Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Thursday, October 08, 2015

'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
கொஞ்சம் திட்டமிட்டால், குறைந்த நாட்களில் முழு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட முடியும் என்று 'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'தூங்காவனம்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து, த்ரிஷா, மதுஷாலினி உள்ளிட்ட படக்குழுவினரோடு தனுஷ், ஸ்ருதிஹாசன், கெளதம் மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது, "'தூங்காவனம்' திரைப்படம் 40 நாட்களில் எடுத்தார்கள், 30 நாட்களில் எடுத்தார்கள் என வெவ்வேறு நம்பர்கள் சொல்லப்படுகின்றன. இரண்டு மொழிகளில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். பல காட்சிகள் இருமுறை செய்யப்படுவதாகவே அமைந்தன. கார் உருளும் காட்சிகள் மற்றும் போலீஸ்காரர்கள் வரும் காட்சி என அனைத்துமே இரண்டு முறை காட்சிப்படுத்தினோம். இப்படி எல்லாமே இரண்டு முறை பண்ணியதால், இது இரண்டு படங்கள் என திண்ணமாக சொல்லலாம்.
இந்த இரண்டு படங்களையும் நாங்கள் முதலில் 52 நாட்களில் முடிக்க தீர்மானித்தோம். எடுத்த படத்தைப் போட்டு பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்ய வேண்டியது இருந்ததால், மேலும் 8 நாட்கள் அதிகமாகின. மொத்தம் 60 நாட்களில் 2 படங்கள். பிரித்துக் கொண்டால் 30 நாட்களில் 1 படம் என்று சொல்லலாம்.
இதை ஏன் பெருமையாக சொல்கிறேன் என்றால் நானே 200 நாட்களுக்கு படம் பண்ணியிருக்கிறேன். கொஞ்சம் திட்டமிட்டால், அவ்வளவு நாட்கள் தேவையில்லை என்பது என் கருத்து. இதைச் சொல்லும் போது, பல்வேறு நபர்கள் இந்தக் காலத்தில் முடியாது என்று சொன்னார்கள். செய்யும் முடியும் என்று தீர்மானித்து, கடந்த 5, 6 வருடங்களாக ஒரு நல்ல அணியை அமைத்திருக்கிறோம்.
அந்த அணியின் வெற்றி தான் இந்தப் படம். நான் சொல்லிவிட்டேன் என்பதால் பண்ணிய படம் அல்ல. இதற்கு முன்பு 'ராஜபார்வை' என்ற படம் 55 நாட்களில் 2 படங்கள் பண்ணினோம். அத்தனை நபர்களும் சேர்ந்து உழைத்தால் கண்டிப்பாக சாத்தியம் தான்.
ஒரு சி.டி மாதிரியான வட்டை கையில் கொடுத்து இதுதான் பாட்டு என்று நிரூபிக்க வேண்டிய காலம் இல்லாமல், இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஐ-டியூன்ஸில் பாடல் வெளியாகிவிட்டது. அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது" என்று கமல்ஹாசன் பேசினார்.
இவ்விழாவின், இறுதியாக சி.டியை வெளியிட கேட்டார்கள், இல்லை அது வேண்டாம் என்று கமல் மறுத்துவிட்டார்.
'தூங்காவனம்' படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமல்ஹாசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ehidu
thanx-thehinndu

Monday, September 21, 2015

‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவின்விருதுவென்றதுஎப்படி?-இயக்குநர் வெற்றி மாறன்பேட்டி

உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் கலந்துகொண்டது வெற்றி மாறன் இயக்கியிருக்கும் ‘விசாரணை’ திரைப்படம். வெனிஸ் படவிழாவின் போட்டிப் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையோடு ‘மனித உரிமைக்கான படம்’ என்ற பிரிவில் விருதைப் பெற்றுத் திரும்பியிருக்கிறது. கதாசிரியர், நடிகர்கள், நிர்வாகத் தயாரிப்பாளர் உள்ளிட்ட தன் படக் குழுவுடன் வெனிஸ் படவிழாவில் கலந்துகொண்டு வெற்றியுடன் திரும்பி வந்திருந்த இயக்குநர் வெற்றி மாறனைச் சந்தித்தோம்...
சர்வதேசப் பட விழாக்கள் உங்களுக்குப் புதிதல்ல. வெனிஸ் படவிழாவில் விசாரணை திரையிடப் பட்டபோது அதைப் பார்த்த ரசிகர்களின் உணர்வு எப்படியிருந்தது?
செப்டம்பர் 10-ஆம் தேதி வெனிஸ் பட விழாவில் ‘விசாரணை’ படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது. 1,400 பேர் அமரக்கூடிய மிகப் பெரிய திரையரங்கம். அதில் பாதி அரங்கத்துக்கும் மேல் அமர்ந்திருந்தனர். படம் முடிந்ததும் 8 நிமிடத்துக்கு இடைவிடாமல் கைதட்டினார்கள். என்னோடு வந்திருந்த அத்தனை பேருமே கண் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பிறகு மூன்று நாட்கள் நாங்கள் திரைப்பட விழாவில் இருந்தோம். திரையிடலுக்குப் பிறகு விழாக் குழுவினரும் சரி, சர்வதேச ஊடகத்தினரும் சரி எங்களுடன் கனிவுடன் பழகிய விதம் எங்களை மேலும் நெகிழச் செய்தது.
எந்தப் பிரிவின் கீழ் தற்போது விருது கிடைத்திருக்கிறது?
வெனிஸ் சர்வதேசப் பட விழாவின் விருதுக் குழுவும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் இணைந்து ‘மனித உரிமைக்கான படம்’ என்ற விருதை அறிவித்திருக்கின்றன. இந்த விருதை மிக முக்கியமானதாக நினைக்கிறோம். ஏனென்றால் மனித உரிமை மீறல்களைக் கேள்வி கேட்கும் படமாக இது இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். அந்த வகையில் மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட வலு வான அமைப்பாகக் கருதப்படும் ‘ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ இந்தப் படத்தை மனித உரிமைக்கான படமாக அங்கீகரித்திருக்கிறது.
அவர்கள் விருதை அறிவிக்கும்போது “மனித உரிமையை வலியுறுத்தும் பல படங்கள் இந்த ஆண்டு கலந்துகொண்டன. அவற்றில் மனித உரிமைக்கான மிகச் சிறந்த படமாக விசாரணையைத் தேர்வு செய்திருக்கிறோம். குறிப்பாக, படத்தின் ஒளிப்பதிவும், சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பல விஷயங்களும் அத்துமீறல்களைப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் விதமும் துணிவுடனும் நேர்மையுடனும் இருக்கின்றன” என்று சுட்டிக்காட்டினார்கள். ஒரு வேலையைச் சரியாகச் செய்யத் தொடங்கியிருக்கிறோம் என்பதற்கான அங்கீகாரமாக இந்த விருது எங்கள் படக் குழுவுக்கு நிறைவைத் தந்திருக் கிறது.
வெனிஸ் பட விழாவைத் தேர்வுசெய்ய என்ன காரணம்?
நமது படம் எடுத்து முடிக்கப்பட்டு முழுவதும் தயாராகும்போது எந்தத் திரைப்பட விழா தயாராக இருக்கிறதோ அந்த விழாவுக்கு அனுப்புவதுதான் சரியாக இருக்கும். விசாரணையின் முதல் பிரதி தயாரானதும் வெனிஸ் பட விழா வெகு அருகில் வந்ததால் அவர்களுக்குப் படத்தை அனுப்பி, பார்க்கும்படி வேண்டுகோள் வைத்தோம். அவர்களும் படத்தைப் பார்த்துப் போட்டிப் பிரிவுக்கு ஏற்றுக்கொண்டார்கள். சின்னச் சின்ன நிபந்தனைகளை வைத்தார்கள். அதையெல்லாம் ஒப்புக்கொண்டுதான் போட்டிப் பிரிவில் கலந்துகொண்டோம்.
ஓர் எளிய ஆட்டோ ஓட்டுநரான மு. சந்திரகுமாரின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கத் தூண்டியது எது?
சந்திரகுமாரின் வாழ்க்கைப் பதிவாக வெளியான ‘லாக் அப்’ புத்தகத்தில் இருந்த உண்மைதான் என்னை அதைப் படமாக்கத் தூண்டியது. நான் வாழும் காலத்தில் வாழும் ஒரு சாமானிய சக மனிதனுக்கு ஏற்பட்ட அவலம் அது. ‘அரசர்களின் வாழ்க்கை மட்டுமே வரலாறாகப் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் சாமானியர்களின் வாழ்க்கை என்ன என்பது நமக்கு எப்போதுமே தெரியாமல் போய்விடுகிறது. சாமானியர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது நமது மரபிலேயே இல்லை’ என்று நண்பர்களில் ஒருவரான தங்கவேலன் அடிக்கடி சொல்வார். அது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.
இந்த உண்மைக் கதையை நான் படமாக்கக் காரணம் அதிலிருந்த சக மனிதனின் வலிதானே தவிர, கலை நயம், இலக்கிய நயம் என்று எதற்காகவும் இல்லை. ஒரு சக மனிதர் பகிர்ந்திருக்கும் வலி, நாளை எனக்கான வலியாகவும் மாறிவிடும் சூழல் ஏற்படலாம். எதிர்காலத்தில் மாற்றங்களை உருவாக்குவதாகத்தான் எந்தக் கலையுமே இயங்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவேதான், சந்திரகுமாரின் கதையைப் படமாக்கினேன்.
உங்கள் நண்பர் தனுஷ் இந்தப் படத்துக்குப் பொருத்தமானவராக இல்லையா?
மிகவும் பொருத்தமாக இருந்திருப்பார். ஆனால், அவரால் பண்ண முடியாமல் போய்விட்டது. நாங்கள் ‘சூதாடி’ படம் பண்ணிக்கொண்டிருந்தோம். அவர் இந்திப் படம் ஒன்றை உடனடியாக நடித்துக் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் நான்கு மாதம் அந்தப் படத்துக்கு ஒதுக்கிவிடுகிறேன் என்றார். அப்படியானால் அந்த இடைவெளியில் நான் ஒரு படம் இயக்கிவிடுகிறேன் என்றேன்.
என்ன இப்படி சொல்கிறீர்கள் என்றார். பிறகு, என்ன கதை என்றார். நான்கு சாமானிய இளைஞர்களின் கதை என்று முழுக் கதையும் சொல்லலாம் என்று ஆரம்பித்தேன். உடனே அவர், “வேணாம் சார், கதையைச் சொல்லாதீங்க. சொன்னால் நானே அதில் நடிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும். மறுபடியும் உங்களுக்கு லேட் ஆகும்” என்றார். “உங்களுக்கு இந்தப் படத்துக்கு எவ்வளவு செலவாகுமோ சொல்லுங்கள், நான் கொடுக்கிறேன்” என்று அவரே தயாரித்தார். இன்னும் படத்தை தனுஷ் பார்க்கவில்லை.
தனுஷ் இல்லாத இடத்தை நீங்கள் தேர்வு செய்த தினேஷும் மற்ற நடிகர்களும் எப்படி நிறைவு செய்திருக்கிறார்கள்?
இந்தப் படத்துக்காக எனக்குக் கிடைத்த நடிகர்கள் அனைவருமே வரம் என்றுதான் சொல்லுவேன். காரணம் உடல்ரீதியாகவும் மனரீதியா கவும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய படம். காட்சிப்படுத்தல்களில் உண்மை தேவைப்பட்டதால் நடித்தவர்கள் எத்தனை வலியைச் சுமந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் படத்தைப் பார்க்கும்போது உணர முடியும்.
வெனிஸ் பட விழாவுக்கு கதாசிரியர் சந்திரகுமாரையும் அழைத்துச்சென்று அவருக்குக் கவுரவம் செய்திருக்கிறீர்களே?
அவரது வாழ்க்கை அனுபவம்தான் எனக்குப் படமாக மாறியிருக்கிறது. எனது படத்துக்கான அங்கீகாரம் என்பது அவருடைய வலியிலிருந்து பிறந்திருக்கிறது. படம் முழுவதுமாக முடிந்ததும் அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்டினேன். என்னைக் கட்டிப்பிடித்து அழுதுவிட்டுச் சொன்னார். “அந்தக் கொடுமையான நாட்களில் எங்கள் அழுகையும் கூக்குரலும் நாங்கள் அடைபட்டிருந்த நான்கு சுவர்களைத் தாண்டிக் கேட்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்தோம். இனி உலகம் முழுக்க எங்கள் குரல் கேட்கப்போகிறது” என்றார். அப்படிச் சொன்னவர், அதை நேரே உணரவும் கேட்கவும் வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் அவரை அழைத்துச் சென்றேன்.


நன்றி-தஹிந்து

  • Samuthram  
    ஹாலிவுட் தரத்தில் சினிமா எடுக்கிறேன் என்று ஹாலிவுட் கதைகளையும் technician -களையும் இந்தியாவில் களமிறக்குவது ஒரு காமடி. இந்திய மண்ணின் கதையை, மனிதத்தை சர்வதேசமும் புரிந்துகொள்ளும் சினிமா மொழியில் சொல்வதே உண்மையான சர்வதேச சினிமா. வாழ்த்துக்கள் திரு. வெற்றிமாறன். தமிழ் சினிமா கலைஞர்கள் கொஞ்சம் கர்வப்பட சந்தர்ப்பம் வழங்கிய வெற்றிமாறனுக்கு நன்றி.
    Points
    860
    about 15 hours ago
     (0) ·  (0)
     
    • Mannan Mannen  
      வெற்றி மாறன் என்றால் வெற்றி இவரிடம் இருந்து என்றைக்கும் மாறாமல் இருக்கும் என்று தோன்றுகிறது ........அந்த அளவுக்கு ஒரு காட்சியை எப்படி எடுத்து எப்படி காட்டவேண்டும் என்று தெரிந்து உணர்ந்து செயல் படுகிறார் .......எப்பொழுதும் புன்னகை பூக்கும் முகத்துக்கு சொந்தக்காரர் திரு வெற்றி மாறன் ......தமிழ் சினிமாவை உலக அளவு வெகு நிச்சயம் கொண்டு செல்லுகிறார் அது மேலும் தொடரும் என்ற நம்பிக்கை மிக மிக பலமாக ஏறப்டுகிறது ....வெற்றிகள் தொடர வாழ்த்துகள் ....திரு தனுஷ் வெற்றி மாறன் கூட்டணி சரித்திரம் படைக்கும் வெற்றியை தொடும் வர்த்தக ரீதியிலும்

    Wednesday, August 05, 2015

    ‘விசாரணை’ போலீஸ் டிபார்ட்மெண்ட்டை தாக்கும் படமா? - ஆடுகளம் இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணல்

    ‘விசாரணை’ படத்தில் ஒரு காட்சி | உள்படம்: இயக்குநர் வெற்றிமாறன்
    ‘விசாரணை’ படத்தில் ஒரு காட்சி | உள்படம்: இயக்குநர் வெற்றிமாறன்
    வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
    சர்வதேச திரைப்பட விழாக்கள் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டீர்களே?
    சர்வதேச திரைப்பட விழா களம் மிகப் பெரிய சினிமா மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொடுக்கும் இடம். மரபார்ந்த படங்களுக்கான சந்தையாக அல்லாமல் கொஞ்சம் கலைநயத்தோடு எந்த சமரச மும் இல்லாமல் இருக்கும் படங் களுக்கு அங்கே மார்க்கெட் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்தபோது ‘ஆடுகளம்’ படத்தை காட்டினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘இதை ஏன் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவில்லை’ என்று கேட்டார். அப்போதைய அந்த சூழ் நிலையில் அனுப்ப முடியாமல் போனதை பகிர்ந்தேன். அதன்பிறகு சர்வதேச விழாக் களுக்கான தொடர்பு அதிகம் ஏற்பட்டது. இந்தப்படத்தை சர்வதேச படவிழாக் களுக்கு அனுப்பும் நோக்கத்துடன் தொடங்கவில்லை. படத்தை முடிக்கும் போது திரைப்பட விழாக்களுக்கு அனுப் பும் தன்மை இருந்தது. இப்படம் வெனிஸ் திரைப்படவிழாவுக்கு தேர்வானது பெரிய அளவில் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த திரைப்பட விழாவில் இதற்குமுன் இயக்குநர் மணிரத்னத்தின் படங்கள் கலந்துகொண்டிருக்கின்றன. அவருக்கு அங்கே வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுத்திருக்கிறார்கள். போட்டிப்பிரி வில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்பட மாக ‘விசாரணை’ தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    தனுஷ் போன்ற முன்னணி நாயகர்கள் உங்கள் படங்களில் நடிக்க தயாராக இருக் கும்போது இந்தப்படத்துக்கு நாயகனாக தினேஷை தேர்வு செய்தது ஏன்?
    படத்தைப் பார்க்கும்போது உங்களுக் குத் தெரியும். இந்த ரோலுக்கு இவர்தான் சரி என்பது புரியும். படத்தில் நடித்த தினேஷ், ஆனந்தி, சமுத்திர கனி, கிஷோர், முருகதாஸ் உள்ளிட்ட ஒவ்வொருவரது கதாபாத்திரத்தையும் இன்னொருவர் மீது பொருத்திப் பார்க்க முடியாது. இவர் களைத் தவிற வேறு யாரும் இதைச் செய்ய முடியாது என்பது என் அபிப்ராயம்.
    ‘ஆடுகளம்’ படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டீர்கள்?
    ஒரே ஒரு விஷயம்தான். ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு எனக்கு காலம் தேவைப்படுகிறது. அதேபோல அந்த படத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வரவும் காலம் தேவைப்படுகிறது. இதி லிருந்து வெளியே வந்து அடுத்ததாக புதிய விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் காலம் தேவைப்படுகிறது. இப்போது எடுத்திருக்கும் ‘விசாரணை’ திரைப்படம் சந்திரகுமார் என்பவரது வாழ்க்கையில் நடந்த விஷயம். அதை ‘லாக் - அப்’ என்ற பெயரில் நாவலாக அவர் எழுதியிருந் தார். நண்பர் தங்கவேல் மூலம் அறிந்து அந்த புத்தகத்தை படித்தேன். அடுத்து இதை தொடலாமே என்று அதன்மீது பாதிப்பு ஏற்பட்டதால் இந்தப்பட வேலை களை தொடங்கி முடித்திருக்கிறேன்.
    திரைப்பட விழாக்களுக்கு மட்டுமாக எடுக்கப்பட்டு வணிகம் செய்யப்படும் திரைப்படங்கள் கேரளாவில் அதிகமாக உள்ளன. இங்கும் அப்படிப்பட்ட சூழல் வருவதற்கு வாய்ப்புண்டா?
    அது இங்கே தேவையா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. என்னு டைய ஆசை ஒரு வெகுஜன சினிமாவை நல்ல தரத்தோடு எடுக்கவேண்டும் என்பது தான். அப்படி எடுக்க முடியும் என்பது என் நம்பிக்கை. வெகுஜன பார்வையாளர்களை தவிர்த்துவிட்டு ஒரு படத்தை எடுப்பது பற்றி யோசிப்பதற்கு தனி பக்குவம் வேண்டும். அது எனக்கு இன்னும் வரவில்லை. வந்ததும் பார்க்கலாம்.
    உங்க நண்பர் தனுஷ் நடித்த ‘மாரி’ திரைப்படம் புறா பந்தயத்தை களமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததே. நீங்கள் 200-க்கும் மேலான புறாக்களை வளர்த்து வருகிறீர்கள். அந்தப் படத்துக்கு நீங்கள் ஆலோசனை கூறினீர்களா?
    அவர் அந்தப்படத்தின் கதையை என் னிடம் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் ஒருமுறை புறாக்களை மையமாக வைத்து ஒரு லைனை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஏற்கனவே இந்தப் பின்னணியில் ஒரு கதையை ஒருவர் சொல்லியிருக்கிறார்’ என்று தனுஷ் கூறினார். ‘சரியாக இருந்தால் பண்ணுங்க’ என்று நானும் சொன்னேன். அவ்வளவுதான்.
    இயக்குநர் அட்லி வசனத்தில், புதிய இயக்கு நர் இயக்க உங்கள் கதையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கப்போகிறாராமே? ஒரு இயக்குநரான நீங்கள் உங்கள் கதையை மற்றவர்கள் எழுத, இயக்க அனுமதித்தது ஏன்?
    ஜி.வி.பிரகாஷ் எனக்கு பிடிக்கும். இதற்கு பதில் அவ்வளவுதான்.
    சேனல் பிரச்சினை, புதுவித சேட்டிலைட் விற்பனை என்று சினிமாவில் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
    எல்லாமே சரியாகும். ஒவ்வொரு சமயத்திலும் சினிமா புதிய வடிவம் எடுக்கும் அவ்வளவுதான். நெகடிவ் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்றார்கள். டிஜிட்டலில் இன்று எடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் எல்லாமும்.
    ‘விசாரணை’ எப்போது ரிலீஸ்?
    அக்டோபர் மாதத்தில். அதற் கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
    அடுத்தது தனுஷ் படம்தானே?
    ஆமாம். இரண்டு மாதத்தில் அந்தப் படத்துக்கான பணிகளை தொடங்க உள்ளோம்.


    நன்றி - த இந்து


    வெற்றி மாறன் வெற்றி வெற்றி வெற்றி என்று குவிபார் எனபதில் எள்ளளவும் மாற்று கருத்து இல்லை .....இவர் படங்கள் மிக அழுத்தமாக பார்பவர்கள் மனத்தில் பதிந்து விடுகிறது ....வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது......நமக்கு எல்லாம் பெருமையை தேடி கொடுத்து இருக்கிறார் ........டிவி பேட்டியில் மற்றும் சில பேட்டியில் (you tube ) இல் பார்த்ததில் அவர் மிக தெளிவாக நிதானமாக இருக்கிறார் .....என்ன செய்ய வேண்டும் ....அதற்கு கள மற்றும் கால சூழ்நிலை ஒத்து வந்தால் இதை இதை செய்யலாம் ....அல்லது அதற்கு வாய்ப்பு இல்லை என்று திடமாக .....தெளிவாக உள்ளார் .......பிடிவாதமாக இதை செய்ய வேண்டும் என்று இல்லாமல் ...யதார்த்த உலகுக்கு ஏற்றார் போல இருபது ....நிஜம் ஜெயிக்கும் என்று தெளிவாகுகிறது ..........உங்கள் வெற்றி தொடர வாழ்த்துகள் சார் ........சமுதாயத்தில் நடக்கும் பல விசயங்களை உங்கள் பாணியில் திரை படமாக கொடுத்தால் ......நன்றாக இருக்கும் .....எல்லாம் வல்ல சூட்சம சக்தி அதற்கு அருள் புரியும்

    Monday, July 20, 2015

    மாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர்கள் 16 பேர் அதிர்ச்சி

    தாதா சினிமாக்களுக்கான ஆகி வந்த களமான சென்னையின் நெருக்கடியான பகுதிதான் கதைக்களம். அங்கே மாமூல் வசூல் செய்யும் குட்டி தாதா மாரி (தனுஷ்). ரவுடியிசம் தவிர புறா பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு. அந்தப் பகுதியில் நடக்கும் புறா பந்தயங் களை நடத்துவதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மாரியின் இடத் துக்கு வரவேண்டும் என்று காய்களை நகர்த்துகிறார் மற்றொரு ரவுடியான பறவை ரவி (மைம் கோபி). அந்தப் பகுதியின் காவல்நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்) ஒரு கெட்ட போலீஸ் என்பதை அறிந்து அவருடன் கூட்டணி அமைக்கிறார்.
    அர்ஜுன் திட்டமிட்டு மாரியை ஜெயி லுக்கு அனுப்புகிறார். மாரி இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரது மாமூல் வசூல், புறாப் பந்தயம் இரண்டையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். சிறையிலிருந்து வரும் மாரி தனது இடத்தை மீண்டும் எப்படி திரும்பக் கைப்பற்றுகிறார் என்பதுதான் கதை.
    அழுத்தமான கதை இல்லாமல், துருவேறிய காட்சிகளை வைத்து மசாலா படம் ஒன்றைச் சமைத்திருக் கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். இன்ஸ்பெக்டர் அர்ஜுன், மாரியோடு சம்பந்தப்பட்ட பழைய கொலை வழக்கு ஒன்றைத் துருவ ஆரம்பிக் கும்போது அதுதான் கதையின் மைய இழையாக இருக்குமோ என்று பார்த் தால் அப்படி எதுவுமில்லை. தனது புறாவைக் கொன்றுபோட்டவனை மாரி கத்தியால் குத்திய விவகாரம் அது. அந்த அளவுக்கு அவர் தனது புறாக்களை நேசிக்கிறார் என்கிறார் கள். ஆனால் புறாக்களுக்கும் மாரிக்கு மான உறவு என்ன? அது எத்தனை அழுத்தமானது என்ற பின்னணி சில வார்த்தை வசனங்களிலேயே கடந்து போய்விடுகிறது.
    புறாப் பந்தயம், அதற்கான விதி முறைகள். ரெஃப்ரி என்றெல்லாம் விரிவுரை தருகிறார்கள். ஆனால் புறாப் பந்தயத்தில் பங்கேற்பதில் இருக் கும் போதை, புறாக்களைப் பந்தயத் துக்கு தயார்படுத்துவது என்று எதுவும் அழுத்தமாகக் காட்டப்படவில்லை.
    வணிக சினிமாவின் தவிர்க்க முடியாத நியதி ‘பில்ட்-அப்’புகள் நிறைந்த கதாநாயகனின் அறிமுகக் காட்சி. இந்தப் படத்தில் தனுஷ் வரு கிற எல்லாக் காட்சிகளும் அறிமுகக் காட்சிகள்போலவே இருக்கின்றன. பாலாஜி மோகன், தனுஷ் என்னும் நட்சத்திரத்தை எப்படிப் பயன்படுத்தி அப்ளாஸ் அள்ளுவது என்பதிலேயே கவனமாக இருந்திருக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.
    சில காட்சிகள் அழுத்தமாக அமைந் திருக்கின்றன. போட்டி தாதா குழு தனு ஷிடம் மாமூல் வாங்க வரும் காட்சி, தொடக்கத்தில் விஜய் யேசுதாஸுக் கும் தனுஷுக்கும் இடையே நடக்கும். மோதல்கள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. தீ விபத்துக்குப் பின் புறாக்கள் திரும்ப வரும் காட்சி மனதைத் தொடுகிறது.
    தனுஷின் ‘பில்ட் அப்’ காட்சிகளில் இசையமைப்பாளர் அனிருத் காது ஜவ்வு கிழிய பின்னணி வாசித்துத் தீர்க்கிறார். அதேசமயம் பாடல்களை அக்மார்க் மாஸ் பாடல்களாகத் தந்திருக்கிறார்.
    நையாண்டி, கெத்து ஆகியவற்றில் குறை வைக்காமல் செய்திருக்கிறார் தனுஷ்.
    காஜல் அகர்வால் தொடங்கி யாருக் கும் அழுத்தமான பாத்திரம் இல்லை என்பதால் அவர்கள் நடிப்பு பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. விஜய் யேசுதாஸின் பாத்திர வார்ப்பில் இருக்கும் பிரச்சினையால் அவர் நடிப்பு எடுபடவில்லை.
    தனுஷின் நண்பர்களாக வரும் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத் ஆகிய இரண்டு பேரின் நகைச்சுவை வசனங்கள் ஆங்காங்கே குபீர் கிளப்புகிறது.
    மசாலா படம் என்றாலும் அதற் கென்று ஒரு ஒழுங்கு இருக்க வேண் டும். இந்தப் படத்தில் அது இல்லை.
    நன்றி - த இந்து


    • Gnanasekaran  
      தனுஷ் நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார், கூடிய விரைவில் டைரக்டர் ஆக ஆகப்போகிறேன் என்று. அவருக்கே தெரியும் இனி நம் படம் தேறாது என்று.
      Points
      5885
      about 12 hours ago
       (2) ·  (0)
       
      Udhayakumar · karthi Up Voted
      • VVENKATESH  
        எச்செல்லேன்ட் மோவி ரேஅல்லி வி என்ஜோஎத் தனுஷ் rock's
        about 13 hours ago
         (0) ·  (0)
         
        • LVLinga Velu  
          nice movie dhanush mass . dhanush carrierla oru பிளாக் பஸ்ட்டர் movie
          about 14 hours ago
           (0) ·  (1)
           
          karthi Down Voted
          • GGopal  
            பொறுக்கிகள் , ரௌடிகள் , குடிகாரர்கள் ஆகியோரை மேன்மக்களாக , போற்றதக்கவராக காட்டும் இது போன்ற திரைப்படங்கள் பூச்சி மருந்தை காட்டிலும் விஷம் அதிகமுள்ளது. மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
            about 14 hours ago
             (4) ·  (0)
             
            Udhayakumar · karthi · RBALAKRISHNAN · Siva Up Voted
            • VV  
              வேஸ்ட் படம்
              about 15 hours ago
               (1) ·  (2)
               
              Udhayakumar Up Voted
              Antony · karthi Down Voted
              • RRR  
                ஒரு வேல மது பத்தி ஒரு பாட்டோ இல்ல டாஸ்மாக் பத்தி காண்பிச்சா, கேளிக்கை வரி விலக்கு கெடைக்கும் போல...வர்ற 90% தமிழ் படங்களே, குடிக்கற காட்சியே இல்ல ம இர்ருகர்து இல்ல. இன்னும் கொஞ்சம் வருஷத்துல தமிழ் நாடு நடமாடும் சுடுகாடா ஆகா போகுது.
                Points
                4950
                about 15 hours ago
                 (1) ·  (0)
                 
                karthi Up Voted
                • VVara  
                  unbearable intolerable insuppoertable = well deserved flop
                  about 16 hours ago
                   (0) ·  (0)
                   
                  • Mmvnarayanan  
                    படம் பிடிக்கவில்லை
                    about 17 hours ago
                     (0) ·  (0)
                     
                    • Mmvnarayanan  
                      படம் நல்ல வேண்டும்
                      about 17 hours ago
                       (0) ·  (0)
                       
                      • ரிஸ்வான்  
                        குடிகார ஹீரோ, ரவுடி ஹீரோ, புகை பிடிக்கும் ஹீரோ, ஹீரோயின். மது குறித்த பாடல்கள், ஊற்றி கொடுக்கும் அரசு. எதை சொல்லித்தருகிறோம் இளைய சமுதாயத்திற்கு? தவறான வழிகாட்டலால் தறிகெட்டுப்போகிறது தமிழகம்.
                        about 18 hours ago
                         (1) ·  (0)
                         
                        Siva Up Voted
                        • AJAntony John  
                          சிருச்சா தங்கமாரி மொறச்சா சிங்கமாரி ஆக மொத்த மொள்ளமாரி
                          about 19 hours ago
                           (1) ·  (0)
                           
                          Antony Up Voted
                          • Mmohanram  
                            Average movie.....
                            about 19 hours ago
                             (0) ·  (0)
                             
                            • SMSathya Moorthy  
                              ஒருமுறை பார்க்கலாம் . ரோபோ சங்கர் அருமை !!! தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்க கூடிய மசாலா...
                              about 20 hours ago
                               (0) ·  (0)
                               
                              • Rram  
                                நான் தனுஷ் ரசிகர் இல்லை. நா படம் பார்த்தேன் இவர் குறிப்பிட்டுள்ள குறைகள் எதுவும் எனக்கு படம் பார்க்கும் pothu தோனவில்லை. மாஸ் தெறி மாஸ்...ரோபோ செம காமெடி. Senjudanunga
                                about 20 hours ago
                                 (0) ·  (1)
                                 
                                Udhayakumar Down Voted
                                • Nagarajanraja King  
                                  எனக்கு மாரில பிடிச்ச ஒன்னு கிளைமாக்ஸ் காஜல்ட்ட பேசுற வசனம் லவ் வேண்டாம் நண்பர்களா இருப்போம்