Tuesday, April 12, 2011

கலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் பிரம்மாஸ்திரம்...



 

 

டந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!


தி.மு.கழகத்துக்கு அறிஞர் அண்ணா தொடக்க விழா கண்டபோது, அவரைச் சுற்றி மெத்தப் படித்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், கால ஓட்டத்தில் 'செயல் வீரர்’ என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டார் கருணாநிதி. பேச்சும் எழுத்துமே மூச்சாகக் கழகம் வளர்ந்தபோது, அதோடு சேர்த்து ஓய்ச்சல் இன்றி ஊர் ஊராகப் போய் நேரடியாகத் தொண்டர்களைப் பார்த்து தட்டிக் கொடுப்பதிலும் கூடுதல் நேரம் செலவிட்டார் கருணாநிதி.


ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்களைத் தாண்டி, அண்ணாவுக்கு அடுத்து தலைமை நாற்காலியைத் தனதாக்கிட கருணாநிதிக்குப் பக்கத் துணையாக நின்ற மூன்று தகுதிகள் - நிர்வாகத் திறமை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்... இதோடு, சொல்லில் அஞ்சாமை!




ஐந்து முறை முதல்வர், பத்தாம் முறை தி.மு.க. தலைவர் என்று அரிய பெருமையுடன் திசை விலகாது தொடர்ந்த கருணாநிதியின் பொது வாழ்க்கைப் பயணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்ப முடியாத அளவுக்கு அலை பாய்ந்தது.

'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல!' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அவர், ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் காட்டியது இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்தான்!

மதுரையில், ஒரு கும்பல் பத்திரிகை அலுவலகத்தைத் தீயில் பொசுக்கி, மூன்று அப்பாவி உயிர்களைச் சாம்பலாக்கியபோது, அந்த அராஜகக் கும்பலை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டியவர், 'சர்வே வேண்டாம் என்றேன். சொன்னால் கேட்டால்தானே?' என்று வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டிய விபரீதம் நிகழ்ந்தது.




  a
இலைமறை காயாக அதுவரை தென்பட்ட அவருடைய குடும்பப் பாசம், அந்தக் கணத்தில் இருந்துதான் அச்சமூட்டும் வகையில் சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது!

காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் டெல்லிக்குப் போகாத கருணாநிதி... தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது... இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை.

நினைத்ததைச் சாதித்துக்கொண்டு திரும்பியபோது, குற்ற உணர்வுக்குப் பதிலாக, வெற்றிக் களிப்பே அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது!


.
 
ஈழத் தமிழர்கள் ஈசல் கூட்டம்போல் நசுக்கிக் கொல்லப்பட்டபோது, அவர் காட்டிய மௌனமோ, 'வீழ்வது தமிழனாக இருப்பினும்... வாழ்வது நாமாக இருக்கட்டும்!' என்று சொல்லாமல் சொல்லும்படி அமைந்தது. மேடைகளில் மட்டும் இன்றி... அச்சிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும், குறுஞ்செய்திகளிலும் இந்த அளவுக்குக் கடுமையாக ஒரு தலைவர் எங்காவது விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பாரா?

வரலாற்றின் பக்கங்களில் தேடினாலும் விடை கிடைக்காது! அந்த விமர்சனங்களின் வலியைவிட, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு இணக்கமாகப் போவதால் கிடைக்கும் சுகம் கூடுதலாக இருந்தது. அதுவே, கேள்விகளுக்குப் பதில் தராமல் தடுத்தது!


 

  a

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி நாடே கொந்தளித்தபோது... 'தகத்தகாய கதிரவன்' எனப் பட்டம் சூட்டி கருணாநிதி உச்சி முகர்ந்த காட்சி... குடும்பப் பாசத்தோடு சேர்ந்து 'வேறு' சில நிர்பந்தங்களுக்கும் அவர் கடன்பட்டு இருப்பதாகவே காட்டியது.

முன் ஏர் கொண்ட பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டன பின் ஏர்கள். மாநில மந்திரிகள் பலர் மீதும் இந்த ஆட்சியில் அடுக்கடுக்கான அதிர்ச்சிப் புகார்கள். குடும்பப் பாசத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், வாரிசு வளர்ச்சிக்கும், கொண்டாட்டக் குதூகலத்துக்கும் தி.மு.க-வின் மந்திரிகளும் விதிவிலக்கு அல்ல.

விலைவாசி ஏற்றத்தால் தவித்துத் தள்ளாடிய மக்களுக்கு ஆரோக்கியமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, 'இலவசங்கள் இருக்கையில் எதிர்காலம் பற்றி ஏன் கவலை' என்று மயக்க மருந்து கொடுத்தே தன் கடமையைக் கழித்துக்கொள்ளப் பார்த்தது தி.மு.க. அரசு.





 
 

 a

'பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்' என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! 'மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்' என்று சொல்லி... அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!

விவசாயம் அற்றுப்போய்விட்டது... விவசாயக் கூலிகள் நம்பிக்கை இழந்து நடுவீதிக்கு வந்துவிட்டார்கள் என்ற கதறல்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, 'வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கூலி உறுதி' என்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கவர்ச்சி காட்டி- மத்திய அரசின் நற்சான்றிதழோடு - கொடுத்தது ஒரு காசு, கணக்கிலே வேறு காசு என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்க வாய்ப்பு உண்டாக்கிக் கொடுத்தது இந்த அரசின் தனி 'சாதனை'!




 

 
  a
உழைத்துதான் பிழைப்பேன் என்று தறி நெசவையும் மற்ற ஆலைகளையும் நம்பி இருந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்தியது மாளாத மின்வெட்டு! விவசாயம் துவங்கி, துணி சாயம் வரை இந்த மின்வெட்டால் இருண்டுபோன குடும்பங்கள் எத்தனை எத்தனை!

இல்லாதவர்களுக்கு இலவசங்களைத் தருவதில் தவறில்லை... ஆனால், விலைவாசியை உச்சத்துக்குக் கொண்டுசென்று, உழைப்பவர்களை இலவசத்தால் வெட்டியாக வீட்டுக்குள் முடக்கிவைத்து, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை நிரப்பி, உயர்கல்வியைக் கைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டுசென்று, எதிர்காலச் சந்ததியையும் சுயமாகச் சிந்திக்க முடியாத மந்த நிலையிலேயே ஆழ்த்தி வைக்கும் தந்திரத்துக்குப் பெயரா மக்கள் நலத் திட்டம்?

'உங்களுக்காகவே ஐந்து முறை முதல்வராக உழைத்தேன். ஆறாம் முறையும் உங்களை வைத்து வண்டியை இழுக்க வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசார மேடைகளில் வாக்கு கேட்கிறார் முதல்வர் கருணாநிதி.



 


வண்டியை இழுக்க இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்தப் பயணம் தனக்கு அல்ல... பாதை போட்டுக் கொடுக்க மட்டுமே தன்னைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதைத் தமிழக வாக்காளன் மறந்துவிடலாமா?

Monday, April 11, 2011

கலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி தேர்தலுக்கு முந்தின தேர்தல் இது

http://www.cinesouth.com/images/new/kushboo-0302.jpg 

ன் கால்கள் ஓடி விளையாடிய இந்த திருவாரூர் மண்ணுக்கு மறுபடியும் வர, என் உடல் ஒத்துழைப்பு கொடுக்குமோ கொடுக்காதோ... ஆனால், இங்கே வரும்போது மட்டும்தான் என் மனம் நிறைவுகொள்கிறது!’ - ஐந்தாவது முறையாக முதல் அமைச்சர் பதவி ஏற்ற கருணாநிதி, இந்த ஆட்சியின் தொடக்கக் காலத்தில் காட்டூரில் உள்ள அஞ்சுகத்தம்மாள் நினைவு இல்லத்துக்கு வந்தபோது, சொன்ன வார்த்தைகள் இவை. இப்போது ஆறாவது முறையாக முதல்வர் பதவியில் அமர, கருணாநிதி முன்கூட்டியே தன் தாயின் நினைவிடம் போய் நிற்கிறார்!


அய்யாவுக்கு அம்மா மேல அன்பு இருந்தாலும் அய்யா கட்சிக்காரங்களுக்கு அம்மான்னா யம்மா தான்... 


திருவாரூர் நண்பர்களையும் உற்ற உறவுகளையும் கசிந்த கண்களோடு பார்த்துவிட்டுப் பேச்சைத் தொடங்கினார் கருணாநிதி. ''எந்த மண்ணில் என் தோழர்களோடு விளையாடிக் களித்தேனோ, எந்த மண்ணில் என் நண்பர்களோடு படித்தேனோ, எந்த மண்ணில் இருந்து என் அரசியல் பயணத்தைத் தொடங்கினேனோ... அந்த மண்ணில் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.

மண்ணை பற்றி அதிகம் பெசறாரே.. மணல் கொள்ளையை தடுப்பாரா?

இதில் எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. வேறு வழியின்றி நான் இங்கே போட்டியிடுகிறேன் என்று சொல்ல மாட்டேன்.

நீங்க உண்மைலயே தில் உள்ளவர்னா சென்னைல போட்டி இட்டிருக்கனும்.. இந்த ஒரு விஷயத்துல மட்டும் நீங்களும் ,ஜெவும் ஒரே மாதிரி.. பூர்வீக இடத்துல போட்டி இடறீங்க...

http://www.southindianactresses.net/d/41717-4/Kushboo-Wallpaper-001.jpg
எனக்கே ஏற்பட்ட ஆசையின் காரணமாகத்தான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். பல இடங்களில் நான் வெற்றி பெற்று இருந்தாலும், 'உன் சொந்த மண்ணில் வீரத்தைக் காட்ட ஆற்றல் உண்டா?’ என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சம் எனக்கு உண்டு. அதனால்தான், திருவாரூரில் போட்டியிடுகிறேன்.

சென்னையில் போட்டி இட்டா படு கேவலமாக தோற்றுவிடுவேனோ என்ற அச்சம் உண்டு # மனசாட்சி


1957-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால், தனித் தொகுதிஆக்கி என்னைத் தடுத்துவிட்டார்கள். இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது!'' 

வாய்ப்பா? ஏய்ப்பா?

''இந்தத் தேர்தலில், 'எனக்கு வாக்களியுங்கள்; எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ எனக் கேட்பேனே தவிர, 'யாருக்கு வாக்களிக்கக் கூடாது’ என்றெல்லாம் பேச மாட்டேன்.

படத்துல எழுதற வசனம் தான் புரியலைன்னா மேடைல பேசற வசனமுமா?

ஏனென்றால், திருவாரூரில் இருக்கும் அனைவரும் எனது சொந்தக்காரர்கள். அரசியலில் நான் அங்குலம் அங்குலமாக உயர்ந்ததற்குக் காரணமாக இருந்தவர்கள். நான் அவர்கள் மீது எதிர்ப்புக் கணைகளை வீசி, ஒரு லேசான காயத்தைக்கூட ஏற்படுத்த விரும்பவில்லை. தப்பித் தவறி, அப்படி ஒரு சிராய்ப்பை உங்கள் இருதயத்தில் ஏற்படுத்தினேன் என்றால், அதற்காக மன்னித்துவிடுங்கள்!'' என முதல்வர் பேசப் பேச, 'ஓர் அரசியல் தலைவனின் பக்குவம் இப்படி அல்லவா இருக்க வேண்டும்’ என அசந்துபோனார்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.

தமிழன் பேசிப்பேசியே வீணாப்போனான்..... பேச்சை கேட்டு கேட்டும் மதி மயங்கிப்போனான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw8xxnf77WzwGeoYukFclQF68r94xFZtG_-MKoj0WGNu3xCiItHb6jBKSXSlhhb9C6WRBPp8QZpD8bQPdz9xbJ0SMbKH5RSbnqNfKCJxzyTMQMaKJhbt0dFEWaZD9qV1w5uH7a6TdheIE/s400/2008062851771201.jpg
மறுநாள் காலை கருணாநிதி, காட்டூரில் உள்ள தன் தாயார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப் போனார். குடும்ப உறவுகள் பலரும் சூழ்ந்திருக்க, தாயின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி, சில கணம் அமைதியாக நின்றார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் கிளம்பி வந்து, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அடிக்கடி திருவாரூருக்கு வந்துபோகும் வழக்கமுடைய அழகிரி, அங்கே இருந்த நண்பர்களிடம், ''என்னய்யா, தலைவரை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வெச்சிடுவீங்களா?'' எனக் கேட்டு உற்சாகமாக உரையாடியபடி இருந்தார்.

ஓட்டுக்கு ரூ 5000 தர்றீங்க.. அந்த ஓட்டு வித்தியாசம் கூட இல்லைன்னா கொடுத்த காசுக்கு என்ன மரியாதை?


முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழநிமாணிக்கம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைவாணன், நாகை மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, முதல்வரை ஜெயிக்கவைக்க இரவும் பகலுமாக இயங்கி வருகிறது. இதற்குஇடையில், கருணாநிதியின் வெற்றிக்கு அணை போடும்விதமாக அ.தி.மு.க. தரப்பு கிராமங்கள் தோறும் சாதிரீதியான கூட்டங்களை ரகசிய மாக நடத்தி வருகிறதாம்.

ஐவர்  குழுவோட வேலை என்ன? பண பட்டுவாடாவா?

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முக்குலத்து வேட்பா ளரான 'குடவாசல்’ ராஜேந்திரன் இரவு பகல் பாராமல் திருவாரூர் தெருக்களைச் சுற்றி வருகிறார். ''இதுவரை தோல்வின்னா என்னன்னே தெரியாத கருணாநிதிக்கு, நம்ம சமுதாயம்தான் சரியான அடி கொடுக்கணும்.
 http://farm3.static.flickr.com/2651/4137255345_15cf7a5898.jpg
எப்படி? நீங்க ஓட்டுக்கு ரூ 10000 தரப்போறீங்களா? போங்க தம்பி போங்க.. 

திருவாரூரில் கருணாநிதியை வீழ்த்துவதன் மூலமா நம்ம சமுதாயத்துக்கே பெரிய பெயரைத் தேடிக்க முடியும். வரலாற்று வாய்ப்பாகக் கிடைச்சிருக்கும் இந்தத் தேர்தலை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!'' என குடவாசல் ராஜேந்திரனுக்கு ஆதரவான முக்குலத்துப் பிரமுகர்கள் கிராமங்கள்தோறும் இரவுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஏம்ப்பா டைம் வேஸ்ட் பண்றீங்க?உண்மைலயே அம்மாவுக்கு தில் இருந்தா இந்த தொகுதில நிக்க வேண்டியதுதானே..? அதென்ன ரகசியம் தலைவர்கள் நேருக்கு நேர் மோதாம சேஃப்டியா டம்மி வேட்பாளர் இருக்கற ஏரியாவுல போட்டி இடறது...


இதுவரை கருணாநிதி பெற்ற வெற்றி வித்தியாசத்தைக் காட்டிலும், அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அவரை ஜெயிக்கவைக்க தி.மு.க. ஆதரவுப் பிரபலங்கள் அனைவருமே திருவாரூரில் டென்ட் அடித்துவிட் டார்கள். அன்பளிப்பு மேளாவும் ஆங்காங்கே களை கட்டுகிறது. முதல்வரின் தொகுதி என்பதால், திக்குமுக்காடிக் கிடக்கிறது திருவாரூர்!

 ஏம்ப்பா.. தேர்தல் கமிஷன்.. முதல்ல வி ஐ பிங்க நிக்கற தொகுதில பணப்பட்டுவாடா நடக்கறதை கண்காணிங்க... முக்கியமா ஏப்ரல் 11.. அன்னைக்குத்தான் பண பட்டுவாடா நடக்குதாம்...

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி முக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...


அரசியல் தட்ப வெட்பம், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி சீரான நிலையில் இல்லை. ஆளும் கட்சிக்கான எதிர்ப்போ... எதிர்க் கட்சிக்கான ஆதரவோ... தொகுதிக்குத் தொகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் மாறியபடியே இருந்தது. அதாவது 1996 சட்டமன்றத் தேர்தலிலோ, 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதோ இருந்த ஒரே சீரான அலை இம்முறை இல்லை... இது இரண்டாவது!

வேட்பாளரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பணம் மிக மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. பணம் கொடுத்தால்தான் ஜெயிக்கலாம் என்று பெரும்பாலான வேட்பாளர்கள் நினைப்பதும், பணம் கொடுத்தால் கொடுத்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்று பெரும்பாலான வாக்காளர்கள் நினைப்பதுமான மனோபாவம் அனைத்துத் தொகுதியிலும் வெளிப்படையான விஷயமாக இருக்கிறது. மக்கள் மனசை பணம் படைத்தவர் மாற்றலாம் என்ற விதி... மூன்றாவது சிக்கல்!


கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் (ஏப்ரல் 6, 7) இந்தத் தேர்தல் நிலவரங்களை அறிய நமது நிருபர் படை முயன்றது. மகுடம் யாருக்கு என்பது மே 13-ம் தேதிதான் தெளிவாகத் தெரியும். ஆனாலும் மகுடத்தை எட்டிப்பிடிப்பதற்கான ஓட்டத்தில் யார் முன்னே போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஜூ.வி-யின் இந்தத் தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல் உங்களுக்கு கலங்கரை விளக்கமாகக் காட்டும்.

நமக்குக் கிடைத்துள்ள எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தனித்து ஆட்சியை அமைக்கத் தேவையான மந்திர எண் 118 கிடைக்காது என்பதே இன்றைய நிலவரம். சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக அ.தி.மு.க. வரும் என்றே தெரிகிறது. அவர்கள் கூட்டணி ஆட்சியை அமைப்​பதற்கான சூழ்​நிலையே உருவாகும்​போல!

தேர்தலுக்கு இன்னமும் 6 நாட்கள் இருக்கும் சூழலில் 3 காரணங்கள் நாம் இதுவரை எடுத்த முன்னணி நிலவரத்தில், மாற்றங்கள் ஏற்படுத்தும் சக்தி படைத்தவை!

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளையும் மீறி, (அல்லது அவர்கள் தங்களைத் தாங்களே இறுக்கம் தளர்த்திக்கொண்டால்!) நினைத்த தொகுதி​களில் எண்ணிவைத்த பணத்தை விநியோகிக்க முடிந்தாலோ...

'மன சாட்சிப்படி வாக்களியுங்கள்’ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தது. தமிழகத்தில் பரவலாக 48 தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி ம.தி.மு.க-வுக்கு இருப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது.

இந்தக் கட்சியினருக்கு கருணாநிதி என்றால் எட்டிக் காய்தான். ஆனால், சமீபத்திய கடுப்பு ஜெயலலிதா மீதே அதிகமாக இருக்கிறது. மன வேதனை ஜெயலலிதா மீதான கோபமாக மாறினாலோ....

கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களது கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்தப்​போகும் லாஸ்ட் புல்லட் தாக்குதலைப் பொறுத்தோ...
இந்த முன்னணி நிலவரத்தில்  மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்​கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...
இது நமக்கான தேர்தல். யாரோ 234 பேரை எம்.எல்.ஏ.க்களாக ஆக்க... எந்தக் கட்சியையோ ஆட்சியில் அமர்த்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா அல்ல இது.

இதில் நாம் பார்வையாளர்கள் அல்ல. நாம் ஒவ்வொருவரும் பங்கேற்பாளர். நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம். படைப்புக் கடவுளுக்கு இருக்கும் வலிமை நமக்கும் உண்டு. அதை நிரூபிக்கும் நாள் ஏப்ரல் 13...
வாக்களிக்க மறவாதீர்கள்!


இளம் வாக்காளர்கள் யார் பக்கம்?

1. 2ஜி ஊழல் விவகாரம் மற்றவர்களைவிட இளைஞர்களிடமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், தி.மு.க. ஊழல் மலிந்த கட்சி என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது. அதனால், இளம்  வாக்காளர்கள் தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

2. தே.மு.தி.க. மீது இளம் வாக்காளர்களுக்கு இருந்த ஈர்ப்பு கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. இந்த முறை சிறு சலசலப்பு இருந்தாலும், இன்னமும் விஜயகாந்த் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.

3. வைகோ தேர்தலைப் புறக்கணித்து இருப்பது, இளைஞர்களிடம் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், அவர்களது வாக்கு அ.தி.மு.க. அணிக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு ஆதரவாகவும் மாறலாம்.

4. திரைப்படத் துறையில் கருணாநிதியின் குடும்ப ஆளுமையால் விஜய் பட்ட துயரமும், அஜீத் மிரட்டப்பட்ட விவகாரமும் அவர்களின் ரசிகர்களையும் பாதித்து இருப்பது தி.மு.க-வுக்குப் பாதகம்.

5. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

6. பெரும்பாலான இளைஞர்களுக்கு 'ஜெயலலிதாவின் பழைய ஆட்சியைப்பற்றித் தெரியவில்லை!

7. கருணாநிதிக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள்!

8. படித்து நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்களுக்கு, சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை.

9. 'ஒரு சர்வாதிகாரி வரணும்... அவர் நல்லவரா இருக்கணும்’ என்று புதுத் தத்துவம் சொல்கிறார்கள்.

10. 'நிச்சயம் வாக்களிப்பேன்’ என்று பெருமையாகச் சொல்கிறார்கள்!

aa

Saturday, April 09, 2011

கலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்..ஆனா.... - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/ponnar-shankar/stills/ponnar-shankar-02.jpg

சரித்திரப்படத்துக்கு இந்தக்கால ரசிகர்களிடையே வரவேற்பு இருக்குமா? என்பது ஊர்ஜிதம் செய்யப்படாமல் இருந்தாலும் அது போல ஒரு கதையை படமாக்கத்துணிந்த இயக்குநர் கம் புரொடியூசர் தியாகராஜனுக்கு ஒரு பூச்செண்டு...

படத்தோட கதை என்ன? என்பதை நான் திரையில் கண்ட அளவு சொல்றேன்... குங்குமம் வார இதழ்ல தொடர் கதையை படிச்சவங்க,பொன்னர் சங்கர்-ன் உண்மைக்கதையை ஏற்கனவே அறிஞ்சவங்க என்னை திட்டக்கூடாது... ஏன்னா படத்துல எடிட் பண்ணுனது போக என்ன சொல்லி இருக்கோ அதைத்தான் நான் சொல்ல முடியும்..

