யோகாசன்ம் கற்க வரும் நபர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை பத்மாசனத்தில் தரையில் அமர்தல் . இதன் முதல் நிலை தரையில் சம்மணமிட்டு அமர்தல் . ஏழைகள் , நடுத்தரக்குடும்பங்களில் இருப்பவர்களுக்குப்பிரச்சனை இல்லை ., ஆனால் செல்வந்தர்கள் . பரம்பரைப்பணக்காரர்கள் தரையில் உட்கார்ந்து பழக்கம் இல்லாததால் தடுமாறுகிறார்கள் .
பொதுவாக செல்வந்தர்கள் வீட்டில் சாப்பிடும்போது டைனிங்க் டேபிள் முன் பிளேட் வைத்து சேரில் அமர்ந்து சாப்பிட்டுப்பழக்கம் ஆகி இருக்கும் .சிலர் சோபாவில் அமர்ந்தோ , கட்டிலில் அமர்ந்தோ சாப்பிட்டுப்பழக்கமாக இருக்கலாம் . அவர்கள் யோகாசனம் செய்ய முயலும்போது தரையில் சம்மணமிட்டு அமர முடியாது . இதற்கான பயிற்சியை அவர்கள் மேற்கொள்ளவே ஒரு மாதம் பிடிக்கும்
உங்கள் குழந்தைகளுக்கு தரையில் அமர்ந்து சாப்பிட பழக்கி விடுங்கள் . ஐந்தில் வளைவது ஐம்பதில் வளையும் . பிராணயாமம் , மூச்சுப்பயிற்சி , 2நாடி சுத்தி இவை அனைத்திற்கும் பதமாசனம் தேவை . அதற்கு சம்மணமிட்டுப்பழகுதல் தேவை .
சாப்பாடு என்பது அன்ன லட்சுமி . . தரை என்பது பூமி பூமா தேவி . தரையில் அமர்ந்து சாப்பிடுவதே நல்லது .
சிலர் குத்துக்காலிட்டு அமர்ந்து சாப்பிட்டுப்பழகி இருப்பார்கள் . அவர்களூம் சம்மணமிட்டு அமர முடியாது
அடுத்தது முஸ்லீம்கள் தொழுகையின் போது அமர்ந்திருக்கும் போஸ் தான் வஜ்ராசனம் . நிறைய பேருக்கு முழங்கால் மூட்டு வலி எடுக்கும். அது போல் அமர முடியாது . அதைப்பழக வேண்டும்
சபரி மலை அய்யப்பன் அமர்ந்திருக்கும் போஸ் கூட ஒரு யோகாசன நிலையே . உங்கள் வீடுகளீல் வெஸ்டர்ன் டாய்லெட் ஆக அமைக்கப்பட்டிருந்தால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல, இந்தியன் டாய்லட் மாடல் தான் நல்லது . அந்த போசில் அமர்ந்து பழகுவது அவசியம்
யோகாசனம் பழக விரும்புபவர்கள் , படிக்க வருபவர்கள் முதலில் கற்க வேண்டியது இவை மூன்றும் தான்
ஜிம்மில் போய் செய்யும் பயிற்சிகள் உடலின் வெளி உறுப்புகளை உறுதிப்படுத்தும், அழகுபடுத்தும் . ஆனால் யோகாசனம் உடலின் உள்ளுறுப்புகளை ஆரோக்கியம் ஆக்கும் . எனவே மதுப்பழக்கம் , சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் யோகா செய்வது நேர விரயம் . ஏன் எனில் குடிப்பழக்கம் உள்ளவர்களூக்கு கல்லீரல் , மண்ணீரல், சிறு நீரகம் எல்லாம் ஆல்ரெடி டேமேஜ் ஆகி இருக்கும் . சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் நுரையீரல் கெட்டு இருக்கும் . .ஏற்கனவே ஆரோக்கியமாக இருக்கும் உள்ளுறுப்புகளை மேலும் ஆரோக்கியம் ஆக்கவே யோகா பயன்படும் , சீரழிந்த , கெட்டுப்போன உறுப்புக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்,. யோகாவால் அது முடியாது
உயர் ரத்த அழுத்தம் , சர்க்கரை நோய் , , தைராய்டு , இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை , மன அழுத்தம் . மனப்பதட்டம் இவை அனைத்தும் யோகா செய்தால் குணம் ஆகும்
--
0 comments:
Post a Comment