Thursday, June 07, 2012

இதயம் திரையரங்கம் - சினிமா விமர்சனம்

http://www.cineikons.com/wp-content/uploads/2012/05/idayam.jpeg
பேங்க்ல ஏதோ ஃபார்ம் ஃபில்லப் பண்ண ஹீரோ கைவசம் பேனா இல்லை, அந்த பேங்க்ல 17 பேர் இருக்காங்க, மீதி 16 பேர் ஹீரோ கண்ணுக்கு தெரில.. 17 வதா ஒரு ஏழரை தான் கண்ணுக்கு தெரியுது.. அதாவது ஹீரோயின் கிட்டே... பேனா கை மாத்து கேட்கறார்.. ஒரு லட்சம் ரூபா மதிப்புள்ள தங்கப்பேனா அது.. ஹீரோயின் கொடுக்குது.. 2 ரூபா ரீபிள் கொடுத்தாலே இந்தக்காலத்துல பக்கத்துலயே பம்மிக்கிட்டு நிப்பாங்க.. ஆனா பாப்பா பாருங்க ஞாபக மறதி.. ஏதோ ஃபோன் வருதுன்னு பேசிட்டே மறந்த வாக்குல போயிடுது..


 மறுபடி ஒரு டைம் ஹீரோயின் ஹீரோவை வழில பார்த்து பேனா கேட்கறார்.. ஹீரோ தன் ஃபிரண்ட் கிட்டே இருக்கு வாங்க போலாம்னு பைக்ல கூட்டிட்டுப்போறார். போற வழில இவங்க விழறதுக்காகவே டைரக்டர் ஒரு குழி தோண்டி வெச்சிருக்கார்.. அடிஷனல் கிளாமருக்கு கொஞ்சம் தண்ணியும் ஊத்தி வெச்சிருக்காங்க.. அதுல ஹீரோயின் விழறாங்க ஹீரோ அவர் மேல விழறாரு.. 2 பேரும் 4 தடவை புரண்டு விழறாங்க ..

அந்த தங்கப்பேனாவை ஹீரோவோட ஃபிரண்ட் சேட்டு கடைல அட்மானம் வெச்சிருக்காரு..  2 பேரும் போய் அதை மீட்டுக்கறாங்க..அப்புறம் ஒரு டைம் ஹீரோயின் கோயில்ல இருக்கும்போது கற்பூரம் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்கறாரு ஹீரோ ..  எப்படியோ 2 பேருக்கும் லவ் வந்துடுது.( இந்த ஐடியா எல்லாம் முதல்லியே தெரிஞ்சிருந்தா நானும் ஏதாவது ஃபிகர்ட்ட 1000 ரூபா கடன் கேடிருப்பேன் லவ் வந்திருக்கும் ஹூம் மிஸ்.. ). . ஹீரோயினோட அம்மா சொர்ணாக்காக்கா.. அதாவது சொர்னா அக்கா ஃப்ரம் தூள் படம் அவங்களுக்கே அக்கா. பேட்டை வட்டி வசூல் பார்ட்டி.. ஜோசியப்பைத்தியம்.. 

 ஜோசியர் சொன்னாருன்னு தன் மகனுக்கே மகளை கட்டி வைக்க துணியறாங்க.. அப்புறம் உக்காந்து யோசிச்சப்ப டைரக்டருக்கு உதிச்சது ரொம்ப கேவலமா இருக்கே.. உடனே ஒரு ஃபிளாஸ்பேக்.. 

 அதாவது ஹீரோயின் அவங்க குழந்தையே இல்லை.. வட்டி கட்ட முடியாத ஒரு ஆளோட குழந்தையை பணயமா பிடுங்கிட்டு வர்றாங்க .. ஃபேமிலி ஜோசியர் அந்த குழந்தை அதிர்ஷ்ட குழந்தை அப்டினு சொல்லிட்டதால தானே வளர்க்க முடிவு செய்யறார்..

 இப்பொ கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட்.. அது தப்பு.. அவங்க குழந்தை அவங்க கிட்டேயே வளரட்டும்னு சொன்ன புருஷனை நடு ரோட்ல சதக் சதக்னு 2 டைம் குத்தி கொன்னுடறாரு.வில்லி . இவங்க கிட்டே லாஜிக் மிஸ்டேக் எல்லாம் பார்த்தா நம்மையும் போட்டுத்தள்ளிடுவாங்க அப்டிங்கற பயத்துல ஆடியன்ஸ் கப் சிப் சைலன்ஸ்..  என்ன நடக்குது?ங்கறது மீதிக்கதை.. 

 நானும் என் காதலும் - இதுதான் இந்தப்படத்துக்கு வைக்கப்பட்ட ஆரம்ப கட்ட டைட்டில்.. அப்புறம் ஏனோ மாத்திட்டாங்க.. 

ஹீரோ சுமாரா நடிக்கறார்.. அவர் ஏன் தலையே சீவாம, தாடியோட பரதேசி மாதிரி படம் பூரா வர்றார்னு தெரியலை..  2 பாட்டுக்கு ஒழுங்கா ஸ்டெப் வெச்சு ஆடி இருக்கார்.. காதல் காட்சிகளில் முகத்தில் சந்தோசம்.. உம்மணாம்மூஞ்சிகள் கூட பக்கத்துல ஜோடி இருந்தா முகம் பிரகாசம் ஆகிடும்பாங்க.. அது போல .. 

 ஹீரோயின்க்கு 43 மார்க் போடலாம்.. பேரு ஸ்வேதா.. கோடம்பாக்கத்துக்கு இவங்க 4 வது ஸ்வேதா.. கொழுக் மொழுக்னு இருக்கு.. ஆனா தேறாது.. 

காதல் சுகுமார் காமெடி போர்ஷன்.. நாட் பேடு.. அவருக்கு ஒரு ஜோடி பேரு கவிதா.. அவங்களுக்கிடையேயான காதல் காட்சிகள் பார்த்தா லவ்வர்ஸ்க்கு கோபமே வந்துடும் .. அப்படி இருக்கு. 



http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=8406&option=com_joomgallery&Itemid=141


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின் கிட்டே ஒரு ஸ்கூட்டி இருக்கு.. அதை அடிக்கடி ஹீரோயின்  பைக் பைக்னு சொல்றார்.. ஹீரோ ஸ்கூட்டிங்கறார்.. ஏன்?


2. காணாம போன ஸ்கூட்டியை தேடி போலீஸ் ஸ்டேஷன் வர்ற ஹீரோ & ஹீரோயின் 2 பேரும் “ ஸ்கூட்டி என்னுது” குடுங்கன்னு கேட்டதும் உடனே எடுத்து குடுத்துடறாரு எஸ் ஐ.. ஆர் சி புக் அல்லது அந்த வண்டிக்கு அவங்க தான் ஓனர் என்பதற்கு ஆதாரம் ஏதும் கேட்கவே இல்லை.. ??


3. ஸ்கூட்டியை விதி முறையை மீறி ரோட்டில் நிறுத்தி வெச்சதால போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டிட்டு போயிடுது ஓக்கே .. அதை உள்ளே தானே வைப்பாங்க? ஸ்டேஷன் வாசல்ல ஹீரோயின் வந்து எடுக்க வசதியா வாசல்ல அனாமத்தா வைப்பாங்களா?

4. தங்கப்பேனா ஒரு லட்சம் மதிப்புன்னு ஹீரோயின் பாப்பா சொல்லுது.. ஹீரோவோட ஃபிரண்ட் அதை அடமானம் வெச்சு சேட் கிட்டே பணம் வாங்கிக்கறார்.. ஆனா அதை மீட்கப்போகும் ஹீரோ தன் கிட்டே இருக்கற கால் பவுன் மோதிரத்தை கொடுத்து  அந்தப்பேனாவை வாங்கிக்கறார்.. எந்த ஊர்ல அந்த மாதிரி இ வா சேட் இருக்காங்க?


5. ஹீரோ ஹீரோயின் கிட்டே “உங்க பேனா என் ஃபிரண்ட் கிட்டே இருக்கு”ன்னு சொன்னதும் ஒரு நல்ல பொண்ணு என்ன சொல்லனும்? ஃபோனை போட்டு அவனை இங்கே வரச்சொல்லுங்கன்னு சொல்லனும். அதை விட்டுட்டு முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆள்  பைக் பின்னால உக்காந்து ஊரையே ரவுண்ட் அடிக்குது.. 


6. ஒரு ஷாட்ல ஸ்கூட்டி ஆக்சிடெண்ட் ஆகி ஹீரோவும், ஹீரோயினும் பள்ளத்துல விழுந்து கட்டிப்பிடிச்சு உருள்றாங்க.. அப்போ ஸ்கூட்டி கவுந்து கிடக்கு.. அவங்க எந்திரிச்சு கரை ஏறும்போது ஸ்கூட்டி ஸ்டேண்ட் போட்டு ரெடியா நிக்குது? விட்டாலாச்சாரியா வந்தாரா?


7. கோயில்ல சனீஸ்வர பகவான் கிட்டே 247 விளக்கு தீபம் இருக்கு.. கற்பூரம் பற்ற வைக்கனும்னா அதுல பற்றி வெக்கலாம். அதை விட்டுட்டு ஹீரோ ஹீரோயின் கிட்டே தீப்பெட்டி ப்ளீஸ் ஹி ஹி -ங்கறார்.. அந்த கேனமும் எடுத்து கொடுக்குது..

8. ஹீரோ லோன்ல எடுத்த பைக் ஒரே ஒரு டியூ கட்டலைன்னு ஃபைனான்ஸ் ஆளுங்க வந்து மிரட்டறது ஓவர்.. அதுவும் 1ந்தேதி டியூ டேட்.. மாசாமாசம் 5 ந்தேதி கட்டறார்.. அன்னைக்கு 5 ந்தேதி.. அப்பவே ஆள்ங்க வந்துடறாங்க.. வர்றவங்க ஒண்ணா பைக்கை சீஸ் பண்ணிட்டு போகனும்.. அல்லது எச்சரிச்சுட்டு போகனும்.. அதை விட்டுட்டு பைக்கை எரிக்கறாங்க. லூசாய்யா அவனுங்க

9. ஃபைனான்ஸ் கம்பெனி அசிஸ்டென்ட் மேனேஜரா வர்ற ஒரு லேடி கேவலமான லோ கட் பனியனும், ஜீன்ஸ் பேண்ட்டும் போட்டுட்டு டியூட்டிக்கு வருது.. டிரஸ்சிங்க் சென்ஸ் நோ?

10. என்னதான் காமெடியா இருந்தாலும் காதல் சுகுமார் தன் காதலிக்கு முதல் காதல் பரிசா காண்டம் பாக்கெட் தர்றது ரொம்ப ஓவர்.. அதுக்கு அந்த பேக்கு பத்திரமா வைங்க , பின்னால (????)யூஸ் ஆகும் அப்டினு ஒரு டயலாக் வேற ..


11. தத்துப்பிள்ளைக்கு லவ் ஏற்பட்டதுக்காக தற்கொலை வரை போவேன்னு சொல்றதும்,  கொலை பண்றேன்னு மிரட்டறதெல்லாம் ஓவரோ ஓவ்ர்


12. க்ளைமாக்ஸ்ல படு கேவலமா ஒரு சீன்.. ஹீரோயினை, வில்லனை ஒரு கார்ல கூட்டிட்டு வில்லி போறா.. ஹீரோவுக்கு அவங்க இருப்பிடம் தெரியாது.. ஹீரோயின் செல்லுக்கு ஹீரோ ஃபோன் போடறார்.. வில்லி செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடறா.. வில்லன் உலக மகா கேனம் போல .. ஹீரோவுக்கு ஃபோனை போட்டு நாங்க இன்ன இடத்துக்கு போறோம், முடிஞ்சா வந்து காப்பாத்துங்கறார்.. அய்யகோ.. 

13. ஹீரோ அம்மா கட்டிட்டு இருக்கற வீடு பாதில நிக்குது.. கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபா தேவைப்படும் பிராஜக்ட்.. ஆனா ஒன்றரை லட்சம் கிடச்சா போதும்கற மாதிரி ஒரு  வசனம்




http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=9352&option=com_joomgallery&Itemid=141



 மனம் கவர்ந்த வசனங்கள்


1. கடவுளே.. எல்லாம் நல்லபடியா நடக்கனும்.. 

நடந்தா நல்லது.. நடக்கலைன்னா இன்னும் நல்லது..

 புரியலை


எதெது எப்பெப்போ நடக்கனுமோ அது அது அப்பப்போ நடக்கும்.. நம்ம கைல எதுவும் இல்லை.. 


2. என்னது முடி வெட்ட 50 ரூபாயா?பத்து ரூபா, 15 ரூபாய்க்கெல்லாம் வெட்ட மாட்டாங்களா?


நம்மைத்தான் வெட்டுவாங்க 


3. புள்ளை பெத்துக்கிட்டா மட்டும் போதாது,ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைக்கு சொந்த வீடு கட்டித்தரனும்.. 


4. நீ பேசற 4 வார்த்தைல ஒரு வார்த்தை என் பெற்றோரை குறை சொல்லிட்டே தான் இருக்கே..


5. கஷ்டத்தை தன் பக்கம் வெச்சுக்கிட்டு  லாபத்தை முதலாளி பக்கம் தர்றவன் தான் உண்மையான லேபர்.. 


6. டபுள் மீனிங்க் லேடி - உன்னை வேலையை விட்டுத்தூக்கிடுவேன்.. 

 ஹி ஹி நீங்க தூக்கனும், நாங்க அதை பார்க்கனும்.. 


 அவ்வ்வ்வ்

 என்ன ? நெஞ்சு வலிக்குதா? 

 வலிச்சது நெஞ்சு இல்லை....... 


7. தங்கம்னு இந்த மோதிரம் மட்டும் தான் உங்க கிட்டே இருக்கும்மா. அதையும் அடமானமா வைக்கனுமா?

 அதான் நீ இருக்கியேப்பா.


8. பொண்ணா கேட்கறே? இப்படித்தயங்கறே?PEN தானே கேட்கப்போறே?.


9. அடிக்கடி இங்கே வாங்க.. 


 யோவ், சேட்டு .. உன் நகைக்கடை( அடகுக்கடை) என்ன பாத்ரூமா  அடிக்கடி வந்துட்டுப்போக ..?


10. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்.. மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்.. 

 கேட்கறது  கடன்.. அதுல என்ன இங்க்லீஷ் வேண்டிக்கிடக்கு?


11.  இப்படி பட்டுன்னு ஐ லவ் யூ சொன்னா எப்படி?

காதல் வந்துட்டா பொண்ணை பார்த்து பட்டுன்னு லவ்வை சொல்லிடனும்..

 அவளுக்குப்[பிடிக்கலைன்னா?

 பிடிக்க வைக்கனும்.. 


12. வீடு கட்ட ஆசைப்பட்டா ஆரம்பிச்ச வேகத்துல கட்டி முடிச்சுடனும்.. இல்லைன்னா இழுத்துக்கிட்டே தான் போகும்.. 


13. ஜோசியரே.. நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் காலண்டர்லயும், பஞ்சாங்கத்துலயும் நாங்க பார்த்துக்க மாட்டோமா? உன் வேலை என்ன? நடக்கபோறதை சொல்லு பார்ப்போம்.. என் பொண்ணு லவ் பண்றாங்கற மேட்டரை நீ ஏன் முதல்லியே சொல்லலை?

 சனி எப்பவும் சொல்லிட்டு வராதுங்க.. காதலும் சனி மாதிரி தான். 

 http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/05/Idhayam-Thiraiarangam-Movie-Stills16-300x199.jpg




படத்துல ஆச்சரியமான விஷயம் 2 பாட்டு நல்லா பண்ணி இருக்காங்க..

 ஒரு வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே ,  ஒரு ஓரத்துல உக்காந்து பேசனும் 2 பாட்டும் நல்லா எடுத்திருக்காங்க.. டான்ஸ் மாஸ்டர் குட்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமென்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம். ஈரோடு ஸ்ரீலட்சுமில படம் பார்த்தேன்

'துப்பாக்கி’! - ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி @ விகடன்

http://mimg.sulekha.com/tamil/thuppaki/stills/thuppaki-05.jpg 

''விஜய்க்கு இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் கிடையாது. ஏன்னா, படமே செம பஞ்ச்!'' - ஆம்,  ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடிகளின் அடுத்த வெடி... 'துப்பாக்கி’!




1. ''விஜய் ஒரு போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்னு ஏகப்பட்ட செய்திகள் அலையடிக் குதே... எது உண்மை?''



''என்னங்க இது... க்ரோர்பதி ஷோ மாதிரி ஸ்ரெய்ட்டா பதில் கேட்கிறீங்க. இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை.


 ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம். 


ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம 'துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ஆகஸ்ட் 15-ல் துப்பாக்கி வெடிக்கும்!''





 
2. ''இந்தி 'கஜினி, 'துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே?''



''இந்தி 'கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, 'மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க. வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. 'துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன்.




 காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.''



3. ''அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?''



''இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, 'என்னது... நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா,  10 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி 'தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். 


அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு. ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் 'துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர். அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். 


 இப்பவும் அஜீத், விஜய்... ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க. ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!''

http://www.actorvijay.net/phpThumb/user_image/Thuppakki%20new%20still.jpg



'4. 'விஜய் சுருட்டு பிடிக்கிற 'துப்பாக்கி’ போஸ்டர்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பு எதிர்ப்புத் தெரிவிச்சு இருந்தாங்களே?''


''என் படங்கள்ல வில்லன்கூட ஸ்மோக் பண்ண மாட்டார். பள்ளிக்கூடப் பெண்கள் காதலிக்க மாட்டாங்க. இதெல்லாம் எனக்கு நானே வெச்சுக்கிட்ட கட்டுப்பாடுகள். ஆனா, 'துப்பாக்கி’யில் அந்த சுருட்டு ஷாட் தவிர்க்கவே முடியலை. ஆனா, பப்ளிசிட்டிக்கு அதை அனுப்பிச்ச பிறகு எனக்கே ரொம்ப உறுத்தலா இருந்தது. அதைத் தூக்கிடலாம்னு நானே யோசிச்சுட்டு இருந்தப்ப, அந்த எதிர்ப்பு வந்தது. நாங்களே அதை நீக்கிட்டோம்.


 யாரோட வற்புறுத்தலுக்கும் பயந்து அதை எடுக்கலை. ஆனா, இதை எல்லாம் அரசியல் ஆக்குறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. 'ஸ்மோக் பண்ணக் கூடாது’ங்கிற பொறுப்பு இங்கே எல்லாருக்குமே வரணும். ஆனா, இவ்வளவு பேசுறவங்க, போராடுறவங்க சிகரெட் கம்பெனி முன்னே நின்னு, அதை நிரந்தரமா மூடச் சொல்லிப் போரா டலாமே? 'எந்தக் கட்சி தன் ஆட்சி யில் சிகரெட்டைத் தடை பண்ணு தோ, அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சியோடதான் கூட்டணி’னு சொல்லலாமே?  அப்படி எல்லாம் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஆனா, ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. இதுதான் இங்கே ஆச்சர்யம்!''



5. ''விஜய் இந்தி 'ரௌடி ரத்தோர்’ படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கார். நீங்க ளும் அடுத்து இந்திப் படம்தான் இயக்கப் போறீங்க... ரெண்டு பேரும் இந்தியிலும் இணைவீங்களா?''


''அந்த அளவுக்கு இன்னும் யோசிக்கலை. இப்ப எங்க ரெண்டு பேர் கவனமும் 'துப்பாக்கி’ மேல் மட்டும்தான். மதன் கார்க்கி எழுதுன ஒரு பாட்டை விஜய் சாரே பாடிஇருக்கார். 'நான் பாடியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க’னு சொன்னார். இருந்தாலும் சொல்லிட்டேன். 



ஆறு வருஷத்துக்குப் பிறகு பாடியிருக்கார். ஆல்பத்துல அது நிச்சயம் ஹைலைட். 'துப்பாக்கி’ ஷூட்டிங் சமயம்தான், 'சார்... பிரபுதேவா அவர் படத்துல ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார். போயிட்டு வரவா?’னு கேட்டார். 'தாராளமா! அதே மாதிரி நாளைக்கு என் இந்திப் படத்துக்குக் கூப்பிட்டாலும் வருவீங்கதானே’னு ஜாலியா கேட்டேன். 'ஓ, அப்படி ஒண்ணு இருக்கா. நீங்க கூப்பிட்டாலும் வருவேன்’னு சொல்லியிருக்கார். இதுல மேட்டர் என்னன்னா... என் அடுத்த இந்திப் படம் 'துப்பாக்கி’ ரீ-மேக். அக்ஷய் குமார் நடிக் கிறார். அதனால, விஜய் எனக்குக் கொடுத்த அந்த சாய்ஸைப் பயன்படுத்திக்க ஏகமா வாய்ப்பு இருக்கு!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqS__HpzC3gA3Wy79dhr5bU96Xk09TRpC_KnYpBee4YNb2EyMZSiAIupcuOxatKIyYrZFQVrxHGNdJ81yDwhLNKjO7Eoi1PlMw88fHPpTiD3I0lfIh0S6HuvMTgBGVhygiUnWduWEJQFA/s1600/Kajal-Agarwal-in-Tupakki-Movie-Most-Inside-1.jpg



'6. ' 'ரமணா’வுக்குப் பிறகுதான் விஜயகாந்த் தீவிர அரசியலுக்கு வந்தார். விஜய்கிட்டேயும் அரசியல் ஆர்வம் இருக்கு. அதுக்கேத்த தோட்டா 'துப்பாக்கி’யில் இருக்கா?''


''ஹீரோக்களின் அரசியல் ஆசைக்குப் படம் பண்றது என் வேலை இல்லை. என் கதைக்கு எது தேவையோ, அதை மட்டும்தான் பண்ணுவேன். ஹீரோவுக்கு அந்தப் படம் ஹிட்டாகணும், ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகணும். அவ்வளவுதான். 'ரமணா’வுக்குப் பிறகு விஜயகாந்த் சார் அரசியலுக்கு வந்ததும், அதே 'ரமணா’ தெலுங்கு ரீ-மேக் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி சார் அரசியல்ல நுழைஞ்சதும் நானே எதிர்பார்க்காம நடந்தது!''


 http://www.trendymovies.com/wp-content/gallery/tamanna-latest-photo-gallery/tamanna_latest_photo_gallery-81.jpg?9d7bd4

கிருஷ்ணவேணி பஞ்சாலை - ஒரு பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6hVZdfH38K3lMLpZUel7vtHiF6dpa4Esy_kd6L_TZVGcvwqEgHAG4ag3t9w2k6w8ZHIDthPPt0jJrUCEAKVnHJnmFhhENZYXo2vv94SH0juxj2kU534-VvzRpgD_C5UtfhZTQE8P1qms/s1600/bkp-print-07.jpg
 
 
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் கதைதான் ஹீரோ என்று அப்படத்தின் நாயகன் ஹேமசந்திரன் கூறினார். சென்னையில் நடைபெற்ற எம்.பி.ஏ. மாணவர்களுக்கான  மூவி மார்க்கெட்டிங் பற்றிய இருநாள் பயிலரங்கில் பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு  ஹேமச்சந்திரன் பதில் அளித்தார். 


`புழல்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஹேமச்சந்திரனுக்கு கிருஷ்ணவேணி பஞ்சாலைதான் கதாநாயகனாக நடிக்கு முதல் படம். அதில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட ஹேமசந்திரனிடம் மாணவர்கள் கேட்டத் துடுக்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்....

மாணவர் கேள்வி: எப்படி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வந்திங்க...

ஹேமச்சந்திரன்
:  `புழல்` படத்தில் என்னுடன் நடித்த இந்தப் படத்தின் காஸ்டிங் இயக்குநர் சண்முகராஜாதான் `கிருஷ்ணவேணி பஞ்சாலை` படம் குறித்து சொன்னார். அவர்தான் என்னை படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் தனபால் பத்மநாபனிடம் அறிமுகம் செய்தார். அவரை சந்தித்து கதையைக் கேட்டவுடன் இந்தப் படத்தில் நமக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன் அவ்வளவு நல்ல கதை. எப்படியாவது இந்தக் கதையில் நடிக்கனும் என்ற ஆசை அதிகமானது.
 
தனபால் பத்மநாபன் எனக்கு ஓகே என்றார் `பை காட்ஸ் கிரேஸ்" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல படத்தில் நடித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கதைதான் உண்மையான ஹீரோ, நாங்கள் எல்லாம் அதில் பாத்திரங்கள்தான். இயக்குநரின் திறமைதான் இந்தப் படத்தின் வெற்றி. நல்ல கதையுள்ள இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததையே பெருமையாக நினைக்கிறேன்.
 
மாணவர்: நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்..

ஹேமச்சந்திரன்: படத்திற்கு என்ற நடிப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. அதில் பல புதிய  விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் கேரட்டருக்குள் இன்வால்வாக வேண்டும் என்பதற்காக படத்தின் கதையைச் சொல்லியபின் ஒரு வாரம் நேரம் கொடுத்தார் இயக்குநர். சண்முகராஜாவின் நடிப்பு பட்டறையிலும் நிறைவே கற்றுக்கொண்டேன். அதை வைத்து நடித்தேன். சிறப்பாக வந்துள்ளது.

மாணவர்: இயக்குநரின் அணுகுமுறை எப்படி இருந்தது?

ஹேமச்சந்திரன்: மிக அமைதியானவர். தேவைப்படும் போது மட்டுமே பேசுவார். இப்போது மேடையில் அமர்திருப்பது போல் தான் அமைதியாக இருப்பார். படப்பிடிப்பின்போது தொடர்ந்து மில் சத்தத்திற்கு மத்தியில் நடிக்கும் போது கண்களினால் மட்டுமே சரியா என்று கேட்டு நடிப்பேன். தனபால் பத்மநாபன் வெரி வெரி ஜென்டில் மேன்.

மாணவர்: நடிப்பு, வசனம் தப்பாகி இயக்குநரிடம் அடி, திட்டு வாங்கியதுண்டா?

ஹேமச்சந்திரன்: வசனம் சரியாக பேச சொல்வார், வேறு மாதிரி அனுபவம் ஏதும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மில் சத்தத்தில் கண்களில் நிறை பேசிக்கொண்டோம்.

மாணவி: ரொமான்ஸ் சீன் நடிக்கும் போது சங்கடம், கஷ்டம் இருந்ததா?

ஹேமச்சந்திரன்: கஷ்டமாக இருந்தது. டென்ஷனாக இருந்துச்சு, இயக்குநர் கூல் டவுன், டென்ஷன் ஆகாதீங்க என்று கூல் பண்ணுவார்.

மாணவி: காதல் காட்சிகளில் உண்மை காதலர்கள் போல இயல்பாக நடித்துள்ளார்கள் என்று டைரக்டர் சொன்னார், முன் அனுபவம் உண்டா?

ஹேமச்சந்திரன்: பொய் சொல்ல விரும்பவில்லை, முன் அனுபவம் உண்டு, இல்லை என்று சொல்ல முடியாது  என்றார் ஹேமச்சந்திரன்.
 
நன்றி - தெனாலி  

https://lh5.googleusercontent.com/-nBCg3TpEzo4/TcEKUhbVkYI/AAAAAAAAAEY/pfaFzuNZxHY/bga-21-copy.jpg
 
 
தனபால் பத்மநாபன் இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. இப்படத்தில் கேரள நடிகையான நந்தனா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
 
கே: இப்படம் குறித்து..?
 
கிருஷ்ணவேணி பஞ்சாலை தமிழில் எனது முதல் படமாகும். இப்படத்தின் இயக்குனரான தனபால் பத்மநாபன் ரொம்ப யதார்த்தமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.
 
கே: இப்படத்தில் உங்களது கேரக்டர் என்ன?
 
இப்படத்தில் எனது பெயர் பூங்கோதை. எனது தோழிகள் 'பூ' என்று கூப்பிடுவார்கள்.
 
கே: படத்தின் கதை என்ன?
 
சொல்லக் கூடாதுன்னு டைரக்டர் சொல்லி இருக்கார். பஞ்சாலையில் பணியாற்றும் மக்களின் யதார்த்தப் பதிவுதான் இப்படம். இதில் ஒரு காதல் கதையும் இருக்கு. இப்படத்தின் ஹீரோவான ஹேமச்சந்திரனுடனான லவ் கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு.
 
கே: இப்படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
 
இப்படத்துல மொத்தம் 4 பாடல்கள். அதில் 'உன் கண்கள் கண்ணாடி' பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடலாகும்.
 
கே: இப்படத்தின் கதை கோவை, உடுமலை பகுதியில் என்பதால் டயலாக் எல்லாம் எப்படி பேசினீங்க?
 
டயலாக்ஸ் எல்லாம் கோவை ஸ்லாங்குல இருந்துச்சி. என்னால சரியாவே சொல்ல முடியல. ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் டயலாக் பேசினேன். நல்லவேளை நான் டப்பிங் பேசல. அதனால தமிழ் ஆடியன்ஸ் தப்பிச்சாங்க..!
 
 
 
ஞ்சாலைத் தொழிலாளர்களின் சுவாரசியமான உலகத்தைப் பதிவு செய்யும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தின் இசை 05.01.2012 முதல் விற்பனைக்கு வந்தது. இயக்குனர் மகேந்திரன் அவர்கள் வெளியிட மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

1957 முதல் 1990-கள் வரையிலான கோவை, உடுமலை வட்டார மில் தொழிலாளர்களின் வாழ்க்கையே இத்திரைப்படம். பஞ்சாலைகளை பின்னணியாக வைத்து ஓர் அழகான காதல் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
 
 
  கேண்டீன் நேர சுவாரசிய பேச்சுகள், அனல் பறக்கும் கேட் கூட்டம், குடும்பங்களாக செல்லும் சுற்றுலா, தொழிற்சாலைக் குடியிருப்புகளில் உருவாகும் நட்பு என்று மற்றவர்களுக்கு வாய்க்காத சுவாரசியமான உலகங்களைக் கொண்டது மில் தொழிலாளர்களின் வாழ்க்கை. இன்றைய சாஃப்ட்வேர் இளைஞர்கள், யுவதிகளின் வாழ்க்கைமுறை எப்படி மற்றவர்களால் ஆர்வத்தோடு பார்க்கப்படுகிறதோ, அப்படி 1970களிலும் 80களிலும் இருந்தது மில் தொழிலாளர்களின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் சந்தோஷங்களையும் வலிகளையும் பதிவு செய்யும் படமே ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’.

‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யின் நாயகனாக ஹேமச்சந்திரனும், நாயகியாக நந்தனாவும் நடிக்கிறார்கள். நந்தனாவிற்கு இது முதல் படம். மில் முதலாளியாக ராஜீவ் கிருஷ்ணா, சூப்பர்வைசராக சண்முகராஜா, யூனியன் தலைவராக எழுத்தாளர் அஜயன் பாலா, அம்மா வேடத்தில் ரேணுகா, மற்றும் பாலாசிங், பூவிதா, ஹேமலதா ஆகியோர் நடிக்கிறார்கள். 
 
பாலுமகேந்திராவின் உதவியாளர் சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்ய, ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்கு இசை அமைத்த என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். வைரமுத்து, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர். படத்தொகுப்பு மு.காசிவிஸ்வநாதன். மின்வெளி மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யை எழுதி இயக்குகிறார் தனபால் பத்மநாபன். படத்தின் இணை தயாரிப்பு ‘சக்தி மசாலா’ டாக்டர் சாந்தி துரைசாமி மற்றும் ‘மாஃபா’ க.பாண்டியராஜன்.

சுவாரசியமான கதைக்களம், ரசனையான காட்சிப்பதிவுகள், மென்மையான காதல், இயல்பான நகைச்சுவை என்று ரசிகர்களின் இன்றைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இயல்பான திரைப்படங்களை ஆதரிக்கும் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை 05.01.2012 அன்று முதல் தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் விற்பனைக்கு உள்ளது. 

நன்றி - மாலை மலர், தெனாலி 



குநந்தன் முதலில் இசை அமைத்த படம் இது. ஆனால், 'தென்மேற்குப் பருவக் காற்று’ முந்திக்கொண்டு பெயர் வாங்கிவிட்டது. ஹரிஷ் ராகவேந்திரா-சித்தாரா குரல்களில் 'ஆத்தாடி ஒரு பறவை பறக்குதா...’வைக் கேட்கும்போதே மனசு லேசாகிப் பறக்கத் தொடங்கிவிடுகிறது. 
 
 
ஆல்பத்தின் இளமை ஊற்று தாமரையின் வரிகளில் ராமன் மஹாதேவன், ஸ்ரேயா கோஷல், ரெனினா ரெட்டியின் குரல்களில் ஒலிக்கும் 'உன் கண்கள்...’ பாடல். இதில் ஹிட் காலர் ட்யூன் அந்தஸ்து பெறுவதற்கான அறிகுறிகள் நிறைய தெரிகின்றன. ஆயுத பூஜை சூழலில் தாளம் போடவைக்கும் மெட்டு  'ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி’ பாடல். ஜாஸி கிஃப்ட்டின் உருமிக் குரலில் 'ரோஜா மலையே...’ வரிகளை விழுங்காத வசீகர மெட்டு!    
 
 
 
கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தை குடும்பத்தினரோடு கண்டுகளிக்கலாம் என்று ‘யு’ சான்றிதழை வழங்கியிருக்கிறது தணிக்கைக்குழு.
 
 அதேபோல சிறந்த தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் கலாசார ரசனை மிக்க படங்களுக்கு தமிழக அரசு வழங்கும் வரி விலக்கையும் இந்தப்படம் பெற்றிருக்கிறது.


வரி விலக்கிற்காக படம் பார்த்த அரசு அதிகாரிகள் படத்தின் முடிவில் நெகிழ்ச்சியோடு படக்குழுவினரைப் பாராட்டியதோடு இந்தப் படத்தின் தாக்கம் தங்களுக்கு இரண்டு நாட்களுக்காவது இருக்கும் என்று கூறியுள்ளனர்.


அதிகாரிகள் மட்டத்தில் கிடைத்திருக்கும் இந்த விமர்சனம் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படம் குறித்து சினிமா வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.


‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய ‘ஆலைக்காரி.. பஞ்சாலைக்காரி..’ பாடலும் தாமரை எழுதிய ‘உன் கண்கள் கண்ணாடி..’ பாடலும் தமிழகத்தின் தலைநகரம் முதல் கடைக்கோடி கிராமம் வரை ஒலிக்கின்றன.


வானொலிகளில் நேயர்களின் விருப்பமான பாடல்களாக இந்த இரண்டு பாடல்களும் இருக்கின்றன.


இன்னொரு பாடலான ‘ஆத்தாடி ஒரு பறவ பறக்குதா..’ தமிழகத்தில் ரசிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கடல்தாண்டி இலங்கையில் டாப் 10 பட்டியலில் ஏற்கனவே வந்துவிட்டது.


சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் வானொலி சேனல்களில் நேயர்கள் விரும்பிக் கேட்கும் பட்டியலில் முன்னணியில் உள்ளது ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ பாடல்கள்.


இந்தப் படத்தின் பாடல்கள் வெறுமே வார்த்தை ஜாலங்களாக இல்லாமல் கதையின் போக்கை உணர்த்தும் விதத்தில் இருப்பதே இதன் தனித்தன்மைக்கு காரணம் என்று பாடல்களைக் கேட்டவர்கள் சொல்லும் அளவுக்கு வரிகள் புரியும் வகையில் இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.


சமீபத்தில் கிருஷ்ணவேணி பஞ்சாலை குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புக்காக நிஜமான பஞ்சாலைக்கே சென்றிருந்தனர் படக்குழுவினர்.



அப்போது அவர்களை எதிர்கொண்ட மில் தொழிலாளிகள், ‘எங்கள் படத்தை எப்போது எங்களுக்குக் காட்டப் போகிறீர்கள்..?’ என்று உரிமையோடு கேட்க, சாதாரண வாழ்க்கை வாழும் மில் தொழிலாளிகள் இந்தப் படத்தை தங்கள் வாழ்க்கையைச் சொல்லும் படமாக ஏற்றுக் கொண்டிருப்பதை அறிந்து நெகிழ்ந்து நின்றிருக்கிறார்கள்.
 
 

குஷ்பூவைக்கிள்ளிய குணகேடன் யார்? கோர்ட்டில் வழக்கு- கல கலப்பு, கை கலப்பு, கிளுகிளுப்பு

http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சி.பி - அவர் சர்ட் பாக்கெட்ல மர்ம நபர்னு ஐ டி கார்டு குத்தி இருந்தாரா?

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


சி.பி - வாரிசு அரசியல் கூடாது என்ற அண்ணா கொள்கைக்கும் சேர்த்துத்தான் இந்த மலர் வளையமா ? தலைவரே?

 அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.


சி.பி - எனக்குப்பரிசுகள் எதுவும் வேண்டாம், உங்கள் பாராட்டும் ,வாழ்த்தும் போதும்னு ஃபார்மாலிட்டிக்கு சொல்லிட்டே வாங்கிட்டு இருந்தாராம்.. 


இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை.


சி.பி -இதெல்லாம் சும்மா டுபாக்கூர்.. கலைஞரை பார்க்கனும்னு நினைச்சா அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருப்பார்.. அவங்க ஆஃபீஸ்ல அல்லது வீட்ல டைம் சொல்லி இருப்பாங்க.. மேடம் சும்மா சீன் போடறதுக்கும், ஒரு பர பரப்பை கிளப்பவும் மக்கள் மத்தில சந்திக்க முடிவு பண்ணி இருப்[பாங்கன்னு ஒரு பட்சி சொல்லுது.. 


இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார்.


கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர்.


சி.பி - திமுக நிர்வாகிகளுக்கு என்ன அதிர்ச்சின்னா இத்தனை நாளா நாம பக்கத்துலயே இருக்கோம், ராஸ்கல்ஸ் முந்திக்கிட்டானே அப்டி கூட இருக்கலாம்./. 





மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது.


சி.பி - திராவிடக்கட்சியின் நலனுக்காக அமைதி காத்த அரண்மனைக்காவலே! உங்களை பெரிய பதவியில் அமர்த்த ஆவலே!


இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்


சி.பி - ஆமா, நடக்கலை, கிள்ளுனதும் அவன் ஓடிட்டான்.. 
 -------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifK3prHGRq7apGwlvlRGgNt0jbogccE43PwWwxXlIZstM2XMf0h9zak81bC_UaKYQWUQkjWABRutboeVcq27eu8gHPnv7aN6REPdRnjMOUaBVeQxgKXldFNgW1C2V-ee9yil3axIn0B_g1/s1600/Namitha_Kushbo.jpg
இதுவரை நீங்க படிச்சது செய்தி.. இனி சும்மா சில  கற்பனை ஜோக்ஸ்.. இது சும்மா சிரிக்க மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்த அல்ல. அப்படி யார் மனதையாவது புண் படுத்துனா இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னால ஃபேஸ்புக், கூகுள் பஸ், பிளாக், ட்விட்டர் டைம் லைன், டி எம் என எல்லா இடங்களிலும் போய் மன்னிப்பு கேட்டுட்டு இருக்க முடியாது, ஏன்னா ஆல்ரெடி அப்படி கால்ல விழுந்து விழுந்து முதுகு கூன் போட்டுடுச்சு..  ஹி ஹி


1. ஜட்ஜ் - நடிகையோட இடுப்பைக்கிள்ளுனது நீதானா? உன் பேரென்ன?

கைதி - கிள்ளி வளவன் யுவர் ஆனர்.. 


-----------------------



2. மேடம், நீங்க மேடைல பேசுன பெண்ணியப்பேச்சுதான் அப்படி ஒரு சம்பவம் நடக்கக்காரணமா?

 ஆமா யுவர் ஆனர், பெண்கள் எல்லாம் கிள்ளுக்கீரை அல்ல  அப்டினு ஆவேசமா பஞ்ச் டயலாக் பேசுனேன், கிள்ளிட்டுப்போயிட்டான்.. 


---------------------------------------


3. ஜட்ஜ் - உங்க இடுப்பைக்கிள்ளுனதைப்பார்த்த சாட்சி இருக்கா?

நடிகை - நோ யுவர் ஆனர்.. அப்போ நான் பயத்துல கண்ணை மூடிக்கிட்டேன்.. அதனால யார் கிள்ளுனான்னும் தெரியாது, அதை யாரெல்லாம் பார்த்தாங்கன்னும் தெரியாது.. 


---------------------------------------



4. இன்ஸ்பெக்டர், நடிகையோட இடுப்பைக்கிள்ளுனது இந்தாளுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

உள்ளுவதெல்லாம் சைடு உள்ளல், கிள்ளுவதெல்லாம் கில்மா அள்ளல்னு டைரில எழுதி வெச்சிருந்தான்


-----------------------------------


5. யுவர் ஆனர், என் ஆதர்ச நடிகையை நேர்ல பார்த்ததை என்னால  நம்ப முடியலை,நான் கண்டது கனவா? நனவா?ன்னு தெரிஞ்சுக்கத்தான் அவங்களைக்கிள்ளுனேன், சாரி..



---------------------------------


6. ஜட்ஜ் - உங்க இடுப்பைக்கிள்ளுனதுக்கு வீடியோ ஆதாரம் இருக்கா? ஏது?


நடிகை - முதல் டைம் கிள்ளுனப்ப என் மொபைலை எடுத்தேன், 2 வது டைம் கிள்ளுனப்ப அதை வீடியோ எடுத்தேன்.. பெண் புத்தி முன் புத்தி.. 


-------------------------------

7. கட்சி உறுப்பினர்கள் 80,000 பேரும் ஏன் க்யூவில் நிற்கறாங்க?

 சிலம்பாட்டம் படத்துல வர்ற மாதிரி  யார் கிள்ளுனது?ன்னு கண்டு பிடிக்க  இப்படி ஏற்பாடு.. 


-------------------------------------


8. ஜட்ஜ் - ஏய்.. மிஸ்டர்.. பொது இடத்துல  ஒரு நடிகையை கிள்ளி இருக்கே. இது தப்பில்லையா?


கைதி - XQS மீ யுவர் ஆனர், நான் கிள்ளுனது பொது இடம் அல்ல, பிரைவேட் இடம்.. 



----------------------------------


9. மேடம், இதுவரை 125  படங்கள்ல  நடிச்சிருக்கீங்க.. அதுக்கான ஆதாரம் http://en.wikipedia.org/wiki/Kushboo_Sundar.. அதுல 84 படங்கள்ல ஹீரோவோ, வில்லனோ கிள்ளி இருக்காங்க. பத்தோட 11, அத்தோட இதுவும் 1னு விட்டுடுங்க.. 


ஸாரி.. அது விட முடியாது.. அதுக்கு சம்பளம் குடுத்தாங்க.. 



---------------------------


10. நடிகை - என் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடா ரூ 2 லட்சம் வேணும். 


 அப்போ 2 லட்சம் குடுத்துட்டு யார் வேணும்னாலும் ஒருக்கா கிள்ளிக்கலமா?



-------------------------------------------


11.  இன்ஸ்பெக்டர், டியூட்டி டைம்ல ஒரு நடிகையோட இடுப்புக்கு பவுடர் போட்டு விட்டிருக்கீங்க.. இது தப்பில்லையா?


அட , நீங்க வேற யுவர் ஆனர்.. கிள்ளுன ஆளோட கை ரேகையை எடுக்க வேணாமா? ஃபாரன்சிக் ஆளுங்க தயங்குனாங்க. 


--------------------------------------


12. ஜட்ஜ் - நடிகையை கிள்ளுன குற்றத்துக்காக உனக்கு  2 வருஷ தண்டனை.. 


கைதி -யுவர் ஆனர், வேணும்னா அவங்களையும் என்னை கிள்ளிக்க சொல்லுங்க, தானிக்கு தீனி சரியாப்போயிடும் :0


------------------------------


13. வக்கீல் - சம்பவம் நடந்தப்போ நீங்க என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?


நடிகை - சம்பவம் நடந்த பிறகு, நான் அதை சொன்ன பிறகு மீடியாக்கள் கேட்கப்போகும் கேனத்தனமான கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லனும்னு  மனசுக்குள்ளேயே ரிகர்சல் பார்த்துட்டு இருந்தேன்


--------------------------


14. தலைவரே... நம்ம கட்சி 2 கோஷ்டியா பிரிஞ்சுடுச்சாமே?


ஆமா, நடிகையை கிள்ளுனதை நேரில் பார்த்த கோஷ்டி, பார்க்காத கோஷ்டி.. 


----------------------------

15. மேடம், இது எல்லாமே டிராமா தான் அப்டினு சொல்றாங்களே?


 அட ராமா 


----------------------


16. ஜட்ஜ் - பிரபல நடிகையோட இடுப்பைக்கிள்ளுனியா? 


 கைதி - யாரோ ஒரு லேடியை கிள்ளுனேங்க,அவங்க பிரபலமா?ன்னு கேட்டுக்கலை :)



--------------------------------

http://www.thenaali.com/cpanel/Editor/images/articles/kushboo-press-meet.jpg

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதாபோல ஏன் முயற்சிக்கலை?-சந்தானம் பேட்டி @ விகடன்

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Santhanam/Santhanam-0011.jpg 

1''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 

 
 ''ஏங்க... அவர் என்ன கொத்தவால் சாவடி மார்க்கெட்டா... இல்லை நான்என்ன கோயம்பேடு மார்க்கெட்டா? யாராலயும் யார் மார்க்கெட்டும் போகாதுங்க. சினிமா வுல யாரும் யாரையும் தீர்மானிக்க முடியாது. இப்ப நான் ஹிட்டடிச்சா அதுக்கு யாரெல் லாம், எதெல்லாம் காரணமோ... அதுவேதான் நான் சொதப்பினதுக்கு ஒரு வகையில கார ணமா இருக்கும். புல்லரம்பாக்கம் பிரதர், ஆமா... அவருக்கு எங்கே மார்க்கெட் போச்சு? அவர் இப்பவும் ஸ்க்ரீன்ல வந்தா... ஆடியன்ஸ் அலறுவாங்களே!''



2. ''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


'' 'ஓகே... ஓகே’ படத்துல ஊர்  உலகமே கேட்கிற மாதிரி சொல்லிட்டேனே... 'எந்த ஒயின்ஷாப்லயும் உங்க பிராண்ட் சில்லுனு கிடைக்குறதில்லை’னு. அதே பிராண்ட்தான் தோணி!''



3. ''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு. ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட்ஸ் சொல்லுங்களேன்?'

'
''ஹன்சிகா, தமன்னா எல்லாருமே செம க்யூட். அவங்க ஸ்பாட்ல என்ன வார்த்தை சொன்னாலும் நான் அதைரிப்பீட் அடிச் சுட்டே இருப்பேன். இப்படியே கலாய்ச்சுட்டே இருக்கும்போது கோபம் வந்து கண்டபடி திட்டுவாங்க. அதுல இருந்து நாலு வார்த்தை யைப் பிடிச்சு, படத்துல அந்த வார்த்தையை வெச்சு அவங்களையே கலாய்ப்போம். எப்படி நம்ம தொழில் ரகசியம்?


அவங்களுக்கு டயலாக் வருதோ இல்லையோ, ஆனா ஃபேஸ் எக்ஸ்பிரஷன் பயங்கரமா இருக்கும். 'அவர் வீட்ல இல்லை. வெளியே போயிருக்கார்’. இதுதான் டயலாக். ஆனா, 'அங்கே வீடே இல்லை. பல வருஷமா அங்க ஆள் நடமாட்டமே இல்லை’ங்கிற அளவுக்கு அதுக்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பாங்க. நாம புரிஞ்சு நடிக்கிறதைவிட, அவங்க புரியாம நடிக்கிறதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அதுதான் எல்லாருக்கும் ப்ளஸ் பாயின்ட்!''



3. ''இன்னமும் சின்னத் திரை நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?'

'
''பெருசு, சிறுசுங்கிறது எல்லாம் ஸ்க்ரீன் அளவுல மட்டும்தான். மத்தபடி ஃப்ரெண்ட்ஷிப் எப்பவும் டபுள் எக்செல் சைஸ்தான். 'லொள்ளு சபா டீம்’ எப்பவும் என்கூடத்தான் இருப்பாங்க. இருக்காங்க! சுவாமிநாதன், மனோகர்னு லொள்ளு சபா டீம்ல பலரும் என்கூட சினிமால நடிச்சுட்டுத்தான் இருக்காங்க. அடிக்கடி சந்திச்சு மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்குவோம். ஜீவா இப்ப 'மாப்பிள்ளை விநாயகர்’ங்கிற படத்துல ஹீரோ. அதுல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணித் தா மச்சான்னு கேட்டான். அதுல நடிக்கிறேன். பாலாஜி அண்ணன், மாறன் அண்ணன்னு எங்க டீம் எல்லாருமே அடிக்கடி சந்திச்சுப்போம். பார்ட்டி, ஃபங்ஷன்னு வெளியே போனா, இவங்களோட போய் மொத்தமா கலாய்ச்சுக் கழுவிக் கழுவி ஊத்திட்டு வந்துருவேன்!''  




4  ''உங்க ப்ளஸ், மைனஸ் என்ன?''   


''ரெண்டுமே என் வாய்தான்!

சில நேரம் டைமிங்காப் பேசி ஸ்கோர் பண்ணிடுவேன். சில நேரம் ஓவராப் பேசி கோட்டை விட்டுருவேன். ஒரு டைரக்டர் நம்மகிட்ட வந்து, 'புதுமுகங்களை வெச்சுப் படம் பண்றோம். நீங்க நடிச்சா பப்ளிசிட்டிக்கு உதவியா இருக்கும்’னு என் கேரக்டர்பத்திச் சொன்னார். 'நல்ல விஷயமா இருக்கே... பண்ணிக் கொடுக்கலாம்’னு சம்மதிச்சேன்.

 சம்பளம் பேச தயாரிப்பாளர் வந்தார். லோ பட்ஜெட் படம், புதுமுகங்கள் எல்லாத்தையும் மனசுல வெச்சுக்கிட்டு என் வழக்கமான சம்பளத்தைவிட ரொம்பக் குறைச்சு சொன் னேன். அவர் அதுக்கே டென்ஷனாகி, 'என்ன சார் இவ்வளவு சம்பளம் கேட்கிறீங்க? சின்னப் படம் சார் இது’னு கொதிக்க ஆரம்பிச்சுட்டார். 'சின்னப் படம்னா எவ்ளோ... அரை மணி நேரம்தான் எடுக்குறீங்களா?’னு கலாய்ச்சுவிட்டுட்டேன். அவர் டென்ஷன் ஆகிக் கிளம்பிட்டார். இப்படித்தான் நம்ம வாய் எல்லாத்துக்கும் கவுன்டர் அடிக்கும்!''




5. ''உண்மையைச் சொல்லுங்க சந்தானம்... உங்களுக்குப் பிடிச்ச தேன்ன்ன் அடை, ஜாங்கிரி, ஜிலேபி... யாரு?'' 


''பேர் மட்டும் சொல்ல மாட்டேன் பரவாயில்லையா?


இப்படி நான் சொல்லிட்டா, இதுதான் நீங்க என்கிட்ட கேட்ட முதல் கேள்வியா இருக்கும். ஆனா, நான் கொடுக்கிற கடை சிப் பதிலா இருக்கும். அதோட என் வீட்டுல என்னை ஃபினிஷ் பண்ணிரு வாங்க!''



6. ''காதல்ல பல்பு வாங்கிய அனுபவம்?''   


''பாலிடெக்னிக் படிக்கும்போது ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதி, சாக் லேட் பின் பண்ணிக் கொடுத்தேன். அவ சாக்லேட்டை மட்டும் பிரிச்சுச் சாப்பிட்டுட்டு லெட்டரைத் திரும்பக் கொடுத்துட்டுப் போய்ட்டா. சரியான தீனிப் பண்டாரமா இருப்பா போலனு நெக்ஸ்ட் டைம் வெறும் லெட்டர் மட்டும் கொடுத்தேன். அதைப் படிச்சுட்டு இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுத்துட்டுப் போய்ட்டா.

 ரொம்ப அவமானமாயிருச்சு. முக்கா முக்கா மூணாவது டைமா தைரி யத்தை வரவெச்சு நேரடியாவே போய்சொல் லிட்டேன். என்னைப் பார்த்தா அவளுக்கு ரொம்பக் கேவலாமத் தோணியிருக்கணும் போல. பகபகனு சிரிச்சுட்டுப் போய்ட்டா. அப்படியே அவளை மறந்துட்டு, அடுத்த பொண்ணு மேல கான்சன்ட்ரேஷன் பண்ண ஆரம்பிச்சிட்டேன்!''



7. ''சந்தானம்... சிறு குறிப்பு வரைக?'' 


''சந்தானம் ஜாலியான பையன். எல் லாரையும் கலாய்ப்பேன். ரொம்ப சென்டி மென்ட் பார்ப்பேன். இருந்தாலும் நடுவில் எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போக முடியுமோ, அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போவேன். எவ்வளவு விட்டுக்கொடுத்தாலும் பிரச்னை தீரலை... ஒண்ணுமே பண்ண முடியாத சூழ்நிலைன்னா, வேற வழியே இல்லாம திரும்பவும் விட்டுக்கொடுத்திருவேன்.
நான் ஆறாவது படிச்சுட்டு இருக்கும்போது 'வாழ்க வளமுடன்’கிற அமைப்புல அப்பா என்னைச் சேர்த்துவிட்டுட்டார்.


 அதுல இருந்தே ஆன்மிக ஈடுபாடு அதிகமாயிருச்சு. கோயி லுக்கு ரொம்பப் போக மாட்டேன். ஆனா, சிவனைத் தினம் கும்பிடுவேன். இலவச இணைப்புகள்ல வர்ற ஆன்மிகப் புத்தகங் களை நீங்கள்லாம் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டீங்க. ஆனா, அதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். ரமண மகரிஷி, புத்தர், வள்ளலார், பாபாஜினு பெரிய கலெக்ஷனே வெச்சிருக்கேன். ஆன்மிகப் புத்தகங்கள்ல படிக்கிறதையே நான் வேற மாதிரி படத்துல பயன்படுத்தியிருக்கேன்.


'ஆன்மாங்கிற பால், உடலுங்கிறது தண்ணீர். ஜீவாத்மாவோடு, இந்த பரமாத்மா எப்போ ஒண்ணுசேருதோ, அப்போ இந்த உடலை தண்ணீரைப் போலப் பிரிச்சு எடுக் கணும்’னு சொல்வாங்க. அதைத்தான் 'ஓகே ஓகே’ படத்துல குவார்ட்டர், தண்ணீர் பாக் கெட், யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ்வெச்சு, 'இது மீரா... இது நீ... இது நானு’ன்னு சொல் லிக் காமெடி பண்ணினேன்.


ஓவர் ஆலா... சந்தானம் ரொம்ப நல்லவன்ங்க!''



8. ''இயக்குநராகும் எண்ணம் இருக்கி றதா? அப்படி இயக்கினால் யார் உங்கள் ஹீரோ?'' 


''அப்படி ஒரு ஆசை இருக்குங்க. கால் ஷீட் கமிட்மென்ட் எல்லாம் முடிச்சிட்டு அதைப் பத்தி யோசிக்கணும். அப்போ யாருக்கு என் கதை பிடிக்குதோ, யார் கால்ஷீட் கொடுக்குறாங்களோ, அவங்களைவெச்சுப் படம் பண்ணுவேன். வெறுமனே சிரிச்சுட்டு மட்டும் போகாம, படம் முடிஞ்சதும் யோசிக்கிற மாதிரி காமெடி - சென்டிமென்ட் கலந்த ஒரு கதை வெச்சிருக்கேன். நான் படிச்ச ஆன்மிக விஷயங்களை காமெடி கோட்டிங்ல சொல்லுவேன்.

 நாமெல்லாம் வெளிநாட்டை ஆச்சர்யமாப் பார்க்கிறோம். ஆனா, நம்ம நாட்டுலயே எல்லா விஷயங்களும் இருக்குது. அங்கெல்லாம் 'எப்படி இருக்கீங்க?’னு கேட்டா, 'ஐ யம் ஃபைன்’னு சொல்வாங்க. அவங்க உடம்பையும் மனசையும் பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. ஆனா, இங்கேதான் சோகமா இருந்தா 'மனசு சரியில்லை’னு சொல்லுவோம். டல்லா இருந்தா, 'உடம்புசரி இல்லை’னு சொல்லுவோம். இந்த மாதிரி யான தத்துவங்கள்லாம் நம்ம நாட்டுல மட்டும்தான் உண்டு. இப்படி நம்ம நாட்டுப் பெருமைகளை ஹைலைட் பண்ணி கதை சொல்லணும்!''



9. ''அதென்ன... நீங்கள் சொல்வதைக் கேட்கும், உங்களுக்கு செட் ஆகும்இயக்கு நர்களிடம் மட்டும்தான் நடிப்பேன் என்று ஏதேனும் பாலிசி வைத்திருக்கிறீர்களா?'' 


''டைரக்டர்-ஆர்ட்டிஸ்ட்டுங்கிற காம்பி னேஷன், சரக்கும் சோடாவும் மாதிரி. மிக்ஸிங் கரெக்டா இருக்கணும். இல்லாட்டி, வேற மாதிரி ஹேங் ஓவராகிடும். எனக்கு யாரெல்லாம் மிக்ஸிங் சரியா இருக்காங் களோ, அவங்களோட சேர்ந்து நிறைய படம் பண்றேன். அப்புறம் பெரிய இயக்குநர்கள் படங்கள்லயும் நடிச்சிட்டுதான் இருக்கேன். ஷங்கர் சார் படம் 'எந்திரன்’ பண்ணினேன். இப்ப அவர் விக்ரம் சாரை வெச்சுப் பண்ற  படத்துலயும் பண்றேன். கௌதம் மேனன் சாரின் 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடிக்கிறேன். நீங்க சொல்றதுலாம் இவங்க படங்கள்ல செட் ஆகாது


 .
10. ''சமூக விஷயங்களையும் நகைச்சுவையில் கலந்து தந்த என்.எஸ்.கிருஷ்ணன்,  எம்.ஆர்.ராதாபோல நீங்க ஏன் முயற்சிக்கலை?'' 


 ''அதுதான் அவங்க பண்ணிட்டாங்களே நண்பா! நாம ஏதாவது புதுசா பண்ணுவோம்னுதான் வேற மாதிரி ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்!''




11. ''லொள்ளு சபாவுக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?''   


''ரெண்டுமே லொள்ளுதான். என் சினிமா காமெடிகளை சேனல்ல பார்த்து ரசிக்கிறாங்கன்னா, லொள்ளு சபா காமெடிகளை இன்னமும் யூ-டியூப்ல பார்த்து ரசிக்கிறாங்க. மத்தபடி ரெண்டுக்கும் வேற பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனா, சினிமாங்கிறது எவர் க்ரீன். எதிர்கால ஜெனரேஷன் பார்த்து ரசிக்கிறது. 'டேய் என்னடா இது... அந்தக் காலத்துல சந்தானம் இவ்வளவு மொக்க போட்ருக்கான்’னு எதிர்காலத்துல யாரும் சொல்லிடக்கூடாதுங்கிறதால சினிமாவுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்றேன்!''



டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


கட்சி ஆரம்பித்த பிரபல பத்திரிக்கையாளர் - ஜூ வி கேள்வி பதில்கள்

1.  ஜனாதிபதி வேட்பாளராக லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை முன்னிறுத்துகிறாரே மம்தா?


மக்களவையில் யார் என்ன திட்டு திட்டினாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார் மீரா குமார். இந்தத் தகுதியால் இருக்குமோ?



2. ஜெயலலிதாவின் உருப்படியான சாதனை என்ன?

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பியது மட்டும்தான்!
இன்று தன்னுடைய சாதனைகளாக ஜெயலலிதா சொல்பவை அனைத்தும் ஓர் அரசாங்கம் தனது குடிமக்களுக்குச் செய்துதர வேண்டிய அடிப்படைக் கடமைகள், அவ்வளவுதான்.

 இதை ஜெயலலிதாவும் செய்யலாம். கருணாநிதியும் செய்யலாம். ஏதாவது ஒரு கவர்னரும் உட்கார்ந்து கொண்டு செய்யலாம். பரீட்சை எழுதி பாஸ் ஆன அனைவரும் சாதனை செய்தவர்களாக சொல்லப்படுவது இல்லை. அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றிக் காட்டினேன். ஏழ்மை இல்லாத நிலையை உருவாக்கினேன். மின் பற்றாக்குறை இல்லாத தமிழகம் இது. வேலை இல்லாப் பட்டதாரிகள் கிடையவே கிடையாது என்பது மாதிரியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களையே சாதனைகளாக வரவு வைக்கவும், வரவேற்கவும் முடியும்!


3.'புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்களைக் கொல்லவில்லை’ என்கிறாரே, இலங்கை மாஜி ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா?


ராஜபக்சேவால் கைது செய்யப்பட்டவர் என்பதற்காக ஃபொன்சேகா புனிதராகி விட முடியாது. ஐ.நா. மனித உரிமை அமைப்பு பகி ரங்கப் போர் விசாரணையை நடத்துமானால், முதல் குற்றவாளி ராஜபக்சே என்றால், இரண்டாவது குற்றவாளியாகப் பதில் சொல்ல வேண்டியவர் ஃபொன்சேகா. எனவே, 'அப்பாவிகளைக் கொல் லவில்லை’ என்றுதான் அவரும் சொல்வார்.


4. அரசியலில் ஆன்மிகம், ஆன்மிகத்தில் அரசியல் - எது சரியானது?


இரண்டுமே தவறானவை. பக்தி, ஆன்மிகம், கடவுள், மதம் ஆகியவை ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை, தனிச்சொத்து. நம்பிக்கை சார்ந்த விஷயம். அந்த விருப்பங்கள், அரசியல் ரீதியாக விமர்சிக்கத்தக்கவையும் அல்ல. எனவே, அரசியலில் ஆன்மிகத்தைப் புகுத்தி ஆதாயம் தேடுவதும் தவறு. ஆன்மிகவாதிகள் தேர்தல் அரசியலுக்குள் புகுந்து செயல்படுவது அதைவிடத் தவறு.


ஆனால், தங்களது சுய லாபங்களுக்காக ஆன்மிக விஷயங்களைக் கபளீகரம் செய்ய அரசியல்​வாதிகள் நினைக்கிறார்கள். அதற்கு அப்பாவிகள் பலியாகிறார்கள்!


5. மதுரை ஆதீனம் பிரச்னையில் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்?


மௌனமாக இல்லை. உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முதல்வரைச் சீண்டிப்பார்க்கும் சில கமென்ட்ஸ்களை நித்தியானந்தா தரப்பு வைத்ததாக மேலிடத்துக்குத் தகவல் வந்துள்ளது. அதனுடைய ரியாக்ஷன் போகப் போகத்தான் தெரியும்!


6. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே போவது குறித்து மத்திய அரசுக்கு கவலையே இல்லையா?


இந்தியாவின் மதிப்பு எப்போதோ குறைந்து​போய்விட்டது. அதைப் பற்றியே கவலைப்​படவில்லையே!


வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியப் பணத்தை மீட்டு வருவதற்குக் கூட இவர்கள் மனப்பூர்வமாக முயற்சி செய்யவில்லை. இந்தப் பணத்தை மொத்தமாக மீட்டு வந்தால் ரூபாயின் மதிப்பு உயருமா, இல்லையா என்பதை விட, இந்தியாவின் மதிப்பாவது உயரும்!



7. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பது அரசியலுக்குப் பொருந்துமா?


அரசியல் என்பதே தனி​மனிதப் போட்டியை அடிப்​படையாகக் கொண்டதாக மாறிவிட்டது. ஒருவர், அடுத்தவரை வீழ்த்துவதன் மூலமாகவே லாபம் அடைய முடியும் என்பது யதார்த்தமாக உள்ளது. இந்த நிலையில் குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்குபவர்களால் மட்டுமே அரசியலில் கோ​லோச்ச முடியும்.


இதுபற்றி கண்ணதாசன், 'அரசியல் சதுரங்​கத்தில் இரண்டு வகை உண்டு. நேரடி​​யாக இறங்கிஉள்ளதை உள்ளபடியே சொல்லி, உண்மை, நேர்மை என்று பாடுபட்டு இறுதியில் இருக்குமிடம் தெரியாமல்​போ​வது. இன்​னொன்று, குறுக்கு வழியில் காய்களை நகர்த்தி, நண்பனையோ உற​வினனை​யோ கொல்ல வேண்டுமானால் கொன்று, அரங்கத்தில் நேர்மையாக நடித்து அந்தரங்கத்தில் வஞ்சகனாகி எந்த வழியில் வெற்றி கிடைக்குமானாலும் அந்த வழியை நாடுவது. இவை இரண்டுக்கும் உதா​ரணம் காட்டுகிறது மகாபாரதம். நேர்வழிக்குப் பரந்தாமன். குறுக்கு வழிக்கு சகுனி’ என்று எழுதினார்.


இது, சகுனிகளின் காலம். அண்ணா சொன்ன அந்த உதாரணம் வெறும் கனவு!


8. 'எந்த வேலையையும் செய்ய இந்த ஆட்சியில் ஒப்பந்தக்காரர்கள் முன்வருவது இல்லை’ என்கிறாரே கருணாநிதி?


கமிஷன் தொகையையும் அதிகரித்து​விட்டார்கள். யாரிடம் கொடுப்பது என்பதிலும் குழப்பம். எப்படி வரு​வார்கள் ஒப்பந்தக்காரர்கள்? ஆனால் இதுதான், சில அதிகாரிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. கொழிக்கிறார்கள். 'வருமானத்​துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கு’ இப்போதே சில அதிகாரிகள் மீது
போடலாம்! 


9. தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிகையாளராவது கட்சி ஆரம்பித்திருக்கிறாரா?


உடனடியாக நினைவுக்கு வருகிறார், சி.பா. ஆதித்தனார். முதலில் அவர் வக்கீல். ஆனால், பத்திரிகையாளராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். 'தமிழப் பேரரசு’ என்கிற கொள்கை ஈர்ப்பால், 'நாம் தமிழர் கட்சி’ தொடங்​கினார். பின்னர், அவர் தி.மு.க-வில் ஐக்கியம் ஆகிவிட்டாலும், அந்தக் காலத்தில், குறிப்பிடத்தகுந்த அதிர்வுகளை அந்தக் கட்சி உருவாக்கியது.


மற்றபடி, கட்சி ஆரம்பித்தவர்கள் அனை​வருமே தங்களுக்கென ஒரு பத்திரிகை​​யையும் ஆரம்பித்தார்கள். அதற்கு எத்தனையோ உதார​ணங்கள் உண்டு!


10. ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள், மர்ம நபர்களால் தாக்கப்​பட்டுக் கொல்லப்படுவது பற்றி?


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரக்கூடிய கேள்விகள் கேட்கும் அனைவருக்குமே அச்சுறுத்தல் இருக்கிறது. ஆனால் சட்டத்தின் பாதுகாப்பு, இத்தகைய தகவல் போராளிகளுக்கு இல்லை. போலீஸ், இதைக் கண்டுகொள்வதும் இல்லை. அதனால், இதுபோன்ற கொலையை, சாதாரணக் கொலை வழக்காக இல்லாமல், சிறப்பு வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்.


ட்விட்டரில் இனி யாரும் DM அனுப்பக்கூடாது - ஜெ அவசர உத்தரவு (jokes)

New titanic SHip-Wow

1.அத்தான் , கூல்டிரிங்க் வாங்கிக்கொடுங்கன்னா சோடா , கலர் இப்டி வாங்கித்தர்றீங்களே?உடம்புக்கு அதுதான் நல்லதா?

ம்ஹூம், என் பர்சுக்கு நல்லது

-------------------------------------


2. இலியானா திடு திப்னு தமில் சினி ஃபீல்டுக்கு வந்தது அதிர்ச்சி அளிக்கிறது..

தலைவரே.. தெலுங்கானா பிரச்சனை  பற்றி பேசச்சொன்னா இலியானா பற்றி பேசிட்டு இருக்கீங்களே?


-----------------------------------------

3. நீ என்ன தப்பு செஞ்சாலும் உன் மருமக உன்னை மன்னிச்சிடறாளே?எப்டி?

மன்னிப்பை விட பெரிய தண்டனை ஏதும் கிடையாதுன்னு யாரோ சொன்னாங்களாம்.. 

------------------------------------------------

4. மிஸ்.. எப்போ பாரு பசங்க கூட சண்டை போட்டுட்டே இருக்கீங்களே?நீங்க ஜாக்கிசான்க்கு தங்கச்சியா?

டேய் லூசு, எப்போ பாரு பொண்ணுங்க கூட கடலை போட்டுட்டே இருக்கியே, நீ சிம்புவுக்கு தம்பியா?

---------------------------------------------


5. .எல்லா ஊர்லயும் இனி அதிகாலை 5 மணிக்கு சங்கு ஊதனும்னு தலைவர் உத்தரவு போட்டிருக்காரே, ஏன்?

அப்போதான் அவர் ஆட்சில மக்கள் விழிப்புணர்வு பெருகி விட்டதுன்னு ரீல் விட முடியும்?

---------------------------------------------




6.பசங்க  -லவ் பண்ணி லைஃபை வேஸ்ட் பண்றாங்க, 

பொண்ணுங்க -லவ் பண்ற மாதிரி நடிச்சு, அப்புறம் அவனை கழட்டி விட்டு நல்ல லைஃபை மிஸ் பண்றாங்க # 2011

----------------------------------------------

7. சுந்தர் சி - நான் எடுக்கப்போறது பயங்கர ஆக்‌ஷன் படம், சான்ஸ் கேட்கறியே, உனக்கு குங்க்ஃபூ தெரியுமா?

இல்லை சார், ஆனா குஷ்பூ-வ தெரியும்

--------------------------------


8.என் நடிப்பை மட்டும் பாருங்க..



 மேடம், நீங்க லோகட் ஜாக்கெட், லோ ஹிப் சேலை ல வர்றீங்க, அப்புறம் நடிப்பை மட்டும் பாருன்னா எப்டி?

------------------------------



9., உன் தலை முடியை மட்டும் நாவிதர் திருத்தட்டும் , உன் தலை எழுத்தை நீயே திருத்து

---------------------------------------------

10. உன் மனைவி யாரையும் மதிக்க மாட்டாளாமே?

அபாண்டமா பேசாதீங்க.. அவங்கப்பா, அம்மாவை மதிப்பாளே..?


-------------------------------------------



11.தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறார் ஜெ - கருணாநிதி #  பணிவு கூட தமிழர் பண்பாடுதான், எல்லாரையும் கால்ல விழ வைக்கலையா? - ஜெ கேள்வி

----------------------------------

12. ராமதாஸ் பற்றி சி.டி வெளியிடுவேன்-வேல் முருகன் # வெந்த புண்ணில் வேல்!!!! - டாக்டர் ராமதாஸ்

--------------------------------------


13. ஆசிரியர் - நேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; அடுத்து என்ன வரும்?

மாணவன் - நரை நேர் - நக்மா

------------------------------------


14. நூலக மாற்றம் அதிர்ச்சியளிக்கிறது:விஜயகாந்த் #  அண்ணன் மப் இல்லாமல் தெளிவாக பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - மக்கள்


--------------------------------------


15. கூடன்குளம் அணுஉலை பற்றி அப்துல்கலாம் கருத்து சொன்னா மக்கள் ஒத்துக்குவாங்களா? - துக்ளக்  சோ கட்டுரை # யார் கருத்து சொன்னாலும் அங்கேகுடிபோகனும்


-----------------------------------




16. சீமான் வருகைக்கு காங்., கடும் எதிர்ப்புமுட்டை வீச்சு;  # யோவ், வழியை விடுங்கய்யா, அண்ணி விஜய லட்சுமியும் கூட வர்றாங்க


-----------------------------------


17. தி.மு.க., ஆட்சி திட்டங்களுக்கு மூடு விழா : கருணாநிதி  # அப்படி என்ன சதித்திட்டம் போட்டீங்க? தலைவரே!!


---------------------------------------


18. எல்லாரும் என் கிட்டே பணிவா நடந்துக்கறாங்க, இந்த கோர்ட்ங்க மட்டும் தான் என்னை எதிர்க்குது.. என்ன பண்ணலாம்? - ஜெ


---------------------------------------


19. எனது தந்தை கமல்ஹாசன் எனக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறார்- ஸ்ருதிஹாசன் # 7ம் அறிவுல டூயட் சீன்  பார்க்கறப்பவே  அது தெரிஞ்சுடுச்சு


--------------------------------------


20. ட்விட்டரில் இனி யாரும் DM  அனுப்பக்கூடாது, ஜெ அவசர உத்தரவு, அது DMK வின் சுருக்கம் என்பதால் அம்மா பதட்டம் @ இமேஜினேஷன்


----------------------------------






Wednesday, June 06, 2012

THE RAID REDEMPTION -ஹாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

http://www.entertainmentwallpaper.com/images/desktops/movie/the-raid-redemption04.jpg

ஒரே ஒரு வீட்டுல, அல்லது ஒரே ஒரு அறைல  முழுப்படத்தையும் ஷுட் செஞ்சு அதை ஹிட் கொடுத்தவங்க கோலிவுட்ல பலர் இருக்காங்க..சம்சாரம் அது மின்சாரம் விசு,ஒண்ணா இருக்கக்கத்துக்கனும் வி சேகர் இவங்க எல்லாம் லோ பட்ஜெட்ல  செம ஹிட்ஸ் கொடுத்தவங்க.. இவங்களுக்கெல்லாம் முன்னோடியா ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் படம் பூரா ஒரே ஒரு ஹாஸ்பிடல் வார்டில் ஷூட் செய்து மெகா ஹிட் கொடுத்தார்.. அந்த வரிசையில் இந்தப்படமும் சேரும்.. அதிக செலவு ஏதும் இல்லை.. ஒரே ஒரு பில்டிங்க்குள் நடக்கும் ஆக்‌ஷன் ஃபைட் ஸ்டோரி.. 37 பேரு தான் மொத்த நடிகர்களே... ஆனாலும் பார்க்கும்படி இருக்கு..

ஒரு பில்டிங்க்.. அதுல கள்ளக்கடத்தல் மன்னன் இருக்கான்.. அவன் கூட சாணக்யன் மாதிரி புத்திசாலி.. அவன் தான் எல்லா ஐடியாவும் தர்ற ஐடியா டிப்போ .. அப்புறம் ஆக்‌ஷன்க்கு ஒருத்தன்.. இவங்க 2 பேரும் வில்லனுக்கு பக்க பலம்.. அது போக அடியாளுங்களும் இருக்காங்க.. இவங்க அந்த பில்டிங்கை போதைப்பொருள் ஆராய்ச்சிக்கூடமா யூஸ் பண்றாங்க..

இந்தத்தகவல்  போலீஸ்க்கு தெரிய வருது.. ஹீரோ உட்பட 20 பேர் கொண்ட குழு அந்த பில்டிங்கை ரவுண்ட் அப் பண்ணுது.. ஹீரோவோட தம்பி அந்த  வில்லன் குரூப்ல ஒரு அடியாள்.. 


என்ன நடக்குது? எப்படி வில்லன்க மாட்டறாங்க என்பதை ஒரே ஃபைட் மயமா, ஆக்‌ஷன் மயமா சொல்லி இருக்காங்க.. அதிரடி சண்டைப்பிரியர்கள் பார்க்கலாம்.. 



http://content7.flixster.com/rtmovie/88/51/88517_gal.jpg
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. பில்டிங்க்குள்ள போலீஸ் கேங்க் நுழைஞ்சதும் ஒரு பையன் எதிர்ல வர்றான்.. அவன் வில்லன் குரூப்ல ஒரு ஆள்.. போலீஸ் அவனை அசையாதே அசைஞ்சா ஷூட் பண்ணிடுவேன்னு சொல்லுது.. அவன் கண்டுக்கலை.. ஓடிப்போய் ஒரு ரூமை திறந்து கதவை சாத்தி வில்லன் ஆளுங்களை வார்ன் பண்றான், “ போலீஸ் வந்துடுச்சு.. தப்பிச்சிக்கோங்க”ன்னு , அப்போ போலீஸ் அந்தப்பையனை ஷூட் பண்ணுது.. .. ஸ்லோமோஷன்ல போற புல்லட் ரூம் கதவை துளைச்சுக்கிட்டு துல்லியமா அந்தப்பையன் கழுத்தை ஊடுருவுது.. பிரில்லியண்ட் ஷாட்.. 

2. ஹீரோவோட ஃபிரண்ட்  ஃபைட்ல துப்பாக்குக்குண்டு பட்டு காயத்தோட இருக்கான்.. அந்த பில்டிங்க்ல குடி இருக்கற பொது ஜனம் வீட்ல அவனைத்தங்க வைக்க ஹீரோ பிளான் பண்றான்.அப்போ வில்லனோட ஆட்கள் கதவைத்தட்டறாங்க.. உடனே அந்த வீட்டில் இருக்கும் ரகசிய அறைல 2 பேரையும் ஒளிச்சு வைச்சுட்டு ஹவுஸ் ஓனர் கதவைத்திறக்கறாரு.. வில்லன் ஆளுங்க அந்த வீட்டையே புரட்டிப்போட்டுடறாங்க.. 6 அடி நீளமான வாளை அங்கங்கே சொருகி செக் பண்றாங்க..அப்போஹீரோவோட கன்னத்துல வாள் பட்டு நிக்குது..


3. வில்லன் வாளை ரிட்டர்ன் உருவுனா அதுல ரத்தம் இருக்கறது தெரிஞ்சுடும்.. ஹீரோ அங்கே இருக்கும் ஒரு பழைய துணியை எடுத்து வாள் ஓரத்துல  பிடிச்சுக்கறாரு.. வில்லன் வாளை உருவும்போது ரத்தம் எல்லாம் துடைக்கப்பட்டு நீட்டா வருது.. சாத்தியம் இல்லாத காட்சி என்றாலும் படமாக்கப்பட்ட விதம் அருமை..

4. இணைந்த கைகள் படத்துல குள்ளமா இருந்தாலும் ஹீரோவை கதிகலங்க வைக்கும் அளவு ஃபைட் போடுவாரே அது மாதிரி இதுலயும் ஒரு ஆள் ஹீரோ, ஹீரோவோட தம்பி 2 பேரையும் சமாளிக்கும் ஃபைட் அசத்தல் சீன்.. தியேட்டரே கை தட்டுகிறது.. கிராஃபிக்ஸ் காட்சியே இல்லாத ஒரிஜினல் ஃபைட் ..

5. வில்லன் துப்பாக்கி முனையில் போலீசிடம் மாட்டியதும் அவன்  போலீசிடம் குருதிப்புனல் நாசர் போல் மூளைச்சலவை செய்யும் விதமாக பேசிக்குழப்புவதும் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத கோபத்தில் போலீஸ் வில்லனை ஷூட் செய்வதும் பிரமாதம்..





http://www.hollywoodreporter.com/sites/default/files/2012/03/october_baby_a_l.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்,திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1.க்ளைமாக்ஸில் வில்லன் ஹீரோவிடம் “நீங்க இங்கே வர்றது ஏற்கனவே எனக்குத்தெரியும், அதனால தான் பிளான் பண்ணி எல்லா போலீஸையும் சிக்க வெச்சு கொலை செஞ்சேன்”அப்டினு வசனம் பேசறான்.. ஆனா ஓப்பனிங்க் ஷாட்ல  அந்தப்பையன் ஏன் எல்லாரையும் உஷார் பண்றான்? பில்டிங்க் பூரா கேமரா இருக்கு.. வில்லன் அதை கண்ட்ரோல் ரூம்ல உக்காந்து பார்த்துட்டு இருக்கான்.. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம அந்த உயிர்ப்பலி?

2. வில்லனோட ரைட் ஹேண்ட் ஹீரோவோட தம்பியை கட்டி வெச்சிருக்கான்.. ஹீரோ அங்கே எண்ட்டர் ஆகறார்.. வில்லனோட ரைட் ஹேண்ட் ஆள் கைல துப்பாக்கி இருக்கு.. அவன் நினைச்சா ஈசியா ஹீரோவை முடிச்சிருக்கலாம், ஏன்னா ஹீரோ நிராயுதபாணியாத்தான் வர்றாரு,ஆனா அந்த லூஸ் என்ன பண்றான், கைல இருக்கற கன்னை தூக்கிப்போட்டுட்டு, ஹீரோவோட தம்பியை ஹீரோ ரிலீஸ் பண்ற வரை வேடிக்கை பார்த்துட்டு அப்புறமா 2 பேர்கிட்டேயும் ஃபைட் பண்ணி சாகறான்.. ஏன் அந்த தலை எழுத்து? எதுக்கு இந்த வறட்டு கர்வம்?

3. க்ளைமாக்ஸ்ல வில்லனை பணயக்கைதியா வெச்சு போலீஸ்ல ஒருத்தர் அந்த பில்டிங்கை விட்டு தப்பிக்க நினைக்கறாரு.. அவர் கைல கன் இருக்கு, வில்லன் நிராயுதபாணியா இருக்காரு.. அப்போ வில்லன் மிரட்டறாரு, உன்னால எஸ் ஆக முடியாது.. அப்டினு.. உடனே குழப்பம் ஆன போலீஸ் வில்லனை ஷூட் பண்ணி தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கறாரு.. எதுக்கு அவ்ளவ் ரிஸ்க்? வில்லனை கை, கால்ல மட்டும் ஷூட் பண்ணிட்டா அவன் ஆபத்தில்லாத ஆள் ஆகிடுவான், அவனை நாயை இழுக்கற மாதிரி இழுத்துட்டுப்போய் இருக்கலாமே?

4. ஹீரோ போலீஸ் யூனிஃபார்ம்ல அந்த பில்டிங்க்ல இருக்காரு, கடத்தல் கும்பல்ல ஒரு ஆளும், ஹீரோவின் தம்பியா வர்றவனும் “ அண்ணே, இந்த யூனிஃபார்மை முதல்ல மாத்துங்க.. சாதா டிரஸ் போட்டுக்குங்க.. அப்போதான் அவங்களுக்கு சந்தேகம் வராது.. “ அப்டினு நியாயமான  ஐடியா தர்றான்.. ஆனா ஹீரோ பெரிய  பட்டர் ஹேர் ஆண்டி போல “ நான் இந்த யூனிஃபார்மை எப்பவும் கழட்டவே மாட்டேன்”னு வசனம் பேசி மாட்டிக்கறான்.. பாத்ரூம்ல குளிக்கறப்பக்கூட யூனிஃபார்ம் போட்டுக்கிட்டே குளிப்பாரோ? தேச பக்தி, தொழில் பக்தி, பணி பக்தி இருக்க வேண்டியதுதான், அதுக்காக  இப்படியா முட்டாள் தனமா நடப்பான்? இடம் பொருள் ஏவல், சாணக்கியத்தனம் வேணாமா?





அடிதடி, சண்டைப்பிரியர்கள் பார்க்கலாம். வ்ழக்கமா ஆங்கிலப்படங்கள்ல வர்ற லொக்கேஷன்ஸ் பார்க்க ஆசைப்படறவங்க  ஏமாந்து போவாங்க. மற்றபடி  படம் ஓக்கே .. 



ஈரோடு அன்னபூரணியில் படம் பார்த்தேன்

 படத்தை டவுன்லோடு  பண்ணி பார்க்க - http://www.hnmovies.com/2012/05/raid-redemption-2012-720p-hdrip-800mb.html

இந்த லிங்க்கை உங்களுக்கு வழங்கியவர்  -ட்விட்டர் நண்பர்