Monday, April 22, 2013

உதயம் NH4 - சினிமா விமர்சனம்

 

காலேஜ் படிக்கற பணக்காரப்பையன் லஞ்ச் டைம்ல மத்த ஏழைப்பசங்களை எல்லாம் கேலி பண்ணுவான். என்னடா எப்போப்பாரு பழைய சோறு , கடிச்சுக்க மோர் மிளகாய், வெரைட்டியே கிடையாதா அப்டினு நக்கல் அடிப்பான்.அப்பேர்ப்பட்ட அபாடக்கர் பையன் ஒரு நாள் எல்லாப்பசங்களையும் கூட்டிட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்க்கு போனான். அங்கே பிரம்மாண்டமா டெக்ரேஷன் எல்லாம் பண்ணி ஒரு அயிட்டம் கொண்டு வந்தாங்க, பேரு ஐஸ் பிரியாணி , அட வெண்ணெய் , அதுதாண்டா பழைய சோறு. 


அந்த பணக்காரப்பையன் தான் எப்போ பாரு எல்லாரையும் குறை சொல்லிட்டே இருக்கும் வெற்றி மாறன். அந்த ஏழைப்பசங்க தான் நாளைய இயக்குநர்கள். எதுக்கு இந்த தேவை இல்லாத முன்னுதாரணம்னா அண்ணன் வெற்றி மாறன் கலைஞர் டி வி ல குறும்பட விமர்சனத்துல ஜட்ஜா தீர்ப்பு சொல்லும்போது “ என்னய்யா படம் , ஒரு புதுமை வேணாமா?ன்னு கலாய்ப்பார். அப்பேற்பட்ட அவரு எங்கே ஒரு புதுமையான படம் கொடுத்துடுவாரோன்னு பயந்துட்டே இருந்தேன், அண்ணன் அரைச்ச மாவைத்தான் அரைச்சிருக்காரு , ஆனாலும் ஸ்டைலிஸா இருக்கு , ஹி ஹி

அழகிரி மாதிரி ஒரு மினிஸ்டர், அவருக்கு  ஒரு பொண்ணு, தான் லவ் பண்ற பையன் கூட ஓடிடுது . அதுக்கு இன்னும் 18 வயசு ஆகலை. இன்னும் 1 நாள் தான் இருக்கு . அந்த ஒரு நாளுக்குள்ளே அவங்களைப்பிடிச்சாகனும், இல்லைன்னா பாப்பா மேஜர் ஆகி இன்னொரு பாப்பாவுக்கு அம்மா ஆகிடும்.

 



அதனால மினிஸ்டர் போலீஸ்  ஆஃபீசர் உதவி கேட்கறாரு.அவரு ஆல்ரெடி இல்லீகலா ஒரு என்கவுண்டர் கேஸ்ல மாட்டினவர் தான்.மினிஸ்டர் தான் காப்பாத்தி விட்டாரு. அந்த நன்றிக்கடனுக்காக பர்சனலா மினிஸ்டருக்கு இந்த உதவி பண்றாரு . எப்படி என்பதைத்தான் சுவராஸ்யமா திரைக்கதைல சொல்லி இருக்காங்க . 


 நான் - லீனியர் ஸ்க்ரீன்ப்ளே அப்டினு ஒரு யுக்தி இருக்கு . அதாவது முதல் ஷாட்ல நயன் தாரா - பிரபு தேவாவை காட்டுவது , அடுத்த ஷாட்ல நயன் தாரா - சிம்பு வை காட்டுவது ,3 வது ஷாட்ல ஆர்யா - நயன் தாராவைக்காட்டுவது , இப்படி மாத்தி மாத்தி கதை சொல்லி சுவராஸ்யமா முடிச்சை அவிழ்ப்பது தான் நான் - லீனியர் மெத்தேட்.


 படத்துல முதல் ஹீரோ அந்த போலீஸ் ஆஃபீசரா வ்ர்ற  கே கே மேனன் தான் . பட்டாசான நடிப்பு , தூர் தர்ஷன் ல வாரா வாரம் திங்கள் கிழமை சுராக் அப்டினு ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர் வரும் அதுல ஹீரோவா நடிப்பவர் போலவே முகச்சாயல். ஆனா பாடி லேங்குவேஜில் மனிதர் அசத்திட்டார். தமிழ் சினிமாவுக்கு முக்கியமான ஒரு வில்லன் கிடைச்சுட்டார்னு தாராளமா சொல்லலாம். இவர் போலீசாக கெத்து காட்டுவதும், அவரோட சம்சாரத்து கிட்டே ஃபோன் வரும்போதெல்லாம் பம்முவதும் அபாரம். ( போலீசா இருந்தாலும் பொண்டாட்டி கிட்டே பம்மித்தான் ஆகனும் போல ) 



அடுத்த ஹீரோ சித்தார்த்.ஆண்ட்ரியாவை மிஸ் பண்ணின அனிரூத் மாதிரி மூஞ்சியை ஏன் அப்டி வெச்சிருக்கார்னு தெரியல. இந்த மாதிரி பர பர ஆக்‌ஷன் திரைக்கதைக்கு ஹீரோ முகம் மவுன ராகம் கார்த்திக் மாதிரி , சச்சின் விஜய் மாதிரி  செம ஜாலியா கலாய்ச்சுக்கிட்டு இருக்க வேணாமா? பீமா விக்ரம் போல் ஜிம் பாடி வெச்சுக்கிட்டு , தில் விக்ரம் போல் ஃபைட் சீனில் கலக்கி இருக்க வேணாமா?  கிடைச்ச பிரமாதமான சான்சை அட்டகாசமா கோட்டை விட்டிருக்கிறார் சித்தார்த் .


ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி .சாதா இலந்தைப்பழத்தை விடுங்க , கொஞ்சம் பெரிய சைஸ்ல ஒரு இலந்தைப்பழம் வருமே அந்த மாதிரி வழு வழுப்பான கன்னம் .ரோஸ் கலர்ல இருக்குமே தர்பூசணிப்பழம் ( கோஷாப்பழம் ) அதுல 2 பீஸ் கட் பண்ணின மாதிரி உதடு , நாவல் பழம் மாதிரி கண்ணு ( போன ஜென்மத்துல ஃப்ரூட் ஸ்டால்ல வேலை செஞ்சியா? ) . பொட்டு வைக்காமயே லட்சுமிகரமான முகம் தான் . ஃபிகருக்கு 70 மார்க் கண்ணை மூடிட்டு கொடுக்கலாம் ( காசா? பணமா? அள்ளி விட்றா அழகேசா) இவருக்கு ஆடை வடிவமைப்பு பிரமாதம் . எல்லா வகை மாடர்ன் டிரஸ்சும் ஓக்கே . ( ஒரு சீன்ல ஸ்லோ மோஷன் ல ஓடி வரும்போது ........ )


அடுத்தது நம்ம ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்ன் உழைப்பு. மிகப்பிரமாதம் .இசை ஜி வி பிரகாஷ்குமார். கானாப்பாட்டில் தேவாவின் சாயல் . மொத்தம் 3 பாட்டு ஹிட் . 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. நேரடியாக சாதா \திரைக்கதையில் கதையை சொல்லி இருந்தால் படம் சுமார் படமாகி சராசரி ஆகி இருக்கும் . அதைப்புரிந்து  புது முக இயக்குநர்  மணிமாறன் ( வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் )  மிகச்சிறப்பாக இயக்கி இருக்கிறார் ( கதை , திரைக்கதை அண்ணன் வெற்றி மாறன் ) 


2. ஹீரோயின் செல்க்ஷன் . வில்லன் செலக்‌ஷன் , லொக்கேஷன் செலக்சன், டெம்ப்போ ஏற்றும் காட்சிகள் எல்லாம் குறிப்பிட வேண்டியவை 

3. போலீஸ் ஆஃபீசரின் மனைவி ஃபோன் மூலம் டார்ச்சர் செய்வதை ஒரு சிறுகதையாக சொன்ன விதம் ( கடைசி வரை போலீஸின் மனைவியை  காட்டாமல் விட்டது புத்திசாலித்தனம் )


4. செல் ஃபோன் , சிம் கார்டு மாற்றங்கள் இவற்றை வைத்து ஹீரோ போலீஸ்க்கு தண்ணி காட்டும் உத்திகள் 


5. படத்துக்கான போஸ்டர் டிசைன் , விளம்பர உத்திகள் , நல்ல தியேட்டர்களை தமிழகம் எங்கும் புக் செய்தது  எல்லாமாகச்சேர்ந்து ஏ செண்ட்டர்களில் இந்தப்படம் அமோக வரவேற்பு பெறும் வாய்ப்பு 


6. ஓவரா உணர்ச்சி வசப்படும் சின்சியர் டியூட்டி கான்ஸ்டபிள் கேரக்டரின் அசத்தலான  நடிப்பு  ( செம காமெடி )


7.ஓரக்கண்ணாலே கானாப்பாட்டுக்கு தியேட்டர் அதிர்கிறது. செம மேக்கிங்க் 


8. யாரோ இவன் யாரோ இவன் பாட்டுக்கான ஆர்ட் டைரக்‌ஷன் கலக்கல். அதே போல் அந்த கிளப் டேன்ஸ் ஓப்பனிங்க்ல வருவதும் செம






