Showing posts with label BLOGGERS. Show all posts
Showing posts with label BLOGGERS. Show all posts

Monday, January 16, 2012

பிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்திப்பு

http://www.tamilspider.com/attachments/Resources/5000-10341-pongal.jpg 

பொங்கல் டைம்ல காலேஜ், ஸ்கூல், ஆபீசுல்லாம் எல்லாரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைப்பாங்க.அது போல பிளாக்கர்ஸ் நாமெல்லாம் சேர்ந்து பொங்கல்  வைக்கலாம்ன்னு ஒரு ஐடியா தோணுச்சு. சரின்னு எல்லா பிளாக்கர்சுக்கும்  குறிப்பிட்ட இடத்துல, டைம்ல எல்லாரும் ஒண்ணு கூடி பொங்கல் வைக்கலாம்ன்னு மெயில் அனுப்பப்பட்டு எல்லாரும் சரி வரேன்னு சொன்னாங்க. 
 
இது பொங்கல். சாப்பாடு, கோலம், சாமிக்கு படையல்ன்னு நிறைய வேலைகள்லாம் இருக்கு. சாமி விஷயம் என்பதால் பொறுப்பா செயல்படனுமேன்னு யோசிச்சு சில பெண் பதிவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு அவங்களும் வரோம்ன்னு ஒத்துக்கிட்டாங்க. 

இது தனி ஒருத்தரால மட்டும் முடியும் காரியமல்ல. அதனால், ஆளாளுக்கு தனித்தனியா வேலைகளை பிரிச்சு கொடுத்தாச்சு. கரும்பு, அரிசி, வெல்லம், நெய் போன்ற சமையல் பொருட்களை வாங்கும் பொறுப்பு  கருண், சௌந்தரை சார்ந்தது. பானை வாங்கும் பொறுப்பு மகேந்திரன்கிட்ட. வீடு வாசல்லாம் ஒட்டடை அடிச்சு சுத்தம் பண்ற பொறுப்பு மனோ, விக்கிக்கு. கோலம், பொங்கல் வைக்கும் இடத்தை அலங்காரம் பண்ணும் பொறுப்பு மகளிரை சார்ந்ததுன்னு பிரிச்சு கொடுத்தாச்சு.


பொங்கல் அன்று:

சீனா தானா ஐயா: என்ன இது. இன்னிக்கு பொங்கல் வைக்கலாம்ன்னு எல்லாரும் ஒண்ணு கூடியிருக்கோம். மணி ஏழாச்சு. பொங்கல் வைக்கும் வேலையை இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே. ஏம்மா ”மணிராஜ்” ராஜராஜேஸ்வரி நீங்க எடுத்து சொல்லக்கூடாதா? மளமளன்னு வேலையை ஆரம்பிங்கம்மா. கைல என்னதும்மா?


ராஜராஜேஸ்வரி: சார், இது என் உறவினர் ஒருத்தர் கொடுத்தனுப்பிய ஃபாரீன் கேமிரா. பொங்கல் வைக்குறதை படம் எடுத்து என் பிளாக்ல போடுவேன்.


சீனா தானா ஐயா: சரிங்கம்மா. வேலையை ஆரம்பிங்கம்மா, முதல்ல பொங்கல் வைக்க போற இடத்தை சுத்தம் பண்ணுங்கம்மா.


ராஜராஜேஸ்வரி: ஐயா, இங்கதான் இது பொங்கல், இதுவே வட நாட்டுலலாம் மகர சக்ராந்திகை. அதுமட்டுமில்லாம ஒரிசாவுல கொணார்க் சூரிய பகவான் கோவில்ல பொங்கல் இப்படியெல்லாம் கொண்டாட மாட்டாங்க.


சீனா தானா ஐயா: அம்மா! உங்க ஸ்தல சுற்றுலா மேட்டரை அப்புறம் பேசிக்கலாம். ஏம்மா காணாமல் போன கனவுகள்” ராஜி, இங்க வாம்மா. நல்ல அழகா கோலம் போடும்மா.

ராஜி: ஐயா, கோலம் போடுவது எப்படி, கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள், கோலப்பொடி, கலர்பொடி வாங்கும்போது கவனிப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். 

சீனா தானா ஐயா: ஓக்கே.அதை பார்த்து யாரையாவது கோலம் போட சொல்றேன்.  ஏம்மா ”வானம் வெளித்த பின்னும், உப்பு மட சந்தி”ஹேமா! பொங்கல் அதுவுமா  நீ என்ன யோசனைல  இருக்கே? வாம்மா வந்து கோலம் போடு.


ஹேமா: நான் இங்க போடும் இதே கோலத்தையே அங்க போய் போட்டுக்கலாமா? இல்லை அங்க வேற கோலத்தை போடலாமான்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.


சீனா தானா ஐயா:  உன் அவஸ்தை உனக்கு. சரிம்மா ”காகித பூக்கள்”ஏஞ்சலின் பொங்கல் மேடை, சாமிக்கு படையல் போடும் இடத்தை கொஞ்சம் அலங்காரம் பண்ணும்மா. 

http://2.bp.blogspot.com/-sfkoOhIpsBE/TwQ47TAi2CI/AAAAAAAAAUE/87X6637ygAo/s1600/Bhogi+Pongal+festival.jpg


ஏஞ்சலின்: சரிங்க ஐயா, அசத்திடுறேன். அதுக்கு தேவையான மெட்டீரியல் சொல்றேன் குறிச்சுக்குறீங்களா?


சீனா தானா ஐயா: நீ குறிச்சு குடுத்து இனிமே வாங்கி வந்து நீ செஞ்சு அலங்காரம் பண்றதுக்குள்ள காணும் பொங்கலே வந்துடும். ஏம்மா ”ஷாதிகா” ஸாதிகா, மேனகா நீங்க ரெண்டுபெரும் ஏம்மா அடிச்சுக்குறிங்க.


ஷாதிகா: ஐயா,**** பிளாக்குல *** அக்கா பொங்கல் குழம்புல மிளகு சேர்க்க கூடாதுன்னு சொல்லியிருகாங்க. ஆனால், சசிகா மேனகா மிளகு போட்டே ஆகனும்ன்னு அடம் பிடிக்குறாங்க.


மேனகா: ஐயா, மிளகு போட்டால் ஜீரணத்துக்கு நல்லது. பொங்கல் டைம் என்பதால், கரும்பு சாப்பிட்டு வறட்டு இருமல் வரும் அதனால மிளகு சேர்த்துக்கிட்டால் இருமல் வராதுன்னு *** பிளாக்குல ***அக்கா சொல்லியிருக்காங்க. 

இன்னிக்கு என்னவோ மகளிர் அணிதான்  சொதப்பிட்டிங்க. ஆண்கள் அணி என்ன கூத்து பண்றாங்கன்னு போய் பார்க்குறேன்.


