுங்க சொல்றாங்க. அப்போ சமையல் வேலையை  ஆண்கள் செய்ய மாட்டோம் , ஓக்கேவா?


-----------------------------


10. எங்க ஆஃபீஸ்ல ஒரு ஃபிகரு ஷாலை மடிச்சு பத்திரமா ஹேண்ட் பேக்ல வெச்சிருக்கு, வெளீல போறப்ப போட்டுக்குமாம் # அடங்கோ


-------------------------------




11. புருஷன் பொண்டாட்டி சண்டை அழகிரி - ஸ்டாலின்  சண்டை போல இருக்கணும் . என்ன நடந்தாலும் மேட்டர் வெளீல வரக்கூடாது.


--------------------------

12.  ஐ லவ் யூ சொல்ல  ஒரு நொடி துணிச்சல் போதும் , தாலி கட்டி மாரடிக்க  வாழ்நாள் முழுக்க  துணிச்சல்,  அலைச்சல வேண்டும்.


---------------------------------

13. பெண்களுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை செய்வதிலேயே ஆண்களின் சமையல் , மையல் சமத்து அடங்கியுள்ளது.


-------------------------------

14. அப்பா அறிவுரை சொல்ல மாட்டார்! ஸ்ருதிஹாசன்  # அப்படியே சொல்லிட்டாலும் புரிஞ்சுடற மாதிரிதான்


----------------------------------

15. அத்தான், நீங்க என்ன சொன்னாலும் வாயைத்திறக்கவே மாட்டேன், நான் கேப்டன் ரசிகை..



 நாசமாப்போச்சு, அப்புறம் எப்படி ஃபிரெஞ்ச் கிஸ் அடிக்கறது?


---------------------------


16.எனக்கு இரண்டு காதலிகள் -தபூ சங்கர்  # அவசரம் இல்லை, பொறுமையா எண்ணிச்சொல்லுங்க, ஒரு புக்குக்கு ஒரு லவ்வர்னாலும்......


----------------------------

17. அந்தக்காலத்துல மனைவி இறந்தா  கணவன் ஏன் உடன் கட்டை ஏறலைன்னா சொர்க்கத்துலயாவது மனைவி சந்தோஷமா இருக்கட்டும்னு தான் # நீதி -ஆண் நல்லவன்


------------------------------------------

18.  நூறுபேர்கள் சேர்ந்து ஜாலியாய் கும்மி  அடிக்கலாம். ஆனால் ஓர் இல்லத்தில்அம்மி அரைக்க ஆஜானுபாகமாய் ஒரு ஆண் வேண்டும். - ச்ச்சீனப்பழமொழி


----------------------------------

19. இரண்டாம் பசுமை புரட்சி - ஜெ # பச்சை என்கிற காத்து ஏப்ரல் 13 ரிலீஸ், அதைச்சொல்றாங்க போல


----------------------------------


20. பெண் பார்க்கப்போகும் மாப்பிள்ளைகளே! பெண் பிடிக்கலைன்னா டோட்டலா ரிஜக்ட் பண்ண வேணாம், எதுக்கும் ஃபோன் நெம்பர் வாங்கி வைக்கவும் :)


-----------------------------------

Friday, May 11, 2012

கலகலப்பு - சினிமா விமர்சனம்

http://5eli.com/Song/wp-content/uploads/2012/04/Kalakalappu-@-Masala-Cafe.jpg
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள் என்னென்னெ? என ஒரு லிஸ்ட் எடுத்தால் உள்ளத்தை அள்ளித்தா-வுக்கு ஒரு இடம் உண்டு.. அந்தப்பட டைரக்டர் சுந்தர் சி  டைரக்ட் செஞ்ச 25 வது படம் என்ற மகுடத்தோட களம் இறங்கி இருக்கு இந்த கலகலப்பு.. இதுல ஒரு சந்தோஷமான விஷயம் படத்துக்கு வசன உதவி சக பதிவரும், சிறந்த சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர்..


