Showing posts with label நரேன். Show all posts
Showing posts with label நரேன். Show all posts

Sunday, October 18, 2015

கத்துக்குட்டி-வணிக அழகியலைத் தாண்டி

சமரசம் சகஜமாகிப்போன தமிழ் சினிமாவில் கத்துக்குட்டி ஒரு அதிசயம்தான். கதாநாயகன் கருத்து சொன்னாலே போரடிக்குது என்று நெளியும் ரசிகர்கள், இரண்டரை மணி நேர கருத்து சொல்லும் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள், அழுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
படத்தின் மொத்த நீளத்துக்குள் அச்சு அசலான மூன்று ஆவணப்படங்களை உள்ளே சொருகியுள்ளார் இயக்குநர். செல்போன் டவர் ஊருக்குள் வந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை பின்னணி குரல் ஒலிக்க வரும் காட்சிகளும், மீத்தேன் என்றால் என்ன என்பதை விளக்கும் ஆவணப்படமும், “நாங்க கடைசி வரை அரிசியை மட்டும் திங்கவே இல்லை” என்கிற தேர்தல் திருவிழா பாட்டும் கிட்டத்தட்ட வணிக அழகியல் இல்லாமல் படத்துக்குள் கோக்கப்பட்டுள்ளன.
வணிக அழகியலைத் தாண்டி
சிறந்த திரைப்படத்துக்கான கூறுகளை அலசுவதைவிட இந்தப் படம் பேசும் பொருள் குறித்த அலசல் அவசியமானதாக இருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தக் கதைக் களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் அதிகமும் வணிக அழகியல் சார்ந்து நின்றவையே.
ஆனால் இந்தப் படம் தஞ்சை மண்டலத்தின் தற்போதைய அரசியலை பேசுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மீத்தேன் திட்டமும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளையும் சாமானியனுக்கும் புரியும் வகையில் பேசுகிறது. விவசாய வாழ்க்கையை மட்டுமல்ல, விவசாயம் சார்ந்த ஒரு பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினையை தமிழகம் முழுக்கக் கொண்டு சேர்க்கும் முனைப்புடன் கத்துக்குட்டி தன் வணிக அழகியலை முன்வைத்து ஈர்க்கிறது.
தஞ்சாவூர் பகுதி சார்ந்த விவசாய வாழ்க்கையைத் தமிழ் சினிமா இதுவரை சித்தரித்து வந்துள்ளதைப் போல மிக சொகுசானதாகவோ, சுகமானதாகவோ நடைமுறையில் அது இருந்ததில்லை. அங்கு ஒரு சம்சாரி நடத்துவது மண்ணுடனான போராட்டம். நீர் இல்லாது காய்ந்தும், பெருமழை பெய்து கெடுத்தும் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல் வெள்ளாமையைக் கரை சேர்க்க அவன் படும் பாட்டை தஞ்சை சினிமாக்கள் பேசவில்லை.
மண்ணுடனான பிணைப்பு
உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது வெறும் சொல் வழக்கு அல்ல; அதுதான் உண்மை. மிச்சம் என்று எதுவும் தேறாது எனத் தெரிந்தும் நிலத்துடனான பிணைப்பை அவன் விட்டதில்லை. அதுதான் அவனுக்கு ரத்தமும் சதையுமானது. சொந்த நிலம் கொண்ட விவசாயிக்கு மாத்திரமல்ல, நிலத்தை நம்பியிருக்கும் கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கும் அதுதான் வாழ்க்கை.
‘’விவசாயி, தான் சாப்பிட வழியில்லாம சாகுறதுக்கு பேரு பட்டினிச்சாவு இல்லடா... நாலு பேருக்குச் சாப்பாடு போட வழியில்லாம போச்சேனு அதை நினைச்சுச் சாகுறான் பாரு, அதுதான் பட்டினிச்சாவு’’என்பது போன்ற வசனங்கள் விவசாயிகளின் மனசாட்சியாக ஒலிக்கின்றன. மண்ணுடனான இந்தப் பிணைப்புதான் இன்று மீத்தேன் திட்டத்தை வலிமையுடன் எதிர்க்கும் வலிமையை தஞ்சையிலிருந்து வந்து சினிமா ஊடகத்தைப் பயன்படுத்த விழைந்திருக்கும் இயக்குநர் சரவணனின் பின்புலமாக இருக்கிறது.
மீத்தேன் திட்டத்தை எதிர்க்க கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார் ஒரு விவசாயி. அந்தக் கடிதம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் எப்படி மறைக்கப்படுகிறது. அந்தச் சாவை அதிகாரிகள் எப்படி அலட்சியப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கிறபோது, இந்திய விவசாயிகளின் தற்கொலைகள் குடும்பப் பிரச்சினை, காதல் விவகாரம், கடன் பிரச்சினை என இதுநாள்வரை கொச்சைப்படுத்தப்பட்டு வருந்திருப்பதை பார்வையாளனுக்கு கடத்துவதில் பத்திரிகையாளனாக இருந்த அனுபவம் இயக்குநர் சரவணனுக்கு கைகொடுத்திருக்கிறது.
