Showing posts with label வடிவேலு. Show all posts
Showing posts with label வடிவேலு. Show all posts

Sunday, June 21, 2015

எலி - மக்கள் பார்வை - பாசா? ஃபெயிலா?

வடிவேலு ஹீரோவாக நடிக்கும் நான்காவது படம், யுவராஜ் தயாளன் - வடிவேலு கூட்டணியில் இரண்டாவது படம் என்ற இந்தக் காரணங்களே 'எலி' படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
'வின்னர்', 'தலைநகரம்', 'மருதமலை', 'கிரி', 'எல்லாம் அவன் செயல்', 'காவலன்' படங்களில் பார்த்த வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற அலாதி ஆர்வமும் இன்னொரு காரணம்.
வடிவேலு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினாரா?
திருடனாக இருக்கும் வடிவேலு உளவாளியாகி, கடத்தல் கும்பலை போலீஸிடம் பிடித்துக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு திருடன் வடிவேலு போலீஸ் வடிவேலு ஆகிறார்.
இந்த ஒற்றை வரிக் கதையை வைத்துக்கொண்டு ஒரு விழிப்புணர்வையும் கொடுக்கத் துணிந்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
புகைப் பிடிப்பது புற்றுநோயை உருவாக்கும். உயிரைக் கொல்லும். மற்றவர் உயிரையும் சேர்த்துக் கொல்லும் என்று வடிவேலு தனக்கே உரிய பாணியில் எச்சரிக்கை வாசகத்தைப் படிக்கும்போதே சிரிப்பு வந்துவிடுகிறது.
'எலி'யின் ஆட்டம் ஆரம்பம் என்று நினைத்துக்கொண்டு தியேட்டரில் இருக்கும் ரசிகர்கள் படம் நிசப்தமாகி, படம் பார்க்க ஆரம்பித்தனர்.
'எலி' மாதிரி சின்ன சின்ன ரியாக்‌ஷன் கொடுக்கும் வடிவேலு சில திட்டங்கள் தீட்டி, திருடுகிறார். போலீஸ் வீட்டில் திருடும்போது மட்டும் கவனம் ஈர்க்கிறார். ரசிகர்கள் பலே என்று கை தட்டுகிறார்கள். அதற்குப் பிறகு அரங்கம் முழுக்க நிசப்தம் மட்டுமே நிலவியது.
போஸ் வெங்கட்டைப் பார்த்து ஜெய்சங்கர் மாதிரி டிரஸ் பண்ணியிருக்கார் என்று ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை.
இப்படியே நகர்ந்து, ஊர்ந்து, தள்ளிவிட்டு முதல் பாதி முடிகிறது. இரண்டாம் பாதியில் கதைக்குள் போகிறேன் பேர்வழி என்று எதையோ சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
வடிவேலு தான் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை சொல்லிக்கொண்டே செய்கிறார். இவனை பிடிச்சா அவனை பிடிச்சிடலாம். அப்போ இவனை ஃபாலோ பண்ணலாம் என்று சொல்கிறார். சொன்னதையே செய்கிறார். இதுவே மிகப்பெரிய சோர்வையும், அலுப்பையும் உண்டாக்கிவிடுகிறது.
அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ன பதற்றமோ, வேகமோ இல்லாமல் திரைக்கதை நகர்வேனா என்று அடம்பிடிக்கிறது.
வழக்கமாக சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போடும் வடிவேலு, இதில் வெறும் வேலுவாக இருப்பதாலோ என்னவோ எல்லா வெடிகளும் புஸ் ஆகிப் போனது. தியேட்டரில் காலியாக கிடந்த பாதி இருக்கைகளும் அதை உறுதிப்படுத்தின.
இரண்டாம் பாதியிலும் வடிவேலு ஸ்கோர் செய்ய முயற்சித்தாலும் வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் இல்லை.
வில்லனிடம் மாட்டிக்கொள்வோமோ என்று பதறித் துடித்து, 'சுத்திக்கிட்டு இல்லை. வழி தெரியாம சிக்கிக்கிட்டு இருக்கு' என்று பேசும்போது மட்டும் அசல் வடிவேலுவைப் பார்க்க முடிகிறது. மனிதர் மற்ற இடங்களில் ஏன் சோபிக்காமல் போனார்? இத்தனைக்கும் கிளைமாக்ஸில் வடிவேலு சண்டை போட்டு ரசிகர்களின் இதயம் கவர முயற்சித்திருக்கிறார்.
பிரதீப் ராவத், ஆதித்யா, போஸ் வெங்கட், மகாநதி சங்கர் ஆகியோர் கேரக்டருக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். சண்முகராஜா, நான் கடவுள் ராஜேந்திரன், முத்துக்காளை ஆகியோர் சும்மா வந்து போகிறார்கள்.
சதாவுக்கு படத்தில் பெரிதாய் எந்த ஸ்கோப்பும் இல்லை. கொள்ளை அழகு பாடலுக்கு கிளப் டான்ஸ், இந்திப் பாடல் டூயட், சில வசனங்களில் உள்ளேன் ஐயா சொல்லிவிட்டுப் போகிறார். ஆனால், வசனங்களில் கூட பெரிதாக எந்த ஈர்ப்பும் இல்லை. வடிவேலு பாடிய கண்ண மேய விட்டியா பாடல் மட்டும் சுமாராக இருக்கிறது. சதாவுடன் வடிவேலு ஆடும் இந்திப் பாடலுக்கு தியேட்டரில் இருக்கும் சில ரசிகர்கள் எழுந்துபோய்விட்டனர்.
சதா அறையில் எதைத் தேடினார்? ஏன்? போலீஸூக்குள் இருக்கும் கறுப்பு ஆடு யார் என தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இப்படி ஏகப்பட்ட ஏன்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இயக்குநர் யுவராஜ் தயாளன் திரைக்கதையில் ஏகப்பட்ட தொய்வு மட்டுமே இருக்கிறது.
1960-ல் நடக்கும் கதை என்று ட்ரெய்லரிலேயே சொல்லிவிட்டார்கள். அதற்காக கதைகூட அந்தக் காலத்தில் நடப்பதைப் போல மெதுவாகவே நகர வேண்டுமா? சுவாரஸ்யமோ, புத்திசாலித்தனமோ, பார்றா என ஆச்சர்யப்படும் விதத்திலோ எந்தக் காட்சியும் இல்லை.
மேலோட்டமாகப் பார்த்தால் எம்ஜிஆர் காலத்தில் எம்ஜிஆர் நடித்த கதைதான். அதை கொஞ்சம் திருப்பிப் போட்டு வடிவேலுவை இட்டு நிரப்பியிருக்கிறார்கள். ஆனால், அதுதான் முழுமையாகப் பொருந்தாமல் உறுத்துகிறது.
வடிவேலுவிடம் இருந்த அப்பாவித்தனமும், வெகுளித்தனமும், உடல் மொழியும் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து காணாமல் போய் இருக்கிறது. அதனால்தான் காமெடிக் கதையில் கூட வறட்சியை சந்திக்க நேரிடுகிறது.
புராணக் கதை, சரித்திரக் கதை, பீரியட் கதைகளுக்கு வடிவேலு குட் பை சொல்ல வேண்டிய நேரம் இது. காவலன் வடிவேலு வந்தால் கூட வயிறு வெடித்து சிரிக்கலாம். எழுந்து நின்று கை தட்டலாம்.
ஒரு ரசிகர் புலம்பியபடியே சொன்னார்: இதுவரை வந்த வடிவேலுவின் மொத்த காமெடியையும் ரெண்டரை மணிநேரம் போட்டிருந்தால் கூட சந்தோஷமாக இருந்திருக்கும் என்றார்.
படம் முடிந்ததும் நாம் நினைவுகூரும் வடிவேலுவின் ஒற்றை சொல் இதுதான்... முடியல!
வடிவேலுவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இதுதான். பழைய பன்னீர்செல்வமா ஸாரி. பழைய கைப்புள்ள வடிவேலுவா வரணும்.
வருவாரா?



  • Shankar  

    வடிவேலு oன்று புரிந்து கொள்ளவேண்டும். avar அஜித்தோ விஜயோ அல்ல. அவர்களுக்கு side கிக்காக நடிக்க மட்டுமே லாயக்கு.than
    Points
    19955

    about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       



    • கண்டிப்பா வருவார்

      about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


      • Nishath  

        ஒரு ரசிகர் புலம்பியபடியே சொன்னார்: இதுவரை வந்த வடிவேலுவின் மொத்த காமெடியையும் ரெண்டரை மணிநேரம் போட்டிருந்தால் கூட சந்தோஷமாக இருந்திருக்கும் என்றார் உண்மைதான்

        about 24 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


        • Watcher  

          யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே. காமெடியன் பணம் சம்பாதித்து விட்டால் ஹீரோ ஆக முடியாது. பணக்காரன் ஆகலாம் அவ்வளவுதான். திறமை பணத்தைக்கொண்டு வரலாம். ஆனால் பணம் உங்களிடம் இல்லாத திறமைகளை எல்லாம் கொண்டுவந்து விடாது.
          Points
          9845

          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


          • Anbu  

            கொட்டுற மழை யிலும் முதல் காட்சி பார்த்தேனே மொத்தம் 15 டிக்கெட் இடம் மும்பை
            Points
            145

            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



            • காவலன் படத்தில் என்ன காமெடி இருக்குது. பிரண்ட்ஸ் படத்தை சொன்னாலும் தகும்


            நன்றி- த இந்து

            Friday, April 10, 2015

            புலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி


            'வசமாகச் சிக்கிய எலி'- எலி பட இயக்குநர் யுவராஜ் சிறப்பு பேட்டி

            கா. இசக்கிமுத்து

            த  இந்து

            சென்னையின் பிரம்மாண்டமான பின்னி மில்லில் பதுங்கியிருக்கிறது ‘எலி’. அங்கே அண்ணாந்து பார்க்கவைக்கும் அரங்குகள் அமைத்து, அதில் வடிவேலு நகைச்சுவை நாயகனாக நடித்துவரும் ‘எலி' படத்தைப் படமாக்கிவருகிறார் இயக்குநர் யுவராஜ். ‘தெனாலிராமன்’ படத்தைத் தொடர்ந்து வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து ஆச்சரியப்படுத்தியிருப்பரைப் படப்பிடிப்பு இடைவேளையில் பிடித்தோம்..
            யுவராஜ்
            ‘எலி' என்ற தலைப்பே கிச்சு கிச்சு மூட்டுகிறதே?
            மிக மோசமான ஒரு கொள்ளைக் கூட்டம். அதைப் பிடிக்க அந்தக் கூட்டத்துக்குள் நுழைகிறார் வடிவேலு. கெட்டவர்கள் கூட்டத்துக்குள் ஒரு நல்லவன் நுழைந்துவிட்டால், “இந்தக் கூட்டத்துக்குள்ளே ஒரு எலி இருக்கான்டா. அவனைக் கண்டுபிடிச்சு அடிச்சுக் கொல்லுங்கடா” என்பார்கள்.
            அதனால்தான் ‘எலி' என்று தலைப்பு வைத்தேன். கொள்ளைக் கூட்டத்துக்குள் அவர் மாட்டிக்கொண்டு முழிப்பதும், அந்தக் கூட்டத்தைப் பிடித்தாரா, இல்லையா என்பதுதான் கதை. 1960-களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
            வடிவேலு ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ‘தெனாலிராமன்' படத்தை இயக்கினீர்கள். ஆனால் வெற்றி கிடைக்கவில்லையே என்ன காரணம்?
            “நீங்கள் கிரிக்கெட் விளையாடி இருப்பீர்கள் என்று நினைத்து வந்தோம். ஆனால் செஸ் விளையாடிக்கொண்டிருந்தீர்கள்” என்று முகநூலில் ஒரு ரசிகர் விமர்சனம் பண்ணியிருந்தார். அந்த வரிகள் எனக்குப் பிடித்திருந்தன. வடிவேலு மறுபடியும் நடிக்க ஆரம்பிக்கிறார், எதிர்பார்ப்பு இருக்கும் என்று எண்ணி ரொம்ப காமெடியாகப் பண்ணவில்லை. சிரிக்கவைத்து, கூத்தடித்து அனுப்பிவிட்டார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்ற விஷயத்தில் நானும், வடிவேலும் தெளிவாக இருந்தோம்.
            அதனால்தான் ‘தெனாலிராமன்' என்ற ஒரு பாத்திரத்தைக் கனமாக அமைத்தோம். “நல்ல மரியாதையான ஒரு படம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த காமெடி அதில் இல்லை” என்று படத்தைப் பார்த்த நிறைய குடும்பத்தினர் எங்களுக்குத் தெரிவித்தார்கள். எந்த இடத்தில் தவறு நடந்தது என்றால் ரசிகர்கள் முழுக்க காமெடி படம் என்று நினைத்து வந்துவிட்டார்கள்.
            நாங்கள் நல்ல படம் கொடுத்திருந்தோம். ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தை எடுக்கவில்லை. இப்போது “இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் இந்தாங்க ‘எலி'” என்று விருந்து கொடுக்கப் போகிறோம். விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறார்கள்.
            ஒரு படம் தோல்வியடைந்தும் மறுபடியும் அதே இயக்குநர் - நடிகர் இணைவது ஆச்சரியமாக இருக்கிறதே?
            எங்கள் இருவருக்குள்ளும் நல்லதொரு புரிதல் இருக்கிறது. ‘தெனாலிராமன்' படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு காமெடிப் படம் பண்ணலாம் என்று பேசிக்கொண்டுதான் இருந்தோம். அதனால்தான் திரும்பவும் வாய்ப்புக் கொடுத்தார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது, கருத்துப் பரிமாற்றம் தான் இருக்கிறது.
            மூன்றாவது வாய்ப்பு அமைந்தால் என்ன செய்வீர்கள்?
            அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. இப்போதைக்கு ‘எலி' பண்றோம். அடுத்த படத்துக்கான கதையையும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் படம் முடித்த உடனேயே பண்றோமா, கொஞ்சம் நாட்கள் கழித்து பண்றோமா என்பது அவரது விருப்பம்தான்.
            வடிவேலுவை வைத்துப் படம் பண்ணி னால், அவருடைய தலையீடு இருக்கும் என்று ஒரு பேச்சு நிலவுகிறதே?
            “தொடர்ச்சியாக இவ்வளவு காமெடி வசனங்கள் அள்ளிக் கொடுக்குறீங்க. நீங்கள் ஏன் இயக்கக் கூடாது” என்று அவரிடமே நான் கேட்டிருக்கிறேன். அப்போது “இல்லை நண்பா. நீ ஒரு காட்சி கொடு. அதில் நான் காமெடி கலந்து சூப்பராகச் சொல்வேன். ஆனால் அடுத்த காட்சி இதுதான் என்று எனக்குத் தெரியாது. நீ என்னிடம் ஒரு விஷயம் சொல்லு, அதை நான் காமெடியாக்கி உன்னைச் சிரிக்க வைக்கிறேன்” என்றார். இதை ஏன் இப்படி எடுக்கக் கூடாது என்றெல்லாம் என்னிடம் கூற மாட்டார்.
            முதலில் கதையைச் சொல்லச் சொல்வார். கதையைக் கேட்டவுடன், இந்த இடத்தில் எனக்கு இது சரியாக வருமா என்று கேட்பார். சரியாக வரும் என்று கூறியவுடன், முழுக் கதையையும் மூளையில் ஏற்றிக்கொள்வார். ஒரு வாரத்துக்குள் அந்தப் பாத்திரத்துக்கு என்ன பண்ணலாம், பண்ணக் கூடாது என்று மனதில் முடிவு செய்துவிடுவார். அதற்கு பிறகு நாம் என்ன சொன்னாலும், அதில் தலையிடவே மாட்டார்.
            காட்சி இதுதான் என்று கூறியவுடன், வசனத்தில் இப்படிப் பண்ணலாமா என்று நிறைய சாய்ஸ் சொல்லுவார். ஆனால் மறந்தும் கதை, திரைக்கதை ஏரியாவுக்குள் வடிவேலு தலையிடுவதில்லை. ஒரு காட்சி சொன்னால் இதுக்கு முன்னால் என்ன காட்சி, பின்னால் என்ன காட்சி என்று கேட்பார். அதற்குத் தகுந்தவாறு நடிக்க வேண்டும் என்று சொல்வார். அவ்வளவுதான். அந்தக் காட்சிக்குள் அவருடைய விளையாட்டு நடக்கும்.
            மறுபடியும் காமெடியனாக களம் இறங்குவது குறித்து வடிவேலு உங்களிடம் எதுவும் கூறியிருக்கிறாரா?
            அடுத்த அடுத்த படங்கள் பண்ணுவேன் என்று சொல்வார். யார்கூடப் பண்ணினால் நல்லாயிருக்கும் என்று என்னிடம் கேட்பார். உடனே அதை எப்படி நான் சொல்லுவேன் சார்.. நீங்கதான் சொல்லணும் என்பேன். அவசரப்படாமல் பண்ணுவோம் யுவராஜ், எனக்கு இது பிடித்திருக்கிறது என்பார்.
            மக்களை சிரிக்கவைக்கச் சரியான படங்கள் அமைய வேண்டும் என்பார். நிறையப் பேர் அவரிடம் கதை சொல்ல வருகிறார்கள். இப்போதைக்கு வேண்டாம் என்று மறுத்துவிடுவார். ‘எலி' முடியட்டும், முடிந்தவுடன் பேசலாம் என்று கூறியிருக்கிறார்.


            நன்றி  - த  இந்து

            Friday, April 18, 2014

            தெனாலிராமன் - சினிமா விமர்சனம்

             
            ஒரு வெற்றிப்படத்தைப்பார்த்து அது போல் இன்னொரு படம் பண்ண நினைப்பது  வேறு, அதே போல் எடுப்பது வேறு . இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலம் ஹீரோவாகக்கலக்கிய வைகைப்புயல் வடிவேலு  கேப்டன் , ஜெ ஆக்ரமிப்பால்  3 வருட வனவாசம் போனார் . இப்போ வெல்கம் பேக் வடிவேலு என எல்லோராலும் வரவேற்கப்பட்டு  அதே போல்  டபுள் ரோலில்  ஒரு மன்னர் படம் தந்திருக்கார் . என்னா ஆச்சுனு பார்ப்போம். 


            ஹீரோ கிருஷ்ண தேவராயருக்கு 36 சம்சாரம் , 52  குழந்தைங்க . மாசம் 31 நாள்-னு கணக்கு வெச்சாக்கூட  ஒரு மாசத்துல  31 பேரைத்தான் கவனிக்க முடியும் , மீதி 6 பேர் ஷார்ட்டேஜ்  வருது . இந்த மாதிரி சிக்கலான சூழலில்  ராஜா எப்படி மக்களைக்கவனிக்க முடியும் ? 3 சம்சாரம்  இருக்கறவங்க , ஒரு சம்சாரம் மட்டும்  இருந்தும் பிரிஞ்சு வாழ்றவங்க , கூட எல்லோராலும் பாராட்டப்படக்கூடிய  நல்லாட்சியைத்தர முடியறதில்லை 


            அமைச்சர் குழுவுல  9 பேரு.அதுல ஒரு ஆள் கொலை செய்யப்படறார். அந்த காலி இடத்துக்கு  பை எலக்சன் வைக்காம ஒரு புது அமைச்சர் எடுக்கறாங்க . தன் சமயோதிசத்தால் தெனாலி ராமன் அமைச்சர் ஆகிறார். 


            ஒரே நேரத்தில் மன்னரையும் , மன்னர் மகள் இளவரசியையும் கவர்றார்.  மீதி  இருக்கும் 8 அமைச்சர்களும்  சீனர்களுடன் சேர்ந்து சதி செய்து நாட்டை திராவிட கழகம் ஆக்கறாங்க. அதாவது குட்டிச்சுவர் ஆக்கிடறாங்க . அவங்க சதி வேலைகள் எப்படி முறியடிக்கப்படுது ? என்பதுதான் கதை , 




            ஹீரோவாக மன்னர், அமைச்சர் என இரு மாறுபட்ட தோற்றத்தில் வடிவேல் அசால்ட்டா கலக்கி இருக்கார் .  எல்லா ஹீரோக்களையும் போல இவருக்கும்   ஓப்பனிங்க் சீன் ., காமெடி , டூயட் , பஞ்ச் எல்லாம் உண்டு . அதகளம் பண்ணி இருக்கார் ., இவர் என சொன்னாலும் ஆடியன்ஸ் சிரிப்பது  இவர் சேர்த்து வைத்த சொத்து . போயஸ் தோட்டத்தில் வாங்கிவராத வரம்


            ஹீரோயினாக மீனாட்சி தீட்சித் . 24 மணி நேரமும்  லோ கட் ஜாக்கெட் , லோ ஹிப்  சேலை யில் வரும்  கிளாமர்  நாயகி . ரொம்ப சாதாரண தோற்றம் . வர்ணிக்க  வைக்கும் அளவு அழகு இல்லாத  சாதா நாயகி . 


             ராதா ரவி யின்   கம்பீரக்குரல்  , மனோபாலாவின் காமெடி படத்துக்கு பிளஸ்



             



            இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


            1.   படத்துக்கான ப்ரமோ , போஸ்டர் டிசைன்கள் , பரபரப்புக்காக தெலுங்கர்கள் எதிர்ப்பு டிராமா  எல்லாம் அற்புதம் 


            2    ஏப்ரல் மாதத்தில்   ஸ்கூல்  லீவ் டைமில் டைமிங்காக படத்தை  ரிலீஸ் செய்தது 


            3  திரைக்கதைக்காக பெரிதாக மெனக்கெடாமல்  தெனாலி ராமன் கதைகள்  நீதிக்கதை  புக்கில்  இருந்து அசலாட்டாக  12 சின்னக்கதைகளை எடுத்து கோர்த்தது 


            4  கூச்சமே இல்லாமல் இம்சை அரசன் 23 ம் புலிகேசி  திரைக்கதையையே திருப்பிப்போட்டு எடுத்தது 


            5 இளைஞர்கள் கூட்டத்தை இழுக்க   நாயகியை எப்போதும் மேலாக்கு இல்லாத  லோலாக்கா அலாக்கா காட்டியது 


            6   டி இமான் -  இசை  கூட லைட்டா காப்பியா இருந்தாலும் கண்டுக்காம  ஃபுல் சம்பளமும் குடுத்தது 





            இயக்குநரிடம் சில கேள்விகள் 



            1. ஒரே ஒரு  ஜோடி உள்ள தெனாலி ராமன்க்கு 2 டூயட் வெச்ச நீங்க  36  ஜோடி உள்ள மன்னர் க்கு ஏன்  டூயட்டோ , கில்மா சீனோ வைக்கலை ? 


            2  மன்னர் மாதிரியே தோற்றத்தில்  இருக்கும் அமைச்சர் வடிவேலுவை முக ஜாடை பார்த்து யாரும் ஏ கேள்வி கேட்கலை ?   ஒரு வேளை  36 ல் தப்பி 3 வதா யாருக்காவது  பிறந்தவரா? 


            3  சராசரியா   ஒரு சம்சாரத்துக்கு  ஒரு தக்கச்சின்னாக்கூட   மொத்தமா 36 மச்சினிங்க  இருந்திருக்கும் . அது பற்றிய வரலாற்றுபதிவு ஏன் இல்லை ? 


            4   காதலரா , அப்பாவா  வடிவேலு   நாயகியை கட்டிப்பிடிக்கும்போது  ஹீரோவுக்கு சங்கடமா  இருந்திருக்காதா? 


            5  அப்பா வடிவேலுவை கட்டிப்பிடிக்கும் மகள்  நாயகி  அப்போக்கூட  லோ கட் , லோ ஹிப்பில் தான்  வரனுமா?  24 நேரமும்   இடை வெளி இல்லா இடை காட்டும் தடை இல்லா சீன் காட்டும் சீனு ராமசாமியா ஒளிப்பதிவாளர் ? 


            6   ஓப்பனிங் சீனில் வரும்  சீனப்பொண்ணு அட்டகாசமா தமிழ் பேசுது. அது எப்படி ? அடியாளுங்க  கிட்டே  தன்  புருஷன் முன்னாடியே “ நீங்க எங்க சதித்திட்டத்துக்கு இணங்குனா  நீங்க எது கேட்டாலும்  தருவேன்னு  பூடகமா சொல்லுது .புருசன்  மிக்சர் பார்ட்டியா? 


             7 மன்னர் காலத்தமிழில் ஆங்காங்கே   தற்கால ஸ்லாங்க் புகுந்தது எப்படி ? 





            மனம் கவர்ந்த வசனங்கள்



             1.இவன் கிடக்கான் ஏமாளி.இவன் இடத்துக்கு வருவான் ஒரு கோமாளி# வடிவேலு ஆரவாரமான ஓப்பனிங்

            2. ஏய் வாயாடி வழியில் போகும் ஆம்பளைங்களை வம்பிழுக்கும் வாயாடி பாட்டு நயன் க்கா?

            3. அப்பா! நாங்க 52 வாரிசு.யார் நாட்டை ஆள்வது ? வருடத்துக்கு 52 வாரம்.வாரம் ஒருவர் ஆட்சி செய்யலாம்

            4. எங்கே போறீங்க? ராணிகள் மூவருக்கு இடுப்பில் வலியாம்.போய்பார்த்துட்டு வரேன் # தெ ரா 



            5  நீங்க போடும்  சட்டங்களும்  திட்டங்களும்  செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும் தான் பயன்படும் 


            6 நான்  கேட்காமயே ஏன் உதவி செஞ்சே? 


             கேட்காம செய்யறதுக்குப்பேர் தான்  உதவி 


            7  ஒருத்தர் பிடிச்சுப்பார்த்தாலே  எல்லாம்  தெரிஞ்சுடும் \


             என்னாது ? 


             வலியைச்சொன்னேன்



            படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


            1. 1150 சீட் அபிராமில மான் கராத்தே காத்து வாங்குது.380 சீட் தேவி அபிராமில தெனாலிராமன் ரிலீஸ்.செயற்கை டிமாண்ட் .பிளாக் டிக்கெட் டெக்னிக்

            2. எந்தத்தியேட்டருக்கு எந்த ஷோ போனாலும் எல்லாப்பயலும் ஏதோ ஒரு பிகரோட ஜோடியாத்தான் வாராங்க.தனியாப்போவது நாம மட்டும்தான் போல#தெ ரா

            3. புதையல் இருக்குனு பொய் சொல்லி தூர் வாரவெச்சு கிணறு தோண்டும் மொக்கை ஜோக்

            4. தமிழ்த்தாய் மகன் ,நகைச்சுவைப்புதல்வன் வைகைப்புயல் வடிவேலு # டைட்டில் பில்டப் 

            5. மீனாட்சி தீக்சித் . மிக சாதாரணமான புருவ அழகு கிளுகிளுப்பு ஊட்டத்தவறிய சின்ன உதடுகள்,செழுமையான மத்தியப்பிரதேசம்

            6. கிருஷ்ண தேவராயர் க்கு 36 சம்சாரமாம். அவனவன் ஒண்ணைக்கட்டிட்டே செலவு பண்ணி மாளலை

            7. நாம் ஸ்கூலில் படிச்ச அதே தெனாலிராமன் கதை காமெடிதான்.ஆனா தியேட்டர் ஆடியன்ஸ் செம ரெஸ்பான்ஸ்

            8. இம்சை அரசன் திரைக்கதை நோட் ,தெனாலிராமன் நீதிக்கதைகள் புக் 2 லிருந்தும் இப்டி ஒரு சீன் அப்டி ஒரு சீன்

            9. பானைக்குள் யானை காட்சி யில் வடிவேல் நடிப்பு டாப் கிளாஸ்

            10. கிருஷ்ணதேவராயர் காலத்துல இளவரசி யு நெக் லோ கட் ஜாக்கெட் போட்டிருக்கு.யாரும் லாஜிக் மிஸ்டேக்கை பாக்கலை.ஜாக்கெட்டைத்தான்

            11. மன்னர் கிருஷ்ணதேவராயர் ,அமைச்சர் தெனாலிராமன் இரு வடிவேலுவையும் புத்திசாலிகளாக வடிவமைத்தது திரைக்கதையில் முதல் சறுக்கல்



            சி பி கமெண்ட் -  தெனாலிராமன் - குழந்தைகளுக்கான லோ பட்ஜெட் கோச்சடையான் -திரைக்கதை , சம்பவங்களில் புதுசரக்கு இல்லை -தெனாலிராமன் - இந்திரலோகத்தில் நா அழகப்பன் க்கு ஒரு படி மேலே , இம்சை அரசன் க்கு பல படி கீழே- முதலுக்கு மோசம் வராத வசூல் அள்ளிடும்
            விகடன் மார்க் -40 , ரேட்டிங்க்-2.25 / 5


            எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =40





            குமுதம் ரேட்டிங்க் = ok


             ரேட்டிங்=  2.25  / 5 


            ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

            சிபி எஸ் சின் வீடியோ விமர்சனம் - தெனாலிராமன்  



            Tuesday, April 01, 2014

            விஜயகாந்தைவிட வடிவேல் எவ்வளவோ மேல்..: அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் பேட்டி

            பால்ராஜ், மற்றொரு சகோதரர் நாகராஜ், அவரது மனைவி தேவிகா மற்றும் விஜயகாந்த். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.A

            பால்ராஜ், மற்றொரு சகோதரர் நாகராஜ், அவரது மனைவி தேவிகா மற்றும் விஜயகாந்த். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

            விஜயகாந்தைவிட வடிவேல் எவ்வளவோ மேல் என அதிமுவில் இணைந்த விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் (56) குற்றம் சாட்டியுள்ளார்.
            தேமுதிக தலைவர் விஜய காந்தின் சகோதரர் பால்ராஜ் வெள்ளிக்கிழமை மதுரையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலை யில் அதிமுகவில் இணைந்தார். அவரை சந்திப்பதற்காக மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெரு வில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். 4-க்கு 6 அடி உள்ள சமையலறை, கால்களை நீட்டி படுக்க முடியாத அளவுக்கு வெறும் 48 சதுர அடி மட்டுமே கொண்ட மற்றொரு அறை. இதுதான் விஜயகாந்தின் சகோதரர் வீடு என்பதைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. உடைந்த நாற்காலியின் மீது வைக்கப்பட்டிருந்த அரசின் இலவச டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினார்.



            ‘‘எங்க அப்பா கே.என்.அழகர் சாமிக்கு ஆண்டாள், ருக்மணி என்று இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு விஜயலெட்சுமி, நாகராஜன், விஜயராஜ் (தற்போது விஜயகாந்த்), திருமலாதேவின்னு 4 பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு செல்வராஜ், பால்ராஜ் (நான்), சித்ராதேவி, ராம்ராஜ், மீனாகுமாரி, சாந்தி, பிருத்விராஜுன்னு 7 பிள்ளைகள். ஆண்டாள் அம்மா இறந்த பிறகு ருக்மணியம்மாதான் எல்லோரை யும் பாத்துக்கிட்டாங்க. அப்பா ரைஸ்மில்ல கவனிச்சிக்கிட்டாரு. விஜயகாந்தும் அங்கேதான் இருப்பாரு..

            விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் தனது வீட்டில் மனைவி வெங்கடலெட்சுமியுடன்..

            ஒருசில நேரத்துல வீட்டுல சமைக்க நேரமாயிடும். அதுக்கப் பறம் அந்த சாப்பாட்ட எடுத்துக்கிட்டு நான் வேகமா மில்லுக்கு ஓடிப்போய் கொடுப்பேன். அப் பிடியிருந்தும் ஏன்டா லேட்டா வந்தேன்னு, அங்க கெடக்கற கயித்த எடுத்து விஜயகாந்த் என்னை அடி அடின்னு அடிப்பாரு.. இதனால அவருக்குப் பயந்து 5 வயசுல இருந்தே இன்னொரு அண்ணன் நாகராஜ் கூடத்தான் நான் எப்பவுமே இருப்பேன். அவருதான் என்னை கடைசி வரை வளர்த்தாரு. விஜயகாந்த் என்கூட சரியாகக்கூட பேச மாட்டாரு.. அப்புறம் அவர் சினிமாவுல நடிக்க சென்னை போயிட்டாரு. 

            பணத்துக்கு கஷ்டப்பட்டதால எங்க அப்பா மாசாமாசம் 1000 ரூபாயை என்கிட்ட கொடுத்து அனுப்புவாரு. நானும் ரயில்ல போய் கொடுத்துட்டு உடனே திரும்பிடுவேன். அப்பா இறந்த பின்னாடி என்ன மில்லவிட்டே தொறத்திட்டாங்க..’’ என பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார்.


            பின்னர் அவர் மேலும் கூறியது: ‘‘எலக்ட்ரிஷியன் வேலை தெரிஞ்சதால ஊர் ஊரா போய் பிழைப்பு நடத்த ஆரம்பிச்சேன். அப்பதான் எங்க உறவுக்காரப் பெண் வெங்கடலெட்சுமியை பதிவுத் திருமணம் செஞ்சுகிட்டேன். அவருக்கும் யாரும் இல்லை. எனக்கும் உதவி செய்ய ஒருத் தரும் முன்வரல. ஒரு கட்டத்துல குடும்பத்துல ரொம்ப கஷ்டம். அதனால எனக்கு பங்கு பிரிச்சு கொடுத்த வீட்டோட கீழ் பகுதியை மாசம் ரூ.4,000-க்கு வாடகை விட்டுட்டு மேலே இருக்கிற அறையில் குருவிக்கூடு போல குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கோம். மகனை பாலி டெக்னிக் படிக்க வைக் கலாம்னு ஆசைப்பட்டு, அதுக்கு விஜயகாந்திடம் உதவி கேட்க நினைச்சேன். ஆனா வீடு, ஆபீஸ்ன்னு எங்கயும் அவரைப் பார்த்து பேச முடியல. போன் பண்ணினாலும் கட் பண்ணிடு வாங்க.. அவரு.. நல்லவரோ.. கெட்டவரோ.. ஆனா பிரேமலதா வந்து ஆளையே மாத்திடுச்சு.. இப்ப கூட தனது மனைவி, மைத்துனன் பேச்சை கேட்டுக்கிட்டுதான் இப்பிடி யெல்லாம் பண்றாரு..



            எனக்கு மட்டுமில்ல.. குடும்பத்துல யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும் செய்யல.. ராமராஜ் மகன் கௌதமன அவரோட ஆண்டாள் அழகர் கல்லூரியில் காசு வாங்கிட்டுதான் சேர்த்தாங்க.. மீனாகுமாரி மகனைப் படிக்க வைக்க உதவி கேட்டப்பவும் முடியாதுன்னுட்டாங்க. இப்பிடி யாருக்குமே அவரு எதையும் செய்யல.. இப்பிடி அண்ணன், தம்பிக்கே எதுவும் செய்யாதவரு நாட்டுக்கு என்னது செய்யப் போறாரு? மைத்துனனுக்காகவும், சகலைக்காகவும்தான் அவர் கட்சியே நடத்திக்கிட்டு இருக்காரு. அவரது சகலை (பிரேமலதாவின் சகோதரியின் கணவர்) ஆண்டாள் அழகர் கல்லூரி அறக்கட்டளை, புதுச்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரி ஆகியவற்றின் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார். இதில் எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் இடமில்லை.


            ஆனா விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்றதா பேப்பர்ல வருது.. அது உண்மைன்னா அவரோட சொந்த தம்பி, தங்கைகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யலாமே? நாங்க அவருகிட்ட உதவி கேட்டு ஓஞ்சு போயிட்டோம். சாகப்போற காலத்துல இனி அவரே வந்து உதவி பண்ண நினைச்சாலும் அது எங்களுக்கு வேண்டாம். கண்ணதாசன் எப்பவோ எழுதுன பாட்டு.. ஆனா இன்னைக்கும் அதுதான் உண்மையா இருக்கு.. அதான் சார்.. ‘அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகத்துலே..’. இதுதான் இப்போ நான் அடிக்கடி கேட்குற பாட்டு’’ என தன் வேதனையை பால்ராஜ் கொட்டித் தீர்த்தார்.



            அதிமுகவில் இணைந்த கதை



            பால்ராஜ் குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுவதைக் கண்ட அவரது நீண்டகால நண்பரும், அதிமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளருமான வைகை பாண்டி என்பவர் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மூலமாக அவரை அதிமுக வில் இணைத்துள்ளார். முதல் வரை சந்திக்கும்போது குடும்ப கஷ்டத்தை தெரிவிக்க பால்ராஜும், அவரது மனைவி வெங்கடலெட்சுமியும் முடிவு செய்திருந்தனர். ஆனால் மேடையில் அவ்வாறு செய்ய முடியாது என செல்லூர் கே.ராஜு மறுத்துவிட்டார். மேலும் அதிமுகவிலிருந்தும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. இதுபற்றி பால்ராஜ் கூறும்போது, ‘என் மகனோட வாழ்க்கைக்காக அம்மா (முதல்வர்) ஏதாவது பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கிறேன். அது மட்டும் செஞ்சு கொடுத்தா காலத்துக்கும் அம்மாவுக்கு நன்றியோட இருப்பேன்’ என்றார் கண்ணீருடன்.


            ‘வடிவேலுதான் மனுஷன்’


            ‘‘இதே மதுரையில பொறந்து வளர்ந்த வடிவேல், விஜயகாந்தை விட எவ்வளவோ மேல்... ஏழையா இருந்த அவரு சினிமாவுக்கு போயி சம்பாதிச்ச பிறகு தன்னோட குடும்பத்தை நல்லா கவனிச்சுக்கிறாரு.. அதோட விடாம.. கஷ்டத்துல இருக்க தன்னோட சொந்தக்காரங்க எல்லாத்தையும் தேடித்தேடி போயி பலசரக்கு கடை, பெட்டிக்கடைன்னு ஏதாவது ஒண்ண வச்சுக் கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டியிருக்காரு.. அவர்தான் மனுஷன்...’’ என்றார் பால்ராஜ்.


            • Dhans kovai  from Tirupur
              ஊருக்கெல்லாம் உதவி செய்வதை போல் நடித்து கொண்டிருக்கிறார் . நல்ல நடிகன் சொந்த அண்ணனின் வறுமையை போக்க முடியாதவர் நாளை முதல்வர் ஆஹா வந்து எப்படி தமிழ் நாட்டு மக்களின் கஷ்டங்களை போக்குவர்?எல்லாம் வெளியே வரும் நேரம். பொது வாழ்க்கை அவ்வளவு எளிதான விசயமில்லை. வருவதற்கு முன்னால் நாம் பல முறை யோசிக்க வேண்டும். நான் அதற்கு தகுதியானவன்தானா? தனி மனித ஒழுக்கம் என்னிடம் உள்ளதா? சினிமாவை தாண்டி நான் சாதித்தது என்ன? நான் மற்றவர்களைப்பற்றி கூறும் தவறுகள் நம்மிடம் உள்ளதா? நம்முடம் பழகிய பல பேர்கள் நம்மைவிட திறமைசாலிகள், ஏன் நாம் அவர்களை முன்னிருத்துவதில்லை ? நமக்கு தெரிந்தே பலர் நம்மை விட்டு பிரிந்து போக என்ன காரணம்? நமக்கு நாமே மார்க் போட்டு கொள்வதால்தான் ரஜினிகாந்த் போன்றவர்கள் நல்ல முடிவுடன் உள்ளார்கள். பாக்யராஜ் , TR போன்றவர்கள் திண்டாடி தெருவில் ஜால்ரா சத்தத்தில் காணாமல் போய்விட்டார்கள்.
              about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
              •  syedali  from Abu Dhabi
                சொந்த அண்ணனின் வறுமையை போக்க முடியாதவர் நாளை முதல்வர் ஆஹா வந்து எப்படி தமிழ் நாட்டு மக்களின் கஷ்டங்களை போக்குவர்? இப்பவே கண்ண கட்டுதே
                about 20 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
                Prabakaran  Up Voted
                •  s.c.jeganathaan c  from Kariapatti
                  வீட்டுக்குவீடு வாசப்படி..,இந்த மாதிரி nondikittu இருந்தால் வீசம் தான் மிஞ்சும்.தேவய நமக்கு.
                  a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
                  •  ssasindia  
                    உறவுகளுக்கு உதவினால் - சொந்தக்காரர்களுக்கு சொத்தா வாங்கி குவிக்கிறான் என்றும், உதவி செய்யலேனா - பணம் வந்ததும் சொந்தங்களை மறந்துராணுங்க என்றும் உலகம் சொல்லிக்கொண்டுதான் இருக்கும். யாரையம் திருப்தி படுத்த முடியாது....!
                    a day ago ·   (9) ·   (2) ·  reply (0)
                    LINGESH  Up Voted
                    •  MANUSHI  from Bangalore
                      இதுதான் உலகம்.
                      a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
                      •  shivakumar Shivakumar  from Coimbatore
                        இவர்களை கஷ்டத்தில் விட்டது வி காந்த் தவறு ,,,அதை வைத்து அரசியல் பண்ணுவது கேவலம் ,,,பணம் என்னென்ன பண்ணுது ???
                        a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
                        •  mani  from Palayankottai
                          நீங்க இன்னும் மாறவே இல்லையா . தமிழ் நட்டு மக்கள் செம்மறி ஆட்டு kuuட்டம்னு ஒரு தலைவர் சொன்னது மறந்து போச்சோ எலக்ஷன் வந்த அப்படித்தானே அடித்து கொள்ளுவார்கள் அப்புறம் மாமன் மச்சான்னு கூடிக்குvaaங்கல்
                          2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                          D.Thirumalai kumar  Up Voted
                          •  saravanakumar saravanakumar  from Chennai
                            ஒருவரின் ஏழ்மையை, கையாலாகாத தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் பெறுவதுதான் அரசியல் என்றால்.....அத்தகைய அரசியலை நாம் புறக்கணிக்க வேண்டும். விஜயகாந்த் குடும்பத்துக் கதைகளை நீட்டி முழக்கும் இந்த செய்தியாளர் முதல்வரின் சகோதரரின் குடும்பத்தாரை சந்தித்து பேட்டி எடுத்துப் போடுவாரா?
                            2 days ago ·   (31) ·   (2) ·  reply (1)
                            •  மாறனேர்நம்பி  from New Delhi
                              அவருக்கு 10சகோதர்ராம்...எல்லாரையும் அவர் கை தூக்கி விட வேண்டுமாம்..மடமை...
                              a day ago ·   (1) ·   (4) ·  reply (0)
                              Raj  Down Voted
                            •  Gunasekaran N  from Chennai
                              விஜய காந்த மற்றும் வடிவேலுவை பற்றி தெரிந்து கொள்ள சில தகவல்கள் தெரிவிக்க பட்டுள்ளது. வேடிக்கையான உலகம் !
                              2 days ago ·   (2) ·   (0) ·  reply (0)
                              •  sivamani  
                                அப்போ கூடிய சீக்கிரம் வடிவேலுவை கொண்டு வருவாங்களோ??எப்பவும் மாற்றான் தாய் தான் கொடுமைப் படுத்துவது வழக்கம். இங்கே திரைக் கதையே மாறுதே. விஜயகாந்த் எப்போது விஜய்ராஜாக மாறுவார்
                                2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
                                Raj  Up Voted
                                •  kabir  
                                  எல்லாம் வெளியே வரும் நேரம். பொது வாழ்க்கை அவ்வளவு எளிதான விசயமில்லை. வருவதற்கு முன்னால் நாம் பல முறை யோசிக்க வேண்டும். நான் அதற்கு தகுதியானவன்தானா? தனி மனித ஒழுக்கம் என்னிடம் உள்ளதா? சினிமாவை தாண்டி நான் சாதித்தது என்ன? நான் மற்றவர்களைப்பற்றி கூறும் தவறுகள் நம்மிடம் உள்ளதா? நம்முடம் பழகிய பல பேர்கள் நம்மைவிட திறமைசாலிகள், ஏன் நாம் அவர்களை முன்னிருத்துவதில்லை ? நமக்கு தெரிந்தே பலர் நம்மை விட்டு பிரிந்து போக என்ன காரணம்? நமக்கு நாமே மார்க் போட்டு கொள்வதால்தான் ரஜினிகாந்த் போன்றவர்கள் நல்ல முடிவுடன் உள்ளார்கள். பாக்யராஜ் , TR போன்றவர்கள் திண்டாடி தெருவில் ஜால்ரா சத்தத்தில் காணாமல் போய்விட்டார்கள். நம் நடிகர்களுக்கு எல்லாமே விளையாட்டு,வியாபாரம்,சினிமா.
                                  2 days ago ·   (7) ·   (0) ·  reply (1)
                                  •  Raj  from Mountain View
                                    You and me like it or not vijakanth organized his party very well from the root level. May be it was done by Banrooty Ramachandren or by somebody who know well how to do. His wife toois a great strength to coverup his weakness. In a way he is sure not fit to be a people's leader but huge fortune to have a decent vote share! ADMK unwittingly helped him to be a opposite leader, Jayalalith made a huge tactical error.
                                    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                  •  முஹம்மது Rafi  
                                    சின்ன வயசுல எங்க வகுப்பு ஆசிரியர் அடிக்கடி சொல்லுவாரு “சினிமா வாழ்கையும் நெஜ வாழ்க்கையும் ஒன்னு இல்லடா!!” ன்னு. ”சின்ன கவுண்டர்” படத்தை பார்த்தும், “அந்த வானத்தப்போல..” பாட்டை கேட்டும் அருமை விஜயகாந்தை நினைத்து நெகிழ்ந்ததுண்டு... ஆனால், சமீபத்தில் அவர் அரசியலுக்கு வந்த பிறகு, அவரின் உண்மை முகம் அடிக்கடி வெளிக்கொணரப்படும்போது, என் வகுப்பாசிரியரின் வார்த்தைகள் 20 வருடங்களுக்கு பிறகும் என்னை ஆழமாக பாதிப்பதுண்டு. அவர் சினிமாவில் “ந டி த் து” இறுந்திறுக்கிறார் என்றார் என்ற சாதாரன உண்மைப் புரிந்தது. எல்லோரும் இப்படி இல்லை என்றாலும், சினிமாவில், அசலை காட்டிலும் நடிப்புக்கு மனதை பறித்து நாம் முட்டால்கள் ஆக்கப்படுவது வேதனை.
                                    2 days ago ·   (10) ·   (2) ·  reply (0)
                                    shivakumar Shivakumar · selvam  Up Voted
                                    •  maa.periasamy  from Chennai
                                      பெருந்தலைவர் காமராஜர் கூட தன் சொந்தக் குடும்பத்திற்க்கென்று எதையும் செய்ததில்லை.
                                      2 days ago ·   (0) ·   (17) ·  reply (3)
                                      shivakumar Shivakumar  Down Voted
                                    •  m.sankaralingam  from Laguna Niguel
                                      இருட்டு உலகத்தின் பகட்டுகள் வெளிப்படுகின்றன.பாவம் இந்த ஏழைச்சகோதரர்.
                                      2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                      •  chinnamanidhanabal  
                                        சொந்த பந்தம் என்றாலும் எதிர்பார்க்கும் சலுகை கிடைக்காவிட்டால், தேர்தல் நேரத்தில் எதிரியின் கூடாரத்திற்கு சென்று புழுதியை வாரி இறைக்கவே செய்வர்.ஊடகங்கள்தான் அரசியல் ஆதாயத்திற்காக ஒன்றுமில்லா இதுபோன்ற விஷயத்தை ஊதி பெரிதாக்குகின்றன.
                                        2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                        •  kannan  from Abu Dhabi
                                          நல்லா வசதியாக ஒரு மனிதன் இருக்கும்போது எப்படி சொந்த பந்தங்களை மறக்கமுடிகிறது?
                                          2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                          •  சரவணன் சுதந்திரன்  
                                            இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விஜய்காந்த் ஒரு மனசாட்சி இல்லாத மனிதர் என்பது வெளிச்சமாகிறது! ஊருக்கு உதவுவது ஒரு விளம்பரம்..நல்லது செய்யணும்னு மனசார நெனக்கறவங்க விளம்பரம் செய்ய விரும்பமாட்டாக!
                                            2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
                                            Raj  Up Voted
                                            •  தமிழன்டா  from Écouen
                                              எனங்கே அண்ணே!! ஒங்க பொழப்பு இவ்ளோ நாறி போச்சு! உங்கள் குறி பாக்க போற அம்பு வேறு எங்கேயும் இல்லை!!
                                              2 days ago ·   (4) ·   (1) ·  reply (0)
                                              •  raajaa  
                                                ரெண்டு பேருமே காமெடியில் கலக்குபவர்கள்தானே!
                                                2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                                •  Gershom நற்செய்தி  from Chennai
                                                  வடிவேலு என்கிற நல்ல கலைஞரை ஏன் இப்போது திரையுலகு ஒதுக்கிவைக்கிறது? அரசியல் மாற்றுக் கருத்தென்றால், காங்கிரசு காலத்தில் எம்ஜி ஆர் படம் ஓடவில்லையா? எம்ஜிஆர் ஆட்சியில் சிவாஜி படம் ஓடவில்லையா? இப்போது வடிவேலுவை ஒதுக்கிவைக்கும் திரையுலகிற்கு, எண்ணும் திறன் இல்லையா? எதிர்கொள்ளும் துணிவு இல்லையா? யாருக்கு அஞ்சுகிறது இன்றைய திரையுலகு?
                                                  2 days ago ·   (20) ·   (0) ·  reply (1)
                                                  Velraj · shivakumar Shivakumar  Up Voted
                                                  •  raj  from Kuwait
                                                    மாற்று கருத்து கூற அனுமதி இல்லை, முன்பு ரஜினியை எதிர்த்து பிரச்சாரம் செய்ததற்காக மனோரமாவுக்கு பல காலம் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை, பின் ரஜினியே மன்னித்ததாக கூறியதால் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன, ஆனால் இந்த சினிமா உலகம் வேசம் போடுவதில் கில்லாடிகள்
                                                    2 days ago ·   (2) ·   (0) ·  reply (0)
                                                  •  Thirumalai  from Chennai
                                                    வருத்தமும் வேதனையும் தரும் செய்தி.
                                                    2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
                                                    Gunasekaran N  Up Voted
                                                    •  rabi  
                                                      ஊருக்கெல்லாம் உதவி செய்வதை போல் நடித்து கொண்டிருக்கிறார் . நல்ல நடிகன்
                                                      2 days ago ·   (11) ·   (0) ·  reply (0)
                                                      •  raja  
                                                        கூடப் பிறந்த ரத்த சம்மந்துகே உதவி செய்யாதவனர் ,மனதுஇல்லதவர் சமுகத்துக்கு தமிழக மக்களுக்கு நிச்சய மாக சையமாட்டார் கருப்பு MGR என்ற பெயரை கொடுத்தவர்கள் வருதபடவேண்டும்
                                                        2 days ago ·   (8) ·   (2) ·  reply (0)
                                                        thangamani · Chandras  Up Voted
                                                        •  Ratheesh  
                                                          வணக்கம் அன்புள்ள தமிழ் நாடு மக்களூக்கு நல்ல சந்திங்க இவிங்க யாரும் தமிழ் நாடு காக ஒனும் செயபோறது இல்ல இன்னும் கொஞ்சம் வருசத்துல இந்தியால மோசமான ஸ்டேட் இன்னு பேரு வாங்கிடும் இப்படிக்கு அயல் நாட்டில் வசிக்கும் தமிழன்

                                                        THANX - THE HINDU