Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Wednesday, July 18, 2012

மூன்றாம் வருடத் துவக்கம் - அட்ராசக்க -டாப் 6 தமிழ் பிளாக்ஸ்

http://www.thedipaar.com/pictures/resize_20110322194501.jpg 

2 வருடங்கள் ஓடிடுச்சு.. அட்ராசக்க வலைப்பூ ஆரம்பிச்சு. ஒவ்வொரு பிறந்த நாள் அன்னைக்கும் தமிழன் என்ன செய்வான்னா ஏதாவது சபதம் எடுப்பான், அப்புறம் மறந்துடுவான்..அந்த மாதிரி இந்த 3 வது பிறந்த நாள் அன்னைக்கும் ஏதாவது செய்யனுமே.. அதனால என்ன பண்ணப்போறோம்னா முதல்ல அட்ரா சக்க வலைப்பூபற்றி, அப்புறம் தமிழ் வலை உலகின் டாப் 6 பிளாக்கர்ஸ் யார் - ஒரு பார்வை, அப்புறம் நன்றி நவிலல்..


முதல் வருடம் முடிந்த போது அட்ராசக்க ஸ்டேட்டஸ் -640 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 89) ,  643 ஃபாலோயர்ஸ் ,10,80,000 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 49,000 & ட்விட்டர்ல 3290 ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 655.


2வது வருடம் நேத்தோட முடியுது. 1532 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 289) ,  1249 ஃபாலோயர்ஸ் 27,58,734 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 71,886 & ட்விட்டர்ல 26,048  ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 3105, இண்ட்லி ஃபாலோயர்ஸ் 282



இதுல ஃபாலோயர்ஸ் வளர்ச்சி பார்த்தா முதல் வருடத்தை விட கம்மிதான்.. டபுள் ஆகலை.. மற்ற பதிவர்கள் எல்லாம் டபுள் பண்ணிடறாங்க.. நான் பண்ண முடியலை.. அலெக்சா ரேங்க்ல பின்னால போய்ட்டேன். காரணம்  பிளாக்ஸ்பாட் டாட் இன் என கூகுள் மாற்றியதால் 3 மாசம் வேஸ்ட் ஆகிடுச்சு.. எப்படின்னா டொமைன் வாங்கினது மார்ச் 2012ல.. அப்போ அலெக்சா ரேங்க் 44,000 ல இருந்து அதல பாதாளத்துக்கு போயிடுச்சு. 50 லட்சம் ரேங்க்.. அலெக்சா ரேங்க் என்பது வலை உலகில் உலக அளவில் அந்த கம்ப்பெனி தரும் ரேங்க்.. எந்த அளவு கம்மியா இருக்கோ அந்த அளவு வளர்ந்துட்டு வர்றோம்னு அர்த்தம்.இன்னும் நல்லா உழைக்கனும்.. 


என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை 

1. காப்பி பேஸ்ட் பதிவுகள் 

2. நடிகைகள்ன் கிளாமர் ஃபோட்டோஸ் போடறேன்

3. ராமநாராயணன் படம் மாதிரி கச கசன்னு போஸ்ட் போட்டுட்டே இருக்கேன்

4. விஜய்யை அதிகமா ஓட்டறேன், அஜித்க்கு சப்போர்ட் பண்றேன்

5. மற்ற பதிவுகளுக்கு முன்போல் வருவதில்லை

6. ட்விட்டர்ல ஓவரா மொக்கை போடறேன்,அதையே ஒரு போஸ்ட்டா தேத்திடறேன்


7. மற்றவர்கள் யாரும் காப்பி பேஸ்ட் பண்ணாத மாதிரி லாக் பண்ணி வெச்சிருக்கேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibVf59Nf2pHoT2oIL-IX1CGIQpoSkr3N2YZXXv9SUweX44lBVWHpJCJXkAYJEcGppis8bbsDU5G62i9HUHRe6iHceaa0I2-XIWXrviwhpsk1LPTOOmVCtMQ_NBOq98jW9O9K30Rqc-ew9S/s1600/Polyresin_Indian_God_Lord_Krishna.jpg

விளக்கங்கள்


1. நமக்குப்பிடிச்ச ஒரு படம் ரிலீஸ் ஆகுது, ஒரு நல்ல நாவல் படிக்கறோம், ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிடறோம், அடுத்து என்ன பண்றோம்?அதை நம்ம நண்பர்கள் கிட்டே ஷேர் பண்றோம்.. ட்விட்டர்ல நல்ல ட்வீட் படிச்சா அதை ஆர் டி பண்றோம்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. அந்த மாதிரிதான் காப்பி பேஸ்ட் போஸ்ட் என்பதும்.. நான் படிச்ச நல்ல சிறுகதைகள், பேட்டிகள், கட்டுரைகள் மற்றவர்களும் படிச்சு பயன் பெறட்டும் என்பதே அதன் நோக்கம்.. ஏற்கனவே அதை படிச்சவங்க ஜஸ்ட் பாஸ்.. அவ்ளவ் தான்..



2. நடிகைகளின் கிளாமர் போஸ்ட் எல்லா போஸ்ட்டுக்கும்  போடறதில்லை
,சினிமா விமர்சனங்களில் மட்டும் தான். படங்களில் இடம் பெறாத படமா கிடைச்சா போடறேன்.. கிளாமர் தூக்கலா இல்லாம பார்த்துக்க முயற்சிக்கறேன்


3. முதல்ல எல்லாம் ஒரு போஸ்ட் தான் போட்டேன். காப்பி பேஸ்ட் போட்டா நீக்கிடுவோம்னு தமிழ் மணம் திரட்டி எச்சரிச்சாங்க.. ஆனா பல காரணங்களால என்னால காப்பி பேஸ்ட் போஸ்ட் போடாம இருக்க முடியல.. அதனால அவங்க என் வலைப்பூவை அவங்க திரட்டில இருந்து நீக்கிட்டாங்க.. அதனால எனக்கு டெயிலி 800  ஹிட்ஸ் குறைஞ்சுது.. அதே போல் இண்ட்லி திரட்டி முதல்ல எல்லாம் எல்லா போஸ்ட்டையும் ஹிட் பண்ணிச்சு , அதன் மூலம் டெயிலி 1800 ஹிட்ஸ் எனக்கு வந்துச்சு.. ஆனா ஏனோ அவங்களும் பிரபலமான இடுகைகள் பிரிவில் என்னுதை சேர்ப்பது இல்லை. அதனால இண்ட்லி மூலமா வந்த ஹிட்ஸ் 1800 போயிடுச்சு, அப்போ டோட்டல் லாஸ் 2600 ஹிட்ஸ். அதை சரிக்கட்ட, பேலன்ஸ் பண்ண போஸ்ட்டோட எண்ணிக்கையை  ஏற்ற வேண்டியதா போச்சு.. ஒரு நாளுக்கு சராசரி 2000 விசிட்டர்ஸ், பேஜ் வியூஸ் 5000 , இதுதான் என் டார்கெட். அதுக்குத்தகுந்தாற்போல் போஸ்ட் போடறேன்



4.விஜய், அஜித் எல்லா ரசிகர்களும் என்  நண்பர்களே. காவலன், நண்பன் இரண்டு படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனம் எழுதி இருக்கேன்.. வேலாயுதம் சுமார்னு சொல்லி இருக்கேன், மங்காத்தா விமர்சனத்தில் பெண்களை கவராது எனவும் அசல் டப்பா எனவும் சொல்லி இருக்கேன், ட்விட்டர்ல சில விஜய் ரசிகர்கள் அஜித்தை ஓவரா கலாய்க்கறப்போ சும்மா விளையாட்டுக்கு அவங்களுக்கு எதிர் ட்வீட் போடறேன்..பில்லா 2 படத்தை பிரமோட் பண்ற மாதிரியும் ட்வீட் போட்டேன், கிண்டல் பண்ணியும் ட்வீட் போட்டேன்..


5. அம்மாவின் ஆட்சியில் கரெண்ட் அடிக்கடி கட் ஆவதால் நெட்டில் நான் இருக்கும் நேரம் குறைவு. இருக்கும் கொஞ்ச நஞ்ச நேரத்தில் என் பிளாக்கில் பதிவு போடவே நேரம் சரியா இருக்கு. இருந்தாலும் இப்போ ஓரளவு சீராகிடுச்சு, இனி டெயிலி மினிமம் 10 பிளாக்காவது வர முயற்சி பண்றேன்


6. ட்விட்டர்ல எல்லா ட்வீட்டும் பிரமாதமாப்போட்டுட முடியாது, ஆனானப்பட்ட மணிரத்னமே ராவணன், ஆயுத எழுத்து போன்ற டப்பா படம் குடுத்திருக்காரு.. மனசுல பட்டதை ட்விட்டா போடறோம்.. சிலது முன்னே பின்னே தான் இருக்கும் , கண்டுக்காதீங்க.. அந்த ட்வீட்ஸ் வேஸ்ட்டா போயிடக்கூடாதுன்னு டெயிலி அதிகாலை 5 மணீக்கு ஒரு பதிவா போட்டுடறேன்


7. நான் மற்ற பதிவு காப்பி பேஸ்ட் பண்ணி போடும்போது நன்றி - என அவங்க பேரை சொல்லிடறேன், ஆனா சில பிரபல சினிமாவலைத்தளங்கள் என் பேர் குறிப்பிடாம சினிமா விமர்சனத்தை சுட்டு போட்டுடறாங்க.. அதை கண்ட்ரோல் பண்ணவே அப்படி வெச்சிருக்கேன்./. மீறி யாராவது சுட்டாலும் எந்த பிளாக்னு கண்டு பிடிச்சுடலாம்..


இப்போ டாப் 6 வலைப்பூக்கள்


1. சவுக்கு - பிளாக் ஆரம்பிச்சு ரெண்டரை வருடங்கள் தான் ஆகுது, ஆனா அமோக வரவேற்பு, காரணம் அரசியல் ரகசியங்கள் அம்பலப்படுத்தும் அசாத்திய துணிச்சல்.. ஆல்ரெடி உளவுத்துறையில் ஒர்க் பண்ணி இருப்பதால் பல விபரங்கள் கிடைக்குது. 792 பதிவுகள்  ,  ---- ஃபாலோயர்ஸ் 89,90,621 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 99,919. எனக்குத்தெரிஞ்சு இவ்வளவு குறுகிய கால கடத்தில் அபார வளர்ச்சி அடைந்த தமிழ் வலைப்பூ எதுவும் இல்லை.. நெம்பர் ஒன் இதுதான்..அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன் 324 பேர்.சினிமா விமர்சனம் போடாமல் வெறும் அரசியல், விழிப்புணர்வு மட்டுமே போட்டு ஹிட்ஸ் அள்ளுபவர்.. ரெண்டரை வருஷமா பிளாக் எழுதுறார்



2. உண்மைத்தமிழன்- ஒரு படம் ரிலீஸ் ஆச்சுன்னா இவர் எழுதும் பதிவின் நீளம் உண்மையான பட ஸ்கிரிப்டை விட நீளமா இருக்கும்னு கிண்டலா எல்லாரும் சொன்னாலும் ரொம்ப டீட்டெயிலா விமர்சனங்கள் இருக்கும்.. தமிழ் சினிமாவில் சாமான்யர்கள் அறிந்திராத பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கும். கூகுள் சர்ச்சில் இவரது சினிமா விமர்சனங்கள் தான் முன்னணியில் இருக்கு.. 881 பதிவுகள்1224 ஃபாலோயர்ஸ் ஒரு கோடியே 36 லட்சத்து 10,250  ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 3,37,775,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன்  221 பேர்.தமிழ் வலைப்பூக்களில் அதிக ஹிட்ஸ் பெற்றவர் இவர் தான். தனக்கு அடுத்து வரும் கேபிளை விட இவர் டபுள் மடங்கு ஹிட்ஸ் பெற்று முன்னிலையில் இருக்கார்,5 1/2 வருசமா பிளாக் எழுதுறார்.


3. கேபிள் சங்கர்  - கொத்து புரோட்டா, சாப்பாட்டுக்கடை இரண்டிலும் செம ஃபேமஸ் ஆனவர்.. இவரது சினிமா விமர்சனத்தை படிக்காத சினிமா பிரபலங்கள் ரொம்ப கம்மி. டெயிலி நைட் டைமில் தான் பதிவு போடுவார்.. இப்போ சினிமாத்துறையில் எண்ட்டர் ஆகிட்டார்.. ( எண்ட்டர் கவிதைகள் ராசி போல ) 1131பதிவுகள்  ,1839ஃபாலோயர்ஸ் ,53,29,431 ஹிட்ஸ் அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 94,223,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன் 180  பேர். 6 வருடங்களா எழுதறார்


4. ஜாக்கி சேகர் - ஆங்கிலப்படங்கள், உலகப்படங்கள் விமர்சனம், சென்னை மக்கள், நகரம் பற்றிய விழிப்புணர்வுப்பதிவு, சாண்ட்வெஜ் நான் வெஜ் போன்றவை இவரது பிளஸ். வலை உலகில் அதிகம் பேரால் தனி மனித தாக்குதல் பெற்றவர் என்ற பெருமையும், அதை கொஞ்சம் கூட கண்டுக்காமல் இருப்பவர் என்ற பெருமையும் உண்டு.இவரைத்தாக்கவெனவே 6 வலைப்பூக்கள் தனியா இருக்கு.. 1115 பதிவுகள்  ,1480 ஃபாலோயர்ஸ் ,36.36,689 ஹிட்ஸ் அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 1,79,364 ,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன்  160   பேர்.  நாலரை வருடங்களா எழுதறார்


5. வினவு  - அரசியல், கல்வி சமப்ந்தப்பட்ட விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதிப்புகழ் பெற்றவர்கள். ஒரு காலத்தில் தமிழ் மண கட்டண சேவை மூலம் முகப்புப்பக்கத்தை ஆக்ரமித்தவர்கள்.. இவங்க குருப்ல 12 பேர் இருக்காங்க.. மாத்தி மாத்தி எழுதுவாங்க போல  ,1434 பதிவுகள்  3507  ஃபாலோயர்ஸ் ,59 லட்சம் ஹிட்ஸ் அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 1,06,090 ,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன்  170   பேர்.  நான்கு வருடங்களா எழுதறார். இவருக்கும் அட்ராசக்கவுக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் ஒரே நாள், மாதம் ( ஜூலை 17) எழுத வந்தாங்க,  4 வருடங்களா எழுதறாங்க


6. சித்தர்கள் ராஜ்ஜியம் - மேலே சொன்ன 5 வலைப்பூக்களும் அரசியல், அல்லது சினிமா சார்ந்து புகழ் பெற்ற பிளாக்ஸ்னா இது ரொம்பவே வித்தியாசம். எந்த திரட்டியிலும் இணைக்காம 3430 ஃபாலோயர்ஸ், 694 பதிவுகள்
32,36,250 ஹிட்ஸ்,  2 1/2 வருடங்களா எழுதறார்.. முழுக்க முழுக்க சித்தர்கள் பற்றிய அரிய தகவல்கள் , கட்டுரைகள் மட்டுமே இருக்கும்.. மற்ற எந்த தமிழ் வலைப்பூவுக்கும் இல்லாத பெருமை டோட்டல் விசிடர்ஸை விட பேஜ் வியூஸ் 5 மடங்கு இருப்பதே..  மற்ற எல்லா பிலாக்கர்ஸும் அதை 1 :3 என்ற விகிதத்தில் வைத்திருக்கும்போது , சிலர் 1;2 என வெச்சிருக்கும்போது இவர் மட்டும் 1;5 என்ற விகிதத்தில் வைத்து இருக்கார்.. 



நன்றியுடன் நினைத்துப்பார்க்கும் நபர்கள்

1.நல்லநேரம் சதீஷ்குமார் - http://www.astrosuper.com/பத்திரிக்கைகளில் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் எனக்கு பழக்கம். நிரஞ்சனா,ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் இருவரும் பணி ஆற்றினோம்.. இருவருக்கும் உள்ள பொதுவான அம்சம் நகைச்சுவை உணர்வு,கலாய்த்தல்...இருவருக்கும் உள்ள வேறுபாடு கடவுள் நம்பிக்கை,ஜோதிடம்.. அவருக்கு 2லும் அளவு கடந்த நம்பிக்கை....கால ஓட்டத்தில் அவர் ஜோதிடராகவே ஆகி விட்டார்.. எனக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை வரவில்லை.. அவர் பிளாக்கில் களவாணி பட விமர்சனம் முதன் முதலில் எழுதினேன்..படம் சூப்பர் ஹிட் என்று ரிலீஸ் ஆன அன்றே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்..  பிறகு 2 மாதங்களில் தனி பிளாக் அவரே ஓப்பன் பண்ணிக்கொடுத்தார்.. நான் ஈரோடு,அவர் சித்தோடு என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்க வாய்ப்பு உண்டு. அளவளாவுவோம்.. கருத்துப்பரிமாற்றங்கள் காரசாரமாக நடக்கும்.. 

2. ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா -   http://sirippupolice.blogspot.com/2011/07/1.htmlநான் எழுதிய 640 போஸ்ட்களில் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் என கமெண்ட் போட்டவர்..ஆரம்ப நாட்களிலேயே இவர் எனக்கு அளித்த ஊக்குவிப்பு என் எழுத்தை மேம்படுத்த உதவியது.. செம காமெடியான ஆள்.. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்.. சென்னை சென்ற போது ஒரு முறை சந்தித்து எங்கள் நட்பை பலப்படுத்திக்கொண்டோம்..பிறகு விகடன் காப்பி பேஸ்ட் போஸ்ட்,பிளாக்கில் ஃபிகர்கள் ஃபோட்டோ போடுவது என அவருக்கு சில விஷயங்கள் பிடிக்காத போது, ஓப்பனாக ஃபோன் பண்ணி எதிர்ப்பு தெரிவித்தார்.. என்னை நேரடியாக தாக்கி 3 பஸ்கள் விட்டார்.. இருந்தாலும் இன்னும் நட்பு நீடிக்கிறது.. அவரது ஆசைப்படி அந்த இரண்டையும் முழுதாக என்னால் தவிர்க்க முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன்..

3. திருப்பூர் புரட்சித்தலைவன் - இவரும் ஆரம்ப கட்ட நண்பர் + வாசகர்.. என் பதிவுகள் நன்றாக இருந்தால் ஓக்கே என்பார், குறை இருந்தால் ஓப்பனாக சொல்வார்.. இந்த மாதிரி ஓப்பன் மைண்ட் வாசகர்கள் தான் ஒரு படைப்பாளிக்குத்தேவை.. கண்ணாடி போல.. ஏன்னா நாம எது எழுதுனாலும் அது செம அப்டின்னு தான் நாம் நினைப்போம்.. ஆனா மற்றவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் புரியும்.. 

4. பன்னிக்குட்டி ராம்சாமிhttp://shilppakumar.blogspot.com/ ஒரே அலை வரிசை எண்ணம் கொண்ட இருவர் நண்பராக அமைந்து விட்டால் அதை விட ஒரு நல்ல கொடுப்பினை ஒரு மனிதனுக்குக்கிடைக்காது.. என்னை விட படிப்பு,அனுபவம்,திறமை அனைத்திலும் முன்னே இருந்தாலும் எங்களை கண்ணுக்குத்தெரியாத ஒரு பாச வலையால் கட்டியது இருவருக்கும் பொதுவான காமெடி உணர்வு, கலாய்க்கும் கலாட்டாத்தனம்.. என் பதிவுகளுக்கு இவரது கமெண்ட்கள் மேலும் மெருகு சேர்த்தது.. பல வாசகர்கள் ஃபோன் பண்ணி இதை தெரிவித்தார்கள்..ஈரோட்டில் இவர் ஒரு முறை வந்த போது நேரில் சந்தித்தோம். அது பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் போடுவேன்..எனது பஸ்கள் களை கட்ட இவரது கமெண்ட்ஸ் முக்கிய காரணம்..

5. விக்கி உலகம் தக்காளி  http://vikkiulagam.blogspot.com/
காதல் கோட்டை படத்தில் வருவது போல் இருவரும் பார்க்காமலேயே நட்பு வளர்த்தோம்.. தினமும் 8 டூ 9 ஃபோனில் பேசுவார்.. (அவர் தான் பேசுவார் ஹி ஹி )பதிவுலகம் பற்றி பரிமாறிக்கொள்வோம்.. இவர் ஒரு ராணுவ வீரர் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது..வியட்நாமில் இருக்கிறார்.. நான் பழகிய வரை தன் மனைவியைத்தவிர எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காத அபூர்வ மனிதர்.. ஆனால் நான் சும்மா கமெண்ட்ல கலாய்ப்பேன்.. இப்போது அவர் மனைவி வியட்நாம் வந்த பிறகு சரியாக என்னிடம் பேசுவதில்லை.. ( மனைவிட்ட திட்டு வாங்கவே நேரம் சரியா இருக்காம்)

http://edesibabes.com/wp-content/uploads/2009/02/superior_college_girls.2q7woacrj9yc0w4csowgkkww8.agtqkzp57u8sw4wcokksok0g0.th-595x394.jpg

6. லேப்டாப் மனோ - http://nanjilmano.blogspot.com/பதிவுலகில் என்னை டேய் என உரிமையுடன் அழைக்கும் ஒரே பதிவர். (இதுதான் சாக்குன்னு ஆளாளுக்கு அப்படி கூப்பிடக்கூடாது)நெல்லை பதிவர் சந்திப்பில் தான் நேரில் சந்தித்தோம்.. ஆள் புரோஃபைலில் கேப்டன் மாதிரி மிரட்னாலும் நேரில் உதய கீதம் மோகன் மாதிரி சாஃப்ட் டைப். 

7.இலங்கை அதிரடிப்பதிவர் நிரூபன்http://www.thamilnattu.com/
எனது பிளாக் பாஸ்வோர்டு இவரிடம் உண்டு.. எப்போ வேணும்னாலும் உதவின்னு கேட்டா செஞ்சு குடுப்பார், (ஆளாளுக்கு தொந்தரவு  பண்ணாதீங்கப்பா.. அப்புறம் எனக்கு பண்ண மாட்டார்)நல்ல மனிதர்.. இவரது பல கட்டுரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.. 

8. மாத்தி யோசி ஜீவன் - http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/ஃபிரான்சில் பணியாற்றிய இவர் என் ஆத்மார்த்த நண்பர். பதிவுலகில் விக்கி தக்காளிக்கு என் நட்பில் முதல் இடம் என்றால் இவருக்கு அடுத்த இடம்.. நான் பல சமயம் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் அளித்து உதவி செய்தவர்.. ஒத்தடம் கொடுத்தவர்.

எனது பிளாக்கிற்கு பின்னூட்டம் போட்டது மூலம் அறிமுகம் ஆனவர்.. நான் ஆஃபீஸ் வேலையாக வெளியே ஃபீல்டு ஒர்க்கில் இருக்கும்போது என் பிளாக்கில் பதிவு போடுபவர் இவர் தான். கோவை பெண் பதிவர் கொலை வழக்கு என்னும் ஒரு தொடர் பதிவுக்கு காரண கர்த்தா இவரே.. அந்தப்பதிவு விரைவில் வெளிவரும்.. உண்மைக்கதை அது..

10. சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி - http://siththarkal.blogspot.com/இவர் ஒரு இலங்கைப்பதிவர்.என் பிளாக்கில் பல லே அவுட் மாற்றங்களை கொண்டு வந்தவர். நான் மற்ற விகடன் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்தாலும் என் பதிவை யாரும் காப்பி பேஸ்ட் பண்ணி விடக்கூடாது (!!!!) எனும் உயர்ந்த கொள்கைக்கு உதவி செய்தவர்..  

( ரொம்ப தொல்லைப்பா)

இந்தக்கட்டுரை நீண்டு கொண்டே போய் விடும் அபாயம் இருப்பதால் இத்துடன் நன்றி நவிலல் நிகழ்ச்சியை நிறுத்துகிறேன்.. 

காமெடி,சினிமா,கலாய்த்தல் என்ற பாதையிலிருந்து கொஞ்சம் விலகி இனி சமூகம் சார்ந்த  விழிப்புணர்வுப்பதிவுகள்,அனுபவப்பதிவுகள் அதிகம் போட உத்தேசித்து உள்ளேன்..  கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும்.. 

 அன்பு உள்ளங்கள்க்கு நன்றி 

கருண்,உணவுலகம்அண்ணன், செங்கோவி, ம தி சுதா ,டகால்டி,ஹேமா, மைந்தன் சிவா பட்டா பட்டி,வைகை,கவிதைக்காதலன்,யாதவன்,ராஜபேட்டை ராஜா,டெரர் கும்மி குரூப்ஸ்,உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,அப்துல்லா அண்ணன்,ராஜராஜேஸ்வரி,சங்கவி,ஜேம்ஸ்பாண்ட் சதீஷ், ஃபிலாசஃபி பிரபாகரன்,தமிழ்வாசி,,பாபு,சேட்டைக்காரன்,பிரகாஷ்,கூடல்பாலா,ராம்வி,கடம்பவனக்குயில்,மணிவண்னன்,ராஜராஜெஸ்வரி,
ஆஞ்சலின்,சவுந்தர்,குணசேகரன்,கோவை நேரம் ,மதுரன்,காங்கேயம் நந்தகுமார்,செல்வா,சசிகுமார்,ரமேஷ்பாபு,ஜீ,அமைதி அப்பா,ரியாஸ் அகமது ,கோகுல்,மைந்தன் சிவா,ஷிவா ஸ்கை,சரியல்ல,சத்யா,நிகழ்வுகள்,கானோ வரோ,கல்பனா ,உமாகிருஷ்,சசிகா மேனகா,லக்‌ஷ்மி,ஹேமா, சித்ரா, நாய்க்குட்டி மனசு ரூபினா,ஜோசஃபின் ,துஷ்யந்தன்,மற்றும் விடுபட்ட உள்ளங்கள் என்னை மன்னிக்கவும் ( சி பி பிளாக்ல மன்னிப்பு கேட்காம இருந்தா எப்படி? ஹி ஹி )


ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்

http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்

பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்

ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி

பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்

                
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
ராம்வி-மதுரகவி
சித்ரா-கொஞ்சம் வெட்டிப்பேச்சு,
கடம்பவனக் குயில்- கடம்பவன பூங்கா
அம்பாளடியாள்- அம்பாளடியாள்
சாதாரணமானவள்- சாதாரணமானவள்
கீதா- கீதமஞ்சரி
மாலதி-மாலதியின் சிந்தனைகள்
ஹேமா- வானம் வெளித்த பின்னும்
ரூஃபினா செல்ல நாய்குட்டி
ஜோஸ்பின் -ஜோஸ்பின் கதைக்கிறேன்,
கல்பனா-
ஏஞ்சலின்-காகித பூக்கள்
லக்‌ஷ்மி-குறை ஒன்றும் இல்லை
சசிகா -மேனகா-
இந்திரா - மொக்கை இந்திரா 
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன் 

ஆஃபீசர்- உணவு உலகம்
சதீஷ்குமார்- நல்லநேரம்
பன்னிக்குட்டி ராம்சாமி- ஸ்டார்ட் ம்யூசிக்
ரமேஷ் சுப்புராஜ்- சிரிப்பு போலீஸ்
 மாத்தி யோசி -ஜீவன்
ராஜேந்திரன் - நண்டு நொரண்டு
மனோ- நாஞ்சில் மனோ
.விக்கி- விக்கியின் அகடவிகடங்கள்
பிரகாஷ்-தமிழ்வாசி பிரகாஷ்
ராஜா-ராஜபாட்டை
கருண்- வேடந்தாங்கல்
சௌந்தரபாண்டியன் கவிதைவீதிசௌந்தர்
.K.S.S.ராஜ்- நண்பர்கள்/நண்பர்கள்
துஷ்யந்தன்-
மனசாட்சி மனசாட்சி பஜ்ஜி கடை
மதுமதி- தூரிகையின் தூறல்
ரமணி- தீதும் நன்றும் பிறர் தர வாரா

ஆரூர் மூனா செந்தில்

சேட்டைக்காரன்


சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்

கணேஷ்- மின்னல்வரிகள்
சுரேஷ்குமார்-வீடு
சீனா அய்யா- வலைச்சரம்
ரத்தனவேல்- ரத்தனவேல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து,
கோவை நேரம்- கோவை நேரம்
நிரூபன் நாற்று
ரெவரி- மெல்ல தமிழ் இனி வாழும்
செல்வா- செல்வா கதைகள்
சென்னை பித்தன்
ரஹீம் கலாஸி
சங்கவி- சங்கவி
செங்கோவி- செங்கோவி
சூர்யஜீவா- ஆணிவேர்
ஐ.ரா.ரமேஷ்பாபு- உரைகல்
கும்மாச்சி- கும்மாச்சி
சசிகுமார்- வந்தேமாதரம்
சரியில்ல-
பெ.சொ.வி-
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்

யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்.. 


வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.. 


ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் , கரூர் ஜெகன் @ ஆல்தோட்டபூபதி, ஈரோடு தங்கதுரை : )), , Senthil Nathan , jeevan , Parisalkaaran ,ராஜன் , , C.Kesavan,@ Sudha,, நையாண்டி,@ SeSenthilkumar,, மதுரை ரியாஸ், கரையான்,DKCBE, பாரத்...பாரதி...,, புலவர் தருமி, GiRa, vivaji,

சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ sbnu , பூங்குழலி :) , :) , JanuShath அனைவருக்கும் என் நன்றிகள்

தொடர்ந்து ஆதரவு அளிக்க அனைவரையும் வேண்டி  விரும்பி கேட்டுக்கொல்கிறேன்.. அடச்சே கொள்கிறேன்....


டிஸ்கி - மேலும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் போடவும் ( பண உதவி  எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி )

Monday, June 18, 2012

ஆனந்த விகடனே அடுத்தவர் படைப்பை சுட்டுப்போட்ட அவலம்,இணைய தளங்கள் அதிர்ச்சி

இணைய தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு பரபரப்பான செய்திகள் வெளியிடுவதும், செய்தியை யார் முந்தித்தருகிறார்கள் என்பதில் வேகமும் காட்டி வருவது ரெகுலராய் நடக்கக்கூடியதே.. அதே சமயத்தில் மற்றவர் படைப்பை  தன் படைப்பு மாதிரி காட்டிக்கொள்வது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.. 


நானே பல முறை ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், கல்கி, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களில்  வெளி வந்த படைப்புகளை இங்கே வெளியிட்டு கடைசியில் நன்றி - என போட்டு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை பெயரை போட்டு விடுவேன்,.. டைட்டில், லேபிள், பி கு ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு இடத்தில் அவர்கள் பெயர் வந்து விடும்.. 


 ஆனால் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத்திகழ வேண்டிய பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடனே வேறொரு இணைய தளத்தில் வந்த மேட்டரை சுட்டுப்போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியைத்தருகிறது.



பாதிக்கப்பட்ட இணைய  தள உரிமையாளர் விகடனுக்கு மென்ஷன் போட்டு விளக்கம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை


 மாயவரத்தான் அவர்கள் போட்ட ட்வீட்டில் இருந்து




இது படைப்புத் திருட்டு இல்லீங்களாண்ணா இதை ஒரிஜினலா வடிவமைச்சது
 a




 ORIGINAL

powered by Photobucket
சனிக்கிழமை நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருதுகள் வென்றவர்கள் பட்டியல்...

Sunday, April 15, 2012

ஹிலாரி கிளிண்ட்டனை நக்கல் அடித்து மாட்டிக்கொண்ட பதிவர்கள்



'குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள்' என்ற திருவிளையாடல்
தருமியின் புலம்பலைப் போல, கிண்டல் அடித்தே புகழ் பெற்று விடும் நபர்களும்இருக்கவே செய்கின்றனர். அமெரிக்காவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இப்படி தான் கிண்டல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றனர். இணைய உலகில் பரவலாக தங்களைப் பற்றி பேச வைத்து இணைய நட்சத்திரங்களாகி இருக்கிறார்கள்.

ஆடம் ஸ்மித், ஸ்டேசி லேம்ப் என்னும் அந்த இரண்டு இளைஞர்களும் அமெரிக்க
வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை கிண்டல் செய்து இணையநட்சத்திரங்களாக உருவாகி இருக்கின்றனர். ஆனால் அவர்களின் கிண்டல் நாகரீகமாகவும் அதைவிட நேர்த்தியாக அமைந்திருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.


ஹிலாரியோ உலகறிந்த பெண்மணி! திருமதி கிளின்டனாக அறிமுகமான அவர், ஓபாமாஅமைச்சர‌வையில் இடம் பெற்று இன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற அமைச்சராக புகழ் பெற்றிருக்கிறார்.

ஹிலாரி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சளைக்காமல் பேட்டி
கொடுக்கிறார். எந்த பிரச்னையானாலும் க‌ருத்து தெரிவிக்கிறார். ஹிலாரி சொல்வதை அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே உற்று கவனிக்கிறது.

இத்தகைய ஹிலாரி தலைவர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்திகளை படிக்கமுடிந்தால் எப்படி இருக்கும்?

அதைத் தான் ஸ்மித்தும் லேம்பும் செய்தனர். டம்ப‌லர் (www.tumblr.com) இணையத்தில் ஒரு தளத்தை துவக்கி அதல் ஹிலாரி அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்திகளை இடம் பெற வைத்தனர். அதாவது ஹிலாரி அனுப்புவது போல செய்திகளை இவர்களே உருவாக்கி  தளத்தில் இடம் பெற வைத்தனர். அதுவும் ஹிலாரி கறுப்பு நிறக் கண்ணாடியோடு காட்சி தரும் (கையில் செல்போனோடும் தான்) அசத்தலான புகைப்படத்தை போட்டு அதில் புகைப்பட குறிப்பு போல ஹிலாரியின் செய்திகளை இடம் பெற வைத்தனர்.


உதாரணத்திற்கு ஒரு பதிவில் ஹிலாரியிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா, "ஹே ஹில்.. என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்க, ஹிலாரியோ கூலாக "உலகை இயக்கி கொண்டிருக்கிறேன்" என பதில் சொல்வது போல அமைந்திருந்தது.

இதே போல இன்னும் பல தலைவர்களுடனும் பிரபல‌ங்களுடனும் ஹிலாரி குறுஞ்செய்தி வடிவில் உரையாடுவது போல படங்களை உருவாக்கி புதுப்புது பதிவாக வெளியிட்டு வந்தனர்.

கற்பனை தான் என்றாலும் இதில் இருந்த நகைச்சுவை உணர்வும் நேர்த்தியும் படித்தவர்களை கவர்ந்தது. இதனை ரசித்தவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டவர். அவ்வளவு தான்.. இணைய உலகம் முழுவதும் 'textsfromhillaryclinton' என்னும் இந்த தளம் பற்றி தான் பேச்சானது.

நண்பர்கள் அந்த பதிவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர்; டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர். நாளிதழ்களும் பத்திரிகைகளும் இந்த பரபரப்பு பற்றி செய்தி வெளியிட்டு மேலும் பரப‌ரப்பை உண்டாக்கின.

நண்பர்கள் ஸ்மித்தும், லேம்பும் தங்கள் ஐடியா இந்த அளவுக்கு ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பொருத்தவரை ஜாலியாக பேசிக்கொண்டிருந்த போது விளையாட்டாக உருவான எண்ணம் இது.

இருவருமே வாஷிங்டன் நகரை சேர்ந்த‌வர்கள். சமீபத்தில் ஒரு நாள் இருவரும் பார் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்மித்,தனது நண்பரிடம் ஹிலாரியின் கருப்பு கண்ணாடி அணிந்த அசத்தலான புகைப்படத்தை காண்பித்து, இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறாயா, கண்ணாடியும் செல்போனுமாக எவ்வளவு கம்பீரமாக கச்சிதமாக இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நண்பர் லேம்பும்அதனை ஆமோதிக்க, அந்த நொடியில் ஹிலாரியை எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்ப வைத்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது.

உடனே 'டெக்ஸ்ட் ஃப்ரம் ஹிலாரி க்ளின்டன்' என்னும் பெயரில் வலைப்பதிவு செய்யத் துவங்கி விட்ட‌னர். அடுத்த ஒரு வார்த்தில் அந்த தளம் சூப்ப‌ர் ஹிட்டாகிவிட்டது. கற்பனையான செய்திகள் தான் என்றாலும் அவற்றை கண்ணியத்தோடே வெளியிட்டனர். நகைச்சுவயில் எல்லை தாண்டாமலும் பார்த்து கொண்டனர். எனவே அந்த பதிவுகள் ரசிக்கும்படியே இருந்தன.

இதனால் இருவரும் இணைய உலகில் புகழ் பெற்றது ஒரு ஆச்சர்யம் என்றால் அதைவிட ஆச்சர்யம் ஒன்று அவர்களுக்கு காத்திருந்தது. அவர்கள் தளத்தின் நாயகி ஹிலாரியிடம் இருந்தே இருவருக்கும் அழைப்பு வந்தது. ஆம்.. யாரை கிண்டல் செய்து குறுஞ்செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன‌ரே அவரே நண்ப‌ர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

நேரில் ஹிலாரியை சந்தித்த போது ஹிலாரி தானும் அந்த தளத்தின் ரசிகர் என்று கூறி, நண்பர்களை பிரம்மிப்பில் ஆழத்தி விட்டார். சில நிமிடங்களே அந்த சந்திப்பு நீடித்தாலும் நண்பர்கள் இருவரும் ஹிலாரியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை பெருமையோடு தங்கள் தளத்தில் வெளியிடவும்
செய்தன‌ர்.

ஹிலாரியை நையாண்டி செய்து ஹிலாரியையே ரசிகையாக்கிக் கொண்ட இந்த இருவரும் இணைய கில்லாடிகள் தான். ஆனால் ஒரு சின்ன வருத்தம். இருவரும் புதிய பதிவுகள் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு விட்ட‌னர்.

இந்த புகழே போடும் என நினைத்து விட்டனர் போலும். ஆனால் இதுவும் கூட புத்திசாலித்தனம் தான். இனி எப்படி தொடர்வது என தடுமாற்றம் வந்து தரம் குறையும் முன்னே குட்பை சொல்லிவிட்டனர்.

அந்த தளம் அப்படியே இருக்கிறது. இப்போதும் பழைய படங்களையும் குறுஞ்செய்திகளையும் பார்க்கலாம். ரசிக்கலாம்!

இணையதள முகவரி : http://textsfromhillaryclinton.tumblr.com/

Thursday, March 01, 2012

கூடங்குளம் கட்டுரையால் முடக்கப்படும் அபாயத்தில் கீற்று இணையதளம்?

 http://natpu.in/wp-content/uploads/2011/03/keetru-ramesh-bala-cartoons.jpg

'ஜெயலலிதா ஆட்சியில் கருத்துரிமைக்கு இடம் இல்லையா?’ என்று கொதிக்கிறார்கள், சட்ட உரிமை ஆர்வலர்கள். 'கீற்று’ இணையதள ஆசிரியரிடம் நடத்தப்பட்ட விசாரணைதான் இந்தக் கொதிப்புக்குக் காரணம். 


சிறு வட்டாரத்தில் மட்டுமே அறியப்பட்ட சமூக அக்கறையுள்ள சிறு பத்திரிகைகளை, தனது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம், உலக அளவிலான கவனத்தைப் பெற்றது 'கீற்று’. இட ஒதுக்கீடு, தலித்மக்கள் மீதான வன்கொடுமைகள், கல்வி, சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான கட்டுரைகள் இதில்அதிகம் வெளியிடப்பட்டன. சூடு கிளப்பும் சர்ச்சையான விவாதங்களும் அவ்வப்போது  இதில் இடம்பெறும்.


அண்மையில், 'அணுஉலைப் பிரச்னை’ தொடர்பாக விஞ்ஞானி​கள், சூழலியலாளர்கள், படைப்பாளிகள் என பல தரப்பினரும் எழுதிய 200 கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான், கடந்த 8-ம் தேதியன்று, 'கீற்று’ இணைய​தளத்தின் ஆசிரியரும் உரிமையாளருமான ரமேஷிடம், க்யூ பிராஞ்ச் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு, சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சட்ட உரிமை ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கீற்று நந்தன் என்ற ரமேஷ் கூறியது''-கடந்த 7-ம் தேதி மதியம் வீட்டுக்கு வந்தபோது, 'கீற்று இணைய தளம் பற்றி விசாரிக்க வேண்டும். க்யூ பிராஞ்ச் அலுவலகத்துக்கு நாளை வாருங்கள்’ என்று, அங்கு காத்திருந்த போலீஸ்காரர்  சொன்னார். மயிலாப்பூரில் உள்ள க்யூ பிராஞ்ச் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு, டி.எஸ்.பி. நிலையில் உள்ள ஓர் அதிகாரி, கீற்று தளம் பற்றி விசாரித்தார். 'பல இயக்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுகிறீர்கள். நீங்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்? 

நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் உங்களுக்கு உதவி செய்கிறார்களா? வேறு யாராவது நிதிஉதவி செய்கிறார்களா?’ என்று இரண்டு மணி நேரம் பல விவரங்களைக் கேட்டார். என்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் விசாரித்தார்கள். சமூகநீதி, முற்போக்குக் கருத்துக்களை வெளியிட்டு வரும் என்னுடைய இந்த முயற்சி முழுவதும் என்னுடைய சொந்த செலவில் நடக்கிறது. 

பொருளாதாரப் பிரச்னை வரும்போது, கீற்று வாச​கர்கள் உதவுகின்றனர். எங்கள் தளத்தின் செயல்​பாடுகள் முழு​வதும் வெளிப்படையானது. சமூக அக்கறையுடன் கருத்துகளை வெளியிடுவதைத் தடுப்பது, அடிப்படை சுதந்திரத்தை மறுப்பதாகும்'' என்று அழுத்தமாகச் சொன்னார் ரமேஷ்.


தீவிர அரசியல் தளமான 'வினவு’ இணையதள செய்தித் தொடர்பாளரான பாண்டியன், ''கீற்று ஆசிரியரிடம் க்யூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியதை, கருத்துரிமை பேசும் அனைவரும் கண்டிக்க வேண்டும். இது ஒரு வகை மிரட்டலும்கூட. இதை இப்படியே விட்டுவிட்டால், மக்கள் நலன் சார்ந்து எழுதுவதே தடைசெய்யப்படும் நிலை உருவாகும். எனவே, இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்'' என்றார் ஆவேசத்துடன்.


இது ஒரு புறம் இருக்க... சென்னையைத் தலை​மை இடமாகக்கொண்ட 'தி வீக் எண்ட் லீடர்’ ஆங்கில இணையதளம் திடீரென முடக்கப்பட்டது, கருத்துரிமையாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியாறு அணை விவகாரத்தில், தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழகத்துக்கு எதிராக கேரளத்தினர் தகவல்களைப் பரப்புவது தொடர்பாக, இந்த இணையதளத்தில் கடுமையான விமர்சனக் கட்டுரை ஒன்று வெளியானது. இதனால், ஆத்திரமடைந்த மலையாள ஆதரவுத் தரப்பினர் பிரச்னையைக் கிளப்பினார்கள். அது பின்னர் அமுங்கிப்போனது. விமர்சனங்கள், மிரட்டல்கள் எனத் தொடர்ந்த எதிர்வினைகள், இணையதளத்தை முடக்கிப்போடும் அளவுக்குப் போனது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcZSfMkd-GDEqsKQP8BjtOWdXYFvy3tX9gmtYPXjuD6Ovjfly8qFjrfEkhL3gBBgTPfhIor2DOw_6WYdz7uib-t4RK64WgsTWrMhDh0Qm7cxlG3m1ftOoGaYtpWuxMEl1r8U6SD-y0Oy4/s640/keetru.jpg


இது பற்றிப் பேசும் 'தி வீக் எண்ட் லீடர்’ஆசிரியர் வினோஜ் குமார், ''எங்கள் இணையதளத்தின் பெயரைப் பதிவு செய்த நிறுவனம், இந்த மாதத் தொடக்​கத்திலேயே தளத்தை முடக்கிப்போட்டது. 15 நாட்களுக்​கும் மேல், தளத்தை வழக்கம்போல பார்வை​யிட முடியாதபடி சிக்கல் உண்டானது. பெரியாறு அணை விவகாரத்தில், மலையாள இனவெறி​யுடன் தமிழகத்தில் செயல்படுபவர்கள், எங்களின் கட்டுரைக்குப் பழி வாங்கும் விதத்தில் இதைச் செய்திருக்கலாம் என்று நம்புகிறோம்'' என்கிறார்.


இது, இணையத் தளங்களுக்குச் சோதனைக் காலமோ?

Thursday, January 12, 2012

குறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக்கல் காமெடி டிஸ்கஷன்

http://tamilmovies.skynyxonline.com/myimages/actress/anjali/anjali.jpg

ஒரு நாள் காலை உணவு உலகம் சாரோட போன் அடிக்குது. தூக்கக்கலக்கத்தோடவே போன் எடுத்து பேசுறார்.

உணவு உலகம்: ஹலோ! யார் பேசுறது?
சிபி: சார், நான் சிபி செந்தில்குமார் பேசுறேன்.
 உணவு உலகம்: என்னப்பா! என்ன விஷயம்?
சிபி: சார், பொங்கல் லீவுல  நான் ஒரு குறும்படம் எடுக்க போறேன் சார். அதை உங்ககிட்ட சொல்லலாம்ன்னுதான் போன் பண்ணேன்.

உணவு உலகம்: அப்பிடியா!  ரொம்ப நல்ல விஷயம்தான் ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்பதான் கைக்கூடி இருக்கு. வாழ்த்துக்கள்.

சிபி: நன்றி சார்.
உணவு உலகம்: பணம்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா?
சிபி: பண்ணிட்ட்டேன். சம்பளத்துல மிச்சம் பிடிச்சு சீட்டு போட்டு 1 லட்சமும். மிச்சத்துக்கு ஆபீசுல  லோன் போட்டுக்கலாம்னு இருக்கேன் சார்.  

உணவு உலகம்: பணம் ஓக்கே. கதை?
சிபி: கதைலாம் கூட ரெடி...
சிபியை பேசவிடாமல் குறுக்கிட்ட ஆபிசர்
உணவு உலகம்: நீ எப்படி கதையை ரெடி பண்ணி இருப்பேன்னு எனக்கு தெரியும். குறும்படம் எடுக்க சொன்னால்..., எதாவது நடிகையை வச்சு குறும்பு படம் எடுத்தாலும் எடுப்பே. நீ ஒண்ணு பண்ணு. ஈரோடுல ஒரு கல்யாண மண்டபத்தை புக பண்ணு.
சிபி: கல்யாண மண்டபமா? எதுக்கு?
உணவு உலகம்: நான் நம்ம பதிவர்களையெல்லாம் கூட்டிக்கிட்டு ஈரோடு வந்துடுறேன். அங்க வச்சு கதை டிஸ்கஷன் வச்சுக்கலாம்.
சிபி: (இவரு நம்மளை வச்சு பதிவர் சந்திப்பு தேத்த்லாம்னு பார்க்குறாரோ) சரிங்க சார்.
உணவு உலகம்: எல்லா பதிவர்களும் வெவ்வேற இடத்துல இருந்து  வருவதால், சாப்பாடெல்லாம் சூப்பரா அரேஞ்ச் பண்ணிடு. மனோ ஆமைக்குஞ்சு வறுவல் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கான். அதை ரெடி பண்ணிடு. அப்பிடியே விக்கிக்கு பிடிச்ச பிராண்ட் சரக்குலாம் வாங்கி வச்சுடு.
சிபி: சரிங்க சார்.


மண்டபத்துல கசமுசான்னு ஒரே சத்தம். என்ன இங்க சத்தம்ன்னு உணவு ஆபிசர் சார் சத்தம் போடுறார்.
மனோ: இங்க பாருங்க சார், எல்லாரும் வேலைவெட்டி, புள்ளைகுட்டிலாம் விட்டுட்டு சிபிக்கு ஹெல்ப் பண்ணாலாம்ன்னு வந்தால், அவனை ஆளை காணோம் 
விக்கி: கில்மா படம் பார்க்க போயிருப்பானோ?
ஆபீசர்:சேச்சே அப்படியிருக்காது. புதுப்படம் எதாவது ரிலீஸாகியிருக்கோ?
சௌந்தர்: இல்லை சார்.
ஆபீசர்: உனக்கெப்படி தெரியும். எல்லா பயலுகளும் இப்போ விமர்சனம் போட ஆரம்பிச்சுட்டீங்களா? என் பொண்ணு கல்யாண வேலை முடியட்டும். அப்புறம் பெல்ட்டை கழட்டிட வேண்டியதுதான்.

டொக் டொக்

சிபி வந்துட்டான் போல. கதவு திறந்துதான் இருக்கு வா. உள்ள வா சிபி.
எலேய், இங்க நாங்கலாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம். நீ எங்கேடா போய் தொலைஞ்ச மூதேவி இது மனோ 

ஹி ஹி  பதிவு ஒண்ணு போட்டுட்டு வந்தேன்.அதான் லேட்டு.

ஆபீசர்: என்ன நடந்தாலும் காரியத்துலயே கண்ணா இருப்பியே. 
சரி சரி கதை டிஸ்கஷனை ஆரம்பிக்கலாம்.

மனோ: சார்,
 
ஆபீசர்: வெயிட், முதல்ல கருண், சௌந்தர், ராஜாலாம் கதையை சொல்லட்டும். என்ன இருந்தாலும் வாத்தியாருங்க. நம்மைவிட நிறைய விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும்

கருண்: கதை ஒரு பஸ்ஸுல ஆரம்பிக்குது. பஸ்ஸுல ஒரு காலேஜ் பையன், ஒரு பொண்ணை டாவடிக்குறான். 
சௌந்தர்: டேய் கருண்உன் சொந்த கதையை நிப்பாட்டு.
கருண்: அடப்பாவி சௌந்தர் இது ஒண்ணும் என் சொந்த கதை இல்லை. இப்படி ஏடாக்கூடமா சொல்லி பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்க விட்டுடாதே.

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/03/Anjali_Stills_004.jpg
சௌந்தர்: அப்பிடி வா வழிக்கு இனி பேருந்து, கடைக்கண்-ன்னு சொல்வியா?
ஆபீசர்: வாத்தியாருங்களாச்சே நம்மைவிட விஷயம் தெரியும்ன்னு பார்த்தால், நீங்க என்னடான்னா ஸ்கூல் பிள்ளைங்களை பார்த்து பார்த்து சின்ன பிள்ளைகளாட்டம் சண்டை போடுறீங்களா? இனி நான் சொல்றவங்க தான் வாயை திறக்கனும் மத்தவங்கள்லாம் அமைதியா இருக்கனும். சூர்யஜீவா நீ சொல்லு..,
சூர்யஜீவா:சார், கூடங்குளம் பிரச்சனை தான் இப்போ ஹாட் டாபிக் நாம அந்த சப்ஜெக்ட் எடுத்டுக்கலாம். 
சிபி கொஞ்சம் டெர்ரராகி... சார் கூடங்குளமா? அங்கெல்லாம் படம் எடுக்க விடமாட்டாங்களே.

சூர்யஜீவா:  கதை சொல்ல போற நான் தமிழன், கதை ஓக்கே பண்ணும் நம்ம பதிவுலக சகாக்கள் தமிழர்கள், படம் எடுக்க போற நீங்க தமிழன் அப்புறம் எப்படி படம் எடுக்க விட மாட்டாங்க. ஏற்கனவே சீனாவுல இருக்குற அணு உலையில் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்த்திருக்காங்க. அதோட லிங்க் வேணும்ன்னா நான் தரவா? கோர்ட்ல கேஸ் போடலாமா?

சிபி: சார், அதெல்லாம் லேட்டாகும். ஆபீசுல 3 நாள்தான் லீவ் தந்திருக்காங்க அதுக்குள்ள முடிக்கனும் சார்.
சூர்ய ஜீவா: அப்பிடின்னா, செட் போட்டுக்கலாம் சிபி
சிபி: என்னது சார்ட் ஃபிலிம்க்கு அணு உலை போல செட்டா?னு பரிதாபமாக விழிக்க..,
மனோ: சார் என்கிட்ட ஒரு கதை இருக்கு நான் சொல்லவா?
ஆபீசர்: ம்ம் சொல்லு பார்க்கலாம்.
மனோ: ஹீரோவுக்கு சொந்த ஊர் திருப்பாச்சி. அவரு அருவா செய்ற வீட்டுல பிள்ளையா பொறந்திருக்காரு. அவருக்கு ஒரு தங்கச்சி..தங்கச்சியை பஹ்ரைன்ல கட்டி குடுக்குறார். தன் தங்கச்சியை பார்க்க பஹ்ரைன் வரும் ஹீரோ எங்க ஹோட்டல்ல தங்கறார்...
சிபி: டேய் தம்பி இது ஹீரோவா விஜய்  நடிச்ச  திருப்பாச்சி படத்தோட கதை போல தெரியுது.
மனோ: முழுசா சொல்றதுக்குள்ள நீ எதுக்குடா வாயை திறக்குறே. மூதேவி அடங்குடா.
விக்கி: சார் இவனுங்க ரெண்டு பேரும் அடிச்சுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. இனி நிறுத்த யாராலும் முடியாது.

ஆபீசர்: அடப்பாவி திருப்பாச்சியை சுட்டு கதையை சொன்னால் எங்களுக்கு தெரியாதா? நீ போய் அந்த ஆமைக்குஞ்சு கறியை சாப்பிடு. விக்கி நீ சொல்லு..,
 விக்கி: ஒரு பையனும் பொண்ணும் கலயாணம் கட்டிக்கிடாமல் ஒரே வீடுல வாழுறாங்க. ஆனால் அவங்க லவ்வர் இல்லை.
சிபி: அப்ப அண்ணன் தங்கச்சியா?
விக்கி: இல்லை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHcygp7d1ZA0ehhqyk95HCAAiaYnTTrif-EFqV_12HRciLR8yc0HIQo5us-QFVMlIXP3aFn5I05Dk6GgdXlRUNiPJkFZ5nwQida9m-b0A8yvZb5EdQB3ayBYp16nWuE5rpFUwjHfMPJ35V/s1600/parvathi-melton-hot-stills+(2).jpg
சிபி: ஃப்ரெண்ட்சா
விக்கி : இல்லை
சிபி: அடங்கோ, ஏண்டா நாயே இப்படி போட்டு குழப்புறே. அண்ணன் தங்கச்சி இல்லை, லவ்வர் இல்லை, புருசன் பொண்டட்டி இல்லை, அட ஃப்ரெண்ட்சும் இல்லை அப்புறம் எப்படி ஒண்ணா இருப்பாங்க. எந்த ஊருலயும் இந்த அநியாயம் நடக்காதே.
விக்கி: சமீபத்துல நான் ஆப்பிரிக்கா போனேனே அப்போ அங்கே ஒரு பழங்குடி இனத்தவர்கள்ல ஒரு பிரிவினர் இப்படித்தான் இருக்காங்க.

சிபி: சார், விக்கி என் செலவுல ஆப்பிரிக்க சுத்தி பார்க்க முடிவு பண்ணிட்டான் போல.படம் எடுக்க  ஆப்பிரிக்கா கூட்டி போக சொன்னாலும் சொல்வான். இவனை கதை சொல்ல வேணாம்ன்னு சொல்லுங்க சார். இது மயக்கம் என்ன கதையை உல்டா செஞ்சது போலவே இருக்கு

ஆபீசர்: விக்கி சிபி, சின்ன பட்ஜெட்ல சாட் ஃபிலிம்தான் எடுக்க போறான். அது பெரிய அளவுல பேசப்பட்டால், சினிமா எடுக்க பெரிய பெரிய ப்ரொடியூசர் வருவாங்க. அப்போ உன் ஆப்பிரிக்கா கதையை எடுக்கலாம். இப்போ நீ போய் உன் ஃபேவரிட் நெப்போலியனை உள்ளே தள்ளு.

பிரகாஷ் நீ சொல்லு இப்போ..,

தமிழ்வாசி பிரகாஷ்: சார் ஹீரோ எஞ்சினியர் காலேஜ் ஸ்டூடண்ட், ஹீரோயினும் அதே காலேஜ்லதான் படிக்குறாங்க. ரெண்டு பேரும் பார்க்க மூலைல தனியா உக்காந்து பேசிக்கிட்டு இருக்காங்க. 
சிபி: நீங்க ஒருத்தர்தான் நல்ல கதையா சொல்றீங்க. ரெண்டு பேருக்கும் லவ்தானே.கிஸ் பண்ணிக்குறாங்களா?மேட்டர் நடக்குமா? சீன் தேறுமா?

தமிழ்வாசி பிரகாஷ்:  ஐயையோ அதெல்லாம் இல்லை சிபி சார், ரெண்டுபேரும் CN++, JAVA, PGDCA இதுல எது படிக்கலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

சிபி: அடிங்கொய்யால அப்புறம் என்ன இதுக்கோசரம் பார்க் மூலையில உக்காந்துக்கிட்டு பேசனும்
தமிழ்வாசி பிரகாஷ்: இப்படிலாம் கோவப்பட்டா அப்புறம் நான் கதை சொல்ல மாட்டேன்.
சிபி: நீ ஆணியே புடுங்க வேணாம் கிளம்பு ராசா.

மகேந்திரன்: சார் நான் ஒரு கதை சொல்றேன்.
ஆபீசர்: சொல்லுங்க,
மகேந்திரன்: ஒரு வயல்ல பெண்கள் எல்லாரும் நடவு நட்டுக்கிட்டு இருக்காங்க
சிபி: மொத்தம் எத்தனை பொண்ணுங்க. 
மனோ: ஆபிசர் சார், இவன் படம் எடுக்க போறானா இல்லை சைட்டடிக்க போறானா? மொத்தம் எத்தனை பொண்ணுங்கன்னு ஜொள் வடிக்க கேட்குறான்.
http://www.glamsham.com/movies/scoops/09/aug/united-six.jpg
விக்கி: மகேந்திரன் சொல்லும் கதை மட்டும் கிளிக்கானால் நட்றதுலாம் கிழவிங்கன்னு கதையை சேஞ்ச் பண்ணிக்கனும் சார்.
ஆபீசர்: ஓக்கே. எல்லாரும் அமைதியா இருங்க நீங்க சொல்லுங்க மகேந்திரன். 

 மகேந்திரன்: அப்போ ஒரு நூறு மாட்டுவண்டி வருது. கூடவே உருமி மேள சத்தமும், நூறு பெண்கள் அந்த மாட்டு வண்டியில் குலவை போட்டுக்கிட்டே வராங்க.  


ஆபீசர்: இருங்க மகேந்திரன், தம்பி ராஜா!
ராஜபாட்டை ராஜா: தீவிரமா எதையோ யோசித்துக்கிட்டு இருந்தவர், ஆபீசர் குரல் கேட்டு திடுக்கிட்டு
ராஜா: என்ன சார்?
ஆபீசர்:ரொம்ப நேரமா யோசிச்சுக்கிட்டு இருக்கியே தவிர, வாயை திறக்க மாட்டேங்குறியே. நாம சிபிக்காக கதை டிஸ்கசனுக்காக வந்திருக்கோம். நினைவிருக்கா உனக்கு?

ராஜா: இருக்கு சார்.
ஆபீசர்: அப்போ உன் கருத்தை சொல்லு.
ராஜா: கதை எதுவானாலும் செலக்ட் பண்ணிக்கோங்க ஆனால் ஹீரோவா யாரை போடப்போறீங்க ஆபீசர் சார்?

ஆபீசர்: கதை சொல்லாட்டி பரவாயில்லை. ஹீரோ யாருன்னு நீயே சொல்லேன்.
ராஜா: அஜீத் கிட்ட கேளுங்க அவர் மறுத்தா விஜய், விஜய் கால்ஷீட் கிடைக்கலைன்னா சூர்யாவை கேளுங்க. சூர்யாவும் ஒத்துக்கலைன்னா நானே ஹீரோவா நடிச்சுடுறேனே.
ஆபீசர்: டேய் சிபி நில்லு ஓடாதே. 
மனோ: டேய் அண்ணா ஓடாதே. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்டா நாதாரி.

விக்கி: அடிங்கொய்யால வறுத்த கறிக்கும், குடிச்ச சரக்குக்கும் யாருடா துட்டு தரது நில்லுடா ங்கொய்யால.
 
சிபி: நான் ஏதோ லைஃப்ல முன்னேறலாம்னு ஷார்ட் பிலிம் எடுக்கலாம்ன்னு யோசிச்சு, நல்ல ஐடியாலாம் தருவீங்கன்னு உங்களை கூப்பிட்டால் என் உயிரையாடா எடுக்குறீங்க. நான் படமே எடுக்கலை போங்கடா நீங்களும் உங்க டிஸ்கஷனும்