Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

Tuesday, January 22, 2013

அழகிரி அதிமுக வில் அம்மாவுக்கு வாரிசாவாரா? ஓ பக்கங்கள் ஞாநி அலசல்


ஓ பக்கங்கள்

ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா?

ஞாநி

ஒருவழியாக கலைஞர் கருணாநிதி தாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும் உணர்ந்துள்ளார். அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக அவர் சொல்லி விட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. 


இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்த போதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சர் ஆனவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தாம் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவகவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்து இருக்கலாம்.



ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க. கட்சிக்குள் இருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்தது இல்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில், வைகோவை ஸ்டாலினுக்குச் சமமான தலைவராக்காமல் தமக்குச் சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக்கதை.) அப்படியே ஸ்டாலினுக்குச் சமமான தலைவர்தான் ஜெயலலிதா என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தம்மை ஜெயலலிதாவுக்குச் சமமாக தாமே குறுக்கிக் கொண்டார்.


ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளே இருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். ஸ்டாலினைவிட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ தொடக்கத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால் தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.


ஸ்டாலின்தான் அடுத்தகட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தம் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை. பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.


ஆனால் சொந்தத் தொழில் முயற்சிகளில் தோற்றுப்போன அழகிரி, அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாகச் சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அழகிரி, அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும்.


அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டும் என்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள் இருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று. தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை.


தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை தில்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.

குடும்ப நிர்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குல் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தமக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தம்மை டி.வி. நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராகக் காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன.


ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்து விட்டார். தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்னைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.


இப்போது ஒருவழியாக அவரைத்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவராகத் தாமே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லி விட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உட் கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும், தி.மு.க.வில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும்.


அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக அ.தி.மு.க.வுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை.


அழகிரி செகண்ட் சாய்ஸை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.க.வைப் பலவீனப்படுத்த விரும்பும் தில்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம்.

ஆனால், அழகிரி, எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும். குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.


கலைஞர் இனி தம் முடிவை வீட்டு நிர்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, ‘கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ, அப்போது நான் உயிரோடு இருந்தால்’ ஸ்டாலினையே முன் மொழிவேன்’ என்று சோல்லி இருக்கிறார்.

தம் காலம் முடிவதற்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தாம் விடைபெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இதுகாட்டுகிறது. எனவே தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான். இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.க.வைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

‘தி.மு.க. முடிந்து போன கதை’ என்று அண்மையில் ஜெயலலிதா தம் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க. முடிந்த கதையா காது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித வோட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.


அண்ணா 1949ல் தி.மு.க.வை ஆரம்பித்த போது அவருக்கு வயது நாற்பதுதான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்தக் கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்து விட்டிருக்கும். இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி. இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடுவயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.

இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தம்மையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.க.வைப் பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?

கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வியூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்து கொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட்அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்குச் சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை.

தி.மு.க. என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டுப் போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்துப் பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.


நன்றி - கல்கி , புலவர் தருமி 

Monday, July 30, 2012

மு.க. ஸ்டாலின் சமாளிஃபிகேஷன் பேட்டி @ கல்கி - 60 வயசாகியும் ஏன் இளைஞர் அணித்தலைவர் போஸ்ட்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 


இளைஞர் அணிக்கு வயது 33!



எங்கள் எழுச்சி எதிரிகள் வீழ்ச்சி!



ஸ்டாலினுடன் ஒரு சந்திப்பு!

ப்ரியன்



தி.மு.க. பொருளாளரும், அதன் நம்பிக்கை நட்சத்திரமுமான மு.க. ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். அவரது குஷிக்குக் காரணங்கள் இரண்டு


. ஒன்று, தமிழகமெங்கும் உள்ள மாவட்டங்களுக்கு விஸிட் செய்து ஒன்றிய, நகர, பகுதி, மற்றும் பேரூர் இளைஞர் அணிக்கு, அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்தது;


 அடுத்து, சமீபத்தில் நடத்திய சிறை நிரப்புப் போராட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் வெற்றிகரமாக நடந்தது. எங்கள் இளைஞர்களின் எழுச்சியால் எதிரிகள் நடுங்குகிறார்கள்" என்கிறார் ஸ்டாலின்.


 முப்பத்தி இரண்டு ஆண்டுகள் முடித்து முப்பத்தி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞர் அணி குறித்து இங்கே பேசுகிறார் ஸ்டாலின்.



சென்ற சட்டமன்றத் தேர்தலில் கழகம் தோல்வியடைந்த பின் இளைஞர் அணியை இன்னமும் பலப்படுத்தி, அதற்கு புத்துணர்வு ஊட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கழகம் தோல்வியடைந்திருந்த நிலையில், தொண்டர்கள் விரக்தியினால் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று பலர் சொன்னார்கள். இருந்தாலும் கழக இளைஞர்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை தளரவில்லை. மாவட்டம் மாவட்டமாக விஸிட் செய்தேன். ஆளும்கட்சி கிளப்பிய கைது பயத்தை தூக்கியெறிந்து விட்டு இளைஞர்கள் வெள்ளமென திரண்டார்கள். தமிழகமெங்கும் 4649 அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமித்திருக்கிறோம்.


