Showing posts with label ட்விட்டர்ஸ். Show all posts
Showing posts with label ட்விட்டர்ஸ். Show all posts

Thursday, October 25, 2012

ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை

http://static.flickr.com/90/205023921_20231f4f25.jpg

சின்மயி VS கீச்சர்கள்! (ட்வீட் தமிழர்கள்)

க.ராஜீவ்காந்தி

ட்விட்டர், ஃபேஸ்புக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சின்மயி. காரணம், அவர் பதிவிட்டதாகச் சொல்லப்படும் சில ட்வீட்களும் அதற்கான எதிர்வினைகளும். போலீஸ் புகார், இணைய உலகில் கருத்து மோதல் என்று கலவர நிலவரம்.
 பிரச்னைகளுக்கு சின்மயியின் ட்வீட்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பிரபல ட்வீட்டர்கள் 'ராஜன்லீக்ஸ்’ ராஜன், 'தோட்டா’ ஜெகன், 'ஃப்ரீயாவிடு’ டேவிட். ராஜனிடம் பேசினேன்...



''2011 ஜனவரி மாசம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக இணைய எழுத்தாளர்கள் ஓர் இயக்கம் ஆரம்பிச்சோம். அதில் இணையச் சொல்லி சின்மயியிடம் கேட்டோம். மறுத்துட்டாங்க. அது வரைக்கும் அவங்க உரிமை. ஆனா, 'மீனவர்கள் மீன்களைக் கொல்லலாம். கப்பல் படை மீனவர்களைக் கொன்றால் தப்பா?’னு ட்வீட் பண்ணாங்க. கோபத்தில் நாங்க சின்மயியை விமர்சிச்சு ட்வீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பிரச்னை. தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ட்வீட்களை சின்மயி போஸ்ட் பண்ணிட்டே இருந்தாங்க.


இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு விவாதத்தில், 'தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் காண்பித்து, சலுகைகள் பெற்றுத் தருகின்றனர்’னு எழுதினாங்க. இப்படி அதிகப்பிரசங்கித்தனமா அவங்க போடுற ட்வீட்களுக்கு நாங்க பதிலடி கொடுத்துட்டே இருப்போம். அது அவங்களுக்குப் பிடிக்கலை. தமிழ்நாட்டின் பிரபல பதிவர்கள் பட்டியலில் அவங்களுக்கு அடுத்து என் பேர் இருந்தது அவங்களை எரிச்சல்படுத்தி இருக்கு.


http://akamai.maastars.com/wp-content/uploads/2012/04/Chinmayi_Cool_Saree_00.jpg
 அதைப் பத்தியும் தப்புத் தப்பா ட்வீட் பண்ணிஇருந்தாங்க. இது எல்லாம் சேர்ந்துதான் இப்போ போலீஸ் புகார் வரை போயிருக்கு. இத்தனைக்கும் சின்மயியுடன் ஆரோக்கியமான விவாதத்தில் இருந்த பலரைப் பற்றியும் புகார் சொல்லி இருக்காங்க சின்மயி. இணையவெளி ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கும். அந்தத் தைரியத்தில் சிலர் சின்மயியை பெர்சனலாப் பேசியிருக்கலாம். ஆனா, அதுக்காக ஏதோ சின்மயி தப்பே பண்ணாத மாதிரி பேசுறது நியாயம் இல்லை. பிடிக்காதவங்களை, தன்னைப் பத்தித் தப்பாப் பேசுறவங்களைத் தன் அக்கவுன்ட்டில் பிளாக் பண்ணியிருக்கலாம். பிரச்னையே இருந் திருக்காது!'' என்றார்.



சின்மயி அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொடர்புச் சட்டம் 66ஏ பிரிவின் கீழ் ராஜனைக் கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்காக தமிழகத்தில் முதல்முறையாகக் கைது செய்யப் பட்டு இருக்கும் நபர் ராஜன்தான்.



சின்மயியிடம் பேசினேன், ''இதைப் பத்தி நான் திரும்பத் திரும்பப் பேச விரும்பலை. நான் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கேன்னு என் அம்மாகிட்ட கேட்டுக்கங்க!'' என்று ஒதுங்கிக்கொண்டார்.


http://static.ibnlive.in.com/pix/slideshow/06-2012/in-pics-south/simmaardpart34222612_11.jpg



சின்மயியின் தாயார் பத்மஹாசினி பேசினார். ''ஃபேஸ்புக், ட்விட்டர்ல என் பொண்ணைப் பத்தித் தப்பாப் பேசுறது இன்னைக்கு நேத்து இல்லை. பல வருஷமாவே இருக்கு. எத்தனை நாள்தான் நாங்களும் பொறுமையா இருக்கிறது? என் பொண்ணைத் தப்பாப் பேச ஆரம்பிச்சு, அப்புறம் என்னையும் தப்பாப் பேசி... ரொம்ப தனிப்பட்ட தாக்குதலா இருந்ததுனாலதான் போலீஸ்ல புகார் கொடுத்தா சின்மயி.



'ஜெயலலிதாவையே கேள்வி கேக்குறோம். நீ என்னடி பெரிய இவளா?’னு கேட்டா, எங்களால் என்ன சொல்ல முடியும்? மீனவர் பிரச்னையோ, இட ஒதுக்கீட்டுப் பிரச்னையோ ஒவ்வொருத்தருக்கும் தன் தனிப்பட்ட கருத்தைச் சொல்ல உரிமை இல்லையா? இதே சின்மயிதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டிச்சும் ட்வீட் பண்ணியிருந்தா. அதுக்கு, 'நாங்க குழந்தைகளை ரேப் பண்ணினா உனக்கு என்னடி?’னு ட்வீட் போடுறாங்க. இளையராஜா ரசிகர்கள்லாம் சேர்ந்துக்கிட்டு, 'நீ ரஹ்மான் குரூப்தானே’னு திட்டித் திட்டி ட்வீட் போடுறதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?




முதல்வர் பதவிக்கு உண்டான மரியாதைகூடக் கொடுக்காம ஜெயலலிதாவை ரொம்ப மோசமா விமர்சிக்கிறாங்க. கனிமொழி, குஷ்பு, நயன்தாரானு எல்லாரையும் ரொம்ப ரொம்ப ஆபாசமா விமர்சிச்சு எழுதுறாங்க. இப்ப இந்த வரிசையில சின்மயி. த்ரிஷா ஒரு நாயைத் தத்தெடுக்கப் போறேன்னு எழுதினா, அதுக்கு உடனே, டபுள் மீனிங்ல கமென்ட் பண்றாங்க. ஒரு டான்ஸ் மாஸ்டரோட பிரா சைஸ் என்ன இருக்கும்னு விவாதிச்சுட்டு இருக்காங்க. பெண்கள் மீதான வக்கிரத்தை வெளிப்படுத்தத்தான் இவங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் பயன்படுதா? சின்மயி, சாதி பத்தி பெருமையாப் பேசித் தம்பட்டம் அடிச்சதா சொல்றாங்க. சாதிப் பெருமை பேசுற, 'இந்த சாதிக்காரன்’னு சொல்லி போஸ்டர் அடிச்சுக்கிற ஆட்கள் இங்கேதானே இருக்காங்க. அவங்களை எல்லாம் ஏன் இவங்க தட்டிக் கேட்கலை?




ஃபேஸ்புக்லயோ, ட்விட்டர்லயோதலைவர் களைத் திட்டிட்டா போதுமா? அது தமிழர் களுக்காகப் பாடுபட்டோம்னு அர்த்தம் ஆகிடுமா? ஆபீஸ்ல இருக்கிற வரைக்கும்,  வீட்ல கரன்ட் இருக்கிற வரைக்கும் ட்வீட் பண்ணிட்டு, அப்புறம் சொந்த வேலைகளைப் பார்க்கப் போறவங்கள்லாம், ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீதியில் இறங்கிப் போராட லாம்ல. இதோ... சோஷியல் நெட் வொர்க்கிங் சைட்களில் பெண்கள் மீது அவதூறு பரப்புறவங்களை எதிர்த்து என் பொண்ணு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போராட ஆரம்பிச்சுட்டா. நீங்களும் அப்படி வாங்களேன் பார்ப்போம்!'' என்றார் கோபமும் வேகமுமாக!


http://www.moviecloudz.com/wp-content/uploads/2012/10/Chinmayi-Playback-Singer.jpg



பின்குறிப்பு: இதழ் அச்சுக்குச் செல்லும் சமயம் இரு தரப்பினரிடையே சமாதானப் பேச்சுகள் துவங்கிவிட்டதாகத் தகவல்!

 நன்றி - விகடன்

Saturday, October 20, 2012

ராசிபுரம் - குணா - அபிராமி அபிராமி -திருமண விழாக்கொண்டாட்டங்கள்

 வீட்டுக்கு பக்கத்துல ஒரு பர்லாங்க் தூரத்துல இருக்கற சலூன்க்கோ, டீக்கடைக்கோ பேப்பர் படிக்கனும்னாக்கூட  கார்லயே போகும்  மதுரை டாக்டர் ரியாஸ்  நம்ம குணா மேரேஜ்க்கு கார்ல வராம  பஸ்ல வந்ததே இந்த நிகழ்ச்சியின் முதல் அதிர்ச்சி.( அதுல ஒரு ரகசியம், அது பின்னால ) வந்தவர் எனக்கு எஸ் எம் எஸ் ல சொன்ன தகவல் படி நைட் குணா மேரேஜ் முடிச்சுட்டு அதிகாலை  2 மணிக்கு ஈரோடு ரயில் ஏறி  மதுரை போய் பறவை மேரேஜ்க்கு போயிடலாம்னு பிளான் சொன்னாரு. நானும் ஓக்கேன்னேன். 


 அவரு ராசிபுரம்  6 மணிக்கு போய்ட்டாரு. நான்  6.30 மணிக்குத்தான் கிளம்பினேன். 8.30 மணிக்கு ராசிபுரம் போனேன். நல்ல வேளை ரியாஸ்  பழைய பஸ் ஸ்டேண்ட்ல இறங்கிக்குங்க. அங்கே இருந்து வாக்கபிள் டிஸ்டேன்ஸ் தான் அப்டின்னார்.


மண்டப வாசல்லயே  மாப்ளை குணா நின்று வரவேற்றார். நல்ல வேளை. ஏன்னா எனக்கு அவர் குடும்பத்துல யாரையும் தெரியாது. தம்பி .. நீ மாப்ளை வீட்டு சொந்தமா? பொண்ணு வீட்டு சொந்தமா?ன்னு யாராவது கேட்டா உளறி இருப்பேன்.மண்டபத்துல ரியாஸ்,கவிதை கருப்பு , புத்தக டிராகன் சாரி புத்தகப்புழு வினோத், உட்பட பெரிய கேங்கே நின்னுட்டு இருந்தாங்க. குணா ஏதும் பேச விடாம பந்தில போய் உக்காந்து சாப்பிட சொன்னார்.


 பின்னாலயே 12 பேரும் வந்தாங்க. யாரும் சாப்பிடலை. ஆல்ரெடி சாப்டாச்சாம். என்னமோ கரகாட்டக்காரியை வேடிக்கை பார்க்கற மாதிரி பார்த்தா எப்படி ஃபுல்லா சாப்பிட முடியும்? அதனால 20 நிமிஷத்துல டின்னரை முடிச்சுட்டு ஹோட்டல் போனோம். 


 கல்யாண் ரெசிடென்சி. பாருங்க மேட்சுக்கு மேட்ச் . கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு  கல்யாண் ரெசிடென்சியே.. காது குத்துக்கு வந்தா திருப்பதி தேவஸ்தானத்துல தங்க வெச்சிருப்பார் போல.. அங்கே  போனா  மொத்தம் 16 ரூம் . ஒவ்வொரு ரூம்லயும் தலா 2 பேர். ஆக மொத்தம்  32 பேர். பார்த்தீங்களா? பி எஸ் ஸி மேத்ஸ் என்பதால் சரியா கணக்கு போட்டுட்டேன். 


 எல்லாம் குய்யோ முறையோன்னு கத்திக்கிட்டு இருந்தாங்க.. ஒரே ஜாலி தான் , கலாட்டாதான் , கொண்டாட்டம் தான். வந்தவங்க முக்காவாசிப்பேரு சரக்கு அடிச்சுட்டு இருந்தாங்க . யார் யார் பேரு எல்லாம் போட்டா பிரச்சனை வரும். எதுக்கு வம்பு? 

திருச்சியில் இருந்து வந்த சின்னப்பையன் எனும் கப்பல் கேப்டன் ( நிஜமான மிலிட்ரி) , ஹாரி கவுதம்  இன்னும் சாப்பிடலைன்னு சொன்னதால மறுபடி மண்டபம் போனோம் நம்ம வில்லன் கார்ல . திரும்பி வந்து ரூம்ல படுக்கும்போது மணி 11.30 ஆகிடுச்சு.


மிஸஸ் ரியாஸ் ஃபோன்ல பேசுனாங்க. பக்கத்துலயே ரியாஸ் இருந்தார்.அவங்க கிட்டே மேரேஜ்க்கு வர்றியா? இல்லையான்னே கேட்காம இவர் வந்திருக்கார் போல.. தனியாதான் வந்திருக்காரா?ன்னு ஒரு தடவைக்கு  2 தடவை கேட்டுக்கிட்டார். ரியாஸ் பக்கத்துலயே நின்னுட்டு இருந்ததால “ ஆமாங்க மேடம்”னு சுருக்கமா சொல்லி ஃபோனை வெச்சுட்டேன்.  அவர் கிளம்பிட்டாரு.

 அண்ணே ஒரு விளம்பரம் நைட் 12 மணிக்கு செம  மப்புல வந்து ரூம் கதவை தட்டி ஒரே ராவடி.. 1 மணிக்கு தூங்குனோம். 4 மணிக்கு எந்திரிச்சு  குளிச்சு ரெடி ஆகி 4.30 மணிக்கு மண்டபம போயாச்சு./. நானும் சின்னபையன் அண்ணனும். 


 அங்கே போனதும் செம காமெடி.. மண்டபத்துல டோட்டலாவே 24 பேர் தான் இருந்தாங்க . என்னை விட அண்ணன் தான் ஜெர்க் ஆகி குணா கிட்டே என்னப்பா? முகூர்த்தம் கரெக்ட் டைம் தானா?ன்னு கேட்க அவர் அசால்ட்டா லேட் ஆகிடும்னு நினைக்கறேன்னார்.

 அப்பவே கறுப்புக்கு ஃபோனை போட்டு 6 மணிக்கு வந்தா போதும். எப்படியும் மேரேஜ் 7 மணிக்குத்தான்னு தகவல் சொல்லியாச்சு.இந்த இடத்துல கருப்பு பற்றி சொல்லியே ஆகனும். மனுஷன் நைட் பூரா தூங்கவே இல்லை. வந்தவங்களை கவனிக்கறது, தங்க வைக்கறதுன்னு செம பிசி. மற்ற டைமுலும் தூங்காம கவிதை ட்விட்ஸா போட்டு கொலையா கொல்வார்னாலும் இன்னைக்கு அவர் குணாவுக்காக  விழிச்சிருந்தது ஹாட்ஸ் ஆஃப் ( நோ நோ அந்த ஆஃப் அல்ல) 



மண விழாவில் மனம் கவர்ந்தவை



1. பொண்ணு வீட்டில் சீர் செய்யும்போது  10 ரூபாய் நோட்டு மாலை 6 தனித்தனி மாலை ஒவ்வொன்றிலும் 101 நோட்டுகள். அதை சொந்தக்காரங்க அவர் கழுத்தில் போடும் நிகழ்ச்சி வித்தியாசமாக இருந்தது. பொதுவா வட நாட்டில் சேட்டுகள் குடும்பத்தில் தான் இந்த சாங்கியம் இருக்கும். 



2. மண்டபம் பெரிய  அளவில் இருந்தது. பந்தி மாறும்போது இட நெருக்கடியே வர்லை.. ரொம்ப தளவுசா ( தாரளமா , சுலபமா ) இருந்தது. அனைவரையும் நன்றாக உபசரித்தாங்க



3. பொதுவா  முஹூர்த்தப்பட்டுப்புடவை ரத்தச்சிவப்பு , அல்லது  பச்சை நிறம் தான் எடுபடும். ஃபோட்டோக்கள் , வீடியோவுக்கும்  கலர் ஃபுல்லாக இருக்கும்.


4. இந்த மாதிரி கல்யாண டைம்ல எப்பவும் அசடு வழியும் பசங்க கூட மாப்ளை முறுக்கு எனும் கெத்தை நல்லா காட்டுவாங்க..  மனதளவில் எப்படியோ, வெளியே  குணா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கறது மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டார். நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க என்ற எச்சரிக்கைத்தன்மை அவர் முகத்துல தெரிஞ்சது. 



5. மணப்பெண்ணுக்கு தோழியே இல்லை. இது குணாவின் திட்ட மிட்ட சதியா? என்பது குறித்து விசாரணை நடந்துட்டு இருக்கு 


6. மாப்ளை வீட்டு சார்பா மொய் எழுத மாப்ளையின் தம்பி நோட்டுடன் அமர்ந்தார். அவர் பல சிக்கலான சூழலையும் லாவகமாக கையாண்டு பொறுமையாக அனைவர் மொய்யையும் வசூலிச்சார். 


7. கோயில்ல  ஆல்ரெடி  6 ஜோடி மேரேஜ்க்கு வந்ததால் ஏகப்பட்ட கூட்டம்.. உள்ளே போகவே முடியலை.. ஆக மொத்தம் அன்னைக்கு மட்டும் 7 ஜோடிக்கு மேரேஜ்

8. வீடியோகிராஃபர், ஃபோட்டோகிராஃபர் எல்லாரும் செம கடுப்பாகிட்டாங்க. ஏன்னா நம்மாளுங்க 22 பேர் ஆஜர், எல்லாரும் செல் ஃபோன்ல ஃபோட்டோ பிடிக்க குறுக்க நின்னா? என்ன பண்ணுவாங்க. பாவம்



9. ரிசப்ஷன்க்கு வந்து மாப்ளை, பொண்ணு வந்து நின்னதும் மாப்ளைத்தோழனாக இருந்த அண்ணே ! ஒரு விளம்பரம் மேடையில் தரப்பட்ட மொய்ப்பணத்தை வாங்கும்போதே மாப்ளையின் அப்பா ஓடி வந்து யார் யார் எவ்வளவு பணம் என்பதை குறித்து வைக்கச்சொன்னார். அவ்வளவு ரஷ்லயும் அவர் ஞாபகமா அதை சொன்னது குட். ஏன்னா யூத்ங்க விளையாட்டா குறிக்காம பணத்தை. மட்டும் பத்திரமா வெச்சு யூஸ் இல்லை. யார் யார் மொய் வெச்சாங்கன்னு தெரிஞ்சாத்தான் பதில் மொய் மறுபடியும் வைக்க முடியும்..


10. மத்தளக்காரர்கள், நாதஸ்வரம் ஊதுபவர்கள்  மற்றும் பாண்டு வாத்திய கோஷ்டி நன்றாக பணி ஆற்றினாலும் பல முறை யாராவது கூப்பிட்ட பின் தான் வந்தாங்க.. அவங்களுக்கு ஒரு டீம் லீடர் இல்லை.. பெண் அழைப்பு , பெண் சீர் செய்யும்போதெல்லாம் அவங்க வரவே இல்லை. வாத்தியங்கள் மட்டும் தான் இருக்கு. ஆட்களை காணோம்.. பொதுவா கல்யாண விசேசங்களில் எப்படி பந்தி பரிமாறும் இடங்களில் ஒரு சூப்பர் வைசர் போடறமோ அதே போல் வாத்தியகோஷ்டிக்கும் ஒரு சூப்பர் வைசர் இருப்பது நலம்..


 நானும் , திருச்சி மிலிட்ரியும் காலை 10 மணிக்கு கிளம்பிட்டோம்.வாழ்க மண மக்கள்












வந்தாரை வரவேற்கும் வாசப்படி .குணாவின் நேசப்படி
Embedded image permalinkaa
மண்டப வாசலில் விநாயகர் தான் ரிசப்ஷன் டியூட்டி.யோவ் குணா.கவுத்திட்டியே ;-)))
Embedded image permalinka

கல்யாணமேடை ஆர்ட் டைரக்ஷ்ன் அழகியல்
Embedded image permalink
லட்சுமியை எப்படிவிசிறி ஆக்கி இருக்காங்க பாருங்க.ஒருவேளை குணா லட்சுமி விசிறியோ?
Embedded image permalinka
குணா சல்மான் கான் போல் போஸ் தர முயற்சி.அவர் நெற்றியில் இருப்பது பட்டயம்
Embedded image permalinka
குணா கல்யாண சீர்
Embedded image permalink
பொண்ணு வீடு ஏடிஎம்கே போல.முகூர்த்தப்பட்டுப்புடவை பச்சை கலர்
)முஹூர்த்தப்புடவைக்கு பெஸ்ட் சாய்ஸ் ரத்த சிவப்பு ,பச்சை 2ம் தான்்
மணப்பெண்ணுக்கு மணமாலையுடன் பண மாலை சீர் இப்போ தான் முதல் முறையா பார்க்கறேன்



 துப்பாக்கி டைட்டில் தீர்ப்பு போல் குணா மேரேஜ் முஹூர்த்தம் 4,30 டூ 6 இல் இருந்து 7,30 டூ 9 என தள்ளி வைக்கப்பட்டது.
மாப்ளே குணாஆஆஆ
அன்னலட்சுமி 11 தட்டு சீர்

பெண் அழைப்பு pic.twitter.com/CkDXL5gn -
தாலியை வேடிக்கை பார்க்கும்

சாமி கும்பிடறாங்க்ளாம்
 அ



மப்ளை ஸாரி மாப்ளை

 அ


மணப்பெண்ணுக்கு தோழியாய் ஆல்ரெடி மேரேஜ் ஆன பெண்ணை நிற்க வைத்த குணாவின் நுண்ணரசியல் கண்டு வியக்கேன்

senthil + senthil + senthil
Embedded image permalink
அண்ணே ஒரு விளம்பரம் என்னய்யா பண்றே ?'-))
  , pic.twitter.com/F3y5kVgN ( இடமிருந்து வலமாக)
Embedded image permalink

நவராத்திரி கொலு @ ராசிபுரம் ஈஸ்வரன் கோவில்



3 பேரும் கோயில் வாசலில்

கொலு 2
Embedded image permalink
 அ

அங்காளம்மன்
Embedded image permalink

டாக்டர் ரியாஸ் மதுரை ( நர்ஸ் வர்லை)
கில்லாடி கிட்டு,குணா . ,கில்மா ரியாஸ் ,புத்தகப்புழு,ராம் ,
  அ










3 முடிச்சு போட்டு முந்தானை முடிச்சில் குணா
Embedded image permalink

மாலை மாற்றும் படலம்
Embedded image permalink
ஷங்கரா சிவ சங்கரா
Embedded image permalink
கல்யாண ஜோடி
Embedded image permalink
அன்புத்தம்பிகளுடன் அவங்களை விட யூத் தம்பி
Embedded image permalink
  அ
 aஅ