Showing posts with label பார்வதி. Show all posts
Showing posts with label பார்வதி. Show all posts

Monday, March 02, 2015

உத்தம வில்லன் - அப்டேட்ஸ்

கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பார்த்திபனின் நகைச்சுவையான பேச்சு, கே.பியைப் பற்றி கமல் உருக்கம், ஊர்வசியின் எதார்த்தமான பேச்சு என பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின.
அவற்றின் சிறு தொகுப்பு இதோ:
* 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவினை நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார். அப்போது கமல் என்ற மூன்று எழுத்துக்கு என்ன அர்த்தம் என்று தெரிவித்தார். க - கலைகளில், ம-மரணமே, ல் - இல்லாதவன் என்று பார்த்திபன் கூறினார்.
* மறைந்த இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதம் ஒலி வடிவில் திரையில் கமல் - கே.பி படங்களோடு ஒளிபரப்பப்பட்டது. அதன் இறுதியில் 'I'm Proud of you my Son', ’டேய் கமல்.. ரொம்ப பெருமையா இருக்குடா’ என்ற வரிகள் முடியும் போது மேடையில் தோன்றினார் கமல்.
* கே.பாலசந்தரைப் பற்றி கமல் பேசும் போது, அவரின் பேச்சுக்கு இடையே சில மெளனமான தருணங்கள் இடம் பெற்றன. மிகவும் நெகிழ்ச்சியான பேச்சைத் தொடர்ந்து கே.பாலசந்தருக்கு கமல் எழுதிய கவிதை ஒன்று ஒளிபரப்பட்டது. இக்கவிதையை இங்கே வாசித்தால் அழுதுவிடுவேன் என்பதால் திரையில் காணுங்கள் என்று கூறிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார் கமல்.
* கே.பி. சாரின் பாதி தான் கமல் ஆகையால் நான் அவருக்கு செய்ய நினைத்ததை கமலுக்கு செய்கிறேன் என்று கமல் காலில் விழுந்து வணங்கினார் நடிகர் பார்த்திபன்.
* நாசர், தனது மகன் கார் விபத்தின் போது ஏன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்று விளக்கம் அளித்த போது கண் கலங்கியபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் நடிகை கவுதமி. "கமல் கொடுத்த அறிவுரையின்படி நான் வாட்ஸ்-அப்பில் வந்த எனது மகனின் விபத்து படங்களைப் இன்று வரை பார்க்கவில்லை" என்று நாசர் தெரிவித்தபோது கமல் கையை உயர்த்தி 'சூப்பர்' என்று தெரிவித்தார்.
* இசை நிகழ்ச்சியின் நடுவே அவ்வப்போது கே.பாலசந்தர் 'உத்தம வில்லன்' படத்தைப் பற்றி பேசியது மற்றும் படம் உருவான விதம் ஆகியவற்றை திரையிட்டார்கள்.
* "எனது பாத்திரத்தின் பெயர் மார்க்கதரிசி. யார் எந்த மார்க்கதரிசி என்றால் என்னுடைய உண்மையான பாத்திரம் தான்" என்று கே.பாலசந்தர் தனது வீடியோ உரையில் கூறினார்.
* கமல் நடிப்பில் வெளியான படங்களில் வரவேற்பு பெற்ற பாடல்களுக்கு பார்வதி நாயர் மற்றும் பூர்ணா ஆகியோர் நடனமாடினார்கள்.
* ஊர்வசி, பார்வதி, பூஜா, ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் படத்தைப் பற்றி சில தகவல்களை கூறினார்கள். ஆனால், அவர்களை கிண்டல் செய்து சிரிப்பலைகளை அள்ளியது என்னவோ பார்த்திபன் தான்.
* ஊர்வசி பேசும்போது "நான் கர்ப்பமாக இருந்ததை கமலிடம் கூறவில்லை. படப்பிடிப்பிற்கு வந்த 2வது நாளே, 'என்ன கர்ப்பமா?’ என்று கமல் என்னிடம் கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சில மாதங்கள் கழித்து, நான் டப்பிங் பேசும் போது கூட 3 நாட்களில் சீக்கிரம் முடிந்து விடுங்கள் என்று கூறினார். அவர் கூறியது போல எனக்கு மூன்று நாள் கழித்து பிரசவம் ஏற்பட்டது" என்றார்.
* "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடலை மேடையில் பாடினார் பார்வதி மேனன். அவரோடு தனது இருக்கையில் இருந்தவாறே "லாலா லாலா" என்று இணைந்தார் கமல்ஹாசன்.
* பார்த்திபன், நான் ஆண்ட்ரியாவிடம் இசையமைப்பாளரைப் பற்றி கேட்கப் போகிறேன் என்று கூறிய போது அரங்கில் பயங்கர சிரிப்பலை. உடனே நான் இசையமைப்பாளர் ஜிப்ரானை சொன்னேன்பா, இப்படி ஏன் என்னை மாட்டி விடுகிறீர்கள் என்று தப்பித்தார்.
* லிங்குசாமி பேசும்போது, இதுவரை நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறோம். ஆனால், எங்களது நிறுவனம் லோகோவில் நான்கு பேர் இருப்பார்கள். இந்த விழாவிற்கு முதன் முறையாக எனது பெரியண்ணன், சின்ன அண்ணன் வந்திருக்கிறார்கள். அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் என்று அழைத்தார். அவர்கள் இருவருமே கமலிடம் போய் அவரும் மேடைக்கு வர வேண்டும் என்று கூற, அவர்களோடு மேடை ஏறினார் கமல்.


* Single Kisske என்ற பாடலை மேடையில் பாடப்பட, திரையில் அப்பாடல் உருவான விதம் திரையிடப்பட்டது, இப்பாடலில் உங்களுக்கு ஆச்சர்யம் காத்திருக்கிறது என்று கூறினார் பார்த்திபன். அந்த ஆச்சர்யம் என்னவென்றால், அப்பாடலில் இடையே வரும் இசைக்கு கமல் ஆடிய நடனம் திரையில் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் விசில் சத்தம் அரங்கை அதிரவைத்தது.
* இவ்வளவு பெரிய படத்திற்கு நான் இசையமைக்க காரணம் கமல் சார். அவரின் இசை ஞானம் என்னை வியக்க வைத்தது என்று தனது பேச்சில் குறிப்பிட்ட்டார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
* இளையராஜாவோடு 100 படங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். இந்த இசை ஞானம் கூட இல்லாவிட்டால் நான் மடையன் என்று தனது உரையில் ஜிப்ரானுக்கு பதிலளித்தார் கமல்
* பாடல்களைப் பற்றி மதன் கார்க்கி, லிங்குசாமி, ஞான சம்பந்தம், சுப்பு ஆறுமுகம், விவேகா, பார்த்திபன் ஆகியோருடன் கமலும் அமர்ந்து பாடல் வரிகளைப் பற்றி கலந்துரையாடினார்கள்.
* இறுதியாக இசை வெளியீட்டின் போது குறுந்தகட்டை எடுத்து வந்தார்கள். அப்போது கமல், "இந்த தகட்டை இப்போது யார் வாங்குகிறார்கள். இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அனைவருமே இப்போது இணையத்தில் தானே பதிவிறக்கம் செய்கிறார்கள்" என்று கமல் கூறினார்.
* உடனடியாக கமல், மும்பையில் இருக்கும் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு FACETIME மூலமாக கமல் வெளியிட ஸ்ருதி பெற்றுக் கொண்டார்.
* "யாருமே மொபையில் ஷுட் செய்தாதீர்கள். உங்களுக்காகவே இணையத்தில் ட்ரெய்லரை வெளியிட்டு விட்டோம். உட்கார்ந்து கண்டு களியுங்கள்" என்று ட்ரெய்லர் திரையிடும் முன்பு கூறினார் கமல்ஹாசன்.

'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன் படத்தின் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளத்தை வெளியிட, மும்பையில் இருக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் FACETIME தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டு விழா தொடக்கத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தர் கமலுக்கு எழுதிய கடிதம் ஒலி வடிவில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் மேடையில் தோன்றினார்.
அதனைத் தொடர்ந்து கமல் பேசியது:
இந்த இசை நிகழ்ச்சிக்காக நிறைய ஒத்திகை பார்த்து வந்தேன். இப்போது பாலசந்தர் சார் பேசிய வார்த்தைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. நான் ஒத்திகை பார்த்த அனைத்தையும் என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை.
எனக்கு அவருக்குமான உறவு 40 ஆண்டுகளைக் கடந்த உறவு. பாலசந்தர் சாரைப் பற்றி தாமதமான நினைவுக் கூறல் என்றாலும் அவரது இறப்புக்கு பிறகு பல மேடைகளில் பேசியிருக்கிறேன். என்னைப் போல நிறையப் பேருக்கு பாலசந்தர் அவர்கள் அடையாளமாக இருந்திருக்கிறார். எனக்கு அவர் குரு அல்ல, மகா குரு.
'உத்தம வில்லன்' படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்ட போது, மறுப்பு ஏதும் சொல்லாமல் நடிக்க வந்தததுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு மேடையில் அவர் இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால், பல தகவல்களை சேகரிக்காமல் விட்டு விட்டேன். பார்த்திபன் பேசும் போது, கே.பி.சாரின் பாதிதான் கமல் என்றார். அந்த வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கர்வமாக இல்லாமல் உரிமையோடு, கடமையோடு ஏற்றுக் கொள்கிறேன். அந்த உரிமையையும், கடமையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவரின் நிழலாக இருந்து அவரின் பணிகளைத் தொடர்வேன்.
ரஜினியும், கமலும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். ரஜினி கூட 'முரட்டுக்காளை' மாதிரியான படங்களில் நடித்து நடிகனாக வளர்ந்திருப்பார். ஆனால், பாலசந்தர் சார் மட்டும் இல்லை என்றால் இப்போது இருக்கிற கமல் வேறு ஒரு கமலாக மட்டுமே இருந்திருப்பேன்.
இனிமேல் நான் வாழும் வாழ்க்கையில் அவரை மறவாமல் வாழ்வதே என்னுடைய முக்கியமான பணி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


நன்றி - த  இந்து

Friday, July 19, 2013

மரியான் - சினிமா விமர்சனம்



ஹீரோ   சரக்கு  அடிக்கும்  நல்ல (!?) மீனவர். இவர் அதே ஊரில் மீனவரொருவரின் மகளை லவ்வறார். அவருக்கு   ஊருக்குள்ளே கடன். சொந்த அம்மா அப்பா கடன்  வாங்குனாக்கூட தமிழன் அதைப்பத்திகவலைப்பட  மாட்டான். ஆனா காதலிக்கு கடன்னா? துடிச்சுடுவான். 


 வில்லன்  கொடுத்த  பணத்தை  கரெக்ட் பண்ண ஹீரோயினை   மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறான் . ( மேரேஜ் பண்ணிட்டா அவன் என்ன வில்லன் ? ) ஆனா  ஹீரோ விடலை .  2 வருஷ காண்ட்ராக்ட்ல   ஃபாரீன் போறார்.  திரும்பி வரும்போது   2 ஜி யை  அடிச்ச ஆ ராசாகுரூப்பை  விட பயங்கர கொள்ளைக்காரங்க கிட்டே  மாட்டிக்கறார். அப்புறம் என்ன ஆச்சு? இதுதான் மரியான் .


சும்மா சொல்லக்கூடாது , கமல் , விக்ரம்க்குப்பிறகு நடிப்புக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும்  ஹீரோக்கள் லிஸ்ட்ல்  தனுஷ்  சர்வசாதாரணமா  சைன்  பண்ணிட்டார் .  பிரமாதமான நடிப்பு . ஆங்காங்கே  கமல் ( நாயகன் ) ரஜினி ( தளபதி )  சாயல்  இருந்தாலும் சந்தேகமே இல்லாம தனுஷ்க்கு இது ஒரு மைல் கல் படம் தான் . வெல்டன் சார் 




ஹீரோயின் பூ பட நாயகி பார்வதி . தமிழ் சினிமா   உலகம் வெட்கப்படும் அளவுக்கு பிரமாதமான நடிப்பு   இவருடையது.  திறமையை மட்டும் காட்டிட்டு இருந்தா தமிழன் ஒத்துக்க மாட்டான்னு பூ படம் கத்துக்குடுத்த பாடத்தை மறக்காம   ஒளிப்பதிவாளர்  உதவியுடன்    தாவணி  இல்லாம வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டு   லோ ஆங்கிள் ஷாட்ஸ் மட்டும் 45இடங்கள் ல  வர்ற மாதிரி செம காட்டு காட்டி இருக்கார் .  முழு நிலா மாதிரி முகம் இருக்கும் பார்வதி   பிறை நிலாக்கள்  தெரிய ஓடி வரும் காட்சிகள் காம்ப்ளான்


கவிதாயினி குட்டி ரேவதி  படத்துக்கு  சீனியர்  அசோசியேட் டைரக்டர்  ஜாப் . டைட்டில் ல அவர் பேரைப்பார்த்ததும்  பெண்ணிய காட்சிகள் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா  ஹீரோ   ஹீரோயினை  தேவையே இல்லாம இடுப்புல ஓங்கி உதைக்கும்  பழம் பஞ்சாங்க காட்சி தான் வருது . காம்ப்ரமைஸ்? 


முக்கியமான ஆள் ஏ ஆர் ரஹ்மான் . 2 பாட்டு சூப்பர் ஹிட்டு .  பி ஜி எம் ல உழைப்பு பத்தாது ( இளையராஜா  மாதிரி ஃபேமஸ் ஆகனும்னா  பி ஜி எம் ல சைன் பண்ணனும்-இது எல்லா இசை அமைப்பாளருக்கும் பொருந்தும் ) படம்  பாலைவனத்துல பயணம் செய்யும்போது    பின்னணி இசைல கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கார். ஒளிப்பதிவு பக்கா,. கடல் அடியில்  காமரா வெச்சு எடுக்கப்பட்ட காட்சிகள் அழகு . 


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்



1.  ஏ ஆர் ரஹ்மானை புக் பண்ணி படத்துக்கு சர்வதேச மார்க்கெட்டை பிடிச்சது . ராஞ்சனா ஹிந்தில ஹிட் ஆன பின் சாமார்த்தியமா   இப்போ ரிலீஸ் பண்ணியது . 



2.   போஸ்டர்  டிசைன்ல  நல்ல லவ் ஸ்டோரி மாதிரி பில்டப் கொடுத்தது .  பார்வதியை   முழுக்க முழுக்க  கிளாமராவும் , கேரக்டர்வைஸும் நல்லாஆஆ யூஸ் பண்ணிக்கிட்டது



3. பின் பாதியில்   படம் ரொம்ப ட்ரை ( dry )  தெரிந்தும் தைரியமாய்    படத்தை   ரியலிஸ்ட்டிக்காய் எடுத்தது


4.   பாலை வனத்தில்  ஹீரோ புல் சாப்பிடும் காட்சி . 2 புலிகளிடம் மாட்டிக்கொள்ளும் லைஃப் ஆஃப் பை உல்டா காட்சி  . தியேட்டரில்; செம ரெஸ்பான்ஸ் 


5.  நமீபியா  , சூடான் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியது


 இயக்குநரிடம் சில கேள்விகள்  



1. மீனவரா வரும் ஹீரோ படகில் கடல் ல போறார். இன்னொரு படகு அருகில் வந்ததும் கிட்டே போய் தீப்பெட்டி வாங்கிட்டா மேட்டர் ஓவர் . அவர்   உடனே  கடல்ல  டைவ் அடிச்சு    நீந்தி அந்த படகு கிட்டே போய் தீப்பெட்டி வாங்கி வாய்க்குள்ளே அடக்கிட்டு   கடப்பாறை நீச்சல் அடிச்சு இந்த படகு வந்து ஏறுவது தான் ஹீரோயிசமா? செம காமெடி பாஸ். சிரி சிரினு சிரிக்கறாங்க .. படு கேவலமான ஹீரோயிச மேக்கிங்க்



2. வில்லன்  ஹீரோ கிட்டே ஃபோனை கொடுத்து கம்பெனில பேசி பணம்கேளு அப்டிங்கறார் . ஹீரோ டக்னுஹீரோயினுக்கு  ஃபோனைப்போட்டு  கடலை போட்டுட்டு இருக்கார் கட்டதுரை மாதிரி.  வில்லன் பே -னு பார்த்துட்டு இருக்கான் . பெண் குரல் எதிர் முனைல இருந்து கேட்காம போகுமா?  ( மொழி தான் புரியாது ,  பாவனை கூட தெரியாதா? )  அதைவிடக்காமெடி வில்லன் அவன் வீட்டு ஃபோனைஎதுக்கு  டமால்னு உடைக்கனும்? 


3. பணயக்கைதியா   3 பேரை  பிடிச்சு வெச்சவங்க  எதுக்கு  ஹீரோ வைக்  கொல்லாம    இன்னொரு ஆளை டக்னு கொல்றாங்க ? ஆளுங்க இருக்கற வரை அவங்களுக்கு லாபம் தானே?  ( அதிக பணயத்தொகை கேட்கலாம்)


4. இடைவேளைக்குப்பின்   அந்த நீக்ரோ பசங்க ஏன் லூசுங்கமாதிரிவானத்துல  துப்பாக்கியால  சுட்டுட்டே இருக்காங்க ? விலை வாசி எப்படி ஏறிக்கிடக்கு>? கொஞ்சம்   கூட பொறுப்பே   இல்லாம வேஸ்ட் பண்ணுவாங்களா?


5. ஹீரோ ஹீரோயினை லவ் பண்றார். ஆனா அதை வெளிக்காட்டிக்கலை . ஹீரோயின்  ஹீரோவைப்பார்க்க வரும்போது   ஹீரோவோட நண்பர் செத்திருக்கார் . ஹீரோயின்   வானு கூப்ட்டது ஒரு குத்தமாய்யா? வில்லனை விட கேவலமா   ஹீரோ தான்  உயிராய்  காதலிக்கும் காதலியை இடுப்புலஓங்கி  உதைக்கிறார்  . படு கேவலமான   ஆணாதிக்ககாட்சி மட்டுமல்ல . லாஜிக் மீறல் . பொண்டாட்டியை புருஷன் அடிப்பான் . ஆனா  காதலியை   காதலன்  அப்டி உதைக்க மாட்டான் 


6.   படத்தின்    திரைக்கதைக்கு தேவையே இல்லாமல்   ஹீரோ எதுக்கு தண்ணி அடிச்சுட்டே , தம் அடிச்சுட்டே  இருக்காரு ?  இதுதான் சாக்குன்னு தயாரிப்பாளர் செலவுல  சரக்கா?




7. பாலை வனத்துல பசி உள்ள   இரு புலிகளுக்கு நடுவில்   ஒரு ஆள் மாட்டினா   முதல்ல புலி ஆளை அடிச்சு கொன்னுடும். அதுக்குப்பின் தான்   அந்த 2 புலிகளும் தங்களுக்குள்ளே அடிச்சுக்கும் . ஆனா ஹீரோ வை புலிங்க கண்டுக்காம   அதுங்க 2ம் முறைச்சுக்கிட்டு  இருக்கு



8.  வில்லன்   ஹீரோயின்  கோயிலுக்குப்போய்  இருக்கும்போது ஹீரோயின்  செருப்பை தடவிப்பார்க்கறான் . அட பரதேசி . நீ லட்சக்கணக்குல ஹீரோயின் அப்பாவுக்கு கடன் கொடுத்திருக்கே . ரவுடி . டைரக்ட்டா  ஹீரோயினையே   பலவந்தமா தடவலாமே? கேவலம் அவ செருப்பை தடவி ஆம்பளைங்களையே அவமானப்படுத்திட்டியே?  மனசுக்குள்ளே   ராவணன் -னு நினைப்பா? 


9. வில்லன் ஹீரோயின்  செப்பலை காலால தடவிட்டு இருக்கும்போது 1 கிமீ தூரத்துல இருக்கும்   ஹீரோவுக்கு வில்லன் தன் காதலியோட செப்பலைத்தான் தடவறான்னு எப்படித்தெரியுது? பைனாகுலர் வெச்சிப்பார்த்தாரா?


10.  கதைப்படி   ஹீரோ  உள்ளூரில் இருந்து வெளியூரில் வந்து வேலைக்காக அல்லது  வேலையில்  சேர்ந்து  என்ன  கஷ்டம் எல்லாம் அனுபவிக்கறார் என்பதை  டீடெய்லாக சொல்லனும் . அப்போத்தான் பரிதாபம் வரும் .  ஆனா   அந்த எப்பிசோடே இல்லை படத்துல . திரைக்கதையின் பெரிய பலவீனம் அதுதான்


11 . ஹீரோவின் அம்மா , ஹீரோயின் பேசும்  மாமியார் மருமக சண்டை வ்சனங்கள்  மண் வாசனை காந்தி மதி  டூ ரேவதி , சின்னக்கவுண்டர்   மனோரமா டூ சுகன்யா வசனங்களின் அப்பட்டக்காப்பி . # ஏம்மா தேவிப்ரியா நோட்  இட்


12.   அப்புக்குட்டி , இமான்  இருவரும்  வீணடிக்கப்பட்டிருப்பது ஏனோ?


13. வில்லன் எப்பவும் பாலை வனத்திலேயேஇருப்பவன் . ஹீரோ  கடல் வாசி . ஆனா ஹீரோ வில்லனை சர்வசாதாரணமா  அடிச்சு ஜெயிப்பது எப்படி ?


14. ஹீரோ  சுறா மீன் ,திமிங்கிலம் வகையறா மீன்களை பிடிப்பதில் கில்லாடி . அப்படி வாரம் 2 மீன் பிடிச்சா செம காசு வருமே? எதுக்கு பிஸ்கோத்த்து 2 லட்சம் ரூபாய்க்காக அடிமையா சூடான் போகனும்?


15.  ஏ ஆர் ஆர் வழக்கமா வம்பு தும்புக்கு போகாதவர் , ஆனா பாடல் வரிகளில்   என்ன ஆச்சுராசா உனக்கு?  நான் தான் கடல் ராசா என இளைய ராஜாவை வம்புக்கு இழுக்கும் வரிகள் எதுக்கு?


மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஆம்பளையோட வீராப்பெல்லாம் பொம்பளை மூச்சுக்காத்து படற வரைக்கும் தான்.பட்டுட்டா அவன் கோலிசோடா தான்



2. யாரையாவது பிடிச்சிருந்தா ஒண்ணா குத்தகைக்கு எடுக்கனும்.இல்ல கொள்முதல் பண்ணிடனும். பம்மிட்டு இருக்கப்படாது



3. கடலும் பொண்ணும் ஒண்ணு.எத்தனை தடவை பார்த்தாலும் புதுசுதாம்லே


4.  ஹீரோயின் - உன் கண்ணுல என்னை நான் பார்த்துட்டேன்யா.மறைக்காத # நீ தாம்மா மறைக்காம ஓப்பனா இருக்கே.அவர் சர்ட் போட்டிருக்காரு



5. யோவ்.என்னை பிடிக்காதுன்னே.ஆனா என்னையவே பார்த்துட்டு இருந்தே? உன் கூட இருந்தவளையும் தான் பார்த்தேன்.அதுக்கு ?


6. தீக்குச்சி தீப்பெட்டிலயே இருந்தா எப்டி பத்திக்கிம்? உரசனும்.போ.அவனை உரசு # அடேங்கப்பா கண்டுபிடிப்பு அடேய் -))



7. ஹீரோ பஞ்ச் - மரியான் பிடிக்காத வேலையை செய்ய மாட்டான்.பிடிச்ச வேலையை செய்யாம விடமாட்டான் # தியேட்டரை விட்டு வெளியே போக விடமாட்டான் ( ஹீரோ ஃபிரண்ட் பேசும் வசனம்)


8. எங்காளுக்குப்போட்டியா ஷாருக்கான் ரா ஒன் எடுத்தாரு.ஊத்திக்கிச்சுல்ல? # மாப் ளை சப்போர்ட்டிங் டூ மாமா


9.   எல்லாரும்  நம்மை  மாதிரி மனுஷங்க  தானே?   புது ஊர்னாலும்  பழகிடும்


10 மரியான்னா   சாவே இல்லாதவன்னு அர்த்தம்  # சாகடிக்கப்போறான்னு அர்த்தம் இல்லையா? ஹி ஹி


11. சாதனை பண்றவனுக்கு பொம்பளை வாசனை பட்டுகிட்டே இருக்கணும்




படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 


1. ஏ ஆர் ஆர் க்கு பாடலில் வரும் ஹம்மிங்னா செம கொண்டாட்டம் போல


2. அய்யய்யோ.தனுஷ்க்கு பார்வதி வலியனாப்போய் லிப் கிஸ் தருது.தடுக்க முடியல :-(


3. ஆஹா.தனுஷ் கமல் மாதிரி ரஜினி மாதிரி எல்லாம் ட்ரை பண்றாரே


4. இடைவேளை விட்டாச்சு.ஆனா வெளில விடமாட்டாங்களாம் # மாட்டிக்கிட்டாங்க ஜனங்க.இது வரை படம் சுமாரு தான் குமாரு


5.  பம்பாய் பி ஜி எம் மை மரியான் ல எ ஆர் ஆர் சுட்டுட்டாரு.தேவிப்ரியாவுக்கு போன் போடேய்





ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  40

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் =  3  / 5


சி பி கமெண்ட் - - ஹீரோ ஹீரோயினுக்கு விருது நிச்சயம்.ஸெம ஆக்டிங் - ஆனா படம் அட்டர் பிளாப் - தனுஷ்  ரசிகர்கள் பார்க்கலாம் . பார்வதியை மேலோட்டமா ரசிக்க நினைப்பவர்கள் பார்க்கலாம் . மற்றவர்கள் டி வி யில் போட்டபின் பார்க்க. ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 



Tuesday, April 02, 2013

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்


சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த இ‌தயேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை, சிறுமி அபிராமிக்கு பொருத்தி, அச்சிறு‌மியை உயிர் பிழைக்க செய்த சென்னையில் நிஜமான சாதனை கதை தான் "சென்னையில் ஒரு நாள்" மொத்தபடமும்!
 சரத்குமார், ‌பிரசன்னா, பிரகாஷ்ராஜ், சச்சின், ஜெயபிரகாஷ், சந்தானபாரதி, பார்வதி, இனியா, மல்லிகா, லட்சுமி ராமகிருஷ்ணன், அக்ஷ்ரா, காப்பிரில்லா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பது "சென்னையில் ஒரு நாள்" படத்தின் பெரும் பலம்!

ஜெபி-லட்சுமி ராமகிருஷ்ணன் ஜோடியின் வாரிசு கார்த்திக் எனும் சச்சின். டி.வி.சேனல் நிருபராகி நிறையவே சாதிக்க வேண்டும் எனும் கனவில் இருக்கிறார். அவரது லட்சியப்படியே ஒருநாள் டி.வி. நிருபராகும் சச்சின், முதல்நாளே பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ்ஜை லைவ் பேட்டி எடுக்கும் வாய்ப்பை பெறுகிறார். 
 
அதற்காக நிறைய ஹோம் ஒர்க்குகளுடன் நண்பனின் பைக்கில் பேட்டி எடுக்க கிளம்புகிறார். வழியில் விபத்தில் சிக்கும் சச்சினுக்கு, மூளைச்சாவு ஏற்படுகிறது. உயிர் இருந்தும் பிரதேமாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சச்சினின் இதயத்தை, வேலூரில் உயிருக்கு போராடும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் - ராதிகா தம்பதிகளின் மகளுக்கு பொருத்துவதற்கு திட்டமிடுகின்றனர் மருத்துவர்கள்! முதலில் அதற்கு மறுக்கும் சச்சினின் பெற்றோர் பிறகு ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு சம்மதம் தெரிவிக்கின்றனர்.


சென்னை ஒய்.எம்.ஆரில் இருக்கும் அந்த பிரபல மருத்துவமனையில் இருந்து வேலூர் மருத்துவமனைக்கு 170 கிலோ மீட்டர் தூரம். அந்த தூரத்தை ஒன்றரை மணி ‌நேரத்தில் கடந்தாக வேண்டும். அப்பொழுதுதான் சிறுமிக்கு மாற்று இதயத்தை பொருத்தி அவரை உயிர் பிழைக்க செய்ய முடியும் எனும் நிலை! நகரத்திற்குள் நெரிசலான போக்குவத்து, நெடுஞ்சாலைகளில் சீறும் வாகனங்கள்... சிக்னல்கள், சிக்கல்கள் இதையெல்லாம் தாண்டி, சவாலை எதிர்கொள்ளும் போலீஸ் அதிகாரி சரத்குமார் தலைமையிலான டீம் சாதித்து காட்டியதா...? என்பது, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

சென்னை போலீஸ் கமிஷ்னராக சரத்குமார், முதலில் முடியாது முடியாது.... என்று மறுத்தாலும், முடிவில் 170 கி.மீ தூரத்தை ஒன்றரை மணிநேர பிராயாணம் எனும் சவாலுக்கு சம்மதிக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார். 
 
தன் மீது விழுந்த 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பழியை சமாளித்து அவப்பெயரை துடைக்க, உயிரை துச்சமென மதித்து அந்த சவாலான காரியத்தில் காரோட்டியாக களம் இறங்கும் டிராபிக் கான்ஸ்டபிள் சேரனை தவிர்த்து, டாக்டராக உடன் வரும் பிரசன்னா, அலட்டல் ஆக்டர் பிரகாஷ்ராஜ், அவரது யதார்த்த மனைவி ராதிகா, கொஞ்ச நேரமே வந்து இறந்து போகும் கார்த்திக்-சச்சின், அவரது காதலி பார்வதி, பிரசன்னாவிற்கு துரோகம் பண்ணும் இனியா, மல்லிகா, கார்த்திக்கின் நண்பர் மித்துன் எனும் அஜ்மல், டாக்டர் விஸ்வநாதன், ஜெயபிரகாஷ், அவரது மனைவி நிர்மலாவாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், எம்.பி.மணிமாறனாக வரும் சந்தான பாரதி உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

காசு கொடுத்து டிராபிக் கான்ஸ்டபிள் வேலைக்கு வந்தவர் மாதிரி அந்த பாத்திரத்தில் முரண் இயக்குனர் பொருந்தாமல் தெரிவது மைனஸ்! ஆனால் அந்த பலவீனத்தையும் பிரகாஷ்ராஜின் பில்-டப் காட்சிகளும், அவர் யதார்த்தம் புரியாமல் முன்னணி நடிகர் என்ற செல்வாக்கு இருப்பதால் எதையும் சாதிக்க முடியும் என பண்ணும் சேட்டைகளும், முரண் இயக்குனரின் மைனஸ்களை மழுங்கடிக்க செய்து, படத்திற்கு ப்ளஸை கூட்டுகின்றன! அதே மாதிரி நடிகர் எனும் பந்தாவில் மகளின் உயிருக்கு முடியாத உடல் நிலையையும் கருத்தில் கொள்ளாது அலப்பறை பண்ணும் பிரகாஷ்ராஜ்க்கு யதார்த்தத்தை புரிய வைக்கும் ராதிகாவின் நடிப்பு சூப்பர்ப்!

மெஜோ ஜோசப்பின் இனிய இசை, ஹேஹநாத் ஜே.ஜலாலின் அழகிய ஒளிப்பதிவும், மகேஷ் நாராயணின் படத்தொகுப்பு, அஜயன் பாலாவின், "எல்லா நாளும் போல் இல்லாமல் இந்த நாள் சரித்திரமாகும்..." உள்ளிட்ட வசனங்கள், மேலும் பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், "சென்னையில் ஒரு நாள்", மலையாள "டிராபிக்" படத்தின் ரீ-மேக் என்பதே தெரியாத விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பலே, பலே!


டாக்டர் பிரசன்னா, சச்சினின் இதயத்திற்கு பாதுகாப்பாக காரில் போகும்போது, அவரது மனைவிக்கு விபத்து என்று கமிஷனர் சரத் கூறுவதும், அதை பிரசன்னா தவறாக புரிந்து கொண்டு போலீஸ்க்கு பயந்து, துடிக்கும் இதயத்துடன் காரை கடத்துவதும், என்னதான் இண்டர்வெல் சஸ்பென்ஸ் பிரேக் என்றாலும் டிராமாவாக தெரிகிறது.
 அதேமாதிரி காருக்கு வழிவிடச் சொல்லி கெஸ்ட் ரோலில் நடிகர் சூர்யா நடிகராகவே வருவது, அதுவரை படத்தில் பிரபல ஸ்டாராகவே வரும் பிரகாஷ்ராஜ் என்ன பவர்ஸ்டாரா...? எனக் ‌கேட்க வைக்கிறது! இதுமாதிரி ஒரு சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் ஷஹித் காதரின் இயக்கத்தில், "சென்னையில் ஒரு நாள்", "சிறப்பான ஒரு நாள்!"
நன்றி - தினமலர்