 ஒன்றிரண்டு மாவட்டங்களில், சில உரசல்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் வெற்றிகரமாக சமாளித்து அந்த மாவட்டங்களிலும் நிர்வாகிகளைப் போட்டிருக்கிறோம். இப்போது மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் போடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்கிறார் இளைஞர் அணியின் செயலாளராக விளங்கும் ஸ்டாலின். 1984 முதல் இந்தப் பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/cartoon-kagidha-odam.jpg


1949-ல் தோன்றிய தி.மு.க.வில் 1980ல்தான் இளைஞர் அணி உருவாக்கப்பட்டது என்பது ஆச்சர்யமாக இருக்கிறதே!



பேரறிஞர் அண்ணாவின் பின்னால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அணி திரண்டார்கள். மொழி, இன உணர்வு, சமூக நீதி என்று கழகத்தின் இலட்சியப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களின் மொழி உணர்வின் உச்சகட்ட வெளிப்பாடு. தொடர்ந்து 1967ல் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதற்குப் பிறகு, கழகத்தில் இளைஞர்களின் புது வரவு கணிசமாக குறைந்து வருவது தெரியவந்தது.


 அண்ணாவின் பின் அணிவகுத்த இளைஞர்களும் முதியவர்களாகி வர, இந்த விஷயத்தில் புதிய பார்வையும், அணுகுமுறையும் தேவை என்று உணரப்பட்டது. மாறிவரும் சூழலை முற்றும் உணர்ந்து, காலத்திற்கேற்ற தேவையாக டாக்டர் கலைஞர் அவர்களால், கழகத்தில் மற்றொரு அணியாக இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. மதுரை ஜான்சி ராணி திடலில் இளைஞர் அணி தொடங்கப்பட்ட போது கழகம் ஆட்சியில் இல்லை. இருந்தும் அந்தத் தொடக்கம் மிகப் பெரிய எழுச்சியாக இருந்தது




உடனேயே நீங்கள் அதன் செயலாளர் ஆகிவிட்டீர்களா?!



இல்லையில்லை... இரண்டு வருட காலம் நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. 1982ல் திருச்சி வாசவி மகாலில் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பலரும் என்னை செயலாளர் ஆக்க வேண்டும் என்று மிக வலியுறுத்திப் பேசினார்கள். ஆனால் தலைவர் ஒப்புக்கொள்ளவேயில்லை. ‘மகனை நியமித்து விட்டார்’ என்ற விமர்சனம் வரும் என்று கடைசி வரை ஒப்புக் கொள்ள மறுத்தார். எனவே பேராசிரியர் மாற்று ஏற்பாடாக நானும் உள்ளிட்ட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவில் திருச்சி சிவா, பரிதிஇளம் வழுதி, தாரை மணியன், வாலாஜா அசேன், ஜெயம் ஜூலியஸ், பஞ்ச வர்ணம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


 அடுத்த இரண்டு வருடம் நாங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட அளவில் நிர்வாகிகள் போட்டோம். அந்தக் காலகட்டம் மறக்க முடியாதது. ஒரே காரில் நாங்கள் செல்வோம். பெரும்பாலும் நான்தான் கார் ஓட்டுவேன். இந்தச் சமயத்தில் என் நெஞ்சில் என்றும் பசுமையாக இருக்கும் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



1967-68ல் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற பெயரில் சார்பு மன்றம் வைத்திருந்தோம். அதன் சார்பாக அண்ணா பொன்விழா கொண்டாட முடிவு செய்தோம். ம.பொ.சியை அணுகினோம். அவர் வர ஒப்புக் கொண்டார். நான் நண்பர்களுடன் அண்ணா அவர்களை விழாவுக்கு அழைக்கச் சென்றேன். அண்ணா மாடியில் உடம்பு முடியாமல் படுத்திருந்தார். கீழே என்.வி. நடராசன், சத்தியவாணி முத்து ஆகிய தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ‘அண்ணாவைப் பார்க்க முடியாது’ என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து, அண்ணாவின் கார் என் வீட்டுக்கு வந்தது. ஓட்டுநர் வந்து, ‘அண்ணா அழைத்தார்’ என்று கூப்பிட்ட போது பிரமிப்பு; ஆச்சர்யம். சந்தித்து விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்



 ‘ஏற்பாடு செய்... வருகிறேன்’ என்றார். ஆனால் அண்ணாவின் உடல்நிலை மேலும் மோசமாக அவர் விழாவுக்கு வர முடியவில்லை. ம.பொ.சி. தலைமையில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்தச் சம்பவத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. போன்று தமிழகமெங்கும் இளைஞர் மன்றங்கள் இயங்கி வந்தன. எனவே, நாங்கள் மாநிலம் முழுதும் இளைஞர் அணியை கட்டமைப்பது சுலபமாக இருந்தது. 1984-ல் நான் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டேன். இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி கழக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 25 லட்சம் பேர் இளைஞர் அணி. கழகக் கோட்டையின் காவல் அரணாக இளைஞர் அணி உருவாகியிருப்பது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHmxMbhxFIQZGqbQTJpDKuug3J4VLZlaAyGBQoS37xFVFRby1JXHF6hQ-WzlaBjdUHDMeJginPzXWwS8CTI3bx1UXTPIj8dkHaMPWAVcR-6oE559c4e9bz4y7de2683ByFtMrelyHpGCs/s1600/karuna+retair.jpg

கழகப் பிரமுகர்களின் மகன்கள்தான் இளைஞர் அணியில் பிரகாசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறதே?



தவறான கருத்து. உழைப்பும் பொது நல அர்ப்பணிப்பும் மிக்க இளைஞர்கள் எந்தவித பின்புலமுமின்றி உயர்ந்திருக்கிறார்கள். பொன்முடி, அன்பரசன், மா. சுப்பிரமணியன், முபாரக், கார்த்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம்."



தேர்தல் வந்தால் பெரும்பாலான சீட்கள் இளைஞரணிக்கு என்பதால்தான் ‘அணி திரள்கிறார்கள்’ என்பது உண்மைதானா?



நான் ஏற்கெனவே சொன்னது போல கழகத்தில் உள்ள மற்ற அணிகளைப் போலத்தான் இளைஞர் அணியும் இருக்கிறது. தேர்தலில் சீட் என்பது வெற்றி வாய்ப்பை மனத்தில் வைத்துத்தான் கொடுக்கப்படும். இளைஞர் அணியில் உள்ள திறமையாளர்களைப் போல மற்ற அணிகளிலும் திறமையானவர்கள், விசுவாசமிக்கவர்கள் இருக்கிறார்கள். எனவே இளைஞர் அணியில் இடம்பெற்றிருந்தாலே தேர்தல் சீட் கிடைக்கும் என்பது சரியல்ல."



வர்த்தகமயமாகி விட்ட அரசியலில் பொதுநல அர்ப்பணிப்புடன் இளைஞர்கள் வருகிறார்களா?



சமூகத்தில் பல துறைகள் சீரழிவைச் சந்தித்து வருவதைப் போன்று அரசியலிலும் சறுக்கல் இருக்கத்தான் செய்கிறது. சுயநல நோக்கத்துடன் ஒருசிலர் வரக்கூடும். பாசறைக் கூட்டம் என்று பெயரில் இளைஞர்களின் உரத்த சிந்தனையையும், சமூக நோக்கங்களையும் செழுமைப்படுத்துகிறோம். கழகத்தின் அடித்தள லட்சியங்களை அவர்கள் மனத்தில் வேர் ஊன்றக்கூடிய அளவில் விதைக்கிறோம். எங்களை நோக்கி வீசப்படும் விமர்சனக் கணைகளை எப்படி எதிர்ப்பது என்ற பயிற்சியும் கொடுக்கிறோம்."



அது சரி ஸார். மாவட்ட அளவில் அமைப்பாளர்களுக்கு முப்பது வயது என்று வரம்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் மேல்மட்ட அளவில் பார்த்தால் அறுபது வயது ஆனவர் கூட பொறுப்பில் இருக்கிறார்களே. உங்களுக்கே கூட அறுபது ஆகிவிட்டதே...?




பொதுவாகவே இதுபோன்ற விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் முப்பது வயதுக்குள்தான் இருக்க வேண்டும். மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கு வயது வரம்பு நாற்பது. ஆனால் கழக சட்டத்தின்படி தலைமைக் கழகத்தில் பொறுப்பில் உள்ள எங்களுக்கு வயது வரம்பு இல்லை. களத்தில் இருப்பவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், மேலே வழி காட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்த ஏற்பாடாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்."

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg

கழகத்தில் எதிர்பார்க்கப்படும் உயரத்தைத் தொட காத்திருக்கும் நீங்கள் தகுதிவாய்ந்த மற்றொருவருக்கு இளைஞர் அணி பொறுப்பைக் கொடுக்கும் காலம் வந்துவிட்டதா?



பொருளாளர் பதவியுடன் கூடுதல் பொறுப்பாகவே இளைஞர் அணி செயலாளர் பொறுப்பையும் வகிக்கிறேன். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அனைவரது ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறேன். மற்றபடி இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வேண்டியவர்கள் தலைவரும், பேராசிரியரும்தான். அவர்கள் தக்க நேரத்தில் முடிவெடுப்பார்கள்."





தலைவரது மகனாக இருப்பதால் இளைஞர் அணி சிறப்புச் சலுகைகளைப் பெறுகிறதா?




தலைவரைப் பொறுத்தவரை எல்லா அணிகளையும் சமநோக்கோடுதான் பார்க்கிறார். ஒரு உதாரணம்: அறிவாலயத்துக்கு கழக அலுவலகம் மாற்றப்பட்ட பின் அன்பகத்தை இளைஞர் அணி பயன்பாட்டுக்குக் கேட்டோம். அப்போது அங்கே தொழிற்சங்கமும் இயங்கி வந்தது. எந்த அணி பத்து லட்சம் கொடுக்கிறதோ அதற்குத்தான் அன்பகம் கொடுக்கப்படும்" என்று சொல்லிவிட்டார் தலைவர். அதன்பின் தமிழகமெங்கும் அலைந்து திரிந்து ரூபாய், ரூபாயாக சேர்த்து பதினொரு லட்சத் தைக் கொடுத்துதான் இளைஞர் அணிக்காக அன்பகத்தைப் பெற்றோம். தலைவர் மகனென்று தூக்கிக் கொடுக்கப்படவில்லை."



இளைஞர் அணியின் அடுத்தகட்ட நடவடிக்கை?



அமைப்பாளர்கள் போடுவது கூடிய விரைவில் முழுவதுமாக முடிந்துவிடும். அடுத்து இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு விரைவில் நடைபெறப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேதியும், இடமும், தலைவர், பேராசிரியர் ஒப்புதலுடன் அறிவிக்கப்படும்!"



அடேங்கப்பா!


இளைஞர் அணி சார்பாக அறக்கட்டளையொன்றை நிறுவியிருக்கிறார்கள். அண்ணா, கலைஞர் பிறந்த நாளின் போது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி என்று அசத்துகிறார்கள். பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் அறக்கட்டளையின் சார்பாக இரண்டு கோடியே பதினேழு லட்ச ரூபாய் பரிசுத் தொகை இதுவரை வழங்கப்பட்டிருக்கிறதாம்.



நன்றி - கல்கி, சீதாரவி,அமிர்தம் சூர்யா, கதிர் பாரதி,புலவர் தருமி,அன்னா கண்ணன்


http://img.photobucket.com/albums/v144/annakannan/ulalal.jpg

Monday, July 09, 2012

ஆ ராசா - புதிய தலை முறை பேட்டி காணொளி + எதிர் கேள்விகள்


கடந்த சனிக்கிழமை இரவு 9 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை (நேற்று)மதியம் 1 மணிக்கும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் பற்றிய புதிய புளுகல் ஒப்புவித்தல் நேர்காணல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை பார்த்தபோது ஒரு தேர்ந்த வழக்கறிஞரின் மறுபக்க வாதம் போன்றே இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்ட பிதற்றல்கள், பல்லவிகளையே அவர் திரும்ப சொன்னார் என்பது தவிர வேறில்லை. தமிழ்ச்சூழலின் இயல்பான மறதி காரணமாக தற்போது ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தை பலபேருக்கு மறந்து போயிருக்கும். அவரின் புளுகல்களுக்கான சில எதிர்வினைகள்.
1. குருவிற்கு தப்பாத சிஷ்யன் என்பது மாதிரி ஊழல் விஷயத்தில் திமுக தலைவருக்கு தப்பாமல் ஆ.ராசா அப்படியே இருக்கிறார். மரவள்ளி கிழங்கை எடுப்பதற்கு சாதாரண விவசாயி வேரோடு , செடியோடு சேர்த்து பிடுங்கி விடுவார். ஆனால் இவர்கள் செடிக்கு அடியில் வேரோடு இருக்கும் கிழங்கை மட்டும் தான் எடுப்பார்கள். செடி அப்படியே இருக்கும். அது தான் ஊழல் விஷயத்தில் திமுகவின் வரலாறு. அப்படியே ராசா முயற்சிக்கிறார்.
2. தொலை பேசி அழைப்புகளின் கட்டணம் குறைந்தால் பேசுவோர்களின், பேசும் நேரம் அதிகரிக்கும். அதன் காரணமாக அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து தொலைபேசி நிறுவனத்திற்கு வருமானம் அதிகரிக்கும். இது தொலைதொடர்பில் சாதாரண உளவியல். இதனை புரிந்து கொண்டு தான் 2002 ல் BSNL நிறுவனம் சில பகுதிகளில் உள்ளூர் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை குறைத்து இம்முறையை வெற்றிகரமாக சோதனை செய்தது. அதை மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் முடிவு செய்தது.
3. இது தான் மொபைல் விஷயத்திலும் நடந்தேறியது. 1999 தொலைதொடர்பு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட சூழலில் மொபைல் போனின் விலை அதிகமாக இருந்தது. அழைப்பு கட்டணம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. Incoming அழைப்பிற்கு கூட கட்டணம் வசூலிக்கப்பட்டது அப்போது. ஆனால் பிந்தைய கட்டத்தில் சீனாவின் வரவு காரணமாக மொபைல் போன்களின் விலை குறைந்தது. இது தான் எல்லோரும் மொபைல் வாங்க மிக முக்கிய காரணம். அழைப்பு கட்டணம் அதிகம் இருந்தால் போனில் உரையாடும் நேரம் குறையும். ஆனால் போன் பயன்படுத்துவார்கள். இது தான் முக்கிய அடிப்படை.
4. அவர் நேர்காணலில் சொன்னபடி இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட 2G அலைக்கற்றை அளவு 100 மெகா ஹெர்ட்ஸ். அதில் 65 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. மீதி 35 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை. அதை நான் வெளிக்கொண்டு வந்தேன். அது தான் நான் செய்த தவறு என்று கொஞ்சம் கூட வாய்கூசாமல் தன் தலைவருக்கு தப்பாமல் பதில் சொல்கிறார். 35 சதவீதம் என்பதை தொழில்நுட்ப ரீதியாக 122 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது. அது மிகப்பெரும் தொழில்நுட்ப நெருக்கடியை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கூட கோடிகள் காரணமாக மறந்த காரணம் என்ன? கவனிக்க தவறியது ஏன்? இது தொடர்பாக தொழிற்சங்கங்கள், தொலைதொடர்பு பொறியாளர் கூட்டமைப்பு, அதிகார பூர்வ அமைப்புகள் சொன்ன ஆலோசனைகளை நீங்கள் கேட்க தவறியது ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLEjb2_MLmJGmpzp_IdrxuLOF7DZUJIDeg1Z2G3VADwMKBMeG2pUzOSeB6Lx-4_a7YXq-D2zETFlgN-QeoGhwOPTZjEljmwXYOu4NlL15C5SIiOk97guqn6dTtQcaXYZ94dRCtN6L67sS2/s1600/spectrum_cartoon_kalki2.jpg
5. மீண்டும் மிகப்பெரும் புளுகல் என்பது "முதலில் வருபவருக்கு முன்னுரிமை" என்பது ஏற்கனவே பின்பற்றப்பட்ட கொள்கை தான் என்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் இங்கு பிரச்சினையே 2001 விலையை 2008 க்கும் நிர்ணயித்த காரணம் என்ன? நீங்கள் பெரம்பலூரில் வாங்கி குவித்த சொத்துக்களின் மதிப்பு இப்போதும் அதே நிலையில் தான் இருக்கிறதா? நாட்டின் வளம் குறித்த பிரச்சினையில் நீங்கள் யோசிக்காதது ஏன்? எல்லாம் சி.ஐ.டி காலனியின் ஆலோசனை தானே?
 அந்த ஏழு வருட வித்தியாச விலையை நீங்கள் அவர்களிடமிருந்து கமிஷனாக பெற்றீர்கள் என்பதை நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள். அது தானே முக்கிய காரணம்.மேலும் கட் ஆப் தேதியை மாற்றியது குறித்து கேள்வி கேட்கும் போது மட்டும் உங்கள் முகபாவனையை நான் கவனித்தேன். அது திருட்டு முழி சுதாரிக்கும் சமயத்தில் இருப்பது மாதிரி இருந்தது. உடனே அது தவறான வார்த்தை பிரயோகம் என்கிறீர்கள். அதாவது அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தன. அதனை முன்னுரிமை அடிப்படையில் கட்டுப்படுத்துவதற்காக தேதி அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்கிறீர்கள்.
இங்கு தான் பிரச்சினையே... வெறும் 35 மெகா ஹெர்ட்ஸ் எந்த அடிப்படையில் கொடுக்க முடியும் என்பதன் ஆலோசனையை திட்டமிட்டு மறுதலித்தது ஏன்? முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பதை விண்ணப்பம் என்பதை விட நுழைவு கட்டணம் கட்டியவர்கள் என்று மாற்றியது ஏன்? வரைவோலை எடுப்பதற்கு மும்பை வங்கியின் அதிகாரிகளுக்கு எங்கிருந்தெல்லாம் உத்தரவுகள் போடப்பட்டன என்பது தனி வரலாறு. அதில் விதிமுறைகள் மீறப்பட்டன. அதைப்பற்றி நீங்கள் சொல்ல தயாரா?
6. நீரா ராடியா உரையாடல்கள் இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வந்து விட்டனவே. இது பற்றி நீங்கள் வாய் திறக்காதது ஏன்?
7. இன்று பெரம்பலூரில் உள்ள உங்கள் சொத்துக்களின் மதிப்பு என்ன? உங்களின் முன்னாள் பணி சாதாரண ஜுனியர் வழக்கறிஞர் தானே?
8. கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் குறித்து வாய்திறக்காதது ஏன்? நீங்கள் சட்டப்படி தான் செய்தீர்கள் என்றால் யுனிடெக் நிறுவனத்திற்கும் கோபாலபுரத்திற்கும் என்ன சம்பந்தம்.?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjzL9CAXqf9Ob7eYv2m8tbypgThdDyS3EjV_2nwUR8Ex3khGlZlwI-xrtRaiTTOgFvPYK8CInHvIuK3PZRlt5iBMSq8NXxqnGLPCe1kJjovPobfiocbpWEyONMhPgObfvJqoWLb0Hnwj0a/s400/TM_15-10-08_E1_01-02%2520CNI.jpg 9. தயாநிதி மாறன் உங்களுக்கு முன் இதே வேலையை தான் செய்தார் என்பது உண்மை தான். ஆனால் அந்த வருமானம் முரசொலி மாறன் குடும்பத்திற்கு மட்டுமே சென்றது. தங்களுக்கு வரவில்லை என்பதால் தானே உங்கள் தலைவர் ஆரம்பம் முதலே தயாநிதி மாறன் மேல் கடுப்பாக இருந்தார். அதனால் தான் தற்குறியான உங்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார். இது உங்களுக்கு தெரியும் தானே. அதனால் தான் இவ்வளவு துணிகர செயலில் இறங்கினீர்கள்.
10.மேலும் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொகையில் காங்கிரஸுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தானே இந்த மொத்த கொள்ளையுமே நடைபெற்றது. அதனால் தான் பிரதமர் உங்களுக்கு எழுதிய கடிதங்களை கூட அலட்சியப்படுத்தினீர்கள். நீங்கள் கடைசியாக எழுதிய கடிதத்திற்கு பிரதமர் ஒருமாதம் கழித்து "Received your letter" என்பதாக பதில் எழுதினார். உலகத்தில் இது மாதிரி எங்கு நடக்கும்? இதிலிருந்தே உங்களுக்கு அந்த தைரியத்தை யார் கொடுத்தார் என்பது புரிகிறது.
11. திமுகவில் உள்ள மற்றவர்கள் போலல்லாமல் நீங்கள் சிறந்த வாசிப்பாளர். பெரியாரை நேசிப்பவர். இருந்தும் பெரியாரின் நெறிமுறைகளுக்கு மாறாக இவ்வளவு பெரிய துணிகர செயலில் இறங்கியது ஏன்? எல்லாம் கோபாலபுரம் கொடுத்த தைரியம் தானே? அதனால் தானே சி.பி.ஐ விசாரணையில் மிகவும் பிடிவாதமாக இருந்தீர்கள். சாதாரண மனிதனை விசாரிப்பது போல் சி.பி.ஐ தன்னை விசாரிக்க முடியாது என்ற தைரியத்தில் தானே அவ்வாறு பிடிவாதமான பதிலை சொன்னீர்கள். மொத்தத்தில் ராசா அவர்களே நீங்கள் சரியான மனிதராக இருந்து தவறான மனிதராக மாறி, தவறான இடத்தில் இருக்கும் மனிதர்.
12. தலைமை தணிக்கையாளரை நான் நீதிமன்றத்திற்கு இழுப்பேன் என்கிறீர்கள். ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்று குறிப்பிடுவதற்கு, அவருக்கும் அல்லது திமுகவிற்கும் என்ன முன்விரோதம்? அல்லது சொத்து தகராறா? பங்காளி சண்டையா? சந்தை விலையை அடிப்படையாக வைத்து தானே அவர் முடிவு செய்தார். அதாவது உங்களிடமிருந்து லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் அதை பல மடங்கு அதிகப்படியான விலைக்கு விற்றன. அன்றைய தொலைபேசி பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை இவற்றை வைத்து தானே அவர் முடிவு செய்தார். கூட்டி கழித்து பாருங்கள் உங்கள் மனசாட்சிக்கே அது தெரியும்.
http://www.tamilhindu.com/wp-content/uploads/spectrum-raja.jpg 13. சர்க்காரியா ஊழல் கூட விஞ்ஞானமுறைப்படி தான் நடைபெற்றது. அது மாதிரி தான் இதுவும். ஆகவே நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று தலைவர் கொடுத்த தைரியம் தானே உங்களுக்கு.... உங்கள் காரணமாக தானே அவர் ஈழப்போரில் நாடகமாடினார். போரை நிறுத்துவதற்கு இந்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க முடியாமல் பல்லாயிரம் உயிர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமானார்.இந்த ஆன்மாக்களின் பழிபாவம் உங்களை சும்மா விடுமா? 14. நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் வெளியில் சொல்வதில்லை. லாவகமாக தவிர்த்து விடுகிறீர்கள். அதாவது உங்கள் அதிகார காலத்தில் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வளவு நட்டமடைந்தது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இதன் காரணமாக தொலை தொடர்பு ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுப்பதற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்திருக்கிறதே? அவர்களின் கண்ணீர் உங்களை சும்மா விடுமா? கண்டிப்பாக ஒரு காலத்தில் உங்களை தீண்டிக்கொல்லும்.
 
