Showing posts with label அம்மாவின் கைப்பேசி. Show all posts
Showing posts with label அம்மாவின் கைப்பேசி. Show all posts

Thursday, November 22, 2012

தீபாவளி ரிலீஸ் படங்கள் - விகடன் விமர்சனங்கள்

விமர்சனம் : துப்பாக்கி

விகடன் விமர்சனக் குழு
தீவிரவாதிகளை வேட்டையாடும் ராணுவத் 'துப்பாக்கி’!

 ராணுவ வீரனான விஜய் விடுமுறைக்கு மும்பைக்கு வந்த வேளையில், ஒரு திருடனைப் பிடிப்பதற்கு பதில் தீவிரவாதியைப் பிடித்துவிடுகிறார். அவனிடம் இருந்து தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தெரிந்துகொண்டு, தன் ராணுவ நண்பர்களைத் துணையாகக்கொண்டு 'ஸ்லீப்பர் செல்’நபர்களை ரகசியமாக வேட்டையாடுகிறார். மொத்த நெட்வொர்க்கையும் இயக்கும் 'மாஸ்டர் மைண்ட்’ வில்லன் தன் சகாக்களைக் கொன்ற ரகசியத் துப்பாக்கி யார் என்று தேடும் முயற்சியில், பலர் உயிர்இழக்கிறார்கள். விஜய் தன்னையே பணயமாகவைத்து வில்லனைச் சந்திக்கச் செல்வது டிக்டிக் திக்திக் க்ளைமாக்ஸ்!


தியேட்டரைவிட்டு வெளியே வந்த பிறகு, 'இப்படி ஒரு ஆபரேஷன் நிஜத்தில் சாத்தியமா?’ என்று முட்டி மோதுகின்றன லாஜிக் சந்தேகங்கள். ஆனால், உள்ளே இருக்கும் வரை அப்படியான சந்தேகமே எழாத வகையில் பரபர திரைக்கதையால் அசரடிக்கிறது ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம். 
'விஜய் மிலிட்டரியா?’ என்று சந்தேகத்தோடே அமர்ந்தாலும், விறைப்பும் முறைப்புமாக கேரக் டருக்கு அட்டகாசமாக உயிர் கொடுத்து இருக்கி றார் விஜய். நிதானமாகப் பேசிக்கொண்டேதீவிர வாதியின்கைவிரல்களைவெட்டும்போதும், சின்ன கத்தியை வைத்து மொத்தப் பேரையும் வீழ்த்தும்போதும் அனல் பட்டாசு. பன்ச் வசனம் பேசாமல், அதே சமயம் மிகவும் ஸ்டைலாக அப்ளாஸ் அள்ளுகிறது விஜயின் மேனரிசங்கள்!
காஜல்... செம ஜில். ஆனால், கவர்ச்சிப் பாடல்களுக்கு மட்டுமே அழகி டெடிகேடட்!


விஜய்க்குச் சவால் கொடுக்கும் செம க்ளெவர் ப்ளஸ் டெரர் வில்லனாக வரும் வித்யுத் ஜம்வால், தீர்க்கமான பார்வையிலேயே மிரட்டுகிறார்.


காமெடிக்கு என வலிந்து திணிக்கப்பட்ட ஜெயராமைவிடவும் அதிரிபுதிரி காமெடிசெய் கிறது சத்யனின் கதாபாத்திரம். தன் மேல் அதிகாரிகளுக்குக்கூடத் தெரிவிக்காமல், விஜய் சொல்வதை அப்படியே கேட்டு அவர் நடப்பது செம சீரியஸ் காமெடி!


என்னதான் 'ஸ்லீப்பிங் செல்’களுக்கு தங்கள் தலைவர் யார் என்று தெரிந்து இருக்காவிட்டாலும், தங்களுக்கு உத்தரவிடுபவர் யார் என்று தெரியும்தானே... ஆனால், அதைக்கூட கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படாமல், அனைவரையும் சுட்டே சாகடிக்கிறார் விஜய்.


'கூகுள்... கூகுள்’ பாடலில் மட்டுமே ஈர்க்கிறது ஹாரிஸின் இசை. மும்பையின் அழுக்கு, அழகு இரண்டையும் ஃப்ரெஷ் லுக்கில் தருகிறது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு.


பயங்கரவாதிகள் என்றால் அவர்கள் சிறுபான் மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று சித்திரிக்கும் பொது புத்தி உச்சத்துக்குச் சென்று இருக்கிறது 'துப்பாக்கி’யில். அதிலும் சிறுபான்மையினர் குடும்பங்களும்  பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது வேதனை.


லாஜிக் மேஜிக் பார்க்காவிட்டால், இந்த அளவு இம்ப்ரெஸ் செய்ய முடியும் என்றால், இப்படியான இன்னொரு விஜய் படத்துக்கு...

'வி ஆர் வெயிட்டிங்’!



விமர்சனம் : போடா போடி

விகடன் விமர்சனக் குழு
திருமணம் முடிந்த பின்னும் ஈகோ உரச, 'போடா...’, 'போடி’ என்று பிரியும் காதலர்களின் கதை!


