ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு ரைட்டர் . கொஞ்சம் தலைக்கனம் கொண்டவன் . தான் படைப்பதே எழுத்து , தான் பிரம்மாவுக்கு சமம் என்ற அகந்தை கொண்டவன் . புகழ் பெற்ற எழுத்தாளனான நாயகன் ஒரு பிரபல பத்திரிக்கையில் 3 சிறுகதைகள் ( தொடர்கதை ) எழுதுகிறான்
கதை 1 - 49 கொலைகள் செய்த லோக்கல் தாதா ஒருவன் தன் 50 வது கொலை செய்யும் முன் அவனது குடும்ப ஜோசியர் மூலம் தன் கூட்டாளிகளில் ஒருவன் துரோகி , அவனாலேயே தான் கொல்லப்படப்போகிறோம் என்பதை அறிகிறான் . அந்த துரோகி யார் என்பதைக்கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக்கிறான்
கதை 2 நாயகி ஒரு பணிப்-பெண் , ஏழை . ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும்போது அவர்கள் வீட்டில் 2000 ரூபாய் நோட்டு காணாமல் போகிறது ., நாயகி தான் அதை எடுத்திருப்பாள் என ஓனரம்மா சந்தேகம் கொள்கிறாள் .ஆனால் நாயகி அதை எடுக்கவில்லை
கதை 3 - நாயகி ஒரு மருத்துவ மாணவி . விவசாயக்கடும்பத்தில் பிறந்த ஏழை . டாக்டர் ஆக வேண்டும் என்ற இவரது லட்சியத்துக்கு நீட் தேர்வு முட்டுக்கட்டை போடுகிறது . தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு நாயகி தள்ளப்படுகிறாள்
மேலே சொன்ன 3 கதைகளின் மெயின் கேரக்டர்கள் ரைட்டரை நேரில் சந்தித்து தங்களூக்கு நியாயம் வழங்க வேண்டும் என மிரட்டுகின்றன . நியாயம் வழங்காவிடில் ரைட்டரைக்கொலை செய்வதாக மிரட்டுகின்றன . நாயகன் என்ன முடிவு எடுத்தார் . எப்படி அதை செயல்படுத்தினார் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக நாகராஜன் கச்சிதமான நடிப்பு . மிரண்டு ஓடும் காட்சிகளில் அவரது பயம் அருமை ,அவரது மனைவியாக வரும் காயத்ரி நடிப்பு செம ( இவர் நிஜத்தில் ஒரு டாக்டராம் )
முதல் கதையில் தாதாவாக வரும் சாய் தீனா நடிப்பு மிரட்டல் ரகம் . 2வது கதையில் பணிப்பெண்னாக வரும் ஐஸ்வர்யா ரகுபதி கவனிக்க வைக்கும் நடிப்பு / எடிட்டர் ஆக வரும் அமரர் டெல்லி கணேஷ் மட்டும் தான் அனைவருக்கும் தெரிந்த முகம் . மற்றவர்கள் பெரும்பாலும் புது முகங்களே
ஒளிப்பதிவு சுந்தர் ராமகிருஷ்ணன் . பல காட்சிகளில் கலக்கி இருக்கிறார் . இசை அஞ்சனா ராஜகோபாலன் . ஒரு பாடல் அருமை . பின்னணி இசையும் கச்சிதம் .
கதை , திரைக்கதை சீனிவாசன் , இயக்கம் ராகவேந்திரா
சபாஷ் டைரக்டர்
1 மூன்று கதைகளையும் குழப்பம் இல்லாமல் சுவராஸ்யமாக , மனதில் பதியும்படி சொன்ன விதம்
2 சாதா ஷாட்களைக்கூட ஹாரர் ஃபீலிங்க் வரும்படி கட் செய்த அபாரமான எடிட்டிங்க் . 2 மணி நேரத்தில் ஷார்ப் ஆக முடித்த விதம்
3 எழுத்தாளர்களூக்கு சமூகப்பொறுப்பு இருக்கிறது , புகழுக்கு ஆசைப்பட்டு மனம் போனபடி எழுதக்கூடாது என்ற கருத்தை சொன்ன விதம்
ரசித்த வசனங்கள்
1 நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொன்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்
2 ஒரு பொருளை உருவாக்க ரொம்ப நாள் மெனக்கெடனும், ஆனால் அழிக்க ஒரு நொடி போதும்
3 எழுத்தாளன் கடவுள் மாதிரி தான்
4 சிலர் சாமியைப்பார்த்ததா சந்தோஷமா சொல்வாங்க , சிலர் பேயைப்பார்த்ததா பீதியோட சொல்வாங்க
5 ஆணவத்தில் ஆடுபவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் கொடுப்பான்
6 பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டாங்க , ஒரு வாட்டி செத்துடு
7 அதிகாரம் என்பது சரியானவற்றை சரியான நேரத்தில் கொடுப்பது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 2000 ரூபாய் நோட்டு நியூஸ்பேப்பர் அடியில் வைப்பவர் அருகில் இருக்கும் வெயிட்டை அதன் மேல் ஏன் வைக்கலை ?காத்துக்கு பறக்கும் எனத்தெரியாதா?
2 பொதுவாக பொண்டாட்டிங்க புருசனை அடக்குவாங்க என்பது உண்மை தான் ,ஆனால் 49 கொலைகள் செய்த தாதாவின் மனைவி அவனை மதிக்கவே இல்லையே? புருசனா மதிக்காட்டி பரவாயில்லை , மனுசனாக்கூட மதிக்கலை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது அனைவருக்குமான படம் இல்லை . மாறுபட்ட ரசனையை விரும்புபவர்களூக்கு மட்டும் . ரேட்டிங்க் 3 / 5
| மாயக்கூத்து | |
|---|---|
நாடக வெளியீட்டு சுவரொட்டி | |
| இயக்கியவர் | ஏ.ஆர். ராகவேந்திரா |
| எழுதியவர் | நாகராஜன் கண்ணன் (உரையாடல்கள்) |
| திரைக்கதை எழுதியவர் |
|
| கதை எழுதியவர் |
|
| தயாரித்தவர் | ராகுல் தேவ பிரசாத் ராமச்சந்திரன் |
| நடிப்பு | நாகராஜன் கண்ணன் டெல்லி கணேஷ் மு ராமசுவாமி |
| ஒளிப்பதிவு | சுந்தர் ராம் கிருஷ்ணன் |
| திருத்தியவர் | நாகூரான் ராமச்சந்திரன் |
| இசையமைத்தவர் | அஞ்சனா ராஜகோபாலன் |
தயாரிப்பு நிறுவனங்கள் | ராகுல் மூவி மேக்கர்ஸ் அபிமன்யு கிரியேஷன்ஸ் |
வெளியீட்டு தேதி |
|
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |

0 comments:
Post a Comment