 
http://1.bp.blogspot.com/-4aMMKewQRPM/T9K60FGMi_I/AAAAAAAABgw/ekraKs21ybE/s1600/09THRAJA_1107892g.jpg
நன்றி -எச்.பீர் முஹம்மது வின் ஃபேஸ்புக்கிலிருந்து
 
பேட்டியின் ஆங்கில வடிவம் பை NDTV
 
Chennai: Here are the excerpts from A Raja's interview in Tamil to Puthiya Thalaimurai Channel.  
 
Q: Are you telling me that there has been no loss at all to the government? 
 
 
A Raja: Both the court and recently Kapil Sibal have accepted that due to all decisions taken under the policy guidelines of TRAI there has been no loss. But my problem is that for the first time in the judicial history of this country, the CAG report which is meant for the parliament is being treated as the basis for a criminal investigation by the Supreme Court. The trial court has rejected the theory of the CAG and CBI over the loss to exchequer, so i am going to drag the Comptroller & Auditor General to the court. I hope the court will permit this. I will do it."  
 
 
Q: You mean to say you will grill the CAG in court?     A Raja: Of course, because his report has been taken as the basis for my criminal prosecution.   Q: After your arrest, the Supreme Court has reversed all your decisions and it said that your decisions are unconstitutional and arbitrary and you had gifted the spectrum away. Is it a setback for you?       A Raja: The Supreme Court has delivered the judgement without hearing my side, and I have mentioned this before the Supreme Court bench in a curative petition. The Supreme Court has told me that I need not have any apprehension in my mind as this judgment will not affect the trial.   Q: You have been arrested and charges slapped against you. Do you think you were singled out and others were not responsible?   A Raja: First come, first served was followed by Arun Shourie and Dayandhi Maran, and 23 days before taking charge Dayanidhi Maran had allocated spectrum in the same way.  There is no problem in the policy this has been agreed upon by Arun Shourie. Before me, spectrum was allocated only to a cartel formed by Airtel, Aircel, Vodafone And Idea, but in my period I opened up the market. But there was never a problem with the policy.    Q: Is this cartel still functioning?  A Raja: Till I stepped down as a minister that cartel was active. Now I don't know what the status is. But I was the one who broke the cartel. I want to tell one thing to the public, even learned people were talking without knowing all the facts. Spectrum is government property. License is issued by the government. It's being used by people but the pricing is fixed by the telecom companies, are you aware of these details or is the public aware of it? The cartel decides the pricing. When I questioned it,  they said as a minister you have no right to decide.   Q: Is there any specific reason why you did not apply bail for the past 15 months?     A Raja: There are no specific reasons. I was mentally strong. The media had sensationalised every observation that was made in the court and it was blown out of proportion. The myth was so strong and the courts were not lenient. I had to wait for the effects of  the magnitude of 1.76 lakh crore to subside. After I argued in the court and bail was granted to some people and I was waiting for the opportunity and I am hopeful that I will come out clean.     Q: After 15 months of imprisonment your party welcomed you and do you think you have been let down by your friends and allies?     A Raja: I don't want to get into the argument that they dumped me and they did not attempt to save me. The case I am facing a criminal case and I have to face it alone. One thing I will say, I have all the strength by my side to face this case. That strength has been given to me by my leader. I recall a saying of a Tamil scholar: "The hottest place in hell is reserved for those who maintain neutrality at the time of a moral crisis." 
 

Monday, March 21, 2011

தி மு க வின் கதாநாயகி தமிழ்நாட்டுக்கு வில்லி

http://snapjudge.files.wordpress.com/2008/03/pmk_dmk_ramdoss_mp_rajya_sabha_kalainjar_kalki.jpg 

தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு வரை ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக பேசப்பட்டு வந்தது...எப்படியும் தி மு க வீழ்ந்து  விடும் என்ற நம்பிக்கையோடு தேச நலன் விரும்பிகள் நினைத்து வந்தார்கள். கலைஞர்  வெளியிட்ட தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடையே பெரிய பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 யார் வந்தாலும் ஊழல் தான் பண்ணுவாங்க...இவர் வந்தாலாவது நமக்கு கிரைண்டர் கிடைக்கும், இலவச பஸ் பாஸ் கிடைக்கும் என பேசி வருகிறார்கள்..எத்தனை  பதிவர்கள் எத்தனை விழிப்புணர்வுக்கட்டுரை எழுதினாலும் இனி பயன் இல்லை என்ற சோர்வே மிஞ்சுகிறது...


.1. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அனைத்து தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருமாவளவனுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வோம்; கருணாநிதியை ஆறாவது முறையாக முதல்வராக்க என்னென்ன வழிமுறை யுக்தி என்பதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம்.


அடடா.. பச்சோந்தி என்ன அழகா பேசுது பாருங்க.. இதே ஆளு அன்புமணிக்கு  மந்திரி பதவி தரப்படலைன்னா என்னமா கூவுவாரு,,?
----------------------------------------------

2. வருமான வரித்துறை அதிகாரி தகவல்: வேட்பாளர்களின் கறுப்பு பணம் குறித்தும், அப்பணத்தைக் கொண்டு, அவர்கள் ஏதாவது சொத்து வாங்கியிருந்தால், அது பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம். வேட்பாளரிடமிருந்து பெறப்படும் கறுப்பு பணத்திற்கு வசூலிக்கப்படும் வரியில் 10 சதவீதம், தகவல் தருவோருக்கு சன்மானமாக வழங்கப்படும்.

ஆனா அந்த சன்மானத்தை வாங்க அவர் உயிரோட இருக்கனுமே...?

-------------------------------------------------
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg?w=480&h=341
3. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: அ.தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், மகிழ்ச்சியான செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்.

ஆஹா.. தமிழன்னா இப்படித்தான் இருக்கனும்... பேஷ் பேஷ்.. ரொம்ப நன்னா இருக்கு..பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு கஷ்டம்னா பரிதாபப்படமா பழி வாங்கத்துடிக்கறாங்களே...

-------------------------------------

4. மத்திய அமைச்சர் அழகிரி: தி.மு.க., கூட்டணி அமைய, என் பங்கு மட்டுமல்ல, அனைத்து கூட்டணித் தோழர்களின் பங்கும் உண்டு. அவர்கள், கூட்டணி வெற்றிக்கு தூண்டுகோலாக இருப்பர்.

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகியே போதும்.. மக்கள் மாக்களாகத்தான் இன்னும் இருக்காங்க என்பதை நிரூபிக்க....

---------------------------

5. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: திருவாரூர் தொகுதியில், பீர், பிராந்தி மற்றும் ரம் பாட்டில்கள் என, மொத்தம், 1,858 பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை, கருவூலத்தில் வைத்துள்ளோம். விசாரணைக்குப் பின், இவற்றை டாஸ்மாக் கடைகளுக்கு வழங்குவதா அல்லது வேறு எந்த வகைகளில், "டிஸ்போஸ்' செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.


அதை ஏன் டிஸ்போஸ் பண்ணனும்? எலெக்‌ஷன் கமிஷன் ஆஃபீசர்களுக்கு அதைப்பற்றி எக்ஸ்போஸ் பண்ணுனா போதுமே..ஊத்தி மூடிட மாட்டாங்க..?

-------------------------------
http://www.dinamani.com/Images/article/2011/2/17/cartoonfeb17b.JPG

6. மேற்கு வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது: மம்தா மீதும், அவரது கட்சி மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அவர் அறிவித்த தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்த பிரச்னைக்கு, ஹோலி பண்டிகை முடிந்ததும், கட்சியின் மேலிடத் தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பர்.

ஹோலி பண்டிகைல கலர் பொடி பூசுவாங்க...மம்தா உங்க முகத்துல கரியைப்பூசப்போறாங்க..

--------------------------------

7.  தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:மத ரீதியாக நாங்கள் தேர்தலை அணுகவில்லை; மக்களும் அப்படி அணுகக் கூடாது. பா.ஜ., ஆளும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை, தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அதெல்லாம் சிந்திக்க எங்கே விடறாங்க.. நாடு முழுக்க தேர்தல் கதாநாயகி பற்றித்தான் பேச்சு.. தமிழ்நாடு நாசமாப்போகப்போவதை யாராலும் தடுக்க முடியாது போல இருக்கே..

------------------------------------
 8. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேட்டி: அ.தி.மு.க.,வை இயக்கும் ஒருவர், என் வீட்டு முன்,எங்கள் கட்சியின் கொடியை அவமதித்தார். இது குறித்து, ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினேன். இதற்கு அவரிடமிருந்து இதுவரை பதில் கடிதம் வரவில்லை. இதன் காரணமாக, அ.தி.மு.க.,வுடன் எங்கள் உறவு முறிந்தது; இனி, சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

அம்மாவுக்கும் சரி, அவங்க கட்சிக்காரங்களுக்கும் சரி ஆளுங்களை அவமானப்படுத்தித்தான் பழக்கம்..  உங்க கட்சிக்கொடி எதுன்னே அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது... தெரியாம பைக் துடைச்சிருப்பாங்க....

--------------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/veeramani-karunanidhi.jpg
9. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு: இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை முறைகளைச் சீரழித்து நவீன தொழில் நுட்பம் என்ற பெயரில், இயற்கைக்கு விரோதமான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், உற்பத்தி செய்யப்படும் விதைகளைக் கொண்டு உருவாக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால், நம் தேகத்திற்கும், தேசத்திற்கும் ஆரோக்கிய மற்ற நிலை உருவாகிறது.

தேகத்துக்கு ஆரோக்கியமற்ற நிலைன்னு சொன்னா சாரு நிவேதிதா கோவிச்சுக்குவாரு... அவர் நாவலை குறை சொல்றோம்னு....தேசத்துக்கு ஆரோக்கியமற்ற நிலை உருவாகுதுன்னா கலைஞர் கோவிச்சுக்குவாரு... அவரோட தேர்தல் அறிக்கை கதாநாயகியை நாம குறை சொல்றோம்னு....

-------------------------------------------

10. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி:தேர்தலில், விலைவாசி உயர்வு, "ஸ்பெக்ட்ரம்' முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட பிரச்னைகளை விளக்கி பா.ஜ., பிரசாரம் மேற்கொள்ளும். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், டெல்டா மாவட்டங்களில் நதிகள் இணைப்பு, சாயக் கழிவு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

எல்லாம் வேஸ்ட் தான்..  தி மு க தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகி தமிழ்நாட்டின் பவர்ஃபுல் வில்லி

------------------------------------------
டிஸ்கி 1 - இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...

டிஸ்கி 2 - கடந்த 2 தினங்களாக வலைப்பக்கம் வராமல் போனவர்களுக்கு மட்டும் எனது முன் தினப்பதிவுகள்



3.