Sunday, July 16, 2023

இரும்பு திரை (1960) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)


1959 ஆம் ஆண்டு  வாசன்  இயக்கிய  ஹிந்திப்படமான பைகம் ( செய்தி) படத்தின்  அஃபிசியல்  தமிழ்  ரீமேக்  தான்  இரும்பு  திரை. ஹிந்தியில்  சூப்பர்  டூப்பர்  ஹிட்  ஆன  இப்படம்  தமிழில் ஹிட்  என்ற  அளவில்  தான்  அமைந்தது 175  நாட்கள் ஓடியது


தமிழில்  டைட்டில்  வைத்ததற்கு  சுவராஸ்யமான  கதை  உண்டு. வாசன்  ஹிந்திப்படத்தை  ரீமேக்  செய்ய  அறிவித்து  தமிழில்  டைட்டில்  வைக்க  ஒரு  போட்டி  வைத்தார். அவரது  அலவலர்கள்  யார்  வேண்டுமானாலும்  ஐடியா  தரலாம்  என்றார். ஒரு சிறுவன்  ஆஃபீஸ்  பாய்  மட்டும் 2500  டைட்டில்கள்  சொன்னானாம், அதில்  ஒன்று  தான் இரும்பு திரை. அந்த  சிறுவனுக்கு பல   பரிசுகளை  அளித்தாராம் 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா  ஒரு  கைம்பெண்.நாயகனுக்கு  ஒரு  அண்ணன், அவருக்கு  திருமணம்  ஆகாத  ஒரு  மகள்  உண்டு அண்ணன்  ஒரு மில்லில்  வேலை  செய்கிறார். நாயகன் கல்கத்தாவில்  பொறியியல்  கல்லூரியில்  படிக்கிறார். படிப்பு  முடிந்தபின்  அண்ணன்  வேலை  செய்யும்  அதே  மில்லில்  வேலை  கிடைக்கிறது 


நாயகன்  அந்த  மில்லில்  வேலை  செய்யும்  டைப்பிஸ்ட்டைக்காதலிக்கிறார்.மில்  ஓனரின்  மகளுக்கு  நாயகனின்  காதல்  விஷயம்  பிடிக்கவில்லை . அவர்  நாயகனை  அடைய  நினைக்கிறார்


மில்  ஓன்ர்  தொழிலாளர்களைஏமாற்றி  கையெழுத்து  வாங்கி  3  மாத  போனஸ்க்குப்பதிலாக  ஒரு  மாத  போனஸ்  மட்டுமே  கொடுத்து  மூன்று  மாதம்  தந்ததாக  பொய்க்கையெழுத்து  வாங்குகிறார்.இது போல  கடந்த  ஆறு  வருடங்களாக  தொழிலாளர்களை  ஏமாற்றி  வருகிறார்


மில்லில்  வேலை  செய்யும்  ஒரு  தொழிலாளர்க்கு  விபத்தில்  காயம்  ஆக  இன்சூரன்ஸ்  க்ளைம்  செய்ய  முடியாதவாறு  நேர்கிறது . இந்த  விஷயத்திலும்  தொழிலாளரை  மில்  ஓனர்  ஏமாற்றுகிறார்


 இதனால்  நாயகன்  யூனியன்  ஒன்றைத்துவங்குகிறார். இது  அண்ணனுக்குப்பிடிக்கவில்லை , எஜமான்  விசுவாசம்  உள்ளவர் . இதனால்  கருத்து  வேற்றுமை  கொண்டு    நாயகன்  ஆன  தம்பியை  வீட்டை  விட்டு  வெளியே  அனுப்புகிறார்


 அண்ணன்  மகள்:  திருமணம்  நடக்க  இருக்கிறது. ஆனால்  யூனியன்  ஸ்ட்ரைக்கை  வாபஸ்  பெற  வேண்டும்  என  மில்  ஓனர்  நிபந்தனை  விதிக்கிறார்


நாயகன் - டைப்பிஸ்ட்  காதல்  நிறைவேறியதா?  வில்லியாக  இருக்கும்  மில்  ஓனர்  மகள்  என்ன  செய்தாள் ? தொழிலாளர்  பிரச்சனையில்  மில்  ஓனர் - நாயகன்  எப்படி  மோத  நேர்ந்தது  ? அண்ணன் - தம்பி  இணைந்தார்களா? இவற்றுக்கெல்லாம்  பின்  பாதி  திரைக்கதை  பதில்  சொல்கிறது 


நாயகன்  ஆக  சிவாஜி  கம்பீரமான  நடிப்பு , இது  ம்லையாளத்தில்  டப்  செய்யப்பட்டிருந்தால்  கம்யூனிச  மாநிலத்தில்  நன்றாக  ஓடி  இருக்கும்.   


நாயகி  ஆக  வைஜெயந்திமாலா  துடிப்பான  நடிப்பு . இன்னொரு  நாயகியாக  சரோஜா தேவி  அழகு  மயில் 


திரைக்கதை  முன்று  விதமாகப்பிரயாணிக்கிறது . தொழிலாளர் - முதலாளி  பிரச்சனை ,   நாயகனின்  காதல் ,அண்ணன் -  தம்பி  பிரச்சனை 


மூன்று  மணி  நேரம்  படம்  ஓடுகிறது , ஆனால்  போர்  அடிக்கவில்லை 







பாடல்பாடகர்கள்பாடல் வரிகள்நீளம்
"நெஞ்சில் குடியிருக்கும்"டி.எம்.சௌந்தரராஜன் & பி. லீலாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்03:57
"ஆசை கொண்ட நெஞ்சு ரெண்டு"பி. லீலா04:27
"மனிதரை மணிதர் சாரி நிகர் சமமாய்"சீர்காழி கோவிந்தராஜன்02:40
"கையிலே வாங்கினேன் பையிலே போதலை"திருச்சி லோகநாதன்03:00
"ஏறை பிடித்தவனும் ஆங்கிலம் படிச்சவனும்"கொத்தமங்கலம் சுப்பு03:19
"நன்றி கேட்ட மணிதருக்கு"சீர்காழி கோவிந்தராஜன்03:22
"டப்பா டப்பா டப்பா"எஸ்.சி.கிருஷ்ணன்
"படிப்பதற்கும் ஒரு கும்பிடு"பி. லீலா & ஜிக்கி02:47
"நிக்கடுமா போகதுமா"திருச்சி லோகநாதன் & கே. ஜமுனா ராணி
"என்ன செய்தாலும்"(ராதா) ஜெயலட்சுமிபாபநாசம் சிவன்02:52




செம  ஹிட்  சாங்க்ஸ்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சிவாஜி  ரசிகர்கள்  பார்க்கலாம் , பொறுமை  வேண்டும் . ரேட்டிங்  2.75 / 5 



Irumbu Thirai
Theatrical release poster
Directed byS. S. Vasan
Story byGanesh Subramaniam along with Gemini Story Department
Produced byS. S. Vasan
StarringSivaji Ganesan
Vyjayanthimala
K. A. Thangavelu
B. Saroja Devi
CinematographyP. Elappa
N. C. Bala Krishna
Edited byM. Umanath
Music byS. V. Venkatraman
Production
company
Release date
  • 14 January 1960
CountryIndia
LanguageTamil

0 comments: