Friday, September 05, 2014

நயன்தாராவுடன் காதல் தோல்வியால் உதயநிதி தற்கொலை முயற்சியா?:

நயன்தாராவுடன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியா?: உதயநிதி விளக்கம்

Sucide attempt due to break up with Nayanthara? Explains Udhayanithi
இது கதிர்வேலன் காதல் படத்தில் இணைந்து நடித்த நயன்தாரா, உதயநிதி தற்போது நண்பேன்டா படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கமான காதல். உதயநிதியின் காதலை நயன்தாரா ஏற்காததால் உதயநிதி தற்கொலைக்கு முயன்றார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. இதற்கு முதன் முறையாக இப்போது விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நயன்தாராவால் தான் நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன்ங்றது உண்மைதான். ஆனால் அது தற்கொலை முயற்சியில்லை. நண்பேன்டா படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் என்னை தாக்க வரும் வில்லனை அடித்து விட்டு அவர் கையை என்பக்கம் கொண்டு வரவேண்டும். அந்தக் காட்சி எடுக்கும்போது டைமிங் மிஸ்சாகி வில்லனை அடிக்க வேண்டியவர் என்னை அடித்து விட்டார். அவரது விரல் நகம் கண்ணில் குத்தி கிழித்து விட்டது. இதனால் ரத்தம் வழிந்ததும் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது வந்தது. இதுதான் நடந்தது.

இதே மாதிரி காஜல் அகர்வாலுக்கு எனக்கும் காதல் அதனால் அவருக்கு கொடுத்திருந்த 40 லட்சம் அட்வான்ஸ் பணத்தைகூட நான் திரும்ப வாங்கவில்லை என்ற ஒரு வதந்தியை கிளப்பினார்கள். உண்மையில் நான் அந்த 40 லட்சத்தை திருப்பி வாங்கித் தரச்சொல்லி தயாரிப்பாளர் சங்கத்துல புகார் கொடுத்திருக்கிறேன்.

நடந்தது இப்படி இருக்க... அதுக்கு கண், காது, மூக்கு வச்சி செய்தியாக்குறாங்க. சரி படத்துக்கு இலவசமா பப்ளிசிட்டி கிடைக்குதுன்னு சும்மா இருந்து விடுகிறேன். நயன்தாராவும், என் மனைவி கிருத்திகாவும் நல்ல நண்பர்கள் அதனால் எந்த செய்தி வந்தாலும் அதைப் பற்றி இருவருமே கவலைப்படுவதில்லை. நயன்தாராவுக்கு லண்டனில் வீடு வாங்கி கொடுத்திருப்பதாககூட எழுதுகிறார்கள். சந்தானம்தான் "நயன்தாராவுக்கு லண்டன்ல வீடு வாங்கி கொடுத்திருக்கீங்க எனக்கு பல்லாவரத்துலயாவது ஒரு வீடு வாங்கி கொடுங்க"ன்னு சதாய்க்கிறார்.

நான் தெளிவாக இருக்கிற வரைக்கும் எந்த வதந்தியும், செய்தியும் என்னை பாதிக்காது. கொஞ்சம் கூட உண்மையில்லாத செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை. என்கிறார் உதயநிதி.
 
 
thanx - dinamalar

0 comments: