Showing posts with label குறும்பட விமர்சனம். Show all posts
Showing posts with label குறும்பட விமர்சனம். Show all posts

Tuesday, October 25, 2011

நாளைய இயக்குநர் - ஃபேண்ட்டசி, ஸ்டைலிஸ் ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இந்தியாவிலேயே மிக மோசமான ஹேர் ஸ்டைலுடன் பாப்பா கீர்த்தி இன்னைக்கு ஆஜர் @ கலைஞர் டிவி.. அவர் போட்டிருந்த நைட்டி ஹா ஹா பூப்போட்ட டிசைன்ல கோமாளி போல் இருந்துச்சு.. மானாட மயிலாட நிகழ்ச்சில ஓரளவு கேவலமான டிரஸ்ல வர்ற மிஸ் கீர்த்தி இந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சில மட்டும் ஏன் படு கேவலமா வர்றாங்களோ?ஹூம்..

கீர்த்தி - நீங்க ஒர்க் பண்ணுன அளவுல உங்களுக்கு எந்த ஆர்ட்டிஸ்ட் ரொம்ப கம்ஃபர்ட்டபிளா இருந்தாங்க?  ( ஹி ஹி நோ டபுள் மீனிங்க்)
கே பாக்யராஜ் - அமிதாப் பச்சன். எனக்கு ஹிந்தி தெரியாது, அவருக்கு தமிழ் தெரியாது.. ஆனாலும் ரொம்ப கோ ஆப்ரேட் பண்ணுனார் ஆக்ரி ராஸ்தா ஷூட்டிங்க் ல ( நான் சிகப்பு மனிதன் ஹிந்தி ரீ மேக் ).. லேடி ஆர்ட்டிஸ்ட் யார்னு சொல்ல முடியாது , வம்பு வந்துடும் ஹா ஹா ( நான் சொல்றேன்.. ஷோபனா .. அவர் தானே இது நம்ம ஆளுல...  ஹி ஹி )

சுந்தர் சி - எனக்கு கமல் & கார்த்திக்  .கார்த்திக்குக்கும், எனக்கும் நல்ல அண்டர் ஸ்டேண்டிங்க்.. நான் எது செஞ்சாலும் அவரோட நல்லதுக்குனு தான் நினைப்பார் ( குஷ்பூவை கல்யாணம் பண்ணுனது? ஹி ஹி )

கமல் வீட்ல இருந்து வர்றப்பவே ஹோம் ஒர்க் பண்ணிடுவார், நம்ம வேலையை மிச்சம் பண்ணிடுவார்..  ( அன்பே சிவம் யார் டைரக்‌ஷன்? உண்மையை சொல்லுங்க இப்பவாவது.. நீங்களா? கமலா?)

லேடி ஆர்ட்டிஸ்ட்ல சவுந்தர்யா.. 



1. ராஜேஷ்குமார் -  BET ( ஆக்‌ஷன்)


ஓப்பனிங்க் ஷாட் செம ஸ்டைலிஸா இருந்தது.. ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உண்டான ஸ்பீடு கட்டிங்க், ஷார்ப் எடிட்டிங்க் என கலக்கறாரே மனுஷன்..

கார்ல ஹீரோ டிரைவிங்க்.. அவனுக்கு ஒரு ஃபோன் வருது.. உன் தங்கையை கடத்தி வெச்சிருக்கோம், நாங்க சொல்ற இடத்துக்கு வா அப்டினு கூப்பிடறாங்க.. போறான்.. அங்கே தங்கையை கண்ணை கட்டி வெச்சிருக்காங்க, வில்லன் எனக்கே உன் தங்கையை கட்டி வைக்கறேன்னு சொல்லு, அப்போத்தான் விடுவோம்கறான்..
அப்போ தங்கை சொல்லிடறா எனக்கு வேற ஒரு ஆள் கூட லவ் இருக்கு... உடனே வில்லன் அவளை ரிலீஸ் பண்ணிடறான்..கார்ல போறப்ப ஹீரோ தங்கைட்ட யார் அவன்?னு கேட்டப்ப அவ சொல்லலை. வெயிட் அண்ணா, நானே அவன் கிட்டே மேட்டர் ஓப்பன் பண்ணலை.. சொல்றேன்கறா.. 

அடுத்த ஷாட்ல ஹீரோ, வில்லன் 2 பேரும் ஒண்ணா தண்ணி அடிக்கறாங்க.எல்லாம் ஆல்ரெடி பிளான்.. அப்போ வில்லனுக்கு ஃபோன் வருது. ஸ்பீக்கர் ஃபோன் போடரான்.. ஹீரோவோட தங்கை ஐ லவ் யூ சொல்றா.
அவ்ளவ் தான் கதை.. கதைல நம்பகத்தன்மை கம்மி, ஆனா கொண்டு போன விதம் ஓக்கே...

தங்கையை கடத்திட்டு போறப்ப அந்த லொக்கேஷன் டாப் கிளாஸ்.. ஒளிப்பதிவும் பக்கா.. பேசிக்கலி படத்தோட டைரக்டர் ஒரு சவுண்ட் எஞ்சினியர் என்பதால்  ரீ ரெக்கார்டிங்க்லயும் நல்லா பண்ணி இருந்தார்.. 



2. மாதவா - யு டர்ன் ( ஃபேண்ட்டஸி)

ஹீரோவுக்கு அகஸ்மாத்தமா ஒரு பூமாரங்க் மாதிரி ஆயுதம் கிடைக்குது ரோட்ல.. அதால சுவர்ல எரிஞ்சா அப்படியே விரிசல் விடுது.. அந்த ஆயுதம் மறுபடி அவர் கைக்கே வந்துடுது.. 


அவர்க்கு பணப்பிரச்சனை.. சேட் கடைல செயினை அடமானம் வெச்சிருக்கார். அதை திருப்ப முடியல.. ஊர்ல இருந்து அப்பா வர்றார்.. வந்தா செயின் எங்கே?ன்னு கேப்பார்.. அதனால சேட் கிட்டே ஒரு நாள் மட்டும் செயினை குடுன்னு கேட்டா தர்லை , கோபத்துல அந்த பூமரங்கால ஒரே போடு,ரிட்டர்ன் வர்றப்ப அவர்ட்ட நக்கல் அடிச்ச டிராஃபிக் போலீஸ் கிட்டே தகராறு, கைல மந்திர ஆயுதம் இருக்க கவலை ஏன்? அவரையும் அட்டாக்..


வீட்டுக்கு வந்து பார்த்தா அந்த பூமாரங்க் ஆயுதத்தால சேதம் அடைஞ்ச வீட்டு சுவர் சரி ஆகி இருக்கு.. அதாவது கொஞ்ச நேரம் மட்டும் தான் அந்த பாதிப்பு போல.. வீட்டு காலிங்க் பெல் அடிக்குது.. திறந்து பார்த்தா அந்த சேட்டு, டிராஃபிக் போலீஸ்.. அவ்வ்வ்வ்வ்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. சேட்டிடம் மீட்ட செயினை  அங்கேயே கழுத்தில் போடாமல் யாராவது 1 கி மீ நடந்து அப்புறம் நடு ரோட்டில்  நடந்து செல்லும்போது போடுவாங்களா?

2. அதே மாதிரி ஒரு கவரிங்க் செயின் வாங்கி போட்டா வேலை முடிஞ்சது.. அப்பாவை சமாளிக்கத்தானே? அதுக்காக யாராவது  கொலை செய்யத்துணிவார்களா?

3. டிராஃபிக் போலீஸை கடந்து சென்ற பின் ஹீரோ அந்த பூமாரங்கை வீசுகிறார். அது போலீஸின் பின் மண்டை, அல்லது முதுகில் தானே தாக்கும், எப்படி நடு நெற்றியில் தாக்கும்? நேருக்கு நேரா நின்றார்?



3. வெங்கடேஷ் - நிழலுக்குப்பின்

வயதான தம்பதி - லேடி - என் மேல சந்தேகப்பட்டுத்தானே அன்னைக்கு வீட்டுக்கு பின்பக்கமா வந்து வேவு பார்த்தீங்க?னு கேக்கறாங்க..உடனே ஃபிளாஷ்பேக்.. ஹீரோ வீட்டுக்கு வர்றப்ப வீட்டின் பின் பக்கமா ஒரு ஆள் ஓடி போறான், அவனை துரத்திட்டுப்போனா அவன் எஸ் ஆகிடறான்.. ஹீரோ யோசனை பண்ணிட்டே வீட்டுக்குள்ள போறாரு.. எஸ் ஆன ஆள் திரும்ப வீட்டுக்குள்ளயே வந்து படுத்துக்கறாரு.. வாட்ச்மேன்.. நம்பிக்கைத்துரோகம் பண்ணிட்டான். பீரோல இருந்த நகையை எல்லாம் கொள்ளை அடிச்சுட்டான்.. 

ஒண்ணும் தெரியாதவன் போல் வீட்டுக்குள்ல வந்து படுத்துக்கிட்டான்.. இவர் பெட்ரூம்ல போய் செக் பண்றப்ப மனைவி ரத்த வெள்ளத்துல இறந்து கிடக்கறாங்க.. என்ன பண்ணலாம்னு யோசிக்கறப்பவே மடார்னு பின்னால இருந்து வாட்ச் மேன் தாக்கி அவரையும் கொலை பண்ணிடறான்,

இப்போதான் நமக்கு தெரியுது.. வயசான தம்பதிகள் ஆவின்னு.... அவங்க பையனை தனியா விட்டுட்டு வந்துட்டமேன்னு கலங்கறாங்க.. அவன் பின்னாலயே போறாங்க.. அவங்க பையனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு தோண திரும்பி பார்க்கறான்.. அதோட ஷாட்  முடியுது..

யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதை சொல்லும் திறமை இருக்கறதால இவருக்கு எதிர்காலத்துல நூறாவது நாள் மணி வண்னன் மாதிரி அமைய சான்ஸ் இருக்கு.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. அவ்ளவ் தூரம் ஓடிட்டு மறுபடி ரிட்டர்ன் வந்து ஒண்ணும் தெரியாத மாதிரி வாட்ச்மேன் அல்லது வேலைக்காரன் படுத்துக்கறான்.. ஹீரோ பெட்சீட்டை எடுத்து அவனை பார்க்கறார்.. அப்போ அவன் உடம்புல வியர்வை, அல்லது ஓடி வந்த இளைப்பு வாங்கி இருக்குமே?

2.  பீஸ் கட்டை பிடுங்கப்பட்டதை பார்த்து கரண்ட் இதனால தான் போயிருக்குன்னு ஹீரோ கண்டு பிடிச்சடறார்.. யாரோ ஆள் வீட்ல நடமாடறாங்கனு டவுட் வந்துடுது,. உடனே அக்கம் பக்கம் உதவிக்கு யாரையும் கூப்பிடலை.. ஏன்?



4. அஸ்வின் - குரு


ரிட்டயர்டு ஆன ஒரு ஆசிரியரின் மன அலைகளை பதிவு செஞ்ச அழகான படம்.. பொதுவா ரிட்டயர்ட் ஆகிட்டா மனிதனுக்கு 2 விதமான பயம் வந்துடும்.. 1. தான் சமூகத்தை விட்டு ஒதுக்கப்பட்டுட்டமோ..   2. நம்மோட திறமைகள் இனி செல்லுபடி ஆகாதோ..


அந்த விஷயங்கள் படத்துல நல்லா சொல்லப்பட்டிருக்கு.. 


ரிட்டயர்டு ஆன பேராசிரியர் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள மெமண்ட்டோவை ஆசையா பார்த்துட்டு இருக்கறப்ப வீட்டுக்குள்ள கிரிக்கெட் பால் வந்து அதை உடைச்சிடுது.. கிரிக்கெட் ஆடுன பையன் பாலை வாங்க வர்றான்.. அவனை கண்டபடி திட்டி காதை கிள்ளறப்ப பையனோட அம்மா வந்து மன்னிப்பு கேட்டு அந்தப்பையனுக்கு டியூஷன் சொல்லித்தரச்சொல்லி கேட்கறா..ஓக்கே சொல்றாரு..



ஆரம்பத்துல சரியா கவனிக்காம விளையாட்டுப்பையனா இருக்கான்.. அப்புறம் ஒழுங்கா கவனிக்கறான்.. சார்.. நான் பாஸ் ஆகிடுவேனா?னு கேட்கறான்.. 2 பேருக்கும் குரு மாணவன்  என்ற ஃபீலிங்க் தாண்டி ஒரு ஒட்டுதல் ஏற்படுது..

டியூஷன் முடிச்சுட்டு கிளம்பறப்ப பையன் வாத்தியாரை கிண்டல் பண்றான்.. உங்களால பேட்டிங்க் பண்ண முடியுமா?ன்னு கேட்கறான்.. அவரும்  கோதால இறங்கறாரு.. அவ்ளவ் தான் கதை..

ஒவ்வொரு மனுஷனும் தான் கவனிக்கப்படனும் , தன்னை எல்லாரும் மதிக்கனும், தன்னால யாருக்காவது ஏதாவது பிரயோஜனம் இருக்கனும்னு நினைக்கறான் என்ற கான்செப்டோட படம் முடியுது.. 

