Tuesday, October 31, 2023

திவ்யா டெலிகிராம் சேனல் மோசடி -ரூ42 லட்சம் இழந்த ஐ டி ஊழியர்

  இப்போது  அதிகம்  சம்பாதிப்பது  ஐ டி  ஊழியர்கள்தான் ஆனால்  அப்படி  சம்பாதித்த  பணத்தை  பேராசையால்  இழந்த அனுபவங்களும்  உண்டு . ஒரு  ஐ டி  ஊழியர்  வாட்சப்க்கு  ஒரு  தகவல்  வருகிறது . நீங்கள்  சில  விளம்பரங்களைப்பார்ப்பதன்  மூலம்  எக்ஸ்ட்ரா  வருமானம்  பார்க்கலாம். அதைப்பார்க்கும்  அளவுக்கு  உங்கள் அக்க்வுண்ட்டில்  பணம்  கிரெடிட்  ஆகும்  என்ற  தகவல்  வருகிறது 


 அவரும்   அந்த  நபரின்  வழிகாட்டுதல்  படி  ஒரு டெலிகிரா,ம்  சேனலில்  ஃபாலோயராக  சேர்கிறார். சில  யூ  ட்யூப்  வீடியோக்களை  முதலில்  அனுப்பி  அதற்கு  லைக்ஸ்  போடச்சொல்லி இருக்கிறார்கள் ., அந்த  டெலிகிராம்  க்ரூப்பில்  ஆல்ரெடி  சிலர்  உறிப்பினர்களாக  இருக்கிறார்கள் ., பிறகு  அவரிடம்  நீங்கள்  ஷேர்  மார்க்கெட்டில்   நாங்கள்  சொல்லும் ஷேரில்  பணம்  போட்டால்  நல்ல  வருமானம்  கிடைக்கும்  என்று  கேன்வாஸ் பண்ணி  அவரை  பிரெய்ன் வாஷ்  பண்ணி சம்மதிக்க  வைத்திருக்கிறார்கள் 


 மார்ச்  மாதம்  24 ம்  தேதி  2023  ல்  இருந்து  இந்த  வேலை  நடக்கிறது . அவரும்  தன்  மனைவி  அக்கவுண்ட்  மூலம்  42  லட்சம்  ரூபாய்  ட்ரான்ஸ்ஃபர்  செய்து  இருக்கிறார்.பிறகு  அவர்கள்  சொன்ன  தகவல்  உங்கள்  42 லட்ச  ரூபாய்  பணம்  இப்போது  69  லட்சம்  ஆகப்பெருகி  விட்டது  .  டெலிகிராம்  க்ரூப்பில்  இருந்த  மற்ற  சிலரும்  அதை  ஆமோதித்து  இருக்கிறார்கள் ஆமாம், உங்கள் பணம்  பெருகி  விட்டது , நாங்களும்  பார்த்தோம்  என  தெரிவித்து  இருக்கின்றனர் . உடனே அந்தப்பணத்தை   எடுக்க  முயன்றிருக்கிறார். ஆனால்  அப்படி  வெளியே  எடுக்க  வேண்டும்  எனில்  இன்னும்  கொஞ்சம்  பணம்  கட்ட  வேண்டும்  என்றிருக்கிறார்கள் . அவர்  இப்போது  போலீசில்  புகார்  கொடுத்திருக்கிறார் . விசாரணை  போய்க்கொண்டு  இருக்கிறது


 எனவே  யாரும்  இது  போல  ஆசை  வார்த்தை  சொன்னால்  நம்பி  ஏமாறாதீர்கள் 


கட்டுரை எழுதிய  நாள்  1/6/2023 

0 comments: