Showing posts with label சூரி. Show all posts
Showing posts with label சூரி. Show all posts

Thursday, July 30, 2015

கத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம்?- இயக்குநர் பேட்டி

  • ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரி, நரேன்
    ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரி, நரேன்
  • ஸ்ருஷ்டி டாங்கே
    ஸ்ருஷ்டி டாங்கே
படத்தில் ஒரு இடத்தில்கூட கட் இல்லை. புகை சம்பந்தமான விளம்பரம்கூட தேவையில்லை’ என தணிக்கை அதிகாரிகள் கொடுத்த பாராட்டாலும், ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களாலும் கோடம்பாக்கத்தின் கவனத்தை திருப்பி இருக்கிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.
இதை இயக்கியிருக்கும் இரா.சரவணன் யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர். இனி அவருடன்..
எப்படி வந்திருக்கிறது ‘கத்துக்குட்டி’?
படம் பண்ணப்போறேன்னு சொன் னப்ப அக்கறையா திட்டினதும் ஆத ரவா நின்னதும் ரெண்டு அண்ணன்கள். மூத்த அண்ணன் அமீர். இளையவர் சசிகுமார். படம் தயாரானதும் சசி சாருக்கு மட்டும் போட்டுக் காட்டி னேன். என்ன சொல்லப் போறார்னு பயங்கர பதற்றம். கார்ல என்னைக் கூட்டிட்டுப்போய் அவர் கையால சாப்பாடு போட்டு இரவு ஒரு மணி வரைக்கும் உட்காரவைச்சுப் பேசி னார். ‘நல்ல கதைன்னு தெரியும். ஆனா, இவ்வளவு நுட்பமா, காமெ டியா நீ பண்ணியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு’ன்னார். சில சீன், வசனங்களைக் குறிப்பிட்டு சொல்லி, ‘இதையெல்லாம் நான் எதிர்பார்க் கவே இல்லை’ன்னு பாராட்டினார். சின்ன அண்ணன்கிட்ட பாஸாய்ட் டேன். பெரிய அண்ணன்கிட்ட காட்ட பயமா இருக்கு!
ஆக் ஷன், த்ரில்லர் என மிஷ்கின் தோட்டத்தில் உருவானவர் நரேன். கிராமம், காமெடி என அவரை எப்படி மாற்றினீர்கள்?
கதை ரொம்ப பிடிச்சதால, எனக் காக முழுசா கால்ஷீட் ஒதுக்கி னார் நரேன். தஞ்சாவூர் மண்ணுக்கே உரிய சேட்டையும் சில்லுண்டித்தன முமா நவரச நடிப்பில் விளையாடித் தீர்த்திருக்கார். சேறு, சகதின்னு புரண்டிருக்கார். ஒரு காட்சிக்காக ‘பாழடைஞ்ச கிணத்துக்குள்ள குதிக் கணும்’னு சொன்னேன். தயக்கமே இல்லாமல் குதிச்சார். ஆவேசமா வசனம் பேசுற ஒன்றரை நிமிஷக் காட்சியை ரவுண்ட் ட்ராலி போட்டு ஒரே ஷாட்டில் எடுக்கிற‌ ப்ளான். ரொம்ப சிரமம்தான். நரேன் விடாம முயற்சி பண்ணினார். கடைசியில மொத்த யூனிட்டும் கைதட்டி ஆரவாரிக்கிற அள வுக்கு பக்காவா பேசிட்டார். அந்த ஒரு ஷாட்டுக்காக நாள் முழுக்க செலவு பண்ணினோம். நரேனோட அர்ப்பணிப்பு அவரை தஞ்சாவூர் இளைஞராவே மாத்திடுச்சு.
சூரிக்கு என்ன சொக்குப்பொடி போட்டீங்க.. எல்லா இடத்திலயும் ‘கத்துக்குட்டி’ புகழ் பாடுறாரே?
