Showing posts with label ஆடுகளம். Show all posts
Showing posts with label ஆடுகளம். Show all posts

Sunday, October 06, 2013

அடிக்கடி நைட் கிளப் ல என்ன வேலை? - த்ரிஷா பர பரப்பு பேட்டி @ த தமிழ் ஹிந்து

நடிகை த்ரிஷா - படம்: ஜி.வெங்கட்ராம் 

அட 'லேசா லேசா' த்ரிஷாவா இது.? இன்னும் அப்படியே ஸ்லிம் ப்யூட்டியாகவே ஜொலிக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் ரசிகர்களை தனது சிரிப்பால் கிறங்கடித்தவரோடு நடந்த ஒரு ஜில்லான சந்திப்பு. 



என்ன பதில் சொன்னா எங்க பிரச்சினை வந்திருமோ என்று யோசிக்கும் நடிகைகள் மத்தியில், எந்தவொரு கேள்விக்கும் யோசிக்காமல் வந்து விழுகின்றன வார்த்தைகள். ஜாலியாக தொடங்கிய பேட்டி கொஞ்சம் கோபமாக முடிந்தது. 


இப்போ தான் ‘லேசா லேசா’ வந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள 10 வருஷமாயிடுச்சு.. ஹீரோயினா 10 வருஷம்.. என்ன நினைக்கிறீங்க?

 
10 வருஷம்.. ம்ம்ம்ம்... என்னாலயும் தான் நம்ப முடியல. திரும்பி பாத்தா 'லேசா லேசா' படத்துல இப்பத்தான் நடிச்ச மாதிரியிருக்கு. ரொம்ப பெருமையா இருக்கு. 10 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். அவ்வளத்தையும் தாண்டி வந்திருக்கேன்.


அதுக்காக நான் எதோ சாதிச்சுட்டேன்னு நினைக்கல. இப்பவும் முதல் படம் மாதிரித்தான் படங்களை ஒத்துக்கிறேன். 



அதிமாக கமர்ஷியல் படங்களிலேயே நடிக்கிறீங்களே.. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் எப்போது பார்க்கலாம்?

 
கமர்ஷியல் படங்கள்ல அதிகமாக நடிச்சேன்னு நீங்க சொல்றது உண்மைத்தான். 'அபியும் நானும்' படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தானே. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படமும் கமர்ஷியல் படம் தான். ஆனால் கதை ஜெஸ்ஸியான என்னை சுத்தியே தான் நடக்கும். 


இப்போ 10 வருஷமாயிடுச்சு இல்லயா, இனிமேல் எனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிக்கலாம்னு இருக்கேன். 'ரம்'னு ஒரு படம்.. படம் வெளிவந்துச்சுன்னா அதுக்கப்பறம் இந்த மாதிரி கேள்விக்கு இடமே இருக்காது நினைக்கேன். 




’த்ரிஷாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்’, ‘ த்ரிஷாவுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு’ இப்படி அப்பப்ப கிசுகிசு வந்துகிட்டே தான் இருக்கு.. இப்படி நியூஸ் வரும்போது அதை எப்படி எடுத்துக்கறீங்க..?


 
(சிரித்துக் கொண்டே) பார்ப்பேன்.. படிப்பேன்.. திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்களா.. அப்படினு கூலாயிடுவேன். இப்பவா எழுதுறாங்க.. 10 வருஷமா எழுதிக்கிட்டே தான் இருக்காங்க. ஆனா அதுக்காக சோகமாக இருந்தா என்னோட படங்கள்ல அது தெரிய ஆரம்பிச்சுடும். அதனால ஜஸ்ட் படிச்சுட்டு போயிட்டே இருப்பேன். என்ன.. எங்கம்மா தான் ரொம்ப பயப்படுவாங்க. எனக்கு இதெல்லாம் பழகிடுச்சி. 


கல்யாணத்துக்கப்பறம் நடிக்கறது பத்தி உங்கள் எண்ணம்..?

 
இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ளயா.? கல்யாணத்துக்கப்பறம் நடிக்கிறதப் பத்தி யோசிக்கல. நல்ல ரோல் கிடைச்சா நடிக்கிற எண்ணத்துல தான் இருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்னு இப்ப சொல்ல முடியாது இல்லயா.. பாக்கலாம். 


புதுசுபுதுசா ஹீரோயின்ஸ் நிறைய பேர் தடதடன்னு வந்துகிட்டே இருக்காங்க.. இப்போ உங்களுக்கு competition பலமா?

 
கண்டிப்பா போட்டி தான். ஆனா ஆரோக்கியமான போட்டி. நிறையப் பேர் வர்றப்போ தான் நம்ம இடத்த தக்க வைச்சுக்கணும்னு பயம் இருக்கும். அதனால புதுசா ஏதவாது முயற்சி பண்ணலாம்னு யோசிப்போம். வித்தியாசமான கேரக்டர்ல நடிக்கணும்னு தோணும். எனக்கு போட்டி எப்போதுமே பிடிக்கும். 





தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகளிலும் நடிச்சுட்டீங்க.. சினிமால உங்க பெஸ்ட் பிரெண்ட் யார்? ஏன்?


 
எனக்கு பிரெண்ட்ஸ் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. ஒருத்தரப் பத்தி மட்டும் சொன்னா.. இன்னொருத்தர் மனசு கஷ்டப்படும். எனக்கு எல்லாருமே பெஸ்ட் பிரெண்ட்ஸ் தான். TRISHA ALWAYS LOVES HER FRIENDS. 



PETA - மீது இவ்வளவு அக்கரை.. ட்விட்டரில் கூட மிருகங்கள் நலத்துக்கு தான் முக்கியத்துவம்.. உங்கள் பிரபலத்தை நல்ல காரியத்துக்காக பயன்படுத்தறீங்க... எப்படி வந்தது இந்த எண்ணம்?


 
நான் சர்ச் பார்க் ஸ்கூல்ல படிக்கிறப்பவே எனக்கு நாய்க்குட்டிகள் மேல கொள்ளைப் ப்ரியம். ரோட்ல நாய் ஏதாவது அடிப்பட்டு கிடந்துச்சுன்னா உடனே தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடுவேன். அப்போ எங்க வீட்டுல ஒண்ணும் சொல்லல. அதனால அப்படியே பழகிடுச்சு. சர்ச் பார்க் ஸ்கூல்ல ஒரு Orphanage இருக்கும். அங்க போய் டைம் ஸ்பெண்ட் பண்றது எனக்கு பிடிக்கும். 



நம்மளால ஏதாவது நல்லது நடக்குதுன்னா அதுக்காக நம்மோட பிரபலத்தை பயன்படுத்துறது தப்பில்லயே. பிரபலமா இருக்கறது ஒரு பலம்.. அந்த பலத்தை பிரயோஜனமா பயன்படுத்தறேன். 



கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களோடும் ஜோடி சேர்ந்தாச்சு.. இன்னும் தனுஷ் பாக்கி இருக்கு.. எப்போ ’தனுஷ்-த்ரிஷா’ நடிக்கும்னு போஸ்டர் பாக்கலாம்?


 
யார் சொன்னா எனக்கு தனுஷ் கூட நடிக்க வாய்ப்பு வரலனு. 'ஆடுகளம்' நான் நடிச்சிருக்க வேண்டிய படம் தான். அவங்க கால்ஷீட் கேட்டப்ப நான் 'கட்டா மிட்டா' இந்தி படத்துக்காக மொத்தமா தேதிகள் ஒதுக்கி கொடுத்ததுனால நடிக்க முடியல. என்னோட முக்கியமான நண்பர்கள் ஒருத்தர் தனுஷ். நல்ல கதை வந்தா, த்ரிஷா உடனே ரெடி. 





தமிழ் சினிமாவின் டிரெண்டை கவனிக்கறீங்களா..? காமெடிப் படங்கள் கலெக்‌ஷனை அள்ளுது.. சமீபத்தில் நீங்க ரசிச்ச படம் எது?

 
உண்மைய சொல்லவா.. எனக்கு படம் பாக்கவே டைமில்லை. கடைசியாக கமல் சார் தீவிர ரசிகைங்கறதுனால 'விஸ்வரூபம்' பாத்தேன். அதனால இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல. 


இப்போ என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க? என்னென்ன படங்கள் நடிக்க ஒத்துக்கிட்டு இருக்கீங்க?


 
'பூலோகம்', 'என்றென்றும் புன்னகை' படங்கள் முடிச்சுட்டேன். ரெண்டுமே பிரமாதமா வந்திருக்கு. அப்புறம் தெலுங்குல எம்.எஸ்.ராஜு சார் டைரக்‌ஷன்ல 'RUM (Rambha Urvasi Menaka)' அப்படிங்கற படத்துல நடிக்கிறேன். அந்தப்படம் வந்தா த்ரிஷா ரேஞ்சே வேற. 


தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்ல சக்கை போடு போடறாங்க.. எப்போ 100 கோடி கலெக்‌ஷன் படத்துல த்ரிஷாவை பாக்கறது?

 
பாலிவுட்ல நடிக்கணும்னா மும்பைக்கு வீட்டை மாத்தணும், அங்க PRO வைச்சு வேலைகள் புதுசா தொடங்கணும். எனக்கு இப்போ இருக்கற இடமே போதுமானதா நினைக்கிறேன். அதுமட்டுமல்லாம, பிறந்து, வளர்ந்து, படிச்சு, நடிக்க ஆரம்பிச்சது எல்லாமே சென்னைல தான். நான் எப்படி மும்பைக்கு போவேன் சொல்லுங்க. யாராலயும் இந்த படம் 100 கோடி கலெக்ட் பண்ணும்னு மொதல்லயே கண்டுபிடிக்க முடியாது. நான் நடிக்கற படம் 100 கோடி கலெக்ட் பண்ணனும்னு எல்லாரையும் மாதிரி எனக்கும் ஆசை இருக்கு


.
ராணா - த்ரிஷா காதல் செய்திகள் திரும்பவும் வலம் வர ஆரம்பிச்சுடுச்சே?


 
இந்த கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி சொல்லியே போர் அடிச்சுடுச்சு போங்க. சின்ன வயசுலேந்தே நாங்க ரெண்டு பேருமே ப்ரெண்ட்ஸ். இப்பவும் ப்ரெண்ட்ஸ் தான். 



சமீபத்தில நீங்க பார்ல இருக்குற மாதிரி படங்கள் போட்டு செய்திகள் நிறைய..


 
( கேள்வியை முடிக்கும் முன்பே ) அவங்களுக்கு தினமும் ஏதாவது புதுசா புதுசா செய்தி போடணும். ரூம்ல உட்காந்து யோசிச்சு ரூமர்களை கிரியேட் பண்ணி அதை பரப்புற வேலையை பாக்காம, ஏதாவது உருப்படியா செய்ய சொல்லுங்க. நடிகர்கள், நடிகைகள் எல்லாரும் ரொம்ப பிஸியாதான் இருப்பாங்க. ஆனா சட்டப்படி கேஸ் ஃபைல் பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதுங்கிறதா மனசுல வச்சுக்கோங்க. இது தான் பொய்யான தகவல்களை பரப்புறவங்களுக்கு என்னோட வார்னிங் மெசேஜ். 


நன்றி - த ஹிந்து தமிழ் 


Friday, February 08, 2013

குறும்பட இயக்குநர்களால் தமிழ் சினிமா சீராகுமா? சீரழியுமா? - ஆடுகளம் வெற்றி மாறன் பேட்டி

இது சினிமாவுக்கு நல்லதா...கெட்டதா ?

எஸ்.கலீல்ராஜா படம்: ஆ.வின்சென்ட் பால் 
தலை எங்கே என்று தெரியாத அளவுக்கு முகத்தைச் சுற்றி முடி வளர்ந்திருக்கும் புறா, ஆளைப் பார்த்ததும் படபடக்கும் பந்தயப் புறா, அச்சு அசலாக கோழியைப் போலவே இருக்கும் ஃபேன்ஸி புறா, பின் வாலைச் சிலிர்த்துக்கொண்டு அலையும் வெண்புறா என இயக்குநர் வெற்றிமாறனின் அலுவலகமே புறாக்களாலும், அதன் சத்தங்களாலும் நிரம்பியிருக்கிறது.



''புறா வளர்க்கணும்னு ரொம்ப ஆசை. அதிலும் குறிப்பா பந்தயப் புறா. அப்போ வீட்ல கேட்டப்ப திட்டு விழுந்துச்சு. இப்போதான் சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்ல... வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். எல்லாமே செம காஸ்ட்லி புறாக்கள். பார்க்கிறவங்களாம், 'என்ன... பந்தயப் புறா வெச்சுப் படம் எடுக்கப்போறீங்களா?’னு கேட்குறாங்க. இதுகளுக்குச் செலவு பண்ணின பணத்துக்கு, ரெண்டு படம் எடுத்தாத்தான் சம்பாதிக்க முடியும் போல!'' - கறுப்புத் தாடிக்குள் இருந்து பளீரெனச் சிரிக்கிறார் வெற்றிமாறன்.  


''சிம்புவோட சேர்ந்து 'வட சென்னை’ பண்ணப்போறதா சொன்னீங்க... ஒண்ணும் சத்தமே காணோம்?''



''எல்லாரும் என்ன பிரச்னைனு கேட்கிறாங்க. எனக்கும் சிம்புவுக்கும் நடுவுல எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கோம். சிம்புவோட டேட்ஸ் கிடைக்கிறதுலதான் பிரச்னை. சீக்கிரமே எங்க காம்பினேஷன்ல படம் ரிலீஸ் ஆகும்.''


''தனுஷை வெச்சுத் திரும்பவும் படம் பண்றீங்கபோல?''



''ஆமா. 'ஆடுகளம்’ வந்து ரெண்டு வருஷமாச்சு. நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் மூணு வருஷம் பக்கம் ஆச்சு. 'ஆடுகளம்’ முடிஞ்சதுமே நானும் தனுஷ§ம் வேற ஒரு படம் பண்ணிட்டு திரும்ப சேர்ந்து ஒரு படம் பண்றதுன்னு முடிவுபண்ணியிருந்தோம். தனுஷ் இல்லாம ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணேன். பட்ஜெட் செட் ஆகலை. இன்னொரு ஸ்க்ரிப்ட் பண்ண ஆரம்பிச்சதுமே, 'அதுக்கு தனுஷ்தான் ஃபிட் ஆவார்’னு தோணுச்சு. 'நாம நினைச்சது நடக்காதுபோல. நான் பண்ண ஸ்க்ரிப்ட் உங்களுக்குனு பண்ண மாதிரி இருக்கு’ன்னு சொன்னேன். கதை கேட்டுட்டு, 'நாமளே பண்ணலாம்’னு சொன்னார். மே மாசத்துல இருந்து ஷூட்டிங் போறோம்.''



''ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்ளோ இடைவெளி எடுத்துக்கிறீங்க?''



''முப்பது வருஷம் நாம கத்துக்கிட்ட விஷயங்களை ஸ்க்ரிப்ட்டாப் பண்ணி முதல் படம் இயக்கிருவோம். அதுக்கு அப்புறம் புதுசா ஒண்ணு கத்துக்கணும். புதுசா ஒரு ஏரியா தெரிஞ்சுக்கணும்னா, அதுக்கு ஒரு வருஷம் தேவைப்படுது. அப்புறம் அதைப் படமா எடுக்க இன்னொரு வருஷம் தேவைப்படுது. இது என் ஸ்டைல். இது ஆளுக்கேத்த மாதிரி மாறலாம். என் ஃபிலிம் கேரியர்ல எத்தனை படங்கள் இயக்கினேன்னு சொல்றதைவிட, என்னென்ன படங்கள் இயக் கினேன்னுதான் சொல்ல விரும்புறேன். எனக்கு இன்னும் முப்பது வருஷம் கேரியர் இருக்குன்னா மொத்தமா 15 படங்கள்தான் இயக்குவேன். அது போதும் எனக்கு!''



'' 'அதிர்வு’ன்னு ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சு புத்தகம் வெளியிட்டிருக்கீங்க. வாழ்த்துகள்!''



''நான் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பேன். எல்லா மொழிகளிலும் வர்ற புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருவாங்க. அதனால உலகத்தோட விதவிதமான கலாசாரம், மொழி, வாழ்க்கை தொடர்பான சம்பவங்களை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும். நான் படிச்சுட்டு பிரமிச்சுப்போன நாவல்கள் பத்தி என் நண்பர்கள்கிட்ட சொன்னா, அவங்களுக்கு அது தெரியாம இருக்கும். ஏன்னா, பெரும்பாலும் எல்லா ரும் தமிழ்ல நாவல் படிக்கிறவங்களா இருந்தாங்க. 



அந்த நாவல்கள் தமிழ்ல வந்திருக்கான்னு விசாரிச்சா, அப்படி ஒரு முயற்சி நடக்கவே இல்லைன்னு தெரிஞ்சது. கல்லூரிக் காலத்தில் அலெக்ஸ் ஹேலி எழுதின 'ஸிஷீஷீts: ஜிலீமீ ஷிணீரீணீ ஷீயீ ணீஸீ கினீமீக்ஷீவீநீணீஸீ திணீனீவீறீஹ்’ புத்தகம் படிச்சேன். 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்காவில் அடிமையா விற்கப்படுவதும் அதைத் தொடரும் சம்பவங்களும்தான் புத்தகம். அந்தக் கதை வாழ்க்கை மீதான என் பார்வையையே மாத்தி அமைச்சது. அந்த மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகம் என்னைச் செதுக்குச்சு. அப்போ எல்லாம் 'ஐயோ... இந்தப் புத்தகம் தமிழ்ல இல்லையே’ன்னு நிறைய வருத்தப்பட்டிருக்கேன். கடைசியா என்னை உலுக்கின புத்தகத்தை 'ஓநாய் குலச்சின்னம்’னு மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கேன். முயற்சிகள் இன்னும் தொடரும்.''



''இப்போ தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கு?''  




''வித்தியாசமா இருக்கு. 2002-க்கு முன்னாடி இருந்த சூழல், 2003-க்கு அப்புறம் இல்லை. ஏன்னா, அப்போதான் உலக சினிமாக்களோட திருட்டு டி.வி.டி. பர்மா பஜார்ல சுலபமா கிடைக்க ஆரம்பிச்சது. அதுதான் தமிழ் சினிமா போக்கையே அப்போ மாத்துச்சு. அதுக்கு முன்னாடி ஃபிலிம் சொசைட்டியில மாசத்துக்கு நாலஞ்சு உலக சினிமாக்கள்தான் பார்க்க முடியும். காதல், ஆட்டோகிராஃப் படங்கள் சொல்லப்பட்ட விதத்துக்கு உலக சினிமாக்கள் உண்டாக்கிய தாக்கம்தான் பலமான காரணம். 



அதே 2008-க்கு அடுத்து வந்த குறும்படக் கலாசாரம் தமிழ் சினிமாவை வேற பக்கம் திருப்பிவிட்டுருச்சு. யார்கிட்டேயும் உதவியாளரா இல்லாத, எந்தப் பயமும் இல்லாத புதுப் புது இளைஞர்கள் உள்ளே வர்றாங்க. பல வருஷமா உதவி இயக்குநர்களா இருக்கிறவங்களுக்கு நிறையப் பயம் இருக்கும். இந்த இளைஞர்களிடம் அது இல்லை. தைரியமா மோதி ஜெயிக்கிறாங்க. இது தமிழ் சினிமாவை நல்ல நிலைமைக்குக் கொண்டுபோகுமா... இல்லை மோசமான இடத்துக்குக் கொண்டுபோகுமானு தெரியலை. நான் அதைப் பத்தி யோசிக்கவும் இல்லை. பேசவும் இல்லை. அமைதியாக் கவனிச்சுட்டு இருக்கேன்!''


 நன்றி - விகடன்