சீனா தானா ஐயா: ”நாஞ்சில் மனோ”மனோ ஒட்டடை அடிக்காம லேப்டாப்புல என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?

மனோ: சார் பஹ்ரைன் ஓட்டல்ல ஒருமுறை இதுப்போல பொங்கல் கொண்டாடி இருக்கோம். அப்போ கேரள சேச்சிகள்லாம்கூட கலந்துக்கிட்டாங்க. 

விக்கி: டேய் உன் சுய புராணத்தை நிறுத்துடா நாதாரி.

மனோ: நீ முதல்ல அடங்குடா இல்லாட்டி அருவா எடுத்து ஒரே போடு போட்டுடுவேன். ஐயா இந்த விக்கி தக்காளி நைட் அடிச்ச மப்பு தெளியாம, தண்ணிக்கு பதில் அந்த தண்ணியை ஊத்தி இடத்தை கழுவி சுத்தம் பண்ணும் கூத்தை கேளுங்க.

விக்கி: இவன் தான் இவ்வளவு நேரமும் பஹ்ரைன்ல பொங்கல் அன்னிக்கு கேரள சேச்சிகள் கூட ஆட்டம் போட்டத என்கிட்ட சொல்லி கடுப்பேத்திக்கிட்டு இருந்தான். 

சீனா தானா ஐயா:  ஐயோ ஐயோ ஏன்தான் ஆளாளுக்கு நல்ல நாள் அதுவுமா இப்படி அலப்பறையை குடுக்குறீங்களோ? ஏம்பா தமிழ்வாசி பிரகாஷ் வந்தே மாதரம் சசி, வீடு சுரேஷ் நீங்க மூணு பேரும் அப்படி என்ன அங்கே டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கிங்க. 

பிரகாஷ்: பொங்கல் நல்ல படியா பொங்கி வர மாதிரி javal ஒரு புரோகிராம் இருக்கு அது எப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் ஐயா,

சசிக்குமார்: பிரகாஷ் சொன்ன மாதிரி புரோகிராம் பண்ணினால் பன்கலின் ருசியும், நிறமும் மாறிடும் அபாயம் இருக்கு. அதுக்கு மாற்று வழி என்னன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம் 

சுரேஷ்: ஐயா, அதுக்கு javaவைவிட வேற ஒரு சாஃப்ட்வேர் போட்டு செய்தால் ருசி, நிறம் மாறாது. நம்பிக்கை இருந்தால் என் பிளாக்குல அது பற்றி ஒரு பதிவே போட்டிருக்கேன் ஐயா.

சீனா தானா ஐயா:  என்னது பொங்கல் வைக்க சாஃப்ட்வேரா? ஒருவேளை சமத்துவ பொங்கல் வைக்கலாம்ன்னு ஆசைப்பட்டது தப்போ? பானை வாங்க போன ”வசந்த மண்டபம்”மகேந்திரனும், ”ஆணிவேர்”சூர்யஜீவாவும் எங்கே? 

http://cafehindu.com/files/pongal_757052816.jpeg


மனோ: அதோ வராங்க ஐயா, ஆனால் வெறுங்கையோடத்தான் வராங்க. எலேய் பானை எங்கலேய்


மகேந்திரன்- அன்பு நிறை மனோ,

மனோ: நாசமா போச்சி, இப்போ உன் பிளாக் கமெண்டுன்னு நினைச்சியா? ஒழுங்கா பேசு.

மகேந்திரன்: நான் பானை வாங்க போன இடத்துல குயவன்கிட்ட சூர்யஜீவா சண்டை போட்டு பெரிய அடிதடியாகி இந்த ஏரியாவுல யாருக்கிட்டயுமே பானைவாங்க கூடாதுன்னு என்னை சூர்ய ஜீவா கூட்டிக்கிடு வந்துட்டாரு. 


சீனா தானா ஐயா:  என்ன ஆச்சு? மனோதான் கோவக்காரன் அருவா கத்திலாம் தூக்குறான்னு பார்த்தால் நீயுமா? என்ன ஆச்சுன்னு சொல்லு சூர்யா?

சூர்யஜீவா: ஐயா, நான் பாட்டுக்கு பானை வாங்கிட்டு இருந்தேன். அப்போ குயவன் கைல சின்னதா ஒரு கொப்பளம்.என்னன்னு கேட்டேன். அது என்னன்னு தெரியலை. அது சாதாரண கட்டி னுசொன்னான். அவனை தோண்டி துருவி விசாரித்ததுல பானை செய்ய தேவையான மண்ணு கூடங்குளத்துல இருந்துதான் வருதுன்னு சொன்னான். அதோட விளைவுதான் இது, நீ போய் இந்த லிங்குல பார்த்து தெரிஞ்சுக்கோன்னு சொன்னேன்.  நானே  பானை செஞ்சு அஞ்சுக்கும் பத்துக்கும் விக்குறேன் என்கிட்ட ஏது கம்ப்யூட்டரும் நெட்டும் என்ன நக்கல் பண்றியான்னு அந்த ஏரியாவே அடிக்க வந்துட்டுது. கூடங்குளத்துல இருந்து வந்த மண் என்பதால் ஏன் ரிஸ்க்குன்னு நான் பானையே வாங்காம வந்துட்டேன். 


சீனா தானா ஐயா: இன்னிக்கு பொங்கல் வச்ச மாதிரிதான் அரிசி, வெல்லம் வாங்க போன ”வேடந்தாங்கல்” கருணும் ”கவிதைவீதி” சௌந்தரும், “உணவு உலகம்: சங்கரலிங்கமும் இன்னும் காணோம். ஏம்பா “நல்ல நேர” சதீஷ் அவங்களுக்கு போன் போட்டு பாரு,

சதீஷ்: ஐயா இன்னிக்கு நவமி. அதனால் என் போனை நான் யூஸ் பண்றதில்லை.

சீனா தானா ஐயா:  சரி, யார்கிட்டயாவது செல்லை வாங்கி அவனுங்களுக்கு போன் போடு.

சதீஷ்: இப்போ குளிகை ஐயா, அதனால நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன்.

மனோ: அப்போ நீ...

விக்கி: நல்ல நாள் அதுவுமா, சதீஷை திட்டி ஏழரையை கூட்டாதே.

சௌந்தர்: போன்லாம் போடாதீங்க. நாங்களே வந்திட்டோம்.

சீனா தானா ஐயா:  ஏம்பா சௌந்தர்  இந்த அரிசி, வெல்லம், ஏலக்காய், நெய் வாங்கி வர உங்களுக்கு இவ்வளவு நேரமா?

கருண்: ஆபீசர் சாரலதான் லேட்.அவர்தான் எந்த பொருளை எடுத்தாலும் கலப்படமிருக்கா? சுத்தமானதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்து பார்த்து வாங்குனார். 

சௌந்தர்: கிராமத்து தோட்டத்துல விளைஞ்சு வரும் காய்கறிகள், கறிவேப்பிலை கொத்தமல்லி க்கு கூட தர சான்றிதழ் இருக்கான்னு கடைக்காரனை கேட்டு அவனை தலை கிறுகிறுக்க வைத்தாரே அந்த கொடுமை சொல்லேன்.

ஆபீசர்: நீ மட்டும் ஒழுங்கா? ஒரு போஸ்டரையும் விடாம பார்த்து, அது எப்போ ரிலீஸ் யார் நடிகர்கள், எந்த தியேட்டர்ன்னு பார்த்துக்கிட்டே மெதுவா நடந்து வந்தே.  இந்த கருணோ ஒரு பஸ்ஸை விடலை, கண்ணே மணியே, சக்கரமேன்னு கவிதை எழுத ஆரம்பிச்சுடுறான்.


கருண்: டேய் மாப்ள “ராஜபாட்ட” ராஜா, நீ  என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்கே.

ராஜா: சூர்யா, அஜீத், விஜய்லாம் எப்படி பொங்கல் வச்சாங்கன்னு நாளைக்கு ஃபேஸ்புக்குல வருமா? அது வச்சு எப்படி பதிவை தேத்தலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.


பிரகாஷ்: அடங்கோ, விஜய் பேரை சொல்லிட்டியா? இந்த பொங்கல் நல்லபடியா போன மாதிரிதான்.ஏண்டா மாப்பிள்ளை விஜய் பேரை சொன்னே?


மனோ: இங்க இம்புட்டு கலவரம் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த சிபி மூதேவி மட்டும் ஏன் மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கான்?
டேய் அண்ணா உனக்கென்னடா கவலை? ஏன் உம்முன்னு இருக்கே.

சிபி: இன்னிக்கு, தமிழ்ல 4 படம், இங்கிலீஷ் ல 2 படம், இந்தி ல 1 ஒரு படம்ன்னு ரிலீஸ்.

விக்கி:கில்மா படம்?

சிபி:கில்மா படம் ஏதும் ரிலீஸ் ஆகலை.

விக்கி: டேய் நாதாரி அதான் உன் கவலையா ங்கொய்யால 

சிபி: ஹி ஹி அதில்லை தம்பி.  இன்னிக்கு ரிலீசாகுற படத்தையெல்லாம் பார்க்க முடியாம உங்ககூட பொங்கல் கொண்டாட வேண்டியதா போச்சே அதான் என் கவலை.
http://www.vikatan.com/news/images/onam.jpg

எல்லாரும் கோரஸாக, என்னது எங்ககூட பொங்கல் கொண்டாடுறதுதான் உங்க கவலையா?ன்னு கரும்பு, விறகு கட்டைன்னு கைக்கு கிடைச்சதை தூக்கிக்கிட்டு அடிக்க ஓடி வர, சிபி அதிலிருந்து தப்பிக்க ஓடன்னு பொங்கல் இனிதே முடிந்தது.

Thursday, January 12, 2012

குறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக்கல் காமெடி டிஸ்கஷன்

http://tamilmovies.skynyxonline.com/myimages/actress/anjali/anjali.jpg

ஒரு நாள் காலை உணவு உலகம் சாரோட போன் அடிக்குது. தூக்கக்கலக்கத்தோடவே போன் எடுத்து பேசுறார்.

உணவு உலகம்: ஹலோ! யார் பேசுறது?
சிபி: சார், நான் சிபி செந்தில்குமார் பேசுறேன்.
 உணவு உலகம்: என்னப்பா! என்ன விஷயம்?
சிபி: சார், பொங்கல் லீவுல  நான் ஒரு குறும்படம் எடுக்க போறேன் சார். அதை உங்ககிட்ட சொல்லலாம்ன்னுதான் போன் பண்ணேன்.

உணவு உலகம்: அப்பிடியா!  ரொம்ப நல்ல விஷயம்தான் ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்பதான் கைக்கூடி இருக்கு. வாழ்த்துக்கள்.

சிபி: நன்றி சார்.
உணவு உலகம்: பணம்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா?
சிபி: பண்ணிட்ட்டேன். சம்பளத்துல மிச்சம் பிடிச்சு சீட்டு போட்டு 1 லட்சமும். மிச்சத்துக்கு ஆபீசுல  லோன் போட்டுக்கலாம்னு இருக்கேன் சார்.  

உணவு உலகம்: பணம் ஓக்கே. கதை?
சிபி: கதைலாம் கூட ரெடி...
சிபியை பேசவிடாமல் குறுக்கிட்ட ஆபிசர்
உணவு உலகம்: நீ எப்படி கதையை ரெடி பண்ணி இருப்பேன்னு எனக்கு தெரியும். குறும்படம் எடுக்க சொன்னால்..., எதாவது நடிகையை வச்சு குறும்பு படம் எடுத்தாலும் எடுப்பே. நீ ஒண்ணு பண்ணு. ஈரோடுல ஒரு கல்யாண மண்டபத்தை புக பண்ணு.
சிபி: கல்யாண மண்டபமா? எதுக்கு?
உணவு உலகம்: நான் நம்ம பதிவர்களையெல்லாம் கூட்டிக்கிட்டு ஈரோடு வந்துடுறேன். அங்க வச்சு கதை டிஸ்கஷன் வச்சுக்கலாம்.
சிபி: (இவரு நம்மளை வச்சு பதிவர் சந்திப்பு தேத்த்லாம்னு பார்க்குறாரோ) சரிங்க சார்.
உணவு உலகம்: எல்லா பதிவர்களும் வெவ்வேற இடத்துல இருந்து  வருவதால், சாப்பாடெல்லாம் சூப்பரா அரேஞ்ச் பண்ணிடு. மனோ ஆமைக்குஞ்சு வறுவல் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கான். அதை ரெடி பண்ணிடு. அப்பிடியே விக்கிக்கு பிடிச்ச பிராண்ட் சரக்குலாம் வாங்கி வச்சுடு.
சிபி: சரிங்க சார்.


மண்டபத்துல கசமுசான்னு ஒரே சத்தம். என்ன இங்க சத்தம்ன்னு உணவு ஆபிசர் சார் சத்தம் போடுறார்.
மனோ: இங்க பாருங்க சார், எல்லாரும் வேலைவெட்டி, புள்ளைகுட்டிலாம் விட்டுட்டு சிபிக்கு ஹெல்ப் பண்ணாலாம்ன்னு வந்தால், அவனை ஆளை காணோம் 
விக்கி: கில்மா படம் பார்க்க போயிருப்பானோ?
ஆபீசர்:சேச்சே அப்படியிருக்காது. புதுப்படம் எதாவது ரிலீஸாகியிருக்கோ?
சௌந்தர்: இல்லை சார்.
ஆபீசர்: உனக்கெப்படி தெரியும். எல்லா பயலுகளும் இப்போ விமர்சனம் போட ஆரம்பிச்சுட்டீங்களா? என் பொண்ணு கல்யாண வேலை முடியட்டும். அப்புறம் பெல்ட்டை கழட்டிட வேண்டியதுதான்.

டொக் டொக்

சிபி வந்துட்டான் போல. கதவு திறந்துதான் இருக்கு வா. உள்ள வா சிபி.
எலேய், இங்க நாங்கலாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம். நீ எங்கேடா போய் தொலைஞ்ச மூதேவி இது மனோ 

ஹி ஹி  பதிவு ஒண்ணு போட்டுட்டு வந்தேன்.அதான் லேட்டு.

ஆபீசர்: என்ன நடந்தாலும் காரியத்துலயே கண்ணா இருப்பியே. 
சரி சரி கதை டிஸ்கஷனை ஆரம்பிக்கலாம்.

மனோ: சார்,
 
ஆபீசர்: வெயிட், முதல்ல கருண், சௌந்தர், ராஜாலாம் கதையை சொல்லட்டும். என்ன இருந்தாலும் வாத்தியாருங்க. நம்மைவிட நிறைய விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும்

கருண்: கதை ஒரு பஸ்ஸுல ஆரம்பிக்குது. பஸ்ஸுல ஒரு காலேஜ் பையன், ஒரு பொண்ணை டாவடிக்குறான். 
சௌந்தர்: டேய் கருண்உன் சொந்த கதையை நிப்பாட்டு.
கருண்: அடப்பாவி சௌந்தர் இது ஒண்ணும் என் சொந்த கதை இல்லை. இப்படி ஏடாக்கூடமா சொல்லி பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்க விட்டுடாதே.

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/03/Anjali_Stills_004.jpg
சௌந்தர்: அப்பிடி வா வழிக்கு இனி பேருந்து, கடைக்கண்-ன்னு சொல்வியா?
ஆபீசர்: வாத்தியாருங்களாச்சே நம்மைவிட விஷயம் தெரியும்ன்னு பார்த்தால், நீங்க என்னடான்னா ஸ்கூல் பிள்ளைங்களை பார்த்து பார்த்து சின்ன பிள்ளைகளாட்டம் சண்டை போடுறீங்களா? இனி நான் சொல்றவங்க தான் வாயை திறக்கனும் மத்தவங்கள்லாம் அமைதியா இருக்கனும். சூர்யஜீவா நீ சொல்லு..,
சூர்யஜீவா:சார், கூடங்குளம் பிரச்சனை தான் இப்போ ஹாட் டாபிக் நாம அந்த சப்ஜெக்ட் எடுத்டுக்கலாம். 
சிபி கொஞ்சம் டெர்ரராகி... சார் கூடங்குளமா? அங்கெல்லாம் படம் எடுக்க விடமாட்டாங்களே.

சூர்யஜீவா:  கதை சொல்ல போற நான் தமிழன், கதை ஓக்கே பண்ணும் நம்ம பதிவுலக சகாக்கள் தமிழர்கள், படம் எடுக்க போற நீங்க தமிழன் அப்புறம் எப்படி படம் எடுக்க விட மாட்டாங்க. ஏற்கனவே சீனாவுல இருக்குற அணு உலையில் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்த்திருக்காங்க. அதோட லிங்க் வேணும்ன்னா நான் தரவா? கோர்ட்ல கேஸ் போடலாமா?

சிபி: சார், அதெல்லாம் லேட்டாகும். ஆபீசுல 3 நாள்தான் லீவ் தந்திருக்காங்க அதுக்குள்ள முடிக்கனும் சார்.
சூர்ய ஜீவா: அப்பிடின்னா, செட் போட்டுக்கலாம் சிபி
சிபி: என்னது சார்ட் ஃபிலிம்க்கு அணு உலை போல செட்டா?னு பரிதாபமாக விழிக்க..,
மனோ: சார் என்கிட்ட ஒரு கதை இருக்கு நான் சொல்லவா?
ஆபீசர்: ம்ம் சொல்லு பார்க்கலாம்.
மனோ: ஹீரோவுக்கு சொந்த ஊர் திருப்பாச்சி. அவரு அருவா செய்ற வீட்டுல பிள்ளையா பொறந்திருக்காரு. அவருக்கு ஒரு தங்கச்சி..தங்கச்சியை பஹ்ரைன்ல கட்டி குடுக்குறார். தன் தங்கச்சியை பார்க்க பஹ்ரைன் வரும் ஹீரோ எங்க ஹோட்டல்ல தங்கறார்...
சிபி: டேய் தம்பி இது ஹீரோவா விஜய்  நடிச்ச  திருப்பாச்சி படத்தோட கதை போல தெரியுது.
மனோ: முழுசா சொல்றதுக்குள்ள நீ எதுக்குடா வாயை திறக்குறே. மூதேவி அடங்குடா.
விக்கி: சார் இவனுங்க ரெண்டு பேரும் அடிச்சுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. இனி நிறுத்த யாராலும் முடியாது.

ஆபீசர்: அடப்பாவி திருப்பாச்சியை சுட்டு கதையை சொன்னால் எங்களுக்கு தெரியாதா? நீ போய் அந்த ஆமைக்குஞ்சு கறியை சாப்பிடு. விக்கி நீ சொல்லு..,
 விக்கி: ஒரு பையனும் பொண்ணும் கலயாணம் கட்டிக்கிடாமல் ஒரே வீடுல வாழுறாங்க. ஆனால் அவங்க லவ்வர் இல்லை.
சிபி: அப்ப அண்ணன் தங்கச்சியா?
விக்கி: இல்லை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHcygp7d1ZA0ehhqyk95HCAAiaYnTTrif-EFqV_12HRciLR8yc0HIQo5us-QFVMlIXP3aFn5I05Dk6GgdXlRUNiPJkFZ5nwQida9m-b0A8yvZb5EdQB3ayBYp16nWuE5rpFUwjHfMPJ35V/s1600/parvathi-melton-hot-stills+(2).jpg
சிபி: ஃப்ரெண்ட்சா
விக்கி : இல்லை
சிபி: அடங்கோ, ஏண்டா நாயே இப்படி போட்டு குழப்புறே. அண்ணன் தங்கச்சி இல்லை, லவ்வர் இல்லை, புருசன் பொண்டட்டி இல்லை, அட ஃப்ரெண்ட்சும் இல்லை அப்புறம் எப்படி ஒண்ணா இருப்பாங்க. எந்த ஊருலயும் இந்த அநியாயம் நடக்காதே.
விக்கி: சமீபத்துல நான் ஆப்பிரிக்கா போனேனே அப்போ அங்கே ஒரு பழங்குடி இனத்தவர்கள்ல ஒரு பிரிவினர் இப்படித்தான் இருக்காங்க.

சிபி: சார், விக்கி என் செலவுல ஆப்பிரிக்க சுத்தி பார்க்க முடிவு பண்ணிட்டான் போல.படம் எடுக்க  ஆப்பிரிக்கா கூட்டி போக சொன்னாலும் சொல்வான். இவனை கதை சொல்ல வேணாம்ன்னு சொல்லுங்க சார். இது மயக்கம் என்ன கதையை உல்டா செஞ்சது போலவே இருக்கு

ஆபீசர்: விக்கி சிபி, சின்ன பட்ஜெட்ல சாட் ஃபிலிம்தான் எடுக்க போறான். அது பெரிய அளவுல பேசப்பட்டால், சினிமா எடுக்க பெரிய பெரிய ப்ரொடியூசர் வருவாங்க. அப்போ உன் ஆப்பிரிக்கா கதையை எடுக்கலாம். இப்போ நீ போய் உன் ஃபேவரிட் நெப்போலியனை உள்ளே தள்ளு.

பிரகாஷ் நீ சொல்லு இப்போ..,

தமிழ்வாசி பிரகாஷ்: சார் ஹீரோ எஞ்சினியர் காலேஜ் ஸ்டூடண்ட், ஹீரோயினும் அதே காலேஜ்லதான் படிக்குறாங்க. ரெண்டு பேரும் பார்க்க மூலைல தனியா உக்காந்து பேசிக்கிட்டு இருக்காங்க. 
சிபி: நீங்க ஒருத்தர்தான் நல்ல கதையா சொல்றீங்க. ரெண்டு பேருக்கும் லவ்தானே.கிஸ் பண்ணிக்குறாங்களா?மேட்டர் நடக்குமா? சீன் தேறுமா?

தமிழ்வாசி பிரகாஷ்:  ஐயையோ அதெல்லாம் இல்லை சிபி சார், ரெண்டுபேரும் CN++, JAVA, PGDCA இதுல எது படிக்கலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

சிபி: அடிங்கொய்யால அப்புறம் என்ன இதுக்கோசரம் பார்க் மூலையில உக்காந்துக்கிட்டு பேசனும்
தமிழ்வாசி பிரகாஷ்: இப்படிலாம் கோவப்பட்டா அப்புறம் நான் கதை சொல்ல மாட்டேன்.
சிபி: நீ ஆணியே புடுங்க வேணாம் கிளம்பு ராசா.

மகேந்திரன்: சார் நான் ஒரு கதை சொல்றேன்.
ஆபீசர்: சொல்லுங்க,
மகேந்திரன்: ஒரு வயல்ல பெண்கள் எல்லாரும் நடவு நட்டுக்கிட்டு இருக்காங்க
சிபி: மொத்தம் எத்தனை பொண்ணுங்க. 
மனோ: ஆபிசர் சார், இவன் படம் எடுக்க போறானா இல்லை சைட்டடிக்க போறானா? மொத்தம் எத்தனை பொண்ணுங்கன்னு ஜொள் வடிக்க கேட்குறான்.
http://www.glamsham.com/movies/scoops/09/aug/united-six.jpg
விக்கி: மகேந்திரன் சொல்லும் கதை மட்டும் கிளிக்கானால் நட்றதுலாம் கிழவிங்கன்னு கதையை சேஞ்ச் பண்ணிக்கனும் சார்.
ஆபீசர்: ஓக்கே. எல்லாரும் அமைதியா இருங்க நீங்க சொல்லுங்க மகேந்திரன். 

 மகேந்திரன்: அப்போ ஒரு நூறு மாட்டுவண்டி வருது. கூடவே உருமி மேள சத்தமும், நூறு பெண்கள் அந்த மாட்டு வண்டியில் குலவை போட்டுக்கிட்டே வராங்க.  


ஆபீசர்: இருங்க மகேந்திரன், தம்பி ராஜா!
ராஜபாட்டை ராஜா: தீவிரமா எதையோ யோசித்துக்கிட்டு இருந்தவர், ஆபீசர் குரல் கேட்டு திடுக்கிட்டு
ராஜா: என்ன சார்?
ஆபீசர்:ரொம்ப நேரமா யோசிச்சுக்கிட்டு இருக்கியே தவிர, வாயை திறக்க மாட்டேங்குறியே. நாம சிபிக்காக கதை டிஸ்கசனுக்காக வந்திருக்கோம். நினைவிருக்கா உனக்கு?

ராஜா: இருக்கு சார்.
ஆபீசர்: அப்போ உன் கருத்தை சொல்லு.
ராஜா: கதை எதுவானாலும் செலக்ட் பண்ணிக்கோங்க ஆனால் ஹீரோவா யாரை போடப்போறீங்க ஆபீசர் சார்?

ஆபீசர்: கதை சொல்லாட்டி பரவாயில்லை. ஹீரோ யாருன்னு நீயே சொல்லேன்.
ராஜா: அஜீத் கிட்ட கேளுங்க அவர் மறுத்தா விஜய், விஜய் கால்ஷீட் கிடைக்கலைன்னா சூர்யாவை கேளுங்க. சூர்யாவும் ஒத்துக்கலைன்னா நானே ஹீரோவா நடிச்சுடுறேனே.
ஆபீசர்: டேய் சிபி நில்லு ஓடாதே. 
மனோ: டேய் அண்ணா ஓடாதே. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்டா நாதாரி.

விக்கி: அடிங்கொய்யால வறுத்த கறிக்கும், குடிச்ச சரக்குக்கும் யாருடா துட்டு தரது நில்லுடா ங்கொய்யால.
 
சிபி: நான் ஏதோ லைஃப்ல முன்னேறலாம்னு ஷார்ட் பிலிம் எடுக்கலாம்ன்னு யோசிச்சு, நல்ல ஐடியாலாம் தருவீங்கன்னு உங்களை கூப்பிட்டால் என் உயிரையாடா எடுக்குறீங்க. நான் படமே எடுக்கலை போங்கடா நீங்களும் உங்க டிஸ்கஷனும்

Sunday, January 01, 2012

பிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பனை

இன்னிக்கு புத்தாண்டு. எல்லாரும் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு, சிகரெட்
புடிக்குறதை விட்டுடுறேன், தண்ணி அடிக்கமாட்டேன், அரியர்ஸை கிளியர்
பண்றேன்ன்னு  புத்தாண்டு சபதம் எடுத்துக்குவோம். அதுப்போல நம்ம பிரபல
பதிவர்கள்லாம் என்னென்ன  புத்தாண்டு சபதம் எடுக்க போறாங்கன்னு நம்ம சிபிஐ ல
இருந்து வந்த ரிப்போர்ட்...,


1. கவிதைவீதி சௌந்தர்: காலைல 9 மணீக்காட்சி பார்த்து 12 மணீக்கே விமர்சனம் போட்றனும்


2. கருண்: இந்த வருஷமாவது பேருந்து கவிதை  எழுதாமல் இருக்கனும்.

