Showing posts with label CAPTAIN. Show all posts
Showing posts with label CAPTAIN. Show all posts

Wednesday, February 27, 2013

தஞ்சாவூரில் விஜயகாந்துக்கு செம அடி- கட்சி எம்.எல்.ஏ.வே தாக்கியதால்.

  1. RT ": கருப்பு எம்.ஜி.ஆர், ஏழைகளின் பாதுகாவலன் மீது தொடுத்த வன்முறையை கண்டிக்கிறோம்! "
  2. அடிச்சது நண்பனா இருந்தா வெளியே சொல்லக்கூடாது #ஆனாலும் வலிக்குதே
  3. எல்லாரும் உடன் நிறுத்திக்குங்க சப்போர்ட் பண்ணுறன் எண்டு DP எல்லாம் மாத்தவேண்டாம்
  4. கருப்பு எம்.ஜி.ஆர், ஏழைகளின் பாதுகாவலன் மீது தொடுத்த வன்முறையை கண்டிக்கிறோம்!
  5. விஜயகாந்துக்கு என்னாச்சோ,எதோச்சோ,பயந்து போயி டிவி பாக்க வீட்டுக்கு கிளம்பிட்டாரு எங்க ஆபீஸ்ல ஒருத்தரு
  6. இதுக்கு காரணம் பாக்கிஸ்தான் தான்,கேப்டன் அதிரடி பேட்டி
  7. கண்டிப்பா அவன் இந்த ஊரா மட்டும் சேர்ந்தவனா இருக்கமாட்டான்
  8. ": ஒரு கட்சித்தலைவரை அடிப்பது என்பது மோசமான முன் உதாரணம்-கண்டனங்கள்"
  9. RT ": ஓரு ராணுவத்துக்கு கூட வேணும்னே மோதியிருக்கான். . .
  10. பீசு பீசா கிழிக்கும்போது ஏசு போல சிரிப்பப்பாருடா! இவன் பேருக்குள்ளே காந்தம் இருக்கு உண்மைதானடா!
  11. இவய்ங்க எப்பவுமே இப்படித்தான். அடிச்சிகிட்டே இருப்பாய்ங்க. நீங்க வாங்க பாஸ்! இதுக்கெல்லாம் பயந்தா தொழில்பண்ண முடியுமா?
  12. RT தம்பி கேப்டன் மீது விழுந்த அடி.. தமிழின் மீது விழுந்த அடி.. கலைஞர் கண்ணீர் பேட்டி "
  13. அடச் சே கூட்டத்த வெளக்கும்போது அந்த MLA கை தெரியாம கேப்டன் மேல பட்டு இருக்குயா இது தெரியாம னாம்... பல்பு
  14. ரோபுலு!! RT ": அண்ணி இல்லாத நேரமா பாத்து தான் தட்டிருக்கானுக! ரேஸ்கெல்ஸ்! "
  15. ஒரே கட்சில இருந்தா வாக்கிங் போகும்போது போட்டுத் தள்ளனும்டா போட்டப் பசங்களா இப்டி பப்ளிக்ல அடிக்க கூடாதுடா
  16. தாக்குற கேப்டனே தாக்கப்பட்டாரா # இன்னைக்கி வலிய மறக்க கூடுதலா ரெண்டு ரௌண்ட் போங்க கேப்டன் :))
  17. வன்முறை இல்லாத மாநிலத்திற்கு (தமிழ் நாடு தவிர்த்து) மாற போகிறேன். -கேப்டன் #குசும்பு  
  18. ஓரு ராணுவத்துக்கு கூட வேணும்னே மோதியிருக்கான். . .
  19. தாமிரபரணி மனோரமா குரலில் : உய்ய்ய்ய்யா, இது அந்த அடி இல்லைய்யா, ஏதோ தள்ளுமுள்ளு அடி போல இருக்குய்ய்யா
  20. இஸ்தலக்கடி லாலசுந்தரி கோலா கொப்பறக் கொய்யா
  21. காலில் விழுந்தாலும் கலாய்க்கிறாங்க...கேள்வி கேட்டாலும் கலாய்க்கிறாங்க...அடிச்சாலும் .அடிபட்டாலும் கலாய்க்கிறாங்க..
  22. "சொல்லால் அடித்த சுந்தரி "ன்னு பாடினவரு, அவர போய்.. எப்படி மனசு வந்தது அந்த பாவிக்கு
  23. 9ரவுண்டு அடிச்ச உங்களையே ஓருத்தன்.! சோ சேடு,சோ சேடு
  24. மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி, வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
  25. தென்பாண்டி சீமையிலே ,தேரோடும் வீதியிலே , யானை போல வந்தவனே , யார் அடிச்சாரோ ?? யார் அடிச்சாரோ !!
  26. தமிழ்நாட்டுல எனக்கு பிடிக்காத ஓரே ஊரு தஞ்சாவூரு . . ஆங்
  27. வரணும், நீங்க பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்
  28. தலைவா நீ ஒண்ணும் கவலைப்படாத உனக்காக இந்த தொண்டன் டீ குடிப்பான்
  29. புடிங்க சார் சப்போர்ட் கேப்டன் போட்டவங்ளளாம் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்....:))))
  30. சும்மாவே அவரு வீங்கிப்போய் தான் இருக்காரு அவர மேலும் வீங்க வச்சுட்டானுவ
  31. புதன்கிழமை கேப்டன் விரதம் இருக்கிறத ரகசியமா தெரிஞ்சிக்கிட்டு வேலைய காட்டிட்டானுக முடிஞ்ச நாளைக்கு ஏரியா பக்கம் வாடா வாடா
  32. சுவத்து மேல கால வச்ச, கேப்டன் மேலயே கைய வச்சிட்டீங்களேடா
  33. குடிக்குறதுக்கு ரோல்மாடலே கேப்டன் தான்
  34. இந்தா ஆரம்பிச்சிட்டாய்ங்கல்ல டேக!இனி பொழுது போயிரும்!
  35. கேப்டனை நாமளே அடிச்சா,அந்த தீவிரவாதிங்களுக்கு குளிர் விட்டுடாது? நாடு பாதிக்கப்படாது?எப்படி வல்லரசு ஆகும் இந்தியா?


     diSki -

    Vijayakanth attacked -Junior Vikatan

    http://www.youtube.com/watch?v=X1tsDGBVsjY&feature=youtu.be

Saturday, November 10, 2012

கேப்டனுக்கு தமிழருவி மணியனின் பகிரங்க எச்சரிக்கைக்கடிதம்

விவேகம் இழக்கலாமா விஜயகாந்த்..?

ன்பிற்கினிய விஜயகாந்த் அவர்களுக்கு...



வணக்கம் வளர்க நலம்.


நீங்கள் அமைதியாக ஓர் இடத்தில் தனித்திருந்து ஆத்ம​சோதனை நடத்த வேண்டிய நேரம் இது. சிலர் எவ்வளவு முயன்று தேடினாலும் எதுவும் எளிதில் கிடைப்பது இல்லை. சிலருக்கு எளிதாகக் கிடைத்து விட் டாலும், கிடைத்ததை நிரந்தரமாகத் தக்க​வைத்துக் கொள்வதற்குத் தெரிவது இல்லை.



 சிகரத்தை அடைவது சாதனை இல்லை. அங்கேயே நீடித்து நிற்பதுதான் உண்மையில் உயர்ந்த சாதனை. ஒவ்வொரு சிகரத்தின் பக்கத்திலும் பயங்கரமான ஒரு செங்குத்துச் சரிவு இருக்கும். சிறிது நிலை தடுமாறினாலும் பள்ளமே படுக்கையாகிவிடும். நீங்கள் நிலை தடுமாறுவதைக் கண்டு ஏற்பட்ட கவலையில் பிறந்ததுதான் இந்தக் கடிதம்.



உங்கள் கட்சியில் இருக்கும் அனை​வரும் அடக்கத்துடன் கைகட்டி நிற்க வேண்டும் என்று நீங்கள் வெளிப்படை​யாகவே ஆசைப்​படுகிறீர்கள். கட்சிக்கு வெளியே இருப்பவர்களும் உங்கள் விருப்பு வெறுப்புக்கேற்பவே நடந்துகொள்ள வேண்​டும் என்று உள்ளுக்குள் எதிர்பார்க்கிறீர்கள். இந்த எதிர்பார்ப்புத்தான் உங்களுடைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடித்​தளம்.



இராமானுஜருக்கு வடுகநம்பி என்று ஒரு சீடர் இருந்தார். ஒருநாள் இருவரும் காவிரியைக் கடக்கும்போது, இராமானுஜர் வழிபட்ட சிலையையும், இராமானுஜரின் பாத அணிகளையும் ஒரே மூட்டையாகக் கட்டினார் வடுகநம்பி. பதறிப்போன இராமானு​ஜரிடம் சீடர் சொன்னார்: 'உங்கள் பெருமாள் உங்களுக்கு உயர்ந்தவர். என்னுடைய பெருமான் எனக்கு உயர்ந்தவர்’ என்று. இன்றைய அரசியலில் தலைவர்களாக வலம் வரும் நீங்கள் அனைவரும் வடுக நம்பியின் வாரிசுகளைத்தான் வர வேற்கிறீர்கள்!



மதுரையில் செப்டம்பர் 14, 2005 அன்று தே.மு.தி.க-வைத் தொடங்கிய​போது, உங்களை யாரும் பெரிதாகப் பொருட்​படுத்த​வில்லை. கூடிய கூட்டம்கூட உங்களைத் திரையில் பார்த்துக் கைதட்டிய ரசிகர் பட்டாளம் என்றுதான் பலர் கணக்குப் போட்டனர். ஆனால், 2006-சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட் பாளர்களை நிறுத்தி, ஓர் இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றாலும், உங்கள் கட்சிக்குக் கிடைத்த 10 சதவிகிதம் வாக்குகள் பல அரசியல்வாதிகளின் விழிகளை வியப்பால் விரிய வைத்தன. அடுத்து வந்த நாடா ளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி பெற்ற 10.1 சதவிகிதம் வாக்குகள் தமிழகத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் சக்தி என்பதை அனைவருக்கும் உணர்த்​தியது.




'மக்களோடும் கடவுளோடும் மட்டுமே கூட்டணி’ என்று சலிப்​பில்லாமல் சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் 2011-சட்ட​மன்றத் தேர்தலில் ஜெயலலிதா​வுடன் சேர்ந்து நின்றபோது, அதை ஒரு சந்தர்ப்ப​வாதம் என்று வாக்காளர்கள் சந்தேகிக்காமல் வரவேற்கவே செய்தனர். அதற்கு ஒரே காரணம், கருணாநிதி பரிவாரத்திடம் இருந்து தமிழகத்தை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று வாக்கா​ளர்களின் தவிப்பும் தாகமும்தான்.



கருணாநிதியின் குடும்ப அரசியல் மீது மக்களுக்கு விளைந்த வெறுப்பும் விரக்தியும்தான் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கி, யாரும் எதிர்பாராத நிலையில் உங்களை  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக்கிய முக்கியக் காரணி என்பதை நீங்கள் இருவருமே உணராமற்போனதுதான் அரசியல் சோகம். 'என்னால்தான் நீங்கள் முதல்வரானீர்கள்’ என்று ஜெயலலிதாவைப் பார்த்து நீங்கள் முழங்குவதும், 'என்னால்தான் உங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஏற்றம்’ கிடைத்தது என்று ஜெயலலிதா ஏளனம் செய்வதும் முற்றிலும் அர்த்தமற்ற ஆணவத்தின் வெளிப்பாடு.



கூட்டணி அமைப்பதே ஒரு கட்சி இன்னொரு கட்சியால் பயன்பெற வேண்டும் என்பதற்​காகத்தானே? ஜெயலலிதாவுடன் நீங்கள் சேர்ந்திருக்கா விட்டால், நிச்சயம் 29 தொகுதிகளில் உங்கள் கட்சி வென்றிருக்காது. உங்கள் கூட்டணி அமையாமற் போயிருந்தால், வாக்குகள் சிதறியிருக்கும். அ.இ.அ.தி.மு.க. 150 இடங்களை அடைந்திருக்காது. ஆனால், தட்டுத் தடுமாறியாவது அது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும். அந்த நிலையில் நீங்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றிருக்க முடியாது. இந்த உண்மை உங்களுக்கு ஏன் புரியவில்லை?



ஜெயலலிதாவை முதல்வர் என்ற முறையில் நீங்கள் மதிக்கப் பழகவில்லை. உங்களை எதிர்க் கட்சித் தலைவர் என்ற மரியாதையுடன் நடத்த ஜெய லலிதாவுக்கு மனம் வரவில்லை. விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் முதல்வருக்கு இல்லை. பக்குவமாய் விமர்சிக்கும் பாங்கு உங்களுக்கு வாய்க்கவில்லை. இந்தக் கொடுமைக்கு, உங்கள் இருவருக்கும் வாக் களித்தவர்கள் எங்கேபோய் முட்டிக்கொள்வது? 'நான் எப்படி ஒருவருக்கு அடிமையாக இருக்க முடியாதோ, அதே போன்றுதான் யாருக்கும் எஜ மானராகவும் இருக்கவியலாது’ என்றார் ஆபிரகாம் லிங்கன். ஆனால், நீங்கள் இருவருமே எல்லாருக்கும் எஜமானர்களாகவே இருக்க ஆசைப்படுகிறீர்கள்.



திரைப்பட உலகில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீங்கள் தொடக்க நிலையில் படத்தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு பணிவாக நடந்திருப்பீர்கள். 'தூரத்து இடிமுழக்கம்’ நடிக்கும்​போது காட்டிய பணிவு 'கேப்டன் பிரபாகரன்’ வெற்றிக்குப் பிறகும் இருந்திருந்தால் அதுதான் சிறப்பு. அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தபோது பத்திரிகையாளரிடம் காட்டிய பாசம், எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றம் பெற்ற பிறகும் நீடித்து இருந்தால் அதற்குப் பெயர்தான் தலைமைப்பண்பு.



சென்னை விமான நிலையத்தில் பத்திரிகை​யாளர்கள் அப்படி என்ன கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட் டனர்? ஏன் அந்தப் பதற்றம்? எதற்கு அந்த அனாவசிய ஆவேசம்? அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையில் நடக்கும் போட்டியில் அறிவைத் துறந்து, உணர்ச்சிக்கு ஆட்படுவது அரசியல் தலைமைக்கு அழகல்லவே! ஏகவசனத்தில் உரத்த குரலில் ஓங்கிப் பேசுவது பொதுஇடத்தில் கடைப்பிடிக்கக்கூடிய நயத்தகு நாகரிகமா கேப்டன்?




 'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று அடைமொழி போட்டுக்கொள்ள ஆசைப்படும் நீங்கள், எம்.ஜி.ஆரிடம் எதையும் கற்கவில்லையே. கூடப்பழகியவர்களுக்கு எம்.ஜி.ஆரின் கோபம் எப்படிப்பட்டது என்று நன்றாகத் தெரியும். இராமா​வரம் தோட்டத்தில் காட்டிய கோபத்தை எம்.ஜி.ஆர். பொதுவிடங்களில் உங்களைப்போல் ஒரு நாளாவது மக்களிடையே காட்டியது உண்டா? உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளுக்கு ஆடை கட்டாமல் அப்படியே நிர்வாணமாக வெளிப்படுத்துவதை இனியாவது நீங்கள் விட்டுவிட வேண்டும். நீங்கள் கவிஞர் இல்லை; மக்களின் விதி எழுத விரும்பும் ஒரு கட்சியின் தலைவர்.




உங்களுடன் இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் அரவணைப்பில் ஆதாயம் அடைவதற்கு ஆசைப்பட்டு இடம் மாற முடிவெடுத்து விட்டனர். இதில் அதிர்ச்சி அடைவதற்கோ, ஆச்சர்யப்​படுவதற்கோ என்ன இருக்கிறது? மதுரை சுந்தரராஜனும், மைக்கேல் ராயப்பனும், நடிகர் அருண்பாண்டியனும் காந்தியம் வளர்க்கவா உங்கள் கட்சிக்கு வந்தனர்?



ஏழைக்கும் பாழைக்கும், அனாதைக்கும் அகதிக்கும் வாழ்வில் ஏற்றம் தருவதற்காகவா அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார்கள்? உங்களோடு இன்று எஞ்சி இருப்பவர்களில் எத்தனை பேர் நாளை பழுத்த மரம் நோக்கிப் பறக்கப் போகின்றவர்களோ? சித்தாந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் ஆனவர்களே கட்சி மாறும் காலமல்லவா இது! பதவி, அதன்மூலம் வந்து சேரும் அதிகாரம், அந்த அதிகாரத்தைக்கொண்டு கொள்ளை​யடிக்கும் கள்ளப்பணம் - இதுதானே இன்று நம் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம்! சுயநலம்தானே இவர்களின் மூல மந்திரம்!



அது சரி... நீங்கள் ஏன் கட்சி அரசியலில் கால் பதித்தீர்கள்? கருணா​நிதியிடம் இருந்தும் ஜெயலலிதாவிடம் இருந்தும் தமிழக மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவா? ஊழலற்ற அரசியல் சமூகத்தை உருவாக்கவா? நேர்மை சார்ந்த நல்லாட்சியை நடைமுறைப்படுத்தவா? இவை​தான் உங்கள் உண்மையான நோக்கமெனில், வேட்பாளர் தேர்வில் எந்த வகையில் நீங்கள் மாறுபட்டீர்கள்?




சுந்தரராஜன், உங்கள் நெடுநாள் நண்பர். அருண்பாண்டியன், உங்களிடம் நட்புப் பாராட்டிய நடிகர். மைக்கேல் ராயப்பன், பணபலம் படைத்த படத் தயாரிப்பாளர். மற்றவர்கள் உங்கள் ரசிகர் மன்றத் தளபதிகள். காமராஜரைப் போல் தன்னலமற்றவர், கக்கனைப் போல் ஊழலற்றவர், ஜீவாவைப் போல் ஏழைகளின் தொண்டர், பெரியாரைப் போல் சமூகப் போராளி என்ற ஒவ்வொருவரையும் தேர்ந்து தெளித்தா தேர்தல் களத்தில் நிறுத்தினீர்கள்? இல்லையே! கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதைச் செய்கிறார்களோ, அதையேதான் நீங்களும் செய்வீர்கள் என்றால் எங்களுக்கு எதற்கு இன்னொரு தே.மு.தி.க.? யோசியுங்கள் கேப்டன்!




குறைந்தபட்சம் கோபப்படாத மனிதராகவாவது உங்களால் இருக்க முடிகிறதா? சட்டப் பேரவையில் அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் உங்களிடம் நடந்துகொண்ட விதம் மெச்சத் தகுந்ததாய் அமையவில்லை என்பது உண்மை. அதற்காக நீங்கள் நாக்கைத் துருத்தியது நியாயமா? பத்திரிகையாளரிடம் பகைமையைக் காட்டியது பண்பாடா? தேர்தல் பிரசாரத்தில் சொந்த வேட்​பாளர் தலையில் அடிப்பது அரசியல் நாகரிகமா? 'ஜெயலலிதாவை உங்கள் எம்.எல்.ஏ-க்கள் பார்த்தது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டதற்குப் பதற்றமின்றி அரசியல் ரீதியாக நீங்கள் பதில் சொல்லியிருக்கலாமே.



 கருணாநிதி ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன்  கட்சி மாறியதால், அ.இ.அ.தி.மு.க. அழிந்து விட்டதா? அதற்குப் பிறகுதானே அது ஆட்சிக்கு வந்தது. ஈரோடு முத்துசாமியும், சேலம் செல்வகணபதியும் இடம் மாறியதால், அ.தி.மு.க-வின் தடம் நகர்ந்து விட்டதா? சந்தர்ப்பவாதிகள் செல்வதால், எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க ஆளும் கட்சி நடத்தும் அரசியல் சூழ்ச்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என்று சொல்லிவிட்டு விமானம் ஏறியிருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லையே!



'சென்ற முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் குமாரதாஸ், ஈஸ்வரன், ஹக்கீம் ஆகிய மூவரும் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அவர்கள் 2006- தேர்தலில் மீண்டும் நிற்பதற்குக் கூட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கவில்லை. இன்று அவர்களுடைய முகவரியை யார் அறிவார்?



 இன்று இங்கிருந்து செல்ல நினைப்பவர்கள் நாளை என்ன ஆவார்கள் என்பதற்கு அந்த மூவரை​ விடவும் சரியான சான்று தேவையா?’ என்று உங்கள் கட்சியில் சபலத்துக்கு உட்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு 'டெங்கு’ காய்ச்சல் பற்றிப் பேசுவதால் என்ன பயன்?



தலைமைக்கு வேண்டிய முதல் பண்பு புலனடக்கம். ஆண்டவனை 'ஐந்தவித்தான்’ என்கிறார் வள்ளுவர். இன்று ஆள்பவர்களும், நாளை ஆள்வதற்கு ஆசைப்படுபவர்களும் ஐந்து புலன்களையும் அடக்கியாள முதலில் முயல வேண்டும். மண்ணை வென்ற மாவீரன் அலெக்சாண்டரைவிட, தன்னை வென்ற ஞானி டயோஜனீசிடம் தான் மக்கள் மரியாதை செலுத்தினர். 'உங்களில் பெரியவனாய் இருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாய் இருக்கக் கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனே உயர்த்தப்படுவான்’ என்று கர்த்தர் சொன்னதை நீங்கள் உட்பட எந்த அரசியல் தலைவரும் உணர்ந்த​தாகத் தெரியவில்லையே.



இராமானுஜர் திருப்பதி மலையை அடைந்தபோது, அவரை வரவேற்க அவருடைய ஞானகுரு திருமலை பெரியநம்பி நேரில் வந்து வரவேற்றார். 'நீங்கள் ஏன் வந்தீர்கள்? யாராவது ஒரு சிறியவரை அனுப்பி வைத்திருக்கலாமே’ என்று இராமானுஜர் சொன்னபோது, 'என்னைவிட சிறியவன் இந்த மலையில் வேறு யாரும் இல்லையே’ என்றார் பெரியநம்பி. நீங்கள் எப்போது பெரிய நம்பியாக மாறப்போகிறீர்கள்?



சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்​களிடம் 'ருத்ரதாண்டவம்’ நடத்தி விட்டு மதுரைக்குச் சென்ற நீங்கள், இஸ்லாமியரின் தியாகத் திருநாள் விழாவில் தலையில் குல்லாய் தரித்தபடி உரையாற்றிய கோலம் கண்டு  சிரிப்புத்தான் வந்தது. வாக்குகளைப் பெறுவதற்கு எந்த வேடமிட்டும் நடிப்பதில் நம் தலைவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை. நபிகளார் அரேபிய மக்களின் அதிபராக இருந்த போதும், அறுந்துபோன தம் காலணியைத் தாமே சீர்செய்து கொண்டவர்; கந்தலாகி விட்ட கம்பளி ஆடையைத் தாமே தைத்துக் கொண்டவர்;



தமது மண் குடிசையைத் தம் கைகளால் சுத்தம் செய்தவர்; அவரது குடும்பம் பல இரவுகள் பசித்த வயிற்றுடன் படுக்கைக்குப் போகும்படி அவரு​டைய வாழ்க்கையில் வறுமை குடி​கொண்டிருந்தது. அவர் கடைசி மூச்சை விட்டபோது, அவர் அணிந்​திருந்த ஆடையில் பல ஒட்டுகள் போடப்பட்டிருந்தன. தலைமை ஏற்பவர் எளிமையாகவும், ஏழைகளின் பிரதி நிதியாக​வும், அகத்திலும் புறத்திலும் உண்மையாகவும் நேர்மை​யாகவும் நபிக​ளாரைப் போன்று நடக்க​வேண்டும் என்று உணராமல், தலையில் தொப்பி வைப்பதும், நோன்புக் கஞ்சி குடிப்பதும் போலி நாடகம் இல்லையா?



போகட்டும். தூய அன்போடும், நல்ல நட்போடும் உங்களுக்கு ஒன்று சொல்ல விழைகிறேன். நீங்கள் மார்க்ஸைப் போன்று மாபெரும் சிந்தனையாளர் என்றோ, காந்தியைப் போன்று சத்திய சோதனையில் ஈடுபட்டிருப்பவர் என்றோ, பெரியாரைப் போன்று புரட்சியாளர் என்றோ, அம்பேத்கரைப் போன்று அறிவாயுதம் ஏந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக அல்லும் பகலும் அயராது உழைப்​பவர் என்றோ, தமிழக வாக்காளர்களில் 10 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை.



 இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. உங்கள் தலைமையில் மலரும் என்பதுதான் அவர்​களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் நீங்களோ, உங்கள் தளபதிகளோ, எந்தவகையிலும் மாற்றாக வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் உங்கள் நடைமுறைகள் நிரூபித்து வருகின்றன. தனித்திருந்து யோசியுங்கள். தவறுகள் புலப்படும். இனியாவது புதிய பாதையில் பயணம் புறப்படுங்கள். அதற்கு முன்பு கர்த்தர் சொன்னதைக் கவனத்தில் நிறுத்துங்கள். ''வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது. வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.’



- என்றும் அன்புடன்


தமிழருவி மணியன் 


 நன்றி 0 ஜூ வி 

Wednesday, November 07, 2012

முரசு சின்னத்தை முடக்கும் முயற்சியில் ஜெ வின் மாஸ்டர் பிளான்

திகைப்பில் தே.மு.தி..

மூழ்குகிறதா கேப்டன் ஷிப்!

ப்ரியன்

‘கல்கி’ 7.10.12 இதழ்பாலிடிக்ஸ் பஜார்பகுதியில்கேப்டனுக்கு பை...பை...’ என்ற செய்தி வெளியிட்டிருந்தோம். அதில்ஒன்பது தே.மு.தி.. எம்.எல்..க்கள் ...தி.மு..வில் சேருவது குறித்து ஊசலாட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் அவர்களை ராஜினாமா செய்துவிட்டு வருமாறு ஜெயலலிதா சொல்வதாகவும்குறிப்பிட்டிருந்தோம்.  


அதைத் தொடர்ந்து ஒரு தே.மு.தி.. எம்.எல்.. நம்முடன் தொடர்பு கொண்டார். மீடியா ஜெயலலிதா கட்டளைப்படி தே.மு.தி..வைப் பிளக்கும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் அந்தச் செய்தியில் உண்மையில்லை," என்றார். சரியாக அடுத்த பதினைந்து நாட்களுக்குள் நான்கு தே.மு.தி.. எம்.எல். .க்கள்தொகுதி நலன்என்பதை முன்னிறுத்தி ஜெயலலிதாவைச் சந்திக்க, தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது. விஜயகாந்த் தரப்பு பதறிப் போனது.


சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேரடி மோதல் ஏற்பட்டது. ‘உன்னாலே நான் ஜெயித்தேனா; என்னால நீ ஜெயித்தாயா?’ என்ற பிரச்னைதான். அதற்கு சில நாட்கள் முன் பிருந்தே தே.மு.தி.. எம்.எல். .க்கள் ஒரு விரக்தியாகத்தான் இருந்தார்கள்


 முதல் காரணம் .தி.மு..- தே.மு.தி.. நெருக்கம் அடிபட்டவுடன், தொகுதியில் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் அன்னியர்களாகிவிட்டனர். அரசின் எல்லா மட்டங்களிலும் போலீஸ் ஸ்டேஷன் உட்பட, தே.மு.தி.. எம்.எல்..க்களை ஒரு பொருட்டாக யாரும் மதிக்கவில்லை. அதே சமயம் கட்சிக்குள்ளும் புகைந்து கொண்டிருந்தது. சென்ற பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளின் பதவிகள் பிடுங்கப்பட்டு, கட்சி தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கட்சித் தேர்தலில் மாவட்ட அளவில் சுதந்திரமாக நடத்துவதற்கு மாறாக மேலிடத்திலிருந்து ஆட்கள் திணிக்கப்பட்டனர். ‘இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்என்று ஆணை வந்தது. கேப்டனின் மச்சினர் சுதீஷ் வழிகாட்டுதல்படி சந்திரகுமார், பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு கட்சியில் எதேச்சாதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே எரிச்சலில் இருந்தார்கள் எம்.எல்..க்கள்


 ஒரு பக்கம் அரசின் ஆதரவு இல்லாமல் எந்தவளர்ச்சிப் பணிகளும்செய்ய முடியாத நிலை; மற்றொரு பக்கம் கட்சியில் அரங்கேறிய சர்வாதிகாரம்," என்று புட்டு வைத்தார் ஒரு தே.மு.தி.. எம்.எல்.. தவிர அடிக்கடி எம்.எல்..க்களை ஒருமையில் திட்டுவதும், அடிக்க வருவதுமான சில நிகழ்ச்சிகள். பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அனுபவஸ்தர்களின் யோசனைகளுக்கு செவிசாய்க்காத நிலை.

இந்த யதார்த்த நிலையை உணர்ந்து கொண்ட .தி.மு.. காய்களை நகர்த்தத் தொடங்கியது. ஜாதிச் சங்கத் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், ஏன் அமைச்சரவையிலேயே மிகவும் சீனியர் அமைச்சர் உட்பட எங்கள் எம்.எல்..க்களுக்கு வலை வீசத் தொடங்கினார்கள்


 அவர்களின் நோக்கம் இரண்டு. ஒன்று: எம்.எல்..க்களை இழந்து விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பறிப்பது. அடுத்த வருடம் நடக்க இருக்கும் ராஜ்ய சபை உறுப்பினர் தேர்தலில் தே.மு.தி.. தரப்பிலிருந்து யாரையும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையை உருவாக்குவது. இப்போது நான்கு எம்.எல்..க்கள்தான் வெளிப்படையாக வந்திருக்கிறார்கள். இன்னமும் அரை டஜன் எம்.எல்..க்கள் பாதை மாறி பயணம் செய்ய இருக்கிறோம்," என்கிறார் ஊசலாட்டத்தில் இருக்கும் ஒரு எம்.எல்.. எங்களை தார்மிக ரீதியாக கேள்வி கேட்க முடியாத நிலையில்தான் விஜயகாந்த் இருக்கிறார்," என்றார் அவர். தே.மு.தி.. விலிருந்து எம்.எல்..க்களை இழுப்பது தேவையற்ற வேலை என்ற கருத்தும் .தி. மு..வில் இருக்கிறது. விஜயகாந்துக்கு அனுதாபம் வரும்," என்கிறார் ஒரு ஆளும் கட்சி பிரமுகர்.



இப்போது வெளிப்படையாக வந்த சில எம்.எல்..க்களுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. உதாரணமாக திட்டக்குடி எம்.எல்..தமிழரசன் மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. மதுரைத் தொகுதி சுந்தர்ராஜன் விஜயகாந்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். தவிர, தே.மு.தி..வின் பொருளாளர். பல சொத்துக்கள் இவர் பெயரில் வாங்கப்பட்டதாம். ஆனால் சமீப காலங்களில் இவர் ஊசலாடுவதால் இவர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் மாற்றி எழுதப்பட்டதாகவும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்தச் சூழலில்தான் தொடர்ந்து கட்சியில் நீடிக்க முடியாது என்று காய்களை நகர்த்தினாராம் அவர்.

வீட்டைக் காலி செய்யும்போது உரிமையானவர்களுக்குச் சொந்தமானதை விட்டுச் செல்ல வேண்டும்," என்று தே.மு.தி.. எம்.எல்.. சந்திரகுமார் கட்சி மாறப்போகும் எம்.எல்..க்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டுமாம். ஆனால் அதற்குப் பதிலடியாக சுந்தர்ராஜன், .தி.மு.. தயவில் வென்றதால் நாம் அனைவருமே ராஜினாமா செய்வோம்" என்று சொல்லியிருக்கிறார்.


 கூட்டணி அமைத்துப் போட்டியிடும்போது குறிப்பிட்ட கட்சியால்தான் வென்றோம் என்று சொல்வது சரியல்ல; 2006 முதல் இன்றுவரை பார்த்தால் தே.மு.தி..வுக்கென்று எட்டு முதல் பன்னிரண்டு சதவிகிதம் வோட்டுக்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே பல .தி.மு.. எம்.எல்..க்களும் வெற்றிபெற தே.மு.தி.. செல்வாக்கும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.


தே.மு.தி..வின் ஆதரவு தளத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம். நடிகர் விஜயகாந்தின் ரசிகனாக இருந்தவர்கள், இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்று ஆதரித்தவர்கள்; ஜெயலலிதா தலைமையை ஏற்காத எம்.ஜி.ஆர். தொண்டர்கள். ‘கடவுளிடமும் மக்களிடமும் தான் கூட்டணிஎன்று சொல்லி வந்தவர், .தி.மு. .வுடன் கூட்டணி அமைத்தவுடன், ‘கழகங்கள் வேண்டாம்என்ற நிலைப்பாட்டில் விஜயகாந்த்தை ஆதரித்தவர்கள் வெறுத்துப் போனார்கள். அடுத்து விஜயகாந்திடம் கொஞ்சமாக இருக்கும் எம்.ஜி.ஆர். வோட்டு வங்கியைப் பிடுங்கும் விதமாகத் தான் அவரை தி.மு..வை நோக்கித் தள்ளுகிறார் ஜெயலலிதா.



 தனியாக நின்று பல தோல்விகளைச் சந்தித்த நிலையில் அரசியலில்மிதக்கவேண்டுமென்றால் பதவிகள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டுதான் .தி.மு..வுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அவர் தனியாக நின்று வோட்டைப் பிரிப்பது நல்லது என்றே இரு கழகங்களும் எண்ணி வந்தன. ஒரு கழகத்தோடு கூட்டணி அமைத்த நிலையில் மற்றொரு கழகத்தோடும் கூட்டணி அமைப்பதில் விஜயகாந்துக்கு இனி எந்தத் தயக்கமும் இருக்காது. தனியாக நின்று வோட்டுக்களைப் பிரித்தாலும் சரி, தி.மு..வோடு கூட்டணி அமைத்தாலும் சரி, தமக்கு ஆதாயம் என்றே ஜெயலலிதா இப்போது கருதுவதாகத் தெரிகிறது.



இந்தச் சூழலில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமதுவீட்டைசரி செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறார் விஜயகாந்த். முதலில் அவர் விட வேண்டியது முன்கோபம். தமது வேட்பாளரையே அடிப்பது, எம்.எல்..க்களை, தொண்டர்களைத் திட்டுவது, தேர்தல் பிரசாரத்தில் மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என்று விஜயகாந்த்தமக்கெனஒரு பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இது நடுநிலை மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.


விஜயகாந்தை குமுறவும், கொந்தளிக்க வைப்பதும் மிகச் சுலபம். கட்சித் தொடங்கி இது எட்டாவது வருடம். முதல் நான்கைந்து வருடங்களில் தொண்டர்களோடு நன்கு பழகி வந்தார். கிராமத்தில் இருந்த சில தொண்டர்களைக் கூட பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கம் இருந்தது. இதற்குக் காரணம் மறைந்த பொதுச் செயலாளர் ராமு வசந்தன். கேப்டனின் ரசிகர்களையும் கேப்டனையும் ஒருங்கே இணைத்து கட்சிக் கட்டமைப்பை நன்கு வைத்துக் கொண்டிருக்க உதவியாக இருந்தார்.



 ஆனால் அவர் மறைந்த பிறகு குடும்பம் முன்னணிக்கு வந்தது. அதனால் பல பிரச்னைகள். அண்ணியார் (பிரேமலதா) பிரசாரம் கட்சிக்கு உதவியாக இருக்கிறது என்றாலும் மச்சினரைப் போல அவரும் ஒரு அதிகார மையமாக உருவானார். நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது கேப்டனின் கப்பலில் ஓட்டை விழுந்திருப்பது தெரிகிறது.


 கொள்கை அடிப்படையில் விஜயகாந்தைத் தலைவராக ஏற்றுக் கொண்டு தொடரும் சூழல் இல்லை. அவரது பெரும்பான்மை ஆதரவு தளமான ரசிகர்களின் எண்ணிக்கையும் இனி வளரப் போவதில்லை. காரணம் திரையுலகம் அவர் கையை விட்டுப் போய்விட்டது. இந்த நிலையில் தே.மு.தி.. கப்பலில் விழுந்த ஓட்டை இன்னமும் பெரிதாகும் வாய்ப்பே அதிகம்," என்றார் ஊசலாட்டத்தில் உள்ள மற்றொரு எம்.எல்..




தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களின்போது வெளியே சென்று அவர்கள் சிலைகளுக்கு மரியாதை செய்யாமல், கட்சி அலுவலகத்திலேயே படத்துக்கு மாலை போட்டு, தன்னை சுருக்கிக் கொண்டார்.


அரசியல் ரீதியாகப் பார்த்தால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு மட்டும் தமது நெருக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.., தே.மு.தி.., காங்கிரஸ், சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள் என்ற அணி உருவாக நல்ல வாய்ப்பு இருப்பதாகவே இப்போதைய சூழலில் கருதப்படுகிறது



 இந்த வலுவான கூட்டணியை எதிர்க்க தன்னுடன், .தி.மு.., பா..., சி.பி.. ஆகியோரைச் சேர்த்துக் கொள்வார் ஜெயலலிதா. பலமான கூட்டணி காரணமாக விஜயகாந்த் நாடாளுமன்றத்தில் ஒரு சில இடங்களைப் பிடித்தாலும் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது தமது செயல்பாடுகளையும், யுக்திகளையும் புத்திசாலித்தனமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் அவர் இருக்கிறார் என்பதே யதார்த்தநிலை.  



அந்தச் சூழலில் எதிர்காலத்தில் தி.மு..வை ஓரங்கட்டிவிட்டு, உண்மையான எதிர்க்கட்சியாக வர விஜயகாந்துக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நன்றாகத் திட்டமிட்டு, அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அவர் செயல்படுவாரேயானால், இப்போது அவருக்கு இருக்கும் உச்சபட்சமான ஆதரவு தளம் பன்னிரண்டு சதவிகிதத்துக்கும் மேலே உயரவும் கூட வாய்ப்பு உண்டு.

நன்றி - கல்கி  


சி.பி - புரட்சித்தலைவியின் பிளான் என்னன்னா கேப்டன் கட்சில இருக்கும் 10 எம் எல் ஏக்களை இழுத்து நாங்க தான் உண்மையான தேமுதிக அப்டினு கோர்ட்ல கேஸ் போட வைப்பது. விசாரணை முடியும் வரை சின்னம் முடக்கப்படும்