Showing posts with label பானு. Show all posts
Showing posts with label பானு. Show all posts

Monday, May 06, 2013

மூன்று பேர் மூன்று காதல் - சினிமா விமர்சனம்



இந்தப்படத்துல உருப்படியான விஷயம் ஹீரோயினா வரும் 3 உருப்படிகளும் கண்ணுக்கு லட்சணமா இருப்பதும் , ஒளிப்பதிவும்  , யுவன் -ன் இசையும் தான் . அதனால படத்தோட கதைக்கு போகாம நேரடியா 3 ஹீரோயின்களைப்பற்றி முதல்ல பார்த்துடலாம்னா நம்மை எல்லாம் ஜொள் பார்ட்டினு சொல்லிடுவாங்க ( இப்போ மட்டும் என்ன வாழுது ? ) அதனால இந்தப்படத்தோட கதையைஒரு கிளான்ஸ் பார்த்துடுவோம் .


நடிப்பே சுத்தமா வராத களவாணி விமல் தான் மெயின் ஹீரோ .வசனம் உச்சரிப்பே வராத தன்  வாயால  அவர் ஹீரோயின்ட்ட பேசும்போது செம காமெடி .லாசினி தான் இவருக்கு ஜோடி ( பாப்பாவுக்கு என்ன லாஸ் ஆக இருக்கு இனி ? ) ஊர்ல 1008 ஃபிரஸ் பீஸ் இருக்கும்போது ஹீரோ ஆல்ரெடி யாருக்கோ பரிமாறுன சாப்பாட்டு மேல ஆசைப்படறாரு , யாரும் பயப்பட வேண்டாம் , ஃபுல் மீல்ஸ்சும் பரிமாறலை . அதாவது லவ் ஆகி நிச்சயம் ஆகி பிரச்சனையால கேன்சல் ஆன ஃபிகரு .


அப்படிப்பட்ட ஃபிகரை இவரு நாய் மாதிரி பின்னாலயே சுத்தி கிட்டத்தட்ட கரெக்ட் பண்ற ஸ்டேஜ் வந்ததும் ஜகா வாங்கறார்.அவருக்கு திடீர்னு புத்தி வந்துடுது ; லவ் பண்றவனுக்கு ஏது புத்தி அப்டினு லாஜிக் கொஸ்டின் எல்லாம் கேட்கக்கூடாது . அவர் சந்திச்ச 2 லவ் ஜோடிகளின் கதையை அள்ளி விடறார்


a


யதார்த்த நாயகன் சேரன் - பதார்த்த நாயகி தாமிர பரணி பானு ( கறுப்பான கையால என்னை பிடிச்சான்)  ஜோடி கதை . இவரு சமூக சேவகரு சிறைக்கைதிகளுக்கு மறுவாழ்வு  இயக்கம் நடத்தறார்.. ஃபிகர் கிடச்சா போதும்னு  பார்க் பீச்னு கூட்டிட்டுப்போய் காதலியை கூகுள்னு நினைச்சு எதையாவது தேடிட்டே இருக்கும் சாதா காதலன் மாதிரி இல்லை இவரு . பிஹெச்டி படிப்பெல்லாம் படிக்கறாரு. லட்டு மாதிரி ஃபிகர் கிடச்சதும் நம்மாளுங்க பூந்தி ஆக்கிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாங்க . இவர் என்னடான்னா அன்னை தெரேசா ரேஞ்சுக்கு அவரையும் சமூக சேவகி ஆக்க ட்ரை பண்றார்.


அடுத்து ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் - சுர்வீன் லவ் ஸ்டோரி . இந்த பார்ட் அப்டியே  எதிர் நீச்சல் பின் பாதில இருந்து சுட்டுட்டாங்க போல . ஸ்டோரி டிஸ்கஷன்க்கு உக்கார்ந்த ஆட்கள் ஒரே ஹோட்டல்ல பக்கத்து பக்கத்து ரூம் போட்டு இருப்பாங்க போல அர்ஜூன் ஒரு ஸ்விம் கோச். ஹீரோயினை நீச்சல் வீராங்கனையா ஆக்க பயிற்சி அளிக்கறார் , சைடுல அவரை லவ்வறார். ஆனா பாருங்க ஒரு விபத்துல அவருக்கு அடிபட்டு கழுத்துக்கு கீழே எதுவும்  வேலை செய்ய முடியாத நிலைக்கு போறார். அவர் அப்டி ஆனதால ஹீரோயின் வீட்ல லவ்வுக்கு எதிர்ப்பு . அவரை கழட்டி விட்டுடு அப்டினு அட்வைஸ் பண்றாங்க . ஆனா  தெய்வீகக்காதல்னு அவ பம்மறா


 சுருக்கமா சொல்லப்போனா 3 காதலும் விளங்கலை . அவ்வளவு தான் கதை ஹி ஹி


முதல் ஹீரோ விமல் . டயலாக் டெலிவரிக்காகவே இவர் வாய்க்கு சூடு வைக்கனும்  அப்பா சாமி முடியலை

 


 ஹீரோயின் லாசினி புருவத்தை டெய்லி பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணிட்டு வருவார் போல . வரைஞ்சு வெச்சது மாதிரி இருக்கு .தான் ரொம்ப அழகு என்ற கர்வம் அவர் பாடி லேங்குவேஜ்ல தெரியுது .  இன்னும் என்ன வெல்லாமோ தெரியுது . யாராவது அவர் கிட்டே நீங்க நார்மல் ஃபிகர் தான் 50 மார்க் தான் தேறும்னு சொல்லி வெச்சா தேவலை .  அவர் டைட் பனியன் போட்டு வரும் காட்சிகள் 5  . ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகள் 6 . கீழே தேவை இல்லாமல் குனியும் காட்சிகள் 4


அடுத்து சேரன் . இவர் முகம் முத்திடுச்சு . ஆனா பொறுப்பா கண்ணியமா நடிச்சிருக்கார் . மனசுக்குள்ளே ஆட்டோகிராஃப் மாதிரி இன்னொரு ஹிட் குடுக்கனும்னு ஒரு ஆதங்கம் அவர் கண்ல நல்லாத்தெரியுது



இவருக்கு ஜோடியா வரும் பானு  குட் கட்டை . ஆனா படத்துக்கு இயக்குநர் எஸ் ஜே சூர்யான்னா பிரிச்சு மேஞ்சிருப்பார். ஆனா வசந்த் . அவர் ரொம்பவே டீசண்ட் . அதனால பானுவை கண்ணியமாகவே காட்டி இருக்கார்



அர்ஜூன்  ஆக்‌ஷன் பண்ணவோ , பாகிஸ்தான் தீவிரவாதி கிட்டே பஞ்ச் டயலாக் பேசவோ வழி இல்லாம திண்டாடறார். இவர் போர்ஷன் செம போர் . தூங்கிட்டேன் . நான் மட்டும் தனியா தூங்கலை , தியேட்டர்ல இருந்த 87 பேரும் தூங்கிட்டோம் . தூங்காம விழிச்சுட்டு இருந்த அந்த கள்ளக்காதல் ஜோடிகள் 5 செட் என்ன செஞ்சாங்களோ ?

ஹீரோயின் பர்வீன் ( டைட்டில் ல சுர்வீன் ) உதட்டு அழகி . கூந்தல்க்கு மருதாணி , செம்பருத்தி இலை தேய்ச்சு இருப்பார் போல செம்பட்டையா இருந்தாலும் அழகாத்தான் இருக்கு . இவரு நீச்சல் உடையில் வரும் காட்சிகளில் லாங்க் ஷாட் கேமரா ஆங்கிள் வைத்த ஒளிப்பதிவாளருக்கு என் கடும் கண்டனங்கள் . இவங்க மட்டும் தான் ரசிக்கனுமாம் ஹூம் சுயநலம் .





 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. லொகேஷன் செலக்‌ஷன்ஸ் பக்கா .  கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கைக்காட்சிகள்  பிளஸ்


2. மூன்று ஹீரோயின்கள் செலக்‌ஷன் கனகச்சிதம் . நம்மாளுங்க கதை செலக்‌ஷன்ல கோட்டை விட்டாலும் ஹீரோயின் செலக்‌ஷன்ல கோட்டை விடறதில்லை


3. படத்தில் காமெடி டிராக் ஏதும் தனியா வைக்காமல் 3 காதல் கதைகளை மட்டும் எடுத்தது



4. வசனங்களில் ஆங்காங்கே வசந்த் டச்



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. நீச்சல் கோச்சாக வரும் 50 வயசு அங்கிள் அர்ஜூனிடம் 16 வயசு ஃபிகர்  லவ்வில் விழுந்தது எப்படி ? நீச்சல் கோச் நடக்கும்போது டச்சிங்க் டச்சிங்க் எதுவும் நடக்காம இருக்குமா? ( அதை ஏன் காட்டலை? ஹி ஹி )


2. நீச்சல் பயிற்சிக்கு பகல்ல போகாம ஏன் நடு ராத்திரில போறாங்க?


3. நீச்சல் வீராங்கனையா வரும் சுர்வீன் விமலின் தோழி என வசனத்தில் மட்டும் வருது , காட்சியில் இல்லை


4. மூன்று காதலையும் ஐ மீன் காதல் கதைகளையும் சேர்க்கும் மையக்கோடு என எதுவும் இல்லை . அது சுவராஸ்யத்தை குறைத்து விடுது



5. லவ் ஸ்டோரின்னா லவ்வர்ஸ் சேருவாங்களா? மாட்டாங்களா? என ஒரு எதிர்பார்ப்பை , துடிப்பை ஏற்படுத்தனும் . ஆனா அவங்க சேர்ந்தா என்ன சேராட்டி என்ன? என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது பலஹீனம்



6 . படம் போட்ட முதல் 30 நிமிஷத்துல 3 பாட்டு . விமல் என்ன விஜயா? முடியல . பாடல் காட்சிகள்  2க்கு இடையே போதிய இடை வெளி வேணாமா?


 7. ஹீரோ செலக்‌ஷன் தப்பு . ஏன்னா இது யூத்ஃபுல் லவ் ஸ்டோரி . அங்கிள்ஸ் லவ் ஸ்டோரி இல்லை . அர்ஜூன் , சேரன் எல்லாம் இதுக்கு சூட் ஆகலை



8. காதல் கதைகள் 3 இருந்தும் எதிலும் உண்மைக்காதலோ , அதற்கான சுவடோ இல்லை , எல்லாமே தியாகம், சேவை , டைம் பாஸ்னு போயிடுச்சு , அதனால ஆடியன்ஸ் மனசுல ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியல. ஒரு லவ் ஸ்டோரி சக்சஸ் ஆகனும்னா பார்ப்பவர் மனதில் ஒரு பதை பதைப்பு ஏற்படனும்






 தூங்கிய நேரம் போக மிச்சம் மீதி கவனித்ததில் தேறிய மனம் கவர்ந்த வசனங்கள்


1. காதல்ங்கறது காதலி கிட்டே இது வேணும்னு கேட்கறது இல்லை.அவளுக்குப்பிடிச்சதை அவ கேட்காமயே கொடுக்கறது




-------------------


2. ஜெயிச்சவன் தொடர்ந்து ஜெயிச்சுட்டே இருந்தாத்தான் மரியாதை


---------------


3. யோசிச்சுப்பார்த்தா காதலை விடப்பைத்தியக்காரத்தனம் எதுவும் இல்ல.ஆனா யோசிச்சாத்தானே ? 



---------------------


4. அவனவன் தன் காதலியை 1 மணி நேரத்துக்கு 1 முறை போய் பார்க்கறாங்க . பார்க்கனும்னு இந்தக்காலப்பசங்க நினைக்கறாங்க

 நானெல்லாம் அப்டிப்பார்த்தா ஜூரம் வந்துடும் . மொக்கை ஃபிகரு 




=-----------------------


5. அழகா இருப்பா னு சொல்றே.ஆனா பேரு தெரியாதா ? ஒரு பொண்ணை அழகா இருக்கானு சொல்ல அவங்க பேரு எதுக்கு ?



-------------------

 6  குழப்பமான மன நிலைல இருக்கற ஒருத்தனாலதான் காதலிக்க முடியும்


---------------


7. எங்க ஃபேமிலில  எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்போம் , ஜோக் எதுவும் சொல்லத்தேவை இல்லை  ஜோக்னு சும்மா சொன்னாலே போதும் சிரிப்போம்



------------------


8. எதுக்கு என் மகளை அப்படி குனிஞ்சு பார்க்கறீங்க? அவ என்ன அவ்வளவு குள்ளமா?



---------------


9. ஒரு பொண்ணை அழகுன்னு சொல்ல அவங்க பேரு எதுக்கு?




-------------



10.  அழகான 2 பேர் ஏன் தனித்தனியா சாப்பிடனும்? வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்


-------------




11. மிஸ்  ஒருத்தன் ஒரு நாள் ல 86,400 தடவை ஒருத்தியை நினைக்கறான்னா என்ன அர்த்தம்?


 தெரியலையே?