 சில சந்திப்புகளிலேயே காதலிக்கத் தொடங்கும் சிம்பு, வரலட்சுமி (அறிமுகம்)  திருமணம் முடித்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகான ஈகோ மோதல் இருவரையும் பிரிக்க, இணைந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்!


பார்த்துப் பழகிய பழைய கதை என்றாலும் நான்கைந்து  கேரக்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு, சின்னச் சின்னக் கலகல வசனங்களால் படத்தை ரசிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் சிவன். வரலட்சுமி சல்சா ஆடுவதைத் தடுக்க, சிம்பு அவரைக் கர்ப்பம் ஆக்குவது, அது தெரிந்து பிரிந்து செல்லும் வரலட்சுமிக்கே பின்னர் சிம்பு டான்ஸ் பார்ட்னர் ஆவது, குத்து டான்ஸுக்கும் சல்சாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் சிம்பு தடுமாறுவது ஆகியவை படத்தின் ரசனை அத்தியாயங்கள்.
டம் முழுக்கவே சிம்பு செம க்யூட். 'எப்பவாவது பொய் பேசறவளைப் பார்த்திருக்கேன். ஆனா, எப்பவும் பொய் மட்டுமே பேசுறவளை இப்போதான் பார்க்கறேன்’ என வரூவை வாரும் போதும், 'அவன் எங்கல்லாம் கை வைக்கிறான்... எனக்குப் பத்திட்டு வருது’ என்று எகிறும்போதும் அசத்துகிறார்.


 சிம்புவுக்கே வம்பு கொடுக்கும் கேரக்டரில் வரலட்சுமி அசத்தல் அறிமுகம். 'தொடுறப்பவே எனக்கு வித்தியாசம் தெரியும்!’  எனச் சதாய்ப்பதும் கோபத்தில் டாய்லெட்டில் வீசிய திருமண மோதிரத்தைப் பிறகு தேடி எடுக்கும்போதும் பொண்ணு நடிப்பில் ஓ.கே. (கரகரக் குரல்கூட கேட்கக் கேட்க வசீகரித்துவிடு கிறது). ஆனால், சிம்புவைவிட 'பல்க்’ ஆகத் தெரியுதே பொண்ணு!



படம் முழுக்க சிரிசிரி மேளா நடத்திஇருப்பவர் 'விடிவி’ கணேஷ். 'மங்களகரமா இருந்த என் வீட்டை இப்படி மகாபலி புரம் கெஸ்ட் ஹவுஸ் மாதிரி மாத்திட்டானே!’ எனப் புலம்புவதும், 'கல்யாணம் ஆகுற வரை பொண்ணுங்க ஜலக் முலக் கலக்னு இருப்பாங்க. கல்யாணம் ஆகிட்டா பொலக்னு ஆகிடுவாங்க’ என எக்ஸ்பிரஷன் வைத்துச் சொல்வதும், சிம்புவுக்கு டகால்டி ஐடியாக்கள் சொல்வதுமாகக் கரகரக் குரலால் கலகலக்கவைக்கிறார். 'இவ்ளோ விஷயம் இங்கே ஓடிட்டு இருக்கு. ஷகிலா படம் பார்த்துட்டு இருக்கியா?’ என்று கணேஷை சிம்பு போட்டுக்கொடுப்பதுமாக இருவருக்குமான காமெடி கெமிஸ்ட்ரி... பம்பர் லாட்டரி! 


ரசனை வசனங்கள், கலகல காமெடி தவிர படத்தில் வேறு என்ன பாஸ் இருக்கிறது? சிம்புவின் வசதிபற்றி எதுவும் விசாரிக்காமலேயே அவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரூ, வருடம் முழுக்க டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டு இருக்கிறார். லண்டன் கலாசாரத்தில் 'ஃப்ரீக்கி’ ஆக வளர்ந்த சிம்பு, வரூவைக் கைபிடித்ததும் 'தமிழ் கலாசாரக் காவலன்’ அவதாரம் எடுத்து,  நமக்கு காதில் ரத்தம் வரும் அளவுக்குப் பேசிக்கொண்டே இருப்பது என்ன நியாயம்? அதிலும் முதல் பாதி முழுக்க சிம்புவும் வரூவும் பேசிக்கொண்டே இருக்கிறா... ஆவ்வ்வ்வ்! 


'போடா போடி..’ பாடலிலும் சல்சாநடனத்தின் போது ஒலிக்கும் பின்னணி இசையிலும் செம ஸ்கோர் செய்கிறது தரண்குமாரின் பின்னணி இசை.
சில செல்லச் சண்டைகள் ரசிக்கவைக்கும். 'போடா போடி’ அப்படி ஒரு சண்டை!





விமர்சனம் : அம்மாவின் கைப்பேசி

விகடன் விமர்சனக் குழு
பொறுப்பு இல்லாமல் திரிந்த கடைக்குட்டி மகன் சாந்தனுவிடம் இருந்து நல்ல செய்தி ஒன்று கைப்பேசி அழைப்பு வாயிலாக வரும் என்று காத்திருக்கும் அம்மா ரேவதி அம்மாளுக்கு இறுதியில் என்ன ஆகிறது என்பதே... அம்மாவின் கைப்பேசி!


 எட்டு சகோதர-சகோதரிகள், ஒரு அம்மா, சாந்தனு, இனியா, அவருடைய குடும்பத்தினர், தோல் தொழிற்சாலை பாய், குவாரி உரிமை யாளர், அவரது மேனேஜர், சிலபல வில்லன்கள், 'செம கவர்ச்சி’ மீனாள் என எக்கச்சக்க 'சிம் கார்டு’களை ஒரே கைப்பேசியில் திணித்துஇருக்கி றார் இயக்குநர் தங்கர்பச்சான்.


மேலே கதைச் சுருக்கத்திலும் சரி, கதைமாந்தர் களிலும் சரி.... 'நடிகர்’ தங்கர் கேரக்டரேவந்திருக் காதே... ஆனால், படம் முழுக்க 'பட்டையைக் கிளப்புவதில்’ சாந்தனுவை ஓரங்கட்டி தகர அடி அடித்து இருக்கிறார் தங்கர். 

இந்தக் கைப்பேசியில் கவர்ச்சிக் கரகாட்டம், வட நாட்டு அழகிகளின் குலுக்கல் குத்து, சாந்தனு - இனியா இதழ் பச்சக், மீனாளுடன் அத்துமீறிய நெருக்கம் எனக் கவர்ச்சிக்கு எனத் தனி மெமரி  கார்டே திணித்து இருக்கும்  தங்கர், அதில் உச்சகட்ட உலுக்கலாக தானே ஜட்டி குளியல் தரிசனம் தருகிறார்! 


கிராமத்து இளைஞனாக அள வாக நடித்து இருக்கும் சாந்தனு வைப் பற்றி, 'அவன் கோபக் காரன்ய்யா’ என்று ஆரம்பத்தில் ஏக பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால், இறுதி வரை ஒரு காமா சோமா வில்லனிடம் சிக்கிச் சின்னாபின்னம் ஆகிறார் அந்தக் கோபக்காரன்.  தலைப்பு முக்கியத் துவம்கொண்ட கேரக்டரில்பாசக் கார அம்மாவாக ரேவதி அம்மாள் எவ்வளவு நெகிழவைத்து இருக்க வேண் டும்... ம்ஹூம். இதழ் முத்தம் தவிர இனியாவைப் பற்றி நினைவுகூர எதுவுமே இல்லை.


'ரொம்ப நல்லவராக’ வரும் குவாரி உரிமையாளர் அழகம் பெருமாளின் கேரக்டர் செம காமெடி. அவரைப் போலவே அனைத்து குவாரிக்காரர்களும் இருந்துவிட்டால் போலீஸுக்கு வேலையே இல்லை. வேலைக்குச் சென்று புருஷ னைக் காப்பாற்றும் கேரக்டரில் மீனாள்கச்சிதம். ஆனால், படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தங்கருடன் 'இறுக்கி முறுக்கி நெருங்கும்’ காட்சி களில் மீனாளுக்கே 'அதிகப் பங்கு’. இதனால் அவருடைய பாத்திரமே 'வேறு தொனி’யில் மாறுகிறதே!


கருத்து இல்லாமல் தங்கர் படமா? 'சார்னு வெள்ளைக்காரன்தான் கூப்பிடுவான். அய்யான்னு தமிழனுங்க கூப்பிடணும்’ என்று வகுப்பு எடுப் பதில் தொடங்கி ஏராளமான கருத்துக் குத்துக்களும் உண்டு. கதை, திரைக்கதை, காட்சிப்படுத்திய விதம், பாடல்கள் அனைத்தும் படத்தின் பலவீனப் பட்டியலில் இடம் பிடிக்க, கிஷோரின் எடிட்டிங்கும், ரோஹித் குல்கர்னியின் இசையும் அதற்குத் துணை நிற்கின்றன.


அம்மாவின் கைப்பேசி - நாட்  ரீச்சபிள்!

விகடன் விமர்சனம் மார்க் : அம்மாவின் கைப்பேசி - 39 ,போடா போடி -42 ,துப்பாக்கி -44 , அட்ராசக்க - 40,41,42 


http://www.vikatan.com/av/2012/11/mzniod/images/p92.jpg


http://www.vikatan.com/av/2012/11/mzniod/images/p93.jpg


நன்றி -விகடன் 

Saturday, November 17, 2012

அம்மாவின் கைப்பேசி - சினிமா விமர்சனம்

http://chennaionline.com/images/gallery/2012/October/20121003060930/Ammavin_Kaipesi_Movie_Posters_Wallpapers_04.jpg 

ஒரு படத்தின் தயாரிப்பாளரோ , இயக்குநரோ அந்தப்படத்தில் தலை காட்ட ஆசைப்பட்டால்  பாலைவனக்கூடாரத்தில் தலைக்கு மட்டும் இடம் கேட்ட ஒட்டகத்தின் கதை ஆகி விடும், ஒரு நல்ல கதை கூட தேவையற்ற ஆக்ரமிப்பால் திசை மாறி திரைக்கதை தடுமாறிப்பயணித்து விழலுக்கு இரைத்த நீர் ஆகி விடும் என்பதற்கு சமீபத்திய நல்ல உதாரணம் தான் இந்த அம்மாவின் கைப்பேசி


படத்தோட கதையை தங்கர் பச்சான் சொன்ன மாதிரி அப்படியே சொல்லிட்டா அது தமிழ் இனத்தலைவரின்  ஈழப்பிரச்சனை பற்றிய தி முக நிலைப்பாடு மாதிரி குழப்பி அடிக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தக்கதையை எப்படி சொல்லி இருக்கனுமோ அப்படி நேரா கதைக்கு வர்றேன். 


ஹீரோவுக்கு மாமன் பொண்ணு ( ஹீரோயின் ) மேல காதல். ஆனா அவர் வேலை வெட்டி இல்லாம ஊரைசுத்திட்டு இருப்பதால் காதலுக்கு தடை. ஹீரோயினின் அப்பா நடத்தும் மினர்ல் வாட்டர் கம்ப்பெனிலயே அவருக்கு வேலை போட்டுத்தர்றாரு. நல்லா சுமூகமா போய்ட்டு இருக்கும்போது வில்லங்கமா ஹீரோ மேல ஒரு திருட்டுப்பழி விழுது.


 பெத்த அம்மாவே ஹீரோவை நம்பலை. அதனால நல்ல நிலைமைக்கு வர்ற வரை இந்த ஊர்ப்பக்கம் தலை வெச்சு படுக்க மாட்டேன்னு சவால் அல்லது சபதம் எடுத்து ஹீரோ அம்மாவை அம்போன்னு விட்டுட்டு போயிடறார்.


 7 வருஷம் ஒரு  கல் குவாரில சூபர்வைசரா , மேனேஜரா வேலை செய்யறார்.அங்கே நடக்கும் ஊழலை கண்டு பிடிச்சு ஓனர்ட்ட காட்டிக்குடுக்கறார். பணி புரியும் ஆஃபீஸ் பணத்தை 65 லட்சம் ரூபாயை பேங்க்ல இருந்து எடுத்துட்டு வரும்போது அதே கல்குவாரில ஒர்க் பண்ணின ஆட்கள் 3 பேரால் ஹீரோ கொலை செய்யப்பட்டுடறார்.



தன் மகன் வருவான் வருவான்னு பார்த்துட்டு இருந்த அம்மா, மாமன் மகள் என்ன செஞ்சாங்க என்பது மிச்ச மீதிக்கதை 


ஹீரோ சாந்தனு. மிக அருமையான நடிப்பு. இதுவரை பிளே பாயாக நடித்தவர் முதல் முதலா குணச்சித்திர நடிப்பு. வெல்டன்.ஹேர் ஸ்டைலை எல்லாம் கிராமத்தான் போல் மாற்றி பாடி லேங்குவேஜிலும் அக்கறை காட்டி இருக்கிறார். அம்மாவிடம் விளக்குமாற்றால் அடி வாங்கும் காட்சியில் தாய்க்குலங்களின் அனுதாபத்தையும் , கமல் , விக்ரம்க்குப்பின் ஈகோ பார்க்காமல் அடி வாங்கும் 3 வது தமிழ் ஹீரோ என்ற அந்தஸ்தையும் பெறுகிறார்


இனியா அவருக்கு  ஜோடி. காதல் காட்சியிலும் சரி , சோகக்காட்சியிலும் சரி அளவான நடிப்பு. டூயட்  காட்சியில் இளமை கொப்புளிக்கிறது. ( பல் துலக்கற சீனா?ன்னு கேட்கக்கூடாது) 


 தங்கர் பச்சான் தான் படத்துல வில்லன் படத்துக்கும் வில்லன். அதாவது இந்தப்படம் போதிய வரவேற்புப்பெறாமல் போவதற்குக்காரணமே இவர் கேரக்டர் தான். இயக்குநருக்கான கேள்விகள் பகுதில இவருக்கு ஆப்பு காத்திருக்கு,. 


 ஒளிப்பதிவு , எடிட்டிங்க் , இசை எல்லாம் நிறைவாக இருக்கு. இந்த மாதிரி கிராமியக்கதைகளில் இளையராஜாவின் இசை இருந்தால் அது படத்துக்கு பிளஸ் ஆக இருக்கக்கூடும். ஆனால் இசை புதுமுகம்.

http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Jul/16/Ammavin_Kaipesi_Latest_Movie_Stills/Ammavin_Kaipesi_Latest_Movie_Stillsfef194123a98e23594c841797206e7cc.jpg.


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தில் முடிந்தவரை தொழில் சம்பந்தப்பட்ட விவரங்களை படத்தின் தேவைக்கு மீறி விலாவாரியாக காட்டியது.  மினரல் வாட்ட்டர் பாக்கெட் தயாரிப்பு , மாம்பழ ஜூஸ் கம்ப்பெனி , கல் குவாரி ஃபேக்டரி சம்பந்தப்பட்ட காட்சிகள் 



2. படத்தின் மெயின் கதையிலோ, நாவலிலோ கல்குவாரி பற்றி இல்லை. ஆனாலும் பட ஷூட்டிங்க்கின் போது டாபிக்கல் மேட்டராய் கல்குவாரி பிரச்சனை ஓடியதால் மணி ரத்னம் பாணியில் அதை சாமார்த்தியமாய் உள் நுழைத்தது 



3..ஹீரோ - ஹீரோயின் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் இளமை ஊஞ்சல் , தூரி ஆடும் வகையில் படப்பிடிப்பு 



4. சைக்கிள் கேப்பில் கிராமத்து நடன வகைகள் , கிராமத்து இசை வாத்தியங்களை ஆங்காங்கே சேர்த்து இசையை ரசிக்க வைத்தது 


5. பெரும்பாலான கேரக்டர்களை கிராமத்து நிஜ மனிதர்களை நடிக்க வைத்தது. ஒரே கல்லுல 2 மாங்காய். நடிப்பு இயல்பா இருக்கும். சம்பளமும் தரத்தேவை இல்லை.. வேலை வாங்கும் சாமார்த்தியம் இருந்தா போதும் 


6. தங்கரின் மனைவியாக வருபவர் நடிப்பு அற்புதம். ரசிக்கத்தக்க நடிப்பு + இடுப்பு மடிப்பு 


http://mimg.sulekha.com/tamil/ammavin-kaipesi/stills/ammavin-kaipesi-movie-pics-0124.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. படத்தோட மெயின் கதை அம்மா , மகன் பாசம் , பிரிவு மீண்டும் அவர்கள் சேர்வது பற்றித்தான். ஆனால் திரையில் 60 % கதையை இயக்குநரான நீங்களே ஆக்ரமிச்சுட்டா மெயின் கதையின் தாக்கம் எபப்டி மக்களுக்குப்போய்ச்சேரும்? 


2. படத்துல 3 வில்லன்க. அதுல ஒருத்தர்தான் இயக்குநரான நீங்க.. அதென்ன உங்களூக்கு மட்டும் ஏகப்பட்ட காட்சிகள் , ஒரு டூயட் வேற . சகிக்கலை.. இந்த லட்சணத்துல இயக்குநருக்கு ஒரு கில்மா சீனும், ஏய் இன்னொருக்கா அப்டினு கேட்கும் கிளு கிளு காட்சியும், படத்துல மகா எரிச்சலை வரவைக்கும் காட்சி.. ஏய்யா , கதை எவ்ளவ் சீரியஸா போய்ட்டிருக்கு.. அதுல போய் கில்மா காட்சியா? அப்டியாவது ஹீரோ - ஹீரோயினுக்குன்னா கூட பரவாயில்லை.. 


3. க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனான நீங்க ஒரு கொலையை பண்ணிட்டு சாமி கோயில்ல ஆணி செருப்புல நடந்து தாய்க்குலத்தின் இரக்கத்தை சம்பாதிக்க முயற்சி பண்ணிய சீனுக்காகவே உங்களை  ஜெயில்ல போடனும் . படு கேவலமான , அனுதாபத்தை பிச்சை கேட்கும் காட்சி// 



4. ஹீரோ அம்மாவுக்கு ஃபோன் பண்றார். அம்மா செல்ஃபோனை வந்து எடுக்கறதுக்குள் கட் ஆகிடுது. ஏன் அவர் 2 வது டைம் பண்ண மாட்டாரா>? 7 வருஷம் பிரிஞ்சு இருப்பவர் இப்படித்தான் பொறுப்பில்லாம இருப்பாரா? 



5. அம்மா - மகன் செண்ட்டிமெண்ட் காட்சியை பிழிஞ்சு எடுக்க  நினைத்ததெல்லாம் ஓக்கே. அதுக்கு  என்ன பண்ணி இருக்கனும்? அம்மா - மகன் பாசத்தை ஆல்ரெடி ஓப்பனிங்க்ல காட்டி இருக்கனும்.. ஒரு சீன் கூட அம்மா மகன் பாசக்காட்சியே ஆழமா காட்டலை./. உங்களூக்கு உங்களை முன்னிலைப்படுத்தவே நேரம் சரியா இருக்கு 


6.  மாமன் மக்ளை பிரிஞ்சு போன ஹீரோ அவருக்கு ஒரு கடிதம் கூட போட மாட்டாரா?  அட்லீஸ்ட் ஹீரோயின் தோழி, பக்கத்து வீட்டுக்காரம்மா யார் மூலமாவது தொடர்பு கொள்ள முயற்சிக்க மாட்டாரா>? 



http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Jul/16/Ammavin_Kaipesi_Latest_Movie_Stills/Ammavin_Kaipesi_Latest_Movie_Stillse7cee2300ad768707777b28d444c8bba.jpg



7. மாமன் மகளுக்கு மேரேஜ் வேற ஒருவர் கூட ஆகிடுது. அதுக்கு அவர் சொல்ற காரணம் செம காமெடி . உங்க கிட்டே இருந்து தகவலே வர்லை என்பதால் நீங்க செத்துட்டீங்கன்னு நினைச்சேன். டெட் பாடி பார்க்காம எப்டி அப்டி ஒரு முடிவுக்கு வர்றது? 


8. கல் குவாரில அப்போதான் முதல் நாள் வேலைக்கு சேரும் ஹீரோ சட்டசபையில் கேப்டன் மாதிரி ரணகளப்படுத்துவது எப்படி? முதல் நாள்ல எல்லாருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். அந்த காட்சி படு செயற்கை 



9. ஆண்டாண்டு காலமாய் ஊழல் செய்யறவன், கோடிக்கணக்குல சம்பாதிச்சவன் தனக்கு இடையூறாய் ஒருத்தன் வந்தா  டக்னு ஆளை கொலை செஞ்சு விபத்து மாதிரி காட்டுவானே தவிர நீயும் கூட்டாளீயா சேருன்னு கோடிக்கணக்குல பணத்தை லாஸ் ஆக்க மாட்டான்.. 


10. கல்குவாரில நல்ல வேலைக்கு சேர்ந்ததும் ஹீரோ ஏன் அம்மாவுக்கு தகவல் சொல்லலை? மாமன் மகள் இடம் தன் சந்தோஷத்தை பகிர்ந்துக்கலை. காதலியிடம் தான் இப்படிப்பட்ட சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்க முடியும். அதை ஏன் அவர் செய்யலை? 



11.  பத்துநாளா உனக்கு ஃபோன் பண்ணிட்டே இருக்கேன், ஏன் எடுக்கலை?னு ஹீரோயின் கேட்டப்ப ஹீரோ சொல்லும் டயலாக் சிறுபிள்ளைத்தனமானது. “ நான் இங்கே ஒரு பிரச்சனைல மாட்டி இருக்கேன்” அதான்.   10 நாளா அவர் குளிக்காம , சாப்பிடாம இருந்தாரா? ஃபோன் அட்டெண்ட் பண்ணக்கூட டைம் இல்லையா?


12. பேங்க்ல 65 லட்சம் கேஷ் தர்றாங்க.அதை எத்தனை கட்டு இருக்குன்னு கூட செக் பண்ணாம எந்த  மடையனாவது பேக்கை திறந்து கூட பார்க்காம வாங்கிட்டு வருவானா? காட்டுப்பாதைல அவ்ளவ் கேஷ் வெச்சுக்கிட்டு  தனியா பயணம் செய்வாங்களா? எங்க ஆஃபீஸ்ல ஒரு லட்சம் வித்ட்ரா பண்ணிட்டு வர்றதுன்னாலே மேனேஜர் 2 பேரை கூட கூட்டிட்டுப்போங்கறார். 65 லட்சம் அப்படி அநாமத்தா விட்டுடுவாங்களா? 


http://www.breezemasti.com/gallery/data/media/201/iniya_in_ammavin_kaipesi_movie_stills_2.jpg


13. முக மூடி போட்டு வழிப்பறி பண்றவங்க ஏன் திடீர்னு அதை கழட்டி ஹீரோ கிட்டே தங்களை அடையாளப்படுத்திக்கறாங்க? துப்பாக்கில வந்த மாதிரி சஸ்பென்சோட  சாவுன்னு ஏன் சொல்லாம இடம் சுட்டி பொருள் விளக்கி டைம் வேஸ்ட் பண்றாங்க?



14. ஹீரோவை  2 பேர் சூழ்ந்ததும் என்னை விட்டுடு , பணத்தை வேணா எடுத்துக்க அப்டினு ஹீரோ சொல்றது எப்படி? 10 பேர் சேர்ந்த கும்பல்னா ஓக்கே , ஜஸ்ட் 2 பேர். சமாளிக்கலாமே? ஏன் முயற்சியே பண்ணலை? 


15. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பணத்துக்காக தன்னை துரத்தும் 2 வில்லன்க கிட்டே இருந்து தப்பிக்க அந்த பள்ளத்தாக்குல இருந்து ஜஸ்ட் தண்ணீரில் ஜம்ப் பண்ணி இருக்கலாமே? ஏன் செய்யலை? ( நீச்சல் தெரியாதுன்னு சாக்கு சொல்ல வழி இல்லை.. கிராமங்களில் நீச்சல்  தெரியாத ஆளே இல்லை )



16. க்ளைமாக்ஸ் ஓவர் இழுவை.. சீக்கிரம் முடிங்கப்பா  என தியேட்டர்ல அவனவன் கதறிட்டு இருக்கான்.. 


17. யார் நம்பலைன்னாலும் பெத்த அம்மா மகனை நம்புவா.அப்படியே நம்பலைன்னாலும் வெளீல சொல்லிட்டு இருக்க மாட்டா. ஊர் மக்கள் முன்னாடி விளக்கு மாற்றால் அடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர் 



http://masscinema.in/wp-content/gallery/ammavin-kaipesi-movie-stills/ammavin-kaipesi-movie-stills-11.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. சும்மா இருக்கும் ஆம்பளையை எந்த பொண்ணுக்கும் பிடிக்காது # ( சும்மா = வேலைக்குப்போகாம)


2. இன்னைக்கு உலகத்துல இருக்கும் பெரும்பாலான பணக்காரர்கள் எல்லாருமே ஒரு கால கட்டத்துல ஒரு வேளை சாப்ப்ட்டுக்கூட வழி இல்லாம கஷ்டப்பட்டவங்களே.. 



3. இன்னும் 10 வருஷத்துல இந்த நாடே குடிகார நாடா மாறப்போகுது


4. சுத்த பத்தமா இருந்தா எங்கேயும் சாப்பிடலாம். கையேந்தி பவன்ல கூட .


5.  தமிழ்ல இருக்கறதுலயே உயர்வான வார்த்தை அய்யா தான்.
சார் எல்லாம் வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சது.


6. ஒரு வெள்ளைக்காரன் இன்னொரு வெள்ளைக்காரனை சார்னு கூப்பிட்டு பார்த்திருக்கிங்களா? 


7. கிழவன் தான் கரும்பு ஜூஸ் குடிப்பான், குமரன் கரும்பைத்தான் கடிப்பான் ( டபுள் மீனிங்க் )


8. குவாரிங்கறது தங்க முட்டை இல்லை இல்லை வைர முட்டை இடும் வாத்து



9. அம்மா அலங்காரம், நீயே ஒரு அலங்காரம் , உனக்கு எதுக்கும்மா இன்னும் அலங்காரம்? 


 http://tamilmaxs.com/wp-content/gallery/ammavin-kaipesi-tamil-movie-stills/thangar-bachan-and-meenal-at-ammavin-kaipesi-movie-stills-3.jpg



 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 


  எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 



 எதிர்பார்க்கும்   டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேட்டிங்க் -  5 /10



சி.பி கமெண்ட் - தாய்க்குலங்கள் , டி வி சீரியல் ரசிச்சுப்பார்க்கறவங்க பார்க்கலாம். மற்ற யாராவது போனீங்க அவ்ளவ் தான். இல்லை அழகி , ஒன்பது ரூபாய் நோட்டு என நல்ல படம் எல்லாம் குடுத்திருக்கார். ஏமாற்ற மாட்டார்னு அடம் பிடிக்கறவங்க போங்க , படுங்க ஐ மீன் பட்டுத்தெளிங்க.ஈரோடு தேவி அபிராமியில் பார்த்தேன் .


http://filmiparadise.com/upload/stills/1628_wallpaper202813257.jpg

 

Monday, October 08, 2012

அம்மாவின் கைப்பேசி -தங்கர் பச்சான் - பேட்டி

http://chennai365.com/wp-content/uploads/Poster/Ammavin-Kaipesi-Latest-Movie-Posters/Ammavin-Kaipesi-Latest-Movie-Posters-Stills7581Gg7.jpgஅன்பு + ஆதங்கம் = அம்மாவின் கைப்பேசி!

தமிழ் பேசறவரெல்லாம் தமிழர் இல்லை!

- தங்கர் பச்சான்
ராகவ் குமார்

ஆங்கில மொழி வழிக்கல்வி அதிகமானதுக்கப்புறம்தான் விவாகரத்து அதிகமாய் இருக்கு. மொழிப்பற்று, மண் பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று இப்படி எந்தப் பற்றுக்களும் இல்லாத கல்விமுறைதான் இன்றைக்குப் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படுது. நிறைய படிச்சவன்தான் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான். படிக்கறது வேலைக்குப் போய் சம்பாதிக்கறதுக்கு மட்டும்தான்ற எண்ணம் இருக்கறதாலதான் இந்தப் பிரச்னை. இந்தக் கல்விமுறையை மாத்த வேண்டாமா?" என ஆதங்கத்துடனும் கோபத்துடனும் கேட்கிறார்அம்மாவின் கைப்பேசிபடத்தின் ரிலீஸுக்குக் காத்திருக்கும் தங்கர் பச்சான்.
ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

என்னை மாதிரி நல்ல படங்கள் எடுக்கணும்னு நினைக்கிறவங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் இதுதான் நிலைமை. நல்ல படம் தரணும்னு நினைக்கிற படைப்பாளி ஒவ்வொருத்தனும் போராடித்தான் படம் எடுக்க வேண்டியிருக்கு. மசாலா படம்னு சொல்லப்படுற பெரிய ஹீரோ படங்களை தியேட்டரில் போய்ப் பார்க்கிறவங்க, எங்களை மாதிரி ஆட்கள் எடுக்கும் படங்களை, திருட்டு சி.டி.யில பார்க்கறாங்க. ஒவ்வொருத்தரையும் தியேட்டரில் போய்த்தான் படம் பார்ப்பேன்னு சத்தியம் பண்ணச் சொல்லுங்க. நான் மூணு மாசத்துக்கு ஒரு படம் எடுக்கிறேன். மத்த மாநிலங்களில் சினிமாங்கிறது தியேட்டரில் பார்க்கறதுக்கு எடுக்கறதுன்னு உறுதியாய் நம்பறதால நூறு, நூற்றியம்பது நாள் சர்வசாதாரணமாய் படம் ஓடுது. இங்கு புது சினிமா விளம்பரம் வந்த மறுநாளே திருட்டு வி.சி.டி. கிடைக்குமான்னு கேட்கிறான். இதை அரசாங்கம் கட்டுப்படுத்தணும்னு நிறைய பேர் சொல்றாங்க. அரசாங்கத்துக்கு நிறைய வேலைகள் இருக்கு. திருட்டு வி.சி.டி.யைக் கண்காணிக்கறது மட்டுமா வேலை? திருட்டுப் பொருளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாதுன்னு நம்ம மக்களுக்கே புரியணும்."
அம்மாவின் கைப்பேசி...?
இந்தஅம்மாவின் கைப்பேசி’ 2008ல் என் நாவலாய் வெளிவந்தது. இலக்கிய வாதிகள் மட்டுமே தமிழ்நாட்டில் இலக்கியம் வாசிப்பவர்களாக இருப்பதால் நிறைய பேருக்கு நாவலாக வந்த தகவல் தெரியவில்லை. ஏன் சில பத்திரிகையாளர்களுக்கேகூட தெரியவில்லை. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள காரணம்கல்கிஒரு எழுத்தாளருடைய பத்திரிகை என்பதால்தான்.
இன்றைய தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே மனோரமாவும், சரண்யா பொன்வண்ணனும்தான். இதைத் தாண்டி அம்மாவுக்கு என்று ஒரு முகம் இருப்பதை இதில் பதிவு செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் வாழ்வியல் அறம் இருக்கிறது. குத்துப்பாட்டு, வன்முறை ஆபாசம் இல்லாத இளைஞர்களுக்கான படம். என்னுடையஅம்மாவின் கைப்பேசிபடம் பார்த்து வெளியே வரும்போது நம் அனைவருக்குமே ஒரு குற்ற உணர்வு ஏற்படும். இந்தப் படம் வெளியான பிறகு நிறைய கைப்பேசிகள் விற்பனையாகும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்."