விவசாயிக்கு 50 ஆயிரம் கடன் கொடுக்க, சொத்து பத்திரம் கேட்கிறார் கூட்டுறவு வங்கி அதிகாரி. பயிர்க்கடனை வாங்கிய எந்த விவசாயியும் அதைக் கட்டாமல் இருந்ததில்லை. வட்டி கட்டவில்லை என்றால் கறவை மாட்டையும் ஓட்டிச்சென்று விடுவார்கள் வங்கி அதிகாரிகள். பெருநிறுவனங்களுக்குக் கேள்விமுறை இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் கொட்டிக்கொடுக்கும் அதிகார வர்க்கம், உலகுக்கே படியளக்கும் விவசாயி என்றால் இளக்காரமாகத்தான் பார்த்து வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கிறோம் என்கிற பெயரில் மானியத் தொகையை எடுத்துக்கொண்டு போலிக் கணக்கு எழுதும் வங்கி அதிகாரிகள்தான் விவசாயிகளிடம் சட்டம் பேசுகிறார்கள். இதையும் காட்டமாக கட்டம் கட்டுகிறது கத்துக்குட்டி.
போகிறபோக்கில் மண்ணுடனான பிணைப்பை ‘பெரிய்ய்ய... நம்மாழ்வார் பேத்தி’ என்று கதாநாயகியை அடையாளப்படுத்துகிறார் இயக்குநர். பாரம்பரிய விவசாயத்தில் மனிதனைத் தவிர அவனை அண்டி வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் கரிசனம் காட்டப்பட்டிருக்கிறது. அதுதான் மருந்து வைத்து எறும்பை விரட்டாமல் பார்த்துக் கொள்கிறது. லாப வேட்டையில் திரியும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நமது கிராமங்களின் நிகழ்த்தி வருகிற சூழலியல் வன்முறைக்கு எதிராக அவளைப் பேசவைக்கிறது.
அதுபோல பொதுவாக தமிழ் சினிமாவின் நகைச்சுவை கதாபாத்திரம் மையக் கதையோட்டத்தோடு இணைந்து அரசியல் பேசியதில்லை. இந்தப் படத்தில் சூரியின் பாத்திரம் கிட்டத்தட்ட கதாநாயகனோடு இணைந்து விவசாயிகளின் மீதான கரிசனக் குரலாக ஒலிக்கிறது. வற்றிக் குழி விழுந்து பஞ்சடைந்த முகங்களைப் பார்க்கிறபோது, தமிழ் சினிமாவில் இது சாத்தியமானது எப்படி என யோசிக்க வைக்கிறது.
கலகம் செய்யும் காட்சிகள்
மீத்தேன் ஆய்வுக் கூட்டத்துக்காக வரும் தாசில்தாருக்கு இளநீரில் குளிர்பானத்தை கலந்து கொடுக்கிறான் கதாநாயகன். அவருக்கு உடல் உபாதையாகிறது. “இளநீர்ல கொஞ்சம் குளிர்பானத்தைக் கலந்து கொடுத்ததுக்கே உடம்பு தாங்கலையே... மீத்தேன் டெஸ்டுங்கற பேர்ல இவ்வளவு கெமிக்கல்ஸைக் கொண்டுவந்து கொட்டினா என் மண்ணுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு வரும்” என்று கேட்கிறார் கதாநாயகன். அதிகாரிக்குச் சுள்ளென்று உறைக்கிறது.
கதாநாயகன் ஒரு பாடலுக்கு சண்டை போடும் அசைவுகளையே நடனமாக ஆடுவார். அந்தக் காட்சியின் பின்புலத்தில் மொத்த ஊருக்குமான மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் அரிக்கேன் விளக்குகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவை காட்சியின் பின்புல அழகியலுக்கானது என்று நினைக்கலாம். ஆனால் சமகால மின்வெட்டு பிரச்சினையை அந்தக் காட்சி மூலம் உணர்த்துவதாகவே இருக்கிறது. மின் கம்பம் இருக்கிறது. ஆனால் மின்சாரம் இல்லை.
இப்படிப் படம் நெடுக விவசாயிகளின் ஜீவாதார வலியை, அரசியல் ரீதியாக அவர்கள் வஞ்சிக்கப்படுவதை, அவர்கள் எதிர்கொண்டிருக்கிற சூழலியல் அபாயத்தை எந்த விதமான பகட்டும் இல்லாமல் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்பதுதான் கத்துக்குட்டி முன்வைக்கும் அர்த்தப்பூர்வமான வணிக அழகியலாகப்படுகிறது.
கற்றுத்தரும் முயற்சி
விவசாயிகளின் பிரச்சினையை பேச “விவசாயி சட்டமன்றம் செல்ல வேண்டும்” என்கிறது கத்துக்குட்டி. ஆனால் இதுவரை சட்டமன்றம் சென்ற விவசாயிகளின் தோழர்கள் எத்தனை தூரம் விவசாயப் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேசமுடிந்திருக்கிறது என்பது ஆய்வு செய்ய வேண்டிய விஷயம். கத்துக்குட்டி திரைப்படம் வழங்கும் தீர்வும் விவாதிக்கப்பட வேண்டியதுதான். இதுபோன்ற உணர்ச்சிகரமான சித்தரிப்புகளுக்கு அப்பால் அது சமகாலப் பிரச்சினையை சாமான்யப் பார்வையாளனுக்கும் தேர்ந்த பார்வையாளனுக்கும் சோர்வு தராத ஒரு வணிக அழகியல் திரைப்படத்தின் மூலம் முழுமையாகக் கொண்டுசேர்க்க முடியும் என்பதே கத்துக்குட்டி சொல்லித்தந்திருக்கும் பாடம்.
இரா. சரவணன்

நன்றி-தஹிந்து

  • கணபதி சுப்பையா  from Chennai
    படம் பெயர்தான் கத்துக்குட்டி கருத்துக்களில் முதிர்ச்சி. வாழ்த்துக்கள்.
    2185
    about 9 hours ago
     (0) ·  (0)
     
    • DDany  from Singapore
      இந்த கதை கருவிற்கே நீங்கள் அதிக மதிப்பெண்கள் தந்திருக்கும் வேண்டும்... நம் தலைமுறை மக்களே உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்ள காத்திருக்கும் காலக்கட்டத்தில் வந்திருக்கும் இந்த படத்தை பத்திரிக்கை அன்பர்கள்தான் கைதூக்கி விட வேண்டும்.. நன்றி...
      330
      about 12 hours ago
       (0) ·  (0)
       
      • RRengan  from Coimbatore
        நான் சினிமா பார்ப்பது இல்லை. நம் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம். ஆதலால் நான் இப்படத்தை பார்க்கபோகிறேன்.
        about 12 hours ago
         (0) ·  (0)
         
        • SSrini  from Chennai
          நல்ல படத்துக்கு நல்லா மார்க் போடுங்க ஜி 3 மார்க் போடதீங்க
          235
          about 23 hours ago
           (0) ·  (0)
           
          • AArulraj  from Chennai
            வாழ்த்துக்கள்
            about 24 hours ago
             (0) ·  (0)
             
            • சாய்  
              தரமான படத்தை அளித்த இயக்குநருக்கு பாராட்டுக் கள்
              a day ago
               (0) ·  (0)
               
              • EEzhil  from Hyderabad
                தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் (பாடம்). இயக்குனர் சரவணன் அவர்களுக்கு ஒட்டுமொத்த விவசைகளின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து இதை போன்று நல்ல படங்களை கொடுக்க வேண்டும். எழில், பெங்களூர்.

              Saturday, October 10, 2015

              கத்துக்குட்டி-சினிமாவிமர்சனம்-சீரியஸான ஜாலி சினிமா!

              பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியாகும் முதல் படம், பாரதிராஜா, வைகோ, சீமான் ஆகியோரால் பாராட்டப்பட்ட படம், ட்ரெயல்ர் - டீஸர்களில் ஈர்த்த கவனம்... இந்த காரணங்களே 'கத்துக்குட்டி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
              'கத்துக்குட்டி' நிஜத்தில் எந்த மாதிரி?
              கதை: நரேன் ஒரு விவசாய ஆர்வலர். வேலை, வெட்டி இல்லாமல் வம்பு செய்பவருக்கு தேர்தலில் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டாரா? அவரைச் சுற்றி என்ன நடக்கிறது? அதற்குப் பிறகு என்ன ஆகிறார்? என்பது ஒன்லைன்.
              ஒரு கருத்தை முன் வைக்க எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் படைப்பின் நேர்த்திக்காக உழைப்பது ஆரோக்கியமான விஷயம். மீத்தேன் பிரச்சினையை அழுத்தமாகப் பதிவு செய்த அறிமுக இயக்குநர் இரா.சரவணனுக்கு வெல்கம் பொக்கே கொடுக்கலாம்.
              வெட்டியாய் திரிவது, குடித்துவிட்டு சலம்புவது, அப்பாவுக்காக துடிப்பது, விவசாயத்தை தவறாகப் பேசுபவனின் சட்டையைப் பிடித்து உலுக்குவது, காதலில் கிறங்குவது என அறிவழகன் கதாபாத்திரத்துக்கு நரேன் சரியாகப் பொருந்துகிறார். ''பட்டினிச் சாவுங்கிறது விவசாயி பட்டினியால செத்துப்போறது இல்லை. மத்தவங்க பட்டினியை போக்க முடியலைங்கிற வருத்தத்துல செத்துப் போவது'' என வசனம் பேசும்போது கதாபாத்திரத்துக்கு கம்பீரம் கூட்டுகிறார்.
              சூரியின் கவுன்டர் வசனங்களுக்கும், ரைமிங் பன்ச்களுக்கும் தியேட்டர் குலுங்குகிறது.
              ''அவன் ஆடுனது டான்ஸாடா? ஒரு ஃபைட்டயே டான்ஸா மாத்திக்கிட்டு போயிக்கிட்டு இருக்கான்'' என்று சூரி சொல்லும்போது ஆரம்பித்த கை தட்டல் படம் நெடுக நீண்டதுதான் ஆச்சர்யம்.
              எறும்புகளை விரட்டுவதற்காக ஸ்ருஷ்டி டாங்கே செய்யும் ஐடியா அசத்தல். கன்னத்தில் குழி விழும் அளவுக்கு சிரிக்கும் ஸ்ருஷ்டி மனதில் நிறைகிறார்.
              ''செல்போன் டவர் வந்தா கரிச்சான், மைனா, புறான்னு எந்த பறவையும் இங்க இருக்காது'' என்று ஸ்ருஷ்டி பேசும் வசனத்துக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.
              பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நரேன் அப்பாவாக இதில் அறிமுகம் ஆகியிருக்கிறார். மாவட்ட செயலாளராக வரும் ஞானவேல், ஸ்ருஷ்டியின் அப்பாவாக வரும் ராஜா, துளசி, தேவிப்ரியா ஆகியோர் பொருத்தமான தேர்வு.
              சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். அருள் தேவின் இசையில் களைக்கட்டு கண்ணால மெனக்கெட்டு பாடல் ரசிக்க வைக்கிறது.
              அடிதடி இளைஞன் அரசியலுக்கு வரும்போது என்ன ஆவான்? என்பதை இடைவேளையாக வைப்பது மாஸ்.
              விவசாயத் தொழில், கடன் பிரச்சினை, தற்கொலை, பட்டினிச்சாவு, மீத்தேன் பிரச்னை, கூல்டிரிங்ஸ் நச்சு , ஈமுகோழி, ரியல் எஸ்டேட், டாஸ்மாக் என்று கிடைத்த கேப்பில் எல்லாம் சந்து விடாமல் பிரச்சினையின் தீவிரத்தை விதைத்திருக்கிறார் இயக்குநர் சரவணன்.
              டிரான்ஸ்பார்மர் இருக்கு... மின்சாரம்தான் இல்லை என்பதை உணர்த்துவதற்காக டிரான்ஸ்பார்மரில் அரிக்கேன் விளக்குகளைத் தொங்கவிட்டிருக்கும் விவசாய பூமியை பதிவு செய்த விதத்தில் கவனம் ஈர்க்கிறார்.
              படத்தில் சில காட்சிகள் கோர்வையாக இல்லாமல் அங்கும் இங்குமாக இருக்கின்றன. ஆனால், அதை தஞ்சை மண்ணின் வாழ்வியலாலும், வசனங்களாலும், சூரியாலும் நிரப்பி இருக்கிறார்.
              ஹீரோவை வைத்துதான் கிளைமாக்ஸ் வைக்க வேண்டுமா என்ன? அதிலும், வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குநர்.
              மண்ணின் பெருமைக்குக் காரணமான விவசாயிகளின் வலிகளை உணர்த்திய விதத்தில் 'கத்துக்குட்டி' கண்ணியமான சினிமா. நம் காலத்து சமூகப் பிரச்சினைகளை நையாண்டித்தனத்துடன் சுவாரசியமாக ரசிகர்களைக் கட்டிப்போட்ட விதத்தில் இது கெத்துக்குட்டி!


              நன்றி-தஹிந்து

              Thursday, July 30, 2015

              கத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம்?- இயக்குநர் பேட்டி

              • ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரி, நரேன்
                ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரி, நரேன்
              • ஸ்ருஷ்டி டாங்கே
                ஸ்ருஷ்டி டாங்கே
              படத்தில் ஒரு இடத்தில்கூட கட் இல்லை. புகை சம்பந்தமான விளம்பரம்கூட தேவையில்லை’ என தணிக்கை அதிகாரிகள் கொடுத்த பாராட்டாலும், ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களாலும் கோடம்பாக்கத்தின் கவனத்தை திருப்பி இருக்கிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.
              இதை இயக்கியிருக்கும் இரா.சரவணன் யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர். இனி அவருடன்..
              எப்படி வந்திருக்கிறது ‘கத்துக்குட்டி’?
              படம் பண்ணப்போறேன்னு சொன் னப்ப அக்கறையா திட்டினதும் ஆத ரவா நின்னதும் ரெண்டு அண்ணன்கள். மூத்த அண்ணன் அமீர். இளையவர் சசிகுமார். படம் தயாரானதும் சசி சாருக்கு மட்டும் போட்டுக் காட்டி னேன். என்ன சொல்லப் போறார்னு பயங்கர பதற்றம். கார்ல என்னைக் கூட்டிட்டுப்போய் அவர் கையால சாப்பாடு போட்டு இரவு ஒரு மணி வரைக்கும் உட்காரவைச்சுப் பேசி னார். ‘நல்ல கதைன்னு தெரியும். ஆனா, இவ்வளவு நுட்பமா, காமெ டியா நீ பண்ணியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு’ன்னார். சில சீன், வசனங்களைக் குறிப்பிட்டு சொல்லி, ‘இதையெல்லாம் நான் எதிர்பார்க் கவே இல்லை’ன்னு பாராட்டினார். சின்ன அண்ணன்கிட்ட பாஸாய்ட் டேன். பெரிய அண்ணன்கிட்ட காட்ட பயமா இருக்கு!
              ஆக் ஷன், த்ரில்லர் என மிஷ்கின் தோட்டத்தில் உருவானவர் நரேன். கிராமம், காமெடி என அவரை எப்படி மாற்றினீர்கள்?
              கதை ரொம்ப பிடிச்சதால, எனக் காக முழுசா கால்ஷீட் ஒதுக்கி னார் நரேன். தஞ்சாவூர் மண்ணுக்கே உரிய சேட்டையும் சில்லுண்டித்தன முமா நவரச நடிப்பில் விளையாடித் தீர்த்திருக்கார். சேறு, சகதின்னு புரண்டிருக்கார். ஒரு காட்சிக்காக ‘பாழடைஞ்ச கிணத்துக்குள்ள குதிக் கணும்’னு சொன்னேன். தயக்கமே இல்லாமல் குதிச்சார். ஆவேசமா வசனம் பேசுற ஒன்றரை நிமிஷக் காட்சியை ரவுண்ட் ட்ராலி போட்டு ஒரே ஷாட்டில் எடுக்கிற‌ ப்ளான். ரொம்ப சிரமம்தான். நரேன் விடாம முயற்சி பண்ணினார். கடைசியில மொத்த யூனிட்டும் கைதட்டி ஆரவாரிக்கிற அள வுக்கு பக்காவா பேசிட்டார். அந்த ஒரு ஷாட்டுக்காக நாள் முழுக்க செலவு பண்ணினோம். நரேனோட அர்ப்பணிப்பு அவரை தஞ்சாவூர் இளைஞராவே மாத்திடுச்சு.
              சூரிக்கு என்ன சொக்குப்பொடி போட்டீங்க.. எல்லா இடத்திலயும் ‘கத்துக்குட்டி’ புகழ் பாடுறாரே?
              ‘நான் நடிக்கிற படங்களிலேயே தனித்துவமானது கத்துக்குட்டி’ன்னு சூரி அண்ணன் கொடுத்த பேட்டி யைப் பார்த்துட்டு நானே அவர்கிட்ட ஆச்சரியமா கேட்டேன். ‘மீடியாக் கள்கிட்ட மட்டுமில்லாம, சிவகார்த்தி கேயன், விமல், சுந்தர்.சி, சுராஜ், மனோபாலான்னு கண்ணுல படுற அத்தனை பேர்கிட்டயும் கத்துக் குட்டியைப் பத்தி பெருமையா சொல்லிக்கிட்டிருக்கேன். இந்த படம் ஜெயிக்கணும்.. ஜெயிக்கும்!’னு சொன்னார். படத்துல ஜிஞ்சர்ங்கிற கேரக்டர்ல சூறாவளியா சுழன்று ஆடியிருக்கார் சூரி. பெரிய கம்பெனி களுக்கே தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியா இருக்கிறவர், ‘கத்துக்குட்டி’க்காக‌ 32 நாட்களைக் கொடுத்தார். மறக்கவே கூடாத உதவி. இன்னிக்கு சினிமா எடுக்கிறது சுலபம். ரிலீஸ் பண்றது மரண அவஸ்தை. அப்படியொரு சூழலில் சூரி அண்ணன் செய்த உதவிதான் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் நகர்த்திட்டு வந்து, நாலு பேர் தேடிவந்து பிசினஸ் பேசுற அளவுக்கு கம்பீரமா நிறுத்தியிருக்கு.
              யாரிடமும் உதவியாளராக இல் லாமல் நேரடியாக சினிமாவுக்கு வந் திருக்கீங்க. யாரிடமாவது வேலை பார்த்திருந்தால் நல்லா இருந்திருக் குமோன்னு நினைச்சீங்களா?
              எடிட்டிங் ப்ளானோடு எழுதிய திரைக்கதை இது. அதனால, சிரமம் தெரியல. இன்றைய தொழில்நுட் பத்தை வைச்சு, ஷூட்டிங்கில் நாம தப்பு பண்ணினாலும் போஸ்ட் புரொடக் ஷன்ல சரிபண்ணிடலாம். எடிட் டிங், டப்பிங், மியூசிக்ல சரிபண்ண முடியாத தவறுகளைக்கூட டிஜிட்டல், கிராபிக்ஸ்ல சரிபண்ணிட முடியும். ஆனாலும், யாரிடமாவது வேலை பார்த்த அனுபவத்தோடு வந்திருந் தால் இன்னும் சீக்கிரமாவே படத்தை முடிச்சிருக்கலாம். மண் சார்ந்த படைப்பா வரணும்றதுக்காக தஞ்சை மக்களையே நடிக்க வைச்சேன். வட்டார வழக்கு நல்லா வரணுங்கிற தால, டப்பிங் மட்டும் 90 நாட்களைத் தாண்டி போச்சு. படம் முடிச்சுப் பார்க் குறப்ப தாமதமானது தப்பாத் தெரி யலை. அவ்ளோ நிறைவா வந்திருக்கு!
              அடுத்த இலக்கு?
              ‘அடுத்த படத்துக்கும் இப்பவே ரெடி’ங்கிறார் நரேன். சூழல் சரியா வந்தால் ‘கத்துக்குட்டி-2’ பண்ணலாம் னார் சசி சார். 2-ம் பாகம் எப்படி இருக் கும்னு அவர் விவரிச்சப்ப அசந்து போயிட்டேன். நேர்ல அழைச்சுப் பேசிய கார்த்தி, ‘நல்ல போலீஸ் ஸ்க்ரிப் டோட வாங்க’ன்னார். முதல் படம் ரிலீ ஸாகுறதுக்கு முன்னாலேயே இதெல் லாம் கிடைக்கிறது பெரிய அங்கீகாரம்.
              சினிமாங்கிறது பெரிய பாக்கியம். கோடி பேர்ல ஒருத்தருக்கு கிடைக் கிற வரம். ஆனா, சினிமாவுல தன் மானத்தைப் பறிச்சு, அழவைக்கிற விஷயங்கள் அதிகம். இங்கு பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. பத்து ரூபாய்க்காக இழந்த மரி யாதை, லட்ச ரூபாய்ல கிடைச்சிடுமா? ஆனாலும், எல்லா சிரமங்களுக்கும் தயாராகித்தான் சினிமாவுக்கு வந்திருக்கேன். அமீர் அண்ணன் ஹீரோ, சமுத்திரகனி வில்லன். அதுதான் அடுத்த இலக்கு!
              a

              thanx - the hindu