 டெயிலி எல்லா டைமும் அவளையே நினைச்சுட்டு இருக்கான்னு அர்த்தம்



----------



12.  ஹலோ ! நான் சிரிச்சது உங்க ஜோக்குக்குத்தான், உங்களுக்காக இல்லை


 ஆனா அந்த ஜோக் என்னுதுதானே?



---------------


13.  ஏம்ப்பா பஃபே சிஸ்டம் ஓக்கே , இந்த தட்டு இதுதான் லாஆஸ்ட் சைஸா? எக்ஸ்ட்ரா லார்ஜ் கிடையாதா?



--------------


14.  ஃபாரீனர் - ஹாய் . ஐ ஆம் ஃபிராங்க் அண்ட் கோ


 சத்யன் - ஐ ஆம் வசந்த் அண்ட் கோ




-----------

15. உங்க லெஃப்ட் ஹேண்ட் ஏன் அங்கே இருக்கு? கொடுங்க , பத்திரமா நான் வெச்சிருக்கேன்

 ம்ஹூம்

 சரி என் கையை எடுத்துக்குங்க . அது ஃப்ரீயாத்தான் இருக்கு ( நல்ல வேளை )



---------------

16. ஏய். நீ லவ் பண்ற நாய் வீட்டு நாயா? தெரு நாயா? டக்னு சொல்லு பார்ப்போம்



------------


17.  ரெண்டு கால் இருக்கும் நாமே வாக்கிங்க் போகும்போது 4 கால் இருக்கும் நாய்ங்க வாக்கிங்க் போவதில் என்ன தப்பு?



-----------


18. நமக்குப்பிடிச்சதை செய்வது என்பது வேறு . சரியானதைசெய்வது என்பது வேற




------------------


19.  உடம்புல எந்த காயத்தையும் ஏற்படுத்தாத ஒரே அத்லெட் நீச்சல் தான்



---------------


20.  யார் என்னை எப்டி சொன்னாலும் நீ என்னை பாராட்டும்போது வர்ற கிக்கே தனி


-------------


21. மத்தவங்க எல்லாம் என்னை எப்படி கூப்டறாங்க்ளோ அதே மாதிரி நீயும் கூப்பிட்டா என்ன கிக் அதுல ?



-----------------


22.  எல்லா சேம்ப்பியன்சும் ஆல்ரெடி ஒரு முறையாவது தோல்வியை சந்திச்சவங்களாத்தான் இருப்பாங்க



----------------------

23. பொண்ணுங்க உன்னை மாதிரி சுமாரா இருந்தாலே போதுமே , பசங்க பல்லைக்காட்டுவாங்களே


---------------


24. டார்கெட்டையே பார்த்துட்டு இருப்பவன் தான் வின்னர் ஆவான்


--------------


 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41



எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


ரேட்டிங்க் -    2.25 / 5


 சி பி கமென்ட் -  தூக்கம் வராம அவதிப்படறவங்க போனா 20 நிமிஷத்துல தூக்கம் கேரண்டி . கள்ளக்காதலர்கள் போலாம்,. தியேட்டர்ல ஆபரேட்டர் கூட இருக்க மாட்டார். ஆன் பண்ணிட்டு போய்டுவார் . எஞ்சாய்  

 

டிஸ்கி - நான் பெண்களை மதிப்பவன் என்பதை காட்டவும் , ஆணாதிக்கவாதி அல்ல என்பதைக்காட்டவும் தான் இப்படி ஆண் ஹீரோக்களின் ஃபோட்டோக்களைத்தவிர்த்திருக்கிறேன் , பெண்ணியவாதிகள் , மாதர் சங்கங்கள்  இதுக்கு ஏதாவது விருது , பரிசு தந்தால் சாரு போல் கூச்சமே இல்லாமல் வந்து வாங்கிக்கொள்வேன் ;-))

Thursday, March 28, 2013

மாந்திரீகன் - சினிமா விமர்சனம்

                                             
                                                 காலை 10.30 க்கு படம் னு அவசர அவசர மா போனா... அங்க 10.40 ஆகியும் ஆப்ரேட்டர் வரல... எத்தன மணிக்கு படம் னு விசாரிச்சா... தம்பி இது வரைக்கும் அஞ்சு பேர் தா இருக்காங்க.. 10.50 வரைக்கும் பாத்துட்டு 10 பேர் வந்தா தான் படம் னு சொன்னாங்க. எப்டியோ..காலேஜ் லீவு ங்கறதால.. பக்கத்து காலேஜ் பசங்க ஒரு அஞ்சு பேர் அப்டி இப்டி னு ஒரு 15 பேர் வந்துட்டாங்க. உடனே தியேட்டர் ல குஷி ஆகி ஒரு வழியா படம் போட்டாங்க.


                                                    2012 ல ரிலீஸ் ஆன ஜெயராம் நடிச்ச மலையாளப் பட டப்பிங் னு ரீல் போட்டதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது.சரி படத்தோட கதைக்கு வருவோம்... பொண்ணுங்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தன் துணையை தேர்ந்தெடுக்கற உரிமை அந்த ஊர் ஜமீன் குடும்பத்துக்கு இல்ல..பெரியவங்களா பாத்து வைக்குற ஒரு பேயையோ இல்ல வில்லனையோ தான் கட்டிக்கிட்டு மாறடிக்கனும். அந்த ஊர் ஜமீன் பையனுக்கும் அதே ஊர் சாதாரண குடும்பத்த சேர்ந்த பொண்ணுக்கும் லவ் ஆகிடுது.



 எப்படியும் நம்மள சேர விடமாட்டங்கன்னு ஓடிப் போக முடிவு பண்றாங்க (உண்மையான காதலாம்......)  இது அந்த பையனோட மூணு அண்ணன்களுக்குத் தெரிஞ்சு அந்த பொண்ணு குடும்பத்த வெட்டி கொன்னுட்டு, பொண்ண .. அதாவது தாமிரபரணி படித்தில் நடித்த பானுவ.. உயிரோட கொளுத்தறாங்க... செத்தா ஒன்னா சாவோம் னு அந்த பையனும் பானுவோட சேர்ந்து ஒண்ணா எரிஞ்சு போயிடறான்.அதுல பானுவோட ஆவி மட்டும் துர் ஆத்மாவா வெறியோட பழி வாங்க அலையுது. கடைசில அது பழி வாங்குச்சா இல்லையா? ஆடியன்ஸ் இந்த படத்துக்கு வந்து எப்பிடி பலி ஆனாங்க என்பதை எந்த அளவுக்கு மொக்கையா சொல்ல முடியுமோ அந்த அளவு மொக்கயா சொல்லி இருக்கற படம் தான்  மாந்திரீகன்.

                                                       நமக்கு நல்லா தெரிஞ்ச  ஜெயராம் தான் பட ஹீரோ.தன் அப்பா மாந்திரீகன் என்பதால் அவர் அடக்கிய பேய்யை உங்களால்தான்  அடக்க முடியும் என மந்திரம் தந்திரம் தெரியாத ஜெயராமை பேயை அடக்க கூட்டி வந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகளை முழுமையாக ரசிக்க முடியாவிட்டாலும் ஜெயராம் காட்டும் எக்ஸ்பிரசன்கள் அற்புதம். அவர் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் மொக்கையைத்தான் தாங்க முடியவில்லை.



முதன் முறையாக பேயைப் பார்த்து பயப்படும் போதும், தன் காதலிக்காக மனமுருகுவதும் அவர் நடிப்பு அருமை. முகத்தில் ஆங்காங்கே தென்படும் அப்பவித்தனம் அவரது ப்ளஸ்.

                                      அடுத்து பாரட்டப்படவேண்டியவர்கள் ஹீரோயின்கள்  தாமிரபரணி பானு மற்றும் பூனம் பஜ்வா (கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர்).பேயாக வரும் பானு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் ஏனோ வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. முகம் நிறைய பவுடரும் மைய்யும் பூசீட்டா அதுக்கு பேர் பேயாம் (அப்படி பாத்தா ஊர்ல இருக்கற பாதி பொண்ணுங்க பேய்தான்....) . ப்ளாஷ் பேக்கில் வந்த வரை அவரது நடிப்பு ஓக்கே... பேயாக வரும்போது முகத்தை வடிவேலு போல் வாய், மூஞ்சியை கண்ட படி கோணித்து.... பயம் காட்டுவதற்கு பதில் சிரிப்பு காட்டுகிறார்.

                                             

                                                   பானு,  ஜெயராமின் காதலியான பூனம் பஜ்வா வின் உள்ளே புகுந்த பின் பூனம் பஜ்வா காட்டும் முக பாவனைகள் மிக அருமை. ஏன் முக பாவனைகளே தேவை இல்லை... அவரது கண்களே போதும்.. குட் .. நல்ல முயற்சி..அவரது அப்பாவித்தனம் கலந்த எக்ஸ்பிரஸன்கள் படத்திற்கு வலிமை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரியாஸ்கான் வந்த வரை ஓக்கே.. மற்ற கதாப்பாத்திரங்கள் ஏதும் மனதில் ஒட்டவில்லை.


 


மண்ணை கவ்விய ... ச் சீ... மனம் கவர்ந்த வசனங்கள்:

1. பேய் கிட்ட இருந்து என்னய காப்பாத்திக்கதான் நான் உங்க கிட்ட            வந்தேன்

    அதுக்கு ஏண்டா பேய் மாதிரி கத்தற?


2. ஏய்... மாந்திரீகா..... என்ன பாத்து ஏண்டா ஒடற? உன் சக்தி அவ்ளோதானா?
      
       நா உன்ன பாத்து ஓடல... உன்ன இந்த இடத்துக்கு ப்ளான் பண்ணி வர வெச்சேன்...

3. பேய் பேசும் கேவலமான ப்ஞ்ச் : 
           
               நாங்க யாரையும் கொல்ல மாட்டோம்....ஆனா வெறி வந்தா ஒருத்தர கூட உயிரோட விடமாட்டோம்... (இங்க ஆல்ரெடி எல்லார்க்கும் வெறி வந்துருச்சு)

4.ஆஆஆஆ..........ஊஊ........ஏஏஏய்ய்.... விட்ரு.... உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.(பானு 6 முறை)

5.உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.ஆஆஆஆ..........ஊஊ....... ஏஏஏய்ய்.... விட்ரு.... வேண்டாம்.... ஏஏஈஇ (பூனம் பஜ்வா 5 முறை)


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் :

1. இரண்ட ஹீரோயின்களை புக் பண்ணியது... அதிலும் தாமிரபரணி தாம்பூலம் பானு மற்றும் பூக்காடு  பூனம் பஜ்வாவை புக் செய்தது.

2. ஹீரோவாக ஜெயராமை புக் பண்ணியது.( சம்பளம் தர்லைன்னாலும் கண்டுக்க மாட்டாராம் )

3. பேய் படமாக இருந்தாலும் படத்திற்கு U சான்றிதழ் பெற்று மகளிர் அணியை கவர செய்த யுக்தி .

4. ஆரம்பத்தில் வரும் கொலையை காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

5.தமிழ் படம் போன்றும், ஹைபட்ஜெட் படம் போன்ற போஸ்டர் டிசைன்.

6. பானுவின் ப்ளாஷ்பேக் காட்சியை 3 நிமிடத்தில் முடித்தது. 

7. மந்திரம் தெரியாத ஜெயராம் பேய் ஓட்டுவதாக சமாளிக்கும் காட்சிகள்.


8.முதல் கொலை கண்ணாடி முன் பேய் கழுத்தை அறுக்கும் போது வில்லனும் தன் கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சி மிரர்ஸ் படத்தில் இருந்து சுடப்பட்டாலும்... அது வெளியில் தெரியாதவாறு சமாளித்தது.

இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. பல மந்திரங்கள் தெரிந்தவர்களே அடக்க முடியாத துர்மாத்வாவை ஒன்றும் தெரியாத ஜெயராம் பிஸ்கட் சாப்பிடுவ்து போல அடக்குகிறார்.

2. படத்தில் மூன்று வில்லன்கள்... அதாவது அண்ணண்கள்.... இருவர் முதல் காட்சியிலேயே காலி.. மூன்றாமவரையும் அப்பொழுதே போட்டிருந்தால் படம் அப்பவே முடிஞ்சிருக்குமே....

3. வில்லனைத் தவிர படம் பூரா யாரையாவது ஆவி பானு கொன்று கொண்டே இருக்கிறார்.  இதுல லாஜிக் வசனம் “எனக்கு கிடைக்காத காதல் வாழ்க்கை யாருக்கும் கிடைக்க கூடாது” னு.... படு கேவலமா இருக்கு

4.ஜெய்ராம் தன் காதலுக்காக தன் உயிரை பணயம் வைக்கிறார்... ஓக்கே.. அதுக்காக 50 நொடில எல்லா ஓலைச்சுவடியயும் படிச்சு கத்துகிட்டு அடக்கறதுலாம் ஓவர். ( எந்திரன் ரஜினிக்கே 2 நிமிஷம் ஆகும் )

5.க்ளைமேக்ஸ்தான் செம காமெடி.. ஹீரொ ஆத்மாவோட பறந்து பறந்து சண்ட போடுறார்... அத கத்தியால குத்தி இரத்தம் வர வைக்கறார்... ஆத்மாவ தொட முடியுமா? அதுக்கு உருவம் இருக்கா?

6. இசை , ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு  சுமார் ரகம். கிராப்பிக்ஸ் மகா மட்டம்.

படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் ஆச்சு... இவ்ளோ நாள் ஓடுனதே பெரிய ஆச்சர்யம்.. அத நான் பொய் பாத்தது அத விட ஆச்சர்யம்... வெள்ளிக்கிழமை வரை ஓடுமாம்... ஏன்னா சென்னையில் ஒரு நாள் ரிலீஸ் அங்கதான் ஆகுதாம்... பெருந்துறை முருகன் தியேட்டரில் படம் பார்த்தேன்

 




டிஸ்கி - மேலே உள்ள விமர்சனத்தை உங்களுக்கு வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக் .  எடிட்டிங்க் , டைரக்சன் மேற்பார்வை மட்டும் நான் - சி பி. அட்ரா சக்க தி மு க கட்சி மாதிரி , குடும்ப உறுப்பினர்கள் யார் வேணும்னாலும்  ஆக்ரமிப்பாங்க , தமிழர்கள் அதை சகிச்சிக்கனும் ஹி ஹி , மார்ச் மாச ஒர்க் லோடு , நல்ல படங்களுக்குப்போகவே நேரம் இல்லை , குப்பைப்படத்துக்கு எங்கே போக ?


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 36 ( டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம் )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்



ரேட்டிங்க் - 2 /5

 


Saturday, April 09, 2011

விகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf5H-TejWwHRqU4TxHF4NPLdZDzwWmH9yO7eKQFOPBHZOzNltg796Tadn-xQbl4WbH9m6Y_cC-p7iAMGTl1uYfRtbTZUWUFsSn_IH2eeHf5Ww8iGmm_zDtzEdbzKeJrsbgwgjw8cBQdA/s400/Banu-actress-photos-004.jpg_600
''முக்கியமான ஒரு போர்க் காட்சியை எடுக்கணும்.ராஜஸ்தான், சிக்கிம், ஜம்முகாஷ்மீர், ஆந்திரா, கேரளானு எல்லா மாநிலக் கோட்டைகளையும் பார்த் தோம். எதுவுமே செட் ஆகலை. கலைஞர் அய்யாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்.
 உடனே செட் ஆகிடுச்சாக்கும்?
'பெரம்பலூர் பக்கம் ரஞ்சன் குடியில் ஒரு கோட்டை இருக்கு. அங்கே போய்ப் பாருங்களேன்’னு சொன்னாரு.
 அந்த கோட்டைக்கு வழி காட்டி இந்த கோட்டையை  கோட்டை விடப்போறார்..
போய்ப் பார்த்தா, பக்காவா இருந்தது. அதுதான் கலைஞர்!''- 
 ஆமா.. எதா இருந்தாலும் பக்காவா ப்ளான் பண்ணி  செய்வார்.. பாவம் ஸ்பெக்ட்ரம்  விஷயத்துலதான் கோட்டை விட்டுட்டார்..
ஒவ்வொரு பதிலிலும் கலைஞ ரைக் கவனமாகக் கொண்டு வந்து முடிக்கிறார் நடிகர் பிரசாந்த். 'பொன்னர்-சங்கர்’ பிரமாண்டமாக வந்திருப்பது பிரசாந்த்தின் முகத்தில் பிரகாசத்தைக் கூட்டியிருக்கிறது.   

படம் பிரம்மாண்டமா வந்திருக்கு  ஓக்கே.. ரிசல்ட்...? இன்னொரு இளைஞனா.?உளியின் ஓசையா?அப்படின்னு இனிதான் தெரியும்... 

1. ''எப்படி வந்திருக்கு 'பொன்னர்-சங்கர்’?'' 


'' 'படம் எடுத்த தியாகராஜன் கைகளுக்கு முத்தம் கொடுக்கணும்’னு கலைஞர் அய்யாவே சொல்லிட்டார். இனிமே நான் என்ன சொல்ல? 'ஒரு வரலாற்றுப் படம் பண்ணணும். அதை கலைஞர்தான் எழுதணும்’ங்கிறது என்னோட ரொம்ப நாள்ஆசை.

வேண்டாத ஆசை.. ஹி ஹி 

நானும் அப்பாவும் கலைஞரிடம் விருப்பத்தைச் சொன்னோம். அவர் உடனே 'பொன்னர்-சங்கர்’ புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். கதை, களம், சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்கே ஒன்றரை வருஷம் எடுத்துக்கிட்டோம். 2009-ல் ஆரம்பிச்ச ஷூட்டிங், போன மாசம்தான் முடிஞ்சுது. 'பொன்னர்-சங்கர்’ கண்டிப்பா உங்களுக்குப் புது அனுபவமா இருக்கும்!''

 கொலையா கொன்னெடுக்கப்போறாரோ....

http://www.tamilactresspics.com/gallery/images/tamil-actress/bhanu/banu120807_05.jpg

2. '' 'பொன்னர்-சங்கர்’ சீரியஸான முயற்சியா? இல்லை, கலைஞரைத் திருப்திப்படுத்த எடுத்த படமா?'' 

''படம் பார்க்காமல் நீங்கள் கேட்ட இந்தக் கேள்வி என்னை வருத்தப்பட வைக்கிறது. 'என் படைப்புகளைப் படமாக எடுங்க’ன்னு கலைஞர் யாரிடமும் கேட்டது கிடையாது.

அவர் என்ன அழகிரியா? நேரடியா மிரட்ட?


இந்தப் படம் முழுக்க முழுக்க எங்களோட ஆசையால் உருவானது. ஷூட்டிங்கிலேயே பிஸியா இருந்ததால் இன்டர்வியூ, விளம்பரம் எதுவும் நாங்க கொடுக்கலை. அதனால எங்களோட உழைப்பு உங்களுக்குத் தெரியலை. படம் பார்த்துட்டு சொல்லுங்க!''

பார்த்தா சொல்றோம்


3. ''இந்தப் படம் எந்த வகையில் பிரமாண்டமா வந்திருக்கு?''

''30 ஆயிரம் வீரர்கள், 3 ஆயிரம் குதிரைகளை வெச்சு ஒரு போர்க் காட்சியை எடுத்திருக்கோம். அவ்வளவு பேருக்கும் தேவையான பழமையான உடை, ஆயுதங்கள் உருவாக்கி இருக்கோம். அதற்கு எவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க.

 30,000 பேரெல்லாம் இருக்காது.. 300 பேர் ரெடி பண்ணி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பண்ணி இருப்பீங்க..

ஒரிஜினல் கோட்டை மாதிரியே அச்சு பிசகாம செட்டு கள் போட்டிருக்கோம். இசையமைப்பாளர் இளையராஜா, கேமராமேன் ஷாஜிகுமார், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஜோதா அக்பர் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சனா கோச்சார்னு பெரிய டீம் ஒண்ணா சேர்ந்து பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கோம்!''

அர்ச்சனா கோச்சார் நல்ல ஃபிகராமே?
 http://icdn1.indiaglitz.com/hindi/gallery/Events/tour060211_1/tourde_37.jpg
4. ''நல்ல விஷயம்... பிஸியான பிரசாந்த்தைத் திரும்பப் பார்க்க முடியுமா?'' 

''சினிமா, ஃபேமிலி லைஃப் இரண்டிலும் சின்னச் சின்ன சறுக்கல்கள்.

ஓஹோ... 8 டப்பா படம் கொடுத்ததே சிறுஞ்சறுக்கலா? விளங்கிடும்...


அதான் இடைவெளிக்குக் காரணம்.  பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு, இப்போ ஃப்ரீயா இருக்குறேன்.

ஆனா நாங்க பிஸியா இருக்கோமே.. சாரி.. ஹி ஹி 


'பொன்னர்-சங்கர்’ படத்தில் ஓர் அறிமுக நடிகரைப்போல் என் உழைப்பைக் கொட்டி நடிச்சிருக்கேன். இந்தப் படம் என்னை அடுத்தடுத்த லெவலுக்குக் கூட்டிச் செல்லும் என்று நம்புகிறேன். அப்பாவுக்கும் கலைஞர் அய்யாவுக்கும் நன்றி!''

அடுத்த லெவெல்னா...? இப்ப ஏதோ ஒரு லெவெல்ல இருக்கறதா நினப்பு? 



டிஸ்கி - பொன்னர் சங்கர் படம் பார்த்துட்டேன்.. விமர்சனம் டைப்பிங்க்.. 4 மணி டூ 4.30 மணிக்கு போஸ்ட் போடறேன்