Showing posts with label முன்னோட்டம். Show all posts
Showing posts with label முன்னோட்டம். Show all posts

Tuesday, August 14, 2012

அட்டகத்தி

http://static.moviecrow.com/movie/attakathi/2671.jpg

தமிழ் திரையுலகில் தற்போது சின்ன பட்ஜெட் படம் 'அட்டகத்தி'  பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.




இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் இது. நாயகனாக தினேஷ், நாயகியாக ஸ்வேதா நடித்து இருக்கிறார்கள்.


சந்தோஷ் இசையமைக்க, பிரமோத் வர்மா ஒளிப்பதிவு செய்ய, விஜயகுமார் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் மொத்த உரிமையையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கி, சொந்தமாக வெளியிடுகிறது.

'அட்டகத்தி'யில் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக இயல்பாக பதிவு செய்திருக்கிறார்கள். " நம்ம எல்லாருக்குள்ளயும் ஒரு ஹீரோ ஒளிஞ்சுகிட்டிருப்பான்.. அவன் கண்டிப்பானவாவும் இருப்பான். அதே நேரத்துல அவனுக்குள்ள ஒரு குழந்தைத்தனமும் ஒளிந்திருக்கும். அதை வெளிக்காட்டுகிற படமா அட்டகத்தி இருக்கும்" என்கிறது படக்குழு.



http://www.tamilkey.com/wp-content/uploads/2012/01/Watch-AttaKathi-Movie-Online-Trailer.jpg

'அட்டகத்தி' படத்தினைப் பற்றி அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு வந்தது படத்தின் FIRST LOOK வெளியான போது தான்.  படத்தின் LOGO, FIRST LOOK என அனைத்து விதத்திலும் 'அட்டகத்தி' கவனம் ஈர்த்தது.படத்தை முடித்த பின்,  தன்னுடைய குருநாதர் வெங்கட்பிரபுவிற்கு தனது படத்தினை பிரத்யேகமாக திரையிட்டு காட்டினார் ரஞ்சித். இயக்குனர் ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய வெங்கட்பிரபு, தன்னுடைய சக இயக்குனர்கள் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கும் இப்படத்தினை திரையிட்டு காட்டினார்.

இப்படத்தினைப் பார்த்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தங்களது நிறுவனம் மூலம் வெளியிட தீர்மானித்து அனைத்து உரிமைகளையும் வாங்கிக் கொண்டது.

ஸ்டூடியோ கிரீன் வசம் உரிமைகள் போனதை அடுத்து 'அட்டகத்தி'யை அவர்கள் மெல்ல மெல்ல பட்டை தீட்டினார்கள்.

இயக்குனர்கள் வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பாண்டிராஜ், ராஜேஷ், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன் என அனைவருமே படத்தினை பற்றி பாராட்டி பேச, 'அட்டகத்தி' இணையத்திலும் கவனம் பெற்றது.




http://www.cinemamasti.com/wp-content/uploads/Attakathi-Movie-Stills-2.jpg





'ஆசை ஒர் புல்வெளி ,  'ஆடி போனா ஆவணி'  போன்ற பாடல்கள் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆகஸ்ட் 15ம் தேதி உறையை விட்டு வெளியே வந்து, வெள்ளித்திரை நிரப்ப வருகிறது அட்டகத்தி.!


http://timesofindia.indiatimes.com/photo/11265485.cms


படம்: அட்டகத்தி
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள்: பிரதீப்

வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன்
என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை
பல யுகம் தாண்டி வந்தேன் உந்தன் முகம் காட்டு பெண்ணே
வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன்

நொடி ஒவ்வொன்றும் உன்னை தேடி வாழ்கிறதே
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் மிகவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள் உன் நிழல் பார்க்க துடிக்கிறதே



 http://masscinema.in/wp-content/gallery/attakathi-movie-stills_1/attakathi-tamil-movie-stills-60.jpg


டம்: அட்டகத்தி
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள்: பிரதீப், கல்யாணி நாயர்

ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
யார் உயிர் யாரோடு (யாரோடு )யார்
உடல் யாரோடு(யாரோடு )
போனது மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வர்ணங்கள்
விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே


தியேட்டர் ட்ரெயிலர்



 கலக்கல் ஹிட்டான மெலோடி - ஆடி போனா ஆவணி
 அ  மனதை வருடும் ஆசை ஒரு
 நன்றி - தமிழ்ப்பாடல் வரி, விகடன்

Thursday, June 07, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை - ஒரு பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6hVZdfH38K3lMLpZUel7vtHiF6dpa4Esy_kd6L_TZVGcvwqEgHAG4ag3t9w2k6w8ZHIDthPPt0jJrUCEAKVnHJnmFhhENZYXo2vv94SH0juxj2kU534-VvzRpgD_C5UtfhZTQE8P1qms/s1600/bkp-print-07.jpg
 
 
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் கதைதான் ஹீரோ என்று அப்படத்தின் நாயகன் ஹேமசந்திரன் கூறினார். சென்னையில் நடைபெற்ற எம்.பி.ஏ. மாணவர்களுக்கான  மூவி மார்க்கெட்டிங் பற்றிய இருநாள் பயிலரங்கில் பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு  ஹேமச்சந்திரன் பதில் அளித்தார். 


`புழல்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஹேமச்சந்திரனுக்கு கிருஷ்ணவேணி பஞ்சாலைதான் கதாநாயகனாக நடிக்கு முதல் படம். அதில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட ஹேமசந்திரனிடம் மாணவர்கள் கேட்டத் துடுக்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்....

மாணவர் கேள்வி: எப்படி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வந்திங்க...

ஹேமச்சந்திரன்
:  `புழல்` படத்தில் என்னுடன் நடித்த இந்தப் படத்தின் காஸ்டிங் இயக்குநர் சண்முகராஜாதான் `கிருஷ்ணவேணி பஞ்சாலை` படம் குறித்து சொன்னார். அவர்தான் என்னை படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் தனபால் பத்மநாபனிடம் அறிமுகம் செய்தார். அவரை சந்தித்து கதையைக் கேட்டவுடன் இந்தப் படத்தில் நமக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன் அவ்வளவு நல்ல கதை. எப்படியாவது இந்தக் கதையில் நடிக்கனும் என்ற ஆசை அதிகமானது.
 
தனபால் பத்மநாபன் எனக்கு ஓகே என்றார் `பை காட்ஸ் கிரேஸ்" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல படத்தில் நடித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கதைதான் உண்மையான ஹீரோ, நாங்கள் எல்லாம் அதில் பாத்திரங்கள்தான். இயக்குநரின் திறமைதான் இந்தப் படத்தின் வெற்றி. நல்ல கதையுள்ள இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததையே பெருமையாக நினைக்கிறேன்.
 
மாணவர்: நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்..

ஹேமச்சந்திரன்: படத்திற்கு என்ற நடிப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. அதில் பல புதிய  விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் கேரட்டருக்குள் இன்வால்வாக வேண்டும் என்பதற்காக படத்தின் கதையைச் சொல்லியபின் ஒரு வாரம் நேரம் கொடுத்தார் இயக்குநர். சண்முகராஜாவின் நடிப்பு பட்டறையிலும் நிறைவே கற்றுக்கொண்டேன். அதை வைத்து நடித்தேன். சிறப்பாக வந்துள்ளது.

மாணவர்: இயக்குநரின் அணுகுமுறை எப்படி இருந்தது?

ஹேமச்சந்திரன்: மிக அமைதியானவர். தேவைப்படும் போது மட்டுமே பேசுவார். இப்போது மேடையில் அமர்திருப்பது போல் தான் அமைதியாக இருப்பார். படப்பிடிப்பின்போது தொடர்ந்து மில் சத்தத்திற்கு மத்தியில் நடிக்கும் போது கண்களினால் மட்டுமே சரியா என்று கேட்டு நடிப்பேன். தனபால் பத்மநாபன் வெரி வெரி ஜென்டில் மேன்.

மாணவர்: நடிப்பு, வசனம் தப்பாகி இயக்குநரிடம் அடி, திட்டு வாங்கியதுண்டா?

ஹேமச்சந்திரன்: வசனம் சரியாக பேச சொல்வார், வேறு மாதிரி அனுபவம் ஏதும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மில் சத்தத்தில் கண்களில் நிறை பேசிக்கொண்டோம்.

மாணவி: ரொமான்ஸ் சீன் நடிக்கும் போது சங்கடம், கஷ்டம் இருந்ததா?

ஹேமச்சந்திரன்: கஷ்டமாக இருந்தது. டென்ஷனாக இருந்துச்சு, இயக்குநர் கூல் டவுன், டென்ஷன் ஆகாதீங்க என்று கூல் பண்ணுவார்.

மாணவி: காதல் காட்சிகளில் உண்மை காதலர்கள் போல இயல்பாக நடித்துள்ளார்கள் என்று டைரக்டர் சொன்னார், முன் அனுபவம் உண்டா?

ஹேமச்சந்திரன்: பொய் சொல்ல விரும்பவில்லை, முன் அனுபவம் உண்டு, இல்லை என்று சொல்ல முடியாது  என்றார் ஹேமச்சந்திரன்.
 
நன்றி - தெனாலி  

https://lh5.googleusercontent.com/-nBCg3TpEzo4/TcEKUhbVkYI/AAAAAAAAAEY/pfaFzuNZxHY/bga-21-copy.jpg
 
 
தனபால் பத்மநாபன் இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. இப்படத்தில் கேரள நடிகையான நந்தனா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
 
கே: இப்படம் குறித்து..?
 
கிருஷ்ணவேணி பஞ்சாலை தமிழில் எனது முதல் படமாகும். இப்படத்தின் இயக்குனரான தனபால் பத்மநாபன் ரொம்ப யதார்த்தமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.
 
கே: இப்படத்தில் உங்களது கேரக்டர் என்ன?
 
இப்படத்தில் எனது பெயர் பூங்கோதை. எனது தோழிகள் 'பூ' என்று கூப்பிடுவார்கள்.
 
கே: படத்தின் கதை என்ன?
 
சொல்லக் கூடாதுன்னு டைரக்டர் சொல்லி இருக்கார். பஞ்சாலையில் பணியாற்றும் மக்களின் யதார்த்தப் பதிவுதான் இப்படம். இதில் ஒரு காதல் கதையும் இருக்கு. இப்படத்தின் ஹீரோவான ஹேமச்சந்திரனுடனான லவ் கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு.
 
கே: இப்படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
 
இப்படத்துல மொத்தம் 4 பாடல்கள். அதில் 'உன் கண்கள் கண்ணாடி' பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடலாகும்.
 
கே: இப்படத்தின் கதை கோவை, உடுமலை பகுதியில் என்பதால் டயலாக் எல்லாம் எப்படி பேசினீங்க?
 
டயலாக்ஸ் எல்லாம் கோவை ஸ்லாங்குல இருந்துச்சி. என்னால சரியாவே சொல்ல முடியல. ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் டயலாக் பேசினேன். நல்லவேளை நான் டப்பிங் பேசல. அதனால தமிழ் ஆடியன்ஸ் தப்பிச்சாங்க..!
 
 
 
ஞ்சாலைத் தொழிலாளர்களின் சுவாரசியமான உலகத்தைப் பதிவு செய்யும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தின் இசை 05.01.2012 முதல் விற்பனைக்கு வந்தது. இயக்குனர் மகேந்திரன் அவர்கள் வெளியிட மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

1957 முதல் 1990-கள் வரையிலான கோவை, உடுமலை வட்டார மில் தொழிலாளர்களின் வாழ்க்கையே இத்திரைப்படம். பஞ்சாலைகளை பின்னணியாக வைத்து ஓர் அழகான காதல் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
 
 
  கேண்டீன் நேர சுவாரசிய பேச்சுகள், அனல் பறக்கும் கேட் கூட்டம், குடும்பங்களாக செல்லும் சுற்றுலா, தொழிற்சாலைக் குடியிருப்புகளில் உருவாகும் நட்பு என்று மற்றவர்களுக்கு வாய்க்காத சுவாரசியமான உலகங்களைக் கொண்டது மில் தொழிலாளர்களின் வாழ்க்கை. இன்றைய சாஃப்ட்வேர் இளைஞர்கள், யுவதிகளின் வாழ்க்கைமுறை எப்படி மற்றவர்களால் ஆர்வத்தோடு பார்க்கப்படுகிறதோ, அப்படி 1970களிலும் 80களிலும் இருந்தது மில் தொழிலாளர்களின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் சந்தோஷங்களையும் வலிகளையும் பதிவு செய்யும் படமே ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’.

‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யின் நாயகனாக ஹேமச்சந்திரனும், நாயகியாக நந்தனாவும் நடிக்கிறார்கள். நந்தனாவிற்கு இது முதல் படம். மில் முதலாளியாக ராஜீவ் கிருஷ்ணா, சூப்பர்வைசராக சண்முகராஜா, யூனியன் தலைவராக எழுத்தாளர் அஜயன் பாலா, அம்மா வேடத்தில் ரேணுகா, மற்றும் பாலாசிங், பூவிதா, ஹேமலதா ஆகியோர் நடிக்கிறார்கள். 
 
பாலுமகேந்திராவின் உதவியாளர் சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்ய, ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்கு இசை அமைத்த என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். வைரமுத்து, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர். படத்தொகுப்பு மு.காசிவிஸ்வநாதன். மின்வெளி மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யை எழுதி இயக்குகிறார் தனபால் பத்மநாபன். படத்தின் இணை தயாரிப்பு ‘சக்தி மசாலா’ டாக்டர் சாந்தி துரைசாமி மற்றும் ‘மாஃபா’ க.பாண்டியராஜன்.

சுவாரசியமான கதைக்களம், ரசனையான காட்சிப்பதிவுகள், மென்மையான காதல், இயல்பான நகைச்சுவை என்று ரசிகர்களின் இன்றைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இயல்பான திரைப்படங்களை ஆதரிக்கும் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை 05.01.2012 அன்று முதல் தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் விற்பனைக்கு உள்ளது. 

நன்றி - மாலை மலர், தெனாலி 



குநந்தன் முதலில் இசை அமைத்த படம் இது. ஆனால், 'தென்மேற்குப் பருவக் காற்று’ முந்திக்கொண்டு பெயர் வாங்கிவிட்டது. ஹரிஷ் ராகவேந்திரா-சித்தாரா குரல்களில் 'ஆத்தாடி ஒரு பறவை பறக்குதா...’வைக் கேட்கும்போதே மனசு லேசாகிப் பறக்கத் தொடங்கிவிடுகிறது. 
 
 
ஆல்பத்தின் இளமை ஊற்று தாமரையின் வரிகளில் ராமன் மஹாதேவன், ஸ்ரேயா கோஷல், ரெனினா ரெட்டியின் குரல்களில் ஒலிக்கும் 'உன் கண்கள்...’ பாடல். இதில் ஹிட் காலர் ட்யூன் அந்தஸ்து பெறுவதற்கான அறிகுறிகள் நிறைய தெரிகின்றன. ஆயுத பூஜை சூழலில் தாளம் போடவைக்கும் மெட்டு  'ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி’ பாடல். ஜாஸி கிஃப்ட்டின் உருமிக் குரலில் 'ரோஜா மலையே...’ வரிகளை விழுங்காத வசீகர மெட்டு!    
 
 
 
கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தை குடும்பத்தினரோடு கண்டுகளிக்கலாம் என்று ‘யு’ சான்றிதழை வழங்கியிருக்கிறது தணிக்கைக்குழு.
 
 அதேபோல சிறந்த தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் கலாசார ரசனை மிக்க படங்களுக்கு தமிழக அரசு வழங்கும் வரி விலக்கையும் இந்தப்படம் பெற்றிருக்கிறது.


வரி விலக்கிற்காக படம் பார்த்த அரசு அதிகாரிகள் படத்தின் முடிவில் நெகிழ்ச்சியோடு படக்குழுவினரைப் பாராட்டியதோடு இந்தப் படத்தின் தாக்கம் தங்களுக்கு இரண்டு நாட்களுக்காவது இருக்கும் என்று கூறியுள்ளனர்.


அதிகாரிகள் மட்டத்தில் கிடைத்திருக்கும் இந்த விமர்சனம் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படம் குறித்து சினிமா வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.


‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய ‘ஆலைக்காரி.. பஞ்சாலைக்காரி..’ பாடலும் தாமரை எழுதிய ‘உன் கண்கள் கண்ணாடி..’ பாடலும் தமிழகத்தின் தலைநகரம் முதல் கடைக்கோடி கிராமம் வரை ஒலிக்கின்றன.


வானொலிகளில் நேயர்களின் விருப்பமான பாடல்களாக இந்த இரண்டு பாடல்களும் இருக்கின்றன.


இன்னொரு பாடலான ‘ஆத்தாடி ஒரு பறவ பறக்குதா..’ தமிழகத்தில் ரசிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கடல்தாண்டி இலங்கையில் டாப் 10 பட்டியலில் ஏற்கனவே வந்துவிட்டது.


சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் வானொலி சேனல்களில் நேயர்கள் விரும்பிக் கேட்கும் பட்டியலில் முன்னணியில் உள்ளது ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ பாடல்கள்.


இந்தப் படத்தின் பாடல்கள் வெறுமே வார்த்தை ஜாலங்களாக இல்லாமல் கதையின் போக்கை உணர்த்தும் விதத்தில் இருப்பதே இதன் தனித்தன்மைக்கு காரணம் என்று பாடல்களைக் கேட்டவர்கள் சொல்லும் அளவுக்கு வரிகள் புரியும் வகையில் இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.


சமீபத்தில் கிருஷ்ணவேணி பஞ்சாலை குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புக்காக நிஜமான பஞ்சாலைக்கே சென்றிருந்தனர் படக்குழுவினர்.