 இயக்குநரிடம் சில கேள்விகள்  ( திரைக்கதை வெற்றி மாறன் என்பதால் அவருக்கும் பங்கு உண்டு ) 


1. ஹீரோயின் காலேஜ் படிக்கறா. ஆனா மேஜர் ஆகலை. அதாவது 18 வயசு ஆகலை . இதுதான் படத்தின் மெயின் மேட்டர். யாரா இருந்தாலும் பிளஸ் டூ முடிச்சாலே 18 வயசு ஆகிடும் .  காலேஜ் வரும்போதே 19 ஆகி இருக்கும். காலேஜ் 3 வது வருஷம் படிக்கும் பொண்ணுக்கு 18 வயசு ஆகி இருக்காதா? நல்ல வேளை ஃபிகர் இன்னும் வயசுக்கே வர்லைன்னு சொல்லாம விட்டாங்க . ( ஹீரோயின் முகம், மற்ற சமாச்சாரங்களைப்பார்த்தா எப்படியும் 25 வயசு இருக்கும் .) அப்டியாவது பிஞ்சு முகம் உள்ள ஃபிகரை ஹீரோயினா போட்டாங்களா? 


2. ஓடிப்போகனும்னு பிளான் போட்டவங்க  ஒரு நாள் கழிச்சு ஓடி இருக்கலாமே? 18 வயசு ஆகி இருக்குமே? ( ஆனா படமே அதுல தான் இருக்கு ) 


3. ஹீரோவுக்கு ஹீரோயினோட அப்பாவைத்தெரியாது. அதனால மினிஸ்டர் காரைப்பார்த்ததும் லிஃப்ட் கேட்கறார். ஓக்கே . ஆனா ஹீரோயினுக்கு அப்பா கார் தெரியும் , பக்கத்துலயே கல்லுளி மங்கி மாதிரி நிக்க்றவர் ஏன் காதலனை  வார்ன் பண்ணலை? அது அப்பா கார். போகாதேன்னு சொல்லி இருக்கலாமே? 


4. ஹீரோ , ஹீரோயின் இருவரும் அன் ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்ல போறாங்க. இன்ஸ்பெக்டர் டி டி ஆர் கிட்டே அவங்களைப்பற்றி விசாரிக்கும்போது அவர் எல்லாத்தகவலும் சொல்றாரு. எந்த ஊர்ல எந்த டி டி ஆர்க்கு அன் ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் பேசஞ்சர்ஸ் பற்றி தெரியும்? 


 



5. ரயில்வே ஸ்டேஷன் வரும் எஸ் ஐ ஹீரோயினை கையைப்பிடிச்சு இழுத்துட்டுப்போறார். அப்போ ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்ன செஞ்சாங்க ? அவங்களை காட்டவே இல்லையே? 


6. இந்தக்காலத்து ஃபிகருங்க எல்லாம் விபரமானவங்க. கமுக்கமா இருப்பாங்க. அப்பா மினிஸ்டர் , லவ் ஏத்துக்க மாட்டார்னு தெரிஞ்சும் லூஸ் மாதிரி தன் லவ்வர் கூட எடுத்த ஃபோட்டோக்களை ஃபேஸ் புக்ல அப்டேட் பண்ணுதே , எப்டி?


7. இந்தக்காலத்துல ஃபிகர் கிடைப்பதே உன் பாடு என் பாடுன்னு இருக்கு. இந்த லட்சணத்துல ஹீரோயின்  ஹீரோ ரூம் க்கு தேடி வந்து கில்மாவுக்கு கூப்பிடறா. ஹீரோ பெரிய இவராட்டம் வேதாந்தம் பேசி அவளைத்திருப்பி அனுப்பிடறாரே? அந்த அளவு யோக்கிய சிகாமணி இந்த உலகத்துல யாராவது இருக்காங்களா?  ( சீன் போச்சேங்கற ஆதங்கம் தான் ) 


8. எஸ் ஐ ஐ கார்ல கை விலங்கோட மாட்டி எஸ் ஆகும் ஹீரோ ஏன் லூஸ் மாதிரி விலங்கோட சாவியை விட்டுட்டுப்போறார்? 