ஒரு மன்னரோட பெண் வாரிசு விடிஞ்சா கல்யாணம்கற சூழல்ல தன்னோட முறைப்பையனைத்தான் கட்டிக்குவேன்னு அடம் பிடிக்கறா... வேற வழி இல்லாம சம்மதிக்கறப்ப பொண்ணோட அண்ணன் இனி இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக்கூடாது அப்படின்னு கேவலமா  பேசறான்.. உடனே தங்கை அண்ணன் கிட்டே சவால் விடறா.. உன் 2 பொண்ணுங்களையும் எனக்குப்பொறக்கப்போற 2 சிங்கக்குட்டிகள்(!!!!!!!!!!!!???????????) கல்யாணம் பண்ணிக்குவாங்க... இது சபதம் அப்படின்னு வீராவேசமா சொல்றா... அந்த சபதம் நிறைவேற்றப்படுது...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzDdfDqzPX7UqAH7gD_Y3NzN5fdrifZZt1fKXDCY1hyphenhyphenxwrHfR_swXSnpTjAXkNkH18QC12Wp44hexe_kcNfDDhlRfMH-PPsZmdnFJ734188D4wHqvuefQtq_IoT1N4a8aUrARGTwqmqqE/s1600/ponnar_shankar_movie_stills_photo_gallery_02.jpg

ஹி ஹி .. யாரப்பா அது கல்லோட வர்றது......அது வேற ஒண்ணுமில்லை... கதையை சுருக்கறப்ப அப்படி ஆகிடுச்சு போல..படத்தை மறுபடி போட்டுப்பார்த்த டைரக்டருக்கே மனசாட்சி உறுத்தி இருக்கும் போல.. கடைசி 2 ரீல்.. போர்க்களம், சுதந்திர நாடு.. என என்னமோ ஒப்பேத்தி இருக்காங்க...

படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு முதல்ல ஒரு ராயல் சல்யூட்... செமயான உழைப்பு.. காட்சிகளில் பிரம்மாண்டம்.. அதே போல் ஒளிப்பதிவாளர்... கேமரா கோணங்கள் பிரமாதம்.. பாடல் காட்சிகளில் டி ராஜேந்தரும் ஷங்கரும் இணைந்து பணியாற்றியது போல் ஒரு அவுட் புட்...
http://searchandhra.com/english/wp-content/uploads/2011/03/Ponnar-Shankar-Movie-Working-Stills-3.jpg
கலைஞரின் பேனா முனை விளையாடிய இடங்கள்.

1.  ஒருத்தனோட அழிவுலதான் இன்னொருத்தனோட  செல்வாக்கு வளருதுங்கறதுக்கு என்னோட வாழ்க்கையே ஒரு பாடமா இருக்கட்டும்...


2. வாழ்க்கைப்பாடம் படிக்க பள்ளிப்பாடம் எதற்கு? பள்ளியறைப்பாடம் போதாதா?

3.  நியாயத்தை மிதிச்சிட்டு நரகத்துக்கு போகச்சொல்றீங்களா?ஹூம்.. ராஜ தந்திரத்துல நியாய தர்மம் பார்க்கக்கூடாது... என் தலை விதி...

4. குழந்தை வரம் வேண்டும்னு ஆண்டவன் சந்நிதானத்தை தேடி போகும் மக்களே.. ஆண் பெண் உறவுலதான் அந்த பாக்கியம் கூடி வரும் என்பதை ஏன் மறந்தீர்கள்?

5. நீங்க வெற்றி பெற வேண்டும் என நான் தவம் இருப்பேன்.....

ஏன்? உன் தவத்தால தான் நான் வெற்றி பெறனுமா? என் வீரத்தால் அல்லவா?

6.  நீங்க சொல்ற யோசனைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அதர்மத்தின் சிகரத்துக்கே போகச்சொல்றீங்களே..... அதான் யோசனையா இருக்கு..?

7. ஆண்டவனுக்கு கொண்டு வந்த அமுதத்தை அர்ச்சகரை  சுவைக்க சொன்னது யார்?

8. பிறப்பாலயும், வளர்ப்பாலயும் உயர்ந்த வம்சத்துல பிறந்த நீங்க எப்படி இந்த மாதிரி சதிக்கு துணை போனீங்க?


9.. உண்டுகாட்டி என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கீங்களா? தலைவன் சாப்பிடும் முன் நல்ல உணவா என சோதனை செய்ய சாப்பிட்டுப்பார்க்கும் ஆள்.. அது நான் தான்.. பெண்ணே.. உன்னை அடைய என் தலைவன் தூக்கீட்டு வரச்சொன்னான்.. நான் முதல்ல உன்னை........ 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfpKMz_AxxOMo0Ph2tR3h6ziAQQ6DTNIRAXLLMpm9HbfgihNTJD17lRxEPXLUmJiOSJenbENlOfHde8QFGVevj5cdaaSHeL5bxWv2aNYBusUr8B1wWmaGCcIY1GcWFtw8_TcrW3jMHZRGL/s400/ponnar-shankar-tamil-movie-wallpapers-002.jpg
அடுத்து நடிப்பில் யார் யார் கலக்குனாங்கன்னு பார்க்கலாம்..

படத்தில் முதல் பாராட்டு பிரகாஷ்ராஜ்க்கு... வில்லனா வந்தாலும் அவரது கம்பீரம் அருமை... ராஜ நடை நடந்து வர்றாரே.. ஆஹா..

அடுத்து ராஜ்கிரண்.. அவருக்கான கெட்டப் சுமார் என்றாலும் நடிப்பு கனகச்சிதம்.. மூன்றாவதாக நெப்போலியன்.. அவரது ஆகிருதியான தோற்றமும் , கம்பீரமான குரலும் மறக்க முடியாது... குற்ற உணர்ச்சியில் குமுறும்போதும், கோபத்தில் பொங்கும்போதும் வெல்டன் சொல்ல வைக்கிறார்..

குஷ்பூ.. படத்தில் பல இடங்களில் இவருக்குத்தான் நடிக்க ஸ்கோப்... முகத்தால் 70%  முதுகால் 30% ( ஹி ஹி )

நாயகன் அதுவும் இரட்டை வேடங்கள் என்றாலும் பிரசாந்த்  இவர்கள் 4 பேரைத்தாண்டித்தான் ஸ்கோர் பண்றார்..

பொதுவாகவே பிரசாந்த்க்கு ஒரு ராசி உண்டு.. ஜீன்ஸ் படத்தில் இரு வேடங்களில் நடித்தாலும்  ஐஸ்வர்யாராயின் அழகும், பாடல் காட்சிகளின் ஆர்ப்பாட்டமும் அவரது நடிப்பை அமுக்கி விட்டது போல்.. இந்தப்படத்தில் காட்சி அமைப்பின் பிரம்மாண்டமும், மற்ற சில பாத்திரங்களின் வார்ப்பும் இவரது டாமினேஷனை குறைத்து விட்டது.




http://tkada.com/wp-content/uploads/2011/03/Sneha-Play-Role-of-Prashanth-sister-In-Ponnar-Sankar.jpg
இசை இளையராஜா.. சொல்லவே வேணாம்.. சரித்திரப்பின்னணி என்றதுமே அவரது திறமை எப்படி இருக்கும் என.. பாடல் காட்சிகளில், பின்னணி இசையில், போர்க்காட்சிகளில் என மனிதர் கலக்கி விட்டார்... 

 சண்டைக்காட்சி வடிவமைப்பும் ஓக்கே தான்.. ஓப்பனிங்க் ஃபைட் சீனில் ஜாக்கி சானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் படத்தில் பைக்கில் வரும் ஆளை ஓடி வந்து ஃபிளையிங்க் கிக் ஷாட் அடிப்பாரே.. அதே போல் ஒரு சீன் கலக்கலான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.. வெல்டன் ஸ்டண்ட் மாஸ்டர் & பிரசாந்த்..


 அதே போல் சினேகா பாடும் ஓப்பனிங்க் பாடல் காட்சியில் நடன தாரகைகளுக்கான ஆடை வடிவமைப்பும்,அவர்களுக்கான நடன அசைவுகளும் அருமை...அந்தக்கால மூவ்மெண்ட்ஸ்...அசத்தல்..

ஆனால் பிரசாந்துக்கு அவர் தங்கை என்பதால் ரசிகர்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனால் வந்தவரை அவரது பாத்திரத்துக்கான பங்களிப்பு ஓக்கே தான்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHewE0w1pxrpmg6q0lrOmsdPS-tPye4KO7mlAahJaO5BCUhcShn3Sfm4RZXeSbdCO8fYKLIsit4BoR76t0WLc2_SxsB-__R9XhaJZzp66SMDE29iuhCdjdwHXX4WKe9SBvQNBsH4Qvz4Lm/s1600/Divya%252BParameshwar%252BWallpapers%252Bgallery%252B(3).jpg
ஹீரோயின்கள் 2 பேர்.. அவர்களுக்கு 2 பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வேலை..

அவர்கள் முக அழகு ஆவரேஜ் தான்.. ஆனால் இடை அழகு...... வாழை மரத்தை ஆசாரியிடம் கொடுத்து வகிர்ந்தெடுத்து செய்யப்பட்ட சறுக்கு மரம் போலே தொட்டணைத்தூறும் நீர் ஊற்று போலே ஜில் என்ற காற்று போலே.....

இயக்குநருக்கு சில கேள்விகள். 


1. சாண்டில்யன், கல்கி, விக்ரமன் போன்ற எழுத்தாளர்களின் சரித்திர நாவலில் கதை ஆரம்பத்திலிருந்தே நாயகனின் பார்வையிலேயே போகும்.. அப்போதுதான் படிக்கும் வாசகர்கள் கதையில் ஒன்றி ஆர்வமாக படிப்பார்கள்.. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் மறந்து கதையை அதன் போக்கில் சொல்லி விட்டது பெரிய குறை..

2. நாயகனாக இரட்டை சகோதரர்கள் இருந்தும் அவர்கள் கேரக்டர் என்ன? அவர்கள் விருப்ப வெறுப்பு என்ன? என்ற எந்த தகவலும் சொல்லப்படவில்லை.. எப்படி பாத்திரத்தோடு ஆடியன்ஸ் ஒன்ற முடியும்?

3. போர்க்காட்சிகளில் கேடயத்தில் அம்பு தைத்து நிற்பது போலேஇருக்கே.. அம்பு இரும்பு... கேடயமும் இரும்பு.. எப்படி? கேடயத்தில் பட்டு அம்பு கீழே விழும் அவ்வளவுதான்...

4. ஊழிக்காற்றில் ஊரே அலறி அடித்து ஓடும்போது இரு நாயகர்களும் மற்றவர்களைப்பற்றிக்கவலைப்படாமல் நாயகிகள் இருவரை காப்பாற்றுபது அவர்கள் பாத்திரப்படைப்பை கேவலப்படுத்துகிறதே...( ரியல் கதையில் அவர்கள் பலரை காப்பாற்றினார்கள்)

5.  குஷ்பூ தம்பதியினர் குழந்தை பாக்கியத்துக்காக தேர் இழுக்கறாங்க.. அப்போ வில்லனோட ஆள் வேணும்னே தேரை ஓட விடாம பண்றான்.. ஏதோ தோஷம்.. சுமங்கலிப்பொண்ணை பலி கொடுத்தாதான் தேரை இழுக்க முடியும்கறான்.. அப்போ குஷ்பூ பலி ஆக முன் வர்றாங்க.. இது லாஜிக்கே இல்லையே.. ஏன் பலி ஆக ஓக்கே சொல்லனும்..?

6. இரட்டைக்குழந்தைகளை முன் பின் அறிமுகம் இல்லாத இரண்டு தாதிப்பெண்கள் சர்வ சாதாரணமாக தூக்கி செல்வது நம்பும்படி இல்லை...

7. மன்னர் வம்ச குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்பதற்காக ராஜ்கிரண் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மாதிரி தன் குழ்ந்தைகளை கொல்லத்துணிவது எப்படி? ராஜ விசுவாசம் என்றால் அதற்கேற்ற காட்சிகள் இல்லை..?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvR-iG5lIXjsi-e_vGNicgaZ17_FKr3H3m5x5iC1hQn38-BtM7eJHQaFr2BJCuOBmELODiIEnSktbLk3EpGc-QMfUD9UKfrjEX8Iqne1NG1Hg0rZFPilbWVk8A707VRXS6HPjEU_8LaZA/s1600/divya_parameshwar_wet_bikini_wet_saree_pantie_bra_tamil_actress_hot_ass_plidd+%2525284%252529.jpg
8. போர்க்களத்தில் 20 அடி தூரத்தில் இருந்து கொண்டு நீண்ட வாளை எறிந்து கொல்வது போல் ஒரு சீன் உள்ளது.. சரித்திரக்குறிப்பில் வேலால் கொனறதாக வருது.. மேலும் குறுவாள் எனப்படும் கத்தியைக்கொண்டோ, வேல் அல்லது அம்பினால் மட்டுமே அவ்வளவு தொலைவில் இருந்து ஒருவரை கொல்ல முடியும்.. 

9.  நெப்போலியன் தற்கொலை செய்யும் சீனில் ஒரு லாஜிக் ஓட்டை.. வாளைமேலே வீசி எறிந்து அது கீழே வரும்போது தன் நெஞ்சைக்காட்டிக்கொண்டு நிற்கிறார்.. அது குத்தி உயிர் துறக்கிறார்.. அது சாத்தியமே இல்லை...அது அதிக பட்சம் 3 அங்குல அளவில் தான் காயத்தை ஏற்படுத்தும்.. உயிர் போகும்  அளவு ஃபோர்ஸ் வராது... 

10. பொன்னர் சங்கர் இரண்டு பேரும் ஒரு சீனில் கூட தன் தங்கை சினேகாவிடம் பேசுவது போல் காட்சியே வைக்கவில்லை.. அப்புறம் என்ன அண்ணன்மார் கதை..?

11.  நாயகர்கள் இருவரும் நாயகிகளை திருமணம் செய்து பிரம்மச்சரியம் விரதம் கடைப்பிடிப்பதை பெரிய தியாகம் போல் காட்டி இருப்பது தேவை இல்லாதது.. 

12.  ராஜ்கிரண் ஒரு சீனில் லேடியைப்போல மஞ்சள் பூசியது போல் அதீத மேக்கப்பில்  வர்றார்.. அது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGv18HSijdpkBbri15oWiWLxK5Y6wT1IpnPQY6vIP94CxDT8hd-Iit0Yqs7owTF9lv1JdK3GBZ5qkRl4_9V8ok7lD_-KzlgkhJzswcs_c7M0NfQuvAPIu7rPkaGIoFR1_aBwmnkOrXzFGe/s1600/divya%252Bparameshwar%252Bcleavage.JPG
13. குஷ்பூவை ஒரு காட்சியில் கொல்லும் வீரன் ஜெயராமை லேசா ஒரு கீறு கீறுகிறார்.. அதுக்கே அவர் சடன் டெத் ஆவது எப்படி?


படம் பிரம்மாண்டமாய் இருந்தால் மட்டும் போதாது.. திரைக்கதையில் அழுத்தம் இல்லை  என்றால் படம் தேறாது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்த வந்த படம்.. 

எல்லா செண்ட்டர்களிலும் சராசரியாக 25 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே

ஈரோடு ராயல், ஸ்ரீ லட்சுமி  2 தியேட்டர்ல ஓடுது

விகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf5H-TejWwHRqU4TxHF4NPLdZDzwWmH9yO7eKQFOPBHZOzNltg796Tadn-xQbl4WbH9m6Y_cC-p7iAMGTl1uYfRtbTZUWUFsSn_IH2eeHf5Ww8iGmm_zDtzEdbzKeJrsbgwgjw8cBQdA/s400/Banu-actress-photos-004.jpg_600
''முக்கியமான ஒரு போர்க் காட்சியை எடுக்கணும்.ராஜஸ்தான், சிக்கிம், ஜம்முகாஷ்மீர், ஆந்திரா, கேரளானு எல்லா மாநிலக் கோட்டைகளையும் பார்த் தோம். எதுவுமே செட் ஆகலை. கலைஞர் அய்யாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்.
 உடனே செட் ஆகிடுச்சாக்கும்?
'பெரம்பலூர் பக்கம் ரஞ்சன் குடியில் ஒரு கோட்டை இருக்கு. அங்கே போய்ப் பாருங்களேன்’னு சொன்னாரு.
 அந்த கோட்டைக்கு வழி காட்டி இந்த கோட்டையை  கோட்டை விடப்போறார்..
போய்ப் பார்த்தா, பக்காவா இருந்தது. அதுதான் கலைஞர்!''- 
 ஆமா.. எதா இருந்தாலும் பக்காவா ப்ளான் பண்ணி  செய்வார்.. பாவம் ஸ்பெக்ட்ரம்  விஷயத்துலதான் கோட்டை விட்டுட்டார்..
ஒவ்வொரு பதிலிலும் கலைஞ ரைக் கவனமாகக் கொண்டு வந்து முடிக்கிறார் நடிகர் பிரசாந்த். 'பொன்னர்-சங்கர்’ பிரமாண்டமாக வந்திருப்பது பிரசாந்த்தின் முகத்தில் பிரகாசத்தைக் கூட்டியிருக்கிறது.   

படம் பிரம்மாண்டமா வந்திருக்கு  ஓக்கே.. ரிசல்ட்...? இன்னொரு இளைஞனா.?உளியின் ஓசையா?அப்படின்னு இனிதான் தெரியும்... 

1. ''எப்படி வந்திருக்கு 'பொன்னர்-சங்கர்’?'' 


'' 'படம் எடுத்த தியாகராஜன் கைகளுக்கு முத்தம் கொடுக்கணும்’னு கலைஞர் அய்யாவே சொல்லிட்டார். இனிமே நான் என்ன சொல்ல? 'ஒரு வரலாற்றுப் படம் பண்ணணும். அதை கலைஞர்தான் எழுதணும்’ங்கிறது என்னோட ரொம்ப நாள்ஆசை.

வேண்டாத ஆசை.. ஹி ஹி 

நானும் அப்பாவும் கலைஞரிடம் விருப்பத்தைச் சொன்னோம். அவர் உடனே 'பொன்னர்-சங்கர்’ புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். கதை, களம், சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்கே ஒன்றரை வருஷம் எடுத்துக்கிட்டோம். 2009-ல் ஆரம்பிச்ச ஷூட்டிங், போன மாசம்தான் முடிஞ்சுது. 'பொன்னர்-சங்கர்’ கண்டிப்பா உங்களுக்குப் புது அனுபவமா இருக்கும்!''

 கொலையா கொன்னெடுக்கப்போறாரோ....

http://www.tamilactresspics.com/gallery/images/tamil-actress/bhanu/banu120807_05.jpg

2. '' 'பொன்னர்-சங்கர்’ சீரியஸான முயற்சியா? இல்லை, கலைஞரைத் திருப்திப்படுத்த எடுத்த படமா?'' 

''படம் பார்க்காமல் நீங்கள் கேட்ட இந்தக் கேள்வி என்னை வருத்தப்பட வைக்கிறது. 'என் படைப்புகளைப் படமாக எடுங்க’ன்னு கலைஞர் யாரிடமும் கேட்டது கிடையாது.

அவர் என்ன அழகிரியா? நேரடியா மிரட்ட?


இந்தப் படம் முழுக்க முழுக்க எங்களோட ஆசையால் உருவானது. ஷூட்டிங்கிலேயே பிஸியா இருந்ததால் இன்டர்வியூ, விளம்பரம் எதுவும் நாங்க கொடுக்கலை. அதனால எங்களோட உழைப்பு உங்களுக்குத் தெரியலை. படம் பார்த்துட்டு சொல்லுங்க!''

பார்த்தா சொல்றோம்


3. ''இந்தப் படம் எந்த வகையில் பிரமாண்டமா வந்திருக்கு?''

''30 ஆயிரம் வீரர்கள், 3 ஆயிரம் குதிரைகளை வெச்சு ஒரு போர்க் காட்சியை எடுத்திருக்கோம். அவ்வளவு பேருக்கும் தேவையான பழமையான உடை, ஆயுதங்கள் உருவாக்கி இருக்கோம். அதற்கு எவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க.

 30,000 பேரெல்லாம் இருக்காது.. 300 பேர் ரெடி பண்ணி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பண்ணி இருப்பீங்க..

ஒரிஜினல் கோட்டை மாதிரியே அச்சு பிசகாம செட்டு கள் போட்டிருக்கோம். இசையமைப்பாளர் இளையராஜா, கேமராமேன் ஷாஜிகுமார், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஜோதா அக்பர் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சனா கோச்சார்னு பெரிய டீம் ஒண்ணா சேர்ந்து பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கோம்!''

அர்ச்சனா கோச்சார் நல்ல ஃபிகராமே?
 http://icdn1.indiaglitz.com/hindi/gallery/Events/tour060211_1/tourde_37.jpg
4. ''நல்ல விஷயம்... பிஸியான பிரசாந்த்தைத் திரும்பப் பார்க்க முடியுமா?'' 

''சினிமா, ஃபேமிலி லைஃப் இரண்டிலும் சின்னச் சின்ன சறுக்கல்கள்.

ஓஹோ... 8 டப்பா படம் கொடுத்ததே சிறுஞ்சறுக்கலா? விளங்கிடும்...


அதான் இடைவெளிக்குக் காரணம்.  பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு, இப்போ ஃப்ரீயா இருக்குறேன்.

ஆனா நாங்க பிஸியா இருக்கோமே.. சாரி.. ஹி ஹி 


'பொன்னர்-சங்கர்’ படத்தில் ஓர் அறிமுக நடிகரைப்போல் என் உழைப்பைக் கொட்டி நடிச்சிருக்கேன். இந்தப் படம் என்னை அடுத்தடுத்த லெவலுக்குக் கூட்டிச் செல்லும் என்று நம்புகிறேன். அப்பாவுக்கும் கலைஞர் அய்யாவுக்கும் நன்றி!''

அடுத்த லெவெல்னா...? இப்ப ஏதோ ஒரு லெவெல்ல இருக்கறதா நினப்பு? 



டிஸ்கி - பொன்னர் சங்கர் படம் பார்த்துட்டேன்.. விமர்சனம் டைப்பிங்க்.. 4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்

விகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUXZdasBkREM6X5evceiVKs15rGtSfhLnXrQEjaiaNELbDIX16-CVDtgGFBOq4QomwsEknWTKVJoHJIT5wIaadhL3bfmtTmA-wfRVe4c0sjQQ0Z7SrkZu73KHQsPF2BemhYmUANIj1x-yD/s1600/amala_paul.jpg
''இந்தப் படம் விக்ரமோட விஸ்வரூபம். 'சேது’, 'பிதாமகன்’ படங்களில் அவர் பண்ணி வெச்சிருக்கிற ரெக்கார்டுகளை அவரே இதில் அடிச்சு உடைச்சிருக்கார். கதையும் கேரக்டரும் முடிவானதும் நான் யோசிச்ச ஒரே ஹீரோ... விக்ரம்தான். என்னோட எதிர்பார்ப்பை 100 சதவிகிதம் நிறைவேற்றி இருக்கார். டெல்லியில் தேசிய விருதுக்கு ஆர்டர் சொல்லிரலாம்!'' - சந்தோஷமாகச் சிரிக்கிறார் டைரக்டர் விஜய்.

இப்படிவிருது கிடைக்க்ப்போகும் படம்னு  சொன்னா படம் ஓடாதே....

விக்ரம் நடிக்கும் 'தெய்வத்திருமகன்’ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு நடுவே நடந்தது இந்தச் சந்திப்பு.
1. ''எடை குறைந்து, முகம் மாற்றி இருக்கும் விக்ரம் போட்டோக்களைப் பார்த்தாலே, ஆச்சர்யமாக இருக்கிறதே...''

''இது என் கனவுப் படம். இந்தப் படத்துக்காக நானே ஒரு குழந்தை மாதிரி மாறி இருக்கேன். உங்களையும் ஒரு குழந்தையா மாத்தி, வேறு ஒரு உலகத்தைக் காட்டப் போறேன்.

 அய்யா.. ஜாலி.. அப்போ யாரும் தியேட்டர்ல டிக்கெட்டே எடுக்க வேண்டியதில்லையா? .. ஹி ஹி 


படத்தில் விக்ரமின் மனசின் வயசு அஞ்சு. அந்த வயசுக்கு உண்டான மன வளர்ச்சி மட்டுமே உள்ள ஆளா வர்றார். ஒரு குழந்தைக்கு இருக்கிற அதிகபட்சமான கேள்வி 'பட்டாம்பூச்சிக்கு யார் கலர் அடிச்சாங்க?’ங் கிறதுதானே? அப்படி ஒரு குழந்தைதான் விக்ரம். 

சுத்தி நடக்கிற எதுவும் அவருக்குத் தெரியாது. யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கத் தெரியாது... முடியாது. கள்ளம், கபடம், காமம், பொறாமை, வக்கிரம்னு எதனோட நிழலும் படாமல் சிரிக்கிற ஒரு குழந்தையா வர்றார் விக்ரம். 

அப்படி ஒரு மனசு, உலகத்தில் ரெண்டே பேருக்குத்தான் கிடைக்கும்.  ஒண்ணு... ஞானி. இன்னொண்ணு... குழந்தை. எல்லோராலும் ஞானி ஆக முடியாது. ஆனா, யார் நினைச்சாலும், குழந்தை ஆக முடியும்!


உலகத்தோட அசிங்கங்கள் தெரியாம இருக்கிறவங்களை நாம மன வளர்ச்சி இல்லாதவங்கன்னு சொல்றோம். நான் அவங்களை 'தெய்வத்திருமகன்’னு சொல்றேன்!''

 மோகன்லால் நடிச்ச ஒரு மலையாளப்படம் + அமிதாப் நடிச்ச ஒரு ஹிந்திப்படம் இவற்றின் உல்டான்னு சொல்றாங்களே.. அதை சின்னப்புள்ளத்தனமான குற்றச்சாட்டா நினைச்சுக்கலாமா?  ... 
2. ''கேட்கவே நல்லா இருக்கு... படத்துக்காக நிறைய மெனக்கெட்டு இருப்பீங்கள்ல?'' 

''நானும் விக்ரமும் நிறைய ரிசர்ச் பண்ணினோம். 

 அப்போ படத்தோட ஹீரோயின்ஸ் அனுஷ்காவும், அமலா பாலும் உடன் இருந்தாங்களா?  ஹி ஹி..

மன வளர்ச்சி குன்றிய வங்களோட உலகத்தைப் பார்க்கிறதுக்கு 'உதவும் கரங்கள்’ வித்யாகர் நிறைய உதவி பண்ணினார். விக்ரம் சார், ஒரு மாசம் அவங்களோடு பழகினார். அவர் இல்லைன்னா... இந்தப் படத்தை நான் செய்து இருக்கவே மாட்டேன். அவ்வளவு அழகா அந்த கேரக்டரை உள்வாங்கிட்டார். ஷூட்டிங்கில் நிறைய இடங்களில் நான் கட் சொல்ல மறந்து நிற்கும் அளவுக்கு, நடிப்பைக் கொட்டியிருக்கார் விக்ரம்.

அப்போ படத்துல எடிட்டிங்க்ல கோட்டை விட்டிருக்கீங்களா?


உடல் மெலிஞ்சதால், நிறைய உடல் உபாதைகள் அவருக்கு இருந்தன. பொறுக்க முடியாத தலைவலி வரும்.

ராவணன் படம் பார்த்தப்போ எங்களுக்கு இருந்தா  மாதிரியா? 

விருப்பப்பட்டதைச் சாப்பிட முடியாது. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டார். 14 கிலோ எடை குறைச்சார். அப்படியே அஞ்சு வயசுப் பையனோட பேச்சு, சிரிப்பு, குரல், பாடி லாங்வேஜ்னு அத்தனையும் மாத்தி அவர் வந்து நின்னப்போ... பிரமிச்சுட்டேன்.


இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் விக்ரம் ஒருத்தர். ஒவ்வொரு டைரக்டரும் அவரோடு ஒரு படம் பண்ணணும்கிறது என்னோட வேண்டுகோள்!''



3. ''இதில் அனுஷ்கா - அமலா பால்னு டபுள் தமாக்காவுக்கு என்ன வேலை?''


''நிச்சயமா மூணு ஃபைட், நாலு ஸீன் படம் கிடையாது. 

சீனா?.... ஓ.. ஸீனா?

ஹீரோயின் விஷயத்தில் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. அனுஷ்கா தமிழில் தொடர்ந்து நடித்தால், சாவித்திரி, ரேவதி, சுஹாசினி அளவுக்குச் சிறந்த நடிப்பைத் தர முடியும். அதற்கான தகுதிகள் அவங்ககிட்ட உண்டு. 

அந்த 3 நடிகைங்க மேல உங்களுக்கென்ன கோபம்?

எல்லாரையும் சிரிக்கவைக்கிற சந்தானம், இந்தப் படத்தில் சிரிக்கவும் அழவும் வைப்பார். படத்தின் இன்னொரு ஸ்பெஷல் ஜி.வி.பிரகாஷ். எங்க கெமிஸ்டரி இதில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கு. குழந்தையா இருக்கிறதைவிட பெரிய சந்தோஷம் உலகத்தில் உண்டா?


நம்ம எல்லாருக்கும் குழந்தையாகும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. 'தெய்வத்திருமகன்’ உங்களை, என்னை, நம்மை இன்னும் அழகாக்கும்னு நம்புகிறேன்!''

நம்புங்க நம்புங்க.. நம்பிக்கை தானே வாழ்க்கை...

ஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியாதிகளுக்கு சொம்பு

'ஊழலுக்கு எதிரான இந்தியா!'

அதில் நீங்களும் ஒருவரா?
'இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழித்தே தீர வேண்டும்’ என்ற 
http://www.indiareport.com/resources/images/original/anna_hazare1.jpg

உயர்ந்த நோக்கத்துடன் 72 வயதான மனிதர் ஒருவர் சாகும் வரை உண்ணா​விரதப் போராட்டத்தில் இறங்க... ஒட்டுமொத்தத் தேசமும் சிலிர்த்து நிற்கிறது! எகிப்து, லிபியா, வளைகுடா நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி, இந்தியாவிலும் தோன்றிவிட்டதோ என்று எண்ணும் வகையில் நடக்கிறது போராட்டம். அவர் அன்னா ஹசாரே! 

மகாராஷ்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் என்ற சிற்றூரை மாதிரிக் கிராமமாக மேம்​படுத்தி​யவர். அதற்காக, 1992-ல் பத்ம பூஷண் வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. 'ஊழல் புரிந்த ஆட்சியாளர்களை விசாரிக்கும் லோக்பால் மசோதாவை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் அன்னா!

ஊழல் புரியும் ஆட்சியாளர்கள் மீது விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கக் கோருவதுதான் லோக்பால் மசோதா. முதலில் இது, 1969-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தங்களையே விசாரிக்க எம்.பி-க்கள் ஒப்புக்கொள்​வார்களா? எதிர்ப்பு கிளம்பியதால், அது  நிறைவேறவில்லை. அதன் பின்னர், 1971 முதல் 2008 வரை ஒன்பது தடவைகள் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், இன்று வரை நிறைவேறவே இல்லை!

அதனால், அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், 'பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்​​களாக நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அன்னா ஹசாரேவும் பிரதமரிடம் இதை வலியுறுத்தினார். ஆனால், அதை மன்​மோகன் சிங் நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அக்னிவேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து, 'ஜன் லோக்பால்’ என்ற மாதிரி மசோதா ஒன்றைத் தயாரித்தனர்.

அதில், எப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறி இருந்தனர். இதையும் பிரதமர் நிராகரிக்கவே, அதிர்ச்சி அடைந்த அன்னா ஹசாரேவும் ஆதரவாளர்களும் இப்போது போராட்டத்தில்.

இது குறித்து ஹசாரே, ''லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் சமூக அமைப்புகளில் உள்ளவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி, மூத்த வக்கீல்கள் போன்றவர்களையும் முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை.

ஆனால், மகாராஷ்டிராவில் பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரை இந்த கமிட்டிக்குத் தலைவராக நியமித்துள்ளனர். அரசு விதிகளுக்கு மாறாக, பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள ஒருவரை இதற்குத் தலைவராக நியமித்து மசோதா தயாரிப்பது சரியாகுமா?

இந்த மசோதா தயாரிப்புக் குழுவில் 50 சதவிகிதம் அதிகாரிகளையும், 50 சதவிகிதம் சமூக நல அமைப்பினரையும், அறிவுஜீவிகளையும் நியமிக்க வேண்டும். 

'உங்களை மதிக்கிறேன், உங்களை நம்புகிறேன்’ என்று பிரதமர் என்னிடம் கூறுகிறார். ஆனால், கடந்த மாத சந்திப்புக்குப் பின்னர் எங்களுடன் கலந்தாலோசனை செய்ய ஏன் பிரதமர் மறுக்கிறார் என்று தெரியவில்லை!


முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே இந்த மசோதாவைத் தயாரித்தால், அதில் ஜனநாயகம் இருக்காது. முழுமையான எங்கள் எல்லா ஷரத்துகளும் அடங்கிய லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை என் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன்!'' என்கிறார் உறுதியாக.


இந்தப் போராட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உண்ணாவிரத இடத்துக்கே சென்று, ''இந்தியாவில் தற்போது தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் இரண்டு மட்டுமே துடிப்பாக உள்ளன. ஊழலுக்கு எதிராக இதுபோன்ற துடிப்பான அமைப்பு நிச்சயம் தேவை என்பதால், ஹசாரோ மற்றும் குழுவினர் தயாரித்த மாதிரி லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை நாடாளு​மன்றத்துக்குக் கொண்டுசெல்ல முயற்சிப்​பேன்...'' என்றார்.

http://im.in.com/media/download/wallpapers/2011/Apr/anna_hazare_420x315.jpg
மேலும், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்திப் பாண்டே உட்பட பல பிரபலங்களும் உண்ணாவிரத இடத்துக்கு வந்து, ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். பீகார் துணை முதல்வர் எஸ்.கே.மோடியும் ஆதரவு அளித்துள்ளார்.

அன்னா ஹசாரேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பொதுமக்களும் இந்த மசோதாவை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார்கள். மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்கள். 

அந்த இயக்கத்தைச் சேர்ந்த மாயங்க் காந்தி, ''அன்னா ஹசாரேவுக்குப் பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் இந்தப் போராட்டம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. பலர் தங்கள் அலுவலகங்களிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோரிக்கை நிறைவேறினால் ஒழிய, இந்தத் தீ அணையாது!'' என்கிறார்.

நல்ல விஷயத்துக்காக நடக்கும் போராட்டம், நாலா திசைகளிலும் பரவி வருவது நம்பிக்கை அளிக்கிறது!


இன்றைய தினமலரில்........
லோக்பால் மசோதாவை தயாரிக்க இருதரப்பு குழு அமைப்பது குறித்து, அரசு கெஜட்டில் வெளியிட இயலாது என்றும், மசோதா தயாரிப்பு குழுவுக்கு அமைச்சர் அல்லாத ஒருவரை தலைவராக இருக்கவும் ஏற்க முடியாது என, மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதையடுத்து, அன்னா ஹசாரேயின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர் கருத்துக்கு நாடு முழுவதும் அதிக ஆதரவு பெருகுவதால், மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் ளின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார். 

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நான்காவது நாளாக அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம், நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. ஹசாரே தரப்பில் வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கைகள் இரண்டை ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது.
http://lh4.ggpht.com/_xFP6s39OUYY/TZxN0zPsQwI/AAAAAAAAqSI/PqYJgEtdQs8/Anna%20Hazare-gandhiyan-%20begins%20fast_thumb%5B2%5D.jpg?imgmax=800
கபில் சிபல் தகவல்: நேற்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சுவாமி அக்னிவேஷ் வரு வார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்ட பலரும் காத்திருந்தனர். ஆனால், சுவாமி அக்னிவேஷ் வரவில்லை. பின்னர் அவர் கூறும்போது, "ஹசாரே தரப்பினர் வலியுறுத்தும் பிற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளது.

அரசு மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகிய இரண்டு தரப்பும் இணைந்த குழுவை அமைக்க தயாராக உள்ளோம். ஆனால், அந்த குழு அமைப்பது பற்றியோ, அந்த குழுவின் பேச்சுவார்த்தை மற்றும் குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அரசு கெஜட்டில் வெளியிட இயலாது. வேண்டுமெனில் அரசின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் இதுபற்றி அனைத்து உறுதிமொழிகளையும் அளிக்கவும் தயார். 

இன்னொரு கோரிக்கையான, இருதரப்பும் அங்கம் வகிக்கும் அரசின் குழுவுக்கு அமைச்சரவையில் இல்லாத வெளிநபர் தலைவராக இருக்கவும் அனுமதிக்க முடியாது. அது இயலாத காரியம் என்பதால், அதையும் ஏற்க முடியாது' என்றார். இந்த தகவல்கள் உண்ணாவிரத மேடையில் அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த குழுவுக்கு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் தலைவராக இருப்பார் என்றும் அரசு தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது உண்ணாவிரத பந்தல் முன்பாக குழுமியிருந்த அனைவருமே கோபமும், ஆத்திரமும் அடைந்தனர். வரும் 13ம் தேதி ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடப்பது கண்டு அரசுகள் அலறுகிறது. 

இதன் வெளிப்பாடாக, ஆளாளுக்கு ஒரு போராட்டம் நடத்தும் அபாயம் ஏற்படும் என்று காங்., தகவல் தொடர்பாளர் சிங்வி கூறினார். பிரதமர் மன்மோகன் ஜனாதிபதி பிரதிபாவை சந்தித்து ஆலோசனை செய்தார். அரசும் நேற்று தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டது.
http://nimg.sulekha.com/others/thumbnailfull/anna-hazare-2011-4-6-10-21-28.jpg
13ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம்: முக்கிய கோரிக்கைகளை அரசு நிராகரித்து விட்டதையடுத்து, உண்ணாவிரத மேடையிலிருந்த படியே அன்னா ஹசாரே அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வரும் 13ம் தேதி அன்று ஊழலை எதிர்த்தும் ஜன்லோக்பால் மசோதாவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றும், மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். 

ஊழலை எதிர்ப்பதில் அலட்சியம் காட்ட நினைக்கும் அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழு வேண்டுமென்றும், அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக, ஏப்ரல் 12ம் தேதி அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ராமநவமி விடுமுறை என்பதாலும், மக்களுக்கு சிரமம் அளிக்க வேண்டாமென்றும் நிர்வாகிகள் முடிவு செய்ததையடுத்து சிறை நிரப்பும் போராட்டம் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

பின்னர் நிருபர்களிடம் ஹசாரே தரப்பு நிர்வாகிகள் பேசும்போது, "ஹசாரே கூறும் காரணங்களையும், வார்த்தைகளையும் வேண்டுமென்றே திரித்து வெளியிட அரசு முயற்சிக்கிறது. அரசியல் கலப்பு இல்லாத நியாயமான ஒருவர் தான் குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டுமெனஹசாரே வலியுறுத்துகிறார். இதை ஏற்க அரசு மறுக்கிறது' என்றனர்.

பெருகுகிறது ஆதரவு: ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், குடும்பத் தலைவிகள் என, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வந்து, ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் குவியத் துவங்கியுள்ளனர். யோகா குரு ராம்தேவ், பாலிவுட் நட்சத்திரம் அனுபம்கெர் போன்ற பிரபலங்களும் வந்திருந்தனர். அனுபம்கெர் பேசும்போது, "சச்சின், ஷாருக்கான், அமிதாப் பச்சன் போன்ற முக்கியமானவர்களும் வர வேண்டும். ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என்றார்.

Friday, April 08, 2011

மாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினிமா விமர்சனம்

http://www.indianews365.com/wp-content/uploads/2011/03/DhanushMappillaiMoviewallpapers.jpg


படம் போட்டு முதல் 40 நிமிஷம் விவேக் காமெடி களை கட்டுதுன்னா அதுக்கு இயக்குநரோட பங்களிப்பு மட்டும் அல்ல தனுஷின் விட்டுக்குடுத்தலும் ஒரு முக்கியக்காரணம்...சமீப காலத்துல எந்த ஹீரோவும் இப்படி ஓப்பனிங்க்ல டம்மி ஆனதில்லை....விவேக்கோட டாமினேஷன் தூக்கலாவே இருக்கு... 

படத்தோட கதை என்னன்னு ரஜினியோட மாப்பிள்ளை பார்த்தவங்களுக்கு நல்லாவே தெரியும் என்றாலும்... சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்கே... கோடீஸ்வர மாமியார் VS கேடி மாப்ளை ரெண்டு பேரும் விட்டுக்கற சவால்.. சபதம் ,இத்யாதிகள் தான் கதை.. அப்படியே நாடகம் பார்க்கற மாதிரி இருக்கு.

எந்திரன் ரஜினியின் ரோபோ கெட்டப்பில் விவேக்கின் காமெடி செம கலக்கல்.. ஆனால் அவர் தமிழை கடித்துத்துப்புவது கேப்டனின் மேடைப்பேச்சு போல் மகா மட்டம்.

ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியை பற்றி ஒரு பேரா வர்ணிச்சர்லாம்... (எதுக்கு?) ஒரு மொக்கைப்படத்தை 240 லைன் கஷ்டப்பட்டு டைப் பண்றப்ப  ஒரு நல்ல ஃபிகரை 20 லைன் வர்ணிக்கறது தப்பில்லைன்னு ஜொள்ளாயணம் எனும் இதிகாசத்துல இருக்கு...

http://flicksbuzz.com/Assets/Images/Kollywood/Kollywood-News/Hansiha-Motwani-at-Mappillai2011-Stills-Mp3-Songs-Release-Date-wallpaper-Mappillai-Movie-Review-Release-Date.jpg
வகையாக வாட்டர் வாஷ் செய்யப்பட்டு, வார்ணீஷ் அடிக்கப்பட்ட வருஷம் 16 குஷ்பூவைப்போல முகச்சாயலும்,கனகாம்பரப்பூக்களை அரைத்து எடுக்கப்பட்ட சாற்றில் ஊற வைத்து எடுக்கப்பட்ட கொடை ஆரஞ்சுப்பழ சுளைகளைப்போன்ற உதடுகளும்,வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற உடல் அமைப்பும்,பருத்திப்பஞ்சும்,பஞ்சு மிட்டாய்யும் சேர்ந்தால் வரும் மென்மையைக்கொண்ட கன்னமும்,இரண்டு அடைப்புக்குறிகளை (மேத்ஸ் ஸ்டூடண்ட்டாக்கும்) ஆப்போசிட் டைரக்‌ஷனில் ஃபிட் பண்ணியது போன்ற இடை அழகும் கொண்டவர்.. ( அந்த கர்ச்சீஃப் எடப்பா..)

இந்த மாதிரி அழகு பொம்மையை பார்த்தமா? ரசிச்சமா?ன்னு போய்ட்டே இருக்கனும்.. அதை விட்டுட்டு பாப்பாவுக்கு நடிப்பு வருதா? என கேனத்தனமாக கேள்வி கேட்பது  தி மு க , அதிமுக போன்ற திராவிடக்கட்சிகளிடம் நேர்மையான ஆட்சியை எதிர்பார்ப்பது போல... 

ஹன்சிகா மினிமம் 5 வருஷம் மார்க்கட் பிடிச்சிடுவார் என “ தாராளமா “ எதிர்பார்க்கலாம்.. ஆனால் அவர் பாடல் காட்சிகளில் லோ ஹிப் காட்டும் சீன்கள் அவ்வளவு பட்டவர்த்தனமாய் தெரிய தேவை இல்லை.. 

ஹீரோயின்கள் காட்டும் கவர்ச்சி என்பது தி மு கவின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் மாதிரி கமுக்கமா இருக்கனும்.. ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் ஜெயாவின் ஊழல் மாதிரி ரொம்ப பட்டவர்த்த்னமாய் எக்ஸ்போஸ் செய்வது அழகியல் ரசனையை மலிவாக்கி விடுகிறது..


சரி.. அடுத்த கட்டத்துக்கு போலாம்.. மணீஷா கொய்ராலா... மாமியாராக ஸ்ரீவித்யா காட்டிய கம்பீரம்,ஆணவம்,மிடுக்கு இவற்றில் 25% கூட இவர் காட்டவில்லை.. கழுத்துக்கு மேலே திறமையை காட்டுங்க என இயக்குநர் சொன்னால் இவர் உல்டாவாக ........ 
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/01/manisha-koirala06.jpg
இவருக்குப்போடப்பட்ட அதீத மேக்கப் இவரது முதுமையை மறைத்து விடும் என ஒப்பனை அலங்கார நிபுணரோ,ஒளிப்பதிவாளரோ நினைத்தால் அது அறிவீனம்,,

தனுஷின் நடிப்பு எப்பவும் போல் கன கச்சிதம்.. கடவுள் பக்தி மிக்கவராக பம்மும்போதும் சரி.. ரவுடியாக வந்து அலப்பறை பண்ணும்போதும் சரி கலக்கலான நடிப்பு... 

காமெடியில் களை கட்டிய வசனங்கள்

1. விவேக் - இவ்வளவு பேர் அடிக்க வருவாங்கன்னு சொல்லவே இல்ல..?

பாஸ்.. சொன்னா நீங்க ஓடிடுவீங்களே..?

2. விவேக் - அடியாளுங்க எல்லாம் ஷகீலா  கை  சைஸ்க்கு இருப்பாங்கன்னு பார்த்தா ஷகீலா சைஸ்க்கே இருக்கானுங்களே..?

3. விவேக் - நான் பஞ்ச் டயலாக் பேசக்கூடாதா? ஏண்டா..?

பாஸ்.. அடி கொடுக்கிறவன் தான் பஞ்ச் டயலாக் பேசனும்.. அடி வாங்கறவன் பேசக்கூடாது...

விவேக் - எனக்கு எதிரிங்க வெளில எங்கேயும் இல்லடா.. கூடவே தான் இருக்காங்க.

4.  பாஸ்.. வாங்க ஓடிடலாம்..

விவேக் - டேய்.. ஓடுனா துரத்தி துரத்தி அடிப்பாங்க..அதனால நின்னு அடி வாங்கிக்கலாம்.. அவனுங்க அடிச்சு களைச்சுப்போன பின்னாடி நைஸா ஓடிடலாம்.. 



http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/03/mappillai-film-hansika-motwani-cute-photos.jpg
5. விவேக் - பெத்த பையன் அடி வாங்கிட்டு வந்து நிக்கறான்.. காப்பாத்தாம பார்த்துட்டு இருக்கியே .. நீ எல்லாம் ஒரு அப்பனா?

அன்னைக்கு ஒரு நாள் நீ 10 வயசுப்பொடியன் கிட்டே அடி வாங்கிட்டு வந்து நின்னப்ப.. உன் கூட வந்து அவனை அடிச்சப்போ அவனோட அப்பா என்னை துவைச்சு எடுத்தானே.. அதை நீ வேடிக்கைதானே பார்த்துட்டு இருந்தே..?

6.  ச்சே... நீ எனக்குப்பிறந்தவந்தானா..?

விவேக் - டாடி.. அதே டவுட் மைல்டா எனக்கும் இருக்கு.. 

7. பாஸ்... அந்த சேட்டு வீட்டு ஃபிகர் செமயா இருக்கே.. கணக்கு பண்ணிடலாமா?

விவேக் - உனக்கு பானி பூரி வேணும்கறதுக்காக பாழடைஞ்ச பூமியை என்  தலைல கட்டப்பார்க்குறியாடா.. அடப்பாவி... 


8. பாஸ். அதோ வர்றாளே.. ரேகா.. அவ எப்படி..?

விவேக்- டென்னிஸ் கோர்ட்டுடா.. பாவம் ரொம்ப வீக்கா இருக்காடா.. 


9. விவேக் -டேய்.. திடீர்னு தென்றல் காத்து ஸ்பீடா அடிக்குது.. மழை வர்ற மாதிரி இருக்கு.. பூக்கள் எல்லாம் அப்பிடிக்கா,இப்படிக்கா பறக்குது.. இந்த சமிக்ஞைகள் எல்லாம் என்னடா சொல்லுது..? ஹீரோயின் இப்போ வரப்போறான்னு சொல்லுதுடா... 

10.  பாஸ்.. அந்த ஃபிகரைப்பார்க்க  நாங்களும் கூட வந்தா உங்களுக்கு போட்டி ஆகிடுவமே..?

விவேக் - அப்படி யாரும் போட்டிக்கு வந்துடக்கூடாதுன்னு தாண்டா உங்களைக்கூட வெச்சிருக்கேன்.. 

11. டேய்.. தண்டச்சோறு.. இந்த ஸ்கூட்டரை சர்வீஸ்க்கு விட்டுட்டு வாடா..

விவேக் - டாடி.. இந்த வண்டியை சர்வீஸ்க்கு விட முடியாது,..சமாதில வேணா விடலாம்.. 

12.  இந்தத்தம்பியை ஒரு நாள் கூட குளிக்காம பார்த்ததே இல்லை..உன்னை..? ஒரு நாள் கூட குளிச்சுப்பார்த்ததே இல்லை.. 

13.விவேக் -   நான் மனித வெடி குண்டா மாறப்போறேன்.

முதல்ல மனுஷனா மாறுங்கடா.. 

14.  அண்ணா.. 

விவேக் - டேய்.. நான் யூத் தான்.. பேர் சொல்லியே கூப்பிடலாம்.. 

15. விவேக் - எனக்கு என்ன வருத்தம்னா நம்மைப்பெத்தவங்கதான் மதிக்கலைன்னா ,மத்ததுங்களும் மதிக்கலையேன்னுதான்...

16.  விவேக் - ஹூம்.. அடிக்கு அடி.. ரத்தத்துக்கு ரத்தம்...

அடுத்த லைன் பித்தத்துக்கு பித்தமா பாஸ்... ?

17.  விவேக் - பணக்காரப்பெண்ணை லவ் பண்ண நான் என்ன பண்ணனும்? என் லைஃப் ஸ்டைலை மாத்தனுமா?

முதல்ல உன் ஹேர் ஸ்டைலை மாத்து... 


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/hansika.jpg

--
18.  இந்தப்பொண்ணு எப்படி இருக்கு..? பேரு ரீட்டா..

விவேக் - இப்படி கும்முன்னு இருக்கே..? அவங்கப்பன் சேட்டா..?

19. விவேக் -  இந்த லவ் லெட்டரை அந்த பொண்ணு கிட்டே போய் குடு... 

இதை நீங்களே கொண்டு போய் கொடுக்க வேண்டியதுதானே..? 

அந்த அளவு தைரியம் இருந்தா அவர் ஏன் உன்னை கெஞ்சிட்டு இருக்காரு..?

20..விவேக் -  அய்யய்யோ.. அது யார்டா.. சரவணன் சைடுல 4 பேர் சரவண பவன் மேனேஜர் சைஸ்க்கு வர்றானுங்களே....

21. விவேக் -  என்னை மாதிரி ஒரு டீசண்ட்டான பையனை ஒரு பொண்ணு சுத்தறதுல என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என்ன முறைக்கறீங்க..? சரி .. சுமாரான பையனை.... 

22.  இங்கே பாருங்க.. என்னை கம்ப்பெல் பண்ணாதீங்க.. உங்களை எனக்கு பிடிக்கலை.. ஒரு பொண்ணை பார்த்ததுமே பிடிக்கனும்.. பார்க்க பார்க்க பிடிக்கக்கூடாது.. 

23. விவேக் -  இன்னைக்கு வேணும்னா  அவன் அவ மனசை கவர்ந்திருக்கலாம்.. ஆனா நாளைக்கு அவ என்னோட ஆளாத்தாண்டா இருப்பா... 

பாஸ்.. அப்போ நாளான்னைக்கு..? 

விவேக் -  நக்கலு..?


24.  நிறுத்துங்க.. அடிச்சது போதும்.. லெட்டர் குடுத்த எனக்கே இவ்வளவு அடின்னா லெட்டரை குடுக்க சொன்னவர் கைல கிடைச்சா என்ன பண்ணு வீங்களோ..?

25.. பொதுவா பசங்களைப்பார்த்தா நல்லவனுங்க மாதிரிதான் தோணும்.. ஆனா பழகிப்பார்த்தாதான்.. கெட்டவங்கன்னு தெரியும்.. 

26. விவேக் -  தயவு செய்து பாடித்தொலைச்சுடாதே.. பொண்ணு பாடி (BODY)ஆகிடும்.
27.  கடவுள் இருக்கார்.. எங்க காதலை அவர் சேர்த்து வைப்பார்..

விவேக் - ஏண்டா.. கடவுளுக்கு வேற வேலை இல்லையாடா.. அப்படி காப்பாத்தப்போறதா உனக்கு எஸ் எம் எஸ் பண்ணுனாராடா..?

28. என் பேரு சரவணன்.. எனக்கு இன்னொரு பேர் இருக்கு..

 என்னடா பாட்ஷா பில்டப்பாடா.. எத்தனை பேர் வேணும்னாலும் வெச்சுக்கோடா..


http://buzz.faabo.com/wp-content/uploads/hansika-motwani-boobs.jpg
29.  பாஸ்.. அப்புறம்?

விவேக் -ம்.. விடிஞ்சுது..

கிழிஞ்சுது.. 

30.  நீங்க பார்க்க கேவலமானவரா இருந்தாலும் உங்க காதல் கேவலமானதா இல்லை.. 

31.விவேக் -  என்னது? பேபி ஃபார்ம் ஆகிடுச்சா..? என்னடா சைக்ளோன் ஃபார்ம் ஆன மாதிரி சொல்றே?நேத்து நைட் தானேடா அவளை ரேப் பண்னுனே.. அதுக்குள்ள உண்டாளாகிட்டாளாடா?

ஆமா.. அதுவும் ட்வின்ஸ்..

32..விவேக் -  டாடி.. நீ ரொம்ப கெட்டவன்.. நேத்து எதுக்கு மம்மி ரூம்க்கு போனே..?

டேய்.. புக்கை மறந்து வெச்சுட்டு வந்துட்டேன்.. அதை எடுக்கப்போனேன்.. 

விவேக் - நான் அதைக்கேட்கலை டாட்.. மம்மியோட மம்மி வீட்டுக்கு எதுக்குப்போனே..?

33. விவேக் -  வாடா.. கறுப்பு சிவாஜி... 

34. ஹீரோயின் - டியர்.. பேசலாம் கொஞ்ச நேரம்.. 

இது என்ன பட்டி மன்றமா?ஃபர்ஸ்ட் நைட் ரூமா..? ஏம்மா..

35..விவேக் -  என் கைல பேலன்சே இல்லை.. பேலஸா?

36. விவேக் - ஹா ஹா.. நாங்க எல்லாம் பாய்சன் கிடைச்சாலே அதை பாயாசம் மாதிரி குடிக்கற ஆளுங்க.. பாயாசம் கிடைச்சா கேட்கனுமா?

37. மனோபாலா - நான் சாமியார்,, சினிமா படம் பார்க்கறதில்லை... 

பரவால்லை.. இது சீன் படம் தான்.. பார்க்கலாம்.. அதுவும் நீ நடிச்சதுதான்.. 

38. விவேக் -  என் கூட சம்பந்தம் வெச்சுக்க ஒரே சிங்க்கிற்கு மட்டும் தான் தகுதி இருக்கு.. 

யார் அது? ஹர்பஜன் சிங்கா?

விவேக் - ம்ஹூம்.. மன்மோகன் சிங்க்.. 


39. விவேக் - ஓடற பஸ்ல ஒன் ருப்பி காய்ன் விழுந்தாலே நாங்க ஓடிப்போய் எடுப்போம். 1000 ரூபா மிஸ் ஆச்சுன்னா சும்மா இருந்துடுவோமா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid6caEENcOFYbq1WxaTdxg7kexpsZDSw6-tAiDfjDMzEC8gwgvk9AqoxQxoIhF4trFhgB8p98qTcO7HMBoRawdRiHubMgNJJB8C2gqJ4QYIV1jyfqcssYIphlx8r6MU5odOk0qz57XZcWx/
மணீஷா கொய்ராலா பேசும் பஞ்ச் டயலாக்ஸ்

1.  என் முன்னால காலை ஆட்ற மாப்ளையை விட என் பின்னால கையை கட்டி நிக்கற மாப்ளையைத்தான் எனக்கு பிடிக்கும்.. ( அய்யய்யோ..அப்போ குடித்தனம் பண்ணப்போறது உங்க பொண்ணு இல்ல்லையா?)

2. சுகர் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படறதும், வீட்டோட இருக்கற மாப்ளை மரியாதையை எதிர்பார்க்கரதும் ஒண்ணுதான்... 

3. ஆள்றவன் மாப்ளையா வரக்கூடாது.. அடங்கறவன் தான் மாப்ளையா வரனும்.. ( அப்போ சுடுகாட்டுக்குத்தான் நீ போகனும்.. அங்கே தான் அடங்குனவன் அடக்கமானவன் இருப்பான்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4t6ob28a-cR988arox4CD5oJjDJz0b7364LUTbB8XfYGkS9L_DSrJ1XkbWWnlq0NnYPOtDyMos06fAPzc1IM8ZUzxahs7Sxg_dRxisvecRdhPvh4w0JO_VwCMo0q3TYelQvjII5xMmi4/s320/Hansika+cute+in+pink+and+blue.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள்

1. லாஜிக் லாஜிக்னு சொல்வாங்களே.. அதை எல்லாம் நீங்க கண்டுக்கவே மாட்டீங்களா?

2. கோயில் சிலை மாதிரி இருக்கற ஃபிகரு குப்பை அள்ளறவன் மாதிரி இருக்கறவனை  துரத்தி துரத்தி லவ் பண்ணுவாளா?

3.மனைவின்னு நினைச்சு மாமியாரை மாப்பிள்ளை கட்டி அணைத்து தூக்குவது காமெடியா?

4. ஓப்பனிங்க் சாங்க்ல என்னதான் டான்ஸ்னாலும் இந்து தெய்வங்கள் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு அப்படி ஸ்டெப் போட்டு கேவலப்படுத்தலாமா?

5. கிட்டத்தட்ட 50 வயசான மாமியார் இப்படித்தான் சேலை, ஜாக்கெட் போடுவாங்களா? (இதுல ரொம்ப லோ யு நெக் வேற)

6. கல்யாணமான புதுப்பொண்ணு எப்பவும் பிரா மாதிரி மாடல்ல கை இல்லாத ஜாக்கட்தான் போடுவாங்களா?

7.அவ்வளவு பெரிய கோடீஸ்வரி லூஸ்தனமா ஏமாறுவாளா?

விவேக் ஆரம்ப காட்சிகளில் இடது காலில் ஒரு கலரிலும், வலது காலில் இன்னொரு கலரிலும் ஷூ போட்டு வரும் சீன் செம காமெடி.. அதே போல் அவர் ஹீரோயினைப்பார்த்ததும் “ உன் மேல ஆசைதான்” பாட்டு பேக் டிராப்பில் பாடுவதும் செம.. 

ஆடுபுலி ஆட்டம் ஆடிப்பார்ப்போம் பாட்டு ,ஆத்தாடி அட்றாங்கொய்யால, போன்ற இலக்கிய நயம் மிகுந்த பாடல் வரிகள் அய்யகோ... 

படம் ஏ செண்ட்டரில் ஓடாது.. 25 நாட்கள் ஓடலாம். பி  செண்ட்டரில் 30 நாட்கள். சி செண்ட்டரில் 15 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே

ஈரோட்டில் அபிராமி தியேட்டரில் பார்த்தேன். இது போக ஆனூர்,ஸ்ரீனிவசா,அன்னபூரனி தியேட்டரிலும் ஓடுது..

ஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தியது ஜூ வி

ராசா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

வேண்டிய நிறுவனங்களுக்கு ரகசியத் தகவல் தந்தார்கள்!
ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் சம்பந்தப்​பட்ட 'ஏ-ஒன்’ குற்றவாளியான
http://www.maniyosai.com/cms/images/stories/a.raja%20-%20file%20pic.jpg
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையை எதிர்கொள்ளத் தயாராகி, நீதிமன்றத்தில் ஆஜரானார்! 
கிட்டத்தட்ட 60 நாட்கள் சிறை​வாசத்தில் மனிதர் சற்று இளைத்து, முகம் வாடிக் காணப்பட்டார்.

சரியாக அயர்ன் செய்யப்படாதபேன்ட் சட்டை​யோடு நின்றார். மற்ற குற்றவாளி​களின் உறவினர்கள், நண்பர்கள் எல்​லாம் வந்திருக்க... ஆ.ராசாவின் மனைவி​யோ குழந்தைகளோ , நெருங்கிய உறவினர்​களோகூட நீதிமன்றத்துக்கு வரவில்லை.

''என்னுடைய பாவத்தை நானே சுமக்கிறேன். நீங்கள் யாரும் வர வேண்டாம்!'' என்று  ஆ.ராசாவே கூறிவிட்டாராம். தி.மு.க-வுக்கு நெருக்கமான டெல்லி மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசத்திடம் மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் ஆ.ராசா.


வெறும் 127 பக்கங்கள்தான் குற்றப்​பத்திரிகை. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட 125 சாட்சிகளுக்கும் கிட்டத் ​தட்ட 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 654 தஸ்தாவேஜுகளும் டிரங்க் பெட்டியில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு வந்து இறங்கிய​போது த்ரில் கூடியது.


சி.பி.ஐ. டி.ஐ.ஜி. எஸ்.கே.பல்சானியா மற்றும் விவேக் பிரியதர்சினி ஆகியோரை சந்தித்துக் கை குலுக்கிய ஆ.ராசா, ''நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பது வேறு. ஆனால், உங்களைப் பாராட்டுகிறேன். இவ்வளவு விஷயங்களை, குறுகிய காலத்தில் கொண்டுவந்தது பாராட்டுக்கு உரியது!'' என்றார்.  ஷாகித் பால்வாவும் தன் பங்குக்கு சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பேசினார். ''எங்களை மட்டும் கைது செய்து உள்ளே அனுப்பிவிட்டு, மற்ற நிறுவனங்களையும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் கௌர​வமாக நடத்துகிறீர்கள். இது அக்கிரமம்!'' என்றார் பால்வா!


இந்த ஊழலில் விழுங்கப்பட்ட பண விவகாரங்களை சி.பி.ஐ. கண்டுபிடித்ததோ... இல்லையோ, இந்த ஊழலின் ஆணி வேரைக் கண்டுபிடித்து, அதைக் குற்றப் பத்திரிகையாக நீதிமன்றத்தில் வைத்துவிட்டது. இந்த முதல் குற்றப் பத்திரிகையில் ஊழல் பற்றி சி.பி.ஐ. தெரிவித்துள்ளவை கொஞ்சம்தான்.

''மே 2007-ம் ஆண்டு தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்றபோது, தன்னோடு சுற்றுச்சூழல் அமைச்​சகத்தில் பிரைவேட் செக்ரெட்டரியாக இருந்த ஆர்.கே.சந்தோலியா, கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்த சித்தார்த்த பெஹுரா இருவரையும் தன் அமைச்சகத்துக்கு அழைத்து வந்து, செயலராக ஆக்கினார். திட்டமிட்டுத் தனக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து சதித் திட்டம் தீட்டினார்.

அதேபோல, ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுதான், மற்ற குற்றவாளிகளான டிபி ரியாலிட்டி ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் சஞ்சய் சந்திரா எல்லோரும் அவருக்குப் பழக்கமானார்கள். இந்தத் தொழில் அதிபர்களின் பல ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ஆ.ராசா அப்போதே அனுமதி வழங்கி உள்ளார். இவர் அமைச்சரானவுடன் முதல் காரியமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும், யுனிடெக் நிறுவனத்துக்கும், ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமத்தைக் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார்!

ஸ்வான் டெலிகாம் ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு மனு செய்து இருந்தது. யுனிடெக் நிறுவனம் விதவிதமான பெயர்களில் எட்டு நிறுவனங்களைத் தயாராக வைத்திருந்தது.

1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை ஒன்றின் (என்.டி.பி.99) அடிப்​படையில் டிராய் அடிக்கடி வலியுறுத்திய விஷயம், 'ஏற்கெனவே உள்ள மொபைல் ஆபரேட்டர்களுக்குப் போக, ஸ்பெக்ட்ரம் மீதம் இருந்தால்தான்... புதிய ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கவேண்டும்’ என்பது. ஆனால், ஆ.ராசா இந்த ஸ்பெக்ட்ரம் இருப்பை அறிந்துகொள்ளாமலே புதிய உரிமங்களை அளிக்கத் தொடங்கினார்.

புதிய உரிமங்களைப் பெறும் விண்ணப்பங்களை அளிக்கும் தேதியை அக்டோபர் 1 என்று அறிவித்துவிட்டு, பின்னர் 'செப்டம்பர் 24 வரை அளிக்கப்பட்டவை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று அறிவித்தார். இந்த மாற்றம் குறித்து சட்ட அமைச்சகத்துக்கு 2007 அக்டோபரில் தகவல் கொடுத்தார். சட்ட அமைச்சகம், 'இது அமைச்சரவைக் குழுவில் வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியும், அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பாமல், தன் முடிவில் ராசா குறியாக இருந்தார். அதோடு, 'அப்படி அனுப்புவது தேவை இல்லாதது’ என்று பிரதமருக்கும் கடிதம் எழுதினார்!

02.11.2007-ல், 'ஸ்பெக்ட்ரம் போதுமானதாக இல்லாத நிலையில் ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் இதற்குரிய ஒதுக்கீடுகளை கவனமாகவும் வெளிப்படையாகவும் செய்யவேண்டும்’ என்று பதில் எழுதினார் பிரதமர்.

அந்தக் கடிதத்துக்கு, அன்று இரவே சந்தோலியாவை வைத்துக்கொண்டு பதில் எழுதிய ஆ.ராசா, 'ஒரு சிறு விதிமுறைகூட மீறாமல் தொலைத் தொடர்பு துறை வெளிப்படையாக இந்த உரிமங்களை வழங்குகிறது’ என்று தெரிவித்தார். ஆனால், நடந்தவையோ வேறு!

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை தரும் கொள்கையிலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. 'முன்பு இருந்த அமைச்சர்கள் பின்பற்றியதைத்தான் பின்​தொடர்ந்​தேன்’ என்று கூறினார் ஆ.ராசா. ஆனால், முதலில் விண்ணப்பித்தவர்கள் என்கிற முறையை மாற்றி, 'உரிமக் கட்டணத்தை யார் முதலில் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை’ என்று ஆ.ராசா மாற்றினார். 

கைப்பற்றப்பட்ட ஃபைல்கள் மூலம் இது தெரிய வருகிறது. இதில்தான் சொலிசிட்டர் ஜெனர​லையும் ஆ.ராசா ஏமாற்றியுள்ளார். இதில் ஆ.ராசாவின் கூட்டாளி அதிகாரிகளான ஆர்.கே.சந்தோலியா மற்றும் சித்தார்த்த பெஹுரா ஆகி​யோர் கூட்டுச் சதிகள் புரிந்துள்​ளனர்.


முதலில் விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தவர்களுக்கு முதல் உரிமை என்கிற முறை இருந்​திருந்​தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்​​துக்கு அனுமதிக் கடிதம் கொடுக்கப்​பட்டவுடன் ஏழு நாட்​களுக்குள் விண்ணப்பதாரர்கள் தொலைத் தொடர்புத் துறையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் 15 நாட்களில் நுழைவுக் கட்டணத் தொகையை வங்கி கியாரன்ட்டிகள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட்டாக செலுத்த வேண்டும். இப்படி ஒவ்வொன்றும் படிப்படியாக நடந்தால், ஸ்வான், யுனிடெக் நிறுவனங்கள் தகுதி இழந்துவிடும் என்பதால், அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளனர்!  

தங்களுக்கு வேண்டிய இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரகசியத் தகவல்களைக் கொடுத்தனர். அதாவது, 'யார் முதலில் நுழைவுக் கட்டணத்தைக் கொண்டுவருகிறார்களோ, அவர்களுக்குத்தான் அனுமதி’ என்கிற தகவல், அறிவிப்பு வருவதற்கு முன்கூட்டியே இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது.


இதன்படி இவர்கள் வங்கி கியாரன்ட்டி, டிமாண்ட் டிராஃப்ட் எல்லாம் நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே எடுத்துத் தயாராக இருந்தனர். இந்த அறிவிப்பு, 2008 ஜனவரி 10-ம் தேதி பிற்பகல் 1.47-க்கு பத்திரிகை செய்தி, வெப்சைட் மூலமாக வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் 3.30 மணிக்கு அனுமதிக் கடிதம் விநியோகிக்கப்படும் என்கிற தகவல் வெளியிடப்படுகிறது.

இதன்படி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அவகாசத்தில் மற்ற கம்பெனிகளை எல்லாம் திணறடித்துவிட... ஸ்வான் மற்றும் யுனிடெக்கின் எட்டு நிறுவனங்கள் இந்த வங்கி கியாரன்ட்டிகளைக் கொடுத்தன. அனுமதிக் கடிதங்களையும் முதலில் பெற்றுச் சென்றனர். 

இந்த இரு நிறுவனங்கள் உட்பட 120 நிறுவனங்கள் கடிதங்களைப் பெற்றன. இதில், 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியே தள்ளப்பட்டன. இதனால், முதலில் வருவோர்க்கு முதல் முன்னுரிமை விவகாரத்திலேயே தில்லுமுல்லு நடந்து உள்ளது!'' என்று அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் குற்றப் பத்திரிகையில்!


இப்படி ஆதாரங்களோடு பல விஷயங்களையும் சொல்லி இருக்கும் சி.பி.ஐ., அடுத்து ஏப்ரல் 25-ல் வைக்கப்போகும் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இன்னும் பல அணுகுண்டுகள் வெடிக்கும்!