Friday, December 12, 2014

லிங்கா - சினிமா விமர்சனம்



ஹீரோ  ஒரு திருடன்.அவரும் , அவர் நண்பர்கள் குழாமும்  செய்யும்  லூட்டிகள் செம  ஜாலியாப்போகுது.


  சோலையூர்  அணையை இஞ்சினியர் செக்  பண்ணி  அணைக்கு ஆபத்து .அந்த ஆபத்தில்  இருந்து அணையைக்காப்பாத்தனும்னா ராஜாவோ அல்லது அவரது  வாரிசான  லிங்காவோ  வந்து தான் அணையைத்திறக்கனும் .ஆனா  லிங்கா   வர மாட்டேங்கறார்


நகைக்கண்காட்சில வைக்கப்பட்ட  மரகத நெக்லசை  ஆட்டையைப்போட  திட்டம் போடும்  இடங்கள்  காதில்  பூச்சுற்றல் என்றாலும்  சுவராஸ்யம். ஹீரோயினை  சோலையூர்  கிராமத்துக்கு கூட்டிட்டு வரவேண்டிய  பணி  ஹீரோயினுக்கு. அதே  ஊரில்  இருக்கும்  கோயிலில்  உள்ள  மரகதச்சிலையை திருட வந்த  ஹீரோ வுக்கு  தன்  தாத்தா  வின்  ஃபிளாஸ்பேக்  கதை  சொல்லப்படுது.  

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து  தன் கலெக்டர் பதவியை  துறந்து  ஹீரோவின்  தாத்தா  ஊர் மக்களின்  நன்மைக்கு  அணை  கட்டுகிறார். அந்த அணை  கட்ட  ஏகப்பட்ட  தடங்கல்கள்  சதிகள்  சவால்கள் .எல்லாத்தையும்  முறியடிச்சு  சொந்த  செலவில்  எப்படி  அணையைக்கட்டுகிறார்  என்பதே  கதை

ஹீரோவா  த  ஒன் அண்ட்  ஒன்லி சூப்பர் ஸ்டார்  ரஜினி. 4 வருட  இடைவெளிக்குப்பின்  அவர்  காட்டும்  அட்டகாசமான  ஓப்பனிங்  சீன்  கலக்கல் . 60வயது ஆன  பின்னும் அவர்  25  வயது  இளைஞர்  போல்   சுறுசுறுப்பாக  பின்னிப்பெடல்  எடுக்கிறார். பாடல்  காட்சிளில்  தமிழ் நாட்டு  மக்களின் நன்மைக்காகவும் , ரசிகர்களுக்காகவும்  வேண்டா  வெறுப்பா  ரொம்ப  சிரமப்பட்டு  அனுஷ்கா  கூட  சோனாக்சி  சின்ஹா  கூட  டூயட்  பாடி ஆடி  நடிச்சிருக்கார்.




டிவி நிருபராக வரும் அஸ்கா உதட்டழகி  குஸ்கா கன்ன அழகி அஞ்சே  முக்கால் அடி உயர கொழுக் மொழுக்  ரேஸ் குதிரை அழகி அனுஷ்கா தான்  நமக்கெல்லாம்  பூஸ்ட்.பாப்பாவுக்கு  முகத்தில்  கொஞ்சம்  முதிர்ச்சி எட்டிப்பார்க்குது என்றாலும்  தமிழன் முகத்தை அதிகம்  கவனிக்காததால்  தப்பி விடுகிறார்.கண்காட்சியில்  ரஜினியுடன்  நெருக்கமாக  இருக்கும் காட்சி ஆல்ரெடி    பீரோவுக்குள்  கொஞ்சிக்குலாவிய  தூள்  படத்தின்  தழுவல்  காட்சி  தான் ( விக்ரம் -ஜோதிகா)  என்றாலும்  கிளு  கிளு தான்.


மெயின்  ஜோடி  சோனாக்சி சின்ஹா.ஹிந்தில  சோனா  என்றால்  தங்கம்னு அர்த்தம் .அதே  போல்  தங்கம்  போல்  ஜொலிக்கும் அழகி. ஏறு நெற்றி  இவருக்கு  மைனசாவே  தெரியலை.நல்லா பரம பத  மேப்பை  விரிச்சு  வெச்சு  விளையாடும் அளவுக்கு அகலமான  முதுகு அழகி.முதல்  மரியாதை  ராதா  கணக்கா  ஜாக்கெட்  இல்லாம  வர்றார். ( சேலை  கட்டி  இருக்கார் ) கண்ணியமான   கேமரா மேனாக இருந்தாலும்  ஒரு  பாடல்  காட்சியில்  அவரையும் அறியாமல்  கிளாமர்  எட்டிப்பார்க்குது



சந்தானத்தின்  காமெடி  வழக்கம்  போல்  கலக்கல்.இவரது  ஒன் லைனர்கள்  அப்ளாஸ் அள்ளுது. கருணா வும்  கேப்  கிடைக்கும்  இடத்தில்  எல்லாம்  சிரிக்க வைக்கிறார்.நண்பேண்டா  என  அவர்  முழுசாக  சொல்ல  முடியாமல்  வயசு  சீனியாரிட்டி  கருதி நண்பேன்  என  நிறுத்த  ரஜினி  டா என  முடிக்க  தியேட்டரே  கல கல



ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  ரொம்ப  நீளம் .படத்தின்  மெயின்  கதையே  ஃபிளா   ஸ்பேக் தான்  என்பதுதான்  படத்தின்  பலமும்  பலவீனமும். ரஜினி  படம்  எனில்  பாட்ஷா  படையப்பா  போல்  சவால்  விடும்  கேரக்டரா  பார்த்து  மக்கள்  ட்யூன் ஆகிட்டாங்க .எனவே  இது போல்   பென்னி  குயிக்   அணை  கட்டும்  கதை  எல்லாம்  ரிப்பீட் ஆடியன்சை  வர  வைப்பது  சிரமம்.


வில்லனாக  வரும்  பிரிட்டிஷ்  வில்லன்   ஆள்  நல்ல  பர்சனாலிட்டி  எனில் அவர்  மனைவியாக  வந்து  ரஜினிக்கு  சப்போர்ட்  செய்யும்   கேரக்டர்  நல்ல  கலர் . ஜவஹர்லால்  நேரு  - மவுண்ட்பேட்டன்  பிரபு  சம்சாரம்  கதை தான்  நினைவு  வருது.



இசை  ஏஆர்  ரஹ்மான் . 2 பாட்டு  நல்லாருக்கு . ஆனா  பின்னணி  இசை  சுமார்தான் .


மிகக்குறுகிய  காலத்தில்   பெரிய பிராஜக்ட்டாக  சக்சஸ்ஃபுல்லா  தருவது  சாதா  விஷயம் இல்லை . கே எஸ்  ரவிக்குமார்  தான்  அந்த  மேஜிக் கை  நிகழ்த்திக்காட்டி   இருக்கார்.












மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1. திருடப்போர வீட்டுல யாரும் இல்லயான்னு பாருங்கடான்னா காலிங்பெல் அடிச்சுப் பாக்குறானுவ # சந்தானம்

2. "என்ன ஜோக்கா?


" "ஜோக்கா இருந்தா சிரி...வீக்கா இருந்தா விட்று


3. எந்த தொழில் செஞ்சாலும் தூங்கலாம், ஆனா தூங்காம செய்யுர ஒரே தொழில் திருட்டுத்தொழில் !

4. வாழ்க்கைல எதுவும் ஈஸி இல்லை! முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்லை! - ரஜினிகாந்த்

5. நான் காரியத்துல எறங்கிட்டா முடிக்காம விடமாட்டேன்! முடியாததுல இறங்க மாட்டேன் !

6. ஸ்பெஷல் டீ-ய குடிச்சும் தூக்கம் வருதுன்னா உங்க மூஞ்சிய மூதேவி லீசுக்கு எடுத்துருக்கான்னு அர்த்தம்!!! - சந்தானம்!

7. மனுசன்னா நம்பணும்.. மாசு உள்ள போனா தும்மனும் -/// 

8. "ஆந்திராவுக்கு போடுவோமா , அங்க என் மாமா வேல செய்ராரு" 

"என்ன வேல செய்யுராரு" 

"அதான் சொன்னனே..."

9.சந்தானம் டூ ரஜினி ; நீ வேணாம் வேணாம்னா கூட ஜனங்க விட மாட்டாங்க போல... ஊரே உனக்கு மரியாதை கொடுக்குதே-

10. ஐடியாவும் அப்பளமும் ஒன்னு.. ஆறவிட்டா நமுத்துடும்!!! -சந்தானம் 

11. "மரகத நெக்லஸ்கு 3Cன்னா மரகத சிலைக்கு ஒரு 15C வருமா?" 

சந்தானம் ;"15C, 21C எல்லாம் மந்தவெளி பஸ்டாப்புக்குத்தான் வரும்-/"

12. எதிர்பார்க்காதது நடந்தாதான் அது சுவாரஸ்யம்!

13. ஹாஹா விஜயகுமார் : "அய்யா நான் இந்த சோலையூர் கிராமத்து நாட்டாமைங்க

14. ஒரு வேல சாப்புடலன்னா பிரச்சனை இல்லை..ஒரு வேல கூட சாப்புடலன்னா அது பிரச்சனை!!!

15. I haven't failed .... I just postponed my success

16. ஒரு காரியம் முடியுரதுக்கு நிறைய பேரு உதவியா இருப்பாங்க.. ஆனா அந்த அந்த காரியம் நடக்க எதிரிதான் காரணமா இருப்பான்!

17.இஷ்டப்பட்டது கிடைக்கனும்னா கஸ்டப்பட்டுத்தான் ஆகணும்..!

18.எவ்ளோ உயரத்துல வாழ்ந்தாலும் தூங்குற இடம் நம்ம உயரம்தான்..!

19. வெள்ளக்காரன்; "மிஸ்டர் லிங்கேஸ்வரன், நீ DAM கட்டுர மாதரி தெரியல... இவள வேணா கட்டுவ



20  
பிரம்மானந்தம் = சும்மா ங்கற வார்த்தை என் அகராதிலயே கிடையாது



 சந்தானம் = சம்பளம் மட்டும் சும்மா வாங்கறீங்க?


21
பணம் இருந்தா மரியாதை தானா தேடி வரும்


22
வாழ்க்கைல எதும் ஈசி இல்லை.முயற்சி பண்ணுனா எதும் கஷ்டம் இல்லை


23
இந்த மரகத நெக்லஸ் என்ன விலை?


3 கோடி. அடப்பாவி .சேட்டு 1 1/2 கோடின்னானே


24  
சந்தானம் ஹிட் பஞ்ச் = பறக்காஸ் ( கிளம்புவோம்)


25
அனுஷ்கா = யோவ் கில்லாடி கிங்குய்யா நீ.


 ரஜினி = இப்போ என்னை விட்டேன்னாத்தான் நான் அடுத்த வேலையைப்பார்க்க முடியும்


26 
அனுஷ்கா = யோவ்.உன் பார்ட்ஸ் எல்லாம் எப்டிய்யா இப்டி வேலை செய்யுது? # ரஜினி படம்னா டபுள் மீனிங் கூட சாதாவா ஆகிடுது


27 
சந்தானம் டூ ரஜினி = ஒயின்ஷாப் ல சரக்கு அடிக்கும்போது அப்பாவைப்பாத்த மாதிரி ஏன் பம்முறே?


28   பிரிட்டிஷ்  வில்லன் -
என் முன்னால ஏன் இப்டி நிக்கறே?


