Showing posts with label JUVI. Show all posts
Showing posts with label JUVI. Show all posts

Thursday, June 07, 2012

கட்சி ஆரம்பித்த பிரபல பத்திரிக்கையாளர் - ஜூ வி கேள்வி பதில்கள்

1.  ஜனாதிபதி வேட்பாளராக லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை முன்னிறுத்துகிறாரே மம்தா?


மக்களவையில் யார் என்ன திட்டு திட்டினாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார் மீரா குமார். இந்தத் தகுதியால் இருக்குமோ?



2. ஜெயலலிதாவின் உருப்படியான சாதனை என்ன?

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பியது மட்டும்தான்!
இன்று தன்னுடைய சாதனைகளாக ஜெயலலிதா சொல்பவை அனைத்தும் ஓர் அரசாங்கம் தனது குடிமக்களுக்குச் செய்துதர வேண்டிய அடிப்படைக் கடமைகள், அவ்வளவுதான்.

 இதை ஜெயலலிதாவும் செய்யலாம். கருணாநிதியும் செய்யலாம். ஏதாவது ஒரு கவர்னரும் உட்கார்ந்து கொண்டு செய்யலாம். பரீட்சை எழுதி பாஸ் ஆன அனைவரும் சாதனை செய்தவர்களாக சொல்லப்படுவது இல்லை. அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றிக் காட்டினேன். ஏழ்மை இல்லாத நிலையை உருவாக்கினேன். மின் பற்றாக்குறை இல்லாத தமிழகம் இது. வேலை இல்லாப் பட்டதாரிகள் கிடையவே கிடையாது என்பது மாதிரியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களையே சாதனைகளாக வரவு வைக்கவும், வரவேற்கவும் முடியும்!


3.'புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்களைக் கொல்லவில்லை’ என்கிறாரே, இலங்கை மாஜி ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா?


ராஜபக்சேவால் கைது செய்யப்பட்டவர் என்பதற்காக ஃபொன்சேகா புனிதராகி விட முடியாது. ஐ.நா. மனித உரிமை அமைப்பு பகி ரங்கப் போர் விசாரணையை நடத்துமானால், முதல் குற்றவாளி ராஜபக்சே என்றால், இரண்டாவது குற்றவாளியாகப் பதில் சொல்ல வேண்டியவர் ஃபொன்சேகா. எனவே, 'அப்பாவிகளைக் கொல் லவில்லை’ என்றுதான் அவரும் சொல்வார்.


4. அரசியலில் ஆன்மிகம், ஆன்மிகத்தில் அரசியல் - எது சரியானது?


இரண்டுமே தவறானவை. பக்தி, ஆன்மிகம், கடவுள், மதம் ஆகியவை ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை, தனிச்சொத்து. நம்பிக்கை சார்ந்த விஷயம். அந்த விருப்பங்கள், அரசியல் ரீதியாக விமர்சிக்கத்தக்கவையும் அல்ல. எனவே, அரசியலில் ஆன்மிகத்தைப் புகுத்தி ஆதாயம் தேடுவதும் தவறு. ஆன்மிகவாதிகள் தேர்தல் அரசியலுக்குள் புகுந்து செயல்படுவது அதைவிடத் தவறு.


ஆனால், தங்களது சுய லாபங்களுக்காக ஆன்மிக விஷயங்களைக் கபளீகரம் செய்ய அரசியல்​வாதிகள் நினைக்கிறார்கள். அதற்கு அப்பாவிகள் பலியாகிறார்கள்!


5. மதுரை ஆதீனம் பிரச்னையில் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்?


மௌனமாக இல்லை. உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முதல்வரைச் சீண்டிப்பார்க்கும் சில கமென்ட்ஸ்களை நித்தியானந்தா தரப்பு வைத்ததாக மேலிடத்துக்குத் தகவல் வந்துள்ளது. அதனுடைய ரியாக்ஷன் போகப் போகத்தான் தெரியும்!


6. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே போவது குறித்து மத்திய அரசுக்கு கவலையே இல்லையா?


இந்தியாவின் மதிப்பு எப்போதோ குறைந்து​போய்விட்டது. அதைப் பற்றியே கவலைப்​படவில்லையே!


வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியப் பணத்தை மீட்டு வருவதற்குக் கூட இவர்கள் மனப்பூர்வமாக முயற்சி செய்யவில்லை. இந்தப் பணத்தை மொத்தமாக மீட்டு வந்தால் ரூபாயின் மதிப்பு உயருமா, இல்லையா என்பதை விட, இந்தியாவின் மதிப்பாவது உயரும்!



7. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பது அரசியலுக்குப் பொருந்துமா?


அரசியல் என்பதே தனி​மனிதப் போட்டியை அடிப்​படையாகக் கொண்டதாக மாறிவிட்டது. ஒருவர், அடுத்தவரை வீழ்த்துவதன் மூலமாகவே லாபம் அடைய முடியும் என்பது யதார்த்தமாக உள்ளது. இந்த நிலையில் குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்குபவர்களால் மட்டுமே அரசியலில் கோ​லோச்ச முடியும்.


இதுபற்றி கண்ணதாசன், 'அரசியல் சதுரங்​கத்தில் இரண்டு வகை உண்டு. நேரடி​​யாக இறங்கிஉள்ளதை உள்ளபடியே சொல்லி, உண்மை, நேர்மை என்று பாடுபட்டு இறுதியில் இருக்குமிடம் தெரியாமல்​போ​வது. இன்​னொன்று, குறுக்கு வழியில் காய்களை நகர்த்தி, நண்பனையோ உற​வினனை​யோ கொல்ல வேண்டுமானால் கொன்று, அரங்கத்தில் நேர்மையாக நடித்து அந்தரங்கத்தில் வஞ்சகனாகி எந்த வழியில் வெற்றி கிடைக்குமானாலும் அந்த வழியை நாடுவது. இவை இரண்டுக்கும் உதா​ரணம் காட்டுகிறது மகாபாரதம். நேர்வழிக்குப் பரந்தாமன். குறுக்கு வழிக்கு சகுனி’ என்று எழுதினார்.


இது, சகுனிகளின் காலம். அண்ணா சொன்ன அந்த உதாரணம் வெறும் கனவு!


8. 'எந்த வேலையையும் செய்ய இந்த ஆட்சியில் ஒப்பந்தக்காரர்கள் முன்வருவது இல்லை’ என்கிறாரே கருணாநிதி?


கமிஷன் தொகையையும் அதிகரித்து​விட்டார்கள். யாரிடம் கொடுப்பது என்பதிலும் குழப்பம். எப்படி வரு​வார்கள் ஒப்பந்தக்காரர்கள்? ஆனால் இதுதான், சில அதிகாரிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. கொழிக்கிறார்கள். 'வருமானத்​துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கு’ இப்போதே சில அதிகாரிகள் மீது
போடலாம்! 


9. தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிகையாளராவது கட்சி ஆரம்பித்திருக்கிறாரா?


உடனடியாக நினைவுக்கு வருகிறார், சி.பா. ஆதித்தனார். முதலில் அவர் வக்கீல். ஆனால், பத்திரிகையாளராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். 'தமிழப் பேரரசு’ என்கிற கொள்கை ஈர்ப்பால், 'நாம் தமிழர் கட்சி’ தொடங்​கினார். பின்னர், அவர் தி.மு.க-வில் ஐக்கியம் ஆகிவிட்டாலும், அந்தக் காலத்தில், குறிப்பிடத்தகுந்த அதிர்வுகளை அந்தக் கட்சி உருவாக்கியது.


மற்றபடி, கட்சி ஆரம்பித்தவர்கள் அனை​வருமே தங்களுக்கென ஒரு பத்திரிகை​​யையும் ஆரம்பித்தார்கள். அதற்கு எத்தனையோ உதார​ணங்கள் உண்டு!


10. ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள், மர்ம நபர்களால் தாக்கப்​பட்டுக் கொல்லப்படுவது பற்றி?


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரக்கூடிய கேள்விகள் கேட்கும் அனைவருக்குமே அச்சுறுத்தல் இருக்கிறது. ஆனால் சட்டத்தின் பாதுகாப்பு, இத்தகைய தகவல் போராளிகளுக்கு இல்லை. போலீஸ், இதைக் கண்டுகொள்வதும் இல்லை. அதனால், இதுபோன்ற கொலையை, சாதாரணக் கொலை வழக்காக இல்லாமல், சிறப்பு வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்.


Monday, June 04, 2012

எழுத்தாளர் சோலை - சில நினைவுகள்

ளிமையான எழுத்து, ஆழ்ந்த அனுபவம், கம்யூனிஸ சிந்தனை, தெளிவான பார்வை, வெகுஜன அக்கறை, நிகழ்காலப் பரபரப்பு  - இந்தக் கலவைதான் எழுத்தாளர் சோலை. பத்திரிகை​யாளராக, அரசியல் விமர்சகராக அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் பணியாற்றிய சோலை, கடந்த 29-ம் தேதி காற்றில் கரைந்து போனார். அவரைப் பற்றிய நினைவுகள்...

1. நல்லகண்ணு (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி): சோமசுந்தரம் என்ற சோலை அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே பூமி தான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, நிலம் இல்லாதவர்களுக்காகப் போராடினார். பூமி தானப் பிரசாரத்துக்குப் போன தோழர் ஜீவானந்தம், சோலை அவர்களின் எழுத்து ஆற்றலைக் கண்டு 'ஜனசக்தி’யில் பணியாற்ற 1959-ல் அவரைச் சென்னைக்கு அழைத்து வந்தார். கட்சியில் பிளவு ஏற் பட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். பிறகு, எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். சோவியத் யூனியன் சென்று வந்ததும் அவர் எழுதிய, 'சிவப்பு ரோஜா’ பலராலும் பாராட்டப்பட்டது.
முற்போக்கு எண்ணம் கொண்ட சிறந்த பத்திரிகை​யாளர். எளிய தமிழில், அழுத்தமான கிராமப்புற வார்த்தைகளுடன் அவர் வடிக்கும் கட்டுரைகள், அனைத்து மக்களையும் வெகுவாகக் கவர்ந்தவை. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை, விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆழ்ந்து யோசித்து எழுதும் வல்லமை படைத்தவர். எனக்கும் அவருக்கும் மிக நெருங்கிய பழக்கம் உண்டு. சில விஷயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும், அதை நட்புடன் விமர்சித்துக் கொள்வோம். நீண்ட அரசியல் அனுபவம்​கொண்ட ஒரு பொக்கிஷத்தை இன்றைய தலைமுறை இழந்துவிட்டது. அவரது வாழ்க்கை அனைத்து பத்திரிகை​யாளர்களுக்கும் பாடம்.



2. ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று 'தீக்கதிர்’ இதழைத் தொடங்கி நடத்திய நால்வரில் முக்கி யமானவர் சோலை. அடுத்தடுத்து அரசியல் ரீதியாக அவர் பல மாறுபட்ட தளங்களில் இயங்கினாலும், மிகச்சிறந்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் பொன்விழா ஆண்டு, வரும் ஜூன் 29-ம் தேதி தொடங்குகிறது. அந்த விழாவுக்கு நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என்று நான் சொன்னபோது, அழைப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அவர் தொடங்கிய பத்திரிகையின் பொன்விழாவைக் காண்பதற்கு முன்பே இயற்கை அவரை அழைத்துக்கொண்டு விட்டது. தீக்கதிர் இதழின் பொன் விழாவுக்கு அவர் ஒரு சிறப்புக் கட்டுரை தீட்டி வைத்திருப்பதாகச் சொன்னார். அதைத் தீக்கதிர் இதழில் பிரசுரிப்போம். இதுதான் அந்த எளியவருக்கு நாங்கள் செலுத்தும் நன்றி கலந்த அஞ்சலி.