டெக்னிக்கலா அசத்துற படங்களை விட மனித மனங்களை படித்து எடுக்கப்படும் சாதாரன எளிய படங்களே மக்களை கவரும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இந்தபப்டம் தான் சிறந்த படமா தேர்ந்தெடுக்கப்பட்டது சந்தோசமா இருந்துச்சு

இயக்குநரிடம் சில சுட்டிக்காட்டல்கள்

1.  வாத்தியார் மெமண்ட்டோவை பார்த்திட்டிருக்கறப்ப ஜன்னல்க்கு எதிரேதான் நிக்கறார்.. ஆனா பந்து அதுக்கு ஆப்போசிட் சைடுல இருந்து வருது.. அப்படி வந்தா அதை உடைக்க வாய்ப்பே இல்லை, கேமரா ஆங்கிளை மாத்தி இருக்கனும்..

2. வாத்தியார் மனைவி கேரக்டர் சமையல் அறைல இருந்து பேசற வசனங்கள், தேவை அற்றது.. அவ்ளவ் ஏன்? மனைவி கேரக்டரை காட்டாமயே இன்னும் அழகா இந்த கதையை சொல்ல முடியும்.. பொதுவா குறும்படம் எடுக்கறப்ப எந்த அளவு கேரக்டரை குறைக்கறமோ அந்த அளவு நல்லது.. ஆடியன்சுக்கு ஈசியா புரியும்.. நமக்கும் வேலை கம்மி.. 


இந்த வாரம் போட்ட 4 படங்கள்ல 3 படங்கள் ஓக்கே ரகம்..

Monday, September 12, 2011

நாளைய இயக்குநர் - கே பாக்யராஜ் ஜட்ஜ்மெண்ட்டில் - விமர்சனம்

http://www.extramirchi.com/wp-content/uploads/2007/12/bhagyaraj.JPG

இத்தனை நாளா ஹாய் மதன், பிரதாப் போத்தன் இருவரது தீர்ப்புகளை பார்த்துட்டு கே பாக்யராஜ், சுந்தர் சி காம்பினேஷன் பார்க்க ரொம்பவே மாற்றங்கள். அனைத்தும் வரவேற்கத்தக்க மாற்றங்கள்...  இருவரும் அலட்டிக்கொள்வதே இல்லை.. போட்டியாளர்கள் அவர்களை விட 3 மடங்கு வயது குறைந்தவர்களாக இருந்தபோதும் சார் என மரியாதையாகவே அழைக்கிறார்கள். நிறைகளை முதலில் பாராட்டி விட்டு ,குறைகளை மயிலிறகில் வருடுவது போல் சொல்கிறார்கள். சபாஷ்..!!

கீர்த்திப்பாப்பா இன்னைக்கு பிளாக் கலர் நைட்டி மாதிரி ஒரு டிரஸ் போட்டு வந்தாங்க. எத்தனையோ பேரை அறிமுகப்படுத்துன கே பி யை ஜட்ஜா இவர் அறிமுகப்படுத்துறதா சொன்னது செம தமாஷ்.

நானும் ஒரு ஸ்டூடண்ட்டா இந்த புரோகிராம்ல நிறைய கத்துக்கனும்கற ஆர்வத்துல வந்திருக்கேன்னு கே பாக்யராஜ் சொன்னாரு. 

1. சீனிவாசன் - செல்வி. 

 ஒரு சைக்காலஜி ஸ்டூடண்ட் ரெட் லைட் ஏரியா போறான். அந்த பொண்ணு படிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சு  அவளை டீச்சரா ஏத்துக்கறான். பல டைம் மீட் பண்ணி படிச்சு எக்சாம்ல  பாஸ் ஆகிடறான். நன்றி சொல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு வர்றப்ப போலீஸ் ரெய்டுல அவளை கூட்டிட்டு போகுது. ஒரு முழுமையான நிறைவைத்தராத படம்னாலும் வசனங்கள் செம ஷார்ப்.


மனம் தொட்ட வசனங்கள்

1.  வந்து. வந்து. எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம். 

இன்னைக்கு மட்டும் ஃபர்ஸ்ட்டா? இதுவரைக்குமே இதான் ஃபர்ஸ்ட்டா? ( சபாஷ் சிக்ஸர்)

2.  படிச்சிருக்கற நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தே?


ஏன்? நீ கூடத்தான் படிச்சிருக்கே? இங்கே வர்லையா? ( பளார் பளார்)



3. வேணாம், போகாதீங்க.. நீங்க போய்ட்டாலும் எப்படியும் இன்னொருத்தனை அனுப்பத்தான் போறாங்க.  ( நாயகன் வசனம் பை சரண்யா உல்டா?)

4. என்னை பார்க்க வந்த பலர் என்னை யூஸ் பண்ணிட்டு போய்ட்டாங்க, என்னை கோயிலுக்கு கூட்டிட்டு வந்த முத ஆள் நீங்க தான்./.

கே பி  கமெண்ட் - கத்தில நடக்கற மாதிரி கதை. பொதுவா இந்த மாதிரி கதையை யாரும் எடுக்க யோசிப்பாங்க, பசி படத்துல துரை, அவளும் பெண்தானே,அரங்கேற்றம்ல பாலச்சந்தர் சார் எடுத்தாங்க.. குறும்படம் எடுக்கற நீங்க இதை எடுக்க வந்தது துணிச்சல் தான்.

சுந்தர் சி -  கேமரா ஒர்க் நீட்.  ரீ ரெக்கார்டிங்க் எங்கெங்கே எவ்வளவு தேவையோ அதை மட்டும் யூஸ் பண்ணி இருக்கீங்க.. பல இடங்கள் சைலண்ட்.. சபாஷ்..

http://3.bp.blogspot.com/-48Mp_h8_8hU/ThbnvyiDz9I/AAAAAAAACho/wEk0fdKnGUc/s1600/monica-sun-tv-093-766789.jpg


2. பிரசாந்த் - நைஜீரியன் காதல்

காமெடியான கதை.. ஒரு 60 மார்க் ஃபிகர்.. நைஜீரியன் ஆளை ரோட்ல பார்க்குது..  பார்த்ததுமே லவ். அவனையே ஃபாலோ பண்ணுது.. ஃபிகரோட ஸ்கூட்டி அடிக்கடி ரிப்பேர் ஆகும்போது அண்ணன் தான் ஸ்டார்ட் பண்ணித்தர்றான்..  ( அதுக்காக  3 டைம் ஒரே மாதிரி ஸ்டார்ட் சீன் வெச்சது ஓவர்..)கடைசில பார்த்தா க்ளைமாக்ஸ்ல அவன் படு லோக்கலான தமிழ் பாஷை பேசறான்.. ஃபிகர் நொந்து நூடுல்ஸ் ஆகி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மனம் தொட்ட வசனங்கள்

1.  வண்டிக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள். லவ் ஸ்டார்ட் ஆகிடுத்து ..


2. என் ஹார்ட் பீட்  லவுடு ஸ்பீக்கர் போட்டது போல் ஏன் சத்தம் போடுது?

3. நைஜீரியன் காதல்னு நினைச்சேன், ஆனா கடைசில லோக்கல் நீலாங்கரை லவ் ஆகிடுச்சே?

கதை கொஞ்சம் சில்லித்தனமா எனக்கு தோணுச்சு,, காமெடின்னாலும் காதலை காமெடி பீஸ் ஆக்குவதை காதலர்கள் விரும்ப மாட்டார்கள்..


கே பி  கமெண்ட் - இது ஒரு எவர் க்ரீன் ஃபார்முலா. ஆனா ஒரு பொண்ணு இவ்ளவ் ஜொள்ளு விடுமா? டவுட்டு.  படம் ரொம்ப்ப சிம்ப்பிள் & நீட்..

சுந்தர் சி கமெண்ட் - ஓ ஹென்றி, சுஜாதா,புதுமைப்பித்தன் இவங்க எல்லாம் அவங்க சிறுகதைல கடைசில ஒரு ட்விஸ்ட் வைப்பாங்க.. அது மாதிரி ட்ரை பண்ணீ இருக்கீங்க.. படத்தோட க்ளைமாக்ஸ்ல நைஜீரியன் சாங்க் வெச்சது சூப்பர்.. நைஜீரியனா நடிச்ச அந்தாள் நடிப்பு செம..

http://www.faltooclub.com/Biography/Bigimage/kanika62011.jpg

3. நந்தா - உயிர்

ஒரு பழைய பைக், அதை வித்துடுங்கன்னு மனைவி சொல்றா.. கணவன் ஓக்கே சொல்லி மெக்கானிக் ஷாப்ல அதை காட்டி ரேட் கேக்கறான்.. 2 நாள் கழிச்சு வாங்கன்னு அவன் சொன்னதால பைக் ரிட்டர்ன் பேக் டூ த சேம் ஹவுஸ்..

அவங்க பாப்பா வீதில விளையாடப்போகுது.. அப்போ பஸ் ஒண்ணு வருது. பைக் வீட்டு வாசல்ல இருந்து  கிளம்பி பஸ்ஸூக்கு முன்னே விழுந்து பாப்பாவை காப்பாத்துது.. அதுக்கும் உயிர் இருக்குன்னு ஒரு ஃபீலிங்க் காட்றாங்க.. ( ஃபிலிம் காட்றாங்க? )

அப்புறம் அந்த பைக்கை சாமியா நினைச்சு கும்பிடறாங்க.

சத்தியமா நம்பவே முடியல..

கே பி  கமெண்ட் - பைக் ஸ்டேண்ட் லூஸா இருந்துச்சு.. தானா ரிலீஸ் ஆகி ரோட்டுக்கு வந்துடுச்சுன்னு காட்டி இருக்கலாம்.. இன்னும் நம்பகத்தன்மை வந்திருக்கும்.. பொல்லாதவன் படத்துல கூட இந்த மாதிரி ஒரு சீன் வருது,, தனுஷை துப்பாக்கிக்குண்டுல இருந்து பைக் காப்பாத்தும்./.

சுந்தர் சி கமெண்ட் - பழைய பைக் மாதிரி கதைல சொல்றாங்க. ஆனா அது புது பைக் மாதிரிதான் தெரியுது.. இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/namitha-latest-hot-photos/Namitha-latest-sexy-photo-45.jpg

4. நிகிலன். - புதிர். 

ஒரு குறும்படத்துல இவ்வளவு டேலண்ட்டை காட்ட முடியுமா? என திரைக்கதையில், மேக்கிங்க் ஸ்டைலில் கலக்கிய படம்.  ஒரு பைக் ஆக்சிடெண்ட்ல ஒரு பொண்ணுக்கு அடிபடுது.. அவ கிட்டே இருந்து ஒருத்தன் செல் ஃபோனை அடிச்சுக்கிட்டு ஓடறான். அவன் எப்படி போலீஸ்ல பிடிபடறான்.. அப்டிங்கறதை பல திருப்பங்களோட சொல்லி இருக்காங்க.

ஓப்பனிங்க் சீன்ல என்ன சீன் வருதோ அதுவே க்ளைமாக்ஸ்ல வேற கோணத்துல காட்டி இருப்பாங்க..

இந்த இயக்குநர்க்கு செம  எதிர்காலம் உண்டு.. கங்க்ராட்ஸ்.. இவரோட ஸ்கிரிப்டை யாராவது திருடுனாக்கூட இவரைத்தவிர யாராலும் அதை புரிஞ்சுக்க முடியாது.



கே பி  கமெண்ட் - ஆங்கிலத்துல இர்ரிவர்சிபிள்னு ஒரு படம் வந்தது.. அதே போல் ட்ரை பண்ணி இருக்கீங்க. ரொம்ப வித்தியாசம்.. கீப் இட் அப்.

சுந்தர் சி - பக்கா ஸ்க்ரீன்ப்ளே வெரி டிஃப்ரண்ட்.. நைஸ்..

 லிங்க் -
http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-39/
 

Monday, September 05, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - விமர்சனம்

போனவாரமே வந்திருக்கவேண்டியது..3 கதைகள்ல 2 கதை தான் பார்க்க முடிஞ்சது. ஒண்ணு பெண்டிங்க். இப்போதான் லிங்க் கிடைச்சது.. 9 கதைகள்ல 6 கதைகள் தலா 3 வீதம் கடந்த 2 வாரமா பார்த்தாச்சு.. இது கடைசி வாரம்..

1.  ரமேஷ் - பரிதி மாறன்

நாய்ங்களை வெச்சு கதைன்னதும் நான் கூட ராமநாராயணன் டைப் கதையோன்னு பயந்தேன்.. ஒரு கிராமம், அதுல 2 குழந்தைகள் கொண்ட ஒரு தம்பதி 2 நாய்க்குட்டிகளை வளர்க்கறாங்க.. தன் குழந்தை போலவே பாசமா வளர்க்கறாங்க.. பெரியவன், சின்னவன்ன்னு பேர் வெச்சு கூப்பிடறாங்க..

ஊர்ப்பெரிய மனிதர் உங்க கிட்டே தான் 2 நாய் இருக்கே? ஒண்ணை எனக்கு குடுங்கன்னு கேட்கறார்.. மறுத்துப்பேச முடியாத நிலையில் , தன் குடும்பத்தில் அனைவர் எதிர்ப்பையும் மீறி ஒரு நாயை தானம் செய்கிறார்... ஆனால் அது அடுத்த நாளே இவர்களிடம் ஓடி வந்துடுது.. பெரிய மனிதர் அதை பார்த்துட்டு சினிமா வில்லன் மாதிரி வசனம் எல்லாம் பேசாம ஓக்கே இனி உங்க கிட்டேயே வளரட்டும்கறார். 

ஊர்க்காவல் காக்கறப்ப அந்த நாய்களை ஒரு ஓநாய் கடிச்சுடுது ( இந்த சீனை ஆள வந்தான் ல மணீசாகொய்ராலா கார்ட்டூன் சீன் மாதிரி எடுத்து சமாளிஃபிகேஷன்.)


ஆனா நோய்வாய்ப்பட்டு  அதுல சின்ன நாய் இறந்துடுது..பெரிய நாய் சோகமா சின்ன நாய் புதைக்கப்பட்ட இடத்தையே சுத்தி சுத்தி வருது. ஊர் மக்கள் இப்போ பெரிய நாயையும் கொன்னுட சொல்றாங்க.. அதுக்கும் நோய் தொத்தி இருக்கு..

தன் கையால கொல்ல மனம் வராத குடும்ப தலைவன் காட்ல சில ஆளுங்க கிட்ட  அதை ஒப்படைச்சு கொன்னுடுங்க அப்டீங்கறான்.. அவங்க கிட்டே இருந்து நாய் தப்பிடுது..

வீட்டுக்கு வந்தா மனைவி கடுப்பா கேக்கறா.. நம்ம குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம போயிருந்தா இப்படித்தான் பண்ணி இருப்பீங்களா? நாம் நாய் மாதிரியா அதை வளர்த்தோம்? குழந்தை மாதிரி தானே வளர்த்தோம்..?கறா..

அப்போ கரெக்டா நாய் அங்கே வந்துடுது.. ஒரு பார்வை பார்க்குது.. குற்ற உணர்ச்சியில் பொங்கி அவன் மன்னிப்பு கேட்கறான்.. ஆனா நாய் அதை ஏத்துக்கலை.. அவனை ஒரு எகத்தாளமா, சோகமா பார்த்துட்டு வேற பக்கம் கிளம்பிடுது..

பல நுட்பமான உணர்வுகளை படம் தூண்டி விட்டது.. நிதர்சனமா என்ன நடக்கும், மனித மனம் சுய நலமா சிந்திக்கும் என்பதை எல்லாம் பிரமாதமா சொல்லி இருக்காங்க.. பலே!!!!!!!!!!!!





2.  ராஜ்குமார் - கறை (ரை?)

நாட்டு நடப்பு வெச்சு அரசியல் நையாண்டி செஞ்சிருக்காரு இயக்குநர். படம் செம கல கல . தீப்பொறி ஆறுமுகத்தைத்தான் நக்கல் அடிச்சிருக்காருன்னு நினைக்கறேன்.


எல்க்‌ஷன் டைம்.. ஹீரோ ஒரு பேச்சாளன்.. ஒவ்வொரு எலக்‌ஷன்லயும் ஏதோ ஒரு கட்சி சார்பா பேசுவான் மேடைல.. யார் முதல்ல புக் பண்றாங்களோ அவங்க கட்சி சார்பா.. .. பணம் கை நீட்டி வாங்கிட்டா அவன் டாக்டர் ராம்தாஸ் மாதிரி கூச்சமே இல்லாம எதிர்க்கட்சியை பொளந்து கட்டுவான்..


அவனை ஒரு கட்சிக்காரர் அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணிடறார்.. வீட்டுக்கு அட்வான்ஸோட வந்தா மனைவி எதிர்க்கட்சி ஆள்கிட்டே அட்வான்ஸ் வாங்கி இருக்கா..

வாங்குன அட்வான்ஸை திருப்பி கொடுக்க போனா அவர் ஏத்துக்கலை...

இப்போ என்னடா பண்றதுன்னு முழிக்கறப்ப ஒரு குட் நியூஸ். 2 கட்சியும் இணைஞ்சிடுது.. அப்பாடா.. நிம்மதி..

 டாக்டர் ராம்தாஸ், திருமா, குருமா மாதிரி பச்சோந்திகளுக்கெல்லாம் சரியான செருப்படி..  அதை ஆவேசமா சொல்லாம மைல்டான காமெடியா சொல்லி இருக்கார்.


மனம் கவர்ந்த வசனங்கள்

1. முக்கால் மீட்டர் துணியை பொணத்து மேல போர்த்திட்டு  300 ஓட்டை அநாசியமாய்  அள்ளிடலாம்னு பார்க்கறீங்களா? விடுவமா?

2.  அடேய்.. அவன் 10 வருஷமா எங்க கட்சில தான் இருந்தான்.

அதெல்லாம் கணக்கில்லை.. சாகறதுக்கு கடைசி ஒரு வருஷம் எங்க கட்சில தான் இருந்தான்... எங்களுக்குத்தான் அவன் (!!) சொந்தம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCd1WmKZRR05JwH5P0NHfWZE6qO8QnU9zlPWYSvC2Taz9BsUaALqhhVH6fRvWcGPX0KiMlDqGDNYxYPGhHA8l6a_5pHqoWYyJ9VBzdEvXmqz-DwNWb34Xhm44pT_9HtF3sNdH38zjDp-I/s1600/nadodi+mannan.jpg


3. அருண்குமார் - நாடோடி மன்னன் 

 50 வயதான ஒரு தம்பதியின் அந்நியோன்யமான அன்பு தான் கதை.. காதல் என்பதும் அன்பு என்பதும்  வயதான பின்னும் தொடரும்கற அழகான கருத்தை  ஒரு கவிதை போல சொல்லி இருக்காரு.. இயக்குநர்... தம்பதிகளின் நடிப்பு டாப் கிளாஸ்..

லோ க்ளாஸ் ஜோடி.. அவங்களுக்கிடையே மலரும் அன்பு ஹை க்ளாஸ்..  அவளோட பிறந்த நாள் அன்னைக்கு நாடோடி மன்னன் படம் போலாம்னு பிளான். ஆனா அவன் அன்னைக்குன்னு பார்த்து லேட்டா வர்றான். அதனால செகண்ட் ஷோ போறாங்க..

என்ன ஒரு டிரா பேக்... ஏதோ புரொஜக்டர் ஃபால்ட்டால அன்னைக்கு செகண்ட் ஷோ கேன்சல்னு சொல்லிடறாங்க.. உடனே கணவன் முகம் வாடிடுது.. மனைவியின் கல்யாண நாள் ஆசையை நிறைவேத்த முடியலையேன்னு சோகம். உடனே மனைவி சமாளிக்கறா.. இதுவா முக்கியம்..? உங்க கையால
பூ வாங்கிக்குடுங்க.. அது தான் செம கிக்  என்கிறாள்.. பூ வாங்கி வைத்து விடுகிறான்.


இப்போ ஸ்பீக்கர் ஒலிக்கிறது.. ஆபரேட்டிங்க் மிதின் சரி ஆகி விட்டது, படம் ஓடப்போகிறது என அறிவிப்பு வருகிறது.. இருவர் முகத்திலும் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே?

கடைசில கேமரா நாடோடி மன்னன் போஸ்டர்ல  வந்து நிக்க எம் ஜி ஆரின் புன்னகையோடு படம்  முடியுது..

http://awardakodukkaranga.files.wordpress.com/2009/09/nadodi_mannan.jpg

 முதல் படம்  ஜட்ஜ்ங்களை ரொம்பவே கவர்ந்தது..... அரசியல் நையாண்டி என்பதாலும் காமெடி எனக்குப்பிடிக்கும் என்பதாலும் 2வது படம் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருந்தது.

ஆனால் 3 வது படம்  அனைத்துப்பெண்களையும், மென்மையான மனம் கொண்டவர்கள், அன்புக்கு ஏங்குபவர்கள், காதலர்கள், முன்னாள் காதல் தோல்வியாளர்கள் என பலரைக்கவரும் வாய்ப்புக்கள் உள்ள படம்.


டிஸ்கி - நமது நண்பர்  திருமலை கந்த சாமி அவர்கள் நாளைய இயக்குநர் குறும்படங்கள் காண லிங்க் கொடுத்து உதவினார், அவருக்கு நன்றிகள்....

  http://tamil.techsatish.net/file/naalaiya-5/

Monday, July 04, 2011

நாளைய இயக்குநர் - டபுள் ரோல் கதைகள் -விமர்சனம்

ஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேரும் கோட் சூட்ல நீட்டாவும்,தொகுப்பாளினி வழக்கம்போல நைட்டில கசங்கலாவும் ஆஜர்....இன்னைக்கு டபுள் ரோல் கதைகள் அப்டின்னு மதன் சார் சொல்லிட்டு அது பற்றி ரொம்ப சிலாகித்து பெசினார்.. டபுள் ரோல் அந்தக்காலத்துல இருந்தே பிரமாதமான வரவேற்பு பெற்றவைகள்னு.. எடுக்கறது ரொம்ப கஷ்டம்னாரு.. (பார்க்கறது அதை விட கஷ்டம்)

1. நகுலன் - ராஜேஷ்குமார்
இந்தப்படம் போட்டு 2 வது செகண்ட்லயே அபூர்வசகோதரர்கள் இன்ஸ்பிரேஷன்னு தெரிஞ்சிடுச்சு.. அப்பு கமல் மாதிரி ஹீரோ (இவர் தான் இயக்குநரும் ) அவருக்கு தாழ்வு மனப்பான்மை.. தான் அநாதை,யாரும் நம் மீது அன்பு செலுத்துவது இல்லைன்னு.. இது பற்றாதுன்னு குடைக்குள் மழை பார்த்திபன்  மாதிரி இல்லாத ஒரு கேரக்டர் கூட பேசிக்கற மனப்பிறழ்வு நோய் வேற.. 

ஸ்கூட்டில போற ஃபிகர் கிட்டே பேச ஆசைப்படறாரு.. அது கண்டுக்கவே இல்லை.. (இந்தப்பொண்ணுங்க யாரைத்தான் கண்டுக்குவாங்களோ?).. இவர் ஆற்றாமைல பொங்கி அழறாரு.. இசை வேற சோகத்துல போட்டு தாளிக்கறாங்க.. கடைசில எப்படியோ அந்த ஃபிகர் அவரை வண்டில ஏத்திக்கிட்டு கிளம்புது..  

ஹீரோ முழங்காலை கட்டி ரொம்ப சிரமப்பட்டு தான் நடிச்சிருக்கார்.. என்ன பிரச்சனைன்னா நமக்கும் பார்க்க சிரமமா இருக்கு.. டிரமாட்டிக்கா இருக்கு.. சித்தரிக்கப்பட்ட ,செயற்கையான சோகம் மாதிரி நம்ம மூளைக்குள்ள ஒரு அவார்னெஸ் பல்பு எரியுது.. சாரி டைரக்டர் சார்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அதிகம் பழக்கம் இல்லாத அந்த பொண்ணு ஹீரோவை பரிதாபப்பட்டு எங்காவது டிராப் பண்ணினா ஓக்கே.. திடு திப்னு வீட்டுக்கே கூட்டிட்டு போக ஓக்கே சொல்லுமா?
2. அதிக பழக்கம் இல்லாத ஆணிடம் அப்படி பாசமா முகத்தை தடவி கொடுக்குமா?

3. ஹீரோ மாதிரியே இருக்கும் அந்த இன்னொரு கேரக்டர் யாரு? இவரோட கற்பனையா? அண்ணனா? அதற்கு படத்துல விளக்கமே இல்லை.. 


இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

டைட்டிலுக்கான  விளக்கத்தை ஹாய் மதன் கிட்டே டைரக்டர் சொன்னது டச்சிங்கா இருந்துது..  நகுலன் அப்டிங்கறதை வேகமா,தொடர்ச்சியா சொல்லிட்டே வந்தா அது நான் குள்ளம், நான் குள்ளன்னு வரும் ..அது படத்தோட மையக்கரு.ன்னாரு.. குட் ஒன். 


2. சித்திரப்பாவை - சரத்ஜோதி 

ட்வின்ஸ் சிஸ்டர்ஸோட கதை.. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்.. அடிக்கடி ஏதாவது வரைஞ்சிட்டே இருக்கா.. மன நிலைக்காப்பகத்துல அவ ஒரு முறை எங்கேயும் வர சம்மதிக்காம மாடில அபாயமான இடத்துல நின்னு  வரையறா.. அவளை கீழே விழாம காப்பாற்றப்போகும் அவளின் சகோதரி ஸ்லிப் ஆகி கீழே விழுந்துடறா.. அக்கா க்ளோஸ். தங்கை.. எகெயின் டிராயிங்க் கிளாஸ்..


  இந்தப்படத்தின் மூலமா இயக்குநர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல.. மனநிலை தவறியவர்களை பாதுகாக்கும்போது நாம முதல்ல ஜாக்கிரதையா இருக்கனும்னு சொல்ல வர்றாரோ? 

இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. மனநலக்காப்பகம் அப்படி அபாயமான மாடியை கொண்டிருக்குமா? பேஷண்ட்டை அங்கே போக அலோ பண்ணுமா?
2. மகள் இறந்தாள் என்ற செய்தி ஃபோனில் அம்மாவுக்கு தெரிவிக்கப்படும்போது அந்தம்மா கிட்டே ஒரு ரீ ஆக்‌ஷனே இல்லையே? ஏன்? ஆ ராசா ஊழலில் மாட்னார்னு கேட்டு மக்கள் சகஜமா இருக்கற மாதிரி  என்ன ஒரு அலட்சியம்?

3.மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால அவ்வளவு தெளிவான ஓவியத்தை வரைய முடியுமா?

இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

 பட ஹீரோயினை நடிக்க வைத்த விதம் ,மற்றும் அந்த நடிகை தேர்வு..  

看完震惊了,这才叫艺高人胆大


3. மைக்கேல் மதன் காமராஜ் - தமிழ் சீனு 

 ஒரே மாதிரி முகத்தோற்றம் உள்ள இருவரில் ஒருவர் செய்யும் தவறால் இன்னொருவர் மாட்டிக்கொள்ளும் கதை.. கேட்க பழைய கதையாக தோன்றினாலும் காமெடியாக கொண்டு போனதால் தப்பித்தார் இயக்குநர்..

போலீஸ் ஸ்டேஷனில் ஹீரோவும், போலீஸூம் பேசும் வசனங்கள் நல்லதொரு காமெடி ஸ்க்ரிப்ட் கிடைத்தால் இயக்குநர் கிளப்புவார் என்று கட்டியம் கூறுகிறது.. 


க்ளைமாக்சில் “ கை கழுவிட்டு வாய்யா சாப்பிடலாம்” என மனைவி கூறுவது டச்சிங்காக இருந்தது.. 

 இந்த வாரம் போட்ட 3 படங்களுமே சுமார் ரகங்கள் தான்.







டிஸ்கி - மேலே சொன்ன படங்களின் யூ டியூப் லிங்க் 


http://www.techsatish.net/2011/07/kalaingar-tv-naalaiya-iyyakunar-03-07.html
 

Wednesday, May 11, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் கதைகள் 3 - விமர்சனம்

P8050080.JPG
8.5.2011 எலக்‌ஷன் ரிசல்ட்க்கு முன் வரும் கடைசி நிகழ்ச்சி இது. கே பாலச்சந்தர் சாரின் பேட்டியை கட் பண்ணி கட் பண்ணி 3 கதைகளுக்கும் நடு நடுவே கொஞ்சம் கொஞ்சம் போட்டாங்க.. இது எப்படி இருந்துச்சுன்னா ஸ்கூல் அல்லது காலேஜ் ஃபங்க்‌ஷன்ல பரிசு வழங்கும் நிகழ்ச்சியை ஆங்காங்கே கலை நிகழ்ச்சிக்கு நடுவே போடற மாதிரி.. வேற வழி.. நம்ம ஜனங்க டேஸ்ட் அப்படி.. ம் ம் .பேட்டில மதன் சார் தான் எல்லா கேள்வியையும் கேட்டாரு.. பிரதாப் போத்தன் எந்த கேள்வியும் கேட்கலை. ஆனா அவருக்கு 7 தடவை க்ளோசப் ஷாட்வேற.. அண்ணன் கமல் கெட்டப்ல இருந்தாரு..ஹி ஹி (அண்ணி மட்டும் ரசிச்சிருப்பாங்க ஹா ஹா )


தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் பற்றி சொல்லியே ஆகனும்.சமீபத்துல இவ்வளவு கேவலமான டிரஸ்ஸை நான் பார்க்கவே இல்ல.(அதான் இப்போ பார்த்துட்டியே ? அப்புறம் என்ன?)பொண்ணுங்க மாடர்ன் டிரஸ் போடறது தப்பே இல்லை.. ஆனா அது அட்ராக்ட்டிவ்வா இருக்கனும்.சரி.. விடுங்க.. இதுக்கு மேல ஏதாவது சொன்னா அது எங்க இஷ்டம்..நீ விமர்சனம் பண்ண வந்தது நிகழ்ச்சியையா? டிரஸ்ஸையா? அப்படிம்பாங்க.. ஏற்கனவே நமக்கு ஏழரை நடக்குது.. ( அது ஏன் நடக்குது..? சீக்கிரம் ஓடிட்டா தேவலை)


1. ராகேஷ் - 50 -50 ( ஃபிஃப்டி ஃபிஃப்டி)

பில்லா,ரன் லெவலுக்கு பில்டப் மற்றும் ஃபைட் சீனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் குறும்படம் என்ற அளவில் இது முக்கியமான படம்.எனக்கு தெரிந்து ஒரு ஷார்ட் ஃபிலிமில் இந்த அளவு பர்ஃபெக்ட் ஃபைட் சீன் வந்ததே இல்லை. அதே போல் ஹீரோ பில்டப்புக்கான ஹம்மிங்க் மியூசிக்,பில்டப் பேக்ட்ராப் எல்லாம் கலக்கல்.ஆனால் கதை தான் துக்ளியூண்டு.

ஒரு கேங்க்ஸ்டர்ஸ் குரூப்பில் பண பரிவர்த்தனையில் ஒரு கோல்மால் நடக்குது. ஹீரோ போய் அந்த பணத்தை வாங்கி வருகிறார். இதான் கதை.ஆனா எடுத்த விதம் பக்கா.. 

சாக்லேட் பேபி மாதிரி முகம் வைத்திருக்கும் ஹீரோவை நீ கொயந்தை பையண்டா என சீண்டி சீண்டியே அவனை தூண்டி விடுகிறார்கள். அவன் தனி ஆளாக கேங்க்ஸ்டர் முகாம் போய் ஃபைட் பண்ணி பணத்தை மீட்டு வருகிறான்.

இதற்கு டைட்டில் ஏன் 50 - 50 வைத்தார்கள் என தெரியவில்லை. நான் சாதா அல்ல ,இப்புடுச்சூடு கண்ணா,நான் பார்க்கத்தான் பப்பா அடிச்சா டாப்பா  மாதிரி டப்பிங்க் வாசனை  அடிக்கும் டைட்டில் வைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ,எடிட்டிங்க் போன்ற தொழில் நுட்பங்கள் ரசிக்க வைத்தது. இந்த படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்த  பிரபுக்கு பெஸ்ட் டெக்னீஷியனுக்கான பரிசு கிடைத்தது சந்தோஷம்.


2. அருண்குமார் - கையில் எடுக்க வேண்டுமா?

அண்ணன் மிஸ்கின்னின் தீவிர ரசிகர் போல . பெரும்பாலான ஷாட்ஸை எல்லாம் அவர் மாதிரியே கேமரா கோணங்கள் வைத்து எடுத்தாரு. கால்கள் மூலம் கதை செல்லும் திசை சொல்வது..

ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு தம்பதி, பக்கத்து வீட்ல ஒரு போலீஸ் ஆஃபீசர் பக்கத்து வீட்டு தம்பதி கல்யாண நாள் அன்று கணவன் வெளில போனதும் மனைவியை போலீஸ் ஆஃபீசர் பலாத்காரம் பண்ண அதை அந்த போலீஸ் ஆஃபீசரின் நடவடிக்கையை செல்ஃபோனில் படம் பிடித்த பெண்ணை அவர் மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் போட்டுத்தள்ள முயலும்போது இறந்த மனைவியின் கணவன் பழிக்குப்பழி வாங்குகிறான்.

இந்தப்படம் கிட்டத்தட்ட 30 நிமிஷப்படமா எடுத்தாத்தான் புரியும்.. டைரக்டர் ஏகப்பட்ட காசிகளை ஷூட் பண்ணிட்டு எடிட்டிங்க்ல தடுமாறி இருக்கறது நல்லாவே தெரியுது.இதுக்கு என்ன பண்ணனும்னா 8 நிமிஷப்படத்துக்கு உண்டான மாதிரி சிம்ப்பிளா சின்ன படமா எடுத்துக்கனும்.சும்மா கசாமுசான்னு அரை மணீ நேரப்படமா எடுத்துட்டு அதுக்குப்பிறகு 7 நிமிடப்படமா எடிட்டிங்க் பண்ணுனா எடுத்தப்ப இருந்த எஃப்ஃபக்ட் கிடைக்காது.

இந்தப்படத்துல ஒரு பாராட்டத்தக்க விஷயம் கணவன், மனைவி ஊடல் கொண்ட நிலையில் கணவ்ன் ஆஃபீஸில் செகரட்டரி ரூட் போடறப்ப கணவன் அவளை தவிர்ப்பது மாதிரி காட்னது... ஆண்களெல்லாம் காலரை தூக்கி விட்டுக்க ஒரு சான்ஸ்.கதை இந்த திசைல தான் போகுதுங்கறதை டைவர்ட் பண்ண அந்த சீனை இயக்குநர் வெச்சிருக்கனும். நல்ல உத்தி..

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்காக சட்டத்தை கையில் எடுக்க வேண்டுமா? என்பது தான் கதையின் தீம் என்றாலும் டைட்டில் எஸ் ஏ சந்திர சேகர் காலத்தில் எடுத்த பட தலைப்பு மாதிரி சுரஹ்ட்தே இல்லாமல் இருக்கு. இந்தப்படத்துக்கு பக்கத்து வீட்டு பரிமளா,ஃபிகரு இங்கே.. மர்டர் எங்கே? இப்படி டைட்டில் வெச்சிருக்கலாம்.. ( இதை சம்பந்தப்பட்ட டைரக்டர் படிச்சா இப்படி கேவலமா டைட்டில் வைக்கறதுக்கு தான் வெச்ச டைட்டிலே தேவலாம்னு நினைப்பாரோ/? ஹி ஹி )

இந்தப்படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் ஹீரோயின் அம்சமா இருந்தாங்க.. ( பார்த்தீங்களா? ஃபிகர் நல்லாருந்தா மரியாதை தானா வருது..# தமிழேண்டா)அதுவும் கல்யாண நாள் அன்னைக்கு அவரது மங்கள கெட்டப் செம..  (சரி சரி கர்ச்சீப் எடு).இந்தப்படத்துக்கு ஃபைட் சீன்ல பேக் டிராப்ல காயத்ரி மந்திரம் போட்டது நல்லாருந்ததுன்னு கே பி சார் கமெண்ட் பண்ணுனார்.

 


3. சரத் ஜோடி - புழுதி ஆட்டம்

டைட்டிலைப்பார்த்ததுமே இது வில்லேஜ் சப்ஜெக்ட்னு நினைச்சது சரி தான். செம நேட்டிவிட்டியோட எடுக்கப்பட்ட இந்தப்படத்துக்கு முதல் பரிசு கிடைச்ச துல ஆச்சரியம் இல்லை.பசங்க பட ஸ்டைலில் எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்,. கிரிக்கெட் விளையாடற டீம்ல ஒரு சண்டை. கிரிக்கெட் பேட்டை ஒரு குரூப் ல ஒரு பொடியன் எடுத்துட்டு ஓடிடறான்.அவனை துரத்திட்டு போய் 3 பசங்க மீட்கறப்ப அவங்க சைக்கிள் எதிரி குரூப் கிட்டே சிக்கிடுது.. ஆட்டம் தொடரும்னு சப் டைட்டிலோட படம் முடியுது.. 

 இதுல பாராட்ட வேண்டிய முக்கிய அம்சம் படப்பிடிப்பு நடந்த இடம். பக்கா சேரியை செலக்ட் பண்ணி கேமரா வை லாங்க் ஷாட்ல வெச்சு லெங்த்தி
.ஷாட்டா எடுத்து தள்ளின டைரக்டரை பாராட்றதா? ரொம்ப இயல்பா சேரிப்பசங்க மாதிரியே பாடி லேங்குவேஜ்,வசன உச்சரிப்புல கலக்குன சின்னபசங்களைப்பாராட்றதா?செம கலக்கல்.

எல்லா சின்னப்பசங்களையும் மேடை ஏற்றி கவுரவிச்சாங்க.. ஆனா செம கலக்கு கலக்குன அந்த குண்டு பையன் மிஸ்ஸிங்க்..

இந்தப்பட டைரக்டர் மேடைல பலராலும் பாராட்டப்பட்றப்ப அவர் காட்டிய நிதானம் ஆச்சரியப்பட வெச்சுது.. ரொம்ப சிம்பிளா ஸ்மைலிங்கோட அதை எதிர் கொண்டது அண்ணன் ரொம்ப பக்குவப்பட்டிருக்கார்னு தோணூச்சு.. வெல்டன்..

 டிஸ்கி - மேலே உள்ள ஸ்டில்ஸ்களுக்கும், குறும்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா ஒரு ரசனைக்காக....