Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts

Monday, February 16, 2015

புறம்போக்கு

புறம்போக்கு படத்தில் நடிகர் ஆர்யா
புறம்போக்கு படத்தில் நடிகர் ஆர்யா

எல்லா தினமும் காதலர் தினம்தான்: ஆர்யா பேட்டி

தமிழ் சினிமாவில் இப்போதைய ‘காதல் இளவரசன்’ யார் என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட ஆர்யாவின் பெயரைத்தான் சொல்லும். ஆர்யாவை காதலர் தின ஸ்பெஷல் பேட்டிக்காக சந்தித்தோம்.
“பாஸ்... நான் அந்த மாதிரி ஆளில்லை. ஏன் என்னை திரும்பவும் வம்பில் மாட்டி விடு றீங்க” என்று முதலில் நழுவினாலும், பிறகு சகஜமாக கேள்விகளை எதிர்கொண்டார் ஆர்யா.
‘புறம்போக்கு’ படத்தில் மறுபடியும் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கிறீர்களே?
‘புறம்போக்கு’ வழக்கமான ஆக்‌ஷன் படம் கிடையாது. இது இயக்குநர் ஜனநாதனின் படம். அவருடைய படங்கள் வழக்கமான பாணியில் இல்லாமல் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சினையை எடுத்துச் சொல்லும். அதே நேரத்தில் அதில் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். ‘புறம்போக்கு’ என்னை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.
தொடர்ச்சியாக இரண்டு நாயகர்களைக் கொண்ட படங்களில் நடிக்கிறீர்களே?
இரண்டு, மூன்று நாயகர்கள் நடிக்கும் படம் என்றால் அதில் கதையும், திரைக்கதையும் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதற்காக நான் தனி ஹீரோ படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. வித்தியாசமான கதைகளை தேடுகிறேன் என்றுதான் சொல்கிறேன். நிறைய நடிகர்கள் நடித்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். ‘புறம்போக்கு’ படத்தில் நான், ஷாம், விஜய் சேதுபதி என்று எங்கள் மூவருக்குமே முக்கியமான பாத்திரம்தான். இந்தப் படத்தின் நிஜ ஹீரோ ஜனநாதன் சார்தான். நாங்கள் மூவருமே அல்ல.
ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும், ப்ளேபாய் இமேஜ் உங்களை துரத்திக் கொண்டிருக்கிறதே?
நான் எந்த இமேஜுக்குள்ளும் மாட்டிக் கொள்ள கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் திரையுலகினரும் சரி, மக்களும் சரி என்னை அப்படி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘ராஜா ராணி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற படங்களின் தாக்கம்தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
உங்களுடன் நடிக்கும் நாயகிகளுக்கு நெருக்கமான நண்பராக வலம் வருகிறீர்கள். அதன் ரகசியம் என்ன?
ஒரு ரகசியமும் கிடையாது. நீங்கள் ஒரு படப்பிடிப்புக்கு போனால் உங்களுடன் நடிக்கும் நாயகியுடன் பேச மாட்டீர்களா? 3 முதல் 4 மாதம் வரை தொடர்ச்சி யாக படப்பிடிப்பு இருக்கும்போது அவர்களுடன் தொடர்ந்து பேசு வோம். அது நட்பாக மாறுகிறது. நான் எப்போதும் நட்புக்கு மரி யாதை கொடுப்பவன்.
படங்களின் வெற்றி தோல்வி மட்டுமின்றி, உங்களைப் பற்றி வரும் செய்திகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்களே.. எப்படி?
படங்களின் வெற்றி, தோல்வி என்பது என் கையில் இல்லை. அது மக்கள் கையில் இருக்கிறது. ஒரு படம் எதனால் வெற்றியடைந்தது, எதனால் தோல்வியடைந்தது என்று அலசி ஆராயும் நேரத்தில் நான் என்னுடைய உழைப்பை அடுத்த படத்துக்கு செலவிடுவேன். ஒரு படம் தோல்வியடைந்தால் ஏதோ ஒரு இடத்தில் மிஸ் ஆகிவிட்டது என்று நினைப்பேன். அதுபோல் ஒரு படம் வெற்றியடைந்து விட்டாலும் அதை என் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை. ஏனென்றால் அது என்னுடைய வெற்றியல்ல; ஒட்டுமொத்த படக்குழுவினரின் வெற்றி.
அதேபோல என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்தால் படங்களில் நடிக்க எனக்கு நேரம் இருக்காது. அதனால் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
‘அமர காவியம்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படத்தை தயாரித்த திருப்தி கிடைத்தது. வசூல் ரீதியில் படம் சரியாக போகாவிட்டாலும் நல்ல படம் என்று விமர்சகர்களின் பாராட்டு கிடைத்தது. அதுவே எனக்கு சந்தோஷம்.
காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
காதல் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒரு அற்புதமான விஷயம். பெற்றோர், நண்பர்கள், மனைவி இவை அனைத்தையும் தாண்டி ஒவ்வொருவருக்கும் அவருடைய முதல் காதல் மனதுக்குள் இருக்கும். அப்படி இல்லை என்று ஒருவர் சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம். என்னை பொறுத்தவரை பிப்ரவரி 14 மட்டும் காதலர் தினம் அல்ல. காதலர்களுக்கு தினமும் காதலர் தினம்தான்.
நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? காதலுக்காக கிறுக் குத்தனமாக எதையாவது செய்திருக்கிறீர்களா?
மாட்டிவிடுறீங்களா?.. நான் காதலிக்கவே இல்லை என்று சொல்லவில்லையே. காதலித் திருக்கிறேன். காதலுக்காக செய்த ஒவ்வொரு விஷயமும் கிறுக்குத்தனமான விஷயம்தான். காதலியின் பிறந்த நாளன்று ஒவ்வொரு காதல னும் நண்பர்களிடம், ‘காதலிக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்’ என்று யோசனை கேட்பார்கள். வாழ்த்து அட்டை, பூ, கீ-செயின், உடைகள் இப்படி எல்லாமே பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். இப்படி காதலுக்காக செய்த எல்லாமே பிற்காலத்தில் கிறுக்குத்தனமாகத் தோன்றும்.
எப்போது திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறீர் கள்? உங்களுடையது காதல் திருமணமாக இருக்குமா?
கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். அது எப்போது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் எனக் கும் விஷாலுக்கும் போட்டி நடந்து கொண்டிருக் கிறது. முந்துவது விஷாலா அல்லது நானா என்பது எங்கள் இருவரது கையிலும் இல்லை.
உங்களது பெண் தோழிகளில் உங்களுக்கு நெருக்கமானவர் யார்?
உண்மையைச் சொன்னால் திரையுலகில் எனக்கு நெருக்கமான தோழிகள் இல்லை. என்னு டைய பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகள்தான் இப்போதும் எனக்கு நெருக்கம். நான் ஒன்றும் இல்லாதவனாக இருந்த காலம் முதல் இன்று வரை அந்த நட்பில் விரிசலே ஏற்பட்டதில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் சம்பாதித்து வைத்திருக்கும் மிகப்பெரிய சொத்தாக இதைப் பார்க்கிறேன்.


thanx - the hindu

Wednesday, February 15, 2012

உனக்கென நான், எனக்கென நீ - சிறுகதை - பிப்ரவரி 14 ஸ்பெஷல்

நான் எங்க ஊருல இருக்கும் மருத்துவமனைக்கு எனக்கு தெரிஞ்ச டாக்டரை பார்க்க போய் இருந்தேன். அங்க 35 வயசு மதிக்கத்தக்க பெண் ஒருத்தங்க தன் பிள்ளைகளோட டாக்டரை பார்க்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ரொம்ப கலகலப்பா சிரிச்சு பேசிக்கிட்டு எதோ பிக்னிக் வந்த மாதிரி சந்தோஷமா இருந்தாங்க. அவங்களை பார்க்கும்போது யாருக்கும் எந்த வியாதியும் இருக்குற மாதிரி தெரியலை. எனக்கு என்னன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருந்துச்சு. 


அவங்க போனபின் டாக்டர்கிட்ட அவங்க யாரு? என்ன ஏதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அவங்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டதால் இப்படியும் ஒரு  உறவா? அந்த உறவால யாருக்கு என்ன லாபம்ன்னு புரியலை. அதேப்போல அந்த உறவு சரியா? தவறா? இதன் முடிவு என்னன்னு புரியாம குழம்பியிருக்கேன் .





இப்போ டாக்டர் சொன்னது....
 
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்துக்கு  காயத்திரி  என்ற 30 வயதான பெண் தற்கொலைக்கு முயன்று, உறவினர்களினால் அழைத்து வரப்பட்டு உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும்போது இங்க அழைச்சுக்கிட்டு வந்தாங்க. எப்படியோ போராடி அவங்களை காப்பாத்திட்டோம்.

 அவங்க கணவர்கிட்ட பேசும்போது என்ன காரணம்ன்னு விசாரிச்சேன். 

 தெரியலை சார். ஏன் இப்படி செஞ்சுகிட்டா-னு புரியலை. 


சரி உங்களுக்குள் உறவு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ?

உண்மையை சொல்லனும்ன்னா எங்களுக்குள் உறவு அந்தளவுக்கு சரியில்லை சார். என்னை கிட்டவே நெருங்க விட மாட்டேங்குறா. அப்படியே இருந்தாலும் ஏதொ மரக்கட்டை போல இருக்கா. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை சார். நீங்க வேணும்ன்னா என்னன்னு கேட்டு சொல்லுங்க சார்ன்னு  சொன்னார்.


இதே பதிலைத்தான் அந்த பொண்ணோட மாமனார், மாமியார், அப்பா அம்மா எல்லாரும் சொன்னாங்க. காயத்திரிக்கு 10வயசுல ஒரு பொண்ணும், 8 வயசுல ஒரு பையனும் இருந்தாங்க. குழந்தைகள் காயத்திரி ஹாஸ்பிட்டலில் இருக்கும் வரை அவங்களை விட்டு நகரல. அந்த பாசமான குழந்தைகளை விட்டுட்டு சாகனும்ன்னு அந்த பொண்ணு எப்படி துணிஞ்சுதுன்னு எனக்கு குழப்பமா இருந்துச்சு. அதனால் அந்த பொண்ணுக்கு கவுன்சிலிங்க் குடுக்க தீர்மானிச்சேன்.



கவுன்சிலிங்க் குடுக்க ஆரம்பிச்சேன். எது கேட்டாலும் அழுகை மட்டுமே பதில். 

”கணவர் கார்ப்பரேட் கம்பெனில கைநிறைய சம்பளம் வாங்குறார். நீங்க பிறந்த வீடும் வசதிக்கும் அன்புக்கும் குறைச்சலில்லாத வீடு. அப்புறம் ஏன் தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க”


அப்பவும் பதிலில்ல. அப்பதான் அவங்க பொண்ணு மாடிப்படிக்கட்டுகளில் இறங்கும்போது கால் தவறி விழுந்து எங்க ஆஸ்பிட்டலயே சேர்த்தாங்க. அப்போ காயத்திரிதான் தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கிட்டங்க. அப்படி பார்த்துக்கிட்டாலும் சில சமயம் தனிமைல அவங்க அழறதை நான் கவனிச்சேன். அப்போதான் எனக்கு ஒண்ணு தோணுச்சு.

காயத்திரியை தனியா அழைச்சு

 “நீங்க தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க. நீங்க ஒருவேளை செத்து போய் இருந்தால் இப்போ உங்க பொண்ணை, மகனை  யார் பார்த்துக்குவாங்க. அப்படியே யாராவது பார்த்துக்கிட்டாலும் தாய் போல வருமா?”ன்னு

 அவங்க தாய்மை உணர்ச்சியை தூண்டிவிட்டேன். அழுதுக்கிட்டே தன் கதையை சொன்னாங்க.

 காயத்ரியின் ஸ்டேட்மெண்ட் 

என் கணவர் சுந்தரத்தை கல்யாணம் பண்ணிக்கும்பொது எந்தவித எதிர்பார்ப்புமில்லாமதான் கட்டிக்கிட்டேன். அவர் முன்னமே வீட்டுக்கு தெரியாம ஒரு பொண்ணு கூட குடித்தனம் பண்ற விஷயம் எனக்கு தெரிய வந்துச்சு. மத்த பெண்களுடன் தொடர்பு இருப்பதும் எனக்கு தெரிய வந்துச்சு. அதனால் அப்பா அம்மா கவுரத்துக்காக ஒட்டாமதான் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். எனக்கு கருத்தரிக்கலை. அதனால, அவரோட மூத்த சம்சாரம் ஒரு பெண்குழந்தையை பெத்து போட்டுட்டு செத்துட்டாங்க. 


 அந்த குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுமில்லாம அவருக்கு  சந்தேகம், நான் சந்தோஷமா இருக்குறது பொறுக்காத சாடிஸ்ட் குணம், வெளில எங்கயும் கூட்டி போகாம அடைஞ்சு கிடந்தேன். நான் தத்தெடுத்துக்கிட்ட என் பொண்ணுதான் எனக்கு மிகப்பெரிய ஆறுதல் அவ அன்புலதான் எல்லத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ பழகிட்டேன்.



எனக்கும் ஒரு பையன் பிறந்தான். அப்போதான் எனக்கு வேலை கிடைச்சது. முதல் நாள் ஜாயின் பண்ணும்போது எல்லார்க்கிட்டயும் பேசுவதுப் போல்தான் தமிழரசன்கிட்டயும் பேச ஆரம்பிச்சேன். மெல்ல மெல்ல எங்களுக்குள் பழக்கம் அதிகமாகி அவங்கவீட்டுக்கும் நானும் எங்க விட்டுக்கும் போய் வரும் அளவுக்கு ஃப்ரெண்ட்சானோம். அவங்கம்மவுக்கு நான் இல்லாம எந்த வேலையும் ஓடாது.



என் கதையை கேட்டவர் எனக்காக பரிதாபப்படுவார். என் புருசனோட குணத்தை கண்டு என்கிட்ட யாருமே ஃப்ரெண்டா இல்லாதப்போ தமிழோட அன்பும் ஆதரவும் எனக்கு இதமா இருந்துச்சு.எங்களுக்குள்ள உடல் ரீதியா எந்த தப்பும் நடக்கலை, ஆனாலும் மனசளவில் நாங்க காதலர்கள் மாதிரி ஆகிட்டோம்.


அப்புறம் கணவன் மனைவிக்குள் கூட அவ்வளவு அன்னியோன்யம் இருக்குமான்னு தெரியலை. அவ்வளவு பாசமா இருந்தோம். நான் தமிழை முழுசா நம்பினேன். அவன் எனக்கே எனக்குன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். அவங்க வீட்டுல அவனுக்கு பெண் பர்க்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு வருசமா பெண் பார்த்தாங்க. பார்க்கும் பெண்ணையெல்லாம் எதேதோ காரணம் சொல்லி வேண்டாம்னுட்டான். அவன் என்னை மனசுல நினைச்சுக்கிட்டுதான் இப்படியெல்லாம் மறுக்குறான்னு நினைச்சுக்கிட்டேன்..  


 அப்போதான் நான்  கல்யாணம் பண்ணிக்க போறேன்னு குண்டை தூக்கி போட்டான். ஏண்டா நான் இல்லாம நீயிருப்பியான்னுலாம் கேட்டேன். ஏதேதோ காரணம் சொல்லி என்னை சமாதானம் படுத்தி  பெண் பார்க்கவும் என்னை கூட்டி போனான். நான் செலக்ட் பன்ற பெண்ணைதான் கட்டுவேன்னு சொல்லி பரிதாபமா நின்னான். அப்புறம் அவன் கல்யாணத்துக்கு சேலை எடுத்து குடுத்தது முதற்கொண்டு ஆரத்தி தட்டு வரை ரெடி பண்ணி கொடுத்த்து வரை நான் தான்.



எல்லாம் செஞ்சும் எனக்கு அவனை விட்டு தர மனசில்லை. அதனால, நான் திருமணத்துக்கு முதல் நாள் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். எப்படியாவது என் பிள்ளைகளுக்காக என் மனசை மாத்துங்க சார்..

 டாக்டர் சொல்றார்..

என்ன சொல்வதுன்னே தெரியலை.. அவன் முகத்திரையை கிழிச்சாதான் இந்த பொண்ணுக்கு அவன்மேல் இருக்கும் மயக்கம் தெளியும்னு 


”உங்க நல்வாழ்வுக்காய் அவன் கவுன்சிலிங்க் வருவானா?”ன்னு கேட்டேன்

. ஏன்ன, இதுப்போல இல்லீகல் காண்டாக்ட்ல இருக்குறவங்க தன் முகத்தை காட்ட மறுப்பாங்க. அதுலயும் அவன் புதுசா கல்யாணம் ஆனவன் தன் எதிர்காலம் பாழாயிடப்போகுதுன்னு அவன் வரமாட்டான். அப்பவே அவன் சுயரூபம் பாதி தெரிஞ்சு போகும்ன்னு பிளான் பண்ணி வரும் செவ்வாய் கிழமை அவனை வரச் சொல்லும்மான்னு சொன்னேன். அவன் வரமாட்டான்ற நம்பிக்கையில்.....,


செவ்வாய் கிழமை..., 

தமிழரசன் ஸ்டெட்மெண்ட்

ஹலோ சார் நான் தான் காயத்திரி சொன்ன தமிழ், அவளோட கவுன்சிலிங்க்காக  என்னை பார்க்கனும்ன்னு சொன்னதாய் சொன்னாள். அதான் வந்தேன். சொல்லுங்க சார், என்னால் என்ன ஹெல்ப் பண்ணனும்ன்னு சொல்லுங்க. காயத்திரிக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்


சார், அவங்களை முதன்முதலில் எங்க ஆபீசுலதான் பார்த்தேன் சார். அவங்களாவே என்கிட்ட வந்து அறிமுகப்படுத்திக்கிட்டு லொடலொடன்னு பேச ஆரம்பிச்சாங்க. அது மாதிரி பேசுறவங்களை எனக்கு பிடிக்காது. அதனால  எனக்கு அவங்களை பிடிக்காம போச்சு. அப்புறம், அவங்க மத்தவங்க கிட்ட பழகும் விதம் உதவும் குணம் கண்டு எனக்கு அவங்களை பிடிச்சு போச்சு. அவங்க குழந்தைகள் அவங்களோடது  இல்லைன்னும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்ன்னும், அவங்க புருசன்கிட்ட அவங்க படும் பாடு அம்மாக்கிட சொன்னதை கேட்டு அவங்க மேல் பரிதாபம் வந்துச்சு. அந்த பரிதாபம் மெல்ல மெல்ல அன்பா மாறிடுச்சு.


ரெண்டு பேர் வீடும் ஒரே ஏரியா என்பதால் வீட்டுக்கு  ஒண்ணாவே போவோம். வருவோம். ஆபிசுலயும் ஒண்ணாவே சாப்பிடுவோம். அவங்க எல்லார்க்கிட்டயும் சகஜமா பேசுறதால இதை யாரும் தப்பா எடுத்துக்கல. ஆபீஸ் லீவு நாள்ல எங்க வீட்டுலயோ இல்ல அவங்க வீட்டுலயோ ரெண்டு பேரும் சேர்ந்து இருப்போம். என் அம்மாவுக்கு அவங்க நல்ல ஃப்ரெண்டானாங்க. அவங்க பிள்ளைகள் என்கிட்ட பாசமா ஒட்டிக்கிச்சு.


 என் அம்மாவை எவ்வளவு நேசிக்குறேனோ அதே அளவு அவளையும் நேசிச்சேன். அவங்க பிள்ளைங்க மேல ரொம்ப பாசமா இருப்பாங்க.  அதே நேரத்தில் என்னையும் ரொம்ப நேசிக்க ஆரம்பிச்சங்க. என் மேல வெச்ச பாசம் ரொம்ப தீவிரமா மாற ஆகி அவங்க புருசனை தள்ளி வைக்கும் நிலைக்கு வந்துட்டாங்க.

ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா நேசிக்க ஆரம்பிச்சோம். ஒருவர் இல்லாம ஒருத்தர் இருக்க முடியாதுன்ற லெவலுக்கு வந்துட்டோம். காயத்திரிக்கு என் மேல் பொசசிவ்னெஸ் வளர ஆரம்பிசது. யார்கிட்டயாவது ஃப்ரெண்டிலியா பேசினாலும் அவ முகம் மாறுவதை கவனித்தேன். 


அப்போதான் என் வீட்டுல எனக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க. நிஜமாவே காயத்திரி மனசுல இருந்ததால் எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்கலை. எல்லாரையும் எதாவது காரணம் சொல்லி  அவாய்ட் பண்ணிட்டேன். அப்புறம்தான் எங்க நிலை புரிய வந்தது. இதே நிலை நீடித்தால் பிள்ளைங்க எதிர்காலம், எங்க ரெண்டு பேர் குடும்ப கவுரவம்லாம் லேட்டாதான் உறைக்க ஆரம்பிச்சது. அவளை என்னோடு கூட்டிக்கிட்டு போறது ஈசி. ஆனால், அவளால் அங்க வந்து பிள்ளைங்க, அவ பெற்றொர்களை பிரிந்தும், என் குடும்பத்தை பிரிந்து நானும் நிம்மதியா வாழ்ந்துட முடியுமா?


 இல்லை இதே நிலை நீடித்தால் காய்த்திரியோட எதிர்கால வாழ்க்கை என்னாகும்ன்னு நீண்ட யோசனைக்குப்பின்.., அதிரடியா சில நடவடிக்கைகள் எடுக்கனும்ன்னு முடிவு பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். 



காயத்திரி மனசு என்ன படு படும்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் இதை தவிர எனக்கு வேறு வழி தெரியலை. சார். இப்போ எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இப்பவும் காயத்திரியை நேசிக்கிறேன். எப்பவும் என் தாயை விட என் மனைவியை விட அவளத்தான் நேசிக்குறேன். ஆனால் யதார்த்தம்ன்னு ஒண்ணு இருக்கே. அதனால் என் அன்பை மறைச்சு வெச்சுக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனால், எந்த சூழ்நிலையிலும் காயத்திரியை விட்டு குடுக்க மாட்டேன் நல்ல நண்பனாக. 

என்று சொல்லி முடித்தான்.


காயத்திரிக்கு தீவிர கவுன்சிலிங்க் குடுத்தபின் இப்போ அவங்க தமிழ் மேல் கொண்ட காதல் மறைஞ்சு தூய்மையான நட்பு மட்டுமே இருக்கு. ஆனால், ஒருவருக்காக ஒருவர் வாழும் அன்பும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தும், ஒருவர் இன்ப துன்பங்களில் அடுத்தவர் பங்கேற்கும் பக்குவமும் வந்து சேர்ந்துடுச்சு.

 காயத்திரி வீட்டு நல்லது கெட்டதுகளில் தமிழ் கலந்துக்குறதும் தமிழோட மனைவி சீமந்தத்துக்கு எந்த வித பொறாமையும் இல்லாம ஒரு தோழியா போய் எல்லா வேலையும் முன் நின்று நடத்தி குடுக்க காயத்திரியால் முடியுதுன்னு  இருக்குன்னு சொல்லி முடிச்சார் டாக்டர்.. 


உறவுகள் விசித்திரமானவை.. ஏன் டாக்டர்? தாம்பத்ய வாழ்க்கைல எதனால சலிப்பு வருது.. ? எதனால நிறைய கள்லக்காதல்கள் ஏற்படுது?


மனவியல் நிபுணர்கள் கூற்றுப்படி  80% திருமணங்கள்ல மேரேஜ் ஆகி 4 வருடங்களில் துணை சலித்து விடுமாம்.. சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு துணை தேட இரு பாலினரும் முயல்வாங்களாம்.. 


இதை தடுக்க என்ன வழி டாக்டர்? 


வருடம் இரு முறை மெக்கானிக்கல் லைஃப்ல இருந்து விடு பட்டு தம்பதிகள் டூர் போகனும் ,மன்ம் விட்டு பேசனும்,, ரொமான்ஸ் என்பது லவ் பண்றப்ப மட்டும் இல்ல மேரேஜ்க்கு பிறகும் அது இருக்கு  என்பதை உணரனும்.. 


அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.. 


சில வாரங்கள் கழித்து அவர் வீட்டுக்கு வேறொரு வேலையாக போனேன்.. வீட்டில் அவர் இல்லை.. அவர் மனைவி மட்டும் தான் இருந்தார்.. 


டாக்டர் இல்லையா மேடம்?


ஹூம்.. எங்கே ? எப்போ பாரு.. டியூட்டி ஹாஸ்பிடல்னு அலைஞ்சுட்டே இருக்காரு.. குடும்பத்தை கவனிக்கறதே இல்லை


மேடம், உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?


4 வருஷம், ஏன் கேட்கறீங்க?


 சும்மாதான்.

Tuesday, February 14, 2012

நந்தியா வட்டைப்பூவும், உன் புன்னகையும் - கவிதை

உடல் மண்ணில் புதையும் வரை ஒரே ஒரு உயிரின் நினைவுகளை மட்டும் நெஞ்சில் சுமந்து கொண்டு வாழும் உண்மையான காதலர்களுக்கு வாழ்த்துகள்..

 டீன் ஏஜில் நான் எழுதிய சில மொக்கை கவிதைகள்

http://images1.fanpop.com/images/photos/1300000/Love-Wallpaper-love-1370449-1024-768.jpg


பெண்ணே! நீ சிரித்தாய்!

பெண்டாட்டி தாசர்களுக்கு முல்லையும் மல்லிகையும் வாங்காத

நினைவு வந்தது.. 


பிரம்மச்சாரிகள் பத்து பேர் பைத்தியம் ஆனார்கள்.. 

பஸ் ஸ்டேண்டில் பஸ் ஆக்சிடெண்ட்.. 

கன்னிப்பெண்களுக்கு
உன் சிரிப்பிற்கு ஈடான முத்து மாலை வாங்கி விட வேண்டும் என்ற 

அழுத்தமான அபிப்ராயம்.. 

தூக்குத்தண்டனைக்கைதிகளுக்கு

கடைசி ஆசையாய்

உன் சிரிப்பைக்காண வேண்டும் என்ற 

அடக்க முடியாத ஆர்வத்துடிப்பு.. 


நந்தியா வட்டைப்பூ உன் புன்னகை கண்டு பொறாமையில்
ஒரு மாற்று கருத்தது!!


------------------------------------

http://tipstrickstutorials.com/wp-content/uploads/Love_and_Romance_Wallpapers109.jpg

கண்மணி! உன்

கண்களைத்திற! வீட்டில் 

கரண்ட் கட்


----------------------------------------

வீட்டில் விளக்கு அணைந்து விட்டது , 

கொஞ்சம் சிரி பெண்ணே!

தீப்பெட்டி தேட வேண்டும்!

-------------------------------------------

ஈருடல் ஓர் உயிர் ஆகினர்.

. மீண்டும் ஓரு உயிர்!

---------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlc_ZnIrrNQMEF_oNpQ1hPE4slhOx5bL2ybqoU7ZjbkcajHICoyRscxNz8vopCwvn1EXVigose3CrRQa84QSI-8eQ1XL__6bYzOyBTN9aZY9z37S5zS49TRQBDsRpJF4_NJElb9mOstmvM/s1600/Love+Wallpaper+Blog+%252822%2529.jpg

கண்ணே!

நான் எனது கண்களைக்கூட சிமிட்டுவதில்லை.....

உன் பார்வைப்பரிமாறல்களை

இழந்து விடக்கூடாது என்பதற்காக.. 

ஆனால் நீயோ உன் 

கண்களுக்குத்திரை போட்டுக்கொண்டு இருக்கிறாய்.. 

ஓவியப்போட்டிக்கு உன்னை வரைந்து அனுப்பினேன்.. 

விலாசம் மாறி விட்டது என்று கவிதைப்போட்டிக்கு 

அதை அனுப்பி விட்டனர்..


கவிதையாய் இருந்த நீ 

கல்லாய் மாறிய மர்மம் என்ன?

Wednesday, February 01, 2012

நிம்மிக்குட்டி-25 , 25, 25 - காதலர் தின சிறப்பு சிறுகதை

http://www.freeorkutscraps.com/orkut/love-scraps/love-scraps-for-orkut.jpg

மணி ஐந்தடித்தது...,

ஒவ்வொருத்தராக வீட்டுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.  நிர்மலா இன்னும்
கம்ப்யூட்டருக்குள் தலையை விட்டுக்கிட்டு இருப்பதை பார்த்து ஆச்சர்யபட்ட
லதா, நிர்மலாவின் கேபினுக்குள் சென்றாள்.


நிர்மலா, மணி ஐந்தடிச்சிடுச்சுப்பா.எல்லாரும் போறாங்கப்பா

ம்ம்ம், பார்த்தேன் பார்த்தேன்..,

ஏய், கிளம்புப்பா, இன்னிக்கு லவ்வர்ஸ்டே... எனக்காக என் ஹப்பி
காத்திக்கிட்டு இருப்பார்.


சரி, நீ கிளம்புறதுன்னா கிளம்பு யார் வேண்டாம்ன்னு சொன்னாங்க.

ஏய் என்னடி ஒரு மாதிரி பேசுற. இன்னிக்கு லவ்வர்ஸ்டே மட்டுமில்லைடி.
உன்னோட பிறந்தநாளும் கூட. உனக்கு நினைவில்லையா?


ம்ம்ம் இருக்கு இருக்கு. ஸோ வாட்?

என்னது ஸோ வாட்? என்னடி ஒரு மாதிரியா பேசுற. நீ முதல்ல  எழுந்திரு. நாம
கெளம்புலாம். போற வழில பேசிக்கிட்டே  போகலாம்ன்னு நிர்மலாவை ஆபீஸை விட்டு கூட்டி வருவதற்குள் லதாவுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

ஏன்? என்னாச்சு? இன்னிக்கு லவ்வர்ஸ்டே. கூடவே உன் பொறந்த நாளும்கூட
 உனக்கு. திருமணமாகி மூணு மாசம்தான் ஆகியிருக்கு. தனித்தனியா இந்த மூணும் வந்திருந்தாலும் இதுதான் சாக்குன்னு கொண்டாடுவாங்க நியூலி மேரிடு கப்பிள்ஸ். உனக்கு மூணும் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கு செலிபரேட் பண்ணாம ஆபீசுக்கு வந்திருக்கே. காலைல இருந்தே நீ சரியில்லை. முகமே வாட்டமா இருந்துச்சு. காலையிலேயே கேட்கனும்ன்னு நினைச்சேன். வொர்க் லோட் அதிகமா இருந்ததால் பேச முடியலை. ம் ம் சொல்லு என்ன உன் பிரச்சனை?

என்னன்னு சொல்றது.நீ சொல்றதுப் போல இன்னிக்கு மூணு ஸ்பெஷலும்  ஒண்ணா சேர்ந்து வந்திருக்கே. நல்லா செலிபரேட் பண்ணனும்ன்னு நானும் ஒரு வாரமாவே நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால், அவர் என்ன ஏதுன்னு கண்டுக்கலை. சரி, சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு  நைட் 12 அடிக்கும்போது எதாவது கிஃப்ட் தந்து விஷ் பண்ணுவாருன்னு தூங்குறமாதிரி நடிச்சுக்கிட்டு ஆசையோடு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். ம்ஹூம் நான் நினைச்சமாதிரி ஏதும் நடக்கலை. கும்பகர்ணனோட வாரிசுபோல தூங்கறார்.


ஐயோ, அப்புறம்...,

காலையில விஷ் பண்ணுவாருன்னு என்னை நானே தேத்திக்கிட்டு தூங்கிட்டேன்.நான் எந்திரிக்குறதுக்கு முன்னாடியே எந்திரிச்சு, டைனிங்க் டேபிள்ல லெட்டர் எழுதி வச்சுட்டு ஆபீஸ் போய்ட்டார். இந்த டைம் வரைக்கும் போன் பண்ணி விஷ்ஷும் பண்ணலை சாரியும் கேட்கலை. ஒரே வெறுப்பா இருக்குப்பா.


ம்ம்ம். சந்துரு ஏன் இப்படி நடந்துக்குறார். நான் ஒண்ணு கேட்பேன். உண்மையை சொல்வியா நிர்மலா?


ம்ம் கேளு லதா.


உனக்கும், சந்துருக்கும் ஏதும் சண்டையா?

http://iosifthoughts.files.wordpress.com/2011/01/love.jpg


அப்படிலாம் ஏதுமில்லைப்பா. அப்படி இருந்தால் உன்கிட்ட சொல்லியிருப்பேனே.


சந்துரு வீட்டுல இருந்தால் எதாவது பேசிக்கிட்டு சீண்டிக்கிட்டும், கொஞ்சிக்கிட்டும் இருப்பார். நேத்து நைட்ல இருந்துதான் சைலண்டா இருக்கார். என்ன காரணம்ன்னும் தெரியலை. ரெண்டு நாளா சீரியஸா ஏதோ திங்க் பண்ணிக்கிட்டே இருக்கார். இந்த ரெண்டு நாளில் நான் சந்துருவை ரொம்ப மிஸ் பண்றேன்ப்பா.


சரி சரி அழாதேப்பா. கண்ணை தொடைச்சுக்கோ எல்லாரும் பார்க்குறாங்க பாரு. அவனுக்கு என்ன பிரச்சனையோ? தெரியலையே. இன்னிக்கு ஏதும் கேட்காதே. அப்புறம் பர்த்டேதான் உனக்கு முக்கியமா போச்சான்னு கத்துவான். நாளைக்கு கேட்டுக்கோ. ஓக்கே. மனசை போட்டு குழப்பிக்கிட்டு இருக்காம தெளிவா இரு. எனக்கு பஸ் வந்துட்டுது. நான் வரேன். பை நிர்மலா.


குட்பை ப்பா.ன்னு சொல்லிவிட்டு மனம் அமைதிப்பட நடந்தே வீடு வந்து சேர்ந்தாள். தன்னிடமிருந்த சாவியால் பூட்டை திறந்து உள்ளே சென்று ஆயாசமாய் சோஃபாவில் விழுந்தவள் அப்படியே தூங்கி போனாள்.


ஹேப்பி பர்த்டே டூ யூ..., ஹேப்பி பர்த்டே டூ யூ நிர்மலா ந்னு சத்தம் கேட்டு எழுந்தவளை வாரி அணைத்தவனை கோபத்துடன் தள்ளி விட்டாள். இந்த பாழாப்போன விஷ்ஷை காலையிலேயே சொல்றதுக்கென்ன? நான் எப்படி ஏமாந்துப்போனேன் தெரியுமாடா? மறந்துட்டு இப்போ ஆசை இருக்குற மாதிரி நடிக்குறியா? என்று காலையில இருந்து தேக்கிவைத்த ஏமாற்றத்தை கோவமாய் கொட்ட தொடங்கினாள்


நிர்மலா குட்டி கோச்சுக்காதடா. என் செல்லத்தோட பர்த்டே வை மறப்பேனா? உன் பர்த்டே, அதுவும் இருபத்தைந்தாவது, அதலயும் லவ்வர்ஸ்டே அன்னிக்கு
வந்திருக்கு. அதானால இந்த ஸ்பெஷல் டேவை நம்ம வாழ்நாள் முழுக்க மறக்க கூடாதுன்னு  ஒரு வாரமா பிளான் பண்ணவனை இப்படிலாம் பேசலாமா டார்லிங்.

”அப்படி பிளான் பண்ணி என்னத்தை கிழிச்சே” என்றாள் சற்றும் கோவம் குறையாமல்...,

சர்தான் போடி நானும் எவ்வளவோ கெஞ்சுறேன். என்னமோ பெரிய இவளாட்டம் முறைச்சுக்கிட்டு இருக்கியே, நீயெல்லாம் பொறந்து என்னத்த சாதிச்சே. 

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்ன்னு சொல்றது உன் விஷயத்துல சரியாத்தான் போய்டுச்சு. மானே, தேனே, தேவதைன்னு கொஞ்சிட்டு இப்போ பொறந்து என்ன சாதிச்சேன்னா கேட்குறே. இந்த ஆம்பிளைங்களே இப்படிதாண்டா.

ஆமாண்டி, என்னத்த பண்ணி தொலைக்குறது. கல்யாணம் ஆன புதுசுல எல்லா
ஆம்பிளங்களும் செய்ற அதே தப்பைதான் நானும் செஞ்சு தொலைச்சேன். அதான் இப்படி தலை மேல ஏறி உக்காந்துக்கிட்டு ஆட்டம் போடுறே. தலை வலிக்குது. போய் காஃபி போட்டு எடுத்துக்கிட்டு வாடி

ம்க்கும், இதுக்கு மட்டும் நான் வேணுமாக்கும். நீயே போய் போட்டு குடிடா.

ஏய், என்னடி வாய் நீண்டுக்கிட்டே போகுது. ஒரு அறை விட்டேன்னா நாலு
நாளைக்கு எந்திரிக்க மாட்டே. பொறந்த நாளாச்சேன்னு பார்க்குறேன்ன்னு
ஓங்கிய கையை மடக்கியவனை பயத்துடன் பார்த்துக்கொண்டே சமையலறைக்குள் போனவளை,

ஏய், சனியனே! நீ இப்போ கட்டி இருக்குறது நான் வாங்கி குடுத்தது. விலை
2,750 ரூபாய். கிச்சனுக்கு போய் அதை பாழாக்காதே. போய் நைட்டி மாத்திக்கிட்டு வந்து காஃபி போட்டு குடு.

என்ன ஆச்சு இவனுக்கு என்று எண்ணி வியந்தவாறே பெட்ரூமுக்குள் சென்றவளை தொடர்ந்து வந்தவன் சட்டென்று இழுத்து ஆக்ரோஷமாய் முகம் முழுக்க முத்தமிட்டவன்...,

உன் இருபத்தைந்தாவது பிறந்த நாளுக்காக இருபத்தைந்து பூக்களால் செய்த
”பொக்கே” இந்தா என்று முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை நீட்டினான். இருபத்தைந்து ரக ஸ்வீட், இருபத்தைந்து டிரெஸ்ன்னு எல்லாமே இருப்பத்தைந்தாக பரிசா தரனும்தான் ரெண்டு நாளா அலைஞ்சு திரிஞ்சு வாங்கினேண்டி என் அருமை பொண்டாட்டி. பொக்கே வரதுக்குதான் லேட்டாகிடுச்சு அதுக்குள்ள இந்த குதி குதிக்குறியேடி கேணை கிறுக்கச்சி.
போடா, என்று சினுங்கியவளின் உதடுகளில் அவன் இட்ட தாய் முத்தம்
இருபத்தைந்து குட்டி முத்தங்களை பிரசவித்து ஓய்ந்தது.

டேய் பொறுக்கி, என்னை காலைல இருந்து அலைக்கழிச்சதுக்காக உனக்கு தண்டனை தரப்போறேண்டா.

சொல்லுங்க மகாராணி, என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று நாடக பாணியில் குத்துக்காலிட்டு அமர்ந்தவனிடம்
“உன் மீசை குத்தி என் கன்னம் சிவக்கும்வரை நீ முத்தமிட்டு கொண்டே
இருக்கனும்” என்றாள் குறும்பாக.

அடிப்பாவி, இப்போதானேடி ஷேவ் பண்ணேன் என்று அப்பாவியாய் கூறிக்கொண்டே முத்தமிட தொடங்கினான்...,

Monday, February 14, 2011

அடுத்த வாரம் ஆனந்த விகடன்-ல் வரப்போகும் காதலர் தினம் ட்வீட்ஸ்


http://chabrieres.pagesperso-orange.fr/paintings/magritte_lovers_1928.jpg
1. ஆஃபீஸ்ல யாருக்கும் இனைக்கு லீவ் இல்லைன்னு மேனேஜர் சொல்லீட்டாரு.. 8 மணி நேரம் பர்மிஷன் மட்டும் கேட்டுப்பாக்கலாமா? #முயற்சி

----------------------------------------------
2. லவ் ஃபெயிலியர்ஸ் கேஸூங்க யாரும் வருத்தப்படவேண்டாம்.மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ் மாதிரி தோல்வியும் தோல்வியும் ஜோடி சேரலாமே? #ஐடியா

-----------------------------------------

 3. காதலர் தினத்துக்கு பச்சை டிரஸ் போடனுமாம். மறந்துட்டேன்,அதுக்குப்பதிலா பச்சை பச்சையா பேசிடலாமா? #டவுட்டு

--------------------------

4. பிட்டுப்படம் ஓடற தியேட்டர் எல்லாம் இனைக்கு காத்து வாங்கும்.பீச்ல, பார்க்ல லைவ் ஷோ பார்க்க லைன் நிக்குது.நான் ரெடி.. நீங்க?

------------------------------------------

5. கள்ளக்காதல் ஜோடியை எப்படி அடையாளம் காண்கறது?துப்பட்டாவால முகத்தை மட்டும் மூடி இருப்பாங்க #உல்லாசங்கோ,உற்சாகங்கோ.

--------------------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPcw8W3LP-oojjN0l1srZzjoP_09FSRZXVGBI5xdj2dBbxp7VWlOFjH73nGkH3UoqrfVJu7UngKMQnBB_76SiyB80ob-uDzXLB5epzg6pzcpLp42byRQbl8VhmI4rRdnEyc24qFmd1bBA/s640/south-indian-aunty-at-chennai-marina-beach-600x450.jpg


 6.  காதலர் தினம்னு ஏன் பேரு? காதலி தினம் ஏன் இல்லை? பொண்ணுங்க தான் ஆள் மாத்துவாங்க#ஆணாதிக்கம் வாழ்க

-----------------------------------------------------


 7. ஆர் கே செல்வமணி இன்னைக்கு வெளிலயே போக மாட்டாரு, ஏன்னா இன்னைக்கு ரோஜாக்கு டிமாண்ட் ஜாஸ்தியாம்# வாழ்க 14

------------------------------------------------

 8.  பீச்ல ஒரு பொண்ணும், 2 பசங்களும் ஜோடியா போனா  அது த்ரீ வே லவ்.ஒருதலைக்காதல் அல்லது தறுதலைக்காதல்#கலியுகம்

---------------------------------------------------

9.  இன்னைக்கு மட்டும் லேட்டா வீட்டுக்கு வந்தா சந்தேகப்படுவேன் - மனைவி.

நேரத்துலயே வந்தா?   ஹி ஹி சந்தோஷத்துல மேல படுவேன்.

-------------------------------------------
10. காதலி உள்ளவன் ஒரே ஒரு ஃபிகரை தள்ளீட்டு போறான்.இல்லாதவன் பல ஃபிகருங்களை கண்ணால அள்ளீட்டு போவான்.

-----------------------------------------------

 டிஸ்கி 1- டைட்டிலுக்கான விளக்கம்.இந்த ட்வீட்ஸ் எல்லாமே நான் எழுதுனதுதான். நான் எழுதுனதை நானே ரசிக்கலைன்னா எப்படி?இதுல எல்லாத்தையும் விகடன்ல செலக்ட் பண்ணாட்டியும் ஒண்ணாவது தேறும்னு நினைக்கறேன்.

டிஸ்கி 2 - மேலே இருக்கற முத ஸ்டில்லுல நான் இல்ல. 2வது ஸ்டில்லுல இருக்கற ஆண்ட்டி ( நான் கரெக்டாதானே சொன்னேன்?- சங்கிலி முருகன்)
யாருன்னும் எனக்கு தெரியாது.. ஹி ஹி