Showing posts with label கேள்வி பதில்கள். Show all posts
Showing posts with label கேள்வி பதில்கள். Show all posts

Sunday, August 14, 2011

புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாத நிலையில்..... ( ஆன்மீகம் )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH25aYiXPAGLTR8iuM8cXkJrI_Hu-mqK-yz9m8dWggo6nT_AHqPk53BK7P1wg_7uR6NMVkQdtxSe_FPFqYAmqNvcwxI4lEFCrYX3SOgm7KflN48McmsDgBGUWjZvhSYgFd-KiBbikaWWiY/s1600/thenimalai7.jpg
தேனிமலை தீர்த்தம்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கோபுர கலசங்களுக்கு அதீத சக்தி உண்டா?

1. ஆலயங்களின் கோபுர கலசங்களில் இரீடியம் எனும் மதிப்பு வாய்ந்த உலோகம் இருப்பதாகக் கருதி, சில இடங்களில் கோபுர கலசங்கள் களவாடப்படுவதாகச் செய்தி படித்து அதிர்ந்தேன்! உண்மையிலேயே கோபுர கலசங்களுக்கு அதீத சக்தி உண்டா? கோபுர கலசங்கள் குறித்து ஆகமங்கள் என்ன சொல்கின்றன? 



ஸனாதனத்தின் உட்பிரிவான ஸ்மிருதி நூல்கள் 'பிரதிஷ்டா மயூகம்’ போன்ற நூல்களை அறிமுகம் செய்தன. அது வழி... வாஸ்து சாஸ்திரத்தின் துணையுடன் இறையுருவத்தை இருத்தி வழிபட, ஆலயம் அமைக்கும் நடைமுறையைக்  கையாண்டு வந்தது. பிற்காலத்தில் சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் சுதந்திரமாகச் செயல்பட எண்ணியபோது, சைவ- வைணவ ஆகமங்கள் தோன்றி, ஆலய நிர்மாணம் பற்றிய பரிந்துரைகளை அளித்து உதவின.

தேசத்துக்கு தேசம் ஆலயம் அமைக்கும் விதத்தில் மாறுபாடு இருக்கும். கும்பத்தில், மந்திரம் வாயிலாக இறையுருவைக் குடியிருத்தி, பணிவிடைகளால் மகிழ்வித்து, அந்தக் கும்ப ஜலத்தை கோபுரக் கலசத்தில் சேர்ப்பார்கள். இதனால், இறையுருவின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்துக்கு வந்துவிடும். இதன் அடிப்படையிலேயே, 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிற வழக்கு எழுந்தது. கூரான உருவ அமைப்பு, இடி- மின்னலால் பாதிக்கப்படாமல் இருக்கும். இரீடியம்... அதற்கு சக்தி அதிகம் என்று தாங்கள் குறிப்பிடுவதெல்லாம் நம்பிக்கையில் விளைந்தது. அதைவிடப் பெருமை வாய்ந்தது, கோபுரக் கலசத்தில் தென்படும் இறை சாந்நித்தியமே!

கோயில் இறைவனின் உடல்; கோபுரக் கலசம் அவருடைய சிரசு; கருவறை அவன் உறைந்திருக்கும் இடம் (தேஹோ தேவாலய:...). நம்முள் ஜீவாத்மா இருப்பது போல், கோயிலுக் குள் பரமாத்மா இருக்கிறார். கும்பாபிஷேக வேளையில், மந்திர ஒலியுடன் இணைந்த கோபுரக் கலசங்கள், ஆகாயத்தில் அவ்வப்போது நிகழும் தட்பவெப்பத்தின் தாக்கத்தாலும், அன்றாடம் கோயிலில் ஒலிக்கும் வேத மந்திரங்களின் சேர்க்கையாலும், சிந்தனைக்கு எட்டாத பெருமையைப் பெற்று விளங்கும்.

விஞ்ஞானம் கண்டுபிடித்தது கை மண்ணளவு; கண்டுபிடிக்காதது உலகளவு. விஞ்ஞானத் தகவலை வைத்துப் பெருமை கொள்வதைவிட, மெய்ஞ்ஞானத்துக்குப் பயன்படும் என்பதை அறிவது சிறப்பு. 'இரீடியம்’ இருப்பதால் கோபுரக் கலசங்கள் களவாடப் படுவதாகச் சொல்கிறீர்கள். களவாடப்படும் விஞ்ஞானம் நமக்கெதற்கு?!

எவராலும் களவாட முடியாத ஆன்மிகம், என்றென்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞான விளக்கத் தோடு சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக் காமல்... கோபுரக் கலசம் முதலான வற்றில் இணைந்திருக்கும் ஆன்மிகப் பெருமைகளை உணரும் வகையில் நம் சிந்தனைகள் தொடர வேண்டும்.

மட்டையோடு இணைந்த தேங்காய் பயனுள்ளது. மட்டை, கயிறு திரிக்கப் பயன்படும்; கொட்டாங்கச்சி- அகப்பை செய்வதற்குப் பயன்படும்; தேங்காய்- சமையலுக்கு உதவும்; எண்ணெயும் கிடைக்கும்.

அதே நேரம்... தென்னையின் இளநீர் பருகவும் பயன்படும்; இறை அபிஷேகத்துக்கும் உதவும்; அதன் மூலம் ஆன்மிகச் சிந்தனைக்கு நம்மைத் திருப்பிவிடும். 'இரீடியம்’ உபயோகப் பொருள். அதைவிட உயர்ந்த தத்துவம், (திருட முடியாத) கோபுரக் கலசத்தில் அடங்கியிருக்கிறது. களவாடப்படும் பொருட்கள், காலத்தால் அழிவைச் சந்திக்கும். அழிவற்ற பரம்பொருளின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்தில் உறைந்திருப்பதை உணர்ந்து, அதை வழிபடுவோம்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2011/feb/rameswaram.jpg
ராமேஸ்வரம்


2. கிரகஸ்தனான நான், தியானத்தின்போது தூய்மையான துணியை தரையில் விரித்து, அதன் மீது அமர்ந்து தியானம் செய்கிறேன். இனி, தர்ப்பைப் பாயின் மீது அமர்ந்து தியானம் செய்ய எண்ணியுள்ளேன். இது சரியா? 



தர்ப்பாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது சிறப்பு. தியானத்தைச் சிறப்பிக்க வைப்பதில் ஆசனத்தின் பங்கும் உண்டு. பரிசுத்தமான பொருள் தர்ப்பை. தர்ப்பாசனம் அசையாமலும் சுகமாகவும் இருக்கும்; அதைப் பயன்படுத்துவது சிறப்பு என்று பதஞ்சலி கூறுவார் (ஸ்திர சுகமாஸனம்).

அதன் மீது அமர்ந்து தியானிப்பதால், புவியின் ஆகர்ஷணம் நம்மைப் பாதிக்காது. தியானத்தின் பலனை எட்டுவதற்கு அது பயன்படும். வேதம் சொல்லும் சடங்குகளில்... தர்ப்பையில் அமர்ந்து, தர்ப்பையைக் கையில் ஏந்திச் செயல்படுவதுண்டு (தர்பேஷ§ஆஸுன: தர்பான் தாரயமாண:). தர்ப்பையின் பெருமை, தூய்மையான துணிக்கு இருக்காது.

புவி ஆகர்ஷணத்தைத் தடுக்கும் தகுதி அதற்கு இல்லை. வேறு வழி இல்லாத நிலையில், துணியைப் பயன்படுத்தலாமே தவிர, நிரந்தரமாக ஏற்கக்கூடாது. ஆமை வடிவில் இருக்கும் மரத்தாலான பலகையைப் பயன்படுத்துவதும் உண்டு. அதுவும் புவிஆகர்ஷணத்தைத் தடுப்பதுடன், ஆசன இலக்கணத்தோடு விளங்கும் (ஆசன மஹா மந்திரஸ்ய... கூர்மோதேவதா). துணிக்கு இலக்கணமும் இல்லை; ஆகர்ஷணத்தைத் தடுக்கும் திறனும் இல்லை.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitOWWVX7D5BBOs03rdcdVMPtfkv9o0KUaRhdTFR1vuvCiboUjmaixI0mftEjsYy-KT036PMWODqHWerLBZTolwx62UldxCL4Pq1OrfSvNfbpjusAtfYHBC6deb5VfO3sPfxdobjROuxZQ/s1600/theerththam.jpg

3. உடல்நலக் குறைபாடு காரணமாக புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாத நிலையில், கடவுள் பெயரைச் சொல்லித் தீர்த்தத்தை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால், தீர்த்தமாடியதற்கான பூரண பலன் கிடைக்குமா? 



குளித்தால் உயிர் பிரிந்துவிடும் அல்லது நீரின் குளிர்ச்சியால் நோய் முற்றி, பல அலுவல்களை இழக்க நேரிடும் என்று தெளிவாகத் தெரிந்தால்... நீரை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால் போதும்; பலன் உண்டு.

வெந்நீரில் குளித்தாலே சளி ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாவோரும் குற்றாலம் அருவியில் குளிப்பதுண்டு. உடல் நலமில்லாதவன், தந்தைக்குக் கொள்ளி வைத்த கையோடு குளிப்பதுண்டு. மாறா வியாதியில் மருந்து எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் அத்தனை பேரும் தலை முழுகிக் குளிக்காமலா இருப்பார்கள்?! அவசர- ஆபத்து வேளைகளில் குளிப்பதற்குப் பதிலாகத் தெளித்துக் கொள்ளலாம் என்ற விதிவிலக்கை, குளிக்காமல் தவிர்ப்பதற்குப் பயன் படுத்தக்கூடாது. விதி வேறு; விதிவிலக்கு வேறு.

விதிவிலக்கைத் தேடிப்பிடித்துச் சட்டமாக மாற்ற முற்படக்கூடாது. உடல் நலம் இருக்கும்போது தீர்த்தக்கரைக்குப் போக வேண்டும். குளிப்பதற்காகத்தான் தீர்த்தங்கரை செல்கிறோம். குளிக்க முடியாத நிலையில் அங்கு போவது தவறு. உடல்நலக் குறைபாடு, தீர்த்தங் கரை ஸ்னானத்துக்கு உகந்ததல்ல. உடல் நலனோடு இருக்கும்போது, அங்கு சென்று நீராடுவது சிறப்பு. அன்றாடம் நீராடிப் பழக்கப் பட்டால், உடல் ஆரோக்கியம் சிறக்கும்; தீர்த்தங் கரையைப் பார்த்ததும் நீராடத் தோன்றும்; விருப்பமும் நிறைவேறும்.


http://karurtimes.com/wp-content/uploads/2011/08/river-photo.jpg


4.திருமணமானதும் கிரகப் பிரவேசம் செய்யும் மணப்பெண், வீட்டு வாசற்படியில் வைக்கப் பட்டிருக்கும் அரிசி அல்லது நெல் நிரம்பிய பாத்திரத்தைக் காலால் தட்டிவிட்டு உள்ளே நுழைவாள். இந்தச் சடங்குக்கான தாத்பரியம் என்ன? 



மெழுகிச் சுத்தம் செய்து, கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட வீட்டில், மணப்பெண் அடியெடுத்து வைக்குமுன் பீஜ தான்யத்தை, அதாவது நெல்லை வாரி இறைப்பார்கள். அதன்பிறகு, அவள் உள்ளே நுழைவாள்.

தான்ய லட்சுமியின் வருகைக்குப் பிறகு, கிரஹலட்சுமி விஜயம் செய்வாள். அறுசுவை உணவுடன் சேர்ந்த ஆனந்த வாழ்க்கைக்கு ஆதாரம் தானியம்; அதாவது நெல். அது அந்த வீட்டில் என்றென்றும் நிரம்பி வழியவேண்டும். இந்த நடைமுறை இடத்துக்கு இடம் மாறுபட்டு இருக்கும். வட நாட்டில், கிரஹலட்சுமியே தான்ய லட்சுமியை வாரியிறைக்கும் விதமாகத் தனது காலால் தானியத்தைக் கொட்டிய பிறகு நுழைவாள். இது, நம் பகுதிகளில் தென்படாததால், வியப்பாகத் தோன்றுகிறது!


- பதில்கள் தொடரும்... 

thanx - vikatan

Sunday, May 22, 2011

கோயில்களில் மண்டல பூஜை எதற்காக? ஆன்மீக கேள்வி-பதில்கள் -சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

http://2.bp.blogspot.com/_f0nRbfd5SW4/TOvIBxexHTI/AAAAAAAAALg/wW6VEqjYfzQ/s1600/IMG_4643.JPG 

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்


1. கோயில்களில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு, தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடத்துகிறார்களே... இதற்கான தாத்பரியம் என்ன?


- கார்த்திக்குமார், இடையபாளையம்

பொங்கல் விழா முடிந்த பிறகு கனுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் விழா நீளும். திருமணத்திலும் பூணூல் கல்யாணத்திலும் முகூர்த்தம் முடிந்த பிறகு நான்கு நாட்கள் விழா இருக்கும். திருமணம் முடிந்த பிறகும் வரவேற்பு நிகழ்வு என்ற பெயரில் விழா தொடரும். 

தேன்நிலவு என்பதும் அதில் இணையும். ஆலயங்களில் உற்ஸவ நாள் முடிந்த பிறகும் விடையாற்றி உற்ஸவம் என்ற பெயரில் அது தொடரும். காசி - ராமேஸ்வரம் தீர்த்தாடனம் முடிந்தபிறகு, வீட்டில் காலபைரவ ப்ரீதி, கங்கை பூஜை, ஸமாராதனை என்று விழா தொடரும்.
மருந்து சாத்தி இறையுருவத்தை நிலைநிறுத்தி கும்பாபிஷேகம் முடிந்த பிறகும் 48 நாட்கள் பூஜை தொடரும். இறைவன் சாந்நித்யம் நிலைத்திருக்க, கும்பாபிஷேகத்தின் அங்கமாகவே அது செயல்படுகிறது. தவிர, நித்திய பூஜைகளில் பயன்படுத்தப்படும் அபிஷேகப் பொருட்களின் தாக்கத்தால் மருந்து கலையாமல் நிலைத்திருக்க, குறிப்பிட்ட அபிஷேகப் பொருள்களோடு மருந்தை ஸ்திரப்படுத்தவும் பயன்படுகிறது. 
 
48 நாட்களில் அதன் ஸ்திரத்தன்மைக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.பிணியில் இருந்து விடுபடுவதற்கு கடும் பத்தியத்துடன் சிகிச்சை நடைபெறும். அதன்பிறகு 'மறு பத்தியம்’ என்ற பெயரில் மருந்தில்லாமல் பத்தியம் தொடரும். இது, சிகிச்சை முடிந்த பிறகு 40 நாட்கள் தொடரும். வேலையில் அமர்ந்தவன், பணியில் இணைந்த அன்றே நிரந்தரமாவதில்லை. ஒரு வருஷம் வேலையில் இருந்த பிறகே நிரந்தரமாகிறான். அதுபோலத்தான் இதுவும்.
 
கும்பாபிஷேகம் முடிந்தபிறகு 12-வது வருஷத்தில் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யவேண்டும். அதுவரைக்கும், சாத்திய மருந்து உருக்குலையாமல் இருக்க, வரையறையுடன் நிகழ்த்தப்படும் மண்டலாபிஷேகம் பாதுகாப்பாகவும் இருக்கும்.

------------------------------------------------

2. ஆலயங்களில், எந்தத் திசையை நோக்கி தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டும்?

- வி.ரவிச்சந்திரன், சென்னை-18

கிழக்கு, வடக்கு திசைகளை நோக்கி தீபம் இருப்பது சிறப்பு. இடநெருக்கடி காரணமாகவோ அல்லது கிழக்கு-வடக்கு திசைகளை நோக்கி தீபமேற்ற இயலாத சூழலிலோ மேற்கு திசை நோக்கியும் தீபம் இருக்கலாம். ஆனால், தெற்கு தவிர்க்கப்பட வேண்டும்.
 
இரண்டுமுகமாக ஏற்றி வைக்கும் தீபம், கிழக்கு- மேற்காக இருக்கலாம். ஐந்து முகமானால், திசைகளைப் பற்றிக் கவலைப் படாமல் தீபம் ஏற்றலாம். அலங்கார தீபமும், பஞ்சமுக தீபமும் எல்லாத் திசைகளை நோக்கியும் இருக்கும்.

இது ஆலயங்களுக்கு மட்டுமான விதி இல்லை; வீடுகளிலும் தெற்கு திசையைத் தவிர்க்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பார்த்த சந்நிதிகளைக் கொண்ட கருவறை தீபங்களுக்கு, திசையைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. வடக்கும் தெற்குமாக தொங்கு விளக்கு வரிசைகள் இருக்கும். ஐந்து முகம் வரும் இடங்களில் எல்லாம் திசைகளைப் பார்க்க வேண்டாம்.

ஈசனுக்கு எந்த திக்கிலும் விளக்கு இருக்கலாம். இந்த நியமங்கள் அத்தனையும் நமக்காக ஏற்பட்டவை. ஒளிமயமானவனுக்கு திசை ஏது? திசை என்பது நமது கற்பனை.

தீப ஒளி நான்கு திசைகளையும் நோக்கியே இருக்கிறது; நான்கு திசையிலும் ஒளிப்பிழம்பு இருக்கும். ஒளியின் பரவல் எல்லாத் திசைகளிலும் இருக்கும். திரியையும் தீபத்தையும் வைத்தே திசையை நிர்ணயம் செய்கிறோம்; ஒளியை வைத்து நிர்ணயம் செய்ய இயலாது.

-------------------------------------------

3. வீட்டில் வழிபடும்போது சாம்பிராணி புகை போடுவது போல், குங்கிலிய தூபம் இட்டும் வழிபடலாமா?
 
- ஆர்.கோபாலகிருஷ்ணன், சென்னை-42

தூபத்துக்குச் சாம்பிராணியும் பயன் படுத்தலாம் குங்குலியமும் பயன்படுத்தலாம்.
 
'அக்னி தேவனுக்கு மூன்று அண்ணன்மார்கள் இருந்தார்கள். இவர்கள், வேள்வியில் இடப்படும் உணவை அந்தந்த தேவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்று சேவை செய்தார்கள். காலப்போக்கில், உயிர் வாழத் தேவைப்படும் உணவுத் தட்டுப்பாட்டால் உயிரிழந்தார்கள். பிறகு அவர்கள் 'பூதத்ரு’ எனும் மரமாக உருவெடுத்தார்கள்.

அந்த மரத்திலிருந்து கிடைக்கும் கொழுப்புப் பொருள் குங்கிலியம். இறந்துபோன சகோதரர்களின் மாமிசம் குங்குலிய வடிவில் தென்பட்டது. அது நெருப்போடு இணைந்ததும் உருகி புகையை வெளியிட்டது; அக்னி பகவான், தன்னுடைய சகோதரரின் சேர்க்கையில் மகிழ்வதாக எடுத்துக்கொள்ளப் பட்டது’ என்ற தகவல் வேதத்தில் உண்டு.

ஆகையால் தூபத்துக்கு குங்குலியம் பயன்படுத்துவது சரிதான். கடவுள் வழிபாட்டில், 16 உபசாரங்களில் 'தூப’ உபசாரமும் ஒன்று. அதற்கு, 'தைவிகஸம்பந்தம்’ இருப்பதும் சிறப்புதான்.

 -------------------------------------------
4. முதல் நாள் மாலை ஸ்வாமிக்குச் செய்யப்படும் சந்தனக் காப்பு அலங்காரத்தை எப்போது களையலாம்? மறுநாள் அலங்காரத்தைக் கலைத்து, நித்திய அபிஷேகம் செய்யலாமா? அல்லது அதற்கும் அடுத்த நாள் காலையில்தான் களைய வேண்டுமா?

- ஆர்.சேதுராமன், திருவூர்

முதல்நாள் சாத்தப்படும் சந்தனக்காப்பை, மறுநாள் காலையில் கலைத்து நித்யாபிஷேகம் செய்வது சிறப்பு. அன்று கலைக்காமல் இருந்துவிட்டு, அதற்கும் மறுநாள் கலைப்பது என்பது சரியல்ல. ஸ்வாமிக்கு ஒருநாள் நித்யாபிஷேகம் தடைப்பட்டுவிடும். 
 
தினமும் காலையில் அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும் என்பதால்... அலங்காரத்தில் இருக்கும் அழகை கலைக்க விருப்பம் இல்லாமல் ஒருநாள் தள்ளிப்போடுவது, நித்ய பூஜையை தடை செய்வதாகும். இரவு தாண்டிவிட்டால் அலங்காரம் பழசாகிவிடும். எனவே, மறுநாள் காலையில் களைவதில் தவறில்லை.
 
பூஜை விதிக்கு உடன்படாத நமது விருப்பத்தை செயல்படுத்தக் கூடாது. அலங்காரத்துடன் இரவில் உறங்கச் செல்லும் நாம், மறுநாள் நீராடி புது அலங்காரத்தை ஏற்போம். ஸ்வாமிக்கும் நித்ய பூஜைக்கு குந்தகம் இல்லாமல் செயல்படுவது சிறப்பு.

---------------------

5. 'தீதுறு நக்ஷத்திரங்கள்’ எனும் ஒரு பாடலை, பஞ்சாங்கத்தில் பார்க்க முடிகிறது. அதுபற்றி விளக்குங்களேன்?

- ஜி.ராமதாஸ், ஆடுதுறை

தென்படும் பொருள்களில் நல்லது, கெட்டது இரண்டும் இணைந்து இருப்பது நியதி. அவற்றைச் சரியாக அடையாளம் கண்டு, ஏற்கவோ துறக்கவோ வேண்டும். சிலர் 8, 13 ஆகிய எண்ணிக்கையை கெட்டதாகப் பார்ப்பது உண்டு. உயர்வை அளிக்கும் விஷயத்தில், ஒத்துழைக்காதவற்றை ஒதுக்கிவிடுவது உண்டு.
 
கரும்பில் கணுவையும், பலாவில் தோலையும், நெல்லில் உமியையும் களைவோம். இப்படிக் களைய வேண்டியதைக் களைந்து, ஏற்க வேண்டியதை ஏற்பது உண்டு. விண்வெளியில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் தரத்தில் ஒன்றானாலும், பயனில் இருக்கும் மாறுபாட்டை கருத்தில்கொண்டு, உயர்வுக்கு ஒத்துழைக்காதவற்றை ஒதுக்குவது உண்டு.
 
பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம் பூரட்டாதி, விசாகம், கேட்டை - இவற்றை விலக்கவேண்டும்; இவற்றில் முகூர்த்தமோ, பயணமோ கூடாது என்கிறது சாஸ்திரம் (யமருத்ரஹி...). சுவாதி, சித்திரை, மகம் - இந்த மூன்றும்கூட, குறிப்பிட்ட முகூர்த்தத்தில் விலக்களிக்கப்பட்டிருக்கிறது. இப்படி, விலக்கவேண்டியவை பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றுக்கு  தீதுறு நக்ஷத்திரங்கள் என்று பெயர்.

---------------------------------------------
6. என் பேரன் பிறந்தது 2006 ஜனவரியில். எனில், அவனுக்கு எப்போது பூணூல் கல்யாணம் பண்ணிவைக்கலாம்? இந்த வைபவத்தை 8-வது வயதின் துவக்கத்தில் செய்யவேண்டுமா அல்லது 8 வயது பூர்த்தியானதும் செய்யவேண்டுமா?

- ராதா, சேலம்

ஏழு வயது நிரம்பினால் 8-வது வயது ஆரம்பமாகும். அது முடிவதற்குள் செய்ய வேண்டும். வயதைக் கணக்கிடும்போது, கர்ப்பத்தில் இருக்கும் 10 மாதங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 6 வயது நிரம்பி 2 மாதங்கள் ஆன நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் 10 மாதங்களையும் சேர்த்தால், 7 வயது பூரணமாகும். அதாவது 8-வது வயதில் ஆரம்பம். அதுமுதல் 8-வது வயது முடியும் வரையிலான காலகட்டத்தில் பூணூல் கல்யாணம் செய்யவேண்டும்.

2012 மார்ச் முடிந்தால் தங்கள் பேரனுக்கு 7 வயது நிரம்பிவிடும் (கர்ப்பகால 10 மாதங்களையும் சேர்த்து). 2013 மார்ச் மாதத்துக்குள், பூணூல் கல்யாணத்தை நடைமுறைப்படுத்தலாம். அதிலும் ஆடி முதல் மார்கழி வரை 6 மாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை, தடங்கல்கள் ஏதேனும் ஏற்பட்டால், 2014 மார்ச் வரை நடைமுறைப் படுத்தலாம்.

நன்றி - விகடன்

Thursday, May 05, 2011

ஏ பி ஜே அப்துல் கலாம் பேட்டி பாகம் 2

http://www.tn.gov.in/pressrelease/archives/pr2002/pr151202/Dec15bp.jpg 

கா.வினோதினி, திண்டுக்கல்.

1. ''ஜனாதிபதி பதவிக் காலத்தில் தாய் நாட்டுக்கு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு உங்களுக்கு இருந்திருக்கிறதா?''

''ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது, நாடு முழுவதும் இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற தாரக மந்திரத்தை விதைத்தேன்.
ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியைக்
கிராமப்புறங்கள் அடைய வேண்டி, நகர்ப்புற வசதிகள் கிராமப்புறங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற 'புரா’ திட்டத்தைப் பிரபலப்படுத்தினேன்.

இலங்கைத்தமிழர் நலனுக்காக நீங்கள் ஏதாவது குரல் கொடுத்திருக்கலாம் என பலரும் சொல்றாங்க சார்.. 
வளர்ச்சி அரசியல்தான் நாட்டுக்குத் தேவை என மக்களிடம் வலியுறுத்தினேன். அதன் பயன்பாடு இந்தியா முழுமைக்கும் இப்போது எதிரொலிக்கிறது.
இந்தியா வளர்ந்தால் என் தமிழ்நாடும் வளரும் அல்லவா!'' 


எஸ்.சிவகாமி, திருச்சி.

2.
''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொரு புறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''

''6,000 வருடங்கள்கொண்ட இந்திய வரலாற்றில், இந்தியாவை இந்தியர்கள் ஆண்டது 600 வருடங்கள் மட்டுமே. காரணம் என்ன? நாம் வலிமையோடு இல்லாததின் காரணமாக, இந்தியாவின் வளம் மற்றவர்களால் தொடர்ந்து அபகரிக்கப் பட்டது.

வலிமைதான் வலிமையை மதிக்கும். நம்மைச் சுற்றி 10,000 அணுகுண்டுகளுடன் ரஷ்யாவும் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் இருக்கும்போது, நாம் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு தபஸ் பண்ண முடியாது. எனவேதான், நமது வலிமையை உலகத்துக்கு நிரூபிக்க அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

அதுதான் நமது வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது. இந்தியாவைப்பற்றிய மதிப்பை உயர்த்தியது.
ஆனால், நாம்தான் முதன்முதலாக 'அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு, உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறோம்.

இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. உலகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!''

பெ.கருணா, வாசுதேவநல்லூர்.

3. ''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

''இதுவரை நடந்தது நன்றாகவே நடந்தது. இனிமேல் நடப்பதும் நன்றாகவே நடக்கும்!''

கு.அருள்மொழி, காங்கேயம்.
 http://www.centralchronicle.com/uploads/26_June_kalam.jpg
4. ''நீங்கள் குழந்தைகளை அதிகம் நேசிப் பதன் காரணம் என்ன?''

''குழந்தைகளுக்குக் கனவு உண்டு. அந்தக் கனவை நனவாக்கும் லட்சியம் அந்தக் குழந்தைகளிடம் மிகுந்திருக்கும். எனவேதான், அவர்கள் மனதில் விதைக்கும் ஒவ்வொரு நற்செயலும், கண்டிப்பாகப் பிற்காலத்தில் நாட்டின் மேன்மைக்கு மிகுந்த பயன் அளிக்கும். ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அது உத்வேகமாக இருக்கும். அதனால்தான் நான் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்!''


நா.கணேசலிங்கம், லிங்கேசன்புதூர்.

5. ''அறிவியல் துறையில் உங்கள் முன்னோடி யாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?''

''அறிவியல் துறையில் நான் முன்னோடியாகக் கருதுபவர், ராக்கெட் சமன்பாட்டைக் கண்டு பிடித்த ரஷ்யாவின் கான்ஸ்ஸான்டின் டிஸ்யோல்ஸ்கி என்பவர். அவர்தான் ராக்கெட் துறையில் உள்ள அனைவருக்கும் முன்னோடி. எனது குரு விக்ரம் சாராபாய் அவர்கள்தான் என் அறிவியல் முன்னோடி!''

நம்ம நாட்டுக்காரரான ஜி டி நாயுடுவை சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தோம்.

ச.செந்தமிழன், கானாடுகாத்தான்.

6. ''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''

''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''

எஸ்.வேணுகோபால், திருநெல்வேலி.

7. ''ஜப்பானின் அணு உலைகள் வெடித்துச் சேதம் விளைவிக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டோம். இந்நிலையில்... கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்களை மூட வேண்டும் என்று எழும் கோரிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?''

''டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நடுக் கடலில் மரித்தார்கள் - கப்பல் பயணத்தையே விட்டுவிட்டோமா? வருடம்தோறும் விமான விபத்து நடக்கிறது - விமானப் பயணத்தையே தவிர்த்துவிட்டோமா? இல்லையே!

ஜப்பானில் மோசமான ஒரு சூழ்நிலையில், சுனாமியும் பூகம்பமும் ஒருங்கே நிகழ்த்திய சோகம் அது. அதை எதிர் பாராததால், மாற்று மின் சக்தியைச் சரியான நேரத்தில் கொடுக்கத் தவறியதால், உபயோகிக்கப்பட்ட எரிபொருள் குளிர்ச்சியாகாத காரணத்தால், விபத்து நேர்ந்துவிட்டது. பாதுகாப்புத் தன்மையில் அவ்வப்போது மாற்றம் செய்யாத தின் விளைவே அந்த விபத்து.

எனவே, உலகின் அனைத்து அணு உலைகளையும் மீண்டும் ஆய்வு செய்து, அவற்றுக்கு இப்படிப்பட்ட சிக்கலான இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் சக்தி உள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப அணு மின் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த உலக நாடு கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இந்தியாவும் தனது அணு உலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரமாக இருக்கிறது.

அணு மின் சக்திதான் தூய்மையான எரிபொருள். எனவே, அணு மின்சாரம் கண்டிப்பாகத் தேவை. இந்தியாவின் ஆராய்ச்சி யில் தோரியம் மூலம் உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், யுரேனியத்தின் அணு மின் நிலையங்களைவிட மிகவும் பாதுகாப்பானவை.

அவை சீக்கிரம் உருகாத தன்மைகொண்டவை. ஒரு மெட்ரிக் டன் தோரியத்தில் கிடைக்கும் எரிசக்தி, 200 மெட்ரிக் டன் யுரேனியத்தில் அல்லது 3.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில் கிடைக்கும் சக்திக்குச் சமம். அதை அமைக்க ஆகும் செலவும் மிகக் குறைவு. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்!''

இளங்.கார்த்திகேயன், மகாதேவப்பட்டணம்.
 http://www.sudhirneuro.org/gallery/full/Dr-AP-Abdul-Kalam.jpg
'8. ' 'ஃபுகுசிமா’ அனுபவத்தில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?''

''அதாவது, பாதுகாப்புக்குத் தேவையானவற்றை... வரக்கூடிய இயற்கைச் சீற்றங்களை அளவிட்டுப் பலப் படுத்த வேண்டும் என்பதுதான். உலகம் இப்போது விழித்துக்கொண்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது!''

நன்றி - விகடன்