‘நான் நடிக்கிற படங்களிலேயே தனித்துவமானது கத்துக்குட்டி’ன்னு சூரி அண்ணன் கொடுத்த பேட்டி யைப் பார்த்துட்டு நானே அவர்கிட்ட ஆச்சரியமா கேட்டேன். ‘மீடியாக் கள்கிட்ட மட்டுமில்லாம, சிவகார்த்தி கேயன், விமல், சுந்தர்.சி, சுராஜ், மனோபாலான்னு கண்ணுல படுற அத்தனை பேர்கிட்டயும் கத்துக் குட்டியைப் பத்தி பெருமையா சொல்லிக்கிட்டிருக்கேன். இந்த படம் ஜெயிக்கணும்.. ஜெயிக்கும்!’னு சொன்னார். படத்துல ஜிஞ்சர்ங்கிற கேரக்டர்ல சூறாவளியா சுழன்று ஆடியிருக்கார் சூரி. பெரிய கம்பெனி களுக்கே தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியா இருக்கிறவர், ‘கத்துக்குட்டி’க்காக‌ 32 நாட்களைக் கொடுத்தார். மறக்கவே கூடாத உதவி. இன்னிக்கு சினிமா எடுக்கிறது சுலபம். ரிலீஸ் பண்றது மரண அவஸ்தை. அப்படியொரு சூழலில் சூரி அண்ணன் செய்த உதவிதான் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் நகர்த்திட்டு வந்து, நாலு பேர் தேடிவந்து பிசினஸ் பேசுற அளவுக்கு கம்பீரமா நிறுத்தியிருக்கு.
யாரிடமும் உதவியாளராக இல் லாமல் நேரடியாக சினிமாவுக்கு வந் திருக்கீங்க. யாரிடமாவது வேலை பார்த்திருந்தால் நல்லா இருந்திருக் குமோன்னு நினைச்சீங்களா?
எடிட்டிங் ப்ளானோடு எழுதிய திரைக்கதை இது. அதனால, சிரமம் தெரியல. இன்றைய தொழில்நுட் பத்தை வைச்சு, ஷூட்டிங்கில் நாம தப்பு பண்ணினாலும் போஸ்ட் புரொடக் ஷன்ல சரிபண்ணிடலாம். எடிட் டிங், டப்பிங், மியூசிக்ல சரிபண்ண முடியாத தவறுகளைக்கூட டிஜிட்டல், கிராபிக்ஸ்ல சரிபண்ணிட முடியும். ஆனாலும், யாரிடமாவது வேலை பார்த்த அனுபவத்தோடு வந்திருந் தால் இன்னும் சீக்கிரமாவே படத்தை முடிச்சிருக்கலாம். மண் சார்ந்த படைப்பா வரணும்றதுக்காக தஞ்சை மக்களையே நடிக்க வைச்சேன். வட்டார வழக்கு நல்லா வரணுங்கிற தால, டப்பிங் மட்டும் 90 நாட்களைத் தாண்டி போச்சு. படம் முடிச்சுப் பார்க் குறப்ப தாமதமானது தப்பாத் தெரி யலை. அவ்ளோ நிறைவா வந்திருக்கு!
அடுத்த இலக்கு?
‘அடுத்த படத்துக்கும் இப்பவே ரெடி’ங்கிறார் நரேன். சூழல் சரியா வந்தால் ‘கத்துக்குட்டி-2’ பண்ணலாம் னார் சசி சார். 2-ம் பாகம் எப்படி இருக் கும்னு அவர் விவரிச்சப்ப அசந்து போயிட்டேன். நேர்ல அழைச்சுப் பேசிய கார்த்தி, ‘நல்ல போலீஸ் ஸ்க்ரிப் டோட வாங்க’ன்னார். முதல் படம் ரிலீ ஸாகுறதுக்கு முன்னாலேயே இதெல் லாம் கிடைக்கிறது பெரிய அங்கீகாரம்.
சினிமாங்கிறது பெரிய பாக்கியம். கோடி பேர்ல ஒருத்தருக்கு கிடைக் கிற வரம். ஆனா, சினிமாவுல தன் மானத்தைப் பறிச்சு, அழவைக்கிற விஷயங்கள் அதிகம். இங்கு பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. பத்து ரூபாய்க்காக இழந்த மரி யாதை, லட்ச ரூபாய்ல கிடைச்சிடுமா? ஆனாலும், எல்லா சிரமங்களுக்கும் தயாராகித்தான் சினிமாவுக்கு வந்திருக்கேன். அமீர் அண்ணன் ஹீரோ, சமுத்திரகனி வில்லன். அதுதான் அடுத்த இலக்கு!
a

thanx - the hindu

Wednesday, September 19, 2012

புரோட்டா சூரி பேட்டி @ கல்கி - சுசி , சசி, ரசி , வி வி சி

பரோட்டா சூரி
 http://www.mysixer.com/wp-content/uploads/2011/12/Soori.jpg
வளர்த்தது சுசியண்ணே... வார்த்தது சசியண்ணே!

சஞ்சய்

சாப்பாட்டு ஐட்டங்களில் எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்காதது பரோட்டாதான். ‘வெண்ணிலா கபடிக்குழுபடத்துல வர்ற காமெடிக்காக பதிமூணு பரோட்டாவை சாப்புட வெச்சார் சுசீந்திரன் அண்ணன். ‘களவாணிபடத்துல பஞ்சாயத்து வாயில பால் டாயிலு ஊத்துவோமே... அந்த மாதிரி கொலை முயற்சிதான் என்னைய பதிமூணு பரோட்டா சாப்புட வெச்சதும். ஆனா, இன்னிக்கு பரோட்டா சூரிங்கிற பேரே நெலச்சுப் போச்சு.


சாமி கும்பிடாதீங்கன்னு soன்ன பெரியார் எப்படி கடைசி வரைக்கும் ராமசாமிங்கிற பேரைச் சுமந்து அலைஞ்சாரோ... அந்த மாதிரிதான் என்னோட நெலமையும்..."- சோக்க வைக்கும் வட்டார வழக்கில் வயிறு குலுங்க வைக்கிறார் சூரி. ‘மனம் கொத்திப் பறவை’, ‘பாகன்’, ‘சுந்தரபாண்டியன்என சமீப காலப் படங்களில் தவிர்க்க முடியாத காமெடிச் சூறாவளி சூரிதான்.


இந்த வெற்றி எத்தனை வருடப் போராட்டத்தின் பலன்?


வருஷமாண்ணே முக்கியம்? ஒரு தடவை ஆபாவாணன் soன்ன வார்த்தைங்கதான் ஞாபகத்துக்கு வருது. ‘சினிமாவுக்கு வராட்டி நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருப்பீங்க?’ன்னு அவர்கிட்ட கேட்டாங்க. ‘சினிமாவுக்கு வர முயற்சி பண்ணிக்கிட்டு இருப்பேன்னு soன்னார். 96-வது வருஷ லாஸ்டுல சென்னைக்கு வந்தவன். அலையாத தெரு இல்ல. பாக்காத ஆள் இல்ல. சினிமாவுல நுழையிற வரைக்கும் வயித்தக் காப்பாத்தணுமே... அதனால என்ன வேலை கிடைச்சாலும் செய்வேன்.


நான் பெயின்ட் அடிக்காத பில்டிங்கே தி.நகர் ஏரியாவுல இல்ல. 13 வருஷ போராட்டத்துக்கு அப்புறம்தான் சுசீந்திரன் அண்ணனோட பார்வை கிடைச்சது. சங்கம் தியேட்டர்ல உட்கார்ந்துவெண்ணிலா கபடிக்குழுபடம் பாக்குறேன். பரோட்டா காமெடியைப் பாத்துட்டு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்குது. ‘எனக்கா இத்தனை கைதட்டல்னு நெனச்சதுல ஃபிட்ஸ் வந்த மாதிரி கைகாலு ரெண்டும் இழுத்துக்கிச்சு. அத்தனை வருஷ போராட்டத்தையும் ஒத்த நிமிஷத்துல ஜெயிச்ச மாதிரி இருந்துச்சு!"


சமீபத்துல உங்களை சிலிர்க்க வெச்ச பாராட்டு?



‘போராளிபடம் பார்த்துட்டு சுசீந்திரன் அண்ணன் பேசினாரு. ‘சசிக்கும் சமுத்திரக்கனிக்கும் நீ ரொம்ப கடமைப்பட்டிருக்கடா... ரொம்ப சரியான இடத்துல உன்னைய கொண்டுவந்து நிறுத்தி இருக்காங்கன்னு சொன்னாரு. கண்ணுல தண்ணி வந்திடுச்சு. என்னைய வளர்த்தது சுசீந்திரன் அண்ணன்னா... நல்ல நடிகனாய் வார்த்தது சசியண்ணன்தான். அவரோடசுந்தரபாண்டியன்படத்துல என்னைய தூக்கி வெச்சுக் கொண்டாடி இருக்காரு. நாலு பேரை ஜெயிக்க வெச்சு ரசிக்கிற மனுஷன் சசியண்ணன். அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன்."


சினிமாவுல நினைச்ச இலக்கை அடைஞ்சுட்டீங்களா?


இப்போதானே விழுந்து எழுந்து நடக்குற குழந்தையாகி இருக்கேன். இன்னும் நெறைய தூரம் ஓடுற அளவுக்கு ஆசையும் கனவும் இருக்கு. பாண்டிராஜோடகேடி பில்லா கில்லாடி ரங்கா’, கனி அண்ணனோடநிமிர்ந்து நில்’, சற்குணம் அண்ணனும் தனுஷும் இணைஞ்சு பண்ணுற படம்னு நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சமீபத்துல பொண்டாட்டிய அழைச்சுக்கிட்டு தி.நகர்ல உள்ள ஜவுளிக் கடைக்குப் போயிருந்தேன்.

நம்மையும் ஒரு மனுஷன்னு மதிச்சு சில பேரு ஆட்டோகிராப் கேட்டாங்க. அப்போ அங்கே நின்ன செக்யூரிட்டி கூட்டத்தை சரிபண்ண வந்தாரு. நான் அவரோட கையப் புடிச்சு, ‘அண்ணே என்னைய தெரியலையா... நாந்தாண்ணே இந்த ஃப்ளோருக்கு பெயின்ட் அடிச்சவன். நீங்ககூட சரியா அடிக்கச் சொல்லித் திட்டுவீங்களே... ஞாபகம் இல்லியான்னு கேட்டேன். நம்பவும் முடியாம நம்பாம இருக்கவும் முடியாம அவர் திகைச்சு நின்னாரு பாருங்க... யாருக்குள்ள யாரு ஒளிஞ்சிருக்காங்கன்னு யாருக்குமே தெரியாதுண்ணே..."