 http://www.rateon10.com/wp-content/gallery/ammavin-kaippesi-movie-hot-stills/thangar-bachan-in-ammavin-kaippesi-movie-stills4.jpg?9d7bd4
தமிழ் உணர்வாளரான நீங்கள்இனியாவை நடிக்க வைப்பது ஏன்?

உங்களுக்குத் தெரிஞ்ச தமிழ்ப் பொண்ணு யாராவது நடிக்கத் தயாராய் இருந்தா சொல்லுங்களேன். தமிழ்ப் பெண்கள் நடிக்கத் தயங்கறதும் இதுக்கு ஒரு காரணம். இப்படி யோசிச்சா, தமிழர் அல்லாத நிறைய நடிகர்களை இங்கே துரத்த வேண்டியிருக்கும். ‘பாரதிபடத்தில் பாரதியாரா நடிச்ச சாயாஜி ஷிண்டே, ஷூட்டிங் சமயத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு, பல கிலோமீட்டர் நடந்தே வந்தார். ரொம்ப எளிமையாய் பந்தா இல்லாமல் பாரதியாராகவே வாழ்ந்தார். இங்க எந்த நடிகராவது இப்படி இருப்பாரா? தமிழ் பேசறதாலேயே தமிழனாகி விட முடியாது. இது புரியாமையால் வந்த கேள்வி. இனியா நல்ல திறமையான நடிகை. படம் பார்த்த பின்பு இந்தக் கேள்வியே கேட்க மாட்டீங்க."
நல்ல சினிமா ரசனையை உருவாக்க இயக்கம் தொடங்கும் எண்ணம் உண்டா?
அமெரிக்காவில் அரசியல்வாதிகளுக்கு ஒரு சதவிகித பங்குகூட ஊடகங்களில் இருக்கக்கூடாது. ஆனால், நம் நாட்டில் நிறைய ஊடகங்களை அரசியல்வாதிகளும், வியாபாரிகளும்தான் நடத்துறாங்க. ஒரே செய்தியை ஒவ்வொரு மீடியாவிலும் ஒவ்வொரு விதமாய் சொல்றாங்க. இங்கே எந்த இயக்கத்தை வளர்க்க முடியும்..?"
அரசியல் விழிப்புணர்வு நம்மிடையே எப்படி இருக்கிறது?
பணம் கொடுத்து, வாக்குப் போடச் சொல்லும் அரசியல்வாதிகளை கண்டிக்காதவரை எந்த மாற்றமும் இங்கே வராது. வாக்குரிமையைக் காசுக்காக விற்பவர்கள் எந்த உரிமையையும் கேட்க முடியாது. தமிழ்ச் சமூகம் போராட்ட சமூகமாக இல்லாமல் வேடிக்கை பார்க்கும் சமூகமாகத்தான் இருக்கிறது.
ஈழப் பிரச்னையின் போதாவது இங்கே சில போராட்டங்கள் நடந்தன. ஆனால், கூடங்குளம் அணுஉலை பிரச்னை ஏதோ கூடங்குளத்தோடு சம்பந்தப்பட்டது; நமக்கும் இதற்கும் தொடர்பில்லை எனப் பலரும் நினைக்கிறார்கள். மௌனமாக இருக்கும் நான்கூட குற்றவாளிதான்."
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மதுப்பழக்கம் கவலையளிக்கிறதே?
சில நாட்களுக்கு முன்புமதுபானக் கடைஎன்ற படம் வந்தது. அனைத்து ஊடகங்களும் பாராட்டி எழுதின. ஆனால் சுயபொறுப்பும், தார்மிக உணர்வும் உள்ளகல்கிஇதைப்பற்றிய சிறிய பதிவைக்கூடச் செய்யவில்லை. கல்கி போல மக்களும் விழிப்புணர்வோடு மதுவை விட்டு ஒதுங்கி இருந்தால், வெகு சீக்கிரமேமதுபானக் கடைகள்காணாமல் போய்விடும்."





http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-ammavin-kaipesi-latest-movie-stills/images/tamil-cinema-ammavin-kaipesi-latest-movie-stills19.jpg