3. மனோ: இந்த வருசமாவது அருவாளுக்கு வேலை வைக்காமல் பிளாக்குல இருக்குற அத்தன பயலும் அடங்கனும், சிபியை கலாய்க்காம ஒரு பதிவாவது போடனும். சிபி கண்ணாடி போடாம இருக்கும்போது ஒரு போட்டோவாவது எடுத்துடனும்.


4. பக்கி சாரி விக்கி: மிலிட்டரில இருந்து வந்தபின் மிலிட்டரி சரக்கு கிடைக்க
மாட்டேங்குது. நிறைய சரக்கு கிடைக்கனும்.எங்க ஆபிசுல  புதுசா 4 இல்ல ஐந்து ஸ்டெனோ  சேரனும். யூடுயூப்ல நிறைய விடியோஸ் அப்லோட் பண்ணனும். அப்பதானே நான் கிச்சளிக்காஸ் போட்டு பதிவை தேத்த முடியும்.
தமிழ்வாசி : எனக்கு விடுகதை சொன்ன, எங்க ஆபீஸ் வாசலில் எலந்த பழம் விக்குற பாட்டி ஊருக்கு போயிடுச்சு. இப்போ பதிவுல  போட விடுகதை இல்லாமல் தவிக்குறேன். வேற எதாவது பார்ட்டி சீ பாட்டி எலந்த பழம் விக்க வரணும்.

5. ராஜபாட்டை: விஜய், அஜீத், சூர்யாலாம் நிறைய படங்கள் நடிக்கனும்.
(சாமியே கொஞ்சம் ஜெர்க்காகி பார்க்க..)
நீ பயப்படாத சாமி. உன்னை அவங்க படம்லாம் பார்ர்க்க கூட்டிகிட்டு போக
மாட்டேன். அவங்க படம்லாம் நிறைய ரிலீசனால் தான் அந்த போட்டோலாம் வச்சு ஃபேஸ்புக்ல கலாய்ப்பங்க. அதை வச்சு நான் பதிவை தேத்துவேன்.



6. ஐ.ரா.ரமேஷ்பாபு: நான் படிச்ச, கேட்ட அத்தனை நீதிக் கதைகளயும் பதிவா போட்டாச்சு. புதுசா எவனாவது எழுதி குடுத்தால் நல்லா இருக்கும்.

7. சிரிப்புபோலீஸ்: 20வயசு பையன்கூட ஃபிகர் கூட சுத்துறான். ஆனால் அழகுலயும், அறிவுலயும்  சிறந்த!? எனக்கு ஃபிகரும் அமைய மாட்டேங்குது. வீட்டுல பார்க்குற பொண்ணும் செட்டாக மாட்டேங்குது. இந்த வருசமாவது ஃபிகர் இல்லாட்டி கல்யாணமாவது செட்டாகனும்.

8. வெங்கட்: என் பிளாக்குக்கு வரவன்ல சீன் படம் பார்க்குறவன், பான் பராக் மெல்லுறவன், தம்மு, தண்ணிஅடிக்குறவன் எவன்னு ஆராய்ச்சி பண்ணி அவன் கமெண்டை அப்ரூவல் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்துடுது. சோ, டீசண்டானவன் எவன், இண்டீசண்டானவன்னு எவன் ந்னு கண்டுபிடிக்குறமாதிரி சாஃப்ட்வேர் வந்தா நல்லா இருக்கும். அப்புறம், புதுசு புதுசா  எஸ்.எம்.எஸ் வந்துக்கிட்டே இருக்கனும் அப்போதானே அதை வெச்சு என்னால பதிவை தேத்த முடியும்.

9. நிரூபன்: இந்த வருசம் எல்லா பிளாக்கர்சும் நிறைய தப்பு பண்ணனும். அப்போதானே அதை வச்சு நான் பதிவு தேத்த முடியும்.

10. ராஜராஜேஸ்வரி: இருக்குற கோவில்கள் பற்றிலாம் எழுதி முடிச்சுட்டேன். புதுசா யாராவது கோவில் கட்டினா நல்லா இருக்கும். அப்புறம் போட்டோ எடுத்து எடுத்து என் கேமராவே ரிப்பேரா போயிட்டுது. அதனால என் கணவர் புது கேமரா வாங்கி தந்தால் நல்லா இருக்கும்

11. சித்ரா: அமெரிக்கா பத்தி பதிவெழுதி பதிவெழுதி எல்லாரையும் போரடிக்க வச்சுட்டேன். அதனால எனக்கு வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கி குடுத்துடு. அப்போதானே அங்கே போய் அந்த நாட்டை பத்தி எழுத முடியும்.

12 . ஹேமா-   2 பிளாக்ல ஏதோ ஒண்ணுல தான் அதிகம் சைன் பண்ன முடியுது, 2012ல 2 பிளாக்லயும் ஒரே மேட்டரை மாத்தி மாத்தி போட்டுடனும்..


Friday, December 16, 2011

பிரபல பதிவர்கள் சுயம்வரத்தில் செய்த சலம்பல்கள் காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgELqxKulIY4VtpcbADf6Q13TMIc_sVVAku_60QkuVkFt5RCJRsPgk5qprDm9PTHTYLooxGEZ_WCvqKQmle7Xt20h1VFWZFxrQlW3GRSTJSXkaPLBd9ZYI-JQcUqHFMhg6SIq2bUAv7momg/s1600/Amala+Paul+%252813%2529.jpg 

நேத்து டிவில படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது படத்துல ஒரு  சீன்(அட,எல்லாரும் ஏன்ப்பா டென்ஷன் ஆகுறீங்க. இது “அந்த சீன்இல்லை). மாட்டை அடக்குனாத்தான் பொண்ணு தருவேன் ன்னு மாமனாரா நடிச்சவர் வசனம் பேசிக்கிட்டு இருக்குற சீன்.


. எனக்கு அப்போதான் ஒரு ஐடியா ..நம்ம பதிவர்கள்லாம் பொண்ணு பார்க்க போகும்போது மாமனார் இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருந்தால் நம்ம பதிவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்குமா?ன்னு டவுட்டு வந்துடுச்சு..,
பொண்ணு ரெடி, மாடு ரெடி, வாங்க எல்லாரும் கிரவுண்டுக்கு போவோம்...

,
1. முதல்ல நம்ம தம்பி லேப்டாப் மனோ, 

ஒரு கையில லேப்டாப், இன்னொரு கையில கத்தி, பிளேடு, அரிவாளோடு மாட்டை அடக்க போறார்.

 பொண்ணு: ஹலோ! ஒரு நிமிஷம். மாடு பிடிக்குறதுக்கு  கையில லேப்டாப் எதுக்கு?

மனோ: லேப்டாப் இல்லைனா என்னை யாரும் மனோன்னு ஒத்துக்கமாட்டாங்கம்மா.