கும்பகோணத்துல பாரம்பரியம் மிக்க ஹோட்டல் நடத்தி வரும் விமல் போட்டியின் காரணமா தொழில் நொடிச்சதால அடிக்கடி கடன் வாங்கி கடனுக்கு நடத்திட்டு இருக்கார்.. ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலி 2 மாசம் டைம் கொடுத்து அதுக்குள்ள கடையை நீட் பண்ணலைன்னா  சீல் வெச்சுடுவேன்னு மிரட்றாங்க.. விமல் தன் தாத்தா உதவியோட இயற்கை உணவு வகைகள், பாரம்பரியம் மிக்க சமையல் வகைகள் செஞ்சு ஹோட்டலையும் பிக்கப் பண்ணி அஞ்சலியையும் கரெக்ட் பண்ணிடறார்.. 

 விமலோட சகோ சிவா ஜெயில்ல இருந்து வந்து  ஓவியாவை கரெக்ட் பண்றார்..ஓவியா அதே மசாலா கஃபேல ஒர்க்கிங்க்.. இடைவேளைக்கு அப்புரம் யாரடி நீ மோஹினி படத்துல வர்ற மாதிரி கதை டிராக் மாறுது.. அதாவது அஞ்சலியோட கிராமத்துக்கு கதை ஷிஃப்ட் ஆகுது.. அங்கே சந்தானம் முறை மாமன்... அவர் கூட அஞ்சலிக்கு மேரேஜ்..  அங்கே வந்து விமல் எப்படி காமெடி கலாட்டா பண்ணி கை பிடிக்கறார் என்பதே கதை.. 



http://img1.dinamalar.com/cini/ShootingImages/15170280652.jpg

ஊடால இன்னொரு கிளைக்கதை.. வில்லன் கேனத்தனமா அவன் கிட்டே இருக்கற  கோடிக்கணக்கான மதிப்புள்ள  வைரக்கற்களை அவன் அடியாள் கிட்டே கொடுத்து ஒரு இடத்துல தங்க வைக்கறான்.. அது  பல கை மாறி  விமல் கிட்டே வருது.. இப்போ விமலை துரத்தி அந்த வில்லன் கும்பல் கிளம்புது..  தொடர்ந்து நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் கதை.. 


 படத்துல விமல் தான் மெயின் ஹீரோ.. ஆள் பம்பறது... காமெடி பண்றது எல்லாமே செம இயல்பு.. தேவை இல்லாம பில்டப் பண்றது, ஓவர் ஆக்டிங்க் எல்லாம் கிடயாது, நீட்டான நடிப்பு.. 

தமிழ் படம் புகழ் சிவா  செகண்ட் ஹீரோன்னாலும் அவருக்குன்னு ஒரு ஃபேன்ஸ் கிளாப்ஸ் இருக்குப்பா... டைமிங்க் காமெடி, மொக்கை காமெடி, ஸ்பூஃப் காமெடின்னு கலந்து கட்டி அடிக்கிறார்... ஆனா அவர் வசனம் பேசறப்ப அவர் கிட்டே ஒரு ஓவர் கான்ஃபிடன்ஸும், எல்லாரையும் செகண்ட் பை செகண்ட் கலாய்க்கனும்கற வெறி தெரியறது.. கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2xeuWsGoeFG_i3xMaNqJEwJ_MU5RdbumETApOvgFzKsvmeaiuON8bHiKOEg8_JL5U-wimmTksQebsl2GpzN1A-k0FdAmHl269tElPegHuHRm8lRKh91MytyOcgV_rQoldYUEe6Ae0jRI/s1600/Actress-Ooviya-hot-Photos+%252823%2529-724383.jpg

