Sunday, August 14, 2011

புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாத நிலையில்..... ( ஆன்மீகம் )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH25aYiXPAGLTR8iuM8cXkJrI_Hu-mqK-yz9m8dWggo6nT_AHqPk53BK7P1wg_7uR6NMVkQdtxSe_FPFqYAmqNvcwxI4lEFCrYX3SOgm7KflN48McmsDgBGUWjZvhSYgFd-KiBbikaWWiY/s1600/thenimalai7.jpg
தேனிமலை தீர்த்தம்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கோபுர கலசங்களுக்கு அதீத சக்தி உண்டா?

1. ஆலயங்களின் கோபுர கலசங்களில் இரீடியம் எனும் மதிப்பு வாய்ந்த உலோகம் இருப்பதாகக் கருதி, சில இடங்களில் கோபுர கலசங்கள் களவாடப்படுவதாகச் செய்தி படித்து அதிர்ந்தேன்! உண்மையிலேயே கோபுர கலசங்களுக்கு அதீத சக்தி உண்டா? கோபுர கலசங்கள் குறித்து ஆகமங்கள் என்ன சொல்கின்றன? 



ஸனாதனத்தின் உட்பிரிவான ஸ்மிருதி நூல்கள் 'பிரதிஷ்டா மயூகம்’ போன்ற நூல்களை அறிமுகம் செய்தன. அது வழி... வாஸ்து சாஸ்திரத்தின் துணையுடன் இறையுருவத்தை இருத்தி வழிபட, ஆலயம் அமைக்கும் நடைமுறையைக்  கையாண்டு வந்தது. பிற்காலத்தில் சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் சுதந்திரமாகச் செயல்பட எண்ணியபோது, சைவ- வைணவ ஆகமங்கள் தோன்றி, ஆலய நிர்மாணம் பற்றிய பரிந்துரைகளை அளித்து உதவின.

தேசத்துக்கு தேசம் ஆலயம் அமைக்கும் விதத்தில் மாறுபாடு இருக்கும். கும்பத்தில், மந்திரம் வாயிலாக இறையுருவைக் குடியிருத்தி, பணிவிடைகளால் மகிழ்வித்து, அந்தக் கும்ப ஜலத்தை கோபுரக் கலசத்தில் சேர்ப்பார்கள். இதனால், இறையுருவின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்துக்கு வந்துவிடும். இதன் அடிப்படையிலேயே, 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிற வழக்கு எழுந்தது. கூரான உருவ அமைப்பு, இடி- மின்னலால் பாதிக்கப்படாமல் இருக்கும். இரீடியம்... அதற்கு சக்தி அதிகம் என்று தாங்கள் குறிப்பிடுவதெல்லாம் நம்பிக்கையில் விளைந்தது. அதைவிடப் பெருமை வாய்ந்தது, கோபுரக் கலசத்தில் தென்படும் இறை சாந்நித்தியமே!

கோயில் இறைவனின் உடல்; கோபுரக் கலசம் அவருடைய சிரசு; கருவறை அவன் உறைந்திருக்கும் இடம் (தேஹோ தேவாலய:...). நம்முள் ஜீவாத்மா இருப்பது போல், கோயிலுக் குள் பரமாத்மா இருக்கிறார். கும்பாபிஷேக வேளையில், மந்திர ஒலியுடன் இணைந்த கோபுரக் கலசங்கள், ஆகாயத்தில் அவ்வப்போது நிகழும் தட்பவெப்பத்தின் தாக்கத்தாலும், அன்றாடம் கோயிலில் ஒலிக்கும் வேத மந்திரங்களின் சேர்க்கையாலும், சிந்தனைக்கு எட்டாத பெருமையைப் பெற்று விளங்கும்.

விஞ்ஞானம் கண்டுபிடித்தது கை மண்ணளவு; கண்டுபிடிக்காதது உலகளவு. விஞ்ஞானத் தகவலை வைத்துப் பெருமை கொள்வதைவிட, மெய்ஞ்ஞானத்துக்குப் பயன்படும் என்பதை அறிவது சிறப்பு. 'இரீடியம்’ இருப்பதால் கோபுரக் கலசங்கள் களவாடப் படுவதாகச் சொல்கிறீர்கள். களவாடப்படும் விஞ்ஞானம் நமக்கெதற்கு?!

எவராலும் களவாட முடியாத ஆன்மிகம், என்றென்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞான விளக்கத் தோடு சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக் காமல்... கோபுரக் கலசம் முதலான வற்றில் இணைந்திருக்கும் ஆன்மிகப் பெருமைகளை உணரும் வகையில் நம் சிந்தனைகள் தொடர வேண்டும்.

மட்டையோடு இணைந்த தேங்காய் பயனுள்ளது. மட்டை, கயிறு திரிக்கப் பயன்படும்; கொட்டாங்கச்சி- அகப்பை செய்வதற்குப் பயன்படும்; தேங்காய்- சமையலுக்கு உதவும்; எண்ணெயும் கிடைக்கும்.

அதே நேரம்... தென்னையின் இளநீர் பருகவும் பயன்படும்; இறை அபிஷேகத்துக்கும் உதவும்; அதன் மூலம் ஆன்மிகச் சிந்தனைக்கு நம்மைத் திருப்பிவிடும். 'இரீடியம்’ உபயோகப் பொருள். அதைவிட உயர்ந்த தத்துவம், (திருட முடியாத) கோபுரக் கலசத்தில் அடங்கியிருக்கிறது. களவாடப்படும் பொருட்கள், காலத்தால் அழிவைச் சந்திக்கும். அழிவற்ற பரம்பொருளின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்தில் உறைந்திருப்பதை உணர்ந்து, அதை வழிபடுவோம்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2011/feb/rameswaram.jpg
ராமேஸ்வரம்


2. கிரகஸ்தனான நான், தியானத்தின்போது தூய்மையான துணியை தரையில் விரித்து, அதன் மீது அமர்ந்து தியானம் செய்கிறேன். இனி, தர்ப்பைப் பாயின் மீது அமர்ந்து தியானம் செய்ய எண்ணியுள்ளேன். இது சரியா? 



தர்ப்பாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது சிறப்பு. தியானத்தைச் சிறப்பிக்க வைப்பதில் ஆசனத்தின் பங்கும் உண்டு. பரிசுத்தமான பொருள் தர்ப்பை. தர்ப்பாசனம் அசையாமலும் சுகமாகவும் இருக்கும்; அதைப் பயன்படுத்துவது சிறப்பு என்று பதஞ்சலி கூறுவார் (ஸ்திர சுகமாஸனம்).

அதன் மீது அமர்ந்து தியானிப்பதால், புவியின் ஆகர்ஷணம் நம்மைப் பாதிக்காது. தியானத்தின் பலனை எட்டுவதற்கு அது பயன்படும். வேதம் சொல்லும் சடங்குகளில்... தர்ப்பையில் அமர்ந்து, தர்ப்பையைக் கையில் ஏந்திச் செயல்படுவதுண்டு (தர்பேஷ§ஆஸுன: தர்பான் தாரயமாண:). தர்ப்பையின் பெருமை, தூய்மையான துணிக்கு இருக்காது.

புவி ஆகர்ஷணத்தைத் தடுக்கும் தகுதி அதற்கு இல்லை. வேறு வழி இல்லாத நிலையில், துணியைப் பயன்படுத்தலாமே தவிர, நிரந்தரமாக ஏற்கக்கூடாது. ஆமை வடிவில் இருக்கும் மரத்தாலான பலகையைப் பயன்படுத்துவதும் உண்டு. அதுவும் புவிஆகர்ஷணத்தைத் தடுப்பதுடன், ஆசன இலக்கணத்தோடு விளங்கும் (ஆசன மஹா மந்திரஸ்ய... கூர்மோதேவதா). துணிக்கு இலக்கணமும் இல்லை; ஆகர்ஷணத்தைத் தடுக்கும் திறனும் இல்லை.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitOWWVX7D5BBOs03rdcdVMPtfkv9o0KUaRhdTFR1vuvCiboUjmaixI0mftEjsYy-KT036PMWODqHWerLBZTolwx62UldxCL4Pq1OrfSvNfbpjusAtfYHBC6deb5VfO3sPfxdobjROuxZQ/s1600/theerththam.jpg

3. உடல்நலக் குறைபாடு காரணமாக புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாத நிலையில், கடவுள் பெயரைச் சொல்லித் தீர்த்தத்தை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால், தீர்த்தமாடியதற்கான பூரண பலன் கிடைக்குமா? 



குளித்தால் உயிர் பிரிந்துவிடும் அல்லது நீரின் குளிர்ச்சியால் நோய் முற்றி, பல அலுவல்களை இழக்க நேரிடும் என்று தெளிவாகத் தெரிந்தால்... நீரை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால் போதும்; பலன் உண்டு.

வெந்நீரில் குளித்தாலே சளி ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாவோரும் குற்றாலம் அருவியில் குளிப்பதுண்டு. உடல் நலமில்லாதவன், தந்தைக்குக் கொள்ளி வைத்த கையோடு குளிப்பதுண்டு. மாறா வியாதியில் மருந்து எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் அத்தனை பேரும் தலை முழுகிக் குளிக்காமலா இருப்பார்கள்?! அவசர- ஆபத்து வேளைகளில் குளிப்பதற்குப் பதிலாகத் தெளித்துக் கொள்ளலாம் என்ற விதிவிலக்கை, குளிக்காமல் தவிர்ப்பதற்குப் பயன் படுத்தக்கூடாது. விதி வேறு; விதிவிலக்கு வேறு.

விதிவிலக்கைத் தேடிப்பிடித்துச் சட்டமாக மாற்ற முற்படக்கூடாது. உடல் நலம் இருக்கும்போது தீர்த்தக்கரைக்குப் போக வேண்டும். குளிப்பதற்காகத்தான் தீர்த்தங்கரை செல்கிறோம். குளிக்க முடியாத நிலையில் அங்கு போவது தவறு. உடல்நலக் குறைபாடு, தீர்த்தங் கரை ஸ்னானத்துக்கு உகந்ததல்ல. உடல் நலனோடு இருக்கும்போது, அங்கு சென்று நீராடுவது சிறப்பு. அன்றாடம் நீராடிப் பழக்கப் பட்டால், உடல் ஆரோக்கியம் சிறக்கும்; தீர்த்தங் கரையைப் பார்த்ததும் நீராடத் தோன்றும்; விருப்பமும் நிறைவேறும்.


http://karurtimes.com/wp-content/uploads/2011/08/river-photo.jpg


4.திருமணமானதும் கிரகப் பிரவேசம் செய்யும் மணப்பெண், வீட்டு வாசற்படியில் வைக்கப் பட்டிருக்கும் அரிசி அல்லது நெல் நிரம்பிய பாத்திரத்தைக் காலால் தட்டிவிட்டு உள்ளே நுழைவாள். இந்தச் சடங்குக்கான தாத்பரியம் என்ன? 



மெழுகிச் சுத்தம் செய்து, கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட வீட்டில், மணப்பெண் அடியெடுத்து வைக்குமுன் பீஜ தான்யத்தை, அதாவது நெல்லை வாரி இறைப்பார்கள். அதன்பிறகு, அவள் உள்ளே நுழைவாள்.

தான்ய லட்சுமியின் வருகைக்குப் பிறகு, கிரஹலட்சுமி விஜயம் செய்வாள். அறுசுவை உணவுடன் சேர்ந்த ஆனந்த வாழ்க்கைக்கு ஆதாரம் தானியம்; அதாவது நெல். அது அந்த வீட்டில் என்றென்றும் நிரம்பி வழியவேண்டும். இந்த நடைமுறை இடத்துக்கு இடம் மாறுபட்டு இருக்கும். வட நாட்டில், கிரஹலட்சுமியே தான்ய லட்சுமியை வாரியிறைக்கும் விதமாகத் தனது காலால் தானியத்தைக் கொட்டிய பிறகு நுழைவாள். இது, நம் பகுதிகளில் தென்படாததால், வியப்பாகத் தோன்றுகிறது!


- பதில்கள் தொடரும்... 

thanx - vikatan

Saturday, August 13, 2011

ஜெ ஆளுங்க மிரட்னாலும் சரி , ஜெயிச்ச ஆளுங்க மிரட்னாலும் சரி பயப்படமாட்டேன் - வடிவேல் பேட்டி - காமெடி கும்மி

உண்மையை உடைக்கும் வடிவேலு

நான் பொய்ப் புள்ள இல்லண்ணே... கைப்புள்ள!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5p-TWhIPyn7z4Ti6NmHJgzrH3WkdlGgAp6cIX8skQ2iQha6oNMRLXZF-8j-dAMUjhoj_cFt0AwPAZFVzjOCiExM_NdKjeesszWOnTF4gS9mC-cRoMm04IczB_YEGXhqEvBVAVVuGZ60/s400/Vadivelu-and+Actress-Asin-in-Press-meet+.jpg 

ந்த நேரத்தில் பிரசார வேனில் ஏறி னாரோ... அக்கப்போரும் பரபரப்பும் வடிவேலுவை இன்னும் விடாது விரட்டுகிறது. லேட்டஸ்ட் வரவு... போலிப் பத்திர மோசடி! 


சென்னை புறநகர் போலீஸில் பழனியப்பன் என்பவர் புகார் கொடுத்த உடனேயே, 'வடிவேலு தலைமறைவு’ என்கிற செய்திகள் றெக்கை கட்டத் தொடங்கிவிட்டன.


''எங்கேண்ணே இருக்கீங்க?'' என போன் போட்டுக் கேட்டதுதான் தாமதம். ''எங்கேயும் ஓடலை. 'தலைமறைவு’னு போட்டிருக்கிற போஸ்டர்களை நானும் பார்த்தேன். இந்தத் தலை என்னிக்குமே மறையாதுண்ணே... நான் செத்தாக்கூட, என் தலை ஏதாச்சும் ஒரு தியேட்டர்லேயோ, டி.வி-யிலேயோ தெரிஞ்சு கிட்டேதான் இருக்கும்.


ஒண்ணு... சென்னையில இருப்பேன். இல்லன்னா, என் அன்னையோட மதுரைத் திண்ணையில இருப்பேன்.

 சி.பி - எங்கே இருக்கீங்கன்னா அதுக்கு மட்டும் பதில் சொல்லனும், அதை விட்டுட்டு சென்னை , திண்ணைன்னு ஏன் வெண்ணை மாதிரி சமாளிப்பு?

தலைமறைவு ஆகிற அளவுக்கு நான் ஒண்ணும் என்கவுன்ட்டர் குற்றவாளி இல்லண்ணே... நாலு பேரை வயிறு வலிக்கச் சிரிக்கவெச்சதைத் தவிர, வேற எந்த வேலையும் செய்யலண்ணே! என்னையப்போய் வில்லங்கம்னு சொல்ல எப்படித்தான் மனசு வருதோ?'' என்றவரிடம் சொத்து விவகாரக் கேள்விகளை வைத்தோம்.



சி.பி - ஏன்? சிங்கமுத்து கிட்டே காமெடி டிராக் எழுதி வாங்கிட்டு ஏமாத்தலை? 



http://www.chennai365.com/wp-content/uploads/movies/Indira_Logathil_Na_Azhagappan/Vadivelu-012908-.jpg
1. ''ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவரே நீங்கள் மோசடி செய்ததாகப் புகார் செய்திருக்கிறாரே?''

சி.பி - அட!!! சிங்கி மங்கி சீட்டிங்க் ஒன் வங்கி !!! அவ்வ்வ்
''அந்த பழனியப்பன் கறுப்பா சிவப்பானுகூட எனக்குத் தெரியாது. இப்போ டி.வி-யிலதான் பார்த்தேன். என் மேனேஜர் முத்தையா மாதிரியே இருக்கார். 2002-ல் இப்போ சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிற நிலத்தை நான் வாங்கினேன். அதில், ஈ.சி. பார்த்தப்ப எந்த வில்லங்கமும் இல்லை. 


2009-ல் அந்த இடத்தில எங்க ஆளுங்க காம்பவுண்ட் போட்டப்ப, பழனியப்பன்கிறவர் வந்து, 'இது என்னோட இடம்’னு சொல்லி இருக்கார். 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாகச் சொல்ற பழனியப்பன், மூணு வருஷம் கழிச்சு வந்து கேட்க என்ன காரணம்? அப்புறம், அவரே செங்கல்பட்டு கோர்ட்ல கேஸ் போட் டார். அதுக்கு அப்புறம் அவர் கோர்ட் பக்கமே எட்டிப் பார்க்கலை. இதுக்கிடையில நானும் இது சம்பந்தமா கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கேன். இப்போ, 2011-ல் பழனியப்பன் திடீர்னு கிளம்பி வந்து கம்ப்ளெய்ன்ட் பண்றார்னா, அதில இருக்கிற உள்நோக்கம் புரியுதா?''

 http://thatstamil.oneindia.in/images34/vadivelu-asin-450.jpg

2. ''போலீஸ் உங்களை விசாரிச்சாங்களா?''


''இப்போ வரைக்கும் எந்த போலீஸும் விசாரிக்கலை. 

 சி.பி - ரொம்ப சந்தோஷம் வேணாம், அம்மா இப்போதான் ஃபிரீ ஆனாங்க, இனி விசாரணை தொடரும்

நான்தான் சில போலீஸ் ஆபீஸர்களுக்கு போனைப் பண்ணி, 'நீங்க எப்போ கூப்பிட்டாலும் வர்றேன்’னு சொன்னேன். 


 சி.பி - ஹா ஹா படத்துல வர்ற மாதிரியே நீங்களா போய் மாட்டிக்கிட்டீங்களே?


'உங்களை இன்டலிஜென்ஸ்ல இருந்து விசாரிக்கப்போறாங்களாம்’னு கொஞ்சம் பேர் சொன்னாங்க. உளவுத் துறை அளவுக்கு நான் ஒர்த் இல்லைண்ணே... புகார் கொடுத்திருக்கிற பழனியப்பன் நான் அவரை மிரட்டியதா சொல்லி இருக்காராம். ஒரு முக்கியமான ஆள் மூலமா அந்த பழனியப்பன் தரப்பு என்கிட்ட பேசினாங்க. பல லட்சம் ரூபாய் கேட்டாங்க. கொடுக்கலைன்னா, போலீஸுக்குப் போறதா சொன்னாங்க. 'எந்த விதத்தில உங்களுக்குப் பணம் கொடுக்க முடியும்?’னு கேட்டு நான் மறுத்துட்டேன். 


அததான், சிலரோட தூண்டுதலின் பேரில் இப்போ புகார் கொடுத்து புயலைக் கிளப்பி இருக்காங்க. இது எல்லாமே போலீஸுக்குத் தெரியும்ணே... அவங்க நியாயத்தை செய்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!''


சி.பி - உங்க படத்துல வர்ற காமெடியை விட இந்த காமெடி செம! போலீஸ் நியாயத்தைசெய்யுமா? ஹய்யோ ஹய்யோ!


http://www.nitharsanam.net/wp-content/uploads/2007/10/24sreya.jpg
3. ''அரசியல் பழிவாங்கல் உங்களை நோக்கியும் திரும்புமோ?''


சி.பி - ஆமா, இவர் கர்ம வீரர் காமராஜர், அரசியல்ல போட்டியா வந்துடப்போறாரு....அடப்போங்கப்பா. சினிமால இவரு காமெடியன், அரசியல்ல காமெடி பீஸூ..


''அதெல்லாம் தேர்தலோட முடிஞ்சிடுச்சு. பிடிச்சவங்களுக்குப் பிரசாரம்பண்றதுல அரசியல் எங்கே இருந்து வருது? ஊரையே சிரிக்கவெச்ச ஒருத்தன் இன்னிக்கு, உள்ளுக்குள்ள வெந்து செத்துக்கிட்டு இருக்கேன். என்னால எந்த வேலையும் செய்ய முடியலை. எனக்கு ஏன் இவ்வளவு எதிரிகள்னு தெரியலை.


கிரிமினல் எண்ணம் ஒருத்தனுக்கு இருந்துச்சுன்னா, நிச்சயம் அவன் நல்ல காமெடியனா இருக்க முடியாது. பரம்பரை பரம்பரையா இந்த நரம்புக்குள்ள நகைச்சுவை ஓடுது. என்னையப்பத்தி தப்பா செய்தி பரப்புறவங்ககூட என்னோட காமெடிக்கு நிச்சயம் சிரிப்பாங்க. 


'உண்மை எப்போதும் தூங்குவது இல்லை... பொய்மை எப்போதும் ஓங்குவது இல்லை’ங்கிற எம்.ஜி.ஆரோட வரிகளைத்தான் மனசுக்குள்ள மந்திரமா நினைச்சுக்கிட்டு இருக்கேன். இந்த நில விவகாரத்தை சி.பி.ஐ. வந்து விசாரிச்சாலும் என் தரப்பு நியாயம் நிச்சயம் புரியும். அதனாலதான் எதையும் எதிர்கொள்ற தைரியத்தோட 'வரட்டும் பார்க்கலாம்’னு உட்கார்ந்து இருக்கேன்!''


சி.பி - எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் ஸ்மால் கரெக்‌ஷன், நடுங்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7mJX6wSSAGdqnFMWQuURVkEytyRGErFiqks9Szi2KRf5nfMJYIJ_ZWW36C6JGK1T6bOca1XnMjd5PYjLxgll_o6AzkYPZBewrSZRyW8RR1sa1jUUAF96y4WBprsoWuWUyKN0MlxGvuV-n/s1600/24.jpg
4. ''வருமான வரித் துறைக்கு பயந்துதான் நீங்க சிங்க முத்து பெயரில் சொத்து வாங்கியதாக அவர் சொல்லி இருக்காரே?''

சி.பி - இந்த விஷயத்துல 2 மேட்டர் இருக்கு, 

1. சிங்கமுத்துவை வடிவேல் காமெடி ஸ்கிரிப்ட் மட்டும் எழுதி வாங்கிட்டு சம்பளம் தராம டேககா கொடுத்தாருன்னும், அதுக்கு பைசல் பண்ணும் விதமாகத்தான் நிலம்  சிங்க முத்து பேர்ல எழுதி வாங்கப்பட்டதுன்னும் சொல்றாங்க.  

2. பொதுவாவே வி ஐ பிங்க அவங்க பி ஏ பேர்ல சொத்து வாங்கறதும், அதனால பின்னால பிரச்சனை வர்றதும் சகஜம் தான். 


''என் வீட்ல திருடியவனைப் பிடிச்சாச்சு. அவனை விசாரிக்கிறப்ப, 'நீயும் நானும் சேர்ந்துதானே திருடினோம்’னு என்னையவே கைகாட்டுறான் அவன்! உன்கூட சேர்ந்து ஏன் என் வீட்டை நான் திருடணும்? ஆங்... உங்க கேள்விக்கு இதுதாண்ணே பதில். என் வீட்டு சுவத்தில நானே ஏன் ஏறிக் குதிக்கணும்? என்னோட குல தெய்வம் அய்யனார் கண் பார்க்க, என்னென்னமோ சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க. அதைக்கூடத் தாங்கிக்கிட்டேன். 


ஆனால், ஏமாந்தவன் மேலேயே பழிச் சொல் பேச எப்படித்தான் மனசு வருதோ? கைக்குழந்தை மாதிரி எதிர்ப்படுற எல்லாரையும் பார்த்துச் சிரிக்கிற ஆளுண்ணே. இந்தக் கைப்புள்ளைய பொய்ப் புள்ளைன்னு சொல்றவங்களுக்கு அந்த அய்யனார்தான் புத்தி கொடுக்கணும். மற்றபடி துரோகிகள், எதிரிகள்னு என்னைச் சூறையாட நினைக்கிறவங்களோட பெயரைச் சொல்றதைக்கூட பெரும் பாவமா நினைக்கிறேன் நான்!''


சி.பி - எப்படியோ வடிவேலுக்கு இது இறங்கு முகம்,. இதில் இருந்து மீண்டு வந்து அவர் பழையபடி காமெடியில் சினிமாவில் கலக்க வாழ்த்துக்கள். அதை விட்டுட்டு அரசியல்ல காமெடி பண்ணிட்டு இருந்தா அழிஞ்சு போயிடுவாரு

tks - vikatan

அழகிரியை ஏவி விட்டு திமுகவை பிளக்க பிளான் போடும் ஜெ ,கலைஞர் திகைப்பு!!!!

http://2.bp.blogspot.com/_a-5_Ktv6jB8/TSgffk6N-cI/AAAAAAAABjQ/1C900QxKI38/s1600/Azhagiri.jpg
ழுகார் சில கடிதங்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தார். முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு அட்ரஸ் பண்ணப்பட்ட கடிதங்கள்! அவரே சொல்ல ஆரம்பித்தார்...

சி.பி - பத்திரிக்கை நடத்தறவங்க  மினி போஸ்ட் ஆஃபீஸே நடத்தறாங்க போல.. எங்கே லெட்டர் போறதா இருந்தாலும் இவங்க பார்வைக்கு முதல்ல வந்துடுது.. 


 ''சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு உண்டாக்​குவதாகக் காரணம் சொல்லி, சென்னையைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிக்கும் கம்பெனி ஒன்றை சீல் வைத்திருக்கிறது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆனால், காரணம் அது மட்டுமே இல்லையாம்! 'தேர்த​லுக்கு முன்பு தேர்தல் நிதிக்காக அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஒரு முக்கிய நிர்வாகி, அந்த மருந்து கம்பெனி அதிபரை தொடர்பு கொண்டாராம். கேட்டதை விட குறைச்சலான தொகை கொடுத்ததோடு, ஏதோ கமென்ட் அடித்ததாகவும் சொல்கிறார்கள். 



சி.பி - இவ்வளவுதானே, ஒரு மன்னிப்பை கேட்டுட்டு மீதி அமவுண்ட்டை செட்டில் பண்ணிட்டா மேட்டர் ஓவர்..
மருந்து கம்பெனி அதிபரோ இப்போது கோட்டைக்கு நடையாய் நடப்பதோடு, தோழி குடும்பத்தின் மூலமும் முயற்சி செய்து பார்த்து விட்டாராம். அதிகார மையத்​திலோ, 'இது விஷயமா என்கிட்ட யாரும் பேசாதீங்க’ என கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி விட்டதாகக் கூறு​கிறார்கள்! என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக்கொண்டு இருக்​கிறார், மருந்து கம்பெனி அதிபர். நான் கொண்டு வந்​திருப்பது அந்த அதிபர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்​பிய கடித நகல்கள்​தான்!''


சி.பி - ஜெராக்ஸ் மிஷின் வேற வெச்சிருக்கீங்களா?
''காரணம் ரொம்ப சாதார​ணமாக இருக்கிறதே?''


''அப்படியா... இதையும் கேட்டுவிடும்... முதல்வர் சென்று தங்கக்கூடிய சிறுதாவூர் பங்களா இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கிறது இந்த கம்பெனி, போதுமா? சுற்றுச்​சூழல் மாசு எப்படி பாதிக்கும் என்று புரிகிறதா? மேலும், சில வருடங்களுக்கு முன்னால், அந்த குறிப்பிட்ட கம்பெனியின் பாய்லர் ஒன்று வெடித்து, ஒருவர் இறந்து போனார். அந்த சம்பவம்கூட புதிய ஆட்சியாளர்களின் மனதில் பச்சென்று பதிந்து இருக்கக்கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள். 


கம்பெனி உரிமையாளர், ஆந்திரத் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவராம். அவர் மூலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்​தையும் தோல்வியில் முடிந்துவிட்டதாம்!'' என்ற கழுகார், அந்தக் கடிதங்களை சற்றே தள்ளிவைத்துவிட்டு, தி.மு.க. பக்கம் தாவினார்.


''தி.மு.க-வுக்குள் ஸ்டாலின், அழகிரி இருவருக்கும் நடக்கும் அதிகாரப் போட்டியை அதிகமாகவே ரசிக்க ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க. தரப்பு. இதில் குறுக்குச் சால் ஓட்டி ஏதாவது ஓர் அணிக்குத் தூபம் போடுவதற்கான வேலைகளைச் சில தூதர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு மதுரை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள், ஆர்வத்தை பெருக்கி வருகின்றன. 

 http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_77341425419.jpg
மதுரையில் அழகிரியின் தளபதிகளாக இருந்த பலரும் கைதாக... காந்தி அழகிரி பெயரில் பதிவான ஒரு நிலத்தின் விவகாரமும் வில்லங்கம் ஆகியுள்ளது. 'உங்களை வளைப்பதற்கு போலீஸ் தயாராக இருக்கிறது. அதற்கு ஆதாரமாக ஏராளமான வழக்குகள், வாக்குமூலங்கள் உள்ளன. இந்தச் சுழல் சர்ச்சைகளில் இருந்து போலீஸ் உங்களை விடுவிக்க வேண்டுமானால் எங்களுக்குக் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள். எப்படியானாலும் ஸ்டாலின்தான் தி.மு.க-வின் அடுத்த தலைவராக வரப் போகிறார். அதை எதிர்த்து இப்போதே கட்சிக்குள் புரட்சியைத் துவங்குங்கள். 

சி.பி - சகுனி வேலை செய்யறதுல தான் தமிழர்களுக்கு எம்புட்டு ஆர்வம்?
உங்கள் ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு, 'நாங்களே உண்மையான தி.மு.க.’ என்று கோஷம் கிளப்புங்கள்’ என்று ஐடியாவும் அனுப்பி வைத்திருக்கிறார்களாம் இந்த சில்மிஷ தூதர்கள். இப்படியரு ஆஃபர் எந்தளவுக்கு அழகிரியிடம் எடுபடுமோ..?''


சி.பி - அதெல்லாம் ஒண்ணும் எடுபடாது..  கலைஞரின் சாணக்கியத்தனம் இன்னும் யாருக்கும் புரிபடாதது..
 
''அதையும் விசாரித்திருப்பீரே..?''


''அழகிரிக்கு நெருக்கமான மதுரை ஆட்களிடம் விசாரித்தேன். 'நீங்கள் சொல்வது மாதிரி சிலர் எங்கள் காதுபட பேசி, தூதுவிட நினைப்பது உண்மைதான். ஆனால், அண்ணன் இந்த உடன்பாட்டுக்கு தயாராகவே மாட்டார். எங்களைப் பொறுத்த வரையில், அவர்தான் எப்படியும் அடுத்த தலைவர். அதில் எந்த மாற்றமும் இல்லை. 


சி.பி - எதுக்கு தலைவர்? மதுரைக்குத்தானே?

ஸ்டாலின் அந்த இடத்தில் வந்து உட்காருவது அதிகாரபூர்வமாக முடிவானால், நாங்களாகவே புரட்சி கீதம் இசைக்கத்தான் போகிறோம். 


சி.பி - எஸ் ஏ சந்திரசேகர் மாதிரியே பேசறாரே?  புரட்சி கீதம் , வறட்சி நாதம்னு..

மற்றபடி அ.தி.மு.க. ஆட்களை நம்பி நாங்கள் எதையும் செய்வதற்கில்லை. கட்சியில் சில விஷயங்கள் அழகிரிக்கு பிடிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தலைவரை அந்தளவுக்கு நோகடிக்கும் காரியத்தை அண்ணன் செய்யமாட்டார்!’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். 


 சி.பி - என் கணிப்பு அண்ணன் அழகிரி கலைஞர் இருக்கறவரை கமுக்கமா இருந்துட்டு அவர் காலத்துக்குப்பின் தான் பிரச்சனை பண்ணுவார்னு,ஏன்னா இப்ப பிரச்சனை பண்ணுனா அவரை ஓரங்கட்டிடுவாங்க..



ஆனால் ஆளும் தரப்போ... 'அவரவர் வலி அவர்களுக்குத்தான் தெரியும். ஒருபுறம் சோதனை கொடுத்தபடியே, மறுபுறம் வரம் கொடுக்க தூது விடுவோம்' என்று தளராமல் சொல்லி வருகிறதாம்!''
''ஓ!''


''இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் எல்லாச் சிறைகளுக்கும் விசிட் அடித்து கோஷ்டிகளைக் கடந்து ஆறுதல் கூறுவதைப் பார்க்க வேண்டி உள்ளது. அழகிரிகூட பாளை சிறைக்குச் சென்று மதுரை ஆட்களை மட்டும் பார்த்தார். ஆனால் ஸ்டாலின், எல்லாச் சிறைகளையும் வலம் வந்து​விட்டார். பாளை சிறையில் இருந்த திருவாரூர் பூண்டி கலைவாணனை ஸ்டாலின் சந்தித்தபோது, 'பொட்டு’ சுரேஷ§ம் ஸ்டாலினைப் பார்த்து வணக்கம் வைத்தாராம்.



'உங்க மேல இன்னிக்கும் ஒரு கேஸ் போட்டிருக்காங்க போல’ என்று பரிவாக ஒரு வார்த்தை சொல்லி வைத்தாராம் ஸ்டாலின். அப்படியே திருச்சி சிறைக்கு வந்தவர், அங்கு 'அட்டாக்’ பாண்டியை சந்தித்தார். இதெல்லாம் மதுரை தி.மு.க-வினர் கவனத்தை ஸ்டாலினை நோக்கித் திருப்பி உள்ளதாம். திருச்சி பிரமுகர் காஜாமலை விஜய்யும் அந்தச் சிறையில்தான் இருந்தார். 'நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. வழக்குகளை எல்லாம் சட்டப்படி சந்திப்போம். உங்கள் பின்னால் கட்சி இருக்குது!’ என்று ஸ்டாலின் சொல்ல... 'நீங்க வந்து பார்த்ததே போதும் அண்ணே... நாங்க எதுக்கும் கலங்க மாட்​டோம்!’ என்று சிறையில் இருந்தவர்கள் உருகி விட்டார்களாம்...''

 சி.பி - உருகுதே, மருகுதே ஒரே விசிட்டினாலே...

''ம்... தி.மு.க-வுக்கு இதுவும் ஒருவித 'மிசா' காலம்தான்!''


''ம்! முக்கியமாக நில மோசடி வழக்குகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைப் பார்த்து கருணாநிதிதான் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளாராம். 'இந்தக் கைதுகளுக்குத் தடை வாங்கும் வகையில் பேராசிரியர் அன்பழகனை வைத்து மொத்தமாக ஒரு வழக்குப் போடலாமே’ என்று யாரோ ஆலோசனை சொல்ல... அதில் அன்பழகனுக்கு உடன்பாடு இல்லையாம். அதனால், வழக்கறிஞர் அணித் தலைவர் ஆலந்தூர் பாரதியை வைத்து மனு ஒன்று ரெடி ஆகிறது!'' என்று சொன்ன கழுகார்,


''நடிகர் வடிவேலுவைச் சுற்றி வலை இறுகிக் கொண்டிருக்கிறது. உமது நிருபரை முடுக்கிவிடும்! '' என்று உத்தரவு போட்டுவிட்டு பறந்தார்.

 சி.பி - ஆமா, இவர் பெரிய சுதந்திரப்போராட்ட தியாகி, இவரை கைது பண்ணலைன்னா பெரிய பிரச்சனை உருவாகும்..!! அட போங்கப்பா, போய் பொழப்ப்பை பாருங்க..

மூன்று உயிர்கள் தப்புமா?


'ராஜீவ் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்’ என்ற தகவல் பரவியதை தொடர்ந்து தமிழின உணர்வாளர்கள் மத்தியில் ஒரே பதற்றம்.


''இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும் நிலையை தமிழக கட்சிகள் உருவாக்கிய நேரத்தில், 'ஹெட்லைன்ஸ் டுடே’ சேனல், போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களை நேரடியாகச் சென்று, பேட்டி எடுத்து ஒளிபரப்பியதும், இலங்கை அரசின் போர்க் குற்றச்சாட்டு மேலும் வலுவாகி வருகிறது.

இலங்கைக்கு இந்திய அரசு உதவிய நிலையில், அகில இந்திய அளவிலான ஈழ மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டிய நிலைக்கு டெல்லி தள்ளப்பட்டது. இந்த நிலையில்தான், மூவரின் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!'' என்று தமிழின உணர்வாளர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். 

''ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட சி.பி.ஐ. புலனாய்வுக் குழு, இன்னும் விசாரணையை முடித்து அறிக்கையைத் தரவில்லை. உண்மைகளைக் கவனத்தில்கொள்ளாமல், கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்திருப்பதை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கையில் இறங்குவோம்!'' என்று பழ.நெடுமாறன் அறிவித்து இருக்கிறார்.


ராஜீவ் கொலை வழக்கில் மறுவிசாரணை வேண்டும் என வலுவாகப் பேசப்பட்டு வரும் நிலையில், மூவரின் உயிர் தப்புமா? என்பது பெரும் கேள்வியாக தொக்கி நிற்கிறது!


கர்நாடகாவில் ஒரு ஓ.பன்னீர் செல்வம்!


அப்பாடா... கர்நாடகாவில் நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் ஓய்ந்து விட்டது.

'1600 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா’ என லோக் ஆயுக்தா அறிக்கை வெளி யான பிறகும், நாற்காலியை விட்டு இறங்காமல் அடம் பிடித்த எடியூரப்பாவை குண்டுக் கட்டாக இறக்கி விட்டது பி.ஜே.பி. மேலிடம்.


ஆனாலும், எடியூரப் பாவின் கட்டளைப்படி அவரது விசுவாசியான சதானந்த கவுடா முதல்வர் ஆக்கப்பட்டு உள்ளார். கர்நாடகாவில் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதா யத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் முதல்வர் ஆக முடியாது என்பது எழுதப்படாத சட்டம். 

எடியூரப்பா லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். சதானந்த கவுடா ஒக்கலிகர். கர்நாடகத்தில் பெரும்பதவிக்கு வருபவர்கள் மடாதிபதிகளின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான மடாதிபதிகள் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே. எனவே அவர்களின் பேராதரவைப் பெற்ற எடியூரப்பாவின் கைப்பாவையான சதானந்த கவுடாவை முதல்வர் ஆக்க ஒப்புதல் அளித்தனர். முதல்வர் பதவி ஏற்றவுடன் சதானந்த கவுடா, கீழே முதல் வரிசையில் 'உர்’ரென உட்கார்ந்து இருந்த எடியூரப்பாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். 


பத்திரிகையாளர்களிடம் பேசிய போதும் எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளினார். இதைப் பார்த்து, 'கர்நாடக ஓ.பன்னீர் செல்வம்’ என, சதானந்த கவுடாவைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் கமென்ட் அடித்தவுடன் குபீர் சிரிப்பு எழுந்தது.

சி.பி - ஜால்ராக்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் 

thanx - ju vi

Friday, August 12, 2011

ரவுத்திரம் - டெம்ப்போ இன் ஃபைட்டிங்க் சீன்ஸ் ,அம்போ இன் ஹிட்டிங் சான்ஸ் - சினிமா விமர்சனம்

http://tinselmovies.com/images/rowthiram2.jpg
சத்யா கமல் போல் ஒரு கேரக்டர் பண்ண வேண்டும் என்ற ஆதங்கம் ஜீவாவுக்கு வந்ததில் தப்பில்லை.ஆனால் அதற்கு ஸ்கிரிப்ட் பக்காவாக அமைந்தால் மட்டும் பத்தாது, பாடி லேங்குவேஜில் சூர்யாவின் அர்ப்பணிப்பு, பாடி மெயிண்டெனென்ஸில் விக்ரமின் உழைப்பு , பல வருட அனுபவம் எல்லாம் வேண்டும்.. அதை எல்லாம் விட்டு விட்டு இந்த பிஞ்சு முகத்தை வைத்துக்கொண்டு அவர் புரூஸ்லீ ரேஞ்சுக்கு எதிரியிடம் அடியே வாங்காமல் பாட்ஷா ரஜினி மாதிரி ஷோ காட்டினால் எப்படி?

படத்தில் முதல் ஹீரோ ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு .. பட்டாசைக்கிளப்புது ஃபைட்டுக்கான லீடும் ,அதை படமாக்கிய விதமும், ஸ்லோமோஷன் சண்டைக்காட்சிகளும்.. 

படத்தோட கதை என்ன? அநியாயம் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்கும் கோப க்கார இளைஞன் தான் ஹீரோ. ( அநியாயம் எங்கே ஓடுனாலும் தட்டிக்கேப்பாரா?)அப்படி போடும் சண்டையில் எதேச்சையாக ரவுடியும் ,வில்லனும் ஆகிய கவுரிமேல்  அடி பட்டு விடுகிறது.. ஆனால் கவுரி வேறு ஒரு கேஸ்க்காக ஜெயிலில் இருக்கும் சூழலில் ஸ்ரேயாவுடன் லவ்விக்கொண்டு இருக்கிறார். வில்லன் வெளியே வந்ததும் வேட்டை ஆரம்பம்.. 

ஹீரோயின்க்கும் , படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எவனும் கேட்கக்கூடாது என்பதற்காக அவர் அசிஸ்டெண்ட் கமிஷனரின் மகள் என்று ஆரம்பத்திலேயே இயக்குநர் நம் வாயை அடைத்து விடுகிறார்..

ஜீவாவுக்கு தங்கை கேரக்டர், ஸ்ரேயாவுக்கு தோழி கேரக்டர் என ஆங்காங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாய் பல அழகு ஃபிகர்கள்.. அனுபவி ராஜா அனுபவி.. 

ஜீவாவின் தங்கைக்கு மாப்ளையாக வரும் சத்யனின் காமெடி உதார் நடிப்பு படத்தை ஜாலி மூடில் கொண்டு போக ரொம்பவே யூஸிங்க்... அதே போல் வழக்கமாக ஹீரோவின் ரவுடியிசம் கண்டு பயப்படும் ஹீரோயினாக  இல்லாமல் அவரைக்கண்டு ஆச்சரியம் கொள்ளும் ஹீரோயினாக ஸ்ரேயா வருவதும் , கொடுத்த சம்பளத்துக்கு பங்கம் வராமல் இயக்குநர் அவரை முழுதாக யூஸ் பண்ணியதும் ( படத்துல ) சபாஷ் போட வைக்கின்றன..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizOGRnTCa_lrRQ9LFphqL97JRu-bNnjDSMJg5gunAXGD3UrPTRQl3v4vFhA-3LGtZOMl9d6Jlv3vCBzweMbZHKKCZbr20YJuvi3h9wyZ4aeJlrUjgvAEz3mvPVyC8uzocSfzGqHX_pbWc/s1600/shriya1.jpg

ஆக்‌ஷன் படத்திலும் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  நீங்களும் தட்டி கேட்க மாட்டீங்க,கேட்கறவனையும் விட மாட்டீங்க.. 

2.  காபி ஷாப் கூப்பிட மாட்டீங்களா?

அட! அக்கவுண்ட்ல தருவாங்களா? அப்போ போலாம். 

3.  என்னடா காபி தர்றே? கட்டிங்க் மாதிரி இவ்வளவு கம்மியா?

4.  இது தான் உங்க ஊர்ல காபி ஷாப்பா?

ஆமா சொல்டா!

ஆமா.. ஹி ஹி 

5.  எதுக்கு என் செல்லை பிடுங்கறே? அதுல பேலன்ஸ் கிடையாது.. 

அது மாடலை பார்த்தாலே தெரியுது. 

6.   உன் கிட்டே ஃபோன் இருக்கா?

ஓ. என்னுது ஐ ஃபோன்.. காஸ்ட்லி, அதனால அதை வீட்லயே வெச்சுட்டு வந்துட்டேன்.. ஹி ஹி 

7. அப்பா பேரை உங்க பையனுக்கு வெச்சுட்டு அவனை அவரே , இவரே அப்டின்னு மரியாதையா கூபிடறதை இங்கே தாங்க பார்க்கறேன்.

8. ஒழுங்கா இருக்க முடியும்னா உன் பையனை இருக்க சொல்லு, இல்லைன்னா அவரை வீட்டை விட்டு கிளம்ப சொல்லு.. 

என்னடா?நம்மளை சொல்லிட்டு அவரு கிளம்பி போய்ட்டாரு?

9. உங்க பேரு அம்முவா? யார்.. உங்க அம்மா வெச்ச பேரா? 

தெரில.. யார் வெச்சாங்கன்னு.. அப்போ நான் சின்ன பொண்ணு..

10. அவனுங்க 4 பேரையும் பார்டா.. எக்ஸ்பேண்டபிள்ஸ் போஸ்டர் மாதிரியே ஃபிலிம் காட்டறதை.. அடங்குங்கடா... 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNbr4Ta9Z9zwLUXnnVBq0zsEqzJKsvAIZsTBebee44aYHQSWR8Sw6J9VcEDboDfkQqwJq_v1j5e-38iGB6eq7R0ZW7_WWRHIwsEeahLm96rvuB4PKWgorkeltKJTr-dpqtBoL1tjaH5zSj/s1600/1.jpg

11.  நீ இப்போ என்னைத்தானே பார்த்தே?

இல்லையே?

 கண் பொய் சொல்லாது.. சிவா.. 

12. வில்லனிடம் பஞ்ச் டயலாக் - இதுக்கு முன்னால உன்னை நான் பார்த்ததில்லை, இதுக்கு அப்புறமும் நான் உன்னை பார்க்கறதா இல்லை..

13.  அவருக்கு 28 வயசு, இது வரை 200 ஃபைட் போட்டிருப்பாரு.. உங்களுக்கு 50 வயசு இருக்கும் எத்தனை ஃபைட் போட்டிருப்பீங்க?

14.  ஒரு பொண்ணு பிறந்த வீட்ல எப்படி வேணாலும் இருக்கலாம்.ஆனா புகுந்த வீட்ல ....

அய்யய்யோ நீ எப்பம்மா இங்கே புகுந்தே?

15. சாரி.. நீ சொன்னபடி 4 மணிக்கு ரெஸ்டாரண்ட் வர முடியாது, 4.05க்கு வந்துடவா?

16. என்னை எப்படி மறந்தே?

உன்னை எப்போ நினைச்சேன்?

17. அவ கண் இருக்கே, ஊதாப்பூவை பிளாக் & ஒயிட்ல பார்த்த மாதிரி இருக்கும்.. 


18. வரமாட்டேன்னு சொன்னியே ,ஏன் வந்தே?

வரமாட்டேன்கறதை சொல்லிட்டுப்போலாம்னுதான் வந்தேன்

19. ஜூஸ் முடிஞ்சுது, இன்னும் ஏன் உறிஞ்சிட்டே இருகே? ஸ்ட்ராவை?வேணும்னா இன்னொண்னு சொல்லவா?

நோ.. நான் சிக்ஸ் பேக்கிற்கு ட்ரை பண்றேன். 

 உங்க ரேஞ்சுக்கு நீங்க எயிட் பேக்கிற்கே ட்ரை பண்ணலாம்.. 

20.  இவ்வளவு பில்டப் தர்றீங்களே? உங்க பேரென்ன?

ராமானுஜம்

சத்தியமா உங்க பேரை யூஸ் பண்ண மாட்டேன் போதுமா?

சரி , நான் ஷார்ட் டெம்பர் என்ற மேட்டரை உங்க தங்கைட்ட சொல்லிடாதீங்க. 




http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/04/shreya.jpg

21. அங்கிள், நான் பெரியவங்க கிட்டே எப்பவும் ரொம்ப ரெஸ்பெக்ட்டா நடந்துக்குவேன்.. 

அதான் பார்த்தேனே.. 

22.  அவ போய்ட்டாளா?

ம், அவளோட உங்க மானமும் போச்சு. உங்க சின்ன வயசுல எந்த டிரஸ்சும் போடாம பந்தாவா ஒரு போஸ் குடுத்துட்டு நிப்பீங்களே, அந்த ஃபோட்டோவை வாங்கிட்டு போறாரு..

23. சரி.. விடுங்கடா.. அழகான பொண்ணுங்கன்னா பசங்க ஃபாலோ பண்ணத்தான் செய்வானுங்க.. 

அதான்க்கா கேட்கறோம்.. உங்களை ஏன் ஃபாலோ பண்றானுங்க?

24.  அண்ணே, என் பையன் ஒருத்தனை அடிச்சுட்டான், நீங்க தான் காப்பாத்தனும்.. 

சரி , விடு.. இன்னைக்குத்தான்  கவுரி ( வில்லன்) ரிலீஸ் ஆகறாரு.. அவர் கிட்டே சொல்லிக்கலாம்.. 

என் பையன் அடிச்சதே அந்த கவுரி யைத்தான்.. 

25. நாங்க எல்லாம் பொத்திக்கிட்டு இருக்கோம்,உனக்கு மட்டும் ஏண்டா பொத்துக்கிட்டு வருது? 

அதுக்குப்பேருதான் ரவுத்திரம்

26.  என் தங்கை கல்யாணத்துக்கு கூப்பிடலை, ஓக்கே, அட்லீஸ்ட் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்லை?

27. அவனை தூரத்துல இருந்து ரசிச்சாலே போதும்  எனக்கு..

28.  அவன் மாறமாட்டான்மா.. 

எதுக்கு மாறனும்?

29. கவுரிக்கு எதிரா அரெஸ்ட் வாரண்ட் வாங்கியாச்சு, இப்பவே போய் அரெஸ்ட் பண்றேன்.. 

நாளை காலை வரை வெயிட் பண்ணுங்க சார்.. 


மிஸ்டர் அசிஸ்டெண்ட் கமிஷ்னர், உங்க மாப்பிள்ளை சிவாவை ரவுடி கவுரி கொன்னுடுவான்னு பயப்படறீங்களா?

இல்லை, ரவுடி கவுரியை மாப்பிள்ளை சிவா கொன்னுடுவான்னு பயப்படறேன்.. 

30. அரசியல்வாதிங்க நாம தான் ரவுடிகளை யூஸ் பண்ணனும், அவனுங்க நம்மை யூஸ் பண்ண நாம் விடக்கூடாது



http://www.kollynews.com/wp-content/uploads/2008/03/200803190153-1.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  இடைவேளை வரை படத்தோடு இணைந்து செல்லும் காமெடி

2. கையேந்திபவனில் ஸ்ரேயா தன் கையால் ஜீவாவுக்கு தோசை சுட்டுப்போடுவது.. 

3.  குடும்பத்தில் உள்ள அனைவர் பெயர்களிலும் மரக்கன்றுகள் வளர்க்கும் ஸ்ரேயா.. அதை பெருமையாக ஜீவாவிடம் காட்டுவது..

4.  அடியே என் நேசம் பாடல் காட்சியில் ஒளிப்பதிவு அழகை அள்ளியது.

5. ஓப்பனிங்க் ஃபைட் சீனும், தியேட்டர் பைக் ஸ்டேண்டில் நடக்கும் ஃபைட் சீனும் கலக்கல் ஸ்டண்ட் அமைப்பு. ( ஓப்பனிங்க் ஃபைட்டில் கூடவே ஸ்ரேயா குலுங்க குலுங்க ஓடி வருவது செம கிளாமர்)




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPttOOhIl25XV-52_f-PX7n6lIYozXN4T1E6txoEpYqrhLUiVNecZ9Wie7TJvSGUSQfPZvrAC1T5qzyRZcogzBHetG-lvReYE6PiWARIWWidPw_q5Ajrm5z7Y0ehwidKdUBY-QFfMNt5Od/s400/shriya-apr01.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.   ஜீவா தன் தங்கைக்கு மிட்நைட் 3 மணிக்கு ஃபோன் பண்றாரு, அடுத்த ரிங்க்லயே எடுக்கறாரே, அது எப்படி? ( புது மணத்தம்பதிகள்னு சால்ஜாப்பு சொல்ல வழி இல்லை, மாப்ளை தூங்கிட்டு இருக்காரு, பொண்ணு மட்டும் விழிச்சுட்டு இருக்கே?)

2.  ஜீவா பைக்ல பெட்ரோல் குண்டு போடறாங்க , 15 நிமிஷமா பைக் எரியுது, ஜீவா ஃபைட்டா போடறார், ஆனா பைக் பெட்ரோல் டேங்க் வெடிக்கவே இல்லை.. ஏன்? 

3.  ஜீவா வீட்டுக்கு அவரோட அப்பா வர்றப்போ  வீட்ல எதுவுமே இல்லை, பால் உட்பட.. ஆனா வீட்ல ஃபிரிட்ஜ் உட்பட எல்லா வசதியும் இருக்கு. அர்த்த ராத்திரில ஹீரோவை வெளில  கிளப்பி விட வேற ஐடியா கிடைக்கலையா?

4.  ஜீவா படம் பூரா 67 பேர்ட்ட ஃபைட் போடறார், எல்லாரையும் ஒரே அடில வீழ்த்திடறார், அவர் அடியே வாங்கலை. அவர் என்ன அர்னால்டு ஸ்வார்ஷெனேகரா?

5. ஜீவா அநியாயத்தை தட்டிக்கேட்கறதையே ஃபுல் டைம் ஜாப்பா வெச்சிருக்காரே? அவர் பூவாவுக்கு என்ன பண்றார்? ( ரயில்வே வேலை வந்ததையும் வேணாம்கறாரு)



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgulps4JD0BC8w6WPA_bpEQshrETs_VI1AiGcSDkfZbHJBQQZhypCIi4zK_gqSebEYCTK_SbhQTWIbjIeYCR17NeQRrH7xRHcoC9LsqIH_qj1z5TuIGhvx-Dav8eNqwxJIFT0vpCK6FNlky/s1600/shriya-hot-10.jpg

இந்தப்படம் தெலுங்குல டப் பண்ணுனா நல்லா ஓடும்னு தோணுது.. தமிழ்ல சுமாராதான் போகும், ஏ செண்ட்டர்ல 30 நாட்கள், பி செண்ட்டர்ல 25 நாட்கள், சி செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடலாம்.. 

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40 

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஃபைட்  & ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கலாம்.. 


http://1.bp.blogspot.com/-8prMmWGqhO4/TfWw5zTJT7I/AAAAAAAAF9U/KB7UOntHyNM/s1600/26.jpg

 ஈரோடு அபிராமி,அன்னபூரணி, ஸ்ரீசண்டிகா, ஸ்ரீநிவாசா என 4 தியேட்டர்ஸ்ல போட்டிருக்காங்க. நான் அபிராமில பார்த்தேன்..

செல்வராகவன் கூட படம் பண்றது டேஞ்சரா? அனுஷ்கா பேட்டி காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpg2tD7G0pJ3nKdphBw7UuXbqis_14bRUz7GMWVBhsP-ukGiZ1cjdJh3_q469iBn3Sc2fMbF-6yc23Oxkk4eDY6K0h5JBHQH6V7KlN71uniq3rRpFuJlJ0gvtjwsdoto6hSetqBaP4MmA/s1600/anushka6p51272558401.jpg 

'ஆந்திரக் குதிரை’ அடையாளம் மறந்து 'சிம்பிள் ஏஞ்சல்’ என்று கொண்  டாடத் தோன்றுகிறது அனுஷ்காவை!

சி.பி - பம்மல் கொஞ்சல் போதும், நேரடியா மேட்டர்க்கு வா நைனா!!


1.  ''வாழ்த்துக்கள்... கிளாமரே இல்லாமல், செம ஹோம்லியா 'தெய்வத் திருமகள்’ படத்துல கலக்கிட்டீங்க...''

சி.பி - ஏதோ ஆதங்கமா சொல்ற மாதிரி மைண்ட் வாய்ஸ் சொல்லுதே?


''தேங்க்ஸ்... ஒரு நடிகைனா, எல்லா ரோலும் பண்ணணும். 'அருந்ததி’யும், 'தெய்வத் திருமகள்’ கேரக்டரும் எனக்குப் பயங்கர சவால் கொடுத்தவை. சவால்ல பாதி தாண்டிட்டேன்னு நினைக்கிறேன். ஷூட்டிங்ல நான், விக்ரம், சாரா... நாங்க மூணு பேருமே ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். டெய்லி நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். ஐ மிஸ் தெம்!''

சி.பி - என்னது? பாதிதான் தாண்டுனீங்களா?விழலை?
2. ''உண்மை சொல்லணும்... 'தெய்வத் திருமகள்’ படத்தில் விக்ரம், அனுஷ்கா, சாரா... யார் பெர்ஃபார்மன்ஸ் பெஸ்ட்?''

சி.பி -  நோ  டவுட் இன் இட், 100% பாப்பா சாரா தான் பெஸ்ட்


''இதில் உண்மை சொல்ல என்ன யோசிக்கணும்? கண்ணை மூடிட்டு சொல்வேன்... விக்ரம் - சாரா தான் படத்தோட ஸ்டார் பெர்ஃபார்மர்ஸ். அதுவும் அந்த க்யூட் குட்டி சாரா... சான்ஸே இல்லை!


ஒரு ஷாட்டுக்கு அவ்வளவு எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுப்பா. எல்லார்கிட்டயும் ரொம்ப சீக்கிரமே ஒட்டிப்பா. பிரேக் சமயங்களில் 'ஆன்ட்டி விளையாட வாங்க...’னு என்னை ஒரு வழி பண்ணிடுவா. அழகுக் குட்டிச் செல்லம்!''


சி.பி - உங்களைப்போய் ஆண்ட்டின்னு சொல்லிடுச்சே பாப்பா.. அதான் மனசுக்கு கஷ்டம், அப்போ நாங்க ஆண்ட்டி ஹீரோவா?

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka4.jpg


3''விளம்பரப் படங்களில் நிறைய நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?''

சி.பி - ஹா ஹா இது செம ஜோக், பாப்பா முழுப்படத்துலயே நடிக்கறதில்லை ,சும்மா கிளாம்ர் ஒன்லி.. இதுல 3 நிமிஷ 'விளம்பரப் படங்களில் எப்படி நடிக்க முடியும்?


''இந்தக் கேள்விக்கும் உண்மை சொல்லவா? சினிமாவைவிட விளம்பரங்கள் மூலமா நல்ல ரீச் கிடைக்குது. 

 சி.பி - ரீச் (REACH) கிடைக்குதா? ரிச்  (RICH) கிடைக்குதா? டவுட்டு

விளம்பரத்தில் நடிச்சா, தினமும் நாலு தடவையாவது நம்ம முகத்தை மக்கள் பார்த்துதான் ஆகணும். 

சி.பி - என்னது முகத்தையே 4 தடவை பார்க்கறாங்களா? அப்போ!!!!!!!!!!!!!!!!!

ஆனா, சினிமாவில் அப்படி இல்லை. அதைவிட, சில நாள் கால்ஷீட்டுக்கே ரொம்ப நல்ல சம்பளம் தர்றாங்க. யாருக்குத்தான் விளம்பரத்தில் நடிக்கப் பிடிக்காது.ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் விளம்பரத்தில் நான் ரொம்ப அழகா இருக்கேன்னு நிறையப் பேர் சொன்னாங்க. ஒரு நடிகைக்கு வேற என்ன கிரெடிட் வேணும்!''

சி.பி - பார்த்தீங்களா? படுவாப்பசங்க, அப்போக்கூட நடிப்பைப்பற்றி எதுவும் சொல்லலை, அழகு பற்றித்தான் ஜொள்ளி இருக்காங்க .. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_96EyJoC9ZfWZUm9OlHy100aKZGC7J3yPGMLgYlF-Ym_v4Yf2AnCzqUOgq8S0gWIOy_2wNMql5P2zOkp79aET8r2MyYWHHAhClR47HC-JC1-DpqbJj4ZHUikSAwA2ASngtP9z-dKYv8I/s1600/Hot+anushka.jpg
 படத்துல பேண்ட் கிழிஞ்சிருக்கா? கிழிச்சு விட்டிருக்கா?ஃபேஷனுக்காக?டவுட்டு

4.''அனுஷ்காவின் அழகு ரகசியம் ப்ளீஸ்...''


 ''அழகா இருக்கணும்னு நான் என்னிக்குமே மெனக்கெட்டது இல்லை. நிறையத் தண்ணீர், காலையில் யோகா இது மட்டும்தான் நான் ரெகுலரா கடைப்பிடிக்கும் விஷயங்கள். யோகா உடம்பையும் மனசையும் ஃபிட்டா வெச்சுக்க உதவும். தண்ணீர், ஸ்கின்னைப் பளபளப்பா வெச்சுக்கும். இது ரெண்டும் சரியா இருந்தாலே, முக அழகு ஃப்ரீ!''


சி.பி - நிறைய தண்ணீர்னா எந்த தண்ணி?


http://tamil.koodal.com/cinema/gallery/actress/anushka/anushka_24_1126200885125321.jpg

5. ''சினிமா ஸ்டார்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கும்போதுதான், உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சதாமே... உண்மையா?''

சி.பி - நாம் படிக்கும் ஒவ்வொரு மொக்கைப்பேட்டிலயும் ஒரு அரிய தகவல் மறைஞ்சு இருக்கும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. அட!!!யோகா டீச்சரா நீங்க!!! 


''யெஸ்!

நான் அவங்கவங்க வீட்டுக்கே போய் யோகா சொல்லிக் கொடுப்பேன். அப்படி என்னிடம் யோகா கத்துக்கிட்டவர் தெலுங்குப் பட இயக்குநர் பூரி ஜெகன்னாத். அவர் மூலமாத்தான் நாகர்ஜுனாகூட 'சூப்பர்’ பட வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து, பல வாய்ப்புகள். என் ஃபேவரைட் படம் 'லக்ஷயம்’தான். அதில் எதைப்பத்தியும் கவலைப்படாத, செம ஜாலியான கேரக்டரில் நடிச்சிருப்பேன். உண்மையிலேயே என் கேரக்டரும் அதுதான். அப்படி கேரக்டர்கள் கிடைச்சா, ஆசை ஆசையா நடிச்சுட்டே இருப்பேன்!''

சி.பி - உங்க கேரக்டர் எதைப்பற்றியும் கவலைப்படாத கேரக்டரா? ஐ ஜாலி!!!!

http://picworld.files.wordpress.com/2007/07/anushka-0018.jpg


6. '' 'தெய்வத் திருமகள்’, 'அருந்ததி’ இரண்டில் எந்தப் படத்தோட பெர்ஃபார்மன்ஸ் பெர்சனலா உங்களுக்குப் பிடிக்கும்?''  

சி.பி -  யோவ் பர்சனலா பிடிக்கறதை  எல்லாம் பப்ளிக்கா சொல்லிட்டு இருக்க முடியுமா?  ஓ!! படத்துலயா?.. அப்போ சரி..
 
''எனக்கு ரெண்டுமே பிடிக்கும். 

சி.பி - ஆ!!!! உங்களுக்கும் ரெண்டுமே பிடிக்குமா? எங்களுக்கும் அந்த ரெண்டும் தான் பிடிக்கும் மேடம்!!!!!!!!!!!!!!

பொதுவா, என் அம்மா-அப்பா நான் நடிச்ச படம் பார்த்துட்டு எந்த கமென்ட்டும் சொல்ல மாட்டாங்க. 'அருந்ததி’ படம் அவங்களோட சேர்ந்து பார்த்தேன். படம் முடிஞ்சதும் அப்பா, என் தலையில் கைவெச்சு, 'ஸ்வீட்டி... கீப் இட்-அப்’னு சிரிச்சுட்டே பாராட்டினார். சந்தோஷத் தில் உடனே அழுதுட்டேன். நான் நடிச்சதிலேயே என் அப்பா, அம்மா ரெண்டு தடவை பார்த்த படம் 'அருந்ததி’ மட்டும்தான். ஐ லைக் அருந்ததி... ஐ லவ் அருந்ததி!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGTK0iwXwbC59ct7hXo7WzVLPa9AJKgHXBiQk0iR06iLJbnH-BvGjimXMdz_1qh-nKvdiezN8IbzxmhDg-QuRHIIJYSn1xmQK0R__1ZsE1_yGuas-U_DQcvOEDknMXPDqvVYKFyutH2cY/s1600/Anushka-Hot-Video_songs_gsvfilms.jpg


7''இனிமேலாவது தமிழ்ல நிறையப் படங்கள் நடிப்பீங்களா?''

''நிச்சயமா! அடுத்து கார்த்தியோட ஒரு படம் கமிட் ஆகி இருக்கேன். ஒரு ரகசியம் சொல்லவா? செல்வராகவனோட ஒரு படம் பண்ணப்போறேன். சீக்கிரமே அறிவிப்பு வரும். அடுத்து, தெலுங்கில் நாகார்ஜுனாகூட ஒரு படம். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அனுஷ்கா பிஸி!''


சி.பி -  நீங்க இப்போ கமிட் ஆகி இருக்கற 3 படங்கள்லயுமே டேஞ்சர் தான்.. கிசு கிசுவா வரப்போகுது, பார்த்துக்குங்க,,  3 பேருமே மேரீடுதான் இருந்தாலும் எங்க அண்ணன் செல்வராகவன் கிட்டே மட்டும் ஜாக்கிரதை.. என் திருமணம் பொம்மைக்கல்யாணம், நீங்க தான் நிஜமான பொம்மைன்னு டயலாக் எல்லாம் விடுவார். நம்பி ஏமாந்துடாதீங்க

thanx - vikatan
 

Thursday, August 11, 2011

இப்போது சந்திப்பதுதான் உன்னுடனான இறுதி சந்திப்பு சிநேகிதியே!

A Good catch.........
eagle%2525202.jpg
1.டைரி எழுதத்தெரிந்த ,எழுதும் பழக்கம் உள்ள எல்லோருமே எழுத்தாளருக்கான முதல் படியை கடக்கின்றனர்

-------------------

2. உங்க மனைவிக்கு ஞாபக மறதி வியாதி. குணப்படுத்த சான்ஸே இல்லை.

ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்,என்னை யார்னே தெரியாது தானே அவளுக்கு?

-------------

3. மகளிர் அணித்தலைவிதான் தலைவரோட நடமாடும் பயோ டேட்டா.

ஓஹோ,அப்போ அவரோட மனைவி?

  பய டேட்டா

------------------------

4. என் காதல்ர்ட்ட யாரும் வாயைக்குடுக்க முடியாது.

ஏண்டி?ஆர்கியூமெண்ட்ல கில்லாடியா?

இல்லடி கிஸ் அடிக்கறதுல  கேடி

-------------------

5. வீடு பூரா குப்பையா இருந்தா ஒண்ணு வீட்ல மழலைகள் இருக்கனும்,அல்லது கவிதை எழுதுபவன் இருக்கனும்

----------------------


6. நீ என்னை விட்டு விலகி வெளி நாடு போகப்போவதாய் குதூகலாமாய் சொன்னாய்.உன்னை வாழ்த்திவிட மனம் எண்ணும் முன்னே என் தைரியத்தை வீழ்த்தி விட்டாய்.

-----------------

7. இப்போது சந்திப்பதுதான் உன்னுடனான இறுதி சந்திப்பு என்னும் போது கண்ணீரைத்தவிர எதை என்னால் பகிர முடியும் என நினைக்கிறாய் தோழியே

--------------------------

8. மீண்டும் மீண்டும் ரெய்டு! சினிமா நடிகர்கள் கிலி!! #நடிகைகள் ஏன் பயப்படறதில்லை?இன்ஃபார்மர்கள் ஹெல்ப் பண்றாங்க போல..

---------------------

9. என்னிடம் என்ன இருக்குன்னு என்னைப்பற்றி தெரிஞ்சுக்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்? - த்ரிஷா # ,அவங்க இளையதலைமுறை,கேசட் நாட் ரிசீவ்டு போல

---------------------

10. ராகவா லாரென்ஸ் புதுக்கட்சி தொடங்குகிறார்,காஞ்சனா வெற்றி எதிரொலி?@இமேஜினேஷன்

------------------------

 


11.  மங்காத்தா படத்திற்கு சிக்கல்!#இங்கே அம்மாவுக்கும் சிக்கல்,டில்லில அன்னைக்கும் சிக்கல்,அஜீத்தின் ஆத்தாவுக்கும் சிக்கல்.ஆல் லேடீஸ் ஒரீஸ்

--------------------

12. திமுகவில்  இருந்து வெளியேறி மாற்று அணி
அமைக்க வேண்டும் : பாமக பொதுக்குழு பரபரப்பு#செம மாத்து வாங்கற அணியாக ஆசையா? ஹய்யோ அய்யோ

-----------------------

13. திமுக அணியில் இருந்து வெளியேறியது பாமக.#ராம்தாஸூம்,நயன் தாராவும் கிட்டத்தட்ட ஒரே கொள்கை தான்@ஜோடியை மாத்து-மக்களை ஏமாத்து கொள்கை

-----------------------------


Photo

14. நயன்தாராவுக்கு மேரேஜ் ஆகறப்ப யாரும் அவங்களை வாழ்த்தி அட்சதை போடக்கூடாதா? ஏன்?

சிம்பு - அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்? #வேட்டை மன்னன் பஞ்ச் டயலாக்


-------------------------

15. என் குடும்பத்தில் எல்லோருமே வேறு ஜாதியினரை தான் மணந்துள்ளோம்!- அமிதாப் #என்ன சொல்ல வர்றீங்க ஜி? உங்க எல்லா படத்துக்கும் வரி விலக்கு வேணும்னா?

---------------------------


16 பொய் வழக்கு போட்டு விசாரணை : கருணாநிதி காட்டம் #தலைவரே,பொய்யர்களுக்கு பொய் வழக்கே போதும்னுட்டாங்க அம்மா


--------------------------------

17. உன் ஆள் ரயில்வே டிபார்ட்மெண்ட்னு எப்படி சொல்றே?

 நாளை எனக்கு பர்த்டேன்னு சொன்னா அப்பர் பர்த்டேவா? லோயர் பர்த்டேவா?ன்னு கேட்டாரே?

------------

18. மீன் குழம்பு  வைக்க சின்ன குண்டா போதாதா?

எதுக்கு இவ்வளவு பெரிய அண்டா? இது சுறா மீன் குழம்பு ஆச்சே?

---------------
19. ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ்மென்,எஞ்சினியர்ஸ், லேண்ட் புரோக்கர்ஸ் இவங்களுக்குள்ள வசதி ஓப்பனாவே நான் சைட் பார்க்கப்போறேன்னு சொல்லீட்டே போலாம்,

-----------------------------

20. கண்ணாடி உடைய சிறு கல் போதும்,  மனசு உடைய ஒரு சிறு சொல் போதும், எல்லோரையும் வசப்படுத்த ஒரு சிறு புன்னகை போதும்

--------------------



21 இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல கிஸ் தர்றீங்களே?உங்களுக்கு COMMON SENSE இல்ல? 

காமன்  சென்ஸ் இருக்கறதால தான் கொடுத்தேன் # காதல் கடலை

---------------------
22. சார், மே ஐ கம் இன் ?

வெயிட் ப்ளீஸ்..

. 80 கிலோ சார்..

கெட் அவுட் # நேர்முகத்தேர்வு நக்கல்ஸ்

---------------------------
23. பொறுமையாய் இருந்ததால் நான் 1000 முறை தோற்றேன், ஆனால் அதற்காக  அவசரப்பட்டு ஒரு முறை கூட ஜெயித்ததே இல்லை!

--------------------

24. உங்களை நான் என்னைக்கும் மதிச்சதே இல்லை, ஆனா நீங்க விடாம என்னை காதலிக்கறீங்களே? ஏன்?

காதலி மதிக்காவிட்டால் என்ன? காதல் மதிப்பு மிக்கது

----------------------

25. அன்புக்குரியவர்கள் இறப்பதை விட அதிக வலி தருவது அன்புக்குரியவர்களை  இழப்பது

-------------------
26 உதட்டில் உண்மை,கண்களில் நம்பிக்கை,கைகளில் உறுதி,முகத்தில் புன்னகை,உள்ளத்தில் அன்பு இவற்றுடன் காதல் நேர்முகத்தேர்வுக்கு சென்றவர்கள் தோற்றதே இல்லை

--------------------------

ரொமான்ஸ் ரகசியங்கள் !

ரொமான்ஸ் ரகசியங்கள் !


 ஆண், பெண்ணின் காதல் வாழ்க்கைக்கு முக்கியமான இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒன்று... பேச்சு. மற்றொன்று... தொடுதல்!

'ஸ்வீட் நத்திங்ஸ்' (Sweet nothings) என்பார்கள். காதலிக்கும் பருவத்தில் காதலர்கள் கண்டதையும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பார்த்த சினிமா, கேட்ட பாடல், ஜோக்குகள், பிடித்த மழை, பிடிக்காத மனிதர்கள்... என்று இந்தப் பேச்சுதான், காதல் என்கிற நீண்ட உறவின் ஆரம்பம். செல்போன் வந்துவிட்ட பிறகு. அர்த்தமற்ற ஸ்வீட்டான பேச்சுகளுக்கு அளவே இல்லா மல் போய்விட்டது.; அதுதான் காதலின் நெருக்கத்தையும் வளர்க்கிறது!

கணவனும் மனைவியும் முதல் இரண்டு வருடங்களிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌனமே அவர்களின் உறவை ஆக்கிரமிக் கிறது’ என்கிறது ஒரு தியரி. நம் சமூகத்தில் உள்ள பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால்... இதில் இருக்கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் சம்பிரதாயக் கடமை களை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இருப்பார்கள். அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்று இருக்கும்.
 
'ஒரே ஒரு துணையுடன் வாழ்க்கை முழுக்க வாழ்வதா... அது எப்படி சாத்தியம்?' என்று நம்மூர் ஜோடிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மேல்நாட்டினர். பேச்சு, உடல் உறவு, மனப்பகிர்வுகள் குறைந்து போகும் நிலையில்... அந்த உறவை விவாகரத்தின் மூலம் துண்டித்து விட்டு, புதிய உறவுகளைத் தேடுவது அவர்களின் வழக்கம். ஆனால், நம்முடைய கலாசாரம் வேறு. ஒருவனுக்கு ஒருத்தி, காதல் உணர்வு, குடும்பப் பாசம், கடமை உணர்வுகள் எல்லாம் கலந்தது நம்மூர் ரொமான்ஸ்! ப்ளஸ், மைனஸ் இரண்டுமே இதில் உண்டு.

காதலிக்கும் பருவத்தில், பேச்சிலிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன்பம் தரும் ஸ்பரிசங்களாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அகஸ்மாத் தாகப் பட்டுக் கொள்ளும் விரல்கள், உடலின் கவர்ச்சிகரமான பாகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள். அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே எடுத்துச் செல்கிறது. 'தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் ஜோடிகளால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது' என்கிறது அறிவியல் உண்மை.

துரதிருஷ்டவசமாக நம்மூரில் இந்தத் 'தொடுதல்’ எனும் அற்புதமான விஷயம், வெகு சீக்கிரம் ஜோடிகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. 'தொடுதல்’ என்றால் உடலுறவு அல்ல; அது சில நிமிடங்களில் முடிந்து போகிற 'பேஸிக் இன்ஸ்டிங்க்ட்' (Basic Instinct). ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது. முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகிறது.

காலம் காலமாக பெண்களை அடுப் படியில் அடிமையாகவே வைத்திருந்த மனோபாவத்தில் இருக்கும் இந்திய ஆண்களுக்கு, பெண்களை எப்படி அணுகுவது என்பது பெரும் பிரச்னை.

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழி லில் இருந்துவிட்டு, படம் இயக்கும் ஆசையுடன் இப்போது கோடம்பாக் கத்தில் செட்டிலாகியிருக்கும் ஒரு நண்பர் சொன்னார்... ''தமிழ் சினிமாவின் ஹீரோக்களைப் பாருங்கள்... அவர் களுக்கு ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது, எப்படி அணுகுவது போன்ற வற்றைப் பற்றிப் பெரிய பிரச்னை இருக் கிறது. அந்தக் கால எம்.ஜி.ஆரிடம் இருந்து இப்போதைய சிம்பு வரை பெண்களுக்கு அட்வைஸ் செய்வதையே காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். அல்லது மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ என்று பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய ஹீரோவோ 'தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னுடுவேன். மரியாதையா காதலிச் சுடு’ என்று பெண்ணை மிரட்டுகிறான். மற்றொருவன் 'அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சா விட்டுட்டுப் போயிட்டே இருப்பீங்கடி...’ என்று பிதற்றுகிறான். இதில் உச்சகட்டமாக காதலிக்கவில்லை என்பதற் காக கதாநாயகியின் மீது கோர்ட்டில் வழக்கே போட்டு விடுகிறான் மற்றொரு ஹீரோ.

பெண் என்பவள் ஒரு சக மனுஷி, அவளிடம் நிதானமாக, அன்பாகப் பேச முடியும், விவாதிக்க முடியும் என்று ஏன் இவர்களுக்குத் தோணுவதில்லை?’' என்று அந்த இயக்குநர் கேட்டபோது, அதிலிருக்கும் நியாயத்தை உணர முடிந்தது.

நம் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய மென்மொழியே தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமான்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் கணவன் ஜாதிகளுக்குப் புரியாமல் போகிறது.

பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விஷயங்களில் கட்டுப்பெட்டித்தனமாகவும், தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்னை.

தொடுதல் என்கிற 'ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம். அது ஒருவகையான மஸாஜ்தான். ஆதாமைக் கடவுள் தொட்டு ஆசீர்வதிப்பது போல்தான் பிரபல ஓவியத்தை வரைந்தார், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மைக்கேல் ஆஞ்சலோ. நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்... 'மஸாஜ் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான நோய்களைத் தீர்க்கின்றன' என்று பிரசாரமே செய் தவர்.

'ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போது... மூளையில் 'எண்டோர்ஃபின்’ (Endorphin)எனும் ரசாயனம் சுரந்து உற்சாகமூட்டு வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆதலினால் அன்புக்குரிய ஜோடிகளே... நிறைய பேசுங்கள். அவை அர்த்தமற்ற பேச்சாகக்கூட இருக் கட்டும், பேசுங்கள். அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்த மிடுங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால்... உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

'தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்' என்றார் தத்துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்!

நில மோசடி வழக்கில் மாட்டிய திமுக வி ஐ பிகள், ஜெ அதிரடி,கதிகலங்கி நிற்கும் சன் டி வி , கலைஞர் டிவி

நிலநடுக்கத்தில் 2,800 குற்றங்கள் : அ.தி.மு.க. ரிக்டர் ஆபரேஷன்!

ஜெயலலிதா திட்டமிட்டு உருவாக்கும் 'நிலநடுக்கத்தின்’ ரிக்டர் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இது தி.மு.க - வின் உள்கட்டமைப்பில், அளவுக்கு மீறிய அதிர்வுகளையும் சரிபண்ண முடியாத பிளவுகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

 சி.பி - ஈரோடு என் கே கே பி ராஜாவுக்குத்தான் மொத ஆப்பு.. அண்ணன் ஆடிப்போய்ட்டார் இல்ல?

ஆளும் கட்சியான அ.தி.மு.க-வின் தவறுகளைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு அரசியல் பண்ண முடியாமல், தங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அரசியல் மட்டுமே செய்தாக வேண்டிய நெருக்கடியை இந்த நிலநடுக்கங்கள் தி.மு.க-வுக்கு உருவாக்கிவிட்டன!


சி.பி - அவனவன் ஃபாரீன் போய் செட்டில் ஆனா போதும், சொத்தே வேணாம், ஆளை விடுங்கடா சாமின்னு அலரிட்டு இருக்காங்களாம்.. 


முதல்வர் ஜெயலலிதா தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமலே தொடங்கினாரா எனத் தெரியவில்லை. தி.மு.க-வின் அஸ்திவாரத்தை ஆட்ட நிலப் பிரச்னைதான் சரியான வழிமுறை என்று கையில் எடுத்தார்.


சி.பி - செஸ்ல குதிரையை பயன்படுத்தி ஒரு மூவ் வைப்போம், ஆனா எதிர்பாராத விதமா அது ராஜாவுக்கும், ராணிக்கும் டபுள் செக் ஆகிடும், அது போல அம்மாவும், அய்யாவும் மாட்டாப்போறாங்க இதுல.. 

முதலாவது கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுக்குப் பின்னால், ''தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நில அபகரிப்புகள் தொடர் பான ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதே, அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பப் பெற்றுத் தருவேன்’ என்று நான் அறிவித்து இருந்தேன்.

சி.பி - ஆமாமா, அம்மாவுக்கு என்ன கோபம்னா நம்ம ஆட்சில நம்மால பண்ண முடியாத , நமக்குத்தோணாத பல ஆங்கிள்கள் இவங்களூக்குத்தோணி இருக்கே? அப்டின்னு ஒரு அங்கலாய்ப்பு , 

அந்த நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதுவரை 2,800-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்து உள்ளன'' என்று அறிவித்தார் முதல்வர். கடந்த ஆட்சியில் புகார் கொடுக்காதவர்கள், புகார் கொடுக்கவிடாமல் தடுக்கப்பட்டவர்கள், புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைவிடப்பட்ட வர்கள், யாருக்கும் சொல்லாமல் உயிர் பயத்தால் மறைத்துக் கொண்டவர்கள் எனப் பலரும் தங்கள் மனுக்களுடன் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் முன்னால் நின்றார் கள். 'இதற்குத்தானடா காத்திருந்தோம்’ என்பது மாதிரி, மொத்தமாக கோழிகளை அமுக்க ஆரம்பித்தது ஆளும் அரசு!

சி.பி - 2800 புகார்ல பாதிக்குப்பாதி உண்மைன்னு வெச்சுக்கிட்டாக்கூட ... அடேங்கப்பா..!!!!!!!!!!!!



''நியாயமான வழக்குகளாக இருந்தால், அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களாக இருந்தால், வழக்குப் போடுவதில் தவறு இல்லை. இந்த நடவடிக்கைகளைக் கடந்த தி.மு.க. ஆட்சி என்று மட்டும் வைத்துக்கொள்ளாமல், அதற்கும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்டவைக்கும் சேர்த்து வழக்குகள் போட வேண்டும்.

சி.பி - நமக்கு ஒரு கண் போனா பரவாயில்லை, எதிரிக்கு 2 கண் போகனும், இது தானே தமிழனின் பண்பாடு பலே பேஷ்.. சபாஷ்.. 

விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட சிறுதாவூர் நிலமும் இத்தகைய புகாருக்கு உள்ளானதுதான்'' என்று கருணாநிதி பதிலடி கொடுக்க, ''ஏற்கெனவே அன்றைய விலைக்கு நிலங்களை விற்றவர் கள், இன்று விலை கூடிவிட்டதற்காக அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு புகார் கொடுக்கிறார்கள். நான் ஒரு நிலத்தை டி.ஆர்.பாலுவிடம் 10 லட்சம் கொடுத்து வாங்குகிறேன். அதன் விலை கூடிய பிறகு, அதிக பணத்துக்கு பாலு ஆசைப்பட்டு, என் மீதே வழக்குப் போட்டால் ஏற்க முடியுமா?'' என்று மன்னார்குடி கூட்டத்தில் கேட்டார் ஸ்டாலின்.

சி.பி - ஏப்பா லபோ திபோன்னு அடிச்சுக்கறீங்க? உங்க மேல தப்பில்லைன்னா ஏன் கோபம் வருது..?


இவை அனைத்துக்கும் தமிழக அரசின் பதில் இரண்டே வரிகள்தான். 'பொதுமக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யார் மீதும் இட்டுக்கட்டி, எந்தப் பொய் வழக்கையும் போடவில்லை!’

சி.பி - அப்படித்தான் பொய்யா வழக்கு இருந்தா என்ன? இவங்க என்ன சத்திய சீலர்களா/ இவங்களும் பொய்யர்கள் தானே?   பொய்யர்கள் மேல் பொய் வழக்குப்போடா தப்பில்லை



மூன்று மாதங்களுக்கு முன்னால் விவசாயத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கைத்தறித் துறை அமைச்சராக இருந்து கருணா நிதியால் பதவியைவிட்டும் கட்சியை விட்டும் நீக்கப்பட்டு, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி.ராஜா ஆகிய இருவரும் கோவை சிறை யில் இருக்கிறார்கள்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனும் பாளை சிறையில் வைக்கப்பட்டார்கள். தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ- வுமான ஜெ.அன்பழகன் கோவை சிறையில் இருக்கிறார். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மு.க.அழகிரியின் வலதுகரமுமான 'பொட்டு’ சுரேஷ் பாளை சிறையிலும், மதுரை வேளாண் விற்பனைக் கிடங்கின் முன்னாள் தலைவரும் மு.க.அழகிரியின் இடதுகரமுமான 'அட்டாக்’ பாண்டி, திருச்சி சிறையிலும் இருக்கிறார் கள். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைதாகி விடுதலை பெற்ற எஸ்ஸார் கோபி மதுரை சிறையில் இருக்கிறார்.


சி,பி - ஆஹா, திமுகவில் தான் எத்தனை தியாகிகள்!!!!!!!!!!!!!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவரும் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பின ருமான வி.கே.குருசாமி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் 'பொட்டு’ சுரேஷ், 'அட்டாக்’ பாண்டி, வி.கே.குருசாமி, புரசை ரங்கநாதன் ஆகிய நால்வருடன் சேர்த்து பூண்டி கலைவாணன் மீதும் குண்டர்கள் தடுப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது. திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வலது கரமுமாகிய குடமுருட்டி சேகர், கஞ்சா வைத்துஇருந்ததாகக் கைது செய்யப்பட்டார்.

சி.பி - இந்த பன்னாடைங்க பேரைப்பார்த்து சினிமாரவுடிகளுக்குப்பேர் வைக்கிறாங்களா? அல்லது இவனுங்க சினிமா பார்த்து வெச்சுக்கறானுங்களா? 

ராமநாதபுரத்திலும் திருப்பூரிலும் தி.மு.க-வின் கீழ்மட்டப் பதவிகளில் இருந்த பலரும் நில அபகரிப்பு வழக்குகளில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பலர் மீது புகார்கள் வரிசை கட்டி வரத் தொடங்கி உள்ளன.

சி.பி - எல்லா பரதேசிகளூம் மட்டம் தான், இதுல கீழ் மட்டம் என்ன? மேல் மட்டம் என்ன? 


செய்தித் துறையின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது வில்லிவாக்கத்தில் நில அபகரிப்புப் புகார், சென்னை மாநகரக் காவல் துறையில் பதிவாகி உள்ளது. திருச்சி யில் உள்ள காஞ்சனா ஹோட்டல் சொத்தைக் கைமாற்றி விடும் விவகாரத்தில் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் சம்பந்தப்பட்டதாக நாமக்கல்லைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் கொடுத்த புகார் இப்போதுதான் புகைய ஆரம்பித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் போட்டார் நேரு. '16-ம் தேதி வரைக்கும் அவரைக் கைது செய்யக் கூடாது’ என்று விசாரணை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

சி.பி - அண்ணன் 16 ஆம் தேதிக்குள்ள ஃபாரீன் போயிடுவாரு பாருங்க. 



வருவாய்த் துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி மீது காவல் துறை இயக்குநரிடம் அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் சுந்தர்ராஜன், என்பவர் தந்திருக்கும் புகாரைப் படிக்கவே பயமாக இருக்கிறது. சொத்தை அபகரிக்க நடந்த மோதலில் பல திடுக்கிடும் திருப்பங்களும் மர்ம மரணங்களும்கொண்ட திகில் கதைபோல அது இருக்கிறது. உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தன்னுடைய கல்லூரியின் வளர்ச்சிக்காக மற்றொரு நிர்வாகத்தின் கல்லூரியை எப்படி முடக்கினார் என்பதும், தனது கல்லூரிக்கான இடத்தைக் கையகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளும் போலீஸ் விசாரணையில் உள்ளன.


அனைத்துக்கும் மேலாக, மதுரை உத்தங்குடியில் நாகர் ஆலயத்துக்குச் சொந்தமான இடம், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி பேருக்குக் கைமாறியதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும், கருணாநிதியின் படங்களுக்கு ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் பங்களிப்பு எத்தகையது என்பதையும் போலீஸ் விசாரித்துக்கொண்டு இருக்கிறது. திருவொற்றியூர் பரணிகுமாரை மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் சாமியும் அவரது தம்பி சொக்கலிங்கமும் தாக்கியதாகப் புகார்.


''பொய் வழக்குகளை வேகவேகமாகப் போட்டு, கழக மாவீரர்களை சல்லடைக் கண்களால் துளைத்துவிடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. குண்டர் சட்டத்தை தி.மு.க-வினர் மீது பயன்படுத்துவதைப் பார்த்து, 'ஒரு பயங்கரமான ஆட்சியை நான் நடத்துகிறேன் பார்’ என்று காட்ட நினைக்கிறார்'' என்று கருணாநிதி திருவாரூரில் சொல்லி இருக்கிறார்.


கைதானவர்கள் குற்றவாளிகள்தானா என்பதை போலீஸ் நிரூபிக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கட்டும். ஆனால், புகார் கொடுத்தவர்கள் பலர் அப்பாவிகள்தான். மதுரை திருமலை நாயக்கர் கோயிலுக்கு அருகில் இருக்கும் வீட்டை யும் கடையையும் பறிகொடுத்த கல்பனா, ''நான் அட்டாக் பாண்டியோட சொந்தக்காரங்க. அவர் பேரைச் சொன்னா, ஊரே அதிரும்ல'' என்று சொல்லி, தன்னை மிரட்டியதாகச் சொல்கிறார். திருமங்கலம் பாப்பாவையும் அவரது கணவர் சிவனாண்டி யையும் பொட்டு சுரேஷ் தன் அலுவலகத்துக்கு வரச் சொல்லி மிரட்டியதாகச் சொல்கிறார்கள்.


சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள 23 குடும்பங்கள் நான்கு ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கின்றன. உத்தங்குடி நாகர் ஆலயத்தின் வி.வி.சுப்பிரமணியன் ஐயர் நில அபகரிப்பையும், அதனால் ஒருவர் காணாமல் போன கதையும் பரபரப்பு. காடுவெட்டிப் பாளையத்தில் பேப்பர் மில்லை கை மாற்றிவிடும் விவகாரத்தில் ஜெ.அன்பழகனின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார். அவனியாபுரம் பாண்டியராஜின் மனைவி பாண்டீஸ்வரி தனது கணவரைக் கொன்று, அதை ஒரு விபத்தாகக் காட்டிவிட்டார்கள் என்று எஸ்ஸார் கோபி தரப்பு மீது கை நீட்டுகிறார். மிகமிக மேலோட்டமாகப் பார்த்தால், கஞ்சா வைத்து இருந்ததாகக் கைது செய்யப்பட்ட திருச்சி பிரமுகர் தவிர, அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களால் போடப்பட்ட வழக்குகளாகவே இருக்கின்றன.


இந்த நடவடிக்கைகளைப் பார்த்து நம்பிக்கைகொண்ட பலரும், புதிய புகார்களுடன் புறப்பட்டு உள்ளார்கள். போகிற போக்கைப் பார்த்தால், இந்த நில நடுக்கத்தில் இருந்து தி.மு.க. தப்பிப்பது பெரும்பாடாக இருக்கும். சிவில் வழக்குகளில் கிரிமினல் செக்ஷன்களும் சேரும்போது சிக்கிய தனி மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் வழக்குடன் மல்லுக்கட்டுவதாகவே முடிந்துபோகும். அத்தகைய சுழலில் தி.மு.க-வினர் சிக்கியது மட்டும் அல்ல... கட்சியையும் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார்கள்!

சி.பி - நல்ல வேளை ஆட்சி மாறுச்சு, இல்லைன்னா இந்த முறையும் செகண்ட் ரவுண்ட் நில மோசடியை ஆரம்பிச்சிருப்பாங்க.  இந்த மேட்டரைப்பற்றி சன் டிவி,அல்லது கலைஞர் டி விலயோ மூச் விட மாட்டேங்கறாங்க. ஏன்னா அந்த நிர்வாகிகள் மேலயும் வழக்கு இருக்கே?


 thanx - vikatan