பொண்ணு: சரி, கத்தி, அறுவா, பிளேடுலாம் எதுக்கு? 


மனோ - இதை வச்சுதாம்மா பிளாக்குல இருக்குறவனுங்களை அடக்குறேன். அதேப்போல மாட்டையும் அடக்கிடுவேன்.

மாமனார்: தம்பி,கத்தி, பிளேடு, அரிவாள்லாம் இல்லாம வெறுங்கையால மாட்டை அடக்குங்க.

,மனோ: என்னாது, வெறுங்கையால மாட்டை அடக்குறதா? பிள்ளைப்பூச்சி போல இருக்கறானே சிபி, அவனையே நான் இதல்லாம் வச்சுதான் அடக்குவேன். இதெல்லாம் இல்லாட்டி எனக்கு வீரமே பொங்கி வராதே. எலேய், உன் பொண்ணை நீயே வச்சுக்க. இங்க வேஸ்ட்  பண்ண நேரத்துல எதாவது பிரபலத்தை பேட்டியோ இல்லை முல்லை பெரியாறு அணை பத்தி ஒரு போஸ்ட் ரெடி பண்ணி பிளாக்குல போட்டு நான் கும்மியடிச்சு பொழுதை போக்கியிருக்கலாம். 


2. அடுத்து பக்கி சாரி விக்கி தக்காளி கேமரா,மாடு, துப்பாக்கியோடு களத்துக்கு வரார்.

மாமனார்: தம்பி, தம்பி மாடுல்லாம் எதுக்கு? அதான் இங்கனயே ஒரு மாடு இருக்கே.

விக்கி: நான் என் சொந்த மாட்டைதான் அடக்குவேன். அடுத்தவன் மாட்டை அடக்குற அளவுக்கு நான் மானங்கெட்டவனில்லை. எனக்கு சூடு சுரணை இருக்கு.நான் மானஸ்தன்...

மாமனார்: ம்ஹூம் தம்பி ,இது ஆவறதுக்கில்லை 

பொண்ணு: மாடுக்கு சொன்ன ரீசன் ஓக்கே. துப்பாக்கி எதுக்கு?

விக்கி: நான் இந்திய ராணுவத்துல இருந்தவன் ,எல்லாரும் நினைக்கற மாதிரி நாட்டுப்பற்றுக்காக மிலிட்ரில சேரலை, மிலிட்ரி சரக்கு டெயிலி குடிக்கறதுக்ககவே ராணுவத்துல சேர்ந்தேன்,அதனால எனக்கு துப்பாக்கியில சண்டை போட்டுதான் பழக்கம். இப்ப கூட நான் ஆப்பிரிக்கா போய் வந்தேன். அங்கயும் மாட்டை அடக்க துப்பாக்கிதான் யூஸ் பண்றாங்க.

பொண்ணு: கேமரா எதுக்கு?

விக்கி: மாட்டை அடக்குறதை வீடியோ எடுத்துக்கிட்டால், இதை வச்சு கிச்சளிக்காஸ் போட்டு பதிவை தேத்துவேன். இப்படித்தான் இனி நான் எல்லாத்தையும் வீடியோ எடுத்து பதிவா தேத்த போறேன் ,இனி ஒரு பயலும் என்னை சொந்தமா வீடியோ போட்டியான்னு கேட்க முடியாது.

பொண்ணும் மாமனாரும்: என்னாது இனி நடக்க போறதெல்லாம் வீடியோ எடுத்து போடப்போறியா? கல்யாண முஹூர்த்தத்தை வீடியோ எடுத்தா பரவால்ல, சாந்தி முகூர்த்தத்தை வீடியோ எடுத்தா?  நீ ஆணியே புடுங்க வேணாம். கிளம்பு ராசா.


3. அடுத்து தமிழ்வாசி பிரகாஷ் கையில, பேடு நோட்டு, பென்னோடு வரார்

பொண்ணு: (வரவனுலாம் கையில எதாவது எடுத்து கிட்டு வரானே). 

 எதுக்கு இந்த பேடு, நோட்டு,பென்?
பிரகாஷ்: அதுவாம்மா, மாடு பிடிக்குறதுல எனக்கு கிடைக்கும் எக்ஸ்பீரியன்ஸ வச்சு  பதிவு போட்டேன்னா வருங்காலத்துல மாட்டை அடக்குறவங்களுக்கு யூஸ் ஆகுமே. அதான்.
பொண்ணு: நல்ல எண்ணம்தான்..
\
மாட்டுக்கிட்ட போய்.. 
பிரகாஷ்: எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
பொண்ணு: யோவ் மாட்டுக்கிட்ட போய் ஏன்யா பழமொழிலாம் சொல்லிக்கிட்டு இருக்கே.
பிரகாஷ்: எனக்கு பழமொழி சொன்னாதான் அந்த காரியம் ஜெயமாகும்னு நம்பிக்கை.
மாமனார்: நாசமா போச்சு.
பிரகாஷ்: நான் ஒரு விடுகதை சொல்றேன். அதுக்கு பதில் சொன்னா மாடு ஜெயிச்ச மாதிரி, பதில் சொல்லலைன்னா நான் ஜெயிச்ச மாதிரி எப்பிடி டீலிங்க.
மாமனார்: இப்படியே நீ விடுகதை போட்டுக்கிட்டிருந்தால் என் பொண்ணு வாழ்க்கை வெளங்குன மாதிரிதான். நீ ஆளை விடு ராசா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUhINJGAdrJGa5WEJUjRm2HCdmvD83h-VCyru6VP66BxeSmjwY7XBcn9M-9CRsVq3z3EbwX1Gabpcz-G_1ZoC_Zs3-ynRc9AXiTqzGgxT0G6PpkN5y3Yl75UReiIF7dKFCrErHp8LLo_3G/s1600/Anushka-12.jpg

4. அடுத்து சூர்ய ஜீவா வரார்..., வந்தவர் நேரா மாட்டை அடக்க போனவர், திரும்பி வந்துடுறார்
மாமனார்: என்னப்பா, மாட்டை அடக்காம திரும்ப வந்துட்டே.
சூர்ய ஜீவா: கூடங்குளத்துல அணு மின் நிலைய பிரச்சனையும், முல்லை பெரியார் அண பிரச்சனையும் தீராம இரண்டு தரப்பிலும் அடிச்சு குத்திக்குறானுங்க.
மாமனார்: அதுக்கு?
சூர்ய ஜீவா: கோர்ட்டு, கேசுன்னு போய் பிரச்சனையை இழுக்காம இதுப்போல ஒரு போட்டி வச்சால், ஈசியா முடிஞ்சு போயிடுமே. இந்த யோசனையை நான் பிரதமர், முதல்வர், கவர்னருக்குலாம் லெட்டர் அனுப்பிச்சுட்டு வரேன். இந்த பிரச்சனைலாம் ஓய்ஞ்சாதான் கல்யாணம்.
மாமனார்: கடல்ல அலை எப்போ ஓயுறது? நாம எப்போ தலை முழுகுறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

5. அடுத்து ஐ.ரா. ரமேஷ்பாபு
 
பொண்ணு: வேகமா வரானே இவனாவது மாட்டை அடக்குவானா?
மாமனார்: தெரியலியேம்மா.
ஐ.ரா ரமேஷ்பாபு மாட்டுக்கிட்ட போய்..