சந்தானம் இடைவேளைக்குப்பிறகுதான். வர்றார்ங்கறது முதல் ஏமாற்றம்னா  ஓக்கே ஓக்கே அளவுக்கு  பிரமாதமான டைமிங்க் காமெடி இல்லைங்கறது  2 வது ஏமாற்றம்.. ( பொதுவா ஒரு படைப்பாளியும் சரி  கலைஞனும் சரி ஒரு மெகா ஹிட் கொடுத்துட்டா அது அவங்களூக்கு எதிராவே திரும்பிடும்.. அடுத்து வரும் ஒவ்வொரு படைப்பையும் அந்த மெகா ஹிட்டை  கம்பேர் பண்ணியே பேசுவாங்க.. )

ஹீரோயின் அஞ்சலி மயில் மாதிரி இருக்கார்.. ஸ்ருதி கூட தேவலை அவரை விட மிக மோசமான குரல்,,.  டப்பிங்கா? ஒரிஜினல் வாய்ஸா தெரியலை.. 99% அஞ்சலியோட ரியல் வாய்ஸ் ஸாகத்தான்  இருக்கும்.. படு மோசம்.. ஆனா ஆள் கும்முன்னு தான் இருக்கார்...  அவர் கிளாமர் காட்டறப்ப  தரை டிக்கெட் ரேஞ்ச்க்கு இறங்கி காட்டறார்.. லோ ஹிப் சீன்களில் எவ்ளவ் நாசூக்ககாக, கண்ணியமாக கேமரா ஆங்கிள்ல காட்டனும், எந்த மாதிரி இருந்தா டீசண்ட்டா ரசிப்பாங்க  என்பதெல்லாம் சிம்ரன், பூமிகா படங்களை பார்த்து கத்துக்கனும்..  ஆனாலும் அஞ்சலி வந்த வரை அலுக்கவே இல்லை.. 

 ஓவியா செகண்ட் ஹீரோயின்..  கேரளா ரிட்டர்ன் ஓமனாக்குட்டி மாதிரி ஃபிகர் பாவாடை சட்டையோட வலம் வருது.. எந்த ஊர்ல 27 வயசுப்பொண்ணு இப்படி காஸ்ட்யூம்ல வருதோ? எங்க ஏரியாப்பக்கம் எல்லாம் 15 வயசு ஆனாலே தாவணி போடச்சொல்லிடுவாங்க.. இவர் காதல் வயப்படுவது எல்லாம் ரொம்ப செயற்கை.. ஆனா இது லவ் ஸ்டோரி அல்ல,, காமெடி படம் என்பதால் அந்த மைனஸ் எல்லாம் பெரிதாக தெரியாது.. 


படத்தின் பெரிய பிளஸ் யோசிக்க வைக்காத காமெடி பேஸ்டு ஸ்க்ரீன்ப்ளே தான்.. பாடல்கள் 3 ஓக்கே ரகம்..  



http://www.koodal.com/cinema/gallery/movies/kalakalappu/kalakalappu_6_427201220428123.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. அஞ்சலி, ஓவியா இருவரையும் வைத்து கிளாமரான ஸ்டில் எடுத்து மீடியாவில் பரப்பி படத்துக்கு நல்ல ஓப்பனிங்க், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது

2.  கதைக்கோ, திரைக்கதைக்கோ தேவைப்படலைன்னாலும் 2 ஹீரோயின்ஸையும் அடிக்கடி குளிக்க வைத்து, ஒரு பாட்டுக்கு குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்ட வைத்து  வேலை வாங்கியது

3. சுமாரான கதையில் சந்தானத்தை முறைப்பையனாக வலியனா புகுத்தியது.. அவர் வரும்  காட்சிகள் ஆரவாரம்.. 

4.  ஓப்பனிங்க் சாங்கில் மயில் தோகையை பிரமாணடமாக காட்டி பாடல் காட்சியில் அழகியல் ரசனையுடன் சூட் பண்ணியது.. ( அவள் திரும்பி பார்த்து மெல்ல சிரித்தாள்.. பாட்டு)


5.  மசாலா கஃபேக்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு சிவா அண்ட் கோ மிட் நைட்டில் திருடும் காட்சி கலக்கல் காமெடி.. 

6. உன்னைப்பற்றி உன்னிடமே எப்படிச்சொல்வேன் பெண்ணே அழகிய மெலோடி பாடல் படமாக்கப்பட்ட விதம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEG408E1z-1kRuCNRJidyWw1J3byJ54St4QJgZfxa88F7EGLZYVI2xImxrtLE5pR9K7Bo4DxxwRIsuCxpGIn2XxZjJNMjlMDbfHbgftr0ll-vTkXesPjpUnJ1N4Z8qtVWzzDXmiPIYDbwL/s0/kalavani_tamil_actress_oviya_stills_02.jpg

7.  பர்தா போட்டு திருடும் பெண்ணிடம் விமல் எனக்காக ஒரு ஹேண்ட் பேக்  திருடித்தாங்க என கெஞ்சுவதும் , அந்தப்பெண்  மாறுவேடத்தில் வந்த சிவாவாக இருப்பதும்.. செம

8.. எது வீசினாலும் அதை லபக்கும் நாய்-ன் கேரக்டரை வெச்சு 3 இடங்களில் நச்சென அமைந்த காமெடி

9. சுந்தர் சி யின் ட்ரேட் மார்க்கான உருட்டுக்கட்டை காமெடியை  இந்தப்படத்தில் வைக்காதது.. 

10.  காமெடி கிளப்பும் வசனங்கள்.. படத்தில் மொத்தம்  68 ஜோக்ஸ்.. அதில் கேபிள் சங்கர் எழுதியது 70 % என கணிக்கிறேன்.. 

11. நாளைய இயக்குநர் ல ஜட்ஜா வந்தப்போ கொடுத்த வாக்கை மதிச்சு அதன் இயக்குநர்கள் 2 பேருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருப்பதும் அவர்கள் நடிப்பும் நீட்.. 

12. இளவரசுவின் கமல் கெட்டப் காமெடிகள், மனோபலா காமெடி படத்துக்கு பிளஸ்.. 

13. செம கிளாமர் சீன்ஸ் இருந்தும் படத்துக்கு யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியது

14. எந்தப்படமும் போட்டிக்கு இல்லாம கோடை விடுமுறையில் ரிலீஸ் செஞ்சது




http://masscinema.in/wp-content/gallery/anjali-hot-red-saree/anjali-red-hot-saree-6.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அஞ்சலிக்கு ஓப்பனிங்கில் ஸ்லொமோஷன் பில்டப் கொடுத்துட்டு ஓவியாவை சர்வ சாதாரணமா இண்ட்ரோ கொடுப்பது ஏன்?

2. எந்த கேனயனாவது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை செல் ஃபோனில் வைத்து அதை அடியாளிடம் கொடுத்து அனுப்புவானா?அதுவும் அதன் முக்கியத்துவம் பற்றி ஏதும் சொல்லாமல்?

3. செல்ஃபோனை லபக்கும் அந்த டிக்கெட்  உடனே செல் ஃபோனை ஆஃப் பண்னாமல், அல்லது சிம் கார்டை தூக்கி வீசாமல் வர்ற கால்க்கு அட்டெண்ட் பண்ணி பதில் சொல்லிட்டு இருக்கே? அது அவ்லவ் கேணையா? பொதுவா ஒரு செல் ஃபோனை திருடுனா முதல் விதி சிம் கார்டை நயன் தாரா லவ்வரை கடாசற , மாதிரி, ஜெ  ஆகாத அமைச்சரை தூக்கி வீசற மாதிரி வீச வேணாமா?




http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s320x320/523169_430409203639634_1014517917_n.jpg

4. சிவா அவர் ஃபோன்ல இருந்து..வில்லன் போலீஸ்க்கு கமிஷ்னர் மாதிரி மிமிக்ரி பண்ணி பேசறார்..  அந்த வில்லன் போலீஸ் எந்த நெம்பர்னு பார்க்காமயே கேனம் மாதிரி  கமிஷ்னர்னு நம்பிடறார்.. ஏன் ஒரு போலீஸ் ஆஃபீசர்க்கு கமிஷ்னர் நெம்பர் தெரியாதா? இத்த்னைக்கும் சிவா அந்த போலீஸ் வில்லனுக்கு ஃபிரண்ட் வேற.. 