3. துரை கருணா (பத்திரிகையாளர்): எம்.ஜி.ஆர் நடத்திய, 'அண்ணா’ பத்திரிகையின் ஆசிரிய​ராக சோலை அவர்கள் இருந்தபோது, நான்கு ஆண்டு காலம் அங்கு நான் நிருபராகப் பணியாற்றி​னேன். எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை முன்னிறுத்​தியபோது, சோலை அவர்களைத்தான் ஜெயல​லிதாவுக்கும் அரசியல் ஆலோசகராக நியமித்தார். உட்கட்சிப் பிரச்னைகளைத் தீர்த்து​வைப்பதில் சோலை வல்லவர். ஒரு முறை திருநெல்வேலி தொகு​திக்கு இடைத்தேர்தல் வந்தபோது, கருப்பசாமி பாண்டியனை அழைத்த எம்.ஜி.ஆர், 'நீதான் வேட்பாளர்... போய் வேலையைத் தொடங்கு’ என்று சொல்லி விட்டார். தேர்தல் நேரத்தில் ஆர்.எம்.வீரப்பனின் எம்.எல்.சி. பதவி போய் விட்டது. 


எனவே, ஆர்.எம்.வீரப்பனை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டிய கட்டாயம். அதனால் வேறுவழி இல்லாமல் ஆர்.எம்.வீரப்பனை வேட் பாளராக எம்.ஜி.ஆர் அறிவிக்கவே, கருப்ப​சாமி பாண்டியன் கோ​பத்தில் தலைமறைவு ஆகிவிட்டார்.  சோலையை  அழைத்த எம்.ஜி.ஆர், 'கானாவை சமாதானப்படுத்துங்கள்’ என்றார். அடுத்த சில நாட்களில், 'கருப்பசாமி பாண்டியன்தான் எனது முழுத்தேர்தல் பயணத்தையும் பார்த்துக்​கொள்வார்’ என்று, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். இதைப்பார்த்து கலங்கிப் போனார் கருப்ப​சாமிப் பாண்டியன். 


இதுதான் சோலை அய்யாவின் திறமை. எம்.ஜி.ஆர். - இந்திரா காந்தி ஆகியோருக்கு இடையே அரசியல் ரீதியான நெருடல் வந்தபோது, டெல்லி சென்று இந்திராவின் பிரதமச் செயலாளரான பி.சி.அலெக்சாண்டரிடம் பேசி, இருவருக்குள் இருந்த இடைவெளியைக் குறைத்தவர் சோலைதான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், அரசியல் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டு எழுத்துப் பணிகளை மட்டும்தான் கவனித்தார். அவரது மறைவு பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் இழப்பு.


4. இரா.ஜவஹர் (விமர்சகர்): அனைத்துத் தலைவர்களையும், 'அண்ணே... அண்ணே...’ என்று அழைத்து வந்த மூத்த பத்திரிகையாளர் சோலை, எனக்கு மட்டும் 'சோலை அண்ணன்’.  என் குருநாதர். 1977-ல், 'மக்கள் செய்தி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை, ஆசிரியர் சோலை எனக்கு அளித்தார். அதுதான் பத்திரிகைத் துறையில் எனது முதல் பணி. ஒரு நாளிதழ் ஆசிரியராக அவர் பணியாற்றும் பாங்கு, இப்போது நினைத்துப் பார்த்தாலும் வியக்கவைக்கும்.


செய்திகளைத் தேர்வு செய்வது, நிருபர்களுக்குப் பணி ஒதுக்குவது, தலையங்கம், கட்டுரைகள் எழுதுவது, தொலைபேசியில் வரும் செய்திகளை மின்னல் வேகத்தில் எழுதி அச்சுக் கோக்க உடனுக்குடன் கொடுப்பது, தேவையானால் மெய்ப்பு (புரூஃப்) பார்ப்பது, இதழ் விற்பனை நிலவரத்தைக் கண்காணிப்பது... எதைத்தான் செய்யவில்லை அந்த மனிதர்! ஆனால், அனைத்தையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் செய்தார்.
 பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை மேம்படுத்தி, சத்துணவுத் திட்டமாகச் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். இது ஐ.நா. சபை வரை பேசப்பட்டது. இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தவர் சோலைதான். இது அப்போதே பிரபல வார இதழில், 'மாங்குயில் கூவிடும் இடத்தைப் பெயராகக்கொண்டவர்தான் இந்த யோசனையை எம்.ஜி.ஆருக்கு அளித்தார்’ என்று எழுதப்பட்டு இருந்தது. இத்தகைய திடீர் யோசனைகள் அவருக்கு  பிரத்யேகமானவை. இறந்தாலும் எண்ணற்ற பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் வழிகாட்டியாகத் தொடர்வார் அண்ணன்!''     

நன்றி - ஜூ வி

Sunday, June 03, 2012

நடிகை காஜல் இணையத்தில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் - ஜூ வி கட்டுரை



க்கபூர்வமான காரியங்களைவிட, அழிவுபூர்வ​மான விவகாரங்களுக்குத்தான் இணையதளம் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ? 

சி.பி - ஆவதும் நெட்டாலே, அழிவதும் நெட்டாலே?


ஒரு பெண்ணை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியும் என்பதற்கு, நடிகை காஜலுக்கு நேர்ந்த கொடுமையே சாட்சி.


'கோ’, 'மௌன குரு’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் காஜல். இவர் சென்னை, போலீஸ் கமிஷனரிடம் கொடுத்திருக்கும் புகாரைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது. .


''கடந்த 23-ம் தேதி மாலை 3 மணியில் இருந்து என்னுடைய செல்போனுக்குத் தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. பேசியவர்கள் அனைவரும், 'எங்கே வர்ற? ரேட் எல்லாம் பிரச்னை இல்லை, எந்த ஹோட்டல்ல ரூம் போடலாம்?’ என்ற ரேஞ்சிலேயே பேசினார்கள்.


 திடீரென இப்படிப்பட்ட அழைப்புக்கள் ஏன் வருகிறது என்று புரியவில்லை. ஆபாசமாகப் பேசியவர்களை திட்டித் தீர்த்தேன். அப்படி ஒருவரைத் திட்டியபோது, அவர்தான் நிதானமாக, 'உங்களின் போட்டோவும் மொபைல் நம்பரும் போட்டு ஒரு வெப்சைட்டில் நீங்கள் ஒரு கால் கேர்ள் என்பதுபோல் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதனால்தான் உங்களைத் தொடர்பு கொண்டேன்’ என்றார். 


அவரிடம் இருந்து வெப்சைட் அட்ரஸைப் பெற்றேன். இலவசமாக விளம்பரங்கள் தருவதற்குப் பயன்படும் வெளிநாட்டு வெப்சைட்  அது. அதைப் பார்த்து கதறி அழுதேன். உடனே, அந்த வெப்சைட் முகவரிக்கு, 'என்னைப் பற்றி தவறான விளம்பரம் வெளியாகி உள்ளது. அதை உடனே நீக்க வேண்டும். அதை வெளியிட்டவர் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும்’ என்று இ-மெயில் அனுப்பினேன்.



'உங்களைப்பற்றிய விளம்பரம் 72 மணி நேரத்தில் நீக்கப்படும். விளம்பரத்தை வெளியிட்டவர்பற்றிய தகவலைத் தர முடியாது’ என்று பதில் வந்தது. இதையடுத்தே சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். உடனே நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்தால்தான், எதிர்காலத்தில் மற்ற பெண்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகள் வராது'' என்றார் கவலையுடன்.


சி.பி - எதுக்கு 72 மணி நேரம்? வெப்சைட் ஓனர் 3 நாள் லீவ்ல இருக்காரா? அதை எடுக்க 3 நிமிஷம் போதாதா? அந்த விளம்பரம் அட்லீஸ்ட் 5 நாளாவது விளம்பரத்தில் இருக்க ஆல்ரெடி ஒப்பந்த அடிப்படைல காசு வாங்கி இருப்பாரு.



புகாரை விசாரித்து வரும் சைபர் க்ரைம் கூடுதல் உதவி ஆணையர் சுதாகரிடம் பேசினோம். ''இதுகுறித்து விசாரித்து வருகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க எங்கள் டீம் மீட்டிங் நடக்கிறது. அதன் பிறகுதான் மற்ற விவரங்களைத் தர முடியும்'' என்றார்.


பெண்ணைக் கேவலப்படுத்தும் இதுபோன்ற அற்பத்தனமான ஆயுதங்களைக் கையில் எடுப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும்.