Showing posts with label SUN TV. Show all posts
Showing posts with label SUN TV. Show all posts

Tuesday, April 03, 2012

குங்குமம் பத்திரிக்கையை கிண்டல் அடித்ததன் மூலம் சன் டி வி யை பகைத்துக்கொண்ட சாரு நிவேதிதா

 புலம்பல் திலகம் சாரு நிவேதிதா அவர்கள் எக்செல் நாவலில் எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என 30 பக்கங்கள் புலம்பியது அனைவருக்கும் ( அதாவது அந்த நாவலை வாசித்த  3800 பேருக்கும்) தெரிந்ததே.. அந்த நாவல் வெளியான சமயத்தில் குங்குமம் இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.. அந்த பேட்டிக்கு சன்மானமாக ரூ 500 அனுப்பி இருக்காங்க.. இப்போ அவர் வெப்சைட்ல வாசகர்கள் கலந்துரையாடலில் நைஸா அதை சொல்லி காட்டி இருக்கார்.. 


ஜோஸஃப் சுகானந்த்: நான் சில நாட்களாக தலயிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கேள்வி.   தல, நீங்கள் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கூறி வருகிறீர்கள். ஒரு விதத்தில் அது சரியானதாகத் தோன்றினாலும் இன்னொரு வகையில் பார்த்தால் இன்று இவ்விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று படுகிறது. இன்று உங்களுக்கு இரண்டாயிரம் பேர் கொண்ட வாசகர் வட்டம் உள்ளது. உங்களையும் உங்கள் எழுத்தையும் கொண்டாடுகிறோம். உங்கள் இணையதளத்தை லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள், கருத்து சொல்கிறார்கள். நீங்கள் மீடியாவில் அடிக்கடி தென்படுகிறீர்கள். உங்களை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. நீங்கள் உட்பட அனைத்து நல்ல எழுத்தாளர்களுக்கும் ஒரு fan following உருவாகியுள்ளது. இன்னும் ‘தமிழத்தில் எழுத்தாளனை யாரும் பெரிதாய் மதிபதில்லை’ என்ற கருத்தில் உறுதியாய் உள்ளீர்களா? இல்லை அதில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?   நீங்கள் பதில் கூறினால் மகிழ்வேன்.

 சி.பி - யாரும் குழம்ப வேணாம்.. ஜோசப் தலன்னு சொல்றது அண்ணன் சாருவைத்தான்..தறுதல என்பதை சுருக்கி தலன்னு கூப்பிடறார் போல.. ஒரிஜினல் தல அஜித் மன்னிக்க

ராஜ ராஜேந்திரன்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி, அதில் தமிழர் மட்டுமே ஐந்து கோடி என்று வைப்போம், அதில் படிக்கத் தெரிந்தவர்கள் மூன்று கோடி, அதில் சாரு போன்ற இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும் அறுபது லட்சம் பேர் வருகிறார்கள். இதை குடும்பத்திற்கு பத்து பேர் என்று பிரிப்போம், அப்படி பார்த்தால் ஆறுலட்சம் குடும்பம் வரும், இதில் புத்தகம் வாங்கி படிக்குமளவு சக்தி கொண்ட குடும்பங்கள் ஐம்பது சதவிகிதம் எனில் அது மூன்று லட்சம் குடும்பம் ! ஆக, ஒரு தரமான படைப்பு வந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகளாவது ஒரே வருடத்தில் விற்கவேண்டும். சரி, சாருவுடையது பின்நவீனத்துவமானது என்றால் ஒரு லட்சமாவது விற்க வேண்டும், எக்சைல் இதுவரை ஐந்தாயிரம் விற்றிருக்கும் (?) இப்போது சொல்லுங்கள், சாரு கோபப்பட வேண்டுமா, தேவையில்லையா ? (நான் சொன்னது தோராயக் கணக்கு, மிகவும் குறைவான சதவிகித கணக்கையே சொல்லியிருக்கிறேன், இதில் வெளிநாட்டுத் தமிழர்களை வேறு சேர்க்கவில்லை)

சி.பி - ஒரு விஷயம் ஓப்பனா சொல்றேன்.. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.. இங்கே லெண்டிங்க் லைப்ரரி இருக்கு.. ஒரே புக்கை பலர் பகிர்ந்துக்கற சிஸ்டம் இருக்கு.. சித்தோடு கே சதீஷ்குமார் நல்ல நேரம் பிளாக் ஓனர்க்கு கிஃப்ட்டா அந்த புக் வந்தது.. அவர் சித்தோட்ல இருக்கற 12 பேருக்கு அதை பகிர்ந்தார்.. நான் வாங்கி என் நண்பர்கள் 34 பேருக்கு ஷேர் பண்ணேன்.. இந்த மாதிரி படிக்கப்படறதுதான் அதிகம். ரூ 250 புக்குக்காக செலவு பண்ண தமிழன் யோசிப்பான்.. 


சாரு நிவேதிதாவின் பதில்:  ஜோஸஃப். என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது.  யாராவது என்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆரம்பித்து விடுவேன்.  அப்படித்தான் உங்கள் கேள்வியையும் சாரு ஆன்லைனில் போட்டு நாலு பக்கம் பதில் எழுத ஆரம்பித்தேன்.  உடனே நான் எழுதிக் கொண்டிருக்கும் – இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டிய ஆங்கில குறுநாவல் – gothic – ஞாபகம் வந்து உடனே பதில் சொல்வதை நிறுத்தி விட்டேன்.

சி.பி - அண்ணன் எழுதுன தமிழ் நாவல்ல 17 பக்கங்களுக்கு ஆங்கில கலப்பு இருந்தது.. அப்போ ஆங்கில நாவல்ல தமிழ் கலப்பு இருக்குமா? டவுட்டு..  டைட்டில் தான் சரி இல்லை GOMADHI THICK ,GOPAALAA THIN அப்படி ஏதாவது வெச்சிருக்கலாம்


 யாராவது ஒரு குப்பை படம் எடுத்தால் அந்தப் படத்தை 2000 பேரா பார்க்கிறார்கள்?  அந்தப் படத்தை எடுத்த  இயக்குனர் தெருமுனையில் வந்து நின்று கொண்டு துண்டா விரிக்கிறார்?  அடுத்த படத்துக்கு லொகேஷன் பார்க்க அமெரிக்கா பறந்து விடுகிறார் இல்லையா?  இங்கே நான் சிங்கப்பூர் சென்று வரவே ஐந்து வருடம் யோசித்துக் கொண்டிருக்கிறேனே, பணம் இல்லாமல்?


சி.பி - அண்ணே, சிங்கப்பூர் போய்ட்டா மட்டும் அமர காவியமா எழுதப்போறீங்க? எழுதற குப்பையை லோக்கல்ல இருந்தே எழுதுங்கண்ணே.. லோக்கல் நாவல்க்கு லோக்கல் லொக்கேஷன் போதாதா? ஹி ஹி 


 இங்கே என் கொல்லைப்புறத்தில் இருக்கும் சிங்கப்பூருக்கே ஐந்து வருட யோசனை என்றால், எப்போது நான் சிலே, க்யூபா, ஃப்ரான்ஸ் எல்லாம் போய் வருவது?  ராஜ ராஜேந்திரன் சரியாகப் பிடித்திருக்கிறார்.   என் புத்தகம் 50,000 பிரதி விற்றால் தான் இதெல்லாம் சாத்தியமாகும்.  ஆனால் இன்னும் எக்ஸைல் விற்பனை 5000 ஐக் கூட தாண்டவில்லை.


சி.பி - அந்த புக் 3800 விற்றதே பெருசு.. அண்ணனுக்கு ஆசை ஜாஸ்தி.. தமிழ்நாட்டு லைப்ரரிக்கு எல்லாம் தானம் பண்ணிடுங்க. சும்மா வீட்ல ஸ்டாக் வெச்சு வாட் யூஸ்?



மேலும் ஜோஸஃப், நீங்கள் ரொம்ப வெகுளியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாலும் உங்கள் மீது நான் கோபம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால், உங்கள் கேள்விக்குப் பதிலையே எக்ஸைல் நாவலில் 30 பக்கம் எழுதி விட்டேன்.  அந்த நாவலைப் படித்தீர்களா இல்லையா?

சி.பி - நாங்க பிளாக் படிக்காமயே ஆஹா அபாரம், சூப்பர் தல பின்னீட்டிங்க அப்டினு கமெண்ட் போடற பரம்பரைல வந்தவங்க.. அந்த நாவலை ஒரு வரி விடாம ஃபுல்லா படிச்சவங்க  யாருமே இல்லையாம் , நான் அடிச்சு சொல்றேன் ஹி ஹி 

ஒரு மாணவன் 4 வருடம் எஞ்ஜினிரியரிங் முடித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான்.  நான் 40 வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நேற்று ஒரு பத்திரிகையிலிருந்து நான் எழுதிய கட்டுரைக்கு சன்மானமாக 500 ரூ செக் வந்தது.  இப்போது இதை இங்கே எழுதி விட்டேனா?  இனிமேல், 50 வருடத்துக்கு என்னை அந்தப் பத்திரிகையிலிருந்து boycott செய்து விடுவார்கள்.


சி.பி -குங்குமம் புக்ல ஒரு பக்கக்கதைக்கு ரூ 200 சன்மானம் தர்றாங்க.. உங்க பேட்டி 3 பக்கம் வந்தது.. அதுல படங்கள் மட்டும் ஒன்றரை பக்கம் இருக்கும்.. அதனால பேட்டி குங்குமம் கணக்குக்கு ஒன்றரை பக்கம் தான்.. அவங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி உங்களூக்கு ரூ 300 தான் தந்திருக்கனும்.. ஏதோ கவனக்குறைவால அல்லது ரவுண்ட் ஃபிகரா தரலாம்னு ரூ 500 தந்துட்டாங்க. இப்படி எல்லாம் குறை சொன்னா நெக்ஸ்ட் டைம் தர்ற சன்மானத்துல அந்த எக்ஸ்ட்ரா ரூ 200 ம் கட் பண்ணி அதாவது கழிச்சுத்தான் தருவாங்க.. பி கேர் ப்= ஃபுல் ஹி ஹி 


 எப்படி எனக்கு வேட்டு வைக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  சில விஷயங்களை நான் வெளிப்படையாகப் பேசினாலே எனக்கு ஆபத்து.  நீங்கள் ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்டு விட்டீர்கள்.   500 ரூ. செக்கை வைத்துக் கொண்டு நான் பிச்சைதான் எடுக்க வேண்டும் ஜோஸஃப்.  அதைத்தான் நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.  பல உயிர் நண்பர்களும் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று ஆதங்கத்துடன் எழுதி வருகிறார்கள்.

சி.பி - என்னப்பா இது?ஒரு இண்டர்நேசனல் எழுத்தாளரைப்போய் இப்படி சொல்லீட்டீங்களே. 


  50000 பிரதிகள் எல்லாம் விற்க வேண்டாம்; 40 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்.  ஒவ்வொன்றும் 5000 விற்றால் போதுமே?  விற்பதில்லையே?  கட்டுரைகளாவது போகட்டும், நாவலாவது 50,000 பிரதிகள் விற்றால்தான் ஒரு எழுத்தாளன் கௌரவத்தோடு வாழ முடியும்.  ஆனால் உலகில் எல்லா நாடுகளிலும் நாவல்கள் 50,000 பிரதிகள் விற்பதில்லை.  அப்படியும் எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால், intelligentia-வின் ஆதரவு.


சி.பி -  எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால் அவங்க எழுத்து கண்ணீயமா, பெண்ணியமா இருக்கனும்னே.. கண்ட படி கெட்ட வார்த்தைல பலரை திட்டக்கூடாது..


 உதாரணமாக, எழுத்தாளர்களை பல்கலைக்கழகங்கள் creative writing துறையில் பேராசிரியர்களாக நியமித்து ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறது.  இதுதான் உலகம் பூராவும் இருக்கும் நடைமுறை.  ஆனால் இங்கே பல்கலைக்கழகத்தில் போய் விரிவுரை ஆற்றினால் ஒரு பூங்கொத்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.  இண்டெலிஜென்ஷியா என்றால் பத்திரிகைகளும்தான்.  தமிழில் கட்டுரைக்கு சன்மானம் 500 ரூ.  இல்லாவிட்டால் அதிகபட்சம் 1000 ரூ.

சி.பி - அதுவும் ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளீல் தான். காலச்சுவடு, கணையாளி, அமிர்தா, உயிர் எழுத்து போன்ற இலக்கியப்பத்திரிக்கைகள்னா சன்மானம், காம்ப்ளிமெண்ட்ரி காப்பி கூட நோ தான் 




ஆனால் என்னுடைய எஞ்ஜினியர் நண்பர் ஒருநாள் என்னோடு பீட்ஸா சாப்பிட்டு விட்டு 500 ரூ. பில்லை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.


சி.பி - பில்லை வாங்கி பாக்கெட்ல வெச்சுட்டு நைஸா போய்ட்டாரா? பில் பே பண்ணலையா>?

 கம்பெனி reimburse செய்து விடுமாம்.  இதேபோல் மருத்துவ செலவுக்கும், பெட்ரோல் செலவுக்கும் கம்பெனியே கொடுத்து விடும்.  அவ்வளவு ஏன், காண்டம் செலவுக்குக் கூட கம்பெனிதான் பணம் கொடுக்கிறது.

 சி.பி - அவ்ளவ் பணக்கஷ்டத்துலயும் அண்ணனோட இஷ்ட தெய்வம் பற்றித்தான் பேசறாரு.. அண்ணனை கண்டம் துண்டமா வெட்டுனாக்கூட காண்டம்க்கு எதும் ஆகாம பார்த்துக்குவார் போல. அண்ணன் வாழ்வில் சுந்தர காண்டம் மலர வாழ்த்துகள்


 சம்பளப் பணம் தனி.  அதை இதில் சேர்க்கக் கூடாது.  ஆனால் எழுத்தாளனின் சம்பளம் 500 ரூ.  உணவு கிடைக்காத தெருநாய்கள் காய்ந்து போன மனித மலத்தைச் சாப்பிடுவதை என் கண் கொண்டு பார்த்திருக்கிறேன்.  தமிழ் எழுத்தாளனின் நிலைக்கும் அந்த நாயின் நிலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை.  இப்படி சீரழியா விட்டால் சினிமாக்காரர்களுக்கு கால் கழுவி விட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.  60 வயது வரை விட்டுக் கொடுக்காத சுய கௌரவத்தை இனிமேலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

சி.பி - ஆமாண்ணே.. உங்க சுய கவுரவத்தை யுத்தம் செய் படத்துல மிஸ்கின் கூட வெச்சிருந்த ஃபிரண்ட்ஷிப்ல பார்த்தோம்..  ஒரே ஒரு சீன் வெறும் கையை காட்டிட்டு போனதுக்கே சம்பளம் ஒரு லட்சம் தந்தாங்கன்னு ஜிங்க் ஜக் அடிச்சீங்களே.. உங்க கிட்ட இருக்கற எல்லா திறமையையும் காட்டி பல லட்சம் சம்பாதிக்கலாமெ சினி ஃபீல்டுல ஏன் மிஸ் பண்றீங்க? 

மேற்கண்ட காரணங்களினால்தான், நான் தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் என்று ஒரு ஆங்கிலப் பேட்டியில் குறிப்பிட்டேன்.  இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.  என்னுடைய 2000 வாசகர்களை அப்படிச் சொல்லவில்லை.  அந்த 2000 பேரும் என் குடும்ப உறுப்பினர்களைப் போல.  நீங்களும் அதில் ஒருவர் என்பதையும் நான் அறிவேன்.  இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள்.  சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

சி.பி - அட.. இப்படி ஒரு ரூட் இருக்கா? ஓ சில கேட்க கூச்சமா இருக்காதா? அது சரி. நாம தான் எப்பவும் சரக்கு அடிச்சுட்டு மப்புலயோ கிடக்கறமே.. எதுக்கு நமக்கு கூச்ச நாச்சம் எல்லாம்?




 அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.  கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

சி.பி - கியூபாக்கு டிக்கெட் எடுத்தவர் கூட ஒரு டிக்கெட்டையும் அனுப்பி இருந்தா அண்ணன் ஒரு வேளை போய் இருப்பார்.. 

Saturday, November 26, 2011

சன் பிக்சர்ஸாரின் ஆதிக்கம்- தியேட்டர்கள் கிடைக்காத அவலம் - இயக்குநர் காட்டம் !!பரபரப்புக்கடிதம்!!

http://www.musictub.com/Picture/Tamil_MusicTamil_Movie_SongsPaalai_(2011)cover.jpg

விஜய்-ன் காவலன் ரிலீஸின் போதே சன் பிக்சர்ஸாரின் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தது.. அதாவது தமிழ்நாட்டின் பெரிய , செண்ட்டரான திரை அரங்குகளை ஆக்ரமித்து விடுகிறார்கள் . என்பதே அது.. இதனால் லோ பட்ஜெட் படங்களை திரை இட தியேட்டர்கள் கிடைப்பதில்லை.. தங்கள் கை வசம் மாஸ் மீடியா இருப்பதால் பெரும்பாலான படங்களை இவர்கள் வாங்கி நல்லா மார்க்கெட் பண்ணி தேத்தி விடுகிறார்கள்.. இதனால் வெளீயாகும் படங்கள் சன் பிக்சர்ஸாரின் தயாரிப்பாகவோ ,அல்லது அவர்கள் வாங்கும் படமாகவோ இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி..

கலைஞர் ஆட்சியில் அது ஓக்கே, இப்போ ஆட்சி மாறிய பின்னரும் அது தொடர்வது ஏன்?ஏன் ஜெ வால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை?என்பதே நம் மனதில் எழும் கேள்விகள்.. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் பாலை இயக்குநர் காட்டமாக ஒரு கடிதம் மீடியாக்களில் வெளீயிட்டும் , ஃபேஸ் புக்கில் அதை பகிர்ந்தும் வந்திருக்கிறார்.. அந்த கடிதம்

 http://tamil.oneindia.in/img/2011/05/05-shammu-palai300.jpg

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

பாலைஎன்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

பாலைபடத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாதுவாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்என்பது.

பாலைகுழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாதுஇப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் இந்தப் படத்தை நான் இயக்கவில்லையேஎன ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் செங்கோட்டை திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்


------------------------------------------------------------




-------------------------------------------------------------




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3q1ONHvokhIe9TCdTEXGWNMyerF4YC-XiJGHhzjp2uK0vU_Mq0vjX1HKaYjCxC-bQQIFoPfebRzhtxhSqZXwKSRtPa8wTqHStzIYQ8iyRNnaEJ3aWQmo1HuZjdaY2TK95m6OuzQEVdEA5/s1600/paalai_movie_stills.jpg
பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------------------------


 
2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர் 25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

 ‘
இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்

 இயக்குநர் வெ.சேகர்

 ‘
இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்

 உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

 ‘
வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்

 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

 ‘
ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட

 ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம்
, ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

 குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக, ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலைபடத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

 விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

 
இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

 
சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும், மக்கள் கலையும், மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்

ஊடகங்கள்

புதிய தலைமுறை
வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.


சன் தொலைக்காட்சி 
சமீப காலமாக பல வரலாற்றுத் திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விஞ்சும் விதமாக 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் காட்டுகிறது பாலை.

குமுதம்
பாலை திரைப்பட இயக்குநர் செந்தமிழன் பேசுவதைக் கேட்கும் போது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்ற நம்பிக்கை பிற்கிறது.

The Hindhu
Extensive reasearch on Sangam period literature, of life and time around 2,300 years ago, enabled director M.Senthamizhan to write Paalai



http://reviews.in.88db.com/images/paalai-movie/paalai-movie-stills-pics-photos-gallery-7.JPG


டிஸ்கி -  எனவே நல்ல சினிமா ரசிகர்கள் , ஆரோக்யமான திரைப்படம் வரவேண்டும் , திறமைசாலிகளை ஊக்குவிக்கவேண்டும் என நினைக்கும் நல்ல உள்ளங்கள் பாலை படம் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நண்பர்களூக்கும் பகிரலாம் ஈரோட்டில் இந்தப்படம் ரிலீஸ் ஆகவில்லை.....கொங்கு மண்டலத்தில் திருப்பூரில் மட்டும் 2 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.. மெத்தப்படித்தவர்கள் மிக்க  கோவையில் கூட இந்தப்படம் ரிலீஸ் ஆகாதது வருத்தம் தர வைக்கும் ஆச்சரியம்

டிஸ்கி பார்ட் 2 -

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

 

மயக்கம் என்ன - செல்வா குடுத்த அல்வா - காமெடி கும்மி கலாட்டா

 

Wednesday, October 12, 2011

சன் டிவி பெண் ஊழியர் மர்ம மரணம் -அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்

சுமார் எட்டு மாதங்களுக்கு முன்  எங்கள் ஊர் பெண்ணின் மர்ம மரணம் குறித்து எனக்கு தோன்றிய சில கேள்விகளை கேட்டிருந்தேன்.. அவர் சன் டி வி யில் பணி புரிந்தவர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகி விட்டது..அது பற்றி படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கவும்

சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?



 பதிவு போட்டு 4 நாட்கள் கழித்து அந்த பெண்ணுடன் சென்னையில் பணி புரிந்தவர்கள் வாயிலாகவும், பெண்ணின் பெற்றோர், தோழிகளை விசாரித்த போதும் சில கசப்பான உண்மைகள் தெரிய வந்தன.. அப்போதே அது பற்றி விளக்கப்பதிவு போட நினைத்திருந்தேன்..ஆனால் பெண்ணின் பெற்றோர் கொஞ்ச நாளுக்கு அது பற்றி எதுவும் எழுத வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். காரணம் துக்கம் விசாரிக்க வருபவர்கள் அது பற்றியே பேசி எங்கள் வேதனையை மேலும் அதிகரிப்பார்கள் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் நான் அது பற்றி பதிவு போடுவதை தள்ளி வைத்தேன்..

இப்போது எல்லாம் ஆறிப்போய் இருப்பதால் வெளியிட சரியான தருணம் என தோன்றியது


http://www.dexternights.com/wp-content/uploads/2011/01/Sun-TV.jpg

சன் டி வியில்   நிருபராக வேலை பார்த்த சங்கீதாவுக்கு அவரது அறைத்தோழி ஒருவருடன் ஓர் பால் உறவு ஏற்பட்டது.. தனது லெஸ்பியன் சிநேகம் குறித்து அவர் எந்த வித தயக்கமும் இன்றி தன் பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறார்.. எந்த பெற்றோர் தான் தமிழகத்தில் அதை ஒத்துக்கொள்வர்கள்?அவசர அவசரமாக அவருக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள்..

சென்னையை சேர்ந்த மாப்பிள்ளையிடம் பெண்ணின் ஆஃபீஸ் அட்ரஸ் சொல்லி பார்க்க சொல்லி விட்டார்கள்.. பெண்ணிடம் கண்டிப்பாக திருமணம் செய்தே தீர வேண்டும் என கொஞ்சம் அழுகை, நிறைய கண்டிப்புடன் மிரட்டி இருக்கிறார்கள்.. சங்கீதாவுக்கு ஆணுடனான திருமணத்தில் விருப்பம் இல்லை.இருந்தாலும் தனக்குப்பார்த்த மாப்பிள்ளையிடம் அவர் எந்த உண்மையையும் சொல்லாமல் பெற்றோரின் விருப்பம் போல் மாப்பிள்ளையுடன் பேசி இருக்கிறார்.. 

அது வரை சங்கீதாவுக்கு தினமும் வெளியே சென்று  ஃபீல்டு ஒர்க் வேலையாக இருந்த பணி அவரது பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க ஆஃபீஸ் விட்டு வெளியே போக முடியத படி ஆஃபீஸ் ஒர்க்காக மாற்றப்பட்டது.. சங்கீதாவின் தோழி சங்கீதாவின் பெற்றோரால் மிரட்டப்பட்டு வேறு இடம் அனுப்பப்பட்டார்.

சங்கீதாவால் அவரது தோழியை தொடர்பு கொள்ள முடியவில்லை.. திருமணத்தில் இஷ்டம் இல்லை.. எனவே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.. 

தற்கொலை என்றால் என்ன காரணம்? என வெளியே சொல்வது? என்ற நியாயமான ஒரு பெற்றோருக்கே உரிய அச்சத்தில் விபத்தாக மாற்றப்பட்டது.. மற்றபடி சன் டி வி நிர்வாகத்துக்கும், அந்தப்பெண்ணின் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை

19.02.2011 சனி அன்று தான் சம்பவம் நடந்தது.. ஞாயிறு அன்றே அவரது உடல் சென்னிமலைக்கு கொண்டு வரப்பட்டது.. அடுத்த நாளே அதாவது 21.02.2011 அன்றே அந்த பெண்ணின்  குடும்பத்தார் நடத்தும்  ஜவுளிகடை, ஃபேன்சி ஸ்டோர் எல்லாம் இயங்கியது.. பொதுவாக இது போல் துக்க சம்பவம் நடந்தால் குறைந்த பட்சம் 3 நாட்களாவது லீவ் விடுவார்கள். எனவே எனக்கு சந்தேகம் வந்து விசாரித்தபோது தான் மற்ற தகவல்கள் தெரிய வந்தன.. 

மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் அல்லது தனது தோழியுடன் எங்காவது போய் விடுவார் என எதிர்பார்த்தே அவர்கள் இருந்திருகின்றனர்.. 


நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. பையனோ, பெண்ணோ வெளியூரில் படிக்க வைப்பதை முடிந்த வரை தவிர்க்கலாம்.. தனிமை பல தவறுகளை செய்யத்தூண்டுகிறது.. 

2. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததாக தோன்றினாலும் குழந்தை நலன் கருதி படிக்கவோ, பணி புரியவோ வெளியூர் போகும் பெண்ணுடன் கூடவே அம்மாவும் போனால் நல்லது.. 

3. ஒரே அறையில் இரு ஆண்கள், அல்லது இரு பெண்கள் தங்குவது இந்தக்காலத்தில் தேவை அற்ற சர்ச்சைகள், பிரச்சனைகள் தோற்றுவிக்கும் என்பதை உணர வேண்டும்.. நான் எல்லாரையும் அப்படி சொல்லவில்லை.. 

4. வெளியூரில் வேலை செய்தால் ரூ 30,000 சம்பளம் , உள்ளூரில் வேலை செய்தால் ரூ 10,000 சம்பளம் என்றால் எல்லோரும் வெளியூர் செல்லவே ஆசைப்படுகிறோம்.. பணத்தை விட முக்கியமான விஷயங்கள் பல உள்ளன என்பதை உணர வேண்டும்.. 

5. எல்லாவற்றையும் மீறி இது போல் ஏதாவது நடந்தால் அவர்கள் போக்கில் விட்டு விடுவது நல்லது.. அவர்களே பட்டு தெரிந்து கொள்வார்கள்... இளம் வயதில் இப்போது தற்கொலை எண்ணங்கள் பட் பட் என வந்து விடுகிறது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கவுன்சிலிங்க் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 

6. மன உறுதியுடன் பல ஆண்களும், பெண்களும் தனிமையில் , அல்லது கம்பைன் ஸ்டடி, கம்பைன் ஒர்க் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. எல்லோரும் அப்படி அல்ல.. மன உறுதி இல்லாதவர்கள் தடம் புரள வாய்ப்பு உண்டு அவ்வளவுதான்

டிஸ்கி - ஓர் பால் உறவு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கான தளம் இது அல்ல... எனவே கமெண்ட் போடுபவர்கள் அந்த கோணத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும்.. ஒரு பெண்ணுக்கு தந்தை என்ற கோணத்தில் சிந்தித்து கமெண்ட் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Wednesday, September 14, 2011

சன் டி வி சக்சேனா பழி வாங்கப்படுகிறாரா? பலிகடா ஆக்கப்படுகிறாரா? ஜூ வி கட்டுரை - காமெடி கும்மி

சக்சேனா, அய்யப்பன் கஸ்டடி சித்ரவதைகள்... கண்ணீர் காட்சிகள்...

நடந்ததைச் சொல்லியிருந்தா என்கவுன்ட்டர் நிச்சயம்!
செப்டம்பர் 8. சைதை நீதிமன்றம்... 

சன் பிக்சர்ஸ் (முன்னாள்) அதிகாரி சக்சேனாவையும், சினிமா விநியோகஸ்தர் அய்யப்பனையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

வீங்கிய கால்கள், அதில் வரி வரியாகத் தழும்புகளுடன் வேனில் இருந்து இறங்கிய அய்யப்பன், நடக்க முடியாமல் நொண்டி நொண்டி முன்னேற... முற்றிலுமாக கம்பீரம் தொலைத்து, வெலவெலத்து இருண்ட முகத்துடன் அவருக்குக் கைத்தாங்கலாக உடன் வந்தார் சக்சேனா. ஓடோடிப் போய் அய்யப்பனைச் சூழ்ந்து​கொண்ட நிருபர்கள், 'எப்படிக் காயம் ஏற்பட்டது?’ என்று கேட்டதுதான் தாமதம்... இருவருமே கதறி அழ ஆரம்பித்தனர். பிறகு அவர்கள் சொன்னதைக் கண்டு, 'இப்படியும்கூட நடக்குமா?’ என்பதான திகைப்புடன் பார்த்தனர் நிருபர்கள்.


சி.பி - அவங்க ஆட்சில இருந்தப்ப என்னமா ஆட்டம் போட்டிருப்பாங்க?எத்தனை பேரை மிரட்டி இருப்பாங்க? உலகம் ஒரு வட்டம்.. 


தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அய்யப்பன் சில வார்த்தைகளை நிருபர்களிடம் சொன்னார். 'சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைக் காவலில் எடுத்து விசாரித்தபோது, 'சன் குரூப் கலாநிதி மாறன் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவருக்கு எங்கெங்கே சொத்துகள் இருக்கு?’னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. 


சி.பி - முதல் டைம் கேட்டப்பவே ஒழுங்கா பதில்சொல்லி இருந்தா அவங்க ஏன் திரும்பத் திரும்பக் கேட்கப்போறாங்க?

'அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இதுவரை அவரை நேரில்கூட பார்த்தது இல்லை’னு சொன்னேன். உடனே ஆத்திரத்தோடு போலீஸ்காரங்க கண்மூடித்தனமா அடிச்சாங்க. என்கவுன்ட்டர் நடக்கப்போகுதுன்னு மிரட்டுறாங்க’ என்று பீதியோடு சொன்னார்.


சி.பி - என்னது ? பார்த்தது கூட இல்லையா? அடங்கோ!!!கேட்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுது, சங்கவி கொண்டைல சன் டி வி தெரியுதுன்னு சொல்வீங்க போல!!
தங்களை போலீஸார் தாக்கிய​தாக நீதிபதியிடமும் இவர்கள் சொன்னார்கள். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்!


சக்சேனா, அய்யப்பனின் வழக்​கறிஞர் செந்தில்குமார் இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையத்திடம் கொண்டு​சென்றுள்​ளார். அவரை சந்தித்தோம்.
''கடந்த இரண்டு மாத காலமாக சக்சேனாவையும் அய்யப்பனையும் திட்டமிட்டு வேண்டுமென்றே போலீஸார் மாறி மாறி வழக்குகள் போட்டு, தொடர்ந்து சிறையில்வைத்துச் சித்ரவதை செய்து வந்தனர். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் இன்னொரு வழக்கில் கைது என்ற ரீதியில் அவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தன.

 சி.பி - அத்தனை வழக்கு போடற அளவுக்கு ஏம்ப்பா அட்டூழியம் பண்றீங்க? 

இறுதியாக, 'தம்பிக்கோட்டை’ படம் தொடர்பான புகாரில் இருவரை​யும் கைது செய்து இருந்தார்கள். 'தம்பிக்கோட்டை’ தயாரிப்பாளர் படத்துக்காக 5 கோடி செலவு செய்ததாகச் சொல்லி இருந்தார். ஆனால், செலவு குறித்து முறையான பில்கள் எதுவும் புகாருடன் இணைக்கவில்லை. இந்தப் பொய்ப் புகாருக்காக இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கேட்டது. இறுதியில் 5-ம் தேதி காலை முதல் 7-ம் தேதி காலை வரை அதாவது இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்த நீதிபதி, 'இந்த காலகட்டத்தில் கைதிகள் இருவரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். கிண்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது.

 சி.பி - அதானே? பகல் பூரா பின்னி பெடல் எடுத்தா நைட் தூக்கம் தன்னால வந்துடும், அதுக்கு அனுமதி கொடுத்தாத்தானே அடித்த நாள் மறுபடியும் கும்ம முடியும்?

கடந்த 6-ம் தேதி மாலை எனது கட்சிக்காரர்களை நான் சந்திக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனுக்கு போன் செய்தேன். அவரோ தொடர்ந்து மீட்டிங்... அது... இது... எனக் காரணம் சொல்லி என்னை சந்திக்க விடாமல் தடுத்து சதி செய்தார். இறுதியில் நீதிமன்ற உத்தரவு குறித்து நான் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பிய பிறகே, என்னால் உள்ளே நுழைய முடிந்தது. 

சி.பி - வால்டர் வெற்றிவேலுக்கே வார்னிங்க் மெசேஜா?ன்னு உங்களை உள்ளே தள்ளி கும்மி எடுக்கலையா? அடடா!! வட போச்சே!!!!

'அய்யப்பனிடம் விசாரணை நடக்குது... சக்சேனாவை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம்’ என்று அவர்கள் கூறியபோதே எனக்கு சந்தேகம். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சக்சேனாவை சந்தித்து, 'நேரத்துக்கு சாப்பாடு கொடுத்தார்களா? வேற ஏதாவது பிரச்னை இருக்கா?’னு கேட்டேன். 'ஒரு பிரச்னையும் இல்லை சார்’னு சக்சேனாகிட்ட இருந்து பதில் வந்தது. ஆனால் அவர் குரலில் வாட்டம் தெரிஞ்சது.


சி.பி - போலீஸ் லாக்கப் போனா கும்மத்தான் செய்வாங்க... ஃபிகரை பக்கத்துல உக்கார வெச்சு கொஞ்ச சொல்வாங்களா? 
அடுத்த நாள் விசாரணை முடிந்து 20 போலீஸ் புடைசூழ ரெண்டு பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அய்யப்பன் தாங்கித் தாங்கி நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியான நான், 'என்ன நடந்தது அய்யப்பன்? பயப்படாமச் சொல்லுங்க’னு கேட்டேன். அருகில் இருந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அய்யப்பனின் கையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போதைக்கு அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை.


சி.பி - யோவ்.. அவங்க முறுக்கையும் பிடிக்கலை, ஜிலேபியும் பிடிக்கலை .. அண்ணன் தப்பி ஓடக்கூடாதுன்னு கெட்டியா பிடிச்சிருப்பாங்க.. 


'தம்பிக்கோட்டை’ வழக்கில் ஜாமீன் கிடைத்த காரணத்தால், மறுநாளான 8-ம் தேதி அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாகி, வெளியில் வர இருந்தனர். அன்று மாலை அவர்களை சந்திக்க நான் புழல் சிறைக்குச் சென்றபோது, என்னைப் பார்த்ததும் மொத்தக் காயங்களையும் காட்டி கண்ணீர்விட்டார் அய்யப்பன். 'நேத்து கோர்ட்டுல இதை நான் சொல்லி இருந்தா... திரும்பிக் கூட்டிட்டுப் போகும்போது என்கவுன்ட்டர்ல போட்டுருப்பாங்க...’ என்று அய்யப்பன் சொன்னார். 


வெள்ளைச் சட்டை அணிந்த 30 போலீஸார் ஷிஃப்ட் முறையில் அய்யப்பனை அடித்து இருக்கிறார்கள். கால் பகுதி முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது. 'டாய்லெட் போகக்கூட உட்கார முடியலைண்ணா...’ என்று அழுதார்.



இந்த சூழலில் இருவரையும் நித்தியானந்தா வழக்கில் மீண்டும் கைது செய்யப்போவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால், 'இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. நீதிபதியிடமும் மீடியாக்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கியதைப் பற்றித் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நானும் கோர்ட்டுக்கு விரைந்தேன்.
எதிர்பார்த்ததுபோல, அடுத்த வழக்கில் கைது செய்தார்கள். சன் டி.வி. நிர்வாகத்தை அச்சுறுத்தவும், கலாநிதி மாறனுக்குக் குடைச்சல் கொடுக்கவும் சில அரசியல் சக்திகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். அவர்களின் கைத்தடிகளைப்போல சி.பி.சி.​ஐ.டி. போலீஸ் நடந்து​கொள்கிறது. போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போது கைதிகளைத் தாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவான உத்தரவு பிறப்பித்​துள்ளது. 

சி.பி - ஹா ஹா, போலீஸ் எந்தக்காலத்துல சட்டப்படி நடந்திருக்கு?

எனவே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமான சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜி-யான ஸ்ரீதர், டி.எஸ்.பி-யான ஜெயச்​சந்திரன், இன்ஸ்பெக்டர் காசி உள்ளிட்ட போலீஸார் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்களைக் கூண்டில் ஏற்றாமல், நான் ஓய மாட்டேன்!'' என்று கொந்தளித்தார்.



இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.ஐ.ஜி. ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''கலாநிதி மாறனை இந்த அய்யப்பன் நேரில் பார்த்தது இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். எனவே, விசாரணையின்போது நாங்கள் கலாநிதி மாறன் பெயரைச் சொல்லும்படி அய்யப்பனைக் கேட்கவில்லை...'' என்றார்.


''அப்படியானால் அய்யப்ப​னின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது?'' என்று கேட்டதற்கு, மௌனம் மட்டுமே நமக்குப் பதிலாகக் கிடைத்தது.


பொதுவாக 'போலீஸ் அடி'யில் 'காயம் வெளியில் தெரியாது’ என்பார்கள். ஆனால், அய்யப்பன் தரப்பு சொல்வதையும் அவர் காயங்களையும் பார்த்தால்.... என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?


சி.பி - சன் டி வி நடக்காது, படுத்துக்கும்னு நினைக்கறேன்..  


1.  புலமையாளர்கள் பலர் வறுமையாளர்களாக இருக்கிறார்களே? 


'கலையானது தரித்திரத்தில் இருந்துதான் பிறக்கிறது. இது 95 சதவிகிதம் உண்மை’ என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரே சொல்கிறார்...
'கூழுக்குக் கவி பாடினாள் ஒளவை. நாட்டுக்கு நலம் தரும் பாரதி​யாரின் ஆவேசக் கவி​தைகள் வறுமையில்தான் பிறந்தன. என் குடும்பத்தைக் காப்பாற்று​வதற்காக, நான் பல தினங்கள் பட்டினி கிடந்திருக்​கிறேன். அந்தக் காலத்தில்தான் என்னிடம் இருந்த கலை, ஆர்வத்​துடன் வெளியே வந்தது. இன்று நான் உங்கள் முன் நின்று பேசுவதற்கு ஆளாக்கியது அந்த வறுமையான காலங்கள்தான்.’

சி.பி - வறுமையும், புலமையும் உடன் பிறந்தவை.. நம் நாட்டில் எழுத்தாளர்களும் சரி, கவிஞர்களும் சரி உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கிடைக்கப்பெறாதவர்கள் ( விதி விலக்குகள் இருக்கலாம்..)



2. சட்டமன்றத்தில் புகழ்த் துதிகளும், எம்.எல்.ஏ-க்களின் சாஷ்டாங்க நமஸ்காரக் காட்சிகளும் அன்றாடம் அரங்கேறுவதை கவனித்தீர்களா? 


ஜெயலலிதா கண்டிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. தேவையற்ற புகழ்ச்சியும் அவசியமற்ற பவ்யமும் அம்மையாரை மீண்டும் கவிழ்த்துவிடும் காரியங்கள்!

சி.பி - ஜால்ராக்கள் நம்மை கொல்லப்போகும் காலராக்கள்


3. உலகில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியாவுக்கு ஏழாவது இடமாமே...? 


உண்மைதானே! சந்தேகம் இருந்தால், மன்மோகனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். 'வேலையே பார்க்காத சில அமைச்சர்களை என்னால் மாற்ற முடியவில்லை’ என்று அவர் புலம்புவது யாரால்?


சி.பி - அதிகாரம் ஆட்சியில் இருக்கும் , அன்பு மட்டும் தான் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.. 



4. தமிழகத் தலைவர்களிடம், குறிப்பாக... திராவிட இயக்கத்தினரிடம், ஒரு பிரச்னைபற்றிப் பேசும்போது, கண்ணீர் விடுவதும், அழுவதும், அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படுவதும் தனிக் கலாசாரமாகவே இருக்கிறது. இது முதிர்ச்சி இன்மையைக் காட்டுவதுபோல் இல்லையா? 


திராவிட இயக்கத்தினரிடம் மட்டும் அல்ல... தலைசிறந்த பேச்சாளர்கள் அத்தனை பேரும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான். பாரதியின் பாடல்கள் தடை செய்யப்பட்டபோது, தீரர் சத்தியமூர்த்தி பேசிய பேச்சும் அப்படித்தான் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டபோது... 'ஏய் மீனாட்சி உனக்கு இது பொறுக்கவில்லையா? சொக்கநாதா உனக்கு இது பொறுக்கவில்லையா?’ என்று ஜீவானந்தம் மதுரையில் கர்ஜித்ததும் அப்படித்தான் இருந்திருக்கும்.

எனவே, இது திராவிட இயக்கத்தினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கிளிசரின் ஊற்றினாலே அழத் தெரியாதவர்கள் மத்தியில் மேடையில் சிலர் கண் கலங்குவது தவறான கலாசாரம் அல்ல. நமக்கு அவர்களது கருத்தின் மீது விமர்சனம் இருக்கலாம். ஆனால், கண்டிக்கத்தக்க அளவுக்கு கண்ணீர் பாவமானதா என்ன!

சி.பி - உணர்ச்சி வசப்படுவது கலைஞனின் உடன் பிறந்தது..



5. இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்? 

ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!
'அஞ்சு வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்தார்... நல்லா சம்பாதிச்சார்’ என்றுதான் நாமே சொல்கிறோம். 'அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!

இந்தப் பொறுப்பு உணர்வு அற்ற தன்மைதான் அனைத்துக்கும் காரணம். 'ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள். எனவே, அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!

சி.பி - பொது மக்கள் அப்பாவிகள்.. சட்டமும், அதிகாரத்தில் இருக்கும் சில நல்லவர்களும் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்.. இந்தியாவில் ஊழல் வளர காங்கிரஸ் மிக முக்கிய காரணம்.. 


6. கச்சத் தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது குறித்து? 


எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்​திருக்​கலாம்!


சி.பி - தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்


7. சிறையில் இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அழகிரி சென்று பார்த்ததைக்கூட பண்ருட்டி ராமச்சந்திரன் பாய்ந்து தாக்குகிறாரே? 


மத்திய கேபினெட் அமைச்சர் பதவியில் இருப்பவர் என்ற அடிப்படையில் அழகிரியை விமர்சிக்கலாமே தவிர... கட்சியின் முக்கியத் தலைவர் என்ற வகையில் அவர் சிறை சென்று பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை!

சி.பி - அதானே? அவரோட கூட்டாளிகளைப்போய் பார்க்கறதுல என்ன தப்பு? பார்க்காம விட்டா அவன் காட்டி கொடுத்துடுவானே?



8. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வரின் புகழைப் பாடுவதில் விஞ்சி நிற்பது இந்திய கம்யூனிஸ்ட்டா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டா? 


இப்போதைக்கு... இந்திய கம்யூனிஸ்ட்!


சி.பி - அவங்க 2 பேரையும் விட ஓ. பன்னீர் செல்வம் தான். அண்ணன் என்னமா பம்பறார்? எல்லாம் எதிர்கால அரசியலை குறி வைத்துத்தான், ஆனா அண்ணன் நினைப்பது, சசிகலா இருக்கும் வரை நடக்காது.. 


9. உங்களுக்கு அம்மா புத்தாண்டா? அய்யா புத்தாண்டா? 

'குடி செய்வார்க்கு இல்லை பருவம்’ என்கிறார் வள்ளுவர்!


சி.பி - எந்தப்புத்தாண்டை கொண்டாடினாலும் ஏழைகளின் நிலை மாறப்போவதில்லை!!


10. தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்? 


அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!


சி.பி - காலையில் வெறும் வயிற்றில்  மரணிக்கும்போது அவஸ்தைகள் கம்மி என்று உளவியலும், மருத்துவ இயலும் சொல்கிறது..


11. முதல்வரைப் பாராட்டி சீமான் நடை பயணம் கிளம்பியதும், பாராட்டு விழா நடத்தியதும் பற்றி..? 


மூன்று தமிழர்களை முழுமையாக மீட்ட பிறகு, நிச்சயமாகச் செய்யலாம். காரியம் முடியாவிட்டால், பின்னோக்கி நடக்க முடியா

சி.பி - சீமான் சீன் போடறார்னு எனக்குத்தோணுது..

THANX - JU VI

Thursday, August 11, 2011

நில மோசடி வழக்கில் மாட்டிய திமுக வி ஐ பிகள், ஜெ அதிரடி,கதிகலங்கி நிற்கும் சன் டி வி , கலைஞர் டிவி

நிலநடுக்கத்தில் 2,800 குற்றங்கள் : அ.தி.மு.க. ரிக்டர் ஆபரேஷன்!

ஜெயலலிதா திட்டமிட்டு உருவாக்கும் 'நிலநடுக்கத்தின்’ ரிக்டர் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இது தி.மு.க - வின் உள்கட்டமைப்பில், அளவுக்கு மீறிய அதிர்வுகளையும் சரிபண்ண முடியாத பிளவுகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

 சி.பி - ஈரோடு என் கே கே பி ராஜாவுக்குத்தான் மொத ஆப்பு.. அண்ணன் ஆடிப்போய்ட்டார் இல்ல?

ஆளும் கட்சியான அ.தி.மு.க-வின் தவறுகளைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு அரசியல் பண்ண முடியாமல், தங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அரசியல் மட்டுமே செய்தாக வேண்டிய நெருக்கடியை இந்த நிலநடுக்கங்கள் தி.மு.க-வுக்கு உருவாக்கிவிட்டன!


சி.பி - அவனவன் ஃபாரீன் போய் செட்டில் ஆனா போதும், சொத்தே வேணாம், ஆளை விடுங்கடா சாமின்னு அலரிட்டு இருக்காங்களாம்.. 


முதல்வர் ஜெயலலிதா தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமலே தொடங்கினாரா எனத் தெரியவில்லை. தி.மு.க-வின் அஸ்திவாரத்தை ஆட்ட நிலப் பிரச்னைதான் சரியான வழிமுறை என்று கையில் எடுத்தார்.


சி.பி - செஸ்ல குதிரையை பயன்படுத்தி ஒரு மூவ் வைப்போம், ஆனா எதிர்பாராத விதமா அது ராஜாவுக்கும், ராணிக்கும் டபுள் செக் ஆகிடும், அது போல அம்மாவும், அய்யாவும் மாட்டாப்போறாங்க இதுல.. 

முதலாவது கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுக்குப் பின்னால், ''தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நில அபகரிப்புகள் தொடர் பான ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதே, அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பப் பெற்றுத் தருவேன்’ என்று நான் அறிவித்து இருந்தேன்.

சி.பி - ஆமாமா, அம்மாவுக்கு என்ன கோபம்னா நம்ம ஆட்சில நம்மால பண்ண முடியாத , நமக்குத்தோணாத பல ஆங்கிள்கள் இவங்களூக்குத்தோணி இருக்கே? அப்டின்னு ஒரு அங்கலாய்ப்பு , 

அந்த நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதுவரை 2,800-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்து உள்ளன'' என்று அறிவித்தார் முதல்வர். கடந்த ஆட்சியில் புகார் கொடுக்காதவர்கள், புகார் கொடுக்கவிடாமல் தடுக்கப்பட்டவர்கள், புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைவிடப்பட்ட வர்கள், யாருக்கும் சொல்லாமல் உயிர் பயத்தால் மறைத்துக் கொண்டவர்கள் எனப் பலரும் தங்கள் மனுக்களுடன் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் முன்னால் நின்றார் கள். 'இதற்குத்தானடா காத்திருந்தோம்’ என்பது மாதிரி, மொத்தமாக கோழிகளை அமுக்க ஆரம்பித்தது ஆளும் அரசு!

சி.பி - 2800 புகார்ல பாதிக்குப்பாதி உண்மைன்னு வெச்சுக்கிட்டாக்கூட ... அடேங்கப்பா..!!!!!!!!!!!!



''நியாயமான வழக்குகளாக இருந்தால், அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களாக இருந்தால், வழக்குப் போடுவதில் தவறு இல்லை. இந்த நடவடிக்கைகளைக் கடந்த தி.மு.க. ஆட்சி என்று மட்டும் வைத்துக்கொள்ளாமல், அதற்கும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்டவைக்கும் சேர்த்து வழக்குகள் போட வேண்டும்.

சி.பி - நமக்கு ஒரு கண் போனா பரவாயில்லை, எதிரிக்கு 2 கண் போகனும், இது தானே தமிழனின் பண்பாடு பலே பேஷ்.. சபாஷ்.. 

விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட சிறுதாவூர் நிலமும் இத்தகைய புகாருக்கு உள்ளானதுதான்'' என்று கருணாநிதி பதிலடி கொடுக்க, ''ஏற்கெனவே அன்றைய விலைக்கு நிலங்களை விற்றவர் கள், இன்று விலை கூடிவிட்டதற்காக அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு புகார் கொடுக்கிறார்கள். நான் ஒரு நிலத்தை டி.ஆர்.பாலுவிடம் 10 லட்சம் கொடுத்து வாங்குகிறேன். அதன் விலை கூடிய பிறகு, அதிக பணத்துக்கு பாலு ஆசைப்பட்டு, என் மீதே வழக்குப் போட்டால் ஏற்க முடியுமா?'' என்று மன்னார்குடி கூட்டத்தில் கேட்டார் ஸ்டாலின்.

சி.பி - ஏப்பா லபோ திபோன்னு அடிச்சுக்கறீங்க? உங்க மேல தப்பில்லைன்னா ஏன் கோபம் வருது..?


இவை அனைத்துக்கும் தமிழக அரசின் பதில் இரண்டே வரிகள்தான். 'பொதுமக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யார் மீதும் இட்டுக்கட்டி, எந்தப் பொய் வழக்கையும் போடவில்லை!’

சி.பி - அப்படித்தான் பொய்யா வழக்கு இருந்தா என்ன? இவங்க என்ன சத்திய சீலர்களா/ இவங்களும் பொய்யர்கள் தானே?   பொய்யர்கள் மேல் பொய் வழக்குப்போடா தப்பில்லை



மூன்று மாதங்களுக்கு முன்னால் விவசாயத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கைத்தறித் துறை அமைச்சராக இருந்து கருணா நிதியால் பதவியைவிட்டும் கட்சியை விட்டும் நீக்கப்பட்டு, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி.ராஜா ஆகிய இருவரும் கோவை சிறை யில் இருக்கிறார்கள்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனும் பாளை சிறையில் வைக்கப்பட்டார்கள். தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ- வுமான ஜெ.அன்பழகன் கோவை சிறையில் இருக்கிறார். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மு.க.அழகிரியின் வலதுகரமுமான 'பொட்டு’ சுரேஷ் பாளை சிறையிலும், மதுரை வேளாண் விற்பனைக் கிடங்கின் முன்னாள் தலைவரும் மு.க.அழகிரியின் இடதுகரமுமான 'அட்டாக்’ பாண்டி, திருச்சி சிறையிலும் இருக்கிறார் கள். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைதாகி விடுதலை பெற்ற எஸ்ஸார் கோபி மதுரை சிறையில் இருக்கிறார்.


சி,பி - ஆஹா, திமுகவில் தான் எத்தனை தியாகிகள்!!!!!!!!!!!!!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவரும் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பின ருமான வி.கே.குருசாமி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் 'பொட்டு’ சுரேஷ், 'அட்டாக்’ பாண்டி, வி.கே.குருசாமி, புரசை ரங்கநாதன் ஆகிய நால்வருடன் சேர்த்து பூண்டி கலைவாணன் மீதும் குண்டர்கள் தடுப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது. திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வலது கரமுமாகிய குடமுருட்டி சேகர், கஞ்சா வைத்துஇருந்ததாகக் கைது செய்யப்பட்டார்.

சி.பி - இந்த பன்னாடைங்க பேரைப்பார்த்து சினிமாரவுடிகளுக்குப்பேர் வைக்கிறாங்களா? அல்லது இவனுங்க சினிமா பார்த்து வெச்சுக்கறானுங்களா? 

ராமநாதபுரத்திலும் திருப்பூரிலும் தி.மு.க-வின் கீழ்மட்டப் பதவிகளில் இருந்த பலரும் நில அபகரிப்பு வழக்குகளில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பலர் மீது புகார்கள் வரிசை கட்டி வரத் தொடங்கி உள்ளன.

சி.பி - எல்லா பரதேசிகளூம் மட்டம் தான், இதுல கீழ் மட்டம் என்ன? மேல் மட்டம் என்ன? 


செய்தித் துறையின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது வில்லிவாக்கத்தில் நில அபகரிப்புப் புகார், சென்னை மாநகரக் காவல் துறையில் பதிவாகி உள்ளது. திருச்சி யில் உள்ள காஞ்சனா ஹோட்டல் சொத்தைக் கைமாற்றி விடும் விவகாரத்தில் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் சம்பந்தப்பட்டதாக நாமக்கல்லைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் கொடுத்த புகார் இப்போதுதான் புகைய ஆரம்பித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் போட்டார் நேரு. '16-ம் தேதி வரைக்கும் அவரைக் கைது செய்யக் கூடாது’ என்று விசாரணை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

சி.பி - அண்ணன் 16 ஆம் தேதிக்குள்ள ஃபாரீன் போயிடுவாரு பாருங்க. 



வருவாய்த் துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி மீது காவல் துறை இயக்குநரிடம் அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் சுந்தர்ராஜன், என்பவர் தந்திருக்கும் புகாரைப் படிக்கவே பயமாக இருக்கிறது. சொத்தை அபகரிக்க நடந்த மோதலில் பல திடுக்கிடும் திருப்பங்களும் மர்ம மரணங்களும்கொண்ட திகில் கதைபோல அது இருக்கிறது. உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தன்னுடைய கல்லூரியின் வளர்ச்சிக்காக மற்றொரு நிர்வாகத்தின் கல்லூரியை எப்படி முடக்கினார் என்பதும், தனது கல்லூரிக்கான இடத்தைக் கையகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளும் போலீஸ் விசாரணையில் உள்ளன.


அனைத்துக்கும் மேலாக, மதுரை உத்தங்குடியில் நாகர் ஆலயத்துக்குச் சொந்தமான இடம், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி பேருக்குக் கைமாறியதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும், கருணாநிதியின் படங்களுக்கு ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் பங்களிப்பு எத்தகையது என்பதையும் போலீஸ் விசாரித்துக்கொண்டு இருக்கிறது. திருவொற்றியூர் பரணிகுமாரை மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் சாமியும் அவரது தம்பி சொக்கலிங்கமும் தாக்கியதாகப் புகார்.


''பொய் வழக்குகளை வேகவேகமாகப் போட்டு, கழக மாவீரர்களை சல்லடைக் கண்களால் துளைத்துவிடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. குண்டர் சட்டத்தை தி.மு.க-வினர் மீது பயன்படுத்துவதைப் பார்த்து, 'ஒரு பயங்கரமான ஆட்சியை நான் நடத்துகிறேன் பார்’ என்று காட்ட நினைக்கிறார்'' என்று கருணாநிதி திருவாரூரில் சொல்லி இருக்கிறார்.


கைதானவர்கள் குற்றவாளிகள்தானா என்பதை போலீஸ் நிரூபிக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கட்டும். ஆனால், புகார் கொடுத்தவர்கள் பலர் அப்பாவிகள்தான். மதுரை திருமலை நாயக்கர் கோயிலுக்கு அருகில் இருக்கும் வீட்டை யும் கடையையும் பறிகொடுத்த கல்பனா, ''நான் அட்டாக் பாண்டியோட சொந்தக்காரங்க. அவர் பேரைச் சொன்னா, ஊரே அதிரும்ல'' என்று சொல்லி, தன்னை மிரட்டியதாகச் சொல்கிறார். திருமங்கலம் பாப்பாவையும் அவரது கணவர் சிவனாண்டி யையும் பொட்டு சுரேஷ் தன் அலுவலகத்துக்கு வரச் சொல்லி மிரட்டியதாகச் சொல்கிறார்கள்.


சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள 23 குடும்பங்கள் நான்கு ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கின்றன. உத்தங்குடி நாகர் ஆலயத்தின் வி.வி.சுப்பிரமணியன் ஐயர் நில அபகரிப்பையும், அதனால் ஒருவர் காணாமல் போன கதையும் பரபரப்பு. காடுவெட்டிப் பாளையத்தில் பேப்பர் மில்லை கை மாற்றிவிடும் விவகாரத்தில் ஜெ.அன்பழகனின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார். அவனியாபுரம் பாண்டியராஜின் மனைவி பாண்டீஸ்வரி தனது கணவரைக் கொன்று, அதை ஒரு விபத்தாகக் காட்டிவிட்டார்கள் என்று எஸ்ஸார் கோபி தரப்பு மீது கை நீட்டுகிறார். மிகமிக மேலோட்டமாகப் பார்த்தால், கஞ்சா வைத்து இருந்ததாகக் கைது செய்யப்பட்ட திருச்சி பிரமுகர் தவிர, அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களால் போடப்பட்ட வழக்குகளாகவே இருக்கின்றன.


இந்த நடவடிக்கைகளைப் பார்த்து நம்பிக்கைகொண்ட பலரும், புதிய புகார்களுடன் புறப்பட்டு உள்ளார்கள். போகிற போக்கைப் பார்த்தால், இந்த நில நடுக்கத்தில் இருந்து தி.மு.க. தப்பிப்பது பெரும்பாடாக இருக்கும். சிவில் வழக்குகளில் கிரிமினல் செக்ஷன்களும் சேரும்போது சிக்கிய தனி மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் வழக்குடன் மல்லுக்கட்டுவதாகவே முடிந்துபோகும். அத்தகைய சுழலில் தி.மு.க-வினர் சிக்கியது மட்டும் அல்ல... கட்சியையும் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார்கள்!

சி.பி - நல்ல வேளை ஆட்சி மாறுச்சு, இல்லைன்னா இந்த முறையும் செகண்ட் ரவுண்ட் நில மோசடியை ஆரம்பிச்சிருப்பாங்க.  இந்த மேட்டரைப்பற்றி சன் டிவி,அல்லது கலைஞர் டி விலயோ மூச் விட மாட்டேங்கறாங்க. ஏன்னா அந்த நிர்வாகிகள் மேலயும் வழக்கு இருக்கே?


 thanx - vikatan 

Tuesday, February 22, 2011

சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?

http://www.cinemaexpress.com/Images/article/2010/3/17/15suntv.jpg 
எனது சொந்த ஊரான சென்னிமலையில் ஊரின் செண்ட்டரான இடமான வண்டிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் குமரன் சிலை எதிரே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஃபேன்சி ஸ்டோர்  & ஜவுளிக்கடை வைத்திருப்பவர் ஆறுமுகம் என்பவர்.ஆறுமுகம் கடை என்றால் ஊரில் தெரியாத ஆள் இல்லை. அந்தளவு ஃபேமஸ்.

இவரது மகன் நாகராஜன்.இவரது மகள் சங்கீதா. இவர் எம் எஸ் சி விசுவல் கம்யூனிகேஷன்  ( VISUAL  COMMUNICATION)படித்து சென்னையில் சன் டி வியில் நிருபராக வேலை பார்த்து வந்தார்.19.2.2011 சனி அன்று இவர் ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்ததாக 21.2.2011 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.( 2-ம் பக்கம்).

நான் விசாரித்த தகவல் மற்றும் எனது சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

1. சன் டி வி-யின்  ஐ டி கார்டு  TAG எப்போதும் இவர் அணிந்திருப்பார்,அல்லது இவரது கைப்பையில் அது இருக்கும்.விபத்து இரவு 7 மணிக்கு  நடந்ததாக கூறப்படுகிறது.ரயில்வே போலீஸ் இவரது ஹேண்ட்பேக்கை பார்த்து அவரது அட்ரஸ்,வேலை பார்க்கும் நிறுவனம் என எங்கேயும் தகவல் சொல்லாமல் விட்டது ஏன்? இரவு 10 மணிக்கு அவரது அறைத்தோழிகள் விசாரித்த பிறகே செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்கிரது.

2. போலீஸ்-இன் F I R  காப்பியில் (FIRST INFORMATION REPORT) விபத்தைப்பார்த்த ஆட்களின் சாட்சியம் பதிவு செய்யப்படவில்லை,ரயில்வே ஊழியர் ஒருவரின் கூற்றுப்படி செல் ஃபோனில் பேசியபடி வந்ததாகவும்,அது ரயில்வே டிராக்கில் விழுந்திருக்கலாம் எனவும்,அதை எடுக்க இவர் முயலும்போது அனந்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாகவும் தெரிகிறது.ஆனால் எல்லாம் ஒரு அனுமானமே (ASSUMPTION). ஏன் ரயில் நிலையத்தில் உள்ள பொது மக்களிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கவில்லை?

3. சாதாரணமாக ஒரு யானை இறந்தாலே புகைப்படம் போடும் பத்திரிக்கைகளில் இந்த விபத்தில் ஏன் டெட் பாடியை ரயில்வே டிராக்கில் இருப்பது போல் காட்டவில்லை.?

4. செய்தியில் தனியார் தொலைக்காட்சி என்றுதான் போட்டு இருக்கிறார்கள். சன் டி வி பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiosT4fVGQzPnf7fhTWql-m9Mh3NPp21jkFmEsWTjlMcF7kyOQvy7DJx0xtge1M952v1IhbY0eiSLfBGQfGZZSeJfq0Xu_WlTxY28Ri4MN0ARch3tPxvDH1dBYUf_Te3duLxazewqypLyYV/s1600/Train.jpg
5. கடைசியாக அவர் யாருடன் செல் ஃபோனில் பேசினார் என்பதை போலீஸ் ஏன் ட்ரேஸ் அவுட் செய்யவில்லை?

6. சங்கீதாவுக்கு வரும் மார்ச் மாதம் 7-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.அவர் மன ஒப்புதலுடனே இந்த மேரேஜ் நடக்கிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது.( கல்யாணப்பத்திரிக்கைகளை நண்பர்களுக்கு கொடுத்திருக்கிறார்,வருங்கால கணவருடன் ஃபோனில் அடிக்கடி பேசி இருக்கிறார்). எனவே தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.

7. மாதம் ரூ 30,000 சம்பளம் வாங்கும் இவர் ஏன் ரயிலில் பிரயாணம் செய்து ஆஃபீசுக்கு போறார்?பத்திரிக்கை செய்தியில் ஸ்கூட்டி வைத்திருப்பதாகவும் அவர் குடி இருக்கும் காவேரி நகரில் இருந்து சைதாப்பேட்டை வரை ஸ்கூட்டியில் போய் அங்கே வண்டியை பாஸ் போட்டு நிறுத்தி விட்டு ரயிலில் ஆஃபீசுக்கு போவார் என கூறுகிறார்கள்.இது பற்றி போலீஸ் ஏன் எதுவும் விசாரிக்கவில்லை?

8. பத்திரிக்கை செய்தியில் தனியார் டி வி சப் - எடிட்டர் மரணம் என உள்ளது.ஆனால் அதே பேப்பரில் இரங்கல் செய்தியில் அவர் நிருபர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கும் சன் டி வி பெயர் இல்லை. இந்த முரண்பாடு ஏன்?நிருபர் என போடும்படி நிர்ப்பந்தம் ஏதாவது நடந்ததா?