Showing posts with label இரா.சரவணன். Show all posts
Showing posts with label இரா.சரவணன். Show all posts

Saturday, October 10, 2015

கத்துக்குட்டி-சினிமாவிமர்சனம்-சீரியஸான ஜாலி சினிமா!

பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியாகும் முதல் படம், பாரதிராஜா, வைகோ, சீமான் ஆகியோரால் பாராட்டப்பட்ட படம், ட்ரெயல்ர் - டீஸர்களில் ஈர்த்த கவனம்... இந்த காரணங்களே 'கத்துக்குட்டி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
'கத்துக்குட்டி' நிஜத்தில் எந்த மாதிரி?
கதை: நரேன் ஒரு விவசாய ஆர்வலர். வேலை, வெட்டி இல்லாமல் வம்பு செய்பவருக்கு தேர்தலில் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டாரா? அவரைச் சுற்றி என்ன நடக்கிறது? அதற்குப் பிறகு என்ன ஆகிறார்? என்பது ஒன்லைன்.
ஒரு கருத்தை முன் வைக்க எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் படைப்பின் நேர்த்திக்காக உழைப்பது ஆரோக்கியமான விஷயம். மீத்தேன் பிரச்சினையை அழுத்தமாகப் பதிவு செய்த அறிமுக இயக்குநர் இரா.சரவணனுக்கு வெல்கம் பொக்கே கொடுக்கலாம்.
வெட்டியாய் திரிவது, குடித்துவிட்டு சலம்புவது, அப்பாவுக்காக துடிப்பது, விவசாயத்தை தவறாகப் பேசுபவனின் சட்டையைப் பிடித்து உலுக்குவது, காதலில் கிறங்குவது என அறிவழகன் கதாபாத்திரத்துக்கு நரேன் சரியாகப் பொருந்துகிறார். ''பட்டினிச் சாவுங்கிறது விவசாயி பட்டினியால செத்துப்போறது இல்லை. மத்தவங்க பட்டினியை போக்க முடியலைங்கிற வருத்தத்துல செத்துப் போவது'' என வசனம் பேசும்போது கதாபாத்திரத்துக்கு கம்பீரம் கூட்டுகிறார்.
சூரியின் கவுன்டர் வசனங்களுக்கும், ரைமிங் பன்ச்களுக்கும் தியேட்டர் குலுங்குகிறது.
''அவன் ஆடுனது டான்ஸாடா? ஒரு ஃபைட்டயே டான்ஸா மாத்திக்கிட்டு போயிக்கிட்டு இருக்கான்'' என்று சூரி சொல்லும்போது ஆரம்பித்த கை தட்டல் படம் நெடுக நீண்டதுதான் ஆச்சர்யம்.
எறும்புகளை விரட்டுவதற்காக ஸ்ருஷ்டி டாங்கே செய்யும் ஐடியா அசத்தல். கன்னத்தில் குழி விழும் அளவுக்கு சிரிக்கும் ஸ்ருஷ்டி மனதில் நிறைகிறார்.
''செல்போன் டவர் வந்தா கரிச்சான், மைனா, புறான்னு எந்த பறவையும் இங்க இருக்காது'' என்று ஸ்ருஷ்டி பேசும் வசனத்துக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.
பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நரேன் அப்பாவாக இதில் அறிமுகம் ஆகியிருக்கிறார். மாவட்ட செயலாளராக வரும் ஞானவேல், ஸ்ருஷ்டியின் அப்பாவாக வரும் ராஜா, துளசி, தேவிப்ரியா ஆகியோர் பொருத்தமான தேர்வு.
சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். அருள் தேவின் இசையில் களைக்கட்டு கண்ணால மெனக்கெட்டு பாடல் ரசிக்க வைக்கிறது.
அடிதடி இளைஞன் அரசியலுக்கு வரும்போது என்ன ஆவான்? என்பதை இடைவேளையாக வைப்பது மாஸ்.
விவசாயத் தொழில், கடன் பிரச்சினை, தற்கொலை, பட்டினிச்சாவு, மீத்தேன் பிரச்னை, கூல்டிரிங்ஸ் நச்சு , ஈமுகோழி, ரியல் எஸ்டேட், டாஸ்மாக் என்று கிடைத்த கேப்பில் எல்லாம் சந்து விடாமல் பிரச்சினையின் தீவிரத்தை விதைத்திருக்கிறார் இயக்குநர் சரவணன்.
டிரான்ஸ்பார்மர் இருக்கு... மின்சாரம்தான் இல்லை என்பதை உணர்த்துவதற்காக டிரான்ஸ்பார்மரில் அரிக்கேன் விளக்குகளைத் தொங்கவிட்டிருக்கும் விவசாய பூமியை பதிவு செய்த விதத்தில் கவனம் ஈர்க்கிறார்.
படத்தில் சில காட்சிகள் கோர்வையாக இல்லாமல் அங்கும் இங்குமாக இருக்கின்றன. ஆனால், அதை தஞ்சை மண்ணின் வாழ்வியலாலும், வசனங்களாலும், சூரியாலும் நிரப்பி இருக்கிறார்.
ஹீரோவை வைத்துதான் கிளைமாக்ஸ் வைக்க வேண்டுமா என்ன? அதிலும், வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குநர்.
மண்ணின் பெருமைக்குக் காரணமான விவசாயிகளின் வலிகளை உணர்த்திய விதத்தில் 'கத்துக்குட்டி' கண்ணியமான சினிமா. நம் காலத்து சமூகப் பிரச்சினைகளை நையாண்டித்தனத்துடன் சுவாரசியமாக ரசிகர்களைக் கட்டிப்போட்ட விதத்தில் இது கெத்துக்குட்டி!


நன்றி-தஹிந்து

Thursday, July 30, 2015

கத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம்?- இயக்குநர் பேட்டி

  • ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரி, நரேன்
    ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரி, நரேன்
  • ஸ்ருஷ்டி டாங்கே
    ஸ்ருஷ்டி டாங்கே
படத்தில் ஒரு இடத்தில்கூட கட் இல்லை. புகை சம்பந்தமான விளம்பரம்கூட தேவையில்லை’ என தணிக்கை அதிகாரிகள் கொடுத்த பாராட்டாலும், ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களாலும் கோடம்பாக்கத்தின் கவனத்தை திருப்பி இருக்கிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.
இதை இயக்கியிருக்கும் இரா.சரவணன் யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர். இனி அவருடன்..
எப்படி வந்திருக்கிறது ‘கத்துக்குட்டி’?
படம் பண்ணப்போறேன்னு சொன் னப்ப அக்கறையா திட்டினதும் ஆத ரவா நின்னதும் ரெண்டு அண்ணன்கள். மூத்த அண்ணன் அமீர். இளையவர் சசிகுமார். படம் தயாரானதும் சசி சாருக்கு மட்டும் போட்டுக் காட்டி னேன். என்ன சொல்லப் போறார்னு பயங்கர பதற்றம். கார்ல என்னைக் கூட்டிட்டுப்போய் அவர் கையால சாப்பாடு போட்டு இரவு ஒரு மணி வரைக்கும் உட்காரவைச்சுப் பேசி னார். ‘நல்ல கதைன்னு தெரியும். ஆனா, இவ்வளவு நுட்பமா, காமெ டியா நீ பண்ணியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு’ன்னார். சில சீன், வசனங்களைக் குறிப்பிட்டு சொல்லி, ‘இதையெல்லாம் நான் எதிர்பார்க் கவே இல்லை’ன்னு பாராட்டினார். சின்ன அண்ணன்கிட்ட பாஸாய்ட் டேன். பெரிய அண்ணன்கிட்ட காட்ட பயமா இருக்கு!
ஆக் ஷன், த்ரில்லர் என மிஷ்கின் தோட்டத்தில் உருவானவர் நரேன். கிராமம், காமெடி என அவரை எப்படி மாற்றினீர்கள்?
கதை ரொம்ப பிடிச்சதால, எனக் காக முழுசா கால்ஷீட் ஒதுக்கி னார் நரேன். தஞ்சாவூர் மண்ணுக்கே உரிய சேட்டையும் சில்லுண்டித்தன முமா நவரச நடிப்பில் விளையாடித் தீர்த்திருக்கார். சேறு, சகதின்னு புரண்டிருக்கார். ஒரு காட்சிக்காக ‘பாழடைஞ்ச கிணத்துக்குள்ள குதிக் கணும்’னு சொன்னேன். தயக்கமே இல்லாமல் குதிச்சார். ஆவேசமா வசனம் பேசுற ஒன்றரை நிமிஷக் காட்சியை ரவுண்ட் ட்ராலி போட்டு ஒரே ஷாட்டில் எடுக்கிற‌ ப்ளான். ரொம்ப சிரமம்தான். நரேன் விடாம முயற்சி பண்ணினார். கடைசியில மொத்த யூனிட்டும் கைதட்டி ஆரவாரிக்கிற அள வுக்கு பக்காவா பேசிட்டார். அந்த ஒரு ஷாட்டுக்காக நாள் முழுக்க செலவு பண்ணினோம். நரேனோட அர்ப்பணிப்பு அவரை தஞ்சாவூர் இளைஞராவே மாத்திடுச்சு.
சூரிக்கு என்ன சொக்குப்பொடி போட்டீங்க.. எல்லா இடத்திலயும் ‘கத்துக்குட்டி’ புகழ் பாடுறாரே?
‘நான் நடிக்கிற படங்களிலேயே தனித்துவமானது கத்துக்குட்டி’ன்னு சூரி அண்ணன் கொடுத்த பேட்டி யைப் பார்த்துட்டு நானே அவர்கிட்ட ஆச்சரியமா கேட்டேன். ‘மீடியாக் கள்கிட்ட மட்டுமில்லாம, சிவகார்த்தி கேயன், விமல், சுந்தர்.சி, சுராஜ், மனோபாலான்னு கண்ணுல படுற அத்தனை பேர்கிட்டயும் கத்துக் குட்டியைப் பத்தி பெருமையா சொல்லிக்கிட்டிருக்கேன். இந்த படம் ஜெயிக்கணும்.. ஜெயிக்கும்!’னு சொன்னார். படத்துல ஜிஞ்சர்ங்கிற கேரக்டர்ல சூறாவளியா சுழன்று ஆடியிருக்கார் சூரி. பெரிய கம்பெனி களுக்கே தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியா இருக்கிறவர், ‘கத்துக்குட்டி’க்காக‌ 32 நாட்களைக் கொடுத்தார். மறக்கவே கூடாத உதவி. இன்னிக்கு சினிமா எடுக்கிறது சுலபம். ரிலீஸ் பண்றது மரண அவஸ்தை. அப்படியொரு சூழலில் சூரி அண்ணன் செய்த உதவிதான் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் நகர்த்திட்டு வந்து, நாலு பேர் தேடிவந்து பிசினஸ் பேசுற அளவுக்கு கம்பீரமா நிறுத்தியிருக்கு.
யாரிடமும் உதவியாளராக இல் லாமல் நேரடியாக சினிமாவுக்கு வந் திருக்கீங்க. யாரிடமாவது வேலை பார்த்திருந்தால் நல்லா இருந்திருக் குமோன்னு நினைச்சீங்களா?
எடிட்டிங் ப்ளானோடு எழுதிய திரைக்கதை இது. அதனால, சிரமம் தெரியல. இன்றைய தொழில்நுட் பத்தை வைச்சு, ஷூட்டிங்கில் நாம தப்பு பண்ணினாலும் போஸ்ட் புரொடக் ஷன்ல சரிபண்ணிடலாம். எடிட் டிங், டப்பிங், மியூசிக்ல சரிபண்ண முடியாத தவறுகளைக்கூட டிஜிட்டல், கிராபிக்ஸ்ல சரிபண்ணிட முடியும். ஆனாலும், யாரிடமாவது வேலை பார்த்த அனுபவத்தோடு வந்திருந் தால் இன்னும் சீக்கிரமாவே படத்தை முடிச்சிருக்கலாம். மண் சார்ந்த படைப்பா வரணும்றதுக்காக தஞ்சை மக்களையே நடிக்க வைச்சேன். வட்டார வழக்கு நல்லா வரணுங்கிற தால, டப்பிங் மட்டும் 90 நாட்களைத் தாண்டி போச்சு. படம் முடிச்சுப் பார்க் குறப்ப தாமதமானது தப்பாத் தெரி யலை. அவ்ளோ நிறைவா வந்திருக்கு!
அடுத்த இலக்கு?
‘அடுத்த படத்துக்கும் இப்பவே ரெடி’ங்கிறார் நரேன். சூழல் சரியா வந்தால் ‘கத்துக்குட்டி-2’ பண்ணலாம் னார் சசி சார். 2-ம் பாகம் எப்படி இருக் கும்னு அவர் விவரிச்சப்ப அசந்து போயிட்டேன். நேர்ல அழைச்சுப் பேசிய கார்த்தி, ‘நல்ல போலீஸ் ஸ்க்ரிப் டோட வாங்க’ன்னார். முதல் படம் ரிலீ ஸாகுறதுக்கு முன்னாலேயே இதெல் லாம் கிடைக்கிறது பெரிய அங்கீகாரம்.
சினிமாங்கிறது பெரிய பாக்கியம். கோடி பேர்ல ஒருத்தருக்கு கிடைக் கிற வரம். ஆனா, சினிமாவுல தன் மானத்தைப் பறிச்சு, அழவைக்கிற விஷயங்கள் அதிகம். இங்கு பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. பத்து ரூபாய்க்காக இழந்த மரி யாதை, லட்ச ரூபாய்ல கிடைச்சிடுமா? ஆனாலும், எல்லா சிரமங்களுக்கும் தயாராகித்தான் சினிமாவுக்கு வந்திருக்கேன். அமீர் அண்ணன் ஹீரோ, சமுத்திரகனி வில்லன். அதுதான் அடுத்த இலக்கு!
a

thanx - the hindu