9. க்ளைமாக்ஸ்ல ஒரு லிப் டூ லிப் கிஸ் இருக்கு. கிளுகிளுப்புக்கு நன்றி, ஆனா  யாருமே இல்லாத தனி ரூமிலேயே கிஸ் பண்ணாத ஒரு யோக்கியன் நடு ரோட்ல இன்னொரு ஆம்பளைக்கு முன்னால அப்டி கிஸ் அடிப்பானா? ( இதுவும் ஸ்டொமக் பர்னிங்க் தான் , 2 நிமிஷம் பாவி அந்த உதட்டை விடவே இல்லை ) 


 



 மனம் கவர்ந்த வசனங்கள் 



1. நம்மளை விட இங்க்லீஷ் நல்லா பேசறான், கான்வெண்ட் ல படிச்சிருப்பான் போல 


2. பெங்களூர்ல படிக்காம இருக்கலாம், சரக்கு அடிக்காம எப்டி இருக்க முடியும் ? 


3. இந்த மாதிரி எல்லாம் இருந்தா பொண்ணுங்களை கரெக்ட் பண்ண முடியாது . எப்டின்னு ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லித்தர்றேன் இரு 


4. கண்டிப்பா ஷூ போட்டுட்டுத்தான் பார்ட்டிக்கு வரனும்னு சொன்னேனே? 

 சொன்னே. ஆனா ஷூ போட்டுட்டு வர்லைன்னா பார்ட்டிக்கு உள்ளே விட மாட்டாங்கன்னு சொல்லலையே? 



5. சொல்றேனேன்னு  கோவிச்சுக்காதே, இவ்ளவ் மொக்கையான பொண்ணை நான் பார்த்ததில்லை 


6. அந்தப்பசங்களுக்கு 2 மேட்டர் தான் தெரியும்  1. சரக்கு 2 ஃபிகரு 



7.போலீஸ் வேற வேலையா வந்திருப்பாங்க, நம்மைத்தேடி இல்லை, முகத்தை கேசுவலா வெச்சிரு 

------


 ஏண்டா இப்படி வெச்சிருக்கே முகத்தை ?

 ஹி ஹி கேசுவலா இருக்கேன் 



8. மைனர் பொண்ணை கிட்நாப் பண்ணா 7 வருஷம் கடுங்காவல் தெரியுமில்ல? 


9. டேய், நாம தாண்டா அவளை சப்போர்ட் பண்ணனும் 

 ம்க்கும், நமக்கே சப்போர்ட் இல்லை 



10 . மச்சி , சரக்கு ஃபிரீயா கிடைக்கும்போது எப்டிடா  சரக்கு அடிக்கறதை விட முடியும் ? 


 



11. மச்சான் , ஹெல்த் ஈஸ் வெல்த். நீ மட்டும் குடிக்கக்கூடாது , நான் குடிப்பேன் ஹி ஹி 


12. இந்த ஒரு தடவையாவது எங்கப்பா பேரு  ஒரு நல்லதுக்கு யூஸ் ஆகட்டுமே?


13. நீ எப்படி இந்த மாதிரி பேலன்ஸ்டா, மெச்சூரா, புரொஃபஷனலா இருக்கே? ஐ லைக் யூ டா



14. இங்கே பாரு . நீ செத்துட்டா நானும் சாக மாட்டேன். நாம வாழனும் , சேர்ந்து வாழனும் 


15 . போலீஸ்  எஸ் ஐ - என் கழுத்துல அவன் பிளேடு வெச்சுட்டாண்டா


 சார், அவன் ஏன் உங்களுக்கு இந்த நேரத்துல ஷேவிங்க் பண்றான் ( பயங்கர அப்ளாஸ் ) 


16. என்னடா  மாப்ளை , சரக்கடிச்சேன்னு இபடி ஜாலியா சொல்றே?


 மச்சான்,ஜாலியா சரக்கடிச்சதை  ஜாலியா சரக்கடிச்சேன்னுதானே சொல்ல முடியும்?


17. உன் கூட பேசும் போது தான், தனியா பேசற மாதிரி இருக்கு  (இந்த வசனம் மட்டும் விடுபட்டுடுச்சு, சுட்டிக்காட்டிய க்கு நன்றி )





 சி.பி கமெண்ட் - ஏ செண்ட்டர்களில் இது நல்லா ஓடும் , பி சி சுமாராத்தான் போகும் ,  டோட்டலா இது ஒரு வெற்றிப்படமே . லவ்வர்ஸ் , வெற்றி மாறன் ரசிகர்கள் , காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், பார்க்கலாம் . மீரா, திருடா திருடா, தாம் தூம் ,மாதிரி ரன்னிங்க் ஃபிலிம் ( அதாவது படம் பூரா ஹீரோ , ஹீரோயின் ஓடிட்டே  இருப்பது )களை ரசித்தவர்கள் இதையும் தாராளமாக ரசிக்கலாம்


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 ரேட்டிங்க் -  3 / 5 



0 comments: