Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Sunday, March 16, 2014

உத்தம வில்லன் கதை

8-ம் நூற்றாண்டு கூத்து கலைஞர் ; 21-ம் நூற்றாண்டு சினிமா ஸ்டார் - இரண்டு கேரக்டர்களில் உத்தமவில்லன் கமல்!!

Kamals two different roles in Uthamavillan

'விஸ்வரூபம்-2' படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்து வரும் படம் ''உத்தம வில்லன்''. படத்தை துவங்குவதற்கு முன்பே உத்தம வில்லன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல். 




அதில் கமல், கூத்து கலைஞராக நடிக்கிறார் என்று பார்க்கும்போதே அனைவருக்கும் தெரிந்தது. அதேசமயம் அதனைத்தொடர்ந்து வெளியான பிற போஸ்டர்களில் கமல் சினிமா இயக்குநர் போன்றும், நடிகர் போன்றும் இருப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகின. இதனால் இப்படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என்ற குழப்பம் அனைவருக்கும் எழுந்தது. இந்நிலையில் 'உத்தம வில்லன்' படம் பற்றி படக்குழுவை ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளது. 



அதில் கூறியுள்ளதாவது, கமல்ஹாசன் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஒன்று, 8ம் நூற்றாண்டை சேர்ந்த 'உத்தமன்' என்ற கூத்துகலைஞர் வேடம், மற்றொன்று 21ம் நூற்றாண்டின் சினிமா நட்சத்திரமான 'மனோரஞ்சன்'. இந்த இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை தான் உத்தம வில்லன். இவர்களுடன் மனோரஞ்சனை கண்டெடுத்து, நட்சத்திர அளவுக்கு உயர்த்திய குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குநர் விஸ்வநாத்தும், மனோரஞ்சனின் ரகசிய காதலியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர். 

8-ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், முத்தரசன் என்ற 8-ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியாக நாசரும், ஜோசப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக முக்கிய பாத்திரத்தில் பார்வதி மேனன் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்.

கமலின் கதை-திரைக்கதையில் உருவாகி வரும் இப்படத்தை கமலின் நண்பரும், பிரபல நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார். ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்ய, விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார். லிங்குசாமியின் திருப்தி பிரதர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.


thanx - dinamalar

Sunday, October 06, 2013

மோடி போஸ்டரில் ரஜினி ஏன்? - கமல் காரசாரமான பேட்டி @ த ஹிந்து தமிழ்

திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் ரஜினியின் போஸ்டரை பயன்படுத்தினார்கள். அதற்கு ரஜினி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாகக் கூறினார். 
 
 
 
ஃபிக்கி அமைப்பின் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும் 'ஊடகம் மற்றும் சினிமா குறித்த கருத்தரங்கம்' இந்த ஆண்டு அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இதனை அறிவிப்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை பெங்களூர் வந்திருந்தார். கமலின் நண்பரும்,கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் உடன் இருந்தார். அப்போது கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 



பல்வேறு பிரச்சினைகளை கிளப்பிய 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி விட்டது. நான் எந்த மதத்துக்கும், சாதிக்கும், கட்சிக்கும் எதிரி கிடையாது. அதனால் யாருடைய மனதையும் புண்படுத்தாமல், அனைவரும் ரசிக்கிற‌ வகையில் 'விஸ்வரூபம்-2' உருவாக்கப்பட்டு இருக்கிறது. 



என்னுடைய‌ அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ஹே ராம், நாயகன் ஆகிய படங்களை புதுப்பித்து புதுபொலிவுடன் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 'விஸ்வரூபம், தலைவா' விவகாரம் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சிக்கல் வந்த போது 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை, தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. 



எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்துகொள்வது அபத்தம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஒரு போதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல தலைவா படத்துக்கும் ஏற்பட்டது. அதுபற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? 



அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைத் தானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ராமானுஜரின் தம்பிதான் பெரியார் ரசிகர்களுக்கு எப்படி என்னையும் பிடிக்கும். ரஜினியையும் பிடிக்குமோ, அதே போல எனக்கு காந்தியையும் பிடிக்கும். பெரியாரையும் பிடிக்கும். மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்பேன். பகுத்தறிவையும்,முற்போக்கு சிந்தனைகளையும் எப்போம் போற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் பெரியார் செய்ததைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்தார். ஆதலால் பெரியாரை ராமானுஜரின் இளைய தம்பி என்பேன். 



சேகுவேராவும் ஆயுதம் ஏந்தினார். பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் இருவரையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா? நான் அஹிம்சைவாதி. ஆதலால் காந்தியை நேசிக்கிறேன் மோடியை ஆதரிப்பீர்களா? நான் அரசியலுக்கு வர மாட்டேன். என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும் நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான். அந்த மையை என் கை முழுவதும் பூசி கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. 



திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் ரஜினியின் போஸ்டரை பயன் படுத்தினார்கள். அதற்கு அவர் (ரஜினி) எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனு மதிக்க மாட்டேன். ஏனென்றால் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை வாக்கு சாவடியில் மட்டுமே தெரிவிப்பேன் என்று கமல்ஹாசன் கூறினார். 
 
 
நன்றி - த ஹிந்து  தமிழ்

Sunday, March 03, 2013

விஸ்வரூபம் விமர்சனத்துக்கு கமல் ரசிகரின் பதிலடி

இயக்குநர் கம் திரைக்கதை ஆசிரியர் கமல் ஹாசனிடம் சில கேள்விகள்



1. முஸ்லீம் சகோதரர்ககளை இதுக்குமுன் பலரும் வில்லன் கேரடக்ரில் காட்டி இருக்கிறார்கள் . அர்ஜூன், கேப்டன், சரத்குமார் படங்களில் எல்லாம் பார்த்தவை தான். ஆனால் அவற்றில் எல்லாம் வில்லன் அதிக பட்சம் 15 நிமிடம் காட்டுவாங்க , ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட் அவ்வளவு தான்.ஆனால் இந்தப்படம் முழுக்க முழுக்க முஸ்லீம் சகோதரர்களையே வில்லன்களாக காட்டி இருப்பதால் தான் இத்தனை பிரச்சனையும் . வளரும் இளைய சமுதாயம் அக்கம் பக்கம் இருக்கும் முஸ்லீம் சகோதரர்களைப்பார்த்து மிரள மாட்டார்களா? 



2, குருதிப்புனல் படத்தின் பாகம் 2 போல் தான் இந்தப்படம் வருது . ஆனா அந்தப்படத்தில் இருந்த விறு விறுப்பு , அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பு , சஸ்பென்ஸ் மிஸ்சிங்க் . முதல் 40 நிமிடங்கள் கலக்கல் , அடுத்து வரும் தாலிபான் காட்சிகள் சராசரி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் . 



3. டெரரிஸ்ட்டாக வரும் கமல் கண்களில் சாந்தம், பொறுமை அளவுக்கதிகமா தெரியுது. வழக்கமா எதிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கேரக்டருக்காக  உடலையே மாற்றும் கமல் குறைந்த பட்சம் கண்ணுக்கு ஒரு காண்டாக்ட் லென்ஸ் கூட வைக்காதது ஏன்? 



4. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் கமல் எப்படி அந்த கேங்கில் இருந்து வில்லன் கண்களில் மண்ணைத்தூவி எஸ் ஆனார்? பாகம் 2 இல் விடை கிடைக்கலாம் என்றாலும் இந்தப்படம்  மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன புரியும் ? 


5. மணிரத்னம் கூட அளவுக்கதிகமா நெருக்கமோ என்னமோ 75 % வசனங்கள் புரியவே இல்லை . பி  சி செண்ட்டர் ரசிகர்கள் ரொம்ப பாவம் . யார் என்ன பேசறாங்க அப்டினு யூகிக்கக்கூட முடியாது .



6. ஓப்பனிங்க் காட்சில ஆண்ட்ரியாவை சிக்கனை டேஸ்ட் பாருன்னு கமல் சொன்னதும் அவர் இடது கையால உணவை எடுத்து சுவைக்கிறார்.. உவ்வே.. அந்த பேசிக் நாலெட்ஜ் கூடவா தெரியாது . வலது கைல எடுத்து டேஸ்டக்கூடாதா? 


7. பூஜா குமார் தன் பாஸ் கம் காதலன் கூட கார்ல போய்ட்டிருக்கார். அப்போ கணவர் கமல் ஃபோன் பண்றார். ஆஃபீஸ் வேலையா வெளில கார்ல போய்ட்டிருக்கேன்னா மேட்டர் ஓவர். ஆஃபீஸ்ல தான் இருக்கேன்னு ஏன் பொய் சொல்றார்? கார் பேக் கிரவுண்ட் சத்தம் கமலுக்குக்கேட்காதா? 



8.  ஹீரோ வுக்கும் , ஹீரோயினுக்கும் மேரேஜ் ஆகி  மேட்டர் நடக்கலை என்பதை நம்பவே முடியலை . இந்தக்காலத்துல பொண்ணு பார்க்கும்போதே ட்ரெய்லர் பார்த்துடறாங்க , நிச்சயம் நடக்கும்போது மெயின் பிக்சர் பாதி பார்த்துடறாங்க . மாடர்ன் கேர்ள்  மேரேஜ் ஆகி மேட்டர் நடக்கலை என்பதை எப்படி நம்புவது ? ஹீரோ ஒரு நார்மல் பர்சன்  இல்லை என்று ஒரு இடத்துல வசனம் வெச்சு சமாளிக்கறாங்க . ஆனா ஹீரோ அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை . உளவுத்துறைல பொண்டாட்டி கிட்டே மேட்டர் வெச்சுக்காதீங்க டேஞ்சர் அப்டினு எல்லாமா சொல்லி இருப்பாங்க? 




9.  கமலுக்கும் , பூஜா குமாருக்கும் காம்பினேஷன் காட்சிகள் கொஞ்ச்மாவது வெச்சிருக்கனும் . அப்போதான் அவருக்காக கமல் ஃபைட் பண்ணூம்போது இன்னும் எமோஷன் கிடைக்கும். 


10. டான்ஸர் கமலை தீவிரவாதிகள் படம் பிடிச்சு தலைவனுக்கு அனுப்பறாங்க. ஒரு ஃபோட்டோ அல்லது 2 ஃபோட்டோ எடுத்தா போதாதா? அட்வர்ட்டைஸ்மென்ட் எடுப்பது போல அத்தனை ஃபோட்டோ எதுக்கு? 





11. எம்பஸி ஆஃபீசர்  கமல் அடிவாங்கும்போது வர்றார். அந்த டைம்ல ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா போதுமே... டைமும் மிச்சம் ஆகி இருக்கும், கமலையும் அடி வாங்காமல் காப்பாற்றி இருக்கலாம்.. 


12. டைம்பாம் வைப்பவன் எதுக்கு திருப்பதி நாவிதர் மாதிரி செல்ஃப் மொட்டை அடிச்சுக்கறார்? அப்போதான் பாம் வெடிக்குமா? தலையை மட்டும்னாக்கூட பரவாயில்லை... ஹய்யோ அய்யோ.. 



13. கமல் அடிக்கடி தாலிபான் தீவிரவாதி கிட்டே “ என்ன நடக்குது இங்கே? “ அப்டினு கேள்வி கேட்கறார்.. அப்போ ஆடியன்ஸ் “ அதைத்தான் நாங்களும் கேட்கறோம், என்னதான் நடக்குது? “ அப்டினு சவுண்ட் விடறாங்க.. செம காமெடி 



14. திரையில் இனி கமல் படம் எது வந்தாலும் தமிழ்ல படம் பூரா சப் டைட்டில் போடுவது நல்லது  . 



15. ஆஸ்கார் வாங்கும் ஆசைக்காகவோ , அல்லது விஸ்வரூபம் பாகம் 2 க்குப்பின் ஹாலிவு ட் படத்தில் கமல் நடிப்பதாலோ அவர் ஒபாமாவுக்கு ஓவரா ஜிங்க் ஜக் அடிப்பது மாதிரி காட்சிகள் இருக்கு . 


16 . பிராமணர்கள் , முஸ்லீம்கள் இருவரை நையாண்டி அல்லது தாக்கும் காட்சிகள் இத்தனை கட்டுக்குப்பின்னும் இருக்கு . அடுத்த படத்திலாவது அடுத்தவங்க மனசு புண் படாமல் எடுக்கவும் 


17. மனைவிக்கு கணவனைப்பிடிக்கலைன்னா  டைவர்ஸ் பண்ண 1000 வழி இருக்கு . உதாரணத்துக்கு  யாரையாவது செட்டப் பண்ணி எதிரா சாட்சி சொல்ல வைக்கலாம். அதை விட்டு ஃபிளாஸ்பேக்கை ஆராய ஆள் வைப்பது ஓவர் 


18. அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஆள் கிரிக்கெட் ரன்னிங்க் கமெண்ட்ரி கொடுப்பது மாதிரி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுவது செம காமெடி . அட பறக்கா வெட்டி , முழுசா அப்சர்வ் பண்ணிட்டு அப்புறமா சொல்லறதுக்கு என்ன? என கேட்கத்தோணுது 



19. மகாநதிக்குப்பின் அழகான கமலைப்பார்க்கவே முடியல . படம் பூரா பிளாஸ்திரி ஒட்டித்தான் வர்றாரு .ஏதாவது வேண்டுதலா?

Some answers to your Viswaroopam director questions (these are my own views)

உங்கள் கேள்விகளுக்கு சில பதில்கள் :

1. எனக்கு தெரிந்து யாரும் மிரள வில்லை, படம் வந்து பல நாட்கள் ஆகி விட்டன. பலரும் பார்த்து விட்டனர். படத்தை, படம் என்றே பார்க்கின்றனர்.


2. கொஞ்சம் Logicகுடன் சேர்த்து பார்த்தால், நல்லா இருக்கும்.


3. சாந்தமும் பொறுமையும் இல்லாமல் யாருமும் எதையும் சாதிக்க முடியாது, Terrorist உட்பட.


4. Boss this is pure marketing. Adding some excitement to the second film. It is not required to tell everything.

5. U r correct, it is not a film for all tamil ppl

6. America பாஸ், anything is possible. Like andrea not bathing n so on !

7. Kamal knows everything, including her affair and that night going out as they have bugged the complete office of DEEPAK. He also told andrea, that Nirupama wont come for dinner. He just purposly ignores it

8. Question has the answer

9. Part 2 for it

10. It is the trend of the world, Everybidy has a camera, n time is not a constraint, v all take more no. of pics in the same ocassion. Also kamal is a hostage, if only the pic is good they can search in the Databases (in case if they dont identify the photo)

11. Phones are not secure, moreover they need the FDI help too. So meeting is neeed

12. valid point. Must ask Kamal, he must have some reason

13. This is not a question. No body in our show asked so (but our mind voices did)

14. No question there

15. No question there

16. Valid point. It is Kamal Hassan's inborn style

17. There are such agents, Nirupama just kept n small detective to just find if there is any Girl around Kamal. It is actually n american style (novels have it)

18. To proceed to next actions, instant is needed. U tweet in the instant n want decetives to observe fully n report.

19. A sort of Style I think !

ஓஜஸ் (@)

Wednesday, January 09, 2013

கமல் மீது மோசடி வழக்கு வருமா? டி டி ஹெச் ரிலீஸ் இல்லை

விஸ்வரூபம் திரைப்படத்தை சன் டி டி ஹெச் சில் பார்ப்பதற்கு சப்ஸ்கிரைப் செய்திருந்தேன்

http://i0.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/01/Vishwaroopam-Film-Release-Poster.jpg?resize=433%2C591 

விஸ்வரூபம் திரைப்படம் முதலில் டி டி ஹெச் சானலில் வராது.. தியேட்டருக்குக்தான் முதலில் வரும் என காலையில் செய்தி பார்த்ததும் சன் டி டி ஹெச் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தேன்..

அவர்களைப் பாராட்ட வேண்டும் .. அதிகாலை நாலு மணிக்கு கூட அவர்கள் கால் சென்டர் சுறு சுறுப்பாக இருக்கிறது

அவர்களும் இந்த தகவலை உறுதி செய்தார்கள்..

தியேட்டருக்கு வருவதற்கு முன்னால் படம் டி டி ஹெச் சில் வருகிறது என்பதை வைத்து தான் நான் சப்ஸ்கிரைப் செய்தேன்.. இப்போது தியேட்டருக்கு வந்து விட்டுதான் உங்கள் சானலுக்கு படம் வருகிறது என்று நீங்களும் சொல்கின்றீர்கள்.. ஆகவே நான் இந்த படம் பார்க்க என சப்ஸ்கிரைப் செய்த காசை என் கணக்கிலே ரீஃபண்ட் செய்து வரவு வைக்கவும் என்று சொன்னேன்

அது முடியாது.. இதே படம் பின்னர் எந்த நாளில் டிவி சானலில் வருகிறதோ அன்றைக்கு பார்த்து கொள்ளுங்கள்.. என்றைக்கு என்பது மெயில் வரும்.. எஸ் எம் எஸ் வரும் .. பணம் வாபஸ் எனும் பேச்சுக்கு இடமில்லை என்று சன் டி டி ஹெச் கஸ்டமர் கேரில் தீர்மானமாகச் சொல்கிறார்கள்

அவர்கள் சேனலில் உத்தேசமாக என்றைக்கு இந்தப் படம் டெலிகாஸ்ட் ஆகும் என்பதும் சொல்லமாட்டார்களாம்

இந்த தொலைபேசி உரையாடலை பதிவு செய்திருக்கிறேன்

தியேட்டருக்கு ஜனவரி 11 ம் தேதி தான் படம் வரும் உங்கள் வீட்டு டிவியிலே ஜனவரி 10 ம் தேதியே வரும்.. அந்தப் படத்தின் த்யாரிப்பாளரும் ஹீரோவுமான கமல்ஹாசன் விளம்பரம் செய்து கொண்டிருந்தார் , அந்த விளம்பரமும் இப்போது நின்று போனது

இப்படி இந்தப் படத்தை தியேட்டருக்கு வருவதற்கு வீட்டு டிவியில்முன்பே வருகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் தந்த விளம்பர் கவர்ச்சியில் பல டி டி ஹெச் சானல்களில் சந்தாதாரர்கள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் சப்ஸ்கிரப்ஷன் செய்திருந்த தொகை,, பல கோடியைத் தாண்டுகிறது என பெருமையாக ஊடகங்களில் செய்தி வேறு சொல்லியிருந்தார்கள்

ஆனால் இப்போது முதலில் தியேட்டரில் தான் படம் முதலில் வருகிறது.. டி டி ஹெச் சானலில் பின்னர் தான் வரும் என்று சொல்லியிருப்பது சரியல்ல

இது மோசடி .. கிரிமினல் குற்றம் என்றும் சொல்லலாம்

சந்தாதாரர் என்பவர் வாடிக்கையாளாராகவும் ஆகிறார். அவரிடம் குறிப்பிட்ட சேவைக்கென காசு வாங்கிக் கொண்டு அந்த சேவையினை குறித்த நேரத்தில், குறித்த தரத்திலே தர இயலாமல் போவது deficiency of Service

இப்படி சந்தாவாக வசூலான கோடிக் கணக்கான பணத்தின் வட்டி யாருக்குப் போய் சேர்கிறது.. இப்படியான முடிவு மாற்றம் தற்செயலானதா அல்லது பணத்தினை இப்படி வசூல் செய்வதற்கு என திட்டமிட்டு நடத்தப்பட நடவடிக்கையா

விளம்பரம் செய்தபடி முதலில் டி டி ஹெச்சில் வெளியிடாமல் தியேட்டரில் வெளியிட முடிவு செய்திருப்பதற்கு, விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்களின் நிர்பந்தம் காரணம் என்பதால் இந்த action மோசடி , சேவைக் குறைவு எனும் தன்மையை இழக்காது என்றே நினைக்கிறேன்.

இப்படியான செயலில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் ( திரைப்படத்தின் தயாரிப்பாளர், டி டி ஹெச் சானல்கள்) அனைவரும் மோசடி , சேவைக் குறைவு எனும் குற்றம் செய்தவர்களாக கருதப்பட வேண்டும்.

இதே கமல்ஹாசன் நடித்த திரைப்படமான மஹாநதியில் ஒரு வசனத்தில் OPM (other people money ) வைத்து பிசினஸ் பண்ண வேண்டும் என்று ஒரு படத்தில் வரும் மோசடி ஆசாமி கேரக்டர் சொல்லுவார். அது தான் நினைவுக்கு வருகிறது.

இந்தப் படம் தியேட்டரில் வருவதற்கு முன்பு டி டி ஹெச்சில் வரவில்லை எனில் அப்படி வரும் என்று விளம்பரம் செய்து , தனி சானலுக்கு சந்தா கட்டுங்கள் என கேட்டு திரைப்பட ரசிகர்களிடம் சந்தா வசூல் செய்ய காரணமான படத்தின் தயாரிப்பாளர் மீதும், சந்தா வசூல் செய்த டி வி சானலக்ள் மீதும் வழக்கு தொடருவேன்

இப்படி பல கோடி ரூபாய் வசூல் செய்து நடந்த நடவடிக்கையினை புலனாய்வு செய்யவும் வழக்கிலே கோரிக்கை வைக்க உள்ளேன்


நன்றி -

Friday, January 04, 2013

கமல் -ன் விஸ்வரூபம் டி டி ஹெச் ரிலீஸ் - சாதக பாதகங்கள் - ஒரு அலசல்


ஒளிப்பதிவு - திருப்பூர் ஆகாய மனிதன் யுவராஜ் ( )


 எடிட்டிங்க் - இலங்கை சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி (http://siththarkal.blogspot.com/)

Friday, December 28, 2012

மர்மயோகி- 4 கோடி மோசடி . கமல் மேல் கேஸ். விஸ்வரூபம் தடை வருமா?

http://mimg.sulekha.com/tamil/marmayogi/marmayogi_m.jpg 

CHENNAI: A film production company has approached the Madras high court seeking to stop the release of Kamal Haasan's big budget film 'Vishwaroopam', saying the actor had taken 4 crore to direct and act in a film titled 'Marmayogi' in 2008 but failed to keep his word.

Justice K Venkataraman, before whom the suit filed by Regent Saimira Entertainment Ltd came up for admission on Thursday, ordered notices to the actor and other partners of Rajkamal Films International, seeking replies by January 3, 2013. Vishwaroopam, a trilingual film made in Tamil, Hindi and Telugu, is set to be released through the Direct To Home platform on January 11, three days ahead of its scheduled screening in theatres. 
http://kollywood.myindianmovie.com/galleryimages/Heroin/Trisha-Krishnan-Images/trisha-in-marmayogi.jpg

Regent Saimira said it had entered into an agreement with Kamal in 2008 for 'Marmayogi' which was to feature, besides Kamal, Amitabh Bachchan, Hema Malini, Priyanka Chopra and Bipasha Basu. The film was to be produced in 18 months at 100 crore, the suit said. More than 6.5 crore was paid, and Kamal's salary for acting in and directing the film was 4 crore, it said. Shooting did not commence for months, though it was to start after Kamal's earlier film 'Dasavatharam', it said, adding that Kamal directed and acted in another film 'Unnaipol Oruvan' in the meanwhile in violation of the agreement.

He also failed to abide by the industry practice of returning the salary if the artist does not act in the film, it said. 'Unnaipol Oruvan' was released only after the actor deposited half the claim amount in the form of security, it said, adding the original civil suit is still pending in court. The production house said Kamal directed and acted in 'Vishwaroopam' violating the agreement conditions. 
 http://mimg.sulekha.com/tamil/marmayogi/stills/marmayogi-stills01.jpg

நன்றி -
TOI MOBILE

Wednesday, December 12, 2012

150 கோடி வசூலை எதிர்பார்க்கிறேன் - கமல் பர பரப்பு பேட்டி @ பிஸ்னெஸ் லைன்

We have to embrace technology and sail with that’ 
 
11 December 2012 , By R. Ravikumar 

Kamal Haasan
Kamal Haasan
 
 
Business Line caught up the man in the centre of the controversy over screening of his movie on the direct-to-home platform before it is released in theatres. Visiting the Prasad Studios for another appointment, this writer was pleasantly surprised to find the actor there, who acquiesced to an interview on the brouhaha. In an hour-long free-wheeling interview actor and film-maker Kamal Haasan spoke at length on the issue and why his move will be win-win for all in the industry. 



Your decision to release Viswaroopam on the DTH platform has drawn flak from different quarters of the film fraternity …… 



DTH is another ethical avenue that offers a platform to monetise. If anybody says no, he will be the loser. It’s a technological growth, and we can’t resist it beyond a point. Now, we are fighting a war against technology, only to realise that the latter wins. Always. We can’t win this war. If I don’t do it today, some day, someone will do it. Why should I wait till that someone comes and does it. Twenty years ago, I said the same thing about satellite TV. Now, it’s a reality. 



So, are you going to go ahead? 



Yes. I am not going to be nailed on this cross. The protest has only made me stand firmer on my ground. We are going ahead, booking theatres. And, they have seen me doing that before. I am releasing it on DTH on January 10, and it will hit theatre screens from the next day. It is also going to premiere in Los Angeles on January 10, for which I am going there. 



I don’t understand the dichotomy among the film fraternity. DTH is only a parallel medium, and a transparent system. It is in no way going to impact theatrical revenues. 



But then why are distributors protesting? 


They do not understand that. Now, theatre owners in North too have joined them, saying if I release my movie on the DTH platform, they will not support me. It’s a nexus, and unfair. I am not going to release the Hindi and Telugu versions on DTH. It’s my film, and I am going to release it myself. I have not demanded minimum guarantee from anybody, though I am sure the film would make much more than that. 



Do you think you can coax them? 



Of course, yes. As it is, they have softened their stand. All producers are by my side. Distributors support me. Even theatre owners in all other cities are with me. The theatre owners association in Coimbatore has already passed a resolution to back me. Other centres such as Tiruchi are also by my side. 


In fact, over 15 cinema halls are getting new sound systems installed specially to screen this film. The protest is only from the Chennai city and neighbouring districts. I think all it calls for is persuasion. I have to talk to them, and make them understand that it will only help bringing in more people to the theatre. Moreover, my intention is not to violently force it upon them. I only want to convince them. 


They fear two things. One, they say it may give a fillip to piracy and secondly, if all other producers follow your footsteps, the traditional exhibition medium will become redundant. 



As I already told you, DTH is a transparent system. The DTH connections at clubs, bars and hotels will not be in the loop. Besides, piracy is impossible. If any one shoots with the hand-held camera and prints and sells, we can identify them with ease. It’s technically possible. I do not want to go into much detail, as somebody can come out with a smarter technology to do it. I told you, technology will be the winner... (he laughs). 



For your second point, I am sitting on Rs 95 crore (cost of the film) and doing business. You tell me, how many people can do it. Every one would want to make quick money and go. Besides, how many can command Rs 1,000 just to watch once. I do not think many can take this route. Even if some do, going to a theatre is in our tradition. It will not die down. It has not happened in the US yet.


Have you signed up with all the six DTH players? 


No. So far, we have signed up with Airtel, Dish, Videocon and Reliance. They came as a consortium. 



How many DTH homes do you expect to watch the movie at this price point? 


The DTH players we have tied up with so far, collectively reach around 15 lakh homes. I expect at least 40-50 per cent would watch. 



Have you already sold the satellite rights of the film? 



Yes, to Jaya TV. 


How much do you think Viswaroopam would gross? 


I do not want to predict. But I can safely say the movie would gross at least Rs 150 crore. 



How many screens are you planning? 


Globally 2,000 screens. Of this, 400 in Tamil Nadu, 1,200 in other parts of the country. 



Would you be able to rope in so many with this kind of protest? 


In politics and business, there is no permanent enemy. The same people who are on my side now were on the other side of the fence when I said we cannot fight satellite channels 20 years ago. This is the way going forward, and we have to embrace technology and sail with that. 

நன்றி - கமல் 

http://hiox.org/resource/5706-Viswaroobam_1.jpg


As actor and film-maker Kamal Haasan stands his ground that his new film Viswaroopam will be premiered on the direct-to-home platform despite protest from various stakeholders, the Tamil Nadu Film Distributors Federation is all set to meet on Tuesday to take a call on this issue. 




Already, the Tamil Nadu Theatre Owners Federation has protested saying that this initiative will certainly affect theatre revenues at a time when “the film exhibition business has already been going through a rough patch owing to a range of other issues”. 



Earlier, the actor had defended his move to screen the movie on DTH networks on fixed-time show basis on the day before the film’s theatrical release, which is tentatively scheduled for January 11. The price per connection has also been fixed at Rs 1,000. He has said this move would be a new, legitimate revenue stream for the industry. His argument is that this would not affect the theatrical revenues as it is “targeted at a niche segment that wants to be entertained in the comfort of their homes”. 



According to a industry veteran who does not want to be identified, “This move could even prove to be a trigger for the success of the movie, as it would only kindle interest among his fans to get the giant-screen experience.” 



However, Abirami Ramanathan, President of the Tamil Nadu Theatre Owners Federation, asks why he should even try something which has not been experimented by Hollywood. “As theatre owners, we may not suffer any major losses because of this one film. But, if others too choose to follow this model, the entire exhibition business may have to suffer a huge setback,” he told Business Line. 


Though Kamal Haasan says the move would be a blow to the piracy market, which is wrecking the industry, Ramanathan says this would only pave the way for more piracy. “If someone films the entire movie with an hand-held HD camera when the film is being played on an HD TV, the result will be pretty good; then how can that prevent piracy?” he asks. 



According to industry sources, Kamal Haasan has signed up with five DTH players, who can collectively address at least 15 lakh homes in the State. And, there are instances, when some hit movies were exhibited on big screens (with the help of projectors) for a large audience of over 100, in public places such as clubs and playgrounds. 


Harit Nagpal, Managing Director and CEO, Tata Sky, one of the DTH players signed on to premiere Viswaroopam (which cost over Rs 120 crore to make), says the technology offers only another opportunity to earn revenues from a new market. He told Business Line that it will, in fact, bring in a newer market to Tamil films as TV homes who are willing to pay up Rs 1,000 are not the kind who will queue up in cinema halls for tickets. 



 நன்றி - பிஸ்னெஸ்லைன்
[email protected]

 http://lh3.ggpht.com/-VZiXp0hFA4Q/T59oL0wU5RI/AAAAAAAAMSc/FatoxAHKGn8/viswaroobam%252520%2525284%252529.jpg

Monday, December 10, 2012

விஸ்வரூபம் -DTH -ல் வெளியீடு -கமல் -ன் தன்னிலை விளக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHdLqt_ncOMTJrEP_6yqWNEAG0y-jWn6Xwi-UkDwIOge5p756gnZs5-vsyYFs1Qvu_YWvSdZ-DydMrI875RMHSBIobcamBk5CrLQYspsaIR9xfAhEfUmZ9RJ7_A0XNxiJp5EbDsW_IUpg/s400/Viswaroopam+Latest+Wallpapers+Cinema65.com+(3).jpg 

 

கிடைத்ததைச் சுருட்டுபவன் நானல்ல... டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
kamal blasting statement on viswaroopam 
dth release
கமல்ஹாசனின் காட்டமான 3 பக்க அறிக்கை


புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.



ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.



ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.


இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.


 http://www.cinepicks.com/telugu/gallery/viswaroopam/viswaroopam-stills-1759.jpg
இந்த DTH என்பதுஎன்ன?


எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.



சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH.


இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.
கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று.



என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.




முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.



ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம்.



இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?



DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.



விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல.



DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.



7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.



திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.



இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.



பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.


கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/viswaroopam_movie_stills_0806120245/viswaroopam_movie_stills_0806120245_026.jpg


முஸ்லீம்களுக்கு எதிரானதா?


முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.



அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.



-இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

 

Kamal S Plan With Mani Ratnam Son


சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குனர் மணிரத்னத்தின் மகனை வைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளாராம்.


கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பாரி ஆஸ்பர்னுடன் சேர்ந்து கமல் பணியாற்றவிருக்கிறார். உலக தரத்தில் படம் எடுக்கும் உலக நாயகனை ஹாலிவுட் படத்தில் பார்க்க ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.


இந்நிலையில் கமல் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தனை தன்னுடன் ஹாலிவுட் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது வரை சினிமா உலகை விட்டு விலகியே இருக்கும் நந்தன் கமல் மூலம் அதுவும் ஹாலிவுட் போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


நந்தன் கமலின் ஹாலிவுட் படத்தில் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரக பணியாற்றுவார் என்று தெரிகிறது.

நன்றி - தட்ஸ் தமிழ்


http://www.tamilqueens.com/wp-content/uploads/2012/05/viswaroopam-on-location-stills-bf943a96.jpg


Sunday, November 25, 2012

கமலிடம் நான் கற்றுக்கொண்டது - பேராசியர் கு.ஞானசம்பந்தன் பேட்டி

http://www.natpu.in/wp-content/uploads/2011/12/Kamal-Nam-kalathu-nayakan-Manaa-122.jpgஎன் உடம்புதான் எனக்கு டாக்டர்!''


ஆரோக்கிய ரகசியம் சொல்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பல முகங்கள் கொண்டவர்   கு.ஞானசம்பந்தன். மேடைப் பேச்சில் மட்டும் அல்ல... நேரடியாகப் பேசும்போதும் நெஞ்சம் கவர்கிறார்          கு.ஞா. கல்லூரி, பட்டிமன்றம், சினிமா எனச் சிறிதும் ஓய்வின்றி பம்பரமாகச் சுழலும் இந்தச் சோழவந்தான்காரரிடம் ஓர் அழகிய மாலைப்பொழுதில் பேசினோம். 



''என் வயசை மட்டும் கேட்காதீங்க... ஆனால், இன்னும் ரெண்டு வருஷத்துல பேராசிரியர் பணியில் இருந்து 'ரிட்டையர்டு’ ஆகப்போறதை மட்டும் சொல்லிக்கறேன்...'' என்று தனக்கே உரித்தான வெகுளிச் சிரிப்போடு பேச்சை ஆரம்பிக்கிறார்.


''உங்களின் முகத்தில் எப்போதும் சிரிப்பு ஒட்டியிருக்கும்... எப்படி அப்படியே மெயின்டெய்ன் செய்கிறீர்கள்?' 



''மகிழ்ச்சியாக இருந்தாலே போதும், எந்த வியாதியும் நம்மை அண்டாது. நான் மட்டும் அல்ல, என்னைச் சுத்தி இருக்கிறவங்களும் எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். இப்படி ஒவ்வொரு நாளும்  நானும் மகிழ்ச்சியாக இருந்து மத்தவங்களையும் மகிழ்ச்சிப்படுத்துறதுதான் என்னோட வேலை. மகிழ்ச்சின்னு வார்த்தையால சொன்னால் மட்டும் போதுமா...? மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு மலர்கின்ற புன்னைகையில்தானே தெரியும்!''




''நீங்களும் கமல் சாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு... அவர் உங்களுக்குச் சொன்ன ஹெல்த் டிப்ஸ் என்ன?'' 



''கமல் சார் என்கிட்ட சொன்னதைவிட, அவரைப் பார்த்தே நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு இருக்கேன். அவர் சாப்பிடும்போது, சாதாரணமாக் கூட்டு, பொரியல் வைக்கிற மாதிரியான ஒரு சின்ன கிண்ணத்துலதான் அவர் சாப்பிட வேண்டிய மொத்த சாதமும் இருக்கும். ஆனால், அதேசமயம் நிறையக் காய்கறிகள் சாப்பிடுவார். 'சாதம் வைக்கிற கிண்ணத்துல காய்கறிகளை வெச்சு சாப்பிடணும்; காய்கறிகள் வைக்கிற கிண்ணம் அளவுக்குத்தான் சாதம் சாப்பிடணும்’னு சொல்வார்.



 அதையேதான் நானும் கடைப்பிடிக்கிறேன். அவர் என்கிட்ட அடிக்கடி, 'உடற்பயிற்சி எல்லாருக்குமே ரொம்ப முக்கியம். அதிலும் குறிப்பாக 40 வயசைத் தாண்டினவங்க தினமும் குறைந்தபட்சம் ஒரு பயிற்சியாவது செய்யணும்’னு சொல்வார். 'ஆன்மிகத்துக்கும் யோகாவுக்கும் சம்பந்தம் இல்லை, எல்லோரும் அவசியம் யோகா பண்ணணும்!’, 'புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகமா எடுத்துக்கணும்’ இதெல்லாம் கமல் சார் எனக்குச் சொன்ன ஹெல்த் டிப்ஸ். கமல் சார் ஒரு கல்லூரி மாதிரி. உணவு தொடங்கி உணர்வு வரைக்கும் எல்லாத்தையும் அவர்கிட்ட இருந்து கத்துக்கலாம்!



''உங்க உணவு முறை எப்படி?'' 



''நான் எப்போதுமே பசியோட சாப்பிட உட்கார்ந்து, பசியோடவே டைனிங் டேபிள்ல இருந்து எழுந்திடுவேன். தட்டுல குறைவான உணவை வைத்துத்தான் சாப்பிடுவேன். தட்டுல நிறையப் போட்டுக்கிட்டு அப்புறம் சாப்பாடு வீணாயிடுமேன்னு மல்லுக்கட்டி சாப்பிடமாட்டேன்.''



''ஆரோக்கிய ரகசியம் சொல்லுங்க?'' 



''பொதுவா என்னை மாதிரி ஆட்களுக்கு ராத்திரி ரொம்ப நேரம் கண் விழிக்கும் பழக்கம் இருக்கும். தினமும் ராத்திரி கண் விழிச்சு எதையாவது எழுதிக்கிட்டே இருப்பேன். அதை ஈடு செய்யும் விதமாகத் தினமும் காலேஜ் முடிஞ்சு மதியம் வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் தூங்குவேன். அந்தத் தூக்கம் என்னைச் சோர்வடையாமல் பார்த்துக்கும்.



 ராத்திரி கண் விழிப்பிற்கு உதவும். தினமும் தவறாமல் வாக்கிங் போவேன். யோகா செய்யத் தவற மாட்டேன். 28 வருஷமாக வாத்தியார் வேலை பார்க்கிறேன். இதுவரைக்கும் நான் ஒருநாள்கூட வகுப்புல உட்கார்ந்து பாடம் நடத்தியது இல்லை. நின்னுக்கிட்டுதான் பாடம் நடத்துவேன். பத்து வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் சைக்கிள்லதான் வெளியில் போய்க்கிட்டு இருந்தேன். இப்போ பிரபலம் ஆகிட்டதால அது முடியறதில்லை.



 எல்லா விவசாய வேலைகளும் எனக்குத் தெரியும். காலையில் எழுந்ததுமே வெறும் வயித்துல ஒரு லிட்டர் தண்ணீர் குடிச்சுடுவேன். மற்ற நேரங்கள்லயும் நிறையத் தண்ணீர் குடிப்பேன். வெளி இடங்களில் தண்ணீர் குடிக்கவே மாட்டேன். அது என்னோட தொண்டைக்கு ஆகாது. அதனால், எங்கே போனாலும் வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்துட்டுப் போயிடுவேன்.



 ஐஸ்கிரீம் மாதிரியான குளிர்ச்சியான பொருட்களைத் தொடவே மாட்டேன். எனக்கு எதெல்லாம் ஒத்துவரும், வராதுன்னு பார்த்துப் பார்த்து நடந்துப்பேன். என் உடம்பே எனக்கு டாக்டர் மாதிரி. அது எனக்கு எல்லாத்தையும் சரியாச் சொல்லிடும். ஏன்னா, ஒருதடவை நம்ம உடம்புக்கு ஏற்றுக் கொள்ளாத ஒரு உணவுப்பொருளைச் சாப்பிட்டோம்னா அதை வெளியேத்த நம்ம உடம்பு எவ்வளவு கஷ்டப்படுது, அந்த கஷ்டத்தை நான் புரிஞ்சு நடந்துப்பேன்.''



''உடல் ஆரோக்கியம் பற்றி மத்தவங்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது? 




''வள்ளுவர், 'நா காக்க காவாக்கால்...’ அப்படின்னு சொன்னது, பேச்சை மட்டும் இல்லை, உணவு விஷயத்தையும் சேர்த்துத்தான். அதை நாம கடைப்பிடிக்கணும். நாற்பது வயதைக் கடந்தவங்க சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொழுப்பு இந்த மூன்றும் சரியான அளவில் இருக்கான்னு அடிக்கடி பரிசோதனை பண்ணிக்கனும். சுய வைத்தியம் கூடாது. மருந்து விஷயத்தில் கண்ட பரிந்துரைகளைக் கேட்கக்கூடாது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கண்டிப்பா ஒரு 'ஃபேமிலி டாக்டர்’ இருக்கணும். பல் டாக்டர்கிட்டப் போனாலும்கூட ஃபேமிலி’ டாக்டரை ஒருதடவை கன்சல்ட் பண்ணனும். நமக்குன்னு ஏதாவது 'மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்’ இருந்தால் அதை நாம எந்த ஊருக்குப் போனாலும் கூடவே எடுத்துக்கிட்டு போகணும். பசிச்சா சாப்பிடணும். தூக்கம் வந்தால் தூங்கணும்!'' என்றவர் இறுதியாக எல்லோருக்குமான ஆரோக்கிய அறிவுரையாகத் தன் தந்தை பகர்ந்த வார்த்தைகளை நம்மிடம் பகர்ந்தார்.




''ஐம்பது வயசு வரைக்கும் நாம சொல்றதை உடம்பு கேட்கும், ஐம்பது வயசுக்கு மேல உடம்பு சொல்றதை நாம கேட்டே ஆகணும்!''



எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!


நன்றி - டாக்டர் விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghdwVN_NMji84PYSAwv2JBhkqtPniEif3WBIC1HX5RlfoOQ8QK3_6iu52BKf6eHKHYAF6kO6ScyJi0pr003rTW_MmuWY2t1xc1K6dcLi0sQE6-evyisKnbSkD3_yzoMto0rhrjGFAkZF7N/s0/kamal_hassan_gautami_film_france_20.jpg

Saturday, November 03, 2012

ஹாலிவுட் டைரக்டருடன் கமல்

கமலுக்கு உலகநாயகன் பெயர் பொருத்தமானது தான்! ஹாலிவுட் டைரக்டர்

Ulaganayagan title is suitable for kamal says hollywood director கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என்ற பெயர் பொருத்தமானது தான் என்று, ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஆங்லீ தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் பிரபல டைரக்டர் ஆங்கலீ. இவர் தற்போது "லைப் ஆப் பை" எனும் ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இந்தி நடிகர் இர்பான்கான், நடிகை தபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



இப்படத்தினை பிரபலபடுத்துவதற்காக இந்தியா வந்துள்ளார் ஆங்லீ. சென்னை வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பின்னர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது கமல் தன்னுடைய விஸ்வரூபம் படத்தின் டிரைலரை ஆங்லீக்கு திரையிட்டு காண்பித்துள்ளார். கமலின் படைப்பாற்றலை பார்த்து அவரை பாராட்டினார் ஆங்லீ.


கமல் உடனான சந்திப்பு குறித்து ஆங்லீ கூறியுள்ளதாவது, சினிமாவில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அந்த அர்ப்பணிப்பு கமலிடம் நிறைய உள்ளது. அவரின் விஸ்வரூபம் படத்தின் டிரைலரை பார்த்தேன். மொழி தெரியாதவர்கள் கூட அவரது படத்தை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். கமலுக்கு பல விஷயங்கள் தெரிந்துள்ளது. என்னைப்பற்றி கூட அவர் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். உலகம் சினிமா பற்றி அவர் நன்கு புரிந்து வைத்து இருக்கிறார். அவருக்கு உண்மையிலேயே உலகநாயகன் என்ற பட்டம் கொடுத்து இருப்பது பொருத்தமான ஒன்றுதான். அவரை சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

கமலுக்கு தேசியவிருது கிடைத்தது எப்படி? பாலுமகேந்திரா ருசிகரம்!

Balumahendra praises kamal hassan`மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி சிறப்பாக நடித்திருந்தும், கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்தது எப்படி? என்பது பற்றி டைரக்டர் பாலுமகேந்திரா ருசிகர தகவலை வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் மணா எழுதிய `கமல் நம் காலத்து நாயகன் என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. புத்தகத்தை டைரக்டர் பாலுமகேந்திரா வெளியிட, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் டைரக்டர் பாலுமகேந்திரா, கமல்ஹாசனைப் பற்றி பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசுகையில், "மூன்றாம் பிறை படத்தின் கதையை முதலில் ஸ்ரீதேவியிடம்தான் கூறினேன். அதைக் கேட்டவுடன், அவர் உருகி அழத்தொடங்கி விட்டார். பிறகு கமல்ஹாசனிடம் கதையை சொன்னேன். "எனக்கு இது சரிப்பட்டு வருமா? என்று கமல் முதலில் சந்தேகப்பட்டார். "நிச்சயமாக இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று சொல்லி சம்மதிக்க செய்தேன். அந்த படம், கதாநாயகியை மையமாக கொண்ட படம் என்பதால், எல்லா காட்சிகளிலும் ஸ்ரீதேவியே வருவார். படத்தில் அவர் பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கமல், ஸ்ரீதேவியுடன் தோன்றுகிற காட்சிகளில் எல்லாம், "நீங்கள் நடிக்க முயற்சிக்காதீர்கள். இயல்பாக இருங்கள் என்று கமலிடம் சொன்னேன். அவரும் அதை அப்படியே செய்தார். மலையில் இருந்து கொட்டுகிற அருவி, பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்போது, தோன்றும் அழகே தனிதான். அதுபோல் கொட்டுகிற அருவியாக ஸ்ரீதேவி இருந்தார். பட்டுத் தெறிக்கிற பாறையாக கமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

கமல்ஹாசன் தேடல் உள்ள ஒரு அற்புதமான கலைஞர். ஆரம்ப காலங்களில், என்னிடம் எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார். அவரிடம் இருக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு, எனக்கு மிகவும் பிடிக்கும். கமல்ஹாசனை நான் ஒரு ரசிகனாகவே பார்க்கிறேன். பட்டத்து இளவரசனுக்கு முடிசூடும்போது எப்படி நாடே மகிழுமோ, அதுபோல் அவரை பாராட்டுகிறபோது, நானும் மகிழ்கிறேன், என்றார்.

விழாவில், டைரக்டர் - நடிகர் பார்த்திபன் பேசும்போது, கமல் ஒரு பரிசோதனை கூடம் போன்றவர். திரைப்படத்தின் பல்வேறு கூறுகளை, தன்னை முன்னிலையாகக் கொண்டு பரிசோதித்து பார்ப்பவர். அவர் முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 250 ரூபாய்தான். அதில் இருந்து நாள்தோறும் வளர்ந்து, இன்றைக்கு இந்த உயர்வை எட்டியிருக்கிறார். அவரே ஒரு தொகுப்புதான். அவருக்கு ஒரு தொகுப்பு நூல் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில்  நடிகர்கள் சார்லி, சண்முகராஜா, நடிகை ரோகிணி, கவிஞர் நா.முத்துக்குமார், கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் கமலை பாராட்டி பேசினார்கள்.




Ang Lee and Kamal HaasanWhen Hollywood director Ang Lee  visited Chennai to promote his filmLife of Pi, he was interviewed by a TV channel. And the interviewer was none other than Kamal Haasan


 .
The interview session was attended by several prominent film makers from the South. Kamal Haasan is a huge fan of Ang Lee's cinema and was thrilled to meet him and discuss his style of filmmaking.



After the interview, Ang Lee said he was happy that Kamal Haasan knew so much about him and his films.



"I am totally stunned by Kamal Haasan's brilliance," said the Taiwanese-born American director of Academy award winning films such as Crouching Tiger, Hidden Dragon andBrokeback Mountain.



"I never thought that he would know so much about me and my films. Inspired would be the word. He is not only an amazing actor but a great human being who knows everything about world class cinema. I am happy to have been interviewed by him," he added.



After the interview, Kamal Haasan took Lee to his office and showed him the trailer of his latest film Viswaroopam.


After watching the trailer, Lee said, "A person who is not aware of the language too can understand the movie. It's totally stunning. I am sure this movie will be a huge hit."

நன்றி - தினமலர், டெக்கான் கிரானிக்கல்

Thursday, August 23, 2012

ரஜினி, கமல் இணையும் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஏ வி எம் படம்

ஒண்ணா ஒரு படம்!"


ஆசைப்பட்ட ரஜினி... ஆல்ரைட் சொன்ன கமல்

எம்.குணா



'சகலகலா வல்லவன்’, 'ஜெமினி’ என்று அவ்வப்போது கோலிவுட் டிரெண்டைப் புரட்டிப் போடும் ஏவி.எம்மின் இப்போதைய அஸ்திரம்... 3D! ரஜினியின் 'சிவாஜி’க்கு '3D’ டச் வேலை நடக்கிறது பிரசாத் ஸ்டுடியோவில். பிரசாத் லேப்புடன் இணைந்து செயல்படும் ஏவி.எம். இந்த '3D புராஜெக்ட்டுக்கு என ஒதுக்கிஇருக்கும் பட்ஜெட்... 16 கோடி. ஏவி.எம். சரவணனிடம் பேசினால் பல ஆச்சர்யத் தகவல்களைக் கொட்டுகிறார்.



சி.பி - 3 டி படம் பெரிசா ஏதும் சாதிக்கப்போவதில்லை.. இது ஒரு வியாபார தந்திரமே, சிவாஜி ரிலீஸ் பண்றப்பவே ஏன் அப்டி 3டில ரிலீஸ் பண்ணலை? இதுக்கெல்லாம் ஏமாந்து ரசிகர்கள் தங்கள் பணத்தை வேஸ்ட் பண்ணுவாங்கன்னு தோணலை, ஒரு வேளை ரஜினியின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.

''இது திடீர்னு எடுத்த முடிவு இல்லை. கடந்த ஒரு வருஷமா 400 பேர் கொண்ட டீம் மூணு ஷிப்ஃட்டா வேலை பார்த்துட்டு இருக்காங்க. இது சம்பந்தமா பேசணுமேனு 'உங்களைப் பார்க்கணும். எப்போ வரட்டும்’னு ரஜினி சார்கிட்ட கேட்டேன். எப்பவும்போல, 'நானே வர்றேன்’னு கிளம்பி வந்துட்டார். அப்போ அவருக்கு '3D’-யில் படத்தின் டிரெய்லரையும் 'பூம்பாவாய்’ பாட்டையும் ப்ளே பண்ணிக் காட்டினோம். சின்ன குழந்தை மாதிரி கைதட்டி ரசிச்சுப் பார்த்தார். 


சி.பி - ம்க்கும், அவரு கலைஞரின் இளைஞன் படத்தையே நல்லாருக்குன்னு சொன்னவர் ஆச்சே?

http://www.bolegaindia.com/images/gossips/rajnikanth_kamal_hasan_post_1343022276.jpg



'தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுங்க சார்’னு ஐடியா கொடுத்தார். 'நான் சிவாஜி, கமல் மாதிரி நடிகன் கிடையாது. என்கிட்ட ஸ்பீடு இருக்கிறவரைக்கும் நடிப்பேன். இப்போ இந்த டெக்னாலஜி மூலமா நான் நடிச்ச நிறையப் படங்களைத் திரும்பப் பார்க்கலாம்’னு பேசிட்டே இருந்தார்.'' 



''ஆனா, 'சிவாஜி’ படம் வெளியானபோதே அதனால நஷ்டம்னு செய்திகள் வந்துச்சே?''


சி.பி - நஷ்டம் தியேட்டர்காரங்களுக்குத்தான், ஏ வி எம் நல்ல விலைக்கு வித்துட்டாங்க



''ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கங்க. 'சிவாஜி’ படத்தை நாங்க முழுக்கவே வெள்ளைப் பணத்தில் தான் தயாரிச்சோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யில் மூணு கட்டமா கடன் வாங்கிப் படத்தைத் தயாரிச்சோம். வரவு - செலவுக் கணக்குகள் எல்லாமே சுத்தமா இருக்கும். பாதி கறுப்பு, பாதி வெள்ளை தர்றதா சொல்லி 'சிவாஜி’ படத்துக்குப் பேரம் பேசினவங்ககூட உண்டு. 'வேண்டாம்’னு மறுத்துட்டோம். 'சிவாஜி’ படத்தை அப்போ வாங்கி வெளியிட்ட எல்லோருமே நஷ்டமாகாமல் சம்பாதிச்சாங்க அதுதான் உண்மை. அப்படி யாராவது நஷ்டம் அடைஞ்சோம்னு சொன்னாங் கன்னா, அவங்க தப்புக் கணக்கு காட்டுறாங்கன்னு அர்த்தம்!''



''ரஜினி, கமல் இருவருமே ஏவி.எம். நிறுவனத்தின் செல்லப் பிள்ளைகள். நீங்க ஏன் ரெண்டு பேரையும் சேர்த்து நடிக்கவெச்சு ஒரு படம் எடுக்கக் கூடாது?''


http://www.bestofvizag.com/images/movies/rajini-bala-kamal.jpg

''இதையேதான் அவங்களும் சொன்னாங்க. ஒரு நாள் ரஜினி சார் என்னைச் சந்திக்க வந்தார். என் அறையில் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். அப்போ திடீர்னு கமல் சாரும் என்னைப் பார்க்க வந்துட்டார். அது ரொம்ப யதேச்சையா அமைஞ்ச சந்திப்பு. 'என் கேரியர்ல தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜினு எத்தனையோ பேர்கிட்ட பழகி இருக்கேன். ஆனா, அவங்ககிட்டலாம்  இல்லாத ஒரு பண்பு உங்க ரெண்டு பேர்கிட்டயும் இருக்கு. உங்ககிட்ட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கொஞ்சம்கூட இல்லை. இது ரொம்ப ஆச்சர்யம்’னு சொன்னேன். 



சி.பி - பொறாமை இல்லைன்னு சொல்ல முடியாது, இல்லாம இருந்தா நல்லதுன்னு வேணா சொல்லலாம், நல்லவனுக்கு நல்லவன் - எனக்குள் ஒருவன் , தளபதி - குணா  ரிலீஸ் காலகட்டத்துல எப்படி எல்லாம் பரஸ்பரம் புகைஞ்சாங்க என்பது நாடறிந்த ரகசியம்



அதுக்கு கமல், 'ஒரு வேளை நானும் ரஜினியும் பாலசந்தர் ஸ்கூல்ல இருந்து வந்ததால இருக்கலாம்’னு சொன்னார். அப்போ ரஜினி, 'நான் சினிமாவுக்கு வந்தப்போ கமல் பெரிய ஹீரோ. 'நினைத்தாலே இனிக்கும்’ ஷூட்டிங்ல அவர்தான் ஸ்டார். சிங்கப்பூர்ல வாரக் கணக்கா ஷூட்டிங் நடந்தப்போ பல சமயம் பஸ்ல போயிட்டு இருப்போம். அப்போலாம் கமல் பக்கத்துல உக்காந்து இருக்குற நான், அவர் தோள்ல சாய்ஞ்சு அப்படியே தூங்கிடுவேன்.


அவரும் என்னைத் தட்டிக் கொடுத்து என் தூக்கம் கலையாமப் பார்த்துக்கிட்டார். நான் அவரை நண்பனா நினைக்கிறதுக்கு முன்னாடியே அவர் என்னை நண்பனா ஏத்துக்கிட்டார்’னு பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார். அப்படியே பல விஷயங்கள் பேசிட்டு இருந்தப்ப திடீர்னு ரஜினி சார், 'கமல்... ஒண்ணா ஒரு படம்... நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசையா இருக்கு’னு சொல்லிட்டு கமலையே பார்த்தார். கமல் கொஞ்சம்கூட யோசிக்கலை. 'தாராளமா நடிக்கலாமே... அப்படி நாம சேர்ந்து நடிக்கிற படத்தை சரவணன் சாரே தயாரிக்கட்டும்’னு சொல்லிட்டார்.



ஒருத்தர் உலக நாயகன்... இன்னொருத்தர் சூப்பர் ஸ்டார். ரெண்டு பேருக்குமே என்னைவிட நிறைய சினிமா தெரியும். ரெண்டு பேருக்கும் சம்பளமும் ரொம்பப் பெருசு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. 'உங்க ரெண்டு பேரையும் நடிக்கவெச்சு வேலை வாங்குற திறமை பாலசந்தர் சார்கிட்ட மட்டும்தான் இருக்கு’னு சொன்னேன். ரெண்டு பேருமே சிரிச்சாங்க. அவங்க ஓ.கே. சொல்லிட்டாங்க. இனி, நாங்க தான் மெனக்கெடணும். பார்ப் போம்'' என்று வழக்கமான அமைதிப் புன்னகையுடன் வழியனுப்புகிறார் சரவணன்.


சி.பி - எதிர்பார்ப்பு எகிறிக்கும். அதுக்கு தகுந்தபடி ஸ்க்ரிப்ட் பக்காவா இருக்கனும்.. இல்லைன்னா ஓவர் எக்ஸ்பெக்டேஷனே படத்துக்கு வில்லனா அமைஞ்சுடும்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற வாழ்த்துகள் 
http://newzstreet.com/uploads/news-files/rajini_and_kamal_work_together_haihoi_189.jpg


நன்றி - விகடன்

Monday, July 23, 2012

கமல் -ன் விஸ்வரூபம் -ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - பேட்டி @ கல்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrbQ7JJvCMviR4kaeR6iFf1t16K0gvO6S59ru2rsUey0EBCPVN_DmSyYZCAVcHmjsKS1CVtFoSjhcmqci5tIC1IWMWK1Fbu1QvXfbOZaKQuJpvYtBfmgL-W4SQmAtG1ToiUYa6c2gOHQ4/s1600/0.jpg
கமலின்விஸ்வரூபத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எனப்படும் கிரா ஃபிக்ஸ் பணியைச் செய்திருப்பவர் மது என்கிற மதுசூதனன்.

The Lord of the rings, ஸ்பைடர் மேன், Gulliver's travel என பல ஹாலிவுட் படங்களுக்கு கிராஃபிக்ஸ் செய்து, பீட்டர் ஜாக்ஸன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் போன்ற வெள்ளைக்கார இயக்குனர்களின் பாராட்டைப் பெற்ற மது, தர்மபுரி அருகே பாலக்கோட்டையைச் சேர்ந்த அக்மார்க் தமிழர். பி.எஸ்.சி. இயற்பியல் படித்துவிட்டு கம்ப்யூட்டர் துறையில் பணியிலிருந்தவர், இப்பணி பிடிக்காமல், உதறி விட்டு, விளம்பரங்களில் கிராஃபிக்ஸ் செய்து, 50 படங்கள் வரை தமிழில் முடித்துவிட்டு ஹாலிவுட்டில் நுழைந்தவர்.



 அமெரிக்காவில் விஷுவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டியில் (VES) வழங்கப்படும் விருதுகள் ஆஸ்காருக்கு ஒரு படி மட்டும் கீழே இருப்பவையாகக் கருதப்படுகின்றன. VESல் சிறந்த கலைஞர்களுக்காக வழங்கப்படும் விருதுகளை, மதுவின் கையால் வழங்க வைத்து, மதுவை கௌரவப்படுத்தியிருக்கின்றனர் இவ்வமைப்பினர். கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான அர்னால்ட், இவரின் திறமையைப் பெரிதும் பாராட்டியுள்ளார். இருப்பினும்கமல்என்ற பள்ளியில் மட்டும்தான், தான் நிறைய கற்றுக்கொண்டேயிருப்பதாகச் சொல்கிறார் மது.



நான் கமலுடன் ஏழு படங்கள் வரை பணியாற்றியிருக்கிறேன். பணியாற்றியிருக்கிறேன் என்று சொல்வதைவிட கமலைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். கமலுடன் சில படங்கள் வொர்க் செய்தால், பி.ஹெச்.டி. பட்டம் கிடைப்பதற்கு இணையானது. ‘விஸ்வரூபம்படப்பிடிப்பில் ஏதாவது ரிஸ்க் ஆன ஷாட் வைத்தால், கமல், இது MS ஷாட் என்பார். அதாவது, கிராஃபிக்ஸில் மது Suffer ஆகப்போகும் அல்லது தலைவலி தரப்போகும் ஷாட் என்பது இதன் அர்த்தம்

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/special/11.06.12/kamal+inside1.jpg
 கஷ்டமான விஷயத்தைக் கூட ஹாஸ்யமாகச் சொல்வதில் கமல் சமர்த்தர். உண்மையில் கமலிடம் பணியாற்றியபோது, கற்ற விஷயங்களைக் கொண்டு ஹாலிவுட்டில் பெயர் பெற்றேன். கமல் எப்போது அழைத்தாலும் பறந்து வந்துவிடுவேன். தாம் கற்றுக் கொள்வதோடு, தம்மைச் சுற்றி இருப்பவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணுபவர் கமல். விஸ்வரூபத்தில் Time Spice எனும் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளேன்.



க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் பணத்தை மேலே தூக்கி விசிறியடிக்கும் காட்சி, இந்த முறையில் கிராஃபிக்ஸ் பண்ணப்பட்டதுதான். இதை முன்பு மேட்ரிக்ஸ் முறையில் கிராஃபிக்ஸ் செய்தார்கள்!"

http://tamil.oneindia.in/img/2012/06/08-kamal-vishwaroopam-600.jpg
உங்கள் பார்வையில் கிராஃபிக்ஸ் என்பது என்ன?

கிராஃபிக்ஸ் என்பது கலையும் விஞ்ஞானமும் கல்யாணம் செய்துகொள்ளும் இடம். ஒரு படத்தில் கிராஃபிக்ஸ் என்பது தனியாகத் தெரியக்கூடாது. கதையின் ஓட்டத்திலேயே இருக்க வேண்டும்."


ஹாலிவுட் மேக்கிங்குக்கும் இந்திய மேக்கிங்குக்கும் என்ன வேறுபாடுகள்?


திட்டமிடல்தான் முக்கிய வேறுபாடு. ஹாலிவுட்டில் ஒரு படம் ஷூட்டிங்குக்கு முன்பு பிரி-புரொடக்ஷனில் இயக்குனர் என்னைப்போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் ஒரு மாதம் வரை டிஸ்கஸ் செய்வார். பல்வேறு விஷயங்களைப் பேசிப் பழகுவார். இயக்குனர் என்பதையும் தாண்டி, நண்பர் என்ற உணர்வு வந்துவிடுவதால், பகிர்தல் சுலபமாக இருக்கும். நான் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த The Lord of the Rings படத்தின் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், என்னுடன் ஒரு மாதம் வரை பிரி-புரொடக்ஷனில் ஈடுபட்டதால், அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமல் போன்ற ஒரு சிலர் மட்டும், இங்கே இது போன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்."


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdeogFRp3igZ1acd-jydSS_MXhqx5bdquGxpzEHqg5UGwY-q3tptERxqm1AaKhef8CgPath1LuRD2DMWl-5KuhtvOM4-2w_2vejm_MBdnrgSMIticEQe-saQOCiwQWIfqFrui-zZgDEv0/s400/0.jpg
கிராஃபிக்ஸ் என்றாலே அதிகமான செலவு வைக்கக்கூடியதா?

இல்லை. செலவை படத்தின் திரைக்கதை மட்டுமே தீர்மானிக்கும். ஸ்கிரிப்டும், பிளானிங்கும் இருந்தால், குறைந்த பட்ஜெட் டில்கூட கிராஃபிக்ஸை செய்யமுடியும்."
இன்றைய இந்திய இயக்குனர்கள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்களா?
இந்திய இயக்குனர்களிடம் புதிய தொழில் நுட்பத்தைத் தெரிந்துகொள்வதில் ஒருவித ஈகோ இருப்பது போன்றுதான் தோன்றுகிறது. கிரியேட்டிவிட்டியையும், தொழில்நுட்பத்தையும் எங்களைப் போன்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இயக்குனரின் கிரியேட்டிவிட்டியும், தொழில் நுட்ப அறிவும் இணையும் இடம்தான் வெற்றியின் மையப்புள்ளி. ஹாலிவுட் நிறுவனங்களின் வெற்றியின் ரகசியமும் இதுதான்."

நடிக-நடிகைகளுக்குக் கிடைக்கும் பாப்புலாரிட்டி, உங்களைப் போன்ற ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களுக்குக் கிடைக்காதது வருத்தமாக உள்ளதா?
வருத்தமாகத்தான் உள்ளது. சினிமா முடிந்து கடைசியில்தான் எங்கள் பெயரைப் போடுகிறார்கள். எங்கள் பெயரைப் பார்ப்பதற்குக்கூட சீட்டில் ஆள் இருக்கமாட்டார்கள். மேற்கத்திய நாடுகளில் தற்காலத்தில் சிலருக்காவது ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களின் பெயர்கள் தெரிந்திருக்கின்றன. இந்தியாவில் உங்களைப் போன்ற பத்திரிகைகளில் மட்டும் தான், எங்களை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்க்க முடியும்."




http://www.thedipaar.com/pictures/resize_20110630043359.jpg




நன்றி - கல்கி வார இதழ்  ,சீதாரவி, அமிர்தம் சூர்யா, புலவர் தருமி