Showing posts with label ஏ ஆர் ரஹ்மான். Show all posts
Showing posts with label ஏ ஆர் ரஹ்மான். Show all posts

Saturday, December 06, 2014

காவியத் தலைவன் மண்ணைக்கவ்விய தலைவன் ஆக ஏ ஆர் ரஹ்மான் காரணமா?

சென்ற நூற்றாண்டில் திரைப்படத்தின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கு முன்புவரை நாடகமே தமிழர்களின் பிரதானப் பொழுதுபோக்குச் சாதனமாக இருந்துவந்தது. நாடக ஆசிரியர்கள், நாடகக் குழுக்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் எனப் பலரும் மேடை நாடகங்களையே வாழ்ந்துவந்தார்கள். நாடகம் கோலோச்சிய அந்தக் காலகட்டத்தையும் சூழலையும் பின்புலமாகக் கொண்ட படம் என்னும் கட்டியத்துடன் வெளியான காவியத்தலைவன் நாடக நினைவுகளைப் புதுப்பிக்கும் எனக் கருதப்பட்டது. இன்றுள்ள தலைமுறையினருக்கு அன்றைய நாடகச் சூழலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 



சிவதாச சுவாமிகளின் நாடகக் குழுவின் பயிற்சிகளைக் காட்சிப்படுத்தும் தொடக்கம் இந்த எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. நாடக மேடை, நடிப்பு ஆகியவை குறித்த வசனங்களும் பாத்திரச் சித்தரிப்புகளும் படத்துக்கு வலுவான அஸ்திவாரத்தை வழங்குகின்றன. நேரம் செல்லச்செல்லப் படம் இந்த அஸ்திவாரத்தை விட்டு நகர்கிறது. நாடகம் என்னும் பின்புலம் நாடக மேடையின் பின் திரைபோல மாறிவிடுகிறது. மேடையின் உயிர்ப்போ, அதில் சங்கமமாகும் கலைகளின் கோலாகலமோ, அந்தக் கால ஒப்பனைகளின் அழகியலோ, இசைக் கோலங்களோ, மேடைக்குப் பின் இயங்கும் வாழ்வின் இயக்கங்களோ இல்லாமல் தட்டையான கதையாக மாறிவிடுகிறது. 


பிரதானப் பாத்திரங்கள் அனைவரும் நாடக மேடையுடன் தொடர்புகொண்டவர்கள். நாடக மேடையில் சிறந்து விளங்கும் கனவுடன் வாழ்ந்துவருபவர்கள். நாடகம் சார்ந்த சிக்கல்களையும் சவால்களையும் கொண்டவர்கள். அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளும் அவர்களது நாடக வாழ்வையே பாதிக்கின்றன. இவ்வளவு இருந்தும் நாடகத்தைக் காணவில்லை. நாடகத்தைப் பற்றிய பேச்சு இருக்கிறது. நாடகம் இல்லை. நடிப்பின் நுட்பங்கள் பற்றிய வசனங்கள் உள்ளன. நடிப்பைக் காணவில்லை.
நாடகம் என்னும் பின்புலம் கதைக்குப் பின் திரையாகத் தொங்கு கிறது. 


சிவதாச ஸ்வாமிகள் தரும் பயிற்சியும் வைக்கும் சோதனைகளும் அவரது குழுவினர் நிகழ்த்தக்கூடிய நாடகம் குறித்துப் பெரிய கற்பனைகளை உருவாக்குகின்றன. நடிப்பு பற்றியும் கலையுணர்வு பற்றியும் ஜெயமோகன் எழுதியுள்ள வசனங்களும் அந்தக் கற்பனைக்கு உரமூட்டுகின்றன. ஆனால் குழு மேடையேறியதுமே இந்தக் கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் விரல் பட்ட நீர்க்குமிழிகள்போல உடைந்துபோகின்றன. நடிப்பு பற்றி தரப்படும் விவரணைகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத வகையில் நடிப்பு உள்ளது. சித்தரிக்கப்படும் மேடை நாடகங்கள் பள்ளி நாடகங்களை ஒத்திருக்கின்றன. பகத்சிங் நாடகத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்கம் கூடக் கேட்கவில்லை. ஒப்பனைகளிலும் நடன அமைப்புகளிலும் அந்தக் கால வாசனை இல்லை. மரபு சார்ந்த நடிப்பு பணிக்கும் நவீன பாணிக்கும் இடையேயான முரணியக்கமாகக் கதை வளர்ந்திருக்கக்கூடிய சாத்தியத்தையும் இயக்குநர் வீணடிக்கிறார். 




நாடகக் கலைஞர்களின் வாழ்வு, அவர்களது போராட்டம், நாடக வாழ்வின் பரவசமும் வலியும் நிரம்பிய தருணங்கள், அவர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகள், ஒப்பனை முறைகள், பயன்படுத்திய வண்ணங்கள், நடன வகைகள், எடுத்தாண்ட பாடல்கள், கதைகள் ஆகியவற்றைப் படத்தில் எந்த இடத்திலும் உணர முடியவில்லை. மேடையில் ஹார்மோனியம்கூட இல்லை. 



மேடைக்கு வெளியிலும் பல உறுத்தல்கள். ஜமீன்தார் பெண் காளியிடம் காதலை வெளிப்படுத்திய கணத்தில் காளியாக நடிக்கும் சித்தார்த் ‘பாய்ஸ்’ படப் பாணியில் எகிறிக் குதிக்கிறார். காதல் வலுவாகச் சித்தரிக்கப்படவில்லை. காளியின் மறுவருகை செயற்கையின் உச்சம். அவனுடைய வீழ்ச்சியும் கோமதியின் வளர்ச்சியும் நம்பகத்தன்மையுடன் உருப்பெறவில்லை. காளி திடீரென்று தேசபக்த அவதாரம் எடுப்பதும் இயல்பாக இல்லை. இரு நண்பர்களில் ஒருவன் பொறாமை, வன்மம் ஆகியவற்றின் உருவகமாக இருக்க, இன்னொருவன் மகாத்மாவாக இருக்கிறான். தான் பழகும் பெண்களின் வயிற்றில் குழந்தையைக் கொடுக்கும் தன்மையில் மட்டும் ‘மனித’னாக இருக்கிறான். சக நடிகையின் நடிப்பைக் குறைகூறும் காளி ஒரு இடத்திலாவது நன்றாக நடித்துக் காட்ட வேண்டாமா?
படத்தில் சிறப்பான அம்சங்கள் பிருத்விராஜின் நடிப்பும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் ஜெயமோகனின் சில வசனங்களும். பிருத்விராஜ் மேடையில் சோபிக்கவில்லை. தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கும் கோமதி நாயகம் பிள்ளையின் உணர்வுக் குமுறல்களை வெளிப்படுத்தும் இடங்களில் பிருத்விராஜ் சிறப்பாகச் செய்திருக்கிறார். 



ரஹ்மானின் இசையைத் தனியாகக் கேட்கும்போது ரசிக்க முடிகிறது. படத்தின் பின்புலத்தோடு அவ்வளவாக ஒட்டவில்லை. வடிவு (வேதிகா) அறிமுகமாகும் காட்சியில் வரும் பாடல் அற்புதமாக ஒலிக்கிறது. நடிப்பைப் பற்றிய விவரணைகள், காளிக்கும் குருவுக்கும் இடையில் எழும் முரண்கள், காளியைக் கோமதி அடித்து விரட்டும் இடம் ஆகியவற்றில் ஜெயமோகனின் எழுத்தாளுமையை உணர முடிகிறது. 



இந்த வலிமைகள் வெறும் ஆறுதல்களாகத் தங்கிவிடும் அளவுக்குப் படத்தின் பிரதான ஓட்டம் வலுவற்றிருக்கிறது. நாடகச் சூழல் என்னும் பின்புலத்துக்கு நியாயம் சேர்க்காத திரைக்கதையில் பின்புலம் என்னும் பாவனையைக் கழித்துவிட்டால் மிஞ்சுவது என்ன? நண்பர்களிடையே எழும் சிக்கல்களும் நிறைவேறாத காதல்களும். இதைச் சொல்ல இந்தப் பின்புலமும் இத்தனை மெனக்கெடல்களும் உரிமைகோரல்களும் எதற்காக? பின்புலமும் கதையும் ஒன்றையொன்று வலுப்படுத்தவில்லை என்றால் இரண்டையும் இணைக்கும் கண்ணிதான் என்ன? இயக்குநரின் பாவனைகளா? அது போதுமா ஒரு படத்தைக் காப்பாற்ற? 


நவராத்திரி என்று ஒரு படம். வெளிவந்து அரை நூற்றாண்டு ஆகப்போகிறது. அதில் நாடகக் காட்சி ஒன்று இடம்பெறும். அதில் சிவாஜி கணேசனும் சாவித்திரியும் நாற்பதுகளின் நாடக மேடையின் ஒரு வகைமையைத் துல்லியமாகவும் படைப்பூக்கத்துடனும் சித்தரித்திருப்பர்கள். காவியத் தலைவன் படம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய காட்சி அது. 

நன்றி - த இந்து

Tuesday, November 06, 2012

ஏ ஆர் ரஹ்மானுடன் இளையாராஜா பணி ஆற்றுவாரா? குமுதம் VS இளையராஜா

http://www.outlookindia.com/images/rehman_illayaraja_20090309.jpg 

இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (14.11.2012)#Ilayaraja


பண்ணைபுரத்து இராசையா இப்போது எப்படி இருக்கிறார் ?


- பெ.கணேஷ் பாபு, திருநெல்வேலி.



அவனா? அவன் எப்போதோ செத்துப்போய் விட்டான்! அவனைச் சுமந்து கொண்டல்லவா நான் அலைகிறேன்!





பிறந்த ஊருக்கு, ஏதேனும் உதவி செய்திருக்கிறீர்களா?


- க.பா.மூர்த்தி, மதுரை.






பிறந்த உலகிற்கு இசையால் சேவை செய்கிறேன்!



“கல்லுக்குள் ஈரம்” திரைப்படத்தில் தங்களின் பின்னணி இசை “தூறல் நின்னு போச்சு” திரைப்படத்தின் பின்னணி இசை, “16 வயதினேலே” திரைப்படப் பாடல் “செந்தூரப்பூவே” பாட்டுக்கு முன்னர் வரும் புல்லாங்குழல் இசை இவையெல்லாம் காடு, மலை, கடல் கடந்து செல்கிறது. எந்த மனநிலையில் தங்களுடைய இந்த இசை வடிவங்கள் உயிர் பெருகின்றன?


-ஆர்.பூவராகசுவாமி, கடலூர்.




இதற்கு மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மனம் தானாகவே ஒருநிலைப்பட்டு விடும். அது காட்சிகளுக்கு தகுந்தவாறும் உயிரின் உணர்வுகளுக்கு ஏற்றவாறும் பலவிதமான ஸ்வரங்களை இசை எடுத்துக்கொண்டு தகுந்த, அதற்கேற்ற இசைக்கருவிகளில் ஒளிக்கும்போது கேட்பவர்களைக் கண்டிப்பாக மெய்மறக்கச் செய்துவிடும்.


இதற்கு இதை உருவாக்கும் ஆள் அங்கே இருக்கக் கூடாது. அவன் மறைந்து போனால்தான் இது சாத்தியமாகும். இல்லை என்றால் அவனது ஈகோதான் இசையாக வெளிவரும்.



நீங்களும் ஏன் ஆஸ்கார் அவார்டுக்கு முயற்சி செய்யக் கூடாது?


- எஸ்.வி.பார்த்தசாரதி, திருச்சி.



“ஆஸ்கார்” விருது என்பது ஒரு ஐந்தாறு பேர் கொண்ட குழு. இந்தக் குழு தீர்மானிப்பதுதான் உயர்ந்தது என்று அர்த்தமில்லை! அதைவிடச் சிறந்த இசை அவர்களின் கவனத்திற்கு வராமலே போயிருக்கலாம். விருதிற்காக விண்ணப்பம் செய்த படங்களுக்குள்ளும் கலைஞர்களுக்குள்ளும் மட்டுமே அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.


இதற்குப் போய் நான் விண்ணப்பம் போட்டு...


‘ஐயா ஐயா இதைக் கேளுங்கள் நான் நன்றாக இசையமைத்திருக்கிறேன்’ என்று கேட்கவேண்டுமாக்கும்? அடப் போங்கய்யா!?




தங்களின் பதில்கள் எல்லாம் உங்களின் நிலையில் இருந்தே சொல்லப்படாலும் – கேட்டவர் மனதையோ அல்லது வாசகர் மனதையோ – புண்படுத்தி விடக்கூடும் என்று எப்போதாவது தோன்றியதுண்டா?


- கே.மோகன் தமிழ்ச்செல்வன், சென்னை.



அடடா! இதை மறந்து விட்டு எத்தனையோ பதில்களைச் சொல்லி விட்டேனே!


நல்லவேளை இப்போது ஞாபகப்படுத்தினீர்கள் நன்றி! மிகவும் நன்றி!


நான் யதார்த்தமான பதிலைத்தான் சொல்லி வருகிறேன். பல உண்மைகளை பட்டவர்த்தனமாகச் சொல்ல முடியாது என்றாலும் கூடுமான வரை கொஞ்சம் உள்ளடக்கியே எழுத முயற்சித்தேன். இதிலும் என்னையும் மீறி என் பதில் யாரையவது புண்படுத்தியிருந்தாலோ அல்லது வேறு சொல்ல முடியாத வேதனை உணர்வாக ஏற்படுத்தியிருந்தாலோ இதன் மூலமாக சத்தியமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.



மனமது செம்மையாக, முதலில் நாம் என்ன பயிற்சிகள் செய்ய வேண்டும்?


-ஆ. தனபால், சென்னை.91


மனம் செம்மையாக – எந்தப் பயிற்சியுமே தேவையில்லை! எந்த ஒரு எண்ணமும் எழாமல் பார்த்துக் கொண்டால் போதும்! பதில் சுலபம்! செய்து பார்த்தால் நடக்கின்ற காரியமா? எனப் பின்னால் புரிந்து கொள்வீர்கள்.



ஞானிகள், யோகிகள், மகான்கள், சித்த புருஷர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், அடியார்கள் இவர்களெல்லாம் கண்டுணர்ந்து பரவசப்பட்ட அனுபவங்களைப் போல நீங்கள் அடைந்த அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?


- ஆ.செல்வம், சென்னை.



அதை யாரும் யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. யாராலும் யாருக்கும் கொடுக்க முடியாது. கொடுக்க வாங்கிக்கொள்ளும் பொருளுமில்லை; கொடுக்காமல் மறைத்து வைக்கும் பொருளுமில்லை. எல்லோரிடத்திலும் – ஏன் எங்கும் எங்கெங்கும் இருக்கும் ஒரே உண்மை அது மட்டும்தான்!


அதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன் என்றாலும் – பகவான் ஸ்ரீ ரமணர்தான் – அதைக் கொடுத்தார் என்பது முற்றிலும் உண்மை. நீங்கள் கேட்கலாம் – யாராலும் கொடுக்க முடியாது என்றீர்களே? என்று. ஆம் – அப்படிப்பட்ட ஒன்றைத் தரக்கூடிய ஒரே ஒருவர்தான் பகவான் ரமண மகரிஷி!



பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கும் சதவீதம் இசைஞானிக்கு எத்தனை?

- பி.கே.பாபு, திருநெல்வேலி.



பெரிய தவறுகளைக் கூட விட்டு விடலாம் – ஆனால் கவனக் குறைவால் ஏற்படும் சிறிய தவறுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது!


அதாவது, என்னுடைய தவறுகளை! அதைத் திருத்திக் கொள்ளவே இந்தப் பிறவி ஏற்பட்டது என்று முழுக்க முழுக்க நம்புகிறவன் நான்.




இசைஞானி அவர்களே, ஒரு இயக்குநர் உங்களிடம் வந்து நீங்களும் ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து இசையமைக்க வேண்டுமென்று கூறினால் நீங்கள் அதை ஏற்று ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து இசையமைப்பீர்களா? (கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)


- டி.மோகன்ராஜ், வாலாஜாபாத்.




அப்படி இனிமேல் ஒன்றும் பணியாற்றவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஏனெனில் அவர் என்னுடன் 500 – படங்களுக்கும் மேல் பணியாற்றி இருக்கிறார் – இதையும் அவர்தான் சொல்ல வேண்டும்.



உங்களிடம் அவ்வப்போது தோன்றும் ஆணவம், அகம்பாவம் பற்றி?


- எ.சி.பி.தாஸ், திருத்துறைப்பூண்டி.



அவ்வப்போது எங்கே தோன்றுகிறது! அது ஒன்றுதானே எப்போதும் கூட இருக்கிறது. அது இல்லை என்றால் இசை எப்படி வரும்?



(ராஜபவனி தொடரும்)


இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (14.11.2012)


நன்றி - குமுதம் ,

இசை ஞானி இளையராஜா ரசிகர்கள் இவரை ட்விட்டரில் தொடர்ந்தால் அவர் பற்றிய  செய்திகள் , அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அப்பப்ப அப்டேட் செய்யப்படுகிறது

IlaiyaraajaFans (@)

 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPp1TNk8w1pjQaInv72SlT8ilW6UFSyPRtA2sCQ3nd0Yz-QIvGKqU4SHrOGgw4uzZD5rkXrMJ2WZbmBy7VKmLcAL8alKkmsxb82UoF5l73imbrBmkyVTqJrM-Uss3FQcQr21NFvdzKEJqj/s400/rahman+function.jpg

இளையராஜாவின் இசைக்குழுவில்,  11 வயதில் கீ -போர்டு வாசிப்பவராகச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்,  இன்று உலகப் புகழ் பெற்ற இசை அமைப்பாளராக விளங்குகிறார்.

 

 

தன் இசைக் குழுவில் ஏ.ஆர். ரஹ்மான் எப்படிச் சேர்ந்தார் என்பது பற்றி இளையராஜா கூறுகிறார்……
மூடு பனி
படத்துக்கு நான் இசை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,  கீ -போர்டு வாசிப்பவர், குடி போதையில் வந்திருப்பது தெரிந்தது.   உடனே அவரை வெளியே அனுப்பி விட்டேன்.   ‘கீ -போர்டு’  வாசிக்கத் தெரிந்த வேறொருவர் தேவைப்பட்டபோது உடனடியாக யாரும் கிடைக்கவில்லை.   அப்போது என் குழுவில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து,  “எனக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான்.  அவன் ஓரளவு  கீ -போர்டு  வாசிப்பான்.  அழைத்து வரட்டுமா ? ” என்று கேட்டார்.  “இதென்ன கேள்வி ?  உடனே அழைத்து வாருங்கள் ” என்றேன்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள்.  நான் அந்தச் சிறுவனிடத்தில் கீ-போர்டில் வாசிக்க வேண்டிய குறிப்பை கொடுத்தேன்.அதை வாசிப்பதில் அவனுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டபோது நானே அவன் கையைப் பிடித்து வாசிக்கச் சொல்லிக் கொடுத்தேன்.  அந்தச் சிறுவனும் புரிந்து கொண்டு நான் எதிர்பார்த்த மாதிரி வாசித்து விட்டான்.  பாடலும் நன்றாக அமைந்தது.

 

அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல.  இசையமைப்பாளர் சேகரின் மகன் திலீப் தான் அவர்.  இந்த திலீப் தான் பின்னாளில் ஏ.ஆர். ரஹ்மானாக இசை உலகுக்கு வந்தார்.


நன்றி - Balhanuman's Blog

 

http://www.tamiluk.net/wp-content/uploads/2012/04/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.jpg