 என் முன்னோர்கள் உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கல # ரஜினி கலக்கல் டயலாக் டெலிவரி



29
நாம எந்த வேலை செய்யறோம்கறது முக்கியம் இல்லை. செய்யற வேலையை சந்தோசமா செய்யனும் # லிங்கா


30 
அரண்மனை ல இருக்கறவன் எல்லாம் ராஜா இல்லை.எங்கே இருந்தாலும் தன் கிட்டே இருப்பதை இல்லாதவங்களுக்குத்தர்ற எல்லோரும் மனசளவில் ராஜாதான் # லிங்கா


31
நல்லது நடக்கும்போது 1 மேல ஒண்ணா நடக்குது. கெட்டது நடக்கும்போதும் அப்டித்தான்.ஒண்ணு மேல ஒண்ணா நடக்கும் # லிங்கா





படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1. உஸ்ஸ்.. வானத்தைப்போல படத்துல செந்தில் தன்னை புகழ்ந்து பேசும் பிச்சைக்காரனைவெச்சு பண்ணும் காமெடிய உல்டா பண்ணிருக்காங்கப்பா:-))


2  சூப்பர் ஸ்டாரின்  ஓப்பனிங்தாறுமாறு தக்காளிசேறு பாட்டு சீன்  60 வயசா?30 வயசா?




3
அனுஷ்கா தேவதையை தாவணி ல ரொம்ப சிம்ப்பிளா காட்டறாங்க.அதுலயும் பாப்பா சிறப்பா காட்டுது # அனுஷ்காடா





கால்ல மாட்ட வேண்டிய ரவுண்ட் கொலுசை கட் பண்ணி காதுல தொங்க விட்டிருக்கு அனுஷ்கா





அனுஷ்கா " ஏய்யா என் இடுப்பைப்பிடிக்கறே? ஏய்யா விட்டுட்டே?னு கேட்கும்போது ரஜினி எந்த பதிலுமே சொல்லலையே?




6
மோனா மோனா பாட்டில் ரஜினி கலக்கல்.ஆனா அனுஷ்கா கெட்டப் எடுபடலை.யாரு மேக்கப்விமன்?






7
ARR ரஜினி படத்துக்கு சரியா செட் ஆகலை.பிஜிஎம் சுமார்தான்.தேவா வா இருந்தா செமயா இருந்து இருக்கும்.ஆனா இன்ட்டர்நேசனல் மார்க்கெட்டிங் வேணுமே




8 அனுஷ்கா கால் மேல் கால் போட்டு டயலாக் பேசும் காட்சியில் கெண்டைக்கால் வரை பாரசூட் தேங்காய் எண்ணெய் தடவி மினுமினுப்பை ஏத்திட்டாங்க




9
சந்தானம் மேக்கப்பே இல்லாம செம யூத்தா இருக்கார்.




10
அனுஷ்கா உட்கார்ந்திருக்கும் எல்லா சீன் லயும் கால் மேல கால் போட்டு தெனாவெட்டா உக்காருது.இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ




11
முதல் 1 மணி நேரம் ஆட்டம் பாட்டம் சந்தானம் காமெடி ரஜினி அலப்பறைனு நல்லா தான் போகுது.இப்போ பிளாஸ்பேக் ஸ்டார்ட்




12 ரஜினி பஞ்ச் = லெட்ஸ் பிகின் # ரயில் பைட்




13
ராஜா காலத்து ரஜினி ஓப்பனிங் சீன் ல THE LEGEND OF ..,னு ஏதோ புக் படிச்ட்டு இருக்கார்.குறியீடு




14

பிளாஸ்பேக் காட்சிகளில் லைட்டா போர் அடிக்க ஆரம்பிக்குது




15
ரஜினி பஞ்ச் = SEE YOU SOON




16
HAPPY BIRTH DAY TO YOU என ரஜினி பிறந்த நாளில் ரிலீஸ் ஆன படத்தில் காட்சி வைத்தது இயக்குநர் டச் .ரசிகர்கள் கை தட்டல் அதிருது தியேட்டர்






17
ரஜினி முன் வில்லன் நிற்கும் காட்சியில் கேமரா கோணம் டாப் ஆங்கிளில் வெச்சிருக்கனும்.லோ ஆங்கிள் ல வெச்சா எடுபடாது.வில்லன் உயரம்




18 
படையப்பா வுடன் ஒப்பிடும்போது அதில் பாதி கூட வர்லை.இடைவேளை. 10மடங்கு னு சொன்ன ஷங்கர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்




19 
சூப்பர் ஸ்டாரின் ஓப்பனிங்தாறுமாறு தக்காளிசேறு பாட்டு சீன் 60 வயசா?30 வயசா?




20 
மக்களுக்காக ஏதாவது செய்யனும்னு ரஜினி 10 நிமிசத்துக்கு ஒரு டைம் சொல்லிட்டே இருக்காரு # தலைவர்டா




21
எஜமான் படத்தில் பட்டாம்பூச்சி பிடிக்கும் காட்சி போல் புயல் காற்றில் பறக்கும் பிளான் மேப் பேப்பர்சை பிடிக்கும் காட்சி




22
சின்னச்சின்ன நட்சத்திரங்கள் பிடிக்க வந்்தாய் .குட் மெலோடி. ஆனால் விஷூவல் டெம்ப்ளேட்்




23
60 வயதைக்கடந்த பின் நடித்த படத்தில் எம் ஜி ஆர் காட்டிய சுறுசுறுப்பை விட அதீத வேகத்தில் ரஜினி.இதுதான் ரஜினி




24
இஞ்சினியர் பில்டிங் கட்ட படும் சிரமங்களைக்காட்டினா அது மருமகன் தனுஷ் படம் ,அணை கட்ட கலெக்டர் படும் சிரமங்களைக்காட்டினா அதுரஜினி படம்




25
தேசியக்கொடியை ரஜினி பிடித்தபடி நிற்கும் காட்சி கலக்கல்.குறியீடு.இருவர் படத்தில் மணிரத்னம் உபயோகித்த டாப் ஆங்கிள் ஷாட் டெக்னிக்




26
பென்னி குயிக் ன் அணை கட்டிய வரலாற்றை சாமார்த்தியமான திரைக்கதையால் தியாக சரித்திரமாய் மாற்றியது அருமை




27
ரஜினி படத்துக்கே உண்டான பர பர சவால் காட்சிகள் நிறைந்த திரைக்கதையை எதிர்பார்க்காமல் பென்னி குயிக் ன் போராட்டக்கதையாகப்பார்க்கனும்







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1   ஆறு  மாத காலத்தில்  பெரிய  விஐபிகள்  கால்ஷீட்டில்   ஒரு  சக்சஸ்  மசாலாப்படம்  எடுப்பது    சாதா  விஷயம்   இல்லை.  பிரமாதமான  நிர்வாகம்.

2  அணைக்கட்டு  செட்டிங்   அட்டகாசமான  ஆர்ட்  டைரக்சன்


3   அருவி  , மலை  என  கேமரா  கண்ணுக்குக்குளிர்ச்சி


4   வசனங்கள்  ரஜினி  ரசிகர்களை  உசுப்பேற்றும்  விதத்தில்  இருப்பது


5 அனுஷ்கா  , சோனாக்சி  சின்ஹா  என  2  நாயகிகள்   இருந்தும்  கண்ணியமாக  கிளாமர் கண்ட்ரோலரா  இருந்தது





இயக்குநரிடம்  சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ரஜினி படத்துக்கு ஃபிளாஸ்பேக்  ஏன் இவ்வளவு  ஸ்லோவாக   இருக்கனும் ?  கோச்சடையான்  போல்  தீப்பொறி  பறக்கும்னு  பார்த்தா  முத்து   ஃபிளாஸ்பேக்  போல் தத்தித்தத்தி  வருதே?


2  ரயில் ஃபைட்  சீன்  எந்திரன்  ஃபைட்  போலவே   அதீத  கிராஃபிக்ஸ்  சீன் . ஏமாற்றம்  அளிக்கிறது .அதை  இன்னும்  நல்லா  ரியலிஸ்ட்டிக்கா  ரஜினி ஸ்டைலோட  காட்டி  இருக்கலாம்.


3  வில்லன்  பவர்ஃபுல்லா  காட்டப்படலை .அது  பெரிய  பின்னடைவு . பலமான வில்லனை   ஹீரோ  இன்னும் சாமார்த்தியமா  ஜெயிச்சாத்தானே  அதுல ஒரு கெத்து  இருக்கும் ? சோப்ளாங்கி வில்லனை  ஈசியா   ஹீரோ  ஜெயிச்சா  அதுல  எப்படி பாராட்டோ  , அப்ளாசோ அள்ள  முடியும் ?

4  நிலத்தின்  மதிப்பு  போல்  100  மடங்கு  பணம்  தர  ரஜினி ஒத்துக்கொள்கிறார். நிலத்துக்கு சொந்தக்காரர்களான  மக்களுக்கு அதிக  பணம்  தர்றார். இவ்வளவு  சொத்து ஏது ? என்ன தான்  ஜமீனா , ராஜாவா  இருக்கட்டுமே?

5  ஆர்  சுந்தர்ராஜன்   வில்லனாக  மாறி  மக்களுக்கு  ரஜினியை  கெட்டவனாக  காட்டும்  காட்சி அக்மார்க்  டிராமா . இது அந்தக்கால அரதப்பழசான  டெக்னிக்


6  ரஜினி கோபமாகப்பார்க்கும்  மாஸ்   பார்வை  தளபதிக்குப்பின் பெரிதாக  யாரும்  காட்டவில்லை . இந்தப்படத்திலாவது  உபயோகித்து  இருக்கலாம்






சி  பி  கமெண்ட் -
லிங்கா = ரஜினி மேஜிக் ,பென்னிகுயிக் கதை .பாட்ஷா படையப்பா அளவு இல்லை.ஆனா  முத்து  லெவல் ஹிட்  எதிர்பார்க்கலாம். குறுகிய காலத்தயாரிப்பான  பாபா , பாண்டியன்  போல்  பிளாப் ஆகிவிடும் என்ற   பலரது  யூகங்களுக்கு  ஆப்பு  -விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங்  =  3 / 5






டிஸ்கி - வசனம் அப்டேட்டில்  முதல் 19 ம் கருத்து கந்தன்  டி எல்லில் இருந்தது.நன்றி

1 comments:

uwinner said...

Why didn't you review the film with proper points sir...??? I'm one of your frequent blog visitors. You've used one line during your Kaththi review (Hero tries to stop the multinational companies from occupying & destroying the natural agricultural resources... He(Vijay) himself is facing a problem on Film release/ban... In this stage, he is trying to save a village (in Kaththi film)... That's OK... "Padam paakura makkalai Yaar kaapathuvaangalo?"). This was your review to an INSPIRED/OLD FASHIONED FILM like Kaththi.... Then why didn't you do the same to an average fair like LINGAA (I'm calling this film fair in terms of Script)... Superstar, Ajith movie apdina kalaaika maateenga... But Vijay, Vishal, Dhanush, Bharath maadhiri aalunga konjam sumaarana padam koduthalum 4 or 5 post unga blog la pottu kalaipeenga... If u r an Ajith fan/Rajni fan, then pls don't come for film critic business. Review your own stars film as "super /blockbuster" irrespective of the original review. If you have guts, Pongalukku release aagura "Yennai Arindhaal" padatha kalaaichu oru 5 blog ezhudha mudiyuma? Padam nalla irundha neenga kalaikka vendam. Nalla illanna, kalaikka dhairiyam irukka? Then I'll accept you're a true/neutral critic...Also request you to display my looooong comment to others also...