அப்போது அவர்களை எதிர்கொண்ட மில் தொழிலாளிகள், ‘எங்கள் படத்தை எப்போது எங்களுக்குக் காட்டப் போகிறீர்கள்..?’ என்று உரிமையோடு கேட்க, சாதாரண வாழ்க்கை வாழும் மில் தொழிலாளிகள் இந்தப் படத்தை தங்கள் வாழ்க்கையைச் சொல்லும் படமாக ஏற்றுக் கொண்டிருப்பதை அறிந்து நெகிழ்ந்து நின்றிருக்கிறார்கள்.
 
 

Friday, March 02, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி -2.3.2012 - 5 படங்களின் முன்னோட்ட பார்வை

மார்ச் மாசம்னா ஃபைனான்ஸ் ஃபீல்டுல ஒர்க் பண்றவங்களுக்கும் சரி, பேங்க், ஆடிட்டிங்க், அக்கவுண்ட்ஸ் செக்சன்ல ஒர்க் பண்றவங்களுக்கும் சரி செம டைட் ஒர்க்கா இருக்கும்.. லீவே கிடைக்காது.. ஆனா மிக எதிர்பார்ப்புடன் வரும் படங்கள் இந்த மாதம் நிறைய ரிலீஸ் ஆகுது. அதுவும் இன்னைக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்ல அரவான் ரொம்ப முக்கியமான படம்.. பீரியட் ஃபிலிம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKd5CIbX4aMnxL6jdXBphrao_0XC7U2PvI3aPzHQbqLLhhhjl9gWr52Xn9JbRBAsQy8f2KeAAUwVs6B7PYV5Fpe8-5SmSemcVt9EQdH29zRAdxMLltzarRZwQquDiUYTPqI4tqvyzrcS-R/s1600/aravaan_movie_stills_pics_gallery_02.jpg


 1.அரவான் - அங்காடித்தொரு படத்தின் வெற்றியைத் தொடந்து வசந்தபாலன் இயக்கத்தில் வேகமாக வளர்ந்துவரும் படம் ‘அரவான்’. இந்தப் படம் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கதையாகும். இந்தப் படத்தை பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலை மையமாகக் கொண்டு  இயக்கிவருகிறார் வசந்தபாலன்.





ஆதி, பசுபதி, தன்ஷிகா, அஞ்சலி என முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.

பாடகர் கார்த்திக் முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

தமிழர் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மரியாதை கலந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

http://moviegalleri.net/wp-content/gallery/aravaan-movie-new-stills/aravaan_movie_new_stills_4230.jpg



"இந்தப் படம் எனது கேரியரில் முக்கியமானது. வரிப்புலி என்ற பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பின்னோக்கிப் போய், ஒரு சமூகத்தின் வாழ்க்கையை நேரில் பார்த்த அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைக்கும்", என்று கூறியுள்ளார் படத்தின் ஹீரோவான ஆதி.
இந்தப்படம் ஈரோடு அபிராமி,ஸ்ரீ லட்சுமில ரிலீஸ்
http://123tamilcinema.com/images/2012/02/Yaar-Tamil-Movie-2012-Posters-1-342x467.jpg


2. யார் - தமிழ் சினிமாவுக்கு இப்போது த்ரில்லர் காலம் போலும். காஞ்சனா, அம்புலி போன்ற படங்களை தொடர்ந்து அடுத்து மிரட்ட வரும் த்ரில்லர் படம் யார். கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கில், ரவி இயக்கத்தில், பூமிகா, சினேகா நடிப்பில் வெளிவந்த படம் அமரவாதி.


 த்ரில்லர் படமான, இந்தப்படம் இப்போது டப்பிங் செய்யப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்து 10நாட்கள் ரீ-சூட்டிங் நடத்தி விரைவில் வெளியிட உள்ளனர். தமிழில் இப்படத்தை வெளியிடப்போகும் தயாரிப்பாளர் சதீஷ் கூறுகையில், யார் படம் வெளிவந்த பிறகு, தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய டிரெண்ட் செட்டாகும்

 http://www.tamilkey.info/wp-content/uploads/2012/01/Kondan-Koduthan-Movie-Posters-e1326168261534.jpg
3.கொண்டான் கொடுத்தான் - பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "வரவு எட்டணா செலவு பத்தணா", "காலம் மாறிப்போச்சு", "விரலுக்கேத்த வீக்கம்" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த ஜி.ராஜேந்திரன் "கொண்டான் கொடுத்தான்" எனும் படம் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். கூடவே படத்திற்கு கதை, வசனம், ஒளிப்பதிவும் செய்கிறார்.

தலைமுறைகளாக பெண் கொடுத்து, பெண் எடுத்து கொண்டான் கொடுத்தானாக இருக்கும் 2 குடும்பங்களுக்கு இடையில் நடைபெறும் பாசப்போராட்டமே இந்த படத்தின் கதை. உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உடன்பிறந்த அக்காள்-தங்கைகளை கண்ணீ­ர் விட வைக்கக்கூடாது. உறவுகளுக்கு இடையே திருமணம் செய்வது சிறப்பானது போன்ற கருத்துகள் இந்த படத்தில்  இருக்கிறது.

http://www.haihoi.com/upcoming-movies/upcoming_flim_images/kondan_koduthan.jpg

வெளுத்துக்கட்டு ஹீரோ கதிர் நாயகனாகவும், அழகர்சாமியின் குதிரை பட நாயகி அத்வைதா ஹீரோயினாகவும் நடிக்க இவர்களுடன் இளவரசு, கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், எல்.ராஜா, சுலக்ஷனா, லட்சுமி ராமகிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள். பி.பாரதி-மாஸ்டர் ஸ்ரீராம் வழங்க, அய்யப்பா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் பி.அய்யப்பா தயாரிக்கிறார். தேவா இசையமைக்கிறார். காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் நடந்தது.

ஈரோடு ஆனூர், அன்னபூரணி ரிலீஸ்

http://123tamilforum.com/imgcache2/2012/02/ShankarOorRajapalayamMovieOnline-1.jpg

4. சங்கர்  ஊர் ராஜபாளையம் -நாசிகா பிலிம்ஸ் நிறுவனத்துடன் கோல்டன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் “சங்கர்’. கந்தேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஹாசிகா நடிக்கிறார். இவர்களுடன் நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி வீரா இயக்குகிறார். வீ‌.தஷி‌ இசை‌யமை‌ப்‌பி‌ல்‌ உருவா‌கி‌ இருக்‌கு


படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ வீ‌ரா‌ பே‌சுகை‌யி‌ல்‌, “முன்ஜென்மத்தின் பிரதிபலிப்புதான் இந்த ஜென்மத்தில் நடக்கிறது என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் அமைந்ததுதான் இக்கதை. 700 ஆண்டுகளுக்கு முன் பிறக்கும் தாவர வகையை சேர்ந்த ஒரு உயிர், பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறது. அடுத்த ஜென்மத்தில் அந்த உயிர் மனிதனாக பிறந்து அதே பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறது. அந்த காதல் நிறைவேறியதா என்பதை இப்போதுள்ள டிரண்டுக்கு ஏற்ப படமாக்கி இருக்கிறோம்.

http://www.southgossips.in/wp-content/uploads/2011/05/hasika_tamil_actress_78.jpg


தினம் தினம் எத்தனையோ பெண்கள் நம்மை கடந்து செல்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு பெண்ணின் மீது மட்டும் காதல் ஏற்படுகிறது. இதே மாதிரிதான் பெண்களும். ஆண்களைப் போல்தான் எல்லா உணர்வுகளும் பெண்களுக்கும் படைக்கப்பட்டு இருக்கிறது. ஆண்கள் வெளிக்காட்டி விடுகிறார்கள். பெண்களால் அது முடியவில்லை. இதை மையமாக வைத்தும்‌ இந்தப் படத்தின் திரைக்கதையை அமைந்‌‌தி‌ருக்‌கி‌றது.


காதல்தான் களம் என்றாலும், அதை வேறொரு வித்தியாசமான கோணத்தில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் படம். புதுமையான யுக்தியில் இதை படமாக்கி வருகிறேன்.


ஹீரோ கந்தேஷ், ஹீரோயின் ஹாசிகா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். படத்தின் சம்பவங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜபாளையம் பகுதியில் படப்பிடிப்பை நடத்தினோம். மேற்கு தொடர்ச்சி மலைபகுதியான சேத்தூர் கிராமத்தில் வில்லன் அருணுடன் ஹீரோ மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.


கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். நி‌றை‌ய படங்‌களுக்‌கு இசை‌யமை‌த்‌து வரும்‌ இசை‌யமை‌ப்‌பா‌ளர்‌ வீ‌.தஷி‌, இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு இசை‌யமை‌த்‌துக்‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பி‌ன்‌னணி‌ இசை படத்‌துக்‌கு பெ‌ரி‌ய பலம்‌. அதை‌ நி‌றை‌வா‌க செ‌ய்‌து கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பா‌டல்‌களும்‌ வி‌த்‌தி‌யா‌சமா‌க அமை‌ந்‌தி‌ருக்‌கி‌றது. கவிஞர் முத்துலிங்கத்துடன் புதுமுக கவிஞர்கள் பாடல்கள் எழுதி‌ உள்‌ளனர்‌. ரமே‌ஷ்‌ ரெ‌ட்‌டி‌ நடனம்‌ அமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. படத்‌தோ‌ட வே‌லை‌கள்‌ முடி‌ந்‌து ரி‌லீ‌சுக்‌கு தயா‌ரா‌கி‌ வருகி‌றோ‌ம்‌…” என்‌றா‌ர்‌.


இந்த பட நாயகி ஹாசிகா ஆந்திர வரவு.தென்னிந்திய அழகி பட்டம் "பெற்றவர் ".இவர் அறிமுகமான் படம் 'மலர் மேல் நிலை பள்ளி '.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.



5. MUMMY VS SINBAD - ஃபாரீன்ல ஆல்ரெடி ரிலீஸ் ஆகி அங்கே ஃபெயிலியர் ஆன படம். ஆனா தமிழ்ல டப் பண்ணி பிரம்மாண்டமான போஸ்டர்ஸ் எல்லாம் ஒட்டி ஓவர் பில்டப்போட இந்தப்படம் வருது.. Cast: Manu Bennett, Holly Brisley and Steven Grives; Director: Karl Zwicky;   அங்கே 2011லயே ரிலீஸ் ஆகிடுச்சு

இந்தப்படத்தோட உண்மையான டைட்டில் 'Sinbad and the Minotaur.. நம்மாளுங்க மம்மி பேரை போட்டா பழைய ஹிட் பட மம்மி பாகம் 2ன்னு நினைச்சு கொஞ்சம் பேரும், அம்மா ஆதரவாளர்கள் பயந்துக்கிட்டு கொஞ்சம் பேரும் வருவாங்கன்னு நம்பி டைட்டில் மாற்றி இருக்காங்க.

http://leetleech.org/images/92424347827994703192.jpg

அரேபியன் நைட்ஸ், 1001 இரவுகள் படம் மாதிரி ட்ரை பண்ணி இருப்பாங்க போல.. என்ன காமெடின்னா காட்டுவாசிகள் போல் காட்ட வேண்டிய பெண்களை பியூட்டி பார்லர் மாடர்ன் கேர்ள் போல காட்டியதுதான்.. ஹய்யோ அய்யோ ..

http://image.hdvnbits.org/graphic/images/2011/May/12/3186_4DCB5029.jpg


Wednesday, January 11, 2012

பொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்

பொங்கலுக்கு முதல்ல 2 படம்தான்னு சொன்னாங்க.. இப்போ 4 தமிழ் படங்கள், 2 ஹிந்தி, ஒரு ஆங்கிலம், ஒரு தெலுங்கு மொத்தம் 8 படங்கள் ரிலீஸ் ஆகுது.. இதுல சந்தேகமே இல்லாம முதல் இடத்துல இருக்கறது நண்பன்..தான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnJxVL_hyiR7bnazeC8ZdQ7pV_8ghJe4DDCGqzrPA5g2qAycTnRhRCGkO_3FLzx6OJAkAtsmWhmGEJ6tscXQ1KcrHYm0M9mrO_I-cC3Ax1_TdAxE_3uj1d3ErpNC1K8VXOo-Q5sLPVKaU/s1600/Nanban+movie+stills+nanban.jpg
1. நண்பன் - ஹிந்தில சூப்பர் ஹிட் ஆன 3 இடியட்ஸ் ரீமேக் ஆகுதுன்னு நியூஸ் வந்ததுமே பல கருத்துக்கள்..இதுவரை ஷங்கர்  சொந்தக்கதையைத்தான் எடுத்துட்டு வந்தார்.. ரீ மேக் அவருக்கு புதுசு.. விஜய்க்கு அது பழகுனது.. ஆனாலும் விஜய்க்கு ஷங்கர் டைரக்‌ஷன் புதுசு.. அவர் அப்பா எஸ் ஏ சந்திர சேகரிடம் அசிஸ்டெண்ட்டாக பணி புரிந்தவராக இருந்தாலும் ஜெண்டில்மேனுக்குப்பிறகு ஷங்கரின் ஸ்டார் வேல்யூ உயர்ந்தது.. அதன் பின் விஜய் ஷங்கர் டைரக்‌ஷனில் படம் பண்ணவே இல்லை.. 

த்ரீ இடியட்ஸ்’ஸில் அமீர்கானும், மாதவனும் இணைந்து நடித்திருந்தார்கள்.‘நண்பன்’னில் மாதவனுக்குப் பதிலாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இன்னொரு நண்பனாக ஜீவா. கதாநாயகியான இலியானாவின் தந்தையாக பேராசிரியர் வேடத்தில் சத்யராஜ் வருகிறார்.

 சி.பி - ஷங்கர் படத்துல ஒரே ஒரு ஹீரோயின் தானா? சார், பிரம்மாண்டம்னா எல்லாத்துலயும் இருக்க வேணாமா?

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் நண்பன். சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.

நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள் :( குமுதம் மற்றும் பலகனி)

* ஒரு பாடலுக்கு HARMONY பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு பாட வைத்து இருக்கிறார் ஹாரிஸ்.


சி.பி - அவங்களுக்கெல்லாம்  வாய்ல தமிழ் நல்லா வருமா?ன்னு கேட்டு பாருங்க முதல்ல..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZexZx5IRjq6fHMhQTEiivQIU92wVXkMb2dtKbW8JtfTemPQjM2Hqz_FckVfa0_BDlWqNApK5k-bdKSuvFIX1m1eC5LE4IGWRCApQr1F_ECSIRRYg2HruV3bTKj_N0YJm01miwPH0i8U/s1600/nanban-movie-stills-photos-pics-images-3.jpg


* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். " ஷாட் ரெடி ! " என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட்.

சி.பி - விஜய் ரிசர்வ் டைப்பாச்சே? ஜீவா தானே ஜோக் அடிச்சு தானே சிரிச்சுக்கிட்டாத்தான் உண்டு.. ஹி ஹி 


* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு சீனாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கர் ஸ்பெஷல்.

சி.பி - ஓஹோ, அவர் படத்துல டூயட் சீன்ஸ் எல்லாம் ரொம்ப நெருக்கமா வர காரணம் அதானா? காதலன் படத்துல முக்காலா முக்காபலா பாட்டுக்கு ஷங்கர் எப்படி நடிச்சு காட்டி இருப்பார்னு நினைச்சா சிரிப்பா வருது.. ஹி ஹி  


* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, 

சி.பி - பஞ்ச் அவன் பாரிவேலு?? ( பாரி வேலு = போரு ஆளு?? ஹி ஹி )




ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

* HEART-ல BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து RECORD செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.

சி.பி - ஹி ஹி அப்போ அதுவும் சொந்த சரக்கில்லை? 

http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/ileana-nanban-movie-hot-stills.jpg


* " ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு " என்பது போன்ற நிறைய சுளீர் வசனங்கள் இருக்கிறது நண்பன் படத்தில்.

சி.பி - உங்க ஊர்ல இதுதான் சுளீர் வசனங்களா? அவ்வ்வ்வ்வ்வ் 

 ஃபைனல் கமெண்ட் - இந்தப்படம் ஷங்கர்-ன் வழக்கமான படமாக இல்லாமல் காமெடி படமாக இருக்கும், அதிக எதிர்பார்ப்பு , பில்டப் இல்லாமல் வருவதால் ஹிட் ஆக வாய்ப்புகள் அதிகம்.. 

ஈரோடு அன்னபூரணி, ராயல், ஸ்ரீசண்டிகாம் ஸ்ரீநிவாசா  ஆகிய 4 தியேட்டர்கள் அறிவிக்கப்பட்டிருக்கு, அது போக  இன்னும் 2 தியேட்டர்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5n_C5YeasFywF-83kUq5Msn-klrwPf2wWWQifNNujZV1E2CBjf1Lzd8peNulWNc1CR37EhBXLikhcM6il7K62bGQnOGRkDJ7Iu1E-ibyf-MbifckEK2B_U98h1JmVv3o2GenxQNGuYjE/s1600/vettai.jpg

2. வேட்டை -பையா" படத்தை தொடர்ந்து டைரக்டர் லிங்குசாமி அடுத்து இயக்கும் படம் "வேட்டை". ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி வரும் இப்படத்தை ஆரம்பத்தில் க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பதாக இருந்தது. பின்னர் சிலபல பிரச்சனைகளால் அவர் விலக தயாரிப்பு பொறுப்பை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஏற்றது. லிங்குசாமியுடன் சுபாஷ் சந்திரபோஸ் சேர்ந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

அந்த கால எம் ஜி ஆர் கால கதை .. ஒரே வீட்டில் அண்ணன் தம்பியாக இருக்கும் ஆர்யா , மாதவன் இருவரில் ஒருவர் போலீஸ் , ஆனா எங்க வீட்டு பிள்ளை எம் ஜி ஆர் போல் பயந்த சுபாவம் உள்ளவர். இன்னொருவர் வேலை இல்லாத வெட்டாஃபீஸ், அவர் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் இவர் செய்ய ஏற்படும் காமெடி குழப்பங்கள் படம்.. 

மேலே சொன்ன கதை ஒரு உதவி இயக்குநர் சொன்னது.. பார்ப்போம்..ஈரோடு அபிராமி, ஆனூர் ஆகிய இரு தியேட்டர்களில் ரிலீஸ்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGONZXpoA5e8UdNXzHTmuKctZ9g6JaJdWESXR7o8phUtdP1fP3jEqotbJClf1frdtO10GbQcn_VmjOb0EV34L3_n7_QZMNXlaEnlqXzW80FGdi5yqyMLWDD1VWSi6cZuZjdXyzUq95z26t/s1600/ramarajan_medhai_movie_wallpapers.jpg
3. மேதை - மக்கள் நாயகன், லிப்ஸ்டிக் நாயகன், டவுசர் நாயகன், பசு நேசன், நளினியின் முன்னாள் கணவர் திரு ராமராஜன் அவர்கள் நடிச்ச மேதை ரிலீஸ் ஆகுது.. யூ டியூப்ல ஒரு  ஃபைட் சீன் பார்த்டேன்.. ச்சே கொன்னுட்டார்..:))ஒரே பஞ்ச். 14 பேர் தொப் தொப்னு விழறாங்க.. இந்தப்படத்தை சத்தியமா நான் பார்க்க மாட்டேன்.. பவர் ஸ்டார், ராம்ராஜன் படங்கள்னா எனக்கு அலர்ஜி ஹி ஹி , ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKismPB-uMM836gYM6Bust5Eap3Mhfa6Zb_AKwcwMqMAwDutKZT3u8HIDsVlYhnoo8RHa_me49VvfolKIdLVIMx5CXsO01yciu9OOdUsHc0qfe2u5Gt3ewuaEaWEPxuvqAVjJ08CIofkA/s320/Kollaikaran+Songs+MP3+Free+Download++Tamil+Songs+Movie+mp3+Free+In+Single+File+Mediafire+Link+FRee+Download.jpg
4. கொள்ளைக்காரன் - மைனா விதார்த் நடித்து வெளி வர உள்ள படம் கொள்ளைக்காரன், படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே வேட்டை, நண்பன்  என்று இரண்டு படங்கள் மட்டுமே பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் நிலையில் இப்போது புதிய வரவாக கொள்ளைக்காரனும் சேர்ந்துள்ளது.



பிரசாத் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கும் கொள்ளைக்காரன் ‌படத்தில் தமிழ்செல்வன் இயக்கி உள்ளார். இவர் சீனு ராமசாமியிடம் அசோஷியேட் டைரக்டராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் விதார்த், சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.எல்.ஜோகன் இசையில் உருவாக்கப்பட்டுள்ளன.ஈரோட்டில் இன்னும் தியேட்டர்ஸ் புக் ஆகலை

http://kollywoodz.com/wp-content/uploads/2011/12/Kollaikaran-Audio-Release-Stills02.jpg


சிறுசிறு தவறுகள் செய்து, பின்னர் திருந்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞனை பற்றிய கூறுவதே கொள்ளைக்காரனின் கதையாகும். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்த காதலுடன் கொள்ளைக்காரன் படம் கூறுவதாக டைரக்டர் தமிழ்ச்செல்வன் கூறி உள்ளார்.  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4Tm9gsZAlWjuhQbqtLoJApxTeX9UUWMSC7NtzcwENPlVlVRztesKEVoOn3BWhr0Eom5Ma1Lw73vP0CxhJ4xN1MOgCMt7U17o3y7AKkMSfuqREDldbhVwNqKMf5w83asSUvnKBaeALRqU/s1600/Business_Man_new_Wallpapers+%25281%2529.jpg


5. BUSINESS MAN -போக்கிரி, தூக்குடு போன்ற மெகா ஹிட் கொடுத்த மகேஷ் நடிச்ச இந்தபபடமும் கேங்க்ஸ்டார் கதைதானாம்.. ஆனாலும் திரைக்கதை செம ஸ்பீடுன்னு சொல்றாங்க.. ஜோடி காஜல் அகர்வால்.. ஆல்ரெடி அவங்க நடிச்ச மாவீரன்ல காட்டு காட்டுனு காட்டி இருந்தாங்க , நடிப்பைத்தான்.. அதே போல் இந்தப்படமும் இருக்கும்னு எதிர்பார்க்கலாம்..ஈரோட்டில் இன்னும் தியேட்டர்ஸ் புக் ஆகலை

http://www.filmics.com/telugu/images/stories/news/December/17-12-11/The_Business-Man_Movie_Preview.jpga

டிஸ்கி -1  மீதி 3 படங்கள் விபரம் 14ந்தேதிதான் தெரியும்.. 

டிஸ்கி 2 - நமீதா போட்டிருக்கற டிரஸ் டிசைன்ல கொங்கு மாவட்டகிராமத்துபெண்கள் 1985களில் பாவாடை போடுவாங்க.. அந்த டிசைனை எல்லாரும் கிண்டல் அடிப்பாங்க.. சரியான பட்டறைன்னு அந்த டிசைனுக்கு இளைஞர்கள் வட்டாரத்துல பேரு.. இப்போ இவங்க உடுத்துனாங்காட்டி ஃபேஷன் ஆகிடுச்சு போல அவ்வ்வ்

டிஸ்கி 3.

எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை

Thursday, December 15, 2011

சி.பி வழங்கும் கம்மாக்கரை ஓரம் ஃபிகர் பார்க்கும் நேரம் ( வெள்ளிக்கிழமை விருந்து)

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3707.jpg 

1. மம்பட்டியான் - மலையூர் மம்பட்டியான் - ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன், சரிதா முக்கிய வேடங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இசையமைப்பு இளையராஜா வழங்க பாடல்களை கங்கை அமரன், வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே , சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல போன்ற சூப்பர் ஹிட் பாட்டுக்கள் இருந்த படம்..  பட வெற்றிக்கு தியாகராஜனின் நடிப்பும், திரைக்கதையும் இளையராஜாவின் இசையும் முக்கிய காரணங்கள்..

இப்போ ரீமேக் படத்துல பிரசாந்த் ஹீரோ.. க்ளைமாக்ஸ்ல துரோகம் பண்ற கேரக்டர் யார்னு சஸ்பென்ஸ்..ஈரோடு அபிராமில ரிலீஸ் ஆகுது.. பார்ப்போம் எப்படி இருக்குன்னு.. 


http://mimg.sulekha.com/tamil/mouna-guru/stills/mouna-guru-film-047.jpg

2. மவுன குரு - டைரக்டர் தரனியிடம் தில்,தூல்,கில்லி படங்களில் உதவியாளராக இருந்த சாந்தகுமார்,அருள்நிதி நடிக்கும் மவுனகுரு படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். மாறுபட்ட குணாதிசயம் கொண்ட கல்லூரி மாணவன் எதிர்பாராமல் சந்திக்கும் பிரச்சினை தான் கதைக்களம்.


முதலில் இந்தக்கதையில் நடிக்க பயந்திருக்கிறார், நாயகன் அருள்நிதி.அதுபற்றி அவரே சொல்கிறார்; டைரக்டர் சாந்தகுமார் என்னிடம் மவுனகுரு படத்தின் கதையை சொன்னார்.பாதிக்தை கேட்டதும் ஒருவித பயம் வந்துவிட்டது. ( ஏன்? பேய்க்கதையா? )அதனால் மீதியை அப்புறம் கேட்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

அதற்குப் பிறகு 6 மாத காலம் டைரக்டரை நான் சந்திக்கவில்லை. ( நைட் பார்ட்டிகள்ல அண்ணன் பிசி போல)திடீரென ஒருவிழாவில் அவரை பார்த்தேன். மீதிக்கதையை சொல்லுங்கள் என்றேன்.கதையை கேட்டு நடிக்க அதிக ஸ்கோப் உள்ள இந்தக்கதைக்கு அதிகமாகவே உழைத்தேன்.நடிப்பிலும் என்னை பேசவைக்கிற படமாகவேக்கிற படமாகவே உழைத்தேன்.நடிப்பிலும் என்னை பேசவைக்கிற படமாக இது இருக்கும்.( படம் பூரா பேசிட்டே இருப்பீங்களோ?)

படத்தில் அருள்நிதியின் ஜோடியாகிஇருப்பவர்,வாகை சூடவா இனியா.( ஃபிகரு இதுலயாவது கிளாமர் காடுதான்னு பார்ப்போம்). ஈரோடு ஆனூர்ல ரிலீஸ்

http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/09/UCHITHANAI.jpg
3. உச்சிதனை முகர்ந்தால் - ஈழப்போரில் தமிழ்ப் பெண்கள், இளம் சிறுமிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை கொஞ்சமல்ல.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் மடிந்த சோகங்கள் சொல்லி முடியாதவை.

அத்தகைய சோகக் கதைகளில் ஒன்றுதான் உச்சிதனை முகர்ந்தால் என்ற தலைப்பில் படமாக வருகிறது. தமிழ் உணர்வாளரும் காற்றுக்கென்ன வேலி போன்ற மாற்று சினிமா படைப்பாளியுமான புகழேந்தி தங்கராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்ட 13 வயது தமிழ்ச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். நீனிகா என்ற சிறுமி இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த தம்பதியர்களாக சத்தியராஜும் சங்கீதாவும் நடித்துள்ளனர். சீமான், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் என தேர்ந்தெடுத்த நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களைச் செய்துள்ளனர்.

ஈழத்தின் துயரங்களுக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்பது படத்தில் மறைபொருளாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால், இந்தப் படம் சென்சாருக்குப்போனபோது, ஏகப்பட்ட பிரச்சினைகள், வெட்டுக்களைச் சந்திக்க நேர்ந்தது. இறுதியில் யு ஏ சான்றுடன் வெளியாக அனுமதிக்கப்பட்டது.

இதையெல்லாம் விட மிக முக்கியம், இந்தப் படத்துக்கு வணிக சினிமாவில் முன்னணியில் உள்ள ஜெமினி பிலிம் சர்க்யூட் ஆதரவளித்திருப்பது. படத்தை தங்கள் பேனரிலேயே ஜெமினி நிறுவனம் விநியோகிக்கிறது.



தன் இனத்துக்கு நேர்ந்து கொடுமைகளை திரும்ப நினைத்துப் பார்ப்பது, அந்த சோகத்தை நினைத்து கண்ணீர் விட மட்டுமல்ல, இனவிடுதலையின் அடுத்த நகர்வு குறித்த விழிப்புணர்வையும் கோபத்தையும் நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யவுமே.

அந்த வகையில் உச்சிதனை முகர்ந்தால் தமிழர் வாழ்வில் முக்கிய சினிமாவாக அமையும் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்!

http://larryfire.files.wordpress.com/2011/06/mission-impossible-ghost-protocol.jpg

 4. GHOST PROTOCALL ( MISSION IMPOSSIBLE)-  டாம் க்ரூஸ் நடிச்ச ஆக்‌ஷன் படம். ஈரோடு வி எஸ் பி ல ரிலீஸ். வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் பாணி கதைதான்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் உளவு நிறுவனம் அதை வைத்தவர்களை  கண்டறிய தன் ஏஜண்ட்ஸை அனுப்புகிறது.. ஹீரோ அண்ட் வில்லன் மோதல்

http://www.flicksandbits.com/wp-content/uploads/2011/12/mi-ghost-protocol-still09.jpg