..,
ஒரு காட்டுல 4 மாடுங்க ஃப்ரெண்டா இருந்துச்சாம். அப்போ அந்த வழியா பசியோட வந்த சிங்கம் அதுங்களை வேட்டையாட அதுங்க மேல பாய்ஞ்சுச்சாம்.....
மாமனார்: ஐயையோ மாட்டுக்கிட்ட ஏம்பா கதை சொல்லிக்கிட்டு இருக்கே
.
ஐ.ரா ரமேஷ்பாபு: இல்ல நான் எப்பவுமே நீதிக்கதைகள் சொல்லுவேன். அதன் மூலமாதான் என் காரியத்தை நான் சாதிச்சுக்குவேன். அப்புறம் ஒரு லொள்ளு ஒண்ணு சொல்வேன்.
பொண்ணு: அப்பா, இவன் என்னை கதை சொல்லியே சாவடிப்பான் போல இவனை போகச்சொல்லுப்பா.

6. அடுத்து கோகுலத்தில் சூரியன் வெங்கட்:
வந்தவர் நேரா பொண்ணோட அப்பாக்கிட்ட போய்...,
வெங்கட்: இந்த மாட்டை இதுக்கு முன்னாடி யாருலாம் அடக்க வந்தாங்கன்னு எனக்கு லிஸ்ட் வேணும்.
மாமனார்: எதுக்கு தம்பி, 
வெங்கட் - இல்லை நான் ஒரு கவுரவமான , கண்ணியமான பதிவர். எனக்கு முன்னாடி இந்த மாட்டை அடக்க வந்தவங்க இந்த மாட்டை தொட்டிருப்பாங்க. அப்படி தொட்டவங்கள்ல கில்மா படம் பார்க்குறவங்க, தண்ணி அடிக்குறவன், பான்பராக் மெல்லுறவன் இருந்து அவன் அந்த மாட்டை தொட்டு நானும் அந்த மாட்டை தொட்டால் என் கவுரவம் என்னாகுறது.அதான் கேட்குறேன்.

பொண்ணு: அப்பா இவனை கட்டிக்கிட்டால், வீட்டுக்கு வரவன், கறிகாய் விக்குறவன், பால்காரன், சிலிண்டர்காரன் ஹிஸ்டரிலாம் கேட்டே என்னை கொண்ணுடுவான். அதனால இவனும் வேணாம்பா,

7.  அடுத்து நல்ல நேரம் சதீஷ்: 
மாட்டை அடக்க வந்தவர், மாட்டுக்கிட்ட போகாமல் நேரா பொண்ணோட அப்பாக்கிட்ட...,
நல்ல நேரம் சதீஷ்: சார், இந்த மாட்டோட ஜாதகம் தந்தால் நல்லா இருக்கும்..,
மாமனார்: என்னது மாட்டுக்கு ஜாதகமா?! அதெல்லாம் இல்லை தம்பி.
 நல்ல நேரம் சதீஷ்: சரிங்க, மாடு பொறந்த நேரம், இடம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்..,
பொண்ணு கடுப்பாகி, யோவ் லூசாய்யா நீ? மாடு எங்க பொறாந்துச்சு, டைம் என்ன்ன்னு கேட்டுக்கிட்டு இருக்கே. விட்டா அதுக்கு யார் பிரசவம் பார்த்தாங்கன்னு கூட கேட்பே போல இருக்கே. ஆமாம், அதெல்லாம் உனக்கெதுக்கு  இப்போ?
நல்ல நேரம் சதீஷ்: அது மாட்டோட ராசியும், என் ராசியும் ஒத்து போகுதான்னு பார்க்க.
பொண்ணு: புரியலையே.
 நல்ல நேரம் சதீஷ்: மாட்டோட ராசியும், என் ராசியும் ஒத்துவந்துச்சுன்னா நான் ஜெயிச்சுடுவேன். இல்லாட்டி அது என் விலாவில் குத்தி அது ஜெயிச்சுடுமே அதுக்குதான் ஜாதகம் பார்க்கனும்ன்னு சொல்றேன்.
பொண்ணு: நீ ஜாதகத்தையே பார்த்துக்கிட்டு இருந்தால் எனக்கு கல்யாணம் ஆனமாதிரிதான். நீயும் கெளம்பு ராசா. 

8. சிரிப்பு போலீஸ் ரமேஷ்:
நீயும் ரொம்ப நாளா பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கியே, எந்த பொண்ணும் செட்டாகலியே. பேசாம அந்த மாட்டை அடக்குனா அந்த பொண்ணை உனக்கு கல்யாணம் நடந்துடும்னு பேசி சரிக்கட்டி அவன் ஃப்ரெண்டுங்க கிரவுண்டுக்கு கூட்டிக்கிட்டு வராங்க. வந்ததும் மாட்டை பார்த்துட்டு ஓன்னு அழ ஆரம்பிச்சுடுறாரு
பொண்ணு: மாட்டை அடக்க போயிருந்தாலாவது அடிகிடி பட்டிருக்கும். அப்போ வலியில அழுவுறது சரி. இப்போ ஏன் அழுவுறீங்க.
ரமேஷ்: அந்த மாட்டை பாரு எம்மாம்பெருசாஇருக்கு. என்னையும் பாரு நான் எப்படி இருக்கேன். இந்த மாட்டை அடக்குறது. ஒட்டகத்தை புடிக்குறதுலாம் என்னால முடியுமா? அதான் அழறேன்.
பொண்ணு: அதுக்கா அழுவுறீங்க. சரி நான் வேணும்னா அப்பாக்கிட்ட பேசி 1 மாசம் அவகாசம் வாங்கி தரேன். அதுக்குள்ள நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கிட்டு. மாட்டை அடக்க வாங்க. என்ன நான் சொல்றது சரியா?
இதை கேட்டவுடன் மீண்டும் ஓன்னு அழ ஆரம்பிக்குறார்.


பொண்ணு ரொம்ப கடுப்பாகி- இப்போ ஏன்யா அழுகுறே.
ரமேஷ்: எனக்கு சொந்த காசுல சாப்பிட்டால் உடம்புல ஒட்டாதே. ஒரு மாசம் யார் ஓசி சாப்பாடு வாங்கி தருவா. எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது போல
பொண்ணு????!!!!!!


- தொடரும் 


http://www.funrahi.com/photos/tollywood/rwx/iniya-tamil-actress-hot-photoshoot-july-25-2011-006.jpg