5.  ஹெல்த் இன்ஸ்பெக்டரா வர்ற அஞ்சலி 90 % டைம் மசாலா கஃபேதான் சுத்திட்டு  இருக்கார்..  அவர்க்கு விமல் மேல காதல் வர்ற சீன் நம்பற மாதிரியே இல்லை..  ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ்ல அவர் தகுதிக்கு மீறி 1100 ரூபாய்க்கு ஹேண்ட் பேக் வாங்கிக்குடுத்ததும் அவர்க்கு லவ் வந்துடுது.. அடங்கோ.. 

6. இடைவேளை வரை சீராக போகும் திரைக்கதை இடைவேளைக்குப்பிறகு டிராக் மாறுது.. கதையோட மெயின் பாயிண்ட் மசாலா கஃபே தானே? எதுக்கு சம்பந்தமே இல்லாம அஞ்சலி கிராமத்துக்கு போறது? சந்தானம் காமெடியை உள்ளே கொண்டு வரவா?

7. க்ளைமாக்ஸ் ரொம்ப நீளம்.. நறுக் சுருக்னு முடிச்சிருக்கலாம்.. சந்தானம் இருக்கற தெம்புல  இழு இழுனு இழுத்துட்டாங்க போல..

8.. மசலா கஃபே க்கு ஓனர்ஸ் 2 பேரு.. அப்படி இருக்கும்போது எப்படி சிவா தன்னிச்சையா  அந்த ஹோட்டலை அடமானம் வெச்சு சீட்டாடி தோக்க முடியும்?

9. ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல அந்த ஹோட்டலை பதிவு பண்ணி எழுதி வாங்கிக்கும் வில்லன்  சிவா கிட்டே மட்டும் சைன் வாங்கிக்கறார்.. அது எப்படி செல்லும்?

10. வில்லனுக்கு தெரியாம வைரத்தை ஒளிச்சு எடுத்துட்டு வந்து டீல் பேசறவங்க வில்லன் இன்ஸ்பெக்டரா இருக்கற போலீஸ் ஸ்டேஷன்லயே மேல் பாக்கெட்லயே வைரத்தை வெச்சுக்கிட்டு டீல் பேசுவாங்களா?

11. ஹெல்த் இன்ஸ்பெக்டரா வர்ற அஞ்சலி என்னமோ பஸ் ஸ்டேண்ட்ல நிக்கற  கனகாம்பரபூ  தலைல வெச்சிருக்கற  டிக்கெட் மாதிரி நடந்துக்குது..



http://www.bestactress.info/wp-content/uploads/2011/03/tamil-actress-anjali-hot-navel1-300x207.jpg


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41 ( ஏன்னா செம காமெடியான ஓக்கே ஓக்கேவுக்கே 43 தான்)

 குமுதம் எதிர்பாப்பு ரேங்க் - ஓக்கே 

 சி.பி கமெண்ட் - ஜாலியா போய் சிரிக்கனும்னு நினைக்கறவங்க, அஞ்சலி, ஓவியா கிளாமர் சீன் பார்க்க நினைக்கறவங்க, சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம்.. படம் பிரமாதம் எல்லாம் இல்லை.. மொக்கையும் இல்லை.. டைம் பாஸ் காமெடி

 ஈரோடு ஆனூரில் பார்த்தேன் ( இது ஒரு கில்மா படம் அல்ல.. )



http://www.thamilan.lk/news_images/